மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.08

கயல்விழிகளில் வயல் அமைப்பவன் யார்?


"கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!"

என்று நாயகன் தன் காதலியைக் கண்டு மனம் உருகிப் பாடுகின்றான்

உடனே நாயகியும் கண்கள் பனிக்க காதலனுக்குப் பதில் சொல்லிப்
பாடுகிறாள்

"கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா"

"அடிப்பாவி, தன் காதலனின் அழகைப் பார்த்து வியக்காத பெண்ணும்
பெண்ணல்ல என்றல்லவா சொல்கிறாள். என்ன அநியாயம்? " என்று
அவளை வையாதீர்கள். அவளுடைய நாயகன் அவ்வளவு அழகானவன்.
அவனுடைய அழகை உயர்த்திச் சொல்கின்றாள்.அவ்வளவுதான்.

உடனே நாயகன் சும்மா இருப்பானா? அவனும் பொருத்தமாகப் பதில்
சொல்கிறான்

"பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?"

இதுக்கு அவளே பரவாயில்லை. இவனே அப்படிச் சொல்லும் போது
அவள் சொல்வதில் என்ன தவறு?

தொடர்ந்து நாயகன் தன் காதலியை வர்ணிக்கின்றான். வர்ணனை
பிடிக்காதவர்கள் பத்து வரிகள் தாண்டிப் போய்விடலாம்.

"மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது"

என்று நாயகன் சிலாகித்துப் பாட, நாயகி விடுவாளா, உடனே அவள்
கிறங்கிப் பாடுகின்றாள்

"தேக்குமரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் நிறத்தைத் தந்தது
பொன்னல்லவோ சிரிப்பைத் தந்தது"

உடனே நம்ம ஆள் மயங்கி விட்டான். தொடர்ந்து பாடுகிறான்

"சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை"

அவன் வளர்த்த உறவைப் பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்காமல்
பாடலத் தொடர்ந்து பாருங்கள்.

"மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து"

அவள் காத்திருந்ததை எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள். மார்கழிப் பனி
போன்ற உடையாம்.

உடனே செம்மாதுளங்கனி இதழ்க்காரி என்ன பிதற்றுகிறாள் பாருங்கள்

"அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் -
இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் -
இன்றுபருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்"

தன் முகம் சிவந்ததன் காரணத்தை அவள் அடுக்கிச் சொல்கிறாள்

உடனே நம்ம ஆள் அச்சாரம் போட்டுப் பாடுகிறான். என்னதொரு
கற்பனை பாருங்கள்

"கயல்விழி இரண்டில் வயல் அமைத்து -
அதில்காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா"

கயல் விழிகளில் வயல் அமைக்கிறானாம். ஆமாம் அந்த வயலுக்குப்
பத்திரப்பதிவு செலவெல்லாம் கிடையாது. அமைக்கட்டும் என்ன
கெட்டுவிடப் போகிறது?

உடனே நாயகி தன் நிலை இழந்து சொல்கின்றாள்

"பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
அதில் பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா!

கட்' கட்.... வாத்தியாரின் கத்திரிக்கோல் விழுந்து விட்டது.
வாருங்கள் பாடத்தைப் பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் என்ன இது? குஷி moodஆ? காதல் பாடல்களாய் இருக்கிறது.
வகுப்பை நடத்தும் லட்சணம் இதுதானா?"

"குஷி மூடும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்தப் பாடல்
வரிகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன?"

"..........................................."

"எனக்குத் தெரியும் கேள்வி கேட்டால் எல்லோரும் வழக்கம்போல வாய்
மூடி மெளனமாகி விடுவீர்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இல்லை என்றால்
கடைசியில் நான் சொல்கிறேன்"
---------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் ஒரு க்ளூ மட்டும் கொடுங்கள்"

"இன்றையப் பாடத்திற்கும், அந்தப் பாடல்வரிகளுக்கும் ஒரு தொடர்பு
இருக்கிறது"
---------------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் சூரியனின் பங்கு!

கிரகங்களின் அரசன் சூரியன். அதில் சந்தேகமில்லை. சூரியன்தான்
ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி எவரும்
அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது.

சூரியனை இயற்கையிலேயே ஒரு தீயகிரகம் (natural malefic) என்று
வேதங்கள் வர்ணிக்கின்றன. அதனால்தானோ என்னவோ அரசியல்
வாதிகளிலும் பலர் தீயவர்களாகி விடுகிறார்கள்

ஜாதகனுக்கு வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவன் சூரியனே.
நம் உடல் அமைப்புக்கு அவன்தான் காரகன்

(The Sun gives us vitality and the power of resistance and immunity.
It is responsible for our physical makeup - the body's constitution.
The Sun gives life force, the power of will, intellect, brilliance,
prosperity, success in worldly affairs, wealth, personal conduct, activity,
cheerfulness, good fortune, wisdom, ambition, fame, the understanding
of the phenomenal world, and the knowledge of medicine.)

சூரியனை வைத்துத்தான், சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
நாளைத்தான் நாம் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். அதைத்தான்
மொழிபெயர்ப்பில் Sunday என்கிறார்கள்.

சூரியனை வணங்கி மகிழத்தான் ஞாயிற்றுக் கிழமையை விடுமுறையாக
விட்டார்கள். அதாவது அது அந்தக்காலத்தில். சூரியனை வணங்கி விட்டு
வேலைகளைத் துவங்குவோம் மற்ற ஆறு நாட்களில் வேலைகளைச்
செய்வோம்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கலியுகம். மனிதன் திங்கள்
முதல் சனி வரை வேலை செய்துவிட்டு ஞாயிறன்று ஓய்வு என்று சொல்லிப்
படுத்து உறங்குகிறான். அல்லது சன் டி.வி, கே. டி.வி, ராஜ் டி.வி என்று
ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை ஓசியில் பார்த்து மகிழ்கிறான்.
ஓசியில் கிடைப்பதெல்லாம் பெரும்பாலும் மகிழ்ச்சியையே தரும்:-))))

Aditya என்பதற்கு தமிழில் முதல் பிறவி ("first born") என்று பெயர்
பூமியின் சுழற்சியினால் இரவு பகல் நமக்குக் கிடைப்பதற்குக் காரணம்
சூரியனே. இல்லையென்றால் வெறும் இரவு மட்டும்தான் இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------
1. ஜாதகனுக்கு வாளிப்பான அல்லது வலிமையான அல்லது ஆரோக்கியமான
உடம்பு அமைவதற்குக் காரணம் சூரியனே. சூரியன்தான் உடல்காரகன்

2. சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருந்தால், சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அத்ற்கும் மேற்பட்ட பரல்களையும் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு
நல்ல உடல் அமைப்பு இருக்கும்.

நமக்கு எதையும் சினிமாவை வைத்துச் சொன்னால் எளிதில் புரியும். ஆகவே
அதன் பலனை இப்படிச்சொல்லலாம். சூரியன் நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு
அரவிந்தசாமி, அல்லது அஜீத் குமார் அல்லது சூர்யா அல்லது அப்பாஸ்
அல்லது மமுமுட்டி போன்றவர்களின் வசீகரமான உடல் அமைப்பு இருக்கும்
இல்லையென்றால் ஜாதகன் ஓமக்குச்சி நரசிம்மன்தான்

3. ஜாதகத்தில் சூரியன் தீயவர்களின் வீட்டில் அல்லது சேர்க்கையில் அல்லது
பார்வையில் இருந்தால் ஜாதகனுக்கு நோய்கள் இருக்கும் அல்லது உண்டாகும்
சூரியன் ஆறு, எட்டு, அல்லது பன்னிரெண்டு ஆகிய வீடுகளில் அமர்ந்து
இருந்தாலும் அதே பலன்தான்.

இந்த அமைப்பில் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது
விதிவிலக்கைக் கொடுக்கும்!

4. ஜாதகத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர்
நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள்
உண்டாகும் அல்லது ஏற்படும்.

5. சூரியன்தான் தந்தைக்கும் அதிபதி. சூரியன் நன்றாக இருந்தால் நல்ல
தந்தை கிடைப்பார். இல்லையென்றால் இல்லை

6. ஜாதகத்தில் சூரியன் கெட்டிருந்தால், ஒரு சப்பையான தந்தை அல்லது
ஒரு உதவாக்கரைத் தந்தை கிடைப்பார்.(He will be useless or hopeless)

7. சூரியன் கெட்டிருந்தால் அல்லது மறைந்திருந்தால், சிலர் தங்களுடைய
சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.

