மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 381 - 390. Show all posts
Showing posts with label Lessons 381 - 390. Show all posts

1.9.10

எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண். 47
ரகுராமன்.
மதுரை
   
Sir,
My DOB:5-12-1963. Time:23:11Hrs and Place: Madurai.

My father mentioned that it is only my horoscope that has made him to explore his knowledge about Astrology. His comments are that my horoscope appears like choicest pre-positioned  one. What ever minuscule of knowledge in this Astrology ocean, it is only due to my father's gift to me.

My doubt:
Vipareetha Raja Yoga (As per Jathaka Phaladeepika): Exchanges between Dhusthana lords and also placement of lords of Dhusthana exactly in them. 
In this regard, my father has shown me the sloka it this work, which mentions that with this yoga, even a poorest person can assume a position which he cannot even dream about. Example is our Super Star Rajinikanth.
As per by Greatest Astrologer of modern days B.V.Raman, that such Lords of Dusthana in their own places is Vichtra Raja Raja Yoga, wherein the native of this horoscope will have no re-birth. In my horoscope, I have 6 - 8 - 12 places occupied by its lords.
In Bala Jothidam Aug'10 Issue, it is mentioned that Vipareetha Raja Yogam is a 
common yoga. When I went through Jagannatha Hora S/W, I observed the 
same with note that such Natives will capitalize on other's loss. I expect your 
esteemed comments please.  
Raghu

உங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி. விசித்திர ராஜ யோகம் என்பது, ஜாதகனுக்கு சிறப்பான நன்மைகளை, அதுவும் ஒரு கஷ்டமான காலகட்டத்திற்குப் பிறகு, அள்ளித்தரும் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீங்கள் சுட்டிக்காட்டும் மறுபிறவி இன்மையைப் பற்றித் தெரியவில்லை சுவாமி!
--------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.48
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
   
ஐயா வணக்கம்,
ஞான ஜாதகம்  4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருப்பது என்றால் என்ன?

ஒரு வீட்டின் அதிபதி உச்சமாக அல்லது திரிகோண வீடுகளில் அல்லது கேந்திர வீடுகளில் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அவர் வலுவாக இருக்கிறார் என்று பொருள்.

ஒரு வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் அந்த வீடு 
வலுவாக உள்ளது என்று அர்த்தம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.49
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
   
ஐயா வணக்கம்,

எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு  
(களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது  ரெண்டாம் வீட்டு 
(குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும் 
என்று கூறி இருந்தீர்கள். இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு 
சந்தேகம்  ராகு  தசா / புத்தியில் or கேது  தசா / புத்தியில்  மரணம் 
இல்லையா  ஏனெனில் ராகு, கேது சொந்த வீடு  இல்லையே?

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லாவிட்டாலும், தாங்கள் குடியிருக்கும் வீட்டையே சொந்த வீடாக்கிக் கொள்வார்கள் என்று பாடம் நடத்தியுள்ளேனே சுவாமி. மறந்துவிட்டீர்களா?

ராகு சனியைப் போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார். கேது செவ்வாயைப்போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார்.

விளக்கம் போதுமா?
----------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.50
குமரன்
   
அன்புடன் வாத்தியார் அவர்களுக்கு எனது கேள்விகள்
1. ராசிக் கற்களால் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மோதிரம் அல்லது செயினில் ஒரே கல்லாக அணியவேண்டுமா ? அல்லது சிறு சிறு கற்களாகவும் அணியலாமா ? இல்லை வெறும் கற்களை மட்டும் பையில் வைத்துக்கொண்டால் போதுமா? சற்று விளக்கவும்.

கற்களால் அதீதமான நன்மை. ஜாதகத்தையே அது தலை கீழாகப் புரட்டிப்போட்டு, ஜாதகனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யும் என்றால், உங்களுக்கும் எனக்கும் சந்தையில் ஒரு கல் கூடக் கிடைக்காது. நாட்டில் இன்று உள்ள பணக்காரர்கள் அனைவரும் அதை வளைத்துப் போட்டு வாங்கி வைத்துவிடுவார்கள். இருப்பதிலேயே பெரிய கற்களாக Top 100 பணக்காரர்களும் வாங்கிப் போட்டுக் கொண்டுவிடுவார்கள்.

கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். The precious stones will enhance the benefits.  அவ்வளவுதான் உங்களுக்குக் கிடைக்கப்போவதைக் கூட்டிதரும் உரிய நேரத்தில் தரும். உங்களுக்கு அலைச்சல் இன்றிப் பெற்றுத்தரும். அவ்வளவுதான்!

2. ராசியில் ஒரு கிரகம் நீசமடைந்தும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த கிரகம் உச்சமான பலனைக் கொடுக்குமா அல்லது நீசமான பலனைக் கொடுக்குமா?

நவாம்சத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் உங்கள் மொழியில் சொன்னால், magnified version of rasi chart அம்சத்தில் உச்சம் பெற்றுள்ள கிரகம் உச்சத்திற்கான பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அது உச்சம் பெற்றதற்கு என்ன அர்த்தம்?

3. ராசியில் உச்சமான கிரகம் வக்ரமடைந்து வர்கோத்தமமும் பெற்றால் அதற்கு என்ன பலனைச் சொல்லலாம்?

குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுத்து, கையில் கம்பையும் கொடுத்தால் என்ன ஆகும்? அதுதான் ஆகும்? வக்கிரம் பெற்ற கிரகத்தால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும். அது வர்க்கோத்தமம் அடைந்தால், அந்தப் பாதியிலும் இன்னும் சரிபாதி குறைந்து விடும்.

உங்களுக்கு இன்னும் விளக்கமாகச் சொன்னால், சுபக்கிரகம் நன்றாக ஆட்சி பலத்துடன் இருந்தால் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால், அதுவே அக்கிரகத்திற்குப் பகைவீடு என்றால், கிடைக்கும் தொகை பாதியாகக் குறைந்துவிடும். அதாவது ரூ. ஐம்பதாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வக்கிரம் பெற்றிருந்தால் அதில் பாதிதான் கிடைக்கும். அதாவது ரூ.இருபத்தையாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வர்கோத்தமும் பெற்றிருந்தால் அதுவும் பாதியாகக் குறைந்துவிடும். எல்லாம் உத்தேசமாக உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன். உடனே இதற்குச் சான்று கேட்டு, கம்பைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.51
அனந்தாச்சாரி முரளீதரன்
திண்டிவனம்

   
My Dear sir,
This mail finds u best of health and cheers.  Recently I heard about you 
througu e mail. I am furnishing below my birth details;  Could u please 
predict my future.

ஒரு வீட்டிற்கு 3 பலன்கள். ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளுக்கும்
சேர்த்து 36 பலன்கள். உட் கேள்விகளையும் சேர்த்துக்கொண்டால்
360 பலாபலன்கள். எதிர்காலம் (future) என்று எதைச் சொல்லச்
சொல்கிறீர்கள்? ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
முறையானது. உங்களுக்கு 48 வயது ஆகின்றது. வாழ்க்கையின்
வசந்தகாலம் எல்லாம் முடிந்து விட்டது. அத்துடன்  சுமார் 2/3 பங்கு
காலமும் முடிந்துவிட்டது.  மீதமுள்ள காலத்தை 
சந்தோஷமாக்குங்கள். பொது சேவை  செய்யுங்கள். எதிர்காலம்  
பற்றிய நினைப்பே வராது.


NAME      A. MURALIDHARAN
DATE OF BIRTH : 5TH MARCH  1962
PLACE OF BIRTH : TINIDIVANAM
TIME OF  BIRTH : 5.50 AM 

One of my astrolger told me that kalasarbha dosam is over and need not worry about this.  My question is if the vedic chart is kalasarbha dosam, how it will over? Dont mistake me.  I am confussed so I want to clear my doubts. 
With warm regards
amuralidharan

உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்? உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் முடிந்து 18 வருடங்கள் ஆகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

31.8.10

ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.14
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.43
பெயர்: மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29

என் கேள்விகள்:

கேள்வி 1. ஒரே அமைப்பு நல்ல யோகமாகவும் அதே நேரத்தில் அவயோகமாகவும் அமைந்தால் என்ன பலன்? உதாரணமாக, 9 -ஆம் 
அதிபதி சனியும் 10 -ஆம் அதிபதி குருவும் சேர்ந்து 4 -ஆம் வீட்டில் 
இருப்பது  தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் சனியும் குருவும் சேர்ந்து 
4 -ஆம் வீட்டில் இருப்பது குரு சண்டாள யோகம்.

என்ன குழப்புகிறீர்கள்? குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்றாக இருப்பதல்லவா குரு சண்டாள யோகம்!

இருவரும் ஒன்று சேரும்போது, ராகுவின் தன்மைகளும் குருவின் தன்மைகளும் ஒன்றாகக் கலந்துவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஒன்றாக Blend ஆகிவிடும். ப்ளெண்டிங் (கலக்கல்) என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரக்கடிப்பவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். மாற்றி அடிக்க மாட்டார்கள்

அதைப்பற்றிக் கவியரசர் கண்ணதாசன் கூட ஒரு பாடல் எழுதிவைத்துள்ளார். அன்னைத் தமிழுக்கு அவப்பெயர்  வரக்கூடாது என்று, அந்த மாகவிஞன் அதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துள்ளார்

பாடலைப் பாருங்கள்:

Whisky with water
Brandy with soda
Rum with cola
Gin with lemon
Men with women

குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும்  நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு  எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர்  என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.

கேள்வி 2 . அனைவருக்கும் 337 பரல்கள் தான். அப்ப ஒரு தோஷம் இருந்தால் கண்டிப்பாக ஒரு யோகமோ  அல்லது ஒரு யோகம் இருந்தால் கண்டிப்பாக ஒரு தோஷமோ இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாமா?

அப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்
இரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள
வேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்
நன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்

கேள்வி 3 . ஒரே கிரகத்தின் புத்தி வெவ்வேறு தசையில் வெவ்வேறு பலன்களைத் தருமா? உதாரணமாக, சூரியதசை ராகு புத்தி, செவ்வாய்
தசை ராகு புத்தி.

நல்ல கேள்வி!

இரண்டிலுமே தீய பலன்கள்தான். ஆனால் வெவ்வேறாக இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால், சூரிய தசை  ராகு புத்தியில் 2 விக்கெட்டுக்கள் விழுந்தால், செவ்வாய் தசை ராகு புத்தியில் வேறு இரண்டு விக்கெட்டுக்கள் விழுகும்.

உங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.

இரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப்  போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்
சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever

1. சூரிய தசை ராகு புத்திக்கான பாடல்:

    “ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி
       ஆகாத மாதம் பத்து நாள் மூவெட்டாகும்
    போமென்ற அதன் பலனைப் புகழக்கேளு
       பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
    நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
       நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
    தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்
       தகமை இல்லாத நாளென்று தணித்து நில்லே!”

