மாணவர் பதிவேடு (Enrolment Register)

1.7.09

என்னுடைய நூல் வெளியீட்டு விழா!

என்னுடைய நூல் வெளியீட்டு விழா!

அடியவன் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு நூல் 'செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

நூல் வெளியீட்டு விழா எனது வாசக நண்பரின் காரைக்குடி இல்லத்தில் 12.4.2009ஆம் தேதியன்று நடைபெற்றது. குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் நூலை வெளியிட, தேவகோட்டை ஜமீன்தார் திரு.சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். பட்டிமன்றப் புகழ நகைச்சுவை வேந்தர் கண. சிற்சபேசன் அவர்கள் நூலிற்கான பாராட்டுரையை நல்கினார்

விழாவில் எடுக்கப்பெற்ற புகைப்படங்களில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

கவிஞர் செல்லகணபதி அவர்கள் நூலை வெளியிடும் காட்சி!

கவிஞர் செல்ல கணபதி அவர்கள் நூலைப் பாராட்டிப் பேசுகின்றார்


பட்டிமன்றப் புகழ நகைச்சுவை வேந்தர் கண. சிற்சபேசன் அவர்கள் நூலிற்கான பாராட்டுரையை நல்கினார்


நூலின் முகப்பு அட்டை

நூலின் பின்பக்க அட்டை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூலிற்கு அணிந்துரை நல்கியவர்கள்:

1. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள், Chairman,
Law Commission of India, New Delhi

2. இலக்கியச் சிந்தனை திரு.ப. லெட்சுமணன் அவர்கள்,
சென்னை (மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம்
அவர்களின் மூத்த சகோதரர் இவர்)

3. முனைவர்.திரு.தமிழண்ணல், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை (இன்னாள் தமிழக
அரசின் செம்மொழித் திட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினர்)

நூலின் பெயர்:
செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் (முதல் தொகுதி)
பக்கங்கள்: 160
20 சிறுகதைகள் நூலில் உள்ளன.
விலை: Rs.75:00
பிரதிகள் சென்னையில் கிடைக்கும் இடங்கள்:

1.
உமா பதிப்பகம்
18/171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600 001
தொலைபேசி எண்: 25215363

2.
குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 24353742

3
விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி
கோயமுத்தூர் - 641 009
தொலைபேசி எண்;2394614

வெளியிட்ட அன்று காரைக்குடியில் 500 பிரதிகளும், பிறகு கோவையில்
400 பிரதிகளும் விற்று விட்டன. தற்சமயம் குறைந்த அளவு பிரதிகளே
உள்ளன. வேண்டுபவர்கள் முந்திக் கொள்ளவும்.

புத்தகத்தைப் பற்றிய உங்களுடைய விமர்சனம் வரவேற்கப் படுகிறது.
உங்களுடைய விமர்சனத்தை உங்களுடைய வலைகளில் ஏற்றிவிட்டுச்
சுட்டியையும் நீங்கள் கொடுக்கலாம். அல்லது விமர்சனத்தை எனது
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், அது என்னுடைய வலைப்
பதிவுகளிலும் வெளியிடப்படும்.

யாருடைய விமர்சனம் முதலில் வருகிறது என்று அறிந்து கொள்ள
ஆவலாக உள்ளேன்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

96 comments:

said...

வாழ்த்துகள்

said...

Congrats on your maiden book writing venture.

said...

வா(வ்)ழ்த்துக்கள் ஆசானே.. :))))))

said...

சுப வீர சுப்பையா அவர்களே, தங்கள் முதலாவது நூல் வெளிவந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்களும் ஆசிகளும்

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள்!

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா,

said...

வாழ்க வளமுடன்!

UNGAL ARIYA PANI THODARATTUM.

said...

அய்யா ரொம்ப சந்தோஷம்..... இந்தியா வர ரெடி ஆகி கொண்டு இருக்கிறேன்... வந்த உடனே நீங்க எழுதிய புத்தகத்தை படிப்பது தான் முதல் வேலை.... நல்லது அய்யா....

said...

வாழ்த்துகள் ஐயா.

said...

மகிழ்ச்சி அய்யா. வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே..!

உடனே வாங்க முயல்கிறேன்..!