இது இளம் வயதுக் குழந்தைகளுக்கு ஒரு சோகமான சூழ்நிலையைக்
கொடுக்கும்

"அன்னையோடு அறுசுவைபோம். தந்தையோடு கல்விபோம்" என்பது
முதுமொழி. அன்னை கையால் உண்ணும் உணவுதான் அறுசுவையாக
இருக்கும் என்பார்கள். அன்னை போய்விட்டால் மகனுக்கு நல்ல சுவையான
உணவு கிடைக்காது என்று இதற்குப் பொருள். இது பெண் குழந்தை
களுக்கும் பொருந்தும்

(தங்கமணிகள் வந்து சமையலைக் கற்றுக் கொண்டு, நமக்கு சுவையான
உணவைக் கொடுப்பதற்குள் ஒன்று நமக்கு வயசாகிவிடும் அல்லது மேலே
சிறகில்லாமல் சென்றிருப்போம்)

8. சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி
விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது

இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான்
என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை
ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய
சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார்.

அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து
கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது
வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான்.

9. சூரியன் நீசமாகி, சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெறாமல்
சுய வர்கத்தில் 2 அல்லது அதற்குக் குறைவான பரல்களை பெற்றிருக்கும்
ஜாதகனின் உடம்பு பலமின்றி (weak) இருக்கும். நோஞ்சானாக இருப்பான்
அல்லது நித்திய சீக்காளியாக இருப்பான்.

10. உச்சமான சூரியன், சுபக்கிரகத்தின் பார்வை பெற்ற சூரியன்,சுய வர்க்கத்தில்
5 அல்லது அதற்கு மேல் பெற்ற சூரியன் ஆகிய அமைப்புக்கள் உடைய
ஜாதகன் டக்கராக் இருப்பான். வெற்றி மீது வெற்றி வந்து அவனைச் சேரும்.
===========================================================
1. The Europeans called the Sun "Apollo," whom the Greeks adored as the Sun-God.

2. In Iran, Mithra, the God of Light, is the Sun-God.

3. The Chinese regarded the Sun as the prime dispeller of evil spirits.

4. In Japan, Dhyani Buddha, the great Sun, is the ultimate Buddha-reality.

5. Mexicans, the Sun is "Impalnesohumani", which means "He by whom men live."

6. The Egyptians view the Sun as the governing deity because he causes
upward and downward currents of ether and the annual waters of rains.

7. The Chaldeans also worshipped the Sun.

8. The Hindu prays to the Sun thrice a day. Surya Namaskar, Whenever
the Sun enters into certain significant zodiacs, the Hindus perform religious
functions. They celebrate Sankranti when Sun enters Capricorn zodiac, when
Sun commences its northern course. Tamil New Year's Day is celebrated

9. when the Sun crosses the fixed Nirayana Vernal Equinox and enters
Aries. Christians celebrate Christmas on that very day when the Sun changes
its course in the sky and starts gaining power.

Sundays were probably initially designated holidays to worship this God of the sky.
==============================================================
சூரியனுக்கும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உள்ள தொடர்பு

சூரியனுக்குச் சொந்த வீடு: ஒன்று மட்டுமே: அது சிம்மம்
சூரியனுக்குச் நட்பு வீடுகள்: மூன்று = விருச்சிகம், தனுசு, மீனம்
சூரியனுக்குச் சம வீடுகள்: மூன்று = கன்னி, மிதுனம், கடகம்
சூரியனுக்குச் பகை வீடுகள்: மகரம், கும்பம், ரிஷபம்
சூரியனுக்குச் உச்ச வீடு: மேஷம்
சூரியனுக்குச் நீச வீடு: துலாம்

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சூரியனுக்கு 100%
வலிமை இருக்கும்.

சூரியனுடன் பதன் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம்
அந்த யோகத்திற்குப் பலன்கள்:
ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். எல்லா வேலைகளிலும்
கெட்டிகாரனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் உடையவனாக
இருப்பான் அல்லது அவைகள் அவனுக்குக் கிடைக்கும் அல்லது
தேடிவரும். வசதிகளும் மகிழ்ச்சியும் கொண்டவனாக இருப்பான்

சூரியனுடன் சனி சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில்
ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள், உடல் உபாதைகள்
உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு

சம வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த சூரியனுக்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சூரியனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் எடை போட்டுச் சொல்லவில்லை;
அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
=============================================
சூரியன் கொண்டிருக்கும் சுயவர்க்கப்பரல்களுக்கான் பலன்கள்:

சுயவர்க்கத்தில் சூரியன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1 பரல்: உடல் உபாதைகள், துக்கம், அலைச்சல்

2 பரல்கள்: மகிழ்வின்மை, தனநஷ்டம், அரசுபகை, புரிதலின்மை (misunderstanding)

3 பரல்கள்: அவதிகொடுக்கும் உடல் நிலை, அலைச்சல் மிகுந்த பயணங்கள்
உடல் காரணமாக மனதிற்கும் வேதனைகள்

4 பரல்கள்: சம அளவில் லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் கலந்த வாழ்வு.

5 பரல்கள் செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு, கல்வியால் மேன்மையடைதல்

6 பரல்கள்: ஆரோக்கியமான உடல் நிலை. வசீகரமான தோற்றம், சாதிக்கும்
மனப்பான்மை. வண்டி வாகன சேர்க்கைகள். முறையான வழியில் அதிர்ஷ்டம்
மற்றும் புகழ்.

7 பரல்கள்: வாழ்க்கையின் உச்சங்களைக் காணும் பாக்கியம். உரிய விருதுகள்
கிடைக்கும் வாழ்க்கை

8 பரல்கள்: அரசியல் செல்வாக்கு, அதிகாரம், மரியாதை எல்லாம் கிடைக்கும்
அல்லது அப்படிப் பட்டவர்களின் தொடர்பு கிடைக்கும். சிலருக்கு உலக
அளவில் அறியப்படும் வாய்ப்பும் உண்டாகும் (universal respect)
==========================================================
சூரியன் இருக்கும் 12 ராசிகளுக்குகான பலன்கள்

1
லக்கினத்தில் சூரியன் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். சிலருக்கு
சோம்பலும் சேர்ந்து இருக்கும். அதீத துணிச்சல் உடையவனாக இருப்பான்
சிலருக்கு இளம் வயதிலெயே தலை வழுக்கையகிவிடும். தங்களைப்
பற்றிய உயர்வு மனப்பானமை இருக்கும். இரக்கசிந்தனை இருக்காது.
பொறுமையுணர்வும் இருக்காது.

மேஷ லக்கினத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உயர்கல்வி
பெற்றவர்களாக இருப்பார்கள். செல்வந்தவர்களாவும், தனித்தன்மை
உடையவர்களாகவும், புகழ் பெற்றும் விளங்குவார்கள்.

கடகத்தை லக்கினமாகக் கொண்டு அதில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள்
கண்பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.

துலாம் வீடு லக்கினமாக இருந்து அங்கே சூரியன் நிலை கொண்டிருந்தால்,
ஜாதகன் வறுமை மற்றும் துன்பத்தால் அவதியுறுவான். அதே லக்கினத்தில்
பிறந்த பெண்ணிற்குக் கருத்தரிப்பதில் பிரச்சினை உண்டாகும்

மேற்கூறிய இடங்களைச் சுபக் கிரகங்கள் பார்த்தால், தீய பலன்கள்
வெகுவாகக் குறைந்துவிடும். நல்ல பலன்கள் அதிகமாகும்
....................................................................................................................
2
லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால்:

சொத்துக்கள் இருக்காது அல்லது கிடைக்காது. அதே போலக் கல்வியும்
கிடைக்காமல் போய்விடும்.. பெருந்தன்மை உடையவனாக ஜாதகன்
இருப்பான். எதிரிகளையும் நேசிப்பான். சிலருக்கு அரசு பகை
உண்டாகலாம்.

இரண்டாம் வீட்டில் எந்த தீய கிரகம் இருந்தாலும், அது ஜாதகனின்
சொத்து சுகங்களுக்கு எதிராகத்தான் இருக்கும். எதிராகத்தான் வேலை
செய்யும்.
.....................................................................................................................
3.
லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால்:

ஜாதகன் வசீகரமானவனாக இருப்பான்.(the quality of being good
looking and attractive) தியாக மனப்பான்மை உடையவனாக இருப்பான்.
யுத்தத்தில் எதிரிகளை வதம் செய்பவனாக இருப்பான். அதீத
துணிச்சல் இருக்கும். உடல் உறுதியுடையவனாக இருப்பான்.

