மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.09

ஜோதிடக் கட்டுரை: கோயில் மாடு!

ஜோதிடக் கட்டுரை: கோயில் மாடு!

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே (உழைக்கும்)
படம்: த்னிப்பிறவி
----------------------------------------------------------
உலகில் உள்ள அத்தனை பேர்களும் உழைக்கிறார்களா?
உழைக்கும் அத்தனை பேர்களும் தினமும் எட்டு மணி நேரங்களுக்குக்
குறையாமல் உழைக்கிறார்களா?
உழைக்கிற அத்தனை பேர்களுக்கும் நியாயமான கூலி கிடைக்கிறதா?
நியாயமான கூலி கிடைக்கின்ற அத்தனைபேர்களும் மகிழ்ச்சியாக
இருக்கிறார்களா?

இல்லை!
----------------------------------------------------------
உழைக்கிறேன் என்று தினமும், 12 மணி நேரம் மண்வெட்டிக்
கொண்டிருந்தால் என்ன கிடைக்கும்?
கொஞ்சம் அறிவு, கொஞ்சம் புத்திசாலித்தனம் ஆகியவற்றையும் கூட்டணி
சேர்த்துக் கொண்டு உழைப்பவனுக்குத்தான் விரும்பியது கிடைக்கும்.
-------------------------------------------------------------
விரும்பியது கிடைத்தவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறானா?
கிடைத்த அந்தக் கணம்வரை இருப்பான்.
அதற்குப் பிறகு மனம் வேறு ஒன்றை விரும்பும்
எல்லாத் துன்பங்களுக்கும் மனம்தான் காரணம்.
மனதைக் கட்டுப் படுத்தினால், மனதை அடக்கத் தெரிந்தால்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்
-------------------------------------------------------------
எல்லோராலும் மனதை அடக்க முடியுமா?
முடியும். அதற்கு நீங்கள் மனது வைக்க வேண்டும்.
அதாவது முயற்சி செய்ய வேண்டும்
பயிற்சி செய்ய வேண்டும்
--------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன், உப்புமா கம்பெனியில்
வேலைபார்த்து மண்டை காய்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து,
தன் நிலைமை பரவாயில்லை என்று திருப்தி கொள்ள வேண்டும்.

காரில் வேலைக்குச் செல்பவன், இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச்
செல்பவனைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.

இருசக்கரவாகனத்தில் வேலைக்குச் செல்பவன், கைவண்டி இழுத்து
அல்லது பாரம் தூக்கிப் பிழைப்பு நடத்தும் தொழிலாளியைப் பார்த்துத்
திருப்தி கொள்ள வேண்டும்.

நமக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து, தாங்கித் தடுக்குப்
போட்டுத் தன்னைப் பேணுகின்ற மனைவி இல்லையே என்று
வருத்தப்படுபவன், மனைவியின் படவையைத் துவைத்துக் காயப்போடும்
சக மனிதனை நினைத்துத் திருப்தி கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவிற்குப் பொருள் ஈட்டும் கணவன் தனக்கு அமையவில்லையே
என்று வருத்தம் கொள்ளும் மங்கை நல்லாள், குடித்துவிட்டு வந்து
தினமும் தொல்லை கொடுக்கின்ற கணவனைக் கட்டிக் கொண்டு அழுகின்ற
சக தோழியைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------
”வாத்தி(யார்) என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“நடப்பெதெல்லாம், கிடைப்பதெல்லாம், நமது ஜாதகப் பலன், வாங்கி வந்த வரம்
என்று நினையுங்கள்.திருப்தியடையுங்கள். அது போதும்.”

உங்கள் மகிழ்ச்சிக்கு நான் கியாரண்டி - குக்கர் கம்பெனி விளம்பரங்களைப்
போல- நான் உத்திரவாதம்!:-))))))”
--------------------------------------------------------------------
மாடுகளில் ஐந்து வகையான மாடுகள் உண்டு.

1.பால் கொடுக்கும் கறவை மாடு
2.ஏற்றப்படும் சுமைகளை இடம் மாற்றிக் கொடுக்கும் வண்டி மாடு!
3.உழுகின்ற மாடு.
4.செக்கு மாடு
5.கோயில் மாடு

கோயில் மாடுகளைத் தவிர மற்ற மாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.
பெயரை வைத்து அவைகள் பற்றி உங்களுக்கு தெரியும்.

இந்தக் கோயில் மாடுகளைப் பற்றி மட்டும் ஒரு சிறு விளக்கம் கொடுக்கிறேன்.

கோயில் மாடு என்பது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு அல்லது
கோயில் வாசலில் படுத்திருக்கும் மாடு என்று எப்படி வேண்டுமென்றாலும்
நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்..

அந்த வகை மாடுகளை நீங்கள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்
பார்க்கலாம். நான்கு தெருக்களைச் சுற்றி வந்தால் அதற்குத் தேவையான
உணவு கிடைத்துவிடும்.

அகத்திக் கீரை, வாழை இலை, புண்ணாக்கு இத்தியாதிகள் என்று,
அந்தத் தெருக்களில் இருக்கும் பக்கதர்கள், தானமாகக் கொடுப்பதைத்
தின்று விட்டு வந்து கோயில் வாசலில் உள்ள மண்டபம் அல்லது
கொட்டகையில், படுத்துக் கொண்டு விடும்.

உழைக்காமல், எந்த வேலையையும் செய்யாமல் சுகமாக இருக்கிற
ஜீவராசிகள் அவைகள்.

அதுபோன்ற கோயில் காளைகள் மனிதப் பிறவிகளிலும் உண்டு.
அப்பனின் பணம் அல்லது மனைவியின் சம்பளம், அல்லது குடும்பச்
சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகைப் பணம் என்று
யாருடைய பணத்திலாவது அவர்களுடைய வாழ்க்கை நடக்கும்.

கூலி உயர்வு, பஞ்சப்படி உயர்வு, லீவுப் பிரச்சினை, ரேசன் அரிசி
பாஸ்போர்ட், விசா, வங்கிக்கடன் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாத
ஆசாமிகள் அவர்கள்.

அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
உழைக்க வைக்க முடியாது.
உணரவைக்க முடியாது.
திருத்தவும் முடியாது.
உழைக்காமல் சுகமாக இருக்கவென்றே பிறந்தவர்கள் அவர்கள்.
சுகஜீவனம் என்று கிராமங்களில் அடையாளம் காட்டப்படுபவர்கள் அவர்கள்.
அது அவர்கள் வாங்கிவந்த வரம்.
----------------------------------------------------------------------
வேறு மாதிரி ஒரு உதாரணம் சொல்கிறேன்.

பல்லக்கு செய்கிறவன்
பல்லக்கைத் தூக்குகிறவன்
பல்லக்கில் போகிறவன்
பல்லக்கில் போகிறவனைப் பார்ப்பதற்காகத் தெருவோரம் நிற்கிறவன்
தெருவோரம் நிற்கிறவன் கழுத்தில் அமர்ந்து கொண்டு, அல்லது தோளில்
ஏறி நின்று கொண்டு பல்லக்கில் செல்பவனை/ அல்லது செல்பவளைப்
பார்த்து மகிழ்கிறவன்.

எந்த நிலை உங்களுக்கு பிடித்திருக்கிறது?
-----------------------------------------------------------------
பல்லக்கில் போகிறவன் எப்போதுமே பல்லக்கில் போக முடியுமா?
அதெப்படி முடியும்?
அவன் மகனே ஒருநாள் அப்பனை அடித்துப்போட்டுவிட்டு அவன்
பல்லக்கில் ஏறிக் கொண்டு விடுவான்.
அப்பன் சொத்தை அபகரித்துக் கொண்டுவிட்டு, அப்பனையே என்ன
சேதி என்று கேட்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.
படித்து ஆளாக்கிய அப்பனை முதியோர் இல்லத்தில் போட்டுவிட்டு
பார்க் ஷெரட்டானில், தினமும் சரக்கடி’க்கும் மகன்கள் இருக்கிறார்கள்
பல்லக்கின் போகிறவன், முடக்கு வாதத்தில் எழ முடியாமல் படுத்து
விடும் காலமும் உண்டு.

சொகுசுக் காரில் போகிறவன், வியாபார நஷ்டத்தில் சொந்த வீட்டையே
விற்றுவிட்டு, ஒண்டிக் குடித்தனம் போக நேரிடலாம்.

விசுவாசம் இல்லாத மனைவி, மக்களுக்குப் பாடுபட்டவன், வீதிக்கு
வரும் நிலை ஏற்படலாம்.

இப்படி அடுக்கடுக்காக எழுதிக் கொண்டே போகலாம்.

அதெல்லாம் ஏன் நடக்கிறது? தன் நிலையைத், தன் பொஸிசனை
மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியாதா?

முடியாது.

நேரம் வரும்போது கோபுரத்தின் உச்சிக்குப் போகிறவன், நேரம்
மாறும்போது, கோபுரத்தின் மேல் இருந்து கீழே விழ நேரிடும்

எப்போது உச்சிக்குப் போவான், எப்போது கீழே விழுவான் என்று
ஜாதகத்தில் தெரியுமா? அதாவது எப்போது வெய்யில் காலம், எப்போது
வசந்த காலம் என்று ஜாதகத்தில் தெரியுமா?

தசா புத்திகளை வைத்துத் தெரியும்!!!

அதற்கொரு உபாயம் இருக்கிறது. உங்கள் மொழியில் சொன்னால்
ஒரு குறுக்கு வழி இருக்கிறது.

அது மேல் நிலைப் பாடம்.
மின்னஞ்சல் வழியாக வரும்

எப்போது வரும்?

எப்போது கஷடம் தீரும் என்பதற்கும் அதே பாடம்தான். விவரமாக
வரும். இன்னும் மூன்று நாட்களில் வரும்.

நடுவில் இரண்டு நாட்கள் வாத்தியார் வெளியூர்ப் பயணம் அதனால்
மூன்று நாட்கள். பொறுத்திருந்து படியுங்கள்.
---------------------------------------------------------------
”வாத்தி (யார்), மின்னஞ்சல் பாடம் ஒருவாரமாக வரவில்லையே?”
என்று கேட்டு ரத்தம் வரும்வரை பிறாண்டாதீர்கள்.

வகுப்பறையில் பாடம் நடத்த ஒரு நாள். 30 அல்லது 40 பின்னூட்டங்
களூக்கும், வரும் தனி மின்னஞ்சலகளுக்குப் பதில் எழுத ஒருநாள்
என்று வாத்தியாரின் கணக்கில் நாட்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.

அதோடு அவருடைய சொந்த மற்றும் வியாபார அலுவல்கள்

வாத்தியார் தன்னுடைய வேலைகளில் மும்மரமாக முழு ஈடுபாட்டோடு
இருப்பதால், சிலசமயம், எப்போது விடிகிறது? எப்போது இரவு வருகிறது?
என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

பாவம் வாத்தியார், அவரைப் படுத்தாதீர்கள், பிறாண்டதீர்கள்
பாடத்தை மட்டும், அது வெளியிடப்படும்போது மட்டும் படித்துத்
திருப்தி கொள்ளூங்கள்! மகிழ்ச்சி கொள்ளூங்கள்

பானை செய்கிறவனுக்குப் பத்து நாட்கள் வேலை
போட்டு உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும்.
பதிவு எழுதிகிறவனுக்கு இரண்டு மணி நேரம் வேலை.
பதிவைப் படிக்கிறவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.

