மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 181 - 190. Show all posts
Showing posts with label Lessons 181 - 190. Show all posts

31.3.09

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

பதிவர்களில் சிலர், "சார், பின்னிப் பெடல் எடுத்து விட்டீர்கள்!" என்று
எழுதுவார்கள். அது என்னவென்பது இன்றுவரை எனக்கு முழுமையாகத்
தெரியவில்லை.

ஏனென்றால் அதை பாராட்டுவதற்கும் உபயோகிக்கிறார்கள். அதேபோல
ஒரு விஷயத்தைக் குடைவதற்கும் உபயோகிக்கிறார்கள்

அதைப் பற்றித் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

ஜோதிடரை ஒருவன் எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

கீழே எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்
----------------------------------------------------------------------------------------------

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், ஒரு ஜோதிடர் செய்ய வேண்டிய
சில முக்கியவேலைகளைக் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.

1. ஜாதகம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஜாதகனின் பிறந்த நாள்
நேரத்துடன் கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக அமைப்புக்கள் சரியாக
உள்ளதா என்றும் பிறப்பு திசையின் இருப்பும் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா
என்று சோதித்துப் பார்க்க ('Check Up' செய்ய) வேண்டும்.

தன்னிடம் உள்ள பஞ்சாங்கங்களை வைத்து அதைப் பார்ப்பார். இப்போது
அதற்கு வேலை இல்லை. கணினி ஜாதகம் என்றால் துல்லியமாக இருக்கும்

2. லக்கின பாவம், பூர்வ புண்ணிய பாவம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம்
ஆகியவைகள் (That is the first house, fifth house, ninth house and eleventh
house) நன்றாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். They are the primary
houses for the prosperity of the native of the horoscope

3. ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன. எத்தனை கிரகங்கள்
ஆட்சியில் உள்ளன. எத்தனை கிரகங்கள் நீசமாகி உள்ளன என்றும் அவைகள்
ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு சம்பந்தப்பட்டவை என்றும் குறித்துக் கொள்ள
வேண்டும்

4. அஷ்கவர்க்கம் தெரிந்த ஜோதிடராக இருந்தால், வீடுகளின் பரல்களையும்
கிரகங்களின் சுய வர்க்கப் பரல்களையும் குறித்துக் கொள்ள வேண்டும்

5. நடப்பு திசையையும், நடப்பு புத்தியையும் குறித்துக் கொள்ள வேண்டும்
(The detail of the present Dasa and present sub period in that dasa)

6. நடப்பு கோள்சாரம். இன்றைய கோள்சாரம் ஜாதகனின் சந்திர ராசியில்
இருந்து எந்தெந்த பாவங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்னும் விவரம்
அதாவது ஜாதகனுக்கு ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி நடக்கிறதா?
குரு 1 அல்லது 3 ல் இருந்து தொல்லை கொடுக்கிறாரா என்பது போன்ற
விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

7. ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்று குறித்துக் கொள்ள
வேண்டும்.

இதையெல்லாம் குறித்துக் கொண்ட பிறகுதான் அவர் ஜாதகனுடன் பேசவே
செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் பிரபல ஜோதிடர்கள் தங்கள் உடன்
இருக்கும் சிஷ்யனை வைத்து, அல்லது அதற்கென்று அமர்த்தியிருக்கும்
பணியாளரை வைத்து இதையெல்லாம் செய்து கொள்வார்கள்

இப்போது அப்படி யாரும் செய்வதாகத் தெரியவில்லை. அதுதான் சோகம்

யாருக்கும் நேரமில்லை. பார்ப்பவருக்கும் நேரமில்லை. பார்க்க வருபவனுக்கும்
நேரமில்லை. எல்லாம் அவசரகதி அல்லது ஓட்டம்!
------------------------------------------------------------------------------------------------------
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

அதுதான் ஆயுள் பாவம்!

ஆயுள் பாவத்தைப் பார்க்காமல், பலன் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு மாதத்தில் விபத்தில் இறக்க இருப்பவனுக்கு, ஆறு மாதங்களில் திருமணம்
நடக்கும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

ஜாதகத்தைக் கொண்டு வந்தவன் (அதாவது இறந்து போனவனின் நண்பன்)
இரண்டாவது மாதமே வந்து ஜோதிடரைச் செம்மி விட மாட்டானா?
அல்லது பின்னிப் பெடல் எடுத்து விடமாட்டானா?

அந்தக் காலத்தில் ஜோதிடர்கள், ஜாதகத்தைக் கொண்டு வந்தவனுடன் பேசும்
முன்பாக, இது யாருடைய ஜாதகம் என்று கொண்டு வந்தவனையே கேட்டுத்
தெரிந்து கொள்வார்கள். அவன் தன்னுடையது என்று சொன்னால், சில
விஷயங்களை, குறிப்பாக ஆயுள் பாவத்தைப் பற்றி அவனுடன் பேச
மாட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டுப் பாடத்தின் அடுத்த பகுதி

நான்காம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்

1. சூரியன்

நன்மையல்ல! ஜாதகன் மனக்கவலைகள் மிகுந்தவன். மகிழ்ச்சி இராது.
ஒரு இடத்தில் இருக்க மாட்டான். சிலர் தத்துவங்கள், சாஸ்திரங்களில்
ஈடுபட்டுத் தங்களை மறந்திருப்பார்கள்.

இந்த அமைப்புள்ளவன் அரசியலில் ஈடுபட்டல் வெற்றி பெற முடியாது.
இங்கே இருக்கும் சூரியன், சனி அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால்
ஜாதகன் பல இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.

Sun: mental anxiety, enmity with relatives and bad effects to mother
--------------------------------------------------------------
2. சந்திரன்.

ஜாதகனுக்கு சொந்த வீடு இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இருக்கும்.
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன்னிறைவுடன் இருப்பான்.
சிலர் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் சிறு
வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். அல்லது இழக்க நேரிடும்.

இங்கே இருக்கும் சந்திரனைச் சுக்கிரன் பார்த்தால், ஜாதகன் தன்னுடைய
மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்வான். எதையும் என்பதற்குப் பல
அர்த்தங்கள் உண்டு. புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைக் குரு பார்த்தால், ஜாதகன் மிகவும்
நேர்மையானவன். தன்னுடைய செயல்களால் பலரது பாராட்டையும்
பெறுவான்.
----------------------------------------------------------------
3. செவ்வாய்

இது மோசமான நிலை. விரும்பத்தக்கது அல்ல! ஜாதகனுக்கு அவனது
அன்னை, உற்வினர்கள், மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி இராது.

அரசியலுக்குச் சென்றால் வெற்றி பெறுவான். தாயாருடனும் மற்றும்
குடும்ப உறவினர்களுடனும் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட நேரிடும்.

ஜாதகனுக்கு வீடு வாசல் இருக்கும். ஆனால் அவற்றால் மகிழ்ச்சி
இருக்காது.

செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளும் எண்ணத்துடன் இருப்பார்கள்.

Mars - bad for mother but acquisition of property and vehicles
will be there.
-----------------------------------------------------------------
4. புதன்

ஜாதகன் சிறந்த கல்வியாளனாக இருப்பான். சிலருக்குக் கெளரவப் பதவிகள்
வந்து சேரும். பலராலும் போற்றப்படுவான். பாராட்டப்படுவான். நல்ல
சொத்துக்கள் வாகன வசதிகளை உடையவனாக இருப்பான். அல்லது அவைகள்
வந்து சேரும்.

சிலர் இசையில் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் இசையில்
ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும்
அதன் காரணமாக பல நாடுகளுக்கும் அல்லது பல இடங்களுக்கும் சென்றுவரும்
வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். வாழ்த்தெரிந்தவர்கள்

Mercury - Intelligent, clever in speech, good education
and acquisition of property.
-----------------------------------------------------------------------------
5. குரு

அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின்
நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்
ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள்
எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட
மாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும்.

மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள்

Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.
----------------------------------------------------------------------------------
6. சுக்கிரன்

யோகமான அமைப்பு. தாயின் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள்.
சொத்து, சுகங்கள் இருக்கும் அல்லது வந்து சேரும். நல்ல குணமுடையவர்கள்
ஏராளமான நண்பர்களை உடையவர்கள். சிலர் இசையில் நாட்டமுடையவர்
களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

இவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Venus - Good for mother, Wealth, property, acquisition of jewels, vehicles etc.
If in his own house or the house of exaltation he causes Maalavya yoga
which is one of the Pancha Maha purusha yogas in astrology.
-----------------------------------------------------------------------------------
7. சனி

இளம் வயதில் நோஞ்சானக அல்லது நோயுற்றவனாக இருப்பார்கள்.
இளம் வயதில், தாய் மற்றும் தாயன்பு இல்லாமல் போயிருக்கும்.
கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது.
இருந்தாலும் அது கையில் கிடைப்பதற்கு பல அவஸ்தைகளைச்
சந்திக்க நேரிடும்.

சிலர் சுற்றத்தாரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கை
தனிமைப் பட்டுப் போகும். மகிழ்ச்சி இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இல்லையென்றால் மேற்கூறியவைகள்
அனைத்தும் நடக்கும்

Saturn: Saturn in 4th other than his good houses is not good.
Will be interrupted or prolonged beyond reasonable age of completion.
Bad for mother also.
----------------------------------------------------------------------------------
8. ராகு

மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.
சிலரின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கும்.

மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் மோசடிகளைச் செய்து
விட்டு அதனால் மன நிம்மதியில்லாமல் இருப்பார்கள்

Rahu - bad on the whole except when Rahu is exalted
---------------------------------------------------------------------------------
9. கேது

தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை.
சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும்.

வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச்
சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும்,
பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.

பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல!

Ketu: good for education but Mother will suffer great anxiety on account
of one child
---------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டைப் பற்றிய பாடம் முற்றிற்று!

அடுத்த பாடம் மூன்றாம் வீட்டைப் பற்றியது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.3.09

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

என்ன கேள்வி இது? ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் வாங்கிவிடலாம்
கையில் தேவையான பணம் இருந்தால் போதும்.

ஆனால் ஒன்றை மட்டும் எந்தக் கொம்பனாலும், எத்தனை கோடி பணம்
இருந்தாலும் வாங்க முடியாது

அது என்ன?

அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அது அன்பே வடிவான தாய்!

தாயன்பைப் பற்றி தாயை இழந்து தவிக்கிறவர்களிடம் கேட்டால் தெரியும்.
தாயன்பைப்பற்றித் தாய் இருக்கிற பலபேர்கள் உணர்வதில்லை.

அதுதான் மனித சோகம்!

ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயதுவரை
தாய் முக்கியம். பெண் குழந்தையாக இருந்தால் அதி முக்கியம்.

அதனால்தான் முதல் கேந்திர வீடாக தாய் வீடு அமைந்துள்ளது.
தாய்க்குப் பிறகுதான் தாரம். அதனால்தான் கேந்திர வரிசையில் ஏழாம் வீடு
இரண்டாவதாக அமைந்துள்ளது.

குழந்தைப் பருவம் அவலமில்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்றால்
நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
ஒரு சினிமாக் கவிஞர் அதைப் பாட்டில் வைத்தார். அவரை மனமுவந்து
பாராட்டுகிறேன் இந்த இடத்தில் அந்தப் பாடலின் துவக்க வரிகளையும்
கொடுத்து மகிழ்கிறேன்

''ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா...
உன்னையும் என்னையும் படைச்சதிங்கே யாருடா
அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அந்த தாயடா...

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா..."
-----------------------------------------------------------------------------------------------
4th House (முன் பாடத் தொடர்ச்சி)
பொதுப் பலன்கள்.

1
நான்கில் குரு வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு சுபக் கிரகங்களுடன்
கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும்,
நண்பர்களும் மிகுந்திருப்பார்கள். ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
இருக்கும்.

2
நான்கில் தீய கிரகங்கள் வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு தீய
கிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல
உறவுகளும், நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஜாதகனின் வாழ்க்கை
பிரச்சினைகள் உரியதாக இருக்கும்.

3
நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து
லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்.

4
நான்காம் அதிபதி 6ம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுகளில்
சென்றமர்ந்தும், சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறாமலும் இருந்தால்
ஜாதகனின் தாயார் அவனுடைய சிறுவயது அல்லது இளம் வயதிலேயே
மரணமாகி விடுவாள்.

5
நான்காம் அதிபதி லக்கினத்திலும், நான்கில் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன்
செல்வந்தனாக இருப்பான். அல்லது செல்வந்தனாக உயர்வடைவான்.

6
நான்காம் அதிபதி பகை வீடுகளில் சென்றமர்ந்தும், நான்காம் வீட்டில்
சனி அல்லது செவ்வாய் வந்து அமர்ந்தும் இருந்தால், ஜாதகன் சொத்து
செல்வம் எதுவும் இல்லாமல் இருப்பான். இருந்தால் அனைத்தும் அவனை
வீட்டு நீங்கும் அல்லது தொலைந்து போகும்.

7
நான்காம் அதிபதி எட்டில் அமர்ந்தாலும் அல்லது நீசமடைந்திருந்தலும்
அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது அஸ்தமணமாகி
இருந்தாலும் ஜாதகனுக்கு வீடு வாசல் சொத்து சுகம் இருக்காது.
இருந்தாலும் விரைவில் அவனை விட்டு அவைகள் நீங்கிவிடும் அல்லது
தொலைந்து விடும் அல்லது கரைந்து விடும். எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக் கொள்ளுங்கள்.

8
நான்காம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும்
யோகம் உண்டு!

9
அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் அல்லது சுய
வர்க்கத்தில் அதிக பரல்களுடனும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு
நிகரான சொத்துக்களுடன் இருப்பான். சிலர் ஆட்சிபீடத்திலும்
அமர்வார்கள்.

10
நான்காம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியும் பர்வர்த்தனை
ஆகியிருந்தால் ஜாதகன், சிக்கலிருக்கும் தன் முன்னோர் சொத்துக்களை
மீட்கும் வேலையில் வெற்றி பெறுவான். அவைகள் உரிய காலத்தில்
அவனிடம் வந்து சேரும்.

11
நான்கில் இருக்கும் குரு பலமில்லாமல் இருந்தால், ஜாதகனுக்கு
சொத்து இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

12
நான்காம் அதிபதி நீசம் பெற்று சூரியனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனின்
சொத்துக்கள் அரச தண்டனையில் பறிபோகும். அல்லது நீதிமன்ற
வழக்குகளில் பறி போகும்.

13
நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம்
அதிபதியும் பகை வீட்டில் இருந்தால், ஜாதகன் தயக்கமில்லாமல் பல
பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான்.

14
அதே நிலை ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், ஜாதகி ஒழுக்கம்
தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள்.

15
நான்கில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால்
ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும்.

16
நான்காம் வீட்டைக் குரு பார்த்தால், ஜாதகன் நேர்மையானவனாக
இருப்பான்.

17
நான்காம் வீட்டை ராகு பார்த்தால் அல்லது நான்கில் இருந்தால்
ஜாதகன் கல்மிஷம் பிடித்த மனதுக்காரனாக இருப்பான்.

18
நான்காம் வீடு இதயத்திற்கான் வீடு. இந்தவீட்டில் ராகு அமர்வது
சுகக்கேடு. சிலருக்கு இதய நோய்ஏற்படும். The heart may be afflicted
if rahu is posited in the fourth. (As the Fourth House rules the heart).

19
If rahu is in the 4th house, the native will be devoid of happiness,
landed properties, relatives and conveyances and all relatives will become
enemies. This position of the Rahu is detrimental in getting affection
from mother.

20
நான்காம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தாலும் அல்லது
லக்கினாதிபதிக்கு எட்டில் இருந்தாலும், ஜாதகனுக்குத் தன் தாயுடன்
சுமூகமான, அன்பான உறவு இருக்காது.

21
நான்காம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் இசையில் பெரிய ஆளாக வருவான்.

22
நான்காம் வீட்டில் இருக்கும் குருவும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக விளங்குவான்.அத்துறையில்
புகழ் பெறுவான்.

23
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து நான்கில் இருந்தாலும் அல்லது
நான்காம் வீட்டைப் பார்த்தாலும், ஜாதகன் கணிதப் பாடத்தில் உயர்
கல்விவரை படிப்பான்.

24
நான்காம் அதிபதியும் புதனும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
பெரிய சிந்தனையாளனாக வருவான்

25
நான்காம் அதிபதியும் சூரியன் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
தலைவனாக வருவான் அல்லது தலைமைப் பதவிக்கு உயர்வான்.

26
நான்காம் அதிபதியும் செவ்வாயும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் படைத்தளபதி உயர்வான்.

27
நான்காம் அதிபதியும் குருவும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் நீதிபதியாக உயர்வான்

28
4th lord + சுக்கிரன் வலுவாக இருந்தால் ஜாதகன் = கவிஞன் தத்துவஞானி

29
4th lord + சனி வலுவாக இருந்தால் ஜாதகன் = statesman and leader

30
4th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat

31
4th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist, seer, prophet

32
நான்காம் அதிபதி, லக்கின அதிபதி, குரு, புதன் ஆகிய நான்கு
அம்சங்களும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் கல்வியையை நிர்ணயம்
செய்யும். இவற்றுள் லக்கின அதிபதி மிகவும் 'வீக'காக இருந்தால்
மற்ற மூன்றும் பலனற்றதாகிவிடும்

இவற்றையெல்லாம் அலசித்தான் ஒரு ஜோதிடர் பலனைச் சொல்ல வேண்டும்
இல்லையென்றால் அவர் சொல்லும் பலன் பலனற்றதாகிவிடும்

(அலசல் தொடரும்)


வாழ்க வளமுடன்!

25.3.09

எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?


எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?

அது என்ன வருமானத்தையும், ஊரையும் இணைத்துச்
சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளது சாமிகளா!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளியைவிட,
திருப்பூரில் இருக்கும் சாயத் தொழிலாளிக்கு இரண்டு மடங்கு
சம்பளம் கிடைக்கும்.

சேலத்தில் இருக்கும் கூலித் தொழிலாளியைவிட நாமக்கல்லில்
இருக்கும் கூலித் தொழிலாளியின் வருமானம் அதிகம்.
அதுபோல சிவகாசியில் இருக்கும் உழைப்பாளிகளுக்குத் தனி
மதிப்பு உண்டு

அதற்குக் காரணம், அங்கே உள்ள அசுரத் தொழில் வளர்ச்சியும்,
அதனால் உண்டாகும் பொருளாதார மாற்றங்களுமே காரணம்.

