மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 811 - 820. Show all posts
Showing posts with label Lessons 811 - 820. Show all posts

30.7.14

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

 

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

புதிர் எண் 64ற்கான விடை

30.7.2014


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை?”

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் அதீத தாமதமாகி அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.






கும்ப லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சனீஷ்வரன் 11ல். அது நல்ல அமைப்பு.
ஏழாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம் பெற்று வலுவாக உள்ளார். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் உள்ளார்.
ஏழாம் வீட்டின் மேல் குரு பகவானின் பார்வை (9ஆம் பார்வை)
ஆகவே இந்த அமைப்புக்களால் ஜாதகருக்குத் திருமணம் நடைபெற வேண்டும். நடைபெற்றது.

ஆனால் அதீத தாமதமாக அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது. அதுவும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக விவாகரத்தான பெண்மணி ஒருவரை விரும்பி மணந்து கொண்டார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது.

தாமதத்திற்குக் காரணம்:
களத்திரகாரகன் சுக்கிரனும் சனீஷ்வரனும் சேர்ந்து இருப்பது தீமையானது.தடையானது. அதீத தாமதத்திற்கு அது ஒரு முக்கிய காரணம். சுக்கிரனின் மேல் உள்ள வேறு 3 கிரகங்களின் ஆதிக்கத்தால் அவர் ஒரு விவாகம் ரத்தான பெண்ணை மணந்து கொள்ள நேரிட்டது.
28 வயதில் துவங்கிய சந்திர திசையில் அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. சந்திரனுடன் லக்கினாதிபதி, சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் ஆகிய மூவருக்குமே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் 34 வயதில் துவங்கிய எழரைச் சனியின் பாதிப்பால் சிக்குண்ட அவருக்கு 41வயதுவரை திருமணம் நடைபெறவில்லை.

கோள்சார சனி மிதுனத்திற்கு வந்தவுடன் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) தனது பாதிப்புக்களை விலக்கிக் கொண்டு ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார். அவருடன் சேர்ந்து இருக்கும் சுக்கிரனும் அதற்கு உதவி செய்தார்.

தசாநாதன் சந்திரனாக இருந்து ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனியின் பிடியில் இருந்தால், அந்தக் காலகட்டத்தில் நன்மையான மேட்டர்கள் எதுவும் நடக்காது. அதை மனதில் வையுங்கள்
----------------------------------------
போட்டியில் மொத்தம் 22 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 2 பேர்கள் மட்டும் தாமதத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். (******* )அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
******** ///////Blogger Srinivas said...
    The native is born on 30-Nov-1960 at around 12.20pm, considering chennai as birth place.
    1. Lagnathipathi Shani is in 11th house with 2nd and 11th lord Guru and yogakaraka and bhagyathipathi Sukran.
    Grahayutham in 11th house. Chevvai (in Vagram) is aspecting lagnathipathi, Sukran and lagnathipathi.
    2. Lagnam has Maandhi and ketu and Maandhi is aspecting 7th house. So this would have caused delays 2nd house lord Guru is aspecting 3rd house, 5th and 7th house.
    7th house lord Suryan is in 10th house.
    3. Yogakaraka Sukran is aspecting 5th house (purva punya sthanam).
    Marriage of the native would have got delayed. The native might have got married in Chandra dasa
    or chevvai dasa.

    Tuesday, July 29, 2014 9:44:00 PM/////

--------------------------------------------
********* /////Blogger Manikandan said...
    திருமணம் நிச்சயமாக நடைபெற்று இருக்கும்.
    1. லக்கணாதிபதி, குடும்ப ஸ்தானாதிபதி , களத்திர காரகன் மூவரும் கூட்டணியாக 11.ல்.
    2. களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் 10-ம் வீட்டிலும் , வர்கோதததமம் பெற்றும் உள்ளார்.
    ஆனால்,
    ராகு மற்றும் கேது வின் ஆதிக்கம் 7-ம் வீட்டில் + செவ்வாய் பார்வை மூவர் கூட்டணி மீது.
    செவ்வாய் மற்றும் சனி நேர் பார்வை தாமத / காதல் திருமணத்திற்கு காரணமாய் இருக்கிறது.
    Tuesday, July 29, 2014 11:13:00 PM//////
===============================================

1
//////Blogger karthi said...
    thirumanam nadanthu irukkum
    7 m idathirkku guruvin parvai irukku
    7 m aathi suriyan 10 il irukkinrar
    kalathirakaraganudan guruvum lagnathipathi sanium ullarkal
    Tuesday, July 29, 2014 7:23:00 AM/////

-----------------------------------------
2
/////Dallas Kannan said...
    Respected Sir
    Not sure if it is trick question.
    Since you ask us to only answer to the question, I am not going to say anything about Rahu being in 7th house or Sukra/Mars Parivarthanai in navamsa...
    He is definitly married. He got married after 21 in Sun dasa.
    1. 7th lord sun is in kentram, friends house and vargothamam.
    2. Lknathipathi in 11th house/uchham in Navamsa
    3. 2nd/11th lord in his own 11th place and looks at 7th house.
    Tuesday, July 29, 2014 9:29:00 AM/////

--------------------------------------------
3
/////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got marriage from other religion (Rahu is in seventh house)
    2. But Marriage life is not satisfied he got Divorcee / Widow.
    Sukran is join with Virayathipathee Saturn.
    Regards
    Rm.Srithar
    Tuesday, July 29, 2014 10:38:00 AM/////

