மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.3.12

Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!



Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!

பூராடம் நூலாடாது என்ற சொல்லடை திருமண வளையத்திற்குள் மிகவும் பிரசித்தம். பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கழுத்தில் நூலாடாது - அதாவது கழுத்தில் தாலி தங்காது என்பார்கள். அதில் உண்மையில்லை. எவனோ வேலை வெட்டியற்றவன் உதிர்த்த சொல்லடை.

பூராட நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் கழுத்தில் என்ன ஆடாது என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா அவன்?

பூராட நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரம். பூராட நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாமே ஆடும். சுக்கிரன் என்றாலே ஆட்டம் பாட்டம்தானே ராசா!
தங்கள் ஆட்டம் பாட்டத்தால் யாரையும் வளைத்துப் போட்டு விடுவார்கள்.

பூராட நட்சத்திரப் பெண்களைக் காதலிக்கும் காதலர்களிடம் கேட்டுப் பாருங்கள் தெரியும்!
-----------------------------------------------------------------------
சித்தர் என்றால் யோகத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர். மரபு நெறியில் நில்லாதவர் என்று பொருள். கடுவெளி என்றால் பறந்த வெளி என்று பொருள்.

முற்காலத்தில் கடுவெளிச் சித்தர் என்ற பெயரில் ஒரு தவயோகி இருந்தார். தனது அனுபவங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அக்காலத்து மக்களும் அதிசயமாக சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். எதிர்க் கேள்விகள் இல்லாத காலம். சித்தர் என்ற பயத்தாலும் அது இருந்திருக்கலாம்.

ஒருமுறை சிவபெருமானைக் காண வேண்டி அவர் கடும் தவம் மேற்கொண்டார். தஞ்சைத் தரணியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடுவெளி என்ற கிராமத்தில் தன் தவத்தை மேற்கொண்டார். அவருடைய தவத்தை மெச்சிய சிவன் அங்கே எழுந்தருளினார். சித்துக்களில் வல்லமைபெற ஆசீர்வதித்தார்.

கதை அத்துடன் முடிந்துவிட்டது.

என்ன சுவாரசியமே இல்லாமல் முடிந்துவிட்டது?

அதற்குப் பிறகுதான் மேட்டர் இருக்கிறது.

தஞ்சையை ஆட்சி செய்த சோழ்மன்னன், சித்தருக்கு அருளிய சிவனாருக்கு அத்தலத்தில் கோவில் ஒன்றைக் கட்டினான். அத்தல சிவன் பஞ்ச பூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் முகமாக அங்கே எழுந்தருளியதால் ஆகாசபுரீஸ்வரர் என்ற் பெயரையும் பெற்றார்

இறையனார் ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகின்றார். மங்களகரமான வாழ்க்கையைத் தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் இங்கே வந்து ஆகாசபுரீஸ்வரரை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இக்கோவிலில் கடுவெளிச்சித்தரின் சிலை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றதாம். கோவிலின் முன் மண்டபத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டாராம். அதன் காரணமாக இத்தலத்தில் நந்தி பகவான், கோபுரத்திற்கு வெளியே உள்ளார்.

சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம் இது.
--------------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 18
பூராடம் நட்சத்திரம்
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
--------------------------------------------------------
இறைவனின் பெயர்: ஆகாசபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
இருக்கும் இடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியில் உள்ள இத்திருக்கோவிலை அடையலாம். மொத்த தூரம் 17 கிலோ மீட்டர்கள் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9-10 மணி வரை, மாலை 5-6 மணி வரை
பூராட ந்ட்சத்திர நாட்களில் காலை 8-1 மணி வரை.
திருவிழாக்கள்: ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம்.

முகவரி:
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்,
கடுவெளி,
திருவையாறு தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
 
பூராட நட்சத்திரக்காரர்கள் என்று இல்லை. அனைவரும் வணங்க வேண்டிய் தலம் இது. ஒருமுறை சென்று வாருங்கள் இறையருளைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

73 comments:

  1. கடுவெளிச் சித்தரின் பிரபலமான பாடல்,
    'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'

    என்று தொடங்கும் பாடலாகும். அவர் சூனியத்தைத் தியானித்து, சித்தி பெற்றார் என்று கூறப்படுகிறது. இன்றைய‌ நட்சத்திரப் பதிவு, வழக்கம் போல் அருமை.

    //பூராட நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் கழுத்தில் என்ன ஆடாது என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா அவன்?//

    அதற்கும் ஒன்று உள்ளது. என் சித்தப்பா மகன் பூராட நட்சத்திரம். அவனுக்குத் திருமணம் செய்யப் பெண் தேடிய போது, ஒரு அம்மாள், 'பையனுக்குப் பூராட நட்சத்திரம்னா, அப்பா அம்மா, தாரை வார்த்து தர மாட்டாங்க, வேற யாராவது செய்கிற மாதிரி ஆயிடும்' என்றார். அவன் திருமணத்தின் போது என் சித்தப்பா உயிரோடு இல்லை. இது தற்செயலா, நிஜமா என்று இன்னமும் புரியவில்லை.

    ReplyDelete
  2. பூராடம் நூலாடாது என்றது யார் சொன்னது?
    "
    பூராடம் பூராவும் ஆடும்" என்றே

    ஆணியாடித்தாற் போன்று அநீதிக்கு
    நல்ல போதனையைத் தந்து ஆரம்பித்தப் பாடம்...

    ஆகாசபுரீஸ்வரர் அன்னையவள் ஸ்ரீ மங்களாம்பிகை
    தரிசனத்திற்கு ஆற்றுவித்த ஐயாவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ----நட்சத்திரக் கோவில்கள் பகுதியில்
    பூராடம் நட்சத்திரத்திர்க்கான அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்கடுவெளி என்ற கிராமத்தில் உள்ள விபரம்,
    கடுவெளி சித்தர் பற்றிய குறிப்பு,ஸ்தல வரலாறு ,முகவரி,திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் ஆகிய விபரங்களை அளித்துள்ள ஆசிரியர்அவர்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  4. கடுவெளி சித்தரின் பாடலில் எனக்கு பிடித்தது ...

    நீர்மேற் குமிழியிக் காயம் - இது
    நில்லாது போய்விடும் நீயறிமாயம்
    பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
    பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்

    ReplyDelete
  5. வணக்கம் சார்,
    உங்களுடைய ஆக்கங்கன் எல்லாம் தரமாக உள்ளது.
    கும்ப லக்கினதிற்கு,
    12ம் இடத்தில் குரு நீசம் ஆக இருந்து அஸ்தங்கம் அடைத்தால், குரு நற்பலன் செய்வாரா? அல்லது கெட்ட பலன் செய்வாரா?

