மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label விவேக சிந்தாமணி. Show all posts
Showing posts with label விவேக சிந்தாமணி. Show all posts

28.9.11

துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

----------------------------------------------------------------------------------------
 துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

    “துன்பத்திற்கு தோழிகளா? என்ன சார் சொல்கிறீர்கள்?”

உங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான
வார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:

துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்

ஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்

ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து  விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று  அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்
பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய  காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல்  உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள  துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்? பார்க்க முடியாத, பார்த்து  ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்!

பாடலைப் பாருங்கள்

    “ஆசன மழை பொழிய இல்லம் விழ
         அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
    மாசரம் போகுதென்று விதை கொண்டோட
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
    கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
    பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

         - விவேக சிந்தாமணி பாடல்

கதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்! ஆகவே துன்பம் வருங்காலத்தில்
அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2
எதெது எப்போது கவிழும்?


பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!

பாடலைப் பாருங்கள்:

    மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
        காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
    கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
        ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!

        - விவேக சிந்தாமணி

----------------------------------------------------------------------------------
உங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

21.9.11

தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

--------------------------------------------------------------------------------------
தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

பிள்ளை வளர்ந்து பெரியவனாகிவிட்டால்(இளைஞனாகி விட்டால்), தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான்.
இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள்.
கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான்.
வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள்!

யார் சொன்னது? ஞானி ஒருவன் சொன்னது!

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ள அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!


-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். “எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். அதெல்லாம் விதிவிலக்கு (exemption)
 
Exemptions should not be taken as examples.
விலக்குகள் உதாரணமாகாது
அதை மனதில் வையுங்கள்!

ஒரு மாறுதலுக்காக விவேக சிந்தாமணிப் பாடலை வலை ஏற்றினேன். எப்படியுள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
21.09.2011


வாழ்க வளமுடன்!

19.12.08

சொன்னால் அழிந்து போகக்கூடியது எது?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"குரு உபதேசம், மாதர்கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,வயதுறச் செய்த தர்மம்,

அரிய மந்திரம், விசாரம்,ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும்
தெரிய ஒண்ணாது உரைத்திடின் அழிந்துபோமே."

- விவேக சிந்தாமணி

ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம்,
மாதரிடத்து அனுபவித்த இன்பம்,
தன் மனதில் பொருந்திய நியாயம்,
தான் கற்ற கல்வி,
தன்னால் செய்யப்பட்ட தர்மம்,
அரியதான மந்திரம்,
தனது கவலை,
தனது வல்லமை
என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும்
தெரியச்சொல்லுதல் கூடாது.
சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 4

வாழ்க வளமுடன்!

11.12.08

எரித்தாலும் பயன் இல்லாதது எது?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


"திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே. "
- விவேக சிந்தாமணி - பாடல் எண் 28


திருப்பதி மிதியாத பாதம்,
சிவனடி வணங்காத தலை,
இரப்பவருக்குக் கொடுக்காத கை,
இனிய சொற்களைக் கேட்காத காது,
தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்
உயிர் கொடுக்காதவனின் உடல்
ஆகியவைகள்
இருந்தும் பயனில்லை;
காட்டில் எரித்தாலும் பயனில்லை.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 3


வாழ்க வளமுடன்!

5.5.08

பயனற்றவை எது?

நெத்தியடியான பாடல் வரிகள் - 1

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

பயனற்றவை எது?

1. பெற்றோர்களை - அவர்கள் துயர் உற்றிருக்கும் காலத்தில் கவனித்துப் போற்றாத பிள்ளை
2. நன்றாகப் பசிக்கும்போது கிடைக்காத உணவு - அது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்
3. தாகத்தைத் தவிர்க்க முடியாத தண்ணீர்.
4. கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண் (மனைவி)
5. கோபத்தை அடக்கி ஆளத்தெரியாத ஆட்சியாளர்கள்
6. தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்
7. பாவம் போக்கும் புனிதத்தன்மை இல்லாத திருக்குளம்

ஆகிய இந்த ஏழும் பயனற்றவை ஆகும்!
யார் சொன்னது?
ஞானி ஒருவன் சொன்னது!
பாடலைப் பாருங்கள்

“ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாபத்தைத் தீராத தண்ணீர் தரித்திரம் அறியாத பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே!”
--------------------------------------------------