மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 781 - 790. Show all posts
Showing posts with label Lessons 781 - 790. Show all posts

9.4.14

Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

 
Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

Quiz 50: புதிருக்கான விடை!

நேற்றையப் புதிரில் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து அவருடைய குழந்தை பாக்கியத்திற்கான வீட்டை அலசச் சொல்லியிருந்தேன்.
வழக்கம்போல நிறையப் பேர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!

அந்த ஜாதகிக்கு, அவருடைய கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தை பிறக்கவில்லை. அந்த ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அதுதான் சரியான விடை

ஜாதகத்தைப் பாருங்கள்

விருச்சிக லக்கின ஜாதகி.

லக்கினாதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில். பாக்கியாதிபதி சந்திரனும் ஆறாம் வீட்டில் ஆறாம் வீடு கேடானது’
சுகஸ்தானத்தில் (4ல்)கேது

1.  ஐந்தாம் அதிபதி, சனியுடன் சேர்க்கை
2. ஐந்தாம் வீடு, பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு புறம் கேது, மறுபுறம் செவ்வாய்
3. ஒன்பதாம் வீட்டில் (பாக்கிய ஸ்தானத்தில்) எட்டாம் வீட்டுக்காரன் புதன் டென்ட் அடித்துக் குடியிருக்கிறான். அது பாக்கியங்களூக்குக் கேடானது.
4. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை.
5. ஒன்பதாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபுறம் சூரியன். இன்னொருபுறத்தில் ராகு

பெண்களுக்கு ஒன்பதாம் வீடு அதி முக்கியமானது. அது முழுதாகக் கெட்டிருக்கிறது. அத்துடன் ஐந்தாம் வீடும் கெட்டிருக்கிறது. பாபகர்த்தாரி யோகம் வலிமையானது. அதிக கேடுகளை விளைவிக்கக்கூடியது.

அக்காரணங்களால், ஜாதககிக்குக் கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டு, அவளால் கருத்தரிக்க இயலாமல் போய்விட்டது. விளைவு: குழந்தை இல்லை

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
கலந்து கொண்ட 34 பேர்களில் 13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களில் சரியான விடையை எழுதிய அன்பர்களின்
பெயர்களைத் தொகுத்துக்கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது
வாழ்த்துக்கள். Better luck for them next time!
----------------------------------------------------------------------------------------
1
/////Blogger kmr.krishnan said...
    சனைச்சரன் நிற்பது பூராடம் மூன்றாம் பாதத்தில்.குரு பகவான் நிற்பது மூலம் இரண்டாம் பாததில். மாந்தி, சனியால் லக்கினமும், குருபகவானும்
பாப‌கர்த்தாரியில்ல் மாட்டிக்கொண்டனர். விருச்சிக லக்கினம் என்பதால் குருவே 5ம் இடத்து அதிபதி. அதிபதியும், காரகனுமான் குருபகவான்
அடிவாங்கிவிட்டார்.
    5ம் இடமும் செவ்வாய் கேதுவால் பாபகர்த்தாரியில் சிக்கிவிட்டது. 9க்கு உடைய
    சந்திரனும் 6ல் சென்று மறைந்துவிட்டார்.
    சுக்கிரன் அஸ்தங்கதம்,குருவக்கிரம்!
    அம்மையாருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:14:00 AM///////
--------------------------------------------------------------------------------------
2
Blogger S Balaji said...
    ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது, காரணங்கள்:
    (1) லக்கிணாதிபதி ஆறாம் இடத்தில்.
    (2) ஐந்தாம் வீடு அதிபதி மற்றும் காரகன் (குரு) ஆட்சியுடன் இருந்தாலும் அந்த வீடு பாப கர்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
    (3) மேலும் குருவின் பார்வை அந்த வீட்டில் விழவில்லை.
    நன்றியுடன்
    ச. பாலாஜி.
    Tuesday, April 08, 2014 11:08:00 AM//////
-----------------------------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The lady does not have child.
    Because the 5th lord is with Saturn and aspected by 12th lord sukran.
    lagna lord in 6th and hence not supporting.
    9th lord chandran in 6th and not supporting.
    Thanking you sir.
    Tuesday, April 08, 2014 12:11:00 PM///////

-----------------------------------------------------------
4  
////Blogger SIVA said...
    அய்யா இவர் குழந்தை பாக்கியம் அற்றவர் அப்படி பிறந்தாலும் குறையுள்ள குழந்தையாக இருப்பின் பிழைத்திருக்கும் ., என் என்றால் ஐந்தாம்
அதிபதி குரு வக்கிரமடைந்து இரண்டாம் இடத்தில அதாவது தன்னுடைய வீட்டிற்கு பத்தாமிடத்தில் முன்றாமிட வக்கிர சனியுடன் . எட்டாமிட
கிரகங்களின் பார்வையுடன்
    Tuesday, April 08, 2014 4:29:00 PM/////
-------------------------------------------------------------

