மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.8.09

வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல்!

வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.

அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 800 பிரதிகள் விற்று விட்டன.

காரைக்குடியில் நடைபெறவுள்ள மணிவிழா நிகழ்வு ஒன்றில்,
வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,
மணிவிழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 600 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை
வாங்கிக்கொண்டு விட்டார்கள்.

மீதமுள்ள 200 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறும் 100 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!
விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.
புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில்
உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.

புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 164
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.

1. திரு.SP.முத்துராமன் அவர்கள், திரைப்பட இயக்குனர், சென்னை
2. பெரும்புலவர், பேராசான். பா.நமசிவாயம் ஐயா அவர்கள், திருப்பத்தூர்
3. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை
நீங்கள் படிக்க முடியும்!





++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலைப் பற்றிய விவரம் அறிய
இங்கே சொடுக்கிப் பார்க்கவும்!

அன்புடன்,
வாத்தியார்,


வாழ்க வளமுடன்!

25.8.09

ஜோதிடப் பாடம்: வட்டமும், மாவட்டமும்!


ஜோதிடப் பாடம்: வட்டமும், மாவட்டமும்!

அரசியல் கட்சிகளில், வட்டம் , மாவட்டம் என்று செயலாளர்களும்,
பொருளாளர்களும், கமிட்டி உறுப்பினர்களும் இருப்பதுபோல,
பிரதேசங்கள், வட்டம், மாவட்டம், மாநிலம் (Taluk, District, State)
என்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைப் போல, ஜாதகத்திலும்
திசைகள், புத்தி, அந்தரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் வாங்கியதற்குப் பிறகு அது பிரிக்கப்பட்டதல்ல.
நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பெற்றதாகும்

திசை என்பது Main Dasa
புத்தி என்பது Sub period
அந்தரம் என்பது புத்தியின் உட்பிரிவுகள் Divisions in the sub period

திசையில் புத்தி முக்கியம், புத்தியில் அந்தரம் முக்கியம்.
அந்த அந்தரத்தில்தான் உங்களுக்கு உரிய பலன்கள் வந்து சேரும்.
கிரகங்கள் தேடி வந்து கொடுத்து விட்டுப் போவார்கள்.

நல்லதையும் அப்போதுதான் கொடுப்பார்கள்.
தீமைகளையும் அப்போதுதான் கொடுப்பார்கள்.
நீங்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது.:-))))
----------------------------------------------------------------------
உங்களுக்கு ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெருகிறது என்றால்

முதலில் வருவது ராகு திசையில் ராகு புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 8 மாதங்கள் 12 நாட்கள்

அடுத்து ராகு திசையில் குரு புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்

அடுத்து ராகு திசையில் சனி புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள்

அடுத்து ராகு திசையில் புதன் புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்

அடுத்து ராகு திசையில் கேது புத்தி
அதன் கால அளவு 1 வருடம் 0 மாதங்கள் 18 நாட்கள்

அடுத்து ராகு திசையில் சுக்கிர புத்தி
அதன் கால அளவு 3 வருடங்கள்

ஆக ராகு திசை துவங்கி 11 ஆண்டுகள் 6 மாதங்கள் 18 நாட்கள்
நிறைவான பிறகு அல்லது கழிந்த பிறகுதான் உங்களுக்கு
சுக்கிரபுத்தி துவங்கிறது.

ராகு திசை நடக்கும் ஒருவன் வந்து, ”சாமி, எனக்கு எப்போது
திருமணம் நடைபெறும்?” என்று கேட்டால், ஜோதிடர் பிறந்த தேதி
சென்ற இருப்புக்கள், திசைகள் ஆகியவற்றைக்கூட்டுவதோடு,
இந்த 11-6-18 ஆண்டுகள்/மாதங்கள்/நாட்கள் கணக்கையும் கூட்டி
அந்தத் தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் உனக்குத்
திருமணம் முடிந்துவிடும் என்பார்.

அந்த ஆறுமாதம் என்ன கணக்கு?

அட்டவனையில் பாருங்கள்: ராகு திசையில் சுக்கிர புத்தியில்,
சுக்கிரனின் அந்தரம் 6 மாதங்கள் என்று இருப்பதை!

சுக்கிரபுத்தியில், சுக்கிர அந்தரத்தில்தான் திருமணம் நடைபெறும்.
அதைவைத்து அவர் அந்தரத்தைத் தேடிப்பிடித்துச் சொல்வார்.

இப்படித்தான் ஒவ்வொரு மேட்டருக்கும், திசை, அதில் உள்ள புத்தி,
புத்தியின் உட்பிரிவான அந்தரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு,
துல்லியமாக ஜோதிடர் பதில் சொல்வார்!

கரெக்டாக இருக்குமா?

உங்கள் ஜாதகம் சரியானது என்றால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்!:-))))

ஓக்கே, கஷ்டங்கள் தீரும் நாளை எப்படிச் சொல்வார்?

அது உங்கள் கஷ்டத்தின் தன்மையைப் பொறுத்தது.
கஷ்டங்களில் பலவகை உள்ளன.
பணக்கஷ்டம், கடன் தொல்லை, நோய் நொடியால் அவதி,
குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தூர தேசத்தில் வாழும் நிலைமை,
அண்ணன் தம்பி சொத்துத் தகறாறு,
வேலையில் சுமை, வேலையில் திருப்தியின்மை....
இப்படிப் பத்துப் பக்கங்களுக்கு எழுதிக்கொண்டு போகலாம்.
கஷ்டத்தின் தன்மையை வைத்து, அதற்கு காரகனான, மற்றும்
அதிபனாக உள்ள கிரகத்தை வைத்து, அவர்களுடைய
அந்தரத்தைக் கணக்கிட்டு அதற்குப் பலன் சொல்வார்.
அந்தத் தேதியில் அது முடிவிற்கு வரும்!

சரியா?

சார், எதோ குறுக்கு வழி என்று சொன்னீர்களே?

அகா, உள்ளது. அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சலில் வரும்.
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாளை மாலை வரும்.
பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
இத்துடன் தசா, புத்தி, அந்தரம் ஆகியவற்றைக் காட்டுக் அட்டவனையைக்
கொடுத்துள்ளேன். பார்த்துப் பயன் அடையுங்கள்.

அட்டவனைகள் மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள்.
அவைகள் பெரிதாகத் தெரியும்!






வாழ்க வளமுடன்!

24.8.09

ஜோதிடப் பாடம்: கிரகங்களும் நோய்களும் (Planets & Diseases)


ஜோதிடப் பாடம்: கிரகங்களும் நோய்களும் (Planets & Diseases)

எச்சரிக்கை: இது பொதுப்பலன் மட்டுமே.
யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அல்லது
கேள்வி கேட்டு என்னைக் குழப்ப வேண்டாம்!:-)))

கிரகக் கூட்டணியால் உண்டாகக்கூடிய நோய்களைப்
பட்டியல் இட்டுள்ளேன்.

சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள் உண்டாகும்
உண்டாகும் என்பது பொதுப்பலன்

உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட ஜாதகங்களில்
உள்ள வேறு அமைப்புக்களால் உண்டாகமலும் போகலாம்.

”சார், எனக்கு இல்லையே?”என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்
இனி வரக்கூடும். அவற்றின் திசை ஆரம்பிக்கும்போது!

நோட்டிஸ் அல்லது வாரண்ட் இல்லாமல் வரலாம்.
வந்த பிறகு வாத்தியார் எழுதியதை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்

வராவிட்டால், வாத்தியார் எழுதியது பொய், புனைசுருட்டு என்று
எண்ணாமல், நம் ஜாதகக் கோளாறு அல்லது நல்ல அமைப்பு அல்லது
இறைச் செயல், நம் மனைவி அல்லது நம் தாய் நமக்காகக் கும்பிட்ட
பலா பலன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எங்கே கும்பிட நேரம் இருக்கும்?
அதனால்தான் மனைவி அல்லது தாய் என்று எழுதியுள்ளேன்!
பெண்களுக்கு மட்டும்தான் அந்த அக்கறை எல்லாம் உண்டு.

அபூர்வமாக சில ஆண்களுக்கும் உண்டு. இந்த வரி நான் தப்பிப்பதற்கு:-))))
---------------------------------------------------------------
1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic disorder,
medical problems affecting the joints and connective tissue.
2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள், எலும்பு சம்பந்தப்பட்ட
நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases
3
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள், நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes
4
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system
5
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற
மன அழுத்த நோய்களும் அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases, including hysteria
6
செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases
7
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு = மூத்திரப் பை,
கர்ப்பப்பை போன்றவற்றில் ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter = Urinary and
gynaecological problems
8
சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை போன்றவற்றில்
ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and throat problems

9 சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான நோய்கள்
Saturn, Mars = Blood-related problems

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

22.8.09

ஜோதிடக் கட்டுரை: கோயில் மாடு!

ஜோதிடக் கட்டுரை: கோயில் மாடு!

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே (உழைக்கும்)
படம்: த்னிப்பிறவி
----------------------------------------------------------
உலகில் உள்ள அத்தனை பேர்களும் உழைக்கிறார்களா?
உழைக்கும் அத்தனை பேர்களும் தினமும் எட்டு மணி நேரங்களுக்குக்
குறையாமல் உழைக்கிறார்களா?
உழைக்கிற அத்தனை பேர்களுக்கும் நியாயமான கூலி கிடைக்கிறதா?
நியாயமான கூலி கிடைக்கின்ற அத்தனைபேர்களும் மகிழ்ச்சியாக
இருக்கிறார்களா?

இல்லை!
----------------------------------------------------------
உழைக்கிறேன் என்று தினமும், 12 மணி நேரம் மண்வெட்டிக்
கொண்டிருந்தால் என்ன கிடைக்கும்?
கொஞ்சம் அறிவு, கொஞ்சம் புத்திசாலித்தனம் ஆகியவற்றையும் கூட்டணி
சேர்த்துக் கொண்டு உழைப்பவனுக்குத்தான் விரும்பியது கிடைக்கும்.
-------------------------------------------------------------
விரும்பியது கிடைத்தவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறானா?
கிடைத்த அந்தக் கணம்வரை இருப்பான்.
அதற்குப் பிறகு மனம் வேறு ஒன்றை விரும்பும்
எல்லாத் துன்பங்களுக்கும் மனம்தான் காரணம்.
மனதைக் கட்டுப் படுத்தினால், மனதை அடக்கத் தெரிந்தால்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்
-------------------------------------------------------------
எல்லோராலும் மனதை அடக்க முடியுமா?
முடியும். அதற்கு நீங்கள் மனது வைக்க வேண்டும்.
அதாவது முயற்சி செய்ய வேண்டும்
பயிற்சி செய்ய வேண்டும்
--------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன், உப்புமா கம்பெனியில்
வேலைபார்த்து மண்டை காய்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து,
தன் நிலைமை பரவாயில்லை என்று திருப்தி கொள்ள வேண்டும்.

காரில் வேலைக்குச் செல்பவன், இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச்
செல்பவனைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.

இருசக்கரவாகனத்தில் வேலைக்குச் செல்பவன், கைவண்டி இழுத்து
அல்லது பாரம் தூக்கிப் பிழைப்பு நடத்தும் தொழிலாளியைப் பார்த்துத்
திருப்தி கொள்ள வேண்டும்.

