மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.17

நீங்களும் உங்களுடைய அணியும் - You and your team mates


நீங்களும் உங்களுடைய அணியும்
You and your team mates

ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் படிக்கின்ற காலத்தில் அதைச் செய்திருக்கிறேன்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் படித்த பின்பு, ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு தங்கள் ஜாதகத்தை தாங்களே அலசிப் பார்க்கும் அளவிற்குப் பலருக்கும் திறமை உண்டாகிவிடும்.

ஆகவே கற்றுக் கொள்வதில் பொறுமைதான் முக்கியம். எழுதும் பாடங்களை மட்டும் படியுங்கள்.உங்கள் ஜாதகத்தைவைத்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்களின் ஜாதகங்களை வைத்தோ கேள்விகளைக் கேட்காதீர்கள்.பலனைக் கேட்காதீர்கள்

நீங்கள் உதிரியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமம். பலன் சொல்வதும் கஷ்டம். அத்துடன் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்காமல் உதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்வது, ஜோதிட விதிகளுக்கு எதிரானது.

உதாரணத்திற்கு எனக்கு வந்த கேள்வி ஒன்றைக் கொடுத்துள்ளேன்:

//////my doubt is what is the benefit of exchange between  mars and mercury 
in kanni and viruchagam.////  

செவ்வாய்க்கு சொந்த வீடுகள் மேஷம், மற்றும் விருச்சிகம். புதனுக்கு சொந்த வீடுகள் கன்னியும், மிதுனமும். அந்த 4 இடங்களுக்குள்தான் அவர்கள் பரிவர்த்தனையாகமுடியும். அவைகள் பரிவர்த்தனையானால் என்ன பலன் என்பதைப் பாடத்திலேயெ சொல்லியுள்ளேனே? அதில் doubtற்கு எங்கே இடம் இருக்கிறது?

பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும். அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

செவ்வாயும், சனியும் தீய கிரகங்கள், அவைகள் ஜாதகத்தில் பரிவர்த்தனையானதால் என்னென்ன வழியில் சிரமங்கள் உண்டாகும் என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதுதான் மேட்டர்.

அதைத் தெரிந்து கொள்ள மற்ற ஆட்டக்காரர்களையும் பார்க்க வேண்டாமா? பெளலர்களையும், பேட்ஸ்மேன்களையும் பார்க்க வேண்டாமா? முக்கியமாகக் கேப்டனைப் பார்க்க வேண்டாமா? அதாவது லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டாமா? எதிர் அணியைச் (விதியை - Destiny) சமாளித்து ஆடி வெற்றி பெறுவதற்கும், ஒரு வேளை வேற்றி பெறாவிட்டால் தன்னுடைய அணியின் ஸ்கோரை மதிப்பு உடைய அளவிற்கு ஏற்றுவதற்கும் அவர் வேண்டாமா?

ஆகவே உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு (Question with scattered planetary position) கேள்விகளைக் கேட்காதீர்கள். யாரிடமும் கேட்காதீர்கள்.

உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது  தவறாகும். நீங்கள் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!

உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ,

அதாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்கு, சொந்த வீடு எப்போது அமையும், இருக்கும் வேலையில் வருமானம் போதவில்லை சொந்தத் தொழில் செய்யலாமா என்ற கேள்விகள் இருக்கும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கடன் பிரச்சினை, உடல்/நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.

அதெல்லாம் உண்மைதான். நல்ல ஜோதிடராகப் பார்த்துக் கேட்டீர்கள் என்றால் உரிய பதில் கிடைக்கும். இல்லை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். கையில் வகுப்பறை ஜோதிடத்தின் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்றை தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அவை அச்சில் ஏறிவிட்டால் எனது வேலைப்பளு சற்றுக் குறைந்துவிடும். அதற்குப் பிறகு உங்களுக்கு உதவ நான் முன் வருகிறேன்

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.17

எதனுடன் எதைச் சேர்க்கக்கூடாது!!!


எதனுடன் எதைச் சேர்க்கக்கூடாது!!!

அதாவது எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

Health Tips by: மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர்  சாப்பிடக்கூடாது.

3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன்  பால், தயிர் சாப்பிடக்கூடாது.அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்”
போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.