2. செவ்வாய் தசை ராகு புத்திக்கான பாடல்:

    ”பகையான சேய் திசை ராகுபுத்தி
       பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று
    துகையில்லாத நாளதுவும் பதினெட்டாகும்
       துன்பங்கள் சுரதோஷம் வாத பீடை
    வகையில்லா சத்துருவும் அக்கினியுண்டாம்
       வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
    நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
       நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே!”

கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்?

Money on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ்,  கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு,  அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல  பலனைத்தரும்.

ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.44
B.N.Sivakumar
சிவகுமார்

Dear Sir,
“ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும்.”

The above said thing which I got from your blog. Please clear my my doubt in my horoscope lagna: simmam Rasi: katagam star: poosam 3rd patham 7th lord sani associated with sun, mercury and moon in the 12place, Ragu in 2nd and Kethu in 8th, guru, sukran and chevvai in 10th. please clear me will my marriage will face trouble according to ur blog note. my dob is 17-07-1977, time: 9.30 am place of birth Kallakuruchi.
Thanks & Regards
B.N.Sivakumar

தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்

1.பையனின் தோற்றம்,
2.வயது (32 தாண்டிய பையன் என்றால் ஜூட் விட்டு விடுவார்கள்)
3.படிப்பு, (இன்றைய மார்கெட் நிலவரம். பொறியாளர் மாப்பிள்ளை)
4.வேலை செய்யும் இடம், (Multinational Companyயில் வேலை)
5.வாங்கும் ஊதியம், (மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையக்கூடாது)
6.அவனுடைய ஜாதகம் (சுத்த ஜாதகமாக இருப்பது நல்லது)
7.பெற்றவர்களின் நிலைமை (உடன் இருக்கிறார்களா? தள்ளி இருக்கிறார்களா?)
8. குடும்ப நிலைமை (கல்யாணமாகாத நாத்தினார்கள் இருக்கிறார்களா?)
9. செல்வ நிலைமை. (குடும்பத்தினருக்கு, வண்டி, வாகனம் சொந்த வீடு நிலம் நீச்சு இருக்கிறதா? அல்லது அன்றாடம் காய்ச்சிகளா? மாப்பிள்ளையின் வருமானத்தில்  குடும்பம் நடத்துபவர்களா?)

அதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன? நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு  தொங்குவது ஏன்?  மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.

சரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய  நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.

அத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:

பிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)
அடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)
அதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்

ஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.

இப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள்

அவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன்  ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.

நீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம்  செய்துகொள்ளூங்கள்.

பழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.

சொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்

திருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.45
சம்பத்குமார்
கோயம்புத்தூர்
   
Dear sir
Its common questions for tamil people. When sri lankan tamil people get TAMIL ELLEM Based on his astro.I am waiting for your valuable feedback  
Your student

அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத்  தமிழர்களுக்குத்
தனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில்  அனைத்துத் தமிழர்களுக்கும்
ஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.

கிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.46
M.பாரதிதாசன்.
   
அய்யா, இத்துடன் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளேன்.
நிலையான வேலை இல்லை, என்னுடைய  வேலையை பற்றி
தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாம் அச்திபதி புதன் வக்ரம்,
அதனால் நிலையான வேலை அமையாது என்று கூறுகிறார்கள்
தயவு செய்து விளக்கம் தரவும்.

நான் ஏற்கனவே இந்த விபரம் பற்றி தங்களிடம் கேட்டு இருக்கிறேன்,
தாங்கள், தங்கள் வேலை பளு காரணமாக, ஒரு இரண்டு மாதம் காத்து இருக்குமாறு கூறினீர்கள். அதனால்தான் தற்போது மறுபடியும்
அனுப்பி உள்ளேன்.
தயவு செய்து விளக்கம் தரவும். ப்ளீஸ்....

“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள்  வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத  வேலையாக இருக்கலாம்.

அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்?

கொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை  செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்
கிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே தெய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன  ஆகும்?

முதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்!

நிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு  பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா? அப்படியிருந்தால் போரடிக்காதா? 
அதில் த்ரில்  இருக்குமா?

உதாரணத்திற்கு உங்களுக்கு இரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Guard வேலை முதல் பத்துவருடம் Goods Trainல் வேலை. அடுத்த பத்துவருடம் Passenger Trainல் வேலை. அடுத்த  8ஆண்டுகள் Express Trainல் வேலை அடுத்த 8ஆண்டுகள் Sperfast Trainல் வேலை. 24 வயதில் சேருகிறீர்கள். 36 ஆண்டுகள் சர்வீஸ். 60 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளூங்கள். அது   நிரந்தமான வேலைதான். சுவாரசியமான வேலையா?

வேலையில் இரண்டுவிதம் இருக்கிறது. creative work. Non creative work

எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், சிற்பிகள், ஓவியர்கள்,  போன்றவர்கள் எல்லாம் க்ரியேடிவ் சைடில் வருவார்கள் (ஆக்கமான வேலைகள்)

பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சாலைகளில் மெஷின் இயக்கிகள், லோட் மேன்கள், வயல்களில், பொதுப்பணித்துரைகளில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் Non creative work என்ற கணக்கில் வருவார்கள்.

உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, ஆக்கமான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். பின்னாளில்  பணத்துடன் பிரபலமும் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் ஜாதகத்திற்கு வருவோம். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து  இரண்டில் உள்ளார். தொழில்காரகன் சனி உச்சமாகி பதினொன்றில் உள்ளார். ஆகவே உங்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தற்சமயம் அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30.8.10

எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.13
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.40
S. தினேஷ் மாதவன்
S.Dinesh
பொறியாளர்
சென்னை
வயது 21

Question 1 :
Why Guru,Sani, Sevvai have three aspects (Paarvai)?

அவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விதிகளின்படி உள்ளதாகும். அதை நமக்கு வகுத்துக்கொடுத்தவர்கள் வராஹிமிஹிரர், பராசுரர் போன்ற முனிவர்கள். ரிஷிகள். அந்த மூன்று கிரகங்களுக்கு மட்டும் பார்வையில் அதிகப் படியான சலுகைகள் ஏன் என்பதற்கு யாரைக் கேட்க முடியும்? அந்த முனிவர்கள், ரிஷிகள் எல்லாம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.

இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிதான் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும், அவரைவிட, அதிகமான அதிகாரங்களுடன், சக்தியுடன் (power) விளங்குபவர் நாட்டின் பிரதமர். அவருக்கு ஏன் அந்த அதிகப்படியான (அதாவது முதல் குடிமகனைவிட) சலுகைகள் என்று நீங்கள் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் கேட்க முடியும்? நம்மால் அது முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

Question 2 :
To calculate Bukthi,Antharang is there any formula?

தசையையும், புக்தியையும் கணிப்பதற்கு சூத்திரங்கள் உள்ளன. அந்தரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Question 3 :
what are the planetary positions to possess "intuition power"?

இந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த "intuition power"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.

ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவும் இந்த தெய்வசக்தியையும் கொண்ட மனிதர் ஜாதகப் பலன்களைச் சிறப்பாகச் சொல்வார். பொட்டில் அடித்த மாதிரி சரியாகச் சொல்வார். பழசைச் சொல்லும்போது கேட்பவன் மிரண்டு போவான். தொடர்ந்து எதிர்காலத்தைச் சொல்லும்போது. அசந்து போவான். விதிக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே எழுதப்பட்டுள்ளது (தலை எழுத்து) ஜாதகத்தின் மூலம் அதைச் சொல்ல முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்களே அவர்கள்தான்.

அவர்களுக்கு அந்த சக்தி எப்படிக்கிடைத்தது?

கண்டுபிடிக்க முடியாது?

அள்ளிக்கொண்டுபோய் கட்டித் தொங்கவிட்டு, அடித்துக் கேட்டாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது (உங்கள் வயதிற்காக இதைச் சொல்கிறேன்)

விளக்கம் போதுமா?

Question 4 :
How to find whether Love Marriage will be Success or not?

திருமணத்தை ஏன் பிரிக்கிறீர்கள்? காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் செய்துவைத்த திருமணம் என்றாலும் திருமணம் திருமணம்தான்! திருமணங்கள் வெற்றியில் முடிவதற்கு ஒரு காரணம்தான். தம்பதிகளுக்குள் எல்லாம் ஒத்துப்போய் விட்டது. அதைப்பற்றி யாரும் கேள்விகள் கேட்கமாட்டார்கள். அல்லது கவலைப்பட மாட்டார்கள். தோல்வியில் முடிவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதை மட்டும் தெரிந்து கொள்ள அல்லது அதுபோல் நடந்துவிடக்கூடாதே என்கின்ற எச்சரிக்கை உணர்வு மேலிடும்போது ஜாதகங்களை ஆராய வேண்டும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களையும் ஆராய வேண்டும். இருவரின் ஏழாம் வீடு, குடும்ப ஸ்தானம், லக்கினம் ஆகிய மூன்றையும் அலச வேண்டும். தோஷங்களை அலச வேண்டும் இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும். இது போன்று பல அமைப்புக்கள் உள்ளன. ஜோதிடம் என்பது கடல். அதைக் குடத்தில் அடைக்க முடியாது. அதாவது ஒருவரியில் பதில் சொல்ல முடியாது.

அதைப்பற்றி 50 பக்கங்களுக்கு எழுதலாம். இதுவரை நிறைய  எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படியுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.41
ஸ்ரீஸ்தன்

அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம்
தங்கள் வேலை அல்லது தொழில் சம்பந்தமாக எழுதிய பாடங்கள் மிக சிறப்பாக இருந்து. சிலர் தங்கள் வேலைகளில் அல்லது தொழில்களில் மிக கண்ணும் கருத்துமாக இருகின்றனர். சிறு சுகவீனம் வந்தால் என்ன அல்லது வேறு அவசிய விடயங்கள் இருந்தால் என்ன தங்கள் வேலைக்கு அல்லது தொழிலுக்கு செல்வதை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பதில்லை. இதற்கு எந்த அமைப்பு காரணம் என்று தயவு செய்து தங்களுக்கு வசதிப்படும் பொழுது விளக்க முடியுமா என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றி
தங்கள் வகுப்பு  மாணவன்
ஸ்ரீ

சிலபேர் சோம்பேறிகளாக இருப்பார்கள். சிலர் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலபேர் பிடிவாதம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலர் எதையும் அனுசரித்துப் போகக்கூடியவர்களாக இருப்பார்கள். சில பேர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். சிலர் சாந்த சொரூபியாக இருப்பார்கள். சிலர் சிடுமூஞ்சியாக இருப்பார்கள். சிலர் சிரித்தமுகமாக இருப்பார்கள் இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

காரணம் என்ன?