    ReplyDelete
  6. Parvathy Ramachandran said...சித்தப்பா மகன் பூராட நட்சத்திரம். அவனுக்குத் திருமணம் செய்யப் பெண் தேடிய போது, ஒரு அம்மாள், 'பையனுக்குப் பூராட நட்சத்திரம்னா, அப்பா அம்மா, தாரை வார்த்து தர மாட்டாங்க, வேற யாராவது செய்கிற மாதிரி ஆயிடும்' என்றார். அவன் திருமணத்தின் போது என் சித்தப்பா உயிரோடு இல்லை. இது தற்செயலா, நிஜமா என்று இன்னமும் புரியவில்லை.

    திருமணத்தின் போது சித்தப்பா உயிரோடு இல்லை ஆனால் அம்மா உயிரோடு இருந்திருக்கிறார்கள். அப்படித்தானே .

    காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதைதான்.

    எல்லா நட்ச்சத்திரத்திற்கும் அடுக்கு மொழியில் ஏதாவது ஒன்றை சொல்லி வைத்துள்ளார்கள் .கேட்டை கோட்டை கட்டும் அல்லது கோட்டை ஆளும் என்று கூட ஒரு சொல்லடை உண்டு. என் நண்பன் ஒருவனுக்கு கேட்டைதான். பார்க்கும் வேலையோ மீன்குட்டைக்கு காவலாளி வேலை என்ன செய்ய.

    சித்தப்பாவின் ஜாதகப்படி அவருக்கு ஆயுள் முடிந்திருக்கும் .

    ReplyDelete
  7. Ji! Always ur losson good! Superb! Reading ur lesson sweet. One jenral doubt ji? From Lagnam we know all about our life and also what are good and bad houses respetively good and bad planet for us. From Rasi we know when we get good and bad time. From birthstar we get starting Desai and planet strength. Please say what are all other use of our bithstar in horoscope? Ji thanks fr giving this opotunity to me.

    ReplyDelete
  8. Good evening sir, i don't know how to ask.saturn is in 7th house,and he is in pooradam star.so it means as you said will she lose his husband soon? Any other plus and minus by this placement.lagna is mithuna. Pls reply sir atleast for this post thanks for spending your own time

    ReplyDelete
  9. இந்தப் பாடல்களை எல்லாம் உண்மையில் எழுதியது கடுவெளி சித்தர்தானா? என் சந்தேகத்திற்கு காரணம் இந்தப் பாடல்களின் பொருள் எனக்கு சுலபமாகப் புரிகிறது. பழந்தமிழ் பாடகள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியாது.

    ஐயா இன்றைய உங்கள் பதிவு, சென்ற செப்டெம்பர் மாதம் நீங்கள் பதிவிட்ட "பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது?" என்ற உங்கள் சிறுகதையை நினைவூட்டியது (http://classroom2007.blogspot.com/2011/09/short-story.html) , அதை மீண்டும் ஒருமுறைப் படித்தேன்.
    ஜோதிடத்தை விடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். ”இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது?” என்ற வரிகளில் உங்கள் கருத்தும் புலப்பட்டது.
    இந்தச் சோழ மன்னர்கள் எல்லோரும் தடுக்கி விழுந்தால் சிவன் கோவிலில்தான் விழுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக திட்டம் போட்டே வேலை செய்திருக்கிறார்கள்/கோவில்கள் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இன்றைய பதிவு நல்ல தகவல்களைத் தருகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  10. ///// Parvathy Ramachandran said...
    கடுவெளிச் சித்தரின் பிரபலமான பாடல்,
    'நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
    என்று தொடங்கும் பாடலாகும். அவர் சூனியத்தைத் தியானித்து, சித்தி பெற்றார் என்று கூறப்படுகிறது. இன்றைய‌ நட்சத்திரப் பதிவு, வழக்கம் போல் அருமை.////

    உங்களின் பாராடிற்கு நன்றி சகோதரி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //பூராட நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் கழுத்தில் என்ன ஆடாது என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா அவன்?//
    அதற்கும் ஒன்று உள்ளது. என் சித்தப்பா மகன் பூராட நட்சத்திரம். அவனுக்குத் திருமணம் செய்யப் பெண் தேடிய போது, ஒரு அம்மாள், 'பையனுக்குப் பூராட நட்சத்திரம்னா, அப்பா அம்மா, தாரை வார்த்து தர மாட்டாங்க, வேற யாராவது செய்கிற மாதிரி ஆயிடும்' என்றார். அவன் திருமணத்தின் போது என் சித்தப்பா உயிரோடு இல்லை. இது தற்செயலா, நிஜமா என்று இன்னமும் புரியவில்லை./////

    நீங்களே சொல்லிவிட்டீர்கள் - புரியவில்லை என்று! ஒருவரின் மரணத்திற்கு அவரின் ஜாதகம்தான் காரணமாக இருக்கமுடியும். வேறு யாரையும் தொடர்பு படுத்திச் சொல்ல முடியாது. 20 அல்லது 30 பூராட நட்சத்திரக்காரர்களின் ஜாதகத்தை சேர்த்து வைத்து ஆராய்ந்தால், சில உண்மைகள் தெரியவரலாம்!

    ReplyDelete
  11. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    பூராடம் நூலாடாது என்றது யார் சொன்னது?"
    பூராடம் பூராவும் ஆடும்" என்றே
    ஆணியாடித்தாற் போன்று அநீதிக்கு
    நல்ல போதனையைத் தந்து ஆரம்பித்தப் பாடம்...
    ஆகாசபுரீஸ்வரர் அன்னையவள் ஸ்ரீ மங்களாம்பிகை
    தரிசனத்திற்கு ஆற்றுவித்த ஐயாவிற்கு நன்றிகள்./////

    உங்களின் மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. //// V Dhakshanamoorthy said...
    நட்சத்திரக் கோவில்கள் பகுதியில் பூராடம் நட்சத்திரத்திர்க்கான அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்கடுவெளி என்ற கிராமத்தில் உள்ள விபரம்,
    கடுவெளி சித்தர் பற்றிய குறிப்பு,ஸ்தல வரலாறு ,முகவரி,திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் ஆகிய விபரங்களை அளித்துள்ள ஆசிரியர்அவர்களுக்கு நன்றி!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  13. //// naren said...
    கடுவெளி சித்தரின் பாடலில் எனக்கு பிடித்தது ...
    நீர்மேற் குமிழியிக் காயம் - இது
    நில்லாது போய்விடும் நீயறிமாயம்
    பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
    பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்/////

    உங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /// Jeyram said...
    வணக்கம் சார்,
    உங்களுடைய ஆக்கங்கன் எல்லாம் தரமாக உள்ளது.
    கும்ப லக்கினதிற்கு, 12ம் இடத்தில் குரு நீசம் ஆக இருந்து அஸ்தங்கம் அடைத்தால், குரு நற்பலன் செய்வாரா? அல்லது கெட்ட பலன் செய்வாரா?/////

    குரு எப்போதுமே, எந்த நிலையிலுமே நல்லவர். நீசமானதாலும், 12ல் அமர்ந்ததாலும் நல்ல/உரிய பலன்கள் இல்லாமல் போகுமே தவிர கெட்ட பலன்களை எதற்காகச் செய்யப்போகிறார்?