அந்த அசுரத் தொழில் வளர்ச்சிக்கு யார் காரணம்?

அரசா? இல்லை!

யார் காரணம் என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். தொடர்ந்து
படியுங்கள்
=======================================================
பாடம்: நான்காம் வீடு

நான்காம் வீடு முக்கியமான வீடுகளில் ஒன்று.

நான்காம் வீட்டைவைத்துத்தான் ஜாதகனின் தாய், கல்வி,
வாழ்க்கை வசதிகள் (Comforts in life) ஆகிய மூன்றையும்
சொல்வார்கள்

கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடுதான்.

ஒரு வேடிக்கை பாருங்கள். கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடு.
அறிவிற்கு (keen intelligence) உரிய வீடு ஐந்தாம் வீடு.

கல்வி, அறிவு இரண்டையும் ஒரே வீட்டில் இறைவன் வைக்கவில்லை.

வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அந்த வீடு கெட்டுப்போயிருந்தால் மனிதனுக்கு கல்வி, அறிவு இரண்டும்
இல்லாமல் போய்விடும். ஆகவே வைக்கவில்லை. அப்படி ஒரு சகாயம்!

அதனால்தான் படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு

ஜாதகத்தில் ஒன்று நன்றாக இல்லாவிட்டாலும் ஒன்று நன்றாக இருக்கும்!

கல்வி அடிபட்டிருந்தாலும், அறிவு தூக்கலாக இருக்கும். இல்லை
அறிவு அடிபட்டிருந்தால், கல்வியாவது நன்றாக இருக்கும்.

இரண்டு வீடுகளும் நன்றாக அல்லது சரியாக இருந்தால், படித்த
அறிவாளியாக இருப்பான்.

இன்று தமிழ் நாட்டிலேயே அதிக தொழில் முனைவோர்கள் நிறைந்த
இடங்கள் மூன்று

1.திருப்பூர்
2.நாமக்கல்
3.சிவகாசி

இந்த மூன்று ஊர் மக்களுமே நன்றாகத் தொழில் செய்கிறார்கள்.
உற்சாகமாக இருக்கிறார்கள். அதிகம் சம்பாத்தித்துக்
கொண்டிருக்கிறார்கள்

அவர்களில் பெரும்பான்மையோர் அதிகம் படிக்காதவர்கள். அதை மனதில்
வையுங்கள்.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று
அவர்கள் எதையும் கெடுப்பதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி (அவர்தான் முக்கியம். அவர்தான் அந்த வீட்டின்
நாயகன்) நன்றாக இருந்தால், அந்த வீட்டின் அம்சங்கள் அனைத்தும்
ஜாதகனுக்குக் கிடைக்கும்.

நன்றாக இருப்பது என்பது என்ன? சோப்புப் போட்டுக் குளித்து, படிய தலை
வாரி, ஜோவன் மஸ்க் சென்ட் அடித்துக் கொண்டு, வான் ஹுஸைய்ன் ஆயத்த
அடைகளை அனிந்து கொண்டு, அரவிந்தசாமி லுக்கில் இருப்பதா? இல்லை!

நாயகன், கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் இருப்பதும்,
ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதும், அதோடு சுயவர்க்கத்தில் நல்ல
பரல்களைப் பெற்று இருப்பதுமே ஆகும். அதோடு சுப கிரகங்களுடன்
கூடி இருத்தல் கூடுதலான விஷேசம். அதைவிடச் சிறப்பு பத்தாம் வீட்டில்
அமர்ந்து தனது வீட்டை நேரடியான பார்வையில் வைத்திருத்தல்.

இப்படிப் பலவற்றையும் அலசித்தான் ஒரு வீட்டின் பலனைப் பார்க்க வேண்டும்
---------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி நன்றாக இருந்தால் அம்மூன்றும் அசத்தாலாகக்
கிடைக்குமா?

கிடைக்கும். அவ்வளவுதான்.

அசத்தலாகக் கிடைப்பதற்கு மேலும் சில விதிமுறைகள் உள்ளன!

ஒரு வீட்டிற்கு மூன்று ஃபோர்ட்போலியோ எனும் போது. அது சம்பந்தப்பட்ட
கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

நிதி அமைச்சகம் பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கும். ஆனால் அதை
நல்ல முறையில் பயன் படுத்திச் செயல் படுத்துவது சம்பந்தப்பட்ட துறையின்
அமைச்சரைச் சார்ந்தது. அது போலத்தான் இதுவும்

தாய்க்கு உள்ள கிரகம் (authority for mother) சந்திரன்
கல்விக்கு உரிய கிரகம் (authority for education) புதன்
சுகங்களுக்கு உரிய கிரகம் (authority for comforts)சுக்கிரன்

நான்காம் வீட்டுக்காரன் ஒதுக்கும் நிதியை அல்லது வளமையை இவர்கள்
நின்று மேம்படுத்துவார்கள்.

ஆகவே ஜாதகத்தில் அவர்களும் நன்றாக இருக்க வேண்டும்.

அரவிந்தசாமி உதாரணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

என்ன தலை சுற்றுகிறதா?

அதற்குப் பெயர்தான் ஜோதிடம்!

தலையைச் சுற்ற விடாதீர்கள். ஒரு கையால் தலையை அழுத்திப் பிடித்துக்
கொண்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு வசப்படும். அவற்றை நீங்கள்
சுற்ற விடலாம்
-------------------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபன் ஜாதகத்தில் சென்று அமர்ந்த இடத்தை வைத்துப்
பொதுப் பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில் இருந்தால்

ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக
இருப்பான்.

மாடு கன்றுகள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தவன்
அப்படித்தான் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான்.
நீங்கள் அவற்றை மைனஸ் செய்து கொள்ளுங்கள்.
கிராமத்தில் இருப்பவன் டிராக்டர்கள் வைத்திருப்பான்.
நகரத்து ஆசாமி குவாலிஸ் வண்டி வைத்திருப்பான்.

வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும் அல்லது
ஜாதகன் வேளாவேளைக்கு 'மேரி பிரவுன்' அல்லது 'சரவண பவன்'
டேஸ்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். மனையாள் சுகம்
என்ன வென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்:-))))

பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான்.

தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான்.

நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன்
அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்

If the 4th lord is in the ascendant, the native will have all sorts
of domestic comforts, houses & conveyances.
They are outspoken, independent, clever and intelligent.
Their mother will be affectionate!
They will be appreciated in the field of education.
They will have the help of many friends and uncles.
--------------------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்

தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும்
ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்

அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். இன்றைய
காலகட்டத்தில் நாம் சம்பாதிக்காமல் வரும் சொத்துக்கள் முக்கியம்தானே?
குடும்ப வாழ்க்கை, ஏஆர் ரஹ்மான் இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும்
ரம்மியமாக இருக்கும்.

If the 4th lord is in the 2nd the native will inherit much from their
mother or maternal relatives

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
----------------------------------------------------------------------------------------
3ல் இருந்தால்

ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள்.
அதாவது நல்ல நிலைமையில் (position) இருப்பார்கள். ஜாதகனைவிட
அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும்

கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும்.

வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல்
இருக்கும்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும்

தாய்வழி உறவுகள் பகையாக மாறிவிடும். வாழ்க்கை வசதிகள் நீங்கிவிடும்
அல்லது இல்லாமல் போய்விடும்.

இது நான்காம் வீட்டிற்கு, அதிலிருந்து பன்னிரெண்டாம் வீடு. அதை மனதில்
கொள்க!
-----------------------------------------------------------------------------------------------
4ல் இருந்தால்

நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம்
என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு
கிடைக்கும்

மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை
பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.

ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள்.

அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக
இருப்பார்கள்.

கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம்
விசுவாசமாக இருப்பார்கள்.

பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
ஜாதகனுக்கு அமையும்.

பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழிச்
சொத்துக்களும் கிடைக்கும் (ஆகா, இதல்லவா டபுள் அதிர்ஷ்டம்:-)))
------------------------------------------------------------------------------------------
5ல் இருந்தால்

நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய
குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும்.

ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு
இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான்.

வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான்.

தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான்.

சிலர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
--------------------------------------------------------------------------------------------
6ல் இருந்தால்

நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

They may not get much happiness from mother & conveyances
They are basically careless and indifferent.
Their mother's health may be affected.
They are short tempered. Some of their friends may turn enemies.
Uncles and aunts also turn enemies. ---------------------------------------------------------------------------------------------------
7ல் இருந்தால்

ஜாதகன் கல்வித்துறையில் இருந்தால், தன் துறையில் புகழ் பெறுவான். சிறந்த கல்விமானாக இருப்பான். அதிகம் படித்தவனாக இருப்பான். நான்காம் வீடு
கல்விக்கும் உரிய வீடு, அதன் அதிபதி ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்ப்பதால் இந்தப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்.

ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள்
மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள்.
நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன்
பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள்.

இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் (7th House, house of marriage)
வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது.

ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து
மனைவி கிடைப்பாள்.

சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.

அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக்
கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி
மாற்றுவார்கள்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்காக வருத்தப் பட வேண்டாம்.
அதற்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வேறு வழியில் கொடுக்கப்பட்டிருக்கும்! --------------------------------------------------------------------------------------------
8ல் இருந்தால்.

எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல, வாழ்க்கையில்
சந்திக்கப்போகும் சிரமங்கள் மற்றும் அவஸ்தைகளுக்கான வீடும்
அதுதான்.