நமக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து, தாங்கித் தடுக்குப்
போட்டுத் தன்னைப் பேணுகின்ற மனைவி இல்லையே என்று
வருத்தப்படுபவன், மனைவியின் படவையைத் துவைத்துக் காயப்போடும்
சக மனிதனை நினைத்துத் திருப்தி கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவிற்குப் பொருள் ஈட்டும் கணவன் தனக்கு அமையவில்லையே
என்று வருத்தம் கொள்ளும் மங்கை நல்லாள், குடித்துவிட்டு வந்து
தினமும் தொல்லை கொடுக்கின்ற கணவனைக் கட்டிக் கொண்டு அழுகின்ற
சக தோழியைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------
”வாத்தி(யார்) என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“நடப்பெதெல்லாம், கிடைப்பதெல்லாம், நமது ஜாதகப் பலன், வாங்கி வந்த வரம்
என்று நினையுங்கள்.திருப்தியடையுங்கள். அது போதும்.”

உங்கள் மகிழ்ச்சிக்கு நான் கியாரண்டி - குக்கர் கம்பெனி விளம்பரங்களைப்
போல- நான் உத்திரவாதம்!:-))))))”
--------------------------------------------------------------------
மாடுகளில் ஐந்து வகையான மாடுகள் உண்டு.

1.பால் கொடுக்கும் கறவை மாடு
2.ஏற்றப்படும் சுமைகளை இடம் மாற்றிக் கொடுக்கும் வண்டி மாடு!
3.உழுகின்ற மாடு.
4.செக்கு மாடு
5.கோயில் மாடு

கோயில் மாடுகளைத் தவிர மற்ற மாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.
பெயரை வைத்து அவைகள் பற்றி உங்களுக்கு தெரியும்.

இந்தக் கோயில் மாடுகளைப் பற்றி மட்டும் ஒரு சிறு விளக்கம் கொடுக்கிறேன்.

கோயில் மாடு என்பது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு அல்லது
கோயில் வாசலில் படுத்திருக்கும் மாடு என்று எப்படி வேண்டுமென்றாலும்
நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்..

அந்த வகை மாடுகளை நீங்கள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்
பார்க்கலாம். நான்கு தெருக்களைச் சுற்றி வந்தால் அதற்குத் தேவையான
உணவு கிடைத்துவிடும்.

அகத்திக் கீரை, வாழை இலை, புண்ணாக்கு இத்தியாதிகள் என்று,
அந்தத் தெருக்களில் இருக்கும் பக்கதர்கள், தானமாகக் கொடுப்பதைத்
தின்று விட்டு வந்து கோயில் வாசலில் உள்ள மண்டபம் அல்லது
கொட்டகையில், படுத்துக் கொண்டு விடும்.

உழைக்காமல், எந்த வேலையையும் செய்யாமல் சுகமாக இருக்கிற
ஜீவராசிகள் அவைகள்.

அதுபோன்ற கோயில் காளைகள் மனிதப் பிறவிகளிலும் உண்டு.
அப்பனின் பணம் அல்லது மனைவியின் சம்பளம், அல்லது குடும்பச்
சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகைப் பணம் என்று
யாருடைய பணத்திலாவது அவர்களுடைய வாழ்க்கை நடக்கும்.

கூலி உயர்வு, பஞ்சப்படி உயர்வு, லீவுப் பிரச்சினை, ரேசன் அரிசி
பாஸ்போர்ட், விசா, வங்கிக்கடன் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாத
ஆசாமிகள் அவர்கள்.

அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
உழைக்க வைக்க முடியாது.
உணரவைக்க முடியாது.
திருத்தவும் முடியாது.
உழைக்காமல் சுகமாக இருக்கவென்றே பிறந்தவர்கள் அவர்கள்.
சுகஜீவனம் என்று கிராமங்களில் அடையாளம் காட்டப்படுபவர்கள் அவர்கள்.
அது அவர்கள் வாங்கிவந்த வரம்.
----------------------------------------------------------------------
வேறு மாதிரி ஒரு உதாரணம் சொல்கிறேன்.

பல்லக்கு செய்கிறவன்
பல்லக்கைத் தூக்குகிறவன்
பல்லக்கில் போகிறவன்
பல்லக்கில் போகிறவனைப் பார்ப்பதற்காகத் தெருவோரம் நிற்கிறவன்
தெருவோரம் நிற்கிறவன் கழுத்தில் அமர்ந்து கொண்டு, அல்லது தோளில்
ஏறி நின்று கொண்டு பல்லக்கில் செல்பவனை/ அல்லது செல்பவளைப்
பார்த்து மகிழ்கிறவன்.

எந்த நிலை உங்களுக்கு பிடித்திருக்கிறது?
-----------------------------------------------------------------
பல்லக்கில் போகிறவன் எப்போதுமே பல்லக்கில் போக முடியுமா?
அதெப்படி முடியும்?
அவன் மகனே ஒருநாள் அப்பனை அடித்துப்போட்டுவிட்டு அவன்
பல்லக்கில் ஏறிக் கொண்டு விடுவான்.
அப்பன் சொத்தை அபகரித்துக் கொண்டுவிட்டு, அப்பனையே என்ன
சேதி என்று கேட்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.
படித்து ஆளாக்கிய அப்பனை முதியோர் இல்லத்தில் போட்டுவிட்டு
பார்க் ஷெரட்டானில், தினமும் சரக்கடி’க்கும் மகன்கள் இருக்கிறார்கள்
பல்லக்கின் போகிறவன், முடக்கு வாதத்தில் எழ முடியாமல் படுத்து
விடும் காலமும் உண்டு.

சொகுசுக் காரில் போகிறவன், வியாபார நஷ்டத்தில் சொந்த வீட்டையே
விற்றுவிட்டு, ஒண்டிக் குடித்தனம் போக நேரிடலாம்.

விசுவாசம் இல்லாத மனைவி, மக்களுக்குப் பாடுபட்டவன், வீதிக்கு
வரும் நிலை ஏற்படலாம்.

இப்படி அடுக்கடுக்காக எழுதிக் கொண்டே போகலாம்.

அதெல்லாம் ஏன் நடக்கிறது? தன் நிலையைத், தன் பொஸிசனை
மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியாதா?

முடியாது.

நேரம் வரும்போது கோபுரத்தின் உச்சிக்குப் போகிறவன், நேரம்
மாறும்போது, கோபுரத்தின் மேல் இருந்து கீழே விழ நேரிடும்

எப்போது உச்சிக்குப் போவான், எப்போது கீழே விழுவான் என்று
ஜாதகத்தில் தெரியுமா? அதாவது எப்போது வெய்யில் காலம், எப்போது
வசந்த காலம் என்று ஜாதகத்தில் தெரியுமா?

தசா புத்திகளை வைத்துத் தெரியும்!!!

அதற்கொரு உபாயம் இருக்கிறது. உங்கள் மொழியில் சொன்னால்
ஒரு குறுக்கு வழி இருக்கிறது.

அது மேல் நிலைப் பாடம்.
மின்னஞ்சல் வழியாக வரும்

எப்போது வரும்?

எப்போது கஷடம் தீரும் என்பதற்கும் அதே பாடம்தான். விவரமாக
வரும். இன்னும் மூன்று நாட்களில் வரும்.

நடுவில் இரண்டு நாட்கள் வாத்தியார் வெளியூர்ப் பயணம் அதனால்
மூன்று நாட்கள். பொறுத்திருந்து படியுங்கள்.
---------------------------------------------------------------
”வாத்தி (யார்), மின்னஞ்சல் பாடம் ஒருவாரமாக வரவில்லையே?”
என்று கேட்டு ரத்தம் வரும்வரை பிறாண்டாதீர்கள்.

வகுப்பறையில் பாடம் நடத்த ஒரு நாள். 30 அல்லது 40 பின்னூட்டங்
களூக்கும், வரும் தனி மின்னஞ்சலகளுக்குப் பதில் எழுத ஒருநாள்
என்று வாத்தியாரின் கணக்கில் நாட்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.

அதோடு அவருடைய சொந்த மற்றும் வியாபார அலுவல்கள்

வாத்தியார் தன்னுடைய வேலைகளில் மும்மரமாக முழு ஈடுபாட்டோடு
இருப்பதால், சிலசமயம், எப்போது விடிகிறது? எப்போது இரவு வருகிறது?
என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

பாவம் வாத்தியார், அவரைப் படுத்தாதீர்கள், பிறாண்டதீர்கள்
பாடத்தை மட்டும், அது வெளியிடப்படும்போது மட்டும் படித்துத்
திருப்தி கொள்ளூங்கள்! மகிழ்ச்சி கொள்ளூங்கள்

பானை செய்கிறவனுக்குப் பத்து நாட்கள் வேலை
போட்டு உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும்.
பதிவு எழுதிகிறவனுக்கு இரண்டு மணி நேரம் வேலை.
பதிவைப் படிக்கிறவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.

ஒரு பதிவைப் படித்துவிட்டு, அடுத்த பதிவு எப்போது என்று
உடனே கேட்டால் என்ன செய்ய முடியும்?

சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்
சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!

ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவு உண்டு.
அதை மனதில் வையுங்கள்!

என்ன சரியா?
-------------------------------------------------
அடிக்குறிப்பு:

பதிவேட்டை வைத்து, மாணவர்கள் எண்ணிக்கை எகிறிக்கொண்டு
இருப்பதைப் பார்த்து, மகிழ்வதைவிடக் கவலைதான் அதிகமாகிக்
கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஜோதிடச் செய்திகளை, பிறர் அறிந்து கொள்ளட்டும்
என்றுதான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

I want to share my knowledge with others, particularly with the next
generation.

முப்பது மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மன
நிலைமைக்குத் தகுந்த மாதிரி எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படி
எழுதிக் கொண்டே வந்ததால், பாடங்கள் ஒரு ஒழுங்கின்றி சிதறிக்
கிடக்கின்றன. நானே என்னுடைய பழைய பாடங்களைக் குறுக்கு வழியில்
தேட சமயங்களில் கூடுதுறையாரின் பதிவிற்குப் போய்த் தேட வேண்டியதாக உள்ளது.

அவற்றை ஒழுங்கு படுத்தி, விட்டுள்ளதை எழுதி, இணைத்து,
புத்தகமாகக்
கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளேன்.
-----------------------------------------------------
வகுப்பறைக்கு வந்து படிப்பவர்களை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள்
2. என்னுடைய எழுத்து நடைக்காகவும், குட்டிக் கதைகள், மற்றும்
உதாரண விளக்கங்களுக்காவும் வந்து, பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
3. தங்களுடைய ஜாதகப் பலனை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள்

இந்த மூன்றாவது ரகக் கண்மணிகள், வகுப்பறையில் சேர்ந்த அன்றே
தங்கள் ஜாதகத்தை நீட்டிப் பலன் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தொடர்ந்து மாணவன் என்கின்ற கோதாவில் நச்சரிக்கிறார்கள்.

’எதிர்காலம்’ எப்படி இருக்கும்? என்று கேட்கிறார்கள். எதிர்காலம்
என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியுமா? தெரியாதா?

அவர்களுக்கு என் முகவரியைக் கொடுத்து வீட்டிற்கு வரச்சொல்லி,
எதிரில் அமர வைத்து அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்
பதில் சொல்லி அனுப்பினால், அதற்குப் பிறகு அவர்களுக்கு ஜோதிடம்
தேவையில்லை. ஜோதிடம் செல்லாக்காசு ஆகிவிடும்.

அவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தவறாக
வகுப்பறையில் சேர்ந்திருக்கிறீர்கள். நல்ல ஜோதிடராகப் பாருங்கள்.
அதுதான் உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது. வகுப்பறையில்
ஜோதிடத்தைக் கற்றுத்தேர விரும்பும் மற்ற மாணவர்களுக்கும் நல்லது!

உங்களுக்கு வேண்டியது மீன் மட்டுமே!
மீன் பிடிக்கும் கலை அல்ல!
உங்களுக்கு வேண்டியது சாப்பாடு மட்டுமே
சமையல் கலையல்ல!
உங்களுக்கு வேண்டியது ”டண்டணக்கா” பாட்டு மட்டுமே
இசையமைக்கும் கலையல்ல!
-------------------------------------------------------------------
அன்புடன்,
நட்புடன்,
வணக்கத்துடன்,
வாத்தியார்.





வாழ்க வளமுடன்!

21.8.09

ஜோதிடக் கதை: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!

ஜோதிடக் கதை: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!

தினமும் ஜோதிடத்தையே பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால்
நமது வகுப்பறை மாணவர் இமானுவேல் கோபிநாத் அவர்கள் பின்னூட்டத்தில்
சுட்டிக் காட்டியபடி நமக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.

அதனால் இன்று பாடமாக ஒரு ஜோதிடக் கதை. கதையின் முடிவில் ஒரு நீதி
இருக்கும். what is the moral of the story? என்று ஆரம்பப் பாடசாலை
வாத்தியார் போல நானும் கேட்க உள்ளேன். விடை தெரிந்தவர்கள்
சொல்லலாம். தெரியாதவர்கள் பதில் சொல்லாமல் போய்விடலாம்.

இணைய வகுப்புதானே? யார் வருகிறீர்கள் - யார் போகிறீர்கள் என்று
வாத்தியாருக்குத் தெரியவா போகிறது?

Over to story!
------------------------------------------------------------------

ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் செழிப்பாக இருந்தான்.
அவனுடைய நாடும் செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னனின் மனம் மட்டும்
வறண்டுபோய்க் கிடந்தது. உள் மனதில், வெளியே சொல்ல முடியாத
கவலை ஒன்று அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

என்ன கவலை?

அதை இப்போதே சொல்லி விட்டால் கதையின் சஸ்பென்ஸ் போய்விடும்.
ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

மன்னன் படு கஞ்சன். எல்லாவற்றையும் சேர்த்து வைப்பான்; பூட்டி வைப்பான்.
அதோடு கோபக்காரன்.

ஒரு நாள், வெளி தேசத்தில் இருந்து குதிரை வியாபாரியொருவன் மன்னனைப்
பார்க்க வந்தான்.

வந்தவன் சும்மா வரவில்லை. மன்னன் தலையில் கட்டிவிட்டு, நல்ல
வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போவோம் என்று பத்து வெள்ளைக்
குதிரைகளையும் கொண்டு வந்திருந்தான்.

வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசனைப் பூலோக இந்திரன்,
சந்திரன் என்று புகழ்ந்து தள்ளினான். நம் நாயகன் அதற்கெல்லாம் மசிபவனா
என்ன? மசியவில்லை.

கடைசியில் வியாபாரி வந்த மேட்டரைச் சொல்லிக் குதிரைகளைப் பார்க்கும்படி
வேண்டிக் கொண்டான்.

மன்னனும் போய்ப் பார்த்தான். அவனுடன் அவனுடைய கஞ்சத்தனமும் உடன்
சென்று பார்த்தது.

பத்துக் குதிரைகளுமே நன்றாகத்தான் இருந்தன.

வியாபாரி ஒரு குதிரையின் விலை ஆயிரம் ரூபாய் என்றான். ஒரு மூட்டை அரிசி
இரண்டு பணம் விற்ற காலம் அது!

கெளரவம் கருதி ஒரே ஒரு குதிரையை மட்டும் வாங்கிக் கொள்ள முடிவு செய்த
மன்னன், “ஒரு குதிரை போதும். இருப்பதில் நல்ல குதிரையாக ஒரு குதிரையை
நீயே காட்டு என்றான்!”

அவனும் காட்டினான். மன்னன் குதிரையின் காலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பினான்.

திரும்பியவன், தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, விற்பனைக்கு வந்திருக்கும் குதிரைகளில், நல்ல குதிரையாக ஒரு குதிரையைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினான்.

மந்திரி சட்டென்று யோசித்தவர், நாம் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக்
கூடாது என்று எண்ணியவர், மெதுவாகச் சொன்னார்:

“மன்னர்மன்னா, நமது நகரச் சிவன் கோவில் வாசலில், இரண்டு கண்களும்
தெரியாத ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்குக் கண்பார்வை இரண்டு
ஆண்டுகளுக்கு முன்புதான் பறிபோனது. பெரிய ஞானி அவன். அவனுடைய
பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே
கிடையாது. அவனை அழைத்து வந்து, குதிரைகளைப் பார்க்கச் சொன்னால்,
அவன் நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பான்.”

மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்
படுத்தாமல், ஆட்களை அனுப்பி, அவனை அழைத்துவரச் செய்தான்.

வந்தவன், 5 நாழிகை நேரம் குதிரைகளைப் பரிசோதித்துவிட்டு, மன்னனை
அழைத்து, இருப்பதில் இதுதான் உயர்வான குதிரை என்று சொல்லி ஒரு
குதிரையைக் காட்டினான்.

வியாபாரி சொல்லி, மன்னன் அடையாளப் படுத்தி வைத்திருந்த குதிரைதான்
அந்தக் குதிரை!

மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.

“எப்படிச் சொல்கிறாய்?”

“எல்லாக் குதிரைகளுக்கும் பைகளில் கொள்ளைப் போட்டு வாயில் கட்டிவிடச்
சொன்னேன். அம்சமுள்ள குதிரை நிதானமாகத்தான் திங்கும். மேலும் அதன்
சுவாசமும் சீராக இருக்கும். இன்னொன்று அதன் உடம்பில் இருந்து அதிக
துர்நாற்றம் வீசாது. இதுபோன்று குதிரைக்கென்று உரிய சில லட்சணங்களை
வைத்து அதைத் தெரிவு செய்தேன்”

மன்னனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தன்னுடைய முதன் மந்திரியை அழைத்து, அந்த ஞானிக்குப் பரிசு வழங்கி,
அனுப்பிவைக்கும்படி சொன்னான்.

என்ன பரிசு?

தினமும் ஒருவேளை உணவு. அதிகாலை உணவு. உங்கள் மொழியில் சொன்னால் ப்ரேக்ஃபாஸ்ட். அவனுக்கு அடையாள லட்சினை (Identity Card) வழங்கப் பெற்றது. அரசானையிடப்பெற்று, அதன் நகலும் (Copy palm leaf)
வழங்கப் பெற்றது.

கோவிலுக்கு அருகில் இருந்த வேதவிற்பன்னர்கள் விடுதியில், அவனுக்கு
அனுதினமும் காலைப் பலகாரம் வழங்கப்பெற்றது.
---------------------------------------------------------------
கதையின் நீளத்தையும், உங்கள் பொறுமையையும் கருதி, கதை இனிச்
சுருக்கமாகச் சொல்லப்படவுள்ளது. விவரிப்புக்கள் இருக்காது.
-----------------------------------------------------------------------
இதேபோன்று அடுத்தமாதம் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது ஒரு வைர
வியாபாரியை வைத்து. அதிலும், தன் திறமையைக் காட்டி மன்னனை
அசத்தினான் அந்தப் பிச்சைக்கார ஞானி.

மன்னனின் உத்தரவின் பேரில், அவனுக்கு அடுத்து ஒரு பரிசும்
கிடைத்தது.

ஆமாம் அடுத்த வேளை உணவு. மதிய உணவு. அதே விடுதியில்.
அதற்கான உத்தரவையும் மன்னன் பிறப்பித்தான்
--------------------------------------------------------------------
ஒருமாதம் சென்றது.

தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவைத்
தேடும் முகமாக, அந்தப் பிச்சைக்கார ஞானியை அழைத்து வரச் செய்த
மன்னன், தன்னுடைய பிரத்தியேக அறையில் அவனை அமரச் செய்து,
அவனுடன், பேசலுற்றான்.

“நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். அது வேறு
யாருக்கும் தெரியக்கூடாது. உனக்குப் பதில் தெரிந்தால் சொல்லு.
இல்லையென்றால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும்”

“உத்தரவு மன்னா!” என்று பதில் சொன்னான் அவன். வேறு என்ன
சொல்ல முடியும்?

”உனக்கு ஜோதிடம் தெரியுமா?”

”தெரியும் மன்னா!”

“என் பிறப்பைப் பற்றி நாட்டில் சிலர் கேவலமாகப் பேசுகிறார்கள்
என்று கேள்விப்பட்டேன். அரசல் புரசலாக என் காதில் விழுந்தது.
அது பற்றி உன் கருத்து என்ன? என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து,
அதைப் பற்றி நீ சொல்ல முடியுமா?”

“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே
என்னால் சொல்ல முடியும்!”

மன்னனுக்குப் பயங்கர அதிர்ச்சி!

“ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணாதியங்களில் ஒன்றுகூட
உங்களுக்கு இல்லை. அதைவைத்துச் சொல்கிறேன். உங்கள்
பிறப்பில் கோளாறு இருக்கிறது. உங்கள் தந்தை உயிரோடு
இல்லாததால், உங்கள் தாயாரைக் கேளுங்கள். சும்மா மேம்போக்காகக்
கேட்காதீர்கள். மிரட்டிக் கேளுங்கள். உண்மை தெரியவரும்”

அதிர்ந்துபோன மன்னன், உடனே அதைச் செய்தான்
---------------------------------------------------------------
முதலில் உண்மையைச் சொல்ல மறுத்த மன்னனுடைய அன்புத் தாயார்,
தன் மகன், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி
மிரட்டிக் கேட்டவுடன், கண்களில் நீரோடு உண்மையைச் சொல்லி
முடித்தாள்.

தனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டு காலம் குழந்தைப் பேறு
இல்லாமலிருந்ததையும், வேறு ஒரு ஆடவனுடன் கூடி, குழந்தை
ஒன்றைப் பெற்றுக் கொண்ட கதையையும் ரத்தினச் சுருக்கமாகச்
சொன்னாள். அவனுடைய உண்மையான தந்தை தங்களுடைய
அரண்மனையில் முன்பு வேலைபார்த்த சிப்பாய் என்றும் சொன்னாள்
எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.

கலங்கிப்போன மன்னன், தன்னிலைக்கு வர இரண்டு நாழிகை
நேரம் பிடித்தது
----------------------------------------------------------------------
தன்னிலைக்கு வந்த மன்னன், திரும்பவும் வந்து அந்த ஞானியிடம்
பேசலுற்றான்.

