----------------------------------------------------------------------------------------
துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!
“துன்பத்திற்கு தோழிகளா? என்ன சார் சொல்கிறீர்கள்?”
உங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான
வார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:
துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்
ஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்
ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்
பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல் உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்? பார்க்க முடியாத, பார்த்து ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்!
பாடலைப் பாருங்கள்
“ஆசன மழை பொழிய இல்லம் விழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாசரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!
- விவேக சிந்தாமணி பாடல்
கதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்! ஆகவே துன்பம் வருங்காலத்தில்
அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2
எதெது எப்போது கவிழும்?
பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!
பாடலைப் பாருங்கள்:
மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!
- விவேக சிந்தாமணி
----------------------------------------------------------------------------------
உங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!
“துன்பத்திற்கு தோழிகளா? என்ன சார் சொல்கிறீர்கள்?”
உங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான
வார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:
துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்
ஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்
ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்
பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல் உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்? பார்க்க முடியாத, பார்த்து ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்!
பாடலைப் பாருங்கள்
“ஆசன மழை பொழிய இல்லம் விழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாசரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!
- விவேக சிந்தாமணி பாடல்
கதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்! ஆகவே துன்பம் வருங்காலத்தில்
அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2
எதெது எப்போது கவிழும்?
பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!
பாடலைப் பாருங்கள்:
மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!
- விவேக சிந்தாமணி
----------------------------------------------------------------------------------
உங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!