    ReplyDelete
  15. /// thanusu said...
    Parvathy Ramachandran said...சித்தப்பா மகன் பூராட நட்சத்திரம். அவனுக்குத் திருமணம் செய்யப் பெண் தேடிய போது, ஒரு அம்மாள், 'பையனுக்குப் பூராட நட்சத்திரம்னா, அப்பா அம்மா, தாரை வார்த்து தர மாட்டாங்க, வேற யாராவது செய்கிற மாதிரி ஆயிடும்' என்றார். அவன் திருமணத்தின் போது என் சித்தப்பா உயிரோடு இல்லை. இது தற்செயலா, நிஜமா என்று இன்னமும் புரியவில்லை.
    திருமணத்தின் போது சித்தப்பா உயிரோடு இல்லை ஆனால் அம்மா உயிரோடு இருந்திருக்கிறார்கள். அப்படித்தானே .
    காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதைதான்.
    எல்லா நட்ச்சத்திரத்திற்கும் அடுக்கு மொழியில் ஏதாவது ஒன்றை சொல்லி வைத்துள்ளார்கள் .கேட்டை கோட்டை கட்டும் அல்லது கோட்டை ஆளும் என்று கூட ஒரு சொல்லடை உண்டு. என் நண்பன் ஒருவனுக்கு கேட்டைதான். பார்க்கும் வேலையோ மீன்குட்டைக்கு காவலாளி வேலை என்ன செய்ய.
    சித்தப்பாவின் ஜாதகப்படி அவருக்கு ஆயுள் முடிந்திருக்கும்/////

    ஒருவரின் ஜாதகப்படிதான் ஆயுள் முடியும். மற்ற யாரும் அதற்குக் காரணமாக இருக்க முடியாது!

    ReplyDelete
  16. //// seethalrajan said...
    Ji! Always ur losson good! Superb! Reading ur lesson sweet. One General doubt ji? From Lagnam we know all about our life and also what are good and bad houses respetively good and bad planet for us. From Rasi we know when we get good and bad time. From birthstar we get starting Desai and planet strength. Please say what are all other use of our bithstar in horoscope? Ji thanks fr giving this opotunity to me./////

    பிறந்த நட்சத்திரத்தைவைத்துத்தானே ராசி உண்டாகிறது. த்சா/புத்தி ஆரம்பிக்கின்றது. முதலில் பழைய பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் படியுங்கள்!

    ReplyDelete
  17. //// Lazy boy said...
    Good evening sir, i don't know how to ask.saturn is in 7th house,and he is in pooradam star.so it means as you said will she lose his husband soon? Any other plus and minus by this placement.lagna is mithuna. Pls reply sir atleast for this post thanks for spending your own time////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
    அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்
    ----------------------------

    ReplyDelete
  18. //// தேமொழி said...
    இந்தப் பாடல்களை எல்லாம் உண்மையில் எழுதியது கடுவெளி சித்தர்தானா? என் சந்தேகத்திற்கு காரணம் இந்தப் பாடல்களின் பொருள் எனக்கு சுலபமாகப் புரிகிறது. பழந்தமிழ் பாடகள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியாது./////

    உங்கள் சந்தேகம் சரியானதுதான். புலிப்பாணியின் பாடல்களும் எளிமையான தமிழில் இருக்கும். அவையெல்லாம் இடையில் வந்த தமிழ்க்கவிஞர்களின் கைங்க்ர்யமாக இருக்கலாம். அவர்கள அவற்றை எளிமைப் படுத்தியிருக்கலாம்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ////ஐயா இன்றைய உங்கள் பதிவு, சென்ற செப்டெம்பர் மாதம் நீங்கள் பதிவிட்ட "பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது?" என்ற உங்கள் சிறுகதையை நினைவூட்டியது (http://classroom2007.blogspot.com/2011/09/short-story.html) , அதை மீண்டும் ஒருமுறைப் படித்தேன்.
    ஜோதிடத்தை விடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். ”இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது?” என்ற வரிகளில் உங்கள் கருத்தும் புலப்பட்டது.
    இந்தச் சோழ மன்னர்கள் எல்லோரும் தடுக்கி விழுந்தால் சிவன் கோவிலில்தான் விழுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக திட்டம் போட்டே வேலை செய்திருக்கிறார்கள்/கோவில்கள் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இன்றைய பதிவு நல்ல தகவல்களைத் தருகிறது. நன்றி ஐயா./////

    பழையதைத் தேடிப்பிடித்துப் படித்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  19. Guru Vanakkam.

    The term "Nool" should have stood for books and I read somewhere that pooradam people will be good in studies and possess good knowledge.

    Regards
    RAMADU

    ReplyDelete
  20. //// RAMADU Family said...
    Guru Vanakkam.
    The term "Nool" should have stood for books and I read somewhere that pooradam people will be good in studies and possess good knowledge.
    Regards
    RAMADU////

    நூலுக்கு வேறு ஒரு விளக்கத்தைச் சொன்னீர்கள். சரி, ஆடாது என்ற சொல்லிற்கு என்ன விளக்கம்?
    நூல என்றால் தாலிச் சரடு. மாங்கல்யக் கயிறு. மஞ்சள் பூசிய திருமாங்கல்யச் சரடு. கிராமத்து மொழியில் சொன்னால் மஞ்சக் கயிறு! ஆடாது என்றால் கழுத்தில் ஆடாது. தங்காது. இறங்கிவிடும் என்று பொருள். அதைத்தான் தவறான சொல்லடை என்று பதிவில் குறிப்பிட்டுள்ளேன்!

    ReplyDelete
  21. கடுவெளி திருநெய்த்தானம் என்ற ஊருக்கு அடுத்து உள்ளது. திருநெய்த்தானத்தை தில்லைஸ்தானம் என்றும் கூறுவார். இலங்கை மன்னன் கயவாகுவுக்கு நெய்யாடியப்பர் குலதெய்வமாம். கயவாகுஅங்கே வந்திருக்கிறார்.

