மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lesson 721 - 730. Show all posts
Showing posts with label Lesson 721 - 730. Show all posts

25.11.13

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி நான்கு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர்  ஒரு மேதை. இந்தியர். உலகம் அறிந்த மனிதர்.

அடடா மூன்று க்ளூக்களைக் கொடுத்துவிட்டேனே!

பரவாயில்லை. கண்டு பிடித்துச் சொல்லுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

18.11.13

Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் ஒரு அரசியல் தலைவர். அகில இந்தியாவும் அறிந்த மனிதர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

12.11.13

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

 

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

நேற்றைய புதிருக்கு 100ற்கும் மேற்பட்டவர்கள் சரியான பதிலைச் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் பின்னூட்டத்தில் மட்டுமல்லாமல், தனி மின்னஞ்சல் மூலமாகவும் நிறையப் பேர்கள் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களையும் சேர்த்துத்தான் சொல்லியுள்ளேன். அசத்தல் பதிலால் அல்ல. அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டதால்!

உண்மைதான்! பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்தான் அது. பகவானுக்கே ஜாதகமா என்று கேட்காதீர்கள். பூமியில் அவதாரம் எடுத்ததால் அவருக்கும் ஜாதகம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர், அவருடைய ஜாதகத்தை தனது ராமகாவியத்தில் கொடுத்திருக்கிறார்.

"ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்" என்று ராமபிரானைப் பெருமைப் படுத்திச் சொல்வார்கள்.

நேற்று வந்த பதில்களில் முக்கியமான செய்திகளுடன் உள்ள பின்னூட்டங் களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

சரியான பதிலைச் சொன்னவர்களுக்கும் நன்றி. கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி!

நேற்றய பதிவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. வகுப்பறையின் 1,500 வது பதிவு அது!
---------------------------------------------------
1
////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    Shri. ராமர் ஜாதகம்.
    சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கடக லக்னத்தில் ஐந்து கிரகங்கள் (குரு சனி செவ்வாய் சுக்கிரன் சூரியன்) உச்சத்திலும் புனர்பூச நட்சத்திரத்தில் Shri. ராமர் அவதரித்தார்.
    ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்
Monday, November 11, 2013 5:33:00 AM/////

2   
///////Blogger Ramasamy said...
    Sir,
    The native is bahwan sri Ramar.
    5 grahangal ucham - this is possible in god's avatars only.
    3 panchamaha purusha yogam. Amsa yogam-guru, sasa yogam-sani, ruchuga yogam-mars.
    I read in books 'Uchanai uchan parpathal Ramar vanavasam senrar'
    In some books, buthan is in mesham.
    Monday, November 11, 2013 6:35:00 AM/////

3  
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Indha Jathagam Avadhara Purusaragiya "Sri Ramar" Jadhagam endru enakku thondrugiradhu.
    Kattathil Budhan mattum naan paartha ramar jadhagathirkum idharkkum satru veru-padugiradhu. Naan paarthadhil Mesathil budhan, ingey rishabathil Budhan.
    Thank You.////
   
4  
/////Blogger Kirupanandan A said...
    5 கிரகங்கள் உச்சம், 1 கிரகம் ஆட்சி. பகவான் ஸ்ரீ ராமரின் ஜாதகம். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
    Monday, November 11, 2013 7:50:00 AM//////

