மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.12.08

எரித்தாலும் பயன் இல்லாதது எது?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


"திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே. "
- விவேக சிந்தாமணி - பாடல் எண் 28


திருப்பதி மிதியாத பாதம்,
சிவனடி வணங்காத தலை,
இரப்பவருக்குக் கொடுக்காத கை,
இனிய சொற்களைக் கேட்காத காது,
தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்
உயிர் கொடுக்காதவனின் உடல்
ஆகியவைகள்
இருந்தும் பயனில்லை;
காட்டில் எரித்தாலும் பயனில்லை.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 3


வாழ்க வளமுடன்!

23 comments:

  1. அறிவிப்பு:
    அடுத்த ஜோதிடப் பாடத்திற்காக மாணவக் கண்மணிகள் பலர் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அடுத்த பாடம் சந்திரனைப் பற்றியது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.தட்டச்சும் வேலை பாக்கியுள்ளது.
    திங்கட்கழமை 15.12.2008 அன்று அது பதிவாகும்!
    அன்புடன்
    வகுப்பறை வாத்தியார்

    ReplyDelete
  2. எரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..

    ReplyDelete
  3. ஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்தும் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. நல்ல பாடல் அய்யா!

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  5. Good shot Sir

    The people who leave their parents at old age homes have to read this...

    ReplyDelete
  6. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    எரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..////

    உலகில் பாதிப்பேர்கள் இந்தப் பிரிவில் உள்ளார்கள். கலியுகம்.
    என்ன செய்வது உனா தானா?

    ReplyDelete
  7. //////hotcat said...
    Present Sir./////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  8. //////வேலன். said...
    ஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்தும் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    தன்னைப்போல அது திங்களன்று வெளியாகும் வேலவரே!

    ReplyDelete
  9. /////RAJA said...
    நல்ல பாடல் அய்யா!
    அன்புடன்
    இராசகோபால்/////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  10. /////Ragu Sivanmalai said...
    Good shot Sir
    The people who leave their parents at old age homes have to read this.../////

    படித்தாலும் திருந்த மாட்டார்கள். மேற்கொண்டு தங்கள் நிலையை நியாயப் படுத்துவார்கள்.கலியுகம். அப்படித் தான் இருக்கும்! காலதேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். ஒரு நாள் அவர்களுக்கும் வயதாகும் இல்லையா? அப்போது புரட்டி எடுத்து விடுவான்!

    ReplyDelete
  11. அய்யா,

    அருமையான பாடல். கருத்து நச்.

    இதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா?

    (if with meaning, it would be doubly useful)

    நன்றி!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  12. சரியாக சொன்னீர்கள் அய்யா !
    தமிழ் மனம் கமழும்
    படிப்பவர் மனம் மகிழும்
    பாடலுடன் வகுப்பறை அமர்க்களம் !!!!!!

    ReplyDelete
  13. சார்
    நாக்கை விட்டு விட்டாரே
    மரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ?

    ReplyDelete
  14. Sridhar said...
    அய்யா,
    அருமையான பாடல். கருத்து நச்.
    இதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா?
    (if with meaning, it would be doubly useful)
    நன்றி!
    ஸ்ரீதர் S/////

    இருக்கிறது. சுட்டியைக் கொடுத்துள்ளேன்:
    click here for the link = http://sivayasiva.blogspot.com/2008/11/120.html

    ReplyDelete
  15. ///////ஆர்.கார்த்திகேயன் said...
    சரியாக சொன்னீர்கள் அய்யா !
    தமிழ் மனம் கமழும்
    படிப்பவர் மனம் மகிழும்
    பாடலுடன் வகுப்பறை அமர்க்களம் !!!!!!/////

    உங்கள் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. //////MarmaYogi said...
    சார்
    நாக்கை விட்டு விட்டாரே
    மரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ?//////

    சொல்லியிருப்பதே போதும் அன்பரே!

    ReplyDelete
  17. அருமையான பாடல்,அய்யா!
    அன்புடன்,
    GK,BLR

    ReplyDelete
  18. //////Geekay said...
    அருமையான பாடல்,அய்யா!
    அன்புடன்,
    GK,BLR///////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  19. அருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி..

    ReplyDelete
  20. /////அணுயோகி said...
    அருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி../////

    நன்றிகள் அப்பாடலை எழுதிய ஞானிக்கே உரித்தானது!

    ReplyDelete
  21. anulla aasiriyar avarkalukku thangalin blog il thaankal vaithiruntha tamil jodthida soft were migavum payan ullathaga irunthathu athai thankal marupadiyum athe idathil vaithu irunthaal ennai pondru puthithaaga palagum maanakkarkalukku migavum periya uthaviyaaga irukum ,. athai thirumbavum vaipeerkala aasiriyar semmozhi maanatil pesiya uraiyai yaravathu enakku anupinaal migavum uthaviyaaga irukum mikka nandri
    b

    ReplyDelete
  22. /////prabakar.l.n said...
    anulla aasiriyar avarkalukku thangalin blog il thaankal vaithiruntha tamil jodthida soft were migavum payan ullathaga irunthathu athai thankal marupadiyum athe idathil vaithu irunthaal ennai pondru puthithaaga palagum maanakkarkalukku migavum periya uthaviyaaga irukum ,. athai thirumbavum vaipeerkala aasiriyar semmozhi maanatil pesiya uraiyai yaravathu enakku anupinaal migavum uthaviyaaga irukum mikka nandri//////

    சரி, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்! நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com