மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.7.10

Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

Doubts: மீண்டும் ஒருமுறை நீங்களும், உங்கள் சந்தேகங்களும் பகுதி!

மீண்டும் ஒருமுறை உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று உள்ளேன். ஆகவே உங்களது   சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

மின்னஞ்சலின் Subject பெட்டியில் Doubts in Lessons என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஒரு மின்னஞ்சலில் அதிகபட்சமாக நான்கு கேள்விகள் கேட்கலாம். அதற்கும் மேலாகக் கேள்விகளை  வைத்திருப்பவர்கள் மற்றொரு மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள்.

1. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள்

2. முழுப் பாடத்தையே சந்தேகமாகக் கேட்டு மீண்டும் அதே பாடத்தை எழுத வைக்காதீர்கள்.

3. வகுப்பறைப் பதிவேட்டில் உள்ளவர்கள் (Follower's List)  மட்டுமே வகுப்பறை மாணவர்கள். அவர்கள் மட்டுமே கேள்விகள் கேட்கலாம். மின்னஞ்சலில் இதைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் உங்களின் லிங்கைக்
கொடுக்கவும். தேவையில்லாமல் உள்ளே நுழைபவர்களை வடிகட்ட, இது தேவைப்படுகிறது.

4. பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தின் பலனை அறிந்து கொள்ளும்  முகமாகக் கேள்விகள்
கேட்பதைத் தவிர்க்கவும். உங்கள் கேள்வி மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். சொந்தக் கதை, சோகக் கதைகளுக்கெல்லாம், பின்னால்
தனியாக வகுப்பு வைக்க உள்ளேன். கச்சேரியை  அப்போது வைத்துக் கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------
புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும்  சரியாகப் படிக்காததால்
சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள்
சந்தேகங்களை முன்பு ஒரு முறை தீர்த்து வைத்தேன். ஆகவே
படித்தும் சந்தேகம் உள்ளவர்கள் மட்டும் சந்தேகங்களை எழுதுங்கள்.
பாடத்தை முழுவதுமாகப் படித்திராதவர்கள் அவற்றைப் படிக்கவும்.

24.12.2009 - 2.2.2010 வரை மொத்தம் 24 பதிவுகளில், வந்த கேள்விகளுக்கான பதில்களை எழுதினேன். 100 மாணவர்கள், 100 மின்னஞ்சல்கள், 300 ற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்

Side Bar ல் முன்பு நடத்தப்பெற்ற கேள்வி - பதில் வகுப்பின் சுட்டிகள் உள்ளன.  Doubts - Lessons 1 - 30 என்று  இருக்கும். அதைக்
கிளிக்கிப் பார்த்து உங்கள் சந்தேகத்தை இதற்கு முன்பே யாராவது கேட்டு, வாத்தியார்பதிலையும் கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் கேட்கப்படாத கேள்வி என்றால்,  நீங்கள்
இப்போது கேட்கலாம்.
-------------------------------------------------
இப்போது ஒரு குட்டிக் கதை:
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றான்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை  நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது  
chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன்
நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான், “Father,  பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார், “இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து  நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை,  பொதுச் சந்தேகம் போல தோற்ற மளிக்கும்படி யாரும் கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்து வரும் ஆகஸ்ட் திங்கள் முழுவதும் சந்தேகங்கள் தீர்க்கப்படும். அரசில் குறை கேட்கும் மாதம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், இரண்டு அல்லது மூன்று சந்தேகங்களுக்கு (பதில்களின் அளவைப் பொறுத்து) பதில்  அளிக்கப்படும்.ஆகவே எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளே பதில் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

வரிசைப்படி வரும்.

எங்கே பார்க்கலாம்....முதல் மூன்று கேள்விகள் யாருடையதென்று!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

53 comments:

  1. குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது நல்லது செய்வாரா ?

    மிக்க நன்றி

    ReplyDelete
  2. //////Shyam Prasad said...
    குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது நல்லது செய்வாரா?
    மிக்க நன்றி/////

    ஏன் செய்ய மாட்டார்?
    “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!”
    என்ன, முழு அளவு செய்ய மாட்டார். குறைவாகச் செய்வார்.

    ReplyDelete
  3. நன்றி . .
    கேள்விகள் மின்னஞ்சலில் . .

    உங்களின் அன்பான இந்த சந்தேக விளக்கம் பகுதி . .
    எங்கள் அறியாமையை போக்க உதவிடும். .

    எட்டாமிடம் முடிந்தவுடன் கேள்விகளை சந்தேகங்களை கேட்க சொன்ன வாத்தியார் சரியாக சிலபஸ் படி நடத்துகிறார் என்பதற்கு இது ஒரு மாதிரி . . .

    எங்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண் தருவது எப்போது என சொன்னால் மீண்டும் ஒரு முறை எங்களை தயார் செய்து கொள்ள எளிதாக இருக்கும் அல்லவா . . .

    வகுப்பறை மாணவர்கள் ஒவ்வொருவரையும் தெளிவான சோதிடாராக்கும் உங்கள் முயற்சிக்கு மனம் நிறைய நல் வாழ்த்துக்கள் . . உங்கள் மனம் நிறைய. . .

    ReplyDelete
  4. Ayya Vanakam

    Two days before i saw one site there rahu placed in rishabam got ucha power and kethu in viruchigam there got ucha place but change both are reversly got neesam please calrify that doubts sir

    thanks with regards
    yours student SPK

    ReplyDelete
  5. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். சில சோதிடர்களிடம் இறந்த ஜாதகத்தை கொடுத்தால் இவர் இறந்த ஜாதகம் என்று கண்டிபிடுத்துவிடுகிறார்கள் எப்படி அய்யா?

    ReplyDelete
  6. sir any different between palm astro... and normal (ஜாதகம்)
    astrogology?