எல்லாம் வாங்கிவந்த வரம்!

ஜாதகப்படி சொன்னால், இவை எல்லாம் குணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். “இவன் ரெம்ப நல்லவன்டா. எப்படி அடிச்சாலும் தாங்கிக்கிட்டுச் சும்மா இருக்கான்டா” என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுவும் குணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

லக்கினம், லக்கினாதிபதி & லக்கினத்தில் அமரும் கிரகங்களை வைத்து அவைகள் ஆளாளுக்கு வேறுபடும்
உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி சேர்ந்தால் ஆசாமி சோம்பேறியாக வழுவட்டையாக இருப்பான். லக்கினாதிபதியுடன் செவ்வாய் கை கோர்த்தால் ஆசாமி படு சுறுசுறுப்பாக இருப்பான். லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.42
செ.பழனிமுருகன்

வணக்கம்,

1. லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளீர்கள்,ஆனால் ராசியாதிபதி, நட்சத்திராதி பதியை பொருத்து ஒரு சந்தேகம்., ராசியாதிபதி, நட்சத்திராதிபதி ஒரு ஜாதகத்தில் சுபராக வந்தால் நற்பலன்கள் கூடுமா மற்றும் பாபராக வரும்போது தீமைகள் குறையுமா, அவற்றிற்கான தசா-புத்தி பலன்களையும் தருக?

பள்ளிக்கூடத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்று கேள்விகளைத் தருவார்கள். அதுபோல உள்ளது உங்கள் கேள்வி

சூப்பர் டீலக்ஸ் - வோல்வா - Air suspension with air condition - பேருந்தாக இருந்தால் பயணத்தின் சுகம் கூடுமா? அல்லது அதே பேருந்து இவை ஒன்றுமே இல்லாமல் அறுதப் பழசாக - சீட்டெல்லாம் கிழிந்து குஷன் இல்லாமல் - FC பண்ணாத வண்டியாக - 15 வருடம் பழசான வண்டியாக இருந்து, பயணித்தால் சுகம் குறைந்து அவதிகள் அதிகமாகுமா என்று கேட்பதுபோல உள்ளது.

இல்லாள் (மனைவி) குணவதியாக வந்தால் வாழ்க்கை என்பது டீலக்ஸ் பஸ் பயணம் போன்று சுகமாக இருக்கும். இல்லாள் சண்டாளியாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ்ஸில் பயணம் செய்வதைப்போன்று இருக்கும்.

ராசியாதிபதி, நட்சத்திராதிபதி சுபராக வந்தால் வாழ்க்கை டீலக்ஸ் பஸ் பயணம். ராசியாதிபதி, நட்சத்திராதிபதி பாபக்கிரகமாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ் பயணம்

தப்பிக்க முடியாது. பஸ்சை விட்டுக் குதிக்க முடியாது. கூடுதல் குறைவுகள் எல்லாம் பார்க்க முடியாது. பயணித்தே ஆகவேண்டும்

"பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திடு முடிந்திடும் பாபம்!"

----- கவியரசர் கண்ணதாசன்.

நல்ல மனையாள் கிடைத்தால் உங்களைப் பிடிக்கமுடியாது. மோசமான துணைவி என்றால் நீங்கள் தத்துவ ஞானியாகிவிடுவிர்ர்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் Better half, Bitter half என்று பிரித்துச் சொல்வார்கள்.
நீங்கள் அனுசரித்துப்போனால் Bitter halfகூட Better halfஆக மாறிவிடும்.

விளக்கம் போதுமா?

2. பிறந்த எண்ணிற்கான ஆதிக்க கிரகம், ஜாதகத்தில் பாவியாக வந்தால் மோதிரம் அணியலாமா?

நீங்கள் மோதிரம் போட்டுக்கொள்வதால் பாவியாக உள்ள சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் எல்லாம் கல்லால் ஏற்படவிருக்கும் encounter shots களுக்குப் பயந்து நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன?
அதெல்லாம் மாறமாட்டார்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் அவர்களும் தங்களுடைய சேஷ்டைகளைச் செய்வார்கள்.

பிறகு கற்களால் ஏற்படும் பயன் என்ன?

குறிப்பிட்ட கற்கள் அதற்குரிய கிரகத்தின் magnetic rays களைக் குவித்து ஜாதகனுக்கு ஏற்படவுள்ள நன்மைகளைக் கூட்டித்தரும். சுலபமாக்கும் enhancement என்று வைத்துக்கொள்லுங்களேன். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு booster என்னும் கருவி இருக்கிறது இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளூங்கள்

3. லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது , 
(எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி., 
செவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று '' 
என்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து  
விட்டது தீமை எனக் கொள்வதா?

லக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்? உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே? உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும்? அல்லது நூறு நாட்கள் ஓடும்?

நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns)  எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம்  ஞானியாகிவிடலாம்.

4. விபரீத-ராஜயோகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவதற்கும், பகை, நீசம் பெறுவதற்குமான பலன்கள் என்ன?

என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்கள் இல்லையா? 

Multinational Banks like Bank of America, Citi Bank (மேல்நாட்டு வங்கிகள்) Nationalised Banks in India (தேசிய வங்கிகள்), Private Banks in India (தனியார் வங்கிகள்), Co-operative Banks, (கூட்டுறவு வங்கிகள்) Village Banks (கிராம வங்கிகள்) என்றுள்ள வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் (Salary), வேலைபார்க்கும் சூழ்நிலையும் (working conditions) ஒரே மாதிரி இல்லாமல், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்களுடன் இருக்குமில்லையா? அதுபோலத்தான் நீங்கள் கேட்டுள்ளதும் இருக்கும்.

விளக்கம் போதுமா?

பத்தாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24.8.10

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 12
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 37
V கிருஷ்ணர்
வைகுந்தன் கிருஷ்ணர்
பிறந்த ஊர்: ஜாஃப்னா,
வசிக்கும் ஊர்: மெல்போர்ன், ஆஸ்திரேலியா
வயது: 63

வணக்கம்,
எனது வினா. கிரகம் ஒன்று நவாம்சத்தில் பலவீனமாயும், பரல்களில் வலிமையாகவும் இருப்பின் சற்று கேள்வி பிறக்கின்றது. ஒருவரின் கேள்விக்கு சுடிதாரையும் சேலையையும் குறிப்பிட்டீர்கள்.கேள்வியில் கிரகத்தின் உடன்(Positive) எதிர்மறை(Negative) அம்சத்தை கவனித்தால் சுடிதார், சேலை உடன்படும் அம்சத்தில் வருகின்றன. சேலையை நவாம்ச (பலவீனமாயுள்ளது)மாகக் கொண்டால் உடன்படும் அம்சமான சேலை உடலுக்கு பொருந்தாதா?

ஏன் பொருந்தாது? பொருந்தும். என் அப்போதைய விளக்கம் (இப்பொதும் அதே விளக்கம்தான்) சேலையைக் கட்டிக்கொள்ளூங்கள். அல்லது சுடிதாரைப் போட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றை ஒரு நேரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றின்மேல் ஒன்றைப் போட்டுக்கொள்ளாதீர்கள். புரிந்ததா?

அம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது அஷ்டகவர்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு, நீங்களும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பாதீர்கள்.

ராசியின் விரிவாக்கம்தான் அம்சம். அம்சத்தில் கிரகம் வீக்காக இருந்தால், தலையைப் பிடித்துக்கொண்டு, சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று சும்மா உட்கார வேண்டியதுதானே? எதற்காகப் பரல்களைப் பார்க்கிறீர்கள்? யார் பார்க்கச் சொன்னது? பார்த்ததால்தானே இந்த சந்தேகம்?

வீக்காக உள்ளது என்று நீங்கள் வருத்தப்படும் கிரகத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் எப்படி அதிகமான பரல்கள் கிடைத்தது? அதற்குக் காரணம் என்ன? அதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

ராசியின் 1/9வது பாகம் அம்சம். அதில் கிரகத்தின் உண்மையான நிலைமை மட்டும் தெரியும். அது உச்சமா, நீசமா, பகைவீட்டில் உள்ளதா என்று மட்டுமே தெரியும்.

அஷ்டகவர்க்கதில் கிரகத்தின் இருப்பிடம், அதன் மேல் விழுகும் பார்வை, சேர்க்கை, அந்த இடத்தில் அது அமர்ந்திருப்பதால், மற்ற இடங்களில் இருந்து அது பெறும் நன்மைகள் என்று எட்டுவிதமான மதிப்பெண் அட்டவனைகளைக் கூட்டி வரும் மொத்த நன்மைகள் தெரியும். இப்போது சொல்லுங்கள் எது உண்மையில் உகந்தது?

ஒருவனுக்கு, ஒரு பெண்ணை மட்டும் கட்டி வைப்பதாகச் சொன்னால் சும்மா இருப்பான். இரண்டு பெண்களைக் கட்டி வைக்க முடியும். கட்டி வைக்கிறோம் என்றால் என்ன ஆகும்?

நோண்டுவான். தோண்டுவான். துடிப்பான். புரள்வான். கடைசியில் குழம்பி நிற்பான்.

இருவரில் எவள் அழகு? எவள் அறிவு மிக்கவள்? எவள் படித்தவள்? எவள் திறமைசாலி? எவள் குணவதி? எவள் தைரியம் மிக்கவள்? எவள் பணக்கார வீட்டில் இருந்து வந்தவள்? எவள் பின்புலம் மிக்கவள் (சொந்த பந்தம் உள்ள பின்புலம். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்) என்று எல்லாவற்றையும் எடைபோட ஆரம்பித்துவிடுவான்.

இப்போது சொல்லுங்கள். அழகு மட்டும் அம்சமாக உள்ளவளுடன் உறவா? அல்லது மற்ற அனைத்தையும் கொண்ட வலுவானவளுடன் உறவா?

யாரை அவன் மணந்து கொள்வது நல்லது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்: 38
ஜீவானந்தன்
கோயம்புத்தூர்

Hi sir good morning have a great day,

1) You told that if kethu in 8th place, that person will die by accident or an diseases . If that persons rasi or laginam is magaram or kumbam they also have the same issues?. Am asking this question because SANI is ayul karagan.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையைப் பிடித்து அடித்து ஆடுபவர் அந்த அணியின் தலைவர் (captain) என்பதற்காக, எதிர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் (fast bowler), பயந்து அல்லது மரியாதை கொடுத்துப் பந்து வீசுவாரா என்ன? பந்து வீசுபவருக்கு, அணியின் துவக்க ஆட்டாக்காரரும் (opening batsman) ஒன்றுதான் பத்தாவதாகக் களம் இறங்கும் ஆட்டக்காரரும் ஒன்றுதான், அணியின் தலைவரும் ஒன்றுதான். அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனும் ஒன்றுதான். அதை நினைவில் வையுங்கள்.