-----------------------------------------
4
/////Blogger seethalrajan said...
    குருஜி வாணக்கம்,
    லக்னாதிபதி 11ல் உடன் பாக்யாதிபதி சுக்ரன் அதுமட்டுமா ஆட்சி பெற்ற குருவும் அங்கேயே அமர்ந்து இருக்கிறார், மிக மிக சிறப்பான அமைப்பு.
    7ல் ராகு இருந்தாலும் எந்த பதிப்பும் இருகாது இந்த அன்பருக்கு, ஏனெனில் அந்த வீட்டு அதிபதி 10ல் பலமாக அம்ர்ந்து இருகிறார் அதுவும் வர்கோத்துவம் பேற்று அத்துடன் குரு பார்வை 7ம் வீட்டுகு கிடைக்கிறது. ஒரே ஒரு குறை சூரியன் லக்னாதிபதிக்கு 2/12 அமர்ந்து இருபதுதான். அதாலால் மறு திருமணம் நடைபெறும்.
    மனைவி அரசங்க அதிகரியா இருபார். சூரிய திசையிலெ திருமணம் நடை பெற்று இருகும். நன்றி
    Tuesday, July 29, 2014 10:40:00 AM/////
----------------------------------------------
5
//////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!
    புதிர் எண்: 64 இற்கான பதில் !!!
    குறிப்பிடப்பட்ட அன்பர் கும்ப லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி லாபஸ்தானத்தில் லாபாதிபதி குருவுடன். லக்கினாதிபதி சனி, யோகம் மற்றும் களத்திரகாரகன் சுக்கரனுடன் கிரக யுத்தம். இருந்தாலும் ஏழாமதிபதி சூரியன் நட்பு வீட்டில் மற்றும் வர்கோதமத்தில். முதல் நிலை கேந்திரவீடான பத்தாம் வீட்டில். மேலும் முதல் நிலை சுபகிரகம், மற்றும் குடும்பஸ்தானாதிபதி குருவின் ஒன்பாதம் விசேச பார்வையில் ஏழாம் வீடு.ஏழில் ராகு இருந்ததால் தார தோஷம். இவை அனைத்தும் இருந்தாலும் ஏழாமதிபதியின் (சூரியன்) திசை 28 வயது வரை உள்ளது. சூரிய திசை சுக்கர புத்தியில் 28 ஆம் வயதில் திருமணம் நடைபெற்று இருக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு !!!!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 29, 2014 10:58:00 AM/////
--------------------------------------------------
6
/////Blogger Sakthivel K said...
    dear sir.
    அன்பருக்கு திருமனம் நடந்திருக்கும்
    சூரியதிசையில் நடந்திருக்கும்
    2ம் அதிபதி குரு 11ல் ஆட்சி!
    குரு 7ம் இடத்தை பார்வை செய்கிரது
    7 ம் அதிபதி 10ல் திக்பலம் !!!
    5 ம் அதிபதி 9ல் பாக்யவான் !!!
    k.sakthivel
    Tuesday, July 29, 2014 11:02:00 AM/////
---------------------------------------------------------
7
//////Blogger amuthavel murugesan said...
    திருமணம் நடைபெற்று இருக்கும்.
    1. 7 ஆம் இடத்து அதிபதி 10ல் , குருயின் 9 ம் பார்வை 7 ம் வீட்டின் மேல்.களத்திரகாரன் 11 ல் இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    இப்படிக்கு
    மு.சாந்தி
    Tuesday, July 29, 2014 11:58:00 AM/////
----------------------------------------------
8
/////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் நமது வகுப்பறை சார்பாக,ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதக அன்பருக்கு
    திருமணம் நடை பெற்றுள்ளது.
    அவருடைய சந்திர தசா குரு புக்தியில் சுக்கிரன் அந்தரத்தில் அவருடைய 30 வயதிற்க்கு மேல் திருமணம் நடந்துள்ளது.    அலசல்:
    1). கும்ப லக்னமாகி,லக்னாதிபதி சனி 11ல், அந்த வீட்டதிபன் ஆட்சி பெற்ற குருவுடனும்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் கூட்டணி.அத்துடன் லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதியான சனியின் பார்வை.
    2). ஏழாமிடத்தில் ராகு இருப்பினும்,இரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற குருவின் பார்வை திருமணத்தை நடத்தி வைத்துள்ளது.
    3). லக்கின அதிபதி 11ல். 2ம் பதி 11ல். களத்திரகாரகன் 11ல். 7ம் பதி சூரியன் உச்ச கேந்திரமான 10ம் வீட்டில்.
    நன்றியுடன்,
    பொன்னுசாமி.
    Tuesday, July 29, 2014 12:11:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger bg said...
    பிறந்த நாள் நவம்பர் 30 1960
    திருமண நடைபெற வாய்ப்பு உள்ளது.
    7 ஆம் அதிபதி சூரியன் பத்தில்.
    தன் (சூரியன்) திசையில் நடத்தி வைப்பார்.
    மேலும் குரு ஏழாம் வீட்டை பார்க்கிறார்.
    காரகன் மற்றும் யோகாதிபதி சுக்கிரன் 11 இல் உடன் லாபாதிபதி மற்றும் 2 ஆம் இடத்து அதிபதி குரு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் உள்ளார்.
    மேலும் 10 இடத்தின் அதிபர் 5 இல் இருந்து 11 ஆம் இடத்தை பார்க்கிறார்.
    Tuesday, July 29, 2014 12:46:00 PM////
----------------------------------------------
10
//////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    7இல் ராகு இருந்தாலும் 7க்குடைய சூரியன் ராசியில் கேந்திரமாகிய 10மிடதில் மற்றும் வர்கோதமம், லக்னாதிபதி சனி ராசியில் யோகாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்பாதிபதியும் லபாதிபதியும்மான குருவுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை அத்துடன் நவாம்சத்தில் உச்சம். ஆகவே திருமணம் நிச்சயம் சற்று தாமதமாக நடந்திருக்கும். அதாவது இந்த ஜாதகருடைய 27வது வயதில் சூரிய திசை சுக்கிரன் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். காரணம் செவ்வாயின் பார்வையில் சனி, குரு, சுக்கிரன் மற்றும் அயன சயன போக ஸ்தானம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 29, 2014 4:11:00 PM/////
-----------------------------------------------------
11
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 64 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கும்ப லக்கின ஜாதகரான இவருக்கு,
    லக்னாதிபதியான சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் குடும்ப ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் இருப்பதாலும் களத்திர ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைப்பதாலும் அவருடைய 27 வது வயதில் திருமணம் ஆகி இருக்கும்.
    Tuesday, July 29, 2014 4:39:00 PM//////
----------------------------------------------
12
//////Blogger murali krishna g said...
    அய்யா ,
    அன்பர் அஸ்வினி-4. கேது நட்சத்திரம். மேஷா ராசி கும்ப லக்னம். அன்பருக்கு நிச்சயம் திருமணம் உண்டு! லக்னத்தில் கேது ஏழில் ராகு.இருந்தாலும் 11-ல் இருந்து இரண்டாம் அதிபதியான குரு தன்னுடைய ஆட்சி வீடான தனுசில் இருந்து ஏழாம் வீட்டை ஒன்பதாம் பார்வை பார்க்கிறார். வலுவான பார்வை. அவர் லக்னாதிபதி சனியுடனும் களத்திர காரகன் சுக்கிரனுடனும் கூட்டு வேறு ! அவனே திருமணத்தை நடத்தி முடிப்பான் !. ஏழாம் அதிபதி சூரியன் கேந்திரத்தில் நல்ல ஷட்பலத்துடன் இருக்கிறார். ராகு சூரியனின் வீட்டில் வலிமை குறைந்து காணப்படுகிறார் !. நவம்சத்தில் ஏழில் சனி இருந்தாலும் அவர் உச்சம் பெற்று இருக்கிறார் !. அதனால் திருமணம் நிச்சயம் உண்டு !
    எப்போது என்றால் சூரிய தசையில் குரு அல்லது சுக்கிர புக்தியில் நடந்திருக்கும் !
    Tuesday, July 29, 2014 6:51:00 PM//////
-------------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
    இந்த அன்பர் 30 நவம்பர் 1960, பகல் 12மணி 24 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடத்தினை சென்னை என்றே எடுத்துக்கொண்டேன்.
    ஜாதகத்தின் சிறப்புக்கள்:
    லக்கினாதிபதி சனைச்சரன் 11ம் இடத்தில் இருப்பது.
    குடும்ப ஸ்தானதிபதி குருபகவான் 11ம் இடத்தில் இருப்பது.
    யோககாரகனும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 11ல் நிற்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை 7ம் இடத்திற்கு இருப்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை சந்திரனின் மேல் இருப்பது.
    ஏழாம் அதிபன் சூரியன் கேந்திரம் ஏறி 10ல் நின்றது.
    ஜாதகத்தின் எதிர்மறைகள்:
    லக்கினத்திலேயே கேதுவும் மாந்தியும் நின்றது.
    ஏழாம் இடத்தில் ராகு நின்றது.
    12ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை
    லக்கினாதிபதியை செவ்வாய் பார்ப்பது.
    களத்திரகாரக‌னை செவ்வாய் பார்ப்பது.
    எட்டாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை.
    எட்டம இடத்திற்கு சனியின் பார்வை.
    இந்த ஜாதகருக்கு 28 வயதில் திருமணம் சந்திர தசா சந்திரபுக்தியில்.
    40 வயதில் செவ்வாய் தசா சனிபுக்தியில் மண முறிவு.
    Tuesday, July 29, 2014 7:42:00 PM//////
----------------------------------------------
14
/////Blogger praba karan said...
    அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,
    இது என்னுடைய முதல் முயற்சி. தவறு(கள்) இருப்பின் மன்னிக்கவும். classroom2007-ல் 170வது பாடப்பகுதி வரை படித்துள்ளேன். தெரிந்த ஜோதிட அறிவை வைத்து என்னுடைய பதிலைப் பதிவுச்செய்துள்ளேன்.
    I.திருமணம் நடக்கும். ஆனால் தாமதமாகும்.
    திருமணம் நடப்பதற்கான அமைப்புகள்:
    1. 7-ஆம் அதிபதி சூரியன் நன்மை பயக்கும் ராசிகளில் ஒன்றான விருட்சகத்தில் இருப்பது.
    2. சுக்கிரனும்,குருவும் சேர்ந்து 11 ஆம் வீட்டில் இருப்பது.
    3. 7-ஆம் வீட்டின் மீதுள்ள குருவின் 9-ஆம் சிறப்புப்பார்வை.
    4. வர்த்தக்கோமம் ஆகியுள்ள 7-ஆம் அதிபன்.
    தாமதமான திருமணத்திற்குக் காரணங்கள்:
    1. 7இல் உள்ள ராகு மற்றும் லக்கனத்திலிருந்து 7-ஆம் பார்வையைச் செலுத்தும் கேது.
    2. சனியின் பிடியில் உள்ள சுக்கிரனும்,குருவும் மற்றும் அம்சத்தில் 7-ல் உள்ள சனி.
    II.திருமணம் சூர்ய மஹா தசை ,குரு அல்லது சுக்கிர புக்தியில் நடக்கும்.
    இதுவரை வகுப்பின் வெளியிலிருந்து உங்களின் பாடங்களை உங்களின் அனுமதியின்றிக் கவனித்துவந்தேன். என்னுடைய முதல் வருகையைப்பதிவுச் செய்து வகுப்பைத் தொடர தங்களின் அனுமதியை வேண்டிக்கொள்கிறேன்.
    இங்கனம்,
    உலோ.பிரபாகரன்
    Tuesday, July 29, 2014 8:06:00 PM/////
----------------------------------------------
15
/////Blogger thozhar pandian said...
    7ல் இராகு, 7ம் வீட்டு சூரியன் அந்த வீட்டிற்கு 4ம் வீடான 10ல் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 11ல், 7ம் வீட்டிற்கு 5ல் இருக்கிறார். 2ம் வீடான குடும்ப ஸ்தான அதிபதியான குரு பகவானும் 11ல் களத்திரகாரகருடன் இருக்கிறார். இருப்பினும் களத்திரகாரகருக்கும், குரு பகவானிற்கும், சனி கூட்டும், செவ்வாயின் பார்வையும் உள்ளது. ஆனால் சனி இலக்கினாதியும் கூட. 1ல் மாந்தியும் கேதுவும் 7ல் இராகுவும் உள்ளனர். இதனால் ஜாதகருக்கு திருமணம் சூரிய மகா தசையில் சுக்கிர புத்தியில் நடந்திருக்கும்.
    Tuesday, July 29, 2014 10:28:00 PM//////
--------------------------------------------
16
/////Blogger Laksh Mannan said...
    திருமணம் நடை பெற்றிருக்கும்..
    23,24 வயதில்....
    குரு வின் 9பார்வை 7ஐ பார்ப்பதால்...
    Tuesday, July 29, 2014 10:34:00 PM//////
----------------------------------------
17
/////Blogger C Jeevanantham said...
    Dear sir
    The person got married two times minimum. 2nd lord is with sukran and sani. 7th place rahu. Multiple marriage and not satisfied.
    Tuesday, July 29, 2014 11:39:00 PM/////

--------------------------------------------------------
18
//////Blogger Ajith M S said...
    ஏழாமிடத்தில் ராகு இருப்பினும் யோகாதிபதியான சுக்கிர சாரம் பெற்றும் குடும்பாதிபதியான குருவின் (ஆட்சி பலத்துடன் இருக்கிறார்) பார்வையைப்பெற்ற ராகு திருமணத்திற்கு இடையூறு செய்ய மாட்டார்.. வாழ்க்கைத்துணை வழியே சிற்சில பிரச்சனை அல்லது சிறு பிரிவு இருந்திருக்கக்கூடும்
    குடும்பாதிபதி, யோகாதிபதி மற்றும் லக்னாதிபதி லாபத்தில் நிற்பதால் மிக இளைய வயதில் திருமணம் ஆகி இருக்கும்.. இள வயதில் வந்த சுக்கிரதசை 21 வயது முடிய.. சுக்கிரதசை முடிவதற்குள் திருமணம் ஆகி இருக்கும்..
    Wednesday, July 30, 2014 12:01:00 AM//////
------------------------------------------------
19
//////Blogger Narayanan V said...
    kandipaka suriya thisaiyil thirumanam nadanthirukum
    Wednesday, July 30, 2014 12:09:00 AM//////

