மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.19

கடவுள் இல்லை என்று யார் சொன்னது?


கடவுள் இல்லை என்று யார் சொன்னது?

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...

ஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....

ஹோட்டல் நடத்துபவர்: அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?

படித்ததில் பிடித்தது...
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.19

யார் ஏழை?


யார் ஏழை?

நாம்தான் ஏழை.......

மன நிறைவு

பல சமயங்களில் நம்மிடம் இருப்பதை மறந்து இல்லாத விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்துகிறோம். ஒருவருக்கு உபயோகமில்லாத பொருள் மற்றவருக்கு பொக்கிஷமாக இருக்கலாம். எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.

நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் விஷயங்களுக்காக நன்றி செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒருவர் தன் வாழ்வின் வரங்களை எண்ணி நன்றி உணர்வோடு இருந்தால், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் இருக்கலாம்.

 “குறைவான ஆசைகளுடன் இருப்பவன் தான் பணக்காரன். அதிக ஆசைகள் இருப்பவன் தான் பரம ஏழை.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனுக்கு மக்கள் எவ்வளவு ஏழையாக இருக்க முடியும் என்பதைக் காண்பிக்க நாட்டுபுறத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்தார். ஒரு ஏழ்மையான குடும்பத்துடன் அவர்களது சிறிய பண்ணையில் சில நாட்கள் தங்கினார்.

பயணம் முடிந்து, வீடு திரும்பியவுடன் தந்தை தன் மகனிடம், “இந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டார். மகனும் மிக அருமையாக இருந்ததாகப் பதிலளித்தார். “மக்கள் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா?” என்று தந்தை கேட்டதற்கு “நிச்சயமாக” என்று கூறினான்.

“இந்த பயணத்திலிருந்து புரிந்து கொண்ட விஷயங்கள் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு மகன், “நமக்கு ஒரு நாய் இருக்கையில் அவர்களுக்கு நான்கு இருக்கிறது. நம் நீச்சல் குளம் பாதி தோட்டம் வரை உள்ளது. அவர்களுக்கு வற்றாத ஆறே உள்ளது. நம் தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து  இறக்குமதி செய்யப்பட விளக்குகள் வெளிச்சம் அளிக்கின்றன. அவர்களுக்கு வானத்தின் நட்சத்திரங்கள் அனைத்துமே உள்ளன. நம் திண்ணை முன் வாசல் வரையில் தான். ஆனால் வானம் முழுவதும் அவர்களுக்கு இருக்கின்றது. நாம் குடியிருக்க தேவையான பூமியில் வீடு கட்டி வாழ்கிறோம். இவர்களது வயல்களோ பல மைல்கள் தூரம் பரவியிருக்கின்றன. நமக்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கின்றனர். நாம் உணவை வாங்குகிறோம், ஆனால் அவர்கள் பயிரிட்டு உணவை உண்ணுகிறார்கள். நம்மை பாதுகாக்க வீட்டை சுற்றி மதில் இருக்கிறது, அவர்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர்.“ என்றான்.

இதையெல்லாம் கேட்ட தந்தைக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமித்துப் போனார்.

மகன் இறுதியாக, “ உண்மையில் நாம் தான் ஏழை என்று காட்டியதற்கு மிகவும் நன்றி” என்று சொன்னான்.
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.2.19

நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!


நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!

இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

சத்தத்தில் சங்கீதம் இருக்கு -  அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.

என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.

இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள்  மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்

பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

!!நோய் தீர்க்கும்  ராகங்கள்!!

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.

நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

* பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது

   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    படம்      :      முள்ளும் மலரும்

 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்

    படம்    :     தென்றலே என்னைத் தொடு

* பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்

   படம்    :     கேளடி கண்மணி

* பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்

    படம்    :     வருசம் 16

 * பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்

    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்

   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

    படம்    :     தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.

படம் :   அக்னி நட்சத்திரம்

 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு

  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்

  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்

  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,

நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி

படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து -  ஸ்ரீ ரஞ்சனி

 படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி

  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி

  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி

  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே - நீலாம்பரி

  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்

  படம்  :  சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  - அம்சத்வனி

  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்

  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி

  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி

   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்

  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்

  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா

  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்

  படம்  :  மந்திரி குமாரி

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் -  பகாடி,  ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் - அடான

படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி - அடான

படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க -  ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா

படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா

படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி

படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா

படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா

படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் - முகாரி

படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி

படம்  :  ஆதிபராசக்தி

பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு

படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?

திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.

நேரம் - ராகம்

5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்

6-7  மணிக்கு
பிலஹரி

7-8 மணிக்கு
தன்யாசி

8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு
மத்யமாவதி

11-12 மணிக்கு
மனிரங்கு

12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்

1-2 மணிக்கு
மாண்டு

2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.

 இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்போம்  அமைதி பெறுவோம்.

நன்றி....

ஆக்கம்:  *NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.2.19

*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*


*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*

*திருப்பதி திருமலை - நேரம் அதிகாலை , நான்கு மணி*

*திருமலை வாசனுக்கு அன்றைய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது*

*சிலையாக இருந்த திருமால் பேச துவங்கினார்*

*அர்ச்சகரிடம் , கேசவா அனந்த நம்பி எங்கே ?! (எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் கேட்டார் திருமால் )*

*கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜ உடையாரின்* *உத்தரவின் படி தங்களுக்கு மலர் கைங்கர்யம்* *செய்வதற்கு பூக்கள் பறிக்க நந்தவனம்* *சென்றுள்ளார்* *ஸ்வாமி*

*திருமால் :- கேசவா , நீர் நந்தவனம் சென்று நம்பியை நான் அழைத்தேன் என்று உடன் அழைத்து வாரும்*

*கேசவன் :- ஆகட்டும் ஸ்வாமி*

*( நந்தவனம் சென்ற கேசவன் , நம்பி உன்னை ஸ்வாமி அழைத்து வர சொன்னார் என்று சொன்னார் )*

*நம்பி  :- கேசவரே , சற்று பொறுங்கள் , இன்று ஸ்வாமிக்கு சூட வேண்டிய மலர்களை பறித்து முடித்ததும் கிளம்பலாம்*.

*கேசவன் :- ஆகட்டும் நம்பி , அரைமணி நேரம் கழித்து இருவரும் திருமாலுக்கு முன் நின்றனர்*

*திருமால் :- நம்பி , நான் உன்னை* *அழைத்ததும் வராமல் ஏன் அரை மணி நேரம்* *தாமதமாக வந்துள்ளாய் ?!*  *கேசவன் ,  நான் அழைத்ததை உன்னிடம்  சொல்ல வில்லையா ?!*

*நம்பி :- ஸ்வாமி , ஆனால் என் குரு ஸ்ரீ இராமானுஜ உடையார் எனக்கு இட்ட கட்டளை என்னவெனில் நீ தினமும் உங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வது தான்*.

*அதை சிறிதும் பிசகாமல் முடித்த பின்பு தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன் ஸ்வாமி என்று கூறி கொண்டே திருமாலுக்கு மாலை தொடுத்து சூடினார்*

*திருமால்  :- சிரித்து கொண்டே , அதற்காக நான் அழைத்தால் கூட நீ தாமதமாக தான் வருவாயோ ?!*

*உன் குருவுக்கும் ஏன் இந்த ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் யாமே கடவுள் அதை அறிவாய் அல்லவா , நீ இப்பொழுது*.

*நம்பி :- சிரித்து கொண்டே , ஸ்வாமி நீங்கள் ஈரேழு பதினான்கு லோகத்தையும் காத்து அருள்வதால் உம்மை கடவுள் என்கிறோம்*.

*அது உமது பணி மற்றும் கடமை. அதைப் போலவே எமது குருவின் கட்டளைக்கு இணங்க , உமக்கு மலர் கைங்கர்யம் செய்வது எனது பணி , எனது கடமை*

*ஒரு கடவுளுக்கு தம் கடமை எவ்வளவு முக்கியமோ , அதே போல் , அதே அளவு ஒரு சீடனுக்கும் தன் குருவின் கட்டளை மிகவும் முக்கியம்  அல்லவா. உமக்கு பூஜைக்கு நேரம் ஆகி விட்டது , நான் வருகிறேன் என்று நடையை காட்டினார் நம்பி*

*மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் வழக்கம் போல் நம்பி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கச் சென்றார்*.

