மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 171 - 180. Show all posts
Showing posts with label Lessons 171 - 180. Show all posts

26.2.09

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? நிறைவுப் பகுதி

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? நிறைவுப் பகுதி

இதற்கு முன் உள்ள பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்து விட்டு
வரவும். அப்போதுதான் இந்தப் பதிவு பிடிபடும். அதாவது விளங்கும்!

ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும். அதை
அற்புதமாகச் செய்தார் சனீஷ்வரன் என்று சொன்னேன் இல்லையா?

தேனிக்குச் சென்று வட்டிக் கடைக்காக வீடு பார்க்கும்போதுதான், முத்தப்பன்
மூலம் அதை அவர் ஆரம்பித்துவைத்தார்.

தன் நண்பனிடம் முத்தப்பன் தெளிவாக இப்படிச் சொன்னான்.

"கொள்ளைக்குப் போனாலும் போ, கூட்டுக்குப் போகாதே என்று மாமா
சொல்வார். எந்தக் கூட்டுமே நிலைத்து நிற்காது பகையில் முடியும் என்று
சொல்வார். நாம் இருவரும் கடைசி வரையில் நண்பர்களாகவே இருப்போம்.
நமக்குள் கருத்து வேற்றுமை மற்றும் பகை வரக்கூடாது. அதோடு நான்
சிம்ம லக்கினம். தனியாகத்தான் தொழிலைச் செய்ய வேண்டும் என்றும்
என் மாமா சொல்வார். ஆகவே இருவரும் இதே ஊரிலேயே தொழிலைச்
செய்வோம். ஆனால் தனித்தனியாகச் செய்வோம். நட்பு மற்றும் பாதுகாப்பிற்காக
ஒரே தெருவில் இருந்து கொண்டு அதைச் செய்வோம்"

ஏகப்பன், அதற்கு உடனே சரி என்று சொல்லி விட்டான். அவனுடைய நல்ல
நேரம், பதினொன்றாம் இடத்துச் சனி அவனை அப்படிச் சொல்ல வைத்தது.

என்ன ஆச்சர்யம் பாருங்கள். ஒரே தெருவில் இரண்டு நல்ல வீடுகள்
வாடகைக்குக் கிடைத்தன. இரண்டு வீட்டு அமைப்புக்களுமே வீடு cum கடைக்குச்
சரியாக இருந்தன.

பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆகவே சுருங்கச் சொல்கிறேன். ஒரு
நல்ல நாளில் கடையைத் துவங்கினார்கள். சொந்த ஊரிலிருந்து தத்தம் மனைவி
குழந்தைகள் மற்றும் அத்தியாவசியமான சாமான்களுடன் அங்கே வந்து குடியும்
குடித்தனமாகவும் இருக்கத் துவங்கினார்கள். எல்லாம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

வெளி வேலைகள், மற்றும் வீட்டு வேலைகளுக்கு என்று ஊரிலிருந்து ஒரு
இளைஞனைப் பிடித்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொண்டான் முத்தப்பன்.
வீட்டிற்குப் பின்புறம் இருந்த அறையில் அவனைத் தங்க வைத்தான். அவன் பெயர்
மாரியப்பன். அவனும் இவன் சொல்கின்ற வேலைகளைச் சலிப்பின்றி செய்தான்

முதலிடு செய்த சொற்ப பணமும் 15 நாட்களிலேயே அடைபட்டது. வங்கியில்
இருந்து மேலும் பணத்தைக் கொண்டு வந்து இறக்கி முத்தப்பன் சுறுசுறுப்பாக
கடையை நடத்தினான். உள்ளூர் ஆசாரி ஒருவர் காலை நேரங்களில் வந்திருந்து
அடகுக்கு வரும் தங்கத்தை உரசிப் பார்த்து, அதன் நம்பகத்தன்மைக்குச் சாண்றிதழ்
வழங்கினார். அதாவது அப்ரைசர் வேலை செய்தார்.

ரோரிங் பிஸினெஸ் என்பார்களே, அப்படி இருவருடைய கடைகளும் பிரபலமாகி
நாளும் வருகிறவர்களின் எண்ணிக்கை, அதிகமாகிக் கொண்டே போனது.

முத்தப்பன் தன்னுடைய இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் இறக்கிக் கடையை
நடத்தியதோடு, தன் தந்தையார் உவந்து வந்து கொடுத்த ஒரு லட்ச ரூபாயையும்
அடகில் அடைத்தான்.

அதற்குள் ஊரில் இவன் கடை விபரம் தெரிய, சில பெருசுகள், பத்தாயிரம்,
இருபதாயிரம் என்று இவன் கடைக்கு வைப்பு நிதியாகக் கொடுத்தன. வங்கியை விட
இவன் கடையில் அதிக வட்டி கிடைக்கும் எனும் ஆசையில் அப்படிக் கொடுத்தார்கள்
அந்த வகையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் ரொட்டேசனுக்குக் கிடைத்தது.

முத்தப்பன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டான். அவனைச் சுற்றி 100 வயலின்களும்
பத்துப் புல்லாங்குழல்களும் எப்போதும் ஒலிக்கத் துவங்கிவிட்டன. பாரதிராஜா
படங்களில் வருவதுபோல அவன் மனதில் எப்போதும் பத்து தேவதைகள்
நடனமாடிக்கொண்டே இருந்தார்கள்.

இரண்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. முத்தப்பன் மகிழ்ச்சிக் கடலில்
தினமும் குளித்துவிட்டு, பணத்தால் தன்னை ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்டான்.

இதே போல அதே தெருவில் கடை வைத்த ஏகப்பனுக்கும் அசத்தலாக வட்டிக் கடை
நடந்து கொண்டிருந்தது. அவனிடமும் பணம் பல ஆயிரங்களில் புழங்க ஆரம்பித்தது.
இருவரும் மாலை நேரங்களில் ஒரு அரைமணி நேரம் சந்தித்து பேசுவார்கள்.
அவ்வளவுதான். அதற்குமேல் இருவருக்கும் நேரம் இருக்காது. கடை மற்றும் தத்தம்
குடும்பத்திற்கே மொத்த நேரத்தையும் செலவிடும்படியாகிவிட்டது.

இந்த இரண்டு ஆண்டுகளில், நான்கைந்து முறைகள், ஊருக்குச் சென்றவன்
இரண்டு முறைகள் தன் மாமாவைப் போய்ப் பார்த்துவிட்டும் வந்தான்.

மரியாதை நிமித்தம் சென்று பார்த்தவன், ஒவ்வொரு முறையும் ஒரு கூடைப்
பழங்களையும் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டும் வந்தான். அதோடு
சும்மா இருக்காமல் தன் ஜாதகத்தில் ஏதோ கோளாறு இருப்பதாகவும், இல்லை
என்றால் ஏன் இப்படி எதிர்பார்ப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்கிறது என்று
சொல்லி விட்டும் வந்தான். மாமா பதில் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே
புன்னகை மட்டும் செய்வார்.

இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாத காலங்களும் பறந்து சென்று விட்டன. விரையச்
சனி முடிவதற்கு இன்னும் முப்பது நாட்களே பாக்கி இருந்தன.

அந்த நேரத்தில்தான் அது நடந்தது.

முத்தப்பனின் அன்புத் தாயாருக்கு வீட்டில் இடறி விழுந்ததால் மண்டையில் அடிபட்டு
விட்டது. மிகவும் சீரியாக பேச்சு மூச்சு இன்றி இருப்பதாகத் தகவல் வர, முத்தப்பன்
தன் மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

உள்ளூர் மருத்துவர் கையை விரித்துவிட்டார். திருச்சியில் ஒரு பெரிய மருத்துவ
மனையின் பெயரைச் சொல்லி அங்கே சென்று சிகிச்சையளியுங்கள் என்று சொல்லி
விட்டார். முத்தப்பன் மேலும் நான்கு தினங்கள் தாயாருடன் தங்கும்படி ஆகிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------

ஐந்தாம் நாள் காலை தந்தி ஒன்று வந்தது. ஏகப்பன் அனுப்பியிருந்தான். அதில்
இருந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

அப்போதெல்லாம் தொலைபேசி வசதி இல்லாததால் செய்திகள் எல்லாம் தந்தி
மூலமாகத்தான் வரும்

தந்தியில் இருந்த செய்தி இதுதான்.

"உன் கடை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. உடனே புறப்பட்டு வா"
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தப்பன் அலறியடித்துக் கொண்டு போனான்.

எல்லாம் முடிந்து போய்விட்டிருந்தது.

அவன் வீட்டிலிருந்த பெட்டகம் உடைக்கப்பெற்று, உள்ளேயிருந்த தங்கம் மற்றும்
ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப் பெற்றிருந்தது.

தங்கத்தின் விலை அப்போது பவுன் அறுபது ரூபாய். அடகில் வந்து பெட்டகத்தில்
வைக்கப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு பத்து லட்ச ருபாய். எத்தனை பவுன் தங்கம்
கொள்ளை போயிருக்கும் என்று நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்
உத்தேசமாக மொத்தம் 133 கிலோ தங்கம். அத்துடன் ரொக்கம் ரூபாய் எழுபதாயிரம்

முத்தப்பன் நொடிந்துபோய் தரையில் உட்கார்ந்து அழுக ஆரம்பித்துவிட்டான்.
அவனைச் சமாதானப் படுத்துவது பெரும் பாடாகிவிட்டது.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அவர்கள் வந்து விசாரணையைத்
துவக்கினார்கள்.

வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பெற்றிருந்த முத்தப்பனின் வேலைக்காரன்
மாரியப்பனைக் காணவில்லையாதலால், அவனை முதல் குற்றவாளியாக்கி
விசாரனை துவங்கியது.

முத்தப்பனின் வீட்டிற்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த இரண்டு கேரள இளைஞர்
களையும் காணவில்லையாதலால், அவர்களையும் இணைத்துத் தேடும் படலம்
துவங்கியது.

மொத்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றவர்கள்
அவர்கள்தான் என்று உறுதியாயிற்று.

ஆட்டை போட்டவர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பார்களா என்ன?

அவர்கள், தேனியில் இருந்து மூணாறு வழியாகக் கேரளாவிற்குத் தப்பிப்
போயிருந்தார்கள். கடைசி வரை பிடிபடவேயில்லை!
---------------------------------------------------------------------------------------------------------
அதற்குள் இங்கே கலவரமாகியிருந்தது. நகைகளை அடகு வைத்திருந்த
மக்கள் வந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அத்தனை பேரும் ஏழை, எளிய
ஜனங்கள். அடகுப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறோம். எங்கள்
நகைகளைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அல்லது நகையின்
அளவிற்கு மிச்சப் பணத்தைக் கொடுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்
சிலர் அடிக்க வந்து விட்டார்கள்.