    திரு நெய்த்தானம் எங்கள் தஞ்சாவூர் தமிழறிஞர் சேக்கிழார் அடிப்பொடி தி ந இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த ஊர்.மேலும் தி சா ராஜூ என்ற தமிழ் எழுத்தாளரின் ஊர். காந்திஜியின் முதல் ஆதரவாளர்களில் ஒருவரான தி செ செளரிராஜன் அவர்களின் ஊரும் கூட.

    கடுவெளியில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு தஞ்சாவூரார் கோபாலன் ஜி உதவிகள் செய்யும் வழக்கமுடையவர்.நண்பர் சிங்கை ஹாலாஸ்யத்திற்கும் அங்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அவரும் நன்கொடை அளித்துள்ளார்.

    31 டிசம்பர் 2011 அன்று மாலை அடியேன் அந்த ஆசிரமத்திற்கு அழைக்கப்பட்டேன்.குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

    அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி, அன்பில் வழியாக லால்குடி, வந்துவிடலாம். திருச்சி செல்ல வேண்டியது இல்லை.

    அந்தப்பகுதி முழுதும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பல உண்டு. மாணவர்கள் விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள் .ஒரு 10 கோவில்களுக்காவது சென்று வருவோம்.

    ஐயாவுக்கு நன்றி.

    ReplyDelete
  22. //அந்த "பளிச்சோ பளிச்"சின் பெயர் ரைமா சென் (Raima Sஎன்).//

    அடாடா! தேமொழி தகவல் களஞ்சியம்தான்.இவ்வளவு நுணுக்கமா படித்து தகவல் சேகரிக்கிறீர்களே.அதைப் பகிர்ந்து கொள்ளும் மேன்மைக்கு நன்றி அம்மணி!

    இப்போ உங்க‌ளுக்கு இன்னொரு ஆராய்ச்சிக்கு வழிவைக்கிறேன். ரைமா சென்னுக்கும், ரீமாசென்னுக்கும் ஏதாவது உறவு உண்டா?

    ReplyDelete
  23. கடுவெளி சித்தரை பற்றி கூறி ஆன்மீகத்தின் அஸ்திவாரத்தை பலபடுத்தி உள்ளீர்கள் .... மேலும் ஜோதிட அறியாமையை அகற்ற முயற்சித்து உள்ளீர்கள்.. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி அய்யா.

    ReplyDelete
  24. சமீபத்தில் சீனுத்தாத்தா என்ற அமெரிக்கா வாழ் இந்தியன் தாத்தா வகுப்பறைக்கு
    வந்துள்ளார்.15 டிசம்பெர் 1930 ஆம் பிறந்த திக‌தி!அவருக்கு மூத்த‌ தாத்தா/பாட்டி யாராவது வகுப்பறையில் உண்டா? தஞ்சாவூரார் 75 வயதுதான்.

    ReplyDelete
  25. மிக நன்றாக உள்ளது உங்கல் பாடம். வார்தையெல்லை உங்கலை பாரட்டா!!! ஒரு ராசில் 3 நட்சத்திரம் வருகிறது. உதரனமகா மெஷத்தில் அஷ்வினி, பாரனி, கிர்த்திகை நட்த்திரம் உள்ளது. அஷ்வினியும் பாரனியும் கெது, சுக்ரன் உடையது. மெஷத்தில் சூரியன் உச்சம் பெருகிறார். இப்பொது சூரியன் மெஷத்தில் முறையெ கெது, சுக்ரன்(சூரியனனுக்கு பகைவர்) நட்த்திரத்தில் உள்ளர் என்றால் என்ன மாறுதல் பெருவார் அவர். ஒரு ராசில் நட்த்திரத்தின் பங்கு என்னா? நனறி வாத்தியர்.

    ReplyDelete
  26. thanusu said...//காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதைதான்///

    தனுசு சார்,ஏன்,காக்கை உட்கார்ந்தால் தான் இது நடக்குமா?ஒரு குருவி.மைனா,புறா,பருந்து அமர்ந்தால் இது நிகழாதா??அதோடு,பணம் பழம்???பனம் பழம்!!!

    ReplyDelete
  27. ///// kmr.krishnan said...
    கடுவெளி திருநெய்த்தானம் என்ற ஊருக்கு அடுத்து உள்ளது. திருநெய்த்தானத்தை தில்லைஸ்தானம் என்றும் கூறுவார். இலங்கை மன்னன் கயவாகுவுக்கு நெய்யாடியப்பர் குலதெய்வமாம். கயவாகுஅங்கே வந்திருக்கிறார். திரு நெய்த்தானம் எங்கள் தஞ்சாவூர் தமிழறிஞர் சேக்கிழார் அடிப்பொடி தி ந இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த ஊர்.மேலும் தி சா ராஜூ என்ற தமிழ் எழுத்தாளரின் ஊர். காந்திஜியின் முதல் ஆதரவாளர்களில் ஒருவரான தி செ செளரிராஜன் அவர்களின் ஊரும் கூட.
    கடுவெளியில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு தஞ்சாவூரார் கோபாலன் ஜி உதவிகள் செய்யும் வழக்கமுடையவர்.நண்பர் சிங்கை ஹாலாஸ்யத்திற்கும் அங்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அவரும் நன்கொடை அளித்துள்ளார்.
    31 டிசம்பர் 2011 அன்று மாலை அடியேன் அந்த ஆசிரமத்திற்கு அழைக்கப்பட்டேன்.குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
    அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி, அன்பில் வழியாக லால்குடி, வந்துவிடலாம். திருச்சி செல்ல வேண்டியது இல்லை.
    அந்தப்பகுதி முழுதும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பல உண்டு. மாணவர்கள் விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள் .ஒரு 10 கோவில்களுக்காவது சென்று வருவோம்.
    ஐயாவுக்கு நன்றி./////

    உங்களின் பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. //// kmr.krishnan said...
    //அந்த "பளிச்சோ பளிச்"சின் பெயர் ரைமா சென் (Raima Sஎன்).//
    அடாடா! தேமொழி தகவல் களஞ்சியம்தான்.இவ்வளவு நுணுக்கமா படித்து தகவல் சேகரிக்கிறீர்களே.அதைப் பகிர்ந்து கொள்ளும் மேன்மைக்கு நன்றி அம்மணி!
    இப்போ உங்க‌ளுக்கு இன்னொரு ஆராய்ச்சிக்கு வழிவைக்கிறேன். ரைமா சென்னுக்கும், ரீமாசென்னுக்கும் ஏதாவது உறவு உண்டா?////

    சென் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்:-))))

    ReplyDelete
  29. /// Balamurugan Jaganathan said...
    கடுவெளி சித்தரை பற்றி கூறி ஆன்மீகத்தின் அஸ்திவாரத்தை பலபடுத்தி உள்ளீர்கள் .... மேலும் ஜோதிட அறியாமையை அகற்ற முயற்சித்து உள்ளீர்கள்.. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி அய்யா./////

    ஆன்மீக அஸ்திவாரம் முன்பே பலமாகத்தான் உள்ளது சுவாமி!