-------------------------------------------
20
///////Blogger sivaradjane said...
    ஐயா வணக்கம்..
    லக்கினத்தில் மாந்தி.உடன் கேது ,7 ல் ராகு. 7 ம் அதிபதி சூரியனும், சுக்கிரன் ,குரு, லக்னாதிபதி சனி ஆகியோர் 1 -12 நிலையில் கிரக யுத்தத்தில் உள்ளனர். இவர்களின் மேல் 'செவ்வாயின் பார்வையும் உள்ளது.
    ஆயினும் 7 - ம் அதிபர் சூரியன் 'வர்கோத்தமம்' அடைந்து வலுவாக உள்ளார். அம்சத்தில் சூரியனும் ,களத்திரகாரகன் 'சுக்கிரனும் ஒன்றாக உள்ளனர். லக்கினாதிபதி 'சனியும் அம்சத்தில் உச்சமாக உள்ளார். மேலும் 7 ம் வீட்டை 'குரு' தன் விசேஷ 9 - ம் பார்வையால் பார்க்கிறார்.
    ஆகவே இந்த ஜாதகருக்கு சூரிய திசையில் திருமணம் நடந்திருக்கும் . இது காதல் திருமணமாக இருந்திருக்கும்.
    sivarajan
    (pondicherry)
    Wednesday, July 30, 2014 1:40:00 AM/////
============================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.7.14

Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

 
Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

Quiz No.64: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி நான்கு

29.7.2014


Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.7.14

Astrology: சுகங்களுக்கு அத்தாரிட்டி யார்?

 

Astrology: சுகங்களுக்கு அத்தாரிட்டி யார்?

Popcorn Post No.48


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம். தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.7.14

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

 

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

புதிர் எண் 63ற்கான விடை

23.7.2014

நேற்றையப் பதிவில், பிரபலமான ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.



கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. யாருடைய ஜாதகம்?
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன?
------------------------------------
சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1.அன்னை சாரதா தேவி அவர்களின் ஜாதகம் அது. 22.12.1853 ஆம் தேதியன்று மேற்கு வங்கத்தில் ஜயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அவர்.
நேரம் மாலை 7.15 மணி

2.அவருடைய ஜாதகத்தில் 5ஆம் வீட்டில் கேது. உச்சம் பெற்ற கேது. ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரச யோகம் அல்லது ஆண்டி யோகம் என்று அடிக்கடி சொல்வேன். அதைவைத்து முன்பு ஒருமுறை பதிவு ஒன்றையும் எழுதியுள்ளேன். அவர் பெண் துறவியானதும்,  பகவான் ராமகிஷ்ணருக்கு மனைவியாகி, துறவியாகி பணிவிடை செய்த்ததும், அன்னை என்று அவருடைய சீடர்களால் மட்டுமல்ல. அனைவராலும் அழைக்கப்பெற்று புகழ்பெற்றதும் அதனால்தான். கேதுவுடன் கூட்டாக இருக்கும் 3ஆம் இடத்து அதிபதி (வெற்றி ஸ்தான அதிபதி) புதனின் பங்காற்றலும் அதற்கு ஒத்துழைத்தது என்றால் மறுப்பதற்கில்லை. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கிய காரணம் 5ல் உள்ள கேது மற்றும் புதனின் ஆதிக்கம்.
----------------------------------------

போட்டியில் மொத்தம் 19 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்  12 பேர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுயிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger Dallas Kannan said...

    Mother Jayrambati alias Sarada Devi.
    1. Kadaha laknam - Leaders Laknam
    2. Laknathipathi and yogakaraha both joined together in friends house. Kendrathipathi and konathipathi togther itself good yogam. They give Sasi-Mnagala yogam too. Guru's look adds more strength
    3. Uchha kethu and budan in 5th house. Kethi in 5, will give samrajyam or sanyasam. She got the second one.
    4. Sukra looks at Lakna
    5. Sukra and Sani parivarthanai.
    Looks like we can keep going on the greatness. I have listed what I can see quickly. Hope I covered all important ones.
    Tuesday, July 22, 2014 6:25:00 AM//////

------------------------------------------------------
2
/////Blogger Sivachandran Balasubramaniam said..
.
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் எண்: 61 இற்கான பதில் !!!
    உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகம் - holy mother என்று அழைக்கப்பட்ட சுவாமி ஸ்ரீ சாரதாதேவி அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி). ஸ்ரீ சாரதாதேவி அம்மா அவர்கள் 22.12.1853 இல் மேற்குவங்காளத்தில் ஜெயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 5 வயதிலேயே குழந்தை திருமணம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஷருடன் செய்தாலும் லௌகீக வாழ்வில் ஈடுபடவில்லை.தியானம், இறைவழிபாடு, போதனை, கணவர்சேவை, ஞானம் இப்படி இவர் வாழ்ந்த 66 ஆண்டு வாழ்வில் பெரும்பாலும் ஞான வாழ்வே வாழ்ந்தார். ஜாதகப்படி அதற்கான காரணங்கள்.
    முதலில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஞானவாழ்விற்கு மிக முக்கியம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும், லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்ததால் இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
    ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு 11இல் வக்கிர நிலையில் மற்றும் 7ஆம் வீட்டில் சுக்கரன், ( காரகன் பாவநாசம் ), மேலும் வக்கிர சனி மற்றும் சுக்கரன் பரிவர்த்தனை யோகத்தில். இரண்டில் செவ்வாய். இவை அனைத்தும் அம்மா அவர்களுக்கு திருமணம் மற்றும் லௌகீக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிட்டன.
    ஆதியோகம்/ கூர்ம யோகம்: லக்கினம் / சந்திரனுக்கு 5,6, 7 இல் நன்மை செய்யக்கூடிய கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே லக்கினத்திற்கு 5இல் புதன், 6இல் குரு, 7இல் சுக்கரன். சந்திரனுக்கு5 இல் குரு, 6ல் சுக்கரன் இருக்கிறார்கள். இதனால் ஒரு துறையில் அதிக ஈடுபாடும், ஞானமும், தலைமை தாங்குதல், வழிநடத்துதல் போன்றவற்றை செய்ய வைத்தது.
    சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டது. புத்தி காரகன் புதன் 5இல் (கோணத்தில்) உடன் ஞானகாரகன் கேதுவும் உச்சமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால். ஆழ்ந்த சிந்தனை, ஞானம், உலகஅறிவு,ஞானம் போதித்தல் இவற்றில் ஈடுபடவைத்தது.
    மேலும் 3,6,8,12 வீடுகளின் பரல்களும் 110 (27.5 சராசரி) உள்ளதால் பற்றற்ற உலகியல் வாழ்க்கையை கொடுத்தது.
    தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
    தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
    இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
    ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
    கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.இந்த ஜாதகத்தில் சுக்கரன், சனி பரிவர்த்தனை, சனியும் கேதுவும் பரஸ்பரபார்வையில் உள்ளதால் அம்மா அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட வைத்தது.
    சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு - அம்மா அவர்களின் ஜாதகத்தில் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று திரிகோணத்தில். இது ஒரு சிறப்பான அமைப்பு.
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 22, 2014 11:42:00 AM//////
------------------------------------------
3   
//////Blogger Chandrasekharan said...

    Respected Sir,
    This horoscope belongs to : Sri Sri Maa "Sarada Devi" born 22/Dec/1853.
    Jadhagathil Sani and Sukran Parivarthanai. 11-il 8-m adhipathyudan amarndha Raghu and 5-il kedhu-udan amarndha budhan aanigathil idupathai koduthargal.
    Thank You.
    Tuesday, July 22, 2014 12:29:00 PM/////

------------------------------------------
4
/////Blogger bg said...

    அன்னை சாரதா தேவி.
    பிறந்த நாள் : 22.12.1853
    மேன்மைகள்
    1.கேது உச்சம் + 5 ஆம் இடத்தில் உள்ளார்.
    2. லக்கினாதிபதி + யோகாதிபதியுடன் இணைந்து 2 இல் உள்ளார்.
    அந்த இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறார்.
    3. மேலும் லக்கினாதிபதி + யோகாதிபதி + குரு+ சூரியன் திரிகோண அமைப்பில் உள்ளார்.
    4. ஆட்சி பெற்ற குரு ஆறில் இருந்து 12 அம் இடத்தை பார்க்கிறார்.
    5. 12 ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்ற கேதுவுடன் இணைந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.
    6. நவாம்சத்தில் குரு உச்சம். அம்சத்தில் சனி ஆட்சி.
    7.சுக்கிரன் 7 இல் இருக்கிறார். மேலும் அம்சத்தில் 12 இல் இருப்பது இல்லறத்தை துறந்து துரவறம் செல்ல காரணம்.
    Tuesday, July 22, 2014 12:41:00 PM////
---------------------------------------------
5
//////Blogger GOWDA PONNUSAMY said...

    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் உடல் நலன் விரைவில் சீரடைந்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்.
    1).கொடுக்கப் பட்டுள்ள ஜாதகம் அன்னை சாரதா தேவி அவர்களுடையது.
    சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் துணைவியார்.
    2). ஜாதகத்தின் மேண்மைக்கு முக்கியமான காரணம், லக்கினத்திற்க்கு 5ல் கேது பகவான் 12க்கு அதிபதி புதனுடன் கூட்டணி.
    ”ஐந்தில் கேது அரசனா? ஆண்டியா?” என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பாடமே இதன் விளக்கம்.

    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Tuesday, July 22, 2014 1:02:00 PM//////
---------------------------------------------
6
//////Blogger Selvam Velusamy said...