7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10.)நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

14.)தோல் நோய்  உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15.)கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

படித்ததில் பிடித்தது
அன்புடன் 
வாத்தியார்
----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.6.17

*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

Cine Songs

 இசை மதிப்பீடு:*

*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக் காவியம் என்றால் மிகை ஆகாது.*

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும்
ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.
ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !

அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர்
மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார்

கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் –

தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன்
,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –

இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர்
வேடத்தில் வந்து யாசிக்கிறான்-

அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான்

இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் –

மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில்
பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –

‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘

அருமையான இந்தப் பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!

இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது-

P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-

இது ராக மாலிகை;

முதலில் வருவது – காபி ராகம் ;

பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல்

“மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !

இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில்
வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் !

இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே
எனக்கு தெரியவில்லை .

இந்த பாடல் அமைந்த ராகங்கள் :

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று
மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து
கொண்டிருக்கின்றன இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.....
வஞ்சகன் கண்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன்
கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி
பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை
ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை
பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை
நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி

படித்து மகிழ்ந்தது: கேட்டு மகிழ்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.6.17

நீங்களும் உங்கள் தொப்புளும்!!!


நீங்களும் உங்கள் தொப்புளும்!!!

Health Tips

தொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புட்கொடி நீக்கப்படும்.அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும்.

தூயதமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு.இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள்குழி என்று குறிப்பிடப்படுகிறது. உந்தி,நாபி[4] என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் நாவெல் (navel) அல்லது பெல்லி பட்டன் (belly button) என்று குறிப்பிடப்படுகிறது.மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது.அணைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாக காணப்படுவது மனிதர்களில் மட்டுமே.[8]

*தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.6.17

அற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்!!!

அற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்!!!

*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க* *இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல* *பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,* *வேண்டிக் கொள்ளலாம்*-*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,* *கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து* *அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்**கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி**வைத்திராதே*
*நீ**எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து**காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,**தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்காரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.6.17

Humour நகைச்சுவை: குப்பத்து ஆசாமியின் கிரிக்கெட் விமர்சனம்!!!


Humour நகைச்சுவை: குப்பத்து ஆசாமியின் கிரிக்கெட் விமர்சனம்!!!

இன்று ஞாயிற்றுக்கிழமை.

ஜோதிடம், ஆன்மீகம், மனவளக் கட்டுரைகள், ஹெல்த் டிப்ஸ் ஆகியவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு  பொழுது போக்காக இரண்டு காணொளிகளைக் காண்போமா - மக்களே?

முதலில் ஒரு குப்பத்து ஆசாமியின் பார்வையில் கிரிக்கெட் ஆட்டம் !!
அடுத்து இரண்டு புது முகங்கள் கலக்கலாகப் பாடும் திரை இசைப் பாடல்!!!

பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
========================================
1


2


==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.6.17

முயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்?


முயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்?

சிலர் ரிஸ்க் எடுத்து எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள்!

முயற்சி இல்லை என்றால் முன்னேற்றம் இருக்காது.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு
இருந்த ஒருவர், அந்த வேலையை விட்டு விலகி, பலரின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு தன் சொந்த முயற்சியில் ஒரு சிறிய புத்தக விற்பனை நிலையத்தைத் துவங்கினார். அச்சமயம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த கணினி மற்றும் இணைய சேவைகள் அவருக்குக் கை கொடுத்தன.

இன்று பலரும் அதிசயத் தக்க வகையில் அவருடைய நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டதோடு அவரை உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற மதிப்பையும் பெருமையையும் தேடித் தந்துள்ளது!

யார் அவர்?

கீழே உள்ள காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------






===============================================================


அவரைப் பற்றிய மேல் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து படியுங்கள்:
https://en.wikipedia.org/wiki/Jeff_Bezos
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.6.17

பாரிஜாத யோகம்.


பாரிஜாத யோகம்.

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த

வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.6.17

Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!


Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!

வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்துவிடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகங்களே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார். 27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று

தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Vaitheeswaran_Koil

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.6.17

Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது


Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

Seniority & Periority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது

Seniority (மூப்புரிமை) 
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.

Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.

மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.

எங்கே?

அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?

காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)

நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்

“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்

“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.

Meeting is always a pleasure
Parting is always painful

மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is common to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)

சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.
ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.

கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான்
அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான்.  நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.

மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.

மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.

பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.

மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.

அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?

தெரியும்.

அதைப் பற்றிய விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வந்தது.. இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக தனி இணைய தளத்தில் எழுதியுள்ளேன்!!! அந்த  இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளத்தில் இது போன்ற மேல் நிலைப் பாடங்கள் பலவற்றை எழுதியுள்ளேன்!!!!

மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதிய பாடங்கள் அனைத்தும் அதில் வந்துள்ளன!!!.

பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது நீங்கள் அனைவரும்  படித்துப் பயன் பெறலாம்!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.17

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?


உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

உறவினர்கள், நண்பர்கள், என்று நம்மைச் சுற்றியுள்ள சிலர் செல்வத்திலும், செல்வாக்கிலும் திளைக்கிறார்கள் அமோகமாக இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்கள் போல முன்னுக்கு வரமுடியவில்லை என்று நமக்கு ஆதங்கமாக இருக்கும். என்ன முயன்றாலும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. அல்லது தெரிந்து கொள்ள முடியாது.

அதிக புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்கூட லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். BMW காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் அது எப்படி சாத்தியப் படுகிறது?

கவியரசர் பாடலில் எழுதிவைத்துவிட்டுப்போனார்:

   “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
          வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!”

ஆகவே நமது புத்திசாலித்தனம், திறமை எல்லாம் சம்பாதித்து செல்வம் சேர்ப்பதில் செல்லாது போய்விடும்.

வாத்தியார் சொல்வதுபோல பைப் மற்றும் அண்டா கதையா? அதாவது 2ம் வீடும் 11ம் வீடும் வலிமையாக இருக்கும் அமைப்பினாலா?

இல்லை! அதற்கும் மேலான ஜாதக அமைப்பு உள்ளது!

அவர்களுக்கும் 337தான். நமக்கும் 337தானே!  முகேஷ் அம்பானிக்கும் 337தான் நரேந்திர மோடிக்கும் 337 தானே! இப்படி எல்லாம் குழப்பம் வரும்!

ஜாதகத்தில் கிரக அமைப்பு, அஷ்டகவர்க்க அமைப்பு இவைகளையும் தாண்டி இன்னொன்றும் உள்ளது. அதுதான் யோகங்கள். அதுபோல பணத்திலும் செல்வாக்கிலும் உச்சத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால் அவர்களுடைய ஜாதகங்களில் ஏராளமான யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இரண்டு அல்லது மூன்று நல்ல யோகம் இருந்தால்கூட அந்த நிலைமை உண்டாகும்

In Astrology, the word, Yoga, that has been derived from the Sanskrit root, Yuj, meaning to join properly, to control judicially or to integrate, has been used to indicate the Soli-Lunar distances, and the planetary situations, associations and combinations.
As per Jyotisa a Yoga is given rise to when one planet, sign or house is related to another of the same kind or different kind by way of placement, aspect or conjunction. 

ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது ராஜயோகம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

Raja yogas are Shubha ('auspicious') yogas that give success and a grand rise in career or business, and a greater degree of financial prosperity particularly during the dasha of the planets that give rise to Raja yogas.

அதுபோல கஜகேசரி யோகம், மாலையோகம், லக்‌ஷ்மி யோகம் என்று இன்னும் பல யோகங்கள் உள்ளன.

ஜாதகத்தைப் பார்த்துபலன் சொல்பவர்கள் கண்ணுக்கு புத ஆதித்த யோகம், சசி மங்கள் யோகம் போன்ற முக்கியமான சில யோகங்கள்தான் தென்படும். எல்லா யோகங்களும் தென்படாது.

சரி எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது. அது எதனால் - எந்த கிரக அமைப்பால் உண்டானது? அதன் பலன் என்ன? அநதப் பலன்கள் எப்போது கிடைக்கும் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

திருக்கணித ஜாதகத்தை 35 பக்கங்கள் வரும்படி கணித்தால், கடைசி 2 பக்கங்களில் மேற்கூறிய விபரம் எல்லாம் இருக்கும்!

எனக்கு எழுதுங்கள். உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தைக் கணித்து PDF  கோப்பாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அது இலவச சேவையல்ல. நான் பணம் கொடுத்து வாங்கிய மென்பொருளில்தான் கணிக்க வேண்டும். சிறிது கட்டணம் உண்டு.