ஒரு பதிவைப் படித்துவிட்டு, அடுத்த பதிவு எப்போது என்று
உடனே கேட்டால் என்ன செய்ய முடியும்?

சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்
சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!

ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவு உண்டு.
அதை மனதில் வையுங்கள்!

என்ன சரியா?
-------------------------------------------------
அடிக்குறிப்பு:

பதிவேட்டை வைத்து, மாணவர்கள் எண்ணிக்கை எகிறிக்கொண்டு
இருப்பதைப் பார்த்து, மகிழ்வதைவிடக் கவலைதான் அதிகமாகிக்
கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஜோதிடச் செய்திகளை, பிறர் அறிந்து கொள்ளட்டும்
என்றுதான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

I want to share my knowledge with others, particularly with the next
generation.

முப்பது மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மன
நிலைமைக்குத் தகுந்த மாதிரி எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படி
எழுதிக் கொண்டே வந்ததால், பாடங்கள் ஒரு ஒழுங்கின்றி சிதறிக்
கிடக்கின்றன. நானே என்னுடைய பழைய பாடங்களைக் குறுக்கு வழியில்
தேட சமயங்களில் கூடுதுறையாரின் பதிவிற்குப் போய்த் தேட வேண்டியதாக உள்ளது.

அவற்றை ஒழுங்கு படுத்தி, விட்டுள்ளதை எழுதி, இணைத்து,
புத்தகமாகக்
கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளேன்.
-----------------------------------------------------
வகுப்பறைக்கு வந்து படிப்பவர்களை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள்
2. என்னுடைய எழுத்து நடைக்காகவும், குட்டிக் கதைகள், மற்றும்
உதாரண விளக்கங்களுக்காவும் வந்து, பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
3. தங்களுடைய ஜாதகப் பலனை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள்

இந்த மூன்றாவது ரகக் கண்மணிகள், வகுப்பறையில் சேர்ந்த அன்றே
தங்கள் ஜாதகத்தை நீட்டிப் பலன் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தொடர்ந்து மாணவன் என்கின்ற கோதாவில் நச்சரிக்கிறார்கள்.

’எதிர்காலம்’ எப்படி இருக்கும்? என்று கேட்கிறார்கள். எதிர்காலம்
என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியுமா? தெரியாதா?

அவர்களுக்கு என் முகவரியைக் கொடுத்து வீட்டிற்கு வரச்சொல்லி,
எதிரில் அமர வைத்து அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்
பதில் சொல்லி அனுப்பினால், அதற்குப் பிறகு அவர்களுக்கு ஜோதிடம்
தேவையில்லை. ஜோதிடம் செல்லாக்காசு ஆகிவிடும்.

அவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தவறாக
வகுப்பறையில் சேர்ந்திருக்கிறீர்கள். நல்ல ஜோதிடராகப் பாருங்கள்.
அதுதான் உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது. வகுப்பறையில்
ஜோதிடத்தைக் கற்றுத்தேர விரும்பும் மற்ற மாணவர்களுக்கும் நல்லது!

உங்களுக்கு வேண்டியது மீன் மட்டுமே!
மீன் பிடிக்கும் கலை அல்ல!
உங்களுக்கு வேண்டியது சாப்பாடு மட்டுமே
சமையல் கலையல்ல!
உங்களுக்கு வேண்டியது ”டண்டணக்கா” பாட்டு மட்டுமே
இசையமைக்கும் கலையல்ல!
-------------------------------------------------------------------
அன்புடன்,
நட்புடன்,
வணக்கத்துடன்,
வாத்தியார்.





வாழ்க வளமுடன்!

103 comments:

  1. மனிதநேயத்துடன், மிகுந்த பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு, ஜாதக ரீதியான தீர்வைப் பதிலாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

    They are writing their problem and asking only one specific question

    1. நான் வேலையின்றி அவதிப்படுகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?
    2. எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணம் ஆகும்?
    3. கடன் தொல்லை வாட்டுகிறது. என் கடன்கள் எப்போது தீரும்?
    இதுபோன்ற கேவிகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
    அதுவும் என்னை நச்சரிக்காமல் இருப்பவர்களுக்கு, நேரம் கிடைக்கும்போது,
    சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்துப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    Please understand my problems & co-operate with me!
    வகுப்பறை மேலும் சிறக்க வழி விடுங்கள். அடைத்துக் கொண்டு நின்று, வாத்தியைக் (யாரைக்) கெரோ செய்யாதீர்கள்:-)))))

    ReplyDelete
  2. Sure will cooperate with you to understand the class and lessons..after being studying ur blog...really mind gets some relief and it frees from tension!!!

    -Shankar

    ReplyDelete
  3. ஆகா வாத்தியாருக்கும் பல தொந்தரவுகள் இருக்கும் போல தெரிகிறதே.

    கொஞ்ச பேரு (என்னையும் சேத்துதான்) தன்னுடைய வாழ்கை நிலைகளை அறிந்து கொள்வதற்கே ஆர்வமாக இருக்கின்றனர். நானும் இந்த லிஸ்ட்ல இருந்தேன் இதுவரை. இனிமே நானும் மீன்பிடிக்க பழக போறேன். ஆனா வாத்தியார்ட்ட இப்போதைக்கு என்னால சகஜமாக பேச முடியாது. காரணம் நான் லோக்ளாஸ். இன்னும் ரெண்டு வாரத்துல தயாராகி நானும் மத்தவங்க மாதிரி தைரியமாக கேள்விகள் (தருமி ஸ்டைல்ல) கேக்கலாம்லா. ஏன்னா அடிப்படைகள் தெரியாமல் வாத்தியாரிடம் உரையாடி வாத்தியாரின் நெற்றிக்கண் திறக்க அடியேன் காரணமாகி விடக்கூடாது.

    இருப்பினும் வாத்தியார் பாடங்களை எப்பேர்பட்ட மடையனுக்கும் (என்னை மட்டுந்தாங்க சொன்னேன்) எளிதில் புரியும்படி அலுப்புத்தட்டாத வகையில் ரசிக்கத்தகுந்த முறையில் நடத்துவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. சிலரது மேடைப்பேச்சுக்களை நேரிலும் புத்தகத்திலும் படித்திருக்கிறேன். குறிப்பாக கலைஞரது பேச்சுக்களில் கவித்துவமும், நகைச்சுவையும் தாண்டவமாடும். வாத்தியார் தினமும் பாடம் நடத்தமாட்டாரா? என்ற ஏக்கம் அடியேனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக சொல்கிறேன்.

    தான் கற்ற அரிய கலையான ஜோதிடத்தை மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று இலவசமாகவும் (அவ்வப்பொழுது அவரவர்க்கு இலவச ஜாதக ஆலோசனையும்), மாணவர்கள் கேட்கும் பல வியக்கத்தகு கேள்விகளுக்கு பொறுமையாக விடை அளித்தும், மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்த பதிவுகளில் மிகவும் எளிய நடையில் பாடங்களை நடத்துவதும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. இன்னிக்கு தேதில ஒரு ஜோதிடரிடம் நமது ஜாதகத்தை நீட்டினால் திறந்து பார்க்கவே இவ்வளவு, அதுலயும் இத்தனை கேள்விகளுக்கு இவ்வளவு என்று வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இப்படி ஒரு மனிதர் என்று நினைக்கும் பொழுது உண்மையிலேயே நமது வாத்தியாரை மனதார பாராட்ட தோன்றுகிறது.

    இப்படி ஒரு அருமையான வாத்தியார் கிடைத்ததற்கு இங்குள்ள மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.



    (என்னடா தம்பி வாத்தியார ரொம்ப புகழ்ரானேன்னு பாக்கீங்களா? என் மனசுல தோனுச்சு அதான் சொன்னேன். நான் வாயத்தொறந்து சொல்லிட்டேன். நீங்க எல்லாரும் சொல்லாமா மனசுல வெச்சிருக்கீங்க அவ்வளவுதான்)

    ReplyDelete
  4. தங்கள் பதிவை பாடிக்கும்போது...
    உனக்கும் கீழே உள்ளவர்கோடி..நினைத்துப்பார்த்து நிம்மதிநாடு..என்கின்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. இருப்பதை வைத்து சந்தோஷப்படுவதாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.போதும் என்கின்ற மனமே பொன்செய்யும் மருந்து...
    ஐயா,
    சக பதிவர் என்பதால் தங்கள் வேலையின் சிரமம் எனக்கு நன்கு புரிகின்றது.தாங்கள் ஓய்வு நேரத்திலேயே பதிவிடுங்கள். காத்திருக்கின்றோம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் இடையில் ஒரு வருடம் (?!) இடைவெளி இருந்தாலும் பரவாயில்லை.

    காத்திருக்க நாங்க ரெடி.
    காக்க வைக்க நீங்க ரெடியா.

    ReplyDelete
  6. ஆஹா..

    வாத்தியாரின் பொறுமையைச் சோதிக்கின்ற அளவுக்கு புது மாணவர்கள் போய்விட்டார்களே..

    வருத்தமாக இருக்கிறது.. வலையுலகம்தானே.. பின்னூட்டம் போட்டால் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் என்பதால் கேட்கிறார்கள் போலும்..

    வாத்தியாரே.. பெரிய மனது பண்ணி மன்னித்து விடுங்கள்..

    ReplyDelete
  7. சார்,
    உங்களுக்கு சனிதசை நடக்குதுன்னு உங்க ப்ரொபைலை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.
    ஒருவேளை சுயபுக்தியா இருக்குமோ?கொஞ்சம் சூடாயிட்டேங்களே?

