மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 711 - 720. Show all posts
Showing posts with label Lessons 711 - 720. Show all posts

22.10.13

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?

 

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? 

சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன?

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்?

மரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.

மற்றவர்கள் தொடரலாம்!
-------------------------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

http://www.holybooks.com/wp-content/uploads/The-Tibetan-Book-of-Living-and-Dying.pdf

அந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில்  சொல்லுங்கள்!
------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.

உடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்
தோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்"


என்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த  அன்பர் கூறியுருந்தார்.

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான்  அந்த நிலை நமக்கு உண்டாகும்.

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without  desire

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

குறள் - 362

பட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்

பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்
போகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.

ஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.

இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்

நடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்!
என்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------
அடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்!



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21.10.13

Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
---------------------------------------------------------------------------------
இடைச் சேர்க்கை!


வேண்டுகோள்!

ஜோதிடம் பொதுவானது. பழமையானது. காலம் காலமாக உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு மேலாக பல மகான்களும், ஞானிகளும்  ஜோதிடத்தை விரிவாகத் தந்துள்ளார்கள். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம். யாரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது!

பிறக்கும்போதே யாரும் ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. இறையுணர்வு, தெய்வ அருள் (intuition power), ஞானம் உள்ளவர்கள் அதில் மேன்மை உற்று விளங்கினார்கள்.

மற்றவர்கள் கற்று உணர்ந்தார்கள். கற்றுணர்தலிலும் அது மனதில் நிற்பதற்கும் தெய்வசித்தம் வேண்டும்.

கற்றுணர்தல், அனுபவம், எழுத்து என்பது ஆளாளுக்கு வித்தியாசப்படும். தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அது தங்களுடைய நடையில் அவர்கள் எழுதும்போது, அதை ஒருவர் அச்சரம் பிசகாமல் காப்பியடித்து தான் எழுதியதுபோல் பதிவிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

எழுத விரும்புபவர்கள், தாங்கள் கற்றதை, தங்கள் அனுபவத்தைத் தங்கள் நடையில் எழுதட்டும். அதில் தவறில்லை!

ஆனால் இன்றைய அவல நிலையில் நியாய அநியாயங்களுக்கெல்லாம் இடமில்லை. முடிந்தால், விருப்பப்படுவதை செய்துகொள், யார்
உன்னைக் கேட்க முடியும் என்னும் நிலைப்பாடுதான் மேலோங்கி உள்ளது.

இன்றைய இணைய வளர்ச்சியில் cut & paste கலாச்சாரத்தில் எல்லாம் சாதாரணமாகிவிட்டது.

சட்டம், வழக்கு எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கே பல ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் உள்ளது. இணைய வழக்குகள் எல்லாம் எம்மாத்திரம்?

ஆகவே நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது.

பலர் எனது எழுத்துக்களை, ஆக்கங்களை அப்பட்டமாகத் திருடிக் கொண்டு போகிறார்கள். இதைக் காலம்காலமாக பலரும் எனக்குஎடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் KmrK அவர்களுக்கு இந்தத்திருட்டு விஷயம் நன்றாகத் தெரியும். சென்ற வாரம் நமது வகுப்பறை மாணவி Ms.கோகிலம் அவர்களும் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் திருட்டு ஒன்றைச் சுட்டிக் காட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஆகவே நம் ஜோதிட வகுப்பைத் திறந்தவெளியில் நடத்தாமல், Closed Roomல் நடத்த விரும்புகிறேன். அத்துடன் இங்கே திறந்த வெளியில் உள்ள முக்கியமான பாடங்களை எல்லாம் அந்த அறைக்கு மாற்றிவிடலாம் என்றும் நினைக்கிறேன்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். 

என்ன செய்யலாம்? உறுப்பினர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றிய உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!!! உங்கள் பதில்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் (My mail ID: classroom2007@gmail.com)

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++==

17.10.13

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

 

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

Hollywood Actress Angelina Jolie தான் அவர்!!!!
---------------------------------
Angelina Jolie
June 4, 1975 (age 38)
Los Angeles, California, U.S.
Citizenship: United States, Cambodia, Sarajevo (honorary)
Occupation: Actress, film director, screenwriter
Years active: 1982; 1991–present
Spouse(s): 1.Jonny Lee Miller (m. 1996–d. 1999)
              2.Billy Bob Thornton (m. 2000–d. 2003)

Partner(s): Brad Pitt (2005–present)
Children     6 (Most of them are adopted)
-------------------
மேலதிக விபரத்திற்கு:
http://en.wikipedia.org/wiki/Angelina_Jolie