*திருமால் :-  ஆதிசேஷனை பார்க்க , ஆதிசேஷன் ஒரு பூநாகமாக உருவெடுத்து நம்பி பூ பறிக்கும் பூவுக்குள் ஒளிந்து நம்பியின் கையை கடித்து மறைந்து விட்டான்*

*பூநாகம் கடித்ததும் கையில் இரத்தம் கசியக் கசிய பூக்களைப் பறித்து , அதில் தனது கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பூக்கள் மேல் படாமல் , பூக்களை பறித்து , ஆலயம் வந்து திருமால் முன் நின்று பூ தொடுத்தார்*

*திருமால் :- மீண்டும் பேச துவங்கினார்*

*நம்பி கையில் இரத்தம் வழிகிறது பார் , பற்று போட்டு பின் எனக்கு கைங்கர்யம் செய்யலாமே*

*நம்பி :- ஸ்வாமி , எனக்கு குருவின் கட்டளையே மிகவும் முக்கியம் பின்பு தான் அனைத்தும்*.

*தங்களுக்கு பூ பறிக்கும் போது , ஒரு பூ நாகம் என்னை  தீண்டி விட்டது. அதனால் சிறிது இரத்தம் வேறொன்றும் இல்லை ஸ்வாமி*

*திருமால் :- சரி கடித்த நாகம் வல்லமையற்ற விஷமாக இருப்பதால் , நீர் மலர் கைங்கர்யம் செய்ய முடிந்தது*.

*ஒரு வேளை கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்தால் நீர் இறந்தல்லவா போயிருப்பீர்*.

*உமது குருவின் கட்டளையை எப்படி நீர் நிறைவேற்றுவீர்*

*நம்பி :- அப்போதும் என் குருவின் கட்டளையை நிறைவேற்றுவேன் ஸ்வாமி*

*திருமால் :- எப்படி ?!*

*நம்பி :- ஸ்வாமி ,  ஒரு வேளை தாங்கள் கூறியது போல் கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்து , நான் இறந்தால் கூட , என் குருவின் ஆசியுடன் உங்களுக்கு வைகுண்டம் வந்து கைங்கர்யம் செய்வேன் ஸ்வாமி*

*திருமால் விடாமல் ஒரு வேளை நான் நீர் வைகுண்டம் வர அனுமதிக்க விட்டால் ?! நீர் என்ன செய்வீராம் ?!*

*நம்பி :- ( சிரித்து கொண்டே ) நீர் யார் அய்யா ?!  எமக்கு அனுமதி தராமல் போவதற்கு ?!*

*என் குருவின் ஆசி இருந்தால் , எம்மால் எங்கும் செல்ல முடியும்*.
*எல்லாம் செய்யும் வல்லமை பெற்றவர் எம் குரு*.

*எல்லாம் செய்யும் வல்லமை உடையவர் என்பதாலே , அவர் உடையவர் என்று அழைக்க படுகிறார்*

*மேலும் தாய் தந்தையைப் போற்றி காக்கும் பிள்ளைக்கும் , குருவின் கட்டளையை சிரம் மேற்கொண்டு சேவை செய்யும் சீடனுக்கும் மோட்சமும் முக்தியும் கிடைக்கப் பெற்று , வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று நீரே நியதி வகுத்துள்ளீர்*

*அப்படி இருக்க , நீர் வகுத்த நியதியை நீரே மீறமுடியுமா என்ன ?!  என்று கேள்வி மேல் கேள்வி கேட்க , வாய் அடைத்து போனார்*

*திருமால் :- ம்ம்... இராமானுஜன் தனக்கு சரியான ஆளைத் தான் , மலர் கைங்கர்யம் செய்ய வைத்து உள்ளான் என்று நினைத்து கற்சிலைக்குள் உறைந்து போனார் திருமால்*

*குரு பக்திக்கு இந்தக் கதையை விட வேறு ஒரு சிறந்த சான்றும் உண்டோ ?!*

*(கு - இருட்டு*
*ரு - அகற்றுபவர்)*

*(குரு என்பவர் , நம் மனதில் உள்ள அறியாமை ஆகிய இருட்டை அகற்றுபவரே குரு என்பவர் ஆவார் )*
--------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.19

Astrology: Jothidam: 22-2-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: Jothidam: 22-2-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி.  ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை:  மருத்துவ ஜோதிட நியதிகளின்படி ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும். ஜாதகரின் 62வது வயதில் அவருக்கு செவ்வாய் திசை துவங்கியது. செவ்வாய் 12ம் இடத்தில் (விரைய ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் அவர் 6ம் வீட்டிற்கும் உரியவர். (அது நோய் ஸ்தானம்) மேலும் இன்னொரு பாவகிரகமான சனீஷ்வரன் 6ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 12ல் இருக்கும் செவ்வாயை நேரடியாக பார்க்கிறார். இந்த அமைப்பே ஜாதகருக்கு புற்று நோய் உண்டாகக் காரணமானது!!!

புதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 1-3-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger shri vinay said...
Mars dasa is running...mars for 6 th house responsibility sits in enemy house 12 th house...Saturn also looks mars by his 7 th sight....
Friday, February 22, 2019 6:25:00 AM
--------------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
செவ்வாய் மஹா தசை நிம்மதியை குலைக்க காரணமாயிற்று.
செவ்வாய் 6ம் அதிபதியாகி, விரயத்தில் நின்று அவரது வீட்டில் பகை பெற்று அமர்ந்தது உள்ள 8ம் அதிபதி சனியுடன் நேருக்கு நேர் பார்வையில் உள்ளார்.
6, 8, 12 இடங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் பெற்று 6ம் அதிபதியின் தசையில் கவலை கொள்ளும் வகையில் ரோகம் அளித்தது.
Friday, February 22, 2019 4:42:00 PM
--------------------------------------------------------
3
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம். 31 மார்ச் மாதம் 1957, காலை 11.54:00, உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி அமாவாசை திதி (இடம்: சென்னை)
1. மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் (4 பரல்) உச்சமான சுக்கிரனுனும், சந்திரனுடனும் சேர்ந்து குருவின் 7ம் பார்வையில் 10ம் வீட்டில் அமர்ந்து உள்ளார். எதையும் தாங்கும் தைரியம் இருக்கும்.
2. 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் (5 பரல்) 12ல் அமர்ந்தால் வாழ்க்கை தொல்லைகள், துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒழுக்கமில்லாமல் இருப்பார்.
3. 6ம் வீட்டில் சனி (2 பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 12ல் அமர்ந்துள்ள 6ம் வீட்டு அதிபதி செவ்வாயை தன்னுடைய நேர் பார்வையில் வைத்துள்ளார். ஆரோக்கியம் இல்லாதவர். 6ல் சனி இருந்தால் அடி வயிறு சமந்தமான நோய் உண்டாகும்.
4. 2018 முதல் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பம். 62 வயதில் (2019-2020) 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் மகா தசையில் ராகு புக்தியில் கொடிய நோய் ஆரம்பமானது.
இந்த கால கட்டத்தில் கோள் சாரத்தில் 12ல் செவ்வாய் அமர்ந்து 8ம் பார்வையால் சனியை பார்ப்பதால் தீவிரமான நோய் ஏற்பட்டது . லக்கினத்தில் ராகுவும் 7ல் கேதுவும் சனியும் சேர்ந்து கொடிய நோய் உண்டாக்கினார்கள்.
அடுத்து வந்த செவ்வாய்-குரு தசையில் குருவின் 9ம் பார்வை 12ம் வீட்டில் உள்ள செவ்வாய் மீது இருப்பதால் நோயிலிருந்து நிவாரணம் அளிப்பார்
5. 5ல் ராகுவினால் புத்திர தோஷம் ஏற்பட்டது. 5ம் வீட்டில் (20 பரல்) குருவின் பார்வையில்லாமல் 5ம் வீடு பலவீனமானது. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம். குருவின் 7ம் பார்வையால் தோஷம் இல்லாமல் செய்து விட்டார்.
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
Saturday, February 23, 2019 12:57:00 AM
--------------------------------------------------------------
4
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
22-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிதுன லக்ன ஜாதகம்.
62 வயதில் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாகும். செவ்வாய் ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதியாவார். அவர் விரய ஸ்தானத்திலிருந்து, தன் வீடான ஆறாம் வீட்டை பார்க்கிறார். ஆறாம் வீட்டில் இன்னொரு பாவியான சனி இருக்கிறார். எனவே, ஜாதகருக்கு அந்த வயதில் புற்று நோய் வந்தது.
அ.நடராஜன்
சிதம்பரம்.
Saturday, February 23, 2019 1:03:00 PM
---------------------------------------------------------
5
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
இந்த ஜாதக அலசல் தங்களால் கடந்த‌ 2012ம் ஆண்டு கீழ்க்கண்ட இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
http://classroom2007.blogspot.com/2012/04/astrology_23.html
அதனால் நான் என்னுடைய அலசல் பதிலை எழுதவில்லை.
அதை படிக்கும் போது தங்கள் தங்கை கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2010 பிப்ரவரி திங்கள் 17ல் அமரராகி விட்டது தெரிய வந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்.
அந்த இணைப்பில் "என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று எழுதியுள்ளீர்.
அதற்கான சமயம் வந்து விட்டது என நினைக்கிறேன். தங்களின் அறிவிப்பை விரைவில் எதிர் நோக்கும்,
இரா. வெங்கடேஷ்.
Saturday, February 23, 2019 2:19:00 PM
----------------------------------------------------
6
Blogger Sanjai said...
பொதுவாக ராகு, செவ் மற்றும், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயைக்கான காரணங்கள் .
இந்த உபய லக்கின ஜாதகர்,. ஆறாம் வீட்டதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் இருந்து ஏழாம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்
மற்றும் ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம்.
ஆறாம் வீடு என்பது பிணியை பற்றி கூறுவது
பாதகாதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் செவ்வையை (ஆறாம் அதிபதியை) பார்க்கிறார்.
Saturday, February 23, 2019 4:11:00 PM
-----------------------------------------------------
7
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)6ம் அதிபதி செவ்வாய்,12ல் அமர்ந்து 6ம் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்.சொந்த வீட்டை பார்த்தாலும்,விரையத்தில் அமர்ந்து பார்பதால் தீமையே.மேலும் அவர் வர்கோத்தமம்.6ல் சனி பகவான் அமர்வு.அவர் லக்கின சுபரானாலும்,6ல் மறைந்து செவ்வாய்
ஆதிக்கத்தில்.எனவே 6ம் அதிபதி செவ்வாய் தசாவில் சனி சம்மந்தபட்ட புற்று நோயை கொடுத்தார்.நன்றி.
Saturday, February 23, 2019 6:56:00 PM
-----------------------------------------------------
8
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
புற்று நோய் 62 இந்த மனிதரை தாக்க காரணங்கள்
பொதுவாக நோய் வர ஆறாம் இடத்து கிரகமும் ஆறாம் இடத்து அதிபதி தான் காரணம், இதில் ஆறாம் இடத்தில் சனி அமர்ந்து ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய் யை பார்ப்பதால் ஜாதகரை புற்று நோய் தாக்கியது .
மேலும் ஆறாம் இடத்து அதிபதியின் தசை யான செவ்வாய் தசை சனி புக்தி யில் புற்று நோய் தாக்கியது .
மேலும் சுக ஸ்தான அதிபதி புதன் நேச பங்கம் பெற்று அஸ்தங்கதம் ஆனதும் , எட்டாம் இடத்து அதிபதியின் புக்தி ஆறாம் இடத்து அதிபதியின் தசை இரண்டும் புற்று வந்ததின் கான முக்கிய காரணமாக உள்ளது .
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Saturday, February 23, 2019 8:04:00 PM
----------------------------------------------------
--------
Blogger வேப்பிலை said...
தொண்டையில் வந்த புற்று நோயா?
Saturday, February 23, 2019 8:29:00 PM

இல்லை
------------------------------------------------------
9
Blogger sundari said...
மிதுன லக்கணத்துக்கு பாவியான செவ்வாய் தசையில் அவருக்கு புத்து
நோய் வந்துவிட்டது அவர் 6 ஆம் அதிபதி 12 இல் இருக்குது அப்பறம் சந்தரன் சுகுரான் கூட இருக்குது செவ்வாய் சனி பார்வையில் அவர் 8 அதிபதி அவர் செவ்வாய் வீட்டில் இருந்து பார்க்கிறார் மேலும் சனியை செவ்வாய் பார்க்கிறார் விரய அதிபதி தசையில் புத்து நோய் வந்துவிட்டது
Saturday, February 23, 2019 9:21:00 PM
--------------------------------------------------
10
Blogger ஃபெர்னாண்டோ said...
நோய் வீடான 6-க்கு அதிபதி செவ்வாய் வர்கோத்தம பலம் பெற்று, 12-ல் மறைந்து தன் ஆறாம் வீட்டை பார்க்கிறார்.
ஆறாமதிபதியும் பாவருமான செவ்வாயும், அஷ்டமாதிபதியும் பாபருமான சனியும், ஒருவரை ஒருவர் சமசப்தம நிலையில் பார்க்கிறார்கள்.
ஆறாம் வீட்டில் 8-ம் அதிபதி, 12-ல் ஆறாம் அதிபதி, ஆறாம் அதிபதி பார்வை 6-ல், 8-ம் அதிபதி பார்வை 12-ல் என்று, மறைவிடங்களும், மறைவிட அதிபதிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது நல்லதல்ல.
லக்னாதிபதி புதன், ராசி (சந்திரன்), இருவருக்கும் வீடு கொடுத்த குரு ஆகிய மூவரும் அம்சத்தில் நீசம்.
::: ஐ எஸ் ஃபெர்னாண்டோ
Saturday, February 23, 2019 9:21:00 PM
----------------------------------------------------
11
Blogger kmr.krishnan said...
6 th disease house occupied by 8 th house lord Saturn. Both 6 th snd 8 th house lords Mars and Saturn look at each other directly. 6 th housr lord hidden 22 th house. So most probably the disrase affected in 6 th house lord' s dasa that is Mars dasa.
Sunday, February 24, 2019 3:21:00 AM
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.19

Astrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன கண்ணம்மா?

Astrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன கண்ணம்மா?

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி.  ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.

சரியான விடை 24-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.2.19

நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)


நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்

ஹா ஹா ஹா.......நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் .

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காிகாலனின் கல்லணை.  சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்  இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது

*Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன!  அதிசயமாக இருக்கிறதா...?

 இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது  லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது என்று.

ஆனால்  நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்என்றாா்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும்
கலாச்சாரமும்  ஞானமும் - அதை நீங்கள் உணர வேண்டும!!!
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.19

பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!


பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!

*கவிஞா் கண்ணதாசன் சொல்கிறாா்:*
✍✍✍✍✍✍✍✍
*ஞானம் பிறந்த கதை:  பட்டினத்தாா் சொல்கிறாா்:*
😌😌😌😌😌😌😌😌😌

புனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது.

சமணர்களும், பிறரும் கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தாா் சிவானந்தயோகி. நான் அவா் காலில் விழுந்து வணங்கினேன். அவா் கண்ணைத் திறந்து பாா்த்தாா். நான் விவரங்களைச்  சொல்லவே இல்லை; அவரே சொன்னாா்.

*"தண்ணீாில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீா் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே*
*உட்காா்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும்.  போகி நீாிலே* *குளிக்கிறான்.  யோகி நெருப்பிலே* *குளிக்கிறான். ரோகி நடுவிலே நிற்கிறான்; நீ*  *போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது;*
*ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்."* அவா் பேசி முடித்தாா்.