    ReplyDelete
  8. ////Blogger hotcat said...
    Sure will cooperate with you to understand the class and lessons..after being studying ur blog...really mind gets some relief and it frees from tension!!!
    -Shankar////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  9. /////Blogger முருகன் அடிமை said...
    ஆகா வாத்தியாருக்கும் பல தொந்தரவுகள் இருக்கும் போல தெரிகிறதே.
    கொஞ்ச பேரு (என்னையும் சேத்துதான்) தன்னுடைய வாழ்கை நிலைகளை அறிந்து கொள்வதற்கே ஆர்வமாக இருக்கின்றனர். நானும் இந்த லிஸ்ட்ல இருந்தேன் இதுவரை. இனிமே நானும் மீன்பிடிக்க பழக போறேன். ஆனா வாத்தியார்ட்ட இப்போதைக்கு என்னால சகஜமாக பேச முடியாது. காரணம் நான் லோக்ளாஸ். இன்னும் ரெண்டு வாரத்துல தயாராகி நானும் மத்தவங்க மாதிரி தைரியமாக கேள்விகள் (தருமி ஸ்டைல்ல) கேக்கலாம்லா. ஏன்னா அடிப்படைகள் தெரியாமல் வாத்தியாரிடம் உரையாடி வாத்தியாரின் நெற்றிக்கண் திறக்க அடியேன் காரணமாகி விடக்கூடாது.
    இருப்பினும் வாத்தியார் பாடங்களை எப்பேர்பட்ட மடையனுக்கும் (என்னை மட்டுந்தாங்க சொன்னேன்) எளிதில் புரியும்படி அலுப்புத்தட்டாத வகையில் ரசிக்கத்தகுந்த முறையில் நடத்துவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. சிலரது மேடைப்பேச்சுக்களை நேரிலும் புத்தகத்திலும் படித்திருக்கிறேன். குறிப்பாக கலைஞரது பேச்சுக்களில் கவித்துவமும், நகைச்சுவையும் தாண்டவமாடும். வாத்தியார் தினமும் பாடம் நடத்தமாட்டாரா? என்ற ஏக்கம் அடியேனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நிச்சயம் இருக்கும் என்று உறுதியாக சொல்கிறேன்.
    தான் கற்ற அரிய கலையான ஜோதிடத்தை மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று இலவசமாகவும் (அவ்வப்பொழுது அவரவர்க்கு இலவச ஜாதக ஆலோசனையும்), மாணவர்கள் கேட்கும் பல வியக்கத்தகு கேள்விகளுக்கு பொறுமையாக விடை அளித்தும், மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்த பதிவுகளில் மிகவும் எளிய நடையில் பாடங்களை நடத்துவதும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. இன்னிக்கு தேதில ஒரு ஜோதிடரிடம் நமது ஜாதகத்தை நீட்டினால் திறந்து பார்க்கவே இவ்வளவு, அதுலயும் இத்தனை கேள்விகளுக்கு இவ்வளவு என்று வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இப்படி ஒரு மனிதர் என்று நினைக்கும் பொழுது உண்மையிலேயே நமது வாத்தியாரை மனதார பாராட்ட தோன்றுகிறது.
    இப்படி ஒரு அருமையான வாத்தியார் கிடைத்ததற்கு இங்குள்ள மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
    (என்னடா தம்பி வாத்தியார ரொம்ப புகழ்ரானேன்னு பாக்கீங்களா? என் மனசுல தோனுச்சு அதான் சொன்னேன். நான் வாயத்தொறந்து சொல்லிட்டேன். நீங்க எல்லாரும் சொல்லாமா மனசுல வெச்சிருக்கீங்க அவ்வளவுதான்)//////

    நன்றி, முருகா! இப்போதைக்கு அவ்வளவுதான்:-))))

    ReplyDelete
  10. ////Blogger velan said...
    தங்கள் பதிவை பாடிக்கும்போது...
    உனக்கும் கீழே உள்ளவர்கோடி..நினைத்துப்பார்த்து நிம்மதிநாடு..என்கின்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. இருப்பதை வைத்து சந்தோஷப்படுவதாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.போதும் என்கின்ற மனமே பொன்செய்யும் மருந்து...
    ஐயா,
    சக பதிவர் என்பதால் தங்கள் வேலையின் சிரமம் எனக்கு நன்கு புரிகின்றது.தாங்கள் ஓய்வு நேரத்திலேயே பதிவிடுங்கள். காத்திருக்கின்றோம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    புரிதலுக்கு நன்றி வேலன்!

    ReplyDelete
  11. ////Blogger முருகன் அடிமை said...
    ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் இடையில் ஒரு வருடம் (?!) இடைவெளி இருந்தாலும் பரவாயில்லை.
    காத்திருக்க நாங்க ரெடி.
    காக்க வைக்க நீங்க ரெடியா.////

    இந்த மாதம் இதுவரை 22 நாட்களில் 14 இடுகைகள்.
    மாதம் 10ற்குக் குறையாத இடுகைகள்.
    அப்படி வைத்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  12. ////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா..
    வாத்தியாரின் பொறுமையைச் சோதிக்கின்ற அளவுக்கு புது மாணவர்கள் போய்விட்டார்களே..
    வருத்தமாக இருக்கிறது.. வலையுலகம்தானே.. பின்னூட்டம் போட்டால் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் என்பதால் கேட்கிறார்கள் போலும்..
    வாத்தியாரே.. பெரிய மனது பண்ணி மன்னித்து விடுங்கள்..////

    உங்கள் பின்னூட்டத்திற்கும், புரிதலுக்கும் நன்றி உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  13. ////Blogger minorwall said...
    சார்,
    உங்களுக்கு சனிதசை நடக்குதுன்னு உங்க ப்ரொபைலை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.
    ஒருவேளை சுயபுக்தியா இருக்குமோ?கொஞ்சம் சூடாயிட்டேங்களே?/////

    நான் கூலான ஆசாமி. கூலாகவே இருப்பேன். என் எழுத்துக்கள் மட்டும் சமயத்தில் சூடாகக் காட்சியளிக்கும்
    யதார்த்தமாக எடுத்துக் கொள்ளூங்கள் மைனர்வாள்!

    ReplyDelete
  14. மாணவர்கள் அதிகமாகிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், உங்களுக்கு சுமைகளும் அதிகமாகிக்கொண்டிருப்பது குறித்து கவலை எழுகிறது.
    சிலநேரங்களில் பொறுப்புணர்ச்சி காரணமாக எழும் மன அழுத்தத்தாலும், செயலின் வேகம் குறையக்கூடும். ஆனால் உங்கள் பதிவுகளைப்படிக்கும்போது உங்கள் திறமை பளிச்சிடுகிறது.
    இதனையே நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் குரு தட்சணையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

    நான் ஒரு சின்ன ஆலோசனை கூறலாமா? வலைப்பதிவிற்கு உதவும் வகையில் ஒரு உதவியாளரை நியமித்துக்கொண்டால் சற்று கஷ்டம் குறையுமல்லவா? (சிறுபிள்ளைத்தனமாக பிதற்றியிருந்தால் மன்னித்தருள்க. நடைமுறை சிக்கல்களும் புலப்படுகின்றன.)

    - அன்புடன்
    லலித்

    ReplyDelete
  15. Dear sir,

    Our friends should understand that the difficulties that you have been facing in creating this kind of difficult lesson.

    They should compare their OWN difficulties that are faced by them in their daily routine days and the pain being felt even for small disturbence.

    If this understanding comes to our friends, The unwanted questions may be avoided by them.

    We (our students) need to help you.

    Regards
    NSK.

    ReplyDelete
  16. நன்றி ஆசானே...

    உங்கள் விளக்கம் அருமை. பொருமை காக்கின்றோம்.

    ReplyDelete
  17. அடியேன் வேதலம்... புதிய மாணவன் ... இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்... உங்கள் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் தன பார்த்தேன்... நீண்ட நாட்களாக ஒரு நல்ல குருவை தேடி இருந்த என் பயணம் முடிந்தது என்றே நினைகிறேன்...(மாணவனில் "ஏக்கலைவனாக" இருக்க எண்ணி இந்த Blog கை தேடினேன் ஆனால் கிடைக்க வில்லை...அதனால் புனை பெயரில் " வேதலம்" னில் இணைகிறேன்.(உங்களை கேள்வி கேட்பதில் "வேதலமாக" ...) இணைத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ( இணைவது என்பது உங்களுக்கு email அனுபினாலே போதும் என்று நம்புகிறேன் இல்லை வேறு எதாவது பதிவு தேவையா? )- நன்றி

    ReplyDelete
  18. ஆசானே தற்போதுதான் உங்களது வலையில் வருகை புரிந்திருக்கிறேன்.

    ஆனால் எனக்கு உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள ஆசை
    என்ன செய்யலாம்.

    ReplyDelete
  19. வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் வகுப்பறையை பார்த்தேன்...மிகவும் பிடித்துப்போனது... உண்மைகள் பலவிசயங்களை , நுட்பங்களை மிகத் தெளிவாக விவரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... என் ஆசான் தேடலும் முடிவுக்கு வந்தது... ஆசானே...உண்மையில் உங்களை கால்களில் விழுந்து கும்பிடவேண்டும்.....அவ்வளவு அருமையான விளக்கங்கள் எளிமை!எளிமை!எளிமை!!... உயர்ந்த கலையை , பணம் கொடுத்தாலும் கற்றுகொடுக்க தயங்கும் காலத்திற்கு நடுவில் அமைதியாய் ஒரு புரட்சி... உங்கள் இயக்கம் நன்கு வளரட்டும் ( சிறியவன் தான் என்றாலும் ஆன்மாவிற்கு என்ன வயது இருக்கிறது என்ற சிறிய ஞானதில் .... வாழ்த்துகிறேன்.. ) உண்மையில் என் வாழ்நாளில் சில நாட்களை இயற்கையின் பெயரால் உங்களுக்கு தர பாக்கியம் செய்திருக்கிறேன்.... உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி ....

    ReplyDelete
  20. Ayya enakku paadangal minnanjalil vanthu konduirukkinrana. melum ungaludaiya pdf il moththa paadangalum vanthullana.paadangal eliya muraiyil amainthulladharkku ennudaiya paarattugal.nanri.

    ReplyDelete
  21. அய்யா தங்களுடைய பாடங்கள் வந்தன .மிகவும் நன்றி

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா,
    தங்களின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை :))
    ஜோதிடத்தை கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள என் போன்ற மாணவர்கள் தங்களின் முக்கிய வேலை பளுவின் நடுவிலும் தாங்கள் செய்து வரும் இந்த ஒப்பற்ற சேவையை புரிந்து கொண்டுள்ளோம்.

    ///////இப்படி ஒரு அருமையான வாத்தியார் கிடைத்ததற்கு இங்குள்ள மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.//////////

    நண்பர் கூறியது மிகமிக உண்மை. :)))

    நன்றி அன்புடன்,
    ரிஷப்- நாகராஜன்

    ReplyDelete
  23. //////Blogger லலித் said...
    மாணவர்கள் அதிகமாகிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், உங்களுக்கு சுமைகளும் அதிகமாகிக்கொண்டிருப்பது குறித்து கவலை எழுகிறது.
    சிலநேரங்களில் பொறுப்புணர்ச்சி காரணமாக எழும் மன அழுத்தத்தாலும், செயலின் வேகம் குறையக்கூடும். ஆனால் உங்கள் பதிவுகளைப்படிக்கும்போது உங்கள் திறமை பளிச்சிடுகிறது.
    இதனையே நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் குரு தட்சணையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
    நான் ஒரு சின்ன ஆலோசனை கூறலாமா? வலைப்பதிவிற்கு உதவும் வகையில் ஒரு உதவியாளரை நியமித்துக்கொண்டால் சற்று கஷ்டம் குறையுமல்லவா? (சிறுபிள்ளைத்தனமாக பிதற்றியிருந்தால் மன்னித்தருள்க. நடைமுறை சிக்கல்களும் புலப்படுகின்றன.)
    - அன்புடன்
    லலித்/////

    உங்கள் யோசனைக்கு நன்றி!வலைப்பதிவிற்கு உதவியாளரா? தலைவலிபோய் திருகுவலி வரும்!:-))))))
    எனக்கு பழநி அப்பன் உடன் இருக்கிறான். வேறு உதவியாளர்கள் வேண்டாம்:-))))

    ReplyDelete
  24. ////Blogger NSK said...
    Dear sir,
    Our friends should understand that the difficulties that you have been facing in creating this kind of difficult lesson.
    They should compare their OWN difficulties that are faced by them in their daily routine days and the pain being felt even for small disturbence.
    If this understanding comes to our friends, The unwanted questions may be avoided by them.
    We (our students) need to help you.
    Regards
    NSK./////

    நன்றி என்.எஸ்.கே!

