மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Humour. Show all posts
Showing posts with label Humour. Show all posts

23.12.22

Humour BLACK (TEA) DAY



BLACK (TEA) DAY
அன்றொரு நாள்....

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர்..
முறுக்கு...நெய் பிஸ்கெட்டு
...முட்டை பிஸ்கட்.

இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட்...
பருப்புவடை ...பழபஜ்ஜி...!!!

குடிக்க காப்பியா டீயா...ன்னு அவங்க கேட்க...
எல்லாரும் டீ காப்பி ன்னு ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...
பழபஜ்ஜியை ஒரு  கடி கடித்து
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ..

திடீர்ன்னு,"மாமா.... 
சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..

rest is history.....

*ப்ளாக்_டீயும்_
ப்ளாக்கான_
திருமணமும்*
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.22

நகைச்சுவை: ஹார்டுவேருக்கும் சாஃடுவேருக்கும் என்ன வித்தியாசம்




நகைச்சுவை: ஹார்டுவேருக்கும் சாஃடுவேருக்கும் என்ன வித்தியாசம்

Just relax...*

😁😁😁😁😁😁😁😁😁

அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்டுப் போகாம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..
😁😁😁😁😁

பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா?

இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹார்டுவேரு.
😂😂😂😂

அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இவர்: எப்படி.?

அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க.
😁😁😁😁

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.

இவர்: அப்ப மீதி பேர்?

அவர்: இன்னும் கல்யாணம் ஆகல.
😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு: எப்புடி சொல்றீங்க.?

சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.!
😁😁😁😁

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?

இவர்: தெரியாது சொல்லுங்க.

அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?

மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அர்ச்சனை உங்க பேருக்கா.? சாமி பேருக்கா..?

இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?

இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி எபக்ட்...

மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!

கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!! 
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV கேமரா வச்சுருக்காங்க...!
😁😁😁
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.22

Humour நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்


நகைச்சுவை: கிரேசி மோகன் ஜோக்ஸ்

Crazy Mohan jokes 

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

“சாத்திட்டா”

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்j இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.3.22

நகைச்சுவை பட்டயக் கணக்காய்வாளரும் அனுமனும்




நகைச்சுவை பட்டயக் கணக்காய்வாளரும் அனுமனும்

ஒரு நகைச்சுவைப் பதிவு

ஓரு விழாவிற்கு ஒரு ஆடிட்டர் வந்திருந்தார். அவரது வேடிக்கையான
பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.
அவர் சொன்ன வேடிக்கை கதை. 

“…. எங்க ஆடிட்டர் புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால்
ஆக்கவும் முடியும்! அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக
எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக்
கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி
மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்
படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி
சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.
யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு
திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை
கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.
ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது.
காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு
முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு
வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage.
Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்
படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்
படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை
தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி
அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை
சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில்
அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி
உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction
ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை
பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே
clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்
பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்
காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான
வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான
பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்
படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல
கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.
ராமா! 
இந்த ஆடிட்டர்/அக்கவுன்டன்ட் இம்ச தாங்க முடியலப்பா!
சிரிப்பதற்கு மட்டுமே யாருமே வருத்தப்பட வேண்டாம். !

-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.2.22

யாரெல்லாம் செமி?


யாரெல்லாம் செமி?

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.
.
“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”
.
“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”
.
“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
.
“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”
.
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”
.
“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”
.
“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”

நிறையப்பேரு_செமி_தானாம்.
============================================
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.22

ஊசி விழும் சத்தம் கேட்குமா அல்லது கேட்காதா?



ஊசி விழும் சத்தம் கேட்குமா அல்லது கேட்காதா?

 *சில நேரம் கேட்கும்.*

1)ஃபீல்ட் மார்ஷல்n மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்." என்று கூச்சலிட்டனர் மக்கள். 

 பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். 

ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன் ? கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன்.

துரதிஷ்டவசமாக,குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை, எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர." என்றார்.

 *தொடர்ந்த* *நிசப்தத்தில்  ஊசி விழும் சப்தத்தை* *கேட்டிருக்க முடியும்.*
2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் *ராபர்ட் வொய்ட்டிங்,* கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். 

இதுதான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று 
நக்கலாக கேட்டார் அதிகாரி. 

இல்லை முன்பு வந்திருக்கிறேன்.

அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு." என்றார்.

நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை."

சான்ஸே இல்லை.அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி." உறுமினார் அதிகாரி!

சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியைப் பார்த்தவாறே, 
அமெரிக்கர் சொன்னார்:

*இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு,  ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை."* என்றார்.

*தொடர்ந்த நிசப்தத்தில்,ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.*

3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டி
ருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: 

 *நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ* வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்."

பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். 

ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். 

சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கை கண்டு துணுக்குற்றாலும்,நேரு பேச அனுமதி அளித்தார்.

சார் நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது. ?"

*தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!*

அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: 

முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?"

இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்.அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்."

இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு!

*ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.!*  
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.12.20

Humour நகைச்சுவை: 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

இதப்படிங்க முதல்ல..

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.  இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..
.
.சார் நீங்க, 

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 
.
.நானும் வரேன். .
.
.சார் நானும் .
.
.ஐயா வாங்க .
.
.அம்மா வாங்க .
.
.அக்கா நீயுமா.
'
'வா வா, உக்கார்ந்து.  ..400, ரூவா, 
.
.வாவா 

அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...ஸ்டராங்கான நாற்காலி சார்...இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.

நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

 இனி வருவது தேர்தல் காலம் 

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்

 சிந்தித்து செயல்படுங்கள் தமிழக மக்களே👍

===========================================================
2 .பொழைக்கத் தெரிஞ்சவன்

*இஞ்சினியரிங் படிச்சிட்டு ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினியர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்.*

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

*"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லை எனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும்!"*

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

*"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."*

"நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்.

"வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது. 500 ரூபாய் ஃபீசை எடுங்க!"

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

*"டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க!" என்றார்.*

"நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

"அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்..

"வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க!"

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.

*"எனக்கு கண் பார்வை சரி இல்லை. மருந்து தாங்க டாக்டர்"*

"சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை. இந்தாங்க ஆயிரம் ரூபாய்!" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

"வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்!" 

*பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான். படிப்பாவது கிடிப்பாவது! :)*

படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.20

வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!


வழக்கு தள்ளுபடியானதில் ஒரு நகைச்சுவை நிகழ்வு!

#மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்..

*என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா..அதாகப்பட்டது.

...நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்"..(WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS?)..

#வித்தியாசமான வழக்கு..விசித்திரமானதும் கூட..??

*எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..

***கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....

அது என்ன point...??!

MY LORD,
               " IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER.."

கணம் நீதிபதி அவர்களே,
   .         "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."

#CASE DISMISSED...

வழக்கு தள்ளுபடியானது!
------------------------------------------
படித்து ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.20

என்ன நடந்தது அங்கே?


என்ன நடந்தது அங்கே?

சர்ச்சில் திருமணம்  ஒன்று நடக்க விருந்தது. 

பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். 

கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார்.

"இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன்.

இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்."

கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். 

கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கூட்டத்தில் ஒரே கசமுசா. 

அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?).

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள்.  

மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மகனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?).

கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. 

பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார்,

"மகளே! உனது ஆட்சேபனை என்ன?"

அந்தப் பெண் சொன்னாள், 

" ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"

படித்ததில் சிரித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.20

வார்த்தை ஒன்றுதான் - அது மகிழ்ச்சியையும் தரலாம் அல்லது வருத்தத்தையும் தரலாம்!!!


வார்த்தை ஒன்றுதான் - அது மகிழ்ச்சியையும் தரலாம் அல்லது வருத்தத்தையும் தரலாம்!!!

*வார்த்தை ஒன்றுதான்*
மருத்துவர்
சொன்னால்
மகிழ்ச்சி

ரேசன் கடைகாரர்
சொன்னால்
வருத்தம்
*" சர்க்கரை இல்லை"*
😳 😇 🤔
****************************
*வார்த்தை ஒன்றுதான்*
கணவர்
சொன்னால்
மகிழ்ச்சி

மகன்
சொன்னால்
வருத்தம்
*" அரியர்ஸ் வந்து இருக்கிறது"*
😳 😇 🤔
****************************
*வார்த்தை ஒன்றுதான்*
மனைவி 
சொன்னால் கணவனுக்கு 
மகிழ்ச்சி

கணவன் 
சொன்னால் மனைவிக்கு 
வருத்தம்
*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*
===================================================
படித்ததில் மகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.20

அப்பளக் கதைகள்!!!!


அப்பளக் கதைகள்!!!!

தேவன் எழுதிய ஒரு புத்தகமான அப்பளக் கச்சேரி யை சமீபத்தில் படித்தேன். அப்பளம் இடும் மாமிகளும் பாட்டிகளும் ஒரே இடத்தில் கூடி ஒன்றாக அப்பளம் இடும் பொழுது அவர்கள் கை மாவு இடித்து , அப்பளம் இட்டாலும் வாய் பல விஷயங்களைப் பேச காதுகள் அவற்றை உள்வாங்கும் செயலைத் தவறாமல் செய்கின்றன. அந்த நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக தேவன் வருணித்து இருப்பார். 

அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சாவி தனது வாஷிங்டனில் திருமணம் என்ற கதையில் அதே பாட்டிகளை விமானத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அவர்கள் அப்பளம் இட்ட கதையை ஒரு ட்வெண்டி ட்வெண்டி மாட்ச் மாதிரி ஸ்கோர் போர்டோடு சொல்லி சிரிக்க வைத்துள்ளார்.

ஆனால் இந்த பதிவு அப்பளம் பற்றிய என் சில நினைவுகள். அப்பளம் என்றவுடன் ஞாபகம் வருவது அது பற்றிய ஒரு ஜோக். ஆனந்த விகடனில் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்தது.

பாட்டி : டீ.ருக்கு . அப்பள மாவ வெறும போக வர சாப்பிடாதேடி. காது செவிடாகி விடும்.
பேத்தி : சரி.பாட்டி. இனிமே ஸ்கூலுக்கு அழாம போறேன்.

இந்த ஜோக்கிற்கு கோபுலு வரைந்திருந்த படம் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. நீட்டிய கால்களுடன் அப்பளமிடும் பாட்டி. கட்டம் போட்ட பாவாடைச் சட்டையுடன் இரட்டை சடையுடன் , மை தீட்டிய விழிகளில் குறும்பு வழிய அப்பள மாவுப் பாத்திரத்தில் கைவிடும் பேத்தி
இந்த கூத்தினை ரசிக்கும் ஈசிச் சேர் தாத்தா. இந்த படத்தின் கீழ் மேலே சொன்ன ஜோக். எப்படி மறக்கும்.?

அப்பளம் என்றவுடன் அடுத்து ஞாபகம் வருவது அசோகமித்திரனின் கதை ஒன்று. மிகவும் வறுமையில் பீடிக்கப்பட்ட குடும்பம். கணவன் மிகுந்த கஷ்டப்பட்டு சம்பாதித்த சில்லறை காசில் கொஞ்சம் போல அரிசி வாங்கி சோறு சமைத்து பருப்பு இல்லாததால் மிளகு ரசத்துடன் பறிமாற கணவன் மெதுவாக சுட்ட அப்பளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்கிறான். இருக்கும்தான்.ஏற்கனவே பக்கத்து வீட்டில் இதுவரை நான்கு அப்பளங்கள் கடன் வாங்கிட்டேன். இனிமே போய் கேட்டா தரமாட்டா என்கின்றாள். சரி . வீடு. இந்த மாசம் பணம் கிடைச்சதும் அப்பளம் ஒரு கட்டு வாங்கி அவர்கள் கடனை தீர்த்து விடலாம் என்கின்றான் கணவன். இதைப் படித்தது முதல் அப்பளத்தைப் பார்த்தாலே அந்த கதை ஞாபகம் வரும். அசோகமித்திரனின் கடைசி வரிதான் கிளாஸ். அவர்களுடய கடனிலேயே அடைக்க கூடிய வாய்ப்பு இந்த கடனுக்கு மட்டும்தான். அவனுடய வருமனம் அப்படி என்று முடிப்பர்.

சுட்ட அப்பளம் தனி சுவைதான். குறிப்பாக மிளகு ரசம், மிளகு குழம்பு போன்றவற்றிற்கு அது சரியான ஜோடி. அதை கரி அடுப்பில் கையும் சுட்டுக் கொள்ளாமல், முழுமையாக சுடுவதே ஒரு அற்புதமான கலை. சில சமயம் அப்பளத்தின் சில பகுதிகள் சுடும் பொழுது கருகி விடுவதுண்டு.
அதுவும் ஒரு தனி சுவைதான். அதன் பின்னர் காஸ் அடுப்பில் அதற்கான வலையில் இட்டு சுடும் அப்பளங்கள் பரவாயில்லை ரகம். ஆனால்  ஓவனில் வைத்து சுடுவது அபத்தம். அது வெளுத்து சோகை வந்தது போல இருக்கும். கொஞ்சமும் சுவையில்லாமல் இருக்கும். என் மாமாவிற்கு சாப்பாடில் எத்தனை ஐட்டங்கள் இருந்தாலும் ஒரு அப்பளம் காய்ச்சேன் என்ற கோரிக்கையை வைக்காமல் இருக்க மாட்டார். என் கசின்கள அப்படி க்கேட்பதில்லை. அவர்களே காய்ச்சி தட்டில் முதலில் அதை போட்டுக் கொண்ட பின்னர்தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள். மதியம் வெறும் வாயிற்கு என்று  அப்பளம் சுட்டு சாப்பிடுபவர்களும் எங்கள் குடும்பத்தில் உண்டு. 