“ நீ சொல்வது உண்மைதான். என் தாயை விசாரித்துவிட்டேன்.
இப்போது சொல். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”

“நானோ கண் தெரியாதவன். என் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவன்.
கோவில் வாசலில் அமர்ந்து, என்னைப் படைத்த ஆண்டவன் திருவடிகளில்
விழுந்து, என்னை உய்வித்து, அவனுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளூம்படி
மன்றாடிக்கொண்டிருப்பவன். கிடைக்கும் உணவையே உண்டு
கொண்டிருந்தவன். வெய்யிலோ மழையோ, கோவில் வாசலிலேயே படுத்து
உறங்குபவன். என்னுடைய மேன்மையை, இரண்டு முறைகள் உங்களுக்கு
உணரவைத்திருக்கிறேன். அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில்
எங்காவது ஒரு ஓரத்தில் தங்கிக் கொள்ள என்னை அனுமதித்திருக்க
வேண்டும். செய்தீர்களா? முதலில் ஒருவேளை உணவிற்கு வழி செய்தீர்கள்.
அடுத்த சந்தர்ப்பத்தில் எனக்கு இரண்டாவது வேளை உணவிற்கும்
உத்தரவு கொடுத்தீர்கள். உண்மையான அரச வாரிசென்றால் இந்த நீச
குணமெல்லாம் இருக்காது. அதைவைத்துத்தான் சொன்னேன்!”
-----------------------------------------------------------------------
"வாத்தி (யார்) கதையின் முடிவு என்ன ஆயிற்று?”

“அதைத்தான் படமாகப் போட்டுள்ளேன். இடுகையின் துவக்கத்தில்
உள்ளது”
----------------------------------------------------------------------------
கதை எப்படி உள்ளது?
படித்தவர்கள் ஒரு வரி எழுதுங்கள்
கதையின் நீதி என்ன?
அதையும் எழுதுங்கள்.

அன்புடன்
வாத்தியார்.



வாழ்க வளமுடன்!

19.8.09

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின்
ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன.

DTP Type setting & Layout of the books வேலைகள் துவங்கவுள்ளன!
அடுத்து printing & binding வேலைகள் உள்ளன. அப்பணிகள்
இரண்டு மாத காலத்தில் முடிந்து விடும். நவம்பர் முதல் வாரம்
புத்தகங்கள் தயாராகிவிடும்.

மொத்தம் 4 பாகங்கள். முதலில் இரண்டு பாகங்கள் வெளிவரும்.

தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மற்றும்
உள்ள இரண்டு பாகங்கள் வெளிவரும்.

புத்தகங்கள் அனைத்தும் Demi 1/8 Size - 320 Pages each என்கின்ற
அளவில் இருக்கும். வாத்தியாரின் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும்
நண்பர்களுக்கென சில பிரதிகள் ஒதுக்கப்படும். வகுப்பறைக்
கண்மணிகளுக்கென சில பிரதிகள் ஒதுக்கப்படும்.

முதல் பதிப்பு வெளி விற்பனைக்கு இல்லை! கடைகளில் கிடைக்காது.
முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அஞ்சல் மூலம் உங்கள் இருப்பிடம்
தேடிப் புத்தகங்கள் வரும்!

The books will be sent to your address by register post under
printed books postal option!

புத்தகம் வேண்டுவோர், தங்களுடைய பெயர், முகவரி,
(கைபேசி எண் - இது மட்டும் உங்கள் விருப்பம்)
ஆகியவற்றுடன், வேண்டிய பிரதிகள் ஒன்றா அல்லது அல்லது
இரண்டா? என்கின்ற விவரத்துடன் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு
எழுதுங்கள். இந்த முகவரிக்கு மட்டுமே எழுதுங்கள்.

email: spvrsubbiah@gmail.com
---------------------------------------------
புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரம்.

இதுவரை வெளிவந்த பாடங்கள் முறைப்படுத்தப் பட்டு, படிப்பதற்குச்
சுலபமான வழியில் ஒழுங்கு படுத்தப்பெற்று, அழகிய வடிவில் வரும்.

பாகம் ஒன்று (Part 1)

அறிமுகம் (Brief introduction)
ஆதாரங்கள் (Evidences)
ஜோதிடம் வந்தவழி (About the sages who formulated astrology)
அடிப்படைப் பாடங்கள் (Basic lessons)
அட்டவனைகள் (Astrological Charts)
------------------------------
பாகம் இரண்டு (Part 2)

கிரகங்கள் (Planets)
வீடுகள் (Houses)
மதிப்பெண்கள்(Ashtakavarga)
யோகங்கள் (Yogas)
--------------------------------
தொடர்ந்து வரவுள்ள புத்தகங்கள்

பாகம் மூன்று (Part 3)

ஜோதிட நுட்பங்கள் (Predictive Techniques)
உதாரண ஜாதகங்கள்
அலசல்கள்
ஜோதிடக் கதைகள்
-------------------------------------
பாகம் நான்கு (Part 4)

கேள்விகள் பதில்கள் (Questions & Answers)
(பின்னூட்டங்களில் கேட்கப்பெற்ற உபயோகமான
கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும்)
--------------------------------------
Please write to me within 10 days time.
I want to plan for the number of books to be printed

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

18.8.09

எப்போது தீரும் என் கஷ்டம்?

எப்போது தீரும் என் கஷ்டம்?

சார், எப்போது தீரும் என் கஷ்டம்? எனக்கு வரும் மின்னஞ்சலில்
பாதி இப்படித்தான் துவங்கும்.

உண்மையைச் சொன்னால் எப்போது உங்கள் ஆசைகளும்,
எதிர்பார்ப்புக்களும் உங்களை விட்டு நீங்குகிறதோ அப்போது
உங்கள் கஷ்டங்களில் பாதி நீங்கிவிடும்.

முழுதாக நீங்காதா?

நீங்காது!

அதெல்லாம் pre programmed - destined - விதிக்கப்பட்டது.
ஒருபோதும்
முழுதாக நீங்காது. நீங்கியிருந்தால் அதைச்
சொல்லி மகிழ சம்பந்தப்பட்டவன்
உயிரோடு இருக்கமாட்டான்.
சனீஷ்வரன் அவனை அள்ளிக் கொண்டு
போயிருப்பார்.

எப்போது கடலில் அலைகள் ஓய்கின்றனவோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்! எப்போது இலைகள், தளிர்களாகவே, முதிராமல்,
பழுக்காமல், மரத்தைவிட்டு
உதிராமல் அப்படியே இருக்கின்றனவோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்! எப்போது சூரியன் தனது உதயத்தை நிறுத்துகிறதோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்!
---------------------------------------------------------------------
சரி, தொலையட்டும். கஷ்டங்கள் வரவர ஒன்றைத் தீர்த்தால் அடுத்தடுத்து
ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறதே?

அதுதான் வாழ்க்கை!

”முடிந்தகதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்தகதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே”
என்று கவியரசர் கண்ணதாசன் பாடி வைத்தாரே - நினைவில் இல்லையா?

சிரமங்களும், சந்தோஷங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை.

சந்தோஷத்தை மட்டும் மனிதன் அடுத்தவனுடன் பகிர்ந்துகொள்ள மாட்டான்
ஆனால் சிரமப்படும்போது மட்டும் யாராவது வந்து தோள் கொடுத்தால்
பரவாயில்லை என்று நினைப்பான்.

சிலருக்குத் தோள் கொடுக்க உறவுகளும், நண்பர்களும் இருப்பார்கள்.
பலருக்கு அப்படி ஆள் இருக்காது.

அதற்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கைமுறைதான் காரணமாக இருக்கும்.

’தன்னைப் போணி’ எங்கள் பகுதில் ஒரு சொல் உண்டு. தன்னை மட்டும்
பேணிப் பாதுகாத்துக் கொள்பவன் என்று அதற்குப் பொருள்.

உங்கள் மொழியில் சொன்னால் சுயநலவாதி (selfish fellow) அப்படிப்பட்ட
ஆசாமிக்கு ஒருவனும் உதவிக்கு வரமாட்டான்.

சுயநலவாதிக்கு, இறைவன் கூட உதவிக்கு வரமாட்டார்

நல்லவனுக்கு சோதனை மேல் சோதனையாக வரும்.
ஆனால் இறைவன் கைவிட மாட்டார்.
கெட்டவனுக்கு எந்த சோதனையும் வராது.
வரும்போது இறைவன் அவனுக்குக் கைகொடுக்க மாட்டார்

ஆகவே சுயநலத்தை, அது உங்களிடம் இருந்தால், இன்றோடு விட்டுவிடுங்கள்
------------------------------------------------------------------------------
இரவு, பகல் போல,இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியவையாகும்

எப்போது இன்பம் வரும், எப்போது துன்பம் வரும் என்பதை அறிந்து கொள்ள
ஜாதகத்தில் ஒரு வழியிருக்கிறது. சுலபமான வழி அது.

அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம்.
மின்னஞ்சல் வழியாக வரும்.

எப்போது வரும்?

எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப் பதிய வேண்டாமா?
நாளை உதயத்தில் வரும்
பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

15.8.09

வகுப்பறையில் சுதந்திர தினம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில் சுதந்திர தினம்!

வாருங்கள் கண்மணிகளே!
வாருங்கள் குத்து விளக்குகளே! (இது மாணவிகளுக்காக!)
வகுப்பறையில் வாத்தியார் கொடியேற்றியிருக்கிறார்.

‘தாய்மண்ணே வணக்கம்’ பாடலைப் பாடுவதோடு, கொடிக்கும்
ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

இன்றும் நாளையும் வகுப்பறைக்கு விடுமுறை!

பாடங்களை எல்லாம் மூட்டைகட்டிவைத்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு
நிம்மதியாகவும், மகிழ்ச்சியோடும் இருங்கள்.

சுந்தரதினத்திற்காக நிறைய மிட்டாய்கள் வாங்கி வைத்திருக்கிறேன்.
ஆளுக்கு ஒன்று மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

.............................................................................................................................................................................................................................................................
பிரபல பதிவர் சிபியாரும், தலையில் மயில் இறகு வைத்திருக்கும்
சிங்கப்பூர் தம்பியும் வந்தால் கவனமாக இருங்கள்.
இருக்கிற மிட்டாய்கள் தட்டோடு காணாமல் போய்விடும்!:-))))

நமது வகுப்பறை மானிட்டர் உண்மைத்தமிழர், சினிமா பார்ப்பதிலும்,
பார்த்துவிட்டு வந்து கலக்கலாக விமர்சனம் எழுதுவதிலும் தீவிரமாக
இருப்பதால், தட்டோடு மிட்டாய்களைப் பாதுகாக்கும் பணியை
உங்களிடம் ஒப்படைத்துள்ளேன்.

நன்றி, வணக்கம்,
வாழ்த்துக்களுடன்
வாத்தி (யார்)
===================================================



வாழ்க வளமுடன்!

14.8.09

வாத்தியாருக்கு வந்த கடிதம்!

வாத்தியாருக்கு வந்த கடிதம். அப்படியே கொடுத்துள்ளேன். படித்து முடிந்தவர்கள் ஆவன செய்யுங்கள்!






////மதிப்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு,

நம் சக பதிவர்--சிங்கை நாதன் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான சில பதிவர்களின் இடுகைகளின் லிங்க்கைக் கீழே கொடுத்துள்ளேன்.

http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html

http://www.narsim.in/2009/08/blog-post_13.html

http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

http://www.maraneri.com/2009/08/blog-post.html

http://www.nilaraseeganonline.com/2009/08/blog-post_13.html

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html

http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html


படித்தவுடன் தங்களின் 'வகுப்பறை' மற்றும் 'பல்சுவை' பதிவுகளில் சக கண்மணிகளுக்கும்,வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இடுகை இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் இடுகை பெரும்பான்மையோருக்குப் போய்ச் சேரும்.

