மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 451 - 460. Show all posts
Showing posts with label Lessons 451 - 460. Show all posts

18.7.11

Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

-----------------------------------------------------------------------------------------
 Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சனிபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில்  புதன்புத்தி, கேதுபுத்தி மற்றும் சுக்கிரபுத்தி
ஆகிய புத்திகள்  உள்ளன. அவற்றால் கிடைக்கும் பலன்களை முன்னதாகவே நடத்தப்பெற்ற பாடங்களில் பார்த்துவிட்டோம். ஆகவே சூரிய திசை நிறைவு பெறுகிறது. அடுத்து உள்ளது சந்திர மகாதிசை. அதன் மொத்த காலம் 10  ஆண்டுகள். அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

சந்திரன் சுபக்கிரகம். மனதுக்குக் காரகன் (authority for mind) தன்னுடைய திசை காலத்தில் சந்திரன் ஜாதகனுக்கு  மன மகிழ்ச்சியைக் கொடுப்பான். நிம்மதியைக் கொடுப்பான். வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமாக வேண்டியது  அது இரண்டும்தானே! எந்த அளவு கொடுப்பான் என்பது ஜாதகத்தில் சந்திரனுடைய நிலைமை, சேர்க்கை, மற்றும்  வலிமையைப் பொறுத்து மாறுபடும்.

மொத்த திசை காலமான பத்து ஆண்டுகளுக்கும் அப்படி நடைபெறுமா என்றால், இருக்காது. அதன் மகாதிசையில்  உள்ளே நிலையும் பாப கிரகங்களான, தீய கிரகங்களான, சனி, ராகு ,கேது ஆகிய கிரகங்களின்
புத்தி காலங்களில் அவற்றின் கையே ஓங்கியிருக்கும். அவைகள்
மகாதிசை நாதனான சந்திரனை ஓரங்கட்டிவிட்டு,  தங்களின்
கைவரிசையைக் காட்டுவார்கள். அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------
சந்திர திசையில் முதலில் அதன் சுயபுத்தி நடைபெறும். அதன் காலம் பத்து மாதங்கள். அதன் பலனுக்கான  பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
   சுகமுடைய சந்திரபுத்தி மாதம்பத்து
நில்லவேயதனுடைய பலனைச் சொல்வோம்
   நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
   சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
18.7.2011

---------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

12.7.11

Astrology தலைவன் இருக்கிறான் மயங்காதே!

--------------------------------------------------------------------------------------
Astrology தலைவன் இருக்கிறான் மயங்காதே!

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே"

- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்வரிகளில் மேலே குறிபிட்டுள்ள வரிகளும் ஒன்றாகும். தலைவன் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்

நமக்கு துன்பங்கள் ஏற்படும்போது, இறைவனைச் சரணடைந்து, அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டால், நமக்கு வரும் துன்பங்கள் விலகிவிடும். விலகாவிட்டாலும் அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சக்தி நமக்கு உண்டாகும்
--------------------------------------------------------------------------------------------------   
சூரியன் ஜாதகத்தில் தந்தைக்கு உரிய கிரகம். அத்துடன் உடலுக்கு உரிய கிரகம். வாட்டசாட்டமாக நல்ல தோற்றத்துடன் ஒருவன் இருந்தால், அவனுடைய ஜதகத்தில் சூரியன் வலுவாக இருக்கும். அதே போல சனிக்கும் இரண்டு பணிகள். அவர்தான் கர்மகாரகன் (authority for work). அத்துடன் ஆயுள்காரகன்.
-----------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், குருபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில் சனி புத்தியில் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 11 மாதங்களும் 12 நாட்களும் ஆகும். மொத்த காலமும் தீமைகள் உடையதாக, வருத்தம் தருவதாக இருக்கும். இரண்டும் பிரதான கிரகங்கள். அத்துடன் ஒன்றுக்கொன்று கடும் பகைக்கிரகங்கள்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

வணங்குவார் ரவிதிசையில் சனிபுத்திகேளு
    வாக்கில்லா நாளதுவும் மாதம் பதினொன்று
இணங்குவார் நாளதுவும் முன்னான்காகும்
    இதனுடைய பலத்தையினி இயம்பக்கேளு
குணங்குவார் சத்துருவும் மன்னவருந்தானும்
    குலைபொருளுஞ் சேதமே ஆக்கிவைப்பார்
பிணங்குவார் பிதிரருமா ரகமேயாவார்
     பிலன்கேடு பண்ணிவைப்பான் சனியன்தானே!   