    ReplyDelete
  7. /////iyer said...
    நன்றி . .
    கேள்விகள் மின்னஞ்சலில் . .
    உங்களின் அன்பான இந்த சந்தேக விளக்கம் பகுதி . .
    எங்கள் அறியாமையை போக்க உதவிடும். .
    எட்டாமிடம் முடிந்தவுடன் கேள்விகளை சந்தேகங்களை கேட்க சொன்ன வாத்தியார் சரியாக சிலபஸ் படி நடத்துகிறார் என்பதற்கு இது ஒரு மாதிரி . . .
    எங்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண் தருவது எப்போது என சொன்னால் மீண்டும் ஒரு முறை எங்களை தயார் செய்து கொள்ள எளிதாக இருக்கும் அல்லவா . . .
    வகுப்பறை மாணவர்கள் ஒவ்வொருவரையும் தெளிவான சோதிடாராக்கும் உங்கள் முயற்சிக்கு மனம் நிறைய நல் வாழ்த்துக்கள் . . உங்கள் மனம் நிறைய. . .////

    நல்லது. தேர்வுதானே...வைத்துவிட்டால் போகிறது. கேள்வி பதில் வகுப்பு நிறைவடையட்டும் செய்துவிடலாம்.

    ReplyDelete
  8. /////KKK said...
    Ayya Vanakam
    Two days before i saw one site there rahu placed in rishabam got ucha power and kethu in viruchigam there got ucha place but change both are reversly got neesam please calrify that doubts sir
    thanks with regards
    yours student SPK///////

    அவர்கள் எதையோ எழுதிவிட்டுப்போகிறார்கள். ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.

    ReplyDelete
  9. ////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். சில சோதிடர்களிடம் இறந்த ஜாதகத்தை கொடுத்தால் இவர் இறந்த ஜாதகம் என்று கண்டிபிடுத்துவிடுகிறார்கள் எப்படி அய்யா?////

    ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? குறும்புதானே?

    ReplyDelete
  10. ////sampath said...
    sir any different between palm astro... and normal (ஜாதகம்)
    astrogology?////

    ஜோதிடம் பரதநாட்டியம் போன்றது. கைரேகைக்கலை டிஸ்கோ நடனம். இரண்டிற்கும் ஜதி, தாளம் எல்லாம் வேறாகும்!

    ReplyDelete
  11. ஆஹா அருமை. மீண்டும் சந்தேகங்களுக்கு பதில் சொல்வதற்கு நன்றி. இப்பொழுதே மறுபடியும் முதலில் இருந்து பாடங்களை படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    ஆள் கிடச்சா விடுவமா?

    ReplyDelete
  12. Dear sir,

    Thanks for good efforts, this session surely clarify so doubts of so many people following you here.

    with regards

    ReplyDelete
  13. கேள்வியும்? பதிலும்!!!!
    கணைகள் தொடரும், பதில்க்
    கனிகள் மடியில் வந்து விழும்.
    """இப்படியும் வரலாம்..""""
    பெரும்பாலும் பிரியாதது எதுவோ?
    சூரியனும் புதனும்,
    பிரிந்தே இருப்பது?
    ராகும் கேதும்
    இருக்கவேண்டியது?
    லக்னத்தில் குரு
    இருக்ககூடாதது?
    மகர,கும்பம் தவிர்த்து லக்னத்தில் சனியோடு மாந்தி.
    சேரவேண்டியது?
    குருவும் சந்திரனும்
    சேரக்கூடாதது?
    சனியும் புதனும்...
    கேட்க்கக் கூடாதது?
    சுய ஜாதக கேள்வி
    கேட்க கூடியது?
    பாடத்தில் புரிந்து கொள்ள முடியாதது...
    தகவலுக்கு?
    ஆனந்த்!
    பகிர்வுக்கு?
    கிருஷ்ணன் சார்!
    தகவலும் பகிர்வும் சேர்ந்தே வருவது?
    மைனர்வால்..........
    கேள்விக்கு?
    வகுப்பறை மாணவர்கள்
    பதிலுக்கு?
    திருவாளர் வகுப்பறை வாத்தியார்.....
    அரியதொரு தகவல்
    அறிய பல பதில்கள்...
    காத்திருப்பேன் கனிவோடு...

    ReplyDelete
  14. ஐயா, பாடங்கள் அருமை. எனக்கு சில சந்தேகங்கள்.

    1. மிதுன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் நல்லதா? எட்டாம் இடத்திற்கு 23 பரல்கள். சுக்கிரனுக்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள்.

    2. 9-ஆம் இடத்து அதிபதி சனியும் 10-ஆம் இடத்து அதிபதி குருவும் சேர்ந்து 4 - ஆம் வீட்டில் இருந்தால் யோகம் எப்பொழுது பலன் தரும்.

    3. 4 - ஆம் வீட்டு அதிபதி புதனும் 9-ஆம் இடத்து அதிபதி சனியும் பரிவர்த்தனை ஆனால் பலன் எப்பொழுது கிடைக்கும்.

    தயவு செய்து பதில் சொல்ல முடியுமா அய்யா?

    ReplyDelete
  15. வணக்கம் sir ,
    எட்டாம் இடத்து பாடம் மிகவும் நன்று ,

    1 ) மரணம் வருவது 2 மற்றும் 7 ஆம் வீட்டு அதிபதி அல்லது பாதகாதிபதி வைத்து சொல்லலாம் , அப்போது ரகு & கேது திசை / புத்திகளில் மரணம் நிகழாதா ? அல்லது அதை எப்படி சொல்வது ,.

    இன்னொரு கருத்து ,,, பிறப்பு மற்றும் இறப்பு பிரம்ம ரகசியம் அதை துல்லியமாக சொல்ல முடியாது என்பது உண்மையா ? , எனக்கும் அது மட்டும் பிரம்ம இரகசிமாக இருப்பதில் தான் உடன்பாடு உங்கள் கருத்து ,...

    ReplyDelete
  16. /////phoenix said...
    ஆஹா அருமை. மீண்டும் சந்தேகங்களுக்கு பதில் சொல்வதற்கு நன்றி. இப்பொழுதே மறுபடியும் முதலில் இருந்து பாடங்களை படிக்க ஆரம்பித்து விட்டேன்.
    ஆள் கிடச்சா விடுவமா?/////

    இப்படித்தான் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்! (படித்துத் தேறுவதற்கு!)