5
//////Blogger Srinivasa Rajulu.M said...
    இந்த உன்னத ஜாதகம் ராமபக்தர்களின் பூஜை அறையை அலங்கரிக்கும் ஒரு அவதார புருடனின் ஜாதகம்.
    'சக்கரவர்த்தித் திருமகன்' என்றும் 'காகுத்தன்' என்றும் 'ரவி குல திலகன்' என்றும் அழைக்கப்படும் இவர் அவதரித்த நேரத்தில், இறையாணைக்குக் கட்டுப்பட்டது போல கிரகங்கள் கைக்கட்டி வாய் பொத்தி அவரவர்களின் உச்ச வீட்டிலோ, ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இடம் பெற்றிருந்தார்கள். (புதன் கூட ரிஷபத்தில் இருந்திருப்பாரோ?)
    அவதார நோக்கமே, இந்த கிரகங்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்த ராக்கத மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தருவதே. (சனைஸ்சரனின் காலை முறித்துப் போட்ட அந்த அரக்கன் கதையை வாத்தியார் 'மாந்தி' பற்றிய பாடத்தில் கொடுத்துள்ளார்)
    Monday, November 11, 2013 8:00:00 AM//////

6   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    சில உபரித் தகவல்கள்:
    1) அச்சில் கிடைத்துள்ள ஸ்ரீ ராமரின் ஜாதகத்தில் 'புதனின்' அமைப்பு வெவ்வேறாகக் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வாத்தியார் கொடுத்துள்ள படி 'புதன் ரிஷப ராசியில் இருந்திருப்பார்' என்றே எண்ணத் தோன்றுகிறது (இதை முதல் பதிவில் நான் சரியாகக் குறிப்பிடவில்லை)
    2) வைணவச் சுடராழி திரு.ஜோசஃப் அவர்களின் காணொளி (மூன்று பாகங்கள்), காணவேண்டிய ஒன்று. கம்பனின் பாடல் ராமபிரானின் ஜாகதக் குறிப்பை இரத்தினச் சுருக்கமாக உணர்த்துகிறது. (வால்மீகியும் ஒரு ஸ்லோகத்தில் இந்த அமைப்பைச் சொல்லியிருக்கிறார்)
    1) http://www.youtube.com/watch?v=5FIToGe7Cj0
    2) http://www.youtube.com/watch?v=JFXd4_6z_ZY
    3) http://www.youtube.com/watch?v=h5X-aBGb0SI
    Monday, November 11, 2013 8:21:00 AM/////

7.   
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I see 5 planets Uccham in this chart. Since you have mentioned that any software won't help us find the birth date, I think it is not a person from this Ugam. I heard Rama's chart has 5 planets uccham.
    Am I correct? Is this Lord Rama's chart?
    Monday, November 11, 2013 8:35:00 AM//////

8.   
/////Blogger sellaprasad said...
    காக்கும் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமருடைய ஜாதகம். பிறந்த தேதி கி.மு. 5114 ஜனவரி 10ம் தேதி பகல் 12 முதல் 1 மணிக்குள். http://bhakthiplanet.com/2013/04/birth-date-of-rama/
    Monday, November 11, 2013 9:01:00 AM//////

9.   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    இன்னுமொரு தகவல்:
    வால்மீகி, பாலகாண்டம் பதினெட்டாம் அத்தியாயம் 15-ஆம் ஸ்லோகம்:
    पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः।
    सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ॥ १-१८-१५
    இதன் அர்த்தமாவது:
    இராம பிரானைத் தொடர்ந்து, பரதன் அடுத்த நாள் பூச நக்ஷத்திரத்தில் மீன லக்கினத்திலும்;
    இலக்குவனும், சத்ருக்னனும் அதற்கும் அடுத்த நாள், ராமனைப் போலவே கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்திலும் பிறந்தனர்.
    ஆகவே, வாத்தியார் கொடுத்துள்ள ஜாதகம், இராமன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோருக்குப் பொருந்தும்.
    ஆனாலும், இது இராமன் ஜாதகம் என்றே பிரசித்தி பெற்றது./////

10.   
/////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Sri Rama Jayam....
    This is the horoscope of the Lord
    SriRama....
    நான் தினமும் வணங்கும் ஸ்ரீ ராமனின் ஜாதகம் .
    பி.கு. (இது உண்மை, எனது பாட்டி என் தாயிடம் உனக்கு அந்த ஸ்ரீராமனே வந்து பிறப்பான் என்று அனுதினமும் சொல்லியே நான் ராமனின் லக்னத்தில் பிறந்தேன் என்று எனக்கு ஸ்ரீராமன் என்று பெயர் சூடினார்கள் என்று சொல்வார்கள்.
    Monday, November 11, 2013 10:55:00 AM/////

