மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.12

எத்தனை புண்ணியம் தெரியுமோ?

மாணவர் மலர் 
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன் 
வாத்தியார் 
------------------------------------------------------------------------------------------------------



சிறுகதை எத்தனை புண்ணியம் தெரியுமோ?
ஆக்கம் வெ.கோபாலன் தஞ்சாவூர்

அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.

அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?" என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், "ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்" என்றான்.

கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.

ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?

யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.

போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.

அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.

அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.

ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.

இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.

இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.

ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.

இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.

"என்னம்மா வேணும்? ஏன் முனகறே?" என்று குழந்தையை வினவினாள் ரமா.

குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.

ரமா தன் கணவனிடம் கேட்டாள், "குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று" என்றாள்.

அவனுக்கோ பஜனை சுவாரசியம். "இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்." என்றான்.

அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.

அவன் மெல்லா அந்த அம்மாளிடம், "மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்" என்றான்.

அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி "அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ" என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டன் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.

கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.

தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ரவிக் அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.

ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ரவிக் பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.

அவள் சொல்கிறாள், "இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ?" என்று.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


தங்கள் கவிதாவிலாச்த்தை மக்களின் மேன்மைக்காகப் பயன்படுத்திய மகான்கள்
ஆக்கம் பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு

கவிமழை பொழியும் திறன் எல்லோருக்கும் வந்துவிடுவதல்ல. அப்படி அத்திறன் வாய்த்தாலும், அவர்களுள் பலரும் கவிஞர் என்று மட்டும்தான்  அறியப்படுவார்.

ஆனால் நம் கண்முன்னே வாழ்ந்து, மனிதருள் தெய்வாம்சம் உடையவராகப் பிரகாசித்த பல மகான்கள் திருவாக்கிலிருந்து பிரவாகித்த பாடல்கள் அவர்களின் உண்மை ஸ்வரூபத்தை உலகுக்கு உணர்த்தியதோடு, நம் ஜென்மம் கடைத்தேறவும் வழிவகுக்கின்றன.அவர்கள் தங்கள் கவிதாவிலாசத்தை உலகத்தோரின் மேன்மைக்கே பயன்படுத்தினர்.  அதனாலேயே, அவர்கள் மிக உயர்ந்த மேன்மையான நிலையில் வைத்து வணங்கப்படுகின்றனர்.

பெரும்பாலும் முதல் பாடலை அவர்கள் அனுக்கிரகித்த உடனே, அவர்கள் இன்னாரென, உலகம் உணர்ந்து கொண்டது. அவற்றுள் மிகச்சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1. அது ஒரு தெய்வக்குழந்தை.   தன் தாயிடம் சந்நியாசம் மேற்கொள்ள‌ அனுமதி பெற்றதும், ஒரு குருவைத் தேடி பிஞ்சுக் 'காலடி' நோக நடந்து சென்று கொண்டிருக்கிறது.  நர்மதா தீரம் வந்ததும், அதன் மனதில்,'தன் குரு இங்குதான் இருக்கிறார் என்று தோன்றியது. நர்மதை, தன் கரையில் பிற்கால ஜகத்குருவைப் பார்த்தாள். மறுகணமே, ஆனந்தம் மீதுற பிரவாகத்தை அதிகரிக்கலானாள். வெள்ளப்பெருக்கைப் பார்த்ததும் பயந்த கிராம மக்கள், கரையிலிருந்த ஒரு சாதுவை நோக்கி ஓடினர். அவரோ நிஷ்டையிலிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த,  சின்னக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஒளி அவர்களை ஈர்க்கவே, அந்தக் குழந்தையிடம் ஓடி வந்து முறையிட்டார்கள். அம்மையும் அப்பனும் ஏக உருவாகி வந்த, அந்தக் குழந்தை, தன் கமண்டலத்தை நதியில் காட்ட, நர்மதை, உலகமனைத்தையும் தன்னுள் அடக்கிய தெய்வத்தின் கமண்டலத்தில் சரண் புகுந்தாள்.

நிஷ்டையிலிருந்த சாது, விழித்தார்.  நடந்ததெல்லாம் அவர் அறியாததா?.   'புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம் ' என்று தமிழ் மூதாட்டி எந்த அரவினை, ஆதிசேஷனைப் பாடினாளோ, அந்த ஆதிசேஷனே, பதஞ்சலி முனிவராகவும், பின்னர் இதோ, இப்போது 'கோவிந்த பகவத் பாதரா'கவும் அவதாரம் எடுத்து, தன் சிஷ்யருக்காக, நர்மதைத் தீரத்தில் காத்திருந்த வேளையில், காத்திருந்த சிஷ்யன் எதிரே நிற்கக் கண்டார். எதுவும் அறியாதவர் போல், 'குழந்தாய், நீ யார்' என்று கேட்டார். 

கேட்ட மறுகணம், சொல்முத்துக்களை சரமாகத் தொடுத்து, அந்த பிஞ்சுக் குழந்தை கவிமழை பொழியலாயிற்று. 'தான் யார், தன் அவதார நோக்கம் என்ன, என்பதோடு, தான் பிற்காலத்தில், ஸ்தாபிக்கப்போகும் அத்வைதத் தத்துவத்தையும் சேர்த்து சொல்லாமல் சொல்லி ஸ்லோக மழை பொழிந்தது.

பின்னாளில் ஆதிசங்கர பகவத்பாதரான அக்குழந்தை சொன்ன அந்தப் பத்து ஸ்லோகங்கள் பின்னர் 'தச ஸ்லோகீ' என்றே பெயர் பெற்றன. ஒவ்வொரு ஸ்லோகமும் சிவ: கேவலோஅஹம் என்றே முடியும். இதன் பொருள் மாயையெல்லாம் அகன்ற பிறகு, எஞ்சியிருக்கும் சிவமே நான் என்பதாகும்.அதில் ஒன்றைப் பார்க்கலாம்.

ந சோர்த்வம் ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம்
ந மத்யம் ந திர்யங் ந பூர்வாபரா திக்/
வியத்வ்யாபகத்வாத் அகண்டைகரூப:
ததேகோsவசிஷ்ட: சிவ: கேவலோsஹம்//

இதன் பொருள், ஆத்மாவுக்கு, மேல், கீழ் முதலிய நிலைகளோ, கிழக்கு, மேற்கு முதலிய திசைகளோ இல்லை. பரந்து விரிந்துள்ள ஆகாயம் (பிரபஞ்ச வெளி) பாகுபாடற்று எப்படி நீக்கமற நிறைந்துள்ளதோ அது போல ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அந்த ஆத்மாவாய், ஆனந்தமாய்த் திகழ்கிற சிவமே யான். (அதாவது, சிவமும் ஆத்மாவும் ஒன்றே என்ற அத்வைதத் தத்வம் இங்கு மறைபொருள் )    ஒளியும், காற்றும் இன்ன பிறவும் இறைத்தத்துவமே.  அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது . இது பரம்பொருளின் நிர்க்குண (உருவமற்ற) நிலை. இதை,

எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே
திக்கொடு கீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே  
என்று   தாயுமானவ ஸ்வாமிகள் பாடல்களிலும்,  

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்
என்று, சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியத்தின் கவிதைவரிகளிலும் காணலாம்.

சாக்தத்தில், பெரிய அண்ட வெளியிலும் அணுவிலும் சிறிய , பரமாணுவிலும், வீற்றிருப்பவள் பரஞ்சோதியாகிய அம்பிகையே('ப்ரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா')என்று நிர்க்குணப் பரம்பொருளாக அம்பிகையை லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கிறது.   ('வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி'----- சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)

2. சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமசுந்தரி தம்பதியருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த மகனுக்குப் பேச்சு வரவில்லை. 'செந்தூர் முருகா, உன் தாள் சரணம்' என்று ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு, திருச்செந்தூர் சென்று, அங்கேயே தங்கி, விரதமிருந்து வந்தனர். 45 வது நாள், முருகனருள் அக்குழந்தையிடம் பேசியது. அக்குழந்தை வாய் திறந்து கவிமழை பொழிந்து 'கந்தர் கலி வெண்பா'வை அருளியது.  'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் மகிமையே 'கந்தர் கலி வெண்பா'.   'குமரகுருபர ஸ்வாமிகள்' என்று பின்னாளில்  உலகமெங்கும் அறியப்பட்ட‌ அக்குழந்தையின் முதல் கவியில் தான் எத்தனை எத்தனை தத்துவார்த்தங்கள்.
 - பலகோடி

      அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
      கண்டசக்தி மூன்றுட் காரணமாய்த் - தொண்டுபடும்
      ஆவிப்புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
      ஏவித்தனி நடத்தும் என் கோவே

 முதல் இருவரிகளில் இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சர்வசாதாரணமாகக் காணக் கிடைக்கின்றன. பல கோடி பிரபஞ்ச வெளிகளில் இருந்து, நாம் காணும் இந்த உலகம் உருவாகக் காரணமான, மூன்று சக்தி(படைத்தல், காத்தல், அழித்தல்)களுக்குக் உட்பொருளாய் விளங்குபவன் முருகன். இதன் மூலம், அண்ட சராசரங்கள் பல பிரபஞ்சவெளிகளை உள்ள‌டக்கியது என்பது தெரிவிக்கப்படுகிறது.  பரம்பொருள் சகுண நிலையை அடைந்து, இவ்வுலகத் தோற்றத்திற்கு மூல காரணமாகிறது.      ஐந்தொழிலான,  படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல், ஆகியவற்றை ஏவித் தனி நடத்தும் என் கோவே என்று முருகனைப் பரம்பொருளாகக் கூறுகிறார் ஸ்வாமிகள். இதை சாக்த தத்துவத்தில், பஞ்ச – பிரம்ம – சொரூபிணி (பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு ஐந்து தொழில் புரியும் ஐந்து பிரம்மங்களைத் தனது வடிவமாகக் கொண்டவள் அம்பிகை என்பது பொருள்) என்று லலிதா சஹஸ்ரநாமம் துதிக்கிறது. நமது சகோதரர் திரு. ஆலாசியமும் இதை,

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! 
 என்று புகழ்கிறார்.

3. இதுவும் ஒரு குழந்தையே. மூன்று வயது. தந்தை குளிக்கச் செல்லும்போது, 'நானும் வருவேன்' என்று அடம் பிடித்தது. தந்தை சிவபாத இருதயரும், தாய் பகவதி அம்மைக்கும் வாராது வந்த மாமணிபோல் வந்த பிள்ளை. மறுக்க மனமின்றி அழைத்துச் சென்ற அவர், குழந்தையைக் கரையில் உட்கார வைத்து, மூழ்கிக் குளிக்கலாயினார். தந்தையைக் காணாத குழந்தை,

 கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
 வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 
 எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப  
 புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்.

'தாள முடியாதது, குழந்தையின் அழுகை' அல்லவா, அதற்கு ஏன் எவ்வுயிரும் குதூகலம் அடைய வேண்டும்?  ஏனென்றால், இது புண்ணியக் கன்று,அவர் அழுவதும் அருளே( சிறு பேரழைத்தனவும் சீறி அருளாதே, ஸ்ரீஆண்டாள், திருப்பாவை.) சீர்காழி உறையும் தோணியப்பர் திருச்செவியில், குழந்தையின் அழுகுரல் கேட்டது. உமையை நோக்கி, 'பால் ஊட்டுக' எனப் பணித்தார். அன்னை அளித்த ஞானப்பால் உண்ட சிசு, வாயில் பால் வழிய அமர்ந்திருந்ததைக் கண்ட தந்தையார் 'யார் அளித்த பால் இது?' என்று வினவ, ஞானத்தின் சம்பந்தம் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான்,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்   
எனத்தொடங்கும் தேவாரம் பாடினார்.

மகான்களின் திருவாக்கிலிருந்து உதித்த கவியமுதம், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தர வல்லது. முன் ஜென்ம வினை தீர்ந்து, மாயை அகன்று, அவன் அருளால் அவன் தாள் வணங்கும்பேறு, இத்தகையோரின் சொல்லமுதைப் பருகினால் நமக்குக் கிட்டும்.

விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!    
(சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)

என்று, எங்கும் நிறைப் பரம்பொருள் அருள்புரிய வேண்டுவோம்.

பின்குறிப்பு: (வாத்தியாருக்கு) பரம்பொருளின் நிர்க்குண நிலையையும், சகுண நிலையையும், சர்வ சாதாரணமாக, கவியில் கொண்டுவருவது,  சாமான்ய மனிதர்களால் முடியக்கூடியது அல்ல என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சகோதரரின் சென்ற வாரக் கவிதை எத்தனை பேரைச் சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை. அதன் பெருமையை உரைக்கவே, சில இடங்களில் எடுத்தாள நேர்ந்தது. எத்தனையோ குடத்து விளக்குகளை குன்றின் மேல் ஏற்றும் தாங்கள் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். தவறெனில், தாங்களும் சகோதரரும் என் பிழை பொறுக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.

Please visit my blog (AALOSANAI.blogspot.in).

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


குறையிருந்தாலும் குறைவதுண்டோ?
ஆக்கம் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

சென்ற வார மாணவர் மலரில் என் ஆக்கத்தில் கண்ட செய்திகளைப் பற்றி தஞ்சாவூரார் சில உண்மைகளைக் கூறியிருந்தார்.

நான் கூறிய 'தஞ்சை=வல்லம் சாலையில் உள்ள பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் 'பின்னம்' ஆனவர்; ஆகவே வழிபடும் வழக்க்ம் இல்லை' என்று கூறியிருந்தார்.

ஆம்!அவர் கூறியது சரியே.அந்தப் பிள்ளையாரின் நல்ல கொம்பும் முன்னர் இருந்த ஒரு குருக்களின் கவனக்குறைவால் அபிஷேகக் குடம் விழுந்து முறிந்துவிட்டது.

மஹாபாரதம் எழுதுவதற்குக்காகத் தன் ஒரு கொம்பைத் தானாக முறித்துக்கொண்ட பிள்ளையாருக்கு, மற்றொரு நல்ல கொம்பும் உடைந்து விட்டது.ஆகவே அவர் 'பின்னப்பட்டு' விட்டார்!

பிள்ளையார் சிலை வடிக்கும் போதே ஒரு கொம்பு முறிந்த நிலையிலேயே காட்டப்படுகிறது. அது பின்னமாகக் கொள்ளப் படுவதில்லை.

"இறைவன் பூரணமானவன்! அந்தப் பூரணத்திலிருந்து வருபவை அனைத்தும் பூரணமானவையே!அந்தப் பூரணங்கள் அனைத்தும் மீண்டும் பூரணத்திலேயே கலந்து பூரணமாகின்றன"  என்று பேசும் ஒரு வேத சாந்திபாடம்.

பின்னம் ஆவது என்றால் உடைந்து போவது! உடைந்த விக்ரகங்களை வழிப‌டும் வழக்கம் இல்லை என்பது தஞ்சாவூரார்  கூற்று. இது தொடர்பாக சில சுவையான செய்திகள் நினைவுக்கு வந்தன.
==============================================
"நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமாகிப் போனதென்ன சொல்வீரய்யா!" என்று தில்லை நடராஜரைப் பார்த்து கேள்வி எழுப்பிய‌ ஒரு பாடல் உண்டு.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு "திரிபங்கி"என்று ஒரு பெயர் உண்டு. மூன்று இடத்தில் 'பெண்டு' உள்ள‌வர் என்று பொருள்.
=====================================
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேஸ்வரக் காளிகோவிலில் அர்ச்சராக பணியாற்றும் சமயம்  அங்குள்ள கிருஷ்ணர் விக்ரஹத்திற்கு பின்னம் ஏற்பட்டுவிட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணர் காளி அன்னைக்கு மட்டுமே பூஜாரி. மற்ற விக்ரஹங்களுக்கு மேலும் சில அர்ச்சகர்கள் இருந்தனர்.அதில் ஒருவர் கவனப் பிசகாக கிருஷ்ணர் விக்ரஹத்தினை சேதப்படுத்தி விட்டார்.

இங்கே பின்னப்பட்ட‌ பிள்ளையார் பற்றி எழுந்த அதே  கேள்வி அக் காலத்திலேயே எழுந்தது."உடைந்த கிருஷ்ணர் விக்ரஹத்தை வழிபடலாமா?"

அக் கோவிலின் அறங்காவலர் ராணி ராசமணியிடம் பலரும் பல அபிப்ராயங்களைக் கூறின‌ர்.பெரும்பாலானவர்களின் முடிவு 'உடைந்த விக்ரஹம் வழிபடத் தகுந்தது அல்ல' என்பதே.

புதிய விக்ரஹம் செய்ய ஆணை பிறப்பிக்க முடிவு செய்யும் முன்னர்
ஸ்ரீ பரமஹம்சரிடம் ராசமணி அம்மையார் கலந்தாலோசித்தார்.

அப்போது ஸ்ரீ பரமஹம்சர் இறை ஆவேச நிலையில் கூறினாராம்:"கிருஷ்ணர் கால் உடைந்து பின்னம் ஆகிவிட்டார் என்று அவரை மாற்ற நினைக்கும் ராச மணி தேவியாரே! உங்களுடைய மாப்பிள்ளைக்கு விபத்தில் கால் உடைந்து விட்டால் அவரையும் மாற்றிவிட்டு மகளுக்கு வேறு கணவன் தேடுவீர்களோ?"

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் திருக்கரங்களாலேயே அந்த ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹத்தை செப்பனிட்டு மீண்டும் அந்த விக்ரஹமே வழிபாட்டுக்கு வந்ததாம். இன்றளவும் அந்தப் பின்ன விக்ரஹமே வழி படப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
=================================================
ஸ்ரீ நீல கண்ட தீக்ஷ‌தர் நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் முதல் அமைச்சராக இருந்தவர்.ஸ்ரீ அப்பைய தீக்ஷ‌தரின் தத்துக் குமாரர். ஸ்ரீ நீலகண்டரும் பெருங்கவிஞர்;மஹாஞானி!

மதுரைக் கோவிலை புதுப்பிக்கும் பணியில் நாயக்க மன்னர்கள் ஈடுபட்டு இருந்த சமயம். ஒருநாள் முதல் அமைச்சர் நீலகண்டர் கோவிலில் மேற்பார்வை பார்க்கச் சென்றார்.அப்போது நாயக்க மன்னர், அரசியின் சிலைகள் கூப்பிய கைகளுடன் வடிக்கப்பட்டு வெளிப் பிராகரத்தில் அமைக்கப்பட்டு இருந்தன.

அரசியின் தொடைபகுதி செதுக்கும் சமயம் உளி தவறுதலாகப்பட்டு அந்தப்பகுதியில் ஒரு சில்லு தெறித்துவிட்டது. அச்சிலையை மாற்றி விடுவதாகச் சிற்பி நீலகண்டரிடம் கூறுகிறார்.

ஸ்ரீ நீலகண்டர் ஒரு நிமிடம் தியானம் செய்துவிட்டு, "ராணிக்கு இயற்கையாகவே  அப்படி ஒரு குறைபாடு அந்த பாகத்தில் உள்ளது. எனவே இறை விருப்பப்படி அமைந்த சிலை அப்படியே இருக்கட்டும்" என்று கூறுகிறார்.

இச்செய்தி நாயக்க மன்னர் செவிகளுக்கு ஸ்ரீநீலகண்டரின் பகைவர்களால் திரிக்கப்பட்டு சென்று அடைகிறது."எப்படி ராணியின் மறைவான அங்கத்தில் உள்ள குறை இவருக்குத் தெரிய வந்தது?" என்ற கேள்வி எழுந்தது.

ஆத்திரத்தில் அறிவு இழ‌ந்த நாயக்க மன்னர்,ஸ்ரீ நீலகண்ட‌ரின் கண்களை நோண்டிவிடும் நோக்கத்துடன் அவரைக் கைது செய்து கூட்டி வரும்படி கூறுகிறார்.ஸ்ரீ நீலகண்டர் இல்லத்து வாசலில் அரசனின் படை வீரரகள் வந்து நிற்கின்ற‌னர்.

அரசனின் எண்ணத்தை தன் உள் உணர்வால் அறிந்த நீலகண்டர் தன் கண்களைத் தானே அவித்துக் கொள்கிறார். செய்தி அறிந்த அரசன் ஓடோடி வந்து நீலகண்டரைப் பணிகிறான்.ஸ்ரீ மீனாக்ஷியை வேண்டி நீலகண்டர் பாட‌
இழந்த கண்களை மீண்டும் பெறுகிறார்.

அரசனிடம் விடை பெற்று எஙகள் பூர்விக கிராமமான  அருவன் குளம் என்னும் நாரணம்மாள்புரத்தில் வந்து தங்குகிறார்.

இக்கிராம‌ம் நெல்லைக்கு அருகில் தாழையூத்து அருகில் உள்ளது.அக்கரையில் உள்ள பாலாமடையில் ஸ்ரீநீலகண்ட தீக்ஷதரின் சமாதிக் கோவில் உள்ளது.என் 'வேர்களைத்தேடி ஒரு பயணம்' ஆக்கத்தில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
==============================================
ஸ்ரீ கிருஷ்ண அய்யப்ப சுவாமிகள் என்று ஒரு பெரியவர் இருந்தார். இப்போது அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.கிரஹஸ்த சன்னியாசி. அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.ஓய்வு பெற்ற பின்ன‌ர் மனைவியுடன் பாத யாத்திரையாகவே பலக்ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தார்.பஜனை சம்பிரதாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

நான் பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபட்டு வந்த சமயம் அவர் ஒருமுறை அங்கு வந்திருந்தார்.அவரிடம் பிள்ளையாரின் ஊனம் சுட்டிக் காட்டப்பட்டது.சுட்டியதோடு அல்லாமல் "பின்னப்பட்டவரை வழிபடலாமா?"என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.

சுவாமிகள் அமர்ந்து தியானம் செய்து விட்டுக் கூறினார்.
 "நல்ல நிலையில் முழுமையாக‌ இருக்கும் ஒரு மாக்கல் பிள்ளையாரை பெரிய பிள்ளையாருக்கு முன்பாக வைத்துவிட்டு, இருவருக்குமாகச் சேர்த்து ஆராதனைகளை செய்யவும்" என்று அருள்வாக்காகக் கூறினார்.இதுதான் நல்ல மகான்களுக்கான‌ அடையாளம். எதையுமே நிராகரிக்க மாட்டார்கள்.அவர் கூறியபடியே வழிபாடு செய்து வந்தேன்.
================================================
முன்பு ஊன முற்றவர்களைப் பல கொச்சைச் சொற்களால் அழைத்துவந்தோம். இப்போது அவர்களை 'மாற்றுத் திறனாளிகள்'என்று மதிப்பாக அழைக்கிறோம். மனிதர்களில் உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கே மதிப்பளிக்கத்துவங்கிவிட்ட நாம் தெய்வச் சிலைகளில் பழுது ஏற்பட்டால்  அவற்றைத் தள்ளிவிடலாமா?

   "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
        தரத்தினில் குறைவதுண்டோ?==உங்கள்
    அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
        அன்பு குறைவதுண்டோ?"

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்  
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்.

ஆக்கம்: ஆலாசியம், சிங்கப்பூர்

சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே 
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே 
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த  
ஆதி அந்தமில்லா அமுதே

முதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே  
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட 
குமுதவல்லி தொழும் தேவனே!

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே 
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே 
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!

பிரம்மமே ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே  
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால் 
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே 
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!

ஞாயிறாய் ஒளிரும் அக்னிப் பரமனொடு 
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி 
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!

(ஞமர் - பரந்து விரிந்த 
ஞெகிழி - சலங்கை 
ஞமலி – கள்  / மயில் 
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது 
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய பெரும் தீ.
 
பொங்கிய பேரொளி பரவெளி எங்கும் 
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு 
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து 
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது  முப்புரமே.

முப்புரமேவிய செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி முட்டிமோதி 
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின் ஆளுமையிலே 
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக  
எப்பொழுதும் எழில் கொஞ்சுகிறதே.  

ஆலாசியம் கோ.
சிங்கப்பூர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5


ஜல்லிக்கட்டு
ஆக்கம் தனுசு

நித்தம் ஒரு யுத்தத் திருவிழா என்வாழ்வில்
அதில் முரண்பட்டமொத்தக் காளைகளும்
என்னை அரவமின்றி அழிக்க
முப்பொழுதும் முயலும் முரட்டுவிழா.

என் தோட்டத்து  தேங்காயை எடுத்து
தெருப் புள்ளையாருக்கு உடைக்க 
சீவிய கொம்புடன் வரும் "பொலிகாளை"களை
எந்த தெம்பு கொண்டு அடக்குவது.

மிரட்டல் பார்வையால் பணியவைத்து
எதையும் சுருட்டிக் கொள்ளும்
இந்த பெரும்விழி "புலிக்குளகாளை"களை
எந்த திமிர் கொண்டு அடக்குவது.

மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது.

கொள்ளையிலே பங்குதந்து 
என்னையும்  கள்ளனாக்க துடிக்கும்
இந்த முள்ளுக்காடு  "காங்கேய காளை"களை
எந்த நீரில்லா கள்ளிக்காட்டில்  தள்ளுவது .

ஆறை நூறாக்கி கூரையை கோபுரமாக்கையில்
ஊமையாய் உலைவைக்கும் உறவென்ற
மவுனமான "மணப்பாறை  காளை"களை
எந்த மூக்கணாங் கயிறுடன் இறுக்குவது.

உள்ளத்தை மறைத்து உதட்டால் சிரித்து
என் உழைப்பை உண்டு பிழைப்பை பழிக்கும்
சிங்காரமான  "சிந்துகாளை"களை
எந்த சாட்டைக்கழி கொண்டு  விரட்டுவது.

சாந்த சொருபியாய் சோப்புபோட்டு
சத்தமின்றி என்சங்கு அறுக்கும் 
சித்திரைப் பூ"சில்லிகாளை"களை
சொல்லாமல்  அடிக்க எந்த சாந்து பூசுவது.

வெல்ல வார்த்தைகளை வாரியிறைத்து
அவர்களின் சுமையை என்மீதேற்றும்
வெள்ளை வேட்டி "பூம் பூம் காளை"களை
எந்த உறுமி அடித்து விரட்டுவது.

ஊர்  என்னை அறிய - நான்
என்னை அறிந்து போகையில்- இந்த
வேலிதாண்டும் காளைகள்
என்னை பணிய  செல்வதெப்படி?தணிய சொல்வதெப்படி ?

மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
தினவெடுத்த தோளோடு  தொடை தட்டி புறப்படுகிறேன் 
ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க .
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


புலிக்கட்
ஆக்கம் தனுசு

(அனைவருக்கும் வணக்கம். எண் 3ற்கான பதிவின் பின்னூட்டங்களைப் படித்திருப்பீர்கள். "நாம் ஊரில் ஒரு மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்" என்று நான் பின்னூட்டமிட, "வெளி நாட்டில் இருக்கும் தைரியமா" என்று தேமொழி அவர்கள்  பின்னூட்டமிட, "நான் தைரியமான ஆள்தான் எண்கள் குடும்பத்திற்கு புலிகட் என்றொரு பட்டப் பெயர் இருக்கு அது ஏன் என்றால், எண் தாத்தா புலியை  அடித்தே கொன்றார்" என்று பின்னூட்டமிட , "அதை சொல்லுங்கள்" என்று ஆலாசியம் ,உமா ஆகியோர் கேட்க, எங்களின் நினைவை விட்டே விலகிப் போன ஒரு நிஜ சம்பவத்தை எழுதி உள்ளேன்)

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சக் கொல்லை எனும் கிராமம் தான் என் தாத்தாவின் ஊர். எந்தந்தையாரின் எட்டு பத்து வயதில் நடந்த சம்பவம்.

 என் தாத்தாவிடம் ஆடு மாடுகள் நூற்றுக் கணக்கில் இருந்த நேரமாம்.இதுதான் இவருக்கு தொழில்.சுற்றி இருக்கும் ஊர்களில் நடக்கும் சந்தைகளில்   கொண்டுபோய் விற்று வருமானம் பார்ப்பார்.  வருமானம் இதிலிருந்துதான் .

ஆண்டுகள் சரியாக நினைவில்லை , சுதந்திரம் வாங்கிய பின்பு 50 களில் நடந்த சம்பவம் . இப்பொழுதும் இந்த மஞ்சக் கொல்லை கிராமம் ,இன்னும் படு
கிராமமாகவே இருக்கிறது. இப்போதைக்கு சொன்னால் விழுப்புரம் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் இணையும் இடத்தில் இருக்கிறது. நெல்லிக் குப்பம்  ,குறிஞ்சிப் பாடி ஆகிய ஊர்களை தொட்டுக் கொண்டு இருக்கும் ஊர்.  இப்போது வெறும் முந்திரி காடாக இருக்கிறது. அப்போது பனை மரங்களும் , பலா மரங்களுமாக இருந்த வனம்

மேய்ச்சலுக்காக இந்த இடங்களில்தான் ஆடு மாடுகளை விடுவார்கள் .வனத்திலிருந்த புலிகளின் அட்டகாசம் அடிக்கடி எங்களின் ஆடு மாடு மீது நடக்கும்

,ஊருக்குள்ளும் ஓரிருமுறை புலி வந்துள்ளது .

புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தும் அங்கேயே பட்டி வைப்பதும் அதனை இரவு பகல் என்று பாராமல் விசிட்டிங் செய்வதும் அந்த தினசரி வேலைகளில்  அதுவும் ஒன்ர்றாகி விட்டிருந்தது அவருக்கு.

 என் தந்தை தான் என் தாத்தாவுக்கு கடைசி பையன்.என் தந்தையோடு பிறந்தவர்கள் மூன்று ஆண்கள்,நாக்கு பெண்கள், என் தந்தை பிறந்து இரண்டு மூன்று  மாதத்தில் என் பாட்டி இறந்துவிட்டார்கள். ஆகையால் என் தாத்தாவோடு என் தந்தை எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை மேய்ச்சலுக்கு விட்ட கால்நடைகளை பார்க்க என் தந்தையையும் கூட்டிக் கொண்டு போனார் என் தாத்தா. ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் பட்டிக்கு பக்கத்தில் இரண்டு புலிகள் அங்கு பதுங்குவதைப் பார்த்து விட்டார்., காய்ந்த சுள்ளிகளையும்  ,இலைகளையும்  போட்டு நெருப்பு உண்டாக்கி அவைகளை விரட்டி அடித்தார் ,ஓடிப்போன புலிகள் மீண்டும் வரலாம் என்ற கணிப்பில் அங்கேயே தங்கி விட்டார் மாலை  நெருங்கும் வரை. மீண்டும் அந்த புலிகள் வரவில்லை என்பதால் ஆடு மாடுகளை வேலிக்குள் விட்டு அடைத்து விட்டு எந்தந்தையை அழைத்துக் கொண்டு  வீட்டுக்கு கிளம்பினார் . ஆடு மாடுகள் தங்கும் பட்டியிலிருந்து வீட்டுக்கு வர சுமார் ஒன்னரை மணி ஆகும்.

இப்போது கெடிலம் நதி என்று சொல்லும் ஆற்றின் ஒரு சிறிய கிளை இந்த பகுதியில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த கெடிலம் நதி கடலூரில் வந்து  கடலில் கலக்கிறது . இது செம்மண் பகுதி. ஆடு மாடுகள் நீர் குடிப்பதெல்லாம் இதில் தான். 

அந்த வாய்க்காலில் இறங்கி முகம் கழுவி திரும்பும் போது எதிரே முறைத்துக் கொண்டு அதில் ஒரு  புலி புதரிலிருந்து வெளி வர ஆடிவிட்டார் என் தாத்தா. .

அவர் கவலை தன் மகன் மீது.

உடனே என் தந்தையை வாய்க்காலில் இறக்கி கழுத்து வரை நீரில் நிற்க வைத்து விட்டார்.

தான் மட்டும் கரை ஏறினார். பதுங்கிய புலி பாய சாமார்த்தியமாக விலகி விட்டார்.பாந்த புலி கீழே விழா அதன் பின்னங்கால்களைப் பிடித்தக் கொண்டு கர கர வென பத்து,இருப்பது  சுத்து சுற்றி தரையில் ஓங்கி ஓங்கி அடிக்க ரத்த வெள்ளமானது புலியின் தலை , இறந்ததை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு துண்டை இரு பக்கம் தோள்களிலும் போடுவது போல் ,புலியை தூக்கி தன் தோள்களின் குறுக்கே போட்டுக் கொண்டு , என் தந்தையையும் அழைத்துக் கொண்டு ஒருமணிநேர  நடையில் அந்த பாரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அந்த வீர செயலால் ஊர்க்காரர்கள் "புலிக்கட்டி" என்று அழைத்தார்கள் .

இதில் புலிக்கட் எங்கிருந்து வருகிறது. புலிக்கட் என்றால் என்ன.
புலிக்கட் என்ற வார்த்தை புரியாததாக இருக்கும்.அது என்ன வென்றால்;
அந்த காலங்களில் நாடகங்களில் நடிப்பவர்களின் கேரக்டரை பொறுத்தே நாடக நடிகர்களின் பெயர்கள் வருமாம் .

கள்ளபார்ட் நடராசன் , ராஜாபார்ட் ரங்கதுரை என்பதெல்லாம் அப்படி வந்ததுதான் . இன்றைக்கு இளைய தளபதி, சின்ன தளபதி என்று வருவதுபோல்  அன்றைக்கு "பார்ட்"என்று தான் வருமாம்.

"கள்ள பார்ட்" என்றால் கள்ளன் ,திருடன் கேரக்டரகளையே அதிகம் செய்பவர்.
"ராஜாபார்ட்" என்றால் ராஜா கேரக்டரையே செய்பவர்கள் .

அந்தமதிப்பு மிக்க  "பார்ட்" பட்டம் அன்றைக்கு "கட்டி" அடித்தார் என்பதை குறிக்கும் வகையில் என்தாத்தவுக்கு" புலி கட்டி  " ஆக மாற்றி ஊர்காரர்கள்
அழைத்தார்கள் , அந்த" கட்டி" நாளடைவில் மருவி "கட்" என்றாகியது. அதுதான் "புலிகட் "

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வேனில், ஒரு நாய் குறைத்தாலே நாம் அடுத்த முறை அந்த தெருப் பக்கம் போக  மாட்டோம். பூனை குறுக்கே  வந்தால் அன்றைய பொழுது அத்தோடு முடிந்தது. இப்படி இருக்கையில், புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தே போவது, என்ன வகை துணிச்சல். புலி எதிரே உறும அவர் பதப் படாமல், ஓடாமல், ஒளியாமல்
நிதானமாக தன் மகனை நீரில் இறக்கி பாது காப்பாய் வைத்து விட்டு, புலியை எதிர் கொள்வது என்ன வகை துணிச்சல்.

என் தந்தை என்னிடமும் என் தம்பி இடமும் எப்போதும் சொல்வது உள்ளத்திலும் உடம்பிலும் பலம் இருக்க வேண்டும் என்பார். சின்ன வயதிலேயே உடற் பயிற்சி  செய்ய வைத்து பழக்கப் படுத்தி விட்டார். சிலம்பு விளையாட்டு கற்று கொடுத்தார்.

இந்த சிலம்பு விளையாட்டில் "படை விரட்டி" என்று ஒரு வகை கம்பு சுழல் இருக்கிறது. பத்து பேர்கள் நம்மை சுற்றிக் கொண்டாலும் கிர் கிர் கிர்ரென்று சுழற்ற  பத்து பேர்களும் பஞ்சாய் பறந்து விடுவாரகள்.

ஒரு மஞ்சள் , மஞ்சக்கொல்லை வரை வளர்ந்து என் தாத்தாவையும் என் தந்தையையும் நினைக்க வைத்தது. வகுப்பறையில் இதனை நான் பகிர்ந்துக்
கொள்வேன் என்று சிறிதும் நினைத்து பார்க்க வில்லை.

 தொலைந்து போன ஒரு நினைவை உயிரூட்டி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வைத்த தேமொழி யின் பின்னூட்டத்திற்கு மிகப் பெரிய நன்றிகள்.

நான் என்பெயரை" புலிகட் தனுசு" என்று வைத்துக் கொள்ளலாமா?
-தனுசு- 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7

வகுப்பறை நகைச்சுவை
அனுப்பியவர் வெ.கோபாலன், தஞ்சாவூர்
TEACHER:   Maria, go to the map and find North America .
MARIA:         Here it is.
TEACHER:  Correct. Now class, who discovered America ?
CLASS:         Maria.
____________________________________

TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN:           You told me to do it without using tables.
__________________________________________

TEACHER: Glenn, how do you spell 'crocodile?'
GLENN:         K-R-O-K-O-D-I-A-L'
TEACHER:  No, that's wrong
GLENN:         Maybe it is wrong, but you asked me how I spell it. (I Love this kid)
____________________________________________

TEACHER: Donald, what is the chemical formula for water?
DONALD:     H I J K L M N O.
TEACHER:  What are you talking about?
DONALD:     Yesterday you said it's H to O.
__________________________________

TEACHER:  Winnie, name one important thing we have today that we didn't have ten years ago.
WINNIE:       Me!
__________________________________________

TEACHER:  Glen, why do you always get so dirty?
GLEN:           Well, I'm a lot closer to the ground than you are.
_______________________________________

TEACHER:    Millie, give me a sentence starting with ' I. '
MILLIE:           I is..
TEACHER:    No, Millie..... Always say, 'I am.'
MILLIE:           All right....  'I am the ninth letter of the alphabet.'     
________________________________

TEACHER:   George Washington not only chopped down his father's cherry tree, but also admitted it.  Now, Louie, do you know why his father didn't punish him?
LOUIS:          Because George still had the axe in his hand.   
______________________________________

TEACHER: Now, Simon, tell me frankly, do you say prayers before eating?
SIMON:        No sir, I don't have to, my Mom is a good cook..
______________________________

TEACHER:   Clyde , your composition on 'My Dog' is exactly the same as your brother's. Did you copy his?
CLYDE :       No, sir. It's the same dog.
___________________________________

TEACHER:  Harold, what do you call a person who keeps on talking when people are no longer interested?
HAROLD:   A teacher
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8


நகைச்சுவை: எதிர்ப் பாட்டு
ஆக்கம் தேமொழி

(சபரியின் நகைச்சுவைகளை பெண்களின்/மனைவிகளின் கண்ணோட்டத்தில் மாற்றி அனுப்பியுள்ளேன்.  தமிழில் எழுதியிருக்கலாம், ஆனால் "H" என்ற
ஆங்கில எழுத்துக்கு எழுதியிருப்பதாலும், அவர் நகைச்சுவை துணுக்குகளுக்கு பதில் போல் இருப்பதாலும் ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தது.)

1.
The devil asked the wife who is a recent admission at the hell; "Do you miss your Home?"
Lady replied:  Please don't remind me of that hell, I am just enjoying my life here.

2.
Wife has suspicion of her husband's recent change in behavior of visiting neighbors home.  To find out the truth she decided to trick him.
In the middle of the night she shouted:
"Up! Quick! My husband is back!"
The husband gets up and jumps out of the window.

3.
Do you know why husband starts with 'H'...
Because for all the wife's requests… they reply with only one word that starts with "H"...
For example:….a wife is in the middle of preparing lunch, suddenly her baby is started screaming.

Wife: Honey, the baby is crying, here is the bottle ...please feed him.
Husband: How?
Wife: Ok…I will be there in a minute, at least change his diaper
Husband: How?
Wife: Good grief, at least remove the dirty diaper and wash him well, give him a bath
Husband: How?
Wife: Let us make a deal, until I am taking care of the baby please take care of this meal preparation
Husband: How?

4.
Nobody teaches Volcanoes to erupt, Tsunamis to devastate, Hurricanes to sway around & no one teaches How to choose a husband,
NATURAL DISASTERS JUST HAPPEN.

5.
Difference between Friend & Husband.
You can tell your Friend "you are the best person I ever met"
But do you think you can honestly tell THAT to your husband

6.
Judge: why did you shoot your husband instead of shooting his lover?
Wise wife: I just got rid of the cause instead of just dealing with the symptoms one by one

7.
Doctor: Sir, your wife needs rest and peace, so please arrange for a vacation.
Husband: Doc, where should I take her, do you think a hill station would be fine?
Doctor: I don't care where you want to go, I suggested you to go by yourself and leave her alone.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9

 என்ன வெட்டி முறிக்கிற -பகுதி இரண்டு!!!!
ஆக்கம்: ஜி.ஆனந்தமுருகன்
          
    இரண்டு குழந்தையுடைய தம்பதிகள்,வேலைக்கு செல்லும் கணவன் வீட்டை கவனித்து கொள்ளும் மனைவி.சீராக சென்று கொண்டுரிந்த வாழ்க்கை (NH 45 ரோட்டில் செல்வது போல்) திடீரென ஈகோ எனும் அரக்கனின் பார்வை விழுந்தது.
    
    ஏற்ற,தாழ்வுகள்,நிறைந்ததுதானே மானிட வாழ்க்கை!!அது தானே சுவாரசியம்!! ECG எடுக்கும் பொழுது திரையில் அலைகள் மேலும்,கீழும் சென்று வந்தால்தான் மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று அர்த்தம்மாகிறதல்லவா!!ஒரே சீராக (flat) இருந்தால் சவம் என்று பொருளல்லவா?!  
    
    ஆணாதிக்கம்,ஏழரையை ஆரம்பித்தது,நான் காலையிலருந்து,சாயங்காலம் வரை வேலைக்குபோய் கஷ்ட்டப்பட்டு உழைச்சிட்டு வரேன்!உன்னாலே வீட்ட,குழந்தைகள்,கூட கவனிக்க முடியலையா? "நீங்க வேலைக்கு போயிட்டு வந்தறீங்க,நான் வீட்ல எந்த வேலையும் இல்லாம அப்பிடியே உக்கந்துதானே இருக்கேன்" இது மனைவி (கலவரம்).தொடர்ச்சியாக மனைவி,"புள்ளைங்களா ரெண்டும்,அப்படியே ஒங்களமாதிரி!!?யாரோட கஷ்டத்தையும் புரிஞ்சிக்கற ஜென்மங்களா!!ஒவ்வரு நாளும் உயிரு போகுது"....கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொள்கிறாள்.அவனுக்கோ இப்போதே கண்ண கட்ட ஆரம்பித்து விட்டது!!ஒரு வேலை எறும்பு புத்துக்குள் கையை விட்டோமோ?என சந்தேகமெல்லாம் வந்து மறைந்தது.  
   
    இருந்தாலும் தன்மானம் விட்டுகொடுக்கவில்லை.....என்னடி,நீ மட்டும்தான் புதுசா குழந்தை பெத்த மாதிரி பேசற?!..அவள்,.நான் பழசாதான் பெத்துருக்கேன்...அதுங்க first பிள்ளைகளே இல்லை!?ஒங்களோட வகையறா!!??......அப்பிடின,எங்க குடும்பத்தை பார்த்த உனக்கு காட்டுமிராண்டியாக தெரியுதா!!??........அதை நான் வேற சொல்லனுமா!? "இந்த வீட்டுக்கு மாதம் 4000 சம்பளம் கொடுத்த கூட எந்த வேலையாளுங்க வரமான்ட்டாங்க" மனதின் ஆதங்கத்தை கொட்டினாள்.  
    
    கோபம் தலைகேறிய கணவன் "என்ன வீட்டுலே பெரிசா வெட்டி முறிக்கிறே!? நான் செய்யற வேலைய ஒன்னாலே செய்யமுடியுமா? ஒன்னோட வேலைய செய்ய என்னக்கு ஒரு மணி நேரம் போதும்  பண்ணிமுடிசுடுவேன்!!
      
    ம்ம்.க்கும்!!!.கிழிச்சுடுவிங்க!!?அவனை மேலும் வெறுப்பேற்ற அவன் தசாவதாரம் அல்லாமல் பல்வேறு அவதாரங்கள் எடுத்து ஆட,அவள் கூலாக டிவி சீரியலில் மூழ்கினாள்.அன்று அவனுக்கு விடுமுறையாதலால் வெளியே சென்று lunch க்கு வந்தான்.கோபமாக மனைவியை பார்க்க ..அவள் உணவு பரிமாற கிச்சனுக்கு செல்ல இவன் சோபாவில் அமர்த்து டிவியை நோக்கினான்.   

    என்ன சாருக்கு கோபமெல்லாம் போச்சா!இல்லையா!?கிச்சனிலிருந்து குரல்!? ஒன் வேலை எதுவோ?அதை மட்டும் பாரு!சும்மா,என்னை சீண்டாதே!!     

    சானலை மாற்றினான்."தினமும் மூணு கிளாஸ் பால் கொடுக்கிறேன்" விளம்பரம் வெறுப்பேற்றியது.மீண்டும் சானல் மாற்றம், மானட, மயிலாட்டங்களூம் பிடிக்காமல் மீண்டும் மாற்ற  "நல்ல ஆண் மகன் கணவனாகவே வந்து வாய்த்திடும் பொது" சன் டிவில் சீரியல் டைட்டில் சாங் ஒலித்தது. "நல்ல கேளுங்க உங்களுக்குத்தான் இந்த பாட்டு" சமயலறையிலிருந்து  சகபத்தினி.
    
    வேறு சானல் அழுத்தினான்'போன ஆட்சியில் போட்ட நடைமுறை படுத்திய திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கபடுகின்ற்ன  "ஒரு அரசியல்வாதி கத்திகத்தி  பிசிறரடைத்த குரலில்...ஒடனே கணவன் சத்தமாக "போன ஆட்சியில் செய்த கல்யாணம் கூட செல்லாதாம் "சட்டம் கொண்டுவந்து இருக்காங்கலாம்"....அடுப்படியில் "கடுகு"பொரிக்கும் (வெடிக்கும் ) சத்தம் கேட்டது,கூடவே அவளும் பொறிகிறது தெரிந்தது.மீண்டும் சானல் மாற்றம் முதல்வன் திரைப்படம் சென்றது.அதை பார்த்தவுடன் மனைவி "இது போல் (ஒரு நாள் முதல்வன் போல்)     ஒரு  நாள் நீங்க பெண்ணாக மாறனும்,  நான் ஆணாக மாறனும் நாள் வேலைக்கு போய்ட்டுவரனும்.நீங்க வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வைக்கணும்!!?? அப்படியிருந்தால் நல்ல இருக்கும்லே!!!அவள் கேட்க என்ன ஆச்சரியம் மிக பிரமாண்ட ஜோதி அவர்கள் எதிரில் தோன்றியது அதிலிருந்து இறைவன் பேசத் தொடங்கினார்.       
    குழந்தைகளே! உங்களது உரையாடல்களை கேட்டு உங்களுக்கு உதவி புரிய வந்துள்ளேன்."கணவன் இறைவனிடம் "கஷ்டமுன்னு கூப்பிட்டால் வரமாட்டேன்ரீங்கள்"  கடவுள்  "அது கர்மவினை போனஜென்ம பாவ புண்ணியம் அதை நீங்கள் அனுபவித்து ஆகவேண்டியது கட்டயமாகிறது"

என்ன சாமீ சமச்சீர் கல்வி அமுல் படுத்திற  மாதிரி சொல்றிங்க "போன மாசம் செய்த தப்புக்கு தண்டனை கொடுத்தா என்ன தப்பு பண்ணேன்னு தெரியும்? போன ஜென்ம தப்புக்கு தண்டனை கொடுத்தா எப்படி சாமீ?!!

கடவுளோட 'மூடனே,உன் நாக்கிலே சனியோட ஆதிக்கம் உள்ளது. மூன்று நாட்கள் நீ உன் மனைவி ரூபத்திலும்,உன் மனைவி உன் ரூபத்திலும் மாறுவீர்களாக!!! மீண்டும் சந்திப்போம்.எனக்கூறி மறைகிறார்.
        
    மறுநாள் அதிகாலையிலே முழிப்பு வந்தது அவளாக மாறிய  அவனுக்கு, எழுந்து குளித்து காப்பியில் ஆரம்பித்து,வாசல் தெளிப்பது,பசங்களுக்கு சுடுதண்ணீர் போட்டு,எழுப்ப சென்றால் school க்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை,சமாதானபடுத்தி அழைத்து,குளிக்க வைத்து தலை சீவி,uniform போடும் பொது குக்கரில் விசில் சத்தம்,அவசரமாக இறக்கி கொதிவரும் நிலையில் இருந்த ரசத்தை ஆப் செய்து விட்டு,காலை சிற்றுண்டிக்காக தோசை கல்லை அடுப்பில் போடும் பொது மணி 8.20 இன்னும் இருபது நிமிடங்களே உள்ளன.அதற்குள் அவனாக மாறிய அவள் குளித்துவிட்டு வர பசங்க பாட்டில்லில் தண்ணீர் பிடிங்க!........என்னக்கு ஆபீஸ் டைம் ஆயிடுச்சு!! 
   
    அதையும் அவனே செய்ய எல்லோரையும் கிளப்பிவிட்டபிறகு மணியை பார்க்க 9.10 பின் அவசரமாக வீட்டை பெருக்கி,மாப் பண்ணி பாத்திரம் துலக்கும் போதுதான் மனதில் லைட் ஆக மணியடித்தது அவசரப்பட்டு விட்டோமோ!!! சரி!பார்ப்போம் மூணு நாள்தானே என தனக்கு தானே சமாதனம் பண்ணிக்கொண்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
      
    அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எல்லாவற்றையும் arrange செய்து முடிக்க மணி 10.30 காலை உணவை சாப்பிட்டுவிட்டு,பேங்க் சென்று பணம் வித்டிராவ் பண்ணிவிட்டு,அத்தியாசிய மளிகை பொருள்கள் வாங்கி வீடு வந்து  சேர்ந்த பொழுது மணி 2.30  வாஷிங்மெஷ்னில் துவைத்து முடித்ததற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது. அவைகளைக் காயப்போட்ட பிறகு மதிய சாப்பாட்டு மணி 3.௦௦ க்கு,மனதில் 'என்னடா இது நாய் பொழப்பு?!'என எண்ணியவாரே பள்ளி முடிந்தது வரும் குழந்தைக்களுக்கு பால் கொதிக்க வைத்து ஸ்நாக்ஸ் ரெடி பண்ணுவதுக்குள்,  
'கீங்க்" ஸ்கூல்  பஸ்சின் ஹாரன் சவுண்ட் கேட்டது.அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஓட்டமாக பஸ் நிறுத்தத்திற்கு ஒடி குழந்தைகளின் ஸ்கூல்பாக்கை வாங்கி கொண்டு லஞ்ச்பாகையும் எடுத்து கொண்டு      
வருகையில் மகன் "மம்மி,என்னைய ராகுல் அடிச்சிட்டான் இப்பவே கேளுங்க!?......சரி வா நாளைக்கு பஸ் எத்துறப்போ கேட்கிறேன்  அடம் பிடித்தவனை சரிபண்ணி அழைத்துகொண்டு வருவதற்குள் பால் பொங்கும் நிலைக்கு வந்து விட shoe வை மம்மி நீ தான் அவித்துவிடனும் இது பெரிய பெண். ஸ்நாக்ஸ்,பால் கொடுத்து விட்டு கொடியில் மலர்ந்து இருக்கும் இரட்டை மல்லியை பறிப்பதற்கு மொட்டை மாடிக்கு செல்லும்முன் இரண்டு பேரும் பேஸ் வாஷ் செய்து விட்டு தனி தனியா உக்கார்ந்து ஹோம் வொர்க் செய்யணும்.சண்டை போட்டுக்கிட்டு இருந்தீகள்? அவ்வளவுதான்! சொல்லிட்டேன்.       
    பூப்பறித்து விட்டு இறங்கி வந்து பார்த்தால் குருஷேத்ரம் போல் வீடு!? இரண்டு பேரையும் விட்டு சுழட்டி அடித்து விட்டு பூக்கட்ட உட்கார்ந்தால் மணி 6.00  "அம்மா,பசிக்கிறது!" இது பையன்.சாப்பாடு போட்டுப் பாடங்களை ரிவிசன் கொடுத்து கொன்றிருக்கும் பொது கணவரின் வருகை திரும்பவும் காபி, ஸ்நாக்ஸ் சாப்பாட்டு பாத்திரம் கழுவுதல். இரவு உணவு ரெடி செய்தல் மணி படுக்கும் போது 10.30 மறுநாளும் இதே ரீப்பீடு!? அதற்க்கு அடுத்தநாள் same blood மூன்றவது நாள் கடவுள் இருவர் எதிரிலும் தோன்றுகிறார்.

உடனே இவன் "கடவுளேனு காலில் விழுந்தான்" மன்னிச்சுடுங்க சாமி உடனே என்னை பழையபடி மாத்திருங்க!அப்படின்னு கதறினான்.கடவுள் "மகனே.எனக்கு அந்த அதிகாரம் இல்லை.என கூறினார்.அப்படியெல்லாம் சொல்லபடாது சகல வல்லமையுடன் உள்ள உங்களுக்கு அதிகாரம் இல்லையா??என்ன சாமி குழப்புகிறீர்கள்?!!!!?.....ஆம் பக்தா நேற்றிரவிலிருந்து நீ கர்ப்பமாக இருக்கிறாய்!!ஆதலால்,அடுத்த ஒன்பது மாதங்கள் நீ காத்திருக்க வேண்டியதுதான்!? பெண்கள் படும் பிரபல வேதனையான பிரசவ வேதனையை நீ அனுபவித்த பின் உன் உருவம் மாறும்!?என கூறி மறைந்தார். 
          
    கதையின் நீதி:எப்பொழுதும் தப்பு செய்யகூடாது!! ( கல்யாணமான  பிறகு அது எப்படி தப்பாகும்!!!  கேள்வியெல்லாம் நல்லா கேளுங்க!!? மூணு நாளும்!!!!   (என்ன,என்ன தப்பு நீங்களே  பட்டியலிட்டுக்   கொள்ளவும்)  
                                                                                                                                                                                                                      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++       

10

Eight Gifts that Do Not Cost A penny!
Sent by S.Sabari Narayanan, Chennai

        1. THE GIFT OF LISTENING...
            But you must REALLY listen.
            No interrupting, no daydreaming,
            No planning your response.
            Just listening.       

        2. THE GIFT OF AFFECTION...
            Be generous with appropriate hugs,
            Kisses, pats on the back, and handholds.
            Let these small actions demonstrate the
            Love you have for family and friends.
       
        3. THE GIFT OF LAUGHTER...
            Clip cartoons.
            Share articles and funny stories.
            Your gift will say, "I love to laugh with you."
        
        4. THE GIFT OF A WRITTEN NOTE...
            It can be a simple
            "Thanks for the help" note or a full sonnet.
            A brief, handwritten note may be remembered
            For a lifetime, and may even change a life.
        
        5. THE GIFT OF A COMPLIMENT.. .
            A simple and sincere,
            "You look great in red,"
            "You did a super job,"
            Or "That was a wonderful meal"
            Can make some one's day.

        6. THE GIFT OF A FAVOR...
            Every day, go out of your way
            To do something kind.

        7. THE GIFT OF SOLITUDE...
            There are times when we want nothing better
            Than to be left alone.
            Be sensitive to those times and give
            The gift of solitude to others.

        8. THE GIFT OF A CHEERFUL DISPOSITION. ..
            The easiest way to feel good is
            To extend a kind word to someone.
            Really, it's not that hard to say,
            Hello or Thank You.
++++++++++++++++++++++++++++++++++++++++++

212 comments:

  1. பட்டியலிட்ட பரிசுகள்
    பரிசாக தரப்பட்டதோ..
    -வாழ்த்துக்கள் சபரியாரே..

    தப்புக்களை பட்டியலிட்டு
    தவறுகளை சுட்டி சீரியலே நடத்திட்டீங்க
    - சபாஷ் அ முருகன்

    எதிர்பாட்டை பார்த்வுடன்
    என்னவோன்னு நெனைச்சது
    - Gr8 done.. சகோதரியாரே
    மாத்தாடு மாத்தாடு மல்லிகே
    என்ற பாடலை சுழல விட இருந்தும்
    எல்லாருக்காவும் இன்னொரு பாடல்

    அதனால் அந்த பாடல்
    அப்புறம் இன்னொரு நாளில்

    தஞ்சை சகோதரரின்
    நகைச்சுவை நல்ல சுவை..

    அவர் சு(க)வைஞரே என காட்டிய
    அத்தனையும் ஆகா..

    ஒன்பாற் சுவையில் தங்களின் இந்த
    சுவை அப்படி பார்க்க வைக்கிறது..

    -நல் வணக்கம் தருகின்றோம்
    நலமுடனே ஏற்றிடுக

    வகுப்பறையின் ஆஸ்தான கவியே
    வரிப்புலி எனும் தமிழ் புலியே; இப்போ

    புலிகட் தனுசுப் புலியே..
    புலியை show caseல் வைத்திருப்பதை

    பார்த்தே பயப்படும் பலருக்கு
    புலிவேட்டை(hunting) எப்படியோ..

    எங்கள் வகுப்பில் ஒரு
    புலி இருப்பதனை புரிந்து கொண்டோம்
    (sportive ஆக எடுத்துக் கொள்க)
    -தமிழுக்கும் உங்கள்
    தைரியத்திற்கும் சிரம் வணங்கும்...

    ஜல்லிக் கட்டினை
    தமிழில் கட்டி

    அன்பில் கட்டி
    அளப்பரிக்கும் அன்பிற்கு
    நன்றிகள் 3 தனுசுக்காரரே..

    ReplyDelete
  2. தமிழ் விரும்பி நீவிர்
    தமிழை மட்டும் விரும்பவில்லை..

    உமது படைப்பு அந்தப்பக்கத்தில்
    படையல் பரிமாற வருமா..

    காத்திருக்கின்றோம் வணக்கங்களுடன்
    காலம் கணியும் வரை..





    தங்கத்திலே ஒரு குறை என்ற
    தங்கமான பாடலுடன் அமைந்த

    பதிவு மனதை தொட்டதா
    பதிலுக்கு மனதை சுட்டதா..

    விளிம்பின் ஓரத்திலிருந்து
    விண்னை பார்க்கின்றீர்..

    பாடலை அய்யரும் சுழல விட
    பாசமொடு அனுமதி கிடைக்கும் தானே

    மனதை தொட்ட வரிகளை
    மறைக்காமல் அளிக்கின்றோம்

    ஊனம் ஊனம் ஊனம் இங்க
    ஊனம் யாருங்கோ

    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ

    உள்ளம் நல்லாருந்தா
    ஊனம் ஒரு குறை இல்லே

    உள்ளம் ஊனப்பட்டா
    உடம்பிருந்தும் பயனில்லே

    ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
    சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்

    கெட்ட பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்
    அத கண்டிருக்கேன் நானும்,

    "நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ.."
    (மனதை தொடும் வரிகள்...)

    கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
    இத கண்டிருகோம் நாம
    ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ

    ஊனம் என்னடா ஊனம்
    அட.. ஞானம் தான வேணும்
    அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்

    (மனதை தொட்ட வரிகள்)

    மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு
    அதில் ஒத்த கோபுரம் ஒன்னு
    அதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோ

    கண்ணதாசன் சொன்னாங்கோ
    வைரமுத்து சொன்னாங்கோ

    ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ

    (மனதை தொட்ட வரிகள்)

    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ


    பெங்களுரு சகோதரியார்
    பெஸ்ட்டாக தந்த படைப்பு

    இரண்டு பக்கத்தையும் காட்டி
    இன்சொல்விரும்பி ஆலாசியம்

    படைப்பையும் தொட்டது (3)
    பாதிப்பையும் ஏற்படுத்தியது
    - வணக்கமும் வாழ்த்துக்களும் ..

    பஜனை கேட்பது எத்தனை
    புண்ணியம் தெரியுமோ..

    அலுவலகத்தில் வேலைசெய்யாமல்
    அப்படி ஒரு சொல்லடை உண்டு

    அதோடு ஒப்பிடவில்லை எனினும்
    அந்த பாணி அப்படியே தொடர்கிறது
    - மாசில்லா அன்போடு
    மதிப்பு மிக்க வணக்கங்கள்..

    ReplyDelete
  3. அய்யா அவர்களின் கதை நல்ல விறு விருப்பாக இருந்தது. ஒரே வரியில் புண்ணியத்தை உணர வைத்து விட்டீர்கள்.

    இப்படிப் பட்டவர்கள் நிறையப் பேர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    தாய் உயிரோடு இருக்கும் போது ஒருவேளை சோறு போடாதவன் அவள் இறந்த பின் நாலு ஊரை அழைத்து கருமாதி விருந்து வைத்தானாம் .இது எந்த புண்ணியத்தில் சேரும் என்று தெரியவில்லை


    தேவைக்கு தராதவர்கள் இருந்தும் இல்லாதவர்களே.

    புண்ணியம் என்பதை போகப் போகும் இடத்திற்கு சேர்த்து வைக்கும் வங்கி கணக்கு என்று நினைக்கிறார்கள்

    பொழுது போக வழிப்படும் இறைவணக்கம் புண்ணியம் ஆகாது

    விளக்கு வைக்கும் முன்பாக செய்யும் தர்மம் மட்டுமே புண்ணியம் ஆகாது .

    இறை ஸ்தலங்களில் மட்டுமே கொடுக்கும் அன்னதானம் புண்ணியம் ஆகாது.

    நல்லகதை ,நல்ல நீதி

    ReplyDelete
  4. பார்வதி அவர்களின் படைப்பு பெரியோர்களின் தொகுப்பு.

    ReplyDelete
  5. kmrk அவர்களால் நீலகண்டரின் கதையை தெரிந்துக் கொள்ள முடிந்தது.

    ஊனம் உள்ளவர் தன்னை ஊனம் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். ஆனால் ஊனம் இல்லாதவர் ஊனம் உள்ளவரைப் பார்த்து 'அவன் கை இல்லாதவன் ,கால் இல்லாதவன் ஊனம் ' என்றி சொல்லி தங்களின் மன ஊனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்.

    ReplyDelete
  6. பரமனின் அழிப்பும்
    சக்தியின் படைப்பும்
    ஆலாசியத்தால் அற்புதம்.

    ReplyDelete
  7. எனது கவிதையையும் ,நிஜ சம்பவத்தையும் வெயிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. வகுப்பறையில் ஒரு வகுப்பில் நடந்த உரையாடல் ரசிக்க வைத்தது. இங்கு மாணவர்தான் மார்க் எடுக்கிறார்

    ReplyDelete
  9. தேமொழி அவர்களே ,

    "சபாஷ் சரியான போட்டி"

    ReplyDelete
  10. சகோதரி பார்வதியாரின்
    பங்குனி உத்திர
    படைப்பில் மெய்சிலித்தோம்

    திருத்தனியில் உதித்த என வரும்
    வேல் மாறல் பாராணம் அருமை..

    பலன் கண்ட
    பலரும் சொல்வதுண்டு..

    வணக்கமுடன் வணங்குகிறோம்..
    உமது உத்திர நாள் படைப்புகளை

    ReplyDelete
  11. வாத்தியார் ஐயா வணக்கம்.

    இன்றைய வகுப்பறையில் உள்ள அனைத்து படைப்புகளையும் படித்து கருத்து கூறுவதற்கு நேரம் இல்லை . காரணம் பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் எமக்கு முன்னர் மற்றும் பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் கஷ்ட பாட்டை ( உதவி புரிய ) போக்கவே கால நேரம் இல்லை .

    மேலும் தூரத்தில் உள்ள உறவுககளை காட்டிலும் பக்கத்தில் உள்ள எதிரிதான் முதல் உறவுகள் என்று எங்கையோ கேட்ட ஒரு சொலவடை உண்டு.

    மேலும் முடியாதவன் கூறும் ஒவ்வொரு காரண காரிய சொல்லும் ஒவ்வொரு பொய் வார்த்தை என்றும் கேட்ட பழ மொழியும் உண்டு.

    வாத்தியார் ஐயா எம்மை புரிந்து கொள்வார் என்ற காரண காரியத்தால் இங்கு இதனை கூறுகின்றேன் . நேர காலம் கிடைக்கும் பொழுது ஆக்கத்தை படித்து எமது மண்டைக்கு பட்டத்தை கூறுகின்றேன் ஐயாகளே.

    நன்றிகள் பல!.

    ReplyDelete
  12. மாணவர் மலரின் எனது ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றிகள் பல.
    //பெங்களுரு சகோதரியார்
    பெஸ்ட்டாக தந்த படைப்பு //
    //சகோதரி பார்வதியாரின்
    பங்குனி உத்திர
    படைப்பில் மெய்சிலித்தோம்//

    தங்களுக்கு என் நமஸ்காரங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  13. தஞ்சாவூராரின் கதை பற்றி சொல்ல வார்த்தைகளில்லை. ஆன்மீகம் என்பதன் உள்ளர்த்தம் உணராமல், போலி வெளிவேஷமும் பொய்யும் பகட்டும் ஆன்ம லாபத்தை எவ்வாறு பெற்றுத்தரும்? இது போல் அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
    இறைவன் அருள் ஒன்றே இத்தகையவர்களைத் திருத்தும்.

    ReplyDelete
  14. thanusu said...
    //பார்வதி அவர்களின் படைப்பு பெரியோர்களின் தொகுப்பு.//

    நன்றி தனுசு. தங்களின் ஜல்லிக்கட், புலிகட் இரண்டும் அருமை.

    //மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
    முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
    தினவெடுத்த தோளோடு தொடை தட்டி புறப்படுகிறேன் .//

    கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்கள் எப்போதும் பாயசத்தில் முந்திரி போல.
    வாழ்க்கையே ஒரு விளையாட்டு மைதானம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தஞ்சாவூராரின் ஆங்கில நகைச்சுவை அத்தனையும் அற்புதம்.

    சகோதரி தேமொழி! நான் இங்கிருந்தே தங்களை தூக்கி ஒரு சுற்று சுற்றுவதாக நினைத்துக் கொள்ளவும். அருமை...அருமை....(அப்பாடா, எதிர்ப்பாட்டுக் கேட்டப்புறம் தான் நிம்மதி).

    ஆனந்தமுருகன், மொழியாக்கம் அருமை. எதார்த்தமான உரையாடல்களைக்
    கொண்டு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பகுதி 3 எப்போ?

    சபரியின் பரிசுகள் ஒவ்வொன்றும் அழகு, அருமை.

    ReplyDelete
  16. கொஞ்சும் தமிழெடுத்து அந்தாதிச் சரந்தொடுத்து
    எஞ்சுவது சிவமே யென்றெடுத் துரைத்து
    நஞ்சுண்ட பிரானடி போற்றும் ஆலாசியத்தை
    விஞ்சுபவர் யாருளர் இம்மாநிலத்தே.

    ( தவறாக நினைக்க வேண்டாம். இது, கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாய் நான் பாடியது)
    முதல் பாடலின் ஈற்றடி அடுத்த பாடலின் முதலடியாய்ப் பாடிய,அண்ணன் ஆலாசியத்தின் அந்தாதியைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன். மறக்காமல் இந்த வாரம் அருஞ்சொற்பொருள் சேர்த்துவிட்டார்.நன்றி.
    காளமேகப் புலவர் போல் அன்னையின் தாம்பூலம் உங்கள் திருவாய் சேர்ந்திருப்பதாக நினைக்கிறேன். அந்தாதி பாடும் அம்பிகை நேசனை வணங்குகிறேன்.

    ReplyDelete
  17. தஞ்சாவூராரின் சிறுகதையைப் படித்து ரசித்தேன். கலிகாலத்தில் இது போலெல்லாம் 'தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமாட்டேன்' என்றும்,'அறுந்தகைக்குச் சுண்ணாம்பு தரமாட்டேன்' என்றும் சொல்வது அதிகமாகும். ரூ.11/‍‍=கொடுத்து ஒரு லிட்டர் 'மினரல் வாட்ட'ரை வாங்கி வந்த அம்மணிக்கு அதனைப் பகிர மனம் வருமா? மேலும் இன்றைய பொல்யூஷன் நிலையையும் கணக்கில் எடுத்தால் அவரவர் சோற்றையும், தண்ணீரையும் சுமந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ரமா அடுத்தமுறை வெளியில் செல்லும் போது இப்போது ஏற்பட்ட அனுபவத்தால் மறக்காமல் தண்ணீர் எடுத்துச்செல்வாள். அந்த வகையில் தண்ணீர் அளிக்காத பெண்மணி ரமாவுக்குச் செய்தது ஓர் உதவியே.

    ReplyDelete
  18. திரு. கே.எம். ஆர். அவர்களின் ஆக்கம் அருமை. அழகான சம்பவங்களின் தொகுப்பு.

    //"இறைவன் பூரணமானவன்! அந்தப் பூரணத்திலிருந்து வருபவை அனைத்தும் பூரணமானவையே!அந்தப் பூரணங்கள் அனைத்தும் மீண்டும் பூரணத்திலேயே கலந்து பூரணமாகின்றன" //

    ' பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் ' என்று தொடங்கும் ஸ்லோகத்துக்குத் தந்த விளக்கம் அருமை.
    //ஸ்ரீ மீனாக்ஷியை வேண்டி நீலகண்டர் பாட‌
    இழந்த கண்களை மீண்டும் பெறுகிறார்.//

    த்வாதசாந்த (ஆஜ்ஞா சக்ரத்துக்கு மேல், சஹஸ்ராரத்துக்கு கீழ் உள்ள பன்னிரண்டு நிலைகளில் சஹஸ்ராரத்திற்கு அடுத்தாற்போல் உள்ளது த்வாதசாந்தம்.) க்ஷேத்திரம் எனப் புகழப்படும் மதுரையில் மீனாக்ஷி அம்மனை வேண்டி, நீலகண்ட தீக்ஷிதர் பாடிய 'ஆனந்த ஸாகர ஸ்தவம்' முழுக்க சரணாகதித் தத்துவமே. சரணம் அடைந்தவர்களுக்கே சஹஸ்ராரக் கமலத்தில் இறைவி தரிசனமளிக்கிறாள் அல்லவா?.

    இதில்,
    'த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந?' (நீ உன் சரணகமலங்களை அருள்கூர்ந்து எனக்குக் காட்டினாலும் அதை எந்தக் கண்கொண்டு நான் பார்ப்பேன்?) என்று தீக்ஷிதர் கேட்டதும் அம்பிகை தோன்றி, கண்கொடுத்து அருளினாள் என்பது வரலாறு.
    ஸ்ரீ மஹாபெரியவர், இது போல் ஒரு பின்னப்பட்ட சிவலிங்கத்தை பூஜிக்க அனுமதி கொடுத்ததாகப் படித்திருக்கிறேன்.

    மிக அற்புதமான ஆக்கம் . நன்றி.

    ReplyDelete
  19. திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் சிங்கைக் கவிஞர் ஹாலாஸ்யத்தின் உரையாசிரியராக நன்கு வெளிப்படுகிறார். கவிஞ‌ரே இந்த அளவு சிந்தித்து
    புனைந்து இருப்பாரா? கவிதையைக் காட்டிலும் உரை வேகப்பாய்ச்சல் பாய்கிறதே. 'கவிதை எத்தனைப்பேரை சென்று அடைந்தது என்று தெரியவில்லை; அது சரியாகச் சென்று அடைய வேண்டுமே' என்று அம்மையாரின் அக்கறை அவரை அழகிய, சுவாரஸ்யமான உரை எழுத வைத்துள்ளது.அம்மையார் உண்மையில் வகுப்பறையின் கற்றுணர்ந்த முத‌ல் மாணவிதான்.உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. என் ஆக்கத்தை வாரம்தோறும் சலிக்காமல் வெளியிட்டு வரும் வாத்தியாருக்கும், வாசிக்கும் நண்பர்களுக்கும் என் வந்தனங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  21. அந்தாதிக் கவிஞர் ஹாலாஸ்யம் என்று சொல்லும் அளவுக்கு அந்தாதி பாடியுள்ளார். பாராட்டுக்கள். அந்த 'ஞ'னா விஷயம் கொஞ்சம் படுத்தியது. கூடவே சுய விள‌க்கம் உதவியாக இருந்தது. 'ஞஞ்சை' இதுவரை நான் படித்திராத சொல்தான்.

    ReplyDelete
  22. ஐயா என் தொகுப்பிற்கு "எதிர்ப்பாட்டு" என தலைப்பிட்டதற்கும், மாணவர் மலரில் வெளியிட்டதற்கும் நன்றி. அத்துடன் எனக்குப் பிடித்த ஆச்சியின் படத்திற்கும் நன்றி ....நன்றி.

    படித்து கருத்து வெளியிட்டவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. "கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி" மக்களுக்கு இதனால் புண்ணியம் கிடைத்துவிடாது என்று சரியான சாட்டையடி. நன்றி ஐயா.
    தேவைக்கு உதவாத எதுவுமே வீண்தான், உறவுகள் உட்பட.
    தனக்கு கிடைக்கப் பெற்ற செல்வதை உபயோகித்து பிறர் மெச்ச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பக்தி வேடம் போட்டு தனக்கு புண்ணியம் கிடைத்து விட்டதாக என்னும் மாயையில் இருந்து என்றுதான் மக்கள் விடுபாடுவார்களோ.

    தசாவதாரம் படத்தில் கமல் சித்தரித்த வின்சென்ட் பூவராகன் போன்றவர்களே, புண்ணியம் எதிர்பார்க்காமல் உதவுபவர்களே போற்றப் பட வேண்டியவர்கள்.
    -----
    "ஸ்மார்ட் அலெக்" வகை மாணவர்கள் எப்பொழுதுமே சிரிக்க வைப்பவர்கள்தான். இது நல்ல தொகுப்பு, தஞ்சாவூர் ஐயாவின் நகைச்சுவைத் தொகுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  24. பார்வதி எங்கேயோ போய்ட்டீங்க நீங்க. ஏதோ ஆக்கங்களைப் படித்து இரண்டு வரி பிழையில்லாமல் எழுதவே நாங்கள் தத்தளிக்கும் பொழுது, நீங்கள் ஆலாசியத்தின் கவிதைகளைப் படித்து ஆராய்ச்சியே செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் ஆக்கங்கள் உங்கள் கல்வியின்/அறிவின் ஆழத்தைக் காட்டுகிறது. நதி மூலம், ரிஷி மூலம் தாண்டி கவி மூலம் கண்டறியும் கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. KMRK ஐயாவின் " குறையிருந்தாலும் குறைவதுண்டோ?" தலைப்பே அருமை.
    "உங்களுடைய மாப்பிள்ளைக்கு விபத்தில் கால் உடைந்து விட்டால் அவரையும் மாற்றிவிட்டு மகளுக்கு வேறு கணவன் தேடுவீர்களோ?" என்ற வரிகள் யோசிக்க வைத்தது.

    உங்கள் எழத்துக்கள் பின்னமான பிள்ளையாரை ஆதரிக்கும் நோக்கத்தில் ஆரம்பித்தாலும் மாற்றுத் திறனாளிகளை மனிதாபிமானத்துடன் காணவேண்டிய அவசியத்தை சொல்ல எடுத்துச் சென்றதே ஆக்கத்தின் சிகரம். நல்ல கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. அருமை, அருமை ஆலாசியத்தின் "சிவன் அந்தாதி" பாடல் அருமை. அந்தாதிக் கவிஞர் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் ....
    இரண்டாம் பத்தி, மூன்றாம் வரியில்
    "அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட" என்பதை "உண்டு" அல்லது "உண்டே" என மாற்றமுடியுமா?
    சேர்த்துப் படிக்கும்பொழுது "ஆலகாலம் உண்ட குமுதவல்லி" என்றும் பொருள் படுகிறது.

    அத்துடன் இறுதி வரியை "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிறதே" என்பதிலிருந்து "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிற சோதியே" அல்லது "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிற சோதியனே" என்றோ மாற்ற முடியுமா? இவ்வாறு செய்தால் மீண்டும் முதல் வரிக்கு எடுத்துச் சென்று சுழல் முறையில் பாடிக் கொண்டே இருக்கலாம்.

    இடையில் பதவுரை கொடுத்து உதவியதற்கு நன்றி. தமிழில் "ஞா" எனத் தொடங்கும் இத்தனை எழுத்துக்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  27. தனசு உங்கள் கவிதையில் பொலிகாளை, புலிக்குளகாளை, இருச்சாளி காளை, காங்கேய காளை, மணப்பாறை காளை, சிந்துகாளை, சில்லிகாளை, பூம் பூம் காளை என்று சமுதாய அவலங்களின் காரண கர்தாக்களைச் சித்தரித்தது நன்றாக இருக்கிறது.
    "வேலிதாண்டும் காளைகள்" என்பதை வேலிதாண்டும் "முரட்டுக்" காளைகள் என மாற்றி...

    "தினவெடுத்த தோளோடு "கோயில்காளையாக" தொடை தட்டி
    புறப்படுகிறேன் ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க"

    என்றும் மாற்றினால் மேலும் இரண்டு காளைகள் கவிதைக்குள் கிடைக்காதா? :)))))))))
    -----
    ///நான் என்பெயரை" புலிகட் தனுசு" என்று வைத்துக் கொள்ளலாமா? ///

    புலியைப் எதிர்பாராமல் எதிர் கொண்ட பொழுதும் அசராமல் பிள்ளையை பாது காக்கும் செயல்களை செய்யும் அளவுக்கு சிந்தனை செய்ய முடிந்ததே பெரிய காரியம். அந்த வீரக்குல வழித்தோன்றல் உங்களுக்கு இல்லாத தகுதியா? ஆனால் எண்கணிதம் என்ன சொல்கிறது? :))

    ReplyDelete
  28. "ஏற்ற,தாழ்வுகள்,நிறைந்ததுதானே மானிட வாழ்க்கை!!அது தானே சுவாரசியம்!! ECG எடுக்கும் பொழுது திரையில் அலைகள் மேலும்,கீழும் சென்று வந்தால்தான் மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று அர்த்தம்மாகிறதல்லவா!!ஒரே சீராக (flat) இருந்தால் சவம் என்று பொருளல்லவா?! "

    "என்ன சாமீ சமச்சீர் கல்வி அமுல் படுத்திற மாதிரி சொல்றிங்க "போன மாசம் செய்த தப்புக்கு தண்டனை கொடுத்தா என்ன தப்பு பண்ணேன்னு தெரியும்? போன ஜென்ம தப்புக்கு தண்டனை கொடுத்தா எப்படி சாமீ?!!"

    ஆஹா..ஆனந்த முருகன் எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? உண்மையில் 'கதையின் நீதி' நன்றாகவே சிரிக்க வைத்துவிட்டது.

    ReplyDelete
  29. எட்டு சிறப்புப் பரிசுகளை நினைவுபடுத்திய சபரி சிறப்பான பரிசுக்குரியவர். அவர் குறிப்பிட பரிசுகளில் ஒன்றையே கொடுத்துவிட வேண்டியதுதான்...

    THE GIFT OF A COMPLIMENT....your collection of gift basket is simply superb

    ReplyDelete
  30. ஆன்மீக மலராகிப்போன இன்றைய வாரமலர்ஆங்காங்கே ஒன்றிரண்டு நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களும் இடம்பிடித்து களைகட்டியது.

    ஆனந்தமுருகன்,தேமொழி,தஞ்சாவூரார்,KMRK ,வழக்கம்போல் ஆலாசியம்,அவரது படைப்பைப் போற்றி வாழ்த்த வந்த பார்வதி,புலிகட் தனுசு,சபரி என்று அனைவரின் படைப்புகளும் தொடர்ந்து எழுதவைக்கும் அவரவர் ஆர்வத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தின..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  31. வாழ்க்கையென்னும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் தனுசுக்கு வெற்றிதான் கிட்டும். ஏனெனில் அது ஒரு போராட்டம் என்பதைப் புரிந்துகொண்டு விட்டாரே!
    காளைகள் எத்தனை காளைகளடா! காளைகளின் பட்டியல் கொடுத்தது அபாரம்.
    தனுசுவின் இதுவரை வந்த கவிதைகளில் இதற்கே முதலிடம்.வாழ்க.வளர்க!

    ReplyDelete
  32. கோபாலன் ஐயா அவர்களின் ஆக்கம் அருமை..

    பாவம் எது புண்ணியம் எது என்பதைக் கூட சரியாகத் தெரியாதவர்கள் தான் எத்தனை எத்தனை பேர்... ஆன்மீகம் என்றால் என்ன என்பதை அறியாத சுயநல வாதிகள் தாம் இவர்கள்.

    ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவை சங்கடச் செய்தாலே பாவம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்றறியாத, அப்படிப் பட்டப் பாவங்களைச் செய்கின்ற மேல்தட்டுக் காரர்களுக்கு பஜனைக் கேட்பதால் என்ன?.... நான் மறைகளையும் ஓதுவதைக் கேட்டாலும் புண்ணியம் ஏது?

    பாவ புண்ணியத்தின் சூட்சுமம் தெரிந்து செயல் பட்டால் அது நாத்திகனானாலும் புண்ணியம் உண்டேத் தவிர இது போன்ற அசடுகளுக்கு ஏது புண்ணியம்!!??

    அருமையானக் கதை பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  33. ஆனந்தமுருகன் நேரேஷன் அருமை..வரிகளுக்கு ஆங்காங்கே சற்று இடைவெளி விட்டு அமைத்திருந்தால் படிக்க,புரிந்துகொள்ள இன்னும் வசதியாக இருந்திருக்கும்..கதையில் கடைசியிலே தப்பு பண்ணி பெரிய சிக்கலிலே மாட்டிக்கொண்டுவிட்டார் ஆனந்தமுருகன்.. கொஞ்சம் கொஞ்சமா நல்ல
    ஃபார்முக்கு வந்து விட்டாரென்றே நினைக்கிறேன்..வாழ்த்துக்கள்..

    "தொடர்ந்து தன் பிள்ளையை துன்புறுத்திவரும் ராகுலைக் கண்டிக்க மம்மிக்கு தைரியம் இல்லை போலும்.."என்று நடப்பு அரசியல் நிலைமையை
    வெளிச்சம் போட்டுக் காண்பித்தார் ஆனந்தமுருகன்.
    இது எப்புடி இருக்கு?

    ReplyDelete
  34. மற்ற ஆக்கங்களை வாசிக்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்.. நன்றி.

    ReplyDelete
  35. தனுசுவின் தாத்தா கதை ஏதோ அந்த காலத்து படம் பார்த்தது போல இருந்தது..

    கவிதையும் கலக்கல்..
    KMRK சொன்னதைப் போலே இதுவரை வந்த கவிதையிலே இதற்கே முதலிடம் கொடுக்க முடியும்..
    வாழ்க..'புலிகட் தனுசு'..

    ReplyDelete
  36. பார்வதி அவர்கள் என்னன்னமோ எழுதுகிறார்..அண்ணன் ஆலாசியத்தை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுவிட்டார் பார்வதி..

    ஏற்கனவே அவர் எழுதுகிற ஆன்மீகப் பாடல்களை சுத்தமாகப் புரியாத நிலையில் எப்போது கொஞ்சம் நிஜவுலகத்து விஷயங்கள் பற்றி எழுதுவாரோ என்று நினைத்திருந்த வேளையில் இப்படிப் போட்டுத் தாக்கிவிட்டாரே பார்வதி..என்னத்தச் சொல்றது போங்க?இனி டாப் கியர்லே போவாரே..நான் கமென்ட் அடிக்குறதை நிறுத்திட வேண்டியதுதான்..

    சமஸ்கிருதத்துலே வுட்டு காட்டு காட்டுன்னு இந்தக் காட்டு காட்டுறீங்களே தாயீ?
    உங்களைப் பாராட்டிப் போற்றி அந்தாதியெல்லாம் எழுதணுமின்னா அது KMRKவுக்குத்தான் சாத்தியம்..ஏன்னா அவருக்குத்தான் சான்ஸ்கிரிட் தெரியும்ன்னு சொல்லியிருக்காரு..

    ReplyDelete
  37. தஞ்சாவூராரின் கதை படித்ததும் 'உன்னால் முடியும் தம்பி' பாட்டு முடிஞ்சதும் கமலுக்கும் அவர் அப்பா பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளைக்கும் நடக்கும் வாக்குவாதம்தான் நினைவுக்கு வந்தது..

    அவரின் துணுக்குகளும் அருமை..

    தேமொழி, சபரி என்று அனைவரின் துணுக்குகளும் அருமை..

    ReplyDelete
  38. @கோபாலன் தஞ்சாவூர்
    புண்ணியத்தை இப்படிதான் எல்லாரும் சேர்த்து கொள்கிறோம். பாவம் எப்போ, எப்படி செய்தோம் என்று தெரியாமலே..!
    @கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி), நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி. அந்த வலி சம்பந்த பட்டோருக்கு மட்டும் தான் புரியும்.

    @தனுசு, கவிதை மற்றும் புலிகட் அனுபவங்கள் , அதை நீங்கள் கொடுத்திருந்த விதம் வழக்கம் போல் நன்று.

    நகைசுவை , @கோபாலன் அவர்களது நன்று.
    @தேமொழி உங்கள் எதிர்மறை நகைச்சுவை ரொம்பவே நன்றாக இருந்தது. அதுவும் அந்த 'how' சூப்பர்.

    @ஜி.ஆனந்தமுருகன்
    சிரித்து சிரித்து வயறு வலித்து விட்டது போங்கள். நல்ல வேளை, கடவுள் பல வீட்டுக்கு வருவதில்லை.

    ReplyDelete
  39. புலிச் சம்பவம் கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும், நடந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது. நம்பவும், நம்பாமலும் உள்ள மனநிலைதான் எனக்கு. 'நாகத்திற்கு நாக்கில் குத்திய முள்ளினை மூத்தோர் எடுத்துவிட்டு உபகாரம் செய்ததால் பாம்பு எங்கள் குடும்பத்தாரை ஒன்றும் செய்யாது தெரியுமா?'என்ற கதை எல்லோரும் சொல்கிறார்கள்.

    தூக்கிக் கொண்டு வந்த புலியுடன் தாத்தா போட்டொ எடுத்துள்ளாரா? ஏனேனில் வெள்ளைக்காரன் சுட்டபுலியோடு துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் காலகட்டம்தான் நீங்கள் கூறுவது. கொஞ்சம் மீடியாவும் பிரபலாமாகியிருந்த காலம்தான். மீடியாக்காரர்கள் செய்தி வெளியிட்டு இருப்பார்களே.

    இந்தியப் புலிகள் வளர்ந்த நிலையில் 306 கிலோகிராம் உள்ளனவாம். 11 அடி நீள‌ம். வாலுக்கு 3 அடிகள் தள்ளிவிட்டாலும் 8 அடிகள் உடல் நீளம் கொண்டவை.

    ஒலிம்பிக்கில் 100 கிலோ எடையுள்ள இளைஞன் பளுதூக்கும் போட்டியில் ஜெர்க் ஈவென்டில் அதிக பட்சம் தூக்கி உடனே கீழே போட்டது 240 கிலோ வரைதான். தாத்தா 300 கிலோவைத் தூக்கிகொண்டு 1 1/2 மணி நேரம் நடந்து வந்தரா?

    தாத்தா(அப்போது அவரும் இளைஞராக இருந்திருக்கலாம்)செய்துள்ளது ஒரு உலக ரிகார்ட். ஏதாவது ஆதாரம் இருக்கலாம். இருந்தால் காண்பித்து கின்னஸ்ஸில் பதிவு செய்யுங்கள் தனுசு.