ஆயுள்காரகர் சனியின் வீட்டைச் சேர்ந்த மகர, மற்றும் கும்ப லக்கினக்காரகளுக்கு என்று தனிச் சலுகைகள் எதுவும் கிடையாது. நேரம், காலம் வந்தால், அவர்களுடைய மிடில் ஸ்டம்ப் பறந்துவிடும். மட்டையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்ப வேண்டியதுதான். அதாவது மேலே போய்ச் சேர வேண்டியதுதான்.

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்? விக்கட்டை வீழ்த்துவதை மட்டும் பார்ப்பார். மற்ற எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அர்த்தமாயிந்தா ஜீவானந்தன் காரு?

2) Small doubt sir, You told that we should not see jadhagam for a child until that child attains age 12. I studied this issue in an astrology book in that they mentioned to split that 12 years in to 3.
   0 - 3
   4 - 7
   8 - 11.
If the child died in age 0-3 they mentioned bcoz of their MUNORGAL pavapunniam.
4-7 they mentioned bcoz of that childs father(THANDHAI vali) pavapunniam
from 8-11 means mothers(AMMA vali) pavapunniam.?? Is it true sir.

எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை தாயின் ஜாதகமும், அதற்குப் பிறகு 12 வயது வரை தந்தையின் ஜாதகமும் ஆதிக்கம் செலுத்தும்!

3) By seeing ones jadakam how to find out that they has a luxury life or a struggling life?

சுகமான வாழ்க்கைக்கு நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
நான்காம் வீடு கெட்டிருந்தால் சுகமில்லாத வாழ்க்கை. சுகம் என்பது
வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள், நிலம் நீச்சு, ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்கள் என்று செளகரியங்களைக் குறிக்கும். சந்தோஷம்
என்பது ஐந்தாம் வீட்டின் வேலை (House of mind) அத்துடன் மனகாரகன்  
(Lord for mind) சந்திரனின் வேலை.

  “பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
   பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது”


என்ற கவியரசரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேளுங்கள் அப்போது புரியும் - செளகரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் உள்ள வேறுபாடு.

சந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்
ஏழை சந்தோஷமாகத் தூங்குவான். பென்ஸ் காரில் செல்லும்
பெண்ணைவிட, ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில்
கணவனைக் கட்டிப்பிடித்தவாறு செல்லும் பெண் மகிழ்ச்சியாக
இருப்பாள். வங்கி இருப்பு பத்துக் கோடி இருப்பவனைவிட,
மனைவியின் மடியில் படுத்திருக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தோஷமாக இருப்பான்.

இப்போது சொல்லுங்கள் எது முக்கியம்?

4) By seeing ones jadakam how to find that he/she was a thief or a lier?

திருட்டில் பலவிதம் இருக்கிறது. பிக்பாக்கெட்டில் இருந்து, வீடு புகுந்து கொள்ளையடிப்பதுவரை பல விதங்கள் உள்ளது. ஆகவே அதற்கும் பலவிதமான கிரக அமைப்புக்கள் உள்ளன.

பொதுவாக திருட்டு எண்ணம் உடையவர்களுக்கான கிரக அமைப்பு இதுதான். கேந்திரங்கள் மூன்றிலும் தீயசக்திகள் இருப்பதுடன், அவைகள் சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் ஜாதகன் திருட்டு எண்ணம் உடையவன் என்று கொள்ளலாம் (பொதுவிதி)

It is called as Dala Sarpa Yoga All malefics in three Kendras and no benefic in Kendra. The person might be scheming, wicked, miserable, destitute and dependent upon others for subsistence.
மேலும் சில அமைப்புக்கள்: 1.Saturn occupies the 12th house from Moon. associating with wicked women, inclined towards forbidden pursuits. 2.Durudhara Yoga Any planets, other than Sun, occupy the 2nd and the 12th house from Moon. 3. A malefic, other than Moon, occupies the 2nd house from Sun.This variety of Veshi Yoga shows that the person is a destitute and associates with wicked people.4.Saturn occupies the 2nd house from Sun. This variety of Veshi Yoga shows that the person is interested in business, inclined to cheat others of their wealth, and has malice towards his/her preceptors.5. If Rahu is present in the fourth house of the horoscope of a person, he is wretched and lives in poverty, bereft of brothers and friends, leads a solitary life among mean people, is a cause for quarrels and fights and is engaged in sinful activities.

பொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை? 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்!
------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்: 39
தினகர் திருமலை
T. தினகர்
பெங்களூர்

Hello sir,
Vanakkam,
I'm Dinakar, I came to know about you thru one of my friend who is following your lesson's. I have some queries if you feel my questions make sense and when you find time please reply, Kindly apologize me if u feel these questions doesn't make sense.

In terms of astorlogy what is a marriage?
1.Is marriage a  maritial relationship between a Boy and a girl living together?.
 or
2.Is marriage relation considered only after tieing the mangalsutra?. What is the relationship between  marriage & astrology & mangalsutra(Thali)?
or
3. Is it just two stars (boy & girl) living in same home?
The reason why I ask this is, I heard from astorlogers  there are some stars (for girls) like moolam1st patham, visakam4th patham that brings ill fate to the  boy's family members.(I came to know abt this thru My cousin, proper match is not able to be found for her) Is it true?
If yes, why is that these stars influence the fate of other's in the boy's family?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஒரு புதிய பரம்பரியின் / பாரம்பரியத்தின் துவக்கம்!

மூலம், ஆயில்யம், கேட்டை என்று சில நட்சத்திரங்களை மக்கள் தவிர்ப்பது என்னவோ உண்மை. அதுவே அவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் கத்தியைக் கையில் எடுத்துவிடுவார்கள். நட்சத்திரங்களில் கேடுகள் எதுவும் இல்லை. மூலம் மாமியாரை மூலையில் உட்காரவைத்துவிடும் என்று சிலர் மூல நட்சத்திரங்களை ஒதுக்குவார்கள். மாமனாரின் ஆயுள் அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருமகள் வந்து அவரைத் தூக்குவாள் (வைகுண்டத்திற்கு அனுப்பி வைப்பாள் என்றால்) எந்த நட்சத்திரப் பெண் வந்தாலும் அது நடக்கும். மூல நட்சத்திர மருமகள் மட்டும்தான் அதைச் செய்வாள் என்பது பேதமை (பைத்தியக்காரத்தனம்)

மூல நட்சத்திரப் பெண்ணாக இருந்தாலும், ஒதுக்காமல், அவள் தங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால், ஜாதகத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தி வந்தால், துணிந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ளலாம். ஒன்றும் ஆகிவிடாது.
---------------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

23.8.10

குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 11
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 33
சதீஷ் பாண்டியன்
   
வணக்கம்,
நான் நீங்கள் எழுதி வரும் பதிவுகளை படித்து வருகிறேன்.
என்னுடைய ஜாதகத்தையும் உங்களுடைய பதிவுகளையும் தொடர்பு 
படுத்திப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.

1. ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பெரும் பாக்கியம் இல்லையா?

முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைப் பேற்றிற்கு அதி முக்கியமானது அதுதான்! மற்றதெல்லாம் உபரியான மேட்டர்கள். குழந்தைப்பேறு என்பது டீம் ஒர்க். ராகு என்னும் ஸ்பின் பெளலரை
மட்டும்  வைத்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்ய முடியாது.
குழுவின் மற்ற ஆட்டக்காரர்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது
தெரியவரும். அதுவரை பொறுத்திருங்கள்.

2. நான் முழு நேரமும் தெளிவற்றவனாக இருக்கிறேன்?

அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். ஐந்தில் (house of mind) ராகுவும், 12ல் சந்திரனும் (Lord for mind) இருந்தால் அப்படித்தான் இருக்கும். தீர்த்தம் குடிக்க வேண்டும் (துளசி கலந்த தீர்த்தம். நீங்கள் வேறு தீர்த்தத்தை நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!)

3. என் திருமணமும் பிரச்சினையில் இருக்கிறது. இதுவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

உங்கள் ஜாதகத்தில் 6ம் & 8ம் அதிபதிகளான சந்திரனும், புதனும், களத்திரகாரகனான சுக்கிரனுடன் சேர்ந்து  12ஆம் வீட்டில்
இருக்கிறார்கள். அதனால்தான் தாமதம். 29 வயதில் ராகு தசை முடிகிறது. அதற்குப் பிறகுதிருமணம் நடக்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நீங்கள் திருவோண நட்சத்திரக்காரர். மகர ராசி. சனிக்கிழமை தோறும் சனீஷ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

4. ஜாதகத்தையும் பதிவுகளையும் தொடர்பு படுத்தி கேள்விகேட்டமைக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் மாணவன்,
சதீஷ் பாண்டியன்

இது பழகிப்போன / கேட்டுப் புளித்துப்போன ஒன்று. மன்னித்துவிட்டேன். அதற்காக, உடனே, உங்கள் ஜாதகத்தை வைத்து இன்னும் மூன்று கேள்விகளை அனுப்பிவைக்காதீர்கள்.திருவோண நட்சத்திரம் - சதீஷ் பாண்டியன் என்ற பெயரை மறக்க மாட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.34
இளையராஜா குமாரவேல்
K. இளையராஜா
பிறந்த ஊர்: ஆரணி
வசிக்குமிடம்: கோயம்புத்தூர்
வயது. 26

கேள்வி ஒன்று
Dear Sir,
             This is Ilayaraja from Coimbatore Ratnapuri. Last week only i visited your web page. i wish to join in your classroom. Please accept my request and give guidance to Learn.
Thanks & Regards
K.ILAYARAJA

கேள்வி இரண்டு
Please tell me my Horoscope is eligible for Learning and i wish to see Horoscope for other peoples also. kindly tell me it is possible in my horoscope.

கேள்வி மூன்று   
yes i want to know it is possible to do Astrology as my profession. it is possible for me. please tell me.now i finished 30 lessons. i ll complete my remaining lessons as soon as possible.

ஐந்து நாட்களில் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். உங்களின்
ஜோதிட ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.30 நாட்களில் ஆங்கிலம்,
30 நாட்களில் ஹிந்தி போன்று 30 நாட்களில் ஜோதிடராகும் வழிகள்
என்ற நூல்கள் கிடையாது. 30 நாட்களில் கற்றுக்கொள்ளவும் முடியாது.ஜோதிடம் படிப்பதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால்
போதும். வேறு எதுவும் (உங்கள் மொழியில் சொன்னால் வேறு
எந்தப் புண்ணாக்கும்) வேண்டாம்.

