மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.10.15

Quiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி!


Quiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி!

26.10.2015

இந்த 100 ஆவது புதிரில் ஒரு 50 பேர்களாவது கலந்து கொண்டிருக்க வேண்டாமா? கலந்து கொண்டது 28 பேர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.


கொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் இந்கிலாந்து ராணி எலிசபெத் 2 அவர்களின் ஜாதகம். அதைக் கண்டுபிடித்துக் கூறியவர்கள் 20 பேர்கள் மட்டுமே அவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அனைவரும் பல விதங்களில் பட்டியலிட்டுள்ளார்கள்.
அன்பர் Chandrasekaran Suryanarayana அவர்கள் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அவருக்கு எனது விசேடமான பாராட்டுக்கள். அவற்றை எல்லாம் படித்துப் பாருங்கள். கீழே கொடுத்துள்ளேன். நானும் அவற்றை மீண்டும் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

லக்கினத்திற்கு 7ல் அல்லது சந்திர லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் இருந்தால் அது களத்திர தோஷத்தை உண்டாக்கும். ஆனால் குரு அங்கே உடனிருந்து 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் தோஷத்தைக் கட்டுப்படுத்தி விட்டது. அதைப் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஒன்றை மட்டும் யாரும் குறிப்பிடவில்லை: அது. செவ்வாய் சந்திர ராசிக்கு யோக காரகன் ஆகவே அவன் தோஷத்தைத் தரவில்லை. யோகக்காரகன் கெடுதலைச் செய்வானா என்ன? ஆகவே செய்யவில்லை