11.   
/////Blogger சரண் said...
    என்னுடைய கணிப்பு இது ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்.
    இந்த கணிப்பிற்கு காரணம்:
    1.
    பிறந்த தேதியை கணிக்க எந்த மின் பொறியும் உதவாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்றால் இந்த ஜாதகத்துக்குரியவர் சரித்திரத்தையும் தாண்டி உதாரண புருஷர் அல்லது புராண காலத்தவருடையதாக இருக்க வேண்டும்.
    2.
    சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணரின் ஜாதகம் ஒரு ஆன்மிக மாத இதழில் வெளியாகியிருந்தது. ஒரு நொடி அதுவா என்று தோன்றினாலும் கிருஷ்ணன் ரோகிணி நட்சத்திரம். ஆனால் இங்கே சந்திரன் கடகத்தில். ஆக ஜாதகர் புனர்பூசம், பூசம், ஆயில்யத்தில் இருக்க வேண்டும். ராமரின் நட்சத்திரம் புனர்பூசம் என்று தெரியும். அதனால் அந்த கண்ணோட்டத்தில் தேடினேன்.
    3.
    ராம நவமியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சித்திரையில் கொண்டாடப்படுவது தெரிந்தது. சூரியன் உச்சம். ஓ.கே.
    4.
    சூரியனும் சனியும் உச்சமானாலும் இருவரும் சம சப்தம பார்வையாக இருப்பதால் தந்தைக்கு பிடித்த பிள்ளையாக ராமன் இருந்தாலும் அவராலேயே காட்டுக்கு அனுப்பப்படும் சூழ்நிலை.
    5.  7ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம். அவர் 5 மற்றும் 10க்கு உரியவர். கடக ராசிக்கு யோக காரகன். இடையில் சிரமப்பட்டாலும் காட்டுக்கு சென்றாலும் அவர் பாதணியை வைத்து ஆட்சி புரிந்த பரதன், காட்டுக்கு கூடவே வந்து கஷ்டப்பட்ட லக்ஷ்மணன் உள்ளிட்டோரை இளைய சகோதரர்களாக பெற்றிருந்தார்.
    6.  6ஆம் இடத்தில் இருந்த ராகு இவருக்கு கூனி உட்பட எதிரிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறான்.
    7.  ஆயிரம் சோதனைகள் வந்தாலும் லக்னத்தில் அமைந்த உச்ச குரு அவதார மூர்த்தியாக அவர் இருக்க காரணம்.
    8.  4ஆம் இடத்தில் அமர்ந்த உச்சம் பெற்ற சனி 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதும் உலகப்புகழுக்கு ஒரு காரணம்.
    9.  9ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் உச்சம், 7ஆம் அதிபதி சனி 4ல் உச்சம் இவை யாவும் கற்புக்கரசியாக போற்றப்படும் சீதாலெட்சுமி ராமருக்கு மனைவியாக அமைந்ததற்கும், ராமர் ஏக பத்தினி விரதனாக இருந்ததற்கும் ஒரு காரணம். சனீஸ்வரன் மேல் நாம் ஆயிரம் குற்றச்சாட்டு சொன்னாலும் நீதிமான். நேர்மைக்கு தலை வணங்குபவன்.
    வாத்தியார் ஐயா, என் மனதில் நினைவில் நின்ற விஷயங்களை வைத்து மனதில் தோன்றியதை பதிலாக எழுதியிருக்கிறேன்.
    நன்றி.
    Monday, November 11, 2013 11:15:00 AM/////