இதற்கு சற்றும் குறைவில்லாத தீயபலன்களை சனி மகா திசையில் சூரிய புத்தியும் நமக்கு உண்டாக்கும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

தானென்ற காரிதிசை கதிரோன்புத்தி
    தயவில்லா மாதமது பதினொன்றாகும்
நானென்ற நாளதுவும் பனிரெண்டாகும்
    நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு
ஊனென்ற சுரபீடை இரத்தமேரும்
    உதிரத்தால் சூலைநோய் உடனேகாணும்
மானென்ற மனைவியரும் மக்கள்தானும்
    மயங்குகின்ற நோவதினால் வருத்தங்காணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.7.11

Astrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவாளா?

-------------------------------------------------------------------------------------
Astrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவாளா?

24 Apr 1964ம் தேதியன்று வெளிவந்த ‘பணக்கார குடும்பம்’ என்னும் திரைப்படத்தில் கலக்கலாக ஒரு பாடல்  இருக்கும். பாடலை இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி. பாடியவர்: பி.சுசீலா. நடிப்பு: புரட்சித்தலைவர் & அபிநய சரஸ்வதி (இவ்விருவரையும் தெரியாதவர்கள் பதிவை விட்டு  விலகவும்)

பாடல்: 
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
    அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா”
என்று துவங்கும் அப்பாடலில், எல்லா வரிகளுமே மனதை  ஈர்ப்பதாக இருக்கும்.

“முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சில் அத்தனையும் மறந்தாரா   
    முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா
    பெண்ணழகை விடுவாரா
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா   
    மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா”


என்று கவியரசரின் சொல்லாடலிலும், கவிதை நயத்திலும் பாடல் நமது நித்திரையைக் கெடுப்பதாக இருக்கும். பாடலை முன்பு கேட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.

அப்பாடலில் தொடர்ந்து வரும் வரிகளும், எதுகை மோனை சந்தங்களுடன், கேட்பவர்களின் மனதை  மயக்கும்படியாக இருக்கும். பாடலின் ஒளி வடிவத்தையும் பாருங்கள். அபிநய சரஸ்வதியின் முகத்தில்  அப்படியொரு குறும்பு கொப்பளிக்கும் .   

    “ கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டுவிட மனமில்லையா    
        கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா
        கருணை வரவில்லையா
    விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ
    விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ
    மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா
    ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ....ஓ...ஓ..
    ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ...ஆ...ஆ.

    அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
    அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா”

“விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ” என்பதுதான் பாடலின் முத்தாய்ப்பான வரி!
-----------------------------------------------------------------------------------------
பாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் பாடத்திற்கு வருவோம். நாம்

விட்டுப் பிரிந்தாலும்
எட்டி நடந்தாலும்
தட்டிக் கழித்தாலும்
கிரகங்கள் - நம்மைக்

கட்டாமல் விடாது!
----------------------------------------------------------------------------------------------
ஒரு தசாபுத்தியில் கிடைக்கும் இன்பம், அடுத்த தசாபுத்தியில் பெரும்பாலும் தொடராது. இன்பமும் துன்பமும்  கலந்ததுதான் வாழ்க்கை. ஆகவே கால நேரம் மாறி மாறி வரும் என்பதை உணர்ந்து, நிம்மதியாக இருங்கள்
--------------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், ராகுபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப்  பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில் குரு புத்தியில் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 9 மாதங்களும் 18 நாட்களும் ஆகும். மொத்த காலமும் நன்மைகள் உடையதாக,  மகிழ்ச்சியுடையதாக இருக்கும். இரண்டும் பிரதான கிரகங்கள். அத்துடன் நட்புக்கிரகங்கள்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தானென்ற ரவிதிசையில் வியாழன்புத்தி
    நேர்மையுள்ள நாளதுவும் இருநூத்தி எண்பத்தெட்டு
வில்லென்ற அதன்பலனை விவரித்துச் சொல்வோம்
    விவரமாய் சம்பத்தும் தனதானியமுண்டாம்
சொல்லொன்றும் தவறாது வினையகலும் பாரு
    சொல்லப்பா நாள் இன்பமெய்து வாழலாகும்
பல்லென்ற புத்திரனும் ஆகும்பாரு
    பொல்லாத சத்துருவும் வணங்குந்தானே!