கடைசியில் கட்டைப் பஞ்சாயத்து வைத்து, அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட
சதவிகிதத்தில் ஈட்டுப் பணம் கொடுக்கப்பெற்றது. அதைக் கொடுப்பதற்கு
முத்தப்பனின் பங்கில் திருவாரூரில் இருந்த நிலங்களைக் காசாக்கிக்கி கொடுக்கும்
படியாகிவிட்டது.

அதையெல்லாம் செய்து முடிக்க ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. மரண
அவஸ்தை வேறு!

மொத்தத்தையும் ஒரு வரியில் சொன்னால், விரையச் சனி முத்தப்பனைக்
கட்டிய வேட்டி சட்டையுடன், தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.
--------------------------------------------------------------------------------
இதைக் கேள்விப்பட்ட முத்தப்பனின் மாமா வேதனையுடன் சொன்னார்:

முதல் மாடியில் இருந்து விழுக வேண்டிய முத்தப்பனை, சனி பத்தாவது
மாடிவரை கூட்டிச்சென்று அங்கிருந்து தள்ளி விட்டிருக்கிறான்!

(முற்றும்)

வாழ்க வளமுடன்!

25.2.09

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? பகுதி 2

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? பகுதி 2

இதற்கு முன் உள்ள பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்து விட்டு
வரவும். அப்போதுதான் இந்தப் பதிவு பிடிபடும். அதாவது விளங்கும்!

முத்தப்பன் தன் வழியில் செல்ல, முத்தப்பனின் ஆத்மார்த்தமான நண்பன்
வடிவில் வந்து நின்றார் சனீஷ்வரன் என்று சொன்னேன் இல்லையா?

வந்து நின்றவர் புன்னகைத்தார். நண்பன் ஏகப்பன் வடிவில் புன்னகைத்தார்.
அதாவது ஏகப்பன் மூலம் அவர் செயல்பட ஆரம்பித்தார்.

ஏகப்பன் என்பது ஈஷ்வரனின் பெயர்களில் ஒன்று. அகில உலகிற்கும் அப்பன்,
அதாவது உலகிற்குத் தந்தையைப் போன்றவன் என்று பொருள்படும்.

"டேய், திருவாடானைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை விற்க வேண்டும் என்று
சொல்லிக் கொண்டிருந்தாய் அல்லவா? ஒரு ஆசாமியைப் பிடித்திருக்கிறேன்.
முழுப் பணத்தையும் தந்து கிரயம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான். என்ன
சொல்கிறாய், முடித்து விடுவோமா?"

"இப்போது வேண்டாம். இரண்டரை ஆண்டுகள் செல்லட்டும்"

"ஏன்டா?"

"என் மாமா, எனக்கு இப்போது நேரம் சரியில்லை. ஒன்றும் செய்ய வேண்டாம்
என்கிறார்"

"சரி, ஒன்றும் செய்ய வேண்டாம். இடத்தை விற்று வரும் பணத்தை வங்கியில்
போட்டுவை. ஆள் கிடைக்கும்போது விற்றால்தான் உண்டு. உன்னுடைய இடத்தில்
கருவேல மரங்கள் மண்டிக் காடாகக் கிடக்கிறது. இடத்தை வெட்டிச் செம்மை
பண்ணவே ஆறுமாதங்கள் ஆகும். அப்படியே செம்மை பண்ணினாலும். அங்கே
விவசாயம் பண்ணமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போது அந்த
இடத்தைக் கேட்கிறவன் எதோ ஃபாக்டரி கட்டுவதற்காகக் கேட்கிறான். இடம்
நெடுஞ்சாலையில் இருக்கிறது என்பதை வைத்துத்தான் அவனும் பிரியப் படுகிறான்.
ஆகவே அவனை விட்டால், அவனைப்போல வேறு ஒரு இளிச்சவாயன் கிடைப்பது
சிரமம். ஆகவே யோசித்துவை. நாளைக்கு வருகிறேன். இதற்கும் போய் மாமாவைக்
கேட்டுக் கொண்டிருக்காதே! பணத்தை வங்கியில் போட்டுவைக்க யாருடைய
யோசனையும் தேவையில்லை" என்று சொல்லி ஏகப்பன் இவன் மனதை ஒரு
கலக்குக் கலக்கி விட்டுப் போய் விட்டான்

நம்ம ஆளும் யோசித்தான். ஏகப்பன் சொல்வது உண்மை. இப்பொதுவிட்டால்,
மறுபடியும் விற்க நினைக்கும் சமயத்தில் வாங்குவதற்குத் தோதாக ஆள் கிடைக்க
வேண்டுமே? மாமா, புதிதாக வியாபாரம் எதுவும் செய்ய வேண்டாம் என்றுதானே
சொன்னார். இடத்தை விற்றுப் பணத்தை வங்கியில் போட்டு வைப்பதில் என்ன தவறு?

அப்படியும் இப்படியுமாக யோசித்தவன் ஒரு முடிவிற்கு வந்தான்.

அன்றைய விலை நிலவரம் ஏக்கர் பத்தாயிரம் ரூபாய் அளவில் இருந்தது. ஐந்து
ஏக்கர்களின் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய். நாம் இரண்டு மடங்கு விலையைச்
சொல்வோம். போனால் போகிறது. இரண்டு மடங்கு பணம் கிடைக்கும். இல்லை
யென்றால் கிடந்து விட்டுப் போகிறது.

அடுத்த நாள் காலை, தன்னைப் பார்க்க வந்த ஏகப்பனிடம் அதையே சொன்னான்.

என்ன ஆச்சர்யம்?

அன்று மாலையே, இடத்தை வாங்க விரும்பிய ஆசாமியை கூட்டிக் கொண்டு வந்து
விட்டான் ஏகப்பன். இடத்தை வாங்க வந்தவன், நம்ம ஆளை யோசிக்கவே
விடவில்லை!

"அப்பச்சி, செட்டி மக்களை நம்பி எத்தனை பணத்தை வேண்டுமென்றாலும்
கொடுக்கலாம். ஆகவே பிடியுங்கள்" என்று சொல்லி ஒரு லட்ச ரூபாயைக் கையில்
கொடுத்துவிட்டான். இன்றைய மதிப்பில் அது சுமார் 25 லட்ச ரூபாய்க்குச் சமம்

வந்தவன் மேலும் சொன்னான்,"அப்பச்சி, இடத்திற்கு விலை அதிகம்தான். இருந்தாலும்
அதை ஏன் வாங்குகிறேன் என்றால் எனக்குக் குறி பார்த்துச் சொன்னவன் இந்த
இடத்தை வாங்கித் தொழிற்சாலையைக் கட்டு என்று சொல்லியிருக்கிறான். அதனால்
தான் விலையைப் பற்றிக் கவலைப்படாமல் இடத்தை வாங்குகிறேன். கிரயத்தை
நாளைக்கே வைத்துக் கொள்வோம்."

அதன்படியே அரங்கேறியது. முத்தப்பனின் தந்தைக்கும் அந்த டீலிங்'கில்
மகிழ்ச்சிதான். இருக்காதா பின்னே? இரண்டு மடங்கு பணம் என்றால்
சாதாரணமா என்ன?

பணம் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு வைக்கப்பெற்றது.

அதே போன்று உள்ளூர் சிவன் கோவில் காரியக்காரர் கொடுத்த பிரஷரில், அவருக்கு
வேண்டிய நபருக்கு, முத்தப்பன் பெயரில் இருந்த வீட்டையும் விற்க வேண்டியதாயிற்று
அதிலும் ஆச்சரியம் என்ன வென்றால் அதற்கும் இரண்டு பங்கு விலையாக ஒரு
லட்ச ரூபாய் கிடைத்தது. அந்தப் பணமும் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு
வைக்கப் பெற்றது.

இதெல்லாம் ஏழரைச் சனி துவங்கி ஒருவார காலத்திலேயே நடந்து முடிந்தது.

முத்தப்பனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. மாமா, நேரம் சரியில்லை என்று
சொன்னாரே தவறாகச் சொல்லியிருப்பாரோ? சரியில்லை என்றால் இரண்டு மடங்கு
விலை சொன்னதற்கு இரு டீலிங்குகளுமே ஊற்றிக் கொள்ளாமல் கனகச்சிதமாக
முடிந்து கைக்குப் பணம் வந்தது எப்படி?

உண்மையில் மாமா சொன்னது தவறா? அல்லது தனது ஜாதகமே தவறா?

அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

குழப்பத்தைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முகமாக, அடுத்த நாள் காலையில்,
தன்னுடைய மாமாவைச் சென்று பார்த்தான். விஷயத்தை முழுமையாகச் சொல்லித்
தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.

மாமா புன்னகைத்துவிட்டுச் சொன்னார்.

"மாப்ளே, ஜாதகம் தவறுவதற்குச் சான்சே இல்லை. உன் ஆத்தா, உன்னைப் பெற்றது
எங்கள் வீட்டில். மருத்துவப் பெண்மணியைக் கூட்டிக்கொண்டு வந்து பிரசவம்
பார்க்க உதவியது எல்லாம் நான்தான். அதோடு நீ பிறந்த அந்தக் கணமே
ஜாதகத்தைக்
கணித்து எழுதிக்கொடுத்ததும் நான்தான். அதிலெல்லாம் சந்தேகப்
படாதே. நான்
சொல்லியதிலும் தவறில்லை. விரையச் சனியைப் பற்றி உனக்குத்
தெரியாது. ஆகவே
எச்சரிக்கையாக இரு. அவ்வளவுதான் சொல்ல முடியும்!"

"சரி, மாமா, இரண்டு சொத்துக்களுமே சுமாரான சொத்துக்கள்தான். இரண்டு மடங்கு
விலைக்குப் போனது எப்படி?"

"சனி, உன்னைப் பிடித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, உன் பெயரில் இருந்த இரண்டு
சொத்துக்களையும் காலி செய்தான் பார்த்தாயா? அதை ஏன் நீ யோசிக்கவில்லை?
உன் பெயரில் இப்போது என்ன இருக்கிறது?"

"இரண்டு லட்ச ரூபாய் பணம் வங்கி டெபாசிட்டாக இருக்கிறதே மாமா?"