    இது 22-12-1853ல் பிறந்த அன்னை ஸ்ரீ சாராத தேவி (ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி) அவர்களின் ஜாதகம்.
    இந்த ஜாதகத்தில் மேன்மையான அமைப்பு என்னவெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்ச காரகன் கேது பகவான் உட்சம் பெற்றுள்ளார். அதனால்தான் அன்னை அவர்கள் ஆன்மிகத்தில் ஒரு உயரிய இடத்தை பெற முடிந்தது. 5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூரியதுதானே. அத்துடன் லக்னாதிபதி சந்திரன் பூர்வபுன்னியதிபதி செவ்வாயுடன் சேர்க்கை கூடவே பாக்கியாதிபதி குருவின் பார்வையுடன்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 22, 2014 3:27:00 PM/////
----------------------------------------------------------
7
/////Blogger Ravichandran said...

    Ayya,
    Please find my findings.
    22 Dec 1853
    Sarada Devi
    1. Ketu placed in 5th house person will be living as king or Andi(Sanniyasi). She got Sanniyasi position following Ramakrishna devotee.
    2. She got Gnanam, because Ketu is Uccham and along with Bhudhan(rules for intelligence)
    3. Shani and Sukra Parivarthanai - Marriage life is not good.
    4. Shasi Mangla Yogam - Yogakaran and lagna owner sitting in second house. Due to that, she born in good family.
    5. Rahu is in 11th house is good placement, but Rahu is in Neecham.
    6. Shani is in 11th house. It is good placement for Shani. So she got lot of spiritual followers.
    Your Student,
    Trichy Ravi
    Tuesday, July 22, 2014 5:55:00 PM/////

-------------------------------------------
8
//////Blogger Chandrasekaran Suryanarayana said...

    QUIZ NO.63 வணக்கம்
    22/12/1853 அன்று கல்கட்டாவில் பிறந்தவர் சாரதாதேவி அம்மையார். திரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி ஆவார்.
    கடக லக்கினத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    ஜாதகரின் மேன்மைக்கு காரணம்.
    1. நவாம்சத்தில் குரு உச்சமாக‌ அமைந்துள்ளது.
    2. அவ‌ருடைய 5ம் வயதில் சந்திர தசையில் ஆன்மீகத்தில் வாழ்க்கையை தொடங்கினார்.உச்சமான குருவின் 9ம் பார்வை சந்திரனின் மீது இருப்பதை காணலாம்.
    3. தனுசு ராசியில் 6ம் வீட்டு அதிபதி குரு அமர்ந்து அவருடைய பார்வை 2ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி சந்திரனை 9ம் பார்வையால் பார்ப்பதாலும், 5ம் பார்வை 10ம்வீட்டில் பார்பதாலும், 7ம் பார்வை 12ம் வீட்டில் பார்ப்பதாலும் ஜாதரின் சிறந்த ஆன்மீக வாழ்க்கைக்கு குரு துனையாக இருந்தார்.
    4. அவருடைய வாழ்க்கை தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தியாகம் செய்ததற்க்கு காரணம் லக்கினாதிபதி சந்திரன் 2ம் வீட்டில் அம‌ர்ந்து லக்கினத்தை 12ம் வீடாக அமைந்தது. (1/12 நிலை).
    5. 7ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது பார்ப்பதால் வசீகரமான தோற்றத்தை வழங்கி ஆன்மீக சேவையால் மக்களை கவரும் சக்தி அடைந்தார்.
    6. 5ம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவும், புதனும் அவருக்கு ஆன்மீக வழிக்கு உதவியாக இருந்தது. 3ம் வீட்டு அதிபதி புதன் 5ம் வீட்டில் அமர்ந்தது விசேஷமாக அமைந்துள்ளது.
    7. கல்விக்கான 4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து குருவின் 9ம் பார்வை பெற்று சந்திரனுடன் சேர்ந்து சசிமங்கள யோகத்தை அடைந்துள்ளார். அதனால் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைத்தது.
    8. குருவும், சூரியனும் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டை பார்ப்பதால் மக்களுக்கு ஆன்மீக வழியில் சேவை செய்யும் அமைப்பை பெற்றார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, July 22, 2014 7:36:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger Kirupanandan A said...

    அன்னை சாரதா தேவி அவ‌ர்களின் ஜாதகம். அவர் ஜாதகத்தில் ஞான/ மோட்ச காரகன் கேது புத்தி ஸ்தானமான 5ல் புத்திகாரகன் புதனுடன் இணைந்து உச்சமாக இருக்கிறார். அதனால் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்தார். 9ம் அதிபதி குரு ஆட்சியாகி ஆத்மகாரகன் சூரியனுடன் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம்.
    Tuesday, July 22, 2014 7:58:00 PM/////
------------------------------------------
10
//////Blogger S.Namasu said...

    மதிப்பிற்குரிய அய்யா,
    ஜோதிட புதிர் போட்டி எண் 63க்கான எனது கணிப்பு:-
    1.அன்னை சாரதாதேவின் ஜாதகம்.(பிறந்த தேதி 22-டிசம்பர்-1853)[ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துனைவியார்].
    2.ஜாதகத்தின் மேன்மைக்கான காரணங்கள்:-
    *கடக லக்கினம், சிம்ம ராசி, லக்கன அதிபதி "சந்திரன்" யோகக்காரனான "செவ்வாயுடன்" 2ம் வீட்டில் (சந்திர மங்கள யோகம்}உள்ளார்.
    *லக்கனத்திற்கு ராகு உடன் சேர்ந்த வக்கிர சனின் 3ம் பார்வை.(7&8ற்கு அதிபதி) மேலும் வேறு எந்த கிரக பார்வையும் இல்லை.
    *5ம் இடத்தில் உச்சம் பெற்ற "கேது"உடன் 12.3 க்கு அதிபதியான புதன் வலுவான நிலையில் உள்ளார்.கேது ஞானகாரகன் ஆகையால் துறவு வாழ்க்கைக்கு வித்திடும்.இதுதான் முக்கியமான காரணம்.
    *2ம் இடத்து அதிபதி "சூரியன்" 6ம் இடத்தில் அதிபதி "குரு"உடன் இனைந்து உள்ளார்.குருவின் 9ம் பார்வை 2ம் இடத்தின் மீது உள்ளது.இதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் பொதுசேவையில் ஈடுபட்டார்.
    *7ம் இடத்தில் களத்திர காரகன் "சுக்கிரன்" உள்ளார் இது காரகோபாவநாசா ன்படி காரகம் நன்றாக இருக்காது.
    * மேற்கண்ட காரனங்களால் இந்த ஜாதகம் மேன்மையானது.
    சுபம்.
    Tuesday, July 22, 2014 10:20:00 PM/////
------------------------------------------------
11   
//////Blogger Srinivas said...

    1. The horoscope is of Sri Sri Maa Sarada Devi who was born on 22nd December, 1853 in the evening time (6-8pm IST).
    She is the wife and spritual counterpart of Ramakrishna Paramahamsa.
    2.
    a. Lagnathipathi Moon is placed in 2nd house with yogakarakka Chevvai (lord of 5th and 10th houses). Shashi mangala yogam.
    Yogakarakka Chevvai aspects 5th, 8th and 9th house in this chart.
    b. 7th and 11th house lords (saturn and venus respectively) are in parivathanai.
    c. Ketu is along with 12th and 3rd lord Mercury in the chart which indicates spritual inclination. Yogakaraka aspects Ketu and budhan.
    d. 9th and 6th house lord is in 6th house along with 2nd house lord Sun. It indicates involvement in religious activities.
    Guru is uchham in navamsa. Saturn is in its own house in navamsa.
    e. As 2nd lord and 9th lord is in 6th house, the marriage life wasn't like regular marriage. Saturn aspects 5th house which has ketu and 3rd and 12th lord mercury and hence the native didn't have any kids.
    Wednesday, July 23, 2014 12:16:00 AM//////

---------------------------------------------
12
//////Blogger ravichandran said...

    Respected Sir,
    My answer for our today's Quiz No.63:
    1) The native of the given horoscope is Holy Mother Saradha Devi. Born on 22.12.1853.
    2) The special aspect of this horoscope is Lagna lord Moon associated with(fifth, tenth house as well as) Yoga karaga Mars and getting Jupiter(associated with Sun) aspects. This leads to Great Sanyacha yoga as well as blessed fame and many disciples.
    Reasons:.
    i) Moon and Mars associated in second house and getting jupiter aspects in second house as well as tenth house. This will give spritual work and fame.
    ii) In fifth house, Kedhu and Mercury are there and getting MArs aspects. This is also one of the reason for involving spritual life.
    iii) Saturn and Rahu is associated in eleventh house and aspecting fifth house.
    iv) In sixth house, Jupiter is sitting in its own house along with second house lord Sun. It gave lot of followers to her.
    v) In fifth house, Kedhu and Mercury are there and getting aspects of Saturn and Rahu as well as Mars aspects. These are caused to lose her "Ego" and leaded her to guide other people. (public service)
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, July 23, 2014 1:18:00 AM/////

====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.7.14

Astrology: quiz.63: கொடுத்துள்ள ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்னவென்று சொல்லுங்கள்!!





Astrology: quiz.63: கொடுத்துள்ள ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்னவென்று சொல்லுங்கள்!!

பகுதி அறுபத்திமூன்று

22.7.2014

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பிரபலமானவரின் ஜாதகம்.




1. யாருடைய ஜாதகம் என்பதைக் கண்டு எழுதுங்கள்
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன? என்பதையும் எழுதுங்கள். அதுதான் முக்கியம்

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

2 கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

இன்று இணையத்தில் உங்களுக்குப் பல வசதிகள் உள்ளன. ஆகவே யாரென்று கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.7.14

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

 

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
(துள்ளாத)

பாடலாக்கம். கவிஞர் பட்டுக்கோட்டை பி. கல்யாணசுந்தரம்.
படம்: படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர்: ஜிக்கி

----------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, மூன்று கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அன்பர் உயர் கல்வி கற்றவர். முதுகலைப் பட்டப்படிப்பு வரை படித்தவர். அதற்கு மேலும் வேறு துறைகளில் படித்தவர்.
2. அன்பர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்டை பிரம்மச்சாரி.
3. சுயதொழில் செய்பவர்.self employed. உடல் உழைப்பு, மூளை, பத்திசாலித்தனம் ஆகிய 3 மட்டுமே மூலதனம்!