12.  
/////Blogger Arul Murugan. S said...
    The horoscope undoubtedly belongs to my favourite deity Lord Shri Ram, as five planets are in exalted state with kadaga rasi & kadaga lagna and 3 Pancha Mahapurusha Yogas.
    Additional comment: I have heard that Emperor Akbar had 3 Panchamahapurusha Yogas in his horoscope./////

13.   
/////Blogger Megalabala said...
    ஐயா நீங்கள் கொடுத்துள்ள இந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் தசரத மைந்தன் ஶ்ரீராமர்!
    லக்கினத்திலேயே லக்னாதிபதி சந்திரனுடன் குரு! குருமங்கள யோகம். அத்துடன் குரு, செவ்வாய், சுக்கிரன், சூரியன், ஆகியவை உச்சம். தேவையில்லாமல் சனியும் உச்சம். சனிதான் அத்தனையையும் கெடுத்து வைத்தார்! சரிதானா ஐயா?
    Monday, November 11, 2013 2:51:00 PM/////

14
//////Blogger kmr.krishnan said...
    முந்தைய பின்னூட்டம் பதிவான‌தா என்ற சந்தேகம் வந்திவிட்டதால் மீண்டும் எழுதுகிறேன்.
    இது பகவான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியின் ஜாதகம்.//////

15.   
/////Blogger Senthil Nathan said...
    அய்யா
    பார்த்த உடனேயே தெரிகிறது, இந்த ஜாதகம் யாருடயது என்று
    "அவர் மனித குல மாணிக்கம்", மனிதன் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் வாழ்ந்துக்காண்பிக்க பிறந்தவர், சூரிய வம்சத்திலும், ரகு குலத்திலும் பிறந்த மானிடர்களின் முன்னோடி "ஸ்ரீ இராமர்"
    பதில் சொல்லவே பெருமையாய் இருக்கிறது.....
    துரை.செந்தில் நாதன்/////
---------------------------------------------------------
புதிருக்கான உங்கள் விடைகளை மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டாம். பின்னூட்டம் மூலமே எழுதுங்கள். Please use the comments box in the blog for your answers and other comments.மின்னஞ்சல் மூலம் எழுதினால் கணக்கில் வராது. மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

அன்புடன்
வாத்தியார்


பி,கு: மின் தடை மற்றும் UPS Unitன் சொதப்பல் காரணமாக இன்று பதிவுகளை வலையே ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பொறுத்தருள்க!
==============================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.11.13

Astrology: Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்!

 

Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்! ஜாதகர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

அதுதான் இங்கே கஷ்டம். இந்த ஜாதகத்திற்குக் கிரக அமைப்புக்களின் நிலையை/கணக்கை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்க எந்த மின்னியல் பொறிகளும் உங்களுக்கு உதவாது.

ஜாதகத்தின் அமைப்பை வைத்தும், உங்கள் சொற்ப அல்லது அதிகமான ஜோதிட அறிவை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியும்.

அதனால்தான் தலைப்பிலேயே சொன்னேன். உங்கள் ஜோதிட அறிவிற்கு ஒரு சவாலான ஜாதகம் இது என்று.

க்ளூ வேண்டுமா?

க்ளூ கிடையாது. எப்படி க்ளூ கொடுத்தாலும் குட்டு உடைந்து விடும். ஆகவே க்ளூ கிடையாது.

முடிந்தவர்கள் பதில் எழுதுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.11.13

Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்



Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்

Astrology: 22ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான, முக்கியமான பதில்:

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது!
Example horoscope for Denial of Marriage
ஜாதகிக்கு திருமணம் நடைபெறவே இல்லை.