    ReplyDelete
  17. ////Ram said...
    Dear sir,
    Thanks for good efforts, this session surely clarify so doubts of so many people following you here.
    with regards////

    நல்லது.. நன்றி ராம்!

    ReplyDelete
  18. //////Alasiam G said...
    கேள்வியும்? பதிலும்!!!!
    கணைகள் தொடரும், பதில்க்
    கனிகள் மடியில் வந்து விழும்.
    """இப்படியும் வரலாம்..""""
    பெரும்பாலும் பிரியாதது எதுவோ?
    சூரியனும் புதனும்,
    பிரிந்தே இருப்பது?
    ராகும் கேதும்
    இருக்கவேண்டியது?
    லக்னத்தில் குரு
    இருக்ககூடாதது?
    மகர,கும்பம் தவிர்த்து லக்னத்தில் சனியோடு மாந்தி.
    சேரவேண்டியது?
    குருவும் சந்திரனும்
    சேரக்கூடாதது?
    சனியும் புதனும்...
    கேட்க்கக் கூடாதது?
    சுய ஜாதக கேள்வி
    கேட்க கூடியது?
    பாடத்தில் புரிந்து கொள்ள முடியாதது...
    தகவலுக்கு?
    ஆனந்த்!
    பகிர்வுக்கு?
    கிருஷ்ணன் சார்!
    தகவலும் பகிர்வும் சேர்ந்தே வருவது?
    மைனர்வால்..........
    கேள்விக்கு?
    வகுப்பறை மாணவர்கள்
    பதிலுக்கு?
    திருவாளர் வகுப்பறை வாத்தியார்.....
    அரியதொரு தகவல்
    அறிய பல பதில்கள்...
    காத்திருப்பேன் கனிவோடு...
    அறிய பல பதில்கள்...
    காத்திருப்பேன் கனிவோடு.../////

    அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளவும்.

    பரிசுக்கு?
    ஆலாசியம் கோவிந்தசாமி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>
    யாரப்பா அங்கே? ஆலாசியம் பாண்டியனைப் போய்ப் பார்க்க வேண்டாம். ஆயிரம் பொற்காசுகளை இங்கேயே கொடுத்து விடுங்கள். அத்துடன் மலேசியன் சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஒரு ஃப்ரீ டிக்கெட் போட்டு ஏற்றி அனுப்பி வைத்துவிடுங்கள்.

    ReplyDelete
  19. //////Manivannan said...
    ஐயா, பாடங்கள் அருமை. எனக்கு சில சந்தேகங்கள்.
    1. மிதுன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் நல்லதா? எட்டாம் இடத்திற்கு 23 பரல்கள். சுக்கிரனுக்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள்.
    2. 9-ஆம் இடத்து அதிபதி சனியும் 10-ஆம் இடத்து அதிபதி குருவும் சேர்ந்து 4 - ஆம் வீட்டில் இருந்தால் யோகம் எப்பொழுது பலன் தரும்.
    3. 4 - ஆம் வீட்டு அதிபதி புதனும் 9-ஆம் இடத்து அதிபதி சனியும் பரிவர்த்தனை ஆனால் பலன் எப்பொழுது கிடைக்கும்.
    தயவு செய்து பதில் சொல்ல முடியுமா அய்யா?///////

    பதிவை மீண்டும் படியுங்கள். கேள்விகளை பெட்டியில் போடச் சொல்லியிருக்கிறேன். என் சட்டைப் பையில் சொருகி விட்டுப் போனால் என்ன அர்த்தம்? மின்னஞ்சல் பெட்டியில் போடுங்கள். அப்போதுதான் பதில் வரும். இல்லையென்றால் வராது! சொந்தச் ஜாதகத்தை வைத்தே உருட்டியிருக்கிறீர்கள். பொதுவான சந்தேகங்களை மட்டும் கேளுங்கள்!

    ReplyDelete
  20. KKK சொன்னது போல்தான் பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் உள்ளது. அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

    Ch. 47 sl.34-39 1/2. In order to clarify the effects of the Dasha of Rahu I shall first mention the exaltation and debilitation Rāśis of Rahu and Ketu. The exaltation Rāśi of Rahu is Vrishabh. The exaltation Rāśi of Ketu is Vrischik. The Multrikonas of Rahu and Ketu are Mithun and Dhanu. The own Rāśis of Rahu and Ketu are Kumbh and Vrischik. Some sages have expressed the view, that Kanya is the own Rāśi of Rahu and Meen is the own Rāśi of Ketu.

    வீமசாரம், ஜாதக அலங்காரம் போன்றவற்றில்தான் தாங்கள் சொல்வது போல் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஜோதிடர்களிடையே ஒத்த கருத்து இல்லை என்பதுதான் உண்மை. இதைப் பற்றிய ஒரு இணையத்தளம் ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.

    http://www.barbarapijan.com/bpa/Topics/Rahu_Ketu_uchcha_neechcha.htm

    ReplyDelete
  21. நல்லவேளை தப்பித்தேன்......
    நீண்ட பின்னூட்ட கிறுக்கலுக்கு?
    பதிலாக வந்துவிடுமோ என்ற கவலையில் இருந்து???,,..
    இறையனாரின் அருள் பெற்ற பெருந்தகையே..
    நன்றிகள் பல உருத்தாகட்டும் ஐயா!

    ReplyDelete
  22. சகோதரர் ஆலோசியம்,
    லக்கனத்தில் குரு இருக்கணும்மா நான் சிம்ம லக்கனம் அதிலே குரு இருக்கிறார் ரொமப கஷ்டததை கொடுக்கிறார்
    சுந்தரி

    ReplyDelete
  23. ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.

    Does Raghu and ketu ucha power in viruchigam is a good thing or they give more trouble when they are in viruchigam?