இந்த அமைப்பு (அதாவது லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன்)
இளைய சகோதர உறவுகளுக்கு எதிரானது. உறவுகள் ஜாதகனை விட்டு
விலகும்
.......................................................................................................................
கட்டுரை பெரியது. எழுதுவதற்கும் தட்டச்சுவதற்கும் இதுவரை அதிகமான
நேரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. ஆகவே இனிவரும் வீடுகளுக்கு
மொழி மாற்றத்தைக் கைவிட்டு விட்டு என் சேகரிப்பில் இருப்பதை
அப்படியே தருகிறேன். எளிய ஆங்கிலத்தில்தான் உள்ளது. அனைவருக்கும்
புரியும்
4.
Sun in the Fourth House

Heart may be afflicted. Will be devoid of happiness, landed
properties, relatives and conveyances. Will be interested in
the opposited sex. Will have many houses. Will harm paternal
wealth. Will never have mental peace & contentment.
.....................................................................................................................
5.
Sun in the Fifth House

Will be highly intelligent, and will be loved by the Government.
Will be devoid of sons, comforts & wealth. Will love forests &
try to live in such surroundings. This position is adverse for
relationship with sons.
.....................................................................................................................
6
Sun in the Sixth House

Will have prosperity and along with prosperity, enemies.
Will be virtuous, Will be famous, Will have good digestive power.
Will be victorious but will have to face enemy trouble. Will be
a commander and will be skilled in combat. Will be a lord with a
lot of subordinates. Digestive tract disorders indicated.
...................................................................................................................
7.
Sun in the Seventh House

Will be tormented by the Government. Will have to face defeat.
Will be devoid of marital happiness. Will have to face humiliation.
May be insulted by women. Body may be tormented by ill health.
Will be traveling a lot.
................................................................................................................
8
Sun in the Eighth House

Will be devoid of relatives and wealth. Will be melancholic &
sorrowful. Will be quarrelsome and will be fastidious. Will have
to face defeat in many situations.
...................................................................................................................
9
Sun in the Ninth House

Will have wealth, relatives and sons. Will have reverence for the
preceptors and devotion to spiritual people. May harm the father.
Will be devoid of Dharma. Will be a misogynist.
....................................................................................................................
10
Sun in the Tenth House

Will be highly educated & will have paternal wealth. Will be
highly intelligent with a lot of conveyances. Will be hedonistic
and strong. This dominance of Sun on the Meridian is capable
of conferring regal status, knowledge and valor.
................................................................................................................
11
Sun in the Eleventh House

Will be wealthy with high education. Will have good longevity and
a lot of good subordinates.Will have high professional skill. Will be
strong and will be prosperous
.................................................................................................................
12
Sun in the Twelfth House

Will have eye troubles and will be devoid of sons & wealth. Will be
inimical to the father. Will be weak and may fall from profession.
This adverse position of the Sun is not good from the perspective
of profession as a fall is indicated.

எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!
--------------------------------------------------------------------------------------------------
சூரியனின் கோச்சார பலன்கள்:

சூரியன் ஒரு வருடத்திற்குள் ஒரு சுற்று சுற்றி முடிக்கக்கூடியவர்.
ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் மட்டுமே இருக்கக் கூடியவர்

3, 6, 11 ஆகிய வீடுகளில் சஞ்சாரம் செய்யும் அந்த 3 மாதகாலம்
மட்டுமே ஜாதகனுக்குக் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்படும்
மற்ற 9 மாத காலத்தில் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்பட
வழியில்லை

கோச்சார சூரியன் தான் சுற்றிவரும் பாதையில் ஜாதகனின் சுயவர்க்கத்தில்
தன்னுடைய கட்டத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்களுடன் இருக்கிறாரோ
அந்த இடத்திற்கு வரும் மாதத்தில் ஜாதகனுக்கு நோய் நொடிகளை
அல்லது தன் நஷ்டங்களைக் கொடுப்பார்,
=========================================================
சூரியனைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த வாரத்தில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்

"அது என்ன கிரகம் சார்?"

"அப்பாவிற்குப் பிறகு யார் வருவார்கள்? அதுதான் அடுத்த கிரகம்!"

அதுவரை பொறுத்திருங்கள்

இந்தப் பதிவில் உங்களுக்கான பகுதிகளை மட்டும் அல்லது வரிகளை
மட்டும் படித்து விட்டு வந்து, "சார், அடுத்தபாடம் எப்போது?" என்று
யாரும் கேட்க வேண்டாம். 'செய்வன திருந்தச் செய்' என்பது முதுமொழி.
முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆகவே அனைவரும் பாடத்தை
முழுமையாகப் படியுங்கள்.
======================================================

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! தொழில்முறை வாத்தியாரும் அல்ல!
தொழில்முறை ஆன்மிகவாதியும் அல்ல! உலகைத் திருத்தப் பிறந்த
இறைதூதனும் அல்ல!

என் போதாத நேரம், பொழுதை நல்ல வழியில் கழிப்பதற்காகவும், என்
அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ளும்
நோக்கத்துடனும் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்

பைசா பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும், எனது அரிய நேரத்தைச்
செலவழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன், இதை பதிவிற்குப் புதிதாக
வருபவர்கள் கவனத்தில் கொள்வது அவர்களுக்கு நல்லது.

எனக்கு நல்லது, கெட்டது எல்லாம் ஒன்றுதான். நான் புகழுக்கு
மயங்குபவனும் இல்லை. தூற்றலுக்கு அஞ்சுபவனும் இல்லை!
கவியரசரின் மாணவன். அவருடைய பாடங்களைப் படித்துத் தேறியவன்.
அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

74 comments:

  1. செவ்வாய்க்கிழமை (9.12.2008) ஒரு நாள் வாத்தியாருக்கு விடுப்பு. வெளியூர் செல்கின்றார். அதனால் பாடம் முன்னதாகவே வலை ஏற்றப்பட்டுள்ளது - அனைவரும் சந்தேகங்களைக் கேட்பதற்கு வசதியாக!

    ReplyDelete
  2. Hello Sir..

    புதன் சூரியனடுன் சேர்ந்தால் நிபுணா யோகம் எனப்படுகிறது. ஆனால் பத்து பாகைக்குள் சேர்ந்தால் அச்தங்க தோஷம் எனப்படுகிறது. இந்த அஸ்தங்கதம் ஏற்பட்டால் அப்போது நிபுண யோகம் அங்கே கிடையாதா அய்யா

    ReplyDelete
  3. So next class is about moon.
    புதன் சூரியனடுன் சேர்ந்தால் நிபுணா யோகம் எனப்படுகிறது. ஆனால் பத்து பாகைக்குள் சேர்ந்தால் அச்தங்க தோஷம் எனப்படுகிறது. இந்த அஸ்தங்கதம் ஏற்பட்டால் அப்போது நிபுண யோகம் அங்கே கிடையாதா அய்யா

    I also interested to know the answer to Ragu Sivanmalai's question?

    Thanks,
    Monickam

    ReplyDelete
  4. காலை வணக்கம் ஐயா
    தயவுசெய்து என்னுடைய சந்தேகங்களைத் தீர்த்துவைப்பீர்களா

    1) என்னுடைய ஜாதகப்படி சூரியன் 8 இல் புதனுடன் ,ஆனால் பாவச்சக்கரத்தின் படி சூரியன் 9 இல் ,இதில் எந்தப்பலன் அதிகமாக வேலை செய்யும் , mixed results ?
    2)கடகலக்கின ஜாதகத்தில் கடகலக்கினத்திற்கு யோகாதிபதியான செவ்வாய் சூரியனைப்பார்க்கும்போது யோகதிபதியின் பார்வையென்பதால் நன்மை விளையுமா அல்லது ,பாவக்கிரகத்தின் பார்வையென்பதால் தீமை விளையுமா ?
    3) புதாதித்த யோகம் போன்ற யோகங்களைக்கருதும்போது பாவச்சக்கரத்தை எடுத்துக்கொள்வதா அல்லது ராசிச்சக்கரத்தை எடுத்துக்கொள்வதா ?

    ReplyDelete
  5. //அடுத்த வாரத்தில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்//

    அது சந்திரனை பற்றி என தெரிந்து கொண்டேன் !
    அதற்குள் பாடத்தினை நன்கு பதியவைக்க முயற்சி மேற்க்கொள்கிறேன் !

    ReplyDelete
  6. Ragu Sivanmalai said...
    Hello Sir..
    புதன் சூரியனுடன் சேர்ந்தால் நிபுணா யோகம் எனப்படுகிறது. ஆனால் பத்து பாகைக்குள் சேர்ந்தால் அச்தங்க தோஷம் எனப்படுகிறது. இந்த அஸ்தங்கதம் ஏற்பட்டால் அப்போது நிபுண யோகம் அங்கே கிடையாதா அய்யா/////

    புதனும் சுக்கிரனும் சேர்ந்தால்தான் நிபுண யோகம்
    புதனும் சூரியனும் சேர்ந்தால் அது ஆதித்ய யோகம் எனப்படும்
    அஸ்தமனம் ஆனால் யோகம் அடிபட்டுவிடும். பலன் பாதியாகக்குறைந்துவிடும்!
    இன்றையப் பாடத்தைப் படித்தீர்களா? அதைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?

    ReplyDelete
  7. Monickam said...
    So next class is about moon.
    புதன் சூரியனுடன் சேர்ந்தால் நிபுணா யோகம் எனப்படுகிறது. ஆனால் பத்து பாகைக்குள் சேர்ந்தால் அச்தங்க தோஷம் எனப்படுகிறது. இந்த அஸ்தங்கதம் ஏற்பட்டால் அப்போது நிபுண யோகம் அங்கே கிடையாதா அய்யா I also interested to know the answer to Ragu Sivanmalai's question?
    Thanks,
    Monickam////

    புதனும் சுக்கிரனும் சேர்ந்தால்தான் நிபுண யோகம்
    புதனும் சூரியனும் சேர்ந்தால் அது ஆதித்ய யோகம் எனப்படும்
    அஸ்தமனம் ஆனால் யோகம் அடிபட்டுவிடும். பலன் பாதியாகக்குறைந்துவிடும்!
    இன்றையப் பாடத்தைப் படித்தீர்களா? அதைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?