    தாத்தா போல நீங்களும் ஒரு சாதனை செய்யுங்கள். அட்லீஸ்டு கவிதையிலாவது புலியைச் சுழற்றி அடியுங்கள்.(மாடு பிடிக்கவே 'எப்படி அந்த மாட்டைப் பிடிப்பேன் இந்த மாட்டைப் பிடிப்பேன்' என்று புலம்புகிறீர்கள்!)அதன்பின்னர் 'புலிகட்'தனுசு என்று போட்டுக்கொள்ளலாம். அதுவரை 'எலிகட்'தான்!ஹிஹிஹி ச்சும்மா தமாசு! :) :) :)

    ReplyDelete
  40. பார்வதி அவர்களுக்கு வந்தனம். ராயல் சல்யுட். அதுக்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    ஆலசியம் அவர்களுக்கும் வந்தனம். நமக்கு படிச்சி கொஞ்சம் பொருள் புரிந்து கொள்ள முடியுமே தவிர உங்கள் அளவுக்கு

    பா பாடி பாரட்ட தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  41. அன்பிற்குரிய ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். என்னுடைய சிறுகதையை வெளியிட்டமைக்கு நன்றி. நான் பார்த்து மனம் நொந்த ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்தக் கதை. மனிதரில் மூன்று வகை. சாதாரண அன்றாட வாழ்விலிருந்து விலகி எங்கோ ஒரு தனி கற்பனை உலகில், தானுண்டு, தன் பங்களா, கார், சுகபோகம் என்றிருப்போர் ஒரு வகை. நடுத்தர மக்கள் ஒரு வகை. கீழ்த்தட்டில் அன்றாடம் தேடிப் பொருள் தேடி உண்டு, கிடைத்த இடத்தில் படுத்துறங்கும் மற்றோர் வகை. இதில் மேல் தட்டு மனிதருக்குள்ள குணாதிசயங்கள் வெறுக்கத்தக்கவை பல. அதில் ஒன்றுதான் இந்தக் கதையின் கரு. நன்றி. திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுடைய கட்டுரையில் பிறவி மகான்களான ஆதி சங்கரர், குமரகுருபரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பற்றிய விளக்கங்கள் படித்து இன்புறத்தக்கன. மூவருமே இறைவன் அருளோடு பிறந்த மேதைகள். மக்கள் கடைத்தேற வழிகாட்டிய சான்றோர்கள். நல்ல பதிவு. ஆழ்ந்த புலமையையும், எழுதும் திறமையையும் கொண்டு திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் மேலும் பல நல்ல செய்திகளை ஏனையோர் பயன்படும்படி சொல்லி வரவேண்டும் என்பது என் வேண்டுகோள். வாழ்க அவர்கள் பணி!

    ReplyDelete
  42. இறைவனே! பரமனே! பகவதியே!! பரந்தாமனே!!!
    இத்தனை அழகான விளக்கங்களுடன் படைக்கத்
    எத்தனை ஞானம் வேண்டும் அத்தனையும் பெற்ற
    அன்னையவள் ஸ்ரீமதி பார்வதி அவர்களை குழந்தையாக்கித் தா என் இறைவா...!
    நான் அந்தக் குழந்தையை என் தோள்களிலே சுமந்து அருணகிரியை
    வலம் வரவேண்டும்.... வேறொன்றும் கூற வார்த்தைகளை இல்லை.

    என் மேனி சிலிர்த்தே சீர் பெற்று நின்று அலையலையாய்
    பொங்கிப் பெருகி சற்றே இறங்கி அக்கணமே மீண்டும் பொங்கி
    ஒரு தெய்வீக உணர்வை எனக்கு தந்துக் கொண்டே இருந்தது நான்
    இந்தக் கட்டுரையின் கடைசி வரியை படித்து முடிக்கும் வரை..
    கூடவே கண்களும் பனித்தன..

    அப்படி என்றால் எப்படி ஒரு தியான மோன நிலையில் பரமனின் ஏகாந்த
    உணர்வில் இருந்து இந்த தெய்வீகப் பேருரையை சமைத்து இருப்பீர்கள்
    என்பதை என்னால் (ஆத்மாவால்) உணர முடிகிறது.

    தங்கையே... என் அன்னையே... அருமை அருமை அருமை..
    அவனது கருணையே கருணை.. அவனின் திருவுள்ளம்;
    அதுவே அதனாலே எங்களோடு நீங்களும் வந்து இருக்கிறீர்கள்...

    எனது ஆத்மார்த்தமான நன்றியும்... எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு
    எல்லா வளங்களையும் தந்தும், நற்கதியும் அருள வேண்டிப் பணிகிறேன்.
    அதற்கு அன்னை சக்தியவள் தங்களை அப்பனிடம் ஆற்றுப் படுத்த வேண்டி
    அவளையும் பணிகிறேன்

    ReplyDelete
  43. ஐயா, என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை எனது மகனுடைய கணினியில் எழுதியதால், அது அவருடைய பெயரில் பதிவாகிவிட்டது. அது நான் எழுதியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  44. ஐயா, என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை எனது மகனுடைய கணினியில் எழுதியதால், அது அவருடைய பெயரில் பதிவாகிவிட்டது. அது நான் எழுதியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  45. அன்பிற்குரிய கிருஷ்ணன் சாரின் ஆக்கம் பல நல்லத் தகவல்களை அருமையாக கொண்டு வந்தது...

    ///"இறைவன் பூரணமானவன்! அந்தப் பூரணத்திலிருந்து வருபவை அனைத்தும் பூரணமானவையே!அந்தப் பூரணங்கள் அனைத்தும் மீண்டும் பூரணத்திலேயே கலந்து பூரணமாகின்றன" என்று பேசும் ஒரு வேத சாந்திபாடம்./////

    அற்புதமான வேதக் கருத்தை ரத்தினச் சுருக்கமாக தகுந்த இடத்தில் கொண்டுவந்துக் காண்பித்தீர்கள் நன்றி.

    ///ஸ்ரீ கிருஷ்ணருக்கு "திரிபங்கி"என்று ஒரு பெயர் உண்டு. மூன்று இடத்தில் 'பெண்டு' உள்ள‌வர் என்று பொருள்.///

    இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையானக் கருத்து...

    பரமன் = பரந்தாமன்
    இச்சா சக்தி - ஓரிடம்
    கிரியா சக்தி - இரண்டாமிடம்
    ஞான சக்தி - மூன்றாமிடம்.

    கடவுள்களின் இரு தாரத் தத்துவமே இது தானே ஞான சக்தியாக அவனே வந்து நின்று இருபுறமும் இச்சா, கிரியா சக்திகளை கொண்டு அருள்பாலிக்கிறான்.
    இதை நேரடியாக உலக சம்பந்தப் படுத்திக் கொண்டு யாவரும் இருதாரம் இறைவனுக்கே எனும் போது... நான் ஆசைகளை அடக்க முடியாத சாதாரணன் என்னால் ஏக பத்தினி விரதம் உள்ளவனாக எப்படி இருக்க முடியும் என்று போக்குக்கு சாக்கு சொல்வதையும் காண்கிறோம்...
    தவறாக எண்ண வேண்டாம். எனது கருத்து மாத்திரமே..


    ////சுவாமிகள் அமர்ந்து தியானம் செய்து விட்டுக் கூறினார்.
    "நல்ல நிலையில் முழுமையாக‌ இருக்கும் ஒரு மாக்கல் பிள்ளையாரை பெரிய பிள்ளையாருக்கு முன்பாக வைத்துவிட்டு, இருவருக்குமாகச் சேர்த்து ஆராதனைகளை செய்யவும்" என்று அருள்வாக்காகக் கூறினார்.இதுதான் நல்ல மகான்களுக்கான‌ அடையாளம். எதையுமே நிராகரிக்க மாட்டார்கள்.அவர் கூறியபடியே வழிபாடு செய்து வந்தேன்.////

    உண்மை தான் மனக்கண்ணால் உணர்ந்து மதியுரை தந்தும் இருக்கிறார்... இதிலே பெரும் சிறப்பு தங்களின் சிரத்தை மிகுந்த பக்தியும் தங்களால் இயன்றத் தொண்டும் தான்... அது அவன்பால் தாங்கள் கொண்ட பக்தி... அதவும் கேது திசை என்பதால் ஞான சொரூபியாய் போற்ற வாய்த்த பேறு அருமை.

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய கருத்தும் அருமையாக பொருந்தி வந்துள்ளது ... அந்த அம்மையாரும், அவரது சகோதரரும், பரமஹம்சரின் சகோதரரும் பேசிக் கொண்டிருந்த சமயம் நமது பரமஹம்சரே இந்த உதாரணத்தை கூறியதும்.... இருந்தும் அவரும் அந்த விஹ்ரகத்தை சரிசெய்தும் அன்று முதல் அந்த விக்ரகத்தை பூஜை செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அருமையான நிகழ்வு...

    கோபாலன் ஐயா அவர்களின் கூற்று அவர்கள் கேள்வியுற்ற ஒன்றாக இருக்கும்!
    இருந்தும், அதில் ஒரு சிறு அர்த்தம் இருக்கிறதாக எனக்கும் படுகிறது....
    அதாவது... பக்தி என்பது; வழிபாடு என்பது ஆத்ம தொடர்புடையது.. அதுக்கு
    புறக்கண் அவசியம் அல்ல, இருந்தும் புறக்கண்ணால் பக்திக்கு உபயோகமும் உண்டும் அதைவிட தடை நிறையவே உண்டு...

    சரி அது ஒரு புறமிருக்க.. சாதாரண பக்தன் விக்ரகங்களை தனது பூதக் கண்ணால் பார்த்தே ஆனந்தமுற்றே
    இறைவனைப் பணிகிறான்...

    அப்படி செய்யும் போது அந்த விக்ரகத்திலே ஒரு குறை அவன் கண்களுக்குத் தெரியும் போது அவனின் சிந்தனை கவனம் சிதறும் அங்கே பக்தி பழுது படும் அதனாலே பெரியவர்கள் அதைச் சொல்லி இருக்கலாம்.... இது எனது கருத்து கோபாலன் ஐயாவும் இதையே எண்ணமிட்டு இருப்பார் எனவும் நம்புகிறேன். அந்தக் கருத்துக்காக எழுதியதாக எண்ணவில்லை... நிறைய உண்மைத் தகவல்கள் தாங்கிய ஆக்கம் ஆனந்தம் தந்தது!!!

    தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நபிக்கையோடு எனதுக் கருத்தையும் கூறுகிறேன். தங்களின் கட்டுரை நோக்கம் நன்று அதனால் ஆக்கமும் நன்று... பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  46. இதப் பாருங்க‌ய்யா! ஐ ஏ எஸ் கேள்விகளையும் பதில்களையும் விமர்சித்த‌
    தஞ்சாவூரார் அவர்களே அப்படி ஒரு நகைச்சுவை கேள்வி பதிலை 'காப்பி பேஸ்ட்' பண்ணிவிட்டாரே!கடைசியாகப் பதில் அளித்த ஹெரால்டுதான் இருப்பதிலேயே 'நல்ல' மாணவன். (கூரை மேல கொள்ளிவைக்கிறானே அவன்தான் எங்கள் வீட்டிலேயே நல்ல பிள்ளை என்பது போல!)

    ReplyDelete
  47. கே.எம்.ஆர். சேதமடைந்த விக்ரகங்களைப் பற்றி சொல்ல வந்து, குறையுடையார் குறித்த மேன்மைகளை விளக்கி விட்டார். பொதுவாக ஆலயங்களில் குறையுள்ள விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் இல்லை. தஞ்சை பெருவுடையார் கோயிலில் மாமன்னன் ராஜராஜன் செய்து வைத்த நந்தி இப்போது பிரகாரத்தில் வராகியம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சிவன் சந்நிதியில் பிரம்மாண்டமாக இருக்கும் நந்தி நாயக்க மன்னர்கள் செய்து வைத்த நந்தி. காரணம் சோழனின் நந்தியில் ஏற்பட்டிருந்த ஒரு சிறு பின்னம் என்பதுதான். மற்றபடி குறையுள்ளவர்களைப் பற்றி அவர் கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளே. மாலிகாபூர் படையெடுப்பின் காரணமாக சிதலமடைந்த பல ஆலயங்களையும் புதுப்பிக்க முடியாமையால், நாயக்க மன்னர்கள் பல ஆலய சிதைவுகளிலிருந்து ஓரிரு கோயில்களையாவது புதுப்பித்தனர். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்திலுள்ள செந்தலை எனும் தலம். இது முத்தரையர்களின் தலைநகராக இருந்த ஊர்.

    ReplyDelete
  48. தேமொழியின் எதிர்ப்பாட்டு நகைச்சுவையில் 5வது எனக்குப் பிடித்தது.

    மாண‌வர் மலர் மிகவும் சீரியச்சாக போய் விடாமல் இந்த நகைச்சுவை உதவுகிறது.ஆச்சியின் படம் நகைச்சுவைக்கு ஒரு 'வேல்யு அடிஷன்'
    தேமொழிக்கும் ஐயாவுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  49. 'சமச்சீர்கல்வி அமல்படுத்துற மாதிரி.....!'

    தமிழில் எழுதுவதின் வீச்சைப் பார்த்தீர்களா ஆனந்தமுருகன்? எப்படி எழுத்து நடையில் ஓர் ஓட்டம் கிடைக்கிறது பாருங்கள். நல்ல திறனுள்ளது. தொடர்ந்து தமிழில் நிறைய எழுதுங்கள். பாராட்டுக்கள்.

    இறுதியில் பிரசவ அனுபவத்தையும்/வலியையும் ஆண்பிள்ளைக்கு ஆண்டவன் அளித்ததற்கு அவருக்கு நன்றி.

    ReplyDelete
  50. சபரியின் பரிசுகள் பொதிந்து வைத்துப் பாதுகாக்க வேண்டியவை.1,5 எனக்குப் பிடித்த பரிசுகள்.சபரிக்குப் பாராட்டுக்க்கள்.

    ReplyDelete
  51. //// Parvathy Ramachandran said...
    கொஞ்சும் தமிழெடுத்து அந்தாதிச் சரந்தொடுத்து
    எஞ்சுவது சிவமே யென்றெடுத் துரைத்து
    நஞ்சுண்ட பிரானடி போற்றும் ஆலாசியத்தை
    விஞ்சுபவர் யாருளர் இம்மாநிலத்தே.

    ( தவறாக நினைக்க வேண்டாம். இது, கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாய் நான் பாடியது)
    முதல் பாடலின் ஈற்றடி அடுத்த பாடலின் முதலடியாய்ப் பாடிய,அண்ணன் ஆலாசியத்தின் அந்தாதியைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன். மறக்காமல் இந்த வாரம் அருஞ்சொற்பொருள் சேர்த்துவிட்டார்.நன்றி.
    காளமேகப் புலவர் போல் அன்னையின் தாம்பூலம் உங்கள் திருவாய் சேர்ந்திருப்பதாக நினைக்கிறேன். அந்தாதி பாடும் அம்பிகை நேசனை வணங்குகிறேன்.////

    மாநிலம் போற்றவே; மாதவம் புரிந்து
    தேனினும் இனியஞானக் குழந்தை - நினை
    வாணியிடம் இருந்துப் பெற்றனரோ - கலை
    வாணியையே பெற்று வளர்த்தனரோ!

    இதனை திறனும் ஒருங்கே பெற்றதனால் தானே கோபாலன் ஐயாவும் தங்களை ஆழ்ந்த புலமை என்றே வியந்தும் பாராட்டியும் உள்ளார்கள்.
    சக்தியவளை போற்றும் மனதில் (நாவில்) கவி சக்தியை நிற்கிறாள்... தங்களின் கவிதை அருமை... அன்னை அவள் அருள் என்றும் தங்களுக்கு இருக்க அவளைப் பணிகிறேன். தங்களின் பாராட்டிற்கு நன்றி கூறி நானும் இந்த சக்தி திருமகளை வணங்குகிறேன்... நன்றிகள் சகோதரியாரே!

    எனது இன்னொரு வேண்டுகோள் எனது இவ்வாரப் பாடலும் தங்களின் அடுத்த ஆக்கத்திற்கு ஒரு பக்கமாகவாது நின்றால் மிகவும் சந்தோசமடைவேன்.

    ReplyDelete
  52. @ Sri.V.Gopalan Ayya...
    ////ஆழ்ந்த புலமையையும், எழுதும் திறமையையும் கொண்டு திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்///

    ஆம், ஐயா ஆழ்ந்த புலமையும், எழுதும் திறமையும் அதனை பேரொளியாய் காண்பிக்கும் தெய்வ அருளும் பெற்ற அங்கயற்கண்ணி நமது பார்வதி அவர்கள்.

    பாரதி இலக்கியைப் பயிலக அடுத்த நிகழ்ச்சியிலே இந்த சகோதரியாரை அழைத்து அருமையான தலைப்பை... 'பாரதியும் வேதாந்தமும்' என்றத் தலைப்பைத் தந்து சிறப்புரையாற்றப் பணிக்க உங்களை பணிந்து வேண்டிக் கொள்கிறேன்...

    ReplyDelete
  53. ////kmr.krishnan said...
    அந்தாதிக் கவிஞர் ஹாலாஸ்யம் என்று சொல்லும் அளவுக்கு அந்தாதி பாடியுள்ளார். பாராட்டுக்கள். அந்த 'ஞ'னா விஷயம் கொஞ்சம் படுத்தியது. கூடவே சுய விள‌க்கம் உதவியாக இருந்தது. 'ஞஞ்சை' இதுவரை நான் படித்திராத சொல்தான்.////

    தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார்.

    ReplyDelete
  54. இங்க எனக்கு வாய்ப்பளித்து என்னை எழுதச் செய்த அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றியும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்

    ReplyDelete
  55. //தங்கத்திலே ஒரு குறை என்ற
    தங்கமான பாடலுடன் அமைந்த
    பதிவு மனதை தொட்டதா
    பதிலுக்கு மனதை சுட்டதா..
    விளிம்பின் ஓரத்திலிருந்து
    விண்னை பார்க்கின்றீர்..//

    பெங்களூர் அம்மணி இதற்கு ஓர் உரை எழுதலாம் என்று எண்ணுகிறேன்.பாடலை எழுதியவரைக் கேட்டால் அவர் இன்னும் சிக்கலாக ஒரு பாடலை போட்டு விடுவார்.

    ReplyDelete
  56. kmr.krishnan said...
    இதப் பாருங்க‌ய்யா! ஐ ஏ எஸ் கேள்விகளையும் பதில்களையும் விமர்சித்த‌
    தஞ்சாவூரார் அவர்களே அப்படி ஒரு நகைச்சுவை கேள்வி பதிலை 'காப்பி பேஸ்ட்' பண்ணிவிட்டாரே!///

    காப்பி அடிக்க வேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்க முடியாது.
    தஞ்சை ஐயா ஒரு கர்ம யோகி எனத் தோன்றுகிறது...
    தஞ்சை கோபாலன் அவர்கள் கீதை கோபாலனின்
    "யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே"
    என்னும் போதனையைப் பின்பற்றுகிறார். இது எனக்கு விளங்குகிறது

    ReplyDelete
  57. /////தேமொழி said...
    அருமை, அருமை ஆலாசியத்தின் "சிவன் அந்தாதி" பாடல் அருமை. அந்தாதிக் கவிஞர் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் ....
    இரண்டாம் பத்தி, மூன்றாம் வரியில்
    "அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட" என்பதை "உண்டு" அல்லது "உண்டே" என மாற்றமுடியுமா?
    சேர்த்துப் படிக்கும்பொழுது "ஆலகாலம் உண்ட குமுதவல்லி" என்றும் பொருள் படுகிறது.

    அத்துடன் இறுதி வரியை "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிறதே" என்பதிலிருந்து "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிற சோதியே" அல்லது "எப்பொழுதும் எழில் கொஞ்சுகிற சோதியனே" என்றோ மாற்ற முடியுமா? இவ்வாறு செய்தால் மீண்டும் முதல் வரிக்கு எடுத்துச் சென்று சுழல் முறையில் பாடிக் கொண்டே இருக்கலாம்.

    இடையில் பதவுரை கொடுத்து உதவியதற்கு நன்றி. தமிழில் "ஞா" எனத் தொடங்கும் இத்தனை எழுத்துக்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.////

    "சொல்லில் குற்றமில்லை இருந்தாலும் அது மன்னிக்கப் படலாம் ஆனால் பொருளில் குற்றமிருக்கே!!??" :):):௦)))))))

    ஓ! தாராளமாக மாற்றலாமே... அப்படி இருந்தால் ஓசை நயமும் கூடும் அல்லவா... 'கோவே', 'தரவே' 'உண்டே' என்று வரும் ஏகார ஓசை இன்னும் சிறக்கும்.....

    இப்போது இருப்பதில் அங்கே உண்ட! என்று ஆச்சரியக் குறி இட்டு இருந்தால் தாங்கள் கூறிய சிரமமும் வந்திருக்காது:):)

    அதைப் போலவே ' எப்பொழுதும் எழில்கொஞ்சுகிற சோதியே!' என்பதும் பாடலுக்கு இன்னமும் உண்மையும் விளக்கமும் கொடுக்கும்.. அப்படியும் மாற்றலாம்.



    வாத்தியார் ஐயாவுக்கும் வேண்டுகோள் வைப்போம் மாற்றச் சொல்லி... ஐயா அவர்கள் இத்தனையும் படிக்க அவகாசம் இருக்கா என்றுத் தெரியவில்லை.

    தங்களின் ஆழ்ந்த வாசிப்பை எண்ணியும் இன்னும் இதை எவ்வாறு அழகு செய்யலாம் என்ற விருப்பமும் என்னையும் சந்தோசமடையச் செய்கிறது....

    தேமொழி அல்லவா... தேனினும் இனிய மொழிகளுக்கு சொந்தமான நீங்கள் சரியான வார்த்தையைப் பற்றி எண்ணுவதும் இயல்பல்லவா!! :):):)

    நன்றி! நன்றி! நன்றி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும் நன்றிகள் சகோதரியாரே! தங்களுக்கும் இந்த தம்பியின் வணக்கங்கள்.

    ReplyDelete
  58. kmr.krishnan said...
    //தங்கத்திலே ஒரு குறை என்ற
    தங்கமான பாடலுடன் அமைந்த
    பதிவு மனதை தொட்டதா
    பதிலுக்கு மனதை சுட்டதா..
    விளிம்பின் ஓரத்திலிருந்து
    விண்னை பார்க்கின்றீர்..//

    :):):):):)))) நன்றிகள் கிருஷ்ணன் சார்....


    நான் எங்கள் குரு கோபாலன் ஐயா பக்கம் நின்றுப் பார்த்தேன்!!

    தங்களின் மனம் சுட்டு விடாமல் சுட்டவே மிகுந்த அக்கறைக் கொண்டேன்... புரிந்துணர்வுக்கு மீண்டும் வணக்கமும், நன்றிகளும் சார்.

    ///பெங்களூர் அம்மணி இதற்கு ஓர் உரை எழுதலாம் என்று எண்ணுகிறேன்.பாடலை எழுதியவரைக் கேட்டால் அவர் இன்னும் சிக்கலாக ஒரு பாடலை போட்டு விடுவார்.////

    எனது ஆவலையும், வழிமொழிதலையும் கூறிக் கொள்கிறேன்.

    ஸ்ரீராம நவமியைத் தொடர்ந்த வார மலரில் பக்தி மனம் கமழ்கிறது...

    ReplyDelete
  59. //thanusu said...
    kmrk அவர்களால் நீலகண்டரின் கதையை தெரிந்துக் கொள்ள முடிந்தது.//

    நான் எழுதுவது படிப்பது எல்லாமுமே இப்படி புதிய செய்திகளை அறிந்து கொள்ளவே. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு அவர்களே!

    ReplyDelete
  60. //காரணம் பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் எமக்கு முன்னர் மற்றும் பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் கஷ்ட பாட்டை ( உதவி புரிய ) போக்கவே கால நேரம் இல்லை .

    மேலும் தூரத்தில் உள்ள உறவுககளை காட்டிலும் பக்கத்தில் உள்ள எதிரிதான் முதல் உறவுகள் என்று எங்கையோ கேட்ட ஒரு சொலவடை உண்டு.//

    மற்றவர்களின் ஆக்கங்களுக்குக் கருத்துக் கூற நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் கஷ்டப்பாடு என்ன, அவர்களுடைய துயரைத் தாங்கள் எவ்வாறு போக்குகிறீர்கள் என்று எழுதுங்கள் மாயக்கண்ணன. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்குச் சில‌ருடைய ஆதரவு கூடக் கிடைக்கலாம்.

    ReplyDelete
  61. //இதில்,'த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந?' (நீ உன் சரணகமலங்களை அருள்கூர்ந்து எனக்குக் காட்டினாலும் அதை எந்தக் கண்கொண்டு நான் பார்ப்பேன்?) என்று தீக்ஷிதர் கேட்டதும் அம்பிகை தோன்றி, கண்கொடுத்து அருளினாள் என்பது வரலாறு.//

    இந்த ஸ்தோத்திரத்தை முழுதும் கொடுத்து அதற்குப் பொருளும் ஒரு பதிவாகக் கொடுங்கள் பார்வதி ராமச்சந்திரன் அவர்களே. ஜாதகத்தில் இரண்டாம் இடமான கண் ஸ்தானம் பாதிக்கப்பட்டோர் வாசிக்க வேண்டிய ஸ்தோத்திரம். எனவே இதில் த‌ங்களது ஆற்றலைக் கொஞ்சம் செலவு செய்யலாம். புண்ணியம் உண்டு.
    பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  62. //உங்கள் எழத்துக்கள் பின்னமான பிள்ளையாரை ஆதரிக்கும் நோக்கத்தில் ஆரம்பித்தாலும் மாற்றுத் திறனாளிகளை மனிதாபிமானத்துடன் காணவேண்டிய அவசியத்தை சொல்ல எடுத்துச் சென்றதே ஆக்கத்தின் சிகரம். நல்ல கட்டுரைக்கு நன்றி.//

    தேமொழியின் பாராட்டுக்கள் எனக்கு நல்ல டானிக்.ஏதோ ஒரு சிலராவது கருத்தூன்றிப் படிக்கிறார்களே என்பது மனநிறைவை அளிக்கிறது.நன்றி தேமொழி.

    ReplyDelete
  63. //அது KMRKவுக்குத்தான் சாத்தியம்..ஏன்னா அவருக்குத்தான் சான்ஸ்கிரிட் தெரியும்ன்னு சொல்லியிருக்காரு..//

    அது எப்போ சொன்னேன், மைனர்வாள்? செலெச்டிவ் அம்னீஷியா இருக்கு கொஞ்சம் எனக்கு.

    சமஸ்கிருதம் படிக்கலாம். அவ்வளவுதான். பதார்த்தம்(சொற்களுக்கான பொருள்) உடனே விளங்கிக் கொள்ள என்னால் இயலாது.

    ReplyDelete
  64. //Blogger Thanjavooraan said...

    ஐயா, என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை எனது மகனுடைய கணினியில் எழுதியதால், அது அவருடைய பெயரில் பதிவாகிவிட்டது. அது நான் எழுதியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    அதனால் என்ன? ஏதோ காப்பிரைட் பிரச்சனைபோல் ஒன்றுக்கு இரண்டாகப் பின்னூட்டம, இதற்குப் போய்? உண்மையாகவே உங்கள் மகன் ஸ்ரீதரைப் பின்னூட்டம் இடச்சொல்லுங்கள். ஒரு கை குறையுது இல்லை?

    ReplyDelete
  65. //அப்படி செய்யும் போது அந்த விக்ரகத்திலே ஒரு குறை அவன் கண்களுக்குத் தெரியும் போது அவனின் சிந்தனை கவனம் சிதறும் அங்கே பக்தி பழுது படும் அதனாலே பெரியவர்கள் அதைச் சொல்லி இருக்கலாம்.... இது எனது கருத்து கோபாலன் ஐயாவும் இதையே எண்ணமிட்டு இருப்பார் எனவும் நம்புகிறேன்.//

    //பொதுவாக ஆலயங்களில் குறையுள்ள விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் இல்லை.//

    பின்னூட்டமிட்ட ஹாலாஸ்யம், தஞ்சாவூரார் ஆகியவர்களுக்கு நன்றி.

    ஆவுடையார் கோவிலில் ஆவுடை ம‌ட்டும் உள்ள சிவலிங்கம் வணங்கப்படுகிறது. சில கோவில்களில் சந்த‌னக் கட்டையே தெய்வ வடிவமாக உள்ளது.
    சாதாரணமாக சிவன் கோவிலில் சுயம்பு லிங்கங்கள் எல்லாம் சிவனின் கனவுக்காட்சி கிடைத்து ஊரார் தோண்டும் போது கடப்பாறை/மண்வெட்டி லிங்கத்தில் பட்டு, வெட்டுப்பட்டு உதிரம் வந்தது என்று ஸ்தல புராணம் பேசும். அந்த வெட்டுப்பட்ட காயத்தையும் காட்டுவார்கள்.

    ReplyDelete
  66. //எனது இன்னொரு வேண்டுகோள் எனது இவ்வாரப் பாடலும் தங்களின் அடுத்த ஆக்கத்திற்கு ஒரு பக்கமாகவாது நின்றால் மிகவும் சந்தோசமடைவேன்.//

    எதற்கும் மைனரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடவும்!

    இங்கே இல்லையென்றால் அம்மையாரின் வலைப்பூவிலோ, ஹாலாஸ்யத்தின் வலைப்பூவிலோ வெளியிட்டாலும் சரிதான்.

    ReplyDelete
  67. //தஞ்சை ஐயா ஒரு கர்ம யோகி எனத் தோன்றுகிறது...
    தஞ்சை கோபாலன் அவர்கள் கீதை கோபாலனின்
    "யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே"
    என்னும் போதனையைப் பின்பற்றுகிறார். இது எனக்கு விளங்குகிறது//

    உங்களுக்கு விளங்குகிறது. சரி. மைனருக்கும் விளங்கும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?