    ReplyDelete
  30. //// Kalai said...
    உள்ளேன் அய்யா.////

    நன்றி கலையரசி!

    ReplyDelete
  31. //// kmr.krishnan said...
    சமீபத்தில் சீனுத்தாத்தா என்ற அமெரிக்கா வாழ் இந்தியன் தாத்தா வகுப்பறைக்கு
    வந்துள்ளார்.15 டிசம்பெர் 1930 ஆம் பிறந்த திக‌தி!அவருக்கு மூத்த‌ தாத்தா/பாட்டி யாராவது வகுப்பறையில் உண்டா? தஞ்சாவூரார் 75 வயதுதான்./////

    75 வயதுக்காரர்கள் வேறு இரண்டுபேர்கள் உள்ளார்கள்.

    ReplyDelete
  32. /// seethalrajan said...
    மிக நன்றாக உள்ளது உங்கல் பாடம். வார்தையில்லை உங்களைப் பாரட்ட!!! ஒரு ராசில் 3 நட்சத்திரம் வருகிறது. உதாரணம் மேஷத்தில் அஷ்வினி, பரணி, கிருத்திகை நட்த்திரம் உள்ளது. அஷ்வினியும் பரணியும் கேது, சுக்ரகிரன்னு உரியது.. மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். இப்பொது சூரியன் மேஷத்தில் முறையெ கேது, சுக்ரன்(சூரியனுக்கு பகைவர்) நட்த்திரத்தில் உள்ளார் என்றால் என்ன மாறுதல் பெறுவார் அவர். ஒரு ராசியில் நட்த்திரத்தின் பங்கு என்ன? நனறி வாத்தியார்.////

    முதலில் பழைய பாடங்களை எல்லாம் (மொத்தம் 530) படித்துவிட்டு வாருங்கள். அத்ற்குப் பிறகு இது போன்ற சந்தேகங்கள் வராது!

    ReplyDelete
  33. //// Ananthamurugan said...
    thanusu said...//காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதைதான்///
    தனுசு சார்,ஏன்,காக்கை உட்கார்ந்தால் தான் இது நடக்குமா?ஒரு குருவி.மைனா,புறா,பருந்து அமர்ந்தால் இது நிகழாதா??அதோடு,பணம் பழம்???பனம் பழம்!!!///

    தட்டச்சுப் பிழை! ஏற்படுவது இயற்கைதான்!

    ReplyDelete
  34. Vanakkam Iyya. Today I thought of posting comment, as my star is also Pooradam (Male). I dont agree with Parvathy Ramachandran, as per my experience, as both of my parents were present for my marraige to obtain Kannikadanam for my marriage. I tend to agree with Ramadu, as I have been good in studies and have been studying a lot and obtained various qualifications. I too wish to submit myself if any research is made on Pooradam Star. One thing I wanted to add is, nobody mentioned about linking Pooradam with Porattam. Life is always Porattam and nothing comes so easily, though success comes very late after suffering. Like to have others view on this. With best regards,
    BALASUBRAMANIAN P. RIYADH.

    ReplyDelete
  35. seethalrajan said...
    ///மிக நன்றாக உள்ளது உங்கல் பாடம். வார்தையெல்லை உங்கலை பாரட்டா!!! ஒரு ராசில் 3 நட்சத்திரம் வருகிறது. உதரனமகா மெஷத்தில் அஷ்வினி, பாரனி, கிர்த்திகை நட்த்திரம் உள்ளது. அஷ்வினியும் பாரனியும் கெது, சுக்ரன் உடையது. மெஷத்தில் சூரியன் உச்சம் பெருகிறார். இப்பொது சூரியன் மெஷத்தில் முறையெ கெது, சுக்ரன்(சூரியனனுக்கு பகைவர்) நட்த்திரத்தில் உள்ளர் என்றால் என்ன மாறுதல் பெருவார் அவர். ஒரு ராசில் நட்த்திரத்தின் பங்கு என்னா? நனறி வாத்தியர்.///

    தங்கள் பூர்வீகம் இலங்கையோ!!எழுத்துகளில் அதன் தோரணை தெரிகிறது!!!(எழுத்து பிழைகளை விடுங்கள்)

    ReplyDelete
  36. அனைத்து படங்களையும் நனறாக படித்தென்(530) ஆசிரியர் அவர்களெ. ஆனலும் நான் கேட்டா கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. நீங்கல் பதில் சொல்ல தழ்மையுடன் கேட்டுகொல்கிரெமன்.

    ReplyDelete
  37. ///Ananthamurugan said... ஏன்,காக்கை உட்கார்ந்தால் தான் இது நடக்குமா?ஒரு குருவி.மைனா,புறா,பருந்து அமர்ந்தால் இது நிகழாதா??///

    த்சோ ...த்சோ ... காக்கை மேல் ஏற்பட்ட பயம் படுத்தும் பாடு, இப்படி காக்கைக்கு வக்காலத்து வாங்கும் நிலைமைக்கு கொண்டுபோய் விட்டு விட்டது. இந்தப் பயம் தெளிய காலை மாலை இரு வேலையும் பாட்டி வடை சுட்ட கதையைப் படிக்கவும். அதில் காக்கை ஏமாறுவதைப் பார்த்து பயம் தெளியும்.

    ReplyDelete
  38. SP.VR. SUBBAIYA said...
    தட்டச்சுப் பிழை! ஏற்படுவது இயற்கைதான்!

    சரிதான்!!!!

    ReplyDelete
  39. வகுப்பறையில் ஒரு வேண்டுகோள்,வேகமாகவும்,இனைய தொடர்பு இல்லாமலும் தமிழ் தட்டச்ச ஏதாவது சுட்டி இருந்தால் தெரியப்படுத்தவும்.(நான் தட்டச்சில் ஒரு விரல் கிருஷ்ணராவ்(மெதுவாக type அடிப்பவர்களை கூப்பிடுவது)

    ReplyDelete
  40. //// Balasubramanian Pulicat said...
    Vanakkam Iyya. Today I thought of posting comment, as my star is also Pooradam (Male). I dont agree with Parvathy Ramachandran, as per my experience, as both of my parents were present for my marraige to obtain Kannikadanam for my marriage. I tend to agree with Ramadu, as I have been good in studies and have been studying a lot and obtained various qualifications. I too wish to submit myself if any research is made on Pooradam Star. One thing I wanted to add is, nobody mentioned about linking Pooradam with Porattam. Life is always Porattam and nothing comes so easily, though success comes very late after suffering. Like to have others view on this. With best regards,
    BALASUBRAMANIAN P. RIYADH./////

    நீங்கள் சொல்லியுள்ளதெல்லாம் நட்சத்திரத்தை மட்டும் வருவதல்ல! காரகர்களையும் வீட்டு அதிபதிகளையும் வைத்து வருவதாகும். அதை மறந்துவிட வேண்டாம் பாலா!