இதற்கு நேர்மாறான பலனை குரு மகா திசையில் சூரிய புத்தி நமக்கு உண்டாக்கும். இருவரும் நட்புக் கிரகங்கள்  என்றாலும் சூரியன் தன் வேலையைக் காட்டும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

வாமென்ற வியாழதிசை சூரியபுத்தி
    வகையுடைய மாதமது ஒன்பதாகும்
தாமென்ற நாளதுவும் பதினெட்டாகும்
    தன்மையுடன் அதன்பலனை சாற்றக்கேளு
பரமென்ற பரதேசி யாகிப்போவான்
    பாங்கான மடபதியில் பரமகுருஆவான்
ஞானமென்ற பதியில் நின்று யோகநிலையை
    ஞாபகத்தில் சிவனடியை மறவான்காணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.7.11

Astrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்?

------------------------------------------------------------------------------------
Astrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்? 

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு தூங்கும் நேரம்... )


என்ற அசத்தலான பாடல் இசைஞானியின் இசைக்கோர்வையால் மேன்மையுற்றது. 1985ஆம் ஆண்டு வெளியான குங்குமச்சிமிழ் என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் இன்றும் கேட்பவர்களின் மனதை நெகிழ வைக்கும். காலத்தை வென்ற பாடல். பாடலாக்கம் கங்கை அமரன்!

உண்மையைச் சொன்னால், நிலவு தூங்காது. அது எப்படித் தூங்கும்? காதலர்கள் காதல் மயக்கத்தில், பிதற்றலில்  இது போன்று எல்லாவற்றையும் சொல்வார்கள்.

அதே பாடலில் தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள்:

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்


வாலிபம் தென்றலாய் வீசும் என்பது சரி. என்றும் எனும் பதம் எப்படிச் சரியாகும்? எல்லாமே ஒரு முடிவிற்கு வரக்கூடியதுதான். வாலிபத்திற்கு முடிவு இல்லையா என்ன?

தென்றலாய் வீசும் வாலிபம், திருமணத்தோடு முடிந்து விடும்.

அதற்குப் பிறகு என்ன?

ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசனாக இருந்தவன், சேவகனாக மாறிவிடுவான். மனைவிக்கு 4 முழம் மல்லிகைப்பூவும், திருநெல்வேலி அல்வா வாங்கி வருவது மட்டும் சேவைக் கணக்கில் வராது.

அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். புதுப் பெண்டாட்டிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை ஒன்று உள்ளது. பிறகு ஒரு நாள் அதைச் சொல்கிறேன்.

ரேசன் கடைக் க்யூவில் நிற்கும்போது என்ன வீசும் நீங்களே சொல்லுங்கள்? புது மனைவிக்கும் அம்மாவிற்கும் உரசல் ஏற்படும்போது என்ன வீசும்? அதையும் சொல்லுங்கள்

எல்லாத் துவக்கத்திற்குமே, ஒரு முடிவு இருக்கும்.

இன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இரண்டையும் சமமாகப் பாவிப்பவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. இன்பத்தில் துள்ளவும் கூடாது. துன்பத்தில் துவளவும் கூடாது.

ஒரு தசாபுத்தியில் கிடைக்கும் இன்பம், அடுத்த தசாபுத்தியிலும் தொடருமா என்பது சந்தேகமே. துன்பத்திற்கும் அதே வரம்புதான். ஆகவே கால நேரம் மாறி மாறி வரும் என்பதை உணர்ந்து, நிம்மதியாக இருங்கள்
--------------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், செவ்வாய்புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து சூரிய மகா திசையில், ராகுபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 10 மாதங்களும் 24 நாட்களும் ஆகும். மொத்த காலமும் தீமையுடையதாக, துன்பமுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

ஆமென்ற ரவிதிசையில் ராகுபுத்தி
    ஆகாதமாதமது பத்து நாள்மூவெட்டாகும்
போமென்ற அதன்பலனைப் புகழக்கேளு
    பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
    நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
தாமென்ற மனைவியரை பிரித்துவைக்கும்
    தகமையில்லாத நாளென்று தணிந்து நில்லே!