    ReplyDelete
  24. ஐயா,
    சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். இந்தியாவில் நிமிடத்துக்கு 4 குழந்தை பிறக்கிறது. 120 நிமிடத்துக்கு 480 குழந்தைகள் ஒரே லக்னத்தில் ஒரே ஜாதகத்தில் பிறக்கின்றன. ஆனால் 480 சூப்பர் ஸ்டார்களோ, 480 சச்சின் டெண்டுல்கர்களோ இல்லை. இதற்கு காரணம் என்ன?

    ( நமக்குனு ஒரு குன்ஸு இருக்குங்கண்ணா . நீங்க அஃபிஷியலா,தியரிட்டிக்கலா எத்தனையோ மேட்டர் சொல்றிங்க இந்த மேட்டர்ல என்ன சொல்றிங்க பார்க்கலாமேனு ஒரு ...இது)

    ReplyDelete
  25. பதிவை மீண்டும் படியுங்கள். கேள்விகளை பெட்டியில் போடச் சொல்லியிருக்கிறேன். என் சட்டைப் பையில் சொருகி விட்டுப் போனால் என்ன அர்த்தம்? மின்னஞ்சல் பெட்டியில் போடுங்கள். அப்போதுதான் பதில் வரும். இல்லையென்றால் வராது! சொந்தச் ஜாதகத்தை வைத்தே உருட்டியிருக்கிறீர்கள். பொதுவான சந்தேகங்களை மட்டும் கேளுங்கள்!///

    சார் வ‌ண‌க்க‌ம்,

    8ம் இட‌ம் ப‌ற்றிய‌ பாட‌ம் ரொம்ப‌ ந‌ல்லாயிருந்த‌து. ரொம‌ப‌ ந‌ன்றி சார். ச‌கோத‌ர‌ர் ம‌ணிவ‌ன்ன‌ன் பாவ‌ம் சார். அவ‌ருக்கு முத‌லில் ந‌ம்ப‌ ச‌ந்தேக‌ வ‌குப்பிலே ப‌தில் கொடுக்க‌ணும். அதுதான் முத‌ல் கேள்வி.எல்லாத்தையும் திரும்ப‌ ப‌டிக்கிறேன் ப‌ரிட்சைக்கு தயாராகிறேன்.
    சுந்த‌ரி

    ReplyDelete
  26. கவிதை நடைக்கு..
    கோ.ஆலாசியம் -------
    இதை நீங்களே எழுதினால் நல்லா இருக்காதுன்னு மிஸ் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்..அதான் நான் சேர்த்துட்டேன்.

    கேட்கக் கூடாதது-
    சுய ஜாதகக் கேள்வி
    என்று வாத்தியார் பக்கம் ஒரு இடிப்பு..ஆஹா..
    என் போன்ற எத்தனை உள்ளங்கள் நல்லா உச்சி குளிர்ந்திருக்கும்..
    இடிப்பாரே இல்லாத மன்னனாக எவ்வளவு நாள்தான் எல்லோருமே செயல்பட முடியும்?
    நல்லா கற்பனை பண்ணிருக்கீங்க..நன்றி..

    ReplyDelete
  27. என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி ஆலாசியம் அவர்களே. பாடத்தோடு சக மாணவர்களையும் கூர்ந்து கவணித்திருக்கிறீர்கள்.

    வாத்தியார் யாருடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார் என்று பார்த்து (படித்து) தெரிந்து கொள்கிறேன். வழக்கம் போல் என்னிடமிருந்து எந்த கேள்வியும் வராது.

    சந்தேகம் என்றதும் என் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். வகுப்பறை மாணவர் ஒருவர். 63 வயதாகிறது. அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் மூலமாக ஜோதிடத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்வார். நானும் எனக்கு தெரிந்த வரையில் பதில் தந்து அவர் சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். பொதுவாக ஜோதிடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத்தான் என்னிடம் கேட்பார். தன்னுடைய தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து எதுவும் கேட்டதில்லை. தன் ஜாதகத்தைக் கொடுத்து தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தன் ஜாதகத்தில் உள்ள எந்த அம்சத்தால் என்ன நேர்ந்தது நான் தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தார். சில காலத்திற்குப் பிறகு என்னிடம் உள்ள ஜாதகங்களை வைத்து முழு மூச்சில் ஆராய்ச்சி செய்ய உள்ளேன்.

    ReplyDelete
  28. ஐயா வணக்கம்...!
    மீண்டும் மாணவர்களின் சந்தேகங்களுக்காக கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்பதை அறிந்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி.. மீண்டும் ஒருமுறை இது போன்ற வாய்ப்பளித்தமைக்காக மிக்க நன்றிகள். இதேபோல், பிரபலங்களின் ஜாதகங்களை வைத்து (தங்களுடைய ஜாதகத்தையும் சேர்த்துத்தான்.. தங்களுக்கு சிம்ம லக்கினம், மகர ராசி, லக்கினத்தில் ஆறாமாதிபதி சனி - ஆறில் சந்திரனுடன் லக்கினாதிபதி சூரியன் - தைன்ய பரிவர்த்தனை யோகம் - இவ்வளவுதான் தெரியும். ஆனால் மீதியையும் தெரிந்து கொள்ள ஆவல்) சில வகுப்புகள்.. நேர மேலாண்மையைப்பற்றி (நேரம் இருக்கும்போது) சில வகுப்புக்கள் வரும் என்று சொல்லியிருந்தீர்களே.. அவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்பார்க்கலாமா, ஐயா...?