என்னை ஆசிா்வதித்தாா். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னாா். அவா் அதைச் சொல்லும் போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது.  *"பிரம்மம் ஒன்றே"* என்பதை அது உணா்த்திற்று.

அந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன்.  மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவா்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தாா்கள். அது ஒரு வகை தா்மம்.

அந்தத் திருவோட்டை கையில் வாங்கிக் கொண்டு ஊரே என்னை வேடிக்கை பாா்க்கும் நிலையில் நேரே என் தாயாாின் இல்லத்துக்கு
வந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலே தான்
வாங்க வேண்டும்.

*"வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க,
பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க,
மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க,
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே?"*  ..... என்று ஆயிரக்கணக்கானவா்கள் வேடிக்கை பாா்க்க, தாயின் முன்னாலே நின்று, *"தாயே பிச்சை"*  என்று கோஷம் கொடுத்தேன்.

கையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயாா், என்னைப் பாா்த்து சிாித்தப்படி, *"மகனே இன்னும் நீ பணக்காரனா"* என்றாா்கள்.  *"ஏன் தாயே அப்படிச் சொல்கிறீா்கள்?"* என்றேன்.  *"வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்கு சொந்தமாகி விட்டதே!"* என்றாா்கள்.

*"எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது"*

அந்த ஓட்டைத் தூக்கி
தூக்கியெறியப் போனேன்.

*"நில், அந்த ஓட்டை வைத்துக் கொள்.  ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே!"*  அது காணாமல் போனால், *"என் ஓடு எங்கே?" என்று தேடாதே!"* என்றாா்கள். பிறகு பிச்சை இட்டாா்கள்.

அடுத்தது மனைவியின் இல்லம்; அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள். .
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.19

எதை முதலில் *நேசிக்க வேண்டும்*


எதை முதலில் *நேசிக்க வேண்டும்*

தன் மனைவியின் பிறந்தநாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான்.

முதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்து விட்டு, அவளை ஆரத் தழுவினான்.

பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான்.

அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் புதிய காரை ஓட்டிச் சென்றாள்.

ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுப் பகுதியில் காரை மோதி விட்டாள்.

அவளுக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகி விட்டது. குற்ற உணர்வு அவளைப் பற்றிக் கொண்டது.

அவரிடம் என்ன சொல்வது? அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்? போன்ற கவலைகள் அவளை மொய்த்தன.

விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா? என்று கேட்டார்.

நடுங்கும் கைகளுடன் தன் கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள்.

கண்களில் கண்ணீர் தாரைத்தாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள்.

அதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.

அதில்,

என் அன்பே!
ஒருவேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்,
இதை நினைவில் வைத்துக் கொள்.
நான் நேசிப்பது உன்னைத் தான்,
காரை அல்ல.
அன்புடன்! என்று எழுதப்பட்டிருந்தது.

பொருட்களை நேசிக்க வேண்டும்.மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும்.
பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.19

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

காபி புராணம் ஒரு பெரிய புராணம்தான்! சேக்கிழார் எழுதியதல்ல!👍👍

எழுத்தாளர் சுஜாதாவின்  காபி கதை

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ( காஃபி வித் காப்பி)
--------------------------------------------
ஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..

இல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..

அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே
போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக
ஆண்களுக்கு.

காபி அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு
சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும்.

அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி
விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

அந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப
தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.

பழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட
பிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள்
வெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று
ஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது .

காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை
பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட
வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன்
தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள்
அதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.

காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.

ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு
கூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள்.
அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு
வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு
என்று வருவான் என்பது வேறு விஷயம் .

காப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக
இருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற
அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற
ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..

இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.

திடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு
கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள்.

ஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.

சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ்
பெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு
பிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..

அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு
வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..

கல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.

சுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு
காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

தலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது. .மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர்
வகையை சேர்ந்தது.

ஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..

மில்க் ?..

நோ தேங்க் யூ…

ஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .

'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம்
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.19

Astrology: Jothidam: 15-2-2019 புதிருக்கான விடை!!!!


Astrology: Jothidam: 15-2-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருக்கு அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமே பிரச்சினைகள், தொல்லைகள், துன்பங்கள், உறவு, நட்பு வட்டாரங்கள், குடும்பம், நிதிநிலை, வேலை என்று அனைத்திலுமே துன்பம். ஒன்று என்றால் பரவாயில்லை. பத்து என்றால் மனிதர் எப்படித் தாங்குவார்? நொந்து போய் விட்டார்.
என்றதோடு அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 37வயதில் செவ்வாய் மகாதிசை துவங்கியவுடன் பிரச்சினைகள் பலவழிகளிலும் தலைதூக்கத் துவங்கின. செவ்வாய் எட்டாம் இடத்திற்கும் அதிபதி. அத்துடன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனையாகி வலிமையான நிலையில் உள்ளார், இரண்டு தீயகிரகங்கள் வலிமைபெற்றால் அவற்றின் தசாபுத்திகளில் தீமைகள் அதிகமாக இருக்கும் அல்லவா?
11ல் இருக்கும் செவ்வாய் நட்பு வட்டாரங்களில் கேடுகளை உண்டு பண்ணினார். 8ல் இருக்கும் சனீஷ்வரன் 2ம் வீட்டைப் பார்ப்பதோடு, அந்த வீட்டின் மேல் விழுகும் செவ்வாயின் பார்வையோடு சேர்ந்து நிதி நிலைமை மற்றும் குடும்பவாழ்க்கையில் பல அவஸ்தைகளையும் கஷ்டங்களையும் கொடுக்கத்துவங்கினார்,