ஆகவே விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள்!
My email ID for this service 
spvrsubbiah@gmail.com

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.17

Astrology எப்போது சாமி திருமணம் நடக்கும்?


Astrology எப்போது சாமி  திருமணம் நடக்கும்?

சிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும்  கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.

நண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம்? நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு  மட்டும் தாண்டா பாக்கி!”

என்ன செய்வது? தர்ம சங்கடமாக இருக்கும்!

நான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.

இத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்
-----------------------------------------------------------------------------------------------------
சிவஸ்தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
அங்கே உறையும் இறைவனின் பெயர் அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவியின் பெயர் கோகிலாம்பாள்
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

முகவரி
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609813

காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.

திருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.17

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வருந்தாதீர்கள்!!!!


வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வருந்தாதீர்கள்!!!!

Money is not everything in life!

This is the awesome message i have read till date its really eyeopener

A boat is docked in a tiny Mexican fishing village. 

A tourist complimented the  local fishermen on the quality of their fish and asked how long it took to catch them.  

"Not very long." they answered in unison. 

"Why didn't you stay out longer and catch more?" 

The fishermen explained that their small catches were sufficient to meet their needs and those of their families.  

"But what do you do with the rest of your time?" 

"We sleep late, fish a little, play with our children, and take siestas with our wives.  In the evenings, we go into the village to see our friends, have a few drinks, play the guitar, and sing a few songs.   

We have a full life." 

The tourist interrupted, 

"I am an MBA from Harvard and I can help you!You should start by fishing longer every day.You can then sell the extra fish you catch.With the extra revenue, you can buy a bigger boat." 

"And after that?" 

"With the extra money the larger boat will bring, you can buy a second one and a third one and so on until you have an entire fleet of trawlers. Instead of selling your fish to a middle man, you can then negotiate directly with the processing plants and maybe even open your own plant.  

You can then leave this little village and move to  Mexico City , Los Angeles , or even  New York City !  

From there you can direct your huge new enterprise." 

"How long would that take?"   

"Twenty, perhaps twenty-five years." replied the tourist.   

"And after that?"    

"Afterwards?  Well my friend, that's when it gets really interesting," answered the tourist, laughing.  "When your business gets really big, you can start buying and selling stocks and make millions!"      

"Millions?  Really?  And after that?" asked the fishermen.  

"After that you'll be able to retire, live in a tiny village near the coast, sleep late, play with your children, catch a few fish, take a siesta with your wife and spend your evenings drinking and enjoying your friends." 

"With all due respect sir, but that's exactly what we are doing now.  So what's the point wasting twenty-five years?" asked the Mexicans. 

 And the moral of this story is:  

Know where you're going in life, you may already be there!  Many times in life, money is not everything. 

“Live your life before life becomes lifeless”.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.6.17

நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!


நாமும் நமது முன் வாழ்க்கையும்!!!

👉 25 வருடங்களுக்கு முன் 👈
.
👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..!👈
.
👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈
.
👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈
.
👉 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்டச் செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!👈
.
👉 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!👈
.
👉 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டிக் கொண்டு சென்றோம்..!👈
.
👉 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!👈
.
👉 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!👈
.
👉 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!👈
.
👉 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!👈
.
👉 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!👈
.
👉 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!👈
.
👉 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!👈
.
👉 14. காணும் பொங்கலுக்கு உறுவுகளைப் பார்த்தோம்..!👈
.
👉 15. திருடனைப் பிடிக்க ஊரே ஓடியது..!👈
.
👉 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!👈
.
👉 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்குப் பயந்தோம்..!👈
.
👉 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!👈
.
👉 19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.👈
.
👉  முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..! 👈
👉  இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...! 👈

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.17

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்!

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்! 

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!
----------------------------------------------------------------
This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.17

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்!

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.6.17

Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!


Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது

அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.

எதற்கு சிரமம்?

முன்பொருமுறை  வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள் நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.

அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம். விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்! ஆகவே அப்போது அதைச் செய்யவில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத் தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari)  காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக் கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.

வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்  வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.

அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம் ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.

ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.

இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.

அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.

அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின் மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்

இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள் நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால் அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))

அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு பிறகு எழுதுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.6.17

நக்கல்கள் சிலவிதம்!


நக்கல்கள் சிலவிதம்!

நக்கல் என்றால், கிண்டல், கேலி என்று பொருள்படும். உங்கள் மொழியில் சொன்னால் ‘லொள்ளு’ என்றும் சொல்லலாம். இங்கே ஒருவரி நக்கல்கள் சிலவற்றைத் தொகுத்துக்கொடுத்திருக்கிறேன். சொந்த சரக்கல்ல. இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லை. தனிதமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். மன்னிக்கவும். எது மிகவும் நன்றாக உள்ளது என்று பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லவும்.

இதை நகைச்சுவைக் கணக்கில் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!!!!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++==============

1.Regular naps prevent old age, especially if you take them while driving.

2 Having one child makes you a parent; having two you are a referee.

3 Marriage is a relationship in which one person is always right and the other is the husband!

4 I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash.

5 A child's greatest period of growth is the month after you've purchased new school uniforms.

6 Don't feel bad. A lot of people have no talent.

7 Don't marry the person you want to live with, marry the one you cannot live without, but whatever you do, you'll regret it later.

8 You can't buy love, but you pay heavily for it.

9 Bad officials are elected by good citizens who do not vote.

10 Laziness is nothing more than the habit of resting before you get tired.

11 Marriage is give and take. You'd better give it to her or she'll take it anyway.

12 My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.

13 Those who can't laugh at themselves leave the job to others.

14 Ladies first. Pretty ladies sooner.

15 A successful marriage requires falling in love many times, always with the same person.

16 You're getting old when you enjoy remembering things more than doing them.

17 It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.

18 Real friends are the ones who survive transitions between address books.

19 Saving is the best thing. Especially when your parents have done it for you.

20 Wise men talk because they have something to say; fools talk because they have to say something

21 They call our language the mother tongue because the father seldom gets to speak!

22 Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but then the thought of long life will never come.

23 Why do couples hold hands during their wedding? It's a formality just like two boxers shaking hands before the fight begins!

24 Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.

25 It's funny when people discuss Love Marriage vs Arranged. It's like asking someone, if suicide is better or being murdered.

26 There is only one perfect child in the world and every mother has it.

27 There is only one perfect wife in the world and every neighbor has it!
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.17

Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!


Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!

சனீஷ்வரன் எவ்வளவு பெரிய ஆள்? அவரை எப்படி சட்டைப் பைக்குள் வைக்க முடியும்?

புறங்கால்களைச் சரியாகக் கழுவாமல் தன் கோவிலுக்குள் நுழைந்தவனை சனீஷ்வரன் ஆட்டிவைத்த கதை எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட  சனீஷ்வரன் எங்கே வேண்டுமென்றாலும் நுழைந்து அமர்ந்து கொள்வார்.

ஆனால் சட்டைப் பைக்குள் அல்லது உங்கள் மணிபர்சில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து அமரவைப்பது நீங்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

புரியும்படியாகச் சொல்லவா?

கடன் அட்டை என்னும் குட்டி சனீஷ்வரனைத்தான் அப்படிச் சொல்கிறேன்.

கடன் அட்டைக்கு என்ன விளக்கம்?

கீழே கொடுத்துள்ளேன்.

A credit card is a small plastic card issued to users as a system of payment. It allows its holder to buy goods and services based on the holder's promise to pay for these goods and services. The issuer of the card creates a revolving account and grants a line of credit to the consumer (or the user) from which the user can borrow money for payment to a merchant or as a cash advance to the user.

எனக்குத் தெரிந்து கடன் அட்டை வைத்திருக்கும் மனிதர்களில் 90% பேர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தகாத பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டவன் போல விழி பிதுங்க முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால், அந்தப் பெண்ணை உதறவும் முடியாது. அவளை வைத்துக்கொண்டு தீனி போடவும் முடியாது.

உங்களில் எத்தனை பேர்கள் அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றீர்கள் என்று தெரியாது.

இதை விழி பிதுங்க முழித்துக்கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. இதுவரை மாட்டிக்கொள்ளாதவர் கள் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில்
வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப் பிரச்சினையும் வராது.