ஏழில் சூரியனுடன், ராகு கூட்டாக உள்ளதாலும், அத்துடன் சுக்கிரன் நீசமாகி எட்டாம் வீட்டில் அமர்ந்ததாலும் ஜாதகி திருமணமே ஆகாதவர்
என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னவர் திருமதி ஜனனி முருகேசன். அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள் (The native will be a unmarried as sun in 7th house in the combo of raghu which is very unfavorable position for marriage.Also the sukran is neecham in 8th house. என்று தனது பின்னூட்டத்தில் சொல்லி உள்ளார். அனைவரையும் அதைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்)

அதைப்போலவே திரு,ராமசாமி அவர்களும், திருமதி தனலெட்சுமி அவர்களும், திரு. kaven (கெளரி சங்கர்)அவர்களூம் ஜாதகிக்கு மண வாழ்க்கை கிடையாது என்பதை அடித்துச் சொல்லியுள்ளார்கள். அவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

இடைச் சேர்க்கை: காலை 12.15 மணிக்கு
திருமதி ராதா ஸ்ரீதர் அவர்களும்  சரியான பதிலை எழுதியுள்ளார். இதை அவர் சுட்டிக்காட்டியபோதுதான் என் கவனத்திற்கு வந்தது. Oversight mistake.  அவருக்கும் எனது பாராட்டுக்கள்
------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

ஜாதகத்தைப் பாருங்கள்.


இது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதகிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து10ல் உள்ளார். ஆகவே

ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இது போன்ற அலசல் பாடங்கள், கேள்விகளுடன் உள்ள புதிர்ப் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் எல்லாம் வகுப்பறையில் இனி வராது. Galaxy2007 வகுப்பில் மட்டுமே வரும். இதை உங்களின் மேலான தகவலுக்காகச் சொல்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.11.13

Astrology: Quiz No.22: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.22: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி இருபத்தியிரண்டு!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.




அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

4.11.13

Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தொன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

30.10.13

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

 

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபது

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

1.ஜாதகர் சென்னைக்காரர்.
2.இவருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் ஒரு தொடர்பு உண்டு
3.இவர் பலவிதங்களில் பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



24.10.13

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

 


முக்கிய அறிவிப்பு!

இன்று சஷ்டி. முருகப்பெருமானை வணங்குவதற்கு உகந்த நாள்.. பழநிஅப்பனை வணங்கிவிட்டு,  கீழ்க்கண்ட செய்திகளை  உங்களுக்குத் தெரியப்படுத்துவதில்  மகிழ்ச்சியடைகிறேன்!.

மூன்று தினங்களூக்கு முன்பு,  cut & paste கலாச்சாரத்தால், எனது எழுத்துக்கள், ஆக்கங்கள் அப்பட்டமாகத் திருட்டுபோவதைப் பற்றி எடுத்துச்  சொல்லி, அதற்கு என்ன செய்யலாம் என்று உங்களின் மேலான ஆலோசனைகளைக் கேட்டிருந்தேன்.

பலரும், தனி இணைய தளம்தான் அதற்குத் தீர்வு என்றும், User Name
and Password  உள்ள உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழையும் படியாக
அதைஏற்படுத்தி நடத்துங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளார்கள்.
ஆலோசனை நல்கிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

உறுப்பினர் கட்டணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை வெவ்வேறு விதமாகச் சொல்லியுள்ளார்கள்.

உறுப்பினர் கட்டணம் அல்லது நுழைவுக் கட்டணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு ஆண்டுக்கான கட்டணம். அதை நான் முடிவு செய்யாமல் உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன். நீங்கள் அனைவரும் உறுப்பினராக வேண்டும். எழுதும் பாடங்களைப் படித்துப் பயன்பெற வேண்டும்.அது மட்டுமே என் விருப்பம்.

கட்டணத்தை நீங்கள் உங்களின் விருப்பம்போல் செலுத்தலாம். அதில் இணையதளத்தை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் உள்ள தொகை
போக உபரியாகக் கிடைக்கும் பணத்தை நான் செய்து கொண்டிருக்கும் பொதுத் தொண்டுகள் மற்றும் அறச்செயல்களுக்கு பயன் படுத்தலாம் என்று
உள்ளேன்.