    ReplyDelete
  41. /// Ananthamurugan said...
    seethalrajan said...
    ///மிக நன்றாக உள்ளது உங்கல் பாடம். வார்தையெல்லை உங்கலை பாரட்டா!!! ஒரு ராசில் 3 நட்சத்திரம் வருகிறது. உதரனமகா மெஷத்தில் அஷ்வினி, பாரனி, கிர்த்திகை நட்த்திரம் உள்ளது. அஷ்வினியும் பாரனியும் கெது, சுக்ரன் உடையது. மெஷத்தில் சூரியன் உச்சம் பெருகிறார். இப்பொது சூரியன் மெஷத்தில் முறையெ கெது, சுக்ரன்(சூரியனனுக்கு பகைவர்) நட்த்திரத்தில் உள்ளர் என்றால் என்ன மாறுதல் பெருவார் அவர். ஒரு ராசில் நட்த்திரத்தின் பங்கு என்னா? நனறி வாத்தியர்.///
    தங்கள் பூர்வீகம் இலங்கையோ!!எழுத்துகளில் அதன் தோரணை தெரிகிறது!!!(எழுத்து பிழைகளை விடுங்கள்)/////

    இன்று உங்களுக்கு இவர் கிடைத்துவிட்டாரா? ஆனந்தமாக இருங்கள் முருகன்!

    ReplyDelete
  42. /// seethalrajan said...
    அனைத்து படங்களையும் நனறாக படித்தென்(530) ஆசிரியர் அவர்களெ. ஆனலும் நான் கேட்டா கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. நீங்கல் பதில் சொல்ல தழ்மையுடன் கேட்டுகொல்கிரெமன்.////

    ஓஹோ நன்றாகப் படித்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள்
    3 கேள்விகள் கேட்டுள்ளேன். அதற்குப் பதில் சொல்லுங்கள்:

    1. லக்கினம் என்றால் என்ன?
    2. ராசி என்றால் என்ன?
    3. தசா/புத்தி என்றால் என்ன?

    ReplyDelete
  43. //// தேமொழி said...
    ///Ananthamurugan said... ஏன்,காக்கை உட்கார்ந்தால் தான் இது நடக்குமா?ஒரு குருவி.மைனா,புறா,பருந்து அமர்ந்தால் இது நிகழாதா??///
    த்சோ ...த்சோ ... காக்கை மேல் ஏற்பட்ட பயம் படுத்தும் பாடு, இப்படி காக்கைக்கு வக்காலத்து வாங்கும் நிலைமைக்கு கொண்டுபோய் விட்டு விட்டது. இந்தப் பயம் தெளிய காலை மாலை இரு வேலையும் பாட்டி வடை சுட்ட கதையைப் படிக்கவும். அதில் காக்கை ஏமாறுவதைப் பார்த்து பயம் தெளியும்./////

    இல்லையென்றால், தெருவோர டீக்கடையில் காலையும், மாலையும் இரண்டு வடைகளை (காசு கொடுத்து) வாங்கிச் சாப்பிடவும்

    ReplyDelete
  44. /// Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    தட்டச்சுப் பிழை! ஏற்படுவது இயற்கைதான்!
    சரிதான்!!!!/////

    பின் வாங்குவது சரியில்லை!

    ReplyDelete
  45. /// Ananthamurugan said...
    வகுப்பறையில் ஒரு வேண்டுகோள்,வேகமாகவும்,இனைய தொடர்பு இல்லாமலும் தமிழ் தட்டச்ச ஏதாவது சுட்டி இருந்தால் தெரியப்படுத்தவும்.(நான் தட்டச்சில் ஒரு விரல் கிருஷ்ணராவ்(மெதுவாக type அடிப்பவர்களை கூப்பிடுவது)/////

    Download NHM writer (it is free) from the net and install it in your system
    Key board practice is not necessary
    If you type ammaa - it will type அம்மா
    If you type appaa - it will type அப்பா
    Try it!

    ReplyDelete
  46. நட்சத்திர கோவில் வரிசையில் இன்று பூராடம் நட்சத்திரத்திர்க்கான அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றியும் இந்த நட்சத்திரதின் மேலுள்ள அவநம்பிக்கையை கலையும்படி பதிவிட்டது மிக நன்று.

    நன்றி!

    ReplyDelete
  47. என்னுலைய பதில்!1.ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
    எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!
    ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
    படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்

    லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
    அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
    கொள்வார்கள்
    2.இராசி என்பது நாம் பிறக்கும் பொது சந்திரன் இருக்கும் இடம். 3.திசை என்பது சந்திரன் அமர்துல்ள நட்சத்திர நாதனின் திசை தான் முதல் திசை. பிறகு அடுத்துல்ள திசை வரும். 1)uriyan 2160days 2)moon 3600days 3)mars 2520days 4)Ragu 18yrs 5)Jupiter- 16yrs 6)Saturn-19yrs 7)Mercury-17yrs 8)Ketu-7yrs 9)Venus-20yrs.

    Ji! Please encourage me for my interest. Sorry if i distub you more. Thank you Ji.

    ReplyDelete
  48. SP.VR. SUBBAIYA said...
    Download NHM writer (it is free) from the net and install it in your system
    Key board practice is not necessary
    If you type ammaa - it will type அம்மா
    If you type appaa - it will type அப்பா
    Try it!

    Thanks sir!!!!!!

    ReplyDelete
  49. தேமொழி said...
    //த்சோ ...த்சோ ... காக்கை மேல் ஏற்பட்ட பயம் படுத்தும் பாடு,//

    லக்னாதிபதி சனீஸ்வரனின் அரவணைப்பிலும், காலபைரவரின் பாதுகாப்பு அரணுக்குள்ளும்,கார்த்திகேயனின் நேரடி பார்வையில் உள்ள என்னை .அந்த "காகம்" என்ன செய்து விடமுடியும் சகோதரி.

    நானென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த
    கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு
    தாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகர்
    தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.
    முல்லா நசுருதீன் வடை சுட்ட கதை ஒன்று உண்டு.அது பின்நாளில் வரும்.