மீதி அப்பன் முருகன் அருளே..!

said...

Books are treasures. That too such books which bring out the culture of people of certain geographical location will make history.Best wishes.Let your tribe grow!!

said...

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் ஜயா .... சற்று நாட்களாய் எட்டிப் பார்க்க வில்லை ஜயா ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் ..இனி சற்று நாளைக்கு ஜயாவும் லீவு என்று ஏமாந்து போய் விட்டேன்... :)

said...

sir,congrats and all the best to you. when is your astrology book going to be released ?we are waitin...

also, i thought of pasting this link so that it might be useful to our fellow students,
http://www.starteller.com/your-fortune-chinese-new-year.html

said...

வாழ்த்துக்கள் ஐயா

said...

Vazthukal ayya... Ayya expect our class all the schools are reopened after summer vacation.

said...

//
வெளியிட்ட அன்று காரைக்குடியில் 500 பிரதிகளும், பிறகு கோவையில்
400 பிரதிகளும் விற்று விட்டன. தற்சமயம் குறைந்த அளவு பிரதிகளே
உள்ளன. வேண்டுபவர்கள் முந்திக் கொள்ளவும்.
//

விரைவில் அடுத்த பதிப்பு வரும் என்று நம்புகிறோம். அதில் அதிக பிரதிகள் போடவும்.

நான் ஊருக்கு வரும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்.

said...

/////Blogger திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

////Blogger ராஜ் said...
Congrats on your maiden book writing venture.////

உங்கள் பாராட்டிற்கு நன்றி ராஜ்!

said...

/////Blogger சென்ஷி said...
வா(வ்)ழ்த்துக்கள் ஆசானே.. :))))))////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சென்ஷி!

said...

////Blogger Kanags said...
சுப வீர சுப்பையா அவர்களே, தங்கள் முதலாவது நூல் வெளிவந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்./////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
வாழ்த்துக்களும் ஆசிகளும்

உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி ஸ்வாமிஜி!

said...

////Blogger Nisha said...
வாழ்த்துகள்///

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!

said...

////Blogger நாமக்கல் சிபி said...
வாழ்த்துக்கள்!/////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சிபியாரே!

said...

////Blogger புதுகைத் தென்றல் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா,////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!

said...

/////Blogger thirunarayanan said...
வாழ்க வளமுடன்!
UNGAL ARIYA PANI THODARATTUM.////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

////Blogger அருண் பிரசங்கி said...
அய்யா ரொம்ப சந்தோஷம்..... இந்தியா வர ரெடி ஆகி கொண்டு இருக்கிறேன்... வந்த உடனே நீங்க எழுதிய புத்தகத்தை படிப்பது தான் முதல் வேலை.... நல்லது அய்யா..../////

ஆகா, அப்படியே செய்யுங்கள். நன்றி!

said...

/////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துகள் ஐயா.////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

///Blogger chaks said...
மகிழ்ச்சி அய்யா. வாழ்த்துக்கள்/////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரரே!

said...

////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாழ்த்துக்கள் வாத்தியாரே..!
உடனே வாங்க முயல்கிறேன்..!
மீதி அப்பன் முருகன் அருளே..!////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி உண்மைத் தமிழரே!

said...

////Blogger kmr.krishnan said...
Books are treasures. That too such books which bring out the culture of people of certain geographical location will make history.Best wishes.Let your tribe grow!!////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

/////Blogger துபாய் ராஜா said...
வாழ்த்துக்கள்.////

நன்றி நண்பரே!

said...

i have book which has got predictions for the globe till 2018. sofar two of them has come true..lets wait

said...

/////Blogger Emmanuel Arul Gobinath said...
வாழ்த்துக்கள் ஜயா .... சற்று நாட்களாய் எட்டிப் பார்க்க வில்லை ஜயா ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் ..இனி சற்று நாளைக்கு ஜயாவும் லீவு என்று ஏமாந்து போய் விட்டேன்... :)/////

எதற்கு ஏமாற்றம்? எப்போதும் நான் உங்கள் நினைவோடுதான் இருக்கிறேன்!

said...