    ReplyDelete
  25. ///Blogger இராகவன் நைஜிரியா said..
    நன்றி ஆசானே...
    உங்கள் விளக்கம் அருமை. பொருமை காக்கின்றோம்.////

    உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger vedhalam said...
    அடியேன் வேதலம்... புதிய மாணவன் ... இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்... உங்கள் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் தன பார்த்தேன்... நீண்ட நாட்களாக ஒரு நல்ல குருவை தேடி இருந்த என் பயணம் முடிந்தது என்றே நினைகிறேன்...(மாணவனில் "ஏக்கலைவனாக" இருக்க எண்ணி இந்த Blog கை தேடினேன் ஆனால் கிடைக்க வில்லை...அதனால் புனை பெயரில் " வேதலம்" னில் இணைகிறேன்.(உங்களை கேள்வி கேட்பதில் "வேதலமாக" ...) இணைத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ( இணைவது என்பது உங்களுக்கு email அனுபினாலே போதும் என்று நம்புகிறேன் இல்லை வேறு எதாவது பதிவு தேவையா? )- நன்றி/////

    ஏக்கம் இல்லாத கலைவனாக மாறிவிடலாம். வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

    ReplyDelete
  27. /////Blogger Kesavan said...
    ஆசானே தற்போதுதான் உங்களது வலையில் வருகை புரிந்திருக்கிறேன்.
    ஆனால் எனக்கு உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள ஆசை
    என்ன செய்யலாம்.////

    ஒன்றும் குறும்பு செய்யாமல் இருக்கிற பழைய பாடங்களை வரிசையகப் படியுங்கள். மற்றதெல்லாம் தன்னால் வரும்!

    ReplyDelete
  28. ////Blogger vedhalam said...
    வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் வகுப்பறையை பார்த்தேன்...மிகவும் பிடித்துப்போனது... உண்மைகள் பலவிசயங்களை , நுட்பங்களை மிகத் தெளிவாக விவரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... என் ஆசான் தேடலும் முடிவுக்கு வந்தது... ஆசானே...உண்மையில் உங்களை கால்களில் விழுந்து கும்பிடவேண்டும்.....அவ்வளவு அருமையான விளக்கங்கள் எளிமை!எளிமை!எளிமை!!... உயர்ந்த கலையை , பணம் கொடுத்தாலும் கற்றுகொடுக்க தயங்கும் காலத்திற்கு நடுவில் அமைதியாய் ஒரு புரட்சி... உங்கள் இயக்கம் நன்கு வளரட்டும் ( சிறியவன் தான் என்றாலும் ஆன்மாவிற்கு என்ன வயது இருக்கிறது என்ற சிறிய ஞானதில் .... வாழ்த்துகிறேன்.. ) உண்மையில் என் வாழ்நாளில் சில நாட்களை இயற்கையின் பெயரால் உங்களுக்கு தர பாக்கியம் செய்திருக்கிறேன்.... உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி ....////

    இயக்கமா? single man show or single man army!
    மிகவும் நெகிச்சி அடையாமல் இருக்கிற பழைய பாடங்கள் முதலில் படித்து முடியுங்கள்
    சைடு பாரைப் பாருங்கள். பாடங்களுக்கான வழி கிடைக்கும்!

    ReplyDelete
  29. ///Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    Ayya enakku paadangal minnanjalil vanthu konduirukkinrana. melum ungaludaiya pdf il moththa paadangalum vanthullana.paadangal eliya muraiyil amainthulladharkku ennudaiya paarattugal.nanri.////

    பழைய பாடங்களை முதலில் படியுங்கள்.படித்து மனதில் ஏற்றுங்கள் உங்களை நான் பாராட்டுவேன்

    ReplyDelete
  30. ////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    அய்யா தங்களுடைய பாடங்கள் வந்தன .மிகவும் நன்றி////

    உங்களுக்குத் தமிழில் தட்டச்ச வந்துவிட்டதில் எனக்குத்தான் மகிழ்ச்சி அதிகம்!
    ஜாமயுங்கள்!

    ReplyDelete
  31. பாவம் வாத்தியார்.அவரை படுத்தாதீர்கள்.
    அவராக நமக்கு தருவதை பெற்றுக்கொள்ளுவோம்.
    நாமெல்லாம் குருகுல மாணவர்கள்
    எப்போது குரு கற்பிக்கிறாரோ அப்போது
    கவ்விக்கொள்வோம்

    நன்றி அய்யா.

    ReplyDelete
  32. ///Blogger ரிஷப்-நாகராஜன் said...
    வணக்கம் ஐயா,
    தங்களின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை :))
    ஜோதிடத்தை கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள என் போன்ற மாணவர்கள் தங்களின் முக்கிய வேலை பளுவின் நடுவிலும் தாங்கள் செய்து வரும் இந்த ஒப்பற்ற சேவையை புரிந்து கொண்டுள்ளோம்.
    ///////இப்படி ஒரு அருமையான வாத்தியார் கிடைத்ததற்கு இங்குள்ள மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.//////////
    நண்பர் கூறியது மிகமிக உண்மை. :)))
    நன்றி அன்புடன்,
    ரிஷப்- நாகராஜன்////

    உங்கள் புரிதலுக்கு நன்றி நாகராஜன்!

    ReplyDelete
  33. ////Blogger thirunarayanan said...
    பாவம் வாத்தியார்.அவரை படுத்தாதீர்கள்.
    அவராக நமக்கு தருவதை பெற்றுக்கொள்ளுவோம்.
    நாமெல்லாம் குருகுல மாணவர்கள்
    எப்போது குரு கற்பிக்கிறாரோ அப்போது
    கவ்விக்கொள்வோம்
    நன்றி அய்யா.////

    கவ்விக் கொள்ள வேண்டாம். பொறுமையாகப் படித்தால் போதும்!:-)))

    ReplyDelete
  34. வகுப்பறைக்கு தினமும் தவறாமல் வந்து பாடங்களை
    ரிவைஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே பின்னூட்டங்-
    களை அளிக்க முடிவதில்லை. வரும் சந்தேகங்களை அந்தப்
    பாடங்களின் பின்னூட்டங்கள் மூலமே தெளிவு பெற
    முடிகிறது. இப்போதைக்கு 40 பாடங்களை ரிவைஸ் செய்து-
    ள்ளேன். இது தங்களின் தகவலுக்காக......

    ReplyDelete
  35. ////Blogger Sivakumar said...
    வகுப்பறைக்கு தினமும் தவறாமல் வந்து பாடங்களை
    ரிவைஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே பின்னூட்டங்-
    களை அளிக்க முடிவதில்லை. வரும் சந்தேகங்களை அந்தப்
    பாடங்களின் பின்னூட்டங்கள் மூலமே தெளிவு பெற
    முடிகிறது. இப்போதைக்கு 40 பாடங்களை ரிவைஸ் செய்து-
    ள்ளேன். இது தங்களின் தகவலுக்காக......////

    ஆமாம் இப்படித்தான் படிக்க வேண்டும். இந்த வருட ஆண்டுவிழாவில் உங்களுக்கு சிறந்த மாணவர் விருது வழங்கப்பெறும் சிவகுமார். இது உங்கள் தகவலுக்காக!

    ReplyDelete
  36. அப்படி என்றால் நாங்கள் எல்லாம்
    சிறந்த மாணாக்கர்கள் அல்லவா வாத்தியாரே.

    ReplyDelete
  37. தலைப்பு மிக்க வித்தியாசமாக அமைக்கிறீர்கள் ஐயா.
    கல்கி அவர்கள் அமைத்திருப்பதைப் போல.
    ஐயா அவர்களின் சிரமத்தின் பொருட்டு பல பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதை கூட தவிர்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  38. // thirunarayanan said...அப்படி என்றால் நாங்கள் எல்லாம்
    சிறந்த மாணாக்கர்கள் அல்லவா வாத்தியாரே.//

    அதானே.

    வாத்தியார் ஐயா,

    நாங்க முட்டி முட்டி படிப்பது தங்களது செவிகளில் ஒலிக்கவில்லையோ.

    ReplyDelete
  39. அடியேனுக்கு ஒரு சந்தேகம்: கடந்த பதினான்காம் தேதி வரையில் முன்னூத்தி சொச்சம் உறுப்பினர்கள்தான் இருந்தனர். ஆனால் இன்றைய தேதியில் () மாணாக்கர்கள் எண்ணிக்கை எழுநூற்று இருப்பதாக அதிகரித்துவிட்டதே. ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி எதனைக் குறிக்கிறது? ஜோதிடத்தின் மீது உள்ள பற்றா? அல்லது வாத்தியாரின் தனிச்சிறப்பான அதாவது ஸ்டைலான வார்த்தை நடைகளுக்கா? புரியவில்லையே! இருப்பினும் வாத்தியாரை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

    என்ன மந்திர ஜாலம் செய்தார் என்று தெரியவில்லையே!

    ReplyDelete
  40. ////Blogger thirunarayanan said...
    அப்படி என்றால் நாங்கள் எல்லாம்
    சிறந்த மாணாக்கர்கள் அல்லவா வாத்தியாரே.///

    எல்லோருமே சிறந்த மாணாக்கர்கள்தான். அவர் படத்தை படிக்கின்ற முறை பற்றி எழுதியிருந்ததால், அந்தப் பிரிவில் அவருக்கு விருது!
    ஆண்டு இறுதியில் பரீட்சை வைத்து 90% மதிப்பெண்கள் வாங்கும் அத்தனை பேருக்கும் விருது காத்திருக்கிறது! அப்போது காட்டுங்கள் உங்கள் திறமைகளை!

    ReplyDelete
  41. ////Blogger தியாகராஜன் said...
    தலைப்பு மிக்க வித்தியாசமாக அமைக்கிறீர்கள் ஐயா.
    கல்கி அவர்கள் அமைத்திருப்பதைப் போல.
    ஐயா அவர்களின் சிரமத்தின் பொருட்டு பல பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதை கூட தவிர்த்திருக்கிறேன்.////

    ”தலைப்பை நன்றாகப் போடு
    தானாக வருவார்கள்” என்று பலமுறை மற்றவர்களுக்குச் சொல்லியவன் நான்.
    அதனால் தலைப்பு எப்போதும் ஈர்க்கும்படியாகவே இருக்கும்.

    வரப்போகின்ற ஜோதிட நூல்களுக்கு ஒரு தலைப்பை முடிவு செய்து வைத்திருக்கிறேன்.
    கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் தியாகராஜன்.
    புத்தகங்கள் அச்சாகி வந்த பிறகுதான் அதை வெளிப்படுத்த உள்ளேன்
    தலைப்பு மட்டுமல்ல அட்டைப் படமும் தலைப்புக்கு ஏற்றமாதிரி அசத்தலாக இருக்கும்

    ReplyDelete
  42. Blogger முருகன் அடிமை said...
    // thirunarayanan said...அப்படி என்றால் நாங்கள் எல்லாம்
    சிறந்த மாணாக்கர்கள் அல்லவா வாத்தியாரே.//
    அதானே.
    வாத்தியார் ஐயா,
    நாங்க முட்டி முட்டி படிப்பது தங்களது செவிகளில் ஒலிக்கவில்லையோ.////

    என் காதலி மெஜந்தா கலர் சேலை கட்டியிருப்பாள் என்று ஒருவன் சொன்னால், மெஜந்தா சேலை
    கட்டியிருக்கும் அத்தனை பெண்களும் அவன் காதலி என்று அர்த்தமா?