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 22-2-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger சண்முகசுந்தரம் said...
செவ்வாய் (1,8), பாதக ஸ்தானத்தில், பாதகாதிபதி சனி 8இல், இருவரும் பரிவர்த்தனை யோகத்தில்.... செவ்வாய் 8 க்கு நான்கில், லக்னத்திற்கு பாதகத்தில் ( செவ்வாய் தசை அட்டமாதிபத்யம் மற்றும் பாதகமே செய்யும் - 38 வயதிலிருந்து)... செவ்வாய் சனி இருவரும் பகை வீட்டில்... 8இல் இராகு வேறு, சனி சாரத்துடன்.... கேது சாரமும் சனி பார்வையும் 6 ஆமிடத்திலும் நின்ற குரு பார்வைக்கு பலமில்லை... அவமானம், துரோகம், பிணி, கடன் அனைத்தும் தலைவிரித்து ஆடும் நிலை... சிறுநீரக மற்றும் பாலுறுப்பு சம்பந்தமான, ரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் வரலாம்....
Friday, February 15, 2019 12:41:00 PM
---------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
சுக்கிர தசை, சூரிய தசை, சந்திர தசை கொடுத்த சாதக நிலைமையினை, லக்கினாதிபதியின் தசை கொடுக்க மறுத்ததன் காரணம்...
செவ்வாய் அட்டமாதிபதியாகி சனியுடன் பரிவர்த்தனை பெற்றது மட்டுமலல்ல, சனி 10ம் அதிபதியாகவும் உள்ளது நிதிநிலை வேலைத் துன்பங்களை அளித்தது.
மேலும் இவ்விருவர் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுவது குடும்பம் உறவு மற்றும் துன்ப நிலையினையும், செவ்வாய் 8ம் பார்வையினால் 6ம் வீட்டையினையும் சனி ராகுவுடன் கூட்டுச் சேர்ந்து 10ம் பார்வையினால் குருவை பார்ப்பதும் தொல்லையை அளிக்கக் கூடிய அமைப்பு என கருத முடிகின்றது.
கேது சகிதம் மாந்தி அமர்ந்து பிரச்சனம் வேறு பண்ணுகின்றார். மொத்தத்தில் செவ்வாய் தசை தொடங்கியபின்னர்(சுய தசை என்ன செய்தது ,,???) கஷ்டத்தில் உழன்றார் என்பது சாராம்சம்.
Friday, February 15, 2019 4:52:00 PM
--------------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
என்ன நினைத்து என்னை படைத்தாயோ கேள்விக்கான பதில்
பத்து வித கஷ்டத்திற்கான காரணங்கள்
1. லக்கின அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அதிபதி குரு நவாம்சத்தில் பன்னிரண்டில் மறைவு . விரய வாழ்க்கை .
2. ராசி கட்டத்தில் குடும்ப ஸ்தானத்தில் மற்றும் எட்டாம் இடத்தில் கேட்டு மற்றும் ராகு , மேலும் ராகு உடன் சனியின் கூட்டு .
இது பலவித கஷ்டங்களை கொடுத்தது .
3. ஏழாம் இடத்து அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்தில் ராகு உடன் சொந்த வீட்டில் கூட்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவு அமையவில்லை
4. லக்கின கட்டத்தில் இரண்டாம் இடத்தில் மாந்தி குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது
5. லக்கின கட்டத்தில் லக்கின அதிபதி செவ்வாய் ராகு வின் நட்சத்திரத்தில் அமர்ந்து பலன் அளிக்க தவறியது .
6. ஐந்தாம் இடத்து அதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைவு . பூர்வ புண்ணியத்தையும் காலி செய்தது.
7. நவாம்ச கட்டத்தில் லக்கினத்தில் சனி சந்திரன் இணைவு புனர்பூ தோஷத்தை உண்டாக்கி குடும்ப வாழ்வை பிரித்தது.
8. நான்காம் இடத்து அதிபதி நான்கிற்கு ஆறில் அமர்ந்து சுகத்தை கெடுத்தது .
நன்றி
அன்புடன்
சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Friday, February 15, 2019 4:54:00 PM
-------------------------------------------------------
4
Blogger sundari said...
வணக்கம் சார்
மேஷ லக்கணத்துக்கு சுகுரா தசை சுகம் தராது 2 மாந்தி கேது இருக்குது 2 இல் சனி பார்வை 8 இல் சனி நீண்ட ஆயில் இதுசுகத்துக்கு சந்தோசத்துக்கும் ஏற்றது இல்லை 7 ஆம் அதிபதி சுகுரான் பாப்பா கத்திரி தோஷம் அடைந்தார் அவர் 2 ஆம் அதிபதி கூட 8 இல் ராகு மனைவி நல்லாவா இல்லை செவ்வாய் சனி பரிவர்த்தனை ஆனது எல்லாரும் சொல்லுகின்றார் கல் மேஷ லக்கணத்துக்கு செவ்வாய் நல்லது செய்யாது
மேஷ லக்கணத்துக்கு லக்கினாதிபதி செவ்வாய் நல்லது செய்யாது கரணம் 8 ஆம் அதிபதி செவ்வாய் தசை ரக்து தசை நல்ல இருக்காது புதன் பாவியாகி விட்டார் பாக்கிய அதிபதி குரு சனி பார்வை பெற்றது குரு புத்திர தன கிரகம் லக்கின புத்திர கரண் சூரியன் அந்த வீட்டுக்கு 12 இல்
Friday, February 15, 2019 9:19:00 PM
----------------------------------------------------------
5
Blogger Sanjai said...
- லக்கினாதிபதி பாதக ஸ்தானத்தில்
- பாதகாதிபதி எட்டாமிடத்தில்
- அவர்கள் இருவரும் பரிவர்த்தனை
- செவ்வாய் தசை தொந்தரவை ஆரம்பித்தது
- அதன் பின் எட்டில் உள்ள ராகுவின் தசை பிரெச்சனையை தொடர்ந்தது அல்லது பெரிதாக்கியது
- இரண்டில் உள்ள கேது அந்த வீட்டை ஆப் செய்து விட்டது மேலும் மாந்தி தொடர்பு சில விபத்துக்களையும் அல்லது இழப்புகளையும் காட்டுகிறது
- சந்திரன் கத்திரி யோகத்தில் (ஒரு புறம் சனி ராகு மறுபுறம் செவ்வாய்)
இவை அனைத்தும் பிரச்னை தொடர வழி வகுத்தது
Saturday, February 16, 2019 7:39:00 AM
----------------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி பதினொன்றில் சிறுவயதிற்கு காரகர்
2 .பின் வந்த நீச கேது தசை இளம் சிறுவயதில்
3 .அதன் பிறகு வந்த சுக்ர சூரிய சந்த்ர தசை அதிபர்கள் கேந்திரத்தில்
4. எட்டாம் அதிபதி செவ்வாய் திசை ராகு புத்தியில் பிரச்சனைகள் ஆரம்பமாகி இருக்கலாம்
நன்றி,
தங்களின் விடையை ஆவலுடன் எதிநோக்கி
Saturday, February 16, 2019 9:28:00 AM
--------------------------------------------------------
7
Blogger ezhil said...
dear sir,
jadagar may be in chandra dasa and elarai sani (jenma sani) period.
thanks&rgds
Saturday, February 16, 2019 11:33:00 AM
------------------------------------------------------------
8
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the person was born on 21/07/1956 12.05am place Coimbatore. Due to Dainya parivarthanai between Mars and saturn becomes misery, suffering in horoscope it is inauspicious yoga and this happens during Mars dasa saturn bukthi.But later he will overcome all problem due to powerful yogas in horoscope
Saturday, February 16, 2019 12:28:00 PM
------------------------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
"Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?"
மேஷ லக்கினம், தனுர் ராசி ஜாதகர்.
அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்?
1) கர்மாதிபதி சனி 8ல் ராகுவுடன் சேர்ந்து மறைவு. 8, 11 அதிபதிகள் செவ்வாய் மற்றும் சனி தைன்ய‌ பரிவர்த்தனையில் உள்ளனர். ஜாதகரின் 38ம் வயதில் வந்த செவ்வாய் தசை, ராகு புத்தியில் கஷ்டங்கள் துவங்கின.இருந்த வேலையும் போயிற்று.
2) தனஸ்தானத்தில் கேது, மாந்தி கூட்டணி நிதி நிலைமையை மோசமாக்கியது. தனாதிபதி மூன்றில் கத்திரியின் பிடியில் சிக்கி ஜாதகரின் கஷ்டங்களை அதிகபடுத்தினார்.
3)அடுத்து வந்த ராகு தசை ஜாதகரை புரட்டி போட்டது. குடும்பம், உறவு மற்றும் நண்பர்கள் ஜாதகரை விட்டு விலகினர்.
4) பின் வந்த குரு தசை நிலமையை ஓரளவு சீராக்கியிருக்கும். (லக்கினாதிபதி செவ்வாய் குருவின் பார்வையுடன்).
வாத்தியாரின் அலசல் பதிலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, February 16, 2019 5:31:00 PM
------------------------------------------------------------
10
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம். 21 ஜூலை மாதம் 1956, காலை 00.14:00, மூல நட்சத்திரம் மேஷ ராசி (இடம்: சென்னை)
1. மேஷ லக்கினம் லக்கினாதிபதி செவ்வாய் கும்ப ராசியில் 11ம் வீட்டில் குருவின் 7ம் பார்வையில் உள்ளார். 8ம் வீட்டிற்கும் அவரே அதிபதி.8ம் வீட்டு அதிபதியின் பார்வை குருவின் மீது உள்ளது
2. அதிகமான கஷ்டத்தை கொடுக்க கூடியது 8ம் வீடு . 8ம் வீட்டில் சனியும் , ராகுவும் ஒன்று சேர்ந்து இருந்தால் கொடிய நோய் உண்டாகும் .
If Saturn occupies the 8th, the native will suffer from leprosy and fistula in the anus, or pudendum and will fail in his undertakings - Saravali
3. 38 வயதில், 1994ல் செவ்வாய் -குரு புக்தியில் கஷ்டம் ஆரம்பித்தது . அந்த நேரத்தில், கோச்சாரத்தில் குருவும், ராகுவும் 6ம் வீட்டில் இருப்பதால் நோய் ஆரம்பமானது. ஜாதகத்தில் 8ம் வீட்டின் அதிபதி 7ம் பார்வை குருவின் மீது இருப்பதால் கஷ்டங்கள் அதிகமானது
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
Sunday, February 17, 2019 12:40:00 AM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.2.19

Astrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?


Astrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமே பிரச்சினைகள், தொல்லைகள், துன்பங்கள், உறவு, நட்பு வட்டாரங்கள், குடும்பம், நிதிநிலை, வேலை என்று அனைத்திலுமே துன்பம். ஒன்று என்றால் பரவாயில்லை. பத்து என்றால் மனிதர் எப்படித் தாங்குவார்? நொந்து போய் விட்டார்.

கேள்வி இதுதான். அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 17-2-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.2.19

விதியும் சதியும்!!!!!


விதியும் சதியும்!!!!!

#விதிப்படியல்ல...
*****************

ருசியோடு ஒரு மருத்துவமனை
உன் வீட்டின் சமயலறை!

மேற்கத்திய சிகிச்சை முறை
உன் மரணத்தின் தொடக்க உரை...

நம் இயற்கை மருத்துவ வழி முறை...
அந்த மரணத்திற்கே முடிவுரை!

கருஞ்சீரகமும்,பெருஞ்சீரகம்
மணக்க மணக்க
நோய் தீர்க்கும் மா மருந்து...

அது...
புற்று நோயை பூட்டிவைக்கும்
சுகாதார பூ விருந்து!

மஞ்சள் என்னும்
கிருமி நாசினியின் மகத்துவம்
தெரியுமோ?

வேனல் நீக்கும்
வெந்தயத்தைத்தான் உனக்கு
புரியுமோ?

நடமாடும்
மருத்துவ சாலை உன் வீடு..

உன் வாழ்வு வண்டி
அதில் பயணிக்க அனுமதி கூறு!

உன் தலையணையின்
அடியிலிருக்கும் சுகாதாரமே
உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...

ஆனாலும் நீ,
நோயை இருத்திக்கொண்டு
பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்
சோம்பலைக் கொட்டி!

இனியேனும் அருகிலிருக்கும்
சமையல் கூடத்தின்
நிவாரணம் உணர்...

ஆங்கில மருந்தென்பது
உன்னை ஏமாற்றித்தொலைக்கும்
தற்காலிகத் திமிர்!

உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்
இஞ்சி, மிளகு பற்றிதான் நீ
அறிந்திருக்கிறாயா?

இரத்தத்தை சுத்திகரித்து
இதயத்தை பலப்படுத்தும்
வெங்காய வேகத்தைத்தான்
நீ உணர்ந்திருக்கிறாயா?

பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?
அதன் பலன்தான் உனக்கு புரியுமா?

ஆங்கில மருத்துவர்கள் உன்னை
அடி மடையனாக்கி பிழைக்கும்
வியாபாரத் தந்திரத்தை யோசி...

பொது புத்தி கொண்ட அவன்,
தேகம் மெலிந்த உன்னவர்களிடம்
ஆப்பிள் அற்புத சத்தன்றே
சாதித்து விட்டான் பேசி...

ஒரு வாழைப் பழத்திற்கு
நான்கு ஆப்பிளே சமம் என்பதை
மட்டும் மறுத்து விட்டான்...
கூகுலில் தேடி வாசி!

உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த
பழங்களிலும் மருந்துண்டு என்பதை
ஏனோ? மறைத்து விட்டான்...

உடற்கேட்டை உண்டாக்கும்
மைதாவையும், கோதுமையையும்
நல்லதெனச் சொல்லி பொய்யையும்
அவிழ்த்து விட்டான்...

நல்ல அரிசி,பலகாரங்களுக்குள்தானே
இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...

அரிசி உணவென்பது நம் ஆயுளை 
கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்
கணக்கு வாத்தியார் என்பதையோ
ஒளித்து விட்டான்!

தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்
உனக்காகவிளைத்ததெல்லாம்விசங்கள்!

பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு
ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?

வெள்ளைச் சக்கரையின்
வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே
புசித்துக்  கொண்டிருக்கிறாய்...

நாட்டுச்சக்கரையின் நலன்
தெரியாது!

ஆங்கில வலி மருந்து உன்
சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்
கரு நாகப் பருந்து என்பதை உணர்!

அயோடின் உப்பு மருத்துவர்களின்
வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்
தப்பு தெரியுமோ?

மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க
மடையனாக்கிவிட்டான் உன்னை...

விழித்துக்கொள் நண்பா...
எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்
ஆங்கில  நயவஞ்சகத்தின் சதிப்படி!
----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.2.19

தமிழை தாலாட்டிய வெண்கலம் !!!!


தமிழை தாலாட்டிய வெண்கலம்...

விநாயகனே வினை தீர்ப்பவனே..என்று கேட்க ஆரம்பித்தால் அந்த விடியற்காலைப்பொழுது அவ்வளவு பக்திமயமாகிவிடும்..

பக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது

இவரின் குரல்

தொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..

இரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..

திரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..

கர்நாடக இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கம் ஈடுகொடுத் சாகசம் செய்துகொண்டே திரைப் பாடல்கள் மூலமும்
மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை

எம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி
கட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..

ஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர்.. ஆனானப்பட்ட
ஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லி யமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால்தான்

ஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம்
திரைப்பாடல்கள்..

உழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர்
குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாகிவிட்டது..

சந்திரோதயத்தில், டிஎம்எஸ்சுடன் இணைந்து பாடிய, காசிக்கு போகும் சன்யாசி..பாடல் இன்றளவும் குரல் வள மேதைகளின்
ரகளைக் கச்சேரி என்றே சொல்லலாம்..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...
பட்டணந்தான் போகலாமடி,,,
அறுபடை வீடு கொண்டதிருமுருகா..
தேவன் கோவில் மணியோசை.
பணம் பந்தியிலே..குணம் குப்பையிலே
எங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.
அமுதும் தேனும் எதற்கு...
இப்படி போய்க்கொண்டே இருக்கும் கானங்களின் பட்டியல்..

கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத்தின் ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....'' பாடலின் கம்பீரக்குரல்.

புதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்..

இசைக்காக எண்ணற்ற பட்டங்களை வென்று தமிழினத் தின் நிகரற்ற அடையாளமாகத் திகழும் மறைந்த பத்ம ஸ்ரீ சீர்காழி
கோவிந்தராசனின் 55 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார்.

Sirkazhi Govindarajan (19 January 1933 - 24 March 1988)

ஆக்கம்: எழுமலை வெங்கடேசன்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.19

பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்?


பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்?

பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இதுதான்:-.

●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று  முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்

●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்.

●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்.

●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்.

●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது  தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்!!!!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.19

Astrology: Jothidam: 8-2-2019 புதிருக்கான விடை!!!!



Astrology: Jothidam: 8-2-2019 புதிருக்கான விடை!!!!

அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் கொடுத்திருந்த பெண்ணின் திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு  ஜாதகப்படி
என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தோம்.

லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் கூட்டணி வேறு. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 12ல் உடன் 12ம் வீட்டுக்காரன் பதனுடன் கூட்டணி. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். மொத்தத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட மூவருமே விரைய ஸ்தானமான 12ல். ஆகவே திருமணம் நிலைக்கவில்லை. திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதற்கான அமைப்பு இல்லை.

