மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 701 - 710. Show all posts
Showing posts with label Lessons 701 - 710. Show all posts

30.9.13

 

Astrology: Quiz புதிர் - பகுதி 12

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பன்னிரெண்டு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okayaயா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் பெண்மணி. தமிழ்நாட்டுக்காரர். மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++====

26.9.13

Astrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

 

Astrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான் என்று குறிப்பிட்டிருந்தேன்

கேள்விகள்:

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி
பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

ஜாதகி ஒரு கிராமத்தில் பிறந்தவர். செல்வந்தர் வீட்டுப் பெண். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். அக்கால கிராம வழக்கப்படி, பூப்படைந்த
பிறகு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டு விட்டார்.வீட்டில் நிறுத்தி விட்டார்கள். அதோடு படிப்பும் கட்’டாகிவிட்டது.

நான்காம் வீட்டில் அமர்ந்த மாந்தி கல்விக்கு உலை வைத்தான். அந்த வீட்டு அதிபதி சுக்கிரன் சூரியன், மாந்தி மற்றும் ராகுவோடு கிரகயுத்ததில்
மாட்டிக்கொண்டு விட்டான். உடன் அமர்ந்த ராகுவும் அந்த வீட்டிற்குக் கேடாக அமைந்தான். 4ல் ராகு அமர்வது சுகக் கேடு. எல்லாவற்றையும் விட
முக்கியமாக வித்யாகாரகன் புதன் பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் ராகு, இன்னொரு பக்கம்  சனி. போதாதா? சுபக் கிரகமான சுக்கிரன்தான்  எட்டாம் வகுப்பு வரை ஜாதகியைக் கூட்டிக்கொண்டுபோனான்.இல்லையென்றால் அதுவும் நடந்திருக்காது. ஜாதகிக்குத் தாய் மொழியில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்தான்.

ஜாதகிக்கு 11 வயதில் சனி மகாதிசை ஆரம்பித்தவுடன், அவன் ஆறாம் இடத்தில் வலுவாக இருந்ததால், அவன் லக்கினாதிபதி என்பதையும்
மறந்துவிட்டு, பரிவர்த்தனையான 6ஆம் இடத்துக்காரன் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்தான். 30 வயதுவரை ஜாதகியின்
வாழ்க்கையில் பல கஷ்டங்கள். ஜாதகியின் 22 வயதில் அவருடைய தந்தை இறந்துபோக எல்லாம் கோளாறானது.


2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமாகவில்லை.

களத்திரகாரகன் சுக்கிரன் கெட்டுப் போனதாலும், ஏழாம் வீட்டுக்காரன் சூரியன் தீய கிரகமான ராகு மற்றும் மாந்தியின் கூட்டால் வலுவிழந்து போனதாலும், மேலும் 30 வயதுவரை நடந்த சனி திசையாலும் 30 வயதுவரை ஜாதகிக்குத் திருமணம் நடக்கவில்லை.அதற்குப் பிறகு வந்த புதன் திசையின் தசா நாதன் புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி அடிபட்டுப் போனதால் ஜாதகிக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. பலர் முயற்சி செய்தும் அது கூடிவராமல் போய்விட்டது.


3. ஜாதகர் வேலைக்குச் செல்பவரா? அல்லது வீட்டிலேயே இருப்பவரா?

ஒரு நாள் கூட வேலைக்குச் சென்றதில்லை.

பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு ஆறில். தொழில்காரகன் சனீஷ்வரன் லக்கினத்திற்கு ஆறில். அதனால் வேலைக்குச் செல்ல வில்லை. அவர்கள் செல்ல விடவில்லை. வீட்டில் இருந்த செல்வம் அவரை ரோட்டி, கப்டா, மக்கான் என்று நல்ல அடிப்படை வசதிகளுடன் வாழ வைத்தது. 


4. இந்த ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பரிவர்த்தனையானதன் பலன் என்ன?

ஒன்றாம் வீட்டுக்காரனும், ஆறாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனை பெறுவது கடும் அவயோகம். தைன்ய யோகம் என்று அதற்குப் பெயர்(திருவாளர்
KMRK கண்ணில் மட்டும் அது பட்டுள்ளது. தன்னுடைய பின்னூட்டத்தில் அவர் அதைக் குறிப்பிட்டுள்ளார்). ஜாதகனுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை அழித்துவிடக் கூடியது அந்த அவயோகம்.