It is also house of difficulties.

சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான்.
அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது.
தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில்
பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள்.

சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத்
தரமுடியாது.

ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான்.
வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக்
கிடைக்காது.

உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள்.
இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப்
போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம்
அவ்வளவுதான்.

நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள்
நீங்கும் அல்லது குறையும் =================================================

9ல் இருந்தால்

ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
அமைப்பு இது.

ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?

சரி, ரெம்பவும் நெகிழ்ந்து, கதை விடாமல் பலனைச் சொல்லுங்கள்.

இதோ பலன்கள்:

The native will be blessed by a loving and compassionate mother
அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.

ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும்
இருப்பான்.

ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு
மிகுந்து இருக்கும்

நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத
அமைப்பாகும்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் -------------------------------------------------------------------------------------------

10ல் இருந்தால்

ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!

ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம்
கிடைக்கும்.

தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக
இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும்.

அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்

ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான்.
எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும்
உணரும்படி செய்யக்கூடியவன்.

வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு
உதவுபவர்களாக இருப்பார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் ------------------------------------------------------------------------------------------
11ல் இருந்தால்

இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக
இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான்.

சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும்.

இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு.
அதை மனதில் கொள்க!
If the 4th lord is in the 11th the native will be wealthy.
The native will have a lot of good friends.
They will have lots of gains as 11th house rules gains and
the fulfillment of all desires.
A good house and conveyances are guaranteed.
He will have lot of mental tensions also as 11th is 8th to the fourth.
Lack of mental peace and bliss can result. -------------------------------------------------------------------------------
12ல் இருந்தால்
நன்மை எதுவும் இல்லாத அமைப்பு.
சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும்.
நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது.
வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும்,
வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக்
காணாமல் போய்விடும்.
மொத்தத்தில் சிரமமோ சிரமம்.

The native will have to face many ills & unhappy situations in life.
The lord of 4th house in this house of loss shows loss of comforts.
Regarding house they may have to face many problems.
They may have to encounter litigation and problems regarding house.
They may not be happy with regard to mother.
Uncles and aunts will become enemies
Some friends also go against them.
They will be beset by many problems and difficulties.
Expenditure rises and they may have to spend much money on house
and conveyances.
They may have to face losses in speculation.

சுபக் கிரகங்களின் பார்வை இந்த அமைப்பின் மேல் பட்டால் அவை
குறையும் அல்லது நீங்கும். இல்லாவிட்டால் நோ சான்ஸ்! --------------------------------------------------------------------------------------------

(தொடரும்)

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி வெள்ளிக் கிழமையன்று வெளியாகும்
ஸ்கிரீன் சைசில் 13 பக்கங்கள் உள்ள பாடம் இது. உங்களுக்காக
விவரமாகக் கொடுத்துள்ளேன். அனைவரையும் பொறுமையாகப்
படித்து
உணர வேண்டுகிறேன்.

அப்போதுதான் எழுதிய எனது நோக்கம் நிறைவேறும்!


நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

21.3.09

கேளேன்டா மாமூ இது indoor gameமு!

கேளேண்டா மாமூ இது indoor gameமு!

காலம் மாறிவிட்டது. காட்சிகளும் மாறிவிட்டன.

முன்பெல்லாம் பெண்களிடம் நாணம் நிறைந்து இருக்கும். இப்போது
பல பெண்களிடம் அது பெருமளவு குறைந்து விட்டது.

நாணமும், நளினமும் பெண்மைக்குரிய முக்கிய அம்சங்கள்!

இதை மகிழ்ச்சியுடன் எழுதவில்லை; வருத்தத்துடன் எழுதுகிறேன்.

எப்படி நீ இதைப் பதிவில் எழுதலாம் என்று சிலர் என்னிடம் சண்டை பிடிக்க
வரக்கூடும். முன் ஜாமீன் மாதிரி அவர்களிடம் இப்போதே முன் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு விடுகிறேன்.

அய்யா, இந்தப் பதிவை நீங்கள் தவித்திருக்கலாம் என்று சிங்கைக்காரர் வந்து
சொல்வார். அவருக்கும் முன் வருத்தத்தை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.,"உண்மையை எங்கே
வேண்டுமென்றாலும் சொல்லலாம்".

ஆகவே எழுதுவதில் உண்மை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்

எங்கள் பாட்டி காலத்தில் எல்லாம் முன்பின் தெரியாத ஆடவர்களுடன் பெண்கள்
அறவே பேச மாட்டார்கள்.

வீட்டுக் கதவைத் தட்டினால் கூட, யாரென்று கேட்டுவிட்டுத்தான் திறப்பார்கள்
அப்படித் திறந்தால்கூட, நேருக்கு நேர் எதிரில் நின்று பேச மாட்டார்கள்.
கதவிற்குப் பின் உடம்பை மறைத்துக் கொண்டு, தலையை மட்டும்
நீட்டிப் பேசுவார்கள்

இப்போது அப்படிப்பட்ட காட்சிகளைக் காண முடியாது.

இப்போது போட்டிருக்கும் இரவு உடையுடன் (Nighty) வந்து நின்று பேசுகிறார்கள்.
பால்காரன், பேப்பர்காரன், காய்கறி வண்டிக்காரன், பழைய சாமான் வியாபாரி
என்று யார் எந்த நேரத்தில் வந்தாலும், அதே இரவு உடையுடன் வெளியில் நின்று
பேசுவதற்குத் தயங்குவதில்லை. எதிரில் உட்கார்ந்து பேரம் பேசுவதற்குத் தயங்குவதில்லை.

சிலர் தங்கள் குழந்தைகளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றிவிடுவதற்குக் கூட அதே
நைட்டியுடன் பஸ் நிறுத்தம் வரை வந்து திரும்புவார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம். யாராவது மிகவும் தெரிந்தவர்கள் வந்து விட்டால் மட்டும்
ஓடிச் சென்று ஒரு துண்டை எடுத்து, மார்பின் குறுக்கே மறைக்கும்படி தோள்களின்
மீது போட்டுக் கொள்வார்கள்.

பால்காரனுக்கும், பழைய சாமான் வியாபாரிக்கும் கிடைக்கும் தரிசனம், தெரிந்த
ஆசாமிக்குக் கிடைக்காது:-)))))

என்ன புதுக் கலாச்சாரமோ அல்லது வளர்ந்து வரும் பண்பாடோ?

இன்றைய கலாச்சாரத்தைக் கொடிப்பிடித்துக் காட்டும் திரைப்படப் பாடல் ஒன்றைக்
கீழே கொடுத்துள்ளேன். பண்பலைகளில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்.

நாயகி:
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

ஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

நாயகன்:
ஏ அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

நாயகன்:
ஏய் அழகான சின்ன பாப்பு ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு

டாடி மம்மி.. ட..டா..டி மம்மீ..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

படம் : வில்லு

பாடலின் அர்த்தத்தை அல்லது அனர்த்தத்தைப் பதிவில் எழுத முடியாது.
இரண்டு அல்லது மூன்று தடவைகள் படித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் எல்லோரும் ஆட்டுக்கல், அம்மி என்று உணவுபொருட்களை
அரைப்பதற்குப் பயன் படுத்துவார்கள். இனி அவைகளையெல்லாம் மியூஸியத்தில்தான்
பார்க்கவேண்டும்.

Wet Grinder, Mixie என்று எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது.

ஆட்டுகல்லில் கல் அப்படியே (fixedஆக) இருக்கும். குழவியைச் சுற்றுவோம்
வெட் கிரைண்டரில் குழவி அப்படியே இருக்கும். கல் பகுதி சுற்றும்.
எல்லாம் உல்டா!
-------------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது. திருமணங்களை வீட்டிலேயே
செய்வார்கள். வீடு சிறியதாக உள்ளவர்கள் கோவில் மண்டபங்களில் செய்வார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாத் திருமணங்களும் திருமண மண்டபங்களில்

அதனால் சில கலகலப்பான நிகழ்வுகள் நின்றுபோய்விட்டன.

வீடுகளில் செய்யும் காலங்களில், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்று
நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலங்கள் இருக்கும்.

இப்போது அதெல்லாம் இல்லை!
---------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊர்வலங்களில் முன்னால் செல்லும் நாதஸ்வரக் கோஷ்டி, ஊர்வலத்தில்
வருபவர்களை அனுசரித்துக் கொண்டு செல்வதற்காக இடையிடையே சற்று நின்று
செல்வார்கள்.

அதுபோல கிரகங்களும் மற்ற கிரகங்களை அனுசரித்துச் செல்ல வக்கிரத்தைக் கடைப்
பிடிக்கும். அதைத்தான் வக்கிரகதி என்பார்கள். ஆங்கிலத்தில் retrogation என்பார்கள்

வக்கிரம் என்றால் என்ன?

வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி
முதலியவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி
முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுப்பட்ட அல்லது
வேறுபட்ட நிலை!

அதேபோல ஒரு கிரகத்தின் வக்கிர நிலை என்பது மாறுபட்ட நிலை

செவ்வாய், புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே
(90 degrees) இருக்கும். இதை நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும்.

