மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.12.08

பக்கா பதிவுத் திருடன்!

இணையம் ஒரு திறந்தவேளி. இங்கே உலாத்துபவர்கள் அனைவரும்
நேர்மையானவர்கள் அல்ல! ஒரு குறிப்பி்ட முடியாத சதவிகிதம் திருடர்கள்
இருக்கிறார்கள்.

பிக்பாக்கெட் கேசாக இருந்தால் பரவாயில்லை தொலைகிறது என்று விட்டுவிடலாம்

இருட்டில் திருட்டுத்தனமாக பெண்மேல் கை வைப்பவனை என்ன செய்வது?

கை வைத்தவன் மாட்டிக் கொண்டு விட்டால், என்ன நடக்கும்?

நகரமாக இருந்தால் பலரும் சேர்ந்து கும்முவார்கள். கிராமமாக இருந்தால்
அறிவாள் வெட்டு விழுகும். குறைந்த பட்சம் அவன் ஒரு மாதமாவது மருத்துவ
மனையில் படுக்கும்படி ஆகிவிடும்

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

என்னுடைய ஜோதிடப் பதிவுகளை அப்படியே திருடி ஒருவர் தன் பெயரில்
வலைப்பதிவு ஒன்றைத் துவங்கிப் பதிவிட்டிருக்கிறார். இதுவரை 10 பதிவுகளைத்
திருடிப் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பெயர் வசந்த் என்பது மட்டும் தெரிகிறது. அது அவருடைய
சொந்தப் பெயரா அல்லது அதுவும் திருட்டுப் பெயரா என்பது தெரியவில்லை:-)))))

பதிவில் மின்னஞ்சல் முகவரி இல்லை. திருடியது சொற்பம்தான் 10 பதிவுகள்.
ஆனாலும் திருட்டு திருட்டுத்தான். அததனையும் நவம்பர் 18ஆம் தேதி வலையேற்றப்
பட்டுள்ளது. அதற்குப் பிறகு வேறு எங்காவது உண்மையான திருட்டைச் செய்யப்
போய் விட்டாரோ என்னவோ?:-)))))

எந்த அரிப்பில் பதிவுகளைத் திருடினார் என்பதும் தெரியவில்லை:-)))))

அவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால் அவருக்கு உள்ளே போகவேண்டிய
யோகம் இருகிகிறதா என்று பார்த்துச் சொல்லுவேன்:-)))))

எனக்கு பலமே என்னுடைய வாசகர்கள்தான். இன்றையத் தேதியில் என்னுடைய
இந்த வலைப் பதிவிற்கு ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள். திருட்டுக்கள்
என் கண்ணில் இருந்து தப்பினாலும், அவர்கள் கண்ணில் இருந்து தப்பாது.

என் மதிப்பிற்குரிய வாசகர் ஒருவர் அந்தத் திருட்டைச் சுற்றிக் காட்டியிருந்தார்.
அவருக்கு என் நன்றி!

அந்தத் திருட்டுப் பதிவின் சுட்டி இங்கே உள்ளது.
அனைவரையும் பார்க்க வேண்டுகிறேன்.

என்ன செய்யலாம் அந்தத் திருடனை?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
==============================================
படங்களின் மேல் கர்சரை வைத்துக் கிளிக்கினால் படங்கள் பெரிதாகத் தெரியும்














+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

98 comments:

  1. Sir,

    Is there any cyber law related to this...Act of plagiarism is against copyright act...

    Worst thing that one can do it...juz copying even pictures...man! Is there any way to take action legally? (inexpensive way)

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்ட அப்பதிவருக்கு நான் இட்ட பின்னூட்டம் இது:

    “இம்மாதிரி மற்றவர்கள் பதிவுகளைத் திருடுவதை விட பிச்சையெடூகப் போவதே மேல். பார்க்க: http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_20.html

    வில் அம்புடன்,
    டோண்டு ராகவன்”

    பார்க்க: http://vasanth-astrology.blogspot.com/2008/11/blog-post_7290.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. அடப்பாவி மக்கா.......

    வரவர எதைத்தான் திருடுறது என்றில்லை(-:

    ஜாதகத் திருட்டு!!!!

    ReplyDelete
  4. என்ன கொடுமை சார் இது :( ஏன் மனிதர்கள் இப்படி குறுக்கு வழியில் அவர்கள் சக்தியை செலவிடுகிறார்கள்?

    ReplyDelete
  5. வலையுலகில் தொடர்ந்து இருக்கும் பலருக்கும் அது உங்களுடைய பதிவு என்பது பார்த்தவுடனே தெரியும். புதிதாக படிப்பவர்களுக்கு தெரியாவிட்டாலும், போகப்போக புரிந்து கொள்வார்கள்.

    //என்ன செய்யலாம் அந்தத் திருடனை?//

    பிரக்டிகலா சொன்னா, எதுவும் செய்ய முடியாது. அப்படியே செய்ய நினைத்தாலும் ரொம்ப அலைய வேண்டி இருக்கும். பலருக்கு ப்லாக் என்பது ஒரு பொழுதுபோக்குத்தான், ஏதோ diary எழுதுவது மாதிரி, அப்படியிருக்கும் போது, இவர்களை எல்லாம் பழிவாங்க நினைப்பத்தை விட, சக நண்பர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு நம் வேலையை பார்ப்பது மேல் என்பது என் கருத்து.

    ReplyDelete
  6. உனக்கு ஏன் இந்த திருட்டுபுத்தி என அனைத்து வகுப்பறை மாணக்களும் அவருக்கு பதிவிட்டால் திருந்த வாய்புண்டு.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. பதிவு திருடனுக்கு கண்டன பதில் அனுப்பிவிட்டேன். வகுப்பறை மாணவர்களே....அப்போ நீங்க?

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. ஆசிரியர் ஐயா,

    பதிவுகளை படிக்க மட்டும் என்ற மாற்றினால் இதைபோல் கருத்துத் திருட்டை தடுக்கலாம்.

    அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.

    ReplyDelete
  9. ஆசிரியர் ஐயா,

    பதிவுகளை படிக்க மட்டும் என்ற மாற்றினால் இதைபோல் கருத்துத் திருட்டை தடுக்கலாம்.

    அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.

    கார்த்திக்

    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நாம என்ன தான் பாதுகாப்பு வேலி போட்டாலும் சுலபமாக உடைத்து விடுவார்கள் இன்றைய காலகட்டத்தில்.

    ReplyDelete
  10. என்னுடைய கண்டனங்களையும் அங்கே பதிவு செய்துவிட்டேன்.

    ப்ளாக்கரில் எதேனும் குறை தீர் மன்றங்கள் உள்ளனவா?

    ReplyDelete
  11. வசந்தின் செயல் மிகவும் தவறான ஒன்று. அவர் அதனை தொடரும் பட்சத்தில் பதிவின் முகப்பிலும் இறுதியிலும் "நன்றி திரு.சுப்பையா" என்று குறிப்பிட வேண்டும்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  12. கண்டனம்:
    எதற்காக சாமி இந்த வீண் விளம்பரம்?
    இதனால் அவருக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

    ReplyDelete
  13. /////hotcat said...
    Sir,
    Is there any cyber law related to this...Act of plagiarism is against copyright act...
    Worst thing that one can do it...juz copying even pictures...man! Is there any way to take action legally? (inexpensive way)/////

    நன்றி சங்கர். அதுபற்றித் தெரிந்த பதிவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  14. dondu(#11168674346665545885) said...
    நீங்கள் குறிப்பிட்ட அப்பதிவருக்கு நான் இட்ட பின்னூட்டம் இது:
    “இம்மாதிரி மற்றவர்கள் பதிவுகளைத் திருடுவதை விட பிச்சையெடுக்கப் போவதே மேல். பார்க்க: http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_20.html
    வில் அம்புடன்,
    டோண்டு ராகவன்”
    பார்க்க: http://vasanth-astrology.blogspot.com/2008/11/blog-post_7290.html
    அன்புடன்,
    டோண்டு ராகவன்/////

    நன்றி டோண்டு ராகவன் சார். நன்றாக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    பிச்சையெடுத்துப் பழக்கமான ஆசாமியாக இருந்தால் உங்கள் வார்த்தைகள் அவனுக்கு உறைக்காது:-))))

    ReplyDelete
  15. ///////துளசி கோபால் said...
    அடப்பாவி மக்கா.......
    வரவர எதைத்தான் திருடுறது என்றில்லை(-:
    ஜாதகத் திருட்டு!!!!//////

    ஆமாம் டீச்சர். அவன் ஜாதகத்தில் குருவையும் சேர்த்து ஆறு கிரகங்கள் எட்டாம் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும்
    என்று நினைக்கிறேன். அவனுடைய திருட்டுத்தனம் வாழ்க்கையின் மற்ற ஏரியாக்களிலும் தொடரும். ஒரு நாள் வகையாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. கடவுள் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்!