தைன்ய யோகத்திற்கான விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

தைன்ய பரிவர்த்தனை என்பது தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால்,
பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

-------------------------------------------------------------------------
லக்கினாதிபதிதான் ஜாதகத்தில் முக்கியமானவர். அவர் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் விதி என்ற வெள்ள நீற்றில் எதிர் நீச்சல் போட வேண்டும். இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுவிழந்து போய் விட்டதால், எதுவுமே நன்றாக அமையவில்லை.

கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதனால்தான் அதற்குப் பூரண கும்பம் அடையாளமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கும்ப
லகினத்திற்கு ஒரு சிக்கலும் கூடவே உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் சனிதான். பன்னிரெண்டாம் வீட்டுக்காரனும் (12Th Lord)
சனிதான். இந்த லக்கினக்காரகளுக்கு சனி வலுவாக (strong) இருந்தால் successful life இல்லையென்றால்,அதாவது வலுவிழந்து (weak) இருந்தால் எல்லாம் தோல்விதான் (failureதான்)

நான் அடிக்கடி சொல்வதைபோல இறைவன் நஷ்ட ஈட்டை வழங்கித்தான் உள்ளார். இல்லை என்றால் இவருக்கு எப்படி பொது நீதியான 337
பரல்கள் வரும்? என்ன நஷ்ட ஈடு? முக்கிய திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவான் அமர்ந்து ரட்சித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் ஜாதகி எல்லாப் பிரச்சினைகளையும் உதறி விட்டு, உங்கள் மொழியில் சொன்னால் கடாசிவிட்டு, நிம்மதியாக இருக்கிறார்.

-------------------------------------------------------------------------
நான்கு கேள்விகளுக்கும் சரியான விடையை ஒருவரும் எழுதவில்லை. அதனால் என்ன? அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக்
காட்டுங்கள்!

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சிலர் 3 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++=======

25.9.13

Astrology:Quiz Part 11

Astrology: ஜாதகம் Quiz Part 11

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பதினொன்று

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!  நன்றாக அலசிப் பதில் சொல்லுங்கள்!



கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வேலைக்குச் செல்பவரா? அல்லது வீட்டிலேயே இருப்பவரா?

4. இந்த ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பரிவர்த்தனையானதன் பலன் என்ன?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்கள் பதிலைப் பின்னூட்டம் (through comment box) மூலம் மட்டுமே எழுத வேண்டும்.மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.வேண்டுகோளையும் மீறி மின்னஞ்சல் மூலம் எழுதும் பதில்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட  மாட்டாது!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.9.13

Astrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமி

 
 Nathuram Godse

 மே’19ல் பிறந்த இந்தியர்களின் பட்டியலில் 
நாதுராம் கோட்சேயின் பெயர்தான் முதலில் வருகிறது
---------------------------------------------------------------------------------------------------------
Astrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமி

நேற்றுப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

மகாத்மா காந்திஜி என்றும், இந்தியாவின் தந்தை என்றும், அஹிம்சையால் எதையும் சாதிக்கலாம் என்றும் உலகிற்கு உணர்த்திய தியாகச் செம்மலை, இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து ஆங்கில அரசுடன் கத்தியின்றி, ரத்தமின்றிப் போராடி வெற்றி பெற்ற மாமனிதரை, சுட்டுக் கொன்றதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமியின் ஜாதகம் அது.

ஆமாம். நாதுராம் கோட்சேயின் ஜாதகம் அது!

விக்கிபீடியாவில் அதைப் பற்றிய செய்திகள் நிறையக் கொட்டிக் கிடக்கின்றன! அதை எல்லாம் விவரித்து எழுதி, பழைய செய்திகளை நான் கிளறப் போவதில்லை. தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்காகவும், இளைஞிகளுக்காகவும் முக்கியமாகப் பட்ட மூன்று சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம்.
1
http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse
2
Why Nathuram Godse killed Gandhiji
http://www.topix.com/forum/religion/sikh/TFKMKHTBH6UDQU3L9
3
Nathuram Godse's speech in court.
http://badrinath.blogspot.in/2007/04/nathuram-godses-speech-in-court.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நாதுராம் கோட்சேயை இந்த பாதகச் செயலுக்கு இழுத்துச் சென்ற சில கிரக அமைப்புக்களை மட்டும் இப்போது பார்ப்போம்

1. நாதுராம் கோட்சேயின் ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி நீசமாகியுள்ளான். எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் நீசமான சனி பெறவில்லை.
19 May 1910ல் பிறந்த அவன், 15 November 1949ல் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்தான். 40 வயதைத் தொடும் முன்பாகவே அவன் ஆயுள் முடிந்து போய்விட்டது.