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. கன்னி லக்கினக்காரர். லக்கினாதிபதி புதன் 12ல். விரையம் ஏறி உள்ளார். ஆகவே ஜாதகரின் வாழ்க்கை அவருக்குப் பயன்படாது. அவரது
உறவினர்களுக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்.

2. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் சூரியன்.
மறுபக்கம் கேது. அது ஜாதகருக்கு, லக்கினாதிபதி 12ல் இல்லாமல் இருந்தாலும்நன்மை செய்யக்கூடிய அமைப்பு அல்ல!

3. ஆறாம் அதிபதி (வில்லன்) சனி கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன்னுடைய நேரடிப்பார்வையில் வைத்துள்ளான். அத்துடன்
களத்திரகாரகன் 12ல். மேலும் கிரகயுத்ததில். 2ல் மாந்தி குடும்ப வாழ்க்கைக்குக் கேடானது. இம்மூன்றும் சேர்ந்து ஜாதகருக்குத் திருமண வாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன. அதாவது இல்லறவாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன.

4. ஏழாம் அதிபதி குருவை, எட்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் கட்டிப்போட்டிருக்கிறான். லக்கினாதிபதியை 12ஆம் வீட்டுக்காரன் சூரியன்
கட்டிப்போட்டிருக்கிறான். ஆறாம் வீட்டுக்காரன் லக்கினத்தையே செக்கில் வைத்திருக்கிறான். ஆக இந்த 3 அமைப்புக்களுமே மோசமானது. ஆகவே
ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை இல்லை. ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டு கட்டை பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்.

5. பத்தாம் அதிபதி புதன் 12ல். ஆகவே ஜாதகர் வேலைக்கும் செல்லவில்லை. வியாபாரமும் செய்யவில்லை. சுய தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

6. வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு அறிவுபூர்வமாக வாதாடும் திறமையை கொடுத்துள்ளான்.

7. சூரியனும் புதனும் சேர்ந்துள்ளதால் ஜாதகர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அரசு சம்பந்தப்பட்ட செயல்களை
செய்து  கொடுத்துக்கொண்டிருக்கிறார். (அரசாங்க வேலையில்
இருப்பவர் அல்ல) அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்குப் போதுமானதாக இருப்பதால்மகிழ்ச்சியோடு தன் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

8.ஜாதகத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் சந்திரன் உச்சம் பெற்று
முக்கியத் திரிகோண வீடான 9ஆம் வீட்டில் இருக்கிறார். ஜாதகரின்
 மன நிலைமிகவும் வலிமை பெற்றது அதனால்தான். எதையும்
தாங்கும் இதயம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் அந்த வீட்டுக்காரன் 12ல் மறைந்தாலும்அமர்ந்த காரணத்திற்காக சந்திரன் அவருக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.

9. ஜாதகருக்கு 9 வயது முதல் 27 வயதுவரை ராகு திசை. எட்டாம்
இடத்து ராகுவால் அந்த திசை நன்மையானதாக இருக்கவில்லை.
அதற்குப் பிறகுவந்த குரு திசை, ஜாதகருக்கு அவருடைய சுய
தொழிலில் நன்மைகளைச் செய்தது. ஜாதகரின் நிதி நிலமையை ஸ்திரப்படுத்தியது. குரு பகவான்உச்சம் பெற்றிருப்பதோடு, லாபத்தில் அமர்ந்திருப்பதையும் கவனியுங்கள்.

10. நீசமான செவ்வாய் உச்சமான குருவோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளான். எட்டாம் அதிபதிக்கு ராஜ யோகம் கிடைத்து என்ன
பயன்? எட்டாம் வீட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும். பஸ்ஸில் நின்று கொண்டே போகாமல் உட்கார்ந்து கொண்டு போகலாம்.
அவ்வளவுதான்!

11. நான்காம் வீட்டுக்காரன் உச்சம். அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும்
உச்சம் பெற்றதற்கான பலனில் பாதியாவது உண்டு. அதைவிட
முக்கியமாகஅவர் உயர்கல்விக்கு உரிய இடமான ஐந்தாம் வீட்டைத் தன்னுடைய நேர் பார்வையால் பார்க்கிறார். ஆகவே அவர் ஜாதகருக்கு
உயர் கல்வி கற்கும்வாய்ப்பைக் கொடுத்தார். வித்யாகரகன் புதன் 4ஆம் வீட்டிற்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் அவரும் கல்விக்கு உதவினார். அத்துடன் அவர்நவாம்சத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் உள்ளார். ஆகவே ஜாதகர் முதுகலைப் பட்டம் வரை படித்துத் தேறினார்.

12. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதியும் லக்கினமும் கெட்டிருந்தால், அவைகள் பயன்படாது. அதை மனதில் வையுங்கள்

வரும் ஆனால் வராது’ என்று சொல்வதற்கு உதாரண ஜாதகம் இது. ஜோதிடம் நன்றாகத் தெரிந்தவர்களையே கவிழ்க்கக்கூடிய ஜாதகம் இது!

அ) ஏழாம் வீட்டுக்காரன் குரு உச்சமாக இருக்கிறான். அத்துடன் தன் வீட்டைப் பார்க்கிறான். ஆனாலும் ஜாதகனுக்குத் திருமணம் ஆகவில்லை ஏன்?

லக்கினாதிபதியும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.அதுபோல களத்திரகாரனும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.ஆகவே திருமணம் ஆகவில்லை
----------------------
ஆ) திருமணம் ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

ஜாதகத்தில் புனர்பூ தோஷம் உள்ளது. சந்திரனின் மேல் வில்லன்
சனியின் விஷேசப் பார்வை. அத்துடன் 2ல் மாந்தி குடும்பம் நடத்த விடமாட்டான்.ஜாதகரைத் தள்ளிக்கொண்டு போய்விடுவான்.
மனைவியுடன் அருகில் இருந்து குடும்பம் நடத்தியிருக்க மாட்டார்!
------------------------------
இ) ஜாதகர் ஏன் வெளி நாடு செல்லவில்லை?

கடல் கடப்பதற்கு ஒன்பதாம் வீட்டுக்காரான் முக்கியம். இங்கே
அவன் 12ல் இருக்கிறான். 9ஆம் வீட்டுக்காரன் 12ல் இருந்தால் வைத்தியத்திற்காகமட்டுமே வெளி நாடு செல்ல முடியும்.
உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஜாதகங்கள்.
-----------------------------
ஈ) ஜாதகர் ஏன் அரசு உத்தியோகத்திற்குச் செல்லவில்லை?

சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் அந்த அமைப்பு உண்டென்பது
பொதுவான விதி (Rule). ஆனால் இங்கே அவர்கள் 12ல் இருப்பதால்
அது  நடக்கவில்லை.

அலசல் போதுமா?
-------------------------------------------------------
நமது மாணவர் டல்லாஸ் கண்ணன் குறிப்பிட்டுள்ளதுபோல இது கஷ்டமான தேர்வுதான்!

மொத்தம் 35 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்
ஒருவர்கூட 3 கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதவில்லை.
ஆகவே கலந்துகொண்டவர்களில் 2 பதில்களைச் சரியாக அல்லது 
சரியான பதிலையொட்டி எழுதிய 9 பேர்களைத் தேர்வு செய்கிறேன். அவர்களுக்கு எனது மனம்உவந்த பாராட்டுக்கள்

அவர்களின் பெயர்கள்:
1. R.Venkatesh
2. C.Jeevanantham
3. S.N.Ganapathi Nataraja
4. Seethalrajan
5. Chandrasekaran Suryanarayana
6. Venkat Lakshmi
7. Thangaraj
8. Manikandan

9. Srinivas

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.7.14

Astrology: quiz.62: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்!

 

Astrology: quiz.62: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்!

Quiz No.62: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியிரண்டு

9.7.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பரின் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டையும், 7ஆம் வீட்டையும், 10ஆம் வீட்டையும் ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


1.
ஜாதகரின் கல்வி பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? அல்லது படிப்பைப் பாதியில் விட்டவரா? ஆராய்ந்து எழுதுங்கள்.

2
ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

3.
ஜாதகருக்கு என்ன தொழில்? அரசாங்க உத்தியோகமா? அல்லது தனியார் நிறுவனத்தில் வேலையா? வியாபரமா? அல்லது சுய தொழிலா? என்ன செய்கிறார் என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கான காரணத்தையும் எழுதுங்கள்

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

3 கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.7.14

Astrology: quiz 61: Answer: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே!

 
Astrology: quiz 61: Answer: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே!


கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலயே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே…

உன்னை உன்னை தேடுதே
கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே!

பாடலாக்கம். கவிஞர் பட்டுக்கோட்டை பி. கல்யாணசுந்தரம்.
படம்: நாடோடி மன்னன். (1958)
இசை எஸ் எம் சுப்பையா நாயுடு

-----------------------------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1.  அம்மணி உயர் கல்வி கற்றவர். முதுகலைப் பட்டப்படிப்பு படித்தவர்.அதற்கு மேலும் படித்தவர்.

2. அம்மணிக்கு 29 வயதில் திருமணம் நடந்தது. நல்ல வரன் கிடைத்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கை கிடைத்தது.

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!


1. ஜாதகி கும்ப லக்கினக்காரர். லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரத்தில், நட்பு வீட்டில் வலுவாக இருக்கிறார். இந்த அமைப்பு கும்ப லக்கினக்காரர்களுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தரும் அமைப்பாகும்.

2. லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகமும் உள்ளது. சுபகர்த்தாரி யோகமும் உள்ளது. சுபகர்த்தாரி யோகம் 3 சுப கிரகங்களின் அமர்வால் வலிமையாக உள்ளது. பாபகர்த்தாரி யோகத்தை அவைகள் ஓரம் கட்டிவிட்டன!

3. பெண்களுக்கு கும்ப லக்கினம் மிகவும் மேன்மைகளை உடைய லக்கினமாகும். பூர்ண கும்பத்தைப் போல எல்லா நல்ல குணங்களையும்
கொண்டவர்களாக இருப்பார்கள்.

4. கும்பலக்கினத்திற்கு யோககாரகனான சுக்கிரன் (4ஆம் வீட்டிற்கும், 9ஆம் வீட்டிற்கும் உரியவன்) உச்சம் பெற்று 7ஆம் வீட்டுக்காரனான சூரியனுடன் சேர்ந்து இருப்பது, ஜாதகிக்குப் பலவிதத்திலும் நன்மையாக அமைந்தது.

5. பெண்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் முக்கியமானதாகும். இங்கே அதன் அதிபதி உச்சம் பெற்றதால், ஜாதகிக்கு எல்லா நன்மைகளும்
அவரைத் தேடி வந்தன!

6. சந்திரன் + செவ்வாய் சேர்க்கையால் சசி மங்கள யோகம். குரு + சந்திரன் சேர்க்கையால் குருச் சந்திர யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன.
யோகங்கள் 12ல் அமைந்திருந்தாலும், பலன் இல்லாமல் போகுமா?

7. 12ஆம் வீட்டில் மாந்தி அமர்ந்திருந்தாலும், உடன் இருக்கும் 2 சுபக்கிரகங்களால் அவரின் வீரியம் குறைந்து விட்டது.

8. காலசர்ப்ப தோஷம் இருப்பதால், 30 வயதிற்கு மேல்தான் யோகங்கள்.
அது ஒரு குறை. ஆனாலும் 30 வயதிற்கு மேல் அதுவே யோகமாக
மாறுமே,அதனால் அதைப் பொறுத்துக்கொள்ளலாம்.

9. 4ஆம் வீட்டுக்காரன் உச்சம். வித்யாகாரகன் எந்தவித கெட்ட
சாவகாசமும் இல்லாமல் முதல் வீட்டில் (திரிகோணத்தில்).
அத்துடன் 4ஆம் வீட்டின்மேல் குரு பார்வை. இவை அனைத்தும்
சேர்ந்து ஜாதகியை நன்கு படிக்க வைத்தன. She is a post graduate

10. ஏழாம் வீட்டுக்காரன் சூரியன் நட்பு வீட்டில். உடன் களத்திரகாரன் சுக்கிரனின் கூட்டணி. அவன் (சுக்கிரன்) யோககாரனும் ஆவான்.
ஆகவேஅவர்கள் இருவரும் சேர்ந்து ஜாதகிக்கு நல்லபடியாகத் திருமணத்தைச் செய்து வைத்தார்கள்.

11. முக்கோணப் பரிவர்த்தனை. சனி வீட்டில் குரு. சுக்கிரன் வீட்டில்
சனி. குரு வீட்டில் சுக்கிரன். பரிவர்த்தனையால் அந்த 3 கிரகங்களுமே
வலிமைபெற்றுள்ளன.

12. ஆனாலும் தாமதமாக, அதாவது 29 வயதில் திருமணம் நடந்ததற்குக் காரணம் என்ன?

ஜாதகிக்கு அவருடைய 29ஆவது வயதில்தான் அதாவது 28 ஆண்டுகள்,
ஆறு மாதங்கள் கழிந்த பிறகுதான், ராகு மகா திசை முடிந்த பிறகுதான்
நல்ல காலம் ஆரம்பித்தது. ஆகவே அவருடைய திருமணம்
தாமதமானதும் ஒரு நன்மைக்குத்தான். ராகு மகா திசையில்
செய்திருந்தால் பிரச்சினைகள்உண்டாகியிருக்குமே சாமிகளா?

7ஆம் வீட்டின் மீது செவ்வாயின் பார்வை இருப்பதும், திருமணம் தாமதமானதற்கு ஒரு காரணம். அவர் 12ல் அமர்ந்திருப்பதைக்
கவனியுங்கள்.

குரு பகவான் 2ஆம் வீட்டிற்கு உரியவர். அவர் தன்னுடைய மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்
கொடுத்தார்.

9ஆம் அதிபதியை வைத்து மிகவும் அதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்ன வேண்டும்?

அலசல் போதுமா?

சென்ற வாரம் சரியான விடையை எழுதியவர்களில் சிலர் இந்த வாரம் தவறான விடையை எழுதியுள்ளார்கள்.

4ல் சனி இருப்பதை வைத்து ஜாதகிக்குப் படிப்பு வராது என்று நினைத்திருக்கிறார்கள். மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு 
சனி அதிபதி. ஆகவே அவன் தனக்குத்தானே அல்லது தன்னுடைய
 லக்கின ஜாதகனுக்கு எப்படிக் கேடு செய்வான்? அத்துடன் அவன் 
தன்னுடைய பத்தாம் பார்வையாக லக்கினத்தைப் பார்க்கிறான். 
அவன் ஜாதகியின் படிப்பிற்கு இடையூறு செய்யவில்லை. 
அதை மனதில் வையுங்கள்.

போட்டியில் 23 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
8  பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.அவர்களின் பெயரும் பின்னூட்டமும்கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம்
உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
///////Blogger S.Namasu said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா, ஜோதிட புதிர் போட்டி எண் 61 ற்கான எனது கணிப்பு:-
    ஜாதகி படித்தவர்.
    லக்கின அதிபதி "சனி" 4ம் இடத்தில், மற்றும் 10ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார். மேலும் "நீசபங்க ராஜயோக குரு"வின் 5ம் பார்வையினை பெறுகிறார். மற்றும் கல்விகாரகன் "புதன்" லக்கினத்தில் உள்ளதனால் ஜாதகி படித்தவர். (குரு பார்பதனால் சட்ட படிப்பிற்கான வாய்ப்பு)
    ஜாதகிக்கு 31:5:10 வயதிற்கு மேல் குரு தசையில் தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.
    7ம் இடத்து அதிபதி "சூரியன்" உச்சம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனுடன் இணைந்து 2ம் இடமான "குடும்ப ஸ்தானத்தில்" உள்ளாதனால்
திருமணம் நிச்சயமாக உண்டு.
மேலும் தாமதத்திற்காண காரணம் ஜாதகிக்கு "அவசவ்ய காலசர்ப்ப தோசம் உள்ளது" (கேது கொடி பிடிப்பதனால்)
இதனால் குருசந்திர, சசிமங்கள யோகங்கலானது தாமதமாக கிடைக்கும்.
    சுபம்.
    Wednesday, July 02, 2014 10:17:00 AM/////
---------------------------------------------
2
//////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண் : 61 இற்கான பதில்.
    இதில் கொடுக்கப்பட்ட ஜாதகிக்கு கேது கொடிபிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ளது. பெண்களுக்கே உரிய கும்ப லக்கினம். பெண்ணின்
எல்லா அம்சமும் உண்டு !!! இலக்கின அதிபதி சனி 4இல் நட்பு வீடு.( கேந்திர வீடு ). பொதுவாக சனி 4இல் இருந்தால் சுககேடு, கல்விக்கு கேடு.
ஆனால் சனி இந்த ஜாதகிக்கு ராசி மற்றும் லக்கினாதிபதி. மேலும் 4ஆம் அதிபதி சுக்கரன் 2இல் உச்சத்தில். உச்சத்தில் இருந்தாலும் 7ஆம்
அதிபதியான சூரியனால் அஸ்தமனம். இருந்தாலும் சுக்கரன் 5 பரல்களுடன், அம்சத்தில் ஆட்சி பலத்துடன். மேலும் 4 ஆம் வீட்டை 2, 11 ஆம்
அதிபதியான குருவின் விசேஷ பார்வையில்.கல்விக்கு காரகனான புதன் லக்கினத்தில் 6 பரல்களுடன். மேல்நிலை கல்விக்கான ஸ்தானமான 5 ஆம்
அதிபதி புதன் 5 இற்கு 9 இல். இத்தகைய காரணங்களால் ஜாதகிக்கு உயர்கல்வி உண்டு !!! தொழில் ஸ்தானம் லக்கினாதிபதி சனியின் பார்வையில்
இருப்பதால் கல்வியால் வேலையும் நன்றாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் களத்திரகாரகன் சுக்கரனும் கிரக யுத்தம். 5ஆம் அதிபதி
புதனின் பார்வை 7 ஆம் இடத்தில். 3,10 ஆம் அதிபதி செவ்வாயின் 8 ஆம் பார்வை 7லில். குடும்ப ஸ்தானாதிபதி குரு அந்த வீடிற்கு 11 இல்
இருந்தாலும் குருவுடன் ஆறாம் அதிபதி( வில்லன் ) மற்றும் மாந்தியின் பிடியில். சூரியன் குருவின் அம்சத்தில் இருப்பதால்,ராகு திசை முடிந்த பின்னர்
குரு திசை, குரு புத்தியில் 30 தாவது வயதில் திருமணம் நடைபெற்று இருக்கலாம். திருமணம் உண்டு !!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Wednesday, July 02, 2014 11:33:00 AM//////
-----------------------------------------------
3
 //////Blogger SIVA said...
    அய்யா வணக்கம் .,
    இவருடைய 5,9,10,11 மிட பரல்கள் நன்றாக இருப்பதாலும், யோககாரகன் சுக்கிரன் நல்லநிலையில் இருப்பதாலும் இவருடைய திருமணம்
நடைபெறும்,