அத்துடன் இதற்கு ஈடானதொரு தீமைகள் ராகு மகா திசை சூரிய புத்தியிலும் நமக்கு உண்டாகும். இருவரும்  கடும் பகைக் கிரகங்கள். அதை மனதில் கொள்ளவும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

ஆகுமே ராகுதிசையில் சூரியபுத்தி
   அருளில்லாத மாதமது பத்தேயாகும்
யேகுமே நாளதுவும் மூவெட்டாகும்
    யென்னசொல்வேன் அதன்பலனை யியம்பக்கேளூ
போகுமே சத்துருவால் வியாதிகாணும்
    பொருள்சிலவு பூமிமுதல் சேதமாகும்
சாகுமே நாள்தோறும் சண்டையாலே
    சதிரான பூமிமுதல் காலிபோமே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

4.7.11

Astrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்?

----------------------------------------------------------------------------------------
Astrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்?

“இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்”

என்று வாழ்க்கையைப் பல கூறுகளாக்கிப் பதம் பிரித்துக் காட்டிவிட்டுப் போனார் கவியரசர் கண்ணதாசன்.

அவற்றுள் உறவும், பகையும் என்ற நிலைப்பாடு முக்கியமானது. நமக்கு நெருங்கிய உறவோ அல்லது நட்போ பகையாகிப் போகும்போது மிகுந்த வருத்தத்திற்கு ஆளாவோம். அதே பகை, நமது மேன்மையை உணர்ந்து, பகையை விடுத்து, மீண்டும் நம்மை நெருங்கி வரும்போது, நிம்மதி கொள்வோம்.

அதற்கு சாத்தியம் உண்டா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஒரு கிரகத்தின் திசையில் உங்களை அறியாமல் உண்டான பகையை, வேறொரு கிரகத்தின் திசை, சரி பண்ணிவிட்டுப் போகும். அதுதான் நவக்கிரகங்கள் சிலவற்றால் நமக்குக் கிடைக்கும் அரிதான பலன்களில் ஒன்றும் ஆகும். இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்!
_____________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து சூரிய மகா திசையில், செவ்வாய் புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 126 நாட்கள்  (just 126 days only) - அதாவது சுமார் நான்கு மாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக, மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காணவே ரவிதிசையில் செவ்வாய்புத்தி
    கனதையுள்ள நாளதுவும் நூற்றியிருபத்தாறாகும்
தேறினோம் அதன் பலனை செப்பக்கேளு
    தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும்ரோகம்
    அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்தநாளில்
     தீங்கில்லா நாளென்று தெளிந்துகாணே!


அத்துடன் இதற்கு ஈடானதொரு நன்மைகள் செவ்வாய் திசை சூரிய புத்தியிலும் நமக்குக் கிடைக்கும். இருவரும் நட்புக் கிரகங்கள். அதை மனதில் கொள்ளவும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பாரப்பா செவ்வாயில் சூரியபுத்தி
    பாங்கான நாளதுவும் நூற்றியிருபத்தியாறு
ஆரப்பா அதன்பலனை அறையக்கேளு
    ஆனதொரு சம்பத்து ஐஸ்வரியமுண்டாம்
சாரப்பா சத்துருவும் உறவாகிப்போவான்
    சஞ்சலங்கள் தானகலும் சம்பத்துண்டாம்
சேரப்பா சிவதலங்கள் சேரப்பண்ணும்
    தீங்கில்லா சிவவேடம் பூணுவானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30.6.11

Astrology: Made for each other கூட்டணி எது?

-----------------------------------------------------------------------------------------
Astrology: Made for each other கூட்டணி எது?

Astrology ஒத்துவரும் கூட்டணி எது?

கூட்டணியில் பலவகை உள்ளது.

உண்மையான கூட்டணி. சந்தர்ப்பக் கூட்டணி. காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணி. ஒத்துவராது என்றாலும் அதைத் தெரிந்தே அமைந்திருக்கும் கூட்டணி என்று பலவிதமான கூட்டணிகள் உள்ளன.

கிரகங்களின் கூட்டணியும் அதைப் போன்றதுதான்.