2. புத்திநாதன் புதன் 12ல் அதுமட்டும் அல்லாமல் அவன் ராகுவுடன் கூட்டாக உள்ளான். புதன் தனித்து இருந்தால் சுபக்கிரகம், தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் பாவியாகிவிடுவான். புதன் சுபமாகவோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாகவோ இருந்தால் ஜாதகனின் புத்தி நல்ல வழியில்’ ஆக்கபூர்வமான வழியில் வேலை செய்யும். இல்லை என்றால் தீய வழியில் வேலை செய்துவிடும். லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் வைத்து எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாக ஜாதகன் இருந்தாலும், ஒரு நாள், ஒரு நாளாவது, அவனைக் கிரிமினலாக ஆக்கிவிடும். அதாவது கிரிமினல் வேலையைச் செய்ய வைத்துவிடும். அதைத் தவிர்க்கமுடியாது.

3.சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், அவன் விரைய ஸ்தான அதிபதி. அவன் முக்கிய கேந்திர வீட்டில் அமர்ந்து வலுப்பெற்று ஜாதகனின் வாழ்க்கையை விரையம் செய்து விட்டான்.

4. சூரியன் 12ல் இருந்தால் அரசிற்கு எதிரான காரியங்களைச் செய்ய நேரிடும். அரச தண்டனையைப் பெற நேரிடும். அதே நிலையில் உள்ள சூரியன் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை. மாறாக ராகுவின் கூட்டணியோடு இருக்கிறான். அதனால்தான் ஜாதகனுக்கு உச்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைத்தது.

5. லக்கினத்தில் இருந்த செவ்வாயின் பார்வை மனகாரகன் சந்திரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அது அவனுக்கு அசாத்திய மன உணர்வுகளைக் கொடுத்தது. அவன் ஒன்றும் கொலையைத் தொழிலாகக் கொண்டவன் அல்ல. இந்த அசாத்திய, இயற்கைக்கு மாறான மன உணர்வுதான் அவனைக் கொலை செய்ய வைத்தது,

6. அவன் ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் உள்ளது. அது ஏன் அவனைக் காப்பாற்றவில்லை? அதே கஜகேசரி யோகம் காந்திஜியின் ஜாதகத்திலும் உள்ளது. அது ஏன் அவரைத் தப்பிக்க வைத்துக் காப்பாற்றவில்லை?

இருவர் ஜாதகத்திலுமே அந்த யோகம் அடிவாங்கிக் கெட்டுப்போய் உள்ளது. அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 10

 
Astrology: Quiz புதிர் - பகுதி 10

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பத்து

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okayaயா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் இந்தியர். மக்கள் அறிந்த பிரபலம் (ஒரு வழியில்)

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.9.13

Astrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

 

Astrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

கேள்விகள்

(ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்)

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

ஜாதகர் பள்ளி இறுதியாண்டுவரை மட்டுமே படித்தவர். பார்டரில் பாஸானவர். நான்காம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்துகொண்டு விட்டான். அத்துடன் அவனே கல்விக்கும் காரகன். வித்யாகாரகன். எனக்கென்ன வந்தது என்று அவன் உட்கார்ந்து கொண்டுவிட்டபடியால், பள்ளிப் படிப்பும் சராசரிதான். அத்துடன் எட்டாம் வீட்டுக்காரனான சுக்கிரனும் 4ல் வந்து உட்கார்ந்து கொண்டு இடையூறு செய்தான். ஆனாலும் ஜாதகனுக்கு
3 வயது முதல் 18 வயது வரை லக்கினாதிபதி குரு பகவானின் மகா திசை
நடைபெற்றதால் அவர் இரக்கப்பட்டு ஜாதகனைப் பள்ளி இறுதியாண்டுவரை தள்ளிக்கொண்டு போனார்,

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமானவர். ஏழாம் வீடு சுபகர்த்தாரி யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். அந்த வீட்டிற்கு இரண்டு பக்கமும் சுபக்கிரகங்கள்.அத்துடன் அந்த வீட்டுக்கு அதிபதி, அந்த வீட்டிற்கு 9ல் அமர்ந்துள்ளார். இவைகள் நல்ல அமைப்புக்கள்.  ஜாதகனுக்கு அவனுடைய 24வது வயதில் திருமணம் ஆனது. நல்ல மனைவி கிடைத்தாள்.