கடன் அட்டையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். கட்டுரையின் நீளம் கருதி இரண்டொரு வரிகளில் மட்டும் எழுதுகிறேன்.

1. கடன் அட்டையைப் பெற்றுக் கொள்வது சுலபம். நீங்கள் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் போதும். அதற்கான சான்றிதழைக் கொடுத்தால் போதும்.

2. ஆண்டுக்கு ஆண்டு உங்களுக்குப் பணம் கிடைக்கும் வரம்பை ஏற்றிக் கொண்டே இருப்பார்கள்.

3. சிரங்கு வந்தவனுக்கு, சொறிவது இன்பமாக இருக்கும். அதுபோல கார்டைக் கையில் வைத்திருப்பவனுக்கு அதைப் பயன் படுத்துவது சுகமாக இருக்கும். கடன் சுமை அதிகமாகி மாட்டிக் கொண்டு விழிக்கும்போதுதான் அவஸ்தையாக இருக்கும். மீண்டு வரவே முடியாது. சிக்கிக்கொண்டு விடுவான்.

4. வட்டிவிகிதம் 3% (மாதத்திற்கு) ஆண்டிற்கு 42% அளவில் இருக்கும். அந்த அளவு வட்டி விகிதம் வேறு எங்கேயும் கிடையாது (கந்து வட்டிக்காரனிடம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் மீட்டர் வட்டிக் காரனிடம் இருக்கும்) உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.

5. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அட்டை மூலம் செலவழித்த அல்லது வாங்கிய கடன் ஐம்பதாயிரம் என்று வைத்துக் கொண்டால், அந்தப்  பணம்  இரண்டாண்டு காலத்தில் வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் கடனாகிவிடும். செட்டி தூங்கினாலும், வட்டி தூங்காது என்பார்கள். கடன்

அட்டையின் வட்டி புற்று நோயைப்  (cancer) போன்றது. கவனிக்காமல் விட்டால் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் பரவத்துவங்கிவிடும். வளரத்துவங்கிவிடும்.

6. அட்டைக்கான காப்பீட்டுத்தொகை, விபத்தில் அட்டைவைத்திருப்பவன் இறந்துபோனால், தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்பதற்கான காப்பீட்டுத்தொகை, அதற்கான பிரிமியம் என்று மாதாமாதம் ரூ.75:00ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். அத்துடன் சேவை
வரியாக 15% சேர்ந்து கொள்ளும்.

7. உங்கள் கடன் தொகையுடன் மேலே உள்ள அத்தனை கருமங்களையும் ஒன்றாகக் கூட்டிப் போட்டு, வரும் தொகையில் 5% மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும் என்பார்கள். அங்கேதான் சிக்கல். கடன் சுமை கூடுவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதாவது  உங்களின் தகாத உறவுக்காரிக்கு வயிற்றில் குழந்தை உண்டாவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். தெரிந்த பிறகு கூடுதலாகப் பிரசவச்
செலவு, பிறந்த குழந்தையை வளர்க்கும் செலவு என்று அவள் உங்களை மேலும் படுத்தி எடுப்பாள்.

8. ஒவ்வொரு மாதமும்18ஆம் தேதி உங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பட்டியலை முறையாக அனுப்பி விடுவார்கள். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை நீங்கள் அதற்கடுத்த மாதம் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மறந்து விட்டாலோ அல்லது செலுத்தத் தவறினாலோ அபராதமாக சுமார் ரூ.250:00 உங்கள் கணக்கில் ஏறிவிடும்.

9. ஒருவன் அவனுக்கு சிரம திசை (கேடான தசா புத்திகள் ஆரம்பிக்கும்போதுதான் கடன் அட்டையை வாங்கிப் பையில் வைப்பான்.17 ஆண்டுகளோ அல்லது 19 ஆண்டுகளோ என்று சிரம திசை முடிந்தாலும், இந்தக் குட்டிச் சனி மட்டும் விலகாது.

10. கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனால் ஏற்படும் கடன் சுமையை, அந்தந்த மாதமே தவணையன்று முழுமையாகச் செலுத்தி எப்போதுமே கடன் அளவை ஜீரோ இருப்பில் வைத்திருப்பது மட்டுமே புத்திசாலித் தனமாகும். இல்லை என்றால் சிக்கல்தான்

இங்கே எந்த அட்டையையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக உள்ள பிரச்சினைகளைத்தால் சொல்லியிருக்கிறேன். அதை மனதில் கொள்க!