    ReplyDelete
  8. //////KS said...
    காலை வணக்கம் ஐயா
    தயவுசெய்து என்னுடைய சந்தேகங்களைத் தீர்த்துவைப்பீர்களா?
    1) என்னுடைய ஜாதகப்படி சூரியன் 8 இல் புதனுடன் ,ஆனால் பாவச்சக்கரத்தின் படி சூரியன் 9 இல் ,இதில் எந்தப்பலன் அதிகமாக வேலை செய்யும் , mixed results ?//////

    Bhava Chakra is the magnified version of a rasi chakra.பாவத்தைக் கணக்கில் கொள்ளலாம்!
    ---------------------------------------------------------------------------------------
    /////2)கடகலக்கின ஜாதகத்தில் கடகலக்கினத்திற்கு யோகாதிபதியான செவ்வாய் சூரியனைப்பார்க்கும்போது யோகதிபதியின் பார்வையென்பதால் நன்மை விளையுமா அல்லது ,பாவக்கிரகத்தின் பார்வையென்பதால் தீமை விளையுமா ?/////

    யோககாரகன் யோகத்தை மட்டும் அளிப்பான். இல்லையென்றால் அவன் யோககாரகன் என்று அழைக்கப்படுவதில் என்ன பயன்?
    ----------------------------------------------------------------------
    //////3) புதாதித்த யோகம் போன்ற யோகங்களைக்கருதும்போது பாவச்சக்கரத்தை எடுத்துக்கொள்வதா அல்லது ராசிச்சக்கரத்தை எடுத்துக்கொள்வதா?//////

    Bhava Chakra is the magnified version of a rasi chakra.பாவத்தைக் கணக்கில் கொள்ளலாம்!

    ReplyDelete
  9. ////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //அடுத்த வாரத்தில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்//
    அது சந்திரனை பற்றி என தெரிந்து கொண்டேன் !
    அதற்குள் பாடத்தினை நன்கு பதியவைக்க முயற்சி மேற்கொள்கிறேன் !////

    நல்லது! முதலில் அதைச்செய்யுங்கள் அருப்புக்கோட்டையாரே!

    ReplyDelete
  10. திங்கள் அன்று பதிவை எதிர்பார்த்திருத்தால் ஞாயிறு அன்றே ஞாயிறை(சூரியனை)பற்றிபதிவா...
    என்ன பொருத்தம்.
    தங்களை போற்றுவொர்போற்றட்டும்.தூற்றுவோர்பற்றி கவலைகொள்ளாதீர்கள்...
    கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.
    அவர் யாருக்காக கொடுத்தார்.
    ஒருத்தருக்காகொடுத்தார்,இல்லை ஊருக்காக கொடுத்தார்..
    என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது.
    தங்களின் உயரிய நோக்கத்துக்கு பதிவர்கள் ஆதரவு என்றும் உண்டு.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. ///////வேலன். said...
    திங்கள் அன்று பதிவை எதிர்பார்த்திருத்தால் ஞாயிறு அன்றே ஞாயிறை(சூரியனை)பற்றிபதிவா...
    என்ன பொருத்தம்.
    தங்களை போற்றுவொர்போற்றட்டும்.தூற்றுவோர்பற்றி கவலைகொள்ளாதீர்கள்...
    கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.
    அவர் யாருக்காக கொடுத்தார்.
    ஒருத்தருக்காகொடுத்தார்,இல்லை ஊருக்காக கொடுத்தார்..
    என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது.
    தங்களின் உயரிய நோக்கத்துக்கு பதிவர்கள் ஆதரவு என்றும் உண்டு.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.///////

    நாளை பதிவில் ஏற்றலாம் என்று வைத்திருந்தேன். செவ்வாயன்று வெளியூர் செல்ல இருப்பதால் ஒரு நாள் முன்னதாகவே வலை ஏற்றிவிட்டேன்.

    ReplyDelete
  12. நன்றி அய்யா,

    திங்கட்கிழமை பதிவை அவருக்கு (சூரியனுக்கு) உகந்த ஞாயிற்றுக்கிழமையே உங்கள் மூலம் வரவழைத்துவிட்டார் பாருங்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. அய்யா,

    பாடம் அருமை.

    "நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! தொழில்முறை வாத்தியாரும் அல்ல!
    தொழில்முறை ஆன்மிகவாதியும் அல்ல! உலகைத் திருத்தப் பிறந்த
    இறைதூதனும் அல்ல!

    என் போதாத நேரம், பொழுதை நல்ல வழியில் கழிப்பதற்காகவும், என்
    அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ளும்
    நோக்கத்துடனும் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்

    பைசா பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும், எனது அரிய நேரத்தைச்
    செலவழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன், இதை பதிவிற்குப் புதிதாக
    வருபவர்கள் கவனத்தில் கொள்வது அவர்களுக்கு நல்லது.

    எனக்கு நல்லது, கெட்டது எல்லாம் ஒன்றுதான். நான் புகழுக்கு
    மயங்குபவனும் இல்லை. தூற்றலுக்கு அஞ்சுபவனும் இல்லை!
    கவியரசரின் மாணவன். அவருடைய பாடங்களைப் படித்துத் தேறியவன்.
    அதையும் மனதில் கொள்க!"

    உங்கள் வெறுப்பு ஞாயம் தான். உங்கள் இடத்தில் நான் இருந்தாலும் மேல் கூறியது போல் நானும் புலம்பி இருப்பேன்.

    ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். உங்களின் உண்மையான மாணவ கண்மணிகள் என்றுமே உங்களை அதிகப்ரசிங்கதனமாக உங்கள் மனதை காய படுத்தியதில்லை.

    தயவு செய்து உங்கள் நோக்கம் புரியாதவரையும் புரியாதது போல் நடிப்பவரையும் மன்னியுங்கள் அய்யா!

    உங்கள் உண்மை மாணவன்

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  14. Dear subbiah sir,

    I am Kumba lagna and my 10th house viruchigam has sun, mars, mercury and ragu in it. Following are the degrees of the planets

    Mars 215.355 Direct
    Sun 233.302 Direct
    Mercury 227.483 Direct
    Rahu 226.789 Retrograde

    From these numbers Mercury and ragu are consider to have planetry combustion with sun? Does Mars escape from it?

    Some one said me to that if ragu and sun is in same house the person gets lot of health problems especially Digestive Disorders. Is that true?

    As for as 10th house benefits, I really don't have any of those benefits now may be i get it later part of my life!!!!

    Thanks,
    Monickam

    ReplyDelete
  15. ////வேலன். said...
    நன்றி அய்யா,
    திங்கட்கிழமை பதிவை அவருக்கு (சூரியனுக்கு) உகந்த ஞாயிற்றுக்கிழமையே உங்கள் மூலம் வரவழைத்துவிட்டார் பாருங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    அப்படியும் இருக்கலாம்:-)))))

    ReplyDelete
  16. Sridhar said...
    அய்யா,
    பாடம் அருமை.

    "நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! தொழில்முறை வாத்தியாரும் அல்ல!
    தொழில்முறை ஆன்மிகவாதியும் அல்ல! உலகைத் திருத்தப் பிறந்த
    இறைதூதனும் அல்ல!
    என் போதாத நேரம், பொழுதை நல்ல வழியில் கழிப்பதற்காகவும், என்
    அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ளும்
    நோக்கத்துடனும் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
    பைசா பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும், எனது அரிய நேரத்தைச்
    செலவழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன், இதை பதிவிற்குப் புதிதாக
    வருபவர்கள் கவனத்தில் கொள்வது அவர்களுக்கு நல்லது.
    எனக்கு நல்லது, கெட்டது எல்லாம் ஒன்றுதான். நான் புகழுக்கு
    மயங்குபவனும் இல்லை. தூற்றலுக்கு அஞ்சுபவனும் இல்லை!
    கவியரசரின் மாணவன். அவருடைய பாடங்களைப் படித்துத் தேறியவன்.
    அதையும் மனதில் கொள்க!"
    உங்கள் வெறுப்பு நியாயம் தான். உங்கள் இடத்தில் நான் இருந்தாலும் மேல் கூறியது போல் நானும் புலம்பி இருப்பேன்.
    ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். உங்களின் உண்மையான மாணவ கண்மணிகள் என்றுமே உங்களை அதிகப்பிரசிங்கத்தனமாக உங்கள் மனதை காய படுத்தியதில்லை.
    தயவு செய்து உங்கள் நோக்கம் புரியாதவரையும் புரியாதது போல் நடிப்பவரையும் மன்னியுங்கள் அய்யா!
    உங்கள் உண்மை மாணவன்
    ஸ்ரீதர் S//////

    அது புலம்பல் இல்லை! தன்னிலை விளக்கம். புதிதாக உள்ளே நுழைபவர்களுக்கு. மாதம் ஒருமுறையவது அதைச் சொல்ல வேண்டும். நிறையப் புதியவர்கள் வருகின்றார்கள். ஹிட் கவுண்ட்டர் மூலமும், மின்னஞ்சல்கள்
    மூலமும் அது தெரிகின்றது.