அப்பளம் என்பது பொரிக்க  வேண்டிய பொருள் . அதைச் சுட்டுச் சாப்பிடுவது தவறு என்று வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் மாதிரி பேசுபவர்கள் உண்டு. அவர்கள் சொல்வது வாஸ்தவமாக பேச்சு. எந்த குழம்புடனுடனும் , ரசத்துடனும் சேர்ந்து ருசியைக் கூட்ட வல்லமை உடையது பொரித்த அப்பளம். முன்பெல்லாம் கல்யாணங்களில் கூடையில் வைத்து பறிமாறுவார்கள். இலையை விட பெரிய சைசில் இருக்கும் அப்பளங்கள் அவை. மிகச்சரியாக குழம்பு முடிந்து ரசம் வரும்போது இரண்டாவது ரவுண்டு அப்பளம், அப்பளம் என்று வருவார்கள்.அப்பளம் + பாயசம் ஒரு நல்ல காம்பினேஷன் என்று சொல்பவர்களும் உண்டு. அப்பளம் மோர் சாதத்துடன் சேராது என்ற என் நினைப்பு தவறு என்று சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கொஞ்சமும் புளிக்காத கெட்டித் தயிரில் பிசைந்த சாதத்துடன் பொரித்த  அப்பளம் ஒரு தனி டேஸ்ட் தான்.!  சில திருமணங்களிலில் மணமகன் மணமகள் பேர் போட்ட அப்பளங்கள் பறிமாறியதாக கேள்விப்பட்டுள்ளேன். 

அப்பளம் யானையைப் போல .இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று யானையைப் பற்றிச் சொல்வதுண்டு. அப்பளமும் அப்படித்தான். பொரித்த  அப்பளங்கள் சில சமயம் நமுத்துப் போய் துணி போல துவண்டு போகும். அந்த துவண்ட அப்பளமும் ஒரு தனி ருசிதான். அப்பளத்தூள்களைப் பொறித்து மெந்தியக் குழம்பு செய்தால் வாசனை ஊரையே கூட்டும்.

சேலம் பொருட்காட்சியில் ராக்‌ஷச அப்பளம் பொரித்து  விற்பார்கள். அதை சாப்பிட ஒரு கூட்டமே காத்து இருக்கும். அதை கீழே விழாமலும், பக்கத்து ஆள் அப்பளத்தில் இடிக்காமலும்சாப்பிடுவது ஒரு சேலஞ். சிலர் அதை வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாய் சாப்பிட இடம் தேடுவதும் உண்டு.

அப்பளம் என்றாலே என் நினைவுக்கு வருவது விஸ்வம் மாமாதான். அவர் சாப்பிட உட்கார்ந்தால் பக்கத்திலேயே ஒரு தட்டில் அப்பளங்களைப் பொரித்து  உடையாமல் அடுக்கி வைத்து இருப்பார்கள். தனது தட்டில் அப்பளங்களை குழம்பு , ரசம் சாதத்தின் மேல் ஐந்து அல்லது ஆறு அப்பளங்களை அடுக்கு ஒரு அமுக்கு அமுக்கு அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடுவார். அவருக்கு அப்பளம் இன்றி அமையாது வாழ்வு என்பது கொள்கை. விஸ்வம் மாமா சாப்பிட வருகின்றார் என்றாலே அவர் சாப்பிட ஆரம்பிப்பது முதல் கை கழுவும் வரை நிறுத்தாமல் அப்பளம் பொரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர் இப்படி தன் வாழ்க்கையில் ஐம்பது வருடங்களாவது அப்பளம் சாப்பிட்டு இருப்பார். ( 12x2x365x50 ) .  அப்போதெல்லாம் ஹோட்டல்களில் கூடுதல் அப்பளங்கள் கேட்டால் தனியாக பில் போடுவ்வர்கள். ஆனால் சென்னை ஸ்வாகத் ஹோட்டலில் மட்டும் எவ்வளவு அப்பளம் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் போடுவார்கள். அதனால் விஸ்வம் மாமா அந்த ஹோட்டலில் மட்டும்தான் மதிய உணவு சப்பிடுவார். கடைசி வரையில் அவருக்கு காது நன்றாக கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

விஸ்வநாதன் ராம மூர்த்தி மாதிரிதான் அப்பளம் , வடாம்  . அருமையான காம்பினேஷன். அப்பளம் எம்.எஸ்.வி. மாதிரி. தனியாகவும் சோபிக்கும். கல்யாண கட்டு சாதத்தில் மட்டும் வடாம் மோர் மிளகாயுடன் அமர்க்களப்படுத்தும். பப்படம் என்பது அப்பளத்தில் செய்யப்பட்ட genetic manipulation என்பது என் கருத்து.

அரிசி அப்பளம் , உளுந்து அப்பளம் இதில் சிறந்தது என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம் என்றாலும் சாரதி பாப்பையாவின் தீர்ப்பு உ.அப்பளம் , அ. அப்பளம் இரண்டையும் 2: 1 என்ற விகிதத்தில் சாப்பிடலாம்  என்பதே. 

இப்போதெல்லாம் யார் வீட்டிலும் அப்பளம் இடப்படுவதில்லை. அதனால் அப்பள மாவின் ருசியை அனுபவிக்க முடிவதில்லை என்ற குறை இருக்கத்தான் செய்கின்றது.
சாரதி.
07/06/2020
VKN Sastrigal 9443481901
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.20

பச்சரிசியையும் கணவனையும் ஒன்றாக வறுத்தெடுத்த மனைவி!



பச்சரிசியையும் கணவனையும் ஒன்றாக வறுத்தெடுத்த மனைவி!

ஒருநாள் ரேசன் கடையிலிருந்து பத்து கிலோ பச்சரிசி வாங்கி வரச் சொன்னாள் மனைவி.  வாங்கி வந்ததும் அதை ஒரு பெரிய அண்டாவில் போட்டு மொத்தத்தையும் இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு அலசச் சொன்னாள்.

அலசிக் கொடுத்தேன்.  ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு,  "நீங்க அரிசிய தூக்கிட்டு மொட்டை மாடிக்கு வாங்க"னு சொன்னா.  போனேன்.  போர்வையை விரித்து அதில் அரிசியை தட்டி காயப் போட்டோம்.  

"ஏங்க கீழே போய் ஒரு நாக்காலியும் சின்னதா ஒரு குச்சியும் எடுத்துட்டு வாங்க" என்றாள்.  எடுத்து வந்து கொடுத்தேன்.  மொட்டை மாடியின் ஒரு மூலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த வேப்பமர நிழலில் நாற்காலியைப் போட்டு "உக்காருங்க "  என்றாள்.  உட்கார்ந்தேன்.  குச்சியைக் கையில் கொடுத்து "காக்கா குருவி அரிசிய கொத்தி தின்றாம பாத்துக்குங்க "  என்று சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள்.

விதியை நொந்துகொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.  நிழலுக்கேற்றபடி நாற்காலி நகன்று கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு காலை உணவும் பதினோரு மணிக்கு ஒரு லெமன் ஜூஸும் ஒன்றரை மணிக்கு மதிய உணவும் நாலு மணிக்கு தேநீரும் என்னைத் தேடி வந்தன.  அதே போல் அடுத்த நாளும் நானும் அரிசியும் காய்ந்தோம்.

அடுத்த நாள் சாயந்திரம் "அரிசியை ரைஸ்மில்லில் கொடுத்து திரித்து வாருங்கள் " என்றாள்.  திரித்து வந்ததும் அதில் பாதியை பெரிய இரும்பு வடச்சட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்துக் கொண்டாள்.  மீதி மாவை  பச்சையாகவே ஒரு தூக்குவாளியில் வைத்தாள்.