    ஒருவரை சிறந்தவர் என்று அடையாளப் படுத்தினால், மற்றவர்கள் சிறந்தவரில்லை என்று யார் சொன்னது?
    அர்த்தம் ஆனதா முருகா?

    ReplyDelete
  43. ////Blogger முருகன் அடிமை said...
    அடியேனுக்கு ஒரு சந்தேகம்: கடந்த பதினான்காம் தேதி வரையில் முன்னூத்தி சொச்சம் உறுப்பினர்கள்தான் இருந்தனர். ஆனால் இன்றைய தேதியில் () மாணாக்கர்கள் எண்ணிக்கை எழுநூற்று இருப்பதாக அதிகரித்துவிட்டதே. ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி எதனைக் குறிக்கிறது? ஜோதிடத்தின் மீது உள்ள பற்றா? அல்லது வாத்தியாரின் தனிச்சிறப்பான அதாவது ஸ்டைலான வார்த்தை நடைகளுக்கா? புரியவில்லையே! இருப்பினும் வாத்தியாரை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.
    என்ன மந்திர ஜாலம் செய்தார் என்று தெரியவில்லையே!/////

    அதற்குப் பெயர் வேப்பிலை மந்திரம்! உங்கள் பகுதி கிராம மக்களிடம் கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள்!

    ReplyDelete
  44. பரவாயில்லையே

    அடியேன் கேட்கும் காசு பெறாத கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.

    தாங்கள் ஜோதிடத்தில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் சிறந்தவர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  45. திருவோணம் தெருவோட போகும் என்கிறார்களே!

    இது எந்த அளவுக்கு உண்மை. இந்த நட்சத்திரக்காரர்கள் துரதிருஷ்டசாலியா.

    இந்த நட்சத்திரகாரர் குடும்பத்தில் சேர்ந்து இருக்கலாமா?

    இந்த நட்சத்திரக்காரர் குடும்பத்திற்கு ஆகாதவரா?

    ReplyDelete
  46. அய்யா!எல்லாப் பின்னூட்டங்களுமே கோவில் மாட்டை மறந்து விட்டர்களே!
    கோவில் மாட்டுக்கு 3,7,11ம் இடஙகள் மிகவும் பலம் என்று தோன்றுகிறது!
    உங்கள் வேலை பளு குறைய பின்னூட்டஙளுக்கு பதில் அளிப்பதில் ரேஷன்
    செய்யலாமே
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  47. முருகனடிமைக்கு பதில்:ரோகிணி,
    ---------------------
    ஹஸ்தம் ,திருவோணம் சந்திரனின் தசையில் பிற்க்கிறார்கள்.சந்திரன் 2 1/2 நாளுக்கு ஒரு முறை ராசி மாறுவது.திருவோண‌த்தின் மகர ராசி சர ராசி.எனவே அலைச்சல் அதிகம். வீட்டில் தங்கமாட்டர்கள். 9 வது இடம் கன்னி, புதன் ஆடசி.சூர்யனுக்கு ஆகாது.எனவே தந்தைக்கு ஆகாது.குடும்பத்திற்கு உதவாததுபோன்ற .ந‌டைமுறையில் பிற கிரஹஙகளால் மாறுதலான தோற்றம் கொடுக்கலாம்!
    kmr.krishnan
    http://parppu.blospot.com

    ReplyDelete
  48. You have given enough for us to read and understand. Please take your own time and continue your good work Sir

    ReplyDelete
  49. we will wait for the master to appear.

    ReplyDelete
  50. sir, eppadi irrukinga ? its been weeks since i last visited ur blog, i should admit.hope ur advanced lessons are going on as planned and the students are being kept interested. seems uve got alotta new visitors. i think uve done the right thing by posting this message so that they get the point. naanum ungalai oru kalanthul pirandinen thaan ninaikiren...he he..

    i been searchin for reliable nadi reader to get a readin for person whos in desperate need of some guidance.no success yet.but found this post very interesting and thought of sharing it with the students n you.

    ReplyDelete
  51. found at multiply.com .

    The glares blinded me. The sun shone brightly on the Golden Chariot of Goddess Meenakshi. Today, she would wed Sundaranar. Decked in the best of revelries, she strode the palanquin majestically. The priests struggled their way through the hysterical thousands, chanting mantras in Her praise.

    The two thousand year old Madurai Meenakshi Temple was witnessing the annual feast celebrating the union of Siva with Sakthi. The Tavil-Nadaswaram artists playing the Sankarabharanam worked the crowd into a frenzy. The temple bells rang everywhere. Bare-chested men sang aloud. Beautiful ladies decked in Jasmines and Silk sarees, their eyes closed in deep reverie, escorted the Goddess as she moved towards her Bridegroom.

    I rushed through the burning hot sandstone pavements, engulfed in the smell of camphor sandal paste and jasmine. I was looking.

    Not at the Golden Chariot. Nor at those beautiful ladies. No! I was looking for an old lady. She was to seek me out in this impossibly maddening crowd and seek alms. And I was ‘directed’ to “give whatever she asked for!”

    Flashback:

    I had seen many masquerading as future tellers. In the name of Astrology, Palmistry and Prasnam. And I had absolute faith. That this was absolute nonsense.

    “Five Hundred Rupees?” I was incredulous! “I have better things to do with that money” I jeered, as my friend as he asked me too take a look at the ‘Naadi’. A product of modern, scientific education, I had learnt to seek logic. And ‘Naadi’ provided none.

    Or so I believed.

    “Stand by your Primary Value”, I’d learnt. Here, in this conflict between my beliefs and the emotions of my friend, I chose the later. I decided to humour him and let this ‘astrologer’ take my right thumb impression. He went in to ‘search’ for the Palm Leaves with my ‘life’ documented on them!! “Written by Sage Agasthya!”he had said. Someone has scripted my life? And thousands of years ago? Ha!

    I was amused. I could not wait for the fun to unfold.

    He came back after some fifteen minutes and announced that my palms have been located. My friend would have to stay out of the room, while he ‘read’ mine. As I said “Let him stay, there are no secrets between us!” he moved out anyway.

    Now came the preliminary questions.

    Does you name start with ‘Ka’? I said no.

    Do you come from a place the name of which starts with a ‘Sa’? Bullshit, noway...

    ReplyDelete
  52. Three more of these ludicrous questions and I decided there were better ways to spend time. I stood up, as the next question came, “Your mother, wife and daughter all have the same name- Savithri?”

    My heart skipped a beat. No one, absolutely no one knew this. It was true! (My wife Geetha’s real name is Savithri, so is my daughter Soumya’s and mother’s) Now, he had my full attention.

    Then came a series of questions about my recent past. The job I was in. The losses I had incurred on the business front. The accusations leveled against me by the political mafia. The circumstances of my mother’s death. Events from my past, many I had shared with none, absolutely none. People I had met recently. My professional interests. Details of my family- my wife, my daughter, my son, my father.. I was getting scared. My heart missed a few more beats.

    He told me I had to do attend to a few promises I had made to God. (C’mon, I’d made none). He then took me into a trance, showing me scenes from an earlier ‘janma’ (life). I was dazed. Among many ‘corrections’ required, he had told me was a visit to the Meenakshi Temple at Madurai. Whenever I could manage it. After paying obeisance, he had reminded me, ‘An old lady waiting for you, at the exit of Sunderanar Nada will ask you for something. Just give her whatever she asks for!”

    Months passed by. I’d forgotten this altogether. Work kept me busy.

    Back to the present:

    How would I recognize this woman? I had no idea what she would look like. I decided to just sit inside near the sanctum sanctorum and chant the Gayatri. I knew that whatever has to happen will happen. I knew better than to fight with fate. As I finished my prayers, received the prasadam from the Iyer and walked out, someone tapped my shoulders from behind. I turned back.

    It was an old lady!

    In tattered clothes. And matted white hair. In tears. I could hardly see her face through her wrinkles. She must not have eaten for a whole week, I thought. Yet there was a strange powerful glow, an aura about her. Her husband, she said was in a hospital and she needed money for the medicines. I asked her if a hundred rupees would suffice. Her face lit up. Her palms placed on my forehead, a toothless smile appeared through the wrinkles on her face. “Nanna Iruppe!” she blessed me.

    “Vazhi Vidungo!” the temple officials threw me as the chariot was speeding in to the sanctum. In the milieu I lost the Old Woman.

    I looked everywhere. She had merged into the swarming multitudes.

    As I walked out of the temple, I saw a row of toys on the pavement. I am unsure if I saw her right.

    An old woman selling Puppets.


    im tryin to contact that person to get the reader's whereabouts.

    ReplyDelete
  53. this time around ,during the election times a lot of astrologers gave their predictions and most of them were really wrong.why so ?

    sir, whats meaning of the sayin kettavan kettidil kittidum raja yogam ?

    does it pertain to the enemy of the lagna lord being debilitated ?

    ReplyDelete
  54. ஹலோ மைக் டெஸ்ட்டிங்

    ஐயா தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்களேன். ஏன்னா எனக்கு இங்கிலீசு புரியாதையா. இவ்வளவு நீளமா இங்கிலிசுல குடுத்தீங்கன்னா, இத என்னிக்கி வாசிச்சி முடிச்சி என்னிக்கி அர்த்தம் படிக்க?

    தயவுசெய்து தமிழ் ஒகேவா.

    இல்லாட்டுனா, நீங்களும் வாத்தியாரும்தான் தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசிக்கிட முடியும். என்னை மாதிரி சிலர் வேடிக்கைதான் பாத்திக்கிட்டு இருக்கணும்.

    ஏதோ வாத்தியார் புண்ணியத்துல தமிழ்ல ஜோதிடம் படிச்சிக்கிட்டு இருக்கோம். நீங்க இப்டியே இன்கிளிசுலையே கேள்வி கேட்டீங்கன்னா, பெறகு வாத்தியாரும் பதிவுகளை இன்கிலீசுலையே எழுத ஆரம்பிச்சிருவாரு. பெறகு எங்க பாடு திண்டாட்டம்தான்.

    சரிங்களா மைக் சார்

    ReplyDelete
  55. /////////////////////////// kmr.krishnan said...
    முருகனடிமைக்கு பதில்:ரோகிணி,
    ---------------------
    ஹஸ்தம் ,திருவோணம் சந்திரனின் தசையில் பிற்க்கிறார்கள்.சந்திரன் 2 1/2 நாளுக்கு ஒரு முறை ராசி மாறுவது.திருவோண‌த்தின் மகர ராசி சர ராசி.எனவே அலைச்சல் அதிகம். வீட்டில் தங்கமாட்டர்கள். 9 வது இடம் கன்னி, புதன் ஆடசி.சூர்யனுக்கு ஆகாது.எனவே தந்தைக்கு ஆகாது.குடும்பத்திற்கு உதவாததுபோன்ற .ந‌டைமுறையில் பிற கிரஹஙகளால் மாறுதலான தோற்றம் கொடுக்கலாம்!
    kmr.krishnan
    http://parppu.blospot.com
    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    மொத்தத்துலே திருவோண ராசிக்காரங்களே ஒதவாக்கரையா? அல்லது அடியேன் மட்டும்தானா?