    ReplyDelete
  16. ///////ஸ்ரீதர்கண்ணன் said...
    என்ன கொடுமை சார் இது :( ஏன் மனிதர்கள் இப்படி குறுக்கு வழியில் அவர்கள் சக்தியை செலவிடுகிறார்கள்?//////

    கலியுகம்.

    ReplyDelete
  17. //////Nilofer Anbarasu said...
    வலையுலகில் தொடர்ந்து இருக்கும் பலருக்கும் அது உங்களுடைய பதிவு என்பது பார்த்தவுடனே தெரியும். புதிதாக படிப்பவர்களுக்கு தெரியாவிட்டாலும், போகப்போக புரிந்து கொள்வார்கள்.
    //என்ன செய்யலாம் அந்தத் திருடனை?//
    பிரக்டிகலா சொன்னா, எதுவும் செய்ய முடியாது. அப்படியே செய்ய நினைத்தாலும் ரொம்ப அலைய வேண்டி இருக்கும். பலருக்கு ப்ளாக் என்பது ஒரு பொழுதுபோக்குத்தான், ஏதோ diary எழுதுவது மாதிரி, அப்படியிருக்கும் போது, இவர்களை எல்லாம் பழிவாங்க நினைப்பத்தை விட, சக நண்பர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு நம் வேலையை பார்ப்பது மேல் என்பது என் கருத்து.//////

    பழிவாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே அன்பரே!
    அவனை அடையாளம் காட்ட வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம்
    நீங்கள் அனைவரும் திருவாளர் டோண்டு அவர்கள், தன் கண்டனத்தை அந்தப் பதிவில் பின்னூட்டமாகப் பதிந்ததைப்போல பதிவிடுங்கள். தற்போதைக்கு அது போதும்

    ReplyDelete
  18. //////வேலன். said...
    உனக்கு ஏன் இந்த திருட்டுபுத்தி என அனைத்து வகுப்பறை மாணக்களும் அவருக்கு பதிவிட்டால் திருந்த வாய்புண்டு.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    பின்னூட்டமிட்டால்' தற்போதைக்குப் போதும்

    ReplyDelete
  19. /////வேலன். said...
    பதிவு திருடனுக்கு கண்டன பதில் அனுப்பிவிட்டேன். வகுப்பறை மாணவர்களே....அப்போ நீங்க?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    பார்த்தேன் நன்றி!

    ReplyDelete
  20. //////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியர் ஐயா,
    பதிவுகளை படிக்க மட்டும் என்ற மாற்றினால் இதைபோல் கருத்துத் திருட்டை தடுக்கலாம்.
    அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே////////

    உங்கள் அன்பான பரிந்துரைக்கு நன்றி. அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
    ஏன் உனக்கு இந்த திருட்டுபுத்தி என்று அனைத்து வகுப்பறை மாணவர்களும் அவருக்குப் பின்னூட்டமிட்டால் திருந்த வாய்புண்டு.

    ReplyDelete
  21. //////ஸ்ரீதர்கண்ணன் said...
    ஆசிரியர் ஐயா,
    பதிவுகளை படிக்க மட்டும் என்ற மாற்றினால் இதைபோல் கருத்துத் திருட்டை தடுக்கலாம்.
    அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.
    கார்த்திக்
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நாம என்ன தான் பாதுகாப்பு வேலி போட்டாலும் சுலபமாக உடைத்து விடுவார்கள் இன்றைய காலகட்டத்தில்.///////

    உண்மைதான். நன்றி நண்பரே!ஏன் உனக்கு இந்த திருட்டுபுத்தி என்று அனைத்து வகுப்பறை மாணவர்களும் அவருக்குப் பின்னூட்டமிட்டால் திருந்த வாய்புண்டு.அதைச் செய்யுங்கள் அனைவரும்!

    ReplyDelete
  22. //////இளைய பல்லவன் said...
    என்னுடைய கண்டனங்களையும் அங்கே பதிவு செய்துவிட்டேன்.
    ப்ளாக்கரில் எதேனும் குறை தீர் மன்றங்கள் உள்ளனவா?//////

    அந்தக் கண்டனப் பின்னூட்டத்திற்கு நன்றி! இணையம் என்பது வானத்தைப்போல.
    வானத்திற்கு ஏது குறைதீர்க்கும் மையம்

    ReplyDelete
  23. ///////Rajagopal said...
    வசந்தின் செயல் மிகவும் தவறான ஒன்று. அவர் அதனை தொடரும் பட்சத்தில் பதிவின் முகப்பிலும் இறுதியிலும் "நன்றி திரு.சுப்பையா" என்று குறிப்பிட வேண்டும்.
    அன்புடன்
    இராசகோபால்//////

    அதையும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தால் போதும்.

    ReplyDelete
  24. ////Blogger தியாகராஜன் said...
    கண்டனம்:
    எதற்காக சாமி இந்த வீண் விளம்பரம்?
    இதனால் அவருக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை./////

    பிச்சை எடுத்துப் பிழை என்ற கண்டனம்கூட அவனுக்கு உறைக்காது என்கிறீர்களா?
    அதுவும் உறைக்காது என்றால். விட்டுவிடுவோம் - அவன் மனித ஜென்மமே அல்ல என்று!

    ReplyDelete
  25. //பிச்சை எடுத்துப் பிழை என்ற கண்டனம்கூட அவனுக்கு உறைக்காது என்கிறீர்களா? அதுவும் உறைக்காது என்றால். விட்டுவிடுவோம் - அவன் மனித ஜென்மமே அல்ல என்று!//

    வாத்தியாரே.. வேண்டாம்.. இது போன்ற வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தாங்கள் பயன்படுத்தக்கூடாது.. விட்டுவிடுங்கள்..

    இணையத்தில் இது ஒரு விளையாட்டுபோல் அடிக்கடி நடைபெறுகிறது. இந்த வசந்த் என்கிற பெயர் உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.. எனக்கும் இது போன்று முன்பு ஒரு முறை நிகழ்ந்துள்ளது.. கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதனால் அது தானாகவே காணாமற் போனது..