/////Blogger venkatesh r said...
    கொடுக்கப்பட்ட ஜாதக அம்மணிக்கு குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை.
    விருச்சிக லக்னம்,மேஷ ராசி ஜாதகி.
    1.லக்னாதிபதி 6ல் பாக்யாதிபதி சந்திரனுடன் மறைந்து விட்டார்.
    2.ஜாதகிக்கு 24 வயதிற்கு மேல் வந்த ராகு தசையில் தாமத திருமணம் நடந்து இருக்கும். அதனால் பல்வேறு சிரம்த்தின் இடையில் தாம்பத்திய
ஜீவனம்.
    3.ஐந்தாம் பாவம் பாபகர்த்தாரியின் பிடியில்.
    4.ஐந்துக்கு அதிபதியும், குழந்தை பிறப்பிற்கு காரகானான குரு சனியுடன் 2ல் எனக்கு என்ன போச்சு என்று அமர்ந்து விட்டார்.
    5.5ம் பாவத்திற்கு எந்த சுபக் கிரக பார்வையும் இல்லை.
    6.உடல் காரகனான சூரியன், சனியின் நேர் பார்வையில் உள்ளார். அதனால் அவ்வப்போது சுகவீனமற்று இருந்திருப்பார்.
    அதனால் ஜாதகிக்கு குழந்தைகள் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:03:00 PM//////
-------------------------------------------------------------------
6
/////Blogger S.Namasu said...
    Dear sir:
    My Answer for Quiz no.50:-
     Jathakiku Kulanthai pakkiyam irrukka vaippu kuraivu.
    Reasons:
    1.5th house is in "pabakarthari" amaippil ullathu.
    2.Lakkana athipathi is in 6th house. Marivu shthanam porattamana valkkai(sasimangala yogam - not good in 6th house)
    3.5th house lord "Kuru" in 2nd house with, 3rd & 4th house lord "Sani" causes for delay.
    3."Manthi" is in 12th house, so "Ayana sayana" problems.
    4.("Sukkira" thasi till 18.3.18,"Suriya" thasi till 25.3.18 age) both lord are occupied in 8th house. BAD period.
    5.("Chanthira thasai" till 35.3.18, "Chevvai thasai" till 42.3.18 age) both lord are occupied in 6th house. BAD period.
    SUBAM.
    Tuesday, April 08, 2014 5:37:00 PM//////