விதி உங்களைப் பொறியாளராக்கி, நல்ல வேலையிலும் அமர்த்தியிருக்கிறது. எதற்கு வீண் ஆசை?

நல்ல விற்பனைப் பிரதிநிதிக்கு அடையாளமாக இதைச் சொல்வார்கள்:
A good marketing man is one who sells refrigerators to Eskimos!

நல்ல ஜோதிடருக்கான அடையாளத்தைத் தேடிப்பெற முடியாது. அதுவாகவே கிடைக்கும். பாடங்களில் நல்ல தேர்ச்சி, நீண்ட அனுபவம், தெய்வ அருள்  (intuition power) ஆகிய மூன்றும் சேர்ந்து அதைக்  கொடுக்கும்

ஆகவே பொறுத்திருங்கள். முதலில் பாடங்களை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். உறவினர்கள், நண்பர்களின்  ஜாதகங்களைப் பார்த்துப்பலன் சொல்லிப் பழகிக்கொள்ளுங்கள். பிறகு வாய்ப்புக்
கிடைத்தால், பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்யுங்கள். அதில்
வருமானம் வரத்துவங்கினால், பிறகு முழு நேரத்தொழிலாக அதைச்
செய்யுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.35
சிவசுப்பிரமணியன்
சென்னை
வயது 30
   
Hello Sir
Thanks for answering previous questions.. and today's story is also good...


I have a general question... for some of the questions you have answered
like the  kids born in 8 seconds difference will have different kind of life
and i too agree with you.. but in that you explained about the Nadi.
is it  related with Nadi Jodidam. As far as i have researched Lagna
charts dont change for 90 mins and Navamsha charts does not change
for 15 mins and i am not sure about the parals. have not looked into it
deeply. So could you please let us know where can we find this
difference in the horoscope... 8 seconds difference.. and also the
applicability of horoscope for the kids born through Caesarian.
Please note that this question is not to question your expertise
or existence of Horoscope.. it is only a general question
Regards
Sivasubramaniam
Chennai


நாடி ஜோதிடம் பற்றி இன்னும் எழுதவில்லை. அது மேல் நிலைப்பாடம். தனித்தொடராக எழுதவுள்ளேன். பின்னால் வரும். பொறுத்திருந்து
படியுங்கள் நண்பரே! உங்களின் மேலான ஆர்வத்திற்கு நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.36
R.பரமசிவம்
சென்னிமலை
   
சார்,  நான் உங்களுடைய மாணவர்களில் ஒருவன் உங்களுடைய
வகுப்பு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனது
நன்றிகள். தங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி .  இரண்டாம் வீடு தனம் , குடும்பம். இரண்டாம் வீட்டில், 
இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு
ஆகிய அதிபதிகள் புதன், குரு , சனி ,சந்திரன் நின்றால் பணம்
நெறைய வருமா? வராதா? (வரும் ஆனால் வராது என்ற பதிலை
தவிர்த்து சொல்லவும்) வரும் என்றால் எந்த திசை புக்தியல்
வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்?


இரண்டாம் வீட்டில் நிறைய கிரகங்கள் இருந்தால் நிறையப்பணம் வரும் என்ற எண்ணம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். முதலில் நீங்கள் கொடுத்துள்ள விவரங்களில் உள்ள இமாலயத் தவறைப் பாருங்கள்.

இரண்டாம் வீட்டில்,  இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு ஆகிய அதிபதிகள் (ஏழு கிரகங்கள்) உள்ளதாகச் சொல்லி, இருப்பவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது புதன், குரு, சனி,
சந்திரன் என்று நான்கு கிரகங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மையில் ஒரே இடத்தில் ஏழு கிரகங்கள் உள்ளனவா?
அல்லது தவறான தகவலா? லக்கினத்தைச் சொல்லாமல்  விட்டு
விட்டீர்கள். அதைச் சொல்லுங்கள். அதைச் சொன்னால் இரட்டை ஆதிபத்தியத்தைவைத்து 4 கிரகங்களுக்குள் நீங்கள் குறிப்பிடும்
கிரகங்கள் வந்துள்ளனவா என்று ஒத்துப்பார்த்துக்கொள்ளலாம்.

மிஸ்ஸாகும் மூன்று கிரகங்களும் சென்னிமலை முருகனை வணங்கி
வரப் போயிருந்தால், அவர்கள் திரும்பிவந்தவுடன், இரண்டாம் வீட்டில் உட்காரவைத்து, தாகத்திற்கு தம்ஸ் அப்ஸ், செவன் அப்ஸ் என்று
எதையாவது கொடுத்துவிட்டு, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்

மேலும் தங்களிடம் ஒரு கேள்வி ..தங்கள் சில இடங்களில் பாடங்களை
படித்து சுய ஜாதகத்தை பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்லிருகிறீர்கள் அப்படி பார்க்கும் பொது சுயஜாதகத்தில் தானே சந்தேகம் வரும்? 
தயவு செய்து இந்த கேள்வியைத் தவறாக எடுத்துகொள்ள  வேண்டாம், அதற்காகப் பதில் தராமலும் விட்டுவிடாதீர்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர்  அவர்களே!

இதை நான் ஒப்புக்கொண்டால், ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை
வைத்து 360 கேள்விகளைக் கேட்கத் துவங்கிவிடுவார்கள்.
360 கேள்விகள் எப்படிக் கேட்க முடியும் என்று மலைப்பாக
இருந்தால், மின்னஞ்சலில் கேளுங்கள், அதற்குச் சரியான
பதிலைத் தருகிறேன். இங்கே சொன்னால் எல்லோரையும் எழுப்பிவிட்டதாகிவிடும் அல்லது உசுப்பி விட்டதாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

19.8.10

மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணன் சீதாராமன். 29
கத்தார்
வயது 32

கேள்வி:
ஐயா வணக்கம்,
நாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  உள்ள தமிழ் மன்றத்தில் கேட்டது ஐயா. முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர் உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர்  வருவார். அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும்  அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும்  இந்து மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா?

வாத்தியாரின் பதில்

மதத்தைப் பற்றி இப்போது எழுதினால் பலருக்கும் மதம் பிடித்துவிடும். அதைப் பிறகு பார்ப்போம். இந்தியா உலகையே ஆளப்போவது என்னவோ உண்மை!
அதை இன்று சொன்னால், மக்கள் நம்ப மாட்டார்கள்.

மக்களுக்கெல்லாம் இரண்டு கவலைகள்தான்:

வயதானவர்களுக்கு (50 வயதிற்கு மேல் - 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு): விலைவாசி உயர்வு. சொன்னது கேட்காத மனைவி, மற்றும் பிள்ளைகளை வழிக்குக்கொண்டு வருவது.

இளசுகளுக்கு: (18 -25 வயதுக்காரர்கள்) பல்சர் மோட்டார் சைக்கிள், பஃபிற்கு அழைத்துச் செல்ல வயசிலும் தோற்றத்திலும் தமன்னாவை ஒத்த தோழி! அதாவது அது போன்ற தோழி

நடுத்தர வயதுக்காரர்களுக்கு (26 வயதிற்கு மேல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு):: இப்போது இருக்கும் வேலையை உதறிவிட்டு, அதிக சம்பளம் வரும் வேலைக்குத் தாவிச் செல்வது. 2,000 சதுர அடியில் சொந்த வீடு வாங்குவது. வாங்கியிருந்தால் மேலும் ஒரு வீடு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாங்குவது.

எழுபது வயதிற்கு மேற்பட்ட பெரிசுகளுக்கு: காலையில் மலச் சிக்கல். இரவில் மனச் சிக்கல் (மருந்து உண்டா?  (நஹீ ஹை!)

நாஸ்ட்ரடாமஸ் நிறைய நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் என்று எழுதிவைத்துள்ளார். இந்தியாவின் விரிவடையப்போகும் எல்லைகள் பற்றியும், பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீர் பிரச்சினை பற்றியும் நிறைய எழுதியுள்ளார். அவை பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேப்பர் க்ளிப்பிங்குகள் என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அதை எல்லாம் பதிவில் கொடுத்துப் புயலைக் கிளப்ப விருப்பமில்லை. நேரம் வரும்பொது அவற்றைத் தருகிறேன்.

நீங்கள் கேட்டதால் மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் இன்று பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள்
இது 24 ஆண்டுகளுக்கு முன்னால் Probe India என்னும் மாத இதழில் வந்த கட்டுரை ஒன்றின் பகுதியாகும்

படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், படங்கள் பெரிதாகத் தெரியும்.
-----------------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

மூன்று வருடங்களுக்கு முன்பு ESPஐ பற்றி எழுதிய பதிவுகள்
1
http://classroom2007.blogspot.com/2007/03/esp-9.html
2
http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_08.html

மூன்று வருடங்களுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸைப் பற்றி எழுதிய பதிவுகள்
3
http://classroom2007.blogspot.com/2007/03/11.html
4
http://classroom2007.blogspot.com/2007/03/12.html
5
http://classroom2007.blogspot.com/2007/03/13.html



படித்துப்பாருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.30
கணபதி நடராஜா.
   
///////அன்புடன் வணக்கம்
தங்களின் வகுப்பறையில் வெளியில் நின்று படிப்பவன்.//////

(யாரப்பா அங்கே? நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு  வந்து உட்காரவை)

சுமார் 15  வருடங்களுக்கு முன்பு நெல்லை வந்த எனது குருதேவரிடம் ஒரு இலங்கை அடியார் ஞான உபதேசம் பற்றி சாங்கோபாங்கமாக சொல்லி அருள வேண்டும் என்று கேட்டார் .. அழைத்து வந்தவர் மதுரை அன்பர்!!! குருதேவர் (காசி வாசி ஆடூர் ஸ்ரீ வைத்தியநாத சிவாசாரியார் ) சற்று சிந்தித்து விட்டு... தனிமையில்....ஞானம் எவ்வாறானது என்பது பற்றி விளக்கி கூறினார்கள் .. என்ன கூறினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது .!!!( குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள ரகசியம் )அடியாரும் கண்ணீர் ததும்ப கேட்டிருந்து மதுரை திரும்பினார் .சின்னாட்கள் கழித்து குருதேவர் மீண்டும் நெல்லை வந்தபோது அந்த இலங்கை அன்பரை பற்றி கேட்டார்கள் .. அடியார் மதுரையில் ஒரு வாரத்திலே  காலமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் .குருதேவர் கூறிய வார்த்தை!!!! “அந்த ஜீவன் முக்தியடைய உபதேசம் செய் என்று எனக்கு இறைவன் அருள் பாலிதிருக்கிறார்!!!” என்ன இறைவனின் திரு விளையாடல்.!!!!!!!!!!!!.