சரி, மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வருவது எப்படி? அதற்கு வழி உண்டா?

உண்டு!

Option 1

அரசுடமை வங்கிகளில் - புறநகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில், நகைகளின் பேரில் விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே - நன்றாகக் கவனிக்கவும் ஆண்டுக்கு 7% சதவிகிதம் மட்டுமே.(It is also simple interest)  இந்திiயாவில் வேறு எங்கும் இந்த வட்டிக்குக் கடன் கிடைக்காது.

ஒரு பவுனுக்கு ரூ.10,000:00 தருவார்கள். உங்களுடைய கடன் அட்டைக் கடன் ரூ 50,000:00 என்று இருப்பதாக வைத்துக்கொண்டால், ஐந்து பவுன் நகையை அங்கே (அரசுடமை வங்கிகளில்) அடமானம் வைத்துப் பணத்தை வாங்கி, ஒரே நாளில் கடன் அட்டைக் கடனை முழுமையாக அடைப்பதுடன், அட்டையைத் திரும்பக் கொடுத்துவிட்டு (surrender) அல்லது Cancel  செய்யச் சொல்லிவிட்டு, சுமையை இறக்கிவிட்டுவிடலாம்.

அவர்களுக்கு மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையை, அரசுடைமை வங்கியில் செலுத்தினால் 20 மாதங்களில் அதுவும் தீர்ந்துவிடும். நகையும் வீட்டிற்குத் திரும்பிவிடும்

Option 2

அடமானம் வைப்பதற்கு நகைகள் இல்லை என்னும் சூழ்நிலையில்,

1. இன்று முதல் அந்த அட்டையைப் பயன் படுத்துவதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள்.

2. மொத்தக் கடனில் 5% சதவிகித்தை நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். உபரியாக அவர்கள் வசூலிக்கும் சர்வீஸ் கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்திக்கொண்டே வாருங்கள். முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். 20 மாதங்களில் அட்டைக் கடன்
மொத்தமும் தீர்ந்து விடும்

அதற்கு முழுக்குப்போட்டு விடுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.6.17

அன்றே சொன்னது அருமையாக உள்ளது!


அவ்வையார் என்றால் நமக்கெல்லாம் சட்டென்று நினைவிற்கு வருவது கே.பி.எஸ் அவர்கள்தான். அதனால் அவர்கள் படத்தையே இங்கே கொடுத்துள்ளேன்!!!!
----------------------------------------------------------------------------------------------------------
அன்றே சொன்னது அருமையாக உள்ளது!

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது
வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைக் கொடுத்துள்ளேன்.  படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்
-----------------------------------------------------------------------
நல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை  என்ன ஆகும்?

நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது
அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.

முதலில் பாடலைப் பாருங்கள்:

“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”
- ஒளவையார்

நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக!

இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள்  கொள்ளுங்கள்.

சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும்  சூதாட்டங்கள் (betting)  என்று பொருள் கொள்ளுங்கள்

பேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும்  செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள்  கொள்ளுங்கள்

மற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில்
சொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.6.17

குடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்?


குடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்?

தெய்வம்> ஊர் காவல் தெய்வம் > குலதெய்வம்> குடும்ப தெய்வம்!!!

அடடா, தெய்வங்களில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆமாம்......சாமி.....ஆமாம்!
------------------------------
சிறுதெய்வம் என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மக்கள் தம் குறை நீக்கும் தெய்வம் என்ற விளக்கத்தைத் தருகிறது

நாட்டுப்புற மக்கள் என்றும் நாட்டார் என்றும் தொடர்ந்து ஒரே மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கின்ற சொற்களையே பயன்படுத்தி, நாட்டுப்புற தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று சிறு தெய்வங்களைக் கூறுகின்றார்கள்.  தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.

சிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.

குடும்ப தெய்வம்-

குடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.

தெய்வாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை அல்லது வீட்டைக் கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.

குலதெய்வம் :

குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.