/////Blogger mike said...
sir,congrats and all the best to you. when is your astrology book going to be released ?we are waitin.../////

இந்த ஆண்டு நவம்பரில் அதை வெளியிட உத்தேசித்துள்ளேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
also, i thought of pasting this link so that it might be useful to our fellow students,
http://www.starteller.com/your-fortune-chinese-new-year.html/////
தகவலுக்கு நன்றி!

said...

////Blogger aravindaan said...
வாழ்த்துக்கள் ஐயா/////

நன்றி அரவிந்தன்

said...

////Blogger Prabhu said...
Vazthukal ayya... Ayya expect our class all the schools are reopened after summer vacation./////

கவலை எதற்கு? அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் பாடங்கள் துவங்கும்!

said...

/////Blogger மெனக்கெட்டு said...
//
வெளியிட்ட அன்று காரைக்குடியில் 500 பிரதிகளும், பிறகு கோவையில்
400 பிரதிகளும் விற்று விட்டன. தற்சமயம் குறைந்த அளவு பிரதிகளே
உள்ளன. வேண்டுபவர்கள் முந்திக் கொள்ளவும்.
//
விரைவில் அடுத்த பதிப்பு வரும் என்று நம்புகிறோம். அதில் அதிக பிரதிகள் போடவும்.
நான் ஊருக்கு வரும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்.//////

இந்த புத்தகத்தின் அடுத்த பதிப்பை செப்டம்பரில் வெளியிட உள்ளேன்.

said...

////Blogger mike said...
i have book which has got predictions for the globe till 2018. sofar two of them has come true..lets wait////

புத்தகத்தின் பெயர், ஆசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர் ஆகியவற்றையும் நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்!

said...

the predictions are supposedly from ancient leaves...pretty tough times ,published in jan 2008

said...

Dear sir,

The effort that your putting to spread good thoughts among everybody is worth appreciable. More and more good things should come to you to enable us to get more and more knowledge.

said...

Congrats!!! I have asked to get one copy from T.Nagar showroom.

Wish you all success sir.

-Shankar

said...

அய்யா,

அருமையான வேலையை சிறப்பாக செய்து இருக்கிறீர்கள். புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்த இந்த காலத்தில், இந்த துணிவான வெளியீடு பாராட்டுக்குரியது.
உங்கள் கதை சொல்லும் விதம், என்னைப்போல் பலரையும் கவர்ந்து இருக்கிறது.

Quality of Content - உங்கள் பிற கதைகள் போல் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. சனிக்கிழமை T நகர் சென்று வாங்கி படிக்கிறேன்.

வாழ்த்துக்கள்

நன்றி

ஸ்ரீதர்

said...

நல்ல ஓரையில் தான் புத்தகம் வெளியிட்டுறுப்பீர்கள். வாத்தியாரோட மொழிநடையும் சிறப்பாக இருக்கம் போது, உறுதியாக இது பல பல பதிப்புகளை தாண்டும் என கூறலாம்.


நான் வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் புத்தகத்தை இப்போதைக்கு வாங்க இயலாது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

(Kalathra dosham No Ayya NAGA DOSHAM)

களத்திர தோஷத்தைப் பற்றி எதற்குக் கவலை?
பெண்கள்தான் கவலைப்பட வேண்டும்.
பாலனுக்கு எதற்குக் கவலை?

Enaku 7il kethu irukuthu antha veetin athipathiyum pagai.....athu girlsku mattum thaana.......

then josiyar oruvar enaku 7il kethu ullathu antha veetin athipathiyum pagai so Naga dosham ullathu........29 age il onli marriage pannanum enru sollukiraar..........


so neengal oru murai enadaya jadhagathai paarthu naga dosham irukiratha sollungal Ayya........

12.7.1986
12.58am
Sivagangai district...


Naan Sariyyaga kelvi ketkiren Enru ninaikiren thavaru irunthaal MANIKKAVUM........

said...

Congrats.

said...

////Blogger mike said...
the predictions are supposedly from ancient leaves...pretty tough times ,published in jan 2008/////

தகவலுக்கு நன்றி!

said...

////Blogger NSK said...
Dear sir,
The effort that your putting to spread good thoughts among everybody is worth appreciable. More and more good things should come to you to enable us to get more and more knowledge.////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

said...