சரி கேள்வி??? :- இது போன்ற ஞான உபதேசம் ஒருவருக்கு எந்த மாதிரியான கிரக அமைப்பு இருந்தால் கிடைக்கும் ?எந்த திசை.? எந்த புக்தியல் அருள் கிடைக்கும்? சாதரணாமாக பெரும்பாலானவர்களுக்கு சமய தீட்சை, விஷேட தீட்சை , சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) (இங்குதான் இல்லறத்தானுக்கு ஞான உபதேசம்) உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!..
தயவு செய்து விளக்கலாமா??. நன்றி ..///////

இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!.. என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தயவு செய்து விளக்கலாமா??” என்று என்னைக் கேட்கிறீர்களே? என்ன நியாயம்? உங்களுக்குத் தெரிந்ததை நான் எப்படி விளக்க முடியும்?  இதற்கு நீங்கள் என்னை இரண்டு அடி அடித்திருக்கலாம்:-)))))

லட்சத்தில் ஒருவர் நீங்கள் சொல்லும் ஞான உபதேசம் கேட்கும்
மன நிலைக்கு வரலாம். கேது தசையில் அவ்வாறான நிலைமை
ஏற்பட வாய்ப்பு உண்டு. இல்வாழ்க்கை போதும் என்கின்ற மன
நிலைமை வேண்டும். எட்டாம்  வீட்டிலும், பன்னிரெண்டாம்
வீட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட தீயசக்தி இருக்கும் ஜாதகனுக்கு
அந்த  மனநிலைமை உண்டாகலாம். 

எங்கள் பகுதியில், குன்றக்குடிக்கு அருகில் பாதரக்குடி என்னும் ஊரில் குரு ஒருவர் இருக்கிறார். விருப்பம் உள்ளவர்கள், அவரிடம் சென்று உபதேசம் கேட்டுக் கொள்வார்கள். உபதேசம் கேட்ட பிறகு, அதைக் கடைப் பிடிக்க வேண்டும்.

பொகிற வழிக்குப் புண்ணியம் என்று பலர் உபதேசம் கேட்டுக் கொள்வார்கள்.

தினமும் காலையிலும் மாலையிலும் குளித்து, உடலைச் சுத்தம் செய்து கொண்டு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தை 108 முறைகள் கவனத்தோடு இரண்டு வேளையும் உச்சரிக்க வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை. நேரமும் இல்லை! அத்துடன் போகிற வழிக்கு பழநிஅப்பன் துணைக்கு வருவான் என்னும் அசாத்திய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே அதைக் கேட்டுக் கொள்ளவும் இல்லை!

இது மட்டுமே - அதாவது இந்த அளவு மட்டுமே என்னுடைய உபதேச அறிவு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) எல்லாம் என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட மேட்டர்கள். அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

புலவுசாதம், புளியோதரை, அப்பளம், தயிர்சாதம், ஊறுகாய், தமன்னா,
“அடடா மழைடா அடைமழைடா பாடல்,” வலைப் பதிவு, சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், ஜோதிடம், பின்னூட்டம் என்று இப்போது உள்ள வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால், நீங்கள் சொல்லும் உலகத்தை எட்டிப் பார்க்கலாம். அதற்குப் பழநிஅப்பன் அனுமதி கொடுக்க வேண்டும். கொடுத்தால் பார்க்கிறேன். தெரிந்தால் பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு நோ சான்ஸ். மன்னிக்கவும் நண்பரே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.31
M.நித்தியானந்தம். 
கரையாம்பாளையம்
பல்லடம்
வயது 49
   
குருவுக்கு வணக்கம்

1. ராசிக்கட்டத்தில் பனிரெண்டாம் வீடு ரிஷபம் அம்சத்தில் ரிஷபத்தில் சந்திரனும் ராகுவும் நீசபங்கம் இந்த அமைப்பு சந்திரனுக்குவலிமையைத் தருமா?அல்லது ராகுவுக்கா? மேலும் அந்த இடம் விரையஸ்தானமாக இருப்பதால் விரையத்தை அதிகப்படுத்துமா ? அல்லது வேறு பலன்களா?

வரதட்சனை யாருக்குக் கிடைக்கும்? மாப்பிள்ளைக்கா அல்லது
மாப்பிள்ளைத் தோழனுக்கா?
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத்
தோழனுக்கா?
வலிமை யாருக்குக் கிடைக்கும் ரிஷபத்தில் உச்சம் பெற்ற சந்திரனுக்கா அல்லது சந்திரனின் தோழனாக - நீச பங்கத்திற்குக் காரணமான ராகுவிற்கா? ராகு அங்கே நீசம்தான். விரைய ஸ்தானம் என்பதால் வரதட்சனை வராமல் போகாது.மாலை கிடைக்காமல் போகாது. யோகத்தின் பலன் கிடைக்கும். குறைவாகக் கிடைக்கும். (எவ்வளவு குறையும் என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்காதீர்கள்)

2. அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவை எந்தெந்த நட்சத்திரங்கள்? என்ன காரணம்?

மதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.

அதைப்போல அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டதை, நீங்கள் கேட்ட இடத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வதுதான் நல்லது.
அது பற்றி எனக்கு தெரியாது. நான் கேள்விப்படவில்லை!
=====================================================
மின்னஞ்சல் எண். 32
S.R Iyer
முழுப்பெயர்: சிவராமச்சந்திர ஐயர்
மும்பை
வயது 60
   
ANBULLA AYYAH,
JOTHIDATHIL 36 KARAGATWAM PATTRI EZHUTHI IRUKKIREERKAL.  AVAI ENNA ENPATHU KURITTHU VIVARAMAI KURIPPIDUNGAL.
Nanri
Ramachandran

முன்பே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நீங்கள் பழைய பாடங்களை வரிசையாகப் படித்திருந்தால் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். இப்போது அதைத தேடி எடுப்பது சற்றுச் சிரமம். ஆகவே உங்களுக்காக அதை மீண்டும் கொடுத்துள்ளேன்: கீழே உள்ளது.


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 23.8.2010 திங்களன்று. இடையில் ஞாயிறன்று வழக்கம்போல வாரமலர் உண்டு. வாரமலரை அலங்கரிக்கப்போவது யார்?
அது சஸ்பென்ஸ்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

18.8.10

மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.25
திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
   
வணக்கம் அய்யா
கேள்விகள் எல்லாம் என்னுடைய சொந்த கற்பனையே!
யாரோ ஒருவர் மண்டபத்தில் உருவாக்கி கொடுத்து கேட்கப்பட்டது 
அல்ல! சுத்த அக்மார்க் திருநாராயணனால் கேட்கப்பட்டது.
நன்றி அய்யா!

அதையெல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுபோகட்டும், மண்டபத்தில் எழுதிக்கொடுக்கிற ஆட்கள் உங்கள் ஊரில் உள்ளதுபோல் தெரிகிறது. கேள்விகளை மட்டும்தான் எழுதித் தருவார்களா? கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தருவார்களா? கேட்டுச் சொல்லுங்கள்:-))))

1. “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகச்
சொல்லப்படும் சொல்லடை அது! இப்போது எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள். பத்துப் பொய்களைக்கூடச் சொல்ல முடியாது.
சொன்னால், பிறகு மகளிர் காவல்நிலைத்தில் நிற்க வேண்டிய
நிலைமை ஏற்படலாம். அதையும் யோசித்துப் பொய்களைச்
சொல்வது நல்லது.

2. குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

மூன்று பேர்கள் ஒரே ராசியாக இருந்தால் கோச்சாரத்தில் கிரகங்கள்
மூன்று பேரையும் ஒரே சமயத்தில் படுத்தி எடுக்கும். ஏழரைசனி,
அஷ்டமச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்து உலகக்கோப்பை
ரேஞ்சிற்கு விளையாடும்.ராசிநாதனாக உள்ள கிரகத்தின் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வணங்கிவிட்டு வரலாம். உதாரணம் சிம்ம ராசியாக இருந்தால் சூரியனார் கோவில். மகரம் அல்லது கும்ப ராசியாக இருந்தால் திருநள்ளாறு. அல்லது தனித்தனியாக அவரவர்களுக்கு நடக்கும்
தசையை வைத்து, தசாநாதனின் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம். வசதியில்லாதவர்கள், தங்களின் ஜென்மநட்சத்திரத்தன்று
உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழி பட்டு
விட்டு வரலாம். அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.  நல்ல பலன்
கிடைக்கும். நம்பிக்கையுடன்  வணங்குவது முக்கியம்.

3. ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை 
மாற்ற முடியுமா?

மாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் (மனிதப் பிறவிகளால்) அதை மாற்ற முடியாது!

4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?

பெற்றவர்களின் ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருக்கும்.
அதன் காரணமாக அவர்கள் ஒரே நாளில் ஒரே பாதக நிகழ்வில் தங்கள் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடலாம். 12ஆம் வீட்டில் மாந்தி
இருந்தாலும்ஜாதகனுக்கு இதுபோன்ற திடீர் இழப்புக்கள் ஏற்படும்! அது குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பொன், பொருள், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று எதுவாக வேண்டுமென்றாலும்
இருக்கலாம்!It is called as sudden loss to the native

5. ஒருவர் செய்யும் செயல்களை வைத்து அவர்களுக்கு கற்பனையான 
ஜாதகம் உருவாக்க முடியுமா?(உதாரணம்‍_ பூவரசி)

குணங்களை வைத்து லக்கினத்தை உருவாக்கலாம். ஆனால் செயல்கள் எனும்போது கஷ்டம். முழு ஜாதகத்தையும்  கற்பனையாக உருவாக்க முடியாது. பிறப்பு விவரங்களை ஜாதகத்துடன் இணக்க முடியாது. அல்லது உருவாக்கிய  ஜாதகத்துடன் அவற்றைக் கொண்டுவர முடியாது. ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.26
C.குமரேசன்
   
/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே  இருக்க முடியும். இப்பொழுது நாம் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தினால் பலன்கள் மாறாதா? நாம் கோள்சாரத்தில் நவீன அறிவியலைப் பயன்படுத்துகிறோம் என்றால் பலன்களையும் மாற்றிக்கொள்ள  வேண்டும் அல்லவா? அவர்கள் உடலுக்குத் தகுந்த சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள்.  இப்பொழுது  நமக்கு?//////

திருக்கணிதத்தை வகுத்த மேதைகளையே அதையும் மாற்றி எழுதித் தரச்சொல்லலாமே!

எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். அம்மாவும் தன் தாய்ப்பாசத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார்.

ஆடுமாடுகள் எல்லாம் அதே நான்கு கால்களுடன்தான் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளும் பத்து வயதுவரை குழந்தைகளாகத்தான் இருக்கின்றன.