தனி இணைய தளம் ஒன்றை வடிவமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அது தயாராகிவிடும். அதற்கான Domain Name பதிவாகி விட்டது. Hosting Serverக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவை பற்றிய முழுவிபரத்தை, அந்த வேலைகள் முடிந்த பிறகு தருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
 நமது புதிய வகுப்பறையின் முகவரி (URL)

Domain Name: galaxy2007.com

காலக்ஸி என்பது அண்டத்தைக் குறிக்கும். அதில் கிரகங்கள் உட்பட அனைத்தும் அடக்கம். அதனால் அந்தப் பெயர். 2007 என்பது நமது வகுப்பறையின் பிறந்த வருடத்தைக் குறிக்கும். ஆகவே அதையும் சேர்த்துக்கோண்டிருக்கிறேன்.

அது மட்டும்தான் காரணமா?

இல்லை Samsung Galaxy Smart Phone வைத்திருக்கிறேன். அற்புதமாக இருக்கிறது. அதை வாங்கிய நாளில் இருந்து காலக்ஸி என்ற பெயரும் பிடித்துவிட்டது:-)))))
------------------------------------------------------------------------------------------------

நவம்பர் மாதம் 7ஆம் தேதி (அதுவும் சஷ்டி தினமே) புதிய வகுப்பைத் துவங்கலாம் என்றுள்ளேன்.

இனி எழுதவுள்ள ஜோதிடப் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வெளியாகும். வாரம் 3 பாடங்களுக்குக் குறையாமல் பதிவாகும்.

இப்போது உள்ள இந்த வகுப்பிலும் பதிவுகள் தொடரும். அவைகள் ஜோதிடத்தைத் தவிர்த்து மற்ற பதிவுகளாக இருக்கும். அவைகளும் வழக்கம்போல எனது எழுத்து நடையில் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.

புதிதாக வருபவர்கள் படிப்பதற்கு வசதியாக அடிப்படைப் பாடங்கள் இங்கே இருக்கும்.

உறுப்பினர்களை ஆய்ந்து அனுமதிப்பது எனது முக்கியமான வேலை. அதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

அதற்கான படிவம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இணையதளத்தில், புதிய ஜோதிட வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ள அனைவரையும் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். என் மின்னஞ்சல் மூலம்
தெரியப்படுத்துங்கள் (My mail ID: classroom2007@gmail.com) 
Please mention the words "New Classroom" in the subject box of the mail. It is important

அன்புடன்,
வாத்தியார்


அடிக்குறிப்பு: முன்பு உள்ள எனது தனித் தளங்களில், குறைந்த அளவு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே எனக்குச் சில டெக்னிகல் பிரச்சினைகள் ஏற்பட்டன.

1.Bandwidth பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது.
2.சார்’ உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார்கள் வந்தன.
3. பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையே என்ற புகார்களும் வந்தன.

ஆனால் கூகுள் பிளாக்கில் (தற்போது உள்ள வலைப்பூவில்) எந்தப் பிரச்சினையும் இல்லை.

4227 தொடர்பாளர்கள் என்று வலைப்பூவின் கணக்குச் சொல்கிறது.
தினமும் சராசரி Page view 4,500 பக்கங்கள் என்று என் ப்ளாக்கரின்  Dash Board கணக்குக் காட்டுகிறது. அதேபோல தினமும் வந்து செல்கிறவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள் என்று  வலைப்பூவின் வெளியில் உள்ள Hit Counter (Traffic Counter) காட்டுகிறது.

ஆகவே அந்தக் கணக்குகளில் ஏதோ குழப்பம் உள்ளது. கணினியின் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாததால் என்ன குழப்பம் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

ஆனால் வருபவர்கள் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஆர்வத்துடன், முனைப்புடன் படிப்பவர்கள் சுமார் 200 பேர்கள்தான். அதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.