அன்புடன்
வாத்தியார்
========================================
போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்களின் பதில்கள் - உங்கள் பார்வைக்கு!
1
/////Blogger sundinesh1 said...
ஜாதகத்தின் சிறப்புகள் :
ஏழாம் அதிபதி ஏழில், குருவின் பார்வை
செவ்வாய் உச்சம் , சூரியன் உச்சம் , சந்திரன் ஆட்சி
செவ்வாய் சனி பரிவர்த்தனை , சனி 11'இல்
குரு நீச்சபங்கம் , குரு சந்திர யோகம் , குரு மங்கள யோகம்
சுக்கிரன் இரண்டில் - நல்ல குடும்பம் , காதல் திருமண வாய்ப்பு
அஷ்டலக்ஷ்மி யோகம் ( குரு கேந்திரம், ராஹு 6'இல்)
சந்திரன் ஆட்சி பலத்தில் உள்ளது மற்றும் குருவின் பார்வையுடன் இருக்கிறது, 2'ம் அதிபதி 11'இல் , 2'இல் சுக்கிரன். நல்ல திருமண வாழ்க்கை . திருமணத்தில் சிக்கல் இருந்திருக்கலாம்
this is the horoscope of Elizabeth 11 , born April 21, 1926 2:40 AM
Friday, October 23, 2015 7:41:00 AM///////
-------------------------------------------
2
/////Blogger Ravichandran said...
Ayya,
1, This is Elizabeth II horoscope
2. Specialites of this horoscope are:
Sun is Uccham
Guru and Chevvai are in Neecha Panga Rajayogam
Shani and Chevvai Parivarthanai
Rahu is 6th house(good place for Rahu)
Bhudhan is neecham
Chandran is in own house
Yogakaran Sukran is in second house(wealth, family house)
Guru/Chevvai and Chandran aspecting each other.
Lagna owner is looking own house(shani)
3. Kalathra dosam got cancelled, because Guru and Chandran aspecting each other.
Your Student,
Trichy Ravi
Friday, October 23, 2015 10:00:00 AM /////
-----------------------------------------------
3
/////Blogger katu raj said...
1) 21/april/1926 elizabeth II
2) Lagna,11th lord in parivarthna yoga
sun, mars are ucham
3) 7th lord moon in his own place, kalathira karagan Venus in his friend's place, Jupiter in neesapanga raja yoga, so kolathra thosam not work.
Friday, October 23, 2015 10:07:00 AM /////
-------------------------------------------
4
/////Blogger bala said...
Vankkam Iyya,
100 pathivuthu migavum arputhamanathu. Mikka nandri :)
Kelvikaana badhilgal :
1. Intha jaathagar - Elizabeth II - Elizabeth Alexandra Mary (Queen of UK) avargaludayathu - 21 April 1926
Wiki link : https://en.wikipedia.org/wiki/Elizabeth_II
(Raaja vin paarvai raniyin pakkam - Nammaduya 100 aavathu pathivum Elizabeth raniku urithaaki ullirgal) :) :)
2. Jaathagathin sirapugal :
a) Lagnathipathium, 11 aam athipathium parivarthanai - Less efforts, high beneficial
b) Lagnathil - Guru mangala yogam - (guruvum, sevvaiyum sernthu ullathu) - neecha banga raja yoga amaipu
c) Jathagathil - Guru chandra yogam, sasi mangala yogamum ullathu (ulgathil ulla pengalil sirantha pennaga, anaivarukum theriyum prabala nabaraga ulagil vaazhpavar)
d) Laganthai 7aam athipathi paarvai - penmani migavum azhaganavar - Elizabeth azhagirku solla venduma :) :)
e) 6il raagu - neenda aayul + pala sandaigalai paarthavar
f) 2il sukkran - Yogathipathi sukkaran magara lagnathirku - (8aam idathai paarkirar - neenda ayul+theerga sumangali aavar)
g) 3il neecha budhan - 9aam idathirku neradi paarvai - bagyasthanam strong aaga ullathu - (9aam veetirku guru+budhan paarvai)
f) 8aam idathirku - Laganthipathi/2aam athipathi(sani)+(sevai)+sukran paarvai ullathu. - Neenda aayuludan ullar.
g) astamathipathi suryan ucham + Thanthaiku uriya graham aanathal - thanthai moolamaga arasu aalum urimaium kidaithathu
3. Kalathira dhosham :
Kalathira dhosam atipatu ponathu. Sevai yin 7/8aam parvai - 7 aam idathirku ullathu+ 8aam idathirku ullathu - Lagnathil ulla guruvin parvaiyum 7aam idathirku+ sevaium guruvum sernthu ullathal + sevaiyai sani than 3aam paarvaiyinal lagnathayum, lagnathil ulla guru/sevaiyayum than katupaatil veithu ullar.
Enaku therinthathai koori ullen... veru yogangal irupathi vaathiyar koorungal ... katru kolgiren.
Nandri,
Bala
Friday, October 23, 2015 11:27:00 AM /////
----------------------------------------------
5
//////Blogger kmr.krishnan said...
1.இங்கிலாந்து மகாராணி எலிசபத் 2 அவர்களின் ஜாதகம்.21/22 ஏப்ரல்1926ல் பிறந்தவர்கள்.
2.சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி,செவ்வாய் கேந்திரத்தில்
உச்சம்(ருசக யோகம்) கஜ கேசரி யோகம், குரு, புதன் நீச பங்கம். ராகு ஆறில் இருப்பது ஆகியவை ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.
3.களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை.குருவின் பார்வை சந்திரனுக்கு
இருப்பதால் மண வாழ்க்கை நன்கு அமைந்தது.
Friday, October 23, 2015 12:00:00 PM /////
------------------------------------------
6
//////Blogger venkatesh r said...
"Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?"
100 வது புதிர் போட்டிக்கு நல்வாழ்த்துக்கள்.
விடைகள் :
1. யாருடைய ஜாதகம் இது?
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
Elizabeth II (Elizabeth Alexandra Mary; born 21 April 1926
[a]) is, and has been from her accession in 1952, Queen of the United Kingdom, Canada, Australia, and New Zealand, and Head of the Commonwealth. She is also Queen of 12 countries that have become independent since her accession: Jamaica, Barbados, the Bahamas, Grenada, Papua New Guinea, Solomon Islands, Tuvalu, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Belize, Antigua and Barbuda, and Saint Kitts and Nevis.
[b]Elizabeth was born in London as the elder daughter of the Duke and Duchess of York, later King George VI and Queen Elizabeth, and educated privately at home. Her father acceded to the throne on the abdication of his brother Edward VIII in 1936, from which time she was the heir presumptive. She began to undertake public duties during the Second World War, in which she served in the Auxiliary Territorial Service. In 1947, she married Philip, Duke of Edinburgh, with whom she has four children: Charles, Anne, Andrew, and Edward.