    'கர்ம யோகி' பட்டம் கோபாலன்ஜிக்குப் பாராட்டாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும்?எதுவும் பொடி இல்லையே?


    மைனர்வாள் கே எம் ஆர் கேக்கு மட்டும்தான் சஸ்கிருதம் தெரியும்னு சொன்னதற்கு 'இதோ பார் நானும் இருக்கேன்' என்று தேமொழியும் வந்து நின்னு இருக்கார்.

    இப்படியே போச்சுன்னா மைனர் கட்சி மாறினாலும் மாறிவிடலாம்.

    ReplyDelete
  68. /////மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
    முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
    தினவெடுத்த தோளோடு தொடை தட்டி புறப்படுகிறேன்
    ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க ./////

    அருமையான கவிதை...
    பொலி காளையில் புறப்பட்டு
    பூம் பூம் காளை வரை வகைப்
    படுத்தி....

    வாழ்க்கை என்னும் மஞ்சு
    விரட்டை விளக்கியே
    மச்சக்காளையாய் திமில் ஆட
    பவனி வந்த அழகுக் கவிதை...

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete
  69. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப தனுசு அவர்களின் கவிதை அருமை. kmrkஅவர்களின் கட்டுரை நன்று.

    ReplyDelete
  70. //தங்கத்திலே ஒரு குறை என்ற
    தங்கமான பாடலுடன் அமைந்த
    பதிவு மனதை தொட்டதா
    பதிலுக்கு மனதை சுட்டதா..
    விளிம்பின் ஓரத்திலிருந்து
    விண்னை பார்க்கின்றீர்..//


    //பெங்களூர் அம்மணி இதற்கு ஓர் உரை எழுதலாம் என்று எண்ணுகிறேன்.பாடலை எழுதியவரைக் கேட்டால் அவர் இன்னும் சிக்கலாக ஒரு பாடலை போட்டு விடுவார்.////

    திரு.அய்யர் அவர்களின் கவிதையை ஆராயும் தகுதி எனக்கு வேண்டுமே. இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்கிறேன். தங்களின் கட்டுரை அவர் மனதைத் தொட்டதாயினும், கடைசி வரிகளில் மாற்றுத் திறனாளிகளின் நிலை நினைவுக்கு வந்திருக்கும். அதுவே அவர் மனதைச் சுட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் சுழல விட்டிருக்கும் பாடலே அதற்குச் சான்று. பின்னப்பட்ட சிலைகள் என்னும் விளிம்பிலிருந்து, உடலும் உயிரும் மனமும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நிலை என்னும் விண்ணைப் பார்க்க நீங்கள் முயற்சித்திருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  71. என் ஆக்கத்தைப் பாராட்டிய அத்தனை பெரியோர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்கள் பாராட்டுகளுக்கு காரணகர்த்தாவாய் என் உள் இருந்து எழுதுவிக்கும் ஸ்ரீலலிதாதேவிக்கு நமஸ்காரங்கள்.

    அண்ணன் ஆலாசியத்துக்கு,
    தாங்கள் என் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு என்றென்றும் என்னைத் தகுதிப்படுத்துமாறு இறைவியை வேண்டுகிறேன். 'கவிதையைப் பற்றிய கதை'
    தங்களைக் கவர்ந்திருக்கிறது. அன்றொருநாள் ஒருவரது கவிதையை எடுத்தாள்வது பற்றி, உங்களுக்கும் தேமொழிக்கும் நடந்த விவாதத்தில் நான் குறுக்குசால் ஓட்டியது உங்கள் முன் அனுமதியைப் பெறவே.

    தங்கள் பின்னூட்டம் என் கண்ணிலும் நீர் அரும்பச் செய்தது. நன்றி.

    ReplyDelete
  72. புலிகட் தனுசுவின் உண்மை நிகழ்வு அருமை...

    அன்பின் வலிமையை... ஆத்ம பலத்தை நிரூபித்த உண்மை நிகழ்வு.
    நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் வாசித்தேன் அதிலே வரும் ஒரு விளக்கம்.

    ' ஒரு மாது தனியாக வீதியில் பக்கத்தில் இருக்கும் கடிக்குச் சென்று விட்டு வீடு திரும்புவாள்... அப்படி திரும்பும் போது வழியிலே ஒரு நாய் எதிர்த்தாற் போல் வரும் அவளுக்கு பயம் எங்கே நாய் நம்மை கடித்து விடுமோ என்று... உடனே அவள் அவ்வழியே உள்ள ஒருச் சின்னக் கோவிலினுள் சென்று நின்றுக் கொள்வாள் அந்த நாய் அந்த வழியைக் கடந்து சென்ற பின்பு வேக வேகமாக வீட்டில் தனியாக இருக்கும் தூங்கிக் கொண்டு குழந்தையை எண்ணி வேகமாக செல்வாள்...

    வீட்டிற்குள் நுழைந்த போது அந்தக் காட்சியைக் கொண்டு அதிர்ந்தாள்... குழந்தை தொட்டிலில் இருந்து கீழிறங்கி அமர்ந்து குறுகுறு என்று தனக்கு முன்பே படமெடுத்து நிற்கும் பாம்பையேப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த அந்தத் தாய் விரைந்துச் சென்று அங்கே இருக்கும் பாம்பை வெகுவேகமாக தனது கையால் பிடித்து தூக்கி எறிந்துவிட்டு தனது குழந்தையை தூக்குகிறாள்...

    வழியில் வரும் ஒரு நாயிக்கு பயந்து போனவள்... தனது உயிருக்கு மேலான குழந்தைக்கு ஒரு ஆபத்து என்ற உடன் தனது அன்பின் மிகுதியால், முழு ஆத்ம பலத்தையும் உபயோகம் செய்து அந்தப் பாம்பையும் எதிர் கொண்டால் என்பது தான் அது. ஆத்மா வின் வலிமையை குறிக்க சொன்னக் கதை...

    அதை உண்மையாக இங்கே கூறக் கேட்கிறேன்...

    அருமை புலிகட் தனுசு அவர்களே. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  73. //இந்த ஸ்தோத்திரத்தை முழுதும் கொடுத்து அதற்குப் பொருளும் ஒரு பதிவாகக் கொடுங்கள் பார்வதி ராமச்சந்திரன் அவர்களே.//
    கண்டிப்பாக முயற்சி எடுக்கிறேன். என் கைவசம் உள்ள பழைய புத்தகத்தில் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், கண்டிப்பாக விரைவிலேயே வலையேற்றுகிறேன். எனக்குத் தெரிந்த கண்பார்வைக்குரிய ஒரு ஸ்லோகம், சௌந்தர்ய லஹரியில் உள்ள 52 வது ஸ்லோகம். " கதே கர்ணாப்யர்ணம் எனத் துவங்கும் இந்த ஸ்லோகம் கண் நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடையது. ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னமும் சொல்லலாம்.

    ReplyDelete
  74. அய்யர் said
    தப்புக்களை பட்டியலிட்டு
    தவறுகளை சுட்டி சீரியலே நடத்திட்டீங்க
    - சபாஷ் அ முருகன்
    தேமொழி said...

    ஆஹா..ஆனந்த முருகன் எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? உண்மையில் 'கதையின் நீதி' நன்றாகவே சிரிக்க வைத்துவிட்டது.

    kmr.krishnan said...

    தமிழில் எழுதுவதின் வீச்சைப் பார்த்தீர்களா ஆனந்தமுருகன்? எப்படி எழுத்து நடையில் ஓர் ஓட்டம் கிடைக்கிறது பாருங்கள். நல்ல திறனுள்ளது. தொடர்ந்து தமிழில் நிறைய எழுதுங்கள். பாராட்டுக்கள்.


    minorwall said...

    ஆனந்தமுருகன் நேரேஷன் அருமை..வரிகளுக்கு ஆங்காங்கே சற்று இடைவெளி விட்டு அமைத்திருந்தால் படிக்க,புரிந்துகொள்ள இன்னும் வசதியாக இருந்திருக்கும்!!!


    நன்றிகள்!!மைனர்,நானும் உணர்த்தேன்.வரும் காலங்களில் மாற்றிகொள்கிறேன்.நன்றி திரு.அய்யர்,kmrk,தேமொழி,கலை மற்றும் அனைவருக்கும்

    ReplyDelete
  75. kmr.krishnan said...

    //காரணம் பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் எமக்கு முன்னர் மற்றும் பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் கஷ்ட பாட்டை ( உதவி புரிய ) போக்கவே கால நேரம் இல்லை .

    மேலும் தூரத்தில் உள்ள உறவுககளை காட்டிலும் பக்கத்தில் உள்ள எதிரிதான் முதல் உறவுகள் என்று எங்கையோ கேட்ட ஒரு சொலவடை உண்டு.//

    மற்றவர்களின் ஆக்கங்களுக்குக் கருத்துக் கூற நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் கஷ்டப்பாடு என்ன, அவர்களுடைய துயரைத் தாங்கள் எவ்வாறு போக்குகிறீர்கள் என்று எழுதுங்கள் மாயக்கண்ணன. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்குச் சில‌ருடைய ஆதரவு கூடக் கிடைக்கலாம்
    ரொம்ப குசும்புதான்!!மாயகண்ணனுக்கு சந்தராஷ்டமோ? kmrk sir இன்று பீக்கில் இருப்பது போல் தெரிகிறது!

    ReplyDelete
  76. கடந்த நாலு நாட்களாக அலுவலகத்தில் personality development Training.திரு.சோம.வள்ளியப்பன் அவர்கள் தலைமையில்,இவர் அனைத்து முன்னணி டிவி கலில் பொருளாதாரம் பற்றிய பேட்டிகளில் பங்குகொள்பவர்,சினிமா டைரக்டர் வசந்தின் சகோதரர்.வியாழக்கிழமை உணவு இடைவேளையின் போது அவருடன் பேசியபோது நமது வகுப்பறை பற்றி சொல்லியபோது,யார் எழுதுவது எனக்கேட்டார்.நான் நமது தானை தலைவர் சுப்பையா அய்யா பேரை சொல்ல அவரா!எனக்கு reliance sorry,close Relative தான் எனக்கூறி,அவரிடம் பேசலாமா? எனக்கேட்டார்.நான் சார் நீங்க யாருக்காவது போன் போடபோறிங்க!!என சொல்லி என் போன்னிலிருந்து(3G)வகுப்பறையை வரவைத்து காட்டினேன்.இவர்தான் என்று ரிங் போட எதிர்முனையில் வாத்தியார்...வள்ளியப்பன் நான் இங்கு************ MNC இல் trianing இல் இருக்கிறேன்,ஆனந்தமுருகன் என்பவர் உங்களுடன் பேச விரும்புகிறார்,எனக்கூற,அவர் பேச நான் பேச ஒரே பேச்சுதான்!அதை பற்றிய தொகுப்பு பின்னர் வரும்.பிறகு அய்யா போன் நம்பர் வாங்கி கொண்டேன்.9********************4 இது தான்.

    ReplyDelete
  77. //தஞ்சை ஐயா ஒரு கர்ம யோகி எனத் தோன்றுகிறது...
    தஞ்சை கோபாலன் அவர்கள் கீதை கோபாலனின்
    "யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே"
    என்னும் போதனையைப் பின்பற்றுகிறார். இது எனக்கு விளங்குகிறது//

    உங்களுக்கு விளங்குகிறது. சரி. மைனருக்கும் விளங்கும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?//

    முதலில் தேமொழிக்கு ஒரு பெரிய வரவேற்பு. தமிழின் பால் எனக்கு மிகப்பெரிய காதலே இருக்கிறது என்றாலும் வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்தின் பால் உள்ள பற்றுதலே அதனை எடுத்தாளத் தோன்றுகிறது. இதன் பெருமையையும் பலர் உணர வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வதை தேமொழி தொடங்கி வைத்துவிட்டார். அவருக்கு என் நன்றி.

    ஆனால் தேமொழி, ஸ்லோகங்களோடு, பொருளையும் சேர்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
    உதாரணமாக, தாங்கள் தந்த ஸ்லோகத்தின் பொருள் ' உயர்ந்த மனிதர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எதைப் பிரமாணமாக்குகிறார்களோ அதையே தொடர்கிறார்கள்' என்பது.

    இது ஊரோடு ஒத்து வாழ் என்பதன் விரிவாக்கம் போலத் தோன்றினாலும், பெரியவர் தஞ்சாவூரார் கூறியதன் காரணம், ஆகம முறைப்படி, பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தியூட்டப்பட்ட விக்ரகம் பின்னப்பட்டால் அதன் சக்தி போய் விடுவதாகக் கருதப்படுவதால் இருக்கலாம் என்பது எனது கருத்து. ஆகமங்கள் அப்படித்தான் சொல்லுகின்றன. ஆனால், அதே கீதையில்,

    வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
    ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: |

    (பொருள்)
    கல்வியறிவு படைத்த அந்தணனிடத்தும், பசுவினிடத்தும், யானையிடத்தும், நாயிடத்தும், நாயைப்புசிக்கும் புலயனிடத்தும் பண்டிதராகப் பட்டவர் சமபார்வையுடையவர். இந்தக் கூற்று, திரு. கே.எம்.ஆர் அவர்களின் கருத்துக்கு வலுச் சேர்க்கிறதாக அமைகிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். தவறெனில் பெரியவர்கள் பிழை பொறுக்கக் கோருகிறேன்.

    ReplyDelete
  78. //வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்தின் பால் உள்ள பற்றுதலே ....//

    பேச்சு வழக்கு மறைந்த சமஸ்கிருதம் என்பதுதான் சரியாக இருக்கும். இலக்கியச் செம்மொழியாக சமஸ்கிருதம் இன்றளவும் உலகளவில் நிலைத்து உள்ளது.

    கேரளத்தில் பிராமண‌ர் அல்லாதவர்களும் சமஸ்கிருதம் நன்கு அறிவர்.மலையாளத்தில் பல சொற்களும் சமஸ்கிருதச் சொற்களே.கர்நாடகத்தில் மாட்டூர் என்ற ஊரில் அனைத்து மக்களும் சமஸ்கிருதத்திலேயே உரையாற்றுகின்றனர்.

    கேரளத்தில் சுவாமி விவேகானந்தர் பயணம் செய்த போது அவருடன் உரையாட ஒரு பெண்மணி விரும்பினாளாம். "எனக்கு மலையாளம் பேசத் தெரியாதே;ஆங்கிலத்தில் பேசுவோமா?"என்றாராம் சுவாமிஜி. "எனக்கு ஆங்கிலம் தெரியாதே!" என்றாளாம் அந்தக் கேரள‌ மாது.அதன் பின்னர் இருவருக்கும் சமஸ்கிருதம் தெரியும் என்று புரிந்து கொண்டு இருவரும் சமஸ்கிருதத்திலேயே உரையாடினார்களாம்.

    சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தவர் யார் தெரியுமா?
    டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்! அவர் சமஸ்கிருதம் நன்கு அறிந்தவர்.
    நாராயணகுரு சமஸ்கிருதத்திலேயே புத்தகங்கள் எழுதியுள்ளார்.அவர்கள் பிராமணர்கள் அல்லர்.

    ReplyDelete
  79. //ரொம்ப குசும்புதான்!!மாயகண்ணனுக்கு சந்தராஷ்டமோ? kmrk sir இன்று பீக்கில் இருப்பது போல் தெரிகிறது!//

    ஆகா! இப்படி ஒரு பிட்டைப் போடுறாரே ஆனந்தமுருகன்.குசும்பு இப்போ ஆருக்குன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?

    "வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்குதாம் பித்தம்."

    ReplyDelete
  80. அய்யர் மொழிந்தது...

    ////பெங்களுரு சகோதரியார்
    பெஸ்ட்டாக தந்த படைப்பு

    இரண்டு பக்கத்தையும் காட்டி
    இன்சொல்விரும்பி ஆலாசியம்

    படைப்பையும் தொட்டது (3)
    பாதிப்பையும் ஏற்படுத்தியது
    - வணக்கமும் வாழ்த்துக்களும் ////

    மிக்க நன்றிகள் ஐயா!
    தங்களைப் போன்றோர் ஆசி என்னை அங்கே அழைத்துச் செல்லவேண்டும் என்பதே எனது விருப்பமும்.
    கருத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  81. ////minorwall said...
    பார்வதி அவர்கள் என்னன்னமோ எழுதுகிறார்..அண்ணன் ஆலாசியத்தை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுவிட்டார் பார்வதி..

    ஏற்கனவே அவர் எழுதுகிற ஆன்மீகப் பாடல்களை சுத்தமாகப் புரியாத நிலையில் எப்போது கொஞ்சம் நிஜவுலகத்து விஷயங்கள் பற்றி எழுதுவாரோ என்று நினைத்திருந்த வேளையில் இப்படிப் போட்டுத் தாக்கிவிட்டாரே பார்வதி..என்னத்தச் சொல்றது போங்க?இனி டாப் கியர்லே போவாரே..நான் கமென்ட் அடிக்குறதை நிறுத்திட வேண்டியதுதான்..////

    சகோதரர் மைனரின் கருத்தும் உண்மைதான் மகான்கள் சொல்லிய கருத்துக்களை மனதில் கொண்டு (மனதில் எங்கு இருக்கிறது என்றும் எதுவும் தெரியவில்லை... எங்கோ இருக்கிறது) கவிதையை எழுத முயலும் போது... அது யாவரும் கலந்து பேசும் பேருண்மைப் பொருளாக இருக்கிறது. அதனால் அது சுவாரஸ்யமாகி விடுகிறது...

    நமது சகோதரியார் சொன்னது மகான்களை மாத்திரமே... அவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் எளியப் பாடல் என்பதால் தேங்காயோடு குடுமியும் வருவது போல் இருந்தும் அது தெய்வ சன்னதியில் பூஜையின் போது போகவேண்டிய இடத்திற்குப் போய்விடும் :):):)

    தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்...

    தங்களின் கருத்திற்கும் அன்பிற்கும், உரிமைக்கும் எனது நன்றியும், வணக்கங்களும்...

    ReplyDelete
  82. //அவர் பேச நான் பேச ஒரே பேச்சுதான்!அதை பற்றிய தொகுப்பு பின்னர் வரும்.//

    தொகுப்பு எப்போ வரும்?கிணறு வெட்டிய பின்னர்தான் தாகம் தீரணுமா?
    சுடச்சுட எழுதுங்கள் ஆனந்த முருகன்!

    ReplyDelete
  83. எனது ஆக்கங்களைப் பாராட்டிய அனைவருக்கும்.... எனது பணிவான நன்றிகள்... பதிவிட்ட ஆசிரியருக்கு மீண்டும் நன்றிகள்.
    மிகவும் அற்புதமான பெரியவர்களின் வரலாற்றோடு கூடியக் பெருன்மைக் கருத்துக்களை எல்லாம் கூறி
    எனது பாடல் தாங்கியப் பொருளையும் தாங்கள் அழகுறச் சொன்னது என்னை இன்னும் எங்கோ (மைனோர் சொன்னது போல்)
    அல்ல அன்னையின் கருணையை நினைத்து சந்தொசப்படச் செய்கிறது...
    சகோதரி பார்வதி அவர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  84. //ஜெயலக்ஷ்மி முத்து said...

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப தனுசு அவர்களின் கவிதை அருமை. kmrkஅவர்களின் கட்டுரை நன்று.//

    கே எம் ஆர் கேயை நீங்கள் இப்படி சிறிய வயதிலேயே பாராட்டியிருந்தா அவர்
    எங்கியோ போயிருப்பாரே! பல்லும் போய் சொல்லும் போய் உட்கார்ந்து இருக்கும் போது பாராட்டினல் என்ன பாராட்டா விட்டால் என்ன?

    எப்படியோ பின்னூட்டத்திற்கு வீட்டிலிருந்தே ஒரு ஆளைச் சேர்த்துட்டோமில்ல?!!!ஹி ஹி ஹி ஹி!

    ReplyDelete
  85. @kmr.krishnan.....
    @பார்வதி....
    நான் சொல்ல வந்தது தஞ்சை ஐயா அவர்களின் நகைச்சுவை தொகுப்பு பற்றிய KMRK அவர்களின் கருத்துக்கு பதில் (வணங்கும் சிலையைப் பற்றியது அல்ல).
    தஞ்சை ஐயா காப்பி அடிப்பதற்காக அந்த நகைச்சுவைத் தொகுப்பைத் தேர்தெடுக்கவில்லை. ஆனால் பிறர் மனம் புண்படாத வகையில் நகைச்சுவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டுவதற்காக அந்த தொகுப்பைத் தேர்ந்தெடுத்து உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார் என விளக்க முயன்றேன்.

    எனக்கு சமஸ்கிரதம் தெரியாது ..."உதாரணமாக வாழ்ந்து காட்டு" எனத் தேடிய பொழுது கூகிள் உதவியில் கிடைத்த தகவல் அது. பொருளும் உடன் கொடுக்கப் பட்டாலும் அதையும் கூடவே கொடுப்பதைத் தவிர்த்ததற்கு காரணம் KMRK ஐயா அவர்களுக்கு மட்டும் புரிந்தால் போதும் என நினைத்ததுதான். எல்லோருக்கும் புரிய வேண்டும் என நினைத்திருந்தால் தமிழிலோ ஆங்கிலத்திலோ சொல்லியிருப்பேன். அப்படி சொன்னால் யாருக்காவது மன வருத்தம் ஏற்படலாம் எனத் தவிர்த்தேன்.

    சீக்கியர்கள் பற்றிய நகைச்சுவை துணுக்குகள் ஒருமுறை மாணவர் மலரில் ஏற்படுத்திய விவாதம் மனதில் தோன்றியது. மற்றபடி தஞ்சை ஐயா அவர்களின் பின்னப்பட்ட சிலை பற்றிய கருத்தைக் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை, அது அவர் தன் சொந்த விருப்பத்தைச் சொன்னார். இதுவரை அவர் எழுதியது எதுவானாலும் (கருத்துக்கள் மற்றும் ஆக்கங்கள்) யார் மனதையும் பாதிக்காதவண்ணமே இருந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

    ReplyDelete
  86. திரிபங்கி என்று கிருஷ்ணர் பெயருக்கு மூன்று இடத்தில் வளைவு,(பங்கம்)உள்ளவர் என்று பொருள். நான் ஆங்கில(bend) 'பெண்டை'ச்சொன்னேன்.
    அது பெண்கள் என்று தமிழில் பொருள் கொள்ளப் பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  87. //இதுவரை அவர் எழுதியது எதுவானாலும் (கருத்துக்கள் மற்றும் ஆக்கங்கள்) யார் மனதையும் பாதிக்காத வண்ணமே இருந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.//

    அப்படியா? நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் தேமொழி அவர்களே!

    ReplyDelete
  88. //பேச்சு வழக்கு மறைந்த சமஸ்கிருதம் என்பதுதான் சரியாக இருக்கும். இலக்கியச் செம்மொழியாக சமஸ்கிருதம் இன்றளவும் உலகளவில் நிலைத்து உள்ளது. //

    தாங்கள் கூறியது உண்மையே. இங்கு கர்நாடகாவில், சம்ஸ்கிருதத்தில் பெரும்பாலோர் உரையாடுகிறார்கள். சிருங்கேரி மடத்தில் ஒருமுறை பூஜை செய்யும் பாக்கியம் கிட்டியபோது உடன் பூஜை செய்த மாமி, சம்ஸ்கிருதத்தில் வெளுத்து வாங்கியபோது நான் மரியாதையாக (திரு திரு) விழித்தேன்.

    //தேமொழி said...
    @பார்வதி....
    நான் சொல்ல வந்தது தஞ்சை ஐயா அவர்களின் நகைச்சுவை தொகுப்பு பற்றிய KMRK அவர்களின் கருத்துக்கு பதில் (வணங்கும் சிலையைப் பற்றியது அல்ல). //

    தவறு என்னுடையதுதான், திரு.கே.எம்.ஆர். அவர்களின் பின்னூட்டத்தையும் சேர்த்து படித்ததால் தவறாகப் பொருள் கொள்ள நேர்ந்தது. தயவு செய்து மன்னிக்கக் கோருகிறேன்.

    ReplyDelete
  89. ஆனந்த முருகனின்

    "நல்லதொரு குடும்பம் பல்கலை தகறாறு " செம ஜாலி

    " பக்தா நேற்று இரவிலிருந்து நீ கற்பமாய் இருக்கிறாய்"என்று ஒரு குண்டை தூக்கி போட்டீரே சூபர் , பிரசவத்தில் சுகப் பிரசவம் இல்லை ஆகவே ஆபேரஷன் அப்படின்னு பெரிதாய் எதாவது நடந்து ,ஆபெறேஷன் முடிந்ததாலே நீ ஜென்மத்துக்கும் இபாடித்தான் என்று இன்னுமொரு அணுகுண்டை போட்டால்....

    "ஒரு வேலை எறும்பு புத்துக் குள் கையை விட்டோமோ"?

    "அதுங்க முதலில் பிள்ளைகளே இல்லை உங்களோட வகையறா'

    ""கிழிச் சிடுவீங்க ,அவனை மேலும் வெறுப்பேற்ற சீரியலில் மூழ்கினால்"

    இந்த வசனங்கள் எல்லாம் அனைவரின் வீட்டிலும் நடக்கும் நல்ல கற்பனை. ரசித்து சிரிக்கும் படியாக இருந்தது.

    ReplyDelete
  90. சபரியின் அன்பளிப்பு அருமை.

    ReplyDelete
  91. அய்யர் said...வகுப்பறையின் ஆஸ்தான கவியே
    வரிப்புலி எனும் தமிழ் புலியே....

    என்னை ஆஸ்த்தான கவிஞர் ஆக்கியதும் நீங்கள் தான் இன்று வரிப் புலி என்று வீரனாக்குவதும் நீங்கள் தான் .

    அய்யர் said..தமிழுக்கும் உங்கள்
    தைரியத்திற்கும் சிரம் வணங்கும்...

    ஜல்லிக் கட்டினை
    தமிழில் கட்டி

    அன்பில் கட்டி
    அளப்பரிக்கும் அன்பிற்கு
    நன்றிகள் 3 தனுசுக்காரரே..

    நீண்ட பாராட்டுக்கு நன்றிகள் அய்யர் அவர்களே.

    ReplyDelete
  92. Parvathy Ramachandran said...கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்கள் எப்போதும் பாயசத்தில் முந்திரி போல.
    வாழ்க்கையே ஒரு விளையாட்டு மைதானம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    தாங்கள் ,போன்றோரின் வாழ்த்துக்கள் இருக்கும் வரை நான் என்றும் வெற்றி பெற்ற வனாகவே இருப்பேன்.

    மிக்க நன்றிகள் பார்வதி அவர்களே.


    எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. மேலும் தாங்கள் எழுதும் ஆக்கங்கள் எனக்கு புரிவதில்லை. இப்படி சொன்னதற்கு மன்னிக்கவும் .அதாவது தாங்கள் எழுதுவது மட்டும் அல்ல யார் எழுதினாலும் எனக்கு புரியாது.

    "பார்வதி அவர்களின் ஆக்கம் நன்று" "அருமை" என்று இரண்டு வார்த்தையில் பின்னூட்டம் அனுப்பி விட்டு அமர்ந்து விடுவது எனக்கு கூச்ச மாகவே இருக்கிறது.

    தாங்களின் ஆக்கங்கள் வெளியான பின் அதற்கு வரும் பின்னூட்டங்கள் படிப்பேன் அப்போது, இவர் மிகப் பெரிய விஷயதாரி என்று மட்டும் புரிந்துக் கொள்வேன்

    எனக்கு புரியவில்லை ,தெரிய வில்லை என்பதால் தாங்கள் தங்களை சுருக்கிக் கொள்ளவேண்டாம். எப்போதும் போல் ஆக்கங்கள் அனுப்பிக் கொண்டே இருங்கள் .

    இறைத்துக் கொண்டே இருந்தால் தான் நீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  93. kmr.krishnan said...
    பார்வதி அம்மையார் உண்மையில் வகுப்பறையின் கற்றுணர்ந்த முத‌ல் மாணவிதான்.உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.பாராட்டுக்கள்.

    kmrk அவர்கள் மிகப் பெரிய கட்டுரையாளர், விமர்சகர். நான் சொல்ல வந்ததை அவர் சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  94. தேமொழி said... "வேலிதாண்டும் காளைகள்" என்பதை வேலிதாண்டும் "முரட்டுக்" காளைகள் என மாற்றி...

    "தினவெடுத்த தோளோடு "கோயில்காளையாக" தொடை தட்டி
    புறப்படுகிறேன் ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க"

    என்றும் மாற்றினால் மேலும் இரண்டு காளைகள் கவிதைக்குள் கிடைக்காதா? :)))))))))
    -----

    ஆஹா.... மாற்றினால் போகுது. நான் இன்னும் மூறு பாராக்கள் எழுதி இருந்தேன் .மிகவுன்ம நீளமாக இருந்ததால் பனிரெண்டு வரிகளை நீக்கி விட்டேன்.

    பொலி, புளிக்குளம், இருச்சாளி, காங்கேயம், மணப்பாறை, சில்லி, என்பது அந்தந்த காளைகளின் ஜாதிப் பெயர்கள்.

    நன்றிகள் தோழி அவர்களே.