மேலும் விவாரிக்க நேரம் போதவில்லை. மன்னியுங்கள்.

உங்கள் அன்புள்ள
திண்டுக்கல் சர்தார்.
sks_anu@hotmail.com //////
=====================================================
வாழ்க வளமுடன்!

13.8.09

2012ல் உலகம் அழியுமா?

2012ல் உலகம் அழியுமா?

விக்கி மஹராஜா என்ன சொல்கிறார்?
இங்கே படியுங்கள்


மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கீழே கொடுத்துள்ளேன். படியுங்கள்
எனக்கு மின்னஞ்சலில் வந்தது!
அனுப்பிய சகோதரி.B.S. அவர்களுக்கு நன்றி!

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை! தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்

The world will end in 2012, say experts

Several experts from across the globe are predicting that the earth is likely to end by the year 2012. The reason could be a human effect or natural disaster. From Chinese theories to scientific predictions the most likely date is the year 2012.

SCIENTIFIC EXPERTS from around the world are predicting that five years from now, all life on Earth could well come to an end. Some are saying it’ll be humans that would set it off. Others believe that a natural phenomenon will be the cause. And the religious folks are saying it’ll be God himself who would press the stop button. The following are some likely arguments as to why the world would end by the year 2012.

Reason one: Mayan calendar

The first to predict 2012 as the end of the world were the Mayans, a bloodthirsty race that were good at two things -- building highly accurate astrological equipment out of stone and sacrificing virgins.

Thousands of years ago they managed to calculate the length of the lunar moon as 329.53020 days, only 34 seconds out. The Mayan calendar predicts that the earth will end on December 21, 2012. Given that they were pretty close to the mark with the lunar cycle, it’s likely they’ve got the end of the world right as well.

Reason two: Sun storms

Solar experts from around the world monitoring the sun have made a startling discovery. Our sun is in a bit of strife. The energy output of the sun is, like most things in nature, cyclic and it’s supposed to be in the middle of a period of relative stability. However, recent solar storms have been bombarding the earth with lot of radiation energy. It’s been knocking out power grids and destroying satellites. This activity is predicted to get worse and calculations suggest it’ll reach its deadly peak sometime in 2012.

Reason three: The atom smasher

Scientists in Europe have been building the world’s largest particle accelerator. Basically, its a 27 km tunnel designed to smash atoms together to find out what makes the universe tick. However, the mega-gadget has caused serious concern, with some scientists suggesting that it’s properly even a bad idea to turn it on in the first place. They’re predicting all manner of deadly results, including mini black holes. So when this machine is fired up for its first serious experiment in 2012, the world could be crushed into a super-dense blob the size of a basketball.

Reason four: The Bible says it

If having scientists warning us about the end of the world isn’t bad enough, religious folks are getting in on the act as well. Interpretations of the Christian Bible reveal that the date for Armageddon, the final battle between good an evil, has been set for 2012. The I Ching, also known as the Chinese Book of Changes, says the same thing, as do various sections of the Hindu teachings.

Reason five: Super volcano

Yellowstone National Park in United States is famous for its thermal springs and old faithful geyser. The reason for this is simple -- it’s sitting on top of the world’s biggest volcano and geological experts are beginning to get nervous sweats. The Yellowstone volcano has a pattern of erupting every 650,000 years or so, and we’re many years overdue for an explosion that will fill the atmosphere with ash, blocking the sun and plunging the earth into a frozen winter that could last up to 15,000 years. The pressure under the Yellowstone is building steadily, and geologists have set 2012 as a likely date for the big bang.

Reason six: The physicists

They’ve determined that the earth is well overdue for a major catastrophic event. Even worse, they’re claiming that their calculations prove that we’re all going to die, very soon. They are also saying that their prediction comes with a certainty of 99 per cent; and 2012 just happens to be the best guess as to when it occurs.

Reason seven: Earth’s magnetic field

We all know the Earth is surrounded by a magnetic field that shields us from most of the sun’s radiation. What you might not know is that the magnetic poles we call North and South have a nasty habit of swapping places every 750,000 years or so -- and right now we’re about 30,000 years overdue. Scientists have noted that the poles are drifting apart roughly 20-30 kms each year, much faster than ever before, which points to a pole-shift being right around the corner. While the pole shift is under way, the magnetic field is disrupted and will eventually disappear, sometimes for up to 100 years. The result is enough UV outdoors to crisp your skin in seconds, killing everything it touches.

வாத்தியார் என்ன சொல்கிறார்?
பயப்பட வேண்டாம்!
அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது!

2020ல் இந்தியா சூப்பர் பவர் ஆகவேண்டாமா?
பகவான் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுக்க வேண்டாமா?
நமது கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டாமா?
பாரதம் புண்ணிய பூமி!
பல மகான்கள் அவதரித்த பூமி!
ஆகவே பாரதத்திற்கு ஒன்றும் நேராது!
அதனால் அப்படிப் பேரழிவு ஒன்றும் ஏற்படாது
இறைவன் கருணை மிக்கவன்
நம்பிக்கையோடு இருங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

12.8.09

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!"
------- -கவியரசர் கண்ணதாசன்

வாய்ப்பு எனும் சொல் ஒன்றைப் பெறுவதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு
உரிய அனுகூல நிலையைக் குறிக்கும். Opportunity என்பது அதற்குச்
சரியான ஆங்கிலச் சொல்!

எந்த நிலையிலும் அந்த ”அனுகூல’ நிலை என்பது மிகவும் முக்கியம்.

அந்த நிலை சிலருக்குத் தேடிவரும். சிலருக்குக் கண்ணாம்பூச்சி காட்டும்.

வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் ஒருவன் தன் வாழ்க்கையில்
முன்னுக்கு வரமுடியாது.

இளையராஜாவுக்கு வாய்ப்பு, கவிஞர் பஞ்சு அருணாசலம் மூலமாகக் கிடைத்தது.
பெரிய இசையமைப்பாளராக, நாடறிந்தவராக அவர் ஆனார். அவர் நுழைந்த நேரம், அன்னக்கிளி’ படம், ”மச்சானைப் பார்த்தீங்களா? மலைவாழைத் தோப்புக்குள்ளே” பாடல், அதைப் பாடிய ஜானகி அம்மாவின் குரல் என்று ஏகத்துக்கும் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தது.

அப்படி எல்லாமும் சிறப்பாக அமைந்ததும் ஒரு வாய்ப்புதான். அதை இறைச்செயல் எனலாம். அல்லது ராஜாவின் ஜாதகப் பலன் எனலாம்.
அல்லது அவர் வாங்கிவந்த வரம் எனலாம்.

எல்லோருக்கும் அப்படிக்கிடைக்கிறதா?. எத்தனை பேர் ஆர்மீனியப்
பெட்டியோடு சென்னையில் இன்றைக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
வெறும் முயற்சி மட்டும் போதும் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
இசையமைப்பாளர்களாக ஏன் ஆகவில்லை?

"சார், இளையாராஜாவுக்கு ஒன்னும் எக்மோர் ஸ்டேசன்ல போய் இறங்கினவுடன
வாய்ப்புக் கிடைக்கல. லட்சியத்தை மனசுல வச்சிகிட்டு மனுசன் பத்து வருசம்
பாடுபட்டிருக்காரு. அதோட அந்த பத்துவருட காலத்தில் தன்னுடைய முயற்சியாலும், பயிற்சியாலும் இசையில ஏகப்பட்ட விஷயங்கள்ள கற்றுத் தேறியிருக்கார். அதுதான் முக்கியம். கிடைச்ச வாய்ப்பை வச்சுத்தான் அவர் முன்னுக்கு வந்தார்னு சொல்றது தப்பு. விடாமுயற்சியாலதான் அவர் வெற்றி பெற்றார். இல்லையின்னா இரண்டு படத்தோட அவர் ஊருக்குத் திரும்பியிருப்பார்!"

"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச்
சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.
எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான
வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை
செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."

அந்த அம்சம் என்பதுதான் ஜாதகம்.

ஒருவருக்குப் படிக்கும்போதே, இறுதியாண்டில் வேலைக்கான நியமன
உத்தரவு கிடைக்கிறது. ஒருவருக்கு, படித்து முடித்து மூன்று நான்கு
ஆண்டுகளானாலும் வேலை கிடைப்பதில்லை. ஒருவருக்கு விரும்புகின்ற
வேலை, விரும்புகின்ற ஊரில் கிடைத்து விடுகிறது. வேறு ஒருவருக்கு
விருப்பமில்லாத துறையில் வேலை, வசதியில்லாத ஊரில் கிடைக்கிறது!
ஒருவருக்குக் கை நிறையச் சம்பளம். ஒருவருக்குக் கைக்கும் வாய்க்குமான
வருமானம்.

ஒருவர் திரை உலகில் நுழைந்த அன்றே இயக்குனர் (மணி ரத்தினம்)
பலர் திரை உலகில் அடியெடுத்து வைத்துப் பல ஆண்டுகளாகியும்
இன்னும் உதவி வசனகர்த்தா அல்லது உதவி இயக்குனர்.

ஏன் அப்படி? யோசித்துப் பாருங்கள்

அதேபோல் unorganized sector எனும் ஒழுங்கின்றி இருக்கும் பல துறைகளில்
வாடிக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள்.

பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்.
ஜவுளி, மளிகைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள்.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்.
கட்டுமானத்துறையில் கொத்தனார் மற்றும் சித்தாள் பணிகளைச்
செய்பவர்கள்.
பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.
நூற்பாலைகள், விசைத்தறிகளில் வேலைபார்க்கும்
(வாரக் கூலித்) தொழிலாளர்கள்
வயல்களில் தினக்கூலி அடிப்படையில் உழவு வேலையில்
ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்.....இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

அவர்கள் எல்லாம் முழு விருப்பத்துடனும், முழு ஊதியத்துடனுமா அங்கே
பணி செய்கிறார்கள்?

பட்டுக்கோட்டையார் உழவுத்தொழிலாளர்களைப் பற்றி அசத்தலாக இரண்டே
வரிகளில் இப்படிச் சொன்னார்:

“ஆடிப்பாடிக் கதிரறுப்போம் ஆனந்தத்தோடு - ஆனா
அறுத்த கதிரு போற இடம் வேறொருவீடு!”

பட்டுக்கோட்டையார் இன்னொன்றையும் சொன்னார்:

“வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்”

அது அவர் வாழ்ந்த காலத்துச் சிந்தனை!

இன்று வசதி படைத்தவனுக்கு எல்லாம் நடக்கிறது.
சட்டம் உட்பட சர்வமும் வளைந்து கொடுக்கிறது!
==============================================
நமது பிறப்பிலேயே ஒரு Opportunity அமைந்திருக்கும்.

பணக்காரர் வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறக்க வேண்டும்
ஏழை வீட்டில் கடைசிப் பிள்ளையாக பிறக்க வேண்டும்
என்பார்கள்

பணக்காரர் வீட்டில் மூத்தவன் தட்டி அனுபவித்தது போக மீதி
உள்ளதுதான் இளவல்களுக்குக் கிடைக்கும்.
அதுபோல ஏழைவீட்டில் மூத்த பிள்ளையின் மேல் எல்லாபாரமும்
ஏறிக்கொண்டுவிடும். அந்த வீட்டு இளவல் தப்பித்து விடுவான்

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் பிறந்திருந்தால் நீங்கள்
எதற்காக வேலை தேட வேண்டும்?