    ReplyDelete
  17. ////Monickam said...
    Dear subbiah sir,
    I am Kumba lagna and my 10th house viruchigam has sun, mars, mercury and ragu in it. Following are the degrees of the planets
    Mars 215.355 Direct
    Sun 233.302 Direct
    Mercury 227.483 Direct
    Rahu 226.789 Retrograde
    From these numbers Mercury and ragu are consider to have planetry combustion with sun? Does Mars escape from it?/////

    ஆமாம் பத்தாம் இடத்து அதிபதி செவ்வாய் தப்பி விட்டார். அதோடு 7ஆம் இடத்துச் சூரியன், கேந்திரத்தில் நட்பு வீட்டில் இருக்கிறார். புதனும், உச்சமான ராகுவும் அஸ்தமனமாகி விட்டார்கள்.
    -------------------------------------------------------------
    /////// Some one said me to that if ragu and sun is in same house the person gets lot of health problems especially Digestive Disorders. Is that true?//////

    lot of health problems என்று எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். உடல் உபாதைகள் ஏற்படும் அது அவர்களின் தசா புத்திகளில் ஏற்பட்டு நீங்கி விடும். தசாநாதன் சனி வலுவாக இருந்தால் அவன்
    தாக்குப் பிடிக்க வைப்பான்.
    --------------------------------------------------------------------------------------
    /////As for as 10th house benefits, I really don't have any of those benefits now may be i get it later part of my life!!!!///////

    ஆமாம்!

    ReplyDelete
  18. //SP.VR. SUBBIAH said...
    எனக்கு நல்லது, கெட்டது எல்லாம் ஒன்றுதான். நான் புகழுக்கு
    மயங்குபவனும் இல்லை. தூற்றலுக்கு அஞ்சுபவனும் இல்லை!
    கவியரசரின் மாணவன். அவருடைய பாடங்களைப் படித்துத் தேறியவன்.
    அதையும் மனதில் கொள்க!//

    அருமை ஐயா!

    ReplyDelete
  19. ஐயா,

    Plz don't mistake me for asking a question that's not relevant to this post.

    But, i am asking only because i could not get the answer for this question anywhere else and also
    You are a strong devotee of Muruga Deity.

    My Question:

    We have many historical & astrological evidences for the birth details of Sri Krishna & Sri Rama.

    Sri Krishna - Avani month, Ashtami thithi & Rohini Nakshatra.

    Sri Rama - Chittira month, Navami Thithi, Poosam Nakshatra.

    But, on what basis we celebrate 'Vaikasi Visagam'(வைகாசி விசாகம்) as birthday of MURUGA?

    I could not find evidences anywhere. Now i stand humiliated before some of my friends.

    Plz answer me if you have any info on this or guide me to where i can get the answer.

    May Ketu Bless All!

    ReplyDelete
  20. //////விநோதவேல் said...
    //SP.VR. SUBBIAH said...
    எனக்கு நல்லது, கெட்டது எல்லாம் ஒன்றுதான். நான் புகழுக்கு
    மயங்குபவனும் இல்லை. தூற்றலுக்கு அஞ்சுபவனும் இல்லை!
    கவியரசரின் மாணவன். அவருடைய பாடங்களைப் படித்துத் தேறியவன்.
    அதையும் மனதில் கொள்க!//

    அருமை ஐயா!/////

    Thanks for your comments Mr.Vinodhavel

    ReplyDelete
  21. //////விநோதவேல் said...
    ஐயா,
    Plz don't mistake me for asking a question that's not relevant to this post.
    But, i am asking only because i could not get the answer for this question anywhere else and also
    You are a strong devotee of Muruga Deity.
    My Question:
    We have many historical & astrological evidences for the birth details of Sri Krishna & Sri Rama.
    Sri Krishna - Avani month, Ashtami thithi & Rohini Nakshatra.
    Sri Rama - Chittira month, Navami Thithi, Poosam Nakshatra.
    But, on what basis we celebrate 'Vaikasi Visagam'(வைகாசி விசாகம்) as birthday of MURUGA?
    I could not find evidences anywhere. Now i stand humiliated before some of my friends.
    Plz answer me if you have any info on this or guide me to where i can get the answer.
    May Ketu Bless All!///////

    About Lord Muruga (in brief)
    Name : Murugan
    Birth Place : Saravana pond
    Date of birth :Vaishaka month, Vishaga star
    Father :Lord Shiva
    Mother :Goddess Parvati
    Brothers : Lord Ganapati
    Wives : Valli, Devayani
    Weapon : Shakti vel (spear)
    Vehicle : Peacock
    Flag : Cock
    Aim of Incarnation : Destroying evil and saving Devotees
    Place he resides :Devotees heart

    ReplyDelete
  22. I was told by my astrologer friend that Ragu eclipes Sun and Sun looses its power of combustion. I have Sun, Mercury and Ragu (both within 10 degrees of Sun) in Aquaris 7th House. I am a Chartered Accountant. I checked the horoscope of my friends who are chartered accountants, invariably they have Sun and Mercury together or aspected.Thanks for the lesson. We appreciate your efforts. We got many of our doubts cleared by your explanations, which professional astrologers may not be in a position to explain clearly.

    ReplyDelete
  23. ////SP.VR. SUBBIAH said...
    About Lord Muruga (in brief)
    Name : Murugan
    Birth Place : Saravana pond
    Date of birth :Vaishaka month, Vishaga star
    Father :Lord Shiva
    Mother :Goddess Parvati
    Brothers : Lord Ganapati
    Wives : Valli, Devayani
    Weapon : Shakti vel (spear)
    Vehicle : Peacock
    Flag : Cock
    Aim of Incarnation : Destroying evil and saving Devotees
    Place he resides :Devotees heart
    ///

    ஐயா,

    i am afraid i did not convey my question to you correctly!

    My Q is "What is the evidence for we say that Lord Muruga was born in Vaikasi Visagam?"

    For example: Epics like Ramayana, Mahabharata specify the birth details (planetary positions) of RAMA & KRISHNA.

    I hope you've seen Sri KRISHNA's chart in Dr.B.V.Raman's "Notable Horoscopes" Book.

    But, i could not find about 'Vaikasi Visagam' in any epics like Skandha Puranam.

    Do you know, Sir?
    or
    Do you know anybody who is wellversed about Lord Muruga?

    ReplyDelete
  24. //கிரகங்களின் அரசன் சூரியன். அதில் சந்தேகமில்லை. சூரியன்தான்
    ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி எவரும்
    அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது//

    ஆஹா! வகுப்பறையில் அரசியலா?

    :))

    ReplyDelete
  25. வேண்டுபவர்கள் எடுத்துக் கொள்வார்கள்!

    தேவையற்றவர்கள் கொஞ்ச நேரம் தூற்றிக் கொண்டு இருந்துவிட்டு, வேறு பலனில்லை என்றுணர்ந்த பிறகு அமைதியாகி விடுவார்கள்!

    நாம் அமைதியாக நம்முடைய பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தாலே போதும்! மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான்!

    ReplyDelete
  26. krish said...
    I was told by my astrologer friend that Ragu eclipes Sun and Sun looses its power of combustion. I have Sun, Mercury and Ragu (both within 10 degrees of Sun) in Aquaris 7th House. I am a Chartered Accountant. I checked the horoscope of my friends who are chartered accountants, invariably they have Sun and Mercury together or aspected.Thanks for the lesson. We appreciate your efforts. We got many of our doubts cleared by your explanations, which professional astrologers may not be in a position to explain clearly.//////

    Like that, some experienced astrologers says that Mercury has exemption from combust with Sun!
    It may be true!

    ReplyDelete
  27. //////விநோதவேல் said...
    ////SP.VR. SUBBIAH said...
    About Lord Muruga (in brief)
    Name : Murugan
    Birth Place : Saravana pond
    Date of birth :Vaishaka month, Vishaga star
    Father :Lord Shiva
    Mother :Goddess Parvati
    Brothers : Lord Ganapati
    Wives : Valli, Devayani
    Weapon : Shakti vel (spear)
    Vehicle : Peacock
    Flag : Cock
    Aim of Incarnation : Destroying evil and saving Devotees
    Place he resides :Devotees heart
    ///
    ஐயா,
    i am afraid i did not convey my question to you correctly!
    My Q is "What is the evidence for we say that Lord Muruga was born in Vaikasi Visagam?"
    For example: Epics like Ramayana, Mahabharata specify the birth details (planetary positions) of RAMA & KRISHNA.
    I hope you've seen Sri KRISHNA's chart in Dr.B.V.Raman's "Notable Horoscopes" Book.
    But, i could not find about 'Vaikasi Visagam' in any epics like Skandha Puranam.
    Do you know, Sir?
    or
    Do you know anybody who is wellversed about Lord Muruga?//////

    என்ன நண்பரே முருகனுக்கு ஜாதகமா? எனக்குத் தெரிந்தவரை இல்லை!