"ஆங், அதையாவது பத்திரமாக வைத்துக் கொள். போய் வா!"

--------------------------------------------------------------------------------------
அது நடந்து பத்து நாட்கள் இருக்கும். ஏகப்பன் மறுபடியும் வந்தான்

"டேய், கம்பம், தேனி, உப்பார்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் வட்டிக்கடை
நடத்தினால் நன்கு சம்பாதிக்கலாமாம். என் மாமனார் சொல்கிறார். நான்
வைக்கலாம் என்று இருக்கிறேன். நீயும் வா. பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு
இருவரும் சேர்ந்து கடை வைக்கலாம். முன் அனுபவத்திற்கு என் மாமனார்
இருக்கிறார். அவர் வந்திருந்து நமக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுப்பார்."

"நான் வரவில்லை!" இது முத்தப்பன்

"ஏன்டா?"

"எனக்கு நேரம் சரியில்லை என்று என் மாமா சொல்லியிருக்கிறார். ஆகவே
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு நான் எந்த வியாபாரமும் செய்வதாக
இல்லை!"

"அட, மடையா, வியாபாரத்திற்கும், வட்டிக்கடைக்கும் உனக்கு வித்தியாசம்
தெரியவில்லையே உனக்கு? மிளகாய் வாங்கி விற்றால் வியாபாரம். பஞ்சை வாங்கி
விற்றால் வியாபாரம். வியாபரத்தில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. லாபமும்
உண்டு. நஷ்டமும் உண்டு. ஆனால் வட்டிக்கடை என்பது வங்கியைப் போன்றது.
வங்கியில் பெரிய அளவில் நகைக் கடன் கொடுக்கிறார்கள் இல்லையா? அதையே
சிறிய அளவில் ஒருவன் செய்வதுதான் வட்டிக்கடை. ஒருவனுக்கு, அவனுடைய
நகையை வாங்கிக் கொண்டு, அதன் மதிப்பில் பாதியைக் கடனாகக் கொடுக்கிறோம்
அவன் பணத்தைத் திருப்பித் தராவிட்டால், கொடுத்த பணத்தைவிட இரண்டு
மடங்கு மதிப்புள்ள தங்கம் நம்மிடம் ஈடாக இருக்குமே. அதாவது அடமானமாக
இருக்குமே. அது எப்படி வியாபாரம் ஆகும். அது தொழில். அதில் நஷ்டம்
வருவதற்குச் சான்சே இல்லை" என்று இவ்வாறாகவும், இதற்கு மேலாகவும் இரண்டு
நாட்கள் அற்புதமாகப் பேசி, முத்தப்பனின் மனதை கரைத்தான் ஏகப்பன்.

நம்ம ஆளுக்கு யோசிக்க யோசிக்க பிரம்மிப்பாக இருந்தது. ஏகப்பன் சொல்வதில்
உள்ள உண்மை புலப்படவும் செய்தது.

ஆகவே வட்டிக்கடை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தான். குடியிருக்கும்
வீட்டின் முன் பகுதியையே கடைக்கு உபயோகித்துக் கொள்வது என்றும் முடிவு
செய்தான். திண்டுக்கல் பெட்டகம் (Sefe Vault) ஒன்றும், தங்கத்தை எடைபோடும்
தராசு ஒன்றும் வாங்கினால் போதும். வீட்டோடு கடை என்பது மிகவும்
பாதுகாப்பானது

அவன் மனைவிக்கு அவனை விட மகிழ்ச்சியாக இருந்தது.

எல்லாம் மளமளவென்று ராக்கெட் வேகத்தில் நடந்தது.

இருவரும் தேனிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

கூடவே சனீஷ்வரனும் சென்றார்!

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், முத்தப்பனுக்கு விரையச்சனி.
ஏகப்பனுக்கு அவன் ஜாதகப்படி கோள்சாரத்தில் பதினொன்றில் சனி.

ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.

அதை அற்புதமாகச் செய்தார் சனீஷ்வரன். அவரால் முடியாதது எதுவும்
இல்லை. ஆகவே துவக்கத்திலேயே அதைச் செய்தார். அதற்கு உரிய
பாதையை முன்பே போட்டு வைத்தார்.

அப்படி என்ன செய்தார் சனீஷ்வரன்?

(தொடரும்)

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்!
மற்றவை அடுத்த பதிவில்!

வாழ்க வளமுடன்!

24.2.09

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்?

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்?

1953ஆம் ஆண்டு. மிஸ்ஸியம்மா' எனும் திரைப்படம் வெளிவந்து சக்கை போடு
போட்டுக்கொண்டிருந்த காலம். நாயகன் ஜெமினி கணேசன். நாயகி சாவித்திரி.
இசை ராஜேஷ்வர ராவ். பாடல்கள் எல்லாம் பிரபலம். "பிருந்தாவனமும்
நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ' என்கின்ற பாடல் பட்டி
தொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த காலம்.

பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களை நமது கதையின்
நாயகனும் கேட்டுப் பரவசமடைந்து கொண்டிருந்தான். சுக ஜீவனம். அதனால்
அது அவனுக்குச் சாத்தியமாயிற்று.

நாயகன் என்றால் பெயர் என்ன?

பெயர் இல்லாமலா? அவனுடைய பெயர் முத்தப்பன்.

பின்னாளில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் செட்டி நாட்டைப் பற்றி,
"முருகப்பன் இல்லாத வீடும் இல்லை; முத்தப்பன் இல்லாத தெருவுமில்லை" என்று
சிலாகித்துச் சொல்வார். அந்தப் பகுதியில் உள்ளவர்களின் பெயர்கள் எல்லாம்
குன்றில் வாசம் செய்யும் குமரனின் பெயராகவே இருக்கும்.

முருகப்பன், முத்தப்பன், பழநியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன் என்பதுபோன்ற
பெயர்களே அதிகமாக இருக்கும்.

கவியரசரின் இயற்பெயர் முத்தையா. அதுவும் குமரக் கடவுளின் பெயர்களில் ஒன்றுதான்

நமது நாயகனுக்கு அப்போது வயது 21. பள்ளி இறுதியாண்டுவரை படித்திருந்தான்.
அதுவரை படித்தாலே போதும். அப்போதெல்லாம் சட்டென்று வேலை கிடைத்துவிடும்.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, மதுரை வங்கி (Bank of Madura
தற்போதைய பெயர் ICICI Bank) ஆகிய வங்கிகளின் நிறுவனர்கள், இயக்குனர்கள்,
நிர்வாக இயக்குனர்கள், அதிகாரிகள், குமாஸ்தாக்கள் என்று அத்தனை பேர்களும்
செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் இருந்து யார் போனாலும் உடனே
வேலை கிடைத்துவிடும். குமாஸ்தாவிற்குச் சம்பளம் நூறு ரூபாய். Sub-staffற்குச்
சம்பளம் 75 ரூபாய். அப்போது அது பெரிய தொகை.

கணவன் மனைவி வெறும் 50 ரூபாயில் குடும்பம் நடத்தலாம். விலைவாசி அந்த
அளவிற்குத்தான் இருந்தது.

சென்னை மொழியில் சொன்னால் நாஷ்டாவை நாலணாவில் முடித்து விடலாம்.
அதாவது காலைப் பலகாரத்தை (Morning Tiffen) 25 பைசாவிற்குள் முடித்துவிடலாம்.

ஆனால் நமது நாயகன் வேலைக்குச் செல்லவில்லை. செல்வந்தர் வீட்டுப் பையன்.
எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று செல்லவில்லை.

பதினேழு வயதில் படிப்பை முடித்தவனுக்கு, அடுத்த ஆண்டிலேயே திருமணத்தைச்
செய்து வைத்து விட்டார்கள். அவனும் வேறு வேலை இல்லாதாதால், அடுத்தடுத்த
ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிக் குடும்பஸ்தனாகி
விட்டான்.

21வது வயதில்தான் பிரச்சினை ஆரம்பமானது. முதல் மூன்று ஆண்டுகள் வாயை
மூடிக்கொண்டிருந்த அவன் மனைவி, இப்போது நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.

எந்த வேலைக்கும் போகாமல் அல்லது எந்தத் தொழிலையும் செய்யாமல் வீட்டில்
சும்மா இருந்தால் எப்படி? மனிதன் கெட்டு விடமாட்டானா? அந்தக் கவலை
அவளுக்கு. அதோடு எத்தனை நாட்களுக்குத்தான் அந்தச் சிற்றூரிலேயே
இருப்பது?

அவளுக்கு, மதுரை, திருச்சி அல்லது சென்னை போன்ற பெரிய ஊர்களில் சென்று
வசிக்க ஆசை. அதனால் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

முத்தப்பனுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மூவரும் இளையவர்கள்.
அவர்கள் குடும்பத்திற்கு திருவாரூர் அருகே 100 ஏக்கர் நிலம் இருந்தது. காவேரி
செழிப்பாக ஓடிக் கொண்டிருந்த காலம் அது. ஆண்டிற்கு முப்போகம். நிலங்களை
நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு பேர்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்
திருந்தார்கள். குத்தகைக்காரர்களும் அந்தக் கால வழக்கப்படி சத்தியத்திற்குக்
கட்டுப்பட்டுக் குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கொடுத்து வந்ததோடு, ஆண்டிற்குப்
பத்து மூட்டை அரிசியையும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அதோடு உள்ளூரில் இருந்த நான்கு சிறு வீடுகளில் இருந்து மாத வாடகையும்
வந்து கொண்டிருந்தது.

முத்தப்பனுக்குத் திருமணம் முடிந்த கையோடு, அவனுடைய தந்தை குடும்பச்
சொத்தில் அவன் பங்கைப் பிரித்துக் கொடுத்துவிட்டார். வசிக்கும் பெரிய வீட்டுப்
பங்கும் திருவாரூர் நிலமும் பொது. அனுபவப் பாத்தியம் மட்டும். நான்கு
சிறுவீடுகளில் ஒன்றையும், அருகே ராமேஸ்வரம் செல்லும் சாலையில் இருந்த
ஐந்து ஏக்கர் நிலத்தையும் அவன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல், எதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த
முத்தப்பன், தன் தந்தையிடம் பேசினான். "எனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம்
இல்லை. ஏதாவது தொழில் செய்ய விரும்புகிறேன். என்ன தொழில் செய்யலாம்?"
என்று கேட்டான்

"தொழில் செய்வதற்கெல்லாம அனுபவம் வேண்டும். நினைத்தவுடன் நினைத்த
தொழிலைச் செய்ய ஆசைப்படக்கூடாது. ஆகவே எந்தத் தொழிலை அல்லது
வியாபாரத்தை செய்ய விரும்பினாலும், அதில் உள்ள நெளிவு சுழிவுகளைத்
தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு வியாபாரியிடம் முதலில் வேலைக்குச்
சேர்ந்து பணியாற்று. அல்லது ஒரு சிறு தொழிற்சாலையில் சேர்ந்து பணியாற்று,
ஒரு ஐந்து அல்லது ஆறு வருட அனுபவங்களுக்குப் பிறகு அதை நீ தனியாகச்
செய்யலாம்"

முருகப்பனுக்கு அதில் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த
போதுதான் அவனுக்குப் பளீரென்று அவனுடைய தாய் மாமாவின் நினைவு வந்தது.