ஷாரூக்கான் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காகச்
சம்பாதிக்க வேண்டும்?

அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?

ஆகவே வாய்ப்பு முக்கியம். மற்றதெல்லாம் அடுத்தபடிதான்!
-----------------------------------------------------------------------
பத்தாம் வீடு, அதன்காரகன் சனீஷ்வரன் ஆகியவை பற்றி நிறைய
எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் அவைகள் உள்ளன.

புதிதாக வந்துள்ள மாணவர்களை, அவற்றைப் படிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------
சரி, இன்றைய பாடத்திற்கு வருகிறேன்.

வேலைக்கு உரிய இடம் 10ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

வேலை கிடைக்குமா?
நாம் விரும்பும் வேலை கிடைக்குமா?
எப்போது கிடைக்கும்?
எதனால் தாமதம்?
என்பது போன்ற விஷயங்களை அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும் அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக் கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!

வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!
உங்களைப் போன்ற ஆத்மார்த்தமான வாசகர்கள் எனக்குக் கிடைத்ததும்
Opportunity தான். அதனால்தான் 30 மாதங்களில் என்னால்
350 இடுகைகளை வலையேற்ற முடிந்தது.

அன்புடன்,
வாத்தியார்
--------------------

வாழ்க வளமுடன்!

10.8.09

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

"சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா?
மங்காத விழிகளில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கமா?"
----கவியரசர் கண்ணதாசன்
-----------------------------------------------
"தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனசே பித்தம்மா
பிள்ளை மனசே கல்லம்மா!"
-----இதுவும் கவியரசர் கண்ணதாசன்

ஆனால் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக அவர் எழுதிய வரிகள்
பதிவிற்கு இந்த வரிகள் முக்கியம். அவற்றை மனதில் வைத்துக்
கொண்டு மேலே தொடர்ந்து படியுங்கள்!
=================================================================
தமிழில் ’அவஸ்தை’ என்று ஒரு சொல் இருக்கிறது. அருமையான சொல்.
அதற்கு இப்படிப் பொருள் கொள்வார்கள்: அவதி, துன்பம் distress,
suffering, vexation. அதாவது இருக்கவும் முடியாமல் அல்லது போகவும்
முடியாமல் இருக்கும் சூழ்நிலை. சொல்லவும் முடியாமல் அல்லது சொல்லாமல்
இருக்கவும் முடியாமல் ஏற்படுகின்ற சூழ்நிலை!

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் இந்த அவஸ்தையை அதிகம்
அனுபவித்திருப்பார்கள். அதுவும் தம்பதிகள் இருவரில், மனைவிதான்
அதிகமாக அனுபவித்திருப்பாள்.

அவள் சும்மா இருந்தாலும், சந்திக்கும் உறவினர்களும், தோழிகளும் சும்மா
இருக்க மாட்டார்கள். நோண்டுவார்கள்.தோண்டுவார்கள். அவளுடைய
மனநிலையைக் (Mood) கெடுத்து விடுவார்கள்.

“ஏன்டி... ஏதாவது விஷேசம் உண்டா?”

அட, கிறுக்கே! இருந்தால் அவள் சொல்லித் தொலைக்க மாட்டாளா?

கேட்டதற்காக, மன வருத்தம் shoot up ஆகி அவள் பதில் சொல்வாள்.

“இனிமேல்தான்....!”

“என்னடி கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. பிறகு பெற்றுக்
கொள்ளலாம் என்று ஒத்தி வைத்திருக்கிறீர்களா? அப்படியெல்லாம்
ஒத்திவைக்கக்கூடாது. காலாகாலத்தில் அததைச் செய்துவிட வேண்டும்!”

அவளால் என்ன சொல்ல முடியும்?

மேட்னி ஷோ, நைட் ஷோ என்று தம்பதியர் பல ஷோக்களைப் பார்த்து
விட்டார்கள். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை. அதற்கு அவர்கள்
என்ன செய்வார்கள்?

சிலருக்குத் திருமணமாகி ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திலேயே
குழந்தை பிறந்து விடும். சிலருக்குத் தாமதமாக ஆறு அல்லது எட்டு
வருடங்கள் கழித்துக் கூடப் பிறக்கலாம்.

எனக்குத் தெரிந்த செட்டிநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு, ’ரயில்வண்டி ஆச்சி’
என்ற அடையாளப்பெயர் இருந்தது. அந்த ஆச்சிக்குத் திருமணமாகி
20 ஆண்டுகளில் 18 குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்தது
போக மிச்சம் 16 குழந்தைகள் உயிரோடு இருந்தன. அத்தனை குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்கி நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்தார்.
அந்தப் பதினாறில் பதினொன்று பெண் குழந்தைகள் என்பது உபரித் தகவல்.
அதெல்லாம் நடந்தது 1940 - 1960 ஆண்டு காலகட்டமாகும்.

அப்போது ஏது குடும்பக்கட்டுப்பாடு? ஒரு ரூபாய்க்கு 3 கிலோ அரிசி விற்ற
காலம். குரங்கு மார்க் மண்ணெண்ணெய், 15 லிட்டர் டின்னின் விலை வெறும்
பத்து ரூபாய்க்கு விற்ற காலம். அந்த அம்மையாரின் பேரன் என்னுடைய
பள்ளித் தோழன்.

பின் ஒரு நாளில் ஏதேட்சையாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது,
அவன் இப்படிச் சொன்னான்:

“கல்யாணமான பிறகு, எங்கள் அப்பத்தா, தூரமாகி (வீட்டிற்கு விலக்காகி)
உட்கார்ந்ததே இல்லை”

அதாவது 3 நாள் பீரியடில் விலக்கானதே இல்லை என்று விளையாட்டாகச்
சொல்வான்.
----------------------------------------------------------------------------
இதே போல பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு.

இரண்டு பெரிசுகள் வாக்கிங் போகும் இடத்தில் நட்பாகிப் பேசிக் கொள்கின்றன:

“Sir,I am blessed with 3 children. They are now in states.
They are pouring money in dollars. Investing them in good
stock is my present task!"

பீற்றிக் கொண்டதோடு நிறுத்தியிருக்கலாம் இல்லையா?தொடர்ந்து கேட்பார்:

”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

உடனே நம்ம ஆள் பதில் சொல்வார்.

"I am cursed with two children!" (எனக்கு சாபமாகக் கிடைத்தது இரண்டு)

"அடடா? என்ன ஆயிற்று?”

அடுத்தவனுடைய கதையைக் கேட்பதில்தான் நமக்கு எத்தனை ஆர்வம்!

“என்னுடைய வருமானத்திற்குள் அவர்களைப் படிக்க வைக்க முடியா
தென்று, இருந்த வீட்டை விற்று அவர்களைப் படிக்க வைத்தேன்.
இருவருமே ’இஞ்சி’ னியர்கள். ஒருவன் புனேயில் இருக்கிறான்.
இன்னொருவன் ஷாம்ஷெட்பூரில் இருக்கிறான். கை நிறையச் சம்பாதிக்
கிறார்கள்.ஆனால் எனக்குக் காலணா பிரயோசனமில்லை. என்னுடைய
பென்சன் பணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

”ohh... my god, thankless people! ஏன் அப்படி?”

"படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவுடன்,
அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பெண்ணைப் பார்த்து உடனே திருமணத்
தையும் செய்து வைத்தேன். அதுதான் நான் செய்த தவறு. செலவழித்த
பணத்தை எல்லாம் கறந்து கொண்டு, அவர்களுக்குக் கல்யாணத்தைப்
பண்ணியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய மனம் வரவில்லை.
பெற்றவர்களைக் கவனிக்காவிட்டால் போகட்டும். நல்லாயிருந்தால் சரி!”

“நீங்கள் விடக்கூடாது சார், நீங்கள் உங்கள் கடமையைச் செய்ததுபோல,
அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டாமா?”

“அவர்கள் இருவரும் பெண்டாட்டிதாசர்கள். சுயமாக சிந்திக்கும் திறன்
அவர்களுக்கு இல்லை! எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. என்
சுயமரியாதையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா?”

ஆமாம், அவர் சொன்னது நிதர்சனமான உண்மை! அரை வயிறு கஞ்சி
குடித்தாலும் பரவாயில்லை. தன்மானமும், சுதந்திர உணர்வும் முக்கியம்
இல்லையா?
-----------------------------------------------------------------------------
இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். ஜஸ்ட் உதாரணத்திற்காக
இரண்டு வித நிலைப்பாட்டைச் சுற்றிக் காட்டியிருக்கிறேன்.

குழந்தை என்பது வரமாகவும் இருக்கலாம், சாபமாகவும் இருக்கலாம்.

குழந்தைகள் முக்கியமில்லை. அவர்கள் நல்ல குழந்தைகளா என்பதுதான் முக்கியம்.

இப்போதெல்லாம், ”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்கக்கூடாது!
எத்தனை தொல்லைகள்? என்றுதான் கேட்க வேண்டும். குழந்தைகளை
வளர்த்து ஆளாக்குவதில் அத்தனை தொல்லைகள். L.K.G யிலிருந்து Plus2
படிக்க வைப்பதற்குள் ஆண்டு ஒன்றிற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும்.
தொழில் கல்வி, மேல் நிலைக் கல்வி படிக்க வைப்பதென்றால் லட்சக்
கணக்கில் செல்வாகும்.

அப்படியே படிக்க வைத்து ஆளாக்கினாலும், எத்தனை குழந்தைகள்
பெற்றோர்கள் மீது விசுவாசமாக இருக்கின்றன சொல்லுங்கள்?

இருக்கின்றன என்று 10 குழந்தைகளை நீங்கள் அடையாளம் காட்டினால்,
இல்லை என்று என்னால் 100 குழந்தைகளை அடையாளம் காட்ட முடியும்!

ஆகவே நல்ல குழந்தைகளைப் பெற்றோம் எனும் திருப்திதான் முக்கியமானது.
------------------------------------------------------------------------------
சரி, பாடத்திற்கு வருகிறேன்.

குழந்தை பாக்கியத்திற்கு முக்கியமான இடம் 5ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

கல்யாணமாகி, எப்போது நமக்குக் குழந்தை பிறக்கும் என்று ஆதங்கத்தோடு,
ஏக்கத்தோடு இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு நல்ல தீர்வைச் சொல்வதற்காகத்தான்
இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

எப்போது பிறக்கும்?
எதனால் தாமதம்?
பணம் செலவாகாத பரிகாரம் உண்டா?’ என்பது போன்ற விஷயங்களை
அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும்
அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இரண்டு நாட்களில் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக்கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!
முன் பாடங்களைப் படித்திராதவர்கள், இந்தத் தலைப்பில் ஆர்வமாகி
தங்கள் ஜாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு என்னைப் பிறாண்டிக்
கொண்டிருப்பார்கள்.

புதிய வரவுகளுக்கு ஒன்று சொல்ல் விரும்புகிறேன். நீங்கள் பழைய
பாடங்களைப் படிக்காமல் இப்போது நடத்துவது எதுவுமே புரியாது.
ஆகவே அவற்றைப் படியுங்கள்.