சுபகிரகங்களின் கூட்டணி ஜாதகனுக்கு நன்மைகளை அள்ளித்தரும் உண்மையான கூட்டணியாக இருக்கும். Made for each other என்று சொல்லக்
கூடிய அம்சங்கள் நிறைந்திருக்கும்

ஒரு சுபக்கிரகமும், ஒரு பாப (தீய) கிரகமும் கூட்டணி சேர்ந்தால், அது ஒத்துவராத கூட்டணியாக இருக்கும் உங்கள் மொழியில் சொன்னால்
Not made for each other என்று வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனும் சந்திரனும் கூட்டாக இருந்தால், அது இரண்டாவது  வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும்போது, சூரியனுக்குப் பத்து பாகைகள் சந்திரன் தள்ளி இருப்பது நன்மையானதாக இருக்கும். அத்துடன் சூரியனைவிடச் சந்திரன் வலுவாக இருந்தால் (வலு என்றால் என்ன என்பதைப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன்) சந்திரன் கூட்டணிக் கொள்கைகளையும் மீறி ஜாதகனுக்கு நன்மையான பலன்களைச் செய்வார்.

அப்படி இல்லாவிட்டாலும், சந்திரன் தன்னுடைய மகா திசையிலும், அல்லது வேறு கிரகங்களின் மகா திசையில் தன்னுடைய புத்திக் காலங்களிலும் நன்மைகளையே செய்வார். ஏனென்றால் அவர் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்
__________________________________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) என்ன பலன்களைத் தருவார் என்பதை இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம்

அடுத்து சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 180 நாட்கள்  (just 180 days only) - அதாவது ஆறுமாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கூறினோம் ரவிதிசையில் சந்திரபுத்தி
   குணமான மாதமது ஆறதாகும்
தேறினோம் அதன்பலனை செப்பக்கேளு
   தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம்
   அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்த நாளில்
   தீங்கிலா நாளென்று தெளிந்து காணே!


ஆனால் இதற்கு நேர்மாறாக சந்திரதிசையில் சூரிய புத்தி இருக்கும். தன்னுடைய மகா திசையில் சந்திரன் தன் புத்திக்காலத்தில் அளித்த நன்மைகளுக்கு பதில் நன்மைகளை சூரியன் அளிக்க மாட்டார். அவர் வழி தனிவழி

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

மானேகேள் சந்திரதிசை சூரியபுத்தி
   மரணநாள் மாதமது ஆறதாகும்
தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்
   தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம்
ஏனோதான் காணுமடா யிறுக்கமதுவுண்டாம்
   ஏகாந்த தேகமது இருளதுவேயடையும்
தேனேகேள் லட்சுமியும் தேகமுடன் போவாள்
   திரவியங்கள் சேதமடா சிலவுடனே தீதாம்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

29.6.11

Astrology ஆடிய ஆட்டம் என்ன?

--------------------------------------------------------------------------------------
Astrology ஆடிய ஆட்டம் என்ன?

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் ஒன்றின் தொகையறாவில் அசத்தலாக சில வரிகள் வரும். மனிதனின் நிலைப் பாட்டை மிக அற்புதமாகச் சொல்லியிருப்பார்.

வரிகளைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?


முழுப்பாடலையும் ஒலி வடிவில் கேட்க விருப்பமா?

இதோ சுட்டி உள்ளது:
--------------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பட்டம், பதவி, பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு உள்ள காலத்தில் மனிதன் போடும் ஆட்டம் விதமாக விதமாக இருக்கும். நாம் பார்க்காத ஆட்டங்களா?

எல்லா ஆட்டங்களுமே ஒரு முடிவிற்கு வராமல் போகாது. உயிரோடு இருக்கும் போதே முடிவிற்கு வந்து விடும்

மூன்று சுபக் கிரகங்களின் தசா புத்திகளில் ஆட்டம் போடும் மனிதனை, மூன்று பாப கிரகங்கள் தங்களுடைய தசா புத்திகளில் புரட்டிப் போட்டுவிடும். அடித்து நொறுக்கிவிடும்.

கட்டிவைத்தும் அடிக்கும். தொங்க விட்டும் அடிக்கும்.

பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவன், திகார் சிறைச்சாலைக் கொசுக் கடியில் அவதிப்படவும் நேரிடும்

ஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.

எதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்!
_______________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் சனி புத்திக்கான பலன்களையும், சனி மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

அடுத்து சுக்கிரதிசையில் புதன் புத்தி, மற்றும் கேது புத்தி. அவை இரண்டையும் தசாபுத்திகள் தொடக்கப் பகுதியில் பார்த்து விட்டோம்.

இன்று, அதற்கு அடுத்து சூரிய மகா திசையில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நல்ல பலன்களைத் தருவார். வலு என்றால் தனது சுயவர்க்கத்தில் 5 அல்லது அத்ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். உச்சம் பெற்றோ அல்லது கேந்திர மற்றும் திரிகோண வீடுகளில் இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். இது பொதுப்பலன். தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஜோதிடத்தில் குறுக்கு வழி எல்லாம் கிடையாது. அலசிப் பார்த்துத்தான் பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய திசை மொத்தம் ஆறு ஆண்டு காலத்திற்கு நடைபெறும். மற்ற கிரகங்களின் புத்திகளில் பலன்கள் வேறுபடும். ஆனால் அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) அவர் பெரிதாக நன்மைகள் ஒன்றையும் செய்ய மாட்டார். அவர் சுப கிரகம் அல்ல - அதனால் செய்ய மாட்டார்.

அவருடைய சுயபுத்திக் காலம் 108 நாட்கள்  (just 108 days only)

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு
   குணமுள்ள புத்திநாள் நூத்தி எட்டாகும்
பாரப்பா அக்கினியால் பீடை உண்டு
   பாங்கான அபமிருந்து பொருளுஞ் சேதம்
ஆரப்பா அறிவார்கள் பிதாமிருந்தியு
   அரிதான வாணிபம் ஜெயமாகாது நஷ்டம்
கோளப்பா கண்ணோணுவான் கனலே மீரும்
   கொடுமையுள்ள நாளென்று கூறினோமே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.6.11

Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

அதெப்படி இரவு தொடர்ந்திடும்? இரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்?

”இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்” என்றுதானே கவியரசர் கண்ணதாசன் எழுதினார். ஆனால் இன்னொரு கவிஞர் வேறு மாதிரி சிந்தனை செய்து எழுதினார். இரவு தொடர இந்திரனைக் காவல் வைத்தால் போதும் என்கிறார்.

சரி, இந்திரனை எப்படிப் பிடித்துக்கொண்டு வருவது? அவனுக்கு உத்தரவு போட்டு எப்படிக் காவல் செய்ய வைப்பது? அதெல்லாம் உங்கள் வேலை. அது பற்றி அந்தக் கவிஞர் ஒன்றும் கூறவில்லை.

நாயகி ஏக்கத்தில் அப்படிக் கூறுகிறாள். ஏக்கத்திற்கெல்லாம் இலக்கணம் இல்லை. அதீதக் கனவுக் கணக்கில் அது வரும். பாடலைப் பாருங்கள்:

நாயகி:
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை


நாயகன்:
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

(பாடல் ஆக்கம் கவிஞர் வாலி. திரைப்படத்தின் பெயரும் வாலி. வெளிவந்த ஆண்டு 1999. பாடியவர்கள். திருமதி அனுராதா ஸ்ரீராம் மற்றும் திரு.உன்னி கிருஷ்ணன். இசை: தேவா. நடிப்பு அஜீத், சிம்ரன்)

என்னவொரு வெளிப்பாடு பாருங்கள். நடக்காத கற்பனைதான் என்றாலும், கேட்பதற்கு சுகமாக இருக்கிறதல்லவா?

ஏ.ஸி எல்லாம் வேண்டாம். மின் வெட்டு சமயத்தில் பிரச்சினையாக இருக்கும். ஆகவே நிலவைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டில் காலில் கட்டி வைத்து விடு. அறை குளிர்ச்சியாக இருக்கட்டும். படுத்தால் ஆளே அமுங்கும் படியான மெத்தை வேண்டும். மேகத்தைக் கொண்டு வந்து மெத்தையாகப் போடு. எரிக்கும் சூரியனை கடலுக்குள் அமுக்கி வை. இரவு முடியக்கூடாது. கடலை விட்டு சூரியன் வெளியே தலை காட்டக்கூடாது. அந்த வேலையை இந்திரனிடம் கொடுத்துக் காவலாக இருக்கச்சொல்.