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  29. ////Soundarraju said... வணக்கம் sir ,
    எட்டாம் இடத்து பாடம் மிகவும் நன்று ,
    1 ) மரணம் வருவது 2 மற்றும் 7 ஆம் வீட்டு அதிபதி அல்லது பாதகாதிபதி வைத்து சொல்லலாம் , அப்போது ராகு & கேது திசை / புத்திகளில் மரணம் நிகழாதா ? அல்லது அதை எப்படி சொல்வது ,.////////

    ராகு/கேது திசைகளில் மற்ற கிரகங்களின் புத்தி/அந்தரங்கள் வருமே! அத்துடன் ராகு சனியினுடைய பலனையும், கேது செவ்வாயினுடைய பலனையும் தரக்கூடியவர்கள். 2 & 7 உடன் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுடைய புத்திகளிலும் மரணம் ஏற்படலாம்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ///////இன்னொரு கருத்து ,,, பிறப்பு மற்றும் இறப்பு பிரம்ம ரகசியம் அதை துல்லியமாக சொல்ல முடியாது என்பது உண்மையா ? , எனக்கும் அது மட்டும் பிரம்ம இரகசிமாக இருப்பதில் தான் உடன்பாடு உங்கள் கருத்து ,.../////

    உண்மைதான். ஜோதிடன் கோடிட்டு மட்டுமே காட்டமுடியும். உறுதியாகச் சொல்ல முடியாது. An astrologer can indicate what is going to happen. That is all. He can not certainly say what will take place

    ReplyDelete
  30. ////Soundarraju said... வணக்கம் sir ,
    எட்டாம் இடத்து பாடம் மிகவும் நன்று ,
    1 ) மரணம் வருவது 2 மற்றும் 7 ஆம் வீட்டு அதிபதி அல்லது பாதகாதிபதி வைத்து சொல்லலாம் , அப்போது ராகு & கேது திசை / புத்திகளில் மரணம் நிகழாதா ? அல்லது அதை எப்படி சொல்வது ,.////////

    ராகு/கேது திசைகளில் மற்ற கிரகங்களின் புத்தி/அந்தரங்கள் வருமே! அத்துடன் ராகு சனியினுடைய பலனையும், கேது செவ்வாயினுடைய பலனையும் தரக்கூடியவர்கள். 2 & 7 உடன் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுடைய புத்திகளிலும் மரணம் ஏற்படலாம்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ///////இன்னொரு கருத்து ,,, பிறப்பு மற்றும் இறப்பு பிரம்ம ரகசியம் அதை துல்லியமாக சொல்ல முடியாது என்பது உண்மையா ? , எனக்கும் அது மட்டும் பிரம்ம இரகசிமாக இருப்பதில் தான் உடன்பாடு உங்கள் கருத்து ,.../////

    உண்மைதான். ஜோதிடன் கோடிட்டு மட்டுமே காட்டமுடியும். உறுதியாகச் சொல்ல முடியாது. An astrologer can indicate what is going to happen. That is all. He can not certainly say what will take place

    ReplyDelete
  31. ananth said...
    KKK சொன்னது போல்தான் பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் உள்ளது. அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
    Ch. 47 sl.34-39 1/2. In order to clarify the effects of the Dasha of Rahu I shall first mention the exaltation and debilitation Rāśis of Rahu and Ketu. The exaltation Rāśi of Rahu is Vrishabh. The exaltation Rāśi of Ketu is Vrischik. The Multrikonas of Rahu and Ketu are Mithun and Dhanu. The own Rāśis of Rahu and Ketu are Kumbh and Vrischik. Some sages have expressed the view, that Kanya is the own Rāśi of Rahu and Meen is the own Rāśi of Ketu.
    வீமசாரம், ஜாதக அலங்காரம் போன்றவற்றில்தான் தாங்கள் சொல்வது போல் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஜோதிடர்களிடையே ஒத்த கருத்து இல்லை என்பதுதான் உண்மை. இதைப் பற்றிய ஒரு இணையத்தளம் ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.
    http://www.barbarapijan.com/bpa/Topics/Rahu_Ketu_uchcha_neechcha.htm//////

    அய்யா சாமி, இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள்!:-)))))

    ReplyDelete
  32. //////Chittoor.S.Murugesan said...
    ஐயா,
    சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். இந்தியாவில் நிமிடத்துக்கு 4 குழந்தை பிறக்கிறது. 120 நிமிடத்துக்கு 480 குழந்தைகள் ஒரே லக்னத்தில் ஒரே ஜாதகத்தில் பிறக்கின்றன. ஆனால் 480 சூப்பர் ஸ்டார்களோ, 480 சச்சின் டெண்டுல்கர்களோ இல்லை. இதற்கு காரணம் என்ன?
    (நமக்குனு ஒரு குன்ஸு இருக்குங்கண்ணா . நீங்க அஃபிஷியலா,தியரிட்டிக்கலா எத்தனையோ மேட்டர் சொல்றிங்க இந்த மேட்டர்ல என்ன சொல்றிங்க பார்க்கலாமேனு ஒரு ...இது)/////

    நல்ல கேள்வி சித்தூர் முருகேசன். நீங்கள் தொழில்முறை ஜோதிடர். ஜோதிட ஆய்வாளர். செய்தித்துறையில் இருக்கிறீர்கள். இரண்டு மொழிகளில் பாண்டித்துவம் மிக்கவர். (தமிழ், தெலுங்கு) நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? நான் என்ன சொல்வேன் என்று பார்க்க இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். சரிதான். உங்களின் ஆர்வம் வாழ்க! வளர்க! கேள்வி - பதில் பகுதி 2.8.2010 திங்களன்று துவங்குகிறது. முதல் நாள் பதிவில் உங்கள் கேள்வியும், அதற்கான என்னுடைய பதிலும் வெளியாகும். அதுவரை பொறுத்திருங்கள். பதிவில் சொன்னால்தான் பலரையும் சென்றடையும்! நன்றி!

    ReplyDelete
  33. ////ananth said...
    என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி ஆலாசியம் அவர்களே. பாடத்தோடு சக மாணவர்களையும் கூர்ந்து கவணித்திருக்கிறீர்கள்.
    வாத்தியார் யாருடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார் என்று பார்த்து (படித்து) தெரிந்து கொள்கிறேன். வழக்கம் போல் என்னிடமிருந்து எந்த கேள்வியும் வராது.
    சந்தேகம் என்றதும் என் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். வகுப்பறை மாணவர் ஒருவர். 63 வயதாகிறது. அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் மூலமாக ஜோதிடத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்வார். நானும் எனக்கு தெரிந்த வரையில் பதில் தந்து அவர் சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். பொதுவாக ஜோதிடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத்தான் என்னிடம் கேட்பார். தன்னுடைய தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து எதுவும் கேட்டதில்லை. தன் ஜாதகத்தைக் கொடுத்து தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தன் ஜாதகத்தில் உள்ள எந்த அம்சத்தால் என்ன நேர்ந்தது நான் தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தார். சில காலத்திற்குப் பிறகு என்னிடம் உள்ள ஜாதகங்களை வைத்து முழு மூச்சில் ஆராய்ச்சி செய்ய உள்ளேன்./////

    நல்லது. உங்களின் ஆராய்ச்சி பலருக்கும் பயன்படும். அதைச்செய்யுங்கள் நன்றி!

