மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.10.15

வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!


வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!

சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான்! அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது.

மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி.

கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள். வரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி.

கருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி.

மேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைத்துள்ளது விகடன் பிரசுரம்.  அற்புதத் தொகுப்பு இது. நூலினுள் நுழைந்துவிட்டால், தன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்.

இத் தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்!) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் என்பது என்னவோ உண்மை!

புத்தகம் கிடைக்கும் இடம்:

Vikatan Media Services
757, Anna Salai,
Chennai 600002
Phone : 044 42634283 & 84 Mobile : 95000 68144
Email : pubonline@vikatan.com

ஓவியர் சில்பியின் இயற்பெயர் சீனிவாசன். அவரைப்பற்ரிய மேலதிகத்தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் பார்க்கவும்
https://en.wikipedia.org/wiki/Silpi

அன்புடன்
வாத்தியார்
----------------------------
உங்கள் பார்வைக்கு அவர் வரைந்தவற்றுள் சில ஓவியங்கள்:











================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. ஆம். ஐயா! சில்பியின் அற்புதமான் ஓவியங்களை சுடச் சுட காணும் பேறு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். புதிய நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளது உயர்வான அறிமுகம்.

    ReplyDelete
  2. சில்பியின் ஓவியங்கள் அருமை. புத்தகம் கிடைக்கும் இடத்தின் முகவரி கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. Oviyar sirpi avargalin sithirangalai nesitha manithargalur adiyenum oruvan. Eppadi, ippadi varaiya mudigirathu enru nan malaithathundu.

    Its god gift. It is as if photos are taken of the monumnets. Kalkiyil enru ninaikiren. Avarathu padaippugalai parththu appothe viyanthu ponen.
    Ippodhu, ippadi yaravathu varaigirarkala? enakku theriyavillai.

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
    போற்றத்தக்க ஓவியர் ""சில்பி அவர்கள் " கோட்டோவியம் என்றால் சில்பி எனுமளவு ..நிறைவனவர். ..
    இவருக்கு இணை இவரே. சில ஓவியங்கள் பேசும் ..!!!
    நன்றி.


    ReplyDelete
  5. //////Blogger kmr.krishnan said...
    ஆம். ஐயா! சில்பியின் அற்புதமான் ஓவியங்களை சுடச் சுட காணும் பேறு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். புதிய நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளது உயர்வான அறிமுகம்.//////

    ஆமாம். அடியவனும் சுடச் சுட அனுபவித்தவன். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger shree said...
    சில்பியின் ஓவியங்கள் அருமை. புத்தகம் கிடைக்கும் இடத்தின் முகவரி கொடுத்ததற்கு நன்றி////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. /////Blogger raj said...
    Oviyar sirpi avargalin sithirangalai nesitha manithargalur adiyenum oruvan. Eppadi, ippadi varaiya mudigirathu enru nan malaithathundu.
    Its god gift. It is as if photos are taken of the monumnets. Kalkiyil enru ninaikiren. Avarathu padaippugalai parththu appothe viyanthu ponen.
    Ippodhu, ippadi yaravathu varaigirarkala? enakku theriyavillai./////

    Line drawingல் இப்போது அப்படி யாரும் இல்லை

    ReplyDelete
  8. //////Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
    போற்றத்தக்க ஓவியர் ""சில்பி அவர்கள் " கோட்டோவியம் என்றால் சில்பி எனுமளவு ..நிறைவனவர். ..
    இவருக்கு இணை இவரே. சில ஓவியங்கள் பேசும் ..!!!
    நன்றி.////

    உண்மைதான். நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  9. வணக்கம் வாத்தியாரே!

    ஓவியர் சில்பியின் அன்னப்பறவை ஓவியம் அவரது நுணுக்கத்தையும், சிறுத்தை ஓவியம் தத்ரூப அனுபவத்தையும் தருகிறது... பகிர்வுக்கு மிக்க நன்றி....

    இவரது ஜாதகத்தையும் நம் வகுப்பறையில் வாத்தியார் அலசலாமே!!! தவறு இருந்தால் மன்னிக்கவும்....


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  10. ஐயா,
    சில்பி அவர்கள் வரைந்துள்ள பல தீபாவளி மலர் படங்கள் பார்த்து ரசித்துள்ளேன். அவரைத் தேடி வீட்டிலேயே வந்து ஆர்டர் கொடுப்பார்களாம், படம் வரைய.

    ReplyDelete
  11. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    வணக்கம் வாத்தியாரே!
    ஓவியர் சில்பியின் அன்னப்பறவை ஓவியம் அவரது நுணுக்கத்தையும், சிறுத்தை ஓவியம் தத்ரூப அனுபவத்தையும் தருகிறது... பகிர்வுக்கு மிக்க நன்றி....
    இவரது ஜாதகத்தையும் நம் வகுப்பறையில் வாத்தியார் அலசலாமே!!! தவறு இருந்தால் மன்னிக்கவும்....
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.//////

    ஜாதகம்தானே. தேடிப் பிடித்துக் கொடுங்கள். பார்க்கலாம்!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    சில்பி அவர்கள் வரைந்துள்ள பல தீபாவளி மலர் படங்கள் பார்த்து ரசித்துள்ளேன். அவரைத் தேடி வீட்டிலேயே வந்து ஆர்டர் கொடுப்பார்களாம், படம் வரைய./////

    ஆமாம். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com