    அடியேன் மரமண்டைக்கு புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  56. ஐயா,
    ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால் உங்கள் நடையில் படிப்பதில் உள்ள சுவையே தனி தான். எதை மாற்றினாலும் உங்கள் நடை மற்றும் உங்கள் கதையை மட்டும் தயவு செய்து மாற்றாதீர்கள்.

    ReplyDelete
  57. ஐயா,
    ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால் உங்கள் நடையில் படிப்பதில் உள்ள சுவையே தனி தான். எதை மாற்றினாலும் உங்கள் நடை மற்றும் உங்கள் கதையை மட்டும் தயவு செய்து மாற்றாதீர்கள்.

    ReplyDelete
  58. ஐயா,
    ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால் உங்கள் நடையில் படிப்பதில் உள்ள சுவையே தனி தான். எதை மாற்றினாலும் உங்கள் நடை மற்றும் உங்கள் கதையை மட்டும் தயவு செய்து மாற்றாதீர்கள்.

    ReplyDelete
  59. Hello Mike! why so................................ length............................y
    post?Is it your own experience or
    some one else?Who is that 'naadi jothidar?'
    KMR.KRISHNAN
    http//parppu.blogspot.com

    ReplyDelete
  60. "மொத்தத்துலே திருவோண ராசிக்காரங்களே ஒதவாக்கரையா? அல்லது அடியேன் மட்டும்தானா?

    அடியேன் மரமண்டைக்கு புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்."

    Appadiyellam illai Murugandimai.
    Enthanthaiyarthiruvonam. Suthanthira porattathil Kudumbathai vittu, jailukku ponar.
    Avarai eppadi uthavaakkarai enru solla mudiyum?
    KMR.KRISHNAN

    ReplyDelete
  61. //////////////////////////////////////////////////
    kmr.krishnan said...
    Appadiyellam illai Murugandimai.
    Enthanthaiyarthiruvonam. Suthanthira porattathil Kudumbathai vittu, jailukku ponar.
    Avarai eppadi uthavaakkarai enru solla mudiyum?
    KMR.KRISHNAN
    ///////////////////////////////////////////////////

    ஐயயோ

    கிருஷ்ணன் சார்

    அடியேனை மன்னித்து விடுங்கள். நான் குறிப்பட்ட அந்த திருவோணத்தான் (அதாவது திருவாத்தான்) நான்தான். தயவுசெய்து நான் வேற யாரையும் குறிப்பிடலை சார். ஒங்க மனசு புண்பட்டால் மன்னிப்புக் கேட்டுக்கிடுறேன் சார்.

    செரியா.

    ReplyDelete
  62. //////////////////////////////////////////////////
    வெளக்கெண்ணை முண்டம் said...
    tamilil evvaru type seiya vendum?
    //////////////////////////////////////////////////

    நான் இந்த வெப்சைட்ட http://www.google.co.in/transliterate/indic/tamil பயன்படுத்தி டைப் அடிச்சி இங்க பேஸ்ட் பண்ணிருவேன். இந்த வெப்சைட்ல தங்லிஷ் அதாவது நீங்க தமிழ் வார்த்தையை ஆங்கில நடையில் டைப் அடிச்சீங்கன்னா அது ஆட்டமேடிக்கா தமிழாக மாறிவிடும்.

    அப்புறமென்ன! தூள் கெளப்புங்க!

    வாத்தியார் இல்லன்ன ஒடனே வகுப்பறையில் அரட்டை அதிகம் ஆகிவ்ட்டது. நாளைக்கு வாத்தியார் வந்தவுடன், பாடத்த தவிர மத்த வெட்டிக் கதை பேசுறதுக்கு அடியேனை முழங்காலில் நிறுத்திவிடுவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  63. உதாரணத்திற்கு நீங்கள் கேட்ட கேள்வியை (tamilil evvaru type seiya vendum?) அங்கு எப்படி டைப் செய்ய வேண்டும் என்றால்

    tamilil evvaaru taip seiya vendum?

    இப்டி இங்க்ளிஷ்ள டைப் பன்னுனாதான்

    தமிழில் எவ்வாறு டைப் செய்ய வேண்டும்

    என்று அழகாக தமிழில் மாறும்.

    ஏதும் தமிழ் வார்த்தைல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா Backspace அ தட்டுனாலே ................................. நான் சொல்றத விட நீங்க செஞ்சு பாருங்க புரியும்

    ஒகேவா

    ReplyDelete
  64. வாத்தியார் ஐயா,

    1. ஒரே கட்டத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்லதா?
    அது ஜாதகனுக்கு ஏதும் பாதிப்புகளை உண்டாக்குமா?
    உதாரணத்திற்கு மீன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கூட்டணிகள் அமைந்திருப்பது.


    2.ஒரே வீட்டில் இரண்டிக்கும் மேற்பட்ட கிரகங்கள் அடைபட்டிருந்தால் அந்த வீடு சேதப்படாதா?

    3.தவறான ஜாதகம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

    4.ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?

    5.இளையராஜாவின் சமீபத்திய இசை முன்புபோல் விஷேசமாக இல்லாமல் இருப்பது எதைக் குறிக்கிறது? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா?

    6.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா?


    (தயவு செய்து செய்து சமயம் வரும் பொழுதோ, நேரம் கிடைக்கும் பொழுதோ பதில் கூறுங்கள்)

    ReplyDelete
  65. no. that wasnt my experience. i found that posting at multiply.com. search using key words.


    to murugan adimai sir,

    naan adutha thadavayil irrunthu muyarchi seikiren. i post using diff cmputers.



    as for ur questions , neengal basic lessons ellam padithakivitatha ? athil graha serkai pattri lots of info ullathu.

    ReplyDelete
  66. no. that wasnt my experience. i found that posting at multiply.com. search using key words.


    to murugan adimai sir,

    naan adutha thadavayil irrunthu muyarchi seikiren. i post using diff cmputers.



    as for ur questions , neengal basic lessons ellam padithakivitatha ? athil graha serkai pattri lots of info ullathu.

    ReplyDelete
  67. //சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
    வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்.//

    ஆமாம் ஒன்றிற்கு வாந்தி வராமலும் மற்றொன்றிற்கு குறை பிரசவம் ஆகாமலும் இருந்தால்.

    //சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
    ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!//

    இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சனி திசை சுயபுத்தியில் 4 மாதம் வரை ஒன்றும் ஆக வில்லை அதன் பிறகுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. 19 வருடம் கொடுக்க வேண்டியதை மூன்றே வருடத்தில் கொடுத்து முடித்து விட்டது போல் இருந்தது. கடைசி 6 மாதங்கள் அதன் வீரியம் குறைய ஆரம்பித்தது. இப்போது புதன் புத்தி. பட்ட துன்பங்களுக்கு பிரதிபலனாக பல நல்ல விஷயங்கள் நடந்தது. இன்னும் நடக்கிறது.

    ReplyDelete
  68. Dear Sir

    Jothidathai unmayile Arindhu kollum Mudhal(First) thara manavan endru ninaikkirean. Adhai Asiriyar Avargalthan sollavendum.

    Ungalin Nerthiyana writing stylum & karutthulla Jothidam Padamamum - Ungalayum migavum Virumbugirean.

    Nandri Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  69. ///Blogger முருகன் அடிமை said...
    பரவாயில்லையே
    அடியேன் கேட்கும் காசு பெறாத கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.
    தாங்கள் ஜோதிடத்தில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் சிறந்தவர் என்று நினைக்கிறேன்.////

    உங்கள் பின்னூட்டக் கோட்டா முடிந்துவிட்டது.

    ReplyDelete
  70. ////Blogger முருகன் அடிமை said...
    திருவோணம் தெருவோட போகும் என்கிறார்களே!
    இது எந்த அளவுக்கு உண்மை. இந்த நட்சத்திரக்காரர்கள் துரதிருஷ்டசாலியா.
    இந்த நட்சத்திரகாரர் குடும்பத்தில் சேர்ந்து இருக்கலாமா?
    இந்த நட்சத்திரக்காரர் குடும்பத்திற்கு ஆகாதவரா?////////

    அதைல்லாம் உங்கள் மாதிரி பொழுதுபோகாதவன் சொன்னது!
    பரணி தரணியாளும்
    தவத்துப் பிள்ளை மகத்தில் பிறக்கும்
    என்று எத்தனையோ உள்ளது.
    எத்தனை பரணி தரணியாள்கிறது?
    எத்தனை மகம் தவத்தில் பிறந்த பலனை அனுபவிக்கிறது
    என்று அறிந்து அல்லது கேட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  71. ////Blogger முருகன் அடிமை said...
    திருவோணம் தெருவோட போகும் என்கிறார்களே!
    இது எந்த அளவுக்கு உண்மை. இந்த நட்சத்திரக்காரர்கள் துரதிருஷ்டசாலியா.
    இந்த நட்சத்திரகாரர் குடும்பத்தில் சேர்ந்து இருக்கலாமா?
    இந்த நட்சத்திரக்காரர் குடும்பத்திற்கு ஆகாதவரா?////////

    அதைல்லாம் உங்கள் மாதிரி பொழுதுபோகாதவன் சொன்னது!
    பரணி தரணியாளும்
    தவத்துப் பிள்ளை மகத்தில் பிறக்கும்
    என்று எத்தனையோ உள்ளது.
    எத்தனை பரணி தரணியாள்கிறது?
    எத்தனை மகம் தவத்தில் பிறந்த பலனை அனுபவிக்கிறது
    என்று அறிந்து அல்லது கேட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  72. /////Blogger kmr.krishnan said...
    அய்யா!எல்லாப் பின்னூட்டங்களுமே கோவில் மாட்டை மறந்து விட்டர்களே!
    கோவில் மாட்டுக்கு 3,7,11ம் இடஙகள் மிகவும் பலம் என்று தோன்றுகிறது!
    உங்கள் வேலை பளு குறைய பின்னூட்டஙளுக்கு பதில் அளிப்பதில் ரேஷன்
    செய்யலாமே
    kmr.krishnan
    http://parppu.blogspot.com////

    ஆமாம். உங்களுக்கு மட்டும் ரேசன் இல்லை சார்!

    ReplyDelete
  73. ////Blogger kmr.krishnan said...
    முருகனடிமைக்கு பதில்:ரோகிணி,
    ---------------------
    ஹஸ்தம் ,திருவோணம் சந்திரனின் தசையில் பிறக்கிறார்கள்.சந்திரன் 2 1/2 நாளுக்கு ஒரு முறை ராசி மாறுவது.திருவோண‌த்தின் மகர ராசி சர ராசி.எனவே அலைச்சல் அதிகம். வீட்டில் தங்கமாட்டர்கள். 9 வது இடம் கன்னி, புதன் ஆடசி.சூர்யனுக்கு ஆகாது.எனவே தந்தைக்கு ஆகாது.குடும்பத்திற்கு உதவாததுபோன்ற .ந‌டைமுறையில் பிற கிரஹஙகளால் மாறுதலான தோற்றம் கொடுக்கலாம்!
    kmr.krishnan
    http://parppu.blospot.com/////

    யோகங்களைப் பற்றிய பாடம் பின்னால் வரவுள்ளது. அதைப் படித்தால், ஜாதகங்களை அலசுவதில் உள்ள நமது கண்ணோட்டம் மாறும்

    ReplyDelete
  74. ////Blogger sowri said...
    You have given enough for us to read and understand. Please take your own time and continue your good work Sir////

    ஆமாம். உண்மை. அனைவரும் பழைய பாடங்கள் அனைத்தையும் முதலில் படியுங்கள்.