////Blogger hotcat said...
Congrats!!! I have asked to get one copy from T.Nagar showroom.
Wish you all success sir.
-Shankar////

உங்கள் அன்பிற்கு நன்றி சங்கர்! புத்தகம் எப்போது உங்கள் கைக்குக் கிடைக்கிறதோ, அப்போது படித்து விட்டு உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்!

said...

Blogger Sridhar said...
அய்யா,
அருமையான வேலையை சிறப்பாக செய்து இருக்கிறீர்கள். புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்த இந்த காலத்தில், இந்த துணிவான வெளியீடு பாராட்டுக்குரியது.
உங்கள் கதை சொல்லும் விதம், என்னைப்போல் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
Quality of Content - உங்கள் பிற கதைகள் போல் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. சனிக்கிழமை T நகர் சென்று வாங்கி படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்
நன்றி
ஸ்ரீதர்////

வாங்குவதோடு மட்டுமல்லாமல், படித்துவிட்டு உங்கள் மதிப்புரையை எழுதுங்கள்.நன்றி!

said...

////Blogger குறும்பன் said...
நல்ல ஓரையில் தான் புத்தகம் வெளியிட்டுறுப்பீர்கள். வாத்தியாரோட மொழிநடையும் சிறப்பாக இருக்கம் போது, உறுதியாக இது பல பல பதிப்புகளை தாண்டும் என கூறலாம்.
நான் வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் புத்தகத்தை இப்போதைக்கு வாங்க இயலாது. உங்களுக்கு வாழ்த்துக்கள்./////

நன்றி குறும்பன். உங்களுக்குப் பிரதி கிடைக்க வில்லை என்றால் சொல்லுங்கள். கிடைக்கும்படி செய்கிறேன்! (குறும்பான உங்கள் விமர்சனம் வேண்டும்:-)))))

said...

Blogger Bala said...
so neengal oru murai enadaya jadhagathai paarthu naga dosham irukiratha sollungal Ayya........

12.7.1986
12.58am
Sivagangai district...///////

சிவகங்கை மாவட்டம் என்று சொன்னால் என்ன செய்ய? பிறந்த ஊரை எழுதுங்கள். அதோடு கிராமமாக இருந்தால் அருகில் - 30 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள நகரத்தின் பெயரையும் எழுதுங்கள். ஜாதகம் கணிப்பதற்கு அது வேண்டாமா? நீங்கள் பாடங்களைப் படிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது!

said...

////Blogger krish said...
Congrats.////

உங்கள் பாராட்டிற்கு நன்றி க்ரீஷ்!

said...

Ok Ayya..

Please verify Naga dosham is seen r not...(if seen means see guru paarvai also if he seen means dosha is cancelled onli know so onli i said)......


12.7.1986
12.58am
Sivagangai district.....I was born in Aralikottai Kraamam...

Near Landmark is (30km) Kundrakudi,Pillayarpatti,Thirukkoshtiyur,
Thirumayam(Alangudi),etc,...


Ok a hint....Our Tamilnadu M.P mr.Periya karuppan born in our Aralikottai kraamam onli sir.......

said...

Dear Sir,

Congrats on your efforts.
I am in mumbai, can i get your
book by courier.

said...

Vazthukal ayya , ungal panni menmalum sirakka iraivannai prathikirean .

by Selva.V

said...

வாழ்த்துகள்.

said...

வாத்தியாரே வாழ்த்துகள் !

சிறுவயதில் இலக்கியத்தில் செய்ய நினைத்தையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து வருகிறீர்கள். பாராட்டுகள்.

***

உங்களுக்கு பேச மைக் கிடைத்தா இல்லையா ?
:)

said...

Blogger Bala said...
Ok Ayya..
Please verify Naga dosham is seen r not...(if seen means see guru paarvai also if he seen means dosha is cancelled onli know so onli i said)......
12.7.1986
12.58am
Sivagangai district.....I was born in Aralikottai Kraamam...
Near Landmark is (30km) Kundrakudi,Pillayarpatti,Thirukkoshtiyur,
Thirumayam(Alangudi),etc,...
Ok a hint....Our Tamilnadu M.P mr.Periya karuppan born in our Aralikottai kraamam onli sir.......////

ஏழில் ராகு இருப்பதால் தோஷம் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?
தாமதமாகத் திருமணம் நடக்கும்.அவ்வளவுதான்! 27 வயதிற்குமேல் திருமணம் நடக்கும்.