    ReplyDelete
  28. ////நாமக்கல் சிபி said...
    //கிரகங்களின் அரசன் சூரியன். அதில் சந்தேகமில்லை. சூரியன்தான்
    ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி எவரும்
    அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது//
    ஆஹா! வகுப்பறையில் அரசியலா? :))//////

    பாடத்தில் வரும் அரசியலை ஒதுக்க முடியாது:-)))))

    ReplyDelete
  29. /////நாமக்கல் சிபி said...
    வேண்டுபவர்கள் எடுத்துக் கொள்வார்கள்!
    தேவையற்றவர்கள் கொஞ்ச நேரம் தூற்றிக் கொண்டு இருந்துவிட்டு, வேறு பலனில்லை என்றுணர்ந்த பிறகு அமைதியாகி விடுவார்கள்!
    நாம் அமைதியாக நம்முடைய பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தாலே போதும்! மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான்!//////

    மறுபடியும் புதிதாக ஒருவர் வருவார். பழகிவிட்டது:-))))

    ReplyDelete
  30. //சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி
    விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது

    இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான்
    என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை
    ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய
    சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார்.

    அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து
    கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது
    வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான்.
    //

    ஐயா,
    அனுமனுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கிரதே?

    ReplyDelete
  31. ///வரிகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன????

    ஐயா,
    பாடல் வரிகள் அனைத்துமே உடற்கட்டு,உடலழகு,மேனி நிறம் ஆகியன போன்று தொடர்ந்து உடல் அமைப்பைக் குறித்த பாடல்களாகவே இருக்கின்றன.
    பாடமும் உடல் காரகன் சூரியனைப் பற்றியது.

    ReplyDelete
  32. MarmaYogi said...
    //சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி
    விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது
    இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான்
    என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை
    ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய
    சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார்.
    அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து
    கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது
    வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான். //
    ஐயா,
    அனுமனுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கிறதே?//////

    நான் பார்த்தது இல்லையே சுவாமி!

    ReplyDelete
  33. /////தியாகராஜன் said...
    ///வரிகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன????
    ஐயா,
    பாடல் வரிகள் அனைத்துமே உடற்கட்டு,உடலழகு,மேனி நிறம்
    ஆகியன போன்று தொடர்ந்து உடல் அமைப்பைக் குறித்த
    பாடல்களாகவே இருக்கின்றன.
    பாடமும் உடல் காரகன் சூரியனைப் பற்றியது.//////

    கரெக்ட். அதுதான் ஒற்றுமை. நீங்கள் ஒருவர்தான் அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
    நன்றி! பாராட்டுக்கள்

    ReplyDelete
  34. //SP.VR. SUBBIAH said...
    MarmaYogi said...
    //சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி
    விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது
    இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான்
    என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை
    ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய
    சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார்.
    அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து
    கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது
    வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான். //
    ஐயா,
    அனுமனுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கிறதே?//////

    நான் பார்த்தது இல்லையே சுவாமி!//

    ஸ்ரீஅனுமன் ஜாதகம்:

    சூரியன்+ சந்திரன் 9 வது வீட்டில்(தனுசு)
    நட்சத்திரம்: மூலம்.
    சந்திர ராசி: தனுசு

    1.லக்ணம்:மேஷம்- செவ்வாய்
    2.-----
    3.------
    4.-----
    5.குரு
    6.சுக்+புதன்+ராகு
    7.-----
    8..----
    9.சூரி+சந்
    10.சனி
    11.-----
    12.கேது

    //சூரியனுடன் பதன் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம்
    அந்த யோகத்திற்குப் பலன்கள்:
    ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். எல்லா வேலைகளிலும்
    கெட்டிகாரனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் உடையவனாக
    இருப்பான் அல்லது அவைகள் அவனுக்குக் கிடைக்கும் அல்லது
    தேடிவரும். வசதிகளும் மகிழ்ச்சியும் கொண்டவனாக இருப்பான்//

    ராமபிரான் ஜாதகம்
    நட்சத்திரம்.புனர் பூசம்.

    சூரி+புதன் -10ம் வீடு-(மேஷம்)
    சந்திர ராசி:கடகம்

    1.லக்ணம்:கடகம்- குரு + சந்திரன்
    2.-----
    3.------
    4சனி
    5.---
    6.ராகு
    7.செவ்வாய்
    8..----
    9.சுக்
    10.சூரி+ புதன்
    11.-----
    12.கேது

    ReplyDelete
  35. Dear Sir,

    Beautiful explanation with good introduction!!! If you are professional teacher (for any subject) I think you would have exceled!!! And I always believe that you are also doing good as blog teacher. I think you are beloved teacher for all of us here....

    ////ஜாதகத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர்
    நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள்
    உண்டாகும் அல்லது ஏற்படும்.////

    Eventhough I know its all general predictions, I cannot be without mentioning this because I have sun, mercury and saturn at simhna lagna. Saturn in raasi chart is 0 degrees 18.(bhava sandhi). Ellam avan seiyal!!!!

    ReplyDelete
  36. வாத்தியாரையா,

    இன்றைய பாடம் அருமை. ஹூம். என்ன செய்வது. எனக்கு லக்னம் துலாமில் நீச்ச சூரியன், ஏழில் நீச்ச சனி. சனியின் பார்வை சூரியனுக்கு இருப்பதால்தான் தீராத வியாதி இருக்கிறது.

    ReplyDelete
  37. அய்யா,

    நான் படித்த ஒரு புத்தகத்தில் ராகு மற்றும் கேது தவிர பிற கிரகங்கள் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைகின்றன என சொல்கிறது. அது உண்மையா?

    நன்றி

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  38. // அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    இன்றைய பாடம் அருமை. ஹூம். என்ன செய்வது. எனக்கு லக்னம் துலாமில் நீச்ச சூரியன், ஏழில் நீச்ச சனி. சனியின் பார்வை சூரியனுக்கு இருப்பதால்தான் தீராத வியாதி இருக்கிறது.
    //

    Dear Amarabharathi,

    As I replied to you on that day, I have found some Highly Authenticated Vedic Astrologers in India & Other countries by due research, Do you need their Contacts?
    If Subbaih Sir accepts, I can give it in comments section itself or email to sir and you.

    May Ketu Bless All!

    ReplyDelete
  39. //SP.VR. SUBBIAH said...
    புதனும் சுக்கிரனும் சேர்ந்தால்தான் நிபுண யோகம்
    புதனும் சூரியனும் சேர்ந்தால் அது ஆதித்ய யோகம் எனப்படும்
    அஸ்தமனம் ஆனால் யோகம் அடிபட்டுவிடும். பலன் பாதியாகக்குறைந்துவிடும்!
    இன்றையப் பாடத்தைப் படித்தீர்களா? அதைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?
    //

    Dear Sir,

    Why are you giving such wrong information?
    All scholars inluding Dr.B.V.Raman say “Nipuna Yoga is caused by the conjunction of Surya and Budha only”. Actually, the yoga caused by the conjunction of Sukra and Budha is லட்சுமி நாராயணா யோகம்”

    May Ketu Bless All!

    ReplyDelete
  40. Dear Vinothavel,

    Please give a good astrologer's name here itself. Subbiah sir wont mind I guess, and he stated that in one of his previous posts. As far as I read, Sun and Budhan cause Nipuna yogam, but our teacher differs from that. Thank you.

    ReplyDelete
  41. ////hotcat said...
    Dear Sir,
    Beautiful explanation with good introduction!!! If you are professional teacher (for any subject) I think you would have exceled!!! And I always believe that you are also doing good as blog teacher. I think you are beloved teacher for all of us here....//////

    I am not a professional teacher.
    அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான என்னும் சொல் என்னை நெகிழ வைக்கிறது. நன்றி சங்கர்!
    ---------------------------------------------
    ////ஜாதகத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர்
    நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள்
    உண்டாகும் அல்லது ஏற்படும்.////
    Eventhough I know its all general predictions, I cannot be without mentioning this because I have sun, mercury and saturn at simhna lagna. Saturn in raasi chart is 0 degrees 18.(bhava sandhi). Ellam avan seiyal!!!!/////

    எல்லாம் அவன் செயல். சில மனக் குறைகளை அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டு விடுங்கள்!