    ReplyDelete
  95. தேமொழி said... வீரக்குல வழித்தோன்றல் உங்களுக்கு இல்லாத தகுதியா? ஆனால் எண்கணிதம் என்ன சொல்கிறது? :))

    பெயர் மாற்றிக் கொள்ளவா என்று சும்மா தமாசுக்கு கேட்டேன். ஏற்கனவே உண்மையான பெயரை மறைத்து புனைப் பெயரில் இருக்கிறேன்.

    ஆனால் தனுசு என்ற பெயரை மாற்றலாமா? எனும் எண்ணத்தில் இருக்கிறேன்.

    ஏன் என்றால் ஜோதிடம் அறிந்துக் கொண்டு ஜோதிடம் சம்பந்தமாக கேள்விகள் கேட்க ஆசைப் பட்டுத்தான் ஜோதிட சம்பந்தமாக என் ராசியின் பெயரை வைத்தேன் .இப்போது கதை கவிதை என்று வளர்வதால் (என்ன ஒரு அப் கிரேட் பாருங்க) நல்ல தமிழ் பெயராக வைத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன் .

    ReplyDelete
  96. //எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. மேலும் தாங்கள் எழுதும் ஆக்கங்கள் எனக்கு புரிவதில்லை. இப்படி சொன்னதற்கு மன்னிக்கவும் .அதாவது தாங்கள் எழுதுவது மட்டும் அல்ல யார் எழுதினாலும் எனக்கு புரியாது.

    "பார்வதி அவர்களின் ஆக்கம் நன்று" "அருமை" என்று இரண்டு வார்த்தையில் பின்னூட்டம் அனுப்பி விட்டு அமர்ந்து விடுவது எனக்கு கூச்ச மாகவே இருக்கிறது. //

    நன்றி தனுசு. உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் சொன்னதற்கு நன்றி. உண்மையில் அதில் என் தவறும் உள்ளதே. நான் நிறைய எளிமையாகவும் எழுத வேண்டும். அடுத்த வாரம் இம்முறையில் எழுத முயற்சி செய்கிறேன். அப்புறம், இந்த 'அவர்களே' வேண்டாம். அண்ணன் ஆலாசியம் கூறுவது போல, இது ஒரு சுவராக நிற்கிறது. நன்றி தனுசு.

    ReplyDelete
  97. ///thanusu said...
    இப்போது கதை கவிதை என்று வளர்வதால் (என்ன ஒரு அப் கிரேட் பாருங்க) நல்ல தமிழ் பெயராக வைத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன் .///

    பெயரை மாற்றினால் எந்த வெளிநாட்டினருக்கும் வாயில் நுழையும் பெயராக வையுங்கள். குறிப்பாக புகழேந்தி போன்று ழ ...ழி.. உள்ள தமிழ்ப் பெயரைத் தவிர்க்கவும். எனக்குத் தெரிந்தவரை "ராஜா" என்ற பெயர்தான் உலகில் அனைவருக்கும் சுலபமாக சொல்லவருகிறது. ஆங்கிலேய ஆட்சியினால் விளைந்த பக்க விளைவு அது.

    இல்லாவிட்டால் வெளிநாட்டு விமான நிலையத்திலேயே ஆரம்பிக்கும் தகராறு. அவர்கள் உங்களைக் கூப்பிட, உச்சரிப்பு வேறு பெயர் போல இருப்பதால் நீங்கள் பராக்கு பார்க்க, அவர்கள் உங்களுக்கு காது கேட்கவில்லை என நினைக்க எனத் தொல்லை தொடரும்.

    பிறகு அவர்கள் உங்கள் அழகு தமிழ்ப் பெயரை செய்யும் கொலையைப் பார்த்து, நீங்களும் சிக்கல் சண்முகசுந்தரம் ஜில் ஜில் வாசிக்கும் நாயனத்தைக் கேட்ட பின் "ஐயோ ஜில்லு எனக்கு நாயனமே மறந்து போய்டும் போலிருக்கு" என்று சொல்வது போல, நீங்களும் ஐயோ எனக்கு தமிழே மறந்து போய்டும் போலிருக்கு என வருந்த வேண்டியிருக்கும். எனவே என் பெயர் போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை தவிர்ப்பதே அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பதை கருத்தில் கொள்க.

    ReplyDelete
  98. kmr.krishnan said... காளைகள் எத்தனை காளைகளடா! காளைகளின் பட்டியல் கொடுத்தது அபாரம்.
    தனுசுவின் இதுவரை வந்த கவிதைகளில் இதற்கே முதலிடம்.வாழ்க.வளர்க!

    minorwall said...இதுவரை வந்த கவிதையிலே இதற்கே முதலிடம் கொடுக்க முடியும்..
    வாழ்க..'புலிகட் தனுசு'..

    எல்லாம் தாங்களின் ஊக்கம் கொடுக்கும் மேலான பின்னூட்டங்களே காரணம்

    நன்றிகள் kmrk, minor அவர்களே.

    எனது superintendent புதிதாக வந்த diver களை ஆறுமுகப் படுத்தி பேசிக் கொண்டு இருந்தோம் mess hall லில் .இவர்கள் ஹாலந்து நாட்டை சேர்ந்தவர்கள் . ஜல்லிக்கட்டு விளையாட்டை இவர்கள் யு டியுப் பில் பார்த்திருக்கிறார்கள். அதைப் பற்றி பேச்சு திரும்பியது. அப்போதுதான் சரி இந்த வாரம் ஜல்லிக்கட்டைப் பற்றி எழுதி ஒரு செய்தியை வைக்கலாம் என்று எழுதினேன்.

    ReplyDelete
  99. Kalai said... @தனுசு, கவிதை மற்றும் புலிகட் அனுபவங்கள் , அதை நீங்கள் கொடுத்திருந்த விதம் வழக்கம் போல் நன்று.

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் கலை.

    ReplyDelete
  100. kmr.krishnan said... புலிச் சம்பவம் கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும், நடந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது. நம்பவும், நம்பாமலும் உள்ள மனநிலைதான் எனக்கு.........

    நபித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இலை. "தருமி நாகேஷ்" சொல்வது போல் எவ்வளவு குறைத்து நம்ப முடியுமோஅவ்வளவு நம்பினால் போதும்.

    இதில் "லாஜிக்" பார்த்தால் நடந்த "மேஜிக்" தெரியாது.

    என்னை ஒருவன் கொலை செய்யும் வெறியோடு விரட்ட நானோ உயிர் பயத்தில் ஓட ஓட குறுக்கே ஆறடி சுவர் வந்து மறைத்தால் ,நிற்கவா போகிறேன் , உயிர் மேல் ஆசைகொண்டு ஒரே ஜம்ப்' செய்து தாண்டி விடுவேன் .அதுவே சாதா நேரத்தில் தாண்ட சொன்னால் தாடையை சொறிந்துக் கொண்டு தான் நிற்பேன்.

    kmr.krishnan said... இந்தியப் புலிகள் வளர்ந்த நிலையில் 306 கிலோகிராம் உள்ளனவாம். 11 அடி நீள‌ம். வாலுக்கு 3 அடிகள் தள்ளிவிட்டாலும் 8 அடிகள் உடல் நீளம் கொண்டவை.

    இருக்கலாம். ஒருவேளை சைசில் சின்னதாகவோ , குட்டிப் புலியாகவோ கூட இருக்கலாம். அந்த புலித்தோல் என் பெரியப்பாவின் வீட்டில்தான் இருந்தது. நானும் பார்த்திருக்கிறேன் ,அத்தனை சின்னது என்று சொல்ல முடியாது.

    இது நடக்கும் பொது என் தந்தைக்கு சுமார் பத்து வயது இருக்கும் . எனக்கு ஆறு எழு வயது நடக்கும் போது தான் அவர் இறந்தார். அனால் வயலில் அறுவடை முடிந்தபின் நெல் மூட்டைகளை வீட்டுக்கு கொண்டு வரும் போது ஆட்களோடு ஆளாக என் தாத்தாவும் ஒரு மூட்டை நெல் தலையில் தூக்கிக் கொண்டு , வரப்பு, வாய்க்கள்,தாண்டி வந்துள்ளார் .இதனை நானே பார்த்துள்ளேன்.

    kmr.krishnan said...தாத்தா(அப்போது அவரும் இளைஞராக இருந்திருக்கலாம்)செய்துள்ளது ஒரு உலக ரிகார்ட். ஏதாவது ஆதாரம் இருக்கலாம்.

    இல்லை கிருஷ்ணன் சார்.கொல்லப் போகிறேன் என்று திட்டமிட்டுக் கொண்டு போனால் போட்டோ கிராபரை கொண்டு போகலாம் . இது விபத்து மாதிரி அல்லவா நடந்தது.

    ஒரே ஆதாரம் அந்த புலித்தோல் தான். அதுவும் என் பெரியப்பா வீட்டில் இருந்தது. இந்நேரம் என்ன ஆனது என்றே தெரிய வில்லை.

    இந்த புலிக்கட் செய்தியை இன்னும் என் மகளிடம் கூட சொன்னதில்லை . அதற்க்கான நேரம் சந்தர்ப்பம் வராததே காரணம்.

    புலிக்கட் பெயரை நீங்கள் சும்மானாச்சுக்கும் சொன்னாலும் உண்மையில் எலிகட் தான்.

    நன்றிகள் கிருஷ்ணன் சார், ஆக்கத்தில் தவறிய சில செய்திகளை பின்னூட்டத்தில் சொல்லி உள்ளேன்

    ReplyDelete
  101. kmr.krishnan said... உங்கள் மகன் ஸ்ரீதரைப் பின்னூட்டம் இடச்சொல்லுங்கள். ஒரு கை குறையுது இல்லை?

    ஜெயலக்ஷ்மி முத்து said...

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப தனுசு அவர்களின் கவிதை அருமை. kmrkஅவர்களின் கட்டுரை நன்று.//

    கே எம் ஆர் கேயை நீங்கள் இப்படி சிறிய வயதிலேயே பாராட்டியிருந்தா அவர்
    எங்கியோ போயிருப்பாரே! பல்லும் போய் சொல்லும் போய் உட்கார்ந்து இருக்கும் போது பாராட்டினல் என்ன பாராட்டா விட்டால் என்ன?

    kmr.krishnan said... எப்படியோ பின்னூட்டத்திற்கு வீட்டிலிருந்தே ஒரு ஆளைச் சேர்த்துட்டோமில்ல?!!!ஹி ஹி ஹி ஹி!

    ஸ்ரீ தார் வர தாமதமானதால் நீங்களே ஆட்டத்திற்கு ஒரு கையை சேர்த்து விட்டர்கள் போலிருக்கே

    ReplyDelete
  102. ஜி ஆலாசியம் said... வாழ்த்துக்கள் கவிஞரே!

    நன்றிகள் ஆலாசியம்.

    ஜி ஆலாசியம் said..ஒரு மாது தனியாக வீதியில் .................

    ஆத்மாவின் வலிமையை குறிக்க சொன்ன கதை அருமை. மனதை தொட்டது.

    பகிர்வுக்கு நன்றிகள் ஆலாசியம்.

    ReplyDelete
  103. ///ஆம், ஐயா ஆழ்ந்த புலமையும், எழுதும் திறமையும் அதனை பேரொளியாய் காண்பிக்கும் தெய்வ அருளும் பெற்ற அங்கயற்கண்ணி நமது பார்வதி அவர்கள்.//

    ஆமாம்.. ஆமாம்..


    //பாரதி இலக்கியைப் பயிலக அடுத்த நிகழ்ச்சியிலே இந்த சகோதரியாரை அழைத்து அருமையான தலைப்பை... 'பாரதியும் வேதாந்தமும்' என்றத் தலைப்பைத் தந்து சிறப்புரையாற்றப் பணிக்க உங்களை பணிந்து வேண்டிக் கொள்கிறேன்...///

    சரிதான்.. ஆனால் தலைப்பில் தான் ... மீண்டும் அய்யர் அந்தப்பக்கமா .. என வியக்காமலிருக்க மௌனம் சாதிக்கின்றோம்,

    ReplyDelete
  104. //திரு.அய்யர் அவர்களின் கவிதையை ஆராயும் தகுதி எனக்கு வேண்டுமே. இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்கிறேன். தங்களின் கட்டுரை அவர் மனதைத் தொட்டதாயினும், கடைசி வரிகளில் மாற்றுத் திறனாளிகளின் நிலை நினைவுக்கு வந்திருக்கும். அதுவே அவர் மனதைச் சுட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் சுழல விட்டிருக்கும் பாடலே அதற்குச் சான்று. பின்னப்பட்ட சிலைகள் என்னும் விளிம்பிலிருந்து, உடலும் உயிரும் மனமும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நிலை என்னும் விண்ணைப் பார்க்க நீங்கள் முயற்சித்திருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.///

    அய்யரை புரிந்து சொன்ன மேன்மைக்கு அன்பு நிறைந்த நன்றி.. நன்றி..

    (பின்னப்பட்ட சிலைகள் என்னும் விளிம்பிலிருந்து, உடலும் உயிரும் மனமும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நிலை என்னும் விண்ணைப் பார்க்க நீங்கள் முயற்சித்திருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம்)

    எண்ணங்களை புரிந்து கொண்டு
    எழுத்துக்களால் விளக்கும் தாயே

    வழக்கம் போல் மாசில்லா அன்புடன்
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  105. Guru vanakkam,

    Thanks to all who posted today. The weekend posts are becoming so intersting to the extent, I stopped reading other magazines.
    Thanks once again to all who contributed their effort here.

    RAMADU

    ReplyDelete
  106. 1st stage of life = 1 to 30 yrs.
    2nd stage of life = 31 to 60 yrs.
    3rd stage of life = 61yrs. and above

    அது இருந்தா இது இல்லே
    இது இருந்தா அது இல்லே

    வகுப்பில் பலர் இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் ...என்னையும் சேர்த்து

    ReplyDelete
  107. //தேமொழி said...
    1st stage of life = 1 to 30 yrs.
    2nd stage of life = 31 to 60 yrs.
    3rd stage of life = 61yrs. and above
    அது இருந்தா இது இல்லே
    இது இருந்தா அது இல்லே
    வகுப்பில் பலர் இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் ...என்னையும் சேர்த்து//

    இப்போ எதுக்கு இந்த சென்சஸ்? சரி 2ஆம் நிலையில் உள்ளவர்கள் தான் மெஜாரிட்டி.இல்லையா? சமீபத்தில் சீனுத்தாத்தா என்று ஒரு பெரியவர் 1930ல் பிறந்தவர் சேர்ந்துள்ளார். 80க்கு மேல் என்று ஒரு நாலாவது நிலையை உருவாக்குங்கள். அப்போது நானெல்லாம் தாத்தா பட்டியலில் இருந்து வெளியில் வந்துவிடுவோம்.

    ம்ம்ம். இதுக்கெல்லாம் டெல்லிக்காரவுக வந்து என்ன சொல்லப் போறாங்களோ?

    ReplyDelete
  108. //அய்யரை புரிந்து சொன்ன மேன்மைக்கு அன்பு நிறைந்த நன்றி.. நன்றி..//

    தங்களுக்கும் என்னை விளக்கம் எழுதத் தூண்டிய திரு.கே.எம்.ஆர். அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  109. மாணவர் மலரில் இடம் பெற்றுள்ள அனைத்து ஆக்கங்களும் மிகவும் அருமை. ரசிக்கும் படியாகவும் மேலும் சிந்திக்கும் படியாகவும் உள்ளது. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  110. ஆங்கில சிரிப்புத் துணுக்குகள் கோபாலன் ஐயா அனுப்பி இருந்தவை.

    சமத்து என்று புளகாங்கிதப் பட வைக்கும் குழந்தைகளை கண் முன் கொண்டு வந்தது....

    ReplyDelete
  111. சகோதரியார் தேமொழி கலக்கிட்டீங்க....
    அதென்ன ஆ...ஊ -ன்னா எதற்கெடுத்தாலும் பெண்களையே கொடுமைக் காரிகலாகக் காட்டுவது என்று??!!

    அனைத்து ரசிக்கும் படி இருந்தது என்றாலும்,
    என் ஐந்து தாம் என்னை மிகவும் கவர்ந்தது...

    சும்மா அதிருதுல்ல!!!:):):))))
    நன்றி.

    ReplyDelete
  112. ஆனந்த முருகன் சார்... தங்களின் கதை பல ரசனைகளைத் தாங்கி வந்ததன...
    ஆரம்பமே தத்துவம்.
    ///ஏற்ற,தாழ்வுகள்,நிறைந்ததுதானே மானிட வாழ்க்கை!!அது தானே சுவாரசியம்!! ECG எடுக்கும் பொழுது திரையில் அலைகள் மேலும்,கீழும் சென்று வந்தால்தான் மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று அர்த்தம்மாகிறதல்லவா!!ஒரே சீராக (flat) இருந்தால் சவம் என்று பொருளல்லவா?! ////

    என்னை மிகவும் கவர்ந்தது...

    உளவியல் ரீதியாக கதைப் படிப் பார்த்தால் இங்கே வில்லங்கமே கணவர் தான்... எப்படியாயினும் கலவரம் நடந்தால் யார் ஆரம்பம் என்றாலும் கொஞ்ச பிகு பண்ணுவது பெண்ணாகத்தான் இருக்கும்... அதிலும் தவறு தன மேல் இல்லாத போது இன்னும் சொல்லவே வேண்டாம்.. இருந்தும்.

    //// என்ன சாருக்கு கோபமெல்லாம் போச்சா!இல்லையா!?கிச்சனிலிருந்து குரல்!? ஒன் வேலை எதுவோ?அதை மட்டும் பாரு!சும்மா,என்னை சீண்டாதே!! ///

    மிகவும் விசாலமானப் பெருந்தன்மை உள்ள மனைவி... சாந்த சொரூபியாக இருக்கிறாள்!!! பாவம் அவளுக்குத் தான் ஏழாம் வீடு கொஞ்ச வீக் போல:):):):)))

    கதையின் நீதி:):):)

    ReplyDelete
  113. ஆனந்த முருகன் சார் தங்களின்
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  114. சபரி நாராயணன் சார்.. அருமையான / உண்மையான / இயற்கையான வரங்களை தாங்கிய அருமையான விஷயங்கள்.
    இருந்தும் பெரும்பாலும் வரங்களை மறந்து சாபங்களையே மனதில் சுமந்து திரிகிறோம்...


    'அல்லவை தேய அறம் பெருகும்'... சொல்லும் செயலும் நன்றாக இருந்தால்.

    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  115. ////ஆனால் எண்கணிதம் என்ன சொல்கிறது? :))////

    இது தான் தேமொழியாரின் எதேச்ச பாணி நகைச் சுவை.:):):)))

    ReplyDelete
  116. /// "தொடர்ந்து தன் பிள்ளையை துன்புறுத்திவரும் ராகுலைக் கண்டிக்க மம்மிக்கு தைரியம் இல்லை போலும்.."என்று நடப்பு அரசியல் நிலைமையை
    வெளிச்சம் போட்டுக் காண்பித்தார் ஆனந்தமுருகன்.
    இது எப்புடி இருக்கு? ///

    மைனர்வாள்...
    சூப்பரில்ல...
    அதோடு கதையில் அவர் மம்மி இல்ல டம்மி... (டாடி >> மம்மி யானதாலே)

    ReplyDelete
  117. // minorwall said...
    பார்வதி அவர்கள் என்னன்னமோ எழுதுகிறார்..அண்ணன் ஆலாசியத்தை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுவிட்டார் பார்வதி..

    ஏற்கனவே அவர் எழுதுகிற ஆன்மீகப் பாடல்களை சுத்தமாகப் புரியாத நிலையில் எப்போது கொஞ்சம் நிஜவுலகத்து விஷயங்கள் பற்றி எழுதுவாரோ என்று நினைத்திருந்த வேளையில் இப்படிப் போட்டுத் தாக்கிவிட்டாரே பார்வதி..என்னத்தச் சொல்றது போங்க?இனி டாப் கியர்லே போவாரே..நான் கமென்ட் அடிக்குறதை நிறுத்திட வேண்டியதுதான்.//

    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. (ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' அதாவது தமிழின் அணி இலக்கணத்தில் ஒரு வகை. நீங்க வேற அணின்னு நினைச்சுக்கப் போறீங்க,).

    ReplyDelete
  118. ////தேமொழி said...
    இல்லாவிட்டால் வெளிநாட்டு விமான நிலையத்திலேயே ஆரம்பிக்கும் தகராறு. அவர்கள் உங்களைக் கூப்பிட, உச்சரிப்பு வேறு பெயர் போல இருப்பதால் நீங்கள் பராக்கு பார்க்க,

    அவர்கள் உங்களுக்கு காது கேட்கவில்லை என நினைக்க எனத் தொல்லை தொடரும்.

    பிறகு அவர்கள் உங்கள் அழகு தமிழ்ப் பெயரை செய்யும் கொலையைப் பார்த்து, நீங்களும் சிக்கல்

    சண்முகசுந்தரம் ஜில் ஜில் வாசிக்கும் நாயனத்தைக் கேட்ட பின் "ஐயோ ஜில்லு எனக்கு நாயனமே மறந்து போய்டும் போலிருக்கு"

    என்று சொல்வது போல, நீங்களும் ஐயோ எனக்கு தமிழே மறந்து போய்டும் போலிருக்கு என வருந்த வேண்டியிருக்கும்.

    எனவே என் பெயர் போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களை தவிர்ப்பதே

    அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பதை கருத்தில் கொள்க.///

    :):):) அனுபவப் பட்ட அறிவுரை..

    அழகான 'தேமொழி' என்னும் பெயரை ...தேமொஷி என்று ஜப்பான் பெயரைப் போன்று அழைத்து இருப்பார்கள் என நினைக்கிறேன்... சரியா..

    தங்களின் பின்னூட்டம் தங்களின் அனுபவம் எந்த அளவிற்கு சங்கடப் படுத்தி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

    நல்ல ரிவுரை தான்... தமிழ் பற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.:):)

    ReplyDelete
  119. Parvathy Ramachandran said...
    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. (ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' அதாவது தமிழின் அணி இலக்கணத்தில் ஒரு வகை. நீங்க வேற அணின்னு நினைச்சுக்கப் போறீங்க,)

    நல்லா(தான்) புரிந்து கொள்கிறீர்கள்!! .

    ReplyDelete
  120. ///மஹாபாரதம் எழுதுவதற்குக்காகத் தன் ஒரு கொம்பைத் தானாக முறித்துக்கொண்ட பிள்ளையாருக்கு, மற்றொரு நல்ல கொம்பும் உடைந்து விட்டது.ஆகவே அவர் 'பின்னப்பட்டு' விட்டார்



    ஒரு வேலை கால்சியம் பற்றாகுறையாகயிருக்குமோ??????????

    ReplyDelete
  121. kmr.krishnan said...
    தொகுப்பு எப்போ வரும்?கிணறு வெட்டிய பின்னர்தான் தாகம் தீரணுமா?
    சுடச்சுட எழுதுங்கள் ஆனந்த முருகன்!

    அவர் புலிகட் ஆனதிற்கு கமர்கட் ன்னு சொல்லிட்டு,தாகமெடுத்தால் கிணறு தோண்டிதான் தண்ணி குடிப்பேன் என்றால் என்ன அர்த்தமென்று விளங்கவில்லை.

    ReplyDelete
  122. kmr.krishnan said...
    எப்படியோ பின்னூட்டத்திற்கு வீட்டிலிருந்தே ஒரு ஆளைச் சேர்த்துட்டோமில்ல?!!!ஹி ஹி ஹி ஹி!

    அடிப்படை அரசியல்வாதிகளுக்கு உள்ள அனைத்து தகுதிகளும் உள்ளன!!!இடைதேர்தலில் minor க்கு பதிலாக நீங்கள் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்!பின்னூட்டம் இடவில்லை எனில் கூலிப்படையை ஏவுவது!!!தனக்கு தானே ஜே!சூப்பர் சார் நீங்க!!

    ReplyDelete
  123. thanusu said...

    இந்த வசனங்கள் எல்லாம் அனைவரின் வீட்டிலும் நடக்கும் நல்ல கற்பனை. ரசித்து சிரிக்கும் படியாக இருந்தது.

    இது எல்லோர்வீட்டிலும் அடிக்கடி நடப்பதுதான். (என் வீட்டிலும் நடக்கும்),பொதுவாக கோபமாக இருக்கும் போது மேலும் வெறுப்பேற்றி,வார்த்தை முற்றி திருமணத்திற்கு முன் "நயன்தார"வாக தெரிந்த மனைவி இப்பொழுது பார்க்கும் போது "நைட்டி போட்ட நம்பியார்"ஆக தோன்றும்.

    ReplyDelete
  124. ஜி ஆலாசியம் said...

    ஆனந்த முருகன் சார் தங்களின்
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.


    நன்றிகள்!!!சார்!!ஆக்கத்தில் பக்திமலராகவும்!!பின்னூட்டத்தில் பாசமலராகவும் அசத்திடீங்க!!!

    ReplyDelete
  125. //இது எல்லோர்வீட்டிலும் அடிக்கடி நடப்பதுதான். (என் வீட்டிலும் நடக்கும்),பொதுவாக கோபமாக இருக்கும் போது மேலும் வெறுப்பேற்றி,வார்த்தை முற்றி திருமணத்திற்கு முன் "நயன்தார"வாக தெரிந்த மனைவி இப்பொழுது பார்க்கும் போது "நைட்டி போட்ட நம்பியார்"ஆக தோன்றும்.//

    Hats off.......I can't say anything beyond this. wonderful Ananthamurugan

    ReplyDelete
  126. kmr.krishnan said...
    தமிழில் எழுதுவதின் வீச்சைப் பார்த்தீர்களா ஆனந்தமுருகன்? எப்படி எழுத்து நடையில் ஓர் ஓட்டம் கிடைக்கிறது பாருங்கள். நல்ல திறனுள்ளது. தொடர்ந்து தமிழில் நிறைய எழுதுங்கள். பாராட்டுக்கள்

    கதையில் எழுதாத வரிகள்.

    அதிகம் பேசினால் "சூலாயுதத்தால் உனது கபாலத்தை பிளந்து விடுவேன்" கடவுள்.அவனோ "சாமீ,rules தெரியாம எதாவது பண்ணிடாதீர்கள்!!!"
    சும்மா,பேசுரத்துகேல்லாம் தண்டனை கொடுக்ககூடாது
    உடனே கடவுள் "என்ன ருத்ரனிடமே ரூல்ஸ் பேசுகிறாயா!!!போக்கத்தவனே "முடியலைட வேண்டாம் விட்ரு!!!மறைந்து விட்டார்!!

    ReplyDelete
  127. ///Ananthamurugan said...
    அடிப்படை அரசியல்வாதிகளுக்கு உள்ள அனைத்து தகுதிகளும் உள்ளன!!!இடைதேர்தலில் minor க்கு பதிலாக நீங்கள் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்////

    ///திருமணத்திற்கு முன் "நயன்தார"வாக தெரிந்த மனைவி இப்பொழுது பார்க்கும் போது "நைட்டி போட்ட நம்பியார்"ஆக தோன்றும்.///

    ////ஆக்கத்தில் பக்திமலராகவும்!!பின்னூட்டத்தில் பாசமலராகவும் அசத்திடீங்க!!!////

    ஹா!ஹா!ஹா!

    பெரும்பாலும் பெயருக்கும்.... ஆளுக்கும் (குணம் /செயல்) சம்பந்தம் இருக்காது..



    ஆனந்த முருகன் தாங்களும் தேமொழி அக்காவோடு சேர்ந்திட்டீங்க...:):):):)))))

    அருமை போங்க...



    எப்படியாவது (அடுத்தவள் அசந்த நேரமாது பார்த்து) ஏதோ ஒரு ஆணைக் கல்யாணம்

    செய்துக் கொள்ளலாம் என்று தான் அவுங்களும் முயற்சிக்கிறாங்க... முடியலையே பாவம்.

    ஜாதகம் இருந்தா வகுப்பறையில அலசி அவுங்க ரசிகர் மன்றத்துக்காது

    அனுப்பி வைத்து பொதுத் தொண்டு செய்யலாம்.

    சினிமாத் துறையில் இருக்கும்... சுக்கிரன் ராகோடு சேர்ந்து இருக்கும் கணவன்களைக்

    கொண்ட மனைவிமார்கள் எல்லாம் கலங்கி போய் நிப்பாங்கன்னு நினைக்கிறேன்

    அதனாலத் தான் பொதுத் தொண்டு என்றேன்.



    நீங்கள் சொன்ன உதாரணப் பெயர் என்னை உளற வைத்து விட்டது!!??



    நன்றி ஆனந்த முருகன் சார்.

    ReplyDelete
  128. ஜி ஆலாசியம் said
    ஆனந்த முருகன் தாங்களும் தேமொழி அக்காவோடு சேர்ந்திட்டீங்க...:):):):)))))


    மில்லிமீட்டர் gap இல் தேமொழி அவர்களை அக்கா ஆக்கிவிடீர்கள்!!