    நான் பொதுவாகவே poor eater வீட்டிலேயே வடை 5 க்கு மேல் சாப்பிடுவதில்லை......

    ReplyDelete
  50. உள்ளேன் அய்யா.

    ReplyDelete
  51. இன்று "சர்வதேச ஜோதிட தினம்". ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
    -‍ஜவஹர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  52. மிக்க நன்றி ஐய்யா, நானும் பூராட நட்சத்திரகாரன்தான். விரைவில் அருள்மிகு ஆகாசபுரீஷ்வரரை தரிசனம் செய்ய முயர்ச்சி செய்கிரேன்.

    ReplyDelete
  53. @kmr krishnan avl,
    //அந்தப்பகுதி முழுதும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பல உண்டு. மாணவர்கள் விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள் .ஒரு 10 கோவில்களுக்காவது சென்று வருவோம்.//

    நீங்கள் எனக்கு இ மெயில் அனுப்பமுடியுமா.? இந்த ஏப்ரல் கடைசி அல்லது ஜூன் முதலில் நான் திருவாசி, திருஐங்கோன்மலை (அகத்தியருக்கு ஹயக்கீரிவர் லலிதா சகஸ்ர நாமம் உபதேசித்த இடம் என்று ஞாபகம், மேலும் பெளர்ணமி அன்று நவாவரணப்பூஜை அங்கு விசேஷம்), வயலூர் முருகன், உஜ்ஜையினி காளி (சமயபுரம் பக்கத்தில்), விசேஷமான முருகன் கோயில் (சமயபுரம் அருகில்),
    திருப்பைஞ்சீலி, திருப்பட்டூர், மலைக்கோட்டையை சுற்றி உள்ள 11 கணபதிகள் (ஞாபகம்) அனைத்தையும் சுற்றி பார்க்க நினைத்துள்ளேன். இதையும் என் ப்ளானில் சேர்த்துக் கொள்வேன். நன்றி.

    @தேமொழி
    //காலை மாலை இரு வேலையும் பாட்டி வடை சுட்ட கதையைப் படிக்கவும்.//
    இரு வேலையும் ‍ அல்ல சகோதரி இரு வேளையும்...

    ReplyDelete
  54. ////Blogger முருகராஜன் said...
    நட்சத்திர கோவில் வரிசையில் இன்று பூராடம் நட்சத்திரத்திர்க்கான அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றியும் இந்த நட்சத்திரதின் மேலுள்ள அவநம்பிக்கையை கலையும்படி பதிவிட்டது மிக நன்று.
    நன்றி!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  55. ////Blogger seethalrajan said...
    என்னுலைய பதில்!
    1.ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
    எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!
    ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
    படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்
    லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
    அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
    கொள்வார்கள்
    2.இராசி என்பது நாம் பிறக்கும் பொது சந்திரன் இருக்கும் இடம்.
    3.திசை என்பது சந்திரன் அமர்துல்ள நட்சத்திர நாதனின் திசை தான் முதல் திசை. பிறகு அடுத்துல்ள திசை வரும். 1)uriyan 2160days 2)moon 3600days 3)mars 2520days 4)Ragu 18yrs 5)Jupiter- 16yrs 6)Saturn-19yrs 7)Mercury-17yrs 8)Ketu-7yrs 9)Venus-20yrs.
    Ji! Please encourage me for my interest. Sorry if i distub you more. Thank you Ji./////

    எல்லாம் சரிதான். தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  56. ////Blogger Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    Download NHM writer (it is free) from the net and install it in your system
    Key board practice is not necessary
    If you type ammaa - it will type அம்மா
    If you type appaa - it will type அப்பா
    Try it!
    Thanks sir!!!!!!////

    நன்றி இருக்கட்டும். தரவிறக்கம் (Download) செய்து பார்த்தீர்களா?

    ReplyDelete
  57. ///Blogger Ananthamurugan said...
    தேமொழி said...
    //த்சோ ...த்சோ ... காக்கை மேல் ஏற்பட்ட பயம் படுத்தும் பாடு,//
    லக்னாதிபதி சனீஸ்வரனின் அரவணைப்பிலும், காலபைரவரின் பாதுகாப்பு அரணுக்குள்ளும்,கார்த்திகேயனின் நேரடி பார்வையில் உள்ள என்னை .அந்த "காகம்" என்ன செய்து விடமுடியும் சகோதரி.

    நானென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த
    கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு
    தாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகர்
    தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.

    முல்லா நசுருதீன் வடை சுட்ட கதை ஒன்று உண்டு.அது பின்நாளில் வரும்.
    நான் பொதுவாகவே poor eater வீட்டிலேயே வடை 5 க்கு மேல் சாப்பிடுவதில்லை....../////

    வீட்டில் கேட்டால் அல்லவா தெரியும்?

    ReplyDelete
  58. ////Blogger Uma said...
    உள்ளேன் அய்யா.///

    நல்லது உமாஜி!

    ReplyDelete
  59. ///Blogger Jawahar Govindaraj said...
    இன்று "சர்வதேச ஜோதிட தினம்". ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
    -‍ஜவஹர் கோவிந்தராஜ்///

    நினைவு படுத்தியமைக்கு நன்றி ஜவஹர்
    விக்கி காமாட்சியிடமும் அது பற்றிய தகவல் உள்ளது.
    International Astrology Day (most often observed on either March 20 or March 21) is an annual observance/holiday celebrated by astrologers and astrology enthusiasts. It is seen by astrologers as the beginning (first day) of the astrological year. It is the first full day of the astrological sign of Aries and thus marks the beginning of the tropical Zodiac.
    Link: http://en.wikipedia.org/wiki/International_Astrology_Day

    ReplyDelete
  60. //// Prabhu said...
    மிக்க நன்றி ஐய்யா, நானும் பூராட நட்சத்திரகாரன்தான். விரைவில் அருள்மிகு ஆகாசபுரீஷ்வரரை தரிசனம் செய்ய முயர்ச்சி செய்கிறேன்.////

    நல்லது சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  61. //// sriganeshh said...
    @kmr krishnan avl,
    //அந்தப்பகுதி முழுதும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பல உண்டு. மாணவர்கள் விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள் .ஒரு 10 கோவில்களுக்காவது சென்று வருவோம்.//
    நீங்கள் எனக்கு இ மெயில் அனுப்பமுடியுமா.? இந்த ஏப்ரல் கடைசி அல்லது ஜூன் முதலில் நான் திருவாசி, திருஐங்கோன்மலை (அகத்தியருக்கு ஹயக்கீரிவர் லலிதா சகஸ்ர நாமம் உபதேசித்த இடம் என்று ஞாபகம், மேலும் பெளர்ணமி அன்று நவாவரணப்பூஜை அங்கு விசேஷம்), வயலூர் முருகன், உஜ்ஜையினி காளி (சமயபுரம் பக்கத்தில்), விசேஷமான முருகன் கோயில் (சமயபுரம் அருகில்),
    திருப்பைஞ்சீலி, திருப்பட்டூர், மலைக்கோட்டையை சுற்றி உள்ள 11 கணபதிகள் (ஞாபகம்) அனைத்தையும் சுற்றி பார்க்க நினைத்துள்ளேன். இதையும் என் ப்ளானில் சேர்த்துக் கொள்வேன். நன்றி./////