    தங்களுடைய உழைப்பு திருடப்படுகிறது என்பது ஒரு புறமிருந்தாலும், 'பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே' என்பதுதான் நமது 'வகுப்பறை'யின் உயரிய தத்துவமாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
  26. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //பிச்சை எடுத்துப் பிழை என்ற கண்டனம்கூட அவனுக்கு உறைக்காது என்கிறீர்களா? அதுவும் உறைக்காது என்றால். விட்டுவிடுவோம் - அவன் மனித ஜென்மமே அல்ல என்று!//
    வாத்தியாரே.. வேண்டாம்.. இது போன்ற வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தாங்கள் பயன்படுத்தக்கூடாது.. விட்டுவிடுங்கள்..
    இணையத்தில் இது ஒரு விளையாட்டுபோல் அடிக்கடி நடைபெறுகிறது. இந்த வசந்த் என்கிற பெயர் உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.. எனக்கும் இது போன்று முன்பு ஒரு முறை நிகழ்ந்துள்ளது.. கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதனால் அது தானாகவே காணாமற் போனது..
    தங்களுடைய உழைப்பு திருடப்படுகிறது என்பது ஒரு புறமிருந்தாலும், 'பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே' என்பதுதான் நமது 'வகுப்பறை'யின் உயரிய தத்துவமாக இருக்க வேண்டும்..//////

    உங்கள் கருத்திற்கு நன்றி உண்மைத் தமிழரே!
    நான் பழநி அப்பனின் பக்தன். எனக்குப் பகைவர்கள் கிடையாது.
    எழுத்தில் கடினமானது ஜோதிடத்தை மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது.
    வாசகர் கேளிவி கேட்டால், subject தெரிந்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
    நானும் சில சமயம் கடினமான கேள்விகளை எதிர் கொண்டு பதில் அளித்திருக்கிறேன்

    இதைப்போய் காப்பி செய்து பதிவிட்டால் என்ன என்பது?
    யாராவது சந்தேகம் கேட்டால் எப்படி பதில் சொல்வது?
    அந்த ஆசாமி பகைவன் அல்ல அறிவில்லாதவன் என்றே கொள்ள வேண்டும்

    நரி ஒன்று யானை மேல் காமம் கொண்டு செயல்பட்ட கதைதான் அதன் முடிவு!
    =====================================================

    அய்யோ தெரியாமல் சொல்லிவிட்டேன்.கதையைக்கேட்டு யாரும் தொடராதீர்கள்
    சட்டாம்பிள்ளை மிகவும் கண்டிப்பானவர்:-))))))))

    ReplyDelete
  27. உ.த,, வாத்தியாருக்கும்,

    அந்த‌ ஆள புடிச்சு என்ட‌ கொடுங்க‌ , ஒரு அரை விடுறேன், அதுவும் ம‌துரை அரை , அப்புர‌ம் பாருங்க‌ ,
    அவ‌ன் இந்த‌ ப‌க்க‌மே காணமா போயிடுவான்

    ReplyDelete
  28. என்ன கொடுமை ஐயா இது ??

    GK, BLR

    ReplyDelete
  29. Hello Sir

    The following link provides the information about this.

    http://help.blogger.com/bin/answer.py?hl=en-in&answer=76316

    1.You can file a DMCA Complaint with Blogger.(But this involves many procedures.)

    2. Otherwise, you can report it as a spam blog.

    But I will suggest a best thing for this ...

    I feel that DMCA complaint is not required for this kind of bullshit person...

    If you report it as a spam, sometimes Google will not consider it...

    So the best thing to do is with the support of readers.

    You can ask the readers to do the following simple thing as a group action...

    1.Please ask them to visit that idiotic person's blog..

    http://vasanth-astrology.blogspot.com/

    2.On the top part of his blog, they can see a button called 'Flag Blog'

    3.All they have to do just click the button once.

    4.This will be reported as a offensive blog to the blogger.

    So say for example, if there are 100 readers are reporting it as a flag to the blogger, the blogger will automatically consider it as a offensive blog and delete this blog.

    This is a social democratic action we can take.

    ReplyDelete
  30. http://vasanth-astrology.blogspot.com/

    The readers can also submit his url as a spam in this link

    http://help.blogger.com/?page=troubleshooter.cs&problem=&ItemType=spam&contact_type=Spam&Submit=Continue

    ReplyDelete
  31. /////KaveriGanesh said...
    உ.த,, வாத்தியாருக்கும்,
    அந்த‌ ஆள புடிச்சு என்ட‌ கொடுங்க‌ , ஒரு அரை விடுறேன், அதுவும் ம‌துரை அரை , அப்புர‌ம் பாருங்க‌ ,
    அவ‌ன் இந்த‌ ப‌க்க‌மே காணமா போயிடுவான்/////

    அது எதற்கு நண்பரே? சாத்வீகமாகவே நடந்து கொள்வோம்.
    அவரை அடையாளப் படுத்தியாகி விட்டது. அது போதும்!

    ReplyDelete
  32. ////Geekay said..
    என்ன கொடுமை ஐயா இது ??
    GK, BLR/////

    கலியுகம். அப்படித்தான் இருக்கும் ஜீக்கே!:-)))))

    ReplyDelete
  33. //////Ragu Sivanmalai said...
    Hello Sir
    The following link provides the information about this.
    http://help.blogger.com/bin/answer.py?hl=en-in&answer=76316
    1.You can file a DMCA Complaint with Blogger.(But this involves many procedures.)
    2. Otherwise, you can report it as a spam blog.
    But I will suggest a best thing for this ...
    I feel that DMCA complaint is not required for this kind of bullshit person..
    If you report it as a spam, sometimes Google will not consider it...
    So the best thing to do is with the support of readers.
    You can ask the readers to do the following simple thing as a group action...
    1.Please ask them to visit that idiotic person's blog..
    http://vasanth-astrology.blogspot.com/
    2.On the top part of his blog, they can see a button called 'Flag Blog'
    3.All they have to do just click the button once.
    4.This will be reported as a offensive blog to the blogger.
    So say for example, if there are 100 readers are reporting it as a flag to the blogger, the blogger will automatically consider it as a offensive blog and delete this blog.
    This is a social democratic action we can take.//////

    Thanks Mr.Sivanmalai for the valuable information.
    On reading this, our regular readers will do it!
    Once again, my sincere thanks to you!

    ReplyDelete
  34. ///////Ragu Sivanmalai said...
    http://vasanth-astrology.blogspot.com/
    The readers can also submit his url as a spam in this link
    http://help.blogger.com/?page=troubleshooter.cs&problem=&ItemType=spam&contact_type=Spam&Submit=Continue//////

    I request all the reqular readers of my blog to do it!
    Thanks in advance!

    ReplyDelete
  35. ///அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.

    Yes Very Good Idea..We can do this..

    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..

    In that there will be head tag

    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...

    Thats all...please save the changes...

    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....

    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....

    ReplyDelete
  36. Hello sir

    I have sent the code personally to your email id....You can use it

    ReplyDelete
  37. Blogger Ragu Sivanmalai said...
    ///அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.
    Yes Very Good Idea..We can do this..
    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..
    In that there will be head tag
    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...
    Thats all...please save the changes...
    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....
    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....///////

    நன்றி சிவன்மலையாரே! நீங்கள் சொல்லியபடி அந்த நிரலை ப்ளாக்கரில் ஒட்டிவிட்டேன்.
    அது சரியாக வேலை செய்கிறது.
    பதிவிற்கு வந்து சோதனை செய்து பார்த்தேன். இங்கேயும் அது அசத்தலாக வேலை செய்கிறது
    இப்போது பதிவில் உள்ள text ஐ யாரும் copy எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    உங்கள் தொழில் நுட்ப அறிவிற்கு ஒரு Hats Off!
    அதோடு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. இந்த பதிவின் புகை படத்தில் Mouse க்கு பூட்டு போட்ட காட்சி உள்ளது..இப்போது நிஜமாகவே பூட்டு போடப்பட்டு விட்டது.

    ReplyDelete
  39. //////Blogger Ragu Sivanmalai said...
    இந்த பதிவின் புகை படத்தில் Mouse க்கு பூட்டு போட்ட காட்சி உள்ளது..இப்போது நிஜமாகவே பூட்டு போடப்பட்டு விட்டது./////

    அதைத் தற்செயல் என்பதா? அல்லது சிவன்மலையார் மூலம் வந்த இறையருள் என்பதா?

    இப்போது நானே நினத்தாலும் சட்டென்று காப்பி பண்ண முடியாது

    என்னுடைய எல்லா ஆக்கங்களுக்கும் கணினியில் கோப்புக்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  40. இணையத்தில் காண கிடைக்கு எந்த கண்டட்டையும் வெளியிடலாம் என்று அந்த பதிவர் தவறாக எண்ணியிருக்கலாம்...