அத்துடன் லக்கினம் பாபகர்த்தாரி என்னும் அவ யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினத்திற்கு ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம்
செவ்வாய்

புதிருக்கான பதிலை 17 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 15-2-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில்
1. லக்கின அதிபதி சந்திரன் நீசம்
2, குடும்ப ஸ்தான இடத்தின் மீது சனி யின் பார்வை ( மூன்றாம் இடத்து பார்வை )
3. ஏழாம் இடத்து அதிபதி சனி பன்னிரண்டில் மறைவு
4. எட்டாம் இடத்தில் மாந்தி அமர்வு
5. லக்கின அதிபதியுடன் ராகு கூட்டணி
6. சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் பன்னிரண்டில் மறைவு . திருமண வாழ்வு இல்லாமல் போனது .
7. குருவின் பார்வையால் திருமணம் நடைபெற்றது . ஆனால் மேற்கூறிய காரணங்களினால் திருமண சுகம் இல்லாமல் செய்தது
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB . 8879885399
Friday, February 08, 2019 10:22:00 AM
-------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி திரிகோணம் எறியுள்ளார் உடன் ராகு
2 .ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் அது ஏழாம் இடத்திற்கு ஆறில்
3 . இரண்டாம் இடத்தில செவ்வாய்
4 .இரண்டாம் அதிபதி சூரியன் லக்கினத்தில் இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில் விரயத்தில்
5 .ஒன்பதாம் அதிபதி குரு லக்கினத்திற்கு எட்டில்
தங்களின் பதிலை எதிர்நோக்கி
அன்புடன்
நன்றி
Friday, February 08, 2019 12:13:00 PM
--------------------------------------------------------------
3
Blogger Thanga Mouly said...
இந்தப் பெண் திருமண வாழ்க்கையை தவிர்த்தார் எனும் வகையில்,
ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம், இரண்டாம் அதிபதி சூரியன்(குடும்பம்) தனக்கு விரயத்தில் மூழ்கிவிட்டார், அம்சத்திலும் அவர் நீசம்.
7 ம் அதிபதி சனி விரயத்தில் அமர்ந்து 2 ம் வீட்டில் அமர்ந்த செவ்வாயை தனது 3 ம் பார்வையால் பார்த்து விடுகின்றார்.
களத்திரகாரகன் சுக்கிரன் விரயத்தில் அமர்ந்திருந்தாலும் தனது மகா திசையில் திருமணயோகத்தை அளித்திருப்பார்.
வாத்தியாரின் பாடத்தின் அடிப்படியில் ஒரு துஷ்ட ஸ்தான அதிபதி(சனி) இன்னுமொரு துஷ்ட ஸ்தானத்தில் அமரும்போது கூட
இருப்பவரின் பென்டை நிமிர்த்துவார். ஆனால் களத்திராதிபதி சனி தனது வீட்டிற்கு மறைவு இடம் 6 ல் அமர்ந்தும், கூடவே
நவாம்சத்தில் 7ல் அமர்ந்தது திருமண வாழ்க்கையில் தோல்வியை அளித்திருக்கின்றார். Awaiting for answer!
Friday, February 08, 2019 4:27:00 PM
--------------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
1.ஜாதகி 30 ஜுலை 1974 அன்று காலை 5 மணி 28 நிமிடம் போலப் பிறந்தவ்ர். பிறந்த இடத்தினை சென்னை என்று எடுத்துக்
கொண்டேன்.
2. 7ம் இடத்துக்காரரான சனைச்சரன் 12ம் இடத்தில் மறைந்தது கணவரால் சுகம் அற்ற தன்மையைக் காட்டுகிறது.
3. களத்திரகாரகரான சுக்கிரனும் 12ல் மறைந்தது கணவரால் கிடைக்கும் மகிழ்ச்சியைக்கெடுத்தது.
4. சூரியன் லக்கினத்தில் இருந்தது முன்கோபத்தைக் காட்டுகிறது.
5. வாக்கு ஸ்தானத்தில், 2ல், செவ்வாயும் கடுமையான சொற்பிரயோகம் என்ப‌தைக் காட்டுகிறது.
6.லக்கினாதிபதி 5ல் அமர்ந்து ராகுவுடன் கூட்டணி, புத்திர தோஷத்தைக்காட்டுகிறது,மேலும் மனம் சம்பந்தப்பட்ட
அசாதாரணமான இயல்பு கொண்டவர்.
7.11ல் கேது சிறிது துறவு மனப்பான்மையைக் காட்டும்.
8.6ம் வீட்டுக்காரன் 8ல் இருப்பது எல்லாஇடத்திலும் பகையை சம்பாதிப்ப்பவர் என்பதைக் காட்டுகிறது.
9. நவாம்சத்தில் 7ம் இடத்தில் சந்திரன் சனி கூட்டணி.
இவையெல்லாம் ஜாதகியின் திருமணத்தைப் புரட்டிப் போட்டது.
Friday, February 08, 2019 7:34:00 PM
----------------------------------------------------
5
Blogger TRB. Sanjai Kumarr said...
1. In navamsam, Sani is in 7th house.
2. In navamsam, Maandi is in 9th house
3. Ragu is in 5th house in Rasi chart
Thanks & Regards,
TRB. Sanjai Kumar
Mob. 8108344321
Friday, February 08, 2019 7:49:00 PM
---------------------------------------------------------
6
Blogger Sanjai said...
இல் வாழ்கை தொடராமல் போனதற்கு
- ஏழுக்குடையவன் சனி பன்னிரெண்டில்
- பாதகாதிபதி மற்றும் களத்ர காரகன் சுக்ரன் பன்னிரெண்டில்
- சனி சுக்ரன் சேர்க்கை பன்னிரெண்டில்
சரியா என்று கூறுங்கள் வாத்தியாரே
Saturday, February 09, 2019 9:54:00 AM
----------------------------------------------------------
7
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)7 ம் அதிபன் 12ல்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் உடன் 12ம்அதிபதி சேர்க்கை.2)லக்னாதிபதி சந்திரன் நீசம்
உடன் ராகு சேர்க்கை.3)2ம்அதிபதி அம்சத்தில் நீசம் ஆயினும் சுபர் வீட்டில் அமர்வு.12ம் வீட்டிற்க்கும்,7ம் அதிபதி,சுக்கிரனுக்கும்
குரு பார்வை இருந்ததால் திருமணம் சுக்கிர தசா,சனிபுத்தி,சனி அந்தரத்தில் அமைந்து,12ம் அதிபதி புதன் அந்தரத்தில் பிரிவை
கொடுத்தது.நன்றி.
Saturday, February 09, 2019 10:47:00 AM
----------------------------------------------------------
8
Blogger Mahi said...
களத்திர ஸ்தானதிபதி சனி,களத்திரா திபதி சுக்கிரன் விரயத்தில்
லக்னாதிபதி சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்க்கை
Saturday, February 09, 2019 4:51:00 PM
----------------------------------------------------
9
Blogger Ramanathan said...
sukran in 12th house
Saturday, February 09, 2019 5:03:00 PM
------------------------------------------------------------
10
Blogger sundari said...
வணக்கம் சார்
தன குடும்ப வீட்டில் செவ்வாய் இருக்கிறார் அதை சனி பார்க்கிறார் சூரியன் பாபக்கதிரிதோஷம் பெறுகிறார் அதனால் குடும்பம்
நிலைக்கவில்லை மேலும் லகனாதிபதி சந்திரன் நிசம் ராகுவோடு சேர்க்கை மேலும் 7 ஆம் அதிபதி சனி விரையத்தில் புதனோடு 6
ஆம் அதிபதி குரு 8 இல் மாந்தியோடு கூடிவிட்டார் மேலும் 3 ஆம் அதிபதி 12 இல் சனி பரம விரோதியான சுகுரான் கூட சேர்ந்து
விட்டார்.சயன வீடு ரொம்ப கடுமையா கெட்டு விட்டது
Saturday, February 09, 2019 7:03:00 PM
-----------------------------------------------------
11
Blogger Saravanan Annamalai said...
sir,
Kalathitathipathy sani is in unfavourable place 12th with kalathirakarkan sukran. Moreover the 7th place is viewed by sun (malefic planet). Since sani is viewed by guru mrriage has taken place. But sani and sukran weakness has ended the marriage. Mars in 2nd house (family) is also in unfavourable position.
Saturday, February 09, 2019 9:10:00 PM
------------------------------------------------------------------
12
Blogger siva kumar said...
வணக்கம் சார்.
7ம் அதிபதி சனி 12ல் மறைந்து தன் வீட்டுக்கு 6ல். களத்திர காரகனும் சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைவு. பாக்கியஸ்தான
அதிபதியான குரு பகவானும் 8ல் மாந்திவுடன். பெண்களுக்கு குரு பகவான் கெடக்கூடாதூ இந்த ஜாதகிக்கு 9ம் அதிபதி
பாதிப்புக்குள்ளானார். சுக்கிர திசையில் திருமணம் நடந்து அதே திசையில் கணவனை பிரியவும் நேர்ந்தது சார். மாணவன்
தொட்டியம் சிவக்குமார்
Saturday, February 09, 2019 9:28:00 PM
--------------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
08-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்ன ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் நீசம். எழுக்குடைய சனி அந்த
இடத்துக்கு 6ல் மறைவு. கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு. சுக்கிரன் விரய ஸ்தானத்தில். களத்திர காரகன் என்ற
முறையில் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். பாதகாதிபதி என்ற முறையில் திருமணம் ரத்தாகியிருக்கும்.
அ.நடராஜன்
சிதம்பரம்
Saturday, February 09, 2019 9:41:00 PM
----------------------------------------------------
14
Blogger venkatesh r said...
Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு!
ஆசிரியருக்கு வணக்கம்.
கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி.
அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படிஎன்ன காரணம்?
1) லக்கினாதிபதி சந்திரன் 5ல் நீசமடைந்து இராகுவுடன் சேர்ந்து பலவீனமடைந்து உள்ளார்.
2) குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்தாலும், 2மிடத்திற்கு 12மிடம். 2ல் செவ்வாய் அமர்வு, 6ம் அதிபதி குரு
பகவான் பார்வையுடன்.
3) களத்திராதிபதி சனி, லக்னத்திற்கு 12ல் மறைவு.
மேற்கண்ட காரணங்கள், குறிப்பாக பலவீனமான மனோகாரகன் சந்திரன் தம்பதியர் நடுவில் ஈகோவை வரவழைத்து சண்டை
சச்சரவை ஏற்படுத்தி, வாழ்க்கையை பறித்தார்.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, February 09, 2019 10:36:00 PM
----------------------------------------------------
15
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம். 30 ஜூலை மாதம் 1974, காலை 5.30:46, கேட்டை நட்சத்திரம் (இடம்: சென்னை)
1. நவாம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில் சந்திரனுடனம் சனியுடனும் சேர்ந்து சுக்கிர மகா தசையில் ஜாதகிக்கு திருமணம் செய்து
வைத்தார்
அதே சுக்கிர மகா தசையில் சனி புக்தியில் திருமணம் பிரிவில் முடிந்தது
நவாம்சத்தில் சனியம், சந்திரனும் சேர்ந்து உள்ளனர். புனர்பூ தோஷம். தம்பதிகளின் பிரிவிற்கு அதுவே காரணம். (சந்திரன்
லக்கினாதிபதி , சனி 7ம் வீட்டு அதிபதி)
2. பாக்கிய ஸ்தான அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். பாக்கியஸ்தானம் கெட்டிருந்தால்,
ஜாதகிக்கு அவருடைய ஜாதகம் பயன்படாது.
3. கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன் நீசம் விருச்சிக ராசியில். சந்திரனும் ராகுவும் சேர்ந்து 5ம் வீட்டில் இருப்பதால் மன
வருத்தம், அமைதியற்ற நிலைமை , 5ல் ராகு இருந்தால் புத்திர தோஷம்.
4. ஏழாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன், லக்கின வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். குருவின் 5ம் பார்வையிலும்
உள்ளார்.
5. குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய இரண்டாம் வீட்டுக்காரனான சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில்
அமர்ந்திருக்கிறான். நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம். குடும்பம் அமையாமல் இருப்பதற்கு அதுவே
காரணம்
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
Saturday, February 09, 2019 11:13:00 PM
---------------------------------------------------------
16
Blogger guru said...
வணக்கம் அய்யா
ஜாதகருக்கு 7 மதிபதி சனியும் சுக்ரனும் 12 இல் மறைவு. இருவருக்கும் கிரஹ யுத்தம் வேறு.12 -மிடம் பாவ கர்தாரி யோகம் பெற்று
உள்ளது. ஜாதகருக்கு சயன சுகம் குறைவு.
மேலும் சனி, 2 மிடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார். மாந்தியோடு குரு சேர்ந்து 8 இல் மறைந்துள்ளார். 2 ஆம் அதிபதி சூர்யன்
தன் வீட்டிற்கு 12 இல் மறைவு. திருமணம் ஆகியும் குடும்பம் தொடராததற்கு இந்த அமைப்பே காரணம்.
நன்றி
Saturday, February 09, 2019 11:42:00 PM
--------------------------------------------------------
17
Blogger aravinth raj said...
வாத்தியாருக்கு வணக்கம், ஜாதகிக்கு களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகனுடன் இணைந்து 12 ம் இடமாகிய விரய
ஸ்தானத்தில், அது களத்திர ஸ்தானாதிபதிக்கு 6 ம் இடம் வேறு... மேலும் அம்சத்தில் சுக்கிரன் 7ம் இடத்தில் அமர்ந்து 'காரகன்
பாவ நாஸ்தி' எனும் விதிப்படி திருமண வாழ்வு கெட காரணமாய் அமைந்தது...
Sunday, February 10, 2019 12:09:00 AM
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.2.19