நீங்கள் துலா லக்கினம். உங்கள் லக்கினநாதன் 11ல் - லாபஸ்தானத்தில்
சிம்ம ராசி, பூர நட்சத்திரம். சந்திரனுக்கு நேர் எதிர் வீட்டில் கும்பத்தில் குரு பகவான்
அமர்ந்து கஜகேசரி யோகத்தைக் கொடுக்கிறார். எல்லாமே நன்றாக இருக்கிறது.

ஜாதகத்தில் குறையே இல்லையா?
குறையில்லாத ஜாதகம் ஏது?
உங்களுக்கு 2ஆம் வீட்டில் சனீஸ்வரன் எழுந்தருளியுள்ளார். அதுகுறைதான்
அது குடும்ப ஸ்தானம்.
அதற்குப் பரிகாரம்: மனைவி சொல்லே மந்திரம் என்று வருகிற மகராசிக்கு
அடங்கிப்போக வேண்டியதுதான்!

எல்லோரும் 40 வயதிற்குமேல் அடங்கிப்போவார்கள். நீங்கள் Day oneல் இருந்து அடங்கிப்போக வேண்டியதுதான்!:-))))

said...

///Blogger arumuganainar said...
Dear Sir,
Congrats on your efforts.
I am in mumbai, can i get your
book by courier/////.

சாத்தியமில்லாத்து எது?
கூரியர் செலவையும் கொடுத்தீர்கள் என்றால் அனுப்புவார்கள்.
நான் கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணில் பேசுங்கள்

said...

Blogger கனவு பையன் said...
Vazthukal ayya , ungal panni menmalum sirakka iraivannai prathikirean .
by Selva.V////

நன்றி நண்பரே!

said...

////Blogger ananth said...
வாழ்த்துகள்.////

வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

///Blogger கோவி.கண்ணன் said...
வாத்தியாரே வாழ்த்துகள் !
சிறுவயதில் இலக்கியத்தில் செய்ய நினைத்தையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து வருகிறீர்கள். பாராட்டுகள்./////

பாராட்டுக்களுக்கு நன்றி கோவியாரே! அடிக்கடி என் வயதை நினைவுபடுத்துவதில் அப்படி என்ன உமக்கு சந்தோஷம்? எனக்கு (மனதளவில்) இருபது வயதுதான். இல்லையென்றால் பதிவுகளில் எழுதி உங்களோடு கும்மி அடிக்க முடியுமா?:-))))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்களுக்கு பேச மைக் கிடைத்தா இல்லையா ? :)

கிடைக்காமல் இருக்குமா? வழக்கம்போல மணிக்கணக்கில் பேச முடியவில்லை!
ஐந்து மணித்துளிகளே பேச விட்டார்கள். அதுவும் கூட்டம் முடியும் தருவாயில்.
அதற்கு அடுத்து மிகப் பெரிய அளவில் விருந்துச் சாப்பாடு கிடைத்ததால் அதை
ஒருகை பார்த்துவிட்டு வந்தேன்!:-))))

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா....

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

ஜாதகத்தில் குறையே இல்லையா?
குறையில்லாத ஜாதகம் ஏது?
உங்களுக்கு 2ஆம் வீட்டில் சனீஸ்வரன் எழுந்தருளியுள்ளார். அதுகுறைதான்
அது குடும்ப ஸ்தானம்.
அதற்குப் பரிகாரம்: மனைவி சொல்லே மந்திரம் என்று வருகிற மகராசிக்கு
அடங்கிப்போக வேண்டியதுதான்!

எல்லோரும் 40 வயதிற்குமேல் அடங்கிப்போவார்கள். நீங்கள் Day oneல் இருந்து அடங்கிப்போக வேண்டியதுதான்!:-))))

This is a common Parikaram for all husbands. Thanks for giving this Parikaram.

said...

////Blogger veera said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா....////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

said...

////Blogger ராமலக்ஷ்மி said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!

said...