    தட்ஸ்தமிழ் உட்பட எந்த கண்டட்டுக்கும் காப்பிரைய் கிடையாது என்று தான் நினைக்கிறேன்...

    ஏன் உங்கள் வலைப்பதிவில் கூட (C) என்று காப்பிரைட் இன்மர்மேஷன் இல்லையே ????

    சோதிடபதிவுகள் (C) வாத்தியார் என்று இல்லாமல் இருப்பதால் அவை ஓப்பன் லைசென்ஸ் என்ற வகையில் வரும்...

    அது தெரியாமல் அனைவரும் பொரிந்து தள்ளிவிட்டனர்...

    ReplyDelete
  41. வசந்த் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்
    *******************

    அன்புள்ள வசந்த்...

    எங்கள் ஆசிரியரின் பதிவுகளை அவரது அனுமதி இல்லாமல் வெளியிடுவது தவறு...

    இணையத்தில் உள்ள கண்டண்ட்கள் ஓப்பன் லைசென்ஸ் முறையில் வந்தாலும் சம்மந்தபட்டவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில் அவர்கள் விரும்பும் நடவடிக்கையை

    1. பதிவை நீக்குதல்
    2. ஆசிரியரின் அனுமதியோடு வெளியிடுதல்
    3. பக்கங்களின் மூலத்துக்கான சுட்டியை தருதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை

    கடைபிடிக்கவேண்டும்...

    சிலர் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்திருப்பதை பற்றி கணக்கில் கொள்ளாமல் எங்கள் ஆசிரியரை உடனே தொடர்புகொள்ளவேண்டும்..

    ReplyDelete
  42. //////Blogger செந்தழல் ரவி said...
    இணையத்தில் காண கிடைக்கு எந்த கண்டட்டையும் வெளியிடலாம் என்று அந்த பதிவர் தவறாக எண்ணியிருக்கலாம்..
    தட்ஸ்தமிழ் உட்பட எந்த கண்டட்டுக்கும் காப்பிரைய் கிடையாது என்று தான் நினைக்கிறேன்...
    ஏன் உங்கள் வலைப்பதிவில் கூட (C) என்று காப்பிரைட் இன்மர்மேஷன் இல்லையே ????
    சோதிடபதிவுகள் (C) வாத்தியார் என்று இல்லாமல் இருப்பதால் அவை ஓப்பன் லைசென்ஸ் என்ற வகையில் வரும்...
    அது தெரியாமல் அனைவரும் பொரிந்து தள்ளிவிட்டனர்.../////////

    உங்கள் கருத்திற்கு நன்றி தழலாரே!
    கோவையில் உள்ள ஒரு பெரிய அமைப்பில் நான் உறுப்பினன். ஒரு கடிதம் கொடுத்தால் எனக்கு வேண்டியதை அவர்கள் முன்னின்று செய்து கொடுத்துவிடுவார்கள். விரைவில் இந்தியப் பதிவு உரிமைச் சட்டத்தின் கீழ் எனது ஆக்கங்களைப் பதிவிடலாம் என்று உள்ளேன். பதிவிட்ட பிறகு பதிவின் தலைப்பில் அதைக் குறிப்பிடுகிறேன். நன்றி

    சட்டத்தின் பிரிவு:
    21. Right of author to relinquish copyright.-(1) The author of a work may relinquish all or any of
    the rights comprised in the copyright in the work by giving notice in the prescribed form to the
    Registrar of Copyrights

    ReplyDelete
  43. /////Blogger செந்தழல் ரவி said...
    வசந்த் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்
    ***************************************************
    அன்புள்ள வசந்த்...
    எங்கள் ஆசிரியரின் பதிவுகளை அவரது அனுமதி இல்லாமல் வெளியிடுவது தவறு...
    இணையத்தில் உள்ள கண்டண்ட்கள் ஓப்பன் லைசென்ஸ் முறையில் வந்தாலும் சம்மந்தபட்டவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில் அவர்கள் விரும்பும் நடவடிக்கையை
    1. பதிவை நீக்குதல்
    2. ஆசிரியரின் அனுமதியோடு வெளியிடுதல்
    3. பக்கங்களின் மூலத்துக்கான சுட்டியை தருதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை
    கடைபிடிக்கவேண்டும்...
    சிலர் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்திருப்பதை பற்றி கணக்கில் கொள்ளாமல் எங்கள் ஆசிரியரை உடனே தொடர்புகொள்ளவேண்டும்../////

    காப்பி அடித்த இடுகைகளை அவர் நீக்க வேண்டும். அதுதான் நான் எதிர்பார்ப்பது!

    உங்கள் பரிந்துரைக்கும் அவருக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. //திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியர் ஐயா,

    பதிவுகளை படிக்க மட்டும் என்ற மாற்றினால் இதைபோல் கருத்துத் திருட்டை தடுக்கலாம்.

    அதாவது
    copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.//


    //SP.VR. SUBBIAH said...
    நன்றி சிவன்மலையாரே! நீங்கள் சொல்லியபடி அந்த நிரலை ப்ளாக்கரில் ஒட்டிவிட்டேன்.
    அது சரியாக வேலை செய்கிறது.
    பதிவிற்கு வந்து சோதனை செய்து பார்த்தேன். இங்கேயும் அது அசத்தலாக வேலை செய்கிறது
    இப்போது பதிவில் உள்ள text ஐ யாரும் copy எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    உங்கள் தொழில் நுட்ப அறிவிற்கு ஒரு Hats Off!
    அதோடு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே!


    திருமிகு சுப்பையா ஆசிரியரின் மாணவர்கள் சார்பில் தங்களின் ,மென்பொருள் ஆலோசனைக்கு கோடான கோடி நன்றி.

    கார்த்திக்

    ReplyDelete
  45. // Ragu Sivanmalai said...
    Hello sir

    I have sent the code personally to your email id....You can use it//


    Dear sir,
    Thank you very much for your kind help in this case.Please give your email id in your blog "Ragu Sivanmalai" enabling all students of classroom2007 to get clarifications pertaining to internet and blogs.

    Ever yours
    karthik

    ReplyDelete
  46. அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!

    ReplyDelete
  47. வாத்தியாரயா,

    உங்கள் மனப் புழுக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் சொல்வது உண்மை. அறிவுத்திருட்டு பொருள் திருட்டை விட கேவலமானது. உங்கள் பதிவுகள் அனைத்தும் உங்கள் உழைப்பு. ஆனால் அனைவருக்கும் இது உங்கள் பதிவு என்பது தெரியும். அதனால் இதை ஒரு பெரிய ஜஸ்ட் இக்னோர் செய்யுங்கள்.

    ReplyDelete
  48. ///
    Thank you very much for your kind help in this case.Please give your email id in your blog "Ragu Sivanmalai" enabling all students of classroom2007 to get clarifications pertaining to internet and blogs.

    ok karthi..here is my email id ..

    ragusivan@gmail.com

    ReplyDelete
  49. //அதாவது copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.

    Yes Very Good Idea..We can do this..
    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..
    In that there will be head tag
    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...
    Thats all...please save the changes...
    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....
    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....
    //

    வாத்தியார் சார்,

    இது போன்ற நிரல்களை உபயோகிப்பதுல் எந்த பலனும் கிடையாது :) :) :)

    மறுமொழி பக்கத்தில் இருந்து உங்கள் பதிவை நகலெடுக்கமுடியும் :) :) :)

    இதோ நான் செய்துள்ளதை போல்

    ReplyDelete
  50. //செந்தழல் ரவி said...
    அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!

    Saturday, December //


    இது வலையில் தேடிய போது கிடைத்தது.
    இது சரியா ?இல்லையா?