மறுநாள் வறுத்த மாவில் கொஞ்சம் எடுத்து இட்லி சட்டியில் வைத்து புட்டு செய்தாள்.  அதற்கடுத்த நாள் வறுத்த மாவில் சுடுதண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து இடியாப்பம் சுட்டாள்.  பிழிய முடியாத கடைசி மாவை கொழுக்கட்டையாய் அவித்தாள்.

மூன்றாம் நாள் பச்சை மாவில் கொஞ்சம் எடுத்து ஊறவைத்து அரைத்த உளுந்து மாவை கலந்து பாதியை கொஞ்சம் கெட்டியாகவும் மீதியை சிறிதே இளக்கமாகவும் ஆக்கிக் கொண்டாள்.  கெட்டியான மாவை இட்லியாகவும்,  இளக்கமான மாவை தோசையாகவும் சுட்டெடுத்தாள்.

இதற்கிடையே சிறிது பச்சை மாவில் வெல்லம் ஏலக்காய் தூளெல்லாம் போட்டு புரோட்டா மாவு பதத்தில் பிசைந்து ஒரு பாத்திரத்தில் வண்டு கட்டி வைத்துக் கொண்டாள்.  இரண்டு நாள் கழித்து அதிரசம் சுட்டாள்.
இன்னொரு நாள் சிறிது பச்சை மாவில் ஓமம் உப்பு கலந்து முருக்கு சுட்டாள்.

ஹைலைட்டாக ஒருநாள் அரிசி மாவை கரைத்து அதில் சீனி ஏலக்காய் பொடி மற்றும் மாம்பழ எசென்ஸ் கலந்து கஞ்சி போல் காய்ச்சி ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறிய பின் சதுரமாக கட் செய்து தந்தாள்.  "என்ன இது " என்றேன்.  "வட்டிலாப்பம் "  என்றாள். நல்லாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள் அதே போல் கொஞ்சம் மாவில் சீரகம் உப்பு போட்டு கஞ்சியாய் காய்ச்சி ஒரு பழைய சேலையையும் டீஸ்பூன் ஒன்றையும் கொடுத்து "மொட்டை மாடிக்குப் போய் கூல் வடாம் ஊற்றுங்கள் "  என்றாள்.  நல்லவேளை காவலுக்கு நிற்கச் சொல்லவில்லை.

ஒரு அரிசி  மாவில் இப்படியே கிட்டத்தட்ட இருபது நாட்களை ஓட்டினாள்.  ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தினமும் அரிசி மாவு அயிட்டம்தானா என கடுப்பாகவும் இருந்தது.

ஒருநாள் கேட்டேன்.  "ஏண்டி.... ஒரே மாவை வச்சுக்கிட்டு நீ எத்தனை டகாலக்கடி வேலை காட்றே.  கோதுமை  மைதா  ரவை என்று ஏதாவது வெரைட்டியா போட்டா என்ன... ?"

"நீங்களும் ஒரே மனுசன்தான்.   ஒவ்வொரு நாளும் எத்தனை விதமா லொள்ளு பண்றீங்க..!  நாங்க சமாளிக்கல...!?  நாங்க என்ன வெரைட்டியா தேடுறோம்...!? "

என் வாயில் சனி இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக,  வாயடைத்துக் கொண்டேன் நான்.
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.20

கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?


கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?

"டாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு..."

*" என்னெல்லாம் பண்றீங்க"*

"யோகா
+
வாக்கிங்
+
😋லெமன் வாட்டர்
+
மஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்
+
ச்யவன்பிராஷ் லேகியம்
எடுத்துக்கறேன்
+
முளைகட்டிய தான்யங்கள்
(Sprouts)
+
இஞ்சி
+
கொஞ்சம் பாதாம்
+
அத்திப்பழம் உலர்ந்தது
(காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)
+
துபாய் பேரீச்சை
+
கொஞ்சம் dry fruits
எல்லாம் சாப்பிடறேன்
+
கப சுர குடிநீர் குடிக்கறேன்
+
வாயிலே ரெண்டு மிளகு,
லவங்கம்
அடக்கி வைச்சுக்கறேன்
+
மூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்
விட்டுக்கறேன்
+
மஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான
ஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி
gogle பண்ணறேன்..
+
ஓமம் எல்லாம் போட்டு
ஆவி பிடிக்கறேன்..
+
நாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்
+
பதஞ்சலி நீம்+துளசி மாத்திரை
+கிலோய்(அம்ருதவல்லி) மாத்திரை
எல்லாம் சாப்பிட்டேன்..
கைவசம் வைச்சும் இருக்கேன்..
+
ஹோமியோபதி ல
சொன்னாங்கன்னு
ஆர்சனிக் எல்போ+
கேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்
சாப்பிட்டேன்
+அல்லோபதிலே Hcqc+
Eginthryl+iverameqtin
ஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்
+
அப்பறம்..
எப்பவும் முக கவசம்
+
கழுத்தில ஸ்கார்ஃப்
+
சேனிடைசர்லே
ஒரு நாளைக்கு 50தடவையாவது
கை கழுவுவேன்..
+
சாமான்லாம் door delivery தான்
+
Paytm ல தான் பேமெண்ட் எல்லாம்
+
💁♀️வேலைக்காரி கிடையாது.. நான் தான்
பாத்திரம் தேய்க்கிறேன்..
+
வீட்டு வேலை எல்லாம் செய்யறேன்
+
Daily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்
போறதில்லை...
+
சாமி கும்பிடறேன்
கை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்டு எல்லாம் பண்றேன்..
+
*கரோனா தேவிக்கு* என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..
ஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..
+
ஹெல்த் இன்சூரன்ஸும்
டேர்ம் இன்சூரன்ஸும்
எடுத்து வைச்சுண்டிருக்கேன்..
🤔டாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு
🤔
👨🏻⚕️
டாக்டர்:-"போதும்.. போதும்.. 
ஹிரண்ய கசிபு போல
ஆயிட்டீங்க... 
😀உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு அவதாரம் எடுக்கணும் உன்னை கொண்டு போக..🤭
😂😂😂😂😂
--------------------------------------------------
படித்து ரசித்தது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.20

நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார். 

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா? 
----------------------------------------------------------------
படித்து ரசித்தது; பகிர்ந்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.5.20

*அப்புசாமியும் கொரோனாவும்...*


*அப்புசாமியும் கொரோனாவும்...*

*((இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது* நன்றாக இருக்கும் இரண்டு நிமிடம் ஒதுக்கி படித்து பாருங்கள்))

"சீதே.. சீதே.. சித்த வந்து பாரேன்.." என அபய குரல் கொடுத்து அலறினார் அப்புசாமி தாத்தா.

"இங்க வாசல்ல வந்து பாரு.. இந்த கார்ப்பரேஷன் காரா எதயோ ஓட்றாடீ கெயவீ.." என்றார்.

"இதோ பாருப்பா.. இது ஓண்ணும் கமல் வூடு இல்ல.. உம்பாட்டுக்கு ஏதேதோ ஒட்றே.." என்றவரிடம், "சாமீ.. நா இன்னா செய்ய ?!.. ஆபீஸ்ல ஒட்ட சொன்னத செய்யறேன்.." என்றான்.