--------------------------------------------------------------------------
7
//////Blogger vanikumaran said...
    குழந்தைக்கு 5ம் வீடு,அதிபதி,காரகன் குரு நிலைமை இவற்றில்
    1. 5ம் வீடு பாபக்கத்தாரி யோகதில்,
    அதிபதி மற்றும் காரகன் குரு 2ம் வீட்டில் ஆட்சியாகி உடன் 3ம் அதிபதி சனியால் கெட்டார்.
    2. 5க்கு 5ம் இடம் 9ம் பெண்களுக்கு குழந்தை பாக்கியத்தில் முக்கியம் என்பதால்,
    9ம் இடம் 8ம் அதிபதி புதனால் கெட்டது. 9ம் அதிபதி 6ம் மறைவு ஸ்தானத்தில் உடன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி.
    ஸ்திர லக்னமான விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி சந்திரன் பாதகாதிபதியாகி போக ஸ்தானத்தினை விரையம் ஆக்கினார்.உடன் 6ம் அதிபதி செவ்வாய் பார்வை.
    யோகாதிபதி குரு சனியால் கெட்டார்
    3. மேலும் 12ல் அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தியும் சுகஸ்தானத்தில் கேதுவும் போக வாழ்வினை கெடுத்ததால்
    ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 6:17:00 PM/////
---------------------------------------------------------------------
8
////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குருவே,
    இந்த ஜாதகிக்கு திருமணம்மாகிருக்க வாய்ப்பு இல்லை. காரணம் 7ம் இடத்திற்கும் களதிரதிர்க்கும் உரிய சுக்கிரன் 8இல் மறைவு உடன் சூரியன்
சேர்கை சனியின் நேரடி பார்வையில், குருவும் பார்க்கிறார் ஆனால் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய
ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் கூடவே நடந்த தசாக்களும் சாதகமாக இல்லை. கூடவே சுக ஸ்தானத்தில் கேது, அயன
சயன போக ஸ்தானத்தில் மாந்தி. இவற்றையும்மீறி திருமணம் நடந்திருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லை காரணம் 5ம் இட அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு சனியின் சேர்கை மற்றும் சூரியனின் பார்வையில், சுக்கிரனும் பார்க்கிறார் ஆனால் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.
அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் அதுவும் அட்டமாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில்.
குழந்தை பாக்கியத்திற்கு பெண்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் மிகவும் முக்கியம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, April 08, 2014 6:33:00 PM//////
------------------------------------------------------------------
9
/////Blogger Raja Murugan said...
    அய்யா வணக்கம், லக்கினதிபதியும், பாக்கியதிபதியும், 6 ல் மறைந்துள்ளார்கள் எனவே ஜாதகர் வாழ்க்கை போராட்டமானது,
    6 ம் அதிபதி 6 ல் நோயுள்ளவர்.
    ஐந்தாம் அதிபதி குரு 2 ல் சனியுடன் 2 ல் சனி குடும்பம் பிரச்சனை அதிகம்.
    லக்கினாதிபதி,ஐந்து,ஒன்பதாம் ஆகிய அதிபதிகள் 6,8,12 ல் மறைந்தால் குழந்தை இல்லை.
    எந்த சுப கிரகங்களின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மேல் இல்லை.
    ஐந்தாம் வீட்டின் பாக்கியாதிபதி செவ்வாய் 6 ல் மறைந்துள்ளார்.
    ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடு 6 ம் அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையில் உள்ளது.
    அயன சயன பாக்கியம் மாந்தி மற்றும் செவ்வாயின் 7,8 பார்வையில்.
    எனவே ஜாதகருக்கு குழந்தை இல்லை.
    Tuesday, April 08, 2014 8:31:00 PM//////
-----------------------------------------------------------------
10
/////Blogger Ramkumar KG said...
    ஐந்தாம் இடம் பாபக்ார்த்தரி யோகத்தில் மற்றும் இந்தம் அதிபதி சனியுடன் சேர்ப்பு மற்றும் சூரியன் பார்க்கப்படுவதால் மற்றும் சுப பார்வை 5
மற்றும் 5ஆம் அதிபதி மேல் இல்லாததால் குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 8:37:00 PM/////
--------------------------------------------------------------
11
///////Blogger dhana lakshmi said...
    Quiz-50
    குழந்தை இல்லை.
    புத்திர தோஷம் உள்ள ஜாதகம்.
சந்திரனக்கு 5ல் தீய கிரகம் இருந்தாலோ அல்லது 5ம் வீட்டீற்கு 2 பக்கம் தீய கிரகம் இருந்தாலோ
புத்திரதோஷம்.
    குருவும்,உடனிருக்கும் சனியும் வக்கிரமான நிலையில்,7ம் பார்வை உள்ள சுக்கிரன் அஸ்தங்கதமான நிலையில் மேலும் 2மிடத்தில் குருவுடன்
உள்ள வக்கிர சனி தடை ஏற்படித்திருக்கும்.
    Regards
    J.Dhanalakshmi
    Tuesday, April 08, 2014 11:37:00 PM//////
-----------------------------------------------------------------
12
Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான விடை: புத்திர பாக்கியம் இல்லாத,தடைஉள்ள ஜாதகம்.
    * விருச்சிக லக்னம்,மேச ராசி;லக்கினாதிபதி ஆட்சி பெற்று 6ல் மறைவு.
    *5க்குரிய புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குரு(வக்கிரம்} ஆட்சி பெற்று 3,4க்குரிய (5ம் ஸ்தானதிற்க்கு 12க்குரியவன்)வக்கிர சனியின்
சேர்க்கை யுடன் அமர்ந்து பலமிழந்தது.
    *இதை தவிர்த்து புத்திர ஸ்தானமானது பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. மேலும் லக்கினம் 3,7,9மற்றும்11ம் ஸ்தானங்கள் பாபகரத்தாரி
யோகத்தில் உள்ளது.
    *7க்குரிய சுக்கிரன் அஸ்தங்கமடைந்து 8ல் மறைவு,9க்குரிய பாக்கிய ஸ்தானா திபதியான சந்திரன் 6ல் மறைவு போன்றபலகீனமான நிலையில்
இருப்பதுடன் 5ம் இடத்தை சுபர் யாரேனும் பார்வை செய்யாது இருப்பதும்
    குறையே.
    சரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Wednesday, April 09, 2014 12:43:00 AM/////
----------------------------------------------------
13
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.50:
    The Native doesn't have child.
    The Native has to struggle a lot in her life time.
    This is an example horoscope for worst one.
    Reason:
    1. Five houses are affected by Baba kathri yoga. (First,Fifth,Seventh, Ninth and Eleventh houses)
    2. Lagna lord, Bagyathipathi and yogathipathi are in hidden places (i.e. 6th and 8th house)
    3. All benefic planets are affected severely.
    4. Fourth house is affected by Kethu.
    5. Fifth house is under baba kathri yoga as well as fifth house lord Jupiter is clutched by Saturn.This is puthra karaga also. affected very worst.
    6. Seventh house is affected by baba kathiri yoga as well as this house lord is in Eighth house and getting saturn aspect.
    7. Ninth house lord is sitting in sixth house as well as this house affected by baba kathiri yoga.
    8. Eleveth house is affected by baba kathri yoga as well as this house lord sitting in eighth house.
    9. Mandhi is sitting in twelfth house and affects sexual life as well as getting sixth house lord aspects.
    10. Second house is affected by Saturn. Family life is in trouble.
    Very worst horoscope .... Oh god ....Save her.....
    With kind regards,
    Ravichandran M.//////

==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.4.14

Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

 
Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

Quiz: 50 புதிர் எண்.50

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

8.4.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஒரு பெண்ணிற்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணும். திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு ஏற்பட வேண்டும்.

அம்மணிக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லையா? குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா? அல்லது தாமதமாகப் பிறந்ததா? குழந்தை இல்லை என்றால், ஏன் இல்லை?

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 5ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.4.14

Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

 
Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

விதிக்குச் சான்று

"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty"  என்று நான் அடிக்கடி சொல்வேன்.

“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்

விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்

“என்ன செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”

என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்ளுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:

  “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினுந் தான்முந் நுறும்”


இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.

பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:

Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”

  “நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால்  மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது.  அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன்.
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
    ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
    எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
    தன்நினை வெண்ணியே வாடும்!

காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
    கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
    நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
    வாழ்ந்ததை எண்ணியே வாடும்!

விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
    கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
    முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
    தேவனின் லீலைகள் அலவோ!

எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
    வேறென்ன செய்வதோ இதிலே!

தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
    உயர்ந்ததோர் நாயகன் கதையே
சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
    சாவினை வென்றவர் இலையே
ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
    இதன்பெயர் ஆண்டவன் விதியே!

           -கண்ணதாசன்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31.3.14

Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

 
Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி (Generational Gap) என்பதை வெள்ளைக்காரர்கள்தான் முதலில் சொன்னவர்கள். ஏற்றுக்கொண்டவர்கள்.

நாம் இன்னும் முறையாக, சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்கொண்டு இளைஞர்களை திட்டிக் கொண்டிருக்கிறோம்

"காசு அருமை தெரியவில்லை!”

"கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கவில்லை!”

"பெரியவர்களின் பேச்சை, அனுபவத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை!”

என்றெல்லாம் அவசியமாகவோ அல்லது அவசியமில்லாமலோ திட்டிக் கொண்டிருக்கிறோம்

மற்றவர்கள் சொன்னால், நாம் முழுமையாக, அவர்களைப் பேசவிட்டுவிட்டுக் கேட்போமா? மாட்டோம்!

நம்மை நாம் ஓரளவுதான் திருத்திக் கொள்வோம். அதுபோல மற்றவர்களைத் திருத்துவதும் சாத்தியமில்லை.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளுங்கள்!

மிளகாய்க்கு உள்ள காரமும், பாகற்காய்க்கு உள்ள கசப்பும், புளிக்கு உள்ள புளிப்பும் எப்படி இயற்கையானதோ, ஒரே மண்ணில் அவைகள் விளைந்தாலும், அந்தத் தன்மை எப்படி உண்டாகிறதோ, அப்படிதான், மனித மனங்களும், குணங்களும், எண்ணங்களும் இயற்கையானதாகும்,

லக்கினம், லக்கினநாதன், லக்கினகாரகன், மனகாரகன், லக்கினத்தின் மேல் விழுகின்ற சுபகிரகங்களின் பார்வைகள், தீய கிரகங்களின் பார்வைகள் அத்துடன் லக்கினத்தில் வந்தமரும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றை வைத்துக் குணநலன்கள் எல்லாம் ஆளாளுக்கு மாறுபடும்.

மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள். சிம்ம லக்கினக்காரர்கள் பிடிவாதம் மிக்கவர்கள். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். கன்னி லக்கினக்காரர்கள் யாருடனும் ஈஸியாக கலந்து, அவர்களை நட்பாக்கிக் கொண்டுவிடுவார்கள். ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்து விடலாம். சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள லக்கினக்காரர்கள். எதெதற்கு அவர்களை வளைக்கலாம் என்பதைப் பதிவில் எழுத முடியாது. மகர லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள். கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையிலேயே நல்லவர்கள். யாருடனும் இயைந்து போகக்கூடியவர்கள். நிறைகுடம் போன்றவர்கள். அதனால்தான் அந்த லக்கினத்திற்குப் பூரண கும்பம் அடையாளச் சின்னமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. கும்ப லக்கினப் பெண்கள் கிடைத்தால் (கல்யாணமாகாதவர்கள்) கண்ணை மூடிக்கொண்டு அவர்களை மணந்துகொள்ளலாம்.

உடன் பிறந்தவர்கள் அல்லது உடன் இருப்பவர்கள் அல்லது வந்து சேரும் தேவதைகளின் அல்லது பெண்ணாக இருந்தால் கண்ணாளர்களின் குணங்களும் மாறுபடும்.

இதுபோல எழுதிக்கொண்டேபோகாலாம். குண நலன்களை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன். இன்று முதல் தலைமுறை இடைவெளி என்று சொல்லிக் கொண்டிராமல், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினைதான். Tensionதான்

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி என்ற எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அது பொருந்தும்!

ஆகவே தலைமுறை இடைவெளி என்று மொக்கையாகப் பேசிக் கொண்டிருக்காமல், இடைவெளியைக் குறைப்பது நம்கையில்தான் இருக்கிறது என்று யோசித்துச் செயல்படுங்கள்.

இந்த இளைஞன் அணிந்திருப்பது கிழிந்த உடையா? அல்லது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடையா? பார்த்து, சரியான பதிலைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்


===================================================================




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.3.14

Astrology: என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே!

 

Astrology: என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே!

புதிர் எண் 49ற்கான விடைகள்!

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே

-------------------------------------------
பலவிதமான நோய்கள் (Multiple diseases)

நோய் வாய்ப்படாத மனிதனே இருக்க முடியாது. சளி, காய்ச்சல், உடம்பு வலி என்று ஏதாவது உபத்திரவம் இருக்கும் அல்லது அவ்வப்போது வந்து போகும். அது இயற்கையானது. தாங்கக்கூடியது.

ஆனால் கடுமையான நோய்கள் இருந்தால் வாழ்க்கை ஜாதகனுக்கும் சுகப் படாது. அவனைச்  சுற்றியுள்ளவர் களுக்கும் சுகத்தைத் தராது. சமயத்தில் எப்போதடா இவன் போய்ச் சேர்வான் என்னும் மனநிலை நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்பட்டுவிடும்

கடுமையான நோய்கள் எவை?

