மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.11.13

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

 

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

நேற்றைய புதிருக்கு 100ற்கும் மேற்பட்டவர்கள் சரியான பதிலைச் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் பின்னூட்டத்தில் மட்டுமல்லாமல், தனி மின்னஞ்சல் மூலமாகவும் நிறையப் பேர்கள் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களையும் சேர்த்துத்தான் சொல்லியுள்ளேன். அசத்தல் பதிலால் அல்ல. அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டதால்!

உண்மைதான்! பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்தான் அது. பகவானுக்கே ஜாதகமா என்று கேட்காதீர்கள். பூமியில் அவதாரம் எடுத்ததால் அவருக்கும் ஜாதகம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர், அவருடைய ஜாதகத்தை தனது ராமகாவியத்தில் கொடுத்திருக்கிறார்.

"ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்" என்று ராமபிரானைப் பெருமைப் படுத்திச் சொல்வார்கள்.

நேற்று வந்த பதில்களில் முக்கியமான செய்திகளுடன் உள்ள பின்னூட்டங் களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

சரியான பதிலைச் சொன்னவர்களுக்கும் நன்றி. கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி!

நேற்றய பதிவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. வகுப்பறையின் 1,500 வது பதிவு அது!
---------------------------------------------------
1
////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    Shri. ராமர் ஜாதகம்.
    சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கடக லக்னத்தில் ஐந்து கிரகங்கள் (குரு சனி செவ்வாய் சுக்கிரன் சூரியன்) உச்சத்திலும் புனர்பூச நட்சத்திரத்தில் Shri. ராமர் அவதரித்தார்.
    ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்
Monday, November 11, 2013 5:33:00 AM/////

2   
///////Blogger Ramasamy said...
    Sir,
    The native is bahwan sri Ramar.
    5 grahangal ucham - this is possible in god's avatars only.
    3 panchamaha purusha yogam. Amsa yogam-guru, sasa yogam-sani, ruchuga yogam-mars.
    I read in books 'Uchanai uchan parpathal Ramar vanavasam senrar'
    In some books, buthan is in mesham.
    Monday, November 11, 2013 6:35:00 AM/////

3  
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Indha Jathagam Avadhara Purusaragiya "Sri Ramar" Jadhagam endru enakku thondrugiradhu.
    Kattathil Budhan mattum naan paartha ramar jadhagathirkum idharkkum satru veru-padugiradhu. Naan paarthadhil Mesathil budhan, ingey rishabathil Budhan.
    Thank You.////
   
4  
/////Blogger Kirupanandan A said...
    5 கிரகங்கள் உச்சம், 1 கிரகம் ஆட்சி. பகவான் ஸ்ரீ ராமரின் ஜாதகம். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
    Monday, November 11, 2013 7:50:00 AM//////

5
//////Blogger Srinivasa Rajulu.M said...
    இந்த உன்னத ஜாதகம் ராமபக்தர்களின் பூஜை அறையை அலங்கரிக்கும் ஒரு அவதார புருடனின் ஜாதகம்.
    'சக்கரவர்த்தித் திருமகன்' என்றும் 'காகுத்தன்' என்றும் 'ரவி குல திலகன்' என்றும் அழைக்கப்படும் இவர் அவதரித்த நேரத்தில், இறையாணைக்குக் கட்டுப்பட்டது போல கிரகங்கள் கைக்கட்டி வாய் பொத்தி அவரவர்களின் உச்ச வீட்டிலோ, ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இடம் பெற்றிருந்தார்கள். (புதன் கூட ரிஷபத்தில் இருந்திருப்பாரோ?)
    அவதார நோக்கமே, இந்த கிரகங்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்த ராக்கத மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தருவதே. (சனைஸ்சரனின் காலை முறித்துப் போட்ட அந்த அரக்கன் கதையை வாத்தியார் 'மாந்தி' பற்றிய பாடத்தில் கொடுத்துள்ளார்)
    Monday, November 11, 2013 8:00:00 AM//////