"இந்த நேரம் பாத்து இந்த ரசகுண்டு கடங்காரனோ, பீமா ராவோ இல்ல.. எல்லாம் லாக் டவ்னுக்கு பயந்து ஆத்துக்குள்ளயே கடக்கானுங்க.." என புலம்பினார் அப்புசாமி தாத்தா.

"ஒய் யூ ஆர் ஷவுட்டிங்..?!" என்றபடியே சீதா பாட்டி ப்ரஸன்னமானாள். "யாருப்பா நீங்க..?! வாட் இஸ் திஸ்..?!" என்றாள்.

"கொரோனா நோட்டீஸ் மா.. உங்க வூட்ல விடாம தும்மல் சத்தம் கேக்குதுன்னு ஆபீஸ்ல ரிப்போட் ஆய்கிதும்மா.. அத்தொட்டுதான் தனிம நோட்டீஸ ஒட்டின்கிறோம்மா.." என்றான்.

"சரி.. இப்ப வாட் வீ  ஷுட் டூ..?!" என்ற சீதா பாட்டியிடம், "ஆஸ்பத்திரிலேந்து ஆளு வரும்மா.." என்றான்.

"ஓ காட்..! எனக்கு வேற ஜூம் ஆப்ல 'பாட்டிகள் முன்னேற்ற கழக' மீட்டிங் இருக்கே.. நீங்களே இத பாருங்கோ.." என உள்ளே பாய்ந்தாள்.

சரக்கென ஒரு ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து விண்வெளி வீரர் போல நாலுபேர் இறங்கினர்.

"சார்.. யாருக்கு இங்க தும்மல், சளி..?" என்றதும், "ஏன்..? எனக்குத்தான்..!" என தொடர்ந்து நாலைந்து முறை 'அஸ்க்'கினார் அப்புசாமி தாத்தா. நால்வரும் நாலா பக்கம் ஓடினர்.

"அவர பிடிப்பா.. ட்ரைவர்..!" என ஒருவர் கூவ,  அப்புசாமியை அலேக்காக மடக்கிப் பிடித்தனர்.

"வுடுய்யா.. வுடுய்யா.." என திமிறினார். மீண்டும் கஜேந்திர மோக்ஷ யானை போல "சீதே.. அடி சீதே.." என்று பிளிறினார்.

"ஒய் ஆர் யூ ஸ்கீரிமிங்..?" என்றபடி சீதா பாட்டி வந்தாள்.

"வாட் இஸ் ஹேப்பனிங்..? யாருப்பா நீங்க..?" என்றவளிடம், "மேடம்.. தாத்தாக்கு பயங்கர கொரோனா அறிகுறி இருக்கு.. இவர டெஸ்ட் பண்ணி க்வாரண்டைன் பண்ணணும்.. அதுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம்ண.. ஏக கலாட்டா பண்றார்.." என்றார் ஒருவர்.

"ஓகே..ஓகே.. இவாளோட போய் கோ-ஆப்ரேட் பண்ணுங்கோ.." என்றதும், "அடிப் பாவீ.. இது உனக்கு அடுக்குமோ.. என்ன இப்பிடி பிடிச்சுத் தறயே..! எனக்கு ஓண்ணுமில்லடீ கியவீ.. நா கோயம்பேடு கூட போகல்லியே.. ஒரு வேள டில்லி ரிட்டர்ன்னு நெனச்சானா..?! தெரிலயே எழவு..! சரி இருய்யா வரேன்.." என ஒரு மிடுக்குடன் வேன் ஏறினார் அப்புசாமி தாத்தா.
-------------------------------------------------------------------------------
கட் பண்ணா, வீட்டுக்குள்ள 'பாமுக' லைவ் மீட்டிங் ஆரம்பம்.

"குட் நூன்.. எல்லாரும் வந்தாச்சா..? ஸ்டார்ட் பண்ணலாமா..?" என சீதா பாட்டி கூவ.. பங்கஜம், அம்புஜம், மீனா, ராஜி, அபி பாட்டி, நங்கை தங்கம் மாமி உள்ளிட்ட எல்லாரும் ஆஜர்.

"கோமதியும், ஸ்ரீமதியும், எச்சுமி பாட்டியும் இன்னும் வரல..!" என்று பங்கஜம் கூவினாள்.

"டோண்ட் ஷவுட் ஐ ஸே..! நார்மலாவே பேசுங்கோ.." என மாடரேட் பண்ணினாள் சீதா பாட்டி.

"வம்ப அள்ளிப் போடுங்கோ.." என அம்புஜம் அலறினாள்.

ராஜி தான் ஆரம்பித்தாள், "நீ பீலா ராஜேஷ் காஸ்ட்யூம கவனிச்சியோ..?! கோவிட் நியூஸயே ட்ரண்டிங் ஆக்கிட்டா பாத்தேளா..?!" என்று.

"பாவம் அந்த மினிஸ்டர் நன்னா தானே பண்ணிண்டு இருந்தர்.. ஏன் இப்பல்லாம் காணமே..?!" என்றாள் பங்கஜம்.

"நம்ம சி.எம். கூட நன்னாவே ஹேண்டில் பண்றார்.. மீடியா கேக்கற கொணஷ்ட கேள்விக்கெல்லாம் சிரிச்ச முகமா சமாளிக்கறாரே..!" என நங்கை தங்கம் மாமி புகழ்ந்தாள்.

"அதெல்லாம் சரி.. நம்ம பி.எம். கூட என்ன சொல்வாரோன்னு எல்லாரும் பீதில இருக்கச்சே.. 'மித்ரோ'ன்னோ, 'மேரே தேஷ் வாசியோ'ன்னோ ஆரம்பிக்காம 'ஸாத்தியோ'ன்னு ஆரம்பிச்சுட்டாரே..! பாக்கிய நிம்மி மாமி சொல்வான்னாரே பாக்கணும்..!" என்றாள் லேட்டா ஜாயின் பண்ண எச்சுமி பாட்டி.

உடனே நங்கை தங்கம் மாமி "யாரு நம்ம மத்யமர் நிம்மி சுரேஷா..?! அவோ கூட ரீஸண்டா  மத்யமர்ல ஜெம்மினாளே..?! நன்னா ஆச்சு.." என்றாள்.

"அய்யோ..! நம்ம எஃப்.எம். நிர்மலா சீதாராமன் மாமிய சொன்னேன்.." என்றாள் எச்சுமி பாட்டி.

'ஓ'வென எல்லோரும் கூவினர். "ப்ளீஸ்.. ஒன் பை ஒன்னா பேசுங்கோ.." என்றாள் சீதா பாட்டி.

அபி பாட்டியோ தன் பங்குக்கு "இந்த எஃப்.பீல போனா சங்கீதக் காராளும் புதுசா கத்துக்கறவாளுமா பாடியே கொல்றா..! டிக்டாக்கெல்லாம் நாகர்கோயில் கடங்காரனால ஆஃப் ஆயிடுத்துகள்.. நாம யூஸ் பண்ற இந்த ஜூம் ஆப்ப கூட மத்யமர் சந்திரசேகரன் சார் சைனீஸ் ப்ராடக்ட்ன்னு அப்ஜக்ட் பண்ணுவர்" என்றாள்.