உங்களுக்காகக் கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கிக் கீழே கொடுத்துள்ளேன்.

a chronic disease is a disease that is long-lasting or recurrent. The term chronic describes the course of the disease, or its rate of onset and development. A chronic course is distinguished from a recurrent course; recurrent diseases relapse repeatedly, with periods of remission in between. As an adjective, chronic can refer to a persistent and lasting medical condition. Chronicity is usually applied to a condition that lasts more than three months. The opposite of chronic is acute.

Examples of chronic diseases include:

    * Asthma
    * Chronic fatigue syndrome
    * Chronic osteoarticular diseases: rheumatoid arthritis, osteoarthritis
    * Chronic respiratory diseases: chronic obstructive pulmonary disease, asthma, pulmonary hypertension
    * Chronic renal failure
    * Diabetes mellitus
    * Chronic hepatitis
    * Autoimmune diseases, like ulcerative colitis, lupus erythematosus
    * Cardiovascular diseases: heart failure, ischemic cardiopathy, cerebrovascular disease
    * Epilepsy
    * Neoplasic diseases not amenable to be cured
    * Osteoporosis
    * Cancer
    * Sickle Cell Anemia
    * Chronic GHVD: intra-oral

Many chronic diseases require chronic care management for effective long-term treatment. Effective chronic disease control requires attention to social, behavioral, environmental and clinical aspects. Multiple morbidities can be common in older adults.

சரி, கடுமையான நோய் எதனால் உண்டாகிறது?

அது சம்பந்தமாக ஒரு ஜாதகத்தை நேற்றையப் பதிவில் கொடுத்திருந்தேன் அதை இப்போது அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தில் லக்கின நாதனும், ஆறாம் இடத்தானும் ஒரே ஆசாமி. அதாவது சுக்கிரன். அவன் எப்படி  உள்ளான்?

பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான். அவன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்குப் பகைவீடு என்பது மட்டுமல்ல, அந்த வீட்டிற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள். அத்துடன் அது watery sign.

ஜாதகனுக்கு முதலில் நீரழிவு நோய் வந்தது. பின்பு கடுமையான மூட்டு வலி. பிறகு புற்று நோய்!

உடல் காரகன் சூரியன் எட்டில். அத்துடன் குருவும் எட்டில். குருவிற்குப் பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். அத்துடன் தேய்பிறைச் சந்திரன். கேட்க வேண்டுமா? அனைத்துமே சாதகமாக இல்லை!

போதாதற்கு உச்சமான சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் தீர்க்கமாக விழுகிறது. சனியைத் தூண்டிவிடும் விதமாக விரையாதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் சனீஷ்வரனைக் கட்டம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனைப் படுத்தி எடுத்ததுடன் பரலோகத்திற்கும் அனுப்பிவைத்துவிட்டன.

ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலே கடுமையான நோய்கள் உண்டாகும். அதை மனதில் வையுங்கள்
---------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான சரியான விடை

1. ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்ததால் கடுமையான நோய்கள் உண்டாகின!
2. எட்டாம் வீடு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால், ஜாதகர் நோய்களில் இருந்து மீளவில்லை. இறந்துவிட்டார்


இவ்விரண்டையும் சரியாக எழுதியுள்ளவர்களுக்கு மட்டுமே முழு மதிப்பெண். 

 திருவாளர் செல்வம் வேலுசாமி அவர்களும், திருமதி தனலெட்சுமி அவர்களும் இந்த ஜாதகத்தை முதலிலேயே கேலக்சி வகுப்பில் பார்த்திருக்கிறேன் என்று எழுதியுள்ளார்கள். அவர்களின் நேர்மையைப் பாராட்டுகிறேன்

