மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 411 - 420. Show all posts
Showing posts with label Lessons 411 - 420. Show all posts

2.2.11

Astrology அமிர்தயோகம் என்றால் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  அமிர்தயோகம் என்றால் என்ன?

அமிர்தம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். புராண காலங்களில், சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவை அமிர்தம் என்பார்கள். Food of the celestral beings (Devas).

நமக்கு அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. என்னைப்போன்ற, தஞ்சாவூர்ப் பெரிசுகளைப் போன்றவர்களுக்கு, புளிக்காத நல்ல மோர்தான் அமிர்தம். வெய்யில் காலங்களில், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஒரு செம்பு அளவு கொடுத்தாலும் குடித்துவிட்டு, அமிர்தமாக இருக்கிறது என்போம். எங்கள் எல்கை அவ்வளவுதான்.

உங்களைப் போன்ற இளசுகளுக்குச் சொன்னால், ஜில்லென்ற Haywards 5000 Beer அல்லது Kingfisher Beerஐச் சொல்லலாம். அடித்துவிட்டு, ‘மச்சி, அமிர்தமா இருக்குடா’ என்பீர்கள்.

அமிர்தம் என்றால் இனிமை என்றும் பொருள்படும். deliciousness, sweetness

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து அமிர்தயோகம் என்றால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா? இனிமையான நாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று அமிர்தயோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்
புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழக்கிழமை: சுவாதி, மூலம்
வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நேற்றையப் பாடத்தில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

1.2.11

Astrology மரணயோகம் என்றால் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். வெள்ளைக்காரன் மொழியில் சொன்னால் Death

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து மரணயோகம் என்றால் என்ன?

மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?

ஜோதிடத்தில் அது உண்டு.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும்.

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

என்ன புரிந்ததா?

நாளை இதுபோன்று வேறு ஒரு யோகத்தைப் பார்ப்போம்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!

31.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

இதன் முதற்பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். முதற்பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது: URL link for the part one

"நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும்
நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான
ஜோதிடம் இருக்கிறதா? இல்லை! ஆனால் வேறு ஒன்று இருக்கிறது."
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அச்யுதா பிசாரதி என்ற மகான் கேரளாவில் தோன்றி, சுமார் எழுபதாண்டுகாலம் வாழ்ந்து, வடமொழிக்கும், வானவியலுக்கும், ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் பல பாடங்களை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும்விதமாகக் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். அத்துடன் எண்ணற்ற சீடர்களையும் உருவாகினார் அவருடைய காலம் (1,550 முதல் 1,621 வரை) அவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்திற்கு சென்று பாருங்கள். அவர் எழுதிய நூல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே சொல்லவந்த விஷயம், அவருடைய மாணவர்களில் ஒருவரும், நாராயணீயம்’ என்னும் குருவாயூரப்பன் மேல் எழுதப்பெற்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவருமான மகான் நாராயண பட்டத்ரியைப் பற்றியதாகும்.

என்ன செய்தார் நாராயண பட்டத்ரி?

வயதான காலத்தில் வாதநோயால் அவதியுற்ற தன் குருவின் அவதியைக் காணச் சகிக்காமல், அதைத் தான் வாங்கிக்கொண்டு, குருவிற்கு நிவாரணம் அளித்தாராம். Bhattathiri's Guru, Achyuta Pisharati, was struck with paralysis. Unable to see his pain, by yogic strength and by way of Gurdakshina, Bhattathri is said to have taken the disease upon himself and relieved his guru.

சாத்தியமா அது?

அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது?

அது மட்டுமல்ல, மாற்றப் பட்டதால் தனக்கு வந்த வாத நோயையும் 100 நாட்களில் விரட்டி அடித்திருக்கிறார்.

உண்மையா?

கட்டுக்கதையல்ல! நடந்ததுதான் அது. வரலாறு அது. அதற்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள அதைப் படியுங்கள்

கேரளாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த வரலாறு தெரியும்.

அதுபோல நமக்கும் ஒரு கதை தெரியும். தொழுநோயால் அவதிப்பட்டு,
கபால மோட்சம் பெற திருவண்ணாமலை கோபுரத்தின் மீதிருந்து தலை
கீழாகக் குதித்த அருணகிரியாரை முருகப்பெருமான் ஆட்கொண்டு, ஷண நொடியில் அருணகிரிநாதரின் நோயைப் போக்கியதுடன், தமிழுக்கும், இறைப்பணிக்கும் அவரை ஆட்படுத்திய கதை நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.