ஆகவே தேர்வு செய்து முதலில் 200 பேர்களுக்கு மட்டும்தான் புது வகுப்பில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டு மாதங்கள் பார்த்துவிட்டு, பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் ஜனவரி’ 2014 முதல் மற்றவர் களுக்கும் அனுமதியளிக்கலாம் என்றுள்ளேன். இல்லை என்றால் வேறு ஏதாவது  வழி செய்ய வேண்டும்.

ஆகவே நமது வகுப்பறைக்கு வரும் தொழில் நுட்பம் தெரிந்த மாணவக் கண்மணிகள் இந்தப் பிரச்சினையைப் போக்க என்ன செய்யலாம் என்று தங்கள் யோசனைகளைச்  சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2
 

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். புகழ் எல்லாம் இல்லை. மாறாக இகழ்கள் மட்டுமே!
2. கையில் பணம் அன்றாடத் தேவைக்கு மட்டுமே இருந்தது. இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே. பிறகு கெட்டுவிட்டது. அதற்கான காரணம் அடுத்தவரியில் இருக்கிறது.
3. திருமணமானவர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். ஜாதகி கைம்பெண்ணாகிவிட்டார். அதாவது விதவை!
4. ஜாதகிக்குக் குழந்தைகள் உள்ளன.இரண்டு பெண் குழந்தைகள். இரண்டையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
தனுசு லக்கினம். இயற்கையாகவே நல்ல லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார்.

உச்சம் பெற்று என்ன பயன்? எட்டில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். முதுகெழும்பு உருவப்பட்ட நிலை! Anticipatory bail வாங்க முடியாத இடம்!

2.
குரு அமர்ந்த அந்த வீட்டுக்காரன் சந்திரன் (இந்த ஜாதகத்திற்கு அவன் அஷ்டமாதிபதியும் கூட) பரிவர்த்தனை பெற்று லக்கினத்தில் வந்து ஜம்’மென்று அமராமல், சனியின் பிடியில் சிக்கி மாட்டிக்கொண்டுள்ளான். துப்பவும் முடியாது. விழுங்கவும் முடியாது போன்ற நிலை.

3.
லாபாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான். மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது! ஆறாம் வீட்டைப் பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது!

4.
ஆக மொத்தம் 3 சுபக்கிரகங்களுமே வலுவிழந்து பயனில்லாமல் போய்விட்டார்கள். Foot Boardல் கூட இடம் கிடைக்காத நிலைமை.

5.
ஏழாம் வீட்டுக்காரன் புதன் 12ல். களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். அத்துடன் செவ்வாய் மற்றும் மாந்தியின் கூட்டணி. இதைப் பார்க்கும் எவருமே ஜாதகிக்குத் திருமணம் ஆகாது. இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள். ஆனால் நடந்தது வேறு.

பரிவர்த்தனையான சந்திரன், ஏழாம் வீட்டை நேராகப் பார்ப்பதால் திருமணத்தை நடத்திவைத்தான். குடும்ப ஸ்தானத்தை தன்னுடைய
நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் குரு, ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையைத் தர வேண்டிய கட்டாயத்தால் தன்னுடைய வீட்டோ
பவரைப் பயன் படுத்தி ஜாதகிக்குத் திருமணத்தை நடத்திவைத்தான்.

6.
பாக்கிய ஸ்தான அதிபதி (9th House Lord - House of gains lord) சூரியன் நீசமாகிவிட்டான். நீசமானால் செல்லாக் காசு. அதோடு அவன் அமர்ந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் செவ்வாயும் மாந்தியும். மறுபக்கம் கேது. அவன் சிறைப்பட்டும் விட்டான். அதோடு அவன் அரச கிரகமாதலால், சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று ஜாதகியைப் பாடும் நிலைக்குத் தள்ளிவிட்டான்.