    இவர் காலசர்ப்பதோஷ ஜாதகர் , ஏழாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு எட்டில் மறைவு , செவ்வாய் ஏழாம் இடத்தை தனது பார்வையில்
வைத்திருகிறார் ஆகவே இவருக்கு தாமத திருமணம்,28 வயது வரை நடந்த திசைகள் சாதகமாக இல்லை ஆகவே 28 வயதிற்கு மேல் குரு திசை
சுக்கிரபுத்தி அல்லது கோச்சார ரீதியில் குரு பலமான நேரத்தில் இவருக்கு திருமணம் கைகூடும் .
    கல்வி :- இரண்டாம் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் நீஷபங்கம் ஆனாலும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உச்சம்,புதன் 6 பரல்கள் லக்கினத்தில்
இருக்கிறார், நான்காமிடம் குருபார்வையுடன் ஆகவே நல்ல கல்வி உண்டு , லக்கினம் பாபகர்தாரி யோகத்தில் இருப்பதாலும் இரண்டாமிடத்தில்
சூரியன் இருப்பதாலும் சிறுசிறு பிரச்சனைகள் வரும் ., ஐந்தாம் அதிபதியும் லக்கினாதிபதியும் கேந்திரம் அடைகிறார்கள். ஆகவே இவருக்கு நல்ல
அறிவுத்திறன் இருக்கும்,
    குருசந்திரயோகம்,ருசயோகம் இருந்தாலும் பன்னிரண்டாம் இடத்தில மறைவுற்று இருப்பதால் இவருக்கு பலன் கிடைக்கவில்லை
    பாபகர்தாரி யோகம் மற்றும் சுபகர்த்தாரி யோகம் ஒரு சேர இருப்பது கலவையான பலன்களை தருமா என்பது புரியவில்லை அய்யா..
    Wednesday, July 02, 2014 4:14:00 PM//////
---------------------------------------------------
4
//////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my analysis.
    1. Kethu starts the Kalasharba dosham.
    2.But she has good yogams too. Gurumangala, sasimangala, gajakesari... All of thm are in 12th house, but still will give at least some benefits. Sukra, Guru, Sani all in "Mukona parivarthanai".
    3. Laknathipathi Sani is in 4th house and it is friend’s house too.
    4. 4th lord Sukra is in 11th house from it and is uchham. But Asthangam as it is close to Sun.
    5. 4th house also has Guru's parvai.
    6. Regarding 7th house, its lord is in 2nd place (8th from 7th place), but with uchha Sukran.
    7. Mars looks at 7th house.
    8. But Subha Buthan also looks at 7th house.
    9. Strong laknathipathi, 5th lord and sukra indicates love as well.
    So, She is definitely educated. she got married, but delayed as Mars's look and Sani is in 7th place in Navamsa.
    Wednesday, July 02, 2014 8:14:00 PM//////

-------------------------------------------------
5
/////Blogger ponnusamy gowda said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், ஜாதகி மெத்தப் படித்த மேதாவியாவார்.
    அவரது 30வது வயதில் திருமணம் நடந்து இருக்கும்.குரு தசை சனி புத்தியில் நடந்து இருக்கும்.
    அலசல்:
    ஜாதகி கும்ப லக்கினம்.லக்கினாதிபதி சனி கல்விக்குறிய 4ம் இடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்து,10ம் பார்வயால் லக்கினத்தையும்,அங்கு அமர்ந்த
கல்விக்கு அதிபதி புதனையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
    2).நுண்ணறிவிற்க்கு ஆதிபத்தியம் கொண்ட 5ம் பதி புதன், லக்கினத்தில் அமர்வு.தனது வீட்டிற்க்கு 9ல்.
    3). 7ம் பதி சூரியன் 2ல் உச்ச சுக்கிரனுடன் அமர்வு. ஆயினும் சூரியன் தன் வீட்டிற்க்கு 8ல் அமர்வு சிறப்பில்லை.உச்சம் பெற்ற செவ்வாய்,குருவின் சேர்க்கையுடன், தன் 8ம் பார்வையால் 7ம் இடத்தை பார்வை செய்வதால் தகுதியற்றவர் கணவராகவாய்த்திருப்பார்.
    4).4&9க்குடைய யோககாரகன் சுக்கிரன்,2ம் இடத்தில் உச்சம். 2ம் பதி குரு நீச்ச பங்க ராஜயோகம் அடைந்திருப்பதுடன் கல்வி ஸ்தானமாகிய 4மிடத்தையும், மாங்கல்ய ஸ்தானமாகிய 8மிடத்தையும் பார்வை செய்திருப்பது
    நன்மையே.
    Wednesday, July 02, 2014 9:11:00 PM//////
-------------------------------------------------
6
/////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Lagnadhipathy Sani 4-il thannudaya nanban sukranin veetil. 4-m adhibathy Sukran Uccham petru 2-il amarvu. Lagnathai lagnadhipathy sani 10-m paarvayaga parkiraar.
    Budhan 5 & 8-m adhipathy and avar lagnathil amarvu saniyin paarvai. Jadhagi Kandhippaga Technical Padippu (B.E, M.B.B.S) padithuiruppar.
    7-m adhipathy sooriyan lagnathirku 2-il( Kudumbasthanathil amarvu) sooriyan thanveetirku 8-il amarvu. Kaaragan Sukran Uccham petru 2-il amarvu.
    Labasthanathil amarndha Raaghu migundha narpalangalai vaari valangi iruppar. Raaghu dhasa Chandra bukthiyi alladhu Neecha bangam
adaindha Guru Dhasa-Sani bukthiyil avargalukku Thirumanam nadandhu irukkum and avar velinatil settle aagi iruppadharkku migavum adhigamana vaippu ulladhu.
    Thank You.
    Kadaisi Bench Maanavan.
    Wednesday, July 02, 2014 9:50:00 PM/////

--------------------------------------------------
7
///////Blogger Venkat Lakshmi said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம், புதிர் 61க்கு விடை: லக்கனாதிபதி 4ல் 4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 11ல் உச்சம்,அதனால் ஜாதகி படித்தவர்.7ம் வீட்டு அதிபதி லக்கனத்திற்க்கு 2ல், 7ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு 8ல்,கால சர்ப்ப தோஷ ஜாதகம்,களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்,அதனால் 30 வயதிற்க்கு மேல் குரு திசையில், குரு புத்தியில் திருமணம் முடிந்திருக்கும்.
    Thursday, July 03, 2014 12:44:00 AM//////
-------------------------------------------------
8
//////Blogger sivaradjane said...
    Quiz No.61
    1. 4 ம் இடத்தில் லக்னாதிபதியும் ,விரயாதிபதியான சனி பகவான் . வித்யாகாரகனான புதன் லக்னத்தில் ,ஆயினும் பாபகர்த்தாரி தோஷத்த்தில்

..இருப்பினும் 4 ம் இடத்திற்கு நீச 'குருவின் பார்வை உள்ளது. மேலும் 4 ம் அதிபதியான சுக்கிரன் 2 ம் வீட்டில் உச்சத்தில் உள்ளார். ஆகவே ஜாதகி
நன்கு படித்தவர்.

    2. கேது கோடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோசம் உள்ள ஜாதகி. 7 ம் அதிபதியான சூரியன் 7 க்கு 8 ல் ..
    7 ம் இடத்திற்கு 8 ம் அதிபதியான புதன் மற்றும் 3 ம் அதிபதியான செவ்வாய் ஆகியோரின் பார்வை ஆகிய காரணங்களால் ஜாதகிக்கு தாமதமாகவே 31 வயதில் குரு திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும். ஜாதகப்படி களத்திரக்காரனும் ,கும்ப லக்கினத்திற்கு யோககாரனுமான சுக்கிரன் உச்சமானதுடன் 7 ம் அதிபதியான சூரியனுடன் கூட்டு சேர்ந்து அந்த பெண்னுக்கு திருமண யோகத்தை வழங்கினார் . பெண்களுக்கு
மற்றொரு களத்திர காரனான செவ்வாயும் உச்சத்தில் உள்ளார். உடன் குரு மங்கள யோகமும் ,குரு சந்திர யோகமும் உள்ளது.
    sivarajan
    (pondicherry)///////
------------------------------------------------------
========================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.7.14

Astrology: quiz.61: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவிய கலையே ஓவியமே!

 

Astrology: quiz.61: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவிய கலையே ஓவியமே!

Quiz No.61: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியொன்று

2.7.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டையும், 7ஆம் வீட்டையும்  ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


Chart with navamsam is appended


1.
ஜாதகியின் கல்வி பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகி படித்தவரா? அல்லது படிக்காதவரா? அல்லது படிப்பைப் பாதியில் விட்டவரா? ஆராய்ந்து எழுதுங்கள்.

2
ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.6.14

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

 

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

ஜவ்வாது மேடையிட்டு  சர்க்கரையில் பந்தலிட்டு 
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில்தேனெடுத்து தா தா தா..
(ஜவ்வாது)
வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ....ஹே...
(ஜவ்வாது)
பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ..ஹே..
(ஜவ்வாது)

பாடல்:  கவியரசர் கண்ணதாசன்.
திரைப்படம் பணத்தோட்டம்

-----------------------------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அம்மணிக்கு 27 வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு ஆண்டுகூட நிலைக்கவில்லை. விவாகம் ரத்தானது.

2. அம்மணி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது.

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி நீசமாகிவிட்டார். நீசமானால் விக்கெட் அவுட்.

2.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் சனீஷ்வரன். இன்னொரு பக்கம் செவ்வாய். சங்கடமான அமைப்பு.

3.பெண்களுக்கு முக்கியமான பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் லக்கினத்திற்கு எட்டிலும், தன் வீட்டிற்குப் பன்னிரெண்டிலும் அமர்ந்து ரன் அவுட்டாகி விட்டார். அவரால் எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டது.