அதுபோல குமரகுருபரர், காசி சுல்தானை, சிங்கத்தின் மீது சென்று சந்தித்த கதையும், சுல்தானின் பாராசீக மொழியில் பேசிய கதையும், வாரணாசியில் இடம் கேட்டு வாங்கிய கதையும் நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதெல்லாம் மகான்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. நமக்கு சாத்தியப்படுமா? நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆசாபாசங்களில் இறைவனையே மறந்து விடக்கூடியவர்கள். நமக்கு எப்படி சாத்தியப்படும்?
 
“இவனுக்கென்று எதைக் கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்”
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)"

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வர்ணனை செய்தபடி உள்ள ஜென்மங்கள்தான் நாம்!

ஆனால் இறைவன் பேதம் இல்லாதவர். மகான், மனிதன் என்ற பேதம் இல்லாதவர் அவர். இருந்தால் அவர் எப்படி இறைவன் ஆக முடியும்?

ஆகவே பேதம் இல்லாதவர் அவர். தன்னைச் சரணடையும் எவருக்கும் முன் நின்று உதவுபவர் அவர்.

ஆகவே ஜாதகக் கோளாறால் எற்படும் எல்லாத் துன்பங்களுக்கும், இறைவனைச் சரணடையுங்கள். அவர் உங்கள் துன்பங்களைப் போக்குவார். துன்பங்களைத் தாங்கும் வலிமையைத் தருவார் 

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்


கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட வேறு வழி அதுதான்!

எனக்கு அந்த அனுபவம் உண்டு. பழநி அப்பனால் ஏற்பட்ட அனுபவம் அது. பின்னொரு நாளில் அது பற்றி விவரமாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

25.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

கடவுளால் உண்டாக்கப்பெற்ற மனித உடம்பிற்கு, ஒரு காலத்தில் ஒரு மருத்துவர்தான் இருந்தார். ஒரு  நூற்றாண்டுகால வளர்ச்சியில் இன்று எண்ணற்ற மருத்துவர்கள் உள்ளார்கள்.

சுவாமிஜி தயானந்த சரஸ்வதி அவர்கள், அதைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:

“கடவுளால் படைக்கபெற்ற இந்த உடம்பிற்கு, அறுபதிற்கும் மேற்பட்ட விதம் விதமான மருத்துவர்கள்  உள்ளார்கள். யமன் வந்தால் உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால், உயிருடன் பணமும் சேர்ந்து போகும்.”

(“For a body manifested by God, we are having more than sixty different doctors.We are having a society of  doctors. If yama comes, only the prana will go; If a doctor comes, the prana and money will go!")

ஆனால் இன்று மருத்துவர்களின் பணி அளவிட முடியாத சிறப்புக்களுடன் இருக்கிறது.

சராசரி வயது ஐம்பதாக இருந்ததை இன்று எண்பதாக உயர்த்தியிருக்கிறார்கள்.

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, இதயக்குழாய்களின் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை எல்லாம் இன்று  சாத்தியப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கும் ஒருவனை அள்ளிக்கொண்டு வந்து போட்டால், அவனை உயிர் பிழைக்க வைத்து, மீண்டும்  நடமாட வைக்கும் வித்தை எல்லாம் இன்று வசப்பட்டு உள்ளது.

மருத்துவத்தில் இன்று எத்தனை பிரிவுகள் உள்ளன - எத்தனை விதமான மருத்துவர்கள் உள்ளார்கள் என்பதை  உங்களின் பார்வைக்காகக் கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.

பாமரனுக்கு அதெல்லாம் தெரியாது. அவனைப் பொறுத்தவரை இரண்டுவிதப் பிரிவுகள்தான். மருந்து கொடுக்கும் மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுனர் என்று இரண்டு பிரிவிற்குள் அது அடங்கிவிடும்.

1. Physician

A physician—also known as MD, DO, MDCM, BMed, MBBS, medical doctor, or simply doctor—practices the  ancient profession of medicine, which is concerned with maintaining or restoring human health through the study,  diagnosis, and treatment of disease or injury. This properly requires both a detailed knowledge of the academic  disciplines (such as anatomy and physiology) underlying diseases and their treatment—the science of medicine— and also a decent competence in its applied practice—the art or craft of medicine.

2. Surgeon

A surgeon is a specialist in surgery. Surgery is a broad category of invasive medical treatment that involves the cutting of a body, whether human or animal, for a specific reason such as the removal of diseased tissue or to repair a tear or breakage. Surgeons may be physicians, dentists, podiatrists or veterinarians.