    ReplyDelete
  75. ////Blogger sowri said...
    we will wait for the master to appear.////

    வந்துவிட்டேன்.

    ReplyDelete
  76. ////Blogger mike said...
    sir, eppadi irrukinga ? its been weeks since i last visited ur blog, i should admit.hope ur advanced lessons are going on as planned and the students are being kept interested. seems uve got a lotta new visitors. i think uve done the right thing by posting this message so that they get the point. naanum ungalai oru kalanthul pirandinen thaan ninaikiren...he he..
    i been searchin for reliable nadi reader to get a readin for person whos in desperate need of some guidance.no success yet.but found this post very interesting and thought of sharing it with the students n you.////

    நன்றி மைக்!

    ReplyDelete
  77. /////Blogger mike said...
    found at multiply.com .///

    நீங்கள் படித்ததை இங்கே எழுதுங்கள். ஆனால் மின்னஞ்சலில் எழுதுங்கள் மைக்

    ReplyDelete
  78. Blogger mike said...
    this time around ,during the election times a lot of astrologers gave their predictions and most of them were really wrong.why so ?
    sir, whats meaning of the sayin kettavan kettidil kittidum raja yogam ?
    does it pertain to the enemy of the lagna lord being debilitated ?/////

    தீய கிரகங்கள் மறைவிடத்தில் இருந்தால் என்று பொருள் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  79. ////Blogger முருகன் அடிமை said...
    ஹலோ மைக் டெஸ்ட்டிங்
    ஐயா தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்களேன். ஏன்னா எனக்கு இங்கிலீசு புரியாதையா. இவ்வளவு நீளமா இங்கிலிசுல குடுத்தீங்கன்னா, இத என்னிக்கி வாசிச்சி முடிச்சி என்னிக்கி அர்த்தம் படிக்க?
    தயவுசெய்து தமிழ் ஒகேவா.
    இல்லாட்டுனா, நீங்களும் வாத்தியாரும்தான் தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசிக்கிட முடியும். என்னை மாதிரி சிலர் வேடிக்கைதான் பாத்திக்கிட்டு இருக்கணும்.
    ஏதோ வாத்தியார் புண்ணியத்துல தமிழ்ல ஜோதிடம் படிச்சிக்கிட்டு இருக்கோம். நீங்க இப்டியே இன்கிளிசுலையே கேள்வி கேட்டீங்கன்னா, பெறகு வாத்தியாரும் பதிவுகளை இன்கிலீசுலையே எழுத ஆரம்பிச்சிருவாரு. பெறகு எங்க பாடு திண்டாட்டம்தான்.
    சரிங்களா மைக் சார்/////

    சரீங்க அண்ணா!

    ReplyDelete
  80. ////Blogger முருகன் அடிமை said...
    /////////////////////////// kmr.krishnan said...
    முருகனடிமைக்கு பதில்:ரோகிணி,
    ---------------------
    ஹஸ்தம் ,திருவோணம் சந்திரனின் தசையில் பிற்க்கிறார்கள்.சந்திரன் 2 1/2 நாளுக்கு ஒரு முறை ராசி மாறுவது.திருவோண‌த்தின் மகர ராசி சர ராசி.எனவே அலைச்சல் அதிகம். வீட்டில் தங்கமாட்டர்கள். 9 வது இடம் கன்னி, புதன் ஆடசி.சூர்யனுக்கு ஆகாது.எனவே தந்தைக்கு ஆகாது.குடும்பத்திற்கு உதவாததுபோன்ற .ந‌டைமுறையில் பிற கிரஹஙகளால் மாறுதலான தோற்றம் கொடுக்கலாம்!
    kmr.krishnan
    http://parppu.blospot.com
    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    மொத்தத்துலே திருவோண ராசிக்காரங்களே ஒதவாக்கரையா? அல்லது அடியேன் மட்டும்தானா?
    அடியேன் மரமண்டைக்கு புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்.////

    உங்களை வைத்து மற்ற திருவோணக்காரர்கலை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்?
    நானும் திருவோணக்காரன்தான்.
    திருப்பதி பெருமாளும் திருவோணக்காரர்தான்

    ReplyDelete
  81. Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
    tamilil evvaru type seiya vendum?

    என்ன சாமி பயமுறுத்துகிறமாதிரி, ஒரு புனைப்பெயர்?
    முதலில் அதை மாற்றுங்கள். மற்றவற்றைச் சொல்லித்தருகிறேன்

    ReplyDelete
  82. Blogger T.SHANMUGANANDAN said...
    ஐயா,
    ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால் உங்கள் நடையில் படிப்பதில் உள்ள சுவையே தனி தான். எதை மாற்றினாலும் உங்கள் நடை மற்றும் உங்கள் கதையை மட்டும் தயவு செய்து மாற்றாதீர்கள்.//////

    மாறாது. பழகிவிட்டது. மாற்றிக் கொள்ளவும் முடியாது!

    ReplyDelete
  83. ///Blogger kmr.krishnan said...
    Hello Mike! why so................................ length............................y
    post?Is it your own experience or
    some one else?Who is that 'naadi jothidar?'
    KMR.KRISHNAN
    http//parppu.blogspot.com////

    found at multiply.com . என்று அவரே சொல்லியிருக்கிறார் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  84. ////Blogger kmr.krishnan said...
    "மொத்தத்துலே திருவோண ராசிக்காரங்களே ஒதவாக்கரையா? அல்லது அடியேன் மட்டும்தானா?
    அடியேன் மரமண்டைக்கு புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்."
    Appadiyellam illai Murugandimai.
    Enthanthaiyarthiruvonam. Suthanthira porattathil Kudumbathai vittu, jailukku ponar.
    Avarai eppadi uthavaakkarai enru solla mudiyum?
    KMR.KRISHNAN////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
    நானும் திருவோணக்காரன்தான்.
    திருப்பதி பெருமாளும் திருவோணக்காரர்தான்

    ReplyDelete
  85. Blogger ananth said...
    //சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
    வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்.//
    ஆமாம் ஒன்றிற்கு வாந்தி வராமலும் மற்றொன்றிற்கு குறை பிரசவம் ஆகாமலும் இருந்தால்.
    //சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
    ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!//
    இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சனி திசை சுயபுத்தியில் 4 மாதம் வரை ஒன்றும் ஆக வில்லை அதன் பிறகுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. 19 வருடம் கொடுக்க வேண்டியதை மூன்றே வருடத்தில் கொடுத்து முடித்து விட்டது போல் இருந்தது. கடைசி 6 மாதங்கள் அதன் வீரியம் குறைய ஆரம்பித்தது. இப்போது புதன் புத்தி. பட்ட துன்பங்களுக்கு பிரதிபலனாக பல நல்ல விஷயங்கள் நடந்தது. இன்னும் நடக்கிறது.////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  86. Blogger ananth said...
    //சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
    வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்.//
    ஆமாம் ஒன்றிற்கு வாந்தி வராமலும் மற்றொன்றிற்கு குறை பிரசவம் ஆகாமலும் இருந்தால்.
    //சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
    ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!//
    இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சனி திசை சுயபுத்தியில் 4 மாதம் வரை ஒன்றும் ஆக வில்லை அதன் பிறகுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. 19 வருடம் கொடுக்க வேண்டியதை மூன்றே வருடத்தில் கொடுத்து முடித்து விட்டது போல் இருந்தது. கடைசி 6 மாதங்கள் அதன் வீரியம் குறைய ஆரம்பித்தது. இப்போது புதன் புத்தி. பட்ட துன்பங்களுக்கு பிரதிபலனாக பல நல்ல விஷயங்கள் நடந்தது. இன்னும் நடக்கிறது.////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  87. ///////////////////////////////////////////////////////////
    முருகன் அடிமை said...
    வாத்தியார் ஐயா,

    1. ஒரே கட்டத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்லதா? அது ஜாதகனுக்கு ஏதும் பாதிப்புகளை உண்டாக்குமா?
    உதாரணத்திற்கு மீன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கூட்டணிகள் அமைந்திருப்பது.
    2.ஒரே வீட்டில் இரண்டிக்கும் மேற்பட்ட கிரகங்கள் அடை பட்டிருந்தால் அந்த வீடு சேதப்படாதா?
    3.தவறான ஜாதகம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
    4.ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?
    5.இளையராஜாவின் சமீபத்திய இசை முன்புபோல் விஷேசமாக இல்லாமல் இருப்பது எதைக் குறிக்கிறது? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல

    முடியுமா?
    6.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா?

    (தயவு செய்து செய்து சமயம் வரும் பொழுதோ, நேரம் கிடைக்கும் பொழுதோ பதில் கூறுங்கள்)
    ///////////////////////////////////////////////////////////////////////////

    என் பாசமிகு முருகன் அடிமைக்கு,

    ஆசிரியர் சார்பாக நான் உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன் .

    """""""" 1. ஒரே கட்டத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்லதா? அது ஜாதகனுக்கு ஏதும் பாதிப்புகளை உண்டாக்குமா?
    உதாரணத்திற்கு மீன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கூட்டணிகள் அமைந்திருப்பது.


    2.ஒரே வீட்டில் இரண்டிக்கும் மேற்பட்ட கிரகங்கள் அடை பட்டிருந்தால் அந்த வீடு சேதப்படாதா? """""""

    பதில் : உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த புகழ் பெற்ற பாடல் " பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? 'இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சொவ்கியமே' என்று கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!. அதை போல ஒன்றிக்கு மேற்பட்ட

    கிரகங்கள் இருப்பது நல்லதா இல்லையா என்பது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்தது. அதை பற்றி நம் வாத்தியார் பின்னர் கிரகயுத்தம், கிரக சேர்க்கை என தனிபாடமாக தர உள்ளார். அதை நீங்கள் படிப்பதற்கு முன்பு இதுவரை வந்த அடிப்படை ஜோதிட பாடங்களை
    முதலில் படியுங்கள். பின்னர் மேல் நிலை பாடங்களை வாத்தியார் உங்களுக்கு உங்களுடைய தனி ஈமெயில் அனுப்புவார்.



    """"""""""""""""" 3.தவறான ஜாதகம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? """""""""""""""""


    பதில் : தவறான ஜாதகம் என்பதை நிர்ணயம் செய்ய பல வழிகள், பல விதிகள் உள்ளன. உதாரணத்திற்கு டுபாகூர் ஜோதிடர்கள் சிலர் ராகு, கேது இரண்டையும் ஒரே வீட்டில் தவறாக எழுதிவிடுவர். (உங்களுக்கே தெரியும் ராகு, கேது எப்போதும் 1-7 position- இல் தான் இருக்கும். மற்ற பல விதிகளை பற்றி நம் வாத்தியார் பின்னர் தனி பாடமாக எழுதவுள்ளார். அப்போது படித்துக் கொள்ளுங்கள்.