4. புதன், சுக்கிரன், சனி ஆகிய மற்ற 3 கிரகங்களும் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்கள். Retired hurt - ஆடமுடியாத நிலைமை என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

5. சுபக்கிரகங்கள் 3ம் கெட்டிருக்கின்றன. அதுவும் ஒரு சாதகமில்லாத அமைப்பு

6. ஜாதகியின் 7ஆம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். மேலும் அந்த வீட்டிற்கு ஆறில். அதுவும் ஒரு மோசமான அமைப்பு.

7. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல்

8. பிறகு எப்படி ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது என்ற கேள்வி எழலாம். குரு பகவானின் விஷேசப்பார்வை  சனி மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சுக்கிரனுடன் கை கோர்த்து, ஜாதகிக்குத்
திருமணத்தை நடத்தி வைத்தார்.

9. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய். அத்துடன் 2ஆம் வீட்டின் மேல் குரு பார்வை. என்ன பிரயோஜனம்? சனியின் 3ஆம் பார்வையால்
அந்த அமைப்பு க்ளீன் போல்டானது. (Clean Bowled)

10. அது மட்டுமா? 2ஆம் வீட்டுக்காரன் சூரியன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தான். அவனுக்கும் விக்கெட் பறிபோனது.

11. ஏழாம் வீட்டுக்காரன் சனி 12ஆம் வீட்டில் அந்த வீட்டுக்காரன் புதனுடன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். (association of 7th lord and 12th lord) அந்த அமைப்பு திருமண மகிழ்ச்சிக்கு (marital happiness) எதிரானது.

12. போதாததிற்கு சந்திரனும் ராகுவும் சேர்ந்து உள்ளான். மனகாரகனுடன் ராகு சேர்ந்தால் என்ன ஆகும். வேண்டிய அளவிற்கு மனச் சங்கடங்களையும், மனப் போராட்டங்களையும், கவலைகளையும் கொடுத்தான். அவனால் முடிந்தது அதுதான்.

ஆக மொத்தம் இரண்டாம் வீடும் கெட்டுப்போனதால் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.

ஜாதகிக்குத் தன் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் வெறுத்துப்போய் தன் பெற்றோர்களிடமே திரும்பி வந்துவிட்டார். விவாகத்தையும் ரத்து செய்துவிட்டார்.

துரதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்னத்தைச் சொல்வது?

அலசல் போதுமா?

போட்டியில்  29  பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் .16.பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.

அந்த .16. பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் சரியாக இரண்டு பதில்களையும் எழுதியவர்கள் 7  பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான

பதிலை ஒட்டி எழுதியவர்கள் .9  பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------

1 ******
Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். QUIZ NO.60
    30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோககாரகன்.
    ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.
    திருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.
    1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).
    2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.
    4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.
    5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.
    6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.
    7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.
    8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்விட்டது.
    குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.
    யோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.
    இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
    1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.
    2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, June 25, 2014 8:53:00 AM/////
---------------------------------------------------------
2
/////Blogger seethalrajan said...
    1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.
    2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.
    Wednesday, June 25, 2014 10:11:00 AM/////
-------------------------------------------------------
3
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.
    குடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    ஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
    புனர்பூ தோஷம் இருப்பதும் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.
    Wednesday, June 25, 2014 11:06:00 AM/////
-------------------------------------------------------- 
4 ****** 
Blogger murali krishna g said...
    ரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது !.
    முதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் ! 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை !. அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி !. 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை !. களத்திர தோஷம் உண்டு !. தாமதமான திருமணம் !. கஷ்டப்பட்டு நடந்தேறிருக்கும் !. சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் !. சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் !.சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் ! அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு !
    2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) !. அதற்கு சனியின் பார்வை வேறு !. வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை !.எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது ! விவாகரத்தில் முடிந்திருக்கும் !. நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் !.    சரியா அய்யா ? அலசலுக்கு காத்திருக்கிறேன் !
    Wednesday, June 25, 2014 11:34:00 AM
-------------------------------------------------------
5   
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.
    2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.
    3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.
    4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.
    7ம் வீட்டிற்கு சூரியன் பார்வை.
    5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.
    6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.
    எனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.
    7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.
    Wednesday, June 25, 2014 12:21:00 PM/////
 --------------------------------------------------------------- 
6 ******
///////Blogger venkatesh r said...
    ஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.
    புதிர் எண்: 60 க்கான விடை.
    1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.
    அலசல் இதோ:
    கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.
    1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.
    2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.
    3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.
    4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.
    5. 6/9ம் அதிபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.
    இந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.
    இதற்கான காரணங்கள் :
    1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.
    2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.
    3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.
    இதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.
    Wednesday, June 25, 2014 2:28:00 PM//////
-----------------------------------------------------------------------
7
////Blogger Senthil Nathan said...
    ஐயா.
    இந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,
    மேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .
    அதாவது
    இலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.
    Wednesday, June 25, 2014 5:25:00 PM/////
-------------------------------------------------------------------- 
8******
/////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.
    Wednesday, June 25, 2014 8:15:00 PM/////
----------------------------------------------------------
9******   
////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60
    கடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .
    லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..
    லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..
    களச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..
    எட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..
    Wednesday, June 25, 2014 8:24:00 PM//////
---------------------------------------------------------
10
Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா,வணக்கம்.
    புதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
    Wednesday, June 25, 2014 8:28:00 PM/////
------------------------------------------------------------  
11
///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.60:
    The Native of the horoscope is 40 years old.
    1. She has got married and short span of Married life.
    2. Her marriage or family life is in trouble.
    Reasons:
    1. Lagna lord Moon is in debilitated position at fifth house along with exalted Rahu.
    2. Bagyathipathi (Jupiter) is in twelfth house from its own house.
    3. Seventh lord and 4th lord is in twelfth house from lagna,
    4. There is Kala sarpa dhosa.
    5. There is kuja dosha.
    6. Seventh house lord Saturn and Kalathra karaga Venus is hemmed between Kethu and Sun. (baba kathiri yoga)
    7. Lagna and second house lord is in Baba kathri yoga. (Saturn and Mars)
    8. There is Vibaretha Raja Yoga.(Eighth house lord Satrun and Twelfth house lord Mercury is in Twelfth house).
    Marriage:
    i)Though seventh house lord and kalathra karaga is in twelfth house,she has married at the age of 26 to 29 during Venus Dhasa period because Jupiter is aspecting as its 5th aspect and aspecting second house too. Because of vibareetha raja yoga also supported to get marry.
    ii) In Navamsa, Venus is exalted, associated with seventh house lord and parivarthna yoga with Jupiter.
    Hence, all the above reasons she got married.
    Marriage or Family life:
    i)Family life is not happy due to seventh house lord and kalathra karaga are in baba kathiri yoga nd sitting in twelfth house from lagna,
    ii) Saturn is aspecting second house as its 3rd aspect. Its bad and second house lord is sitting twelfth house from its own house.
    iii) Mars is sitting in second house and getting saturn's aspect. Its too bad for family life.
    iv) Saturn is aspecting 9th house and 9th house lord is sitting 12th house from its own house. Its not good sign.
    v) Fourth house lord sitting in twelfth house along with saturn.It shows bad sign.
    Her Husband deceased or seperation due to Sun is sitting twelfth house from its own house( 8th house lord from 7th house)
    vi)Saturn is sitting twelfth house from lagna and under baba kathiri yoga and getting sixth house lord aspects.

    vii)In Navamsa, Second house lord is debilitated.
    viii) lagna lord and seventh house lord are in 6/8 position.
    Hence all the above reasons, She has short span of marriage life and family life was not happy.
    Since Venus and Saturn are associated and sitting in twelfth house, she involves in illicit sex. She has more sexual feelings and It spoils her life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, June 25, 2014 9:04:00 PM/////
-------------------------------------------------------   
12******
/////Blogger valli rajan said...
    Dear Guruji,
    1. Lagna lord is neecham
    2. Lagnam is in PapaKarthari Yoga
    3. Jupiter in eight house
    4. Venus in 12 house.
    5. 7th Lord in twelfth house but aspected by guru.
    6. Venus is uccham in navamsam. Neecha banga raja togam.
    7. 2nd lord is neecha in navamsam.
    Answer:

    1.Marriage is held at the age of 30 when surya dasa period.
    2.But there will separation within 4 years when surya dasa saturn sub
    period.
    3. Marriage happened because strong venus and aspect of guru on seventh lord.
    Wednesday, June 25, 2014 10:16:00 PM/////

------------------------------------------------------------  
13   
////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.
    Thursday, June 26, 2014 12:24:00 AM/////
-----------------------------------------------------  
14
/////Blogger Dallas Kannan said...
    The chart has lot of yogams, but with a catch..
    Vipareetha raja yogam -- in papakarthari yogam
    Gajakesari -- Guru in 8th place and Moon is neecham
    Gurumangala - Guru is in 8th place.
    For a girl 9th place/lord and Guru is important. In this chart all 3 are spoiled.
    7th lord is in 12 plance... the consolation is, it is in vipareetha rajayogam and Guru is looking at it.
    2nd place is lord is in 12th place from it and Mars is there.
    So I am going to say, she is married late after Sukra Dasa.
    But Marrage life did not last long.
    Thursday, June 26, 2014 12:37:00 AM/////

------------------------------------------------------------------------------  
15******
////Blogger sivaradjane said...
    7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி
    கூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.
    Thursday, June 26, 2014 2:21:00 AM/////
-----------------------------------------------------
16 
/////////Blogger kmr.krishnan said...
    இந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.
    1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.
    2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.
    3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.
    4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.
    5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.
    6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.
    28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.

    Wednesday, June 25, 2014 2:58:00 PM/////



((மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு என்று ஈரெட்டாகச் சொல்லலாமா?  ஸ்திரமாக ஒரே பதிலை அல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் மிஸ்டர் கிருஷ்ணன்!).
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!