இதுபோல, ஜோதிடத்திலும், இரண்டு பிரிவுகள் இருக்கிறதா?

இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும் நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது  நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான ஜோதிடம் இருக்கிறதா?

இல்லை! 

ஆனால் வேறு ஒன்று இருக்கிறது. 

அது என்ன?

கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன்  நிறைவு செய்கிறேன்.

அதை அடுத்த வகுப்பில் பார்ப்போம்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 28.1.2011 வெள்ளிக்கிழமையன்று!

(தொடரும்)

+++++++++++++++++++++++++++++++++++
மருத்துவத்தில் உள்ள துறைகள்
Accident & Trauma Centre                 
Anaesthesiology                          
Bariatric Surgery                          
Biochemistry
Cardiac Surgery                         
Clinical Pathology                          
Critical Care                          
Dental Surgery                           
Dermatology                           
Dietetics & Nutrition         
Emergency Medicine         
Endocrinology                
ENT                     
Gastroenterology               
Geriatrics                
Gynaecology & Obstetrics           
Histopathology
Interventional Cardiology
Interventional Radiology               
Joint Surgery               
Microbiology               
Minimally Invasive Surgery
Nephrology
Opthalmology
Orthopaedics
Paras Neurosciences Centre
Physiotherapy and Rehabilitation
Plastic Surgery and Cosmetic Surgery
Preventive Health Checkups
Psychiatry & Psychology
Radiology
Respiratory Medicine
Rheumatology
Skin & Cosmetic Clinic
Spinal Surgery
Urology
+++++++++++++
மருத்துவர்களில் உள்ள பிரிவுகள்:
    * Clitoridectomy
    * Surgery
    * Thyroidectomy
    * Mammaplasty
    * Percutaneous
    * Discectomy
    * Internal bleeding
    * Cordotomy
    * Fasciotomy
    * Septoplasty
    * Surgical mask
    * Vulvectomy
    * Thymectomy
    * Endocrine surgery
    * Macewen's operation
    * Curettage
    * Hemipelvectomy
    * Abdominoperineal resection
    * Surgeon's assistant
    * Mentoplasty
    * Genioplasty
    * Chondroplasty
    * Rastelli procedure
    * Decortication
    * Salpingectomy
    * Lumpectomy
    * Reconstructive surgery
    * Revascularization
    * Smith's fracture
    * Foraminotomy
    * Portal:Medicine/Selected picture
    * Pancreatectomy
    * Cystectomy
    * Gastrointestinal perforation
    * Corpus callosotomy
    * Reduction (orthopedic surgery)
    * Portal:Medicine/Selected picture archive
    * Arteriovenous fistula
    * Pneumonectomy
    * Arteriotomy
    * Spinal cord untethering
    * Esophagectomy
    * Avulsion fracture
    * Craniotome (tool)
    * Commissurotomy
    * Bronchotomy
    * Maxillomandibular advancement
    * Genioglossus advancement
    * Hybrid coronary revascularization
    * Umbilicoplasty
    * Glanuloplasty
    * Radical mastectomy
    * Radical perineal prostatectomy
    * Balloon septostomy
    * Vaginectomy
    * Hand surgery
    * Polyaxial screw
    * Adrenalectomy
    * Cheiloplasty
    * Pulmonary-to-systemic shunt
    * Baffle (medical)
    * Vicryl
    * Laser surgery
    * Pulmonary thrombectomy
    * Salpingoophorectomy
    * Urethrotomy
    * Upper gastrointestinal surgery
    * Lower gastrointestinal surgery
    * Liver resection
    * Ganglionectomy
    * Incisional hernia
    * Stomatoplasty
    * Instruments used in general surgery
    * Laparoscopic anterior hernia repair
    * Endovascular surgery
    * Gynecological surgery
    * Epicanthoplasty
    * Postoperative fever
    * Brunelli procedure
    * Ileojejunal bypass
    * Catagmatic
    * Rashkind balloon atrial septostomy
    * Caustic pencil
    * Wikipedia:WikiProject Medicine/Stub sorting
    * Batista procedure
    * Patient safety
    * Anterior temporal lobectomy
    * Template:Surgery-stub
    * Bone cutter
    * Brain biopsy
    * Hartmann's operation
    * Bowel resection
    * Hypophysectomy
    * Proctocolectomy
    * Venous cutdown
    * Wikipedia:WikiProject Dentistry/Stub sorting
    * Epikeratophakia
    * Senn retractor
    * Total mesorectal excision
    * Bulldogs forceps

There are many hospital departments, staffed by a wide variety of healthcare professionals, with some crossover  between departments.