    ஆசிரியர் ஐயாவும், ரகு சிவன்மலையாரும் சொன்னால் எல்லோருக்கும் பலனாய் இருக்குமே



    Try this for your body tag:
    body ondragstart="return false" onselectstart="return false"

    I think it only works on IE, and even then, just turning off JavaScript defeats it. But as you said, you only want to deter the casual use of copy paste - and a serious thief can always get your copy
    (courtesy-http://www.webmasterworld.com/forum21/5777.htm)

    ReplyDelete
  51. //அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!//

    ***********
    function disableselect(e){
    return false
    }
    function reEnable(){
    return true
    }
    document.onselectstart=new Function ("return false")
    if (window.sidebar){
    document.onmousedown=disableselect
    document.onclick=reEnable
    }
    **********
    முன்னும் பின்னும் வழக்கம் போல் script மற்றும் /script சேர்த்துக்கொள்ளவும்
    **********
    பல வருடங்களுக்கு முன்னரே (ஆங்கில தளத்தில்) நான் முயன்று பார்த்து அதன் பிறகு கைவிட்ட திட்டம் இது :) :)

    ReplyDelete
  52. // புருனோ Bruno said...
    //அதாவது copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.

    Yes Very Good Idea..We can do this..
    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..
    In that there will be head tag
    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...
    Thats all...please save the changes...
    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....
    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....
    //

    வாத்தியார் சார்,

    இது போன்ற நிரல்களை உபயோகிப்பதுல் எந்த பலனும் கிடையாது :) :) :)

    மறுமொழி பக்கத்தில் இருந்து உங்கள் பதிவை நகலெடுக்கமுடியும் :) :) :)

    இதோ நான் செய்துள்ளதை போல்//

    புருனோ சார்

    நான் கடந்த அரைமணிநேரத்திற்கு மேல் google உதவியுடன் இந்த நிரல் துண்டை ,கடைசியில் கிடைத்ததை, பதிந்தேன் எல்லோருக்கும் பயன் படட்டுமே என்று.


    Try this for your body tag:
    body ondragstart="return false" onselectstart="return false"

    கடைசியில் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே அதன்படி
    கள்ளன் பெரிசா?
    காப்பான் பெரிசா?

    என்றாய் விட்டதே

    தங்களின் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  53. ///////Blogger திருநெல்வேலி கார்த்திக் said..
    //SP.VR. SUBBIAH said...
    நன்றி சிவன்மலையாரே! நீங்கள் சொல்லியபடி அந்த நிரலை ப்ளாக்கரில் ஒட்டிவிட்டேன்.
    அது சரியாக வேலை செய்கிறது.
    பதிவிற்கு வந்து சோதனை செய்து பார்த்தேன். இங்கேயும் அது அசத்தலாக வேலை செய்கிறது
    இப்போது பதிவில் உள்ள text ஐ யாரும் copy எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    உங்கள் தொழில் நுட்ப அறிவிற்கு ஒரு Hats Off!
    அதோடு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே!/////
    ///// திருமிகு சுப்பையா ஆசிரியரின் மாணவர்கள் சார்பில் தங்களின் ,மென்பொருள் ஆலோசனைக்கு கோடான கோடி நன்றி.
    கார்த்திக்/////

    நன்றி கார்த்திக!

    ReplyDelete
  54. /////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    // Ragu Sivanmalai said...
    Hello sir
    I have sent the code personally to your email id....You can use it//
    Dear sir,
    Thank you very much for your kind help in this case.Please give your email id in your blog "Ragu Sivanmalai" enabling all students of classroom2007 to get clarifications pertaining to internet and blogs.
    Ever yours
    karthik//////


    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  55. //////Blogger செந்தழல் ரவி said...
    அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!/////

    ப்ளாக்கர் பின்னூட்டப் பெட்டி நிரல்களை ஏற்றுக் கொள்ளாது. அதனால் அந்த நிரலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் நண்பரே!

    ReplyDelete
  56. //////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரயா,
    உங்கள் மனப் புழுக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் சொல்வது உண்மை. அறிவுத்திருட்டு பொருள் திருட்டை விட கேவலமானது. உங்கள் பதிவுகள் அனைத்தும் உங்கள் உழைப்பு. ஆனால் அனைவருக்கும் இது உங்கள் பதிவு என்பது தெரியும். அதனால் இதை ஒரு பெரிய ஜஸ்ட் இக்னோர் செய்யுங்கள்.//////

    அதைத்தான் செய்ய வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  57. ///////Blogger rags said...
    /// Thank you very much for your kind help in this case.Please give your email id in your blog "Ragu Sivanmalai" enabling all students of classroom2007 to get clarifications pertaining to internet and blogs.
    ok karthi..here is my email id ..

    ragusivan@gmail.com//////

    நன்றி ராக்ஸ்

    ReplyDelete
  58. ///////Blogger புருனோ Bruno said...
    //அதாவது copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.
    Yes Very Good Idea..We can do this..
    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..
    In that there will be head tag
    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...
    Thats all...please save the changes...
    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....
    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....
    // வாத்தியார் சார்,
    இது போன்ற நிரல்களை உபயோகிப்பதுல் எந்த பலனும் கிடையாது :) :) :)
    மறுமொழி பக்கத்தில் இருந்து உங்கள் பதிவை நகலெடுக்கமுடியும் :) :) :)
    இதோ நான் செய்துள்ளதை போல்///////

    சத்தமாகச் சொல்லாதீர்கள் டாக்டர்!:-))))))))
    இந்தப் பின்னூட்டத்தைப் படிக்காதவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்...ஹஹ் ஹஹ் ஹா:-)))))))))

    ReplyDelete
  59. //////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    //செந்தழல் ரவி said...
    அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!
    Saturday, December //
    இது வலையில் தேடிய போது கிடைத்தது.
    இது சரியா ?இல்லையா?
    ஆசிரியர் ஐயாவும், ரகு சிவன்மலையாரும் சொன்னால் எல்லோருக்கும் பலனாய் இருக்குமே
    Try this for your body tag:
    body ondragstart="return false" onselectstart="return false"
    I think it only works on IE, and even then, just turning off JavaScript defeats it. But as you said, you only want to deter the casual use of copy paste - and a serious thief can always get your copy
    (courtesy-http://www.webmasterworld.com/forum21/5777.htm)

    பின்னூட்டப் பெட்டி நிரல்களை ஏற்றுக் கொள்ளாது. என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்து கேளுங்கள் அதை அனுப்பிவைக்கிறேன்

    ReplyDelete
  60. //////Blogger புருனோ Bruno said...
    //அய்யா அந்த நிரல் துண்டை அனைவரும் அறிய தரவும்...!!!//
    ***********
    function disableselect(e){
    return false
    }
    function reEnable(){
    return true
    }
    document.onselectstart=new Function ("return false")
    if (window.sidebar){
    document.onmousedown=disableselect
    document.onclick=reEnable
    }
    **********
    முன்னும் பின்னும் வழக்கம் போல் script மற்றும் /script சேர்த்துக்கொள்ளவும்
    **********
    பல வருடங்களுக்கு முன்னரே (ஆங்கில தளத்தில்) நான் முயன்று பார்த்து அதன் பிறகு கைவிட்ட திட்டம் இது :) :)