இயற்கையில் மாற்றம் இல்லை.பருவங்களில் மாற்றம் இல்லை. கிரகங்களின் சுழற்சியிலும் மாற்றம் இல்லை. சுழற்சிப் பாதையிலும் மாற்றம் இல்லை. சுழற்சி வேகத்திலும் மாற்றமில்லை.

ஹோண்டா சிட்டி கார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதைப்போல அல்லது புல்லட் ரயில் 300 கிலோமீட்டர்  வேகத்தில் போவதைப்போல (அதாவது வாகனங்கள் வேகத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் இருப்பதைப்போல)  கிரகங்களில் எந்தத்தாக்கமும் இல்லை. சூரியன் தன்னுடைய சுற்றை முடிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்தைத்தான்
எடுத்துக்கொள்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆறு
மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ தன்சுற்றை  முடித்துக்கொள்வதில்லை. முடித்துக்கொண்டால் என்ன ஆகும்?
சூரியனுக்கு செமஸ்டர் சிஸ்டம் எல்லாம்கிடையாது. அரியர்ஸ்
எல்லாம் வைக்க முடியாது. தனக்குப்   பதிலாக ஃப்ராக்ஸி எல்லாம்
கொடுக்க முடியாது.

அதுபோல சந்திரன் 27 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. (27 நட்சத்திரங்கள். 27 நாட்கள்). சந்திரனும் எந்த பம்மாத்து வேலையும் செய்வதில்லை.

புரிகிறதா?

அதுபோல ரிஷிகள் கணித்துவைத்துவிட்டுப்போயிருக்கும், கிரகங்கள் அவற்றின் வீடுகள். அதனதன் பலன்களிலெல்லாம் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்படுத்த முடியாது. நீங்கள் குழப்ப நினைக்கும், அல்லது குழம்பி நிற்கும், திருக்கணித ஜாதகத்திலும், 9 கிரகங்கள் 12 வீடுகள்தானே  இருக்கின்றன?

திருக்கணித ஜாதகத்திற்கும் வாக்கிய ஜாதகத்திற்கும் சுமார் 2 பாகைகள் வித்தியாசம் உள்ளது உண்மை. அதனால் லக்கின சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மட்டும் நட்சத்திர பாகையில் வித்தியாசம் ஏற்படும்.
சிலருக்குதிருக்கணிதத்தில் ஒரு லக்கினமும், வாக்கியத்தில் ஒரு
லக்கினமும் வரும்.

நான் காலசந்திப்பில் பிறந்தவன். திருக்கணிதத்தின்படி என்னுடைய
லக்கினம் கடகம்! வாக்கியத்தின்படி சிம்ம லக்கினம். அதேபோல ராமன் அயனாம்சத்தின்படியும் சிம்ம லக்கினம்தான். என் பாட்டனார் எழுதிவைத்திருக்கும்  ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிபிட்டுள்ளார். சிம்மலக்கினத்தைவைத்துப் பார்க்கையில்
மட்டுமே என்ஜாதகப் பலன்கள் சரியாக வருகின்றன. ஆகவே நான் திருக்கணிதத்துடன் டூ விட்டுவிட்டேன்.

இதை வைத்து ஒருவருக்கு அருள் வந்து என்னுடன் கும்மி ஆடினார்.
நீங்கள் துவக்க காலத்தில் திருக்கணிதத்தை ஆதரித்தது ஏன் என்று கேட்டு என்னை மடக்கினார். அஷ்டகவர்க்கம் இல்லாதவர்களுக்கான கணினி ஜாதகத்தைச்சிபாரிசு செய்தேன். துவக்கத்தில் (எனக்குத் தெரிந்து) திருக்கணிதம் மட்டுமே program செய்யப்பட்டிருந்தது. இப்போது கணினி ஜாதகத்தில் எல்லா முறைகளுக்குமே option வந்து விட்டது.

சிலருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவர்கள்
வீட்டுக் குழந்தைகளைக்கேட்டால், இந்த  இருதாரக் குடும்பங்களில்
உள்ள அவலங்கள் தெரியும். அதுபோல காலசந்திப்பில் பிறந்தவர்
களுக்கு சில அவலங்கள் உண்டு. முக்கியமான அவலம். ஜோதிடன்
சொல்லும் பலன்களில் பாதி சரியாக இருக்காது. பலன்கள்  சரியாக
இருக்க வேண்டும் என்றால், வாக்கியத்தை வைத்து ஜாதகத்தைக்
கணித்துப் பலன்களைப் பார்க்க  வேண்டியதுதான் ஒரே வழி! அப்பா எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது
முக்கியம்.

இல்லை, விஞ்ஞானம், நாகரீகம், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு
வக்காலத்து என்று ஏங்குபவர்கள் எல்லாம், வாக்கியத்தை மறந்து
விட்டு அல்லது வாக்கியத்தின் நம்பகத்தன்மையைக் கேள்வி 
கேட்பதை விட்டு விட்டுத் திருக்கணிதத்தின்படி தங்கள் ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் மண்டையைப் பிய்த்துக் கொண்டுஅலைய வேண்டிய திருக்கும்

அவருக்கு (காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு) அந்த இரண்டு
லக்கினங்களின் குணாதியம்சங்களும் இருக்கும்.

திருக்கணிதம் பிடித்திருந்தால், அதுதான் நாகரீக, விஞ்ஞான
வளர்ச்சியின் சாதனை என்று நினைப்பவர்கள்,  அதையே கடைப்
பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பெண்
சேலை கட்டிக்கொள்ளலாம்,சுடிதார் போட்டுக்கொள்ளலாம்.  
2 piece dressஆக Top & Midi போட்டுக்கொள்ளலாம். எல்லாம்
அவளது  விருப்பம். அதுபோல நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் (கடைப்பிடியுங்கள்) அது  உங்கள் விருப்பம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.27
V.சுந்தரேசன்
புனைப்பெயர்: சுந்தர் வேலவன்
துபாய்
வயது 30
     
Dear sir,
I have two Doubts

1. Reshba lakanthirku 9 and 10 owner same planets(saturns) intha jathakathuku Dharmakarma athipathi Yogam unda?

ஏன் இல்லை. 9 & 10ஆம் இடங்கள் இரண்டிற்கும் சனீஷ்வரனே அதிபதியாகிவிடுவதால், ஜாதகத்தில் அவர் திரிகோண வீடுகளில் அல்லது கேந்திரங்களில் இருந்தால் அந்த யோகம் உண்டு.

2. Guru vin VAKRA parviku pallan unda?

குருவின் வக்கிர பார்வைக்குப் பலன் உண்டு!

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும். குரு எப்படி இருந்தாலும்  நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார். குறைந்த அளவு  என்றவுடன்,  எத்தனை சதவிகிதம் குறையும் என்று ஒருவர் கேட்டார். அதை
அளந்து சொல்ல டிஜிட்டல் தராசு இல்லை.

அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
அழகுடன் இருப்பாள் என்று கேட்டால்  என்ன சொல்ல முடியும்?

கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
தமன்னாவும் அழகுதான!

அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு  மாறுபடும்.

தேவையும் மாறுபடும்.ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் இருந்தால்
போதும். ஒருவருக்கு இருபது லட்சம் கிடைத்தாலும் பத்தாது.
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுக்கு அதுவே ஆயிரம்
கோடியென விரிவடையும்.

அதுபோல வக்கிர பலன் என்பது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.
ஒரு நாளில் 12 வித்தியாசமான லக்கினங்களில் பிறக்கும் 12 விதமான லக்கினங்களுக்கும் அது மாறுபடும். அதன் பலன்களும் மாறுபடும்.

ரேசன்கடையில் உள்ள மேலாளரை, அளவு குறைத்தால், சட்டையைப் பிடித்துக்கொண்டு அல்லது கழுத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதைப்
போல கிரகங்களைக் கேட்க முடியாது.

ஆகவே கிடைத்தவரை சரி என்று சந்தோஷமாகப் போய்விட
வேண்டியது தான்!

ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அடுத்து வருவது சுக்கிர தசை.
அதில் உங்களுக்கு செல்வம் சேரும்  என்று ஒரு ஜோதிடர் சொன்னால், எவ்வளவு செல்வம் வரும்? எந்த வழியில் வரும்? வருவது தங்குமா?
எந்த  அளவு தங்கும்? என்று நீங்கள் கேள்வியை அடுக்கினால்,
அதற்கெல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாது. செல்வம் வரும்
என்று பொதுவான சந்தோசத்துடன் இருங்கள். எவ்வளவு வரும்?
அதை எப்படி ஒளித்து  வைப்பது? எப்படி இன்கம்டாக்ஸில் இருந்து
தப்பிப்பது போன்ற கவலைகளை எல்லாம் விட்டொழியுங்கள்.
வருகின்ற அன்றைக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.

எதற்கும் அளவு கிடையாது!
ஆசைக்கு அளவு உண்டா?
தேவைக்கு அளவு உண்டா?
ஆனால் ஒன்றிற்கும் மட்டும் அளவு உண்டு.
அனைவருக்கும் அது ஒரே அளவுதான்!
அதுதான் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்
அதன் அளவு அனைவருக்கும் 337 மட்டுமே!
-----------------------------------------------
மின்னஞ்சல் எண்.28
ராஜா,
மும்பை.
வயது 45
(நான் உங்கள் பதிவேட்டில் இருக்கிறேன்)

ஐயா வணக்கம்,

ரிஷப லக்கினத்திற்கு சனி 9 -ம் மற்றும் 10 -ம் இடத்திற்கு அதிபதியாகிறான். எனவே, சனி  9 -ம் இடத்திலோ அல்லது 10 -ம் இடத்திலோ இருந்தால் 'தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகுமா ?.

இன்றையப் பதிவில் மின்னஞ்சல் எண் 27லிலும் இதே கேள்வி. அதற்கான பதில்தான் உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்.
===========================================================
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

17.8.10

சுக்கிரனும் பின்னணி இசையும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுக்கிரனும் பின்னணி இசையும்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 8
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.22
பெயர்: குணசேகரன்
பிறந்த ஊர் பொள்ளாச்சி
இருப்பது ஸ்வீடனில்
வயது 26  ,
தனுசு லக்கினம் ,
மகரராசி
  
////////ஐயா ,
  புதன் சுப கிரகம் அதனுடன் மாந்தி உள்ளது. அதுவும் லக்கினத்தில், புதன் 7, 10ற்கு அதிபதி .லக்குனாதிபதி 12 ல் உடன் சூரியன் ,கேது .லக்குனாதிபதி குரு. இதில்  எப்படி பலன் தெரிந்து கொள்ளுவது ?
ஒரு வீட்டின் பலன் எடுத்து கொண்டால் இப்படி கூட்டாக இருந்தால் எப்படி கணிப்பது ? இதே போல் 11 ல் சுக்கிரன் ,சனி இருவரும் இருக்கிறார்கள் .சுக்கிரன் 11 ன் அதிபதி சனி இரண்டின் அதிபதி எப்படி பலன் கொள்ளுவது .ஒருவர் சொன்னார் இரண்டாம் வீட்டிற்கு பலன் எடுக்கும் போது ஆறாம் வீட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எனக்கு  கொஞ்சம் விளக்குங்களேன் ?//////////

வீடுகள், நிலம், தோட்டங்கள், வங்கியிருப்புக்கள் என்று குடும்பச் சொத்துக்கள் பலவிதமாகக் கொள்ளையாக உள்ளது. வாரிசு ஒருவர் என்றால் பிரிக்க வேண்டாம். சொத்துக்களை மதிப்பிட்டு இன்ன தேறும் என்று சொல்லிவிடலாம். நமக்குத் தெரிந்த அழகான பெண்ணையும் அவருக்குக் கட்டி வைத்துவிடலாம்.