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

ஒன்பதாம் வீட்டில் இரண்டு தீயவர்களுடன், மாந்தியும் சேர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கிறான். அந்த வீட்டுக்காரன் செவ்வாய் லக்கினத்திற்குப் 12ல். ஆகவே ஜாதகருக்கு வெளி நாட்டு வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை. இங்கேயே தன் சொந்த மண்ணில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்.
--------------------------------------------------------------------------
1. சாத்தூர் கார்த்தி
2. ரெட்ஃபோர்ட்

ஆகிய இருவரும் கேட்கப் பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------- -----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஒன்பது

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது!

வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும்
பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள்.

மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான்!



கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 8

 
Astrology: Quiz புதிர் - பகுதி 8

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி எட்டு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் உலகம் அறிந்த பிரபலம்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

16.9.13

Astrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தையை முதலில் தெரிந்து கொள்வோம்!

 

Astrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தையை முதலில் தெரிந்து கொள்வோம்!

அனேக மாணவக் கண்மணிகள், ஒரு ஜாதகத்தை வைத்து, பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தை என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிடப்பெற்ற பாடத்தை இன்று மீண்டும் கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------
பயிற்சி எண் ஒன்று! (Practical Lesson No.1)

ஒரு ஜாதகத்தை அதன் பிறப்பு விவரம் இல்லாமல் கொடுக்கப்படும்போது, கிரகங்களை வைத்து, ஜாதகனின் பிறந்த தேதியைக் கண்டு  பிடிப்பதுதான் முதல் பயிற்சி

சமயங்களில் பிறந்ததேதியுடன் பொய்யான ஜாதகத்தை அல்லது தவறான ஜாதகத்தை ஒருவர் கொடுத்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த உபாயம் உதவும்

கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகரின் பிறந்த தேதி என்ன?



1. ஜாதகத்தில், சனி, ராகு, குரு ஆகிய மூன்று கோள்களின் நிலையை வைத்து ஒரு ஜாதகரின் பிறந்த வருடத்தைச் சொல்லிவிடலாம். 2. சூரியன் இருக்கும் இடத்தைவைத்து பிறந்த மாதத்தையும், சந்திரனின் நிலையை வைத்து பிறந்த நாளையும் சொல்லிவிடலாம்.(ஜாதகரின் நட்சத்திரம் தெரிந்தால் சரியான தேதி கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் வித்தியாசப்படும்)

அதற்கு அக்கோள்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும்.

இன்றையத் தேதியில் (3.3.2010) முக்கியமான 3 கிரகங்களின் நிலை:

சனி கன்னி ராசியில் (160.03 பாகைகளில்)
ராகு தனுசில் (265.49 பாகைகளில்)
குரு கும்பத்தில் (317.51 பாகைகளில்)

பாகைகள் முக்கியமில்லை. ராசிகள் மட்டும் தெரிந்தால் போதும்.


உங்கள் அனைவருக்கும் ஜோதிட மென்பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவ்வப்போது அதைப் பயன்படுத்தி உங்களுக்குத்
தேவையான விவரங்களை அதில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலே உள்ள இன்றைய கிரக நிலையை நானும் அவ்வாறு எடுத்துத்தான் உங்களுக்கு அளித்துள்ளேன்
---------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்கிறது. இன்றையத்தேதியில் கன்னி ராசியில் இருக்கும் சனி கடகராசியின்
எல்லையான 120 பாகைகளை விட்டு 40 பாகைகள் கடந்து வந்துள்ளது. சனி மதம் ஒரு பாகையைக் கடக்கும் (30 வருடம் x 12  மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 பாகைகள் = மாதம் ஒரு பாகை. அதாவது ஒரு degree)
இன்றையத் தேதியில் இருந்து (உத்தேசமாக) கடந்துவந்த 40 பாகைகளுக்கு 40 மாதங்களைக் கழித்துக்கொள்ளுங்கள். சனி கடகத்தில் இருந்த வருடம் கிடைக்கும். 4.3.2010 கழித்தால் 40 மாதங்கள் = 4.11.2006. அத்துடன் குரு நிலையைப் பாருங்கள். குரு கும்பத்திற்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது அதற்கும் இந்த 40 மாதக்கணக்கில் கழித்தால் மூன்று ராசிகளைப் பின் தள்ளிவிட்டு குரு