6   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    சில உபரித் தகவல்கள்:
    1) அச்சில் கிடைத்துள்ள ஸ்ரீ ராமரின் ஜாதகத்தில் 'புதனின்' அமைப்பு வெவ்வேறாகக் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வாத்தியார் கொடுத்துள்ள படி 'புதன் ரிஷப ராசியில் இருந்திருப்பார்' என்றே எண்ணத் தோன்றுகிறது (இதை முதல் பதிவில் நான் சரியாகக் குறிப்பிடவில்லை)
    2) வைணவச் சுடராழி திரு.ஜோசஃப் அவர்களின் காணொளி (மூன்று பாகங்கள்), காணவேண்டிய ஒன்று. கம்பனின் பாடல் ராமபிரானின் ஜாகதக் குறிப்பை இரத்தினச் சுருக்கமாக உணர்த்துகிறது. (வால்மீகியும் ஒரு ஸ்லோகத்தில் இந்த அமைப்பைச் சொல்லியிருக்கிறார்)
    1) http://www.youtube.com/watch?v=5FIToGe7Cj0
    2) http://www.youtube.com/watch?v=JFXd4_6z_ZY
    3) http://www.youtube.com/watch?v=h5X-aBGb0SI
    Monday, November 11, 2013 8:21:00 AM/////

7.   
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I see 5 planets Uccham in this chart. Since you have mentioned that any software won't help us find the birth date, I think it is not a person from this Ugam. I heard Rama's chart has 5 planets uccham.
    Am I correct? Is this Lord Rama's chart?
    Monday, November 11, 2013 8:35:00 AM//////

8.   
/////Blogger sellaprasad said...
    காக்கும் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமருடைய ஜாதகம். பிறந்த தேதி கி.மு. 5114 ஜனவரி 10ம் தேதி பகல் 12 முதல் 1 மணிக்குள். http://bhakthiplanet.com/2013/04/birth-date-of-rama/
    Monday, November 11, 2013 9:01:00 AM//////

9.   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    இன்னுமொரு தகவல்:
    வால்மீகி, பாலகாண்டம் பதினெட்டாம் அத்தியாயம் 15-ஆம் ஸ்லோகம்:
    पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः।
    सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ॥ १-१८-१५
    இதன் அர்த்தமாவது:
    இராம பிரானைத் தொடர்ந்து, பரதன் அடுத்த நாள் பூச நக்ஷத்திரத்தில் மீன லக்கினத்திலும்;
    இலக்குவனும், சத்ருக்னனும் அதற்கும் அடுத்த நாள், ராமனைப் போலவே கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்திலும் பிறந்தனர்.
    ஆகவே, வாத்தியார் கொடுத்துள்ள ஜாதகம், இராமன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோருக்குப் பொருந்தும்.
    ஆனாலும், இது இராமன் ஜாதகம் என்றே பிரசித்தி பெற்றது./////

10.   
/////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Sri Rama Jayam....
    This is the horoscope of the Lord
    SriRama....
    நான் தினமும் வணங்கும் ஸ்ரீ ராமனின் ஜாதகம் .
    பி.கு. (இது உண்மை, எனது பாட்டி என் தாயிடம் உனக்கு அந்த ஸ்ரீராமனே வந்து பிறப்பான் என்று அனுதினமும் சொல்லியே நான் ராமனின் லக்னத்தில் பிறந்தேன் என்று எனக்கு ஸ்ரீராமன் என்று பெயர் சூடினார்கள் என்று சொல்வார்கள்.
    Monday, November 11, 2013 10:55:00 AM/////