    நல்லது சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    @தேமொழி
    //காலை மாலை இரு வேலையும் பாட்டி வடை சுட்ட கதையைப் படிக்கவும்.//
    இரு வேலையும் ‍ அல்ல சகோதரி இரு வேளையும்...//////

    தட்டச்சுப் பிழை! பொறுத்துக்கொள்ளவும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

    ReplyDelete
  62. உங்களுக்கு நேரம் இன்மை கரனமாக என் எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை. மிக்க நன்றி. எல்லாம் சரிதான். தொடர்ந்து படியுங்கள்! என்று சொல்லி விட்டிர்கள். நட்சத்திரத்தை பறிய புத்தகங்களையவுது கூறுங்கள்.நன்றி.

    ReplyDelete
  63. kmrk said....;
    umaa said;

    அம்மா போனை எடுத்து

    அம்மா;ஹெலோ என்னங்க உங்கள் பையன் சாப்பிடாமல் ரொம்ப தொல்லை பண்றான் குரங்கை பார்த்தால் தான் சாப்பிடுவானாம்

    எதிர் முனில் அப்பா; இரு இரு இதோ வந்துவிடுகிறேன்

    ReplyDelete
  64. //நீங்கள் எனக்கு இ மெயில் அனுப்பமுடியுமா.? //

    அனுப்ப முடியுமே! என் மின்னஞ்சல் முகவ்ரி:

    kmrk1949@gmail.com

    தங்கள் முகவரியை ப்ரொஃபைலில் கண்டுபிடிக்க முடியவில்லை,ஸ்ரீகணேஷ்!

    ReplyDelete
  65. r Govindaraj said... இன்று சர்வதேச ஜோதிடர் தினம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


    வாத்தியார் எனும் ஜோதிட செம்மல்
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    இவர்
    போற்றி பாடும் பெயர் பழனி முருகன்
    அழகாய் பொட்டு வைத்த வட்டமுக ஞானி
    உள்ளத்தை அள்ளும் நவக்கிரக நாயகர்
    நலம் பல கூறும் ஜோதிட செம்மல்

    இவர்
    கண்மணிகளைக் கவர்ந்த கொங்கு வீரன்
    யாரும் படிக்கும் புத்தகம்
    எல்லோரும் வரும் பள்ளிக்கூடம்
    மாணவர்கள் ஓதும் மருதமலை

    இவர்
    சுகமான பன்னீர்- சுவையான பதநீர்
    மணக்கும் சந்தானம்-மங்கள குங்குமம்
    கனிவோடு கற்றுத்தரும்
    வகுப்பறையின் வாத்தியார்
    வாழிய நீ பல்லாண்டு

    ReplyDelete
  66. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  67. /////Blogger seethalrajan said...
    உங்களுக்கு நேரம் இன்மை கரனமாக என் எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை. மிக்க நன்றி. எல்லாம் சரிதான். தொடர்ந்து படியுங்கள்! என்று சொல்லி விட்டிர்கள். நட்சத்திரத்தை பறிய புத்தகங்களையவுது கூறுங்கள்.நன்றி.//////

    நட்சத்திரத்தின் குணதிசயங்கள் பற்றி இனிமேல்தான் எழுத உள்ளேன். எழுதிய பிறகுதான் புத்தகம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  68. வாழ்க உமது தொண்டு!!!வளர்க உமது புகழ்!!உளமார வாழ்த்தும் ....ஆனந்தமுருகன்.

    ReplyDelete
  69. ////Blogger thanusu said...
    r Govindaraj said... இன்று சர்வதேச ஜோதிடர் தினம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    வாத்தியார் எனும் ஜோதிட செம்மல்
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    இவர்
    போற்றி பாடும் பெயர் பழனி முருகன்
    அழகாய் பொட்டு வைத்த வட்டமுக ஞானி
    உள்ளத்தை அள்ளும் நவக்கிரக நாயகர்
    நலம் பல கூறும் ஜோதிட செம்மல்////

    இரண்டு தவறுகள் உள்ளன.

    1. இன்று ஜோதிட தினம். ஜோதிடர் தினமல்ல!
    2. அடியேன் வாத்தியார். ஜோதிடரல்ல!

    International Astrology Day (most often observed on either March 20 or March 21) is an annual observance/holiday celebrated by astrologers and astrology enthusiasts.

    Link: http://en.wikipedia.org/wiki/International_Astrology_Day

    ReplyDelete
  70. ///thanusu said...
    அம்மா போனை எடுத்து
    அம்மா;ஹெலோ என்னங்க உங்கள் பையன் சாப்பிடாமல் ரொம்ப தொல்லை பண்றான் குரங்கை பார்த்தால் தான் சாப்பிடுவானாம்
    எதிர் முனில் அப்பா; இரு இரு இதோ வந்துவிடுகிறேன்///

    ஹா. ஹா. ஹா. ....இதுவும் நல்லாயிருக்கு ...
    KMRK ஐயா சொன்னதும் நன்றாக இருந்தது

    ReplyDelete
  71. ///thanusu said...
    இவர்
    கண்மணிகளைக் கவர்ந்த கொங்கு வீரன்
    யாரும் படிக்கும் புத்தகம்
    எல்லோரும் வரும் பள்ளிக்கூடம்
    மாணவர்கள் ஓதும் மருதமலை///

    கவிதை நன்றாக இருக்கிறது தனுசு. "வாத்தியாரும் வாத்தியாரும்" கவிதையை உங்களை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் Profile இல் உங்கள் முகவரி கிடைக்கவில்லை. என்னுடைய முகவரி என் Profile இல் உள்ளது.

    "கண்மணிகளைக் கவர்ந்த கொங்கு வீரன்" comics books super hero மாதிரி இருக்கறது. தொடர்ந்து வரும் வரிகளும் அந்த எண்ணத்தை உறுதிப் படுத்துகிறது.

    ReplyDelete
  72. Dear Sir,

    Since I was busy officially, After a longtime I am sending comment today. Thank you for the details of this temple.

    I am a student of your coaching classes.Kindly send me the login details for the advanced lessons class.

    Warm Regards,
    Arulnithi

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com