/////Blogger krish said...
ஜாதகத்தில் குறையே இல்லையா?
குறையில்லாத ஜாதகம் ஏது?
உங்களுக்கு 2ஆம் வீட்டில் சனீஸ்வரன் எழுந்தருளியுள்ளார். அதுகுறைதான்
அது குடும்ப ஸ்தானம்.
அதற்குப் பரிகாரம்: மனைவி சொல்லே மந்திரம் என்று வருகிற மகராசிக்கு
அடங்கிப்போக வேண்டியதுதான்!
எல்லோரும் 40 வயதிற்குமேல் அடங்கிப்போவார்கள். நீங்கள் Day oneல் இருந்து அடங்கிப்போக வேண்டியதுதான்!:-))))
This is a common Parikaram for all husbands. Thanks for giving this Parikaram.//////

நீங்கள் சொன்னால் சரிதான்!

said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா!!!

said...

/////Blogger Amal said...
மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா!!!////

நன்றி நண்பரே!

said...

Congratulations Sir for releasing ur first book...I am actually from Canada and I like ur style of writing and keep up ur good work sir...

said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே...

வாழ்க வளமுடன்,

வேலன்.

said...

வாழ்த்துகள் ஐயா!

said...

sir, pls paste the link in your next post. it has got predictions for all the 27 stars for this year. its in starteller and its really amazing.

said...

virundhu saapada ? enge enge ? seri viduga sir. adutha thadavai paarthukalam( vaitrai thadaviyavaare....hehe)

said...

////Blogger Thanuja said...
Congratulations Sir for releasing ur first book...I am actually from Canada and I like ur style of

writing and keep up ur good work sir...////

Thank you my dear sister!

said...

///Blogger வேலன். said...
வாழ்த்துக்கள் ஆசிரியரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

நன்றி வேலன்!

said...

////Blogger Vannamalar said...
வாழ்த்துகள் ஐயா!////

நன்றி சகோதரி!

said...

////Blogger mike said...
sir, pls paste the link in your next post. it has got predictions for all the 27 stars for this year.

its in starteller and its really amazing.////

பத்திரிக்கையில் வருவது எல்லாம் பொதுப்பலன்கள். 110 கோடி மக்கள் வகுத்தல் 27 நட்சத்திரங்கள்
பொதுப்பலன் எப்படிச் சரிப்பட்டு வரும் சொல்லுங்கள்1

said...

////Blogger mike said...
virundhu saapada ? enge enge ? seri vidunga sir. adutha thadavai paarthukalam( vaitrai

thadaviyavaare....hehe)//////

ஆதங்கம் எதற்கு? அடுத்த விழாவிற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்! சரிதானே?

said...

congrats

nellai karthik

said...

////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
congrats
nellai karthik////

உங்கள் வாழ்த்திற்கு நன்றி திருநெல்வேலிக்காரரே!

said...

செட்டி நாட்டு மண்வாசனை கதைகளை
பட்டி தொட்டிகளும் அறியும் வகையில்

கட்டி பூச்சரமாய் தொடுத்துக் கொடுக்கும்
கெட்டிக்கார ஆசானுக்கு யாராவது வந்து

திருஷ்டி சுத்திப்போடுங்க, தீயசக்திகளை
விரட்டி அன்புப்பயிர் வளர்ந்தோங்கிட!

என்றும் அன்புடன்
அன்பு மாணவன் - தமாம் பாலா

said...

நகரத்தாரின் நல்நிகழ்வுகளை நயம்பட நலமாய்
நற்றமிழில் நற்சிறுகதையாய், நம் நம்பிக்கை
நடச்த்திரம், நகரத்து நல்மாணிக்கம், நமக்குத்தந்தவர்,
நற்புகழோடு நன்மதிப்போடு நன்மையோடு நலமாய்வாழ

வாழ்த்தும்
பொதிகை தென்றல்

said...

/////Blogger பொதிகைத் தென்றல் said...

நகரத்தாரின் நல்நிகழ்வுகளை நயம்பட நலமாய்
நற்றமிழில் நற்சிறுகதையாய், நம் நம்பிக்கை
நடச்த்திரம், நகரத்து நல்மாணிக்கம், நமக்குத்தந்தவர்,
நற்புகழோடு நன்மதிப்போடு நன்மையோடு நலமாய்வாழ
வாழ்த்தும்
பொதிகை தென்றல்////

நல்லது, நாளும்வாழ்க, நன்றி!

said...