துலா ராசியில் வந்து நிற்கும் ஆகவே ஜாதகர் அதற்கு 30 ஆண்டுகள் முன்பாகப் பிறந்தவர்.

அதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் குருவின் நிலைமை சரியாக வராது ( இரண்டரை சுற்றில் அவர் ரிஷபத்தில் இருப்பார்) ஆகவே ஜாதகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.

குரு வருடத்திற்கு ஒரு ராசி அதை மனதில் வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட ஜாதகத்தில், உத்தேசக்கணக்கிலேயே ஜாதகர்
1948ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது தெரிய வரும்.

ராகு பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றை முடிக்கும் என்பதால், ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலை ஜாதகரின் பிறந்த வருடத்தைக் கண்டு பிடிக்க சனியுடன் சேர்ந்து உதவும்.

சூரியனின் நிலையை வைத்து மாசி மாதத்தில் ( பிப்ரவரி 14 முதல் மார்ச் 14ற்குள் பிறந்தவர்) என்பது தெரியும்.சூரியன் மேஷத்தில் சித்திரை மாதத்தை வைத்து தன்னுடைய ஓட்டத்தைத் துவக்குவதால் மாதம் ஒரு ராசி வீதம் கும்பராசிக்கு மாசி மாதம் வந்து சேரும். இந்தக் கணக்கெல்லாம் பழக்கத்தில் மனதில் நிற்கும் பார்த்தவுடன் சொல்லத் தோன்றும்.
----------------------------------------------------------
சனி:
2010ல் - கன்னிராசி
1980ல் - கன்னி ராசி
1951ல் -  கன்னி ராசி
1921ல் -  கன்னி ராசி

நவம்பர் 2006ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1976ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1947ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1917ல்  சனி - கடக ராசியில்

சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 29.5  ஆண்டுகள். ஆகவே இரண்டு சுழற்சிகளுக்கு 59 ஆண்டுகளைத்தான் கழிக்க வேண்டும்

குரு
2010ல் - கும்ப ராசி:  2008ல் தனூர் ராசி
1998ல் - கும்ப ராசி;  1996ல் தனூர் ராசி           
1986ல் - கும்ப ராசி;  1984ல் தனூர் ராசி
1974ல் - கும்ப ராசி;  1972ல் தனூர் ராசி
1962ல் - கும்ப ராசி;  1960ல் தனூர் ராசி
1950ல் - கும்ப ராசி;  1948ல் தனூர் ராசி

மேற்கண்டவாறு ஒரு காகிதத்தில் குறித்துப்பார்த்தால் ஜாதகர் 1948ல் பிறந்தவர் என்பது தெரியவரும்
----------------------------------------------------------------
இன்னொரு குறுக்கு வழி உள்ளது. நமக்குத்தான் குறுக்குவழி என்றால் மிகவும் பிடிக்குமே:-)))

கணினி மென்பொருளில் உத்தேசமாக இன்றையத்தேதிக்கு ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதிக்கு ஒன்று, அதற்கு 29  ஆண்டுகளுக்கு  முன்பாக இதே தேதிக்கு ஒன்று, என்று மூன்று ஜாதகப் பிரதிகளை எடுத்துப்பார்த்தால், சனி மற்றும், குருவின் நிலையை வைத்து ஜாதகரின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்துடனனான கிரகநிலை (ஜாதகம்) கிடைத்துவிடும். ஜாதகரின் நட்சத்திரத்தைவைத்து ஃபைன் டியூனிங் செய்தால் தேதியும் கிடைத்துவிடும்.

இதுதான் ஜாதகத்தைவைத்து, பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்!
-----------------------------------------------------------------
எனக்கு இன்னும் ஒரு சுலபமான வழி உள்ளது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்கள் உள்ளன (1926 முதல் 2000 வரை உள்ள ஆண்டுகளுக்கானது) அதுபோல திரு ராமன் அவர்களின் 100 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கப் புத்தகம் உள்ளது.