அவனுடைய மாமா ஜோதிடத்தில் விற்பன்னர். தொழில் முறை ஜோதிடர் அல்ல!
ஜோதிடத்தைக் கற்றுத் தேறியவர் கற்றுத் தெளிந்தவர். அந்தச் சிற்றூர்
மக்களெல்லாம் தங்களுடைய பிரச்சினைகளுக்கு அவரைத்தான் சென்று
பார்ப்பார்கள்.

அவர் பைசாக் கூடப் பணம் வாங்கிக் கொள்ளாமல் வருகிறவர்களுக்கு
இலவசமாகப் பார்த்துச் சொல்வார். வழவழா கொழ கொழா வெல்லாம் இருக்காது.
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். ஒரு கேள்விக்கு மேல் பார்த்துப்
பலன் சொல்ல மாட்டார். மீறிக்கேட்டால், பிறகு வாருங்கள் பார்க்கலாம் என்று
கூறி அனுப்பி விடுவார்.

'அடடா, மாமாவைக் கேட்டால் போதுமே' என்று நினைத்தவன், உடனே
செயலில் இறங்கினான்

**********************************************************

காலை மணி ஒன்பது. அவனைப் பார்த்தவுடன் மாமா அன்புடன் வரவேற்றார்.

தான் வந்த விஷயத்தை அவன் சொன்னவுடன், மாமா ஜாதகத்தைக் கையில்
வாங்கிப் பார்த்தார்.

அவர் முன்பே இரண்டொருமுறை பார்த்திருந்தாலும், நடப்பு திசை, நடப்பு
கோள்சாரத்தை வைத்துப் பலன் சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு காகிதத்தில்
குறிப்பெடுத்துக் கொண்டவர், அவனை நோக்கி அதிரடியாகச் சொன்னார்.

"கண்ணா, இன்னும் மூன்று நாட்களில் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
சனீஷ்வரன் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயறுகிறார்.
நீ கேட்டை நட்சத்திரக்காரன். உனக்கு விரையச் சனி ஆரம்பம். நல்ல
நேரத்திற்குத்தான் ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய். பணத்தைப்போட்டு எந்தவிதமான வியாபாரத்தையும் நீ
இப்போது செய்யாதே! உனக்கு இது முதல் சுற்றுச் சனி. அதாவது மங்குசனி.
அதோடு சணீஷ்வரன் ராசிக்குப் பன்னிரெண்டில் சஞ்சாரம் செய்யும் காலம்
நன்மையாக இருக்காது. ஆகவே புது முயற்சி எதுவும் வேண்டாம். முடிந்தால்
வேலைக்குப்போ. இல்லையென்றால், வீட்டில் இப்போது இருப்பதைப்
போலவே சாப்பிட்டுவிட்டு சும்மா இரு. மற்றதை இரண்டரை ஆண்டு காலம்
சென்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். நான் சொன்னதை நன்றாக நினைவில்
வைத்துக் கொள். தவறினால் விரையச் சனி உன்னைக் கொட்டிக் கவிழ்த்து
விட்டுப் போய் விடும். அதை நினைவில் வை. போய் வா!"

மாமா சொன்னால் அது வேதவாக்கு. அதை மனதில் ஏற்றிக் கொண்டவன்,
அவரை விழுந்து வணங்கி விட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

மூன்று நாட்கள் சென்றது. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு சென்று,
கூட்டத்தோடு கூட்டமாக சனிக்குளத்தில் முங்கிக் குளித்தெழுந்து,
சனீஷ்வரனையும் திவ்யமாக வணங்கி விட்டுத் திரும்பினான்.

மாமா சொன்னதை அட்சரம் பிசகாமல் கேட்பவன் முத்தப்பன் என்பதால்
சனீஷ்வரன் அவனை விட்டுவிடுவாரா என்ன?

சனீஷ்வரனும் தனக்குள்ள கர்மக் கணக்குப்படி, ஏழரைச் சனிக் கணக்கில்
அவன் பெயரைச் சேர்த்துக் கொண்டு திருநள்ளாறிலிருந்து அவனை அனுப்பி
வைத்தார்.

சனிக் கணக்கும் சென்னை ஆட்டோ மீட்டர் போல ஓட ஆரம்பித்தது.

அவன் மாமாவின் சொற்களை நினைத்துக் கொண்டு, மன உறுதியோடு
இருக்க முடிவு செய்தான்.

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் சனீஷ்வரன்? எத்தனை முத்தப்பன்களைப்
பார்த்தவர்
சனீஷ்வரன்?

யாரை எப்படிப் பிடிக்க வேண்டும்? யாரை எப்படி மடக்க வேண்டும்?
யாரை எப்படித் துவைக்க
வேண்டும்? என்று அறியாதவரா அவர்?

முத்தப்பன் தன் வழியில் செல்ல, முத்தப்பனின் ஆத்மார்த்தமான நண்பன் வடிவில்
வந்து நின்றார் அவர். வந்து நின்றவர் புன்னகைக்கவும் செய்தார்

(தொடரும்)


வாழ்க வளமுடன்!

23.2.09

கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!


கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!

வாழ்க்கையை இரண்டு இரண்டாகப் பிரித்து, இரவு,பகல், உறவு, பகை
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அற்புதமாகப் பாடலை
எழுதிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள், அந்தப் பாடலை முடிக்கும்போது
இப்படி எழுதினார்.

"இளமைவரும் முதுமைவரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும்வரும் பயணம் ஒன்றுதான்"

இரண்டு இரண்டாக விளக்கம் சொன்னவர், பிறகு இரண்டை ஒன்றாகக்
காட்டி எழுதினார் அது அவருக்கு மட்டுமே சாத்தியமான எழுத்து.

அதாவது பெண்டாட்டி, பிள்ளை என்று கூட்டாக வாழ்க்கைப் பயணத்தைத்
தொடரலாம் அல்லது எல்லாவற்றையும் துறந்துவிட்டு அல்லது இழந்து தனியாக
வாழவும் நேரிடலாம் என்று பொருள்படும்படி "தனிமைவரும் துணையும்வரும்
பயணம் ஒன்றுதான்" என்று சொன்னவர், தொடர்ந்து சொல்கிறார்.

"கண்கள்இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"

அருமை! அருமை! அதுதான் கவியரசர்!
--------------------------------------------------------------------------------
காட்சி ஒன்றாக இருந்தாலும், அதாவது கிரகங்கள் ஒருவீட்டில் இருக்கும்
காட்சி ஒன்றாக இருந்தாலும் பலன்கள் ஒன்று இல்லை. வெவ்வேறாகும்
அவைகள் தங்களின் தசா புத்திகளில் அததற்கு உரிய பலன்களையே
தரும்

கேதுவும் சனியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது அல்ல! இருவருமே
தீய கிரகங்கள். ஒன்றாக இருப்பதால் என்ன நன்மை கிடைத்துவிடும்?
கேது செவ்வாயைப் போன்று செயல் படக்கூடியவர். சனியுடன் அவர்
சேர்ந்து இருப்பது ஜாதகனுக்கு அதிகமான தீமைகளே விளையும்.
-------------------------------------------------------------------------------
நேரமின்மையால் இன்று அரட்டைக் கச்சேரி இத்துடன் முடிகிறது.
அடுத்துப் பாடம்! படித்துப் பயனுறுக!

கேதுவுடன் சனி சேர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில்

லக்கினம் என்பது தோற்றம், உடல் சம்பந்தப்பட்ட இடம். இங்கே இந்த
வில்லன்கள் இருவரும் இருப்பது நல்லதல்ல. உடல் உபாதைகள், உடற்
குறைபாடுகள் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். இங்கே கேதுவுடன் சேரும்
சனீஷ்வரன் வக்கிரகதியில் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்
The native will suffer with chronic diseases
----------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்

கையில் காசு தங்காது. எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு
பணம் வந்தாலும் பத்தாது. அதற்குமேல் செலவு உண்டாகும். பூர்விக
சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் கரைந்துவிடும்.
----------------------------------------------------------------------------------
3ல் அதாவது மூன்றாம் வீட்டில் இருந்தால்

உடன்பிறப்புக்களால், குறிப்பாக சகோதரர்களால் ஜாதகனுக்கு எந்த நன்மையும்
இருக்காது. தொல்லைகள் அதிகமாக இருக்கும். There won't be cordial
relationship!
--------------------------------------------------------------------------------------------
4ல் அதாவது நான்காம் வீட்டில் இருந்தால்

ஜாதகரின் நடத்தை சரியாக இருக்காது. மெச்சும்படியாக இருக்காது. அவரைச்
சூழ்ந்திருப்பவர்களுக்கு, அவரால் நன்மைகள் எதுவும் இருக்காது. மேற்கொண்டு
ஜாதகனால், அவனுடைய குடும்பத்தினர்களும், நண்பர்களும் அவதிப்படவே
நேரிடும்.

பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான். யாருக்கும் கட்டுப்படாதவளாக
இருப்பாள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மட்டுமே அதற்கு
விதிவிலக்காகும். அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.
-----------------------------------------------------------------------------------------------
5ல் அதாவது ஐந்தாம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு இல்லற வாழ்வில் அக்கறை இருக்காது. எதிலும் பிடிப்பு இருக்காது
துறவு மனப்பான்மை மேலோங்கியிருக்கும். புராணங்கள், வேதங்களில் அதிக
ஈடுபாடு இருக்கும். சிலர் மடங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்கள்
------------------------------------------------------------------------------------------------
6ல் அதாவது ஆறாம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் ஏமாற்றம், திருட்டு, துரோகம் என்று பலவழிகளிலும் தன் பொருட்களை
செல்வத்தைப், பணத்தைப் பறிகொடுக்க நேரிடும். அல்லது இழக்க நேரிடும்.
சிலருக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டு, உடல் செயல் இழந்து போகும்.