    ReplyDelete
  42. //////Geekay said...
    Present Sir,
    GK, BLR////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  43. /////அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    இன்றைய பாடம் அருமை. ஹூம். என்ன செய்வது. எனக்கு லக்னம் துலாமில் நீச்ச சூரியன், ஏழில் நீச்ச சனி. சனியின் பார்வை சூரியனுக்கு இருப்பதால்தான் தீராத வியாதி இருக்கிறது./////

    இறைவனை வணங்குங்கள். அவர் உங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கொடுப்பார்!

    ReplyDelete
  44. /////Sridhar said...
    அய்யா,
    நான் படித்த ஒரு புத்தகத்தில் ராகு மற்றும் கேது தவிர பிற கிரகங்கள் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைகின்றன என சொல்கிறது. அது உண்மையா?
    நன்றி
    ஸ்ரீதர் S//////

    சூரியனுக்குப் பத்து பாகைக்குள் வரும் கிரகங்கள் அஸ்தமனம் ஆகிவிடும் என்பதுதான் நியதி!
    சிலர் புதனுக்கு விதிவிலக்கு உண்டு என்கிறார்கள். சிலர் நீங்கள் கூறியுள்ளதைப்போல ராகு மற்றும் கேதுவிற்கும்
    விதிவிலக்கு உண்டு என்கிறார்கள். அவற்றை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம். சாதகமாக இருந்தால் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்:-))))

    ReplyDelete
  45. //////விநோதவேல் said...
    // அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    இன்றைய பாடம் அருமை. ஹூம். என்ன செய்வது. எனக்கு லக்னம் துலாமில் நீச்ச சூரியன், ஏழில் நீச்ச சனி. சனியின் பார்வை சூரியனுக்கு இருப்பதால்தான் தீராத வியாதி இருக்கிறது.
    // Dear Amarabharathi,
    As I replied to you on that day, I have found some Highly Authenticated Vedic Astrologers in India & Other countries by due research, Do you need their Contacts?
    If Subbaih Sir accepts, I can give it in comments section itself or email to sir and you.
    May Ketu Bless All!////

    நல்லது. பயன் உள்ளது என்றால் யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டு மென்றாலும் கொடுங்கள். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

    ReplyDelete
  46. /////விநோதவேல் said...
    //SP.VR. SUBBIAH said...
    புதனும் சுக்கிரனும் சேர்ந்தால்தான் நிபுண யோகம்
    புதனும் சூரியனும் சேர்ந்தால் அது ஆதித்ய யோகம் எனப்படும்
    அஸ்தமனம் ஆனால் யோகம் அடிபட்டுவிடும். பலன் பாதியாகக்குறைந்துவிடும்!
    இன்றையப் பாடத்தைப் படித்தீர்களா? அதைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?
    // Dear Sir,
    Why are you giving such wrong information?
    All scholars inluding Dr.B.V.Raman say “Nipuna Yoga is caused by the conjunction of Surya and Budha only”. Actually, the yoga caused by the conjunction of Sukra and Budha is லட்சுமி நாராயணா யோகம்”
    May Ketu Bless All!/////

    எனது hard discல் (மண்டையில்) பதிந்துவிட்டதை எழுதினேன். நீங்கள் சொன்னவுடன் உறைக்கிறது. என்னிடம் உள்ள குறிப்புக்களைச் சரி பார்த்துச் சொல்கிறேன். சற்றுப் பொறுங்கள். இந்த Topic வரிசை முடிந்தவுடன். அடுத்தது யோகங்களைப் பற்றிய பாடம். அதில் கலக்கி விடுவோம்!

    ReplyDelete
  47. //////அமர பாரதி said...
    Dear Vinothavel,
    Please give a good astrologer's name here itself. Subbiah sir wont mind I guess, and he stated that in one of his previous posts. As far as I read, Sun and Budhan cause Nipuna yogam, but our teacher differs from that. Thank you.///////

    நல்லது. பயன் உள்ளது என்றால் யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டு மென்றாலும் கொடுங்கள். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

    ReplyDelete
  48. //இறைவனை வணங்குங்கள்// நன்றி வாத்தியாரையா. நிச்சயமாக இறைவன் மட்டுமே தாக்குப் பிடிக்கும் திறமையையும் மன வலிமையையும் கொடுத்க்டுக்கொண்டிருக்கிறார்.

    //எனது கர்ட் டிச்cல் (மண்டையில்) பதிந்துவிட்டதை எழுதினேன். நீங்கள் சொன்னவுடன் உறைக்கிறது. என்னிடம் உள்ள குறிப்புக்களைச் சரி பார்த்துச் சொல்கிறேன். சற்றுப் பொறுங்கள்// வாத்தியாரையா, தயவு செய்து சரி பாருங்கள். உங்களின் கீழ்க்கண்ட லின்க்கில் உள்ள பதிவில் கூட இப்படித்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post.html

    ReplyDelete
  49. hello sir,

    2day lesson was good.

    enthu dhanushu rashi. suriyanum bhuthanum 5 am veettil ullarkal but bhuthan within 10 deg and suriyan in ucham.

    What will be the yogam?

    or bhudha will get hide?

    ReplyDelete
  50. அமர பாரதி said...
    //இறைவனை வணங்குங்கள்// நன்றி வாத்தியாரையா. நிச்சயமாக இறைவன் மட்டுமே தாக்குப் பிடிக்கும் திறமையையும் மன வலிமையையும் கொடுத்க்டுக்கொண்டிருக்கிறார்.
    //எனது Hard Discல் (மண்டையில்) பதிந்துவிட்டதை எழுதினேன். நீங்கள் சொன்னவுடன் உறைக்கிறது. என்னிடம் உள்ள குறிப்புக்களைச் சரி பார்த்துச் சொல்கிறேன். சற்றுப் பொறுங்கள்// வாத்தியாரையா, தயவு செய்து சரி பாருங்கள். உங்களின் கீழ்க்கண்ட லின்க்கில் உள்ள பதிவில் கூட இப்படித்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post.html/////

    தகவலுக்கு நன்றி அமரபாரதி!

    ReplyDelete
  51. YOGANANDAM M said...
    hello sir,
    2day lesson was good.
    enthu dhanushu rashi. suriyanum bhuthanum 5 am veettil ullarkal but bhuthan within 10 deg and suriyan in ucham.What will be the yogam? or bhudha will get hide?

    புதனுக்கு அஸ்தமனத்தில் இருந்து விதிவிலக்கு உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஆகவே யோகம் மறையவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள். கிரகங்களை லக்கினத்தில் இருந்து அல்லவா கணக்கிட வேண்டும். அதை ஏன் மறந்து விட்டீர்கள்?

    ReplyDelete
  52. ஐயா எனது தனுசு ராசி கும்ப லக்னத்திற்கு, சூரியன் 4ம இடத்தில் தனியாக உள்ளார்
    (ரிஷபம் சூரியனுக்கு பகை வீடு )
    இதனால் சூரியனுடைய தீமைகள் குறையுமா ?

    ReplyDelete
  53. //////saravanan said...
    ஐயா எனது தனுசு ராசி கும்ப லக்னத்திற்கு, சூரியன் 4ம இடத்தில் தனியாக உள்ளார்
    (ரிஷபம் சூரியனுக்கு பகை வீடு )
    இதனால் சூரியனுடைய தீமைகள் குறையுமா?////

    4ல் சூரியன் இருப்பது தீமைதானே? அது பகை வீடாக இருப்பதால் குறையும்!

    ReplyDelete
  54. //அமர பாரதி said...
    Dear Vinothavel,
    Please give a good astrologer's name here itself. Subbiah sir wont mind I guess, and he stated that in one of his previous posts.
    //
    Dear Amarabharathi,

    Considering the length of the material, i have e-mailed to you and Sir.

    Pls correct me, if i have done any mistakes and send your comments!

    May Ketu Bless All!

    ReplyDelete
  55. /// SP.VR. SUBBIAH said...
    //////அமர பாரதி said...
    Dear Vinothavel,
    Please give a good astrologer's name here itself. Subbiah sir wont mind I guess, and he stated that in one of his previous posts. As far as I read, Sun and Budhan cause Nipuna yogam, but our teacher differs from that. Thank you.///////
    நல்லது. பயன் உள்ளது என்றால் யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டு மென்றாலும் கொடுங்கள். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை!
    //

    Dear Sir,

    Considering the length of the material, i have e-mailed to you and Amarabharathi.

    Pls correct me, if i have done any mistakes and post your comments!

    May Ketu Bless All!

    ReplyDelete
  56. லக்னத்தில் கேது
    மூன்றில் புதன்,சுக்கிரன் (செவ்வாய் ஆட்சி)
    நான்கில் சூரியன்
    ஆறில் குரு உச்சம்
    ஏழில் சனி ராகு(திருமணத்தில் தடை)
    பத்தில் சந்திரன் (அவமங்கள் யோகம் )
    களத்திர தோஷம்


    ஒன்றில் குறை இருந்தால் இன்னொன்றில் நிறையாக இருக்கும்
    என்று சொன்னீர்களே அய்யா,எனக்கு எல்லாமே குறையாக இருக்கிறதே ?

