மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.9.18

மனம் திருந்திய திருடன்!


மனம் திருந்திய திருடன்!

இரவு நேரம். அந்தத் துறவி வந்து சேர்ந்த இடம் திருவொற்றியூர். பகலெல்லாம்  வெகு தூரம் நடந்து வந்திருந்தார். களைப்பும் உறக்கமும் சேர்ந்துகொள்ள கண்ணில்பட்ட ஒரு வீட்டுத்  திண்ணையில் ஏறினார். ஜில்லென்றிருந்த கட்டாந்தரையில் படுத்தார். அப்படியே உறங்கிப் போனார்.

நள்ளிரவானது. தெருவின் இருபுறமும் நோட்டமிட்டபடி மெள்ள எட்டுவைத்து ஒருவன் வந்தான். துறவி  படுத்திருந்த திண்ணைக்கருகே நின்றான். உச்சி முதல் உள்ளங்கால்வரை அவரைப் பார்த்தான்.  அவரிடம் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லை. அணிந்திருந்த வேட்டியையும், தலைக்குவைத்துப்  படுத்திருந்த மேல் துண்டையும் தவிர உடைகள்கூட ஏதுமில்லை. `இடுப்பில் ஏதாவது  வைத்திருப்பாரோ...’ என்று யோசித்தபடி நெருங்கிய அந்த ஆளின் கண்ணில் அது பட்டது... நிலவொளியில், துறவியின் காதில் மின்னிக்கொண்டிருந்த கடுக்கண்.

அவன், அவரை நெருங்கினான்.

அவர் மூச்சு சீராக வந்துகொண்டிருந்தது. அவர் உறங்குகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், அவருடைய காதிலிருந்து ஒரு கடுக்கணை மெள்ளக் கழற்றினான். அவன் காதில் கைவைத்தவுடனேயே  துறவி விழித்துக்கொண்டார். அவன் திருட வந்தவன் என்பதும் அவருக்குப் புரிந்தது. ஆனாலும்  கண்களைத் திறக்காமல், அசையாமல் அப்படியே படுத்திருந்தார். அவன் ஒரு கடுக்கணைக்  கழற்றிவிட்டான். ஒருக்களித்துப் படுத்திருந்த துறவி, அவன் இன்னொரு கடுக்கணையும் கழற்றுவதற்குத் தோதாக மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்தார்.

அவன் ஆடிப் போனான். அவர்  விழித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான். ``என்னப்பா அப்படியே நின்னுட்டே... ஒரு
கடுக்கணைவெச்சுக்கிட்டு என்ன செய்வே? இன்னொண்ணையும் கழட்டு!’’ அவன் பொத்தென்று  துறவியின் காலில் விழுந்தான். ``என்னை மன்னிச்சுடுங்கய்யா...’’

``நீ ஏம்ப்பா என்கிட்ட மன்னிப்புக்  கேட்கணும். என் மேலதான் தப்பு. எல்லாத்தையும் துறந்ததுக்கு அப்புறம் இந்தக் கடுக்கண் மட்டும் எனக்கு எதுக்கு? அதை ரொம்ப அழகா எனக்கு உணர்த்திட்டே. நீயே இதை வெச்சுக்கோ’’ இன்னொரு  கடுக்கணையும் அவனிடம் கொடுத்தார்.

அவன் ``இனிமேல் திருடமாட்டேன்’’ என்று அவரிடம்  சொல்லிவிட்டு திரும்பிப் போனான். ஒருவனின் தவறை நாசூக்காக உணர்த்திய அந்தத் துறவி வேறு  யாருமல்ல. `வள்ளலார்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள்தான் அவர்.. அப்படி ஒரு குணமும் மனமும்  வாய்த்திருந்ததால்தான் அவர் இன்றளவும் போற்றப்படுகிறார்!!!!

படித்ததில்_பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Good morning sir very nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அருமையான நிகழ்வு.அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. குருவுக்குத் திருடனே குருவானான்... திருடனும் குருவால் மனம் மாறினான்...

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    அடிகளார் பற்றிய தகவல் மிகவும் அருமை!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான நிகழ்வு.அறியத் தந்தமைக்கு நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  7. /////Blogger ஸ்ரீராம். said...
    குருவுக்குத் திருடனே குருவானான்... திருடனும் குருவால் மனம் மாறினான்..//////.

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  8. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அடிகளார் பற்றிய தகவல் மிகவும் அருமை!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    Very nice////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  10. அவன் ``இனிமேல் திருடமாட்டேன்’’ என்று அவரிடம் சொல்லிவிட்டு திரும்பிப் போனான். ஒருவனின் தவறை நாசூக்காக உணர்த்திய அந்தத் துறவி வேறு யாருமல்ல. `வள்ளலார்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள்தான். அப்படி ஒரு குணமும் மனமும் வாய்த்திருந்ததால்தான் அவர்....

    அய்யா வணக்கம்...
    அரிய
    ஆழ்ந்தப் பொருளுள்ள வரலாற்று நிகழ்வைச் சுவைத்து மகிழ்ந்தேன்.

    அய்யா இறுதி வாக்கியம் முழுமை பெறாது உள்ளது???

    ReplyDelete
  11. //////Blogger J Murugan said...
    அவன் ``இனிமேல் திருடமாட்டேன்’’ என்று அவரிடம் சொல்லிவிட்டு திரும்பிப் போனான். ஒருவனின் தவறை நாசூக்காக உணர்த்திய அந்தத் துறவி வேறு யாருமல்ல. `வள்ளலார்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள்தான். அப்படி ஒரு குணமும் மனமும் வாய்த்திருந்ததால்தான் அவர்....
    அய்யா வணக்கம்...
    அரிய
    ஆழ்ந்தப் பொருளுள்ள வரலாற்று நிகழ்வைச் சுவைத்து மகிழ்ந்தேன்.
    அய்யா இறுதி வாக்கியம் முழுமை பெறாது உள்ளது???////

    சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி சரி செய்து விட்டேன் நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com