"ஓகே.. ஓகே.. நம்ம சிட்டியே கோவிட்ல அலறிண்டு இருக்கு.. ஹாஸ்பிடல் போன இந்த மனுஷன பத்தி நீயூஸே இல்ல.. ஸோ லெட்ஸ் வைண்ட் அப் நௌ.." என்றாள் சீதா பாட்டி.

"என்ன பேசவே விடல..!" என மீனா அங்கலாய்த்தாள். "சரி.. குய்க்கா சொல்லு" என்றாள் சீதா பாட்டி.

"என்னத்த சொல்ல.. டி.வில கூட அழறத்துக்கு இப்போ சீரியல் கூட இல்ல.. ஒரே தெலுங்கு படத்த தமிழ்ல டப்பி போடறான்.. இல்ல ஜெயம் ரவி, சூர்யா படத்தயே ரிபீட் பண்றான் கடங்காரன்.." என்றாள் மீனா.

"இந்த கமலஹாசனும் ஏதோ ஒளறிட்டு வசவு வாங்கிக் கட்டிண்டது.. அப்பறமா டாஸ்மாக் கேஸ போட்டு தப்பிச்சிருக்கு தத்தி.." என்றாள் அம்புஜம்.

"மத்யமர்ல அட்மின் சங்கர் சார் என்ன போட்டாலுமே லைக்கும், கமண்ட்ஸும் ச்சும்மா பிச்சிண்டு போறத நம்ம ராம்ஜீ கூட மென்ஷன் பண்ணாரே.." என்றாள் சீதா பாட்டி.

"இப்ப கூட மத்யமர்ல ராதா, ஸ்ரீராம், அகிலா, ராதை ஸாய்ராம் எல்லாரும் கலக்கறா.." என்றாள் பங்கஜம்.

"ஓகே.. எல்லார்க்கும் பை.. சீ யூ ஆல்.." என சீதா பாட்டியும் ஜூமை விட்டு பையினாள்..

திடீரென வாசலில் ஓரே ரகளை.

"யம்மா.. இந்தூட்டு ஐய்யா ஓடியாந்துட்டாரும்மா" என ஒரு ஆம்ஸ்ட்ராங் கூவினான்.

சீதா பாட்டி, "வாட் இஸ் திஸ்..? எங்க இருக்கேள்..? வெளிய வாங்கோ.. ஐ வில் ஹேண்டில் திஸ்" என்றதும், "சீதே.. சீதே.. காப்பாத்துடீ.. அங்க போனா மூக்க நோண்ட்றான், நாக்க நோண்ட்றான்.. பயம்மா இருக்குடீ.. மாஸ்க்குல பொடி போட கூட ஓட்டை  போடக் கூடாதாம்.. நான் என்ன சானிடைசர தீர்த்தம் மாதிரி குடிச்ச முட்டாளா..?!" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஐய்யா டெஸ்ட் ரிஜல்ட்ட வாங்காதய்க்கு வண்ட்டார்மா.. ஐய்யாக்கு கொரோனா கிரோனா ஒண்ணுமில்லன்னு வந்துகிதும்மா.. ஆனாலும் 30 நாளைக்கு ஐய்யாவ தனியா இருக்க சொல்லுங்கம்மா.. நான் வர்றேன்.. பக்கத்துத் தெருவில எனக்கு பாத பூச கீதும்மா..!" என்றான் அவன்.

"ரொம்ப தேங்க்ஸ்ப்பா.. அவர நான் பாத்துக்கறேன்.. பை.. பை.." என்றாள் சீதா பாட்டி.

"ஹலோ..! மரியாதயா உங்கம்மா எனக்காக வாசல்ல நின்னுண்டே தூங்கற மாதிரி ஒரு ரூம தந்தாளே.. அதுல 30 டேஸ்  நீங்க இருங்கோ" என்றதும், "அநியாயம் பண்ணாதடீ கெயவீ.. வெர்ஜின் தாத்தா சாபம் உன்ன சும்மா விடாதுடீ" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஷட் அப்.. நீங்க மூக்கு பொடி தீர்ந்ததும் என்னோட 'தாஸநாதி ஸ்நான பௌடர' ஸ்னஃப்பா யூஸ் பண்ணி தீத்ததால தானே இந்த பீரங்கித் தும்மல் போட்டு மாட்னேள்.. நானும் யூ ஸஃபர்ன்னு விட்டுட்டேன்.. டோண்ட் டூ திஸ் அகய்ன்.." என்றாள் சீதா பாட்டி.

"சீதே ஒழிக..! சீதே ஒழிக..!" என்றபடியே வாசல் ரூமை நோக்கி நகர்ந்தார் அப்புசாமி தாத்தா.
😊svsபடித்ததில் பிடித்தது ........அதனால் பகிர்வு sVs...pdkt... எண்ணம் போல் வாழ்வு:::
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.5.20

கல்யாண மோர் என்றால் என்ன ?


கல்யாண மோர் என்றால் என்ன ?

குறிப்பாக தஞ்சாவூர் - கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். 
பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.

கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு  செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம்  வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.

-திருக்கோடிக்காவல் வைத்தியநாதன்!!!!
-------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.1.20

Humour: நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா அகலத்தைச் சொன்னீங்களா?


நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா 
அகலத்தைச் சொன்னீங்களா?

1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து

கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க

வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
--------------------------------------
இதில் எது மிகவும் நன்றாக உள்ளது?
எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.9.19

ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!


ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!

ஒருபள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூடமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...😂
😂முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...
😂சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...😂

😂"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",
😂அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு" "மாரி"
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..." 😂
😂அவருக்கு கொஞ்சம் டவுட் வருது😦...
😂இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு😒...
😂அடுத்தப் பையன எழுப்பினாரு...
😂"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்😍)
😂"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈😈😈
😂அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேர சொல்லு..."
"டேவிட்.."
"உன் பேரு...?"
"டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு😬😬😬,
😂கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
😂"உன் தாத்தா பேர சொல்லு...😣"
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬😠,
"அப்பாவோட தாத்தா...😤."ன்னாரு
"வீரமணி",
"சரி அப்பா பேரு?",
"வீ.ரமணி",
"உன் பேரு?😕",
"வீ.ர.மணி...😊"
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லையாம்... 😂😂😂
==========================================================================
2

1.  சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "காதலர் தினம்"
2. அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் "அன்னையர் தினம்"
3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள் தினம்"
4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர் தினம்"
5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு தினம்"
6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்"
7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள் தினம்"
8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள் தினம்"
9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் "சுதந்திர தினம்"

=========================================================
படித்து, நகைத்துப் பதிவிட்டது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.10.18

நகைச்சுவை: அதுக்கு இது சரிதானே?

நகைச்சுவை: அதுக்கு இது சரிதானே?

அங்ககிட்டு ரேஷ்மா மேடம்ங்களா?

Yes speaking...

ஒங்களுக்கு ulcer இருக்கா மேடம்?

வாட்  நான்சென்ஸ்? யார் மேன் சொன்னா?