சனியை வைத்து வருடத்தையும், சூரியனை வைத்து மாதத்தையும் கண்டுபிடித்த அடுத்த நொடி, பஞ்சாங்கத்தில் உள்ள அதற்கான
பக்கத்தைப் பார்த்தால் போதும். (மாதம் ஒரு பக்கம்) எல்லாம் துள்ளியமாகத் தெரியவரும். என் சேகரிப்பில் அவை அனைத்தும் உள்ளன!

மற்றவை நாளை!

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.9.13

Astrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா?

 

Astrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா?

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:




கேள்விகள்
(ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்)

கேள்விகள்
1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?


ஜாதகர் படித்தவர். இளங்கலை பட்டதாரி. அத்துடன் கணினித்துறையில் டிப்ளமோக்கள் படித்தவர். தங்கு தடையில்லாமல் படிப்பு வசப்பட்டது. காரணம் கல்வி ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதோடு, திரிகோண அமைப்பில் (ஒன்றாம் வீட்டில்) உள்ளார். உடன் முதல் நிலை சுபக்கிரகமான குருவும் சேர்ந்து கூட்டாக உள்ளது. குரு நீசமாக இருந்தாலும் (எந்த நிலையிலும் நல்லவரே) அதனால் குருமங்கள யோகம் உள்ளது.

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமானவர். எழாம் வீட்டுக்காரர் ஒன்பதில் (அதுவும் திரிகோண வீடு) சிறப்பாக அமர்ந்துள்ளார். அத்துடன் எழாம் வீட்டிப் மேல் குரு பகவானின் நேரடிப்பார்வையும் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டின் மீதோ அல்லது ஏழாம் வீட்டுக்காரனின் மீதோ விழுகவில்லை. அதனால் சற்றுத் தாமதமாகத் திருமணம் நடைபெற்றது. ஜாதகருக்கு அவருடைய முப்பதாவது வயதில் திருமணம் நடைபெற்றது. சந்தோஷமான மணவாழ்க்கை. அத்துடன் இரண்டு குழந்தைகள். ஆஸ்திக்கு ஒரு ஆண்.ஆசைக்கு ஒரு பெண் என்று வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் ஆன நாள் முதலாய் தன் குடும்பத்துடன் வெளி நாட்டில்தான் உள்ளார்.

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

ஜாதகர் கடந்த 15 ஆண்டுகளாக வெளி நாட்டில்தான் இருக்கிறார். நல்ல வேலையில் உள்ளார். ஒன்பதாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன் உள்ளது. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் அதன் அதிபதி புதனின் பார்வை உள்ளது. புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அத்துடன் லக்கினாதிபதி வலுவாக உள்ளார். குரு பகவானின் பார்வையும் (ஒன்பதாம் பார்வை) அந்த வீட்டின் மேல் விழுகிறது. இந்த மூன்று சுபக்கிரகங்களும் சேர்ந்து ஜாதகனின் வெளிநாட்டுக் கனவை நனவாக்கின.

ஜாதகத்தில் இரண்டுகிரகங்கள் உச்சம். நீசமான இரண்டு கிரகங்களும் தப்பித்துவிட்டன. குருபகபான் உச்சனான செவ்வாயுடன் சேர்ந்ததால் தப்பித்தார். புதன் சுபக்கிரகமான சந்திரனின் வலுவான பார்வையால் தப்பித்தார். ஜாதகத்தின் மிகபெரிய ப்ளஸ் பாயிண்ட் லக்கினாதிபதி சனி திரிகோணம் பெற்றது. அதுவும் நட்பு வீட்டில் திரிகோணம் பெற்றது. அலசும் போது இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்!
------------------------
1. டல்லாஸ் கண்ணன்
2. கலையரசி
3. கே.முத்துராமகிருஷ்ணன்
4. என்.விஜயகுமார்.
5. ஸ்ரவாணி
6. எம்.ரவிச்சந்திரன்
7. ஜி.முரளிகிருஷ்ணா
8. பழநிசண்முகம்
9. ஜனனி முருகேசன்
10. ரமாடு
11. சி.ஜீவானந்தம்
12. K.J
13. ஜக்வெற்றி
14. என்.விஜகுமார்

ஆகிய பதினான்கு பேர்களும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==