    ReplyDelete
  34. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "ஆகஸ்ட் திங்கள் முழுவதும் சந்தேகங்கள் கேட்கும் மாதம்"- மிகவும் சிறப்பான அறிவிப்பு.மிக்க மகிழ்ச்சி.

    படிக்கும் போது சந்தேகம் ஏதும் இல்லை.எல்லாவற்றையும் மனதில் நிறுத்துவது தான் சிரமமாக உள்ளது.
    மீண்டும் ஒருமுறை பாடங்களைப் படித்துவிட்டு சந்தேகம் இருப்பின்
    சந்தேகங்கள் கேட்கும் மாதத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன்.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-28

    ReplyDelete
  35. ////Alasiam G said...
    நல்லவேளை தப்பித்தேன்......
    நீண்ட பின்னூட்ட கிறுக்கலுக்கு?
    பதிலாக வந்துவிடுமோ என்ற கவலையில் இருந்து???,,..
    இறையனாரின் அருள் பெற்ற பெருந்தகையே..
    நன்றிகள் பல உரித்தாகட்டும் ஐயா!/////

    நல்லது. ஆலாசியம்! நன்றி!

    ReplyDelete
  36. ////sundari said...
    சகோதரர் ஆலோசியம்,
    லக்கனத்தில் குரு இருக்கணும்மா நான் சிம்ம லக்கனம் அதிலே குரு இருக்கிறார் ரொமப கஷ்டததை கொடுக்கிறார்
    சுந்தரி////

    அவர் சிம்ம லக்கினத்திற்கு 5 & 8ஆம் வீடுகளுக்கு உரியவர். அதனால் இன்பம், துன்பம் இரண்டும் இருக்கும்!

    ReplyDelete
  37. /////Monickam said...
    ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.
    Does Raghu and ketu ucha power in viruchigam is a good thing or they give more trouble when they are in viruchigam?///////

    உச்சமானதற்கு வேறு என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் நல்லததைத்தான் செய்வார்கள்!

    ReplyDelete
  38. //////sundari said...
    பதிவை மீண்டும் படியுங்கள். கேள்விகளை பெட்டியில் போடச் சொல்லியிருக்கிறேன். என் சட்டைப் பையில் சொருகி விட்டுப் போனால் என்ன அர்த்தம்? மின்னஞ்சல் பெட்டியில் போடுங்கள். அப்போதுதான் பதில் வரும். இல்லையென்றால் வராது! சொந்தச் ஜாதகத்தை வைத்தே உருட்டியிருக்கிறீர்கள். பொதுவான சந்தேகங்களை மட்டும் கேளுங்கள்!///
    சார் வ‌ண‌க்க‌ம்,
    8ம் இட‌ம் ப‌ற்றிய‌ பாட‌ம் ரொம்ப‌ ந‌ல்லாயிருந்த‌து. ரொம‌ப‌ ந‌ன்றி சார். ச‌கோத‌ர‌ர் ம‌ணிவ‌ன்ன‌ன் பாவ‌ம் சார். அவ‌ருக்கு முத‌லில் ந‌ம்ப‌ ச‌ந்தேக‌ வ‌குப்பிலே ப‌தில் கொடுக்க‌ணும். அதுதான் முத‌ல் கேள்வி.எல்லாத்தையும் திரும்ப‌ ப‌டிக்கிறேன் ப‌ரிட்சைக்கு தயாராகிறேன்.
    சுந்த‌ரி/////

    நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  39. /////minorwall said...
    கவிதை நடைக்கு..
    கோ.ஆலாசியம் -------
    இதை நீங்களே எழுதினால் நல்லா இருக்காதுன்னு மிஸ் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்..அதான் நான் சேர்த்துட்டேன்.
    கேட்கக் கூடாதது-
    சுய ஜாதகக் கேள்வி
    என்று வாத்தியார் பக்கம் ஒரு இடிப்பு..ஆஹா..
    என் போன்ற எத்தனை உள்ளங்கள் நல்லா உச்சி குளிர்ந்திருக்கும்..
    இடிப்பாரே இல்லாத மன்னனாக எவ்வளவு நாள்தான் எல்லோருமே செயல்பட முடியும்?
    நல்லா கற்பனை பண்ணிருக்கீங்க..நன்றி..//////

    எல்லாம் உங்களை மகிழ்விக்கத்தான் மைனர்!

    ReplyDelete
  40. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    மீண்டும் மாணவர்களின் சந்தேகங்களுக்காக கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்பதை அறிந்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி.. மீண்டும் ஒருமுறை இது போன்ற வாய்ப்பளித்தமைக்காக மிக்க நன்றிகள். இதேபோல், பிரபலங்களின் ஜாதகங்களை வைத்து (தங்களுடைய ஜாதகத்தையும் சேர்த்துத்தான்.. தங்களுக்கு சிம்ம லக்கினம், மகர ராசி, லக்கினத்தில் ஆறாமாதிபதி சனி - ஆறில் சந்திரனுடன் லக்கினாதிபதி சூரியன் - தைன்ய பரிவர்த்தனை யோகம் - இவ்வளவுதான் தெரியும். ஆனால் மீதியையும் தெரிந்து கொள்ள ஆவல்) சில வகுப்புகள்.. நேர மேலாண்மையைப்பற்றி (நேரம் இருக்கும்போது) சில வகுப்புக்கள் வரும் என்று சொல்லியிருந்தீர்களே.. அவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்பார்க்கலாமா, ஐயா...?
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    ஆகா, எதிர்பார்க்கலாம். உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்!