அடடா, என்னவொரு கற்பனை பாருங்கள். இது போன்ற கற்பனை எல்லாம் யாருக்கு வரும்? கவிஞர்களுக்கு மட்டும்தான் வருமா? இல்லை. காதல் வயப்பட்டுள்ள அனைவருக்குமே வரும். அது மட்டுமல்ல எட்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்து அவரின் பார்வையில் இரண்டாம் வீடு இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும். மனகாரகன் சந்திரன் உச்சமாக இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும்.
------------------------------------------------------------------------------------------
அதுபோல இன்பம் தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

சந்திரனைக் கொண்டு வா சமர்த்தாய் கட்டி வை
குருவைக் கொண்டுவா கொல்லையில் நிற்க வை
காயும் சனியைக் கடலுக்குள் பூட்டிவை
சுகமாய் இருந்திட சுக்கிரனைக் காவல் வை


இதை எல்லாம் செய்தால் வாழ்க்கை சுகமாகவே - அதாவது இன்பமாகவே இருக்கும். முயன்று பாருங்கள்:-)))))
---------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் வியாழ புத்திக்கான பலன்களையும், வியாழ மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே அதி நட்புக் கிரகங்கள். கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் தேடி வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 38 மாதங்கள்

உண்டாகும் சுக்கிரதிசை சனியின் புத்தி
   உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு
தெண்டாடும் அதன் பலனை சொல்லக்கேளு
   திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு
நன்றாகும் அரசபதியாவாய் பாரு
   நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடுநகர் உண்டாம்
சென்றாகும் செல்வபதியாவான் பாரு
   தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை சனி மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

பாழில்லா காரிதிசை சுக்கிரபுத்தி
   பாங்கான மாதமது முப்பத்தெட்டு
நாளில்லா மங்கையரும் மனமாட்சியுமாம்
   நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம்
ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வான்
   அணைகட்டு விரக்கமுடன் அலங்காரமுண்டாம்
கோளில்லா சத்துரு நோய் இல்லை பாரு
   கோகனமாது செல்வம் கொடுப்பாள் தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

23.6.11

Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் ராகு புத்திக்கான பலன்களையும், ராகு மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே சுபக்கிரகங்கள் கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் வரிசையில் (Queue) வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 32 மாதங்கள்

காணவே சுக்கிரதிசை வியாழபுத்தி
   கனமான மாதமது முப்பத்தியிரண்டு
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
   தோகையரும் மங்களமும் சுபயோகமாகும்
பேணவே பெருஞ்செல்வம் பெருகும்பாரு
   பெரிதான புத்திரனும் பெண்களுண்டாகும்
நாணவே நாடுநகரம் உண்டாகும்பாரு
   நன்மையுடன் வாகனமும் நடப்புடனே உண்டாம்


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை வியாழ மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி
   பொருள்காணு மாதமது முப்பத்தியிரண்டு
ஆமென்ற அதன்பலனை சொல்லக்கேளு
   அருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்
சுபமென்ற சோபனமும் மனமகிழ்ச்சியுண்டாம்
   சுகமான கன்னியுடனே சுகமாக வாழ்வான்
நாமென்ற நாடுநகர் கைவசமேயாகும்
   நன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வான்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

22.6.11

Astrology உடன்கேடு எப்போது வரும்?

----------------------------------------------------------------------------------
Astrology உடன்கேடு எப்போது வரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களையும், செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
ஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 36 மாதங்கள்

பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி
  பாங்கான மாதமது முப்பத்தாறாகும்
சேரப்பா அதன்பலனை செப்பக்கேளு
  சிற்றேகம்காமாலை ஜெயமும் நோவாம்
ஆரப்பா அரசர்பகை அபவிருந்துமாமே
  அன்பான தாய்தந்தை அடவுடனே சாவாம்
மேரப்பா மேகமதால் ரோகமுண்டாம்
  மேலெல்லாம் சிரங்கு குட்டம் ஆவான்பாரே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை ராகு மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி
  கணக்கானமாதமது ஆறாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
  தோகையர்கள் தன்னாலே சுகமாகும்பாரு
பூணவே பூமிமுதல் பொருளுஞ்சேதம்
  புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்
ஊணவே வியாதியது பீடிப்பாகும்
  உடன்கேடு வந்ததனால் கலகமாமே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!