இல்ல மேடம்...நாங்க புதுசா endoscopy centre ஆரம்பிச்சிருக்கோம்...அதுக்குகாகத்தான் கேட்டேன்..

ஏங்க...நீங்க endoscopy சென்டர் ஆரம்பிச்சதுக்காக நான் ulcer இருக்குன்னு ஒத்துக்கணுமா?  என்னங்க கிறுக்குத்தனமா இருக்கு?

இல்ல மேடம்..அப்பிடியில்ல..அல்சர்ன்றது ரொம்ப common...அதான் கேட்டேன்...சரி, உங்க வீட்ல வேற யாருக்காச்சும் அல்சர் இருக்கா மேடம்?

யோவ்...எனக்கே இல்லைன்றேன்...வீட்ல உள்ளவங்கள பத்தி கேக்குறீங்க?

இல்ல மேடம்..ப்ளீஸ்..கொஞ்சம் யோசிச்சு பாருங்க....யாராவது எப்பவாவது மேல்வயிற்று வலி, சாப்பிடும்போது எரிச்சல் ன்னு எதாவது சொல்லிருப்பாங்க..

யாருக்கும் கெடையாதுய்யா..இம்ச பண்ணாத..

இல்ல மேடம்..ஒங்க ஒன்னு உட்ட தம்பி, அக்கா புருஷனோட ஆஃபீஸ் செக்ரட்ரி, உங்க ஆஃபீஸ் ப்யூனோட சித்தி பையன்- இப்புடி யாருக்காவது?

என்ன எளவா போச்சு ஒங்களோட..டார்ச்சர் தாங்கல..ஒன்னால அல்சர் இல்ல, BP தான் வரப்போவுது எங்களுக்கு..ஃபோன கட் பண்றீங்களா இல்லையா இப்ப?

அய்யய்யோ மேடம்...ப்ளீஸ்...ப்ளீஸ்...கட் பண்ணிடாதீங்க...ஒரு scopy பண்ணா இன்னொன்னு  இலவசமா பண்ணி தர்றோம் மேடம்...எங்ககிட்ட ஆஃபர் இருக்கு...வேணாம்ன்னு சொல்லிடாதீங்க மேடம்..ப்ளீஸ்...

மெண்டலாய்யா நீ...அது என்ன Endoscopy centre'ஆ, இல்ல Louis Phillipe showroom தீபாவளி ஆஃபரா? கடுப்பேத்தாம ஃபோன வைய்யா மொதல்ல...

இல்ல மேடம்...கோச்சுக்காதீங்க... Capsule endoscopy ன்னு ஒன்னு புதுசா கண்டுபுடிச்சிருக்கோம் மேடம்...அத பாத்தீங்கன்னா ஒங்களுக்கே ரொம்ப புடிச்சு போய்டும் ...நீங்களே endoscopy tube'எடுத்து வாய்ல உட்டுக்குவீங்க..ப்ளீஸ்...மறுப்பு சொல்லாதீங்க..

கீழ்ப்பாக்க கேஸ்தான்யா நீ... confirmed'ஆ தெரிஞ்சு போச்சு...ஏன்யா, ஒரு கஸ்டமர் தனக்கு தேவையில்லைன்னு சொல்லும்போது அத வலுக்கட்டாயமா அவுங்க மேல திணிக்கிறது பிச்சை எடுக்குறத விட கேவலம்யா...உன் சரக்கின் தரத்து மேல ஒனக்கு நம்பிக்கை இருந்தா மக்களா வரப்போறாங்க...இப்புடி பிச்ச எடுக்குறது வெக்கமா இல்ல?

இல்ல மேடம்...இருந்தாலும் ஒரே ஒரு தடவ எங்ககிட்ட endoscopy.....

இனி சரிப்பட்டு வராது....மரியாதயா ஒங்க பேர சொல்லுங்க...நான் யார் தெரியுமா? ஒரு பேங்க் மேனேஜர்..என் கணவர் வக்கீல்...nuisance case போட்டு ஒங்கள உண்டு இல்லன்னு பன்றேன் பாருங்க...

என் பேரா மேடம்?

ஆமான்யா...ஒன் பேர்தான்...நீதான இவ்வளவு நேரம் பேசியே என் கழுத்த அறுத்த?

என் பேர் சித்தார்த் ராஜன் மேடம்.. gastroenterologist...

இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..

ஆமாம் மேடம்...நீங்கதான் போன வாரம் நான் எமெர்ஜென்ஸில பேஷண்ட்ட பாக்க  கௌம்பிட்ருக்கும்போது லோன் வேணுமா ன்னு கேட்டு என்கிட்ட பேசினீங்களே மேடம்...நான் வேணாம்ன்னதும் திரும்ப ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணி அதயே கேட்டீங்களே...நான் திரும்ப வேணாம்னதும் "உங்க தம்பிக்கி தேவைப்படலாம்...தங்கச்சிக்கி தேவைப்படலாம்... மாப்பிள்ளை வீடு கட்ற ப்ளான் வெச்சிருப்பாரு...அவருக்கு தேவப்படலாம்... வேணுமா?"ன்னு கேட்டீங்களே...ஞாபகம் இருக்கா மேடம்? எங்க மேல இவ்வளவு அக்கற இருக்குற உங்க உடல்நலம் மேல எங்களுக்கு அக்கற இருக்காதா? அதான் மேடம் நான் call பண்ணேன்... நாளைக்கு nephrologist call பண்ணுவார் மேடம்...நாளான்னைக்கி cardiologist'அ call பண்ண சொல்லிருக்கேன் மேடம்...

.......................................................

மேடம்? ஹலோ....ஹலோ..லைன்ல இருக்கீங்களா? Endoscopy பண்ணிக்கிறீங்களா?
--------------------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.7.18

Humour: நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!


நகைச்சுவைக் கதை:  கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய குட்டிக் கதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா
--------------------------------------------------------------------------------

செக்கு என்றால் என்னவென்று தெரியுமா?

எனக்கும் என் வயதை ஒத்த பெரியவர்களுக்கும் தெரியும்.

இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதுதான். ஆகவே செக்கின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்!.

எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் எல்லோருமே செக்கில்தான் எண்ணெய் வாங்குவார்கள். நல்லெண்ணெய். (எள் எண்ணெய்) அப்போது (1957ல்) ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ஒரு ரூபாய்தான்

ஒரு ஜாடி 18 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மொத்தமாக வாங்கினால் செக்கு வைத்திருப்பவரே தங்கள் வேலையாளின் மூலம் வீட்டிற்கே கொண்டுவந்து ஜாடி நிறைய ஊற்றிவிட்டுப் போவார். நுரை பொங்க பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.வீட்டில் சமையலுக்கு மட்டுமல்ல, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் அதே நல்லெண்ணய்தான்!

சமயத்தில் தீர்ந்துபோய் அவசரத்திற்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர்கள் எண்ணெய் வேண்டுமென்றால் நாம்தான் போய் வாங்கிக் கொண்டு வர வேண்டும். நான் பலமுறை செக்கடிக்குப் போயிருக்கிறேன். போகும்போது, அங்கே சற்று நேரம் நின்று அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்.பாவம் செக்கு மாடுகள். ஒரே வட்டத்திற்குள் திரும்பத் திரும்ப சுற்றிகொண்டிருக்க வேண்டியதுதான். அதனால்தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள், தங்கள் வீட்டில் உள்ள பெண்டாட்டிதாசர்களை, “செக்கு மாடாட்டம் பெண்டாட்டியையே சுற்றி வந்து கொண்டிருக்கிறான்” என்று கடிந்து கொள்வார்கள்.