    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  61. Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    // புருனோ Bruno said...
    //அதாவது copy and paste பண்ண முடியாமல் அதை disable செய்ய - மென்பொருள் வல்லுன மாணவர்கள் உபாயம் சொல்லலாமே.
    Yes Very Good Idea..We can do this..
    Sir, Please visit your blogger dashboard...and click the layout button....Then, there will be a edit html button..
    In that there will be head tag
    Just below this tag, please insert the code that I will send it your email id personally..Just paste it...
    Thats all...please save the changes...
    Now, you can goto your blog...The visitors cannot select the content and copy it...It will be prevented....
    Only the advanced users of internet can bypass this..Others cannot simply copy it....
    // வாத்தியார் சார்,
    இது போன்ற நிரல்களை உபயோகிப்பதுல் எந்த பலனும் கிடையாது :) :) :)
    மறுமொழி பக்கத்தில் இருந்து உங்கள் பதிவை நகலெடுக்கமுடியும் :) :) :)
    இதோ நான் செய்துள்ளதை போல்//
    புருனோ சார்
    நான் கடந்த அரைமணிநேரத்திற்கு மேல் google உதவியுடன் இந்த நிரல் துண்டை ,கடைசியில் கிடைத்ததை, பதிந்தேன் எல்லோருக்கும் பயன் படட்டுமே என்று.
    Try this for your body tag:
    body ondragstart="return false" onselectstart="return false"
    கடைசியில் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே அதன்படி
    கள்ளன் பெரிசா?
    காப்பான் பெரிசா?
    என்றாய் விட்டதே
    தங்களின் தகவலுக்கு நன்றி///////

    அதற்காக கவலைப் படாதீர்கள். கள்ளன்கள் அவ்வப்போது மாட்டுவார்கள். அவர்களை அடையாளப் படுத்துவோம்

    ReplyDelete
  62. Dear Sir,

    http://vasanth-astrology.blogspot.com/2008/11/blog-post_7290.html

    I have expressed my concerns in the comments and as a student, I have the duty too!

    Regards

    Sridhar

    ReplyDelete
  63. ஐயா, நான் உங்கள் ஜோதிடப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகன். நான் யாருக்கும் இதுவரை பின்னூட்டம் இட்டதில்லை. முதன்முறையாக தங்களுக்கு இட்ட ஒரே ஒரு பின்னூட்டமும் இப்படி புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கவில்லை. கரிசனத்துடன் கருத்துக்களைத் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. எனது எழுத்துக்களை அறிவுத்திருட்டில் இழந்தவன் என்ற முறையிலே, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே தங்களுக்குத் தெரிவித்தேன்.

    ReplyDelete
  64. நகைச்சுவைக்களுக்கு அப்பால்

    பதிவை “வெட்டி ஒட்டுவதை” கடுமையாக எதிர்ப்பவன் நான்

    யாருக்காவது பதிவு பிடித்திருந்தால் சுட்டி மட்டும் அளித்தால் போதும்

    ஏதாவது விவாதம் என்றால் அந்த குறிப்பிட்ட பத்தியை மட்டும் வெட்டி ஒட்டி மேற்கோள் காட்டலாம்

    ReplyDelete
  65. இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் தெளிவாக குறிப்பிடவும்.

    மறுபதிப்பு செய்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.

    இணையதளங்களிலோ, பிற வலைப்பதிவுகளிலோ மீள்பிரசுரம் செய்வதை (முழுவதும் வெட்டி ஒட்டுவதை) தவிர்க்கவும். அவசியம் என்றால் சுட்டி மட்டும் அளித்தால் போதும்.

    எதேனும் கருத்திற்கு மாற்று கருத்து (உங்கள் பதிவில்) கூறவிரும்பினால் அந்த கருத்தை மட்டும் மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை கூறவும்.

    வரிக்கு வரி மாற்றுகருத்து கூறவேண்டும் என்றால் மட்டுமே முழு இடுகையையும் (உங்கள் பதிவில்) பதியவும்.

    ReplyDelete
  66. /////Blogger Sridhar said...
    Dear Sir,
    http://vasanth-astrology.blogspot.com/2008/11/blog-post_7290.html
    I have expressed my concerns in the comments and as a student, I have the duty too!
    Regards
    Sridhar//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  67. ///////Blogger ரிஷி said..
    ஐயா, நான் உங்கள் ஜோதிடப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகன். நான் யாருக்கும் இதுவரை பின்னூட்டம் இட்டதில்லை. முதன்முறையாக தங்களுக்கு இட்ட ஒரே ஒரு பின்னூட்டமும் இப்படி புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கவில்லை. கரிசனத்துடன் கருத்துக்களைத் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. எனது எழுத்துக்களை அறிவுத்திருட்டில் இழந்தவன் என்ற முறையிலே, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே தங்களுக்குத் தெரிவித்தேன்.//////

    நல்லது செய்திருக்கிறீர்கள். அதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  68. ///////Blogger புருனோ Bruno said...
    நகைச்சுவைக்களுக்கு அப்பால்
    பதிவை “வெட்டி ஒட்டுவதை” கடுமையாக எதிர்ப்பவன் நான்
    யாருக்காவது பதிவு பிடித்திருந்தால் சுட்டி மட்டும் அளித்தால் போதும்
    ஏதாவது விவாதம் என்றால் அந்த குறிப்பிட்ட பத்தியை மட்டும் வெட்டி ஒட்டி மேற்கோள் காட்டலாம்//////

    உங்கள் கருத்திற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  69. Blogger புருனோ Bruno said...
    இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் தெளிவாக குறிப்பிடவும்.
    மறுபதிப்பு செய்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.
    இணையதளங்களிலோ, பிற வலைப்பதிவுகளிலோ மீள்பிரசுரம் செய்வதை (முழுவதும் வெட்டி ஒட்டுவதை) தவிர்க்கவும். அவசியம் என்றால் சுட்டி மட்டும் அளித்தால் போதும்
    எதேனும் கருத்திற்கு மாற்று கருத்து (உங்கள் பதிவில்) கூறவிரும்பினால் அந்த கருத்தை மட்டும் மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை கூறவும்.
    வரிக்கு வரி மாற்றுகருத்து கூறவேண்டும் என்றால் மட்டுமே முழு இடுகையையும் (உங்கள் பதிவில்) பதியவும்.///////

    நன்றி டாகடர். இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. தனிப்பட்ட வாசகர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  70. //SP.VR. SUBBIAH said...

    நன்றி டாகடர். இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. தனிப்பட்ட வாசகர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!//

    ஆசிரியர் ஐயாவின், சோதிடக் கலை புத்தகம் பதிப்பிக்கப்படும் பொன்னாளுக்கு
    வகுப்பறை மாணவர்கள் சார்பில் பணிவுகலந்த அன்பு வாழ்த்துக்கள்

    கார்த்திக்.

    ReplyDelete
  71. கொஞ்சம் softஆ சொல்லியிருக்கலாம்.

    பலரும் செய்வதுதான், குமுதம், விகடன், தினமலர்னு, எல்லா இடத்திலிருந்தும் காப்பி/பேஸ்ட் செய்து போடும் பலர் நம்மிடையே உண்டு.

    சிலர் தெரியாமல் செய்யும் ரகம்.

    சொன்னா புரிஞ்சுப்பாங்க :)

    ReplyDelete
  72. //////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    //SP.VR. SUBBIAH said...
    நன்றி டாகடர். இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. தனிப்பட்ட வாசகர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!//
    ஆசிரியர் ஐயாவின், சோதிடக் கலை புத்தகம் பதிப்பிக்கப்படும் பொன்னாளுக்கு
    வகுப்பறை மாணவர்கள் சார்பில் பணிவுகலந்த அன்பு வாழ்த்துக்கள்
    கார்த்திக்.//////

    May 2009 or June 2009 ல் வெளியிடலாம் என்று உள்ளேன் நண்பரே. அப்போது அறிவிக்கிறேன்
    பொறுத்திருங்கள்

    ReplyDelete
  73. Blogger SurveySan said...
    கொஞ்சம் softஆ சொல்லியிருக்கலாம்.
    பலரும் செய்வதுதான், குமுதம், விகடன், தினமலர்னு, எல்லா இடத்திலிருந்தும் காப்பி/பேஸ்ட் செய்து போடும் பலர் நம்மிடையே உண்டு.
    சிலர் தெரியாமல் செய்யும் ரகம்.
    சொன்னா புரிஞ்சுப்பாங்க :)/////

    நன்று நண்பரே. உங்கள் கருத்திற்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  74. From : http://vasanth-astrology.blogspot.com

    Sir,

    I seen all the comments below here ... well some said I have to get punished ,, and some of them said okk leave the person ,,

    and the foremost thing is that u should b known my argument before deciding ,,,,

    on Nov 18 i just saw Ur blog .. and i was impressed to see new things so i want to take print out on specified post .. but the Microsoft word didn't accept Tamil words .. so I tried a lot by using various font but no result..
    so i thought of doing a another blog and take a print out from it ,,,

    I created it not for fame or money

    And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong.