For example, physiotherapists often work in different departments and doctors often do the same, working on a general medical ward as well as an intensive or coronary care unit.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

18.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

இதன் முதற்பகுதியை படித்திராதவர்கள் அதைப் படைத்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அப்படிச் சென்று கொண்டிருந்தவனை, அரவம் ஒன்று தீண்டி விட்டது என்று சொன்னேனில்லையா?

தன்னைத் தீண்டிய அரவம் வளைந்து. நெளிந்து, விரைவாகச் சென்று ஒரு புதருக்குள் மறைவதைக் கண்கூடாகப் பார்த்தவன், தன் துணிச்சலைக் கைவிடாமல், பையில் இருந்த சிறு கத்தியால், காலில் அரவம் தீண்டிய இடத்தைக் கிழித்து விட்டு விஷம் பரவாமல் தடுத்து அதை வெளியேற்றினான். பிறகு தனது வேஷ்டியைக் கிழித்து, காலின் மேல் பகுதியில் இறுக்கிக் கட்டினான்.

சற்று தூரத்தில் கண்ணில் பட்ட  மூலிகைச் செடியின் இலைகளைப் பறித்து மென்று விழுங்கினான். அவன் அந்தக் காட்டுப் பகுதிக்குப் பழகியவன் என்பதாலும், மூலிகைகளைப் பற்றித் தெரிந்ததாலும், அது சாத்தியமாயிற்று.

போட்டுவிட்டுப் போனது சாதாரணப் பாம்பு போலிருக்கிறது. அதுவே சாரையாக இருந்திருந்திருந்தால், இந்நேரம்  சர்வேஸ்வரனிடம் போய்ச் சேர்ந்திருப்பான்.

தாகமாக இருந்தது.

சுற்று முற்றும் பார்த்தான். பக்கத்தில் நீர் நிலைகள் ஒன்றும் இல்லை.

சட்டென்று மின்னலென அவன் மனதில் கேள்வி ஒன்று எழுந்து நின்றது. இறையனார் தன்னுடன் எப்போதும் துணையாக வருவேனென்று வாக்குறுதியளித்தாரே! அவர் உடன் வந்துமா - நம்மை அரவம் தீண்டியது?

உடனே மனதிற்குள் கடுமையாகப் பிரார்த்தனை செய்துவிட்டு, தான் வந்த வழியைத் திரும்பிப்பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக ஒரு ஜோடி பாதச் சுவடுகள் மட்டுமே தெரிந்தன.

மனதிற்குள் பொருமினான். “நாம் நினைத்தது சரியாகிப்போய் விட்டது. இறைவன் வாக்களித்தபடி நம்முடன் வரவில்லை” என்று நினைத்தவன், சென்று கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு, திருக்கோவிலை நோக்கி ஓடினான்.

பதிகத்தைப்பாடிவிட்டு, தரையில் புரண்டு அழுதான்.

இறையனார் காட்சி கொடுத்தார்.

“அய்யனே, வாக்களித்தபடி ஏன் நீங்கள் என்கூட வரவில்லை?”

“யார் சொன்னது அப்பனே? எதைவைத்துச் சொல்கிறாய் நீ?” என்று இறையனார் பதிலுரைக்க, மடக்கும் விதமாகச் சொன்னான்:

”ஒரு ஜோடி பாதச்சுவடு மட்டும்தானே உள்ளது”

“அது என்னுடைய அடிச்சுவடுகள்”

“அப்படியென்றால், என்னுடைய சுவடுகள்?”

”நீ நன்றாக இருக்கும்போது உன்னுடன் நடந்து வந்தேன். மிகவும் சிரம திசையில் இருக்கும்போது உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். உன்னை அரவம் தீண்டியது உன் வினைப்பயன். விஷம் ஏறாமல் செய்தது நான்தான். அத்துடன் உனக்கு அருகிலேயே பச்சிலை காட்சி கொடுக்கும்படி செய்ததும் நான்தான்!”

அவன் வெட்கித் தலை குனிந்ததுடன், தன்னை மன்னித்தருளும்படி அவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுதான் நம்பிக்கை என்பது.

நீ எதைத் தொடர்ந்து நினைக்கிறாயோ, அதுவாக மாறிவிடுவாய் என்பது வேத வாக்கு!

ஆகவே தொடர்ந்து மனம் தளராமல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் நமக்குத் துணையாக வருவார்.