    ReplyDelete
  57. /////விநோதவேல் said...
    /// SP.VR. SUBBIAH said...
    //////அமர பாரதி said...
    Dear Vinothavel,
    Please give a good astrologer's name here itself. Subbiah sir wont mind I guess, and he stated that in one of his previous posts. As far as I read, Sun and Budhan cause Nipuna yogam, but our teacher differs from that. Thank you.///////
    நல்லது. பயன் உள்ளது என்றால் யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டு மென்றாலும் கொடுங்கள். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை!
    // Dear Sir,
    Considering the length of the material, i have e-mailed to you and Amarabharathi.
    Pls correct me, if i have done any mistakes and post your comments!
    May Ketu Bless All!/////

    தகவலுக்கு நன்றி. தனிப்பதிவாக வலையில் ஏற்றியுள்ளேன். பாருங்கள்!

    ReplyDelete
  58. /////saravanan said...
    லக்னத்தில் கேது
    மூன்றில் புதன்,சுக்கிரன் (செவ்வாய் ஆட்சி)
    நான்கில் சூரியன்
    ஆறில் குரு உச்சம்
    ஏழில் சனி ராகு(திருமணத்தில் தடை)
    பத்தில் சந்திரன் (அவமங்கள் யோகம் )
    களத்திர தோஷம்
    ஒன்றில் குறை இருந்தால் இன்னொன்றில் நிறையாக இருக்கும்
    என்று சொன்னீர்களே அய்யா,எனக்கு எல்லாமே குறையாக இருக்கிறதே?////

    ஒன்றில் குறை இருந்தால் இன்னொன்றில் நிறையாக இருக்கும். அனைவருக்கும் 337 பரல்கள்தானே?
    உங்களுக்கும் 337 பரல்கள்தானே? நன்றாகப் பாருங்கள் குறைகளுக்கு ஈடு வேறு இடங்களில் தரப்பட்டிருக்கும்
    ஆராய்ந்து பாருங்கள். இல்லையென்றால் அந்த 337 உங்களுக்கு எப்படி வரும்?

    ReplyDelete
  59. நன்றி அய்யா
    உங்கள் வேகம் என்னை வியக்க வைக்கிறது ""
    லக்னத்தில் 42 பரல்கள்
    2-26
    3-26
    4-33
    5-27
    6-24
    7-24
    8-23
    9-25
    10-27
    11-34
    12-26
    பரல்கள்
    பார்ப்போம் அய்யா வயதான பிறகாவது வசதி வருதிறதா என்று :-)

    ReplyDelete
  60. //////Blogger saravanan said...
    நன்றி அய்யா
    உங்கள் வேகம் என்னை வியக்க வைக்கிறது ""
    லக்னத்தில் 42 பரல்கள், 2-26
    3-26, 4-33, 5-27, 6-24, 7-24
    8-23, 9-25, 10-27,11-34, 12-26
    பரல்கள் பார்ப்போம் அய்யா வயதான பிறகாவது வசதி வருதிறதா என்று :-)///////

    லக்கினத்தில் 42 பரல்கள்
    4ல் (சுகஸ்தானம்) 33 பரல்கள்
    11ல் (லாபஸ்தானம்) 34 பரல்கள்

    உங்களுக்கு உங்கள் முயற்சி இன்றி சுகங்கள் கிடைக்க வேண்டிய ஜாதகம்.
    உரிய தசா புத்தி வரும்போது அது நடக்கும்!

    ReplyDelete
  61. நன்றி அய்யா

    உங்கள் உண்மை மாணவன்
    saravanan

    ReplyDelete
  62. /பத்தில் சந்திரன் (அவமங்கள் யோகம் )// இது என்ன அவ மங்கள் யோகம். இதுவரை கேள்விப்பட்டதில்லையே. எனக்கும் 10ல் சந்திரன். இதைப் பற்றி இன்டெர்னெட்டில் கூட இல்லையே. இதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  63. எந்த இடத்திலும் சந்திரன் தனியாக (முன்னும் பின்னும் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது)

    ReplyDelete
  64. சரியாக சொல்லி இருக்கிறேனா ஐயா ?

    ReplyDelete
  65. ////saravanan said...
    நன்றி அய்யா
    உங்கள் உண்மை மாணவன்
    saravanan/////

    உண்மையும், நேர்மையும் இரண்டு கண்களாக இருத்தல் நன்று.
    நன்றி சரவணன்!.

    ReplyDelete
  66. //////அமர பாரதி said...
    /பத்தில் சந்திரன் (அவமங்கள் யோகம் )// இது என்ன அவ மங்கள் யோகம். இதுவரை கேள்விப்பட்டதில்லையே. எனக்கும் 10ல் சந்திரன். இதைப் பற்றி இன்டெர்னெட்டில் கூட இல்லையே. இதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?////

    ஜாதகத்தில் சந்திரன் தனித்து, இருபக்க வீடுகளில் எந்த கிரகமும். இல்லாமல் இருப்பது. அது அவ யோகம் என்று பெயர். வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப்படுத்திவிடும் என்பார்கள்.

    ReplyDelete
  67. //////saravanan said...
    எந்த இடத்திலும் சந்திரன் தனியாக (முன்னும் பின்னும் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது)////

    சரியான பதில்தான்!நன்றி!

    ReplyDelete
  68. //////saravanan said...
    சரியாக சொல்லி இருக்கிறேனா ஐயா?/////

    சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  69. // SP.VR. SUBBIAH said...
    /////விநோதவேல் said...
    // Dear Sir,
    Considering the length of the material, i have e-mailed to you and Amarabharathi.
    Pls correct me, if i have done any mistakes and post your comments!
    May Ketu Bless All!/////

    தகவலுக்கு நன்றி. தனிப்பதிவாக வலையில் ஏற்றியுள்ளேன். பாருங்கள்!
    ////

    ஐயா,

    இரண்டு நாட்கள் கழித்து வந்து பார்த்தால்,ஆச்சர்யம்!
    ஒரு தனிப்பதிவாகவே தந்துவிட்டீர்களே!
    நல்ல & அரிய விஷயங்கள் பலருக்கும் பயன்படவேண்டும் என்ற தங்களது எண்ணமும் செயலும் நெகிழவைக்கிறது... மிக்க நன்றி!

    எனக்குத் தெரிந்தவரை உலகில் சுமார்
    10 கோடிமக்கள் சரியான ஜோதிட வழிகாட்டுதல் இன்றி தவிக்கின்றனர்!
    அவர்களில் பலரும் தங்கள் வலைத்தளத்தில் இப்பதிவைக் கண்டு வெகு பயன்பெறவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    எனது பல தூக்கமற்ற இரவுகள் வீண்போகவில்லை ஐயா!

    வாத்தியாருக்கே நன்றிகள்!
    May Ketu Bless All!

    ReplyDelete
  70. /////விநோதவேல் said...
    // SP.VR. SUBBIAH said...
    /////விநோதவேல் said...
    // Dear Sir,
    Considering the length of the material, i have e-mailed to you and Amarabharathi.
    Pls correct me, if i have done any mistakes and post your comments!
    May Ketu Bless All!/////
    தகவலுக்கு நன்றி. தனிப்பதிவாக வலையில் ஏற்றியுள்ளேன். பாருங்கள்!
    ////
    ஐயா,
    இரண்டு நாட்கள் கழித்து வந்து பார்த்தால்,ஆச்சர்யம்!
    ஒரு தனிப்பதிவாகவே தந்துவிட்டீர்களே!
    நல்ல & அரிய விஷயங்கள் பலருக்கும் பயன்படவேண்டும் என்ற தங்களது எண்ணமும் செயலும் நெகிழவைக்கிறது... மிக்க நன்றி!
    எனக்குத் தெரிந்தவரை உலகில் சுமார்
    10 கோடிமக்கள் சரியான ஜோதிட வழிகாட்டுதல் இன்றி தவிக்கின்றனர்!
    அவர்களில் பலரும் தங்கள் வலைத்தளத்தில் இப்பதிவைக் கண்டு வெகு பயன்பெறவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    எனது பல தூக்கமற்ற இரவுகள் வீண்போகவில்லை ஐயா!
    வாத்தியாருக்கே நன்றிகள்!
    May Ketu Bless All!/////

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
    வேறு என்ன வேண்டும் வினோத வேல்?

    ReplyDelete
  71. Dear Sir, In 7th place , for example Magaram(Sani Bagavan House) House is 7th house. In this house Sooriyan+ Sukkiran + Buthan + Kethu. In kataga lakkanam + Ragu pagavan looking these 7th place gods..what affect will give to human.

    ReplyDelete
  72. ////Theivendrakumar PP said...
    Dear Sir, In 7th place , for example Magaram(Sani Bagavan House) House is 7th house. In this house Sooriyan+ Sukkiran + Buthan + Kethu. In kataga lakkanam + Ragu pagavan looking these 7th place gods..what affect will give to human.////

    ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருப்பது நன்மையானதல்ல! கிரகயுத்தம். அடிதடி! அஸ்தமனம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com