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
 1
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO.49 வணக்கம்.
    25th DEC. 1924ம் தேதி மாலை 4.07.01 மணிக்கு மூல நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார்.
    1. முதல் காரணம்: ஆறாம் அதிபதி பாப‌கர்தாரி யோகத்தில் இருப்பதால் கடுமையான நோய்கள் உண்டானது.
    2. இரண்டாவது காரணம்: ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்கு பகைவீடு. இது ஜல ராசி. இரு பக்கமும் பாப
கிரக‌ங்கள்.
    3. நோய்களிலிருந்து மீள முடியாமல் மரணம் அடைந்து இறைவனடி சேர்ந்தார்.
    ரிஷப லக்கினம் (32 பரல்கள்). லக்கினாதிபதி சுக்கிரன் (6 பரல்கள்) 7ம் வீட்டில். அதே சுக்கிரன் 6ம் வீட்டிற்க்கு அதிபதியும் அவரே.
    7ம் வீட்டில் (19 பரல்கள்-பலவீனம்) இருக்கும் சுக்கிரன் பாபகர்தாரி தோஷத்தில் உள்ளார். சுக்கிரன் இருக்கும் வீடு பகை வீடு விருச்சிகத்தில்.
அந்த வீட்டிற்க்கு இரு பக்கமும் பாப கிரக‌ங்கள் (ஒரு பக்கம் சனி, மறுபக்கம் சூரியன்). இது ஜல ராசி.
    ஆகையினால் ஜாதகருக்கு முதலில் நீரழிவு நோய் வ‌ந்தது (சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில்). பிறகு மூட்டு வலி வந்தது (ராகு தசையில் சனி
புக்தியில்) அதன் பிறகு அது புற்று நோய்யாக மாறியது.
    (6ம் வீடுகளில் வரும் நோய்கள், அடிவயிறு, தொடைக்கும் இடுப்பிற்கும் இடைபட்ட பகுதிகள்,எலும்புகள், சதை பகுதி.)
    8ம் வீட்டில் குருவும், பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். உடல் காரகன் சூரியன் 8ல் கூட்டு. தேய் பிறை சந்திரனும் 8ல் கூட்டு
சேர்ந்துள்ளான்.
    6ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் 3ம் பார்வை, 8ம் வீட்டின் மீது. விரையாதிபதி செவ்வாயின் 8ம் பார்வை 6ம் வீட்டில் உள்ள சனியின் மீது.
    இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனை படுத்தி மரணத்தை எற்படுத்தியது. கடைசியில் ஜாதகன் இறைவனடி சேர்ந்தார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Wednesday, March 26, 2014 8:01:00 AM////
-------------------------------------------------------------
2
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    6th place sani , 6th lord venus is in 7th. Mars aspects sani, creates blood related problems.
    6th lord venus is hemmed between malefic planets.
    lagna lord also venus. lagna lord and 6th lord is same. hence the person had experienced disease to the total life. He died because of diseases.
    He was unable to retrieve from diseases.

    Thanking you,
    Wednesday, March 26, 2014 11:52:00 AM/////

------------------------------------------------------------------------
3
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.49:
    The Native has affected by disease. Two important reasons for disease are:
    1. Sixth house lord and lagna lord (Venus) are one and the same, sitting in enemy house and with baba kathri yoga. Saturn is sitting in sixth house.When sixth house lord or sixth house affected by baba kathri yoga, The native will suffer by disease a lot.
    2. The authority for body (Sun) sitting in eighth house and getting Saturn's aspect as well as saturn getting Mars (twelfth house lord) aspect. This is very dangerous. Saturn dasha was running and followed by Mercury dasha. Dasha period also not supported.
    I strongly believe these are the main reasons for disease.
    In this horoscope, eighth house also affected. Mercury, Moom as well as Jupiter combusted by Sun and getting Saturn's aspect. Hence, below the heart body portion has severely affected.
    As a result, The Native has died.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 26, 2014 1:28:00 PM//////

------------------------------------------------------------
4
/////Blogger Srinivasa Rajulu.M said...
    1) அன்பரின் லக்னாதிபதி (மற்றும் ஆறுக்குடையதான சுக்கிரன்) கத்தரி யோகத்திலும், யோக காரகன் சனி ஆறில் மறைந்ததுவும், ஆத்ம மற்றும்
உடல் காரகர்கள் எட்டில் மறைந்த்துவும் அவரை ஆரோக்யமற்றவராகவே வைத்திருந்தன.

    2) ஆறாம் இடத்தைப் பார்க்கும் பாதகாதிபதி செவ்வாய், நோய் எதிர்க்கும் ஆற்றலைக் குறைத்துவிட்டார்.
    நுரையீரல் (3) மற்றும் வயிறு (6) சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதியுற்றவர். அடுத்தடுத்து வந்த திசைகளும் நோயைக் குணப்படுத்த
உதவவில்லை.
(ஆறுக்கு ஆறான 11-ல் பாதகாதிபதி. மற்றும் பதினொன்றுக்கு உடைய குரு எட்டில் மறைவு)
    Wednesday, March 26, 2014 2:29:00 PM/////
---------------------------------------------------------
5
/////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு.
    இது நமது கேலக்சி 2007 வகுப்பறையில் நடத்தபெற்ற பாடம். ஆகையால் நான் விடையை தெறிந்துகொண்டே கலந்துகொள்ள விருப்பம் இல்லை.
மன்னிக்கவும்.
    நன்றி.
    செல்வம்

    Wednesday, March 26, 2014 10:53:00 AM/////
----------------------------------------------------------
6
/////Blogger dhana lakshmi said...
    ஐயா அவர்களுக்கு
    1. லக்கினநாதன் மற்றும் 6ம் அதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். சுக்கிரன் அமர்ந்துள்ள வீடு பகை வீடு மேலும் இரண்டு
பக்கமும் பகை கிரகங்கள்.
    2. சூரியன்,குரு,குருவிற்கு பகைவன் ஆன புதன் மற்றும் தேய்பிறை சந்திரன் அனைத்தும் 8ம் வீட்டீல்.
    3. சனியின் பார்வை மற்றும் செவ்வாயின் பார்வை
    4. 6ம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தால் கடுமையான நோய்கள் உண்டாகும்.
    இவர் 26/12.1924ல் பிறந்திருப்பார்.
    இந்த உதாரண ஜாதகத்தை ஏற்கனவே கேலக்சி 2007 வகுப்பில் பார்த்து உள்ளோம். (6.2.14 = போஸ்ட் - 83)
    அன்புடன்
    j.dhanalakshmi
    Wednesday, March 26, 2014 6:01:00 PM/////
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.3.14

Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

 
Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

பாட்டைக் கண்டு பயப்படாதீர்கள். ”எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே!” என்ற வரிகளைத்தான் பதிவிற்கு ஏற்றாற்போல மாற்றிக் கொடுத்துள்ளேன்!