    """"""""""" 4.ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா? """"""""""""""""

    பதில் : ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைப்பற்றி நம் வாத்தியார் பின்னர் தனி பாடமாக எழுதவுள்ளார். அப்போது படித்துக் கொள்ளுங்கள்.

    """ 5.இளையராஜாவின் சமீபத்திய இசை முன்புபோல் விஷேசமாக இல்லாமல் இருப்பது எதைக் குறிக்கிறது? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா? """""""""'

    பதில் : சொல்ல முடியும். ஆனால் அதை பற்றி இளையராஜா எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஐயோ மன்னிக்கவும், வாத்தியாருக்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் பதில் அனுப்புவார். வாத்தியார் மின்னஞ்சல் முகவரி அவரது வலைத்தளத்தின் மேற்புறம் காணலாம்.


    """" 6.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா? """

    பதில் : மேற்சொன்ன அதே பதில்தான். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அவரது ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும். அனால் அதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், வாத்தியாருக்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் பதில் அனுப்புவார். வாத்தியார் மின்னஞ்சல் முகவரி அவரது வலைத்தளத்தின் மேற்புறம் காணலாம்.

    இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா முருகன் அடிமை?

    ReplyDelete
  88. @ஈகுள் சார்

    ஆஹா அருமையான பதில்கள். ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேங்கம்.

    நன்றிகள் ஈகுள் சார்.

    ReplyDelete
  89. ///முருகன் அடிமை said...
    @ஈகுள் சார்
    ஆஹா அருமையான பதில்கள். ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேகம்.
    நன்றிகள் ஈகுள் சார்.////

    பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி ஈகிள் சாரிடம் சேர்த்து விடுங்கள்!

    ReplyDelete
  90. ///////////////////////////////////////////////////////////
    SP.VR. SUBBIAH said...
    நானும் திருவோணக்காரன்தான்.
    திருப்பதி பெருமாளும் திருவோணக்காரர்தான்
    ///////////////////////////////////////////////////////////


    ஆஹா

    இதுவரையில் என்னை சுச்சியுல்லோர் திருவோண ராசியை வைத்து என்னை மட்டம் தட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் வாத்தியாரின் பதில் எனக்கு ஒரு புது உற்சாகத்தை உண்டாக்குகிறது.

    ReplyDelete
  91. //////////////SP.VR. SUBBIAH said...

    ///முருகன் அடிமை said...
    @ஈகுள் சார்
    ஆஹா அருமையான பதில்கள். ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேகம்.
    நன்றிகள் ஈகுள் சார்.////

    பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி ஈகிள் சாரிடம் சேர்த்து விடுங்கள்!

    ////////////// ////////////// ////////////// //////////////

    நன்றி முருகன் அடிமை!

    எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல அழகிரியை பார்த்து, ஓ சாரி! பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி நமது வாத்தியாருக்கே கொடுத்துவிடுங்கள் முருகன் அடிமை. பிறகு வாத்தியாரா பார்த்து நம்மிருவருக்கும் பிரித்துக்கொடுக்கட்டும். பாண்டிய மன்னன் கொடுக்கொவிட்டாலும், நமது வாத்தியார் நம் இருவருக்கு மட்டும்மாவது அவரது புத்தகத்தை இலவசமாக நமக்கு பரிசளிப்பார். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  92. //////////////SP.VR. SUBBIAH said...

    ///முருகன் அடிமை said...
    @ஈகுள் சார்
    ஆஹா அருமையான பதில்கள். ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேகம்.
    நன்றிகள் ஈகுள் சார்.////

    பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி ஈகிள் சாரிடம் சேர்த்து விடுங்கள்!

    ////////////// ////////////// ////////////// //////////////


    எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா புகழும் நம் ஆசிரியருக்கே சாரும்.

    அழகிரியை பார்த்து, ஓ சாரி! பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி நமது வாத்தியாருக்கே கொடுத்துவிடுங்கள் முருகன் அடிமை. பிறகு வாத்தியாரா பார்த்து நம்மிருவருக்கும் பிரித்துக்கொடுக்கட்டும். பாண்டிய மன்னன் கொடுக்கொவிட்டாலும், நமது வாத்தியார் நம் இருவருக்கு மட்டும்மாவது அவரது புத்தகத்தை இலவசமாக நமக்கு பரிசளிப்பார். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  93. தீய கிரகங்கள் மறைவிடத்தில் இருந்தால் என்று பொருள் கொள்ளுங்கள்.

    Monday, August 24, 2009 2:58:00 PM


    3 6 8 and 12 illaya sir ?

    ReplyDelete
  94. athepol lagnathipathikku kettavan
    valluvattru irupathum nallatha ?

    ReplyDelete
  95. ////Blogger முருகன் அடிமை said...
    ///////////////////////////////////////////////////////////
    SP.VR. SUBBIAH said...
    நானும் திருவோணக்காரன்தான்.
    திருப்பதி பெருமாளும் திருவோணக்காரர்தான்
    ///////////////////////////////////////////////////////////
    ஆஹா
    இதுவரையில் என்னை சுச்சியுல்லோர் திருவோண ராசியை வைத்து என்னை மட்டம் தட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் வாத்தியாரின் பதில் எனக்கு ஒரு புது உற்சாகத்தை உண்டாக்குகிறது.////

    ஒவர் டோஸாகிவிடப்போகிறது! பார்த்து நடக்கவும்!

    ReplyDelete
  96. /////Blogger Eagle said...
    //////////////SP.VR. SUBBIAH said...
    ///முருகன் அடிமை said...
    @ஈகுள் சார்
    ஆஹா அருமையான பதில்கள். ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேகம்.
    நன்றிகள் ஈகுள் சார்.////
    பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி ஈகிள் சாரிடம் சேர்த்து விடுங்கள்!
    ////////////// ////////////// ////////////// //////////////
    நன்றி முருகன் அடிமை!
    எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல xxxxxxxxx பார்த்து, ஓ சாரி! பாண்டிய மன்னனைப் பார்த்து பரிசுத் தொகையை வாங்கி நமது வாத்தியாருக்கே கொடுத்துவிடுங்கள் முருகன் அடிமை. பிறகு வாத்தியாரா பார்த்து நம்மிருவருக்கும் பிரித்துக்கொடுக்கட்டும். பாண்டிய மன்னன் கொடுக்கொவிட்டாலும், நமது வாத்தியார் நம் இருவருக்கு மட்டுமாவது அவரது புத்தகத்தை இலவசமாக நமக்கு பரிசளிப்பார். கவலை வேண்டாம்./////

    அந்த ஆசை வேறு இருக்கிறதா? உங்கள் இருவருக்கும் விசேச விலை. இரண்டு மடங்கு விலை!

    ReplyDelete
  97. ////Blogger mike said...
    தீய கிரகங்கள் மறைவிடத்தில் இருந்தால் என்று பொருள் கொள்ளுங்கள்.
    3 6 8 and 12 illaya sir ?/////

    ஆமாம் சாமி!

    ReplyDelete
  98. /////Blogger mike said...
    athepol lagnathipathikku kettavan
    valluvattru irupathum nallatha ?////

    லக்கினாதிபதிக்கு கெட்டவனா? யாரைச் சொல்கிறீர்கள் சாமி?
    விளக்கமாகச் சொல்லுங்கள்

    ReplyDelete
  99. //
    ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
    ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
    சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
    செக்க வானம் போல என்றும்
    சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

    பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
    பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
    பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
    பச்சை ரத்தம் வேர்வையாக
    படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

    உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
    உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
    உண்டாக்கும் கைகளே (உழைக்கும்)//

    சூப்பர் சூப்பராய் எம்ஜிஆர் பாட்டுக்களை எங்கே இருந்து எடுத்து கையாள்கிறீர்கள்.
    உபயம் யார்?
    தகவல் தரவும்.

    ReplyDelete
  100. ////புரட்சித் தமிழன் said...
    உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
    உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
    உண்டாக்கும் கைகளே (உழைக்கும்)//
    சூப்பர் சூப்பராய் எம்ஜிஆர் பாட்டுக்களை எங்கே இருந்து எடுத்து கையாள்கிறீர்கள்.
    உபயம் யார்?
    தகவல் தரவும்./////

    உபயம் கூகுள் ஆண்டவர்
    அவரிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும்
    பாடலின் முதல் வரியை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு கேட்க வேண்டும்
    அல்லது M.G.R. Songs என்று தேடுங்கள் கிடைக்கும்!

    ReplyDelete
  101. ஐயா தங்களின் பதிவில் தாங்களே பதிவிகளை தேட கூடுதுறை பதிவிக்கு செல்ல வேண்டி உள்ளது என்று கூறி உள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி,

    எனது ஒரு சிறு முயற்சி இந்த அளவு தங்களையும் தங்களது வாசகர்களையும் கவர்ந்து உள்ளது என்பது எனது பதிவு வருகைகள் லிஸ்டில் தெரிகிறது

    என் எனில் நான் பதிவு வெளி இடுவதை நிறுத்தி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிறது.

    இருந்தும் இன்றுவரை எனது பதிவிற்கு தினமும இரு நூறு வாசகர் வருகை வந்துகொண்டு உள்ளனர்.

    மேற்கொண்டு அடுத்த பாடங்களை இன்னும் இணைக்கப் படாமல் உள்ளன. தற்போது நான் உள்ள வேலைக்கு laptap இருந்தால் தான் அவைகளை செய்ய இயலும் என நினைக்கிறன்

    அதற்கு குரு பெயர்ச்சி ஆகி முருகப் பெருமானின் அருளும் விரைவில் கிடைக்கும் என எதிர் பார்கிறேன்

    (ப்ரொவ்சிங் சென்டெரில் இதை தமிழில் அடிப் பதற்குள் ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது)

    நன்றி

    ReplyDelete
  102. ////Blogger கூடுதுறை said...
    ஐயா தங்களின் பதிவில் தாங்களே பதிவிகளை தேட கூடுதுறை பதிவிக்கு செல்ல வேண்டி உள்ளது என்று கூறி உள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி,
    எனது ஒரு சிறு முயற்சி இந்த அளவு தங்களையும் தங்களது வாசகர்களையும் கவர்ந்து உள்ளது என்பது எனது பதிவு வருகைகள் லிஸ்டில் தெரிகிறது
    என் எனில் நான் பதிவு வெளி இடுவதை நிறுத்தி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிறது.
    இருந்தும் இன்றுவரை எனது பதிவிற்கு தினமும இரு நூறு வாசகர் வருகை வந்துகொண்டு உள்ளனர்.
    மேற்கொண்டு அடுத்த பாடங்களை இன்னும் இணைக்கப் படாமல் உள்ளன. தற்போது நான் உள்ள வேலைக்கு laptap இருந்தால் தான் அவைகளை செய்ய இயலும் என நினைக்கிறன்
    அதற்கு குரு பெயர்ச்சி ஆகி முருகப் பெருமானின் அருளும் விரைவில் கிடைக்கும் என எதிர் பார்கிறேன்
    (ப்ரொவ்சிங் சென்டெரில் இதை தமிழில் அடிப் பதற்குள் ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது)
    நன்றி////

    சங்கமேஷ்வரனிடம் மனு ஒன்றைக் கொடுங்கள். கூடிய சீக்கிரம் laptap வந்துவிடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com