இப்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையின் விலை ரூ.240:00. 56 ஆண்டுகளில் 240 மடங்கு விலை ஏறியுள்ளது.கடலை எண்ணெய், சன் ப்ளவர் ஆயில், ரிபைண்ட்ஆயில், பாமாயில் எல்லாம் பின்னால் வந்தவை. அதை நினைவில் வையுங்கள்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. சண்முகம் செட்டியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கணக்கு  வாத்தியாராகப் பணி செய்து கொண்டிருந்தார். அத்துடன் தமிழ் அறிவும் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியம்வரை புரட்டி எடுத்துவிடுவார்.

அதிகாலையில் எழுந்தவர், காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, ஆச்சி போட்டுக்கொடுத்த சீனூஸ் ஃபில்டர் காப்பியைச் சாப்பிட்டு விட்டு, அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்தார்.

ஆச்சி வந்து தோள்களைத் தொட்டவுடன்தான் தன்னிலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்தார்.

”எண்ணெய் தீர்ந்து போச்சு, சானா ஊரணி செக்கடிக்குப் போயி எண்ணெய் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னதோடு, ஒரு தூக்குப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்தார்.

“நான் போகமுடியாது. வேணும்னா நீ போய் வாங்கிக்கிட்டு வா”

“ஏன் போக முடியாது? பக்கத்திலதானே இருக்கு”

”எங்க பள்ளிக்கூடத்துப் பயலுக எவனாவது பார்த்தான்னா நாளைக்கே ஒரு புது பட்டப்பெயரை வைத்துவிடுவான்கள்!”

”இப்பவே உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில நாலு பெயர் இருக்காம்ல. அதோட ஒன்னு கூடுனா தப்பில்லை. போய் வாங்கிட்டு வாங்க! வாங்கிட்டு வந்தாத்தான் பூரி மசால். உங்களுக்குப் பிரியமான பலகாரம். இல்லைன்னா கோதுமை தோசைதான். யோசித்து முடிவு பண்ணுங்க!”

சொல்லிவிட்டு ஆச்சி வளவு நடைக்குள் போய்விட்டார்கள்.

வேண்டா வெறுப்பாக கிளம்பிய செட்டியார், பத்து நிமிட நடையில் செக்கடிக்கு வந்து சேர்ந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரி மசால்ன்னா ருசித்துச் சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு ஆசை தீர பகலில் ஒரு மணி நேரம் தூங்கலாம்!

அவர் அங்கே வந்தபோது செக்கின் உரிமையாளர் உலகநாதன் செக்கில் அரைத்துக்கொண்டிருந்தார்.

இவரைப் பார்த்தவுடன். அந்த வேலையை விட்டுவிட்டு, முன்புறம் இருந்த அறைக்கு வந்தார். அதை அறை என்று சொல்ல முடியாது. 10 x 6 ல் கூறை வேய்ந்த இடம். ஒரு நீண்ட பெஞ்ச். அதன் மீது எவர்சில்வரிலான எண்ணெய் டிரம். மற்றும் சிறிய கல்லாப்பெட்டி. முன்புறம் மூங்கில் தட்டியிலான தடுப்பு.

”என்ன அப்பச்சி வேண்டும்?” என்று கேட்டார்

“இந்தப் பாத்திரம் என்ன அளவு பிடிக்குமோ அந்த அளவு எண்ணெய் ஊற்றப்பா” என்றார

“நான்கு லிட்டர் பிடிக்கும் அப்பச்சி” என்று சொல்லிக்கொண்டே, கனத்த குரலில்,கையைத் தட்டியவாறு ”இந்தா...இந்தா... ஓடுறா” என்று குரல் கொடுத்தார்

உடனே ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் உட்புறம் மாடு ஓடும் சத்தம் கேட்டது.

செட்டியார் ஆரவத்துடன் கேட்டார்: “இப்போது என்ன செய்தாய்? உள்ளே மாடு ஓடும் சத்தம் கேட்கிறதே?”

”அப்பச்சி, மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டும் வேலையை நான்தான் செய்ய வேண்டும். அதே போல இங்கே வியாபாரத்தையும் நானேதான் கவனிக்க வேண்டும். தனித்தனியாக ஆட்களைப் போடுவதற்கெல்லாம் வசதி பத்தாது. ஆகவே இரண்டு வேலைகளையும் நானேதான் செய்கிறேன். நான் இங்கே வந்தால் மாடு நின்று விடும். அதனால் குரல் கொடுத்தால், நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாடு ஒட்டம் எடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் நடக்கும்”

“மாடு ஓடுகிறது என்று எப்படித் தெரியும்?”

”அதுதான் அதன் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டியிருக்கிறேனே. அந்த சப்தத்தில் இருந்து தெரியும்”

”கெட்டிக்காரனப்பா நீ...உன்னைப்போல எல்லோரும் பாடுபட்டால், இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானாக மாறிவிடும்”  என்று பாராட்டியவர், அவனிடம் எண்ணையை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடக்க எத்தனித்தார்.

அவன் காசை வாங்கி எண்ணிச் சரிபார்த்துக் கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு, படலின் கதவைத் திறந்து கொண்டு, செக்கு இருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றான்.

அதற்குள் சட்டென்று திரும்பி வந்த செட்டியார், அவனிடம் சொன்னார்: “உலகநாதா, ஒரு சந்தேகம் கெட்கலாமா?” என்றவர் தொடர்ந்து கேட்டார்:

“மாடு ஓடினாலும் மணிச் சத்தம் கேட்கும். நின்று கொண்டே கழுத்தை ஆட்டினாலும் மணிச் சத்தம் கேட்கும். மாடு ஓட்டம் எடுக்காமல் நின்று கொண்டே கழுத்தை அசைத்து, ஓசை எழுப்பி, உன்னை ஏமாற்றினால், அது உனக்கு எப்படித் தெரியும்?”

வகுப்பில் ஏமாற்று வேலை செய்யும் பல பையன்களைப் பார்த்த அனுபவத்தில் அவர் அப்படிக் கேட்டார்

“மாடு அப்படி எல்லாம் செய்யாது அப்பச்சி!” என்று அவன் பதில் உரைத்தான். இவர் விடவில்லை.

தொடர்ந்து கேட்டார்

“செய்யாது என்று எப்படிச் சொல்கிறாய்?”

“இல்லை அப்பச்சி. மாடுகளோடு எனக்கு 20 வருஷ பழக்கம் உண்டு. அவைகள் அப்படிச் செய்யாது!”

“அதைத்தான் எப்படி என்று கேட்கிறேன்”

”மாடு உங்களைப் போல படிக்கவில்லை. படித்தால்தான் புத்தி அந்தமாதிரி கோண வேலைகளைச் செய்யும். அதனால்தான் சொல்கிறேன்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செட்டியார் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்

கதையை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வேறு சிந்தனை வேண்டாம்!
   **********************************************************               
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!