++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி மிகவும் அழகானவர். புகழ் பெற்றவர்
2. கையில் அபரிதமான பணப்புழக்கம் உள்ளவர்
3. திருமணமானவர். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உள்ளது. விவாகம் ரத்தில் முடிந்துவிட்டது.
4. ஜாதகிக்குக் குழந்தை உள்ளது.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன், மிகச் சிறந்த திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார். உடன் அந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ள குரு பகவான். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் அதே வீட்டில். கேட்கவும் வேண்டுமா? சந்திர மங்கள யோகமும், குருச் சந்திர யோகமும் அமைந்து ஒன்பதாம் வீட்டை மேன்மைப் படுத்தின. பெண்களுக்கு ஒன்பதாம் வீடு (பாக்கிய ஸ்தானம்) முக்கியமானது. ஒன்பதாம் வீடு சிறப்பாக அமைந்ததற்கு உதாரண ஜாதகம் இது.

2.
லக்கினத்துடன் சந்திரன் சம்பந்தப்படும்போது, அழகான தோற்றத்தை அது கொடுக்கும். இங்கே லக்கினாதிபதியே சந்திரனாகி, ஒன்பதில் அமர்ந்ததால் ஜாதகிக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தார். அத்துடன் சுபக் கிரகமான சுக்கிரனும் லக்கினத்தில் வந்து அமர்ந்து ஜாதகியின் அழகிற்கு அணி சேர்த்தார். திரைப்பட நாயகி என்றால் சொல்லவும் வேண்டுமா? அதே அமைப்புக்கள் அவருக்குப் பெரும் புகழையும் தேடிக் கொடுத்தது.

3.
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து (புதாதித்யா யோகம்) ஜாதகிக்கு பன்முகத் திறமைகளைக் கொடுத்தன. ஜாதகி திரைப்பட நாயகி, இயக்குனர், கதாசிரியை என்று பல துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

4.
இரண்டாம் வீட்டில் மாந்தி இருப்பது உசிதமல்ல. அந்த வீட்டின் செயல்பாடுகள் 3ல் ஏதாவது ஒன்றைக் கெடுப்பார் என்பது விதி. அவர் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தார். இரண்டு முறைகள் திருமணம் செய்து கொண்டும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை. இரண்டு விவாகங்களுமே ரத்தில் முடிந்தது.

இரண்டாம் வீட்டு அதிபதி 11ல் அமர்ந்ததாலும், தனகாரகன் குரு லக்கினாதிபதியுடன் சேர்ந்ததாலும், ஜாதகிக்கு எந்தவித பணப்பிரச்சினையும் இல்லை.

5.
ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய், அந்த வீட்டிற்கு ஐந்தில் (9ல்) அமர்ந்ததாலும், குழந்தை பாக்கியத்திற்கு காரகன் அவருடன் இருப்பதாலும் ஜாதகிக்குக் குழந்தை பிறந்தது. அந்த பாக்கியத்திற்குக் குறை இல்லாமல் போனது.

6.
ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்கும் சுக்கிரன் அவருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் ஏழாம் வீட்டதிபதி சனி 12ல் (விரையத்தில்) அமர்ந்ததால், திருமணங்கள் நிலைக்கவில்லை. ரத்தில் முடிந்தன.

7.
22 வயதில் (சரியான நேரத்தில்) ஆரம்பித்த சுக்கிர திசை, ஜாதகிக்கு எல்லா நன்மைகளையும் வாரி வழங்கியது. சுக்கிரன் 4 and 11ஆம் வீடுகளுக்கு அதிபதி, அத்துடன் அவர் லக்கினத்தில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள்!

8.
ஜாதகிக்கு, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்பதாம் வீட்டால் கிடைத்த யோகங்கள்தான் மிகவும் சிறப்பானவை. ஆகவே மற்ற யோகங்களைப் பட்டியலிடவில்லை!

 9.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பது மிகவும் நன்மையானதாகும். ஜாதகியின் கனவையெல்லாம் நனவாக்கிக் கொடுத்தான் அவன்!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த ஜாதகியின் பிறப்பு விவரங்களைக் கொடுத்து வகுப்பறையில் பதிவிடச் சொன்னவர். திருவாளர் kaven alias Gowri Shankar, Mumbai. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆணித்தரமாக சரியான சொற்பிரயோகத்துடன் பதிலை ஒரு சிலரே எழுதியுள்ளனர். இருந்தாலும் சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

1.Dallas Kannan
2.AK.Anandh
3.M.Srinivasa Rajulu
4.Kaven
5.Dinesh
6.Thiru Mahesh
7.S.Bagavathi
8.Murali
9.Janani Murugesan
10.Palani Shanmugam
11.Chandrasekaran
----------------------
4ற்கு மூன்றை மட்டும் சரியாக எழுதியவர்கள்:
1.G.Murali Krishna
2.Kmr.Krishnan
3.Redfort
4.Kohilam
5.Swaravani
6.Susila Kandaswamy
7.Ravichandran
8.Dhanalakshmi
9.Pathi Raghu
10.AMG
11.Chandrasekaran Suryanarayanan
---------------------------

பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

”2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்” என்று எழுதிய ஒருவர், அடுத்த பத்தியில் "குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்." என்று எழுதியுள்ளார்.