Okayயா

அன்புடன்,
வாத்தியார்

--------------------
வாழ்க வளமுடன்!

9.8.09

தேவை உங்கள் உதவி!

தேவை உங்கள் உதவி!

பதிவில் Power Point Slides களை உள்ளிடுவது எப்படி?
செயல்முறை என்ன?

How to upload PP slides in the blog? What is the procedure?
(That is in the posting and not in the side bar)

Gif image படங்களை அதன் சுவாரசியம் கெடாமல் பதிவில் உள்ளிடுவது எப்படி?
இப்போது உள்ள optionல் jpeg படங்களைப் போன்றுதான் அது் பதிவாகிறது!

விவரம் தெரிந்த மாணவக் கண்மணிகளே - சொல்லித் தாருங்கள் எனக்கு!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

6.8.09

சிறுகதை: 21st Century Avvaiyar

சிறுகதை: 21st Century Avvaiyar

ஆத்தாளுக்கும், மகளுக்கும் சண்டை. சத்தம் தெருவரை கேட்டது.
ஒண்டிக் குடித்தன வீடு. கேட்காதா பின்னே?

மாடியில் படியேறி, தங்கள் வீட்டு வாசல்வரைக்கும் ஒருவர் நடந்துவரும்
ஓசையைக்கூடக் கேட்காமல் சத்தமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"என்னடி சொல்றே? விளங்குகிற மாதிரிச் சொல்லு!"

"உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் விளங்காது - எப்படிச் சொன்னாலும்
விளங்காது - அதனாலதான் சுருக்கமாச் சொல்றேன். பெரியப்பா பணம்
கொண்டு வந்து கொடுத்தால் - வாங்காதே. வேண்டாம் என்று சொல்லிவிடு"

"அதுதான் எப்படிச் சொல்றது?"

"உனக்கு முடியவில்லையென்றால் சொல்லு.நான் சொல்கிறேன். அய்யா,
பெரியவரே, மடியில் பணமும், மனதில் இருளும் கொண்ட மகானே! என்
தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவாத உங்கள் பணம், இப்போது நீங்கள்
வலிய வந்து கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். உங்களிடம் பணம் வாங்கி,
அது ஒத்த ரூபாயாக இருந்தாலும் சரி அல்லது ஒரு லட்சமாக இருந்தாலும்
சரி,திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எனக்குத்
திருமணமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன் - போதுமா?"

"கிறுக்குப் பிடிச்சமாதிரிப் பேசாதே.பானை செய்றதுக்குப் பத்து நாள் ஆகும்.
போட்டு உடைக்கிறதுக்கு ஒரு நொடி போதும். முகத்தில் அறைஞ்சமாதிரி
வேண்டாம்னு சொல்லிட்டா, ஊருக்கு வந்து பத்துப் பங்காளிகள் முன்னால நின்னு
உன் கல்யாணத்தை நடத்துறது யாரு?"

"அதுக்கெல்லாம் நீ கவலைப் படாதே!.எங்க பெரியப்பாவைப்பத்தி எனக்கு
நன்றாகத் தெரியும். தலைப்பாகை வச்சிகிறதுக்கும், தேங்காய்ச் சட்டி
தூக்கிறதுக்கும் அவரை யாரும் கூப்பிடவேண்டாம். நான்தான் வீட்டிற்கு
மூத்தவன் என்று சொல்லி வம்படியா வந்து, முதல் ஆளா நின்னுடுவாரு!
பணம்னா மட்டும்தான் மனுஷன்கிட்ட பத்து ரூபாய்கூட வாங்கிறது கஷ்டம்.
ஆனா நீ சொன்ன அதுக்கெல்லாம் பி.டி.உஷா வேகத்தில அவரே ஓடி வந்து
நின்னுடுவாரு!"

"வேண்டாம்னு சொன்னா, கொண்டு வந்து கொடுக்கிறவங்களை அவமதிக்கிறது
மாதிரி ஆகாதா?"

"வேண்டாம்னு ஏன் சொல்றே - கொஞ்சம் புத்திசாலித்தனமா மாத்திச் சொல்லு.
எங்களுக்கு வேணும்ங்கிற அளவுக்கு பணம் கிடைச்சிருச்சு.இப்போது பணம்
எதுவும் வேண்டாம். தேவைப்பாட்டால் கேட்டு வாங்கிகிறோம் என்று சொல்லு!"

"அதையும் மீறி, இல்லை வச்சிக்குங்க என்று சொல்லி மேஜை மேல வச்சிட்டுப்
போனார்ன்னா என்ன செய்றது!"

"ம்..ம்..அப்படி வச்சிட்டுப் போனார்ன்னா, அவர் போன உடனே, அந்தப்
பணத்தைக் கொண்டுபோய் வடபழநி முருகன்கோயில் உண்டியல்ல போட்டுவிட்டு
வந்து விடு."

"உன் கோபத்துக்கும் வெறுப்பிற்கும் ஒரு அளவில்லையா? உண்டியல்ல
எதுக்காகப் போடணும்?"

"வட பழநி முருகன் தன் பக்தைக்கு நல்லது பண்ணாம விட்டுட்டாரு. உன் சகோதரி
அதுதான் என் பெரியம்மா - எவ்வளவு நல்லவர்கள். எவ்வளவு பெரிய முருக பக்தை
அவர்களைக் கொண்டுபோய் எதுக்காக இந்தக் கஞ்சத்தனம் பிடிச்ச மனுஷன்கிட்ட
அந்த முருகன் சிக்க வச்சாரு. சீக்கிரமா அவங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
நீ போய் உண்டியல்ல போட்டுட்டு வா. பிரார்த்தனையை நான் பண்ணிக்கிறேன்".

"அடிப் பாவி!"

"பாவி என்று சொல்லாதே, பெரியம்மாவைப் பற்றிக் காலையில் ஒரு கவிதை
எழுதினேன். அது இந்தச் சீட்டில் உள்ளது படித்துப்பார். சும்மா மனசுக்குள்ளேயே
படிக்காதே - வாய் விட்டுப் படி - அப்பொழுதுதான் அது செவி வழியாக மனதிற்குள்
போகும்!"

"உன்னைத் தமிழ் எம்.ஏ படிக்க வச்சதுக்கு இது ஒன்னுதான் மிச்சம்" என்று
முணுமுணுத்தவாறே சீட்டை வாங்கி வாய்விட்டுப் படித்தார்கள் வள்ளி அம்மையார்.

"கொடியது எதுன்னு முருகன் விளக்கமாகச் சொல்லும்படி கேட்க, 21ம் நூற்றாண்டின்
அவ்வைப்பிராட்டி பாடியது.
கொடியது கேட்கின் நெடி வெவ்வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிதே கஞ்சனுடன் வாழ்வது
அதனினும் கொடிதே அவனின் மனைவியாய் இருப்பது!"

"கிறுக்குக் கழுதை அவ்வையார் எங்கேடி இதெல்லாம் பாடினாள்?" என்று தன் தாய்
சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சீதா, தேங்காய்ப்பூத் துண்டையும், ஷாம்பூ
பாக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

வெளியே மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளியம்மை
ஆச்சியின் பெரிய கொழுதனார் சிவலிங்கம் செட்டியாருக்கு - அதுதான் சீதாவின்
பெரியப்பாவிற்கு சம்மட்டியால் அடிவாங்கியதைப் போன்று இருந்தது, ஒரு அடியல்ல,
அடுத்தடுத்து பத்து அடி வாங்கியதைப் போன்றிருந்தது!

சத்தமில்லாமல் திரும்பி, மெதுவாக நடந்து, படிகளில் இறங்கிக் கீழே தெருவிற்கு
வந்தவர், அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மனதில் தாங்கவொன்னா துக்கம். கையில் தன் தம்பி மகள் திருமணத்திற்குக்
கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த ஐம்பதினாயிரம் ரூபாய் பணம்.

++++++++++ ++++++++++++++++++ ++++++++++++++

அதே நேரம் தன் வீட்டில் தெய்வானை ஆச்சி கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தன் தங்கை மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் அவர். அரை மனதோடு தன்
வற்புறுத்தலுக்காக வீட்டுக்காரர் போயிருக்கிறாரே - கொடுத்து விட்டு வருவாரா
அல்லது வாங்கிக் கட்டிக் கொண்டு வருவாரா? ஒன்றும் புரியவில்லை

ஆச்சியின் தவிப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. அவரின் கணவர் திருவாளர்
சிவலிங்கம் செட்டியார் காலை பத்து மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பினார்.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தார்.சோர்வுடனும் காணப்பட்டார்.

தெய்வானை ஆச்சி மெல்லிய குரலில் கேட்டார்கள்.

"ஏன் சிக்கலாகி விட்டதா?"

"இல்லை"

"பணத்தை வாங்கிக் கொண்டார்களா - இல்லையா?"

"பணத்தை வாங்கிக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை"

"என்ன சொல்கிறீர்கள்?"

"என் தம்பியின் மருத்துவச் செலவிற்கு நான் பண உதவி செய்யாத கோபம்
அவர்களை விட்டு இன்னும் விலகவில்லை! என் தம்பியின் சாவிற்கு நான்தான்
காரணம் என்ற எண்ணத்தோடுதான் இன்னும் இருக்கிறார்கள்."

"சொன்னார்களா?"

"இல்லை தெரிந்து கொண்டேன்!"

"பேசினீர்களா?"

"எல்லாவற்றையும் விலாவரியாக இப்போது கேட்காதே - இரண்டு நாட்கள்
போகட்டும் சொல்கிறேன்" என்று சொன்னவர், படுக்கையறைக்குச் சென்று
படுக்கும் நோக்கத்துடன் சட்டையைக் கழற்ற ஆரம்பித்தார்.

அம்மையார் விடவில்லை. பின்னாலேயே தொடர்ந்து சென்று கேட்டார்கள்

"பணத்தைத் என்ன செய்தீர்கள்?"

அழுத்தமாகப் பதில் சொன்னார் அவர்."வடபழனிக் கோயில் உண்டியலில்
போட்டு விட்டேன்".

440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது அவருடைய
மனைவிக்கு.

"விளையாடாமல் சொல்லுங்கள் - உண்டியலிலா போட்டீர்கள்?"

"ஆமாம்,"

"எதற்காக?"

"சும்மா வழ வழவென்று கேட்டுக் கொண்டிருக்காதே, போடவேண்டும் என்று
தோன்றியது போட்டு விட்டேன்"

படுக்கையில் படுத்தவர், முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார். தெய்வானை
ஆச்சியும் அத்துடன் விட்டு விட்டார்கள்.

++++++++++++++ ++++++++++++++++++++ +++++++++++++++++

நான்கைந்து நாட்கள் போகட்டும், நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம்
என்றிருந்த ஆச்சிக்கு மூன்றாம் நாள் காலையில் கூரியரில் வந்த கடிதம்
மேலும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது.