அதே நேரத்தில் அந்த சொத்திற்கு நான்கு பேர்கள் வாரிசுகள். அத்துடன் பெரியவனுக்குத் திருமணமாகி அவன் மாமனார் சகுனியும் (மாந்தியும்) உடன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். சொத்துக்களை எப்படிப் பிரிப்பீர்கள்? அல்லது எப்படி மதிப்பிடுவீர்கள். சமயத்தில் விவகாரம் பூதாகரமாகி கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று ஜாதகர்களின் காலத்தில் பிரித்துக்கொள்ள முடியாதபடி சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுவதும் உண்டு.
சமயத்தில் கட்டைப் பஞ்சாயத்து வைத்தும் பிரித்துக்கொள்ளலாம். சில இடங்களில் வெட்டு, குத்து விழுந்து வழக்கு வேறு விதமாகிவிடுவதும் உண்டு.

அதுபோலத்தான் ஜாதகத்தை அலசுவதும்.

உங்கள் ஜாதகத்தையே எடுத்துக்கொள்ளூங்கள் (சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? பொள்ளாச்சிக்காரார் என்பதால் விட்டு விடுகிறேன். பொள்ளாச்சி எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று அதனால் விட்டு விடுகிறேன்:-)))

தனுசு லக்கினம். லக்கினாதிபதி குரு பகவான் 12ல் போய் மெத்தை போட்டு படுத்துக்கொண்டு விட்டார். அவரை எழுப்பி விடாலாம். ஏதாவது வேலை செய்யுங்கள் சாமி என்று சொல்லலாம் என்றால், உடன் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) சூரியனும் போய் படுத்துக்கொண்டுவிட்டார், இருவரும்தான் அப்படி என்றால் உச்சம் பெற்ற கேது அய்யாவிற்கும் அது 12ஆம் இடமாக அமைந்துவிட்டது. லக்கினாதிபதியால் பெரிய பலன் இருக்காது. அவர் தூங்குவதால், நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டும். லக்கினாதிபதி 12ல் இருந்தால் அதிக முயற்சி குறைந்த பலன். ஆனால் உடன் பாக்கியாதிபதியும் சேர்ந்து இருப்பதால், வாய்ப்புக்களை அவர்களே கொண்டு வந்து தருவார்கள். (படுத்திருந்தாலும் அவர்கள் பெயர் ராசிக்கும், சேர்க்கை ராசிக்கும் நடக்கும்) இருந்தாலும் இரண்டாயிரம் டாலருக்கு நீங்கள் உழைத்தாலும், கையில் 1000 டாலர்கள்தான் சேரும். அல்லது தேறும். மற்ற இருவரும் அவரவர் தசா / புத்தியில் எழுந்து முடிந்த அளவு (முழு அளவு இல்லை) பலனைத் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்கள்.

ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெரிய நஷ்ட ஈடு இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளார். உச்சம் பெற்று லக்கினத்திற்குப் பதினொன்று, தன் வீட்டிற்குப் பத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் குடும்ப மற்றும் தன ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே கையில் காசு புரளும். 7ஆம் அதிபதி புதன் வந்து லக்கினத்தில் அமர்ந்ததோடு, தன்னுடைய வீட்டையும் நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு நல்ல சுட்டியான பெண் மனைவியாக அமைவாள். அவள் வரும்போது செல்வத்துடன் வருவாள்.அவள் வந்த பிறகு நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய நிலைமை இருக்காது. மோட்டார் மாட்டிய படகுடன் அவள் வருவாள். அவளுடன் படகில் ஏறி நீங்கள் சொகுசாகப் பயணிக்கலாம். “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே” என்று அவள் அழகாகப் பாடி உங்களை மயக்கவும் செய்வாள். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும். தன் சொந்த வீட்டில் இருக்கும் சுக்கிரன் அதற்கு BGM போடுவார். (BGM என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதுதான் பின்னணி இசை Back ground music))

ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், ஜாதகன் சுகமான பின்னணி இசையோடு வாழ்வான்!

இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சமாக உள்ளார். அதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் மனைவி உங்களை வளைய வந்து உங்களுடன் உரசல் இல்லாமல் (அதாவது சண்டை சச்சரவு இல்லாமல்) குடும்பம் நடத்துவாள்.

இப்படித்தான் ஜாதகத்தை அலச வேண்டும். அலசல் போதுமா? விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.23
அசோக்குமார்

//////Dear Sir,
Thanks a lot for giving Question and Answer opportunity.
My Questions:
1.What is the remedy if Jupiter is placed in 5th Place? Jupiter is natural benefic , but  some astrologers are telling that the person with Jupiter placed in 5th will not get a child, Why?
Regards,
Ashok///////

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற அல்லது தள்ளுபடியாக ஒரு நாடு மட்டும் ஓட்டுப்போட்டால் செல்லாது. கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகள் ஓட்டுப்போட வேண்டும்.

அதுபோல குழந்தை பாக்கியத்திற்கான காரகன் குரு ஐந்தில் இருந்தால் பயப்பட வேண்டாம். ஐந்தாம் வீட்டு அதிபதி முக்கியமானவர். ஐந்தாம் வீடும் சிறப்பாக இருக்க வேண்டும். தீய சக்திகளின் பார்வை அல்லது சேர்க்கையில்லாமல் இருக்க வேண்டும். இதே கேள்வியை வேறு ஒரு மாணவர் வேறு விதமாகக் கேட்டிருந்தார். அவருக்குப் 10.8.2010 அன்றையப் பதிவில் பதில் சொல்லியுள்ளேன். அதையும் பாருங்கள்.அதன் சுட்டி இங்கே உள்ளது.

நீங்கள் அதைத் தேடி அலைய வேண்டாம் என்று நானே அதை உறித்துக் கீழே கொடுத்துள்ளேன்

கேள்வி: 3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?
மின்னஞ்சல் எண்.15 தேதி 10.8.2010
ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்) குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும் பாருங்கள்.

காரகன் பாவ நாசம் என்பது பொதுவிதி: தந்தைக்குக் காரகன் சூரியன் தன்னுடைய ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் ஒன்றும் செய்வதில்லை. ஜாதகனுக்கு நன்மையைச் செய்வார். ஆதே போல ஆயுள்காரகன் சனீஷ்வரன் தன்னுடைய ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் கெடுதல் செய்யாமல் நீண்ட ஆயுளைத் தருவார். அதுபோல குரு பகவானும் மற்ற அமைப்புக்களை வைத்து நன்மையைச் செய்வார். நம்புங்கள். குரு ஐந்தில் இருந்தால், தன்னுடைய விஷேசப் பார்வையான ஒன்பதாம் பார்வையால் ஜாதகனின் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். அதையும் மனதில் வையுங்கள்

விளக்கம் போதுமா நண்பரே!
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.24
P. வெங்கடேசன்.
கோயம்புத்தூர்
37 வயது

  
அய்யா,
நான் உங்கள் வகுப்பறை மாணவன்.
எனது இராசி - மிதுனம்
எனது நட்சத்திரம் - புனர் பூசம்
எனது லக்கினம் - கன்னி

என்னுடைய கேள்வி ஒன்று தான்.
எனது ஜாதகத்தில் பத்தாம் இடத்தில புதன், சந்திரன், சனி, செவ்வாய் என நான்கு கிரகங்கள் உள்ளன. எனக்கு வேலையில் அடிக்கடி இடைவெளி ஏற்படுகிறது. ஒரு வேலையை விட்டால் உடனே வேலை கிடைப்பது இல்லை. எனக்கு வேலை நிலைக்க அல்லது உடனடியாக வேலை கிடைக்க என்ன வழி? எனது கேள்விக்கு எனது மின் அஞ்சல் வழியாகவே பதில் அனுப்பினால் போதும். மிக்க எதிர்பார்ப்புடன்
வெங்கடேசன்
கோவை.

சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? நானும் கோவையில் தான் வசித்து வருகிறேன் என்பதால் விட்டு விடுகிறேன்.

கன்னி லக்கினம். லக்கினாதிபதி புதன் 10ல். 11ஆம் அதிபதி சந்திரனும் உடன் உள்ளார். இருவரும் சேர்ந்து வண்டியை நன்றாக ஓட விடுவார்கள். ஆறாம் அதிபதி சனியும், எட்டாம் அதிபதி செவ்வாயும் உடன் இருப்பதால், அடிக்கடி கத்தியைக் காட்டி, மிரட்டி வண்டியின் ஓட்டத்திற்குப் பல இடைஞ்சல்களைச் செய்வார்கள். சக்கரங்களில் ஒன்றைப் பழுதாக்கிவிடுவார்கள். இது அமைப்பு. பொதுவாக ஒரு கட்டத்தில் அல்லது ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருந்தால் அது கிரக யுத்தக் கணக்கில் வரும். எந்த எந்தக் கிரகங்கள் யுத்தத்தில் அடிவாங்கி ராணுவ மருத்துவமனையில் படுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த நான்கு கிரகங்களின் தசாபுத்திகள் வரும்போது, பலன்கள் நல்லதும் கெட்டதுமாகக் கலந்துவரும். அவைகள் நான்குமே 10ஆம் வீட்டில் இருப்பதால், பத்தாம் வீட்டிற்குரிய பலன்களில்தான் அப்படி ஏற்படும்

அதெல்லாம் பெரிய வேலை. அதையெல்லாம் பார்த்துக்குழம்ப வேண்டாம். கிடைக்கும் வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். என்ன சிரமம் வந்தாலும் தாக்குப்பிடித்து அதிலேயே இருங்கள். அதற்குரிய மன வலிமையை இறைவழிபாடு கொடுக்கும்.

புனர்பூச நட்சத்திரம். பெருமாளைத் தினமும் வழிபடுங்கள். நம்பிக்கையோடு வழிபடுங்கள். அவர் நல்வழியைக் காட்டுவார்!
---------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!