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூரிய தொல்லைகள்
இருக்காது. ஜாதகன் பொதுச் சேவைகளில் ஈடுபடுவான்.

இந்த அமைப்பு பன்னிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பலவிதமான விரயங்களும்
ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------------
7ல் அதாவது ஏழாம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் அதீதமான உடல் இச்சைகளை உடையவன். பல பெண்களிடம் உறவு
கொள்வான். உறவுமுறைகள், வயது முறைகள் எதுவுமின்றி உறவு சொள்வான்
சிலர் தங்கள் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். இளமையிலேயே வயதான
தோற்றம் உண்டாகும். இந்த அமைப்பு லக்கினத்தைப் பார்ப்பதால் அந்த நிலை
உண்டாகும்
-------------------------------------------------------------------------------------------------
8ல் அதாவது எட்டாம் வீட்டில் இருந்தால்

இந்த அமைப்பினால், எட்டாம் வீட்டிற்கும் பாதிப்பு, அதே நேரத்தில் இவர்கள்
இருவரின் பார்வையினால் இரண்டாம் வீட்டிற்கும் பாதிப்பு.

ஜாதகருக்குப் பல தடைகள், செயல்பாடுகளில் அவதிகள் உண்டாகும். குடும்ப
வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்.
இறுதியில் ஜாதகர் பெரிய ஞானியாகிவிடுவார். அது ஒன்றுதான் நன்மை
ஞானம் பெறுவது நன்மைதானே?
-------------------------------------------------------------------------------------------------
9ல் அதாவது ஒன்பதாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் தீவிர இறை நம்பிக்கைகளை உடையவாராகி விடுவார். பல இறைப்
பணிகள், மற்றும் அறப்பணிகளை மேற்கொள்வார். பாதி நாட்கள் கோவில்
குளம், புனித நதியில் நீராடுதல் என்று ஊர் ஊராகச் சுற்றுவார்
-------------------------------------------------------------------------------------------------
10ல் அதாவது பத்தாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறித் துறவியாக
வாழ்வார். ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பெரிய பேச்சாளராக அல்லது மத போதகராக
அல்லது இறையடியாராகத் தன் வாழ்நாட்களைக் கழிப்பார்.
-------------------------------------------------------------------------------------------------
11ல் அதாவது பதினொன்றாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் துறவு மேற்கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபடுவார். புகழ் பெறுவார்
நாடறிந்த துறவியாக இருப்பார். தனக்குத் தெரிந்த நல்வழிகளைப் பிறருக்குச்
சொல்லும் வாழ்க்கையை மேற்கொள்வார்
-------------------------------------------------------------------------------------------------
12ல் அதாவது பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்

உடல் வியாதிகள், சிறைவாசம், தனித்த வாழ்க்கை என்று ஜாதகனின் வாழ்க்கை
மகிழும்படியாக இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் இதுவே
அரங்கேறும். வயதான காலத்தில் தன் சொந்த ஊரைவிட்டு வெளி இடங்களில்
வாசம் செய்ய நேரிடும்
-------------------------------------------------------------------------------------------------
கேது திசைப் பலன்கள்.

முன் பாடத்தில் விவரமாக உள்ளது. அதைப் படியுங்கள்

சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காகக் கீழ் கொடுத்துள்ளேன்

கேதுவின் மகா திசையில், குரு புக்திக் காலம் (sub period of Jupiter)
11மாதம் 6 நாட்கள் மற்றும்
கேதுவின் மகா திசையில், புதன் புத்திக் காலம் (sub period of Mercury)
11 மாதம் 27 நாட்கள்

ஆகிய நாட்கள் மட்டுமே நன்மையாக இருக்கும். அதாவது ஏழாண்டு
காலப்பலனில் சுமார் இரண்டாண்டு காலம் மட்டுமே நன்மை பயக்கூடியதாக
இருக்கும்
----------------------------------------------------------------------------------------
கேதுவின் கோச்சாரப் பலன்கள். அதாவது கோள்சாரத்தில், தனது சுற்றில்
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் காலத்தில் கேதுவால்
உண்டாகும் பலாபலன்கள். கோள்சாரம் சந்திர ராசியை வைத்துத்தான் கணக்கில்
வரும். அதை நினைவில் கொள்க!

1ல்: * Loss, ill-health or disease
2ல்: * Loss of money
3ல்: * Happiness, gain, increase
4ல்: * Fear, trouble both physical or mental
5ல்: * Sorrow, loss of money
6ல்: * Happiness, gain of money
7ல்: * Evil state of affairs, illness
8ல்: * Loss, threatened trouble
9ல்: * Sinful actions, humility
10ல்: * Fear, sorrow
11ல்: * Good name and fame, gain of money
12ல்: * Physical ill-health or mental distress, enmity
-------------------------------------------------------------------------------------------
இங்கே கூறியிருப்பவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களில்
உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து, இவைகள் கூடலாம் அல்லது குறையலாம்
அல்லது இல்லாமலும் போகலாம்.

கேதுவைப் பற்றிய பாடம் இத்துடன் நிறைவுறுகிறது.

பொறுமையாகப் பாடங்களைப் படித்த அத்தனை மாணவக் கண்மணிகளுக்கும்
நன்றி உரித்தாகுக!

வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

19.2.09

ஜோதிடப் பாடம் எண்.175

ஜோதிடப் பாடம் எண்.175

சென்ற மூன்று வகுப்புக்களாக வேண்டிய அளவு கதைகளைச் சொல்லிவிட்டேன்.
ஆகவே இன்று கதை எதுவும் இல்லை.
நேரடியாகப் பாடங்கள். பாடங்கள். பாடங்களே!
----------------------------------------------------------------------------------
கேது & குரு

குரு தன்னுணர்விற்கு உரிய கிரகம். கேது தன்னைப்பற்றி முழுமையாக அறிவதற்கு
உள்ள கிரகம். இரண்டும் சேரும்போது, ஜாதகன் மனித வாழ்வின் அமைப்பையும்,
மனித வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக உணர்வான். அதாவது அவனுக்கு
ஞானம் கிடைக்கும். இறுதியில் பிறப்பிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவான்.

சில ஜாதகர்களுக்கு இதே கூட்டணி (குரு வக்கிரம் பெற்று இருப்பின்) சமுதாயத்
திற்கு எதிரான சிந்தனையை ஜாதகனுக்குக் கொடுக்கும். போதைப் பொருட்
களுக்கு அடிமைப்படுத்தும், கீழானவர்களுடன், தீய சக்திகளுடனும் ஜாதகனுக்குப்
பழக்கத்தை உண்டு பண்ணும்.

1, 4, 5, 9 or 12 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி அமைவது நல்லது. எட்டாம்
வீட்டில் இக்கூட்டணி இருப்பது மட்டும் நன்மை இல்லை.

எட்டாம் இடத்துக் கூட்டணி ஜாதகனுக்கு பல நோய்களை உண்டாக்கக்கூடும்.

2,3,6,10 or 11 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி இருந்தாலும் ஓரளவிற்கு நன்மை
செய்யும். தீமை இல்லை! 7ல் இருப்பது சராசரி. நல்லதும் கெட்டதும் கலந்தது.

----------------------------------------------------------------------------------
கேது & சுக்கிரன்

venus & ketu have opposite gunas and on physical level,
ketu does hammer (curtail) venus's natural significations.

சுக்கிரன் கேது கூட்டணி 1ல் இருந்தால் ஜாதகனுக்கு இல்லற வாழ்வில்,
குறிப்பாக மனைவியால் பிரச்சனைகள் உண்டாகும்.

சுக்கிரன் கேது கூட்டணி 2ல் இருந்தால் ஜாதகனுக்கு இரு தாரங்கள்
அமையும். இரண்டு குடும்பங்கள் அமையும். இரண்டு குடும்பங்களிலும்
மாட்டிக்கொண்டு, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர்
இடம் வேண்டும்" என்று பாடுவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 3ல் இருந்தால் ஜாதகன் செய்யக்கூடாத செயல்களைச்
செய்துவிட்டு அடிக்கடி அவதிப்படுவான். இந்த அமைப்பிலுள்ள சிலர் போதைப்
பொருட்களுக்கு அடிமைப்பட நேரிடலாம்.
அது என்ன சிலர்? சரியாகச் சொல்லுங்கள்!
அதாவது இந்தக் கூட்டணி 3ல் இருக்க லக்கினாதிபதி வீக்காக இருப்பவர்கள்
மட்டும்தான் அந்தச் சிலர். போதுமா?

சுக்கிரன் கேது கூட்டணி 4ல் இருந்தால் ஜாதகனின் நடத்தைகள் சரியாக இருக்காது.
அவனுடைய நட்புகளும் சரியாக இருக்காது.

சுக்கிரன் கேது கூட்டணி 5ல் இருந்தால் ஜாதகன் காதல், கத்திரிக்காய் என்று
அலைந்து துன்பப்படுவான். திருப்தியான காதலி கிடைக்க மாட்டாள்.
எவளையாவது காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டு அவள்
கையால் நித்தமும் அடி வாங்குவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 6ல் இருந்தால் ஜாதகனுக்கு தன்னைவிட வயதில் மூத்த
பெண்கள் அல்லது விதவைகள் போன்றோருடன் முறையில்லாத உறவுகள் ஏற்படும்.
'அந்த' விஷயத்தில் ஜாதகன் அவதிப்படவே பிறந்தவன்.

சுக்கிரன் கேது கூட்டணி 7ல் இருந்தால் ஜாதகனுக்கு அவன் மனைவியுடன்
ஒத்துப்போகும் வாழ்க்கை அமையாது. விவகாரமான, வில்லங்கமான வாழ்க்கை
அமையும்.

சுக்கிரன் கேது கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகன் சொத்து, சுகங்களை இழந்து
அவதிப்பட நேரிடும். வண்டி வகனங்களைத் தொலைத்துவிட்டு நடந்துபோக நேரிடும்.
அவைகள் இருந்தாலும், நிம்மதி இருக்காது.

+++சுக்கிரன் கேது கூட்டணி 9ல் இருந்தால் ஜாதகனுக்குப் பல யோகங்கள்
உண்டாகும். ஜாதகனுக்கு அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்.

+++சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை
நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான்.