Quiz No.49: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஒன்பது

26.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


ஜாதகர் பலவிதமான நோய்களால் மருத்துவமனைக்கு அலையும்படி நேரிட்டது. ஜாதகரின் நோய்களுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? நோய்களில் இருந்து மீண்டுவந்தாரா? அவருடைய 6ஆம் வீட்டை வைத்து அலசி எழுதுங்கள். பழத்தை உரித்துக் கொடுத்துவிட்டேன். ஜூஸ் போடுவது மட்டும்தான் உங்கள் வேலை!

அவருடைய நோய்களுக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு உள்ளன! அவற்றைக் குறிப்பிட்டுப் பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 6ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.3.14

Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

 
Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

நேற்றுப் புதிர்ப் பகுதியில் கொடுத்திருந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல் ஃபிகர் அலி புட்டோ ஆவார். அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன அத்தனைபேர்களுக்கும் பாராட்டுக்கள்.

புட்டோவைப் பற்றிய  ESP செய்தியைக் கீழே கொடுத்துள்ளேன். அதையும் படித்துவிட்டுச் செல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அது பதிவில் வெளியானதுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை படித்து உங்கள் நினைவாற்றலைப் புதிப்பித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
Extra-Sensory-Perception

எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர் தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது

அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர். 26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.

எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி, அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின் நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய பதில் என்று ஒர் நிமிடத்திற்குள் அனைத்தையும் சொல்லி முடித்து விடுவார். வந்தவர் கிறுகிறுத்துப் போய் விடுவார்.

இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக 10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம். அவ்வளவுதான்.

காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்.குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே, வெற்றிலை பாக்கோடு அவர் அருகில் இருக்கும் தாம்பாளத்தில் வைத்துவிட்டு வந்து விடவேண்டும். காசையும், வெற்றிலை பாக்கையும் கடைசியில் வந்து அவருடைய தாயார் எடுத்துக் கொண்டு போவார் அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு மேல் காசு வாங்க மாட்டார்.

வருகிற ஜனங்களே, வீட்டு வாயிலிருந்து வரிசையாக நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.

12 மணியானவுடன் எழுந்து விடுவார். அதற்குப் பிறகு நிற்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு அடுத்த நாள் மறுபடியும் வருவார்கள்
வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல் எப்படியிருக்கும் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைக்  கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து அவர் எதிரே அமர்கிறார்கள். இருவரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர் உங்களுடைய மகன் சுடலைமுத்து. இருவரும் தொண்டியிலிருந்து வருகிறீர்கள் - இல்லையா?"

"ஆமாம், தம்பி"

" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல் போய் இரண்டு நாட்களாகி விட்டது இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா? என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள முத்துப்பட்டிணம் கடற்கரையில் உள்ளது. அதைத் திருடிக்கொண்டு போனவர்கள் இப்போது அதை ஒளித்து வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம் ஆட்கள் சிலரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு போங்கள். படகை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான் சிரமம் ஒன்றும் இருக்காது. இப்போது நீங்கள் போகலாம்”
-----------------------------------------------
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து அவர் எதிரில் அமர்கிறார்.

"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து வருகிறீர்கள்"

"ஆமாம்!"

"உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம் கூடிவராமல் தள்ளிக் கொண்டே போவதால் கவலையோடு இருக்கிறீர்கள்"

"ஆமாம்!"

"இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில் திருமணம் நடக்கும். உங்கள் பெரிய பெண்ணைக் கொடுத்துள்ள சம்பந்தி வீட்டாரே வந்து தங்களுடைய அடுத்த பையனுக்கு உங்களுடைய இரண்டாவது பெண்ணைக் கேட்பார்கள். அந்தப் பையன்தான் மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி விடுங்கள். அதுவரை இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் மெளனமாக இருங்கள்.இப்போது நீங்கள் போகலாம்"
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே 100% சரியாக நடந்தது. இதுபோல அவர் சொன்னதெல்லாம் நடந்தது! அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?

அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர். அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’யைப் பற்றி, இது போன்ற இன்னும் நான்கு பேர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது உள்ளதால் - சொன்னவுடன், விரிவான விளக்கம் தருகிறேன்
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க முடியமா? என்று கேட்பவர்களுக்கு:

அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே இருந்தார் அதற்குப் பிறகு, பல பெரிய தலைகள் நுழைந்து, பணத்தைக் கொட்டிப் பலன்களைப் பார்க்க ஆரம்பித்ததும், அந்த மனிதர் தன் குருவின் கட்டளையை மீறிப் பணத்தின் மேல் பற்று வைக்க ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)   அவரை விட்டு நீங்கிவிட்டதாகவும், அவர் ஊரையே காலி செய்து கொண்டு கையில் கிடைத்த பணத்துடன் எங்கோ போய்விட்டதாகவும் தகவல்
---------------------------------------------------------------------
20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின் சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்.