ஒன்றை ஒன்று இந்த அளவை விட்டுத் தாண்டிச் செல்லாது. தாண்டிச் செல்லும்
நிலையில் இந்த வக்கிரகதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

யாராக இருந்தாலும் இந்த மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களில்,
அதாவது 90 பாகைக்குள் மட்டுமே இருக்கும். அப்படியில்லையென்றால்
ஜாதகம் தவறு!
----------------------------------------------------------------------------------------------------
வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம். சுபக்கிரகம்
வக்கிரகதியில் இருந்தால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும்.

7ற்கு உரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதமாகும்
10ற்குரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் வேலை கிடைப்பது அல்லது
கிடைத்த வேலையில் உயர்வு எல்லாம் தாமதப்படும்.

Planets like mars, jupitor, venus ,saturn retrogrates for certain time,
you can refer this in panchang , the dates and time will be given in particular
year when the planetrs go in retrogation and they will come to their original
place, this is called vakra gathi and vakra nivarthi

Retrograde motion is when an object (typically a planet) appears
to go backward in its orbit.

Basically, all the planets of the solar system turn around their axes
clockwise, except for Venus which goes counter - clockwise.

Retrograde motion is motion in the opposite direction.
(Counter-clockwise so to speak).

Retrogration of planets:
Mars retrogrades for 72 days every 25.6 months.
Jupiter for 121 days every 13.1 months.
Saturn for 138 days every 12.4 months.
Uranus for 151 days every 12.15 months and
Neptune for 158 days every 12.07 months.

Retrograde motion simply means that a planet ONLY appears to be moving
backwards in its orbit. This is only because planets orbit the sun
at different speeds.

More info about retograde motion in Wikipedia:

http://en.wikipedia.org/wiki/Retrograde_motion
-----------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

14.3.09

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பதிவுலகத்திற்கு வந்தவுடன் எனக்கு வாத்தியார் பதவி கிடைத்தது.

அது எப்படிக்கிடைத்தது என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உண்மையில் நான் வாத்தியார் அல்ல! வாத்தியார் வேலைக்குச் செல்ல
ஆசைப்பட்டவன். அவ்வளவுதான்.

முதலில் 'பல்சுவை'ப் பதிவு ஒன்றை மட்டும் துவங்கி சுமார் ஓராண்டு காலம்
எழுதியவன், இந்த வாத்தியார் பதவிக்காகவே, வகுப்பறை எனும் இரண்டாவது
பதிவைத் துவங்கினேன். இரண்டாண்டு காலம் இதில் ஓடிவிட்டது.

வகுப்பறைப் பதிவில் ஆன்மிகத்தைப் பற்றியும், வாழ்க்கைத் தத்துவத்தைப்
பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் துவங்கினேன். ஆனால் வெறும்
ஆன்மிகத்தை மட்டும் எழுதினால் யார் வந்து படிப்பார்கள்?

இணையத்தில் உலவுபவர்களின் சராசரி வயது 32

அவர்களையெல்லாம் பிடித்து இழுத்துக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த
நான், ஜோதிடத்தை எழுதினால், ஓரளவிற்கு படிக்க வருவார்கள் என்று நினைத்து
அதை எழுத ஆரம்பித்தேன்.

இப்போது அது என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது!
---------------------------------------------------------------------------------------
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. சராசரியாக தினமும்
5 மின்னஞ்சல்கள் வருகின்றன.

ஒவ்வொன்றிலும் தங்கள் பிறப்பு விவரத்துடன் பத்துக் கேள்விகள் இருக்கும்.

ஒரு ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, அலசி ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல
அரை மணி நேரம் ஆகும். மற்றதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

++++++எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை!

நேரமில்லை என்று சொன்னாலும் திரும்பத் திரும்ப வேண்டுகோள்களுடன்
மின்னஞ்சல்கள் வரும்

பத்துக் கேள்விகள் கேட்டு எழுதிய ஒருவரிடம், இரக்கம் கொண்டு ஒரே ஒரு
கேள்வி மட்டும் கேளுங்கள் என்று எழுதினேன்.

உடனே அவர் அந்தப் பத்துக் கேள்விகளையும் சுருக்கி ஒரே கேள்வியாக
இப்படி எழுதியுள்ளார்:

"என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?"

அதாவது அவருக்கு இப்போது 25 வயது. இன்னும் 50 ஆண்டுகால வாழ்க்கை
எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான தசா புத்திகள், அத்தனை கோள்சாரங்களையும்
குறித்துக் கொண்டு, அவருடைய ஜாதகத்தையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டமாக அலசி பத்துப் பக்கங்களுக்குப் பலன் எழுதி தட்டச்சு செய்து
அவருக்கு நான் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை!

நடக்கிற காரியமா?
---------------------------------------------------------------------------------
நிறைய பெண் வாசகிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் இப்படி இருக்கும்:

"அய்யா, நான் யாரையும் தற்சமயம் காதலிக்க வில்லை! ஆனாலும் தெரிந்து
கொள்ள ஆசை. என் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள்
செய்துவைக்கும் திருமணமா?"

இதற்கு நான் என்ன பதில் எழுதுவது?

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள். பாவம் பார்த்துச் சொல்வோம்
என்று பரிதாபத்துடன் ஜாதகத்தைப் பார்த்தால் அவர்களுடைய ஏழாம் பாவம்
நிறையப் பேர்களுக்கு நன்றாக இருப்பதில்லை. சின்ன வயதிலேயே கை நிறையச்
சம்பளத்தையும், அசத்தலான வேலையையும் கொடுத்த காலதேவன், அவர்களுடைய
ஏழாம் வீட்டில் சுமையை வைத்திருக்கிறான். ஒரு கதவு திறந்திருந்தால் ஒரு
கதவு மூடியிருக்கும் என்பது அதுதான்.

அதைச் சொல்லி, அவர்களைக் கலங்க அடிக்கலாமா?

விதிவிட்ட வழி என்று அதையெல்லாம் புறந்தள்ளிவிடுவேன். என்ன செய்வது?
இது போன்ற சங்கடங்கள் பல உள்ளன!
---------------------------------------------------------------------------------
சரி, வாருங்கள், பாடத்தைப் படிக்கலாம்.

சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள்

1
சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும்

உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள்,
மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள்.
ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்
----------------------------------------------------------------------------
2
சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும்

++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள்
நடைபெறும். பொதுவாக நன்மையான காலம்.
-------------------------------------------------------------------------
3
சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள்
உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம்
விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும்.

சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்
--------------------------------------------------------------------------

4
சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும்

++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும்.
வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும்.
சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ்
போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------
5
சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும்

நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல
முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும்
பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி,
மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும்.
மன உளைச்சல் இருக்கும்.
-------------------------------------------------------------------------------
6
சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும்

சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற
நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும்.
உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை
இழக்க நேரிடும்.
-------------------------------------------------------------------------------
7
சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு
நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை
இழக்க நேரிடும்
------------------------------------------------------------------------------
8
சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும்

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில்
இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால்
மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும்
எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்
----------------------------------------------------------------------------------
சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும்

++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது
நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார்
சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள்.
எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில்
அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.
---------------------------------------------------------------------------------
கோள்சாரச் சனி (Transit Saturn)

பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன் நன்மை செய்யக்கூடியவர் அல்ல!

நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த
வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில்
நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது.

அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும்
உபத்திரவம் இருக்காது. பிடுங்கல் இருக்காது!

சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம் கொடுக்க வேண்டிய
நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும். நொந்து போகும்
அளவிற்குத் தாமதப்படும்.

கோள்சாரத்தில் 3ஆம் இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய
இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல்
இருக்கும்

அதிக உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி
காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள்.
------------------------------------------------------------------------------------
சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே
நல்லது.

செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில்
சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல. தொல்லையானது.

அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும்
நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல!

சனியும் புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு)
நன்மையளிக்கும்

Mercury is an auspicious planet but it is basically a neutral planet.
It adopts the nature of the planets placed in the same house and acts
like them. The combination in between Saturn and Mercury is of
benefic nature. The house in which this combination takes place receives
positive results.
--------------------------------------------------------------------------------
சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே
தீரும். யாரும் தப்பிக்க முடியாது.

இறைவழிபாடு பயனளிக்கும்.

எப்படிப் பயனளிக்கும்?

தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

எந்த சூழ்நிலைக்கும் அதுதான் முக்கியம்!

சரியா?

சனியைப் பற்றிய கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------------------------
"அய்யா, ஒன்று பாக்கியுள்ளது?"

"என்ன ராஜா?"

"மேலே உள்ள படத்திற்கும், பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?"

"அந்தப் பெண்மணி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? சனியைப் பற்றிய
பாடத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் நானும் இருக்கிறேன். Okayயா?"
------------------------------------------------------------------------------

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10.3.09

டிரைவரும் கண்டக்டரும்!

வாகன ஓட்டுனர், நடத்துனர் என்று எழுதுவதைவிட டிரைவர், கண்டக்டர்
க்ளீனர் என்று எழுதினால் நமக்கு அந்த நடைமுறை அல்லது வழக்குச் சொற்களால்
சொல்வது எளிதில் விளங்கும்.

சிலசமயங்களில் நடைமுறைத் தமிழே பலரையும் சென்றடையும்..

சரி, இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

ஒவ்வொருவரும் அவரவரது வேலைகளை அவரவர் இடத்தில் இருந்து செய்தால்
போதும் பிரச்சினைகள் வராது. குழப்பங்கள் இருக்காது.

