மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.9.18

100 வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?

100 வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?

💖💖விதுர நீதி💖💖

ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர்.

எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது.

இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

*விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு.*

*முதலாவது கர்வம்.*
மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள்.

ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார்.

ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும்.

பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

*இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது.*
தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

*மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை.*
அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

*நான்காவது வாள்- கோபம்.*
கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது.? அதர்மம் எது.?என்பது தெரியாமல் போகிறது.
விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

*ஐந்தாவது வாள்- சுயநலம்.*
சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

*ஆறாவது வாள்- துரோகம்.*
இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.

*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறா?!!!

    ReplyDelete
  2. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice post. Thanks for sharing...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    கர்வம், சுயநலம்,தியாகமின்மை,
    துரோகம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக கோபம், ஆகிய ஆறு துர்குணங்களும் மனிதனின்
    தன் நிலை மறக்கச் செய்கிறது,
    பின்னர், அவனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தீமைகள் செய்கிறான், விளைவு? கீழ்த்தன்மையடைகிறான்.
    நல்விதை விதைத்தால் தானே,
    நல்வினை அறுக்க முடியும்?
    இல்லாததால் ஆயுளும் குறைந்து
    அவனியை விட்டுச் செல்கிறான்!!
    சிந்தனைக்கு ஒரு நல்ல பதிவு,ஐயா!!

    ReplyDelete
  5. /////Blogger ஸ்ரீராம். said...
    ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறா?!!!//////

    ஆமாம். அப்படியும் வைத்துக்கொள்ளலாம் ஸ்ரீராம்! நன்றி!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Very much true Sir!/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post. Thanks for sharing...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கர்வம், சுயநலம்,தியாகமின்மை,
    துரோகம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக கோபம், ஆகிய ஆறு துர்குணங்களும் மனிதனின்
    தன் நிலை மறக்கச் செய்கிறது,
    பின்னர், அவனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தீமைகள் செய்கிறான், விளைவு? கீழ்த்தன்மையடைகிறான்.
    நல்விதை விதைத்தால் தானே,
    நல்வினை அறுக்க முடியும்?
    இல்லாததால் ஆயுளும் குறைந்து
    அவனியை விட்டுச் செல்கிறான்!!
    சிந்தனைக்கு ஒரு நல்ல பதிவு,ஐயா!!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com