11.   
/////Blogger சரண் said...
    என்னுடைய கணிப்பு இது ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்.
    இந்த கணிப்பிற்கு காரணம்:
    1.
    பிறந்த தேதியை கணிக்க எந்த மின் பொறியும் உதவாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்றால் இந்த ஜாதகத்துக்குரியவர் சரித்திரத்தையும் தாண்டி உதாரண புருஷர் அல்லது புராண காலத்தவருடையதாக இருக்க வேண்டும்.
    2.
    சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணரின் ஜாதகம் ஒரு ஆன்மிக மாத இதழில் வெளியாகியிருந்தது. ஒரு நொடி அதுவா என்று தோன்றினாலும் கிருஷ்ணன் ரோகிணி நட்சத்திரம். ஆனால் இங்கே சந்திரன் கடகத்தில். ஆக ஜாதகர் புனர்பூசம், பூசம், ஆயில்யத்தில் இருக்க வேண்டும். ராமரின் நட்சத்திரம் புனர்பூசம் என்று தெரியும். அதனால் அந்த கண்ணோட்டத்தில் தேடினேன்.
    3.
    ராம நவமியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சித்திரையில் கொண்டாடப்படுவது தெரிந்தது. சூரியன் உச்சம். ஓ.கே.
    4.
    சூரியனும் சனியும் உச்சமானாலும் இருவரும் சம சப்தம பார்வையாக இருப்பதால் தந்தைக்கு பிடித்த பிள்ளையாக ராமன் இருந்தாலும் அவராலேயே காட்டுக்கு அனுப்பப்படும் சூழ்நிலை.
    5.  7ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம். அவர் 5 மற்றும் 10க்கு உரியவர். கடக ராசிக்கு யோக காரகன். இடையில் சிரமப்பட்டாலும் காட்டுக்கு சென்றாலும் அவர் பாதணியை வைத்து ஆட்சி புரிந்த பரதன், காட்டுக்கு கூடவே வந்து கஷ்டப்பட்ட லக்ஷ்மணன் உள்ளிட்டோரை இளைய சகோதரர்களாக பெற்றிருந்தார்.
    6.  6ஆம் இடத்தில் இருந்த ராகு இவருக்கு கூனி உட்பட எதிரிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறான்.
    7.  ஆயிரம் சோதனைகள் வந்தாலும் லக்னத்தில் அமைந்த உச்ச குரு அவதார மூர்த்தியாக அவர் இருக்க காரணம்.
    8.  4ஆம் இடத்தில் அமர்ந்த உச்சம் பெற்ற சனி 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதும் உலகப்புகழுக்கு ஒரு காரணம்.
    9.  9ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் உச்சம், 7ஆம் அதிபதி சனி 4ல் உச்சம் இவை யாவும் கற்புக்கரசியாக போற்றப்படும் சீதாலெட்சுமி ராமருக்கு மனைவியாக அமைந்ததற்கும், ராமர் ஏக பத்தினி விரதனாக இருந்ததற்கும் ஒரு காரணம். சனீஸ்வரன் மேல் நாம் ஆயிரம் குற்றச்சாட்டு சொன்னாலும் நீதிமான். நேர்மைக்கு தலை வணங்குபவன்.
    வாத்தியார் ஐயா, என் மனதில் நினைவில் நின்ற விஷயங்களை வைத்து மனதில் தோன்றியதை பதிலாக எழுதியிருக்கிறேன்.
    நன்றி.
    Monday, November 11, 2013 11:15:00 AM/////

12.  
/////Blogger Arul Murugan. S said...
    The horoscope undoubtedly belongs to my favourite deity Lord Shri Ram, as five planets are in exalted state with kadaga rasi & kadaga lagna and 3 Pancha Mahapurusha Yogas.
    Additional comment: I have heard that Emperor Akbar had 3 Panchamahapurusha Yogas in his horoscope./////

13.   
/////Blogger Megalabala said...
    ஐயா நீங்கள் கொடுத்துள்ள இந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் தசரத மைந்தன் ஶ்ரீராமர்!
    லக்கினத்திலேயே லக்னாதிபதி சந்திரனுடன் குரு! குருமங்கள யோகம். அத்துடன் குரு, செவ்வாய், சுக்கிரன், சூரியன், ஆகியவை உச்சம். தேவையில்லாமல் சனியும் உச்சம். சனிதான் அத்தனையையும் கெடுத்து வைத்தார்! சரிதானா ஐயா?
    Monday, November 11, 2013 2:51:00 PM/////

14
//////Blogger kmr.krishnan said...
    முந்தைய பின்னூட்டம் பதிவான‌தா என்ற சந்தேகம் வந்திவிட்டதால் மீண்டும் எழுதுகிறேன்.
    இது பகவான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியின் ஜாதகம்.//////

15.   
/////Blogger Senthil Nathan said...
    அய்யா
    பார்த்த உடனேயே தெரிகிறது, இந்த ஜாதகம் யாருடயது என்று
    "அவர் மனித குல மாணிக்கம்", மனிதன் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் வாழ்ந்துக்காண்பிக்க பிறந்தவர், சூரிய வம்சத்திலும், ரகு குலத்திலும் பிறந்த மானிடர்களின் முன்னோடி "ஸ்ரீ இராமர்"
    பதில் சொல்லவே பெருமையாய் இருக்கிறது.....
    துரை.செந்தில் நாதன்/////
---------------------------------------------------------
புதிருக்கான உங்கள் விடைகளை மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டாம். பின்னூட்டம் மூலமே எழுதுங்கள். Please use the comments box in the blog for your answers and other comments.மின்னஞ்சல் மூலம் எழுதினால் கணக்கில் வராது. மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

அன்புடன்
வாத்தியார்


பி,கு: மின் தடை மற்றும் UPS Unitன் சொதப்பல் காரணமாக இன்று பதிவுகளை வலையே ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பொறுத்தருள்க!
==============================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. வாத்தியார் அவர்களுக்குக் கோடி புண்ணியம்.

    'ஆன்மீகம் தேய்ந்து போகுமோ' என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், தங்களின் ஆன்மீகம் கலந்த ஜோதிட மற்றும் இதர பதிவுகள், நிறைய இளைஞர்களை ஆன்மீகம் பக்கம் சுண்டி இழுத்துள்ளது.