+++சுக்கிரன் கேது கூட்டணி 11ல் இருந்தால் ஜாதகன் மருத்துவத்துறையில்
அல்லது ரசாயனத்துறையில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக
இருக்கும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் எதிரிகளாக
இருப்பார்கள்.

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

17.2.09

விதியை மதியால் வெல்ல முடியுமா?


-------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்
ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே
அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று
உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக்
கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும்
கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள்
அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின்
முடிவில் உள்ள அதிகாரம்

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி
அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே
சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில்
பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும்
பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே
பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே
சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன?
அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும்
வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை
எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு
இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து
முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா
என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண
குருவின் சரித்திரம் (அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய
மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று
சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த
உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து,
வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின் துகள்களைத்
தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில்
உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது எப்படி இயங்குகிறது?
உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம்
இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன் அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை
விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு
முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்

ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்
கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
இளைஞன் ஒருவன் ஆலமரத்தடியில் படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியே சென்ற ஞானி ஒருவர் அவனைப் பார்த்தவுடன் நின்று விட்டார்

இப்படிப் பகல் நேரத்தில் சுகமாகப் படுத்துத் தூங்கினால், அவன் கெட்டுச்
சீரழிந்து விடுவானே என்று நினைத்தவர், அவனைத் தட்டி எழுப்பினார்.

எழுந்தவன், கேட்டான்,"யோவ் பெரிசு, எதுக்கு எழுப்பினே?"

"பகலில் உறங்குவது நல்லதல்ல!"

"சும்மா உக்காந்திருப்பதும் நல்லதல்ல! அதனால்தான் தூங்குகிறேன்"

"ஏன் வேலைக்குச் செல்லலாமே?"

"ஒரு வேலையும் கிடைக்கவில்லை!"

"வேலை அதுவாகக் கிடைக்காது. நீயாகத்தான் தேடிப்பிடிக்க வேண்டும்"

"தேடிப்பிடித்துச் செய்தால்?"

"நான்கு காசு கிடைக்கும். அதுவே சில ஆண்டுகளில் நான்காயிரம்
காசுகளாகும்"

"அதை வைத்து என்ன செய்வது?"

"சொந்தமாகத் தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டலாம்"

"ஈட்டி....?"

"வீடு வாசல் என்று சொந்தமாகக் கட்டிக்கொள்ளலாம்"

"சொந்தமாகக் கட்டி...?"

"சுகமாக வாழலாம்!"

"இப்போது, அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்னை அறுக்காமல்
நீர் உம் ஜோலியைப் பாரும்!" என்று கத்திச் சொன்னவன், மீண்டும் படுத்து
உறங்க ஆரம்பித்துவிட்டான்.

இந்த மாதிரிப் பிறவிகளுக்குச் சொன்ன மொழிகள் ஏராளம்.

"சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்"
என்று பட்டுக்கோட்டையார் சொன்னது மறக்க முடியாத ஒன்றாகும்
------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்
பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது
முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.
எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த
அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ்
உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை
எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக்
கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக்
கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின
உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய வைத்தன!


இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும்
என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே
அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப்
படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு
காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம்.
வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த
இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே
செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித்
தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps
called friends, caution lights called family, and you will have flats
called jobs.

But, if you have a spare called determination, an engine called
perseverance, insurance called faith, and a driver called God,
you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the
storms of time can never destroy.
---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா?
ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது
நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல
பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு
அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும்.
ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது
நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது!
காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா?
அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வகுப்பறை,
வாத்தியார்!


வாழ்க வளமுடன்!

13.2.09

அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

செழிப்பான கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடுகளும், சிறு சிறு குன்றுகளும் நிறைந்து
பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். பக்கத்தில் காட்டாறு ஒன்றும் ஓடி, அதன் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அந்தக் கிராமத்திற்கு வந்திருந்த செல்வந்தர் ஒருவர், அதன் சுற்றுப்புறச் சூழலில் மயங்கி, ஒரு வாரம் தங்கி விட்டார்.

தங்கியிருந்த அவருக்கு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர் தடபுடலாக விருந்து உபசாரம் செய்து அவரை
மேலும் மகிழ்வித்தார்.

அந்த சின்ன கிராமத்தில் இருந்த சுமார் 200 வீட்டுக்காரர்களுக்கும் அவர் நன்கு பரீட்சயம் ஆகிவிட்டார். அதற்குக் காரணம்
அந்தக் கிராம மக்களுக்காக அவர் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வ தாக வாக்களித்ததோடு, அதற்கான பணத்தையும் கொடுத்திருந்தார்,

அவர் தங்கியிருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வெள்ளை நிறக் குதிரை ஒன்று அம்சமாக இருந்தது. வந்த நாள் முதலாகத் தினமும் அதைப் பார்த்து மகிழ்ந்த அந்த செல்வந்தர், தன் நண்பரிடம் மெதுவாகக் கேட்டார்.

"சிவசாமி, அந்தக் குதிரை மிகவும் அம்சமாக இருக்கிறது. விலைக்குக் கிடைக்குமா?"

உடனே சிவசாமி பதில் அளித்தார்.

"அந்த வீட்டுக்காரன் கட்டுப்பெட்டியான ஆசாமி. தரமாட்டான். எங்கள் கிராமத்தில் வேறு வீடுகளிலும் குதிரைகள் உள்ளன.
அவைகள் கிடைக்கும்"

"இல்லை. எனக்கு இதுதான் வேண்டும். கேட்டுப்பார். எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்போம்"

உடனே சிவசாமி, எதிர்விட்டுக் கந்தசாமியைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிக் குதிரையைக் கேட்டார். நினைத்தபடி அவன் மறுத்துவிட்டான். சந்தையை விலையைப் போல இரண்டு மடங்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதற்கும் அவன் மசியவில்லை.

திரும்பிவந்து, நடந்ததைத் தன் நண்பரிடம் சொன்னார்.

நண்பருக்கு ஒரு வேகம் வந்து விட்டது. நினைத்ததை முடிக்கும் சுபாவம் மிகுந்தவர் அவர்.

"பத்து மடங்கு பணம் கொடுப்போம்.கேட்டுப்பார்" என்றார்.

அவன் அதற்கும் மசியவில்லை. அவர் சற்று வருத்தத்துடன் கிளம்பிப் போய்விட்டார்.

பத்து மடங்கு பணம் என்பது ஐந்து லட்ச ரூபாய்.

செய்தி, உடனே காட்டுத் தீயைப் போலக் கிராமம் முழுவதும் பரவி விட்டது. விஷயத்தை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவர் வந்து, அவனை பார்த்துத் திட்டித் தீர்த்தார்கள். அதோடு தங்கள் கருத்தையும் முத்தாய்ப் பாய்ச் சொன்னார்கள்.

"அட மடச்சாம்பிராணி, ஐந்து லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை? அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாயே!
நீ அதிர்ஷ்டமில்லாதவன்டா! (யு ஆர் லன்லக்கி!) தேடிவந்த ஸ்ரீதேவியை உணராதவன்டா! "

"ஐந்து லட்சத்தை வேண்டாம் என்று சொன்னதை வைத்து நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்" என்று சொல்லி அவர்களைக் கந்தசாமி அனுப்பி வைத்தான்.

"அடக் கிறுக்கா!" என்று அவனை மனதிற்குள் ஒருமுறை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை!

கந்தசாமி வீட்டுக் குதிரையைக் காணவில்லை.

தன் மகனைத் துணைக்கழைத்துக் கொண்டு கிராமம் முழுவதும் கந்தசாமி தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. பேசாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டான்.

இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவி, அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கந்தசாமியின் குதிரையை யாரோ லவட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதாவது திருட்டுப்போயிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

அன்று மாலை, முதல் நாள் வந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் திரும்பவும் வந்தார்கள்

"அடேய், ஐந்து லட்சம் பணத்தையும் தவற விட்டாய். இப்போது உன்னுடைய குதிரையும் போய் விட்டது. இதற்கு என்ன சொல்லப்போகிறாய்? நேற்று நாங்கள் சொன்ன போது நீ ஒப்புக்கொள்ளவில்லையே? இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா - நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்று?"

புன்னகைத்துவிட்டுக் கந்தசாமி அவர்களுக்குப் பதில் சொன்னான்:

"குதிரை இப்போது இங்கே இல்லை. அது மட்டுமே உண்மை. அதை மட்டும் வைத்து நீங்கள் என்னைக் குறை சொல்லாதீர்கள் மேலும் துரதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள்.அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்"

அவர்கள் போய்விட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன ஆச்சரியம். அதற்கு அடுத்த நாள் காலையில் கந்தசாமியின் குதிரை திரும்பி வந்து விட்டது. வந்த குதிரை சும்மா வரவில்லை. காட்டுக்குள்ளிருந்து மேலும் பத்துக் குதிரைகளைத் தன்னுடன் ஈர்த்துக் கொண்டு வந்து விட்டது. கந்தசாமி, தன் குதிரையுடன் அந்தப் பத்துக் குதிரைகளையும் சேர்த்துத் தன் தோட்டத்தில் கட்டி வைத்தான்.

ஒட்டு மொத்த கிராமமும் இந்த நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியது.

கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் மீண்டும் வந்தார்கள்.

"அப்பனே எங்களை மன்னித்துவிடு. நாங்கள் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். நீ அதிர்ஷ்டசாலியடா!" என்று மகிழ்ந்து பாராட்டினார்கள்

கந்தசாமி அதற்கும் பொறுமையாகப் பதில் சொன்னான்.

"என் குதிரை திரும்பி வந்து விட்டது. வரும்போது பத்துக் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்துள்ளது. அதுதான் உண்மை.
வந்த அந்த பத்துக் குதிரைகளால் என்ன நேரப்போகிறது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதை வைத்து என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள். அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன்"

"அட லூசுப் பயலே!" என்று மனதிற்குள் ஒருமுறை அவனை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் சென்றது.

கந்தசாமியின் ஒரே மகனும், பதினெட்டு வயது நிரம்பிய இளைஞனுமான முருகானந்தன், வந்த குதிரைகளில் ஒன்றில் ஏறிப்
பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோது, அந்தக் குதிரை, முரட்டுத்தனமான அவனைக் கீழே தள்ளியதில், வலது காலில் அடிபட்டு விட்டது.

கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. அருகில் இருந்த நகரத்தில் இருந்து, நுட வைத்தியர் ஒருவரை அழைத்து வந்தான் கந்தசாமி. வந்தவரும் அவனுடைய மகனுக்குச் சிகைச்சையை மேற்கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட, அவனுடைய உறவினர்கள் இருவரும் மீண்டும் கந்தசாமியை வந்து பார்த்தார்கள். அடிபட்டுப் படுத்திருந்தவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

சற்று நேரம் இருந்துவிட்டுப் போகும்போது மறக்காமல் இப்படிச் சொல்லிவிட்டுப்போனார்கள்.

"நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்பது மட்டும்தான் இப்போது உண்மை!"

கந்தசாமி லேசாகப் புன்னகைத்தனே தவிர, வேறு ஒன்றும் சொல்லவில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை.

அந்த நாட்டு அரசின் உத்தரவின் பேரில், அந்தக் கிராமத்திற்குத் தன் பரிவாரங்களுடன் வந்த ராணுவத் தளபதி, கட்டாய
ராணுவ சேவை என்ற பெயரில் கிராமத்தில் இருந்த அத்தனை இளைஞர்களையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார் - கந்தசாமியின் மகனைத்தவிர.

கந்தசாமியின் மகனுக்கு, எலும்பு முறிந்து சிகிச்சை நடப்பதால், அவனை மட்டும் விட்டு விட்டார்கள்.

ஒட்டு மொத்த கிராமமும், தங்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்த சோகத்தில் இருந்தது.

அன்றும், கந்தசாமியைப் பார்த்துப் பேசிவிட்டுப்போக வந்த அவனுடைய உறவினர்கள் இருவரும் ஒருமித்த குரலில்
சொன்னார்கள்.

"எது அதிர்ஷ்டம்? அல்லது எது துரதிர்ஷ்டம்? என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு (மனிதனுக்கு) இல்லை. அதுதான் உண்மை. அதை உணர்ந்து வைத்திருக்கும் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். உனக்கு ஒரு குறையும் வராது."

(தொடரும்)
வாழ்க வளமுடன்!

11.2.09

முழுப் பணமும் முக்கால் கிழவியும்!


முழுப் பணமும் முக்கால் கிழவியும்!

மனிதனுக்கு எது முக்கியம்?

மில்லியன் டாலர் கேள்வி இது!

சரியான பதிலை ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு பதில் வரும். ஒருமித்த கருத்து என்பது
இருக்காது

ஏன் இருக்காது?

ஒவ்வொருவரின் புத்தி அளவும், எண்ணங்களும், ஆசாபாசங்களும்,
கண்ணோட்டங்களும் வெவ்வேறானது.

நல்ல பெற்றோர்கள் இருந்தால் வாழ்க்கையின் துவக்கம் நன்றாக இருக்கும்.
துவக்கம் நன்றாக இருந்தால் மற்றதும் நன்றாக இருக்கும் என்பான் ஒருவன்.

நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பான் இன்னொருவன். பிட்ஸ், பிலானியில்
படித்தவனுக்கு எத்தனை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா?
என்பான் இன்னொருவன்.

படிப்பு என்ன சாமி படிப்பு? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பான்
இன்னொருவன். நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால், சேர்ந்த பிறகு உங்கள்
கல்வியின் அடையாளம் எல்லாம் காணாமல் போய்விடும். உங்களை
எல் அண்ட் டி ஊழியர் என்றோ அல்லது இன்ஃபோசிஸில் பணியாற்றுபவர்
என்றோதான் இந்த உலகம் பெருமையாகப் பார்க்கும். நீங்கள் ஐ.ஐ.டி யில்
படித்திருந்தால் என்ன? இல்லை அமிர்தாவில் படித்திருந்தால் என்ன?
எதுவுமே அங்கே சேர்ந்த பிறகு சொல்லப்படுவதில்லை என்பான் இன்னொருவன்.

அழகான பெண் காதலியாகக் கிடைக்க வேண்டும் என்பான் இளைஞன்.
அனுஷ்கா சர்மாவைப்போன்ற அல்லது நயன்தாராவைப் போன்ற பெண்
காதலியாகக் கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? என்பான்
அவன்.

அதுவும் இவன் ஓமக்குச்சி நரசிம்மனைப்போல சுமாராக இருந்தாலும்,
கிடைக்கின்ற காதலி இவனை உருகி உருகிக் காதலிக்க வேண்டும் என்பான்.

"எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் சிந்தும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்"

என்று அவள் அனுதினமும் பாட வேண்டும் என்பான்.

முகேஷ் அம்பானி போன்ற செல்வந்தர் வீட்டில் பிறக்க வேண்டும் என்பான்
இன்னொருவன், வாழ்க்கை முழுவதும் வேலை செய்யாமல் சாப்பிடலாம்.
தண்ணி அடிக்கலாம். பணத்தைக் காட்டிப் பலரைச் சாய்க்கலாம்.

இப்படி ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி நம்மைக் குழப்புவார்கள்
--------------------------------------------------------------------------------
சரி, உண்மையில் மனிதனுக்கு முக்கியமாக என்ன வேண்டும்?

புத்தி வேண்டும்!

அதுதான் முக்கியம்!

எந்த நிலையிலும், எந்தச் சுழலிலும் மனிதனைக் காப்பதும், தகுந்தாற்போலச்
செயல்பட வைப்பதும், சந்தோஷமாக இருக்க வைப்பதும் எதுவென்றால்,
சந்தேகமில்லாமல் சர்வ நிச்சயாமகச் சொல்லலாம் - அது புத்தி ஒன்றுதான்!

புத்திக்கு என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது!

அது வாங்கி வந்த வரம்!

ஜாதகப் பலன். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும்
இல்லையென்றால் இல்லை!

புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும்!

நன்றாக இருப்பது என்பது என்ன?

1. புதன் சொந்த வீட்டில் இருப்பது
2. புதன் உச்சம் பெற்று இருப்பது
3. நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள்
அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர்
ஆகிவிடுவார்.

சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார்

அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்
களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!
------------------------------------------------------------------------------------------
அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு
வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.

அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?

உங்களின் பின்னூட்டங்களை வைத்தும், தனிப்பட்ட மின்னஞ்சல்களை வைத்தும்
அது எனக்குத் தெரியும்.

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம்.

30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும்
நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும்.

25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும்

20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே
தரும்

20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும்
மோசமான பலன்களே கிடைக்கும்.

அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்

4 பரல்கள் என்பது சராசரி

3 என்பது சுமாரானது

2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது
போய்விடும்

அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள்.

அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
கரமாகவும் இருக்கும்.

அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்
--------------------------------------------------------------------------
புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

இன்றையப் பாடம் அதுதான் சுவாமி!

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும்.
The native will get positive reults

தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல!

புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக
வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன்
யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான
பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா?

இல்லை!

வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி
இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன்
சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும்
சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத்
தராது.

உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும்
கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும்
அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல்
உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக்
கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை
இருக்காது
--------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில்,
வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில்
வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி
இருக்கிறது.

குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே!

வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும்
It is called as house of finance

இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்காது.

20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம்
நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம்
செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க
வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான்
அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி
வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன்
திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும்
குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான்.

எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே
குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது.
மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக
அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது
ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு
ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள்
மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது
730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே?

வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே?

அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம்
தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார்.
அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார்.

அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்!

இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.
---------------------------------------------------------------------------------
இதே பரல்களை வைத்து ஒருவருடைய பத்தாம் வீட்டையோ அல்லது ஏழாம்
வீடையோ அலசலாம். அதை எல்லாம் வேறு ஒரு தலைப்பில் தனியாக எழுத
உள்ளேன். அப்போது பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு
ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற
வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

முழுப் பணமும் முக்கால் கிழவியும்!


முழுப் பணமும் முக்கால் கிழவியும்!

மனிதனுக்கு எது முக்கியம்?

மில்லியன் டாலர் கேள்வி இது!

சரியான பதிலை ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு பதில் வரும். ஒருமித்த கருத்து என்பது
இருக்காது

ஏன் இருக்காது?

ஒவ்வொருவரின் புத்தி அளவும், எண்ணங்களும், ஆசாபாசங்களும்,
கண்ணோட்டங்களும் வெவ்வேறானது.

நல்ல பெற்றோர்கள் இருந்தால் வாழ்க்கையின் துவக்கம் நன்றாக இருக்கும்.
துவக்கம் நன்றாக இருந்தால் மற்றதும் நன்றாக இருக்கும் என்பான் ஒருவன்.

நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பான் இன்னொருவன். பிட்ஸ், பிலானியில்
படித்தவனுக்கு எத்தனை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா?
என்பான் இன்னொருவன்.

படிப்பு என்ன சாமி படிப்பு? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பான்
இன்னொருவன். நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால், சேர்ந்த பிறகு உங்கள்
கல்வியின் அடையாளம் எல்லாம் காணாமல் போய்விடும். உங்களை
எல் அண்ட் டி ஊழியர் என்றோ அல்லது இன்ஃபோசிஸில் பணியாற்றுபவர்
என்றோதான் இந்த உலகம் பெருமையாகப் பார்க்கும். நீங்கள் ஐ.ஐ.டி யில்
படித்திருந்தால் என்ன? இல்லை அமிர்தாவில் படித்திருந்தால் என்ன?
எதுவுமே அங்கே சேர்ந்த பிறகு சொல்லப்படுவதில்லை என்பான் இன்னொருவன்.

அழகான பெண் காதலியாகக் கிடைக்க வேண்டும் என்பான் இளைஞன்.
அனுஷ்கா சர்மாவைப்போன்ற அல்லது நயன்தாராவைப் போன்ற பெண்
காதலியாகக் கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? என்பான்
அவன்.

அதுவும் இவன் ஓமக்குச்சி நரசிம்மனைப்போல சுமாராக இருந்தாலும்,
கிடைக்கின்ற காதலி இவனை உருகி உருகிக் காதலிக்க வேண்டும் என்பான்.

"எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் சிந்தும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்"

என்று அவள் அனுதினமும் பாட வேண்டும் என்பான்.

முகேஷ் அம்பானி போன்ற செல்வந்தர் வீட்டில் பிறக்க வேண்டும் என்பான்
இன்னொருவன், வாழ்க்கை முழுவதும் வேலை செய்யாமல் சாப்பிடலாம்.
தண்ணி அடிக்கலாம். பணத்தைக் காட்டிப் பலரைச் சாய்க்கலாம்.