பெரிய அளவில் தர்மம் செய்யும் அறக்கட்டளை நிர்வாகத்தினரிடமிருந்து
வந்திருந்தது. அந்தக் கடிதம். ரத்தினச் சுருக்கமாக நான்கே வரிகளில் எழுதப்
பெற்றிருந்தது

எழுதப் பெற்றிருந்த வாசகம் இதுதான்

அன்புடையீர், நீங்கள் மனமுவந்து அனுப்பிய ரூபாய் நான்கு லட்சத்திற்கான
பணவோலை (Pay Order) கிடைத்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி
குறிப்பிட்டிருந்த குடும்பத்திற்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் திருமண
உதவித் தொகையாக ரூபாய் ஒரு லெட்சத்திற்கான காசோலையை (Cheque)
அனுப்பி விட்டோம். மீதி மூன்று லெட்ச ரூபாயை எங்கள் தர்மநிதிக் கணக்கில்
வரவு வைத்துக் கொண்டு விட்டோம்.உங்களுக்கு நேரம் இருக்கும்போது
எங்கள் அலுவலகத்திற்கு ஒரு முறை வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் தர்ம சிந்தனை வாழ்க! வளர்க!

ஆச்சிக்கு ஒன்றும் புரியவில்லை! தன் கணவர் தலை கீழாக மாறிப்போய் விட்டாரே,
என்ன நடந்திருக்கும்? அவருடைய மனதைப் புரட்டிபோட்டு மாற்றியது யாராக
இருக்கும்? இருபத்தைந்து ஆண்டுகளாகத் தன்னால் செய்ய முடியாததை யார்
செய்திருப்பார்கள்?

பலத்த சிந்தனையில் ஆழ்ந்தவர்கள்,அதற்கு விடை அன்று மாலை கிடைக்கும்
என்று நினைத்தார்கள்.

ஆனால் கிடைக்கவில்லை!

கணவரிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது.

தான் தன் தம்பி வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, பேருந்து கிடைக்காமல்,
நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்ததையும், வரும் வழியில் வடபழனிக் கோவியில்
அருகே காப்பி அருந்தும் நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றிற்குள் சென்ற
மர்ந்ததையும், அங்கே சுவற்றில் மாட்டப்பெற்றிருந்த படத்தில் இருந்த
வாசகங்களைப் படிக்க நேர்ந்ததையும், தன்தம்பி மகளின் தர்ம அடிச் சொற்களால்
தன் மனதில் பாதி ஏற்பட்டிருந்த மாற்றத்தையும், அந்தப் படத்தில் எழுதப்
பெற்றிருந்த வாசகங்கள் முழு மாற்றத்தை ஏற்படுத்தியதையும் அவர்
யாரிடமும் சொல்லவில்லை.

சிலவற்றைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு!

அந்த வைர வரிகள் இதுதான்

"ஒரு மாதத்தில் பயன்பெற கீரையை பயிர்செய்
ஒரு வருடத்தில் பயன்பெற வாழையைப் பயிர்செய்
ஏழு வருடத்தில் பயன்பெற தென்னையைப் பயிர்செய்
இருபது வருடத்தில் பயன்பெற தேக்கைப் பயிர்செய்
பெற்ற பிறவியின் பயன்பெற தர்மத்தைப் பயிர்செய்!"

****************** **************
’பயிர்களும் பயன்களும்' எனும் தலைப்பில் அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில்
வெளிவந்த சிறுகதை! நீங்கள் படித்து மகிழ இங்கே பதிந்தேன்.


வாழ்க வளமுடன்!

காட்சியும் - சாட்சியும்!


காட்சியும் - சாட்சியும்!

கவிஞர்களால் எதையும் சுருங்கச் சொல்லி மனதை அசர அடிக்க முடியும்.
எழுத்தாளர்களுக்கு எதையும் விரிவாகச் சொல்லத்தான் வரும்.

அறுபடை வீடுகளுக்கு 24 வரிகளில் ஒரு பாட்டு!

பாடலை எழுதியவர் மிகப் பெரிய கவிஞர். முனைவர். கல்லூரியில்
தமிழ்த்துறைத் தலவராக இருந்தவர். அதோடு முக்கியமாக கவியரசர்
கண்ணதாசனின் சிநேகிதர். அவருடைய பெயர் அர.சிங்காரவடிவேலன்.
அசத்தலாக, எதுகை, மோனை, சீர், சந்தம் என்று இலக்கண சுத்தமாகப்
பாடல் எழுதுவதில் வல்லவர்.

கீழே உள்ள பாடல் எப்படி உள்ளது பாருங்கள்.
-----------------------------------------------------------------

"சுப்பன் சொன்னான் மந்திரத்தை
சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
இதற்கு சாட்சி சுவாமிமலை!

மாம்பழம் கேட்டது இருபிள்ளை
மதியால் வென்றது முதல்பிள்ளை
மலையில் நின்றது மறுபிள்ளை
மயிலுமே சாட்சி பழநிமலை!

தீயவன் சூரனை கொன்றவனே
செந்தூர் கடலினை கொண்டவனே
மாயவன் மகனே முருகையனே
மலரொன்று சாட்சி திருச்சீர்அலை!

கானகம் வாழ்ந்தது புள்ளிமயில்
கந்தனை மணந்தது வள்ளிமயில்
வானகம் வாழ்த்துது பூத்தூவி
யானையே சாட்சி தணிகைமலை!

செந்தமிழ்ப் பாவை தெய்வானை
செந்தில் முருகனை கைப்பிடித்தாள்
பைந்தமிழ் வாழ்ந்திடும் மணக்காட்சி
பரங்குன் றத்தின் திருக்காட்சி

கோதையர் இருவரும் அருகிருக்க
குமரனும் மலையில் கொலுவிருக்க
மாமனும் அன்பால் வாழ்த்திசைக்க
மங்களக் காட்சி சோலைமலை!"
- அர.சிங்காரவடிவேலன்
--------------------------
முதல் 4 வரிகள் -- சுவாமிமலை
அடுத்த 4 வரிகள் - பழநி
அடுத்த 4 வரிகள் - திருச்செந்தூர்
அடுத்த 4 வரிகள் - திருத்தணி
அடுத்த 4 வரிகள் - திருப்பரங்குன்றம்
அடுத்த 4 வரிகள் - பழமுதிர்ச் சோலை
------------------------------------------

வாழ்க வளமுடன்!

4.8.09

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

ஒரிஜினல் மிட்டாய்க் கடை அல்லது ஒரிஜினல் அல்வாக் கடை என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான நெய்யினால் செய்யப்பெற்ற இனிப்புகள்
என்பார்கள். அதுபோல வில்லன்களிலும் ஒரு ஒரிஜினல் வில்லன் இருக்கிறான்.
நீங்கள் திரைப்படங்களில் பார்க்கும் வில்லன் படத்தோடு போய்விடுவான்.
நேரில் பார்க்கும் வில்லத்தனமான ஆசாமிகளைக் கொஞ்சம் புத்திசாலித்
தனத்தோடு சமாளித்துவிடலாம்.

ஆனால் யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்.
அவன் பெயர் மாந்தி!

எல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை.
ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன்
இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

"அது மட்டும் ஏன்?" என்று கேட்காதீர்கள். சில ஜோதிட விதிமுறைகளுக்குக்
காரணம் சொல்ல முடியாது. அதை வகுத்தவர்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். போய்ச் சேர்ந்தவர்களிடம் எப்படிக் கேட்பது?
அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதை, அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள
வேண்டும். அவ்வளவுதான். அது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அந்த வில்லனிடம்
அடி வாங்கியவர்களும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையும், அதாவது
அவர்கள் அனுபவித்ததையும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம் (shadow' planet)

தீயவைகளைச் செய்யக்கூடியது.It has a malefic effect.

குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான். ஒரே உபகிரகம்தான்.
புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன. அது நமக்குத்
தேவையில்லாதது. எந்த மருத்துவமனையில் அவர் பிறந்தார் என்றெல்லாம்
நாம் கேட்டுக் கொண்டிருப்போம். ஆகவே அது தேவையில்லாதது.

It is scientifically a satellite. There ends the matter.

சில ஜோதிடவல்லுனர்கள், இரண்டு பெயர்கள் இருந்தாலும், அவை ஒன்றுதான்
என்பார்கள் வேறு சிலர் அவை தனித்தனி என்னும் மாறுபட்ட கருத்தைக்
கொண்டுள்ளார்கள். ஆனால் பழைய ஜாதகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால்,
ஒன்றைத்தான் குறித்து வைத்துள்ளார்கள். ஆகவே அடித்துச் சொல்லலாம், அவை
இரண்டும் ஒன்றுதான்! There is not a single chart in any book where Gulika
& Mandi are both present, so both must be the same.

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன்
தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு
அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த
சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில்
நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.
ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான
இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும்,
தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின்
ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த,
அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன்
இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு
லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின்
வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம்.
Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

இந்தக்கதையை நம்புவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள், பின்னூட்டத்தில் சொல்ல
வேண்டாம். ஒரு குறுகுறுப்பான தகவல் என்பதற்காக அதைக் கொடுத்துள்ளேன்.
எனக்கும் அந்தக் கதையில் நம்பிக்கை இல்லை!:-))))

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும்
இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி,
குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும்
அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.

அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச்
சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய
தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை
குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின்
நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின்
பார்வை அவன் மேல் விழுக ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை
குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல்
கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
----------------------------------------------------------------------------

படத்தின் மேல் கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்.
ஜகன்நாத ஹோரா மென்பொரு்ளில் கணிக்கபெற்ற ஜாதகத்தில் மாந்தியின்
நிலைப்பாடு அதில் தெரியவரும்
----------------------------------------------------------------------------------------------------
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச்
சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச்
சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள்,
மாந்தியையும் பார்ப்பதில்லை. அஷ்டகவர்க்கத்தையும் பார்ப்பதில்லை.
என் கண்ணிற்கு அது ஒரு குறையாகத்தான் படுகிறது!

நான் படித்ததெல்லாம் ஆங்கில ஜோதிட நூல்கள் என்பதால், எனக்கு ஒரு விரிந்த
பார்வை கிடைத்தது. நான் கேரள ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன். குஜராத் ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப்
பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர்
கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்
சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
-----------------------------------------------------------------------
2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால்,
சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள்
இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில்
(Dictionary)மட்டும்தான்.
---------------------------------------------------------------------
3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன்.
யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும்
என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன்.
உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு
நல்ல உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின்
தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------
4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான
நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
-----------------------------------------------------------------------
5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி
மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன்.
அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது.
சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
-------------------------------------------------------------------------
++++++6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி.
அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).
மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று
விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்
ஈடுபாடுகொள்வாள் (loved by women)
-------------------------------------------------------------------------
7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு
வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை
வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே
வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
-------------------------------------------------------------------------
8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில்
கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன்.

துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன்.
ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
------------------------------------------------------------------------
9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள்
அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய்
விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும்.
(deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.
வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன்.
சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு
இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில்
விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட
விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு
வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை
உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம்
கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.

சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .
உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
----------------------------------------------------------------------------
12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும்.
கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான
பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில்
இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
-----------------------------------------------------------------------
கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு,
சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன
பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும்
போகலாம்.

எனது அனுபவத்தை வைத்து மாந்தியின் பலன்களை மேலும் விவரமாக அலச
உள்ளேன். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சலில் வரும். சனியை
அலசியவுடன், தொடர்ந்து மாந்தியைப் பற்றிய பகுதி வரும்.
பொறுத்திருந்து படியுங்கள்!


அன்புடன்,
வகுப்பறை
வாத்தியார்




வாழ்க வளமுடன்!