அவரைப் பற்றிய செய்திகளுக்கான தளம்:
http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ் நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச் சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும் தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி தன்னுடைய பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸ்டர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

"என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

"உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"

(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்

"என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது! (I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் சேர்ந்துதான் தொங்கப் போகிறது"

அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள் பலித்தது (நடந்தது) 4.4.1979ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில் தொங்க விடப்பட்டார். அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று சந்தித்து அழுதார். அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல் ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும், அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரதமர் ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதமராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம் விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்ததோடு, பெனாசிரும் பிரதமரானார்.

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும் முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன் கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்



-------------------------------------------
Clipping from Wikipedia:

General Zia-ul-Haq died in a plane crash on August 17, 1988. After witnessing a tank inspection in Bahawalpur, Zia had left the small town in Punjab province by C-130 Hercules aircraft. Shortly after a smooth take-off, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterwards claim it was flying erratically. Directly afterwards, the aircraft nosedived before exploding in mid-air, killing General Zia and several other senior army generals, as well as American Ambassador to Pakistan Arnold Raphel. A common suspicion within Pakistan, although with no proof, is that the crash was a political assassination carried out by the American CIA or Russian KGB

--------------------------------------------
What is ESP?

ESP is the meaning of the supernatural phenomenon or the extra sensory perception ability. The abbreviation of Extra-Sensory-Perception is ESP in the world of common language. ESP (super willpower)…………..!

The power can be controlled by your thought and directed to anywhere you to go. The thought speed is faster than the velocity of light, which means that it can see through into the 10 year future indirectly. It also has infinite knowledge. That's why the power can tell you about anything that's happening or going to happen in your life.

ESP யின் அடிப்படை விவரங்களுக்குச் சுட்டி இங்கே உள்ளது: http://en.wikipedia.org/wiki/Extrasensory_perception
How ESP works? என்ற விவரங்களை முழுதும் அறிய Science - How stuff works - என்ற தளததைப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================

24.3.14

Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
 Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. அன்பர் இந்தியர் அல்ல!
2. அகில உலக பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

19.3.14

Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி?

 
Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி? 

Quiz No.47: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு!

19.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

கேள்வி இதுதான்: ஜாதகரின் நிதி நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதுங்கள்! வேறு ஒன்றையும் நீங்கள் எழுத வேண்டாம்! அதாவது ஜாதகர்  பிறவியிலேயே பணக்காரரா? அல்லது சம்பாதித்துப் பணக்காரர் ஆனவரா? அல்லது பணத்துக்கு கஷ்டப்பட்டு அல்லாடியவரா? அப்படி
அல்லாடியிருந்தால், கடைசி வரை கஷ்டப்பட்டாரா? அல்லது மீண்டு வந்தாரா? அனைத்தையும் அலசி எழுதுங்கள்!



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.14

Astrology: ஒளிந்திருந்து தாக்கும் எதிரி

 
Astrology: ஒளிந்திருந்து தாக்கும் எதிரி

எதிரிகளில் இரண்டு வகை உண்டு. நேரடியாக நம்மோடு சண்டைக்கு வருபவன் முதல் எதிரி. ஆனால் நம்மை, நாம் எதிர்பாராத நேரத்தில் ஒளிந்திருந்து தாக்குபவன் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை ஆசாமிகளிடம்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிரிகள் என்றவுடன் நடமாடும் ஆசாமிகளை நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள். நடமாட்டம் இல்லாத எதிரிகளைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஆமாம் சில நோய்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்த நோய்தான் அவற்றுள் மிகவும் மோசமானது ஆகும்!

அதுபற்றி இன்று பார்ப்போம்!
-----------------------------------------------
மருத்துவர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் பார்வைக்காக அப்படியே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள். பாடத்தைப் பின்னால் பார்ப்போம்:

1. இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
    இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும்.

2. இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
    நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம்.

3. இரத்தக் கொதிப்பு ஒரு வியாதியா?
    இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத்  தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

4. இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?

    நாம் உண்ணும் உணவின் தன்மை.
    மன அழுத்தம்.
    எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
    புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
    உடல் எடை அதிகரித்தல்
    ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
    சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
    உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
    சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
    பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)

5. இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
    இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.

பக்கவாதம் (Stroke)
    இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.

பார்வை பறிபோகுதல்(Blindrers)
    விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
    இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
    இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.

6. நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
    இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை
(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்

    முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.
    இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.
    ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.
    140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)
    இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

BP chart image



7. இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
    மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:
    உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்
    அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
    யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.
4) உடற்பயிற்சி:
    தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்
    இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:
    நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.

    40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

    உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

Rtn. Dr. S. முரளி, M.D.S.,
http://attur.in/health/hypertension.html
மருத்துவர் முரளி அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

-------------------------------------------------------------------
ஜாதகப்படி என்ன காரணம்?

செவ்வாய்தான் இரத்தத்திற்குக் காரகன். செவ்வாயின் அமைப்பை வைத்து இரத்த சம்பந்தமான நோய்களைக் கண்டறியலாம். அதுபற்றி இன்னொரு நாள் கேலக்சி2007 வகுப்பில் விரிவாகப் பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

===================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!