இப்படி ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி நம்மைக் குழப்புவார்கள்
--------------------------------------------------------------------------------
சரி, உண்மையில் மனிதனுக்கு முக்கியமாக என்ன வேண்டும்?

புத்தி வேண்டும்!

அதுதான் முக்கியம்!

எந்த நிலையிலும், எந்தச் சுழலிலும் மனிதனைக் காப்பதும், தகுந்தாற்போலச்
செயல்பட வைப்பதும், சந்தோஷமாக இருக்க வைப்பதும் எதுவென்றால்,
சந்தேகமில்லாமல் சர்வ நிச்சயாமகச் சொல்லலாம் - அது புத்தி ஒன்றுதான்!

புத்திக்கு என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது!

அது வாங்கி வந்த வரம்!

ஜாதகப் பலன். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும்
இல்லையென்றால் இல்லை!

புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும்!

நன்றாக இருப்பது என்பது என்ன?

1. புதன் சொந்த வீட்டில் இருப்பது
2. புதன் உச்சம் பெற்று இருப்பது
3. நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள்
அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர்
ஆகிவிடுவார்.

சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார்

அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்
களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!
------------------------------------------------------------------------------------------
அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு
வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.

அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?

உங்களின் பின்னூட்டங்களை வைத்தும், தனிப்பட்ட மின்னஞ்சல்களை வைத்தும்
அது எனக்குத் தெரியும்.

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம்.

30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும்
நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும்.

25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும்

20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே
தரும்

20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும்
மோசமான பலன்களே கிடைக்கும்.

அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்

4 பரல்கள் என்பது சராசரி

3 என்பது சுமாரானது

2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது
போய்விடும்

அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள்.

அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
கரமாகவும் இருக்கும்.

அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்
--------------------------------------------------------------------------
புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

இன்றையப் பாடம் அதுதான் சுவாமி!

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும்.
The native will get positive reults

தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல!

புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக
வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன்
யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான
பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா?

இல்லை!

வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி
இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன்
சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும்
சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத்
தராது.

உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும்
கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும்
அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல்
உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக்
கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை
இருக்காது
--------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில்,
வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில்
வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி
இருக்கிறது.

குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே!

வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும்
It is called as house of finance

இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்காது.

20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம்
நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம்
செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க
வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான்
அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி
வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன்
திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும்
குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான்.

எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே
குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது.
மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக
அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது
ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு
ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள்
மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது
730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே?

வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே?

அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம்
தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார்.
அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார்.

அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்!

இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.
---------------------------------------------------------------------------------
இதே பரல்களை வைத்து ஒருவருடைய பத்தாம் வீட்டையோ அல்லது ஏழாம்
வீடையோ அலசலாம். அதை எல்லாம் வேறு ஒரு தலைப்பில் தனியாக எழுத
உள்ளேன். அப்போது பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு
ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற
வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

9.2.09

கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்!


கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்!

கண்கள் இரண்டு இருந்தாலும் இரண்டு காட்சிகளா தெரியப்போகிறது?
ஒரு காட்சிதானே காணக் கிடைக்கும்!

அதுபோல இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில்
கூட்டாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன் அந்த கிரகங்களின் அமைப்பிற்கு
ஏற்ப ஒன்று நல்லது அல்லது மிக நல்லது, கெட்டது அல்லது மிகவும் கெட்டது
என்று ஒரு விதமான பலன்தான் கிடைக்கும்.

அந்த வீட்டின் மீது சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால்
மட்டுமே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்

கேதுவும் செவ்வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சக்திகளும் செயல்பாடுகளும்
கொண்டவைகளாகும்.

அவை இரண்டும் சேர்ந்து எதிர்மறையாக செயல் பட்டால் ஜாதகன் கோபக்
காரனாகவும் ஆத்திரக்காரனாகவும் மேலும் சிலர் மூர்க்கத்தனம் மிகுந்தவர்
களாகவும் இருப்பார்கள். பிடிக்காதவற்றை ஒழிக்கக்கூடிய மனப்பான்மை
இருக்கும். விபத்துக்கள், காயங்கள் ஏற்படும்.

இரண்டும் நேராகச் செயல்பட்டால், ஜாதகன் உயந்த நோக்கம், மற்றும்
லட்சியங்கள் உடையவனாகவும், அதற்காகப் பாடுபடுவனாகவும் இருப்பான்.
துணிச்சல் மிகுந்தவனாக இருப்பான். எத்தனை தடைகள் வந்தாலும் அதை
எல்லாம் கடந்து செயலாற்றுபவனாக இருப்பான்.

கேது செவ்வாய் கூட்டணி தொழில் நுட்பக் கல்விக்கு உகந்ததாகும்.
அதுபோல கணிதம் படிப்பவர்களுக்கும் அது உகந்ததாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது ஆகிய ஐந்து கிரகங்களும் தீய
தன்மைகள் அதிகம் உடையவைகள். ஜாதகனின் 6ஆம் வீட்டில் அவைகள்
இருப்பது நன்மை பயக்கும்.

பெண்களின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருக்க வேண்டும். வலிமை
இழந்த குரு பொதுவாகப் பெண்களுக்கு மகிழ்ச்சியான திருமணத்தைக்
கொடுப்பதில்லை. அதைவிட முக்கியமாக சனி, செவ்வாய், ராகு மற்றும்
கேது ஆகிய நான்கும் 7ஆம் வீட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாது
இருத்தலும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழி வகுக்கும்!
-----------------------------------------------------------------------------
கேதுவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள்:

1ல்

நல்லதல்ல!
The native should be careful. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும்.
அதனால் உடம்பு பாதிக்கப்படலாம். தீக்காயங்களால் உடம்பில்
பாதிப்புக்கள் ஏற்படலாம்.
---------------------------------------------------------------------------
2ல்

Not a good place for this combination
Expense oriented horoscope. ஜாதகனின் சொத்துக்கள் தீய வழிகளில்
கரையும். படிப்பு தடைப்படடும்.
The native may become a school or college drop out!
---------------------------------------------------------------------------
3ல்

The native will be courageious
ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவனாகத் திகழ்வான்.
அடுத்தவர்களுக்குச் ஜாதகன் மேல் ஒரு பய உணர்வு இருக்கும்
சிலர் அந்தத் துணிச்சலை நல்ல வழியில் பயன்படுத்துவார்கள்
சிலர் அதே துணிச்சலைக் கெட்ட வழிகளில் பயன்படுத்துவார்கள்
--------------------------------------------------------------------------
4ல்

The native will be conservative
பழசையே பேசிக்கொண்டிருப்பான். எங்க தாத்தா காலத்தில் என்று
ஆரம்பித்தால் விடமாட்டான். கேட்கிறவன் அவனாக ஓட்டம்பிடித்தால்
மட்டுமே தப்பிக்கலாம். ஜாதகர் பழமையைப் போற்றுபவராக இருப்பார்.
கல்வியில் தடை ஏற்படும்
--------------------------------------------------------------------------
5ல்

This place is called house of mind. This is also not a good place
for this (ketu & Mars) combination
அடிக்கடி மனநிலை பாதிக்கப்படும். தலையில் உபத்திரவம் ஏற்படும்.
சிலர் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடும். பெண்களுக்குக் குழந்தை
உண்டாவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியே உண்டானலும் பிரசவம்
சிக்கலாக இருக்கும்
--------------------------------------------------------------------------

6ல்

ஜாதகனின் பெயர் ரிப்பேராகி இருக்கும். அல்லது தன் பெயரைக் கெடுத்துக்
கொள்ளும் விதமாக ஜாதகன் நடந்து கொள்வான். எதிர்ப்புக்களை ஜாதகன்
எதிர் கொள்ள நேரிடும். வம்பு வழக்கு, மற்ரும் கட்டைப் பஞ்சாயத்துக்களில்
ஜாதகன் வெற்றி பெறுவான். செவ்வாயும் ஆறாம் இடமும் சேர்ந்திருப்பதால்
ஜாதகன் இரத்த சம்பந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்
-------------------------------------------------------------------------
7ல்

இந்த அமைப்பு ஏழில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்து
கொள்வான். சிலர் வேற்று மதப் பெண்ணை மணந்து கொள்வார்கள்.
சம்பிரதாயங்களைக் கிலோ என்ன விலை என்று ஜாதகன் கேட்பான்.
இந்த அமைப்பு இருக்கும் பெரும்பான்மையினருக்குக் காதல் திருமணம்
தான் நடைபெறும்!
-------------------------------------------------------------------------
8ல்

இந்த அமைப்பு எட்டாம் இடத்திற்கு நல்லதல்ல. பல பிரச்சினைகள்
துன்பங்கள் ஏற்படும். ஜாதகன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத்
தள்ளப்படுவான். சிலர் அதற்கு முயற்சியும் செய்வர்கள். வாழ்க்கை சர்ச்சைக்கு
உரியதாக இருக்கும்

சுபக்கிரகங்களின் பார்வை இந்த இடத்தில் இருந்தால் இந்த பாதிப்புக்கள்
எதுவும் இருக்காது!
--------------------------------------------------------------------------
9ல்

ஜாதகனுக்குக் கெட்டிக்காரத்தனம் இருக்கும். சிலர் மத போதகராக அல்லது
மதப் பேச்சாளராகச் சிறப்படைவார்கள். மேலும் ஒரு கிரகத்தின் தீய பார்வை
விழுந்தால் ஜாதகன் தீவிரவாதியாகி விடுவான்.
---------------------------------------------------------------------------
10ல்

ஜாதகன் சிறந்த நிர்வாகத் திறமைகள் உடையவனாக இருப்பான்.
அதிகாரத்துடன் கூடிய பெரிய பதவிகள் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------
11ல்

பொதுவாக ஜாதகன் அரசியலில் அல்லது அரசில் பணிபுரிந்து புகழ் பெறுவான்.
வளமையோடும், செல்வாக்கோடும் இருப்பான்
---------------------------------------------------------------------------
12ல்

ஜாதகன் குணமில்லாதவனாக இருப்பான். எப்போது என்ன செய்வான் என்பது
யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தெரியாது.
--------------------------------------------------------------------------
சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!