    ReplyDelete
  129. ஜல்லிகட்டுவில் நமக்கும் நிறைய பங்குவுண்டு!!!தொழுவத்திலிருந்து "மாடு வருது! மாடு வருது!" ன்னு ஸ்பீக்கரில் கத்தலும்,வரிசையாக முதலில் கோயில்மாடுவும்,தொடர்த்து (கீழ்பாச்சல்,மேல்பாச்சல்)காளைகள் சீறிப்பாயும் அழகே தனி "நாம்தான் பெவிலியன்னிளுருந்து செஞ்சுரி அடிக்கிற ஆளாயிட்ட்ரே!!"மாடு கட்டப்பட்ட்ருக்கும் இடத்திலேயே ஒரு பேட்டி மாட்டுடன் போட்டு விட்டு தொழுவத்திற்கு பக்கத்தில் நின்று விட்டால் எந்த பிரச்னையும் இராது!!அங்க ஒரு சீட் போட்டு வேடிக்கை பார்போம்!!!(Kmrk sir ,நல்லா பாத்துக்குங்க மாடெல்லாம் அடக்கினேன் என்று எங்கேயும் சொல்லவில்லை)

    ReplyDelete
  130. கோபாலன் சாரின் கதை சுவாரசியமாகச் சென்றது. முடிவை நான் படிக்கும்போதே ஊகித்துவிட்டேன், இதே கருத்தை வலியுறுத்திய அவரின் சில பின்னூட்டங்கள் மூலம். ஆன்மீக உணர்வு இல்லாமல் மனிதாபிமானத்துடன் இருப்பவர்கள் உயர்ந்தவர்களே. மனிதாபிமான உணர்வு சிறிதும் இல்லாமல் ஆன்மீகப்போர்வை போர்த்தியிருப்பவர்கள் மன்னிக்கமுடியாதவர்கள்.

    இருப்பினும் ரமா இரண்டு வயதுக்குழந்தையை அழைத்துச் செல்லும்போது முன்பின் பழக்கமில்லாவிட்டாலும் தேவையானவற்றை எடுத்துச் செல்வது அவசியம். அதற்கு நீங்கள் சொன்ன காரணமும் என்னால் ஏற்க இயலவில்லை. எடுத்துச் சென்ற தண்ணீர் தீர்ந்துவிட்டது என்று கொண்டு போயிருந்திருக்கலாம் என்று தோன்றியது. நிகழ்ச்சி முடியும்வரை கணவனும் சரி, ரமாவும் சரி குழந்தைக்காக எழுந்திருக்காதது, என்ன சொல்வது, நானாக இருந்திருந்தால் 'எங்க போனாலும் நிம்மதியா இருக்கவிடாம உயிரை வாங்கறா' என்று திட்டிவிட்டாவது அவள் தாகத்தைத் தீர்த்திருப்பேன்.

    கையில்லாத ரவிக்கை அணிந்த அம்மாள் என்று ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற இடங்களில் ரவிக் பெண்மணி (கையை வெட்டிவிட்டு) என்று எழுதிய உங்கள் குறும்புத்தனத்தை மைனர் கூட கவனிக்காதது வியப்பூட்டுகிறது.

    ReplyDelete
  131. ஜி ஆலாசியம் said
    ஆனந்த முருகன் தாங்களும் தேமொழி அக்காவோடு சேர்ந்திட்டீங்க...:):):):)))))


    மில்லிமீட்டர் gap இல் தேமொழி அவர்களை அக்கா ஆக்கிவிடீர்கள்!!


    அவர்கள் உங்களுக்கு அக்காவாயிருக்கலாம்.நான் தம்பிதான்.

    ReplyDelete
  132. Uma said...
    ரமாவும் சரி குழந்தைக்காக எழுந்திருக்காதது, என்ன சொல்வது, நானாக இருந்திருந்தால் 'எங்க போனாலும் நிம்மதியா இருக்கவிடாம உயிரை வாங்கறா' என்று திட்டிவிட்டாவது அவள் தாகத்தைத் தீர்த்திருப்பேன்.

    ரமாவும்,உமாவும் ஒண்ணுதான் போலிருக்கு!!!!

    ReplyDelete
  133. பார்வதியின் ஆக்கம் அவரின் ஆழ்ந்த அறிவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறைய சொற்களை ரசித்தேன். நமக்கெல்லாம் தமிழிலும் சரி, சமஸ்கிருதத்திலும் சரி, இவ்வளவு ஞானம் கிடையாது.

    ReplyDelete
  134. கிருஷ்ணன் சாரின் ஆக்கம் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

    ReplyDelete
  135. ஆலாசியத்தின் கவிதை வழக்கம்போல் அருமை. உங்கள் கவிதைகளின் மூலம் என் தமிழறிவைப் பெருக்கிக்கொள்ள முயற்சிக்கிறேன் (உண்மையிலேயே), ஞ வில் ஆரம்பிக்கும் நிறைய வார்த்தைகளை இன்று புதிதாகத் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  136. ///Ananthamurugan said...

    இது எல்லோர்வீட்டிலும் அடிக்கடி நடப்பதுதான். (என் வீட்டிலும் நடக்கும்),பொதுவாக கோபமாக இருக்கும் போது மேலும் வெறுப்பேற்றி,வார்த்தை முற்றி திருமணத்திற்கு முன் "நயன்தார"வாக தெரிந்த மனைவி இப்பொழுது பார்க்கும் போது "நைட்டி போட்ட நம்பியார்"ஆக தோன்றும்.///

    இதையெல்லாம் பப்ளிக்கா சொல்லலாமா?

    'நயன்தாரா'ன்னாலே சைடுலே செட் பண்ணிக்குற பிராண்ட் ன்னு பிரபுதேவா ட்ரென்ட் செட் பண்ணிட்டாரே..

    அந்தப் பேரை சொன்னதுக்கு உங்க வூட்டு அம்மணி கோச்சுக்கப் போறாங்கோ..

    சாதாரணப் பிரச்சினையைஎல்லாம் சீரியஸா எடுத்துட்டு நீங்களும் பிரபுதேவா மாதுரி எதாவுது புதுசா ட்ரை பண்ணாம இருந்தா சரிதான்..

    ReplyDelete
  137. தனுசுவின் இந்த வாரக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கும் இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளில் இது பெஸ்ட் என்று தோன்றியது.

    உங்களின் புலிக்கட் வரலாற்றைப்படித்து அசந்து போய்விட்டேன். அப்படியே சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற எழுத்துநடை. கூடவே நானும் மனக்கண்ணால் காட்சிகளைப்பார்த்துக்கொண்டே படித்தேன். அதுவும் புலியைப் பார்த்ததும், பதறாமல் தன் மகனை முதலில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பின்னர் இறங்கியது, என்ன ஒரு சமயோசிதம்!

    சிலம்பு விளையாட்டு கற்று கொடுத்தார்.
    இந்த சிலம்பு விளையாட்டில் "படை விரட்டி" என்று ஒரு வகை கம்பு சுழல் இருக்கிறது. பத்து பேர்கள் நம்மை சுற்றிக் கொண்டாலும் கிர் கிர் கிர்ரென்று சுழற்ற பத்து பேர்களும் பஞ்சாய் பறந்து விடுவாரகள். //

    ஆஹா இவர் ரேஞ்ச் தெரியாம ஓட்டிட்டோமோ!!! இனிமே கவனமா இருந்துக்கணும்!!

    நான் என்பெயரை" புலிகட் தனுசு" என்று வைத்துக் கொள்ளலாமா?//

    அதுக்கு நீங்க முதல்ல ஒரு புலியை ஒண்டிக்கு ஒண்டியா நின்னு கொல்லணும். அதை உறுதிப்படுத்த நான் ஒரு வீடியோக்ராபரை அனுப்புவேன் (அதை எல்லாம் நேர்ல பார்க்கறதுக்கு கூட எனக்குத் தைரியம் கிடையாது!!!). அதன்பின் அந்தப்பட்டம் உங்களுக்கு வகுப்பறையின் சார்பாக வழங்கப்படும்.

    ReplyDelete
  138. கோபாலன் சார் தொகுத்த நகைச்சுவைத் துணுக்குகள், தேமொழியின் எதிர்ப்பாட்டு நன்றாக இருந்தன.

    ReplyDelete
  139. ஆனந்தமுருகனின் ஆக்கம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

    வேறு சானல் அழுத்தினான்'போன ஆட்சியில் போட்ட நடைமுறை படுத்திய திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கபடுகின்ற்ன "ஒரு அரசியல்வாதி கத்திகத்தி பிசிறரடைத்த குரலில்...ஒடனே கணவன் சத்தமாக "போன ஆட்சியில் செய்த கல்யாணம் கூட செல்லாதாம் "சட்டம் கொண்டுவந்து இருக்காங்கலாம்"....அடுப்படியில் "கடுகு"பொரிக்கும் (வெடிக்கும் ) சத்தம் கேட்டது,கூடவே அவளும் பொறிகிறது தெரிந்தது.//

    சிரிச்சு முடியல!!!

    சபரியின் ஆக்கம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  140. //Uma said...
    பார்வதியின் ஆக்கம் அவரின் ஆழ்ந்த அறிவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறைய சொற்களை ரசித்தேன். நமக்கெல்லாம் தமிழிலும் சரி, சமஸ்கிருதத்திலும் சரி, இவ்வளவு ஞானம் கிடையாது//

    தங்கத் தலைவியின் பாராட்டுரைக்குத் தலை தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன். (அட, அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோயா..............என்று 'அலைகள் ஓய்வதில்லை' காதில் கேட்பதைத் தவிர்க்க முடியலை. அடுத்த சீனையும் சேர்த்துக் கற்பனை பண்ணிச் சிரிங்கோ.....)

    ReplyDelete
  141. //// Uma said...
    இருப்பினும் ரமா இரண்டு வயதுக்குழந்தையை அழைத்துச் செல்லும்போது முன்பின் பழக்கமில்லாவிட்டாலும் தேவையானவற்றை எடுத்துச் செல்வது அவசியம். அதற்கு நீங்கள் சொன்ன காரணமும் என்னால் ஏற்க இயலவில்லை. எடுத்துச் சென்ற தண்ணீர் தீர்ந்துவிட்டது என்று கொண்டு போயிருந்திருக்கலாம் என்று தோன்றியது. நிகழ்ச்சி முடியும்வரை கணவனும் சரி, ரமாவும் சரி குழந்தைக்காக எழுந்திருக்காதது, என்ன சொல்வது, நானாக இருந்திருந்தால் 'எங்க போனாலும் நிம்மதியா இருக்கவிடாம உயிரை வாங்கறா' என்று திட்டிவிட்டாவது அவள் தாகத்தைத் தீர்த்திருப்பேன். ////////

    நானும் இதையேதான் நினைத்தேன்..'முன் சீட் ஆளைத் திட்டிவிட்டு தன் பிள்ளைக்குத் தவிக்கத் தண்ணீர் ஏற்பாடு செய்யாமல் ராமாவுக்கு பஜனை அவ்வளவு முக்கியமா?'என்றேதான் எனக்கும் தோன்றியது..

    //////Uma said...
    கையில்லாத ரவிக்கை அணிந்த அம்மாள் என்று ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற இடங்களில் ரவிக் பெண்மணி (கையை வெட்டிவிட்டு) என்று எழுதிய உங்கள் குறும்புத்தனத்தை மைனர் கூட கவனிக்காதது வியப்பூட்டுகிறது./////////

    அதானே?எப்படி என் கண்ணில் படாமல் போனது?கவனச் சிதறல் ஆகிப் போச்சு..

    இனிமே ஸ்லீவ்லெஸ்லே யாரும் வந்தா கவனமா தவறாம கவனித்து கமென்ட் அடிக்குறேன்..

    எது எப்படி இருந்தாலும் மைனரை இந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சுருக்குற உங்க புத்திசாலித்தனத்தை நினைச்சு எனக்கு 'ஞஞ்சை' வந்துடுச்சு போங்க..

    ReplyDelete
  142. இதப் பாருங்க‌ய்யா! ஐ ஏ எஸ் கேள்விகளையும் பதில்களையும் விமர்சித்த‌
    தஞ்சாவூரார் அவர்களே அப்படி ஒரு நகைச்சுவை கேள்வி பதிலை 'காப்பி பேஸ்ட்' பண்ணிவிட்டாரே!//

    கோபாலன் சாரின் நகைச்சுவைத் தொகுப்புகளைப் படிக்கும்போதே உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வரும் என்று மனதிற்குத் தோன்றியது!!!!!!

    ReplyDelete
  143. minorwall said...
    இதையெல்லாம் பப்ளிக்கா சொல்லலாமா?

    'நயன்தாரா'ன்னாலே சைடுலே செட் பண்ணிக்குற பிராண்ட் ன்னு பிரபுதேவா ட்ரென்ட் செட் பண்ணிட்டாரே..


    நயன்தாரா public transporter சோ,விஷயத்தை சொல்லவந்ததே உங்களை போன்ற நல்லவர்களுக்காக!!!

    ReplyDelete
  144. Uma said...
    ஆனந்தமுருகனின் ஆக்கம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

    நன்றிகள் உமா!!அடுத்த பதிவிற்கு காத்திருங்கள்!!!

    ReplyDelete
  145. ////////// Parvathy Ramachandran said...
    // minorwall said...
    பார்வதி அவர்கள் என்னன்னமோ எழுதுகிறார்..அண்ணன் ஆலாசியத்தை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுவிட்டார் பார்வதி..

    ஏற்கனவே அவர் எழுதுகிற ஆன்மீகப் பாடல்களை சுத்தமாகப் புரியாத நிலையில் எப்போது கொஞ்சம் நிஜவுலகத்து விஷயங்கள் பற்றி எழுதுவாரோ என்று நினைத்திருந்த வேளையில் இப்படிப் போட்டுத் தாக்கிவிட்டாரே பார்வதி..என்னத்தச் சொல்றது போங்க?இனி டாப் கியர்லே போவாரே..நான் கமென்ட் அடிக்குறதை நிறுத்திட வேண்டியதுதான்.//

    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. (ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' அதாவது தமிழின் அணி இலக்கணத்தில் ஒரு வகை. நீங்க வேற அணின்னு நினைச்சுக்கப் போறீங்க,).////////

    "ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " ன்னு எழுதியிருக்கீங்க..

    உண்மையில் "புகழ்வது போல இகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " என்று இருந்திருக்க வேண்டும்..அர்த்தம் எதிர்மறையாகி விடுகிறது.

    இதுலே "'பெருமதிப்பிற்குரிய' என்று மைனரைப் புகழ்ந்தது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'என்று இந்த அணியில் வருமா?" என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும்
    நீங்க அண்ணன் ஆலாசியம் அவர்களை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று புகழ்ந்தது இந்த அணியில் வருமா?இல்லையா என்று உங்களுக்குத்தான் வெளிச்சம்..

    ReplyDelete
  146. //kmr.krishnan said...

    தஞ்சாவூராரின் சிறுகதையைப் படித்து ரசித்தேன். கலிகாலத்தில் இது போலெல்லாம் 'தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமாட்டேன்' என்றும்,'அறுந்தகைக்குச் சுண்ணாம்பு தரமாட்டேன்' என்றும் சொல்வது அதிகமாகும்.//

    அட்ரா சக்க..! இதுதான் அந்தர்பல்டி என்பார்களோ..? முந்தைய மாணவர் மலரில் பெரியவர்கள் செய்வது அத்தனையும் சரி...மாணவர்கள் அராஜகம் செய்கிறார்கள் என்று வாதம். இப்போது கலிகாலம் என்று காலத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு தஞ்சாவூராரின் கதையில் அராஜகம் (அதே வார்த்தையில்) செய்தவருக்கு துணை வாதம்...அரசியலில் சேருவதற்கு தகுதி நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  147. ரமாவும்,உமாவும் ஒண்ணுதான் போலிருக்கு!!!!//

    நானெல்லாம் வெளியிலோ / வெளியூர்ப் பயணமோ கிளம்பினால் இங்கிருந்து என்ன எடுத்துப்போக வேண்டும் / அங்கிருந்து என்ன எடுத்து வரவேண்டும் (ஒரு தடவை லிஸ்ட் போட்டதும் அதை அப்படியே டாகுமென்ட் செய்துவிடுவேன், திரும்ப எழுதும் அவசியம் இருக்காது) அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு டிக் அடித்து பின் திரும்ப வரும்போது கட் செய்துன்னு பக்கா ப்ளாநிங்கோடதான் போவோம். அதனால் நானும் ரமாவும் ஒன்றல்ல!!!

    ReplyDelete
  148. (அட, அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோயா..............என்று 'அலைகள் ஓய்வதில்லை' காதில் கேட்பதைத் தவிர்க்க முடியலை. அடுத்த சீனையும் சேர்த்துக் கற்பனை பண்ணிச் சிரிங்கோ.....)//

    எனக்கெல்லாம் விளக்கமா எழுதினாதான் புரியும், அதனால் என்ன சீனுன்னு விளக்கமா எழுதுங்கள் (உண்மையிலேயே புரியல)

    ReplyDelete
  149. @kmr.krishnan

    நேற்று ராம நவமி. இங்கு சாய்பாபா கோயிலில் பல்லக்கு ஊர்வலம். அது முடிந்தபின் வீடு வந்து சேருவதற்கு வெகு நேரமாகி விட்டது. ஆகையால் இப்போது தான் படிக்க முடித்தேன். சொல்ல வந்ததை நேராக சொல்லாலமே...சமுக பிரக்ஞை உள்ளவர், மனிதாபிமானம் எல்லைகடந்து இருப்பவர்...என்று நிலை நிறுத்த தேவை இல்லாமல் எதற்கு பின்னப்பட்ட விக்ரங்களை இழுத்து வந்து அவற்றை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு, மத சம்பிராயதங்களையும், சடங்குமுறைகளையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குறி ஆக்கி இருக்க வேண்டாம்.
    எழுத்தாளர் என்கிற வரையில் கற்பனைகளுக்கு வரைமுறை இல்லை. ஆனால் எழுத்து என்பது எந்த வகையிலும் வரம்புகளை மீறக்கூடாது என்பது என் கருத்து.
    அந்த வகையில் க்ருஷ்ணன் சாரின் இந்த கட்டுரையை என்னால் படிக்க முடியவில்லை.. ஆசிரியரின் கத்திரி பட்டிருக்க வேண்டிய கட்டுரை இது என்பது என் கருத்து.

    ReplyDelete
  150. இனிமே ஸ்லீவ்லெஸ்லே யாரும் வந்தா கவனமா தவறாம கவனித்து கமென்ட் அடிக்குறேன்..//

    பார்த்து!!! ஈவ் டீசிங்க்லே உள்ள போயிடப்போறீங்க!!!!

    எது எப்படி இருந்தாலும் மைனரை இந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சுருக்குற உங்க புத்திசாலித்தனத்தை நினைச்சு எனக்கு 'ஞஞ்சை' வந்துடுச்சு போங்க..//

    ஹிஹிஹி

    ReplyDelete
  151. ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " ன்னு எழுதியிருக்கீங்க..
    உண்மையில் "புகழ்வது போல இகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " என்று இருந்திருக்க வேண்டும்..அர்த்தம் எதிர்மறையாகி விடுகிறது.//

    ஒருவரைப் புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும் (எப்பவோ படிச்சது).

    இதுலே "'பெருமதிப்பிற்குரிய' என்று மைனரைப் புகழ்ந்தது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'என்று இந்த அணியில் வருமா?" என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும//

    அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லை, நக்கலு!!!!

    ReplyDelete
  152. ///Ananthamurugan said...
    ஜி ஆலாசியம் said
    ஆனந்த முருகன் தாங்களும் தேமொழி அக்காவோடு சேர்ந்திட்டீங்க...:):):):)))))


    மில்லிமீட்டர் gap இல் தேமொழி அவர்களை அக்கா ஆக்கிவிடீர்கள்!!////

    You see actually there no gap at all... its just exactly synchronized!!..

    அவுங்களே சொல்லிருக்காங்க நம்மை இளவல்கள் என்று...

    இன்னொரு பரம ரகசியம் இருக்கு... பொதுவா. யாராவது தன்னுடைய ஜாதகத்தில் சனீஸ்வர பகவான் எங்கிருக்கார் என்று சொல்லிவிட்டால் போதும் / அல்லது தெரிந்தால் போதும் அவர்களுடைய வயதை தோராயமாக அறிய.... :):):))))))

    ReplyDelete
  153. /////// Uma said...
    அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லை, நக்கலு!!!!/////////

    இது 'நெக்கிலு'..

    ReplyDelete
  154. /////////// Uma said...
    இனிமே ஸ்லீவ்லெஸ்லே யாரும் வந்தா கவனமா தவறாம கவனித்து கமென்ட் அடிக்குறேன்..//

    பார்த்து!!! ஈவ் டீசிங்க்லே உள்ள போயிடப்போறீங்க!!!!/////////

    'வாரமலர்க் கதையிலே' என்ற வார்த்தை விடுபட்டுப் போச்சு..

    அதுக்குள்ளே பயமுறுத்துறீங்களே?

    ReplyDelete
  155. ///minorwall said... நீங்க அண்ணன் ஆலாசியம் அவர்களை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று புகழ்ந்தது இந்த அணியில் வருமா?இல்லையா என்று உங்களுக்குத்தான் வெளிச்சம்..////

    அது வேறு அணியில் ... உயர்வு நவிற்சி அணியில் வரும் (உயர்வு நவிற்சி அணி என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்த்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது)....என நினைக்கிறேன்

    ReplyDelete
  156. kmr.krishnan said...
    //இதில்,'த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந?' (நீ உன் சரணகமலங்களை அருள்கூர்ந்து எனக்குக் காட்டினாலும் அதை எந்தக் கண்கொண்டு நான் பார்ப்பேன்?) என்று தீக்ஷிதர் கேட்டதும் அம்பிகை தோன்றி, கண்கொடுத்து அருளினாள் என்பது வரலாறு.//

    இந்த ஸ்தோத்திரத்தை முழுதும் கொடுத்து அதற்குப் பொருளும் ஒரு பதிவாகக் கொடுங்கள் பார்வதி ராமச்சந்திரன் அவர்களே. ஜாதகத்தில் இரண்டாம் இடமான கண் ஸ்தானம் பாதிக்கப்பட்டோர் வாசிக்க வேண்டிய ஸ்தோத்திரம்.//

    நீலகண்ட தீக்ஷிதர் தீவிர அம்பாள் உபாசகர். அன்னை மீனாக்ஷியின் ரூபத்தில் அன்னையை வழிபட்டவர். ஆகையால் துன்பம் நேர்ந்த போது, இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியை ஆராதித்து இழந்த கண் பார்வையை பெற்றார். ஆனால் அது ஜோதிட பரிகாரம் என்று வரும் பொழுது ஒத்து வராது. தவறான பரிந்துரையாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
    கண் பார்வை கோளாறு என்று இல்லாமல் எந்த கோளாறாக இருந்தாலும் அவை அனைத்தும் தன் வினை காரணமாக வருவது என்ற நோக்கில் காலன் அதாவது சிவபிரானை தொழுதல் தான் சரியாக இருக்கும். தேவார பதிகங்களில் கண் பதிகம் என்று ஒன்று உள்ளது. காஞ்சி மகா பெரியவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும் சூரியனை நோக்கி பாட சூரிய சதகம் இருக்கிறது.

    அன்னை மீனாக்ஷி நவக்கிரகங்களில் புதனுக்கு அதிபதியானவள். அன்னை லலிதா தேவியின் மந்திரி...அந்த வகையில் மாதங்கி சொரூபிணி....
    ஆனந்த சாகர ஸ்தவ புதனை வலுப்படுத்தி அன்னையின் அருளை பெற வைக்கும். கலைகளில் மேதை தன்மை கொடுக்கும். சங்கீத ஞானம் வரும். வாக் சித்தி கிட்டும்...

    ReplyDelete
  157. ////Uma said...
    ஒருவரை இகழ்வது போல புகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " ன்னு எழுதியிருக்கீங்க..
    உண்மையில் "புகழ்வது போல இகழ்வது 'வஞ்சப் புகழ்ச்சி அணி' " என்று இருந்திருக்க வேண்டும்..அர்த்தம் எதிர்மறையாகி விடுகிறது.//

    ஒருவரைப் புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும் (எப்பவோ படிச்சது).

    இதுலே "'பெருமதிப்பிற்குரிய' என்று மைனரைப் புகழ்ந்தது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'என்று இந்த அணியில் வருமா?" என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும//

    அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லை, நக்கலு!!!!////



    வஞ்சப் புகழ்ச்சியும் இல்லை, நக்கலும் இல்லை...

    அப்படியா, என்ன அது நீ திருத்திச் சொல்..

    அது நயத்தல்...

    அட என்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை!!!
    (நன்றி ஏ. பி. நாகராஜன், சொர்க்கபுரி. கைலாயம்.)

    ReplyDelete
  158. அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லை, நக்கலு!!!!////
    வஞ்சப் புகழ்ச்சியும் இல்லை, நக்கலும் இல்லை...
    அப்படியா, என்ன அது நீ திருத்திச் சொல்..
    அது நயத்தல்... //

    அடடே! தமிழ்க்கவிஞர் இன்னும் இங்கதான் இருக்காரா? அப்ப நம்ம மேதாவித்தனத்தைக் காட்டாம கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதுதான்!!!!!!!!

    ReplyDelete
  159. @ஆனந்தமுருகன்,

    உங்களுடைய இந்த கற்பனையை நீங்கள் ஏற்கெனவே யாரிடமாவது சொல்லி அவர்கள் கதை கருவை ராம் கோபால் வர்மா விடம் சொன்னார்களா என்ன ??
    ரீதேஷ் தேஷ்முக் மற்றும் அந்தரா மாலி (இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.)இவர்களை வைத்து இந்த கற்பனைக்கு திரைக்கதை எழுதி படமாக்கி படம் பிளாப்பும் ஆகி விட்டது. ஒரு வேளை தங்களுக்கு ராயல்டி கொடுக்காமல் போனதால் இருக்குமோ என்னவோ...??
    எப்படி இருந்தாலும் நல்ல கற்பனை

    ReplyDelete
  160. ////தேமொழி said...
    ///minorwall said... நீங்க அண்ணன் ஆலாசியம் அவர்களை குழந்தையாக்கி ஆதிசங்கர பகவத்பாதர்,குமரகுருபர ஸ்வாமிகள், திருஞானசம்பந்தப்பெருமான் என்று புகழ்ந்தது இந்த அணியில் வருமா?இல்லையா என்று உங்களுக்குத்தான் வெளிச்சம்..////

    அது வேறு அணியில் ... உயர்வு நவிற்சி அணியில் வரும் (உயர்வு நவிற்சி அணி என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்த்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது)....என நினைக்கிறேன்////

    அதே தான் சரியாகச் சொன்னீர்கள்.... இயல்பு நவிற்சி அணியாக எடுத்துக் கொண்டால் தவறாக வந்து விடும்.. :):):))))

    எப்படியோ கொண்டு கூட்டுப் பொருள்கோள் அணியிலே இதையும் சேர்த்துக்கலாம்!!!:):):)

    ReplyDelete
  161. //// Uma said...
    அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லை, நக்கலு!!!!////
    வஞ்சப் புகழ்ச்சியும் இல்லை, நக்கலும் இல்லை...
    அப்படியா, என்ன அது நீ திருத்திச் சொல்..
    அது நயத்தல்... //

    அடடே! தமிழ்க்கவிஞர் இன்னும் இங்கதான் இருக்காரா? அப்ப நம்ம மேதாவித்தனத்தைக் காட்டாம கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதுதான்!!!!!!!!///

    திங்கள் இல்லையா பெண்ணை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றால் தான் தேநீர் அன்புடன் பரிமாறப் படும் இல்லையா!

    ReplyDelete
  162. திங்கள் இல்லையா பெண்ணை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றால் தான் தேநீர் அன்புடன் பரிமாறப் படும் இல்லையா!//

    ம்ம்ம்

    ReplyDelete
  163. sriganeshh said...
    எப்படி இருந்தாலும் நல்ல கற்பனை

    நன்றிகள் ஸ்ரீகணேஷ்!!படம் எடுத்து பிளாப் ஆயிடுச்சுன்னு!!!போட்டிங்களே ஒரு குண்டு ஐ லைக் தட்!!!!

    ReplyDelete
  164. Uma said...தனுசுவின் இந்த வாரக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கும் இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளில் இது பெஸ்ட் என்று தோன்றியது.

    மிக்கா நன்றி உமா .

    உரம் போட போடத்தானே செடி வளரும்

    ReplyDelete
  165. Uma said...அதுக்கு நீங்க முதல்ல ஒரு புலியை ஒண்டிக்கு ஒண்டியா நின்னு கொல்லணும். அதை உறுதிப்படுத்த நான் ஒரு வீடியோக்ராபரை.......

    உங்களுக்கு இந்த மாதிரி சிரமம் தர மாட்டேன். நானும் அந்த மாதிரி சிரமம் எல்லாம் எடுக்க மாட்டேன்.

    ஐயப்பா வழி விடப்பா
    மெய்யப்ப நீ மனம் வையப்பா
    பாரப்பா பரந்தாமா
    கூறப்பா கருணையை ....

    என்று ஒரு கவிதை பாடி தலை சுற்றி புலி கீழே விழா வைத்து எஸ்கேப் ஆகிடுவேன்.

    ReplyDelete
  166. //கையில்லாத ரவிக்கை அணிந்த அம்மாள் என்று ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற இடங்களில் ரவிக் பெண்மணி (கையை வெட்டிவிட்டு) என்று எழுதிய உங்கள் குறும்புத்தனத்தை மைனர் கூட கவனிக்காதது வியப்பூட்டுகிறது.//
    அது...அது.. அதுதான் உமாவின் தனி முத்திரை! மைனர் தயங்கற இடத்தில் கூட அம்மணி புலிப்பாய்ச்சல் பாய்ஞ்சுடுவாங்க!!!