இப்படி இரண்டு நிலைப்பாடுகளை எழுதாமல், ஆணித்தரமாக ஒன்றை மட்டுமே எழுத வேண்டும். எழுதினால்தான் நல்லது. கணிப்பும் சரியாக இருக்கும்!

ஜாதகியின் அழகைப் பற்றி சிலர் எழுதவில்லை. விவாகம் ரத்தானதைப் பற்றி சிலர் எழுதவில்லை. அதை எல்லாம் எழுதினால்தானே கணிப்பு முழுமை பெறும்!

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.13

Astrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.17:  உங்கள் பதிலை எழுதுங்கள்!

தொடர் - பகுதி பதினேழு!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும்
எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15.10.13

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினாறு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்
சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம்.

தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 2 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் ஒரு அரசியல்வாதி.  பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++======

10.10.13

Astrology: Answer to quiz 15

 
Astrology: Answer to quiz 15

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா?
அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

சரியான பதில்கள்:

1.ஜாதகி திருமணமானவர்.
2.நல்ல கணவர் மற்றும் குடும்ப வாழ்க்கை உள்ளது.
3.ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அது ஒன்றுதான் பிரச்சனை!
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்


1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார். ஏழாம் வீட்டைப் பார்க்கும் அவரும்,  குருவோடு கைகோர்த்த சுக்கிரனும் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஏழாம் வீட்டுக்கார்ன் சனி 12ல் அமர்ந்ததால் சற்றுத் தாமதமான திருமணம். அவ்வளவுதான்.
2
குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது.  அத்துடன் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தின் மேல் இருக்கிறது. ஆகவே நல்ல குடும்பவாழ்க்கை அமைந்தது.
3
குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1.குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2.அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்.
3.குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்து விட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4. மேலும் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)5. இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் ஜாதகிக்குக் கைகொடுக்க  இயலாமல் போய்விட்டது!
--------------------------------------------------------------------
குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டு
இருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும்
மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அதுவும் வரம்தான்!
----------------------------------------------------------------
இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

சரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:
1.  திரு.சத்தியநாராயணன்.
2. திருமதி.கோகிலம்.
3. திரு.ஜி. முரளிகிருஷ்ணா.
4. திரு.உதயகணேஷ்.
5. திருமதி ஜனனி முருகேசன்.
6. திரு.சி.ஜீவானந்தம்.
7. திரு. A.K ஆனந்த்.
8. திரு.AMG.
9. திருமதி. தனலெட்சுமி.
10. SRi.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.10.13

Astrology:Write your answer to the queries - Quiz 15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

 

Astrology: write your answer to the queries: Quiz No.15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

தொடர் - பகுதி பதினைந்து

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!




கேள்விகள்

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா? அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.10.13

Astrology: Quiz.14 Find out the native of the horoscope

 
Astrology: Quiz.14 Find out the native of the horoscope.

புதிர் தொடர் - பகுதி பதினான்கு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்குகொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்

சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின்பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் இந்தியர். பிரபலமானவர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ஒன்றுதான்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.10.13

Astrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்!!

 
Astrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்!!

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

கேள்விகள்

ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.


கேள்விகள்:

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. ஆகிவிட்டதென்றால், அது இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
3. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?
---------------------------------------
சரியான விடை கீழே உள்ளது!

9.3.1973ல் பிறந்தவர் இந்த ஜாதகி. திருமணமானவர். காதல் திருமணம். பிறகு அது பிணக்கத்தில் முடிந்து இறுதியில் விவாகம் ரத்தாகிவிட்டது. (Love marriage which ended in separation and then in divorce)

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
2. ஆறாம் அதிபதி (number one villain in a horoscope) ஏழில் உட்கார்ந்திருக்கிறார். உடன் ராகுவின் கூட்டணி வேறு!
3. அயன, சயன, போகபாக்கியஸ்தானத்தில் சனி. அத்துடன் அவர் எட்டாம் அதிபதி. சயனம் என்றால் நித்திரை. போக பாக்கியம் என்றால் படுக்கை சுகம். பெண் ஆணுக்குப் படுக்கையில் தரும் சுகம். ஆனால் பெண்ணிற்குப் படுக்கையில் கிடைக்கும் சுகம்
4. திருமணம்  ஆறாம் அதிபதியின் திசையில் நடந்தது. திருமணம் ஊற்றிக்கொண்டதுடன், விவாகம் ரத்தானது வரை அனைத்தும் அதே செவ்வாய் திசையில்தான்.