////Blogger தமாம் பாலா (dammam bala) said...
செட்டி நாட்டு மண்வாசனை கதைகளை
பட்டி தொட்டிகளும் அறியும் வகையில்
கட்டி பூச்சரமாய் தொடுத்துக் கொடுக்கும்
கெட்டிக்கார ஆசானுக்கு யாராவது வந்து
திருஷ்டி சுத்திப்போடுங்க, தீயசக்திகளை
விரட்டி அன்புப்பயிர் வளர்ந்தோங்கிட!
என்றும் அன்புடன்
அன்பு மாணவன் - தமாம் பாலா/////

யாராவது எதற்கு?
அடுத்தமுறை இந்தியா வரும்போது நீங்களே அதைச் செய்யுங்கள் பாலா;
அதுவரை வரும் திருஷ்டியை வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கிறேன்!!:-)))))

said...

வாழ்த்துக்கள் !

அன்புடன்
இராசகோபால்

said...

////Blogger இராசகோபால் said...
வாழ்த்துக்கள் !
அன்புடன்
இராசகோபால்/////

நன்றி இராசகோபால்!

said...

Anbu Aiyya,
Ungal muyatchikkum sevaikkum en manamarntha Vaazhthukkal. Pani sumai karanamaga sirithu naatkal vagupparaikku vara mudiyamal poivittathu. Vanthu paarthal niraya matrangal. Naanum ippoluthu angathuvam petru vitten. India varumpothu ungal nool kidaithal vaangikolgiren. Meendum (belated) vaazhthukkal.

Anbudan,
Sara,
Colombo.

said...

/////Blogger R.Saravanakumar said...
Anbu Aiyya,
Ungal muyatchikkum sevaikkum en manamarntha Vaazhthukkal. Pani sumai karanamaga sirithu naatkal vagupparaikku vara mudiyamal poivittathu. Vanthu paarthal niraya matrangal. Naanum ippoluthu angathuvam petru vitten. India varumpothu ungal nool kidaithal vaangikolgiren. Meendum (belated) vaazhthukkal.
Anbudan,
Sara,
Colombo.////

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்!

said...

முதற்பகுதிக்கும் சேர்த்து மின்னஞல் அனுப்பிஉள்ளேன் அய்யா. தொகை அனுப்பும் முறைமை தெரிவிக்க வேண்டும் அய்யா!!
அய்யா, நானும் 1949 முதல் 1970 வரை சேலம் வாசிதான்.தாஙகள் குறிப்பிடும் இம்பீரியல் தியேட்டர் எல்லாம் தெரியும்.சேலம் மண் வாசனை கதைகளும் எழுதலாமே!
இன்னும் ஒன்று.வகுப்பறையில் வேறு தஞசை நகரவாசிகள் உள்ள‌னரா?
ஆம் எனில் அறிமுகம் செய்விக்க வேண்டுகிறேன்.
KMR.KRISHNAN
http://parppu.blogspot.com

said...

////Blogger kmr.krishnan said...
முதற்பகுதிக்கும் சேர்த்து மின்னஞல் அனுப்பிஉள்ளேன் அய்யா. தொகை அனுப்பும் முறைமை தெரிவிக்க வேண்டும் அய்யா!!
அய்யா, நானும் 1949 முதல் 1970 வரை சேலம் வாசிதான்.தாஙகள் குறிப்பிடும் இம்பீரியல் தியேட்டர் எல்லாம் தெரியும்.சேலம் மண் வாசனை கதைகளும் எழுதலாமே!//////

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///// இன்னும் ஒன்று.வகுப்பறையில் வேறு தஞ்சை நகரவாசிகள் உள்ள‌னரா?
ஆம் எனில் அறிமுகம் செய்விக்க வேண்டுகிறேன்.
KMR.KRISHNAN
http://parppu.blogspot.com////

நீங்கள் ஒருவர்தான் தஞ்சைக்காரர்!

உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன............?

Those who have enrolled their name using the above option, please inform your mail Id to my mail address: classroom2007@gmail.com Then only you will get the mail lessons! Please co-operate with me!




வாத்தியாரின் பல்சுவை பதிவில் இன்று

ஏன் பெண் உறங்கவில்லை! கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
மேலும் படிக்க.......
...... இங்கே கிளிக்’குங்கள்!

அடிப்படைப் பாடங்கள் இங்கே:.Click here !

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com


அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!