நான் என்பர்களிடம் அடிக்கடி சொல்வேன்:

"when God is with you, who can be against you?"

கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் மன வேதனைகள் என்பதெல்லாம் கர்ம வினைப் பயன்கள். அதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது போகாது. ஆனால் உங்களுடன் இருக்கும் இறையனார், உங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைத் தருவார். He will give you standing power. He will give you withstanding power.

அதுதான் அதி முக்கியமானது.
---------------------------------------------------
என் நண்பர் ஒருவருக்கு, மூன்று மாதங்களாக கோச்சாரம் நன்றாக இல்லை. சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மனிதர் பாடுபட்டு அவைகளைச் சமாளித்தார். இப்போது தசா புத்தியும் நன்றாக இல்லை. அதாவது புதன் திசையில் கேது புத்தி துவங்கியுள்ளது. அது சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்கும். அதுவும் சேர்ந்து அவரை படுத்தத் துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் இரண்டு எதிரிகளைச் சமாளித்தாக வேண்டும்.

எல்லாம் ஒரு ஆண்டு காலத்திற்குத்தான். அதற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். நல்ல காலம்.

ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஒரு குகைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டாக இருக்கிறது. அதுவும் இரவு நேரம். என்ன செய்ய முடியும் உங்களால்? வெளிச்சம் வரட்டும் என்று உட்கார்ந்திருக்க முடியுமா? வருவது வரட்டும் என்று தட்டுத்தடுமாறியாவது நடக்க வேண்டியதுதான். இறைவன் இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தால் உங்களால், எந்த பாதிப்பும் இன்றி நடக்க முடியும்

அதை நினைவில் வையுங்கள்
--------------------------------------------------
சரி ஜோதிடத்திற்கு வருவோம்.

பழைய பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படியுங்கள்

புதன் திசை கேது புத்திக்கான பாடல்:

“வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
    வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் இருபத்தியேழு
    கொடுமையுள்ள அதன்பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உத்தார் நாசம்
    மனமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
    தினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே!”


பாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

அது யார்?

அது நான்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++++
கேது என்றாலே அப்படித்தானா?

இல்லை. கேது மகா திசையில், சில கிரகங்களின் புத்திகள் உள்ளே நுழைந்து, கேதுவை உட்காரவைத்துவிட்டு, நன்மைகள் செய்யத் துவங்கிவிடும்.

உதரணத்திற்கு இன்னும் ஒரு பழைய பாடலைக் கொடுத்துள்ளேன்.

கேது திசை புதன் புத்திக்கான பாடல்:

“பாரப்பா கேது திசை புதனார் புத்தி
    பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்திதேழு
    சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்
    மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்து கொள்வாள்
    தீங்கில்லா மனக்கவலை இல்லை காணே!”

இதுவும் ஒரு ஆண்டுகாலம்தான். புதன் திசையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இது பரிகாரம். அதாவது நஷ்ட ஈடு. அந்த நஷ்டம் இங்கே சரிசெய்யப்படும்.

அதானால்தான் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலா பலன்கள்.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.
ஒன்று நடக்காவிட்டால் இன்னொன்று நடக்கும்
ஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்று கிடைக்கும்.

உங்களுக்குப் புரியும்படி சொன்னால், நம் அனைவருக்கும் அந்த மாஜிக் எண்தான் மதிப்பெண்,

அதாவது 337
++++++++++++++++++++++++++++
நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?

“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”


என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல், அதே பாடலில் சரணத்தில் வரும் இந்த வரிகளைப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்:

“நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்!”


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
தைப்பூசத்தை முன்னிட்டு வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம் 21.1.2011 வெள்ளியன்று. வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்




வாழ்க வளமுடன்!

17.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் 
தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

11.1.11

Astrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்!

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும் 
------------------------------------------------------------------------------------------





வாழ்க வளமுடன்!

10.1.11

Astrology எனக்கு நல்ல காலம் எப்போது வரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Astrology   எனக்கு நல்ல காலம் எப்போது வரும்?

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

வாழ்க வளமுடன்!

4.1.11

கோள்களைப் பிழிவது எப்படி? பகுதி இரண்டு!

படங்களின்/பாடங்களின் மீது கர்சரை வைத்து 
Double Click  செய்யுங்கள். எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்
 -------------------------------------------------------------------------------------------

                                                                         
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

3.1.11

கோள்களைப் பிழிவது எப்படி?

படங்களின்/பாடங்களின் மீது கர்சரை வைத்து 
Double Click  செய்யுங்கள். எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்


Page 2

------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!