-----------------------------------------------------------------------------------------
Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சனிபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து அதே சூரிய மகாதிசையில் புதன்புத்தி, கேதுபுத்தி மற்றும் சுக்கிரபுத்தி
ஆகிய புத்திகள் உள்ளன. அவற்றால் கிடைக்கும் பலன்களை முன்னதாகவே நடத்தப்பெற்ற பாடங்களில் பார்த்துவிட்டோம். ஆகவே சூரிய திசை நிறைவு பெறுகிறது. அடுத்து உள்ளது சந்திர மகாதிசை. அதன் மொத்த காலம் 10 ஆண்டுகள். அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.
சந்திரன் சுபக்கிரகம். மனதுக்குக் காரகன் (authority for mind) தன்னுடைய திசை காலத்தில் சந்திரன் ஜாதகனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுப்பான். நிம்மதியைக் கொடுப்பான். வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமாக வேண்டியது அது இரண்டும்தானே! எந்த அளவு கொடுப்பான் என்பது ஜாதகத்தில் சந்திரனுடைய நிலைமை, சேர்க்கை, மற்றும் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.
மொத்த திசை காலமான பத்து ஆண்டுகளுக்கும் அப்படி நடைபெறுமா என்றால், இருக்காது. அதன் மகாதிசையில் உள்ளே நிலையும் பாப கிரகங்களான, தீய கிரகங்களான, சனி, ராகு ,கேது ஆகிய கிரகங்களின்
புத்தி காலங்களில் அவற்றின் கையே ஓங்கியிருக்கும். அவைகள்
மகாதிசை நாதனான சந்திரனை ஓரங்கட்டிவிட்டு, தங்களின்
கைவரிசையைக் காட்டுவார்கள். அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------
சந்திர திசையில் முதலில் அதன் சுயபுத்தி நடைபெறும். அதன் காலம் பத்து மாதங்கள். அதன் பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
சுகமுடைய சந்திரபுத்தி மாதம்பத்து
நில்லவேயதனுடைய பலனைச் சொல்வோம்
நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
வேணபடி நிதிசேரும் விபரந்தானே!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
18.7.2011
---------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சனிபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து அதே சூரிய மகாதிசையில் புதன்புத்தி, கேதுபுத்தி மற்றும் சுக்கிரபுத்தி
ஆகிய புத்திகள் உள்ளன. அவற்றால் கிடைக்கும் பலன்களை முன்னதாகவே நடத்தப்பெற்ற பாடங்களில் பார்த்துவிட்டோம். ஆகவே சூரிய திசை நிறைவு பெறுகிறது. அடுத்து உள்ளது சந்திர மகாதிசை. அதன் மொத்த காலம் 10 ஆண்டுகள். அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.
சந்திரன் சுபக்கிரகம். மனதுக்குக் காரகன் (authority for mind) தன்னுடைய திசை காலத்தில் சந்திரன் ஜாதகனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுப்பான். நிம்மதியைக் கொடுப்பான். வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமாக வேண்டியது அது இரண்டும்தானே! எந்த அளவு கொடுப்பான் என்பது ஜாதகத்தில் சந்திரனுடைய நிலைமை, சேர்க்கை, மற்றும் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.
மொத்த திசை காலமான பத்து ஆண்டுகளுக்கும் அப்படி நடைபெறுமா என்றால், இருக்காது. அதன் மகாதிசையில் உள்ளே நிலையும் பாப கிரகங்களான, தீய கிரகங்களான, சனி, ராகு ,கேது ஆகிய கிரகங்களின்
புத்தி காலங்களில் அவற்றின் கையே ஓங்கியிருக்கும். அவைகள்
மகாதிசை நாதனான சந்திரனை ஓரங்கட்டிவிட்டு, தங்களின்
கைவரிசையைக் காட்டுவார்கள். அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------
சந்திர திசையில் முதலில் அதன் சுயபுத்தி நடைபெறும். அதன் காலம் பத்து மாதங்கள். அதன் பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
சுகமுடைய சந்திரபுத்தி மாதம்பத்து
நில்லவேயதனுடைய பலனைச் சொல்வோம்
நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
வேணபடி நிதிசேரும் விபரந்தானே!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
18.7.2011
---------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!