    இன்றைய நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சரியான பதில்களே இதற்கு அத்தாட்சி.

    தாங்கள் கொண்டிருந்த இரண்டு அபிலாசைகள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பூர்த்தியாகி விட்டன. (100 சரியான பதில்கள் என்பதும், மாணாக்கர்களுக்கு நவீன வசதியுடன் ஒரு தனி வகுப்பறை கட்டவேண்டும் என்பதுமான தங்களின் இரண்டு அபிலாசைகள்)

    ReplyDelete
  2. அய்யா, உங்களின் விடா முயற்சியும் உத்வேகமும் தங்களின் ஆசையை வகுப்பறையின் 1500-வது பதிவில் கிட்ட தட்ட நிறைவேறி விட்டது !. தங்களின் உயர்ந்த எண்ணங்களும் ஆன்மீக சிந்தனைகளும் என்னை பெரிதும் கவர்ந்தது ! வாழ்த்த வயதில்லை !. வணங்குகிறேன் !.

    ReplyDelete
  3. Dear Sir,
    The date of birth of Sri Rama indicated that this was exactly the location of planets/stars in the noon of January 10, 5114 BC. Thus Shri Ram was born on January 10, 5114 BC (7123 years back). As per the Indian calendar it was the ninth day of Shukla Paksha in Chaitra month and the time was around 12 to 1 noontime. This is exactly the time and date when Ram Navmi is celebrated all over India. Shri Ram was born in Ayodhya.

    ReplyDelete
  4. //////Blogger Srinivasa Rajulu.M said...
    வாத்தியார் அவர்களுக்குக் கோடி புண்ணியம்.
    'ஆன்மீகம் தேய்ந்து போகுமோ' என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், தங்களின் ஆன்மீகம் கலந்த ஜோதிட மற்றும் இதர பதிவுகள், நிறைய இளைஞர்களை ஆன்மீகம் பக்கம் சுண்டி இழுத்துள்ளது.
    இன்றைய நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சரியான பதில்களே இதற்கு அத்தாட்சி.
    தாங்கள் கொண்டிருந்த இரண்டு அபிலாசைகள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பூர்த்தியாகி விட்டன. (100 சரியான பதில்கள் என்பதும், மாணாக்கர்களுக்கு நவீன வசதியுடன் ஒரு தனி வகுப்பறை கட்டவேண்டும் என்பதுமான தங்களின் இரண்டு அபிலாசைகள்)/////

    உண்மைதான். தோற்றுவித்தவன் (Founder) இல்லாத மதம் இந்து மதம் என்று கவியரசர் கண்ணதாசன் அடிக்கடி சொல்வார்.அதனால் அதற்கு அழிவே இல்லை என்பார். தொடர்ந்து அதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பக்தர்களே அதற்குச் சாட்சி! அத்துடன் இப்போது ஆன்மீகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. பழநியிலும், சபரி மலையிலும், திருப்பதியிலும் கூடும் பக்தர்களின் எண்ணிக்கையே மக்களின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. //////Blogger murali krishna g said...
    அய்யா, உங்களின் விடா முயற்சியும் உத்வேகமும் தங்களின் ஆசையை வகுப்பறையின் 1500-வது பதிவில் கிட்ட தட்ட நிறைவேறி விட்டது !. தங்களின் உயர்ந்த எண்ணங்களும் ஆன்மீக சிந்தனைகளும் என்னை பெரிதும் கவர்ந்தது ! வாழ்த்த வயதில்லை !. வணங்குகிறேன் !./////

    எனது ஆசை நிறைவேறியதற்கு, உங்களைப் போன்ற எண்ணற்ற மாணவர்களின் ஆதரவும் ஒரு காரணம்! நன்றி முரளி கிருஷ்ணா!

    ReplyDelete
  6. //////Blogger Maaya kanna said...
    Ullen Iyaa!+/////

    நல்லது கண்ணா!

    ReplyDelete
  7. /////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The date of birth of Sri Rama indicated that this was exactly the location of planets/stars in the noon of January 10, 5114 BC. Thus Shri Ram was born on January 10, 5114 BC (7123 years back). As per the Indian calendar it was the ninth day of Shukla Paksha in Chaitra month and the time was around 12 to 1 noontime. This is exactly the time and date when Ram Navmi is celebrated all over India. Shri Ram was born in Ayodhya./////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  8. Dear Sir,

    I have also commented the right answer. Can You Please update my name in the list?

    Regards,
    Rajkumar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com