[c] She is the world's oldest reigning monarch as well as Britain's longest-lived. In 2015, she surpassed the reign of her great-great-grandmother, Victoria, and became the longest-reigning British head of state and the longest-reigning queen regnant in history.
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் : ருசக யோகம், குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. செவ்வாய் மற்றும் சூரியன் உச்சம், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை, யோககாரகன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உள்ளது போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?
செல்லுபடியாகவில்லை. களத்திராதிபதி சந்திரன் அம்சத்தில் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலும், குருவின் பார்வை அந்த தோசத்தை நீக்கியது. களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தன்னுடைய தசாவில் நல்ல கணவன் மற்றும் குடும்ப பாக்கியத்தை வழங்கினார்.
Friday, October 23, 2015 1:01:00 PM //////
-------------------------------------------
7
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
1. இது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் அவர்களின் ஜாதகம்.
2. லக்னத்தில் குரு, லக்னத்தை சந்திரன் பார்கிறார், குரு மங்கள யோகம், சசி மங்கள யோகம், கஜ கேசரி யோகம், ருச்சக யோகம், லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை யோகம், பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் அமைப்பு...
3. களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை. லக்னதிர்க்கு 7மிடத்தை குருவும், 8மிடத்தை சுக்கிரனும் பார்த்தார்கள். சந்திரனுக்கு 7மிடத்தில் குரு அமர்ந்தும், 8மிடத்தில் சுக்கிரனும் அமர்ந்து நல்லது செய்தார்கள்.
நன்றி
செல்வம்
Friday, October 23, 2015 2:25:00 PM /////
------------------------------------------
8
/////Blogger asbvsri said...
Quiz Answer 100:
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
• ஜாதகர் ராணி இரண்டாம் எலிசபெத். 21 ஏப்ரல் மாதம் 1926 ல் பிறந்தவர்.
• ஜாதகத்தில் லக்னாதிபதி சனியும், நான்கு மற்றும் 11 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பரிமாற்றம் பெற்றுள்ளார்கள்.
• லக்னாதிபதி ஆயுள்காரகன் லக்னத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.
• யோககாரகன் சுக்ரன் 2 ஆம் வீட்டில், தன ஸ்தானத்தில்.
• எட்டாம் அதிபதி சூரியன் நான்கில் உச்சம்.
• 12 க்கும் 3 க்கும் அதிபதி குரு லக்னத்தில் நீச்சம்.
• 1952 ல் யோக காரகன் சுக்ரன் அவருடைய தசையில் செவ்வாயின் புக்தியில் ராணியாக்கினார்.
• ஏழாம் அதிபதி சந்த்ரன் ஏழில் ஆட்சி. உச்ச செவ்வாயும் நீச்ச குருவும் பார்க்கிறார்கள். நவாம்சத்தில் கேதுவுடன், ராஹு மற்றும் சூரியன் பார்வையில் தோஷம் பெற்றுள்ளார். ஆனால் குருவின் பார்வையால் தோஷம் செல்லுபடியாகவில்லை.
K R Ananthakrishnan, Chennai
Friday, October 23, 2015 5:18:00 PM//////
-----------------------------------------
9
/////Blogger Rajam Anand said...
Dear Guruji
I. This person was born on 21/4/1926 and it is Queen Elizabeh II – Queen of England
Lagna is Capricorn and the Yogakaraka Venus is in the 2nd house from Lagna.
1. Debilitated planets: Jupiter in Capricorn and Mercury in Pisces
2. Exalted planets: Sun in Aries and Mars in Capricorn and thus forming Neecha Panga Raja Yoga in Capricorn the Ascendant
3. Ruling planets: Moon in Cancer
II. Yogas
1. Gaja Kesari yoga in kendra from both ascendant and moon;
2. Neesa panga Raja Yoga
3. Chandra Mangala Yoga
III. Marriage and Romance
i) Even though Jupiter is debilitated but it forms Neecha Panga Raja Yoga with exalted Mars.
ii) Seventh house is occupied by Moon which is his own house and the Kalasthirakara Venus is in 2nd house.
iii) Yogakaraka for Capricorn Ascendant is Venus. So therefore Venus in a very strong position.
All these point to a strong marriage.
Thank you for extending the deadline to Mondays.
Kind Regards
Rajam Anand
Friday, October 23, 2015 7:12:00 PM/////
----------------------------------------
10
////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The horoscope belongs to Queen Elizabeth II, Great Britain. Date of birth 21st April 1926.
2. Horoscope has many Rajayogas. Lagna has exalted mars and debiliated jupiter. Neecha banga Raja Yoga. Mars and Saturn exchange yoga and also aspecting lagna. Sun exalted. Moon in own place. Rahu Kethu in good position. Ruchaka yoga is also in exalted.
3. 7th place moon in own place. 2nd lord in 11th saturn. Debiliated jupiter aspects moon. However jupiter played good role since it is in neecha banga raja yoga. Hence the manglik was cancelled.
Thanking you sir.
C. Jeevanantham
Friday, October 23, 2015 7:53:00 PM//////
----------------------------------------
11
/////Blogger vanikumaran said...
Queen Elizabeth II
Born: April 21, 1926 (age 89), Mayfair, London, United Kingdom
Spouse: Prince Philip, Duke of Edinburgh (m. 1947)
Children: Charles, Prince of Wales, Anne, Princess Royal, Prince Edward, Earl of Wessex, Prince Andrew, Duke of York
Parents: Queen Elizabeth The Queen Mother, George VI
Grandchildren: Prince William, Duke of Cambridge, Prince Harry, more
Friday, October 23, 2015 8:36:00 PM ////////

பாதிக்கிணறுதானே தாண்டியுள்ளீர்கள்? ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்
----------------------------------------------------
12
/////OpenID guest2015 said...
QUEEN ELIZABETH -2
APRIL 21 1926
RAJA GRAHANGAL SUN EXALTATION / MOON OWN HOUSE
Neecha jupiter with exalted mars gives Neecha bhanga raja yogam.
venus yogakaraka in 2nd house jupiter aspecting 7th house makes the family life strong.
9th lord mercury aspects its own house.
thanks
sree
Saturday, October 24, 2015 1:16:00 PM//////
-----------------------------------------------
13
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் QUIZ 100:
1. இங்கிலாந்து எலிசபத்து மாகாராணி -2 அவர்களின் ஜாதகம்.
21 