    ReplyDelete
  167. // minorwall said...
    //இதுலே "'பெருமதிப்பிற்குரிய' என்று மைனரைப் புகழ்ந்தது 'வஞ்சப் புகழ்ச்சி அணி'என்று இந்த அணியில் வருமா?" என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும்//

    தங்களது பின்னூட்டத்திற்கு, என் சகோதரரும், இரு சகோதரிகளும் தோள் கொடுத்துக் காப்பாற்றி விட்டனர்(அவர்களுக்கு என் நன்றி) எனினும், சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டியுள்ளது.
    முதலில், தாங்கள் பெருமதிப்பிற்குரியவரே. அதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?. 'எதிர்கட்சித் தலைவி, என்னை எப்படி அழைத்தாலும் நான் அம்மையார் என்றே அழைப்பேன்' என்று சொன்ன, உங்கள் தலைவரின் நயத்தக்க நாகரிகம் (என்னையும் சேர்த்து) மிகப் பெரும்பான்மையானோருக்கு உண்டே!!!!. மேலும் தங்கள் பரந்து பட்ட சோதிட அறிவும் விஷய ஞானமும் மிக நிச்சயமாக உயர்ந்ததே. எல்லாவகையிலும் தாங்கள் பெருமதிப்பிற்குரியவரே. இது இல் பொருள் உவமை அணி.... (இல்லாத பொருளை எடுத்துக்காட்டாகக் கூறுவதே இல்பொருள் உவமை அணி)அல்ல .

    தாய் தன் குழந்தைக்கு உணவூட்டும்போது, குழந்தை தன் கையால் பருக்கைகள் இறைபட, ஒரு வாய் உணவைத் தாய்க்கு ஊட்டியதும் அவள் அகமகிழ்ந்து அதன் செயலைப் புகழ்வது போலத்தான், இங்கிருக்கும் அனைவரும் என் எழுத்துக்களைப் பாராட்டுகிறார்கள் என்பதை நான் அறிவேன். உண்மையில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. இது அவர்கள் நல்லியல்பு, அதனை
    நான் என் விருப்பத்தை ஏற்றிக் கூறாததால் இது தற்குறிப்பேற்ற அணி அல்ல.

    நீங்கள் இயல்பாக எதனையும் எடுத்துக் கொள்வதால், சற்றே (உங்கள் பாணியில்) கலாய்த்தேனே தவிர இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது தன்மை நவிற்சி அணிதான். தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் உள்ளபடி உள்ளதாக விளக்குவதாக‌ அமைவது.

    இருக்கின்ற சிறிய வாழ்க்கையில், தலைக்குமேல் கத்தி தொங்குகிற நிலையாமையே சாஸ்வதமான உலகில், யார் மனமும் புண்படாமல் தொடர வேண்டும் என்றே நினைக்கிறேன். என் வார்த்தைகளால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால், மன்னிக்கக் கோருகிறேன். (இது இரட்டுற மொழிதல் அணி அல்ல.....)

    ReplyDelete
  168. //அவர்கள் உங்களுக்கு அக்காவாயிருக்கலாம்.நான் தம்பிதான்.//

    நல்ல கூத்து இது. கரகாட்ட‌க்காரன் செந்தில் ஜோக் போல 'அந்த வாழைப் பழம்தான் இந்த வாழைப்பழம்' போல அல்லவா உள்ளது!

    ஹாலாஸ்யம், ஆனந்தமுருகன் இரண்டு பேருக்கும் அக்காதான். அப்புறம் என்ன
    ஒரு 'சுழல'விட்ட பின்னூட்டம்?!

    ReplyDelete
  169. Uma said...அதுக்கு நீங்க முதல்ல ஒரு புலியை ஒண்டிக்கு ஒண்டியா நின்னு கொல்லணும். ...

    எது அந்த ரசத்தில் போடுவாங்களே...!அதா.????ரெட் கிராஸ் ,ப்ளூ கிராஸ் அப்படின்னு நிறைய இருக்கு!!!ஆண்கள் மேல் ஏன் இந்த கொலவெறி ...??!! minor ய் ஈவ் டீசிங்கில் உள்ள தள்ள முயற்சி !!!தனுசுவை இந்த வகையிலா......நன்றி....!

    ReplyDelete
  170. //நமக்கெல்லாம் தமிழிலும் சரி, சமஸ்கிருதத்திலும் சரி, இவ்வளவு ஞானம் கிடையாது.//

    ஆமாம்! எங்களுக்குத் தெரியுமே, உங்க ஞானம் எல்லாம் ஜெர்மன், ரஷ்யன்,
    ஆப்பிரிகன் மொழிகளில்தான் என்று, மைனருக்கு ஜப்பனீஸ் மாதுரி!

    ReplyDelete
  171. //கிருஷ்ணன் சாரின் ஆக்கம் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி!//

    அப்பாடி! நீங்களாவது என்னை 'ஸ்பேர்' பண்ணினீர்களே! 'அதெப்படி உடைஞ்ச பிள்ளையாரை ஆராதிக்கலாம்?' என்று தாத்தாவைக் 'கோட்' பண்ணிக் காலை வாருவீர்கள் என்று நினைத்தேன்.காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானிகருடைய பேத்தி அல்லவா? 'ஆதென்டிக்'கா ஏதாவது சொல்லிவிடுவீர்கள் என்று பயந்து இருந்தேன்!

    ReplyDelete
  172. //அட்ரா சக்க..! இதுதான் அந்தர்பல்டி என்பார்களோ..? முந்தைய மாணவர் மலரில் பெரியவர்கள் செய்வது அத்தனையும் சரி...மாணவர்கள் அராஜகம் செய்கிறார்கள் என்று வாதம். இப்போது கலிகாலம் என்று காலத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு தஞ்சாவூராரின் கதையில் அராஜகம் (அதே வார்த்தையில்) செய்தவருக்கு துணை வாதம்...அரசியலில் சேருவதற்கு தகுதி நிறைய இருக்கிறது.//

    அதை இன்னும் மறக்கலையா? அந்தக்கட்டுரையால் உங்களுக்கு என்ன மன வருத்தமோ அந்த கருத்துக்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுகின்றன‌.

    மாணவர்கள் மிகச் சிற்ந்தவர்கள். அவர்களிடமிருந்து தான் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும்.அவர்கள் கற்றுக் கொள்ள எதுவுமே இல்லை.
    இது இளைஞர்களின் காலம். பழசாப் போன பாத்திரமெல்லாம் பரணையின் மீது ஒதுங்கிக்கணும். சரிதானே ஸ்ரீகணேஷ்!

    ReplyDelete
  173. //அந்த வகையில் க்ருஷ்ணன் சாரின் இந்த கட்டுரையை என்னால் படிக்க முடியவில்லை.. ஆசிரியரின் கத்திரி பட்டிருக்க வேண்டிய கட்டுரை இது என்பது என் கருத்து.//

    படித்து முடித்ததால்தான் இத்தனை வருத்தம் ஏற்பட்டுள்ளது.படிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு படித்துவிட்டீர்களே!அதற்கு நன்றி!

    வாத்தியார் ஐயாவுக்கு நீங்கள் கூறியுள்ள ஆலோசனையை வரவேற்கிறேன்.
    கத்திரி பலமுறை வாங்கியவன்தான் நான்.பத்திரிகை ஆசிரியருக்கு அந்த உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பவனே.எனவே இப்போது கூட ஐயா இந்தக் கட்டுரையை முழுமையாக‌ விலக்கிவிட்டாலும் வருத்தப் படமாட்டேன்.

    இந்தப் பின்னூட்டத்திலேயே சுயம்பு லிங்கங்களைப் பற்றிக் கூறியுள்ளேன். அத‌னையும் வாசித்துவிட்டு மேற்கொண்டு உங்கள் வாதங்களை வையுங்கள்.
    மனம் வருத்தமில்லாமல் விவாதிக்கலாம். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்.

    ReplyDelete
  174. //நீலகண்ட தீக்ஷிதர் தீவிர அம்பாள் உபாசகர். அன்னை மீனாக்ஷியின் ரூபத்தில் அன்னையை வழிபட்டவர். ஆகையால் துன்பம் நேர்ந்த போது, இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியை ஆராதித்து இழந்த கண் பார்வையை பெற்றார். ஆனால் அது ஜோதிட பரிகாரம் என்று வரும் பொழுது ஒத்து வராது. தவறான பரிந்துரையாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது.//

    தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அவருக்குக் கண் கொடுத்த ஸ்தோத்திரம் பார்வதி அம்மையார் எடுத்துக் கூறியதால் அதனை அவர்கள் முழுமையாகக் கூறட்டும் என்று அவ்வாறு எழுதிவிட்டேன். தவறிருந்தால் சான்றோர்கள் மன்னிப்பார்களாக!

    ReplyDelete
  175. ///////// kmr.krishnan said...
    //நமக்கெல்லாம் தமிழிலும் சரி, சமஸ்கிருதத்திலும் சரி, இவ்வளவு ஞானம் கிடையாது.//

    ஆமாம்! எங்களுக்குத் தெரியுமே, உங்க ஞானம் எல்லாம் ஜெர்மன், ரஷ்யன்,
    ஆப்பிரிகன் மொழிகளில்தான் என்று, மைனருக்கு ஜப்பனீஸ் மாதுரி!///////

    ' ஹிந்தியும் சமஸ்கிருதமும்(?)படிச்சா வேலைதேடி நார்த் இந்தியாவுக்கு போகலாம்..'அப்பிடின்னு இருந்ததெல்லாம் அந்தக்காலம்.

    பிற தேசத்து ஆட்கள், தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்து வாழ்வை வளப்படுத்திக் கொண்டவர்கள் ஏராளமாய் நிறைந்து தொழில்வளம், வேலைவாய்ப்பு மிகுந்த நாடாக தமிழ்நாடு ஆகிப் போயிருப்பதுதான் இந்தக்காலம்..

    இருந்தும் ஆட்சி அதிகாரங்களில் இருப்போரே வழக்கு சிக்கல்களில் தாய் மொழியிலே ஆவணங்கள் வேண்டி மற்றைய மாநிலங்களில் கெஞ்சும் நிலைமை இன்னமும் தொடர்கிறது..

    தமிழை ஆட்சிமொழி என்றாலும் தமிழ்நாட்டு மத்திய அரசு அலுவலகங்களில் எந்த மொழி ஆட்சி செய்கிறது என்று பார்த்து தமிழ்நாட்டிலே உள்ள மத்திய அரசின் அலுவலக ஊழியர் அனைவரும் தமிழில் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும்..

    இன்றைய நிலைமை ..

    மேல்சொன்ன எல்லா நாடுகளிலுமே மணி வேல்யூ ஒண்ணுதான்..

    இங்கே கொஞ்சம் கடல் தாண்டி ஜப்பானுக்குள்ளே காலடி எடுத்து வெச்சா அறுபது மடங்கு எகிறுது..

    அங்கேயும் மணி வேல்யூயை அறுபது மடங்கு ஏத்தி விட்டீங்கன்னா அந்த மொழியைப் படிக்கும் ஆர்வம் பலருக்கும் தன்னாலே வந்துடாது?அதுக்கு வழியில்லையாம்..

    மற்றபடி மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ளவே நான் ஜப்பானீஸ் மொழி படித்தேன் என்று புருடா விடும் வேலையை நான் செய்யப் போவதில்லை..

    ReplyDelete
  176. /////மற்றபடி மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ளவே நான் ஜப்பானீஸ் மொழி படித்தேன் என்று புருடா விடும் வேலையை நான் செய்யப் போவதில்லை..////

    இது பிறிது மொழிதல் அணி:):)

    ReplyDelete
  177. ///////Ananthamurugan said...
    Uma said...அதுக்கு நீங்க முதல்ல ஒரு புலியை ஒண்டிக்கு ஒண்டியா நின்னு கொல்லணும். ...

    எது அந்த ரசத்தில் போடுவாங்களே...!அதா.????ரெட் கிராஸ் ,ப்ளூ கிராஸ் அப்படின்னு நிறைய இருக்கு!!!ஆண்கள் மேல் ஏன் இந்த கொலவெறி ...??!! minor ய் ஈவ் டீசிங்கில் உள்ள தள்ள முயற்சி !!!தனுசுவை இந்த வகையிலா......நன்றி....!////////

    நமது இயக்கத்து ஆடவர் அணித் தலைவராக தாங்கள் வீறுகொண்டு எழுந்திருப்பது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது..
    வாழ்க உங்கள் வீரம்..
    ஓங்குக உங்கள் புகழ்..

    ReplyDelete
  178. 'வஞ்சப் புகழ்ச்சி அணி,
    பிறிது மொழிதல் அணி,
    தற்குறிப்பேற்ற அணி,
    தன்மை நவிற்சி அணி,
    இரட்டுற மொழிதல் அணி,
    இல் பொருள் உவமை அணி'

    என்று எத்தனை அணிகள் படை சூழ வந்தாலும் எங்கள் இளைஞர் அணியை
    தொட்டுப் பார்க்கக் கூட முடியாது என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம்..

    ReplyDelete
  179. ////// Parvathy Ramachandran said...குழந்தை தன் கையால் பருக்கைகள் இறைபட, ஒரு வாய் உணவைத் தாய்க்கு ஊட்டியதும்/////

    நீங்களும் குழந்தையாயிட்டீங்களா?ரெம்ப நல்லது..

    ////// Parvathy Ramachandran said.முதலில், தாங்கள் பெருமதிப்பிற்குரியவரே. அதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?./////

    சந்தேக புத்திக்காரன்ன்னு ரகுவரன் ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டீக..
    சந்தோஷம்..

    ///// Parvathy Ramachandran said... தாங்கள் பெருமதிப்பிற்குரியவரே. இது இல் பொருள் உவமை அணி.... (இல்லாத பொருளை எடுத்துக்காட்டாகக் கூறுவதே இல்பொருள் உவமை அணி)அல்ல . /////

    'அணி'க்கு அப்புறமா மூணு புள்ளி வெச்சு பிராக்கெட் செய்திக்கப்புறமா 'அல்ல' வை கடைசியிலே போட்டு தாக்குதல் முயற்சியைக் கைவிடாம தொடர்றீங்க..
    உங்க தலைமையின் கட்டளையை சிறப்பா செய்திருக்கீங்க..
    வாழ்த்துக்கள்..

    ////////தற்குறி//////

    யாரையோதான் திட்டுறீங்க.. உங்களுக்கு இந்தக் கோவம் ஆகாது..

    நீங்கள் இயல்பாக எதனையும் எடுத்துக் கொள்வதால், சற்றே (உங்கள் பாணியில்) கலாய்த்தேனே தவிர இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது தன்மை நவிற்சி அணிதான்.
    இது என் கமென்ட்..

    ReplyDelete
  180. வணக்கம் ஐயா,
    இன்றைய‌ ஆக்க‌ம் ஆன்மிக‌ ம‌ல‌ரை போன்று அமைந்த‌து "இராம‌ ந‌வ‌மி"யை ஒட்டி வ‌ந்த‌தால் இருக்க‌லாம் என்று நினைக்கின்றேன்...

    கோபாலன் ஐயா அவர்களின் சிறுகதை நன்றாகயிருந்தது...உமா அவர்கள் கூறியது போலவே எனக்கும் தோன்றினாலும் ஒரு வேளை ஐயாவின் கதை 1950களில் அமைந்ததை போன்று உள்ளதால் அவ்வாறு கதை கருவை உருவாக்கியிருப்பார் என்று நினைக்கின்றேன்...கதை எழுதும் நடை மிகவும் சுவாராசியமாகவும்,தெளிவாகவும் அமைந்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது...நான் கற்று கொள்ள வேண்டிய படிப்பினை இது என்று நினைக்கின்றேன்...நன்றி ஐயா...ஐயாவின் நகைச்சுவையும் சுவையானதாய் அமைந்திருந்தது...அதிலும் இறுதி நகைச்சுவை "சூப்பர்"...

    பார்வதி அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை...ஒரு "திருவிளையாடல்" படத்தை பார்த்த திருப்தி எனக்கு...பாடல்களோடு ஆலாசியம் அவர்களின் கவிதையையும் சேர்த்து மேற்கோள் காட்டி தெளிவான நடையில் விளக்கி தந்தமைக்கு மிக்க நன்றி...இவ்வாறான நிகழ்வுகள் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளன என்பதை என் போன்று அறிந்திடாத வகுப்பறை மாணவர்கள் பலருக்கும் பயனளிப்பதாய் இருந்தது தங்களின் ஆக்கம்...மிக்க நன்றி...

    ReplyDelete
  181. This comment has been removed by the author.

    ReplyDelete
  182. kmrk ஐயா அவர்களின் ஆக்கத்தில் இருந்து மனிதர்களிடம் மட்டுமின்றி வணங்கும் கடவுளிடமும் குறைகளை பாராமல் இறை நெறியை மட்டும் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திற்கு அதற்கு தாங்கள் தந்துள்ள ஆதரங்களே போதும் என்று நினைக்கின்றேன்...நம்மை படைத்த கடவுள் நம் குறைகளை களைந்து நம்மை காப்பது போல நாம் உருவாக்கின விக்கிரகங்ளில் உள்ள குறைகளை பொறுப்பதில் தவறொன்றுமில்லை என்று நினைக்கின்றேன்...நல்ல ஆக்கத்திற்கு நன்றிகள் ஐயா...

    ஆலாசியம் அவர்களின் கவிதையை இம்முறை சற்று எளிமைப்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி...முன்பு நானும் அகராதியை புரட்டி தான் சில சொற்களுக்கு பொருளை அறிந்தேன்...இந்த முறை குறிப்பாக மைனர் அவர்களுக்காவே "அருஞ்சொற்பொருள்" விளக்கத்தையும் தந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...பராசக்தி,பரமன் சக்தி பொருள் நடை அருமை...சக்தியுடன்,இப்பொழுது சிவனை தந்துவிட்டீர்கள்...எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவபெருமான் தான்,அதனால் சித்தர் பாடலாய் தோன்றியது எனக்கு...அருமையான கவித்துவமான ஆன்மிக கவிதை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  183. //R.Srishobana said...
    kmrk ஐயா அவர்களின் ஆக்கத்தில் இருந்து மனிதர்களிடம் மட்டுமின்றி வணங்கும் கடவுளிடமும் குறைகளை பாராமல் இறை நெறியை மட்டும் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திற்கு அதற்கு தாங்கள் தந்துள்ள ஆதரங்களே போதும் என்று நினைக்கின்றேன்..//

    ஸ்ரீ ஷோபனாவின் புரிதலுக்கு நன்றி!

    ஸ்ரீரங்கத்தில் 'நம் பெருமாள்' என்ற உற்சவர் 'பெரிய பெருமாளை'விட அதிகம் கொண்டாடப்படுபவர். சமீபத்தில் அவரை மிக அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கால ஓட்டத்தினால் நம் பெருமாளின் முக அமைப்பில் சிறுசிறு புள்ளிகள் தோன்றியுள்ளன.ஆயினும் அவருடைய சாந்நித்யம் குறையவில்லை.

    "நான் கோணலாயிருந்தால் நாமம் கோணலோ...."

    ReplyDelete
  184. //R.Srishobana said...
    kmrk ஐயா அவர்களின் ஆக்கத்தில் இருந்து மனிதர்களிடம் மட்டுமின்றி வணங்கும் கடவுளிடமும் குறைகளை பாராமல் இறை நெறியை மட்டும் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திற்கு அதற்கு தாங்கள் தந்துள்ள ஆதரங்களே போதும் என்று நினைக்கின்றேன்..//

    ஸ்ரீ ஷோபனாவின் புரிதலுக்கு நன்றி!

    ஸ்ரீரங்கத்தில் 'நம் பெருமாள்' என்ற உற்சவர் 'பெரிய பெருமாளை'விட அதிகம் கொண்டாடப்படுபவர். சமீபத்தில் அவரை மிக அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கால ஓட்டத்தினால் நம் பெருமாளின் முக அமைப்பில் சிறுசிறு புள்ளிகள் தோன்றியுள்ளன.ஆயினும் அவருடைய சாந்நித்யம் குறையவில்லை.

    "நான் கோணலாயிருந்தால் நாமம் கோணலோ...."

    ReplyDelete
  185. ///minorwall said...
    'வஞ்சப் புகழ்ச்சி அணி,
    பிறிது மொழிதல் அணி,
    தற்குறிப்பேற்ற அணி,
    தன்மை நவிற்சி அணி,
    இரட்டுற மொழிதல் அணி,
    இல் பொருள் உவமை அணி'

    என்று எத்தனை அணிகள் படை சூழ வந்தாலும் எங்கள் இளைஞர் அணியை
    தொட்டுப் பார்க்கக் கூட முடியாது என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம்..////

    சாதி ஒழிப்பு மாநாடு சிறப்புரை ஆற்றுபவர் =>=> நாராயணசாமி நாயுடு...

    இளைஞர்கள் நாங்கள் எங்கள் அணித் தலைவரின் அறுபதாவது ஆண்டுவிழாவிலே கூறியது போல் நாற்பதுக்கு மேலானால் அவர்கள் இளைஞரணியில் இருப்பது.............. என்றக் கருத்தையும் கூறி குழப்புவதாக!

    அப்படியேதும் இல்லையே...
    இந்த இளைஞர் அணியிலே:):):):)))) மனதிற்கும், உடலுக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறுவீர்களே!:):)

    ReplyDelete
  186. ///R.Srishobana said...

    ஆலாசியம் அவர்களின் கவிதையை இம்முறை சற்று எளிமைப்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி...முன்பு நானும் அகராதியை புரட்டி தான் சில சொற்களுக்கு பொருளை அறிந்தேன்...இந்த முறை குறிப்பாக மைனர் அவர்களுக்காவே "அருஞ்சொற்பொருள்" விளக்கத்தையும் தந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...பராசக்தி,பரமன் சக்தி பொருள் நடை அருமை...சக்தியுடன்,இப்பொழுது சிவனை தந்துவிட்டீர்கள்...எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவபெருமான் தான்,அதனால் சித்தர் பாடலாய் தோன்றியது எனக்கு...அருமையான கவித்துவமான ஆன்மிக கவிதை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...////

    தங்களைப் போலவே அப்பனை நிரம்பப் பிடிக்கும்... இருந்தும் அம்மாவிடம் தான் நெருக்கம் அதிகம்.... தங்களின் பாராட்டிற்கும், அன்பிற்கும் நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  187. அது...அது.. அதுதான் உமாவின் தனி முத்திரை! மைனர் தயங்கற இடத்தில் கூட அம்மணி புலிப்பாய்ச்சல் பாய்ஞ்சுடுவாங்க!!!//

    ஹி ஹி பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  188. மேலும் தங்கள் பரந்து பட்ட சோதிட அறிவும் விஷய ஞானமும் மிக நிச்சயமாக உயர்ந்ததே. //

    இதை நானும் வழிமொழிகிறேன் (ஏதோ அப்பப்ப கொஞ்சம் பாராட்டுவோம்).

    ReplyDelete
  189. minor ய் ஈவ் டீசிங்கில் உள்ள தள்ள முயற்சி !!!தனுசுவை இந்த வகையிலா......நன்றி....!//

    நம்ம திட்டம் லீக் ஆயிடுச்சே, வேற மாத்திட வேண்டியதுதான்!!! (நீங்க ரொம்ப புத்திசாலிங்கோ!!!)

    ReplyDelete
  190. //R.Srishobana said...
    .வகுப்பறை மாணவர்கள் பலருக்கும் பயனளிப்பதாய் இருந்தது தங்களின் ஆக்கம்...மிக்க நன்றி..//

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஷோபனா.

    ReplyDelete
  191. எங்களுக்குத் தெரியுமே, உங்க ஞானம் எல்லாம் ஜெர்மன், ரஷ்யன்,
    ஆப்பிரிகன் மொழிகளில்தான் என்று, மைனருக்கு ஜப்பனீஸ் மாதுரி!//

    ' ஹிந்தியும் சமஸ்கிருதமும்(?)படிச்சா வேலைதேடி நார்த் இந்தியாவுக்கு போகலாம்..'அப்பிடின்னு இருந்ததெல்லாம் அந்தக்காலம்.//

    ஞானம் என்று நான் சொன்னது எந்த மொழியிலும் இலக்கணம், இலக்கியம் என்று அதிகப்புலமை கிடையாது என்பதாகச் சொல்லவந்தேன். மற்றபடி தமிழில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளிலும், மன்றத் தேர்வுகளிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தேன் என்பதைத் தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விழைகிறேன் (மற்ற வகுப்புகளிலும் தமிழில் எப்போதுமே முதல் மதிப்பெண்தான்). பள்ளிப்பாடங்களில் இருந்த செய்யுள்கள், பாடல்களைப்படித்ததொடு சரி, அதற்கு மேல் எதையும் படிக்கவில்லை.

    தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது மொழி கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் நான் தேர்ந்தெடுத்தது சௌராஷ்டிர மொழி (காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, அப்போது தஞ்சையில் விடுமுறைக்குப் போகும்போது வீட்டிற்கு அருகில் ஒரு பெண்மணி கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்). முதல் நாள் வகுப்புக்கு நானும், என் தம்பியும் (சித்தி பையன்) போனதும், அவர் ஒரு பெரிய சுலோகம் ஒன்றைக்கொடுத்து இதை முதலில் மனப்பாடம் செய்துகொண்டு வா, நாளை வரும்போது என்றார். அன்றோடு எஸ்கேப் ஆனவர்கள்தான், அதன்பின் அந்தப்பக்கம் வழியாகப் போவதையே தவிர்த்தோம். அப்படியும் அந்த மாமி ஒருநாள் வழியில் பார்த்துவிட்டு ஏன் வரவில்லை என்று கேட்டார். அதன்பின் அவரே நான் மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை, சும்மா படித்துவிட்டுதான் வரச் சொன்னேன் என்றார். இருந்தும் நாங்கள் போகவில்லை.

    அதன்பின் ஹிந்தி வகுப்பு அருகிலேயே இருந்ததால் அதில் சேர்ந்தேன். மற்றபடி வட மாநிலங்களில் வேலை தேட என்று ஒருபோதும் நினைத்துப் படித்தது கிடையாது. ஆனால் அது பின்னால் உபயோகப்பட்டது.

    என்னுடைய தமிழ்ப்பற்று உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

    ReplyDelete
  192. நீங்களாவது என்னை 'ஸ்பேர்' பண்ணினீர்களே! 'அதெப்படி உடைஞ்ச பிள்ளையாரை ஆராதிக்கலாம்?' என்று தாத்தாவைக் 'கோட்' பண்ணிக் காலை வாருவீர்கள் என்று நினைத்தேன்.காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானிகருடைய பேத்தி அல்லவா? 'ஆதென்டிக்'கா ஏதாவது சொல்லிவிடுவீர்கள் என்று பயந்து இருந்தேன்!//

    அப்படி ஏதுமில்லை. எனக்கு இன்னும் இதில் தெளிவான கருத்து இல்லை. அதனால்தான் இந்த தடவை 'ஸ்பேர்'. இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்???

    ReplyDelete
  193. என்று எத்தனை அணிகள் படை சூழ வந்தாலும் எங்கள் இளைஞர் அணியை
    தொட்டுப் பார்க்கக் கூட முடியாது என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம்//

    ஸ்ஸ்ஸ்ஸ்.......................முடியல!!!

    ReplyDelete
  194. இப்படியே அடுத்த வாரமலர் வரை கருத்து எழுதும் உத்தேசமா?

    சரி... அப்படியே ஆளுக்கு ஒரு கை/கருத்து போட்டா 200 க்கு கொண்டு போய்டலாம்

    ReplyDelete
  195. சரி... அப்படியே ஆளுக்கு ஒரு கை/கருத்து போட்டா 200 க்கு கொண்டு போய்டலாம்//

    சரி நாமளே முடிச்சுடுவோம், என்ன சொல்றீங்க தேமொழி????!!!!!

    ReplyDelete
  196. This comment has been removed by the author.

    ReplyDelete
  197. ///Uma said...

    என்னுடைய தமிழ்ப்பற்று உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.///

    ஓ நன்றாகத் தெரியுமே... கையில் எழுத்தாணியுடன் வரும் சீத்தலை சாத்தனாரின் மறு பிறவியாக..

    இப்பிறவியில் பெரும்பாலும் பிழையாக எழுதுபவர்களுக்கும் எழுத்தாணியில் கொட்டு விழுமே!:):)

    இது ஒன்றே போதாதா!

    ReplyDelete
  198. ///Uma said...
    /////தமிழில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளிலும், மன்றத் தேர்வுகளிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தேன் என்பதைத் தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விழைகிறேன் (மற்ற வகுப்புகளிலும் தமிழில் எப்போதுமே முதல் மதிப்பெண்தான்). பள்ளிப்பாடங்களில் இருந்த செய்யுள்கள், பாடல்களைப்படித்ததொடு சரி, அதற்கு மேல் எதையும் படிக்கவில்லை. //////

    இது தான் இந்த தமிழுக்கே உள்ள தன்மை... தமிழ் என்ற உடன் எப்படி பொங்குது பாருங்கள் உணர்வு...

    தமிழ் என்றதால் மட்டுமா! தமிழ் மேல் காதல் கொண்டாலே உணர்வு எகிறிப் போகாதா!

    'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'

    'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

    ஈசனின் உடுக்கையில் இரட்டைப் பிறவியாய் சகோதரனோடு பிறந்தவள் இல்லையா!

    அது தான் சும்மா அதிருது..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com