Astrology: Jothidam: Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு!!!!


Astrology: Jothidam: Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு!!!!

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். திருமணமான மூன்றாவது மாதமே அந்தப் பெண் தன் கணவனைப்
பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையே வேண்டாமென்று தன் தாய் வீட்டிலேயே
இருந்து விட்டாள்.

கேள்வி இதுதான். அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு  ஜாதகப்படி
என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 10-2-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.19

வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!


வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!

நான்கு நிலை வாழ்க்கை

1.பிரம்மச்சரியம்

முதலில் பிரம்மம், பிரம்மா, பிரம்மச்சாரி, பிரம்மசர்யம் எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ப்ரம்மம் என்பது நமது கண்கள், புலன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.

பிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.

பிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமாகின்றது.

பெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .

பிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.

ஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும். 

ப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.

புற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.

வேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்கியமான பங்காகும்.

நான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும். சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.

ப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .

சரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .

இவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.

ப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .
சரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.

பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.

இந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று .
     
2, கிரஹஸ்தாஸ்ரமம்

கொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில்
மட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது –போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.

3, வானப்ரஸ்தம்

இல்லற தர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.

4, சந்யாசம்

வீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெறுக்காமல் வாழும் நிலை சந்யாசம்.

ஓம் நமசிவாய 🙏
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.2.19

எதைத் தேட வேண்டும்?


எதைத் தேட வேண்டும்?

1. வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,  மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விடப் போவதில்லை.

2. அடுத்தவர்களை நாம் திருத்த முயற்சிப்பது தான் கடினம். நம்மை நாமே திருத்திக் கொள்வது சுலபம்.

3. நாம் செய்யும் நல்லதில் மட்டுமே பங்கு கொள்ளாது, நம் தவறான செயல்களையும் சுட்டி காட்டிடும் நண்பர்கள் வாழ்க்கையில் அவசியம்.

4. கவலைகளுக்கான காரணத்தைத் தேடாமல் சந்தோஷத்திற்கான வழிகளைத் தேடுங்கள்.

5. சந்தோஷமோ சோகமோ யாரிடம் எல்லாம் சொல்லனும்னு தோணுதோ அவர்கள் தான் உண்மையான உறவுகள்.

6. பணத்தின் மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும். உங்களுடைய மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும்.

7. தான் செய்த தவறுகளுக்காக தன்னிடமே நியாயம் கேட்டு மனப் போராட்டம் நடத்துபவர்களை யாரும் எளிதில் தோற்கடித்து விட முடியாது.

8. நடுத்தர மக்களுக்கு கஷ்டங்களை சமாளிப்பதை விட கஷ்டங்கள் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வதே பெரும் கடினமாய் இருக்கிறது.

9. நம்மை எதுவும் தெரியாதவர் என பிறர் நினைத்துக் கொள்வது ஒரு வகையில் நல்லது தான்.

10.  நாம் அக்கறை வைத்து உள்ள உறவினர்கள் எப்படியோ போகட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியவில்லை.

படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.2.19

உளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்!!!!


உளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்!!!!

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது. உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமையை ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!
------------------------------------------
படித்தேன்: உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆகவே பதிவிட்டுள்ளேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!