மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.3.16

மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!


மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!

வெங்காயத்தை எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்னென்ன?

இங்கே கூறியுள்ள மருத்துவம் சின்ன வெங்காயத்தை வைத்து. அதை மனதில் கொள்க!

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
=====================================================
முக்கிய வேண்டுகோள்:

மாதம் ஒன்றிற்கு 20 ல் இருந்து 25 பதிவுகள் வரை பதிவு செய்து வருகிறேன். இங்கே சராசரியாக தினமும் 5,000 பேர்கள் வந்து படித்துவிட்டுச் செல்கிறார்கள். அத்தனை பேர்களும் விரும்புகிற மாதிரி அல்லது அத்தனை பேர்களுக்கும் பிடிக்கின்ற மாதிரி பதிவுகளை வெளியிடுவது கடினம்.
5ல் இருந்து 10 சதவிகிதம் பேர்களுக்கு சில பதிவுகள் பிடிக்காமல் போகலாம். அல்லது கருத்து வேறு பாடுகள் ஏற்படலாம். அவர்கள் எல்லாம் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம், நான் மட்டுறுத்தல் செய்வதில்லை. வரும் பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுவதுடன். அவற்றிற்கு எனது பதில்களையும் எழுதுகிறேன். ஆகவே பதிவுகளைப் படிப்பவர்கள், பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. பயனுள்ள ஆரோக்கிய பதிவு...

    நன்றி வாத்தியார் அவர்களே!!!

    ReplyDelete
  2. குருவே சரணம்.
    சிறிய வெங்காயம் உண்பதின் மேன்மையை தெளிவாக்கியுள்ளீர்கள்! உடல் நலத்துக்கும், பலவித நோய்களை அகற்றுவதற்கும்,வராமல் தடுப்பதற்கும் எவ்வாறெல்லாம் உபயோகம் உண்டு என்பது தெளிவாகிறது.நன்றி, ஐயா!
    முக்கிய வேண்டுகோளில் தாங்கள் தன்னடக்கத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்!எங்களின் பின்னூட்டங்களை மட்டுறுத்தலும் செயவதில்லை எனபதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்!!
    மேன்மையான தங்களின் அநுபவ வாக்குகளுக்கு ஒரு"சபாஷ்" வாத்தியாரையா!

    ReplyDelete
  3. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    பயனுள்ள ஆரோக்கிய பதிவு...
    நன்றி வாத்தியார் அவர்களே!!!/////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மி நாராயணன்!

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்.
    சிறிய வெங்காயம் உண்பதின் மேன்மையை தெளிவாக்கியுள்ளீர்கள்! உடல் நலத்துக்கும், பலவித நோய்களை அகற்றுவதற்கும்,வராமல் தடுப்பதற்கும் எவ்வாறெல்லாம் உபயோகம் உண்டு என்பது தெளிவாகிறது.நன்றி, ஐயா!
    முக்கிய வேண்டுகோளில் தாங்கள் தன்னடக்கத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்!எங்களின் பின்னூட்டங்களை மட்டுறுத்தலும் செயவதில்லை எனபதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்!!
    மேன்மையான தங்களின் அநுபவ வாக்குகளுக்கு ஒரு"சபாஷ்" வாத்தியாரையா!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  5. நினைவிருக்கிறதா நண்பர்களே...
    நினைத்து பாருங்கள்... சென்ற ஆண்டு

    புனித வெள்ளிக்கு வாழ்த்து
    பதிவானது நம் வகுப்பறையில்...

    புனித வெள்ளி துக்கமான நாள்
    புதிய நாள் ஈஸ்ட்டர் தான்

    அதற்க்கு வாழ்த்து சொல்லுங்கள்..
    அப்படியே அந்த பதிவை நீக்க சொன்னோம்..

    அதை வாத்தியார் நீக்கினார்..
    ஆனால் சிவபெருமான் பற்றி

    தவறான கருத்து கடந்த வாரத்தில் பதிவானது
    தட்டி கேட்டனர் சில மாணவர்கள்..

    பதிவை நீக்க சொல்லி நானும் என் பங்கிற்கு
    பரிந்துரை செய்தேன்... ஆனால்...

    அந்த பதிவை நீக்காவில்லை...
    "அப்படி எல்லோருக்கும் பிடிக்கும்படி... "

    என மழுப்பல் பதில் வாத்தியாரிடமிருந்து
    ஏசுவை ஏற்றுக்கொள்ளும் வாத்தியார்

    இப்படி செய்வது
    இன்னமும் கணபதியார் உட்பட

    பலருக்கும் வருத்தமே...
    பதிலாக தந்த இந்த பின்னூட்டத்திற்கு

    பிறகாவது அந்த சனீஸ்வரன்
    பற்றிய பதிவை நீக்க வேண்டும்...

    அதுவரை...
    அமைதி போராட்டம் தொடரும்...


    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    நினைவிருக்கிறதா நண்பர்களே...
    நினைத்து பாருங்கள்... சென்ற ஆண்டு
    புனித வெள்ளிக்கு வாழ்த்து
    பதிவானது நம் வகுப்பறையில்...
    புனித வெள்ளி துக்கமான நாள்
    புதிய நாள் ஈஸ்ட்டர் தான்
    அதற்க்கு வாழ்த்து சொல்லுங்கள்..
    அப்படியே அந்த பதிவை நீக்க சொன்னோம்..
    அதை வாத்தியார் நீக்கினார்..
    ஆனால் சிவபெருமான் பற்றி
    தவறான கருத்து கடந்த வாரத்தில் பதிவானது
    தட்டி கேட்டனர் சில மாணவர்கள்..
    பதிவை நீக்க சொல்லி நானும் என் பங்கிற்கு
    பரிந்துரை செய்தேன்... ஆனால்...
    அந்த பதிவை நீக்காவில்லை...
    "அப்படி எல்லோருக்கும் பிடிக்கும்படி... "
    என மழுப்பல் பதில் வாத்தியாரிடமிருந்து
    ஏசுவை ஏற்றுக்கொள்ளும் வாத்தியார்
    இப்படி செய்வது
    இன்னமும் கணபதியார் உட்பட
    பலருக்கும் வருத்தமே...
    பதிலாக தந்த இந்த பின்னூட்டத்திற்கு
    பிறகாவது அந்த சனீஸ்வரன்
    பற்றிய பதிவை நீக்க வேண்டும்...
    அதுவரை...
    அமைதி போராட்டம் தொடரும்...//////

    எனக்குத் தன்முனைப்பெல்லம் கிடையாது.(Ego)
    உங்களைப் போன்ற சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பதிவை நீக்கி விட்டேன்!

    ReplyDelete
  7. நன்றி...
    நன்றி..

    அதே கலகலப்புடன்.. மீண்டும்..
    அதே உற்சாகத்துடன்...

    தொடர்கிறோம்...
    தோள் கொடுக்கும் தோழமையோடு

    ReplyDelete
  8. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நல்ல பதிவு.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    நன்றி...
    நன்றி..
    அதே கலகலப்புடன்.. மீண்டும்..
    அதே உற்சாகத்துடன்...
    தொடர்கிறோம்...
    தோள் கொடுக்கும் தோழமையோடு//////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com