டிரைவர் டிரைவர் வேலையையும், கண்டக்டர் வேலையையும் மட்டுமே செய்ய
வேண்டும். க்ளீனர் க்ளீனிங் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.

மாற்றிச் செய்தால் என்ன ஆகும்?

யோசித்துப் பாருங்கள். க்ளீனர் அல்லது நடத்துனர் வண்டியை ஓட்டினால்
என்ன ஆகும். விபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

அதுபோல கிரகங்கள் அதனதன் இடத்தில் இருந்து அதனதன் பணியைச்
செய்தால் மட்டுமே ஜாதகன் எந்தவித விபத்தும் அல்லது பிரச்சினையும் இன்றி
மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

சனிக்கும் அப்படித்தான். அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

அவர் சொந்தவீட்டில் இருந்தால் மிகவும் நல்லது.

மகரம், மற்றும் கும்ப ராசிகள் சனீஷ்வரனுக்குச் சொந்த இடங்கள்
அங்கே அவர் இருப்பது, அது என்ன பாவமாக அல்லது என்ன வீடாக
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர் நன்மைகளையே அதிகமாகச் செய்வார்.

சரி, அவர் மற்ற இடங்களில் (ராசிகளில்) இருந்தால் என்ன செய்வார்?

அதுதான் இன்றைய பாடம். பாடத்தைப் பாருங்கள்:
===========================================================

வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

மேஷத்தில் சனி:

இங்கே சனி நீசம்.
ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி
வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள
முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும்
இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.
-----------------------------------------------------------------------------
ரிஷபத்தில் சனி

இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்
உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.
The keeping of one's thoughts and emotions to oneself: கறுப்பான
தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு
எதிரானவர்.

எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள்
தந்திரமிக்கவர்கள்

சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு
இருப்பார்கள்
--------------------------------------------------------------------------
மிதுனத்தில் சனி

இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால்
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான்.
ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன்.
யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள்.

சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள்
இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம்
கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்
-------------------------------------------------------------------------------
கடகத்தில் சனி

இது சந்திரனின் வீடு
சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள்.
மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது
நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள்.
சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு
சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும்
வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
சிம்மத்தில் சனி

பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் (firmly or stubbornly
adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument, persuasion,
or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட
ஒவ்வாத சிந்தனையுடையவர்கள்

சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது
எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்
-----------------------------------------------------------------------------
கன்னியில் சனி

கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட
சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை
மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள்
இருக்கக்கூடியவர்கள்
---------------------------------------------------------------------------------
துலா ராசியில் சனி

++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும்.
ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன்
அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான்.
செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான்
(இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு
ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க
வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின்
வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?)
அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி
எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன்
சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
விருச்சிகத்தில் சனி

இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல!
ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான
மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன்.

சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம்.
சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள்
சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்
------------------------------------------------------------------------------------
தனுசு ராசியில் சனி!

++++++இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு
சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார்.

ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில்
புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும்.
வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும்.
அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்
----------------------------------------------------------------------------------
மகரத்தில் சனி

++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும்
மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம்
மிக்கவனாகவும் திகழ்வான்

சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை
கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------------------------------------------------------------
கும்பத்தில் சனி

++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக
இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------
மீனத்தில் சனி

++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக
இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக
இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான்.

நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,
------------------------------------------------------------------------------------
இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள்.
தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை
வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது
இல்லாமலும் போகலாம். ஆகவே பொறுமையாக அலசுங்கள்

(தொடரும்)





வாழ்க வளமுடன்!

6.3.09

Bullet Proof ஜாக்கெட்டும் சனீஷ்வரனும்!

Bullet Proof ஜாக்கெட்டும் சனீஷ்வரனும்!

சனிப் பெயர்ச்சிப் பலன்களை நாளிதழ்களிளும் சரி, குறு இதழ்களிளும் சரி
பரபரப்பாக எழுதுவார்கள்.

சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?

சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களையெல்லாம்
கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த ஊருக்குக் குடி பெயர்ந்து
போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகைகளையும்)
30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம் ஒரு டிகிரி என்ற விகிதத்தில்)
கடந்து ஒரு சுற்றை முடிக்கும் சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும்
கடந்து அடுத்த ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.

சிம்ம ராசியில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரவேசித்தவர், அந்த
ராசியின் 24 டிகிரி தூரத்தைக் கடந்து இன்று 24.34 என்ற டிகிரிக் கல்லில்
நிற்கின்றார். முழு தூரத்தையும் அவர் இன்னும் ஆறு மாதங்களில் கடந்து கன்னி
ராசிக்குள் பிரவேசிப்பார்

அதனால் என்ன நடக்கும்?

பத்திரிக்கைகளில் சனிப் பெயர்ச்சிக்காக எழுதுவதைப் போன்றுதான் அவ்வளவு
ராசிக்காரர்களுக்கும் நடக்குமா?

அப்படி நடக்காது!

ஏன் நடக்காது?

இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல் வகுத்தால் சராசரியாக
ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில் மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி
மக்களுக்கும் அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி ஒரே
மாதிரியாக நடக்கும்?

அபத்தமாக இல்லையா?

பின் எப்படி நடக்கும்?

ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய இன்றைய வயது,
ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை, அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய
குறிப்பிட்ட ராசியிலுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு தசா புக்தி
போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார சனியுடைய தீய பலன்கள் அல்லது
நல்ல பலன்கள் இருக்கும்.

உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து கொண்டிருக்கும் ஜாதகனை,
அந்த லாபதிசைக்கு அதிபதியான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof
ஜாக்கெட் போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள் அனுகாதோ
அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லை Black Cat Commandos with
AK47 Riffle படையுடன் இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 30 பரல்களுக்கு
மேல் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி பலன்கள் பொதுவானவை.
மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து
செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும்
சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப்
பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன்
மட்டுமே.

ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற் சொன்னவை மட்டுமே
சனியின் பெயர்ச்சிப் பலனை நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும்
இருக்கும். யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப வேண்டாம்!

கோச்சாரம் (கோள்களின் சாரம்)

ஒரு குடும்பப் பெண்ணிற்குப் பல பணிகள் உள்ளன. தாயாக, தாதியாக, தாரமாக,
தோழியாக அவள் அவ்வப் போது தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
பகல் முழுவதும் அவள் தாதியாகத் தன்வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்,
தன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து பணிவிடைகளைச் செய்ய
வேண்டும். தன் கணவனிற்குத் தோழியாக இருந்து அரவணைப்பையும், தாரமாக
இருந்து அவனுடைய அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் பன்முகம் காட்டிப் பணிகளைச் செய்ய வேண்டும்.
பெண்ணிற்கு என்றில்லை. ஆணிற்கும் அதேபோல பல பணிகள் உண்டு.
தந்தையாக, பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கும் காவலனாக, தன் மனைவிமீது
அன்பைப் பொழியும் கணவனாக அவனுக்கும் பன்முகப் பணிகள் உள்ளன.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் கோள்களுக்கும் அவ்வாறு பல பணிகள்
உள்ளன!

Natal Chart எனப்படும் பிறந்த ஜாதக அமைப்பில் உள்ள பலன்களை அவ்வப்போது
அவைகள் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அதேபோல தங்களுக்குரிய
திசைகள் (Main periods) அல்லது புக்திகள் (SubPeriods) வரும்போது அதற்குரிய
பலன்களையும் ஜாதகனுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு சுழற்சியில், வான
வெளியில் சுழன்று வரும்போது (That is in transit) சுழற்சியில் ஒவ்வொரு ராசிக்கும்
மாறும்போது அதற்கென்று விதிக்கப்பெற்றுள்ள பலன்களையும் வழங்கவேண்டும்.

சுழற்சியில் என்ன பலன் என்கிறீர்களா?

சனீஷ்வரனையே எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு சுற்றை முடிக்க சுமார் முப்பது
ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம்
10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்

ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது சாடே சனி என்றும்
சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன் அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில்
சனி வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தக் காலக்
கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.

அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள், வம்பு, வழக்குகள்,
தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும் வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள்,
குடும்பத்தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதியின்மை
போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும். ’சோதனைமேல் சோதனை
போதுமடா சாமி' என்று பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி
விடுவார்.

சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய மூன்று ராசிகளைத்
தவிர மற்ற இடங்களில் அவர் நன்மைகளைச் செய்வதில்லை. இதற்கு
ஒரு விதிவிலக்கு உண்டு. அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில்
30 பரல்களுக்குமேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை
ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.

ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்கொண்டால், அவர்
வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்பார்கள்.

முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும். அது அறிவு,கல்வி, வேலை
வாய்ப்பு அனைத்தையும் மங்கவைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame
and detachment Period என்றும் சொல்லலாம்)

அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக் கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல
அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period
எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக் காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.

மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில்
நிர்ணயிக்கப் பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும் காலமென்றால்,
அவனுடைய கதையை முடித்துக் கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.

சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப் பிடித்துக் கொண்டு உயிரோடு
இருப்பார்கள். அவர்கள் தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள், அவர்களின்
ஜாதகத்தின்படி (In the period of Second Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில்
இறைவனடி சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள்

இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும் தான் சஞ்சரிக்கும்
காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க
சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில், 7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு
ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக் கொடுப்பார்

வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நிலபுலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை
உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில்
சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக,
ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட வைத்து விடுவார்

ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.

எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப்
போட்டு விடுவார்.

விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?

உண்டு!

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.

அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!

முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி மூன்றாவது சுற்று: மரணச்சனி அல்லது அந்திம
காலச் சனி!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்காதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.

அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position. It level will be according to the strength of the horoscope.

அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?

அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறார்?

சைடுபரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளை திறந்தீர்கள் என்றால்
அது அன்றைய தேதியில் உள்ள கிரக நிலைகளைக் காட்டும். அதில் சனி,
இன்றையத் தேதியில் சனி சிம்மத்தின் 24.34 வது பாகையில் உள்ளதை அது
காட்டும். அதுபோல எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும் காட்டும்.

ஒரு ராசியில் சனீஷ்வரன் 30 மாதங்கள் தங்கிச் செல்வதால் 30 பாகைகள்
வகுத்தல் 30 மாதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு பாகை. சனி 24.34 பாகையில்
இருக்கிறார் என்றால் சிம்மத்திற்கு அவர் வந்து 24 மாதங்கள் ஆகிவிட்டன
என்பது பொருள். இன்னும் மீதமுள்ள 6 மதங்கள் அங்கே இருந்துவிட்டுப்
பிறகு பெட்டி படுக்கையுடன் அவர் அதற்கு அடுத்த வீடான கன்னி ராசிக்கு
நடையைக் கட்டிவிடுவார்.

இன்றையத் தேதிக்குக் கன்னிராசிக்காரனுக்கு அவர் விரையச் சனி. மாறியவுடன்
ஜென்மச்சனி. சிம்ம ராசிக்காரனுக்கு அவர் இன்றையத் தேதிக்கு ஜென்மச் சனி.
மாறியவுடன் அவர் கழிவுச் சனி. கடக ராசிக்காரனுக்கு அவர் இப்போது கழிவுச்
சனி, மாறியவுடன் அவர்கள்(அதாவது கடக ராசிக்காரர்கள்) ஏழரைச் சனியின்
பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

ஏழரைச் சனியைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்
அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள், புரியவில்லை
என்று சொல்லுங்கள், தனியாகக் கச்சேரி வைக்கிறேன் (பாடம் எடுக்கிறேன்)
============================================================

இது முன்பே எழுதியதுதான். சனீஷ்வரனைப்பற்றிய செய்திகளில் இதுவும்
இடம் பெறவேண்டும் என்பதால் மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்.
மேலும் புதியவர்கள் பலர் உள்ளார்கள் அவர்களும் படிக்கட்டும் என்று
கொடுத்துள்ளேன். பதிவுலக மொழியில் சொன்னால் மீள் பதிவு என்று
வைத்துக்கொள்ளுங்கள்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.3.09

கம்பங்களி தின்றவனும் தங்கபஸ்பம் தின்றவனும்!

கம்பங்களி தின்றவனும் தங்கபஸ்பம் தின்றவனும்!

எல்லா மனிதனும் அலைவது பணத்திற்கு. பணம் கிடைத்தவுடன் அலைவது
கிராமமாக இருந்தால் சிட்டுக்குருவி லேகியம், சிறு நகரமாக இருந்தால்
தங்கபஸ்பம். மாநகரமாக இருந்தால் வயாக்ரா.

அதற்குப் பிறகு அலைவது?

அதைப் பதிவில் எழுத முடியாது!

நேரில் சந்திக்கும்போது பேசுவோம்.

இப்போது கட்டுரையைப் படியுங்கள்

சும்மா, ஜோதிடத்தையே எழுதிக்கொண்டிருந்தால் எழுதும் எனக்கும்
அலுத்துவிடும். படிக்கும் அருப்புக்கோட்டை பாஸ்கருக்கும் அலுத்துவிடும்.

ஆகவே இது ஜோதிடம் கலந்த ஆன்மீக மற்றும், மனவளக் கட்டுரை!

எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

படித்துவிட்டு எப்படி இருந்தது என்று மட்டும் ஒரு வரி சொல்லுங்கள்.

Over to Katturai
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இறைவன் வகுத்த நியதி!

(இதுதான் உண்மையான தலைப்பு சாமிகளா)

அப்போ முதலில் உள்ள தலைப்பு?

அது நமது வகுப்பிற்கு வராதவர்களை உள்ளே பிடித்து இழுத்து
வருவதற்காகக் கொடுக்கப்பட்டது:-)))
---------------------------------------------------------------------------------------------

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
என்றார் வள்ளுவப் பெருந்தகை!

"The Almighty is void of desire or aversion and one who meditate his feet
never gets evil" என்று டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் அதற்கு
ஆங்கிலத்தில் ஒற்றை வரியில் விளக்கம் எழுதினார்.

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை என்று
சொல்லிய வள்ளுவர், அதைவிட முக்கியமான செய்தியையும் இந்தக்
குறளில் வெளிப்படுத்தியுள்ளார்

இறைவன் விருப்பு, வெறுப்பு அற்றவர். likes & dislikes இல்லாதவர்
என்கிறார். அவர்முன் அனைவரும் சமம்.

ஆமாம், இறைவன் எல்லோரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறார்.
ஜோதிடக்கலையைப் பயின்றவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இந்த
உண்மை சற்று விபரமாகத் தெரியும்.

எப்படி?

ஜாதகத்தில் 4 வகைகள்.12 வீடுகள், 36 பாக்கியங்கள் என்று பிரிவுகள்
இருந்தாலும், ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பு எண் 337 தான்.
அதாவது 337 பரல்கள் மட்டுமே.

நாட்டை ஆளுகின்ற பிரதமருக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
அலுவலகத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியருக்கும் 337
பரல்கள்தான். அம்பானிகளுக்கும், பிர்லாக்களுக்கும் 337 தான்.
அவர்களின் வாகன ஓட்டிகளுக்கும் 337 தான். ஆஸ்கார் விருது
வாங்கிய ஏஆர்.ரஹ்மானுக்கும் 337 தான். அவருடைய குழுவில்
வயலின் வாசிக்கும் இசைக் கலைஞருக்கும் 337தான்.

அது எப்படி சாத்தியம்?

வாழ்க்கைத் தரம் (Status in life) ஏன் வேறுபடுகிறது?

செல்வம் நிறைந்து இருக்கும் இடத்தில் உடல் வலு அல்லது உடல்
நலம் முழுமையாக இருக்க்காது. அது முழுமையாக இருக்கும் இடத்தில்
செல்வம் அடிபட்டுப்போயிருக்கும்.

கடைநிலை ஊழியன் தன் வேலை முடிந்ததும், மாலையில் பஸ் ஏறி
வீட்டிற்குப் போய்விடுவான். பிரபலங்கள் பாதுகாவலர்கள் இன்றித்
தனியாக வெளியே செல்ல முடியாது.

கைவண்டி இழுப்பவனும் அல்லது மூட்டை தூக்கிப் பிழைப்பவனும்
எதைக் கொடுத்தாலும் நன்றாகச் சாப்பிடுவான். சர்க்கரை வியாதி, இரத்த
அழுத்தம், இருதயக்கோளாறு போன்ற நோய்கள் அவனை எட்டிக்
கூடப் பார்க்காது. அவனுக்கு இருக்கும் தூக்கமும், அச்சமின்மையும்
பிரபலங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் இருக்காது.

உடல் வலிமை, மன வலிமை, அறிவு வலிமை இம்மூன்றும் ஒன்றாகச்
சேர்ந்து படைக்கப்பெற்ற ஜீவன் என்பது அபூர்வம்.

இம்மூன்றையும் ஒன்றாகப் பெற்ற ஆதிசங்கரர், விவேகானந்தர்
போன்றோர்கூட நீண்ட ஆயுளைப் பெறவில்லை!

அதுதான் இறைவனின் படைப்பு!

ஆடு, மாடு, மான் இவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் அதைக் கொடுக்கவில்லை?

குதிரைக்கு உடல் வலிமையும் வேகத்தையும் கொடுத்த இறைவன்
கொம்பைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் என்ன நடக்கும்
என்று அவருக்குத் தெரியாதா என்ன? ஆகவே கொடுக்கவில்லை.

கழுதையும் நான்கு கால் பிராணிதானே, அதற்குக் கொம்பில்லையே
என்று சிலர் கேட்கலாம். கழுதைக்கு அதன் கால்களில் பலம்
கொடுக்கப்பட்டுள்ளது. உதை வாங்கியவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

குயிலுக்கு இனிமையான குரலைக் கொடுத்த இறைவன், உருவத்தில்
அதைச் சிறியதாக, கறுப்பாகப் படைத்து விட்டார். மயில்
அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிய குரல் இல்லையே?

மொத்தமுள்ள 36 பாக்கியங்களில், சரிபாதியைக்கூட எந்த
மனிதனுக்கும் இறைவன் கொடுக்கவில்லை!

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது!

ஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன:

1. 'தர்ம' ஜாதகம்
2. 'தன' ஜாதகம்
3. 'காம' ஜாதகம்
4. 'ஞான' ஜாதகம்

தர்ம ஜாதகம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய வீடுகள் நன்றாக
அமையப்பெற்ற ஜாதகம். 1ஆம் வீடு (லக்கினம்) 5ஆம் வீடு
(பூர்வ புண்ணியம்) 9ஆம் வீடு(பாக்கிய ஸ்தானம்) ஆகிய மூன்றும்
நன்றாக இருக்க வேண்டும். அந்த ஜாதகன் தான் பல தர்மங்களைச்
செய்வான். கோவில் கட்டுவான் அல்லது கோவில்களுக்குத் திருப்பணிகள்
செய்வான். குளங்கள் வெட்டுவான். இருக்கும்போதும், பெயரோடும்,
புகழோடும் விளங்குவான்.இறந்த பின்னும் அவன் பெயர் நிலைத்து
நிற்கும்.

'தன' ஜாதகத்தில் இரண்டு, ஆறு, பத்து ஆகிய வீடுகள் நன்றாக
அமைந்திருக்கும். (House of Finance, House of Servants and House
of Profession). இந்த ஜாதகன்தான் நிறைய சம்பாதிப்பன். நிறையப்
பொருள் சேர்ப்பான். செல்வந்தனாகத் திகழ்வான். ஆனால் அந்தப்
பணம் அவனுக்கு முழுமையாகப் பயன்படாது. அவனைச் சார்ந்தவர்கள்
அல்லது சேர்ந்தவர்கள் அதை அனுபவிப்பார்கள். சேர்க்கும் பாக்கியம்
அவனுக்கு. அனுபவிக்கும் பாக்கியம் வேறு ஒருவனுக்கு.
He will earn lot of money and leave it for others to enjoy.
வைத்துவிட்டு சிவனடிக்குச் சென்று விடுவான்.

மூன்றாவது 'காம' ஜாதகம். இவர்கள் வாழ்க்கையின் எல்லா
இன்பங்களையும் ருசித்துவிட்டு அல்லது ஒரு கை பார்த்துவிட்டுப்
போகிறவர்கள். இவர்கள் சம்பாதித்துத்தான் செலவழிக்க வேண்டும்
என்பதில்லை. யாருடைய பணமோ அல்லது பொருளோ
இவர்களைத் தேடிவரும். அது அப்பச்சி தேடிவைத்த பணமாக
இருக்கலாம் அல்லது அய்யா தேடிவைத்த பணமாக இருக்கலாம்
(Father or Grandfather) அல்லது அம்மான் தேடிவைத்த பணமாக
இருக்கலாம். அம்மான் என்பதை இங்கே மாமனார் என்று பொருள்
கொள்க! இவர்களுக்கான ஜாதக வீடுகள். மூன்று, ஏழு, பதினொன்று.
(House of courage, House of women and House of Gains)

'ஞான' ஜாதகம் என்பது நான்காவது வகையைச் சேர்ந்தது. நான்கு,
எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகளின் கூட்டணி. அதாவது அந்த
மூன்று வீடுகளும் வலுவாக இருக்கும்.(House of Comforts,
House of Difficulties and House of Losses) இந்த நான்காம் பிரிவு
ஆசாமிகள்தான் ஞானிகள். வாழ்க்கையின் எல்லா சுகங்களும்
சரிவரக் கிடைக்காமல் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, பல விரையங்கள்,
நஷ்டங்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துரோகங்கள், சோகங்கள்
என்று அனைத்தையும் சந்தித்துவிட்டு அல்லது உணர்ந்து அனுபவித்து
விட்டு,"இதுதான் உலகம்' என்று முடிவிற்கு வருபவர்கள்.

"தென்னையைப்பெத்தா இளநீரு, பிள்ளையைப்பெத்தாக் கண்ணீரு'
என்றோ, அல்லது'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான
உலகத்திலே" என்றோ, அல்லது "போனால் போகட்டும் போடா,
இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா"
என்றோ தங்கள் மனதிற்குள் பாடிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களுடைய மனம் பக்குவப்பட்டிருக்கும். "கம்பங்களி தின்னவனும்
மண்ணுக்குள்ளே; தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே'
எனும் வாழ்க்கைத் தத்துவம் அவர்களுக்குப் பிடிபட்டிருக்கும்.

இறந்தபிறகு ஒவ்வொரு மனிதனையும் பற்றித் தொடர்வது இருவினைப்
பாவமும், புண்ணியமுமே என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

இறைவன் படைப்பில், மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும்
கவலையின்றி இருக்கின்றன. படைத்தவன் படைத்தபடியே இருக்கின்றன.
படைத்தவன் படைத்தபடியே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றன.
மனிதன்தான் துன்பத்திலும், கவலையிலும் உழன்று போகின்றான்.

தெருவில் அடிபட்டுக்கிடக்கும் நாயின் எச்சத்தை ஒரு காகம் கொத்தித்
தின்னும் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே எச்சத்தை ஒரு
குருவியோ அல்லது புறாவோ திரும்பிக்கூடப் பார்க்காது. அதுதான்
படைப்பு.

எந்தப் பறவையாவது தான் கடித்துபோட்ட பழங்களைக் கொண்டுபோய்
அடுத்த வேளைக்கு ஆகுமே என்று சேர்த்து வைக்கிறதா? அல்லது
தானியங்களை அள்ளிக்கொண்டுபோய் தனது கூட்டில் சேர்த்து வைக்கிறதா?

மனிதன் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. கடைசிபட்சம் வற்றலாக
மாற்றியாவது வைத்துவிடுவான்.

எந்தப் பறவையாவது வெய்யில் காலத்தில் ஐஸ் வாட்டரும்,
குளிர்காலத்தில் போர்வையும் கேட்கிறதா?

சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்துவிட்டுப் போகிறது.
ஸாட்டிலைட், ராடார், கண்ட்ரோல் ரூம் என்று வழிகாட்டல் வசதி
அவைகளுக்கு இருக்கின்றனவா?

இல்லையே!

இறைவனின் படைப்பு அப்படி!

அதைப்பார்த்து வியந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தன்
பாடல் ஒன்றில் அதை உணர்த்தி எழுதினார்.

"அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்"

நாமும் பறவைகளைப் போல கவலையின்றி வாழ்வோம்

"இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி"

இதுவும் கவியரசர் எழுதியதுதான்.

இரவு பகலைப்போல இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொண்டு அல்லது அதன்
போக்கிலேயே ஏற்றுக்கொண்டு வாழ்வோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே; கவலையில் மாய்வதற்கல்ல!

நமக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்.

அவர் பார்த்துக்கொள்வார்.

அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
வாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!

-----------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

3.3.09

பெண்களின் சகவாசமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும்!

பெண்களின் சகவாசமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும்!

நட்பு முறையில் ஒரு பெண்ணுடன் இருக்கும் சகவாசம் தவறல்ல. அதுவே
எல்லை தாண்டிய சகவாசம் என்றால் பிரச்சினைக்கு உரியதாகிவிடும்.

முன்பெல்லாம் பிரச்சினைகளை மூடி மறைத்து விடுவார்கள். இப்போது
அதற்கெல்லாம் நோ சான்ஸ்!

தவறான சகவாசம் எல்லாம் இப்போது மகளிர் காவல் நிலையத்தில்தான்
பைசல் செய்யப் படுகின்றன. அனுபவப்பட்டவர்களைக் கேட்டால் கதை
கதையாகச் சொல்வார்கள்.

அதேபோல முன்பெல்லாம் இருதாரம் என்பது சர்வ சாதாரணம். இப்போது
அதற்கு வாய்ப்பில்லை. தெரிந்தோ தெரியாமலோ ஒன்று அல்லது இரண்டு
கேஸ்கள் இருக்கலாம். மற்றபடி வாய்ப்பில்லை. மகளிர் காவல் நிலைய
உதவியுடன் முதல் மனைவி தன் கணவனைக் கட்டித் தொங்கவிட்டு விடுவாள்
-----------------------------------------------------------------------------------------------
அரட்டை போதும். இப்போது பாடம்

சனி, ஒரு ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்கான பலாபலன்கள்
-----------------------------------------------------------------------------------------------
Warning:
கொடுக்கப்பட்டுள்ள அத்தனையும் ஒருவருக்கே இருக்கும் என்பதில்லை.
சிலருக்கு சில இருக்கும்
சிலருக்கு எல்லாம் இருக்கும்
சிலருக்கு அதில் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கலாம்.
சிலருக்கு எதுவுமே இல்லாமல் இருக்கலாம்.
அது சனியின் வலிமையைப் பொறுத்தது.
அதோடு சனி இருக்கும் வீட்டின் அம்சத்தைப் பொறுத்தது.
உதாரணத்திற்கு சனி இருக்கும் வீட்டின் பரல் 30 அல்லது அதற்கு
மேற்பட்டு இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள தீய பலன்கள் இருக்காது
அதை மனதில் கொள்க!
ஆகவே பயம் கொள்ளாமல் ஜாதகத்தின் பிற அம்சங்களையும் கூட்டிக் கழித்து
பலனைப் பார்க்கவும்.
Don't jump to any conclusion without analyzing the other aspects of Saturn
and the house where he is occupying!
________________________________________________________________
1ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல்
Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல்
++++Saturn in the Third House
Saturn in the 3rd makes one very intelligent & liberal minded.
Will have strength of character and will be adventurous.
Will have subordinates and all the comforts of life.
துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல்
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல்
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல்
Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7ல்
++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல்
++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல்
+++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!