7.
கவியரசரின் பாடல்களில் முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதியிருப்பார். அந்த வரிதான் பாட்டையே தூக்கி நிறுத்தும். அதுபோல உள்ள பாவ அவலங்களுக் கெல்லாம் முத்தாய்ப்பாய் முக்கிய பாவமான நான்காம் வீட்டில் (சுகஸ்தானம் -  House of comforts) ராகு போய் அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக் கிறார். குடியிருக்கின்றார்.  4ல் ராகு என்பது மோசமான அமைப்பு. சுகக்கேடு.

8.
மொத்தத்தில் எல்லாம் மோசம். ஒரு மோசமான ஜாதகத்திற்கு இந்த ஜாதகத்தை உதாரணமாகச் சொல்லலாம்!
-------------------------------------------------------
சரி, அப்படியென்றால், எப்படி இந்த ஜாதகத்திற்கு 337 வரும்? நல்ல அமைப்பே கிடையாதா?

9
லக்கினத்தில் அமர்ந்த சந்திரன் அழகைக் கொடுத்ததோடு, எதையும் தாங்கும் மனதையும் கொடுத்தான். லக்கினத்தில் அமர்ந்த (3ஆம் வீட்டிற்கும் உரிய) சனி, உறுதியான, போராடும் குணத்தையும் கொடுத்தான்.

10
குருவோடு பரிவர்த்தனையான சந்திரன் ஜாதகியின் திருமணத்தை நடத்திவைத்தான். சனி உடன் இருந்ததால் ஜாதகிக்குத் தாமதமான
திருமணம். 30 வயதில்தான் திருமணம் நடந்தது.

11.
ஐந்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும் ஆட்சி பலத்தோடு உள்ளான். அத்துடன் புத்திரகாரகன் குருவின் விஷேசப் பார்வையையும் அவன் பெற்றுள்ளான். ஆகவே ஜாதகிக்கு திருமணமானவுடன் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.

12.
சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது புனர்பூ தோஷம் ஆகும். புனர்பூ தோஷத்தின் பலன் தம்பதிகள் பிரிய நேரிடும். லக்கினத்தில் சனி
இருப்பது விதவை தோஷத்திற்கான அறிகுறி. தம்பதிகளின் பிரிவு வேறு மாதிரியாக ஆயிற்று. கணவனை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு ஜாதகியை விதவையாக்கி சனி தன் வேலையை முடித்துக்கொண்டான். ஜாதகியின் 10 ஆண்டு திருமண வாழ்வு ஒரு  முடிவிற்கு வந்தது.

குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தது கேடானது. ஆனால் அந்த வீட்டை
தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான், ஜாதகிக்குக் குடும்ப பந்தத்தைக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

ஜாதகி பிறந்தது ஒரு நல்ல குடும்பத்தில். வாழ்க்கைப் பட்டது ஒரு செல்வந்தர் வீட்டில். மூத்த மருமகள். ஆனால் 4ல் அமர்ந்த ராகு ஜாதகியின் கைக்கு எதையும் எட்டாமல் செய்து submissive levelலிலேயே வாழும்படி செய்துவிட்டான்.(என்ன நடந்தது என்பதை எழுதினால் பத்துப் பக்கக் கதை எழுத வேண்டும். ஆகவே எழுதவில்லை. அத்துடன் அது தேவை இல்லாததும் கூட)
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.  சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

 சரியான விடைகள் -  அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்
2. பணக் கஷ்டம் உடையவர்.
3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.
4. திருமணமானவர்.
5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.
6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு!

ஓரளவு 4 அல்லது 5  விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:

1. திரு.சந்திரசேகரன்.
2. Redfort, Tirupur
3. திரு.ஜி.முரளி கிருஷ்ணா
4. திரு, பழனிசண்முகம்
5. திருமதி சுசீலா கந்தசாமி
6. திரு.Kmr.Krishnan, Lalgudi

இவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!!!

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.10.13

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி பத்தொன்பது!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். நடிகை அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.




அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++========