    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .

    I deleted that site ...

    ReplyDelete
  75. Vasanth,

    Thats good and you have done a good job. I would be happy if you also become a student in our classroom. Our beloved vaththiyar will be happy to admit you in his class I guess.

    ReplyDelete
  76. vasanth said...
    From : http://vasanth-astrology.blogspot.com

    Sir

    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .

    I deleted that site ...


    'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்'னு 'விருமாண்டி'யில்
    ஒரு வசனம் வருமே... அது சத்தியம்!

    ReplyDelete
  77. //////Blogger vasanth said...
    From : http://vasanth-astrology.blogspot.com
    Sir,
    I seen all the comments below here ... well some said I have to get punished ,, and some of them said okk leave the person ,,
    and the foremost thing is that u should b known my argument before deciding ,,,,
    on Nov 18 i just saw Ur blog .. and i was impressed to see new things so i want to take print out on specified post .. but the Microsoft word didn't accept Tamil words .. so I tried a lot by using various font but no result..
    so i thought of doing a another blog and take a print out from it ,,,
    I created it not for fame or money
    And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong.
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .
    I deleted that site ...//////

    மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை!
    நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.
    ஜோதிடத்தில் ஆர்வம் இருந்தால் நீங்களும் சேர்ந்து படியுங்கள்.
    கையைக் கொடுங்கள். நடந்ததை மறந்துவிட்டு நட்புடன் இருப்போம்

    தமிழில் உங்கள் கணினியில் தெரிய control panel > regional languages option > languages > Tick the box = install files for complex scripts

    தமிழில் தட்டச்ச ekalappai tamil software (it is a free software available in the net). தமிழ் பயன் பாட்டிற்கு மற்றும் ஃபைல் சேமிப்பிற்கு - word pad!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  78. Blogger அமர பாரதி said...
    Vasanth,
    Thats good and you have done a good job. I would be happy if you also become a student in our classroom. Our beloved vaththiyar will be happy to admit you in his class I guess.////

    அதெல்லாம் நல்ல விதமாக முடிந்து விட்டது நண்பரே! நன்றி!

    ReplyDelete
  79. ////Blogger ezhil arasu said...
    vasanth said...
    From : http://vasanth-astrology.blogspot.com
    Sir
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .
    I deleted that site ...
    'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்'னு 'விருமாண்டி'யில்
    ஒரு வசனம் வருமே... அது சத்தியம்!/////

    நன்றி நண்பரே! என்னுடைய பின்னூட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  80. //SP.VR. SUBBIAH said...
    ////Blogger ezhil arasu said...
    vasanth said...
    From : http://vasanth-astrology.blogspot.com
    Sir
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .
    I deleted that site ...
    'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்'னு 'விருமாண்டி'யில்
    ஒரு வசனம் வருமே... அது சத்தியம்!/////

    நன்றி நண்பரே! என்னுடைய பின்னூட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்!//

    பெரியவங்க எப்போதும், எந்த காலத்திலும்,எந்த சமயத்திலும்,எந்த இடத்திலும்,எந்த செய்கையிலும்பெரியவங்கதான்

    உங்களின் பரந்த தாராள பண்பான நல் உள்ளத்திற்கு
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  81. /////Blogger புரட்சித் தமிழன் said...
    //SP.VR. SUBBIAH said...
    ////Blogger ezhil arasu said...
    vasanth said...
    From : http://vasanth-astrology.blogspot.com
    Sir
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .
    I deleted that site ...
    'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்'னு 'விருமாண்டி'யில்
    ஒரு வசனம் வருமே... அது சத்தியம்!/////
    நன்றி நண்பரே! என்னுடைய பின்னூட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்!//
    பெரியவங்க எப்போதும், எந்த காலத்திலும்,எந்த சமயத்திலும்,எந்த இடத்திலும்,எந்த செய்கையிலும்பெரியவங்கதான்
    உங்களின் பரந்த தாராள பண்பான நல் உள்ளத்திற்கு
    பாராட்டுக்கள்/////

    வயதானால் அந்தப் பக்குவம் வந்துவிடும்.
    இதில் வித்தியாசமாகச் சொல்ல அல்ல பாராட்ட ஒன்றும் இல்லை நண்பரே!

    ReplyDelete
  82. //and i was impressed to see new things so i want to take print out on specified post .. but the Microsoft word didn't accept Tamil words .. so I tried a lot by using various font but no result..
    so i thought of doing a another blog and take a print out from it ,,,
    I created it not for fame or money
    And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong.
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .//


    அன்பரே உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது.

    இந்த வலைப்பூவை அச்சு செய்ய முடியாத உங்களால் உங்கள் வலைப்பூவை மட்டும் அச்சு செய்ய முடிந்ததா

    அச்சு செய்து விட்டீர்களா

    அதன் பிறகு உடனே அழித்திருக்க வேண்டியது தானே

    அப்படி அச்சு செய்ய முடியவில்லை என்றாலும் உடனே அழித்திருக்க வேண்டியது தானே

    --
    ”நான் பதிவை அழித்து விட்டேன்” என்று மட்டும் கூறியிருந்தீர்கள் என்றால் மகிழ்ந்திருப்போம்
    --
    தற்சமயம் அனைவரையும் முட்டாளாக்க முயன்றுள்ளீர்கள் :( :(
    --
    இந்த் பதிவின் மேலே தமிழ் மண கருவி பட்டை ஒன்று உள்ளது

    அதில் PDF என்று இருக்கிறதே, அதை சுட்டினாலே இந்த பதிவை அச்சு எடுக்கலாம்
    --

    ReplyDelete
  83. //And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong. //

    பிரிண்ட் அவுட் எடுப்பது தப்பா சரியா என்பது விவாதம் அல்ல

    நீங்கள் செய்தது பிரிண்ட் அவுட் எடுப்பது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

    தாங்கள் முதலில் செய்தது (பதிவை நகலெடுத்தது) அறியாமை என்று ஏற்றுக்கொண்டாலும், உங்களின் தற்பொழுதைய மறுமொழி வருத்தமடைய வைக்கிறது

    :(

    ReplyDelete
  84. காப்பி அடித்தவர் மன்னிப்பு கேட்டு விட்டார்

    அசல் எழுத்தாளர் மன்னித்து விட்டார் என்ற வகையில் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்

    --

    பிரிண்ட் அவுட் எடுக்க நினைப்பவர்கள்
    ஒன்று தமிழ் மண கருவி பட்டையில் இருக்கும் PDF ல் சுட்டவும்

    அல்லது control என்ற விசையையும் p என்ற விசையையும் சேர்த்து அழுத்தினால் போதும்

    இப்படி மற்றொரு வலைப்பூ ஆரம்பிக்க தேவையில்லை

    ReplyDelete
  85. Where do you get such Mouse pictures? Very nice. Is there a free clip art site, where users can use, without giving any mention or royalty?

    ReplyDelete
  86. Where do you get such Mouse pictures? Very nice. Is there a free clip art site, where users can use, without giving any mention or royalty?


    வாங்க விஜய்

    நல்லா கேள்வி கேட்குறீங்க? உங்க கேள்வி அவ்ளோதானா வேற எதாவது இருக்கா?

    கண்ணா கேள்வி கேட்குறது, copy & paste இதெல்லாம் ரொம்ப சுலபம்

    சொந்தமா எழுதி பார் மச்சி அந்த வலி எப்படின்னு தெரியும்

    ReplyDelete
  87. Yes, I have so many questions in life!