ஊர் தெய்வம்:

ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து வணங்கும் தெய்வம் என்று இதை எடுத்துக்கொள்ளுங்கள்
-------------------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு  வருகிறேன்:

நாங்கள் எப்போது தேவகோட்டைக்குச் சென்றாலும், அருகில் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவனாலயத்திற்குச் சென்று அங்கே உறைந்திருக்கும் எங்கள் குடும்ப தெய்வத்தை வணங்கிவிட்டு வருவது தொன்று தொட்ட வழக்கம். தொன்று என்பது 100 ஆண்டுகளுக்கு மேலானது என்பதை மனதில் வையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு - 1910ம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் தாத்தாவின் முதல் மனைவி - அவருக்கு அப்போது 14 வயதுதான். பால்ய விவாகம் - அதாவது பத்து வயதில் திருமணம். மனைவியின் பெயர் உமையாள் (உமையவள் - பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.)

அந்த உமையாள் என்ற பெண், தனது 14 வயதில் புஷ்பதியான போது, காய்ச்சல் வந்து இறந்துபோய் விட்டார். அந்தப் பெண்மணியின் ஆத்மா சாந்தியடையாமல் தான் பிறந்த வீட்டையும், வாழ்க்கைப் பட்ட எங்கள் வீட்டையுமே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அனைவரும் கலக்கமடைந்து போய்விட்டார்களாம்.

ஒரு பெரிய ஜோதிடரை அழைத்துவந்து பிரசன்னம் பார்த்ததில் - அவர் இவர்கள் சொல்லாமலேயே சொல்லிவிட்டாராம்.  ஒரு கன்னி தெய்வம் இந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு பதுமை செய்து, ஒரு நல்ல நாளில் அருகில் உள்ள சிவன் கோவிலில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்து விடுங்கள். அவள் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என்றாராம்

அதன்படி ஐம்பொன்னில் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பதுமை ஒன்றைச் செய்து, மேள தாளத்துடன் இரு வீட்டாரும் பதுமையை சகல மரியாதையுடன் தூக்கிச் சென்று - எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டூர் சிவனாலாத்தில் வைத்து விட்டு வந்து விட்டார்கள்.

தேவகோட்டை நகரச் சிவன் கோவில் என்றால் - உள்ளூர் கோவில் - எல்லா மக்களுக்கும் பொதுவான கோவில். அங்கே வைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கும் உடன் பங்காளிகளுக்கும் சொந்தமான கோவில் என்பதால் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயிலைத் தேர்ந்தெடுத்து அங்கே வைத்துள்ளார்கள்.

அந்தப் பதுமை இன்றும் அந்தக் கோவிலின் கருவறைக்கு அருகே அர்த்த மண்டபத்தில், ஈஷ்வரனை வணங்கும் கோலத்தில் இருக்கிறது..

பதுமை{:
Tamil-lexicon
doll {verb noun }
idol {noun }

பட்டில் சிற்றாடை தைத்துக் கொண்டுபோய் அந்தப் பதுமைக்கு அணிவித்து, மல்லிகைப் பூ மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வைத்து சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு வருவது எங்கள் வழக்கம். இன்று இரு வீட்டையும் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகள் அனைவரும் பய பக்தியுடன் வணங்கி விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்!!!!.

உங்களின் பார்வைக்காக அந்தப் பதுமையின் படத்தைக் கீழே பதிவிட்டுள்ளேன்.



பதுமையின் முகத்தில் என்னவொரு மலர்ச்சி பாருங்கள்!

கண்ட பயன் என்ன?

மன மகிழ்ச்சி, மனத் தெம்பு இரண்டும் கிடைக்கிறது!!!! வாழ்வில் பல நல்ல காரியங்கள் நடந்துள்ளன!!!

அதைவிட வேறு என்ன வேண்டும்?
---------------------------------
இரவில் படுக்கும்போது காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அதுபோல எழுகிறோம். எழுவதற்கு யாரும் கியாரண்டி தரமுடியுமா என்ன? அதை ஆண்டவன் அல்லவா தரவேண்டும்!!!

ஆகவே இந்தக் கட்டுரையில் உள்ள செய்தியை படித்தபின்பு நம்பிக்கை வையுங்கள்.  குல தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லையா? நோ மேட்டர் உங்கள் அவ நம்பிக்கையை கடாசி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். உங்கள் அவநம்பிக்கையை பின்னூட்டமாக இடாதீர்கள்!!!!

இது வேண்டுகோள்
-------------------------------------
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!