அம்மணி பரணி நட்சத்திரம். பரணி தரணி ஆளும் என்பார்கள். தரணி ஆண்டார். ஆனால் திருமண வாழ்க்கை அவுட்டாகிவிட்டது. இரண்டாம் அதிபதி  அதாவது குடும்ப வாழ்க்கை அதிபதி  அந்த வீட்டிற்குப் பத்தில் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக விநோதங்களில் இதுவும் ஒன்று!

ஒரு கிரகம் நீசமானால் பிரச்சினைதான். அதுபோல ஆறாம் வீட்டுக்காரன் எங்கே வந்து உட்கார்ந்தாலும், அந்த வீட்டில் (House) பிரச்சினைதான்.

இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம். அத்துடன் ஏழாம் அதிபதி குருவும் நீசம். காலசர்ப்ப தோஷத்தில் கேது கொடிபிடிக்கும் ஜாதகம். அதனால் கால சர்ப்ப தோஷம் முடிந்தாலும், பிரச்சினைகள் துரத்தும்படியான அமைப்பு. என்ன செய்வது? எல்லாம் கிரகக்கோளாறு.

ஐந்தாம் வீட்டுக்காரன் சுக்கிரன் 9ல். அத்துடன் அந்த வீட்டுக்காரன் சனியின் பார்வையுடன். அதனால் அம்மணி காதல் வயப்பட்டு, தன்னிச்சையாகக் காதல் திருமணம் செய்துகொண்டார். பாரசாரர் சொல்லியுள்ள விவாகரத்திற்கான அமைப்புக்கள் எல்லாம் இந்த அம்மணியின் ஜாதகத்தில் உள்ளது. ஆகவே விவாகம் ரத்தில் முடிந்தது. அதாவது டைவோர்ஸில் முடிந்தது.

காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண் பொருத்தம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும் ஜோதிடர், திருமணம் நடக்கும் காலத்தைத்தான் சொல்லியிருப்பார். பிரச்சினை என்று சொன்ன பிறகுதான் மற்றவற்றை அலசி, அது நீடிக்கும் வாய்ப்பில்லை, ஊற்றிக் கொண்டுவிடும் என்று சொல்லியிருப்பார். இரண்டையும் முதலியே சொல்லியிருந்தால், அந்தப் பெண் அவனை மணந்து கொண்டு அவதிப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா?

அவதிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கும்போது யாரைப்போய் சாலஞ்ச் செய்ய முடியும்? விதியையா? விதியைச் சாலஞ் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது.  விதி அடித்துப் படுக்க வைத்துவிடும். எழுந்திருக்கவே முடியாது.

“ஊழிற் பெருவலி யாவுள” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதையும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் சொன்ன, Nothing is stronger than Destiny என்பதையும், மறக்காமல் எப்போதும் நினைவில் வையுங்கள்.
-------------------------------------------------------------------------
காதல் திருமணம். ஆனால் பிரச்சினைகள் நிறைந்தது என்று பலரும் எழுதியுள்ளார்கள் மூன்று கேள்விகளுக்கும் சரியான விடையை நெருங்கி வந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் ரத்தில் முடிந்திருக்கும் என்பதை ஐவர்  மட்டுமே எழுதியுள்ளார்கள். பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

பெரும்பாலானவர்கள் ஒரு கேள்விக்கும் சிலர் 2 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!
-------------------------------------------------------------- 
 இடைச்சேர்க்கை:

//////Tuesday, October 01, 2013 2:36:00 pm
Blogger kmr.krishnan said...
    கேள்வி அமையும் முறையே ஓரளவு யூகத்தைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.இரண்டாவது கேள்வி முதல் கேள்விக்கான பதிலாக இருக்குமோ என்று     யூகிக்க வேண்டியுள்ளது.அதுபோலவே மூன்றாவதுவது கேள்விக்கான பதில்     இரண்டாவதில் பொதிந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
    ஜாதகத்தைக் கொடுத்து விட்டு திருமணம் பற்றி எழுதுக என்று கேட்டாலே போதும் என்று நினைக்கிறேன்.கிட்டத்தட்ட சரியான பதில் கொடுப்பவர் களைத் தேர்ந்து எடுக்கலாம்./////

தங்களின் யோசனைக்கு நன்றி. அடுத்து வரும் புதிர்களில் அப்படியே செய்கிறேன். நன்றி!


அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++ 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.10.13

Astrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள்விகளுடன்

 

 Astrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பதிமூன்று

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!



கேள்விகள்

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. ஆகிவிட்டதென்றால், அது இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
3. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=====