    ReplyDelete
  41. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    மீண்டும் மாணவர்களின் சந்தேகங்களுக்காக கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்பதை அறிந்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி.. மீண்டும் ஒருமுறை இது போன்ற வாய்ப்பளித்தமைக்காக மிக்க நன்றிகள். இதேபோல், பிரபலங்களின் ஜாதகங்களை வைத்து (தங்களுடைய ஜாதகத்தையும் சேர்த்துத்தான்.. தங்களுக்கு சிம்ம லக்கினம், மகர ராசி, லக்கினத்தில் ஆறாமாதிபதி சனி - ஆறில் சந்திரனுடன் லக்கினாதிபதி சூரியன் - தைன்ய பரிவர்த்தனை யோகம் - இவ்வளவுதான் தெரியும். ஆனால் மீதியையும் தெரிந்து கொள்ள ஆவல்) சில வகுப்புகள்.. நேர மேலாண்மையைப்பற்றி (நேரம் இருக்கும்போது) சில வகுப்புக்கள் வரும் என்று சொல்லியிருந்தீர்களே.. அவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்பார்க்கலாமா, ஐயா...?
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    ஆகா, எதிர்பார்க்கலாம். உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்!

    ReplyDelete
  42. /////Muthu said...
    I am present//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. கதை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. பல ஜோலிகளால் வகுப்பறைக்கு தாமதமாக வருகிறேன்.வந்து பார்த்தால்
    கேள்வி‍‍=பதில் பற்றிய அறிவுப்பு வகுப்பறயில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது
    தெரிந்தது. ஹாலாஸ்யத்தின் ஹாஸ்யத்தில் என் பெயரும் இடம் பிடித்து
    உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏதோ ஒரு சிலராவது பின்னூட்டஙளை கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது ஆறுதல்.

    அனந்த் ஒரு பிளாக் வைத்துள்ளார்.ஆனால் ஒரு பதிவு கூட இன்னும் போடவில்லை.அவருக்கு இருக்கும் ஆதார நூல்களைப்பற்றிய அறிவுக்கும், ஆய்வு மனப்பான்மைக்கும் அவரும் ஒரு வாத்தியாராக மாறினால் எல்லோருக்கும் நல்லது.அப்போது அவரை நாங்கள் 'சின்ன வாத்தியார்' என்றோ, 'வாத்தியார் 2' என்றோ,'இணை ஆசிரியர்' என்றோ அழைபோம்.இரட்டை நாயனம்,இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது போல‌
    இரண்டு வகுப்பறையும் இருக்கட்டும்.ஆனாலும் அனந்த் அளவுக்கு மீறிய‌
    அடக்கம்தான்.கூட்டைவிட்டு வெளியில் வாருங்கள் அனந்த்

    ReplyDelete
  45. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "ஆகஸ்ட் திங்கள் முழுவதும் சந்தேகங்கள் கேட்கும் மாதம்"- மிகவும் சிறப்பான அறிவிப்பு.மிக்க மகிழ்ச்சி.
    படிக்கும் போது சந்தேகம் ஏதும் இல்லை.எல்லாவற்றையும் மனதில் நிறுத்துவது தான் சிரமமாக உள்ளது.
    மீண்டும் ஒருமுறை பாடங்களைப் படித்துவிட்டு சந்தேகம் இருப்பின் சந்தேகங்கள் கேட்கும் மாதத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன்.
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் நண்பரே!

    ReplyDelete
  46. /////மதுரை சரவணன் said...
    கதை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்//////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  47. ///////kmr.krishnan said...
    பல ஜோலிகளால் வகுப்பறைக்கு தாமதமாக வருகிறேன்.வந்து பார்த்தால்
    கேள்வி‍‍=பதில் பற்றிய அறிவுப்பு வகுப்பறயில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது
    தெரிந்தது. ஹாலாஸ்யத்தின் ஹாஸ்யத்தில் என் பெயரும் இடம் பிடித்து
    உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏதோ ஒரு சிலராவது பின்னூட்டஙளை கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது ஆறுதல்.
    அனந்த் ஒரு பிளாக் வைத்துள்ளார்.ஆனால் ஒரு பதிவு கூட இன்னும் போடவில்லை.அவருக்கு இருக்கும் ஆதார நூல்களைப்பற்றிய அறிவுக்கும், ஆய்வு மனப்பான்மைக்கும் அவரும் ஒரு வாத்தியாராக மாறினால் எல்லோருக்கும் நல்லது.அப்போது அவரை நாங்கள் 'சின்ன வாத்தியார்' என்றோ, 'வாத்தியார் 2' என்றோ,'இணை ஆசிரியர்' என்றோ அழைபோம்.இரட்டை நாயனம்,இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது போல‌
    இரண்டு வகுப்பறையும் இருக்கட்டும்.ஆனாலும் அனந்த் அளவுக்கு மீறிய‌
    அடக்கம்தான்.கூட்டைவிட்டு வெளியில் வாருங்கள் ஆனந்த்//////

    அழைப்பவர் குரலுக்கு வாருங்கள் ஆனந்த் - வந்து
    அனைவருக்கும் மகிழ்வைத் தாருங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  48. தனிப் பதிவு தொடங்கலாம் என்று அவ்வப் போது நினைப்பதுண்டு. இருப்பினும் வகுப்பறக்கு போட்டி வகுப்பறை நடத்துவது போல் ஆகி விடும் என்பதால் இது நாள் வரை அப்படி செய்ய வில்லை.

    எவ்வளவோ செய்கிறோம். இதைச் செய்ய மாட்டோமா. கூடிய விரைவில் இதற்கு ஆவன செய்வோம்.