    You are right Mr Sridhar Kannan. It takes a lot of effort and personal time.

    I write many blogs and run a KP system astrology group for a long time.

    In English, I like this astro site - cyberastro.com where you can find glib house by house vedic astrology explanations.

    ReplyDelete
  88. //////Blogger புருனோ Bruno said...
    //and i was impressed to see new things so i want to take print out on specified post .. but the Microsoft word didn't accept Tamil words .. so I tried a lot by using various font but no result..
    so i thought of doing a another blog and take a print out from it ,,,
    I created it not for fame or money
    And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong.
    aarvathala senjitom ...
    tha-ippo na ma-nichikonga .//
    அன்பரே உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது.
    இந்த வலைப்பூவை அச்சு செய்ய முடியாத உங்களால் உங்கள் வலைப்பூவை மட்டும் அச்சு செய்ய முடிந்ததா
    அச்சு செய்து விட்டீர்களா
    அதன் பிறகு உடனே அழித்திருக்க வேண்டியது தானே
    அப்படி அச்சு செய்ய முடியவில்லை என்றாலும் உடனே அழித்திருக்க வேண்டியது தானே --
    ”நான் பதிவை அழித்து விட்டேன்” என்று மட்டும் கூறியிருந்தீர்கள் என்றால் மகிழ்ந்திருப்போம் --
    தற்சமயம் அனைவரையும் முட்டாளாக்க முயன்றுள்ளீர்கள் :( :( --
    இந்த் பதிவின் மேலே தமிழ் மண கருவி பட்டை ஒன்று உள்ளது
    அதில் PDF என்று இருக்கிறதே, அதை சுட்டினாலே இந்த பதிவை அச்சு எடுக்கலாம் ///////

    ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அதை நானும் உணர்ந்தேன்.
    தற்சமயம் அவர் தன் தவறுக்கு வருந்தியிருக்கிறார்
    ஆகவே இதோடு விட்டு விடுவோம் டாக்டர்
    உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  89. Blogger புருனோ Bruno said...
    //And If I taken the print out is wrong means and here all the persons reading the site is also wrong. //
    பிரிண்ட் அவுட் எடுப்பது தப்பா சரியா என்பது விவாதம் அல்ல
    நீங்கள் செய்தது பிரிண்ட் அவுட் எடுப்பது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
    தாங்கள் முதலில் செய்தது (பதிவை நகலெடுத்தது) அறியாமை என்று ஏற்றுக்கொண்டாலும், உங்களின் தற்பொழுதைய மறுமொழி வருத்தமடைய வைக்கிறது :(/////

    உண்மைதான்!

    ReplyDelete
  90. /////Blogger புருனோ Bruno said...
    காப்பி அடித்தவர் மன்னிப்பு கேட்டு விட்டார்
    அசல் எழுத்தாளர் மன்னித்து விட்டார் என்ற வகையில் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்
    -------------------------------------------------------------
    பிரிண்ட் அவுட் எடுக்க நினைப்பவர்கள்
    ஒன்று தமிழ் மண கருவி பட்டையில் இருக்கும் PDF ல் சுட்டவும்
    அல்லது control என்ற விசையையும் p என்ற விசையையும் சேர்த்து அழுத்தினால் போதும்
    இப்படி மற்றொரு வலைப்பூ ஆரம்பிக்க தேவையில்லை///////

    உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி டாக்டர்!

    ReplyDelete
  91. //////Blogger Vijay said...
    Where do you get such Mouse pictures? Very nice. Is there a free clip art site, where users can use, without giving any mention or royalty?///////

    I am taking the images from Google images site!
    It is free!

    ReplyDelete
  92. Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
    Where do you get such Mouse pictures? Very nice. Is there a free clip art site, where users can use, without giving any mention or royalty?
    வாங்க விஜய்
    நல்லா கேள்வி கேட்குறீங்க? உங்க கேள்வி அவ்ளோதானா வேற எதாவது இருக்கா?
    கண்ணா கேள்வி கேட்குறது, copy & paste இதெல்லாம் ரொம்ப சுலபம்
    சொந்தமா எழுதி பார் மச்சி அந்த வலி எப்படின்னு தெரியும்//////

    இல்லை நண்பரே அவர் படங்களைப் (images) பற்றிக்கேட்டிருக்கிறார். நான் பதில் எழுதியுள்ளேன்

    ReplyDelete
  93. //////Blogger Vijay said..
    Yes, I have so many questions in life!
    You are right Mr Sridhar Kannan. It takes a lot of effort and personal time.
    I write many blogs and run a KP system astrology group for a long time.
    In English, I like this astro site - cyberastro.com where you can find glib house by house vedic astrology explanations.//////

    தகவலுக்கு நன்றி விஜய்!

    ReplyDelete
  94. //ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அதை நானும் உணர்ந்தேன்.
    தற்சமயம் அவர் தன் தவறுக்கு வருந்தியிருக்கிறார்
    ஆகவே இதோடு விட்டு விடுவோம் //

    இதுதான் சரியான முடிவு வாத்தியாரையா. சும்மா பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்க் வேண்டியதில்லை. காப்பி அடித்தவர் மன்னிப்பு கேட்டு விட்டு பதிவையும் அழித்து விட்டார். அத்துடன் விட்டு விட்டு அடுத்த வேலையை பார்ப்பதுதான் பெருந்தன்மை. அதை செய்த நீங்கள் பெரிய மனிதர்.

    ReplyDelete
  95. /////Blogger அமர பாரதி said...
    //ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அதை நானும் உணர்ந்தேன்.
    தற்சமயம் அவர் தன் தவறுக்கு வருந்தியிருக்கிறார்
    ஆகவே இதோடு விட்டு விடுவோம் //
    இதுதான் சரியான முடிவு வாத்தியாரையா. சும்மா பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. காப்பி அடித்தவர் மன்னிப்பு கேட்டு விட்டு பதிவையும் அழித்து விட்டார். அத்துடன் விட்டு விட்டு அடுத்த வேலையை பார்ப்பதுதான் பெருந்தன்மை. அதை செய்த நீங்கள் பெரிய மனிதர்./////

    என் வயதிற்கு சிலவற்றைப் பொறுத்துப் போக வேண்டும். அதைத்தான் செய்தேன்!

    ReplyDelete
  96. ////////Blogger Vijay said...
    Where do you get such Mouse pictures? Very nice. Is there a free clip art site, where users can use, without giving any mention or royalty?///////

    I am taking the images from Google images site!
    It is free!

    //

    Ayya,

    It may not be the case.
    Please check here.

    http://images.google.com/help/faq_images.html#copyright

    //Where can I find Google's Image Search?

    You can access Google's Image Search by selecting the "images" tab. It can also be found at http://images.google.com.

    Are there any copyright restrictions associated with the images?

    The images identified by the Google Image Search service may be protected by copyrights. Although you can locate and access the images through our service, we cannot grant you any rights to use them for any purpose other than viewing them on the web. Accordingly, if you would like to use any images you have found through our service, we advise you to contact the site owner to obtain the requisite permissions.
    //

    ReplyDelete
  97. Anbin Vaathiyar Iyya Avargalukku...

    Thangalin PAdivugalai alla alla Paadangali murayaga padithu varum oru maanavan naan, Enadu peyar R.Ramanes. Naan Colombo vil erukirean... ungalin paadangalai enaku thatpoduthan kaanak kidaithadu... Thamadam endralum Padika kidaithamaiku mikka magilchi... Ungalin padivugalai thirudiyavarai mannithu vidungal... MAnidanin sirape mannipadu thane... edupondra visayangalai ungalukul eatramal evaigalai puram thalli vidungal... Oru manavanaga enadu karuthu.. (Thavaru erundal mannikavum)

    Nandri..
    MAnavan - R.Ramanes

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com