    ReplyDelete
  49. /////ananth said...
    தனிப் பதிவு தொடங்கலாம் என்று அவ்வப் போது நினைப்பதுண்டு. இருப்பினும் வகுப்பறக்கு போட்டி வகுப்பறை நடத்துவது போல் ஆகி விடும் என்பதால் இது நாள் வரை அப்படி செய்ய வில்லை.
    எவ்வளவோ செய்கிறோம். இதைச் செய்ய மாட்டோமா. கூடிய விரைவில் இதற்கு ஆவன செய்வோம். /////

    அன்பு உடையார் எல்லாம் உடையார்
    யாருக்கும் யாரும் போட்டியில்லை.
    நினைத்ததை செயல் படுத்துங்கள்
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!

    ReplyDelete
  50. /////////////// SP.VR. SUBBAIYA said...
    /////Monickam said...
    ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.
    Does Raghu and ketu ucha power in viruchigam is a good thing or they give more trouble when they are in viruchigam?///////
    உச்சமானதற்கு வேறு என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் நல்லததைத்தான் செய்வார்கள்!/////////
    எனக்கு ராகு-கேது நவாம்சத்தில் லக்கினத்தில் உச்சம்..இவர்களின் பிடியிலேதான் அனைத்து கிரகங்களும்..(காலசர்ப்ப யோகம்/தோஷம்)
    ராகு தசையில் நடந்த நிகழ்வுகள் முழுமுற்றிலும் வித்தியாசமான இனிமையான, இளமையான பகீர் அனுபவங்கள்..
    ராசிக்கட்டத்தில் 10ஆம் ஆதி சூரியனுடன் ராகு தொடர்பிலிருந்ததாலோ என்னவோ I have experienced a style of higher order politician who can coin behind the scene and can able to act in front too..(within a small strength over 1000 highly privileged set of people..different experience of successes and failures in elections..moreover at that age of around 25-28 I had good contacts with not less than 3-4 MPs and over 7-10 MLAs..and got introduced to political topbrasses too..Great team of dedicated friendship..(romantic scenes too..)sliding between the drastic ups and downs....extremes altogether.
    After transition of guru dasa these scenes vanished totally and experiencing a completely different lifestyle..
    I really cant understand still these incidents were to be categorised into the positive side or negative side of my walk of life.. but seems unforgetable @ the same time miraculous events..
    ராகு கேது இப்பிடி சுழட்டி சுழட்டி அடிச்சது எனக்கு மண்டை குழம்பிப் போச்சு..ராகு கேது நல்லவரா கெட்டவரான்னு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..

    ReplyDelete
  51. /////minorwall said...
    /////////////// SP.VR. SUBBAIYA said...
    /////Monickam said...
    ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.
    Does Raghu and ketu ucha power in viruchigam is a good thing or they give more trouble when they are in viruchigam?///////
    உச்சமானதற்கு வேறு என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் நல்லததைத்தான் செய்வார்கள்!/////////
    எனக்கு ராகு-கேது நவாம்சத்தில் லக்கினத்தில் உச்சம்..இவர்களின் பிடியிலேதான் அனைத்து கிரகங்களும்..(காலசர்ப்ப யோகம்/தோஷம்)
    ராகு தசையில் நடந்த நிகழ்வுகள் முழுமுற்றிலும் வித்தியாசமான இனிமையான, இளமையான பகீர் அனுபவங்கள்..
    ராசிக்கட்டத்தில் 10ஆம் அதிபதி சூரியனுடன் ராகு தொடர்பிலிருந்ததாலோ என்னவோ I have experienced a style of higher order politician who can coin behind the scene and can able to act in front too..(within a small strength over 1000 highly privileged set of people..different experience of successes and failures in elections..moreover at that age of around 25-28 I had good contacts with not less than 3-4 MPs and over 7-10 MLAs..and got introduced to political topbrasses too..Great team of dedicated friendship..(romantic scenes too..)sliding between the drastic ups and downs....extremes altogether.
    After transition of guru dasa these scenes vanished totally and experiencing a completely different lifestyle..
    I really cant understand still these incidents were to be categorised into the positive side or negative side of my walk of life.. but seems unforgetable @ the same time miraculous events..
    ராகு கேது இப்பிடி சுழட்டி சுழட்டி அடிச்சது எனக்கு மண்டை குழம்பிப் போச்சு..ராகு கேது நல்லவரா கெட்டவரான்னு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..///////

    ராகு நல்லவர்தான் மைனர். பாகற்காய் கசக்கத்தான் செய்யும். அதில் உள்ள மருத்துவக் குணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுபோல சுழட்டி அடித்தாலும், உங்களுக்கு ராகு, வாழ்க்கையில் பல வித்தைகளைக் கற்றுக்கொடுத்திருப்பார். அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் மைனர்!

    ReplyDelete
  52. ////minorwall said...
    /////////////// SP.VR. SUBBAIYA said...
    /////Monickam said...
    ராகு & கேது விருச்சிகத்தில் உச்சம். அதற்கு எதிர்வீடான ரிஷபத்தில் நீசம்.
    Does Raghu and ketu ucha power in viruchigam is a good thing or they give more trouble when they are in viruchigam?///////
    உச்சமானதற்கு வேறு என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் நல்லததைத்தான் செய்வார்கள்!/////////
    எனக்கு ராகு-கேது நவாம்சத்தில் லக்கினத்தில் உச்சம்..இவர்களின் பிடியிலேதான் அனைத்து கிரகங்களும்..(காலசர்ப்ப யோகம்/தோஷம்)
    ராகு தசையில் நடந்த நிகழ்வுகள் முழுமுற்றிலும் வித்தியாசமான இனிமையான, இளமையான பகீர் அனுபவங்கள்..
    ராகு கேது இப்பிடி சுழட்டி சுழட்டி அடிச்சது எனக்கு மண்டை குழம்பிப் போச்சு..ராகு கேது நல்லவரா கெட்டவரான்னு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..///////

    ராகு நல்லவர்தான் மைனர். பாகற்காய் கசக்கத்தான் செய்யும். அதில் உள்ள மருத்துவக் குணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுபோல சுழட்டி அடித்தாலும், உங்களுக்கு ராகு, வாழ்க்கையில் பல வித்தைகளைக் கற்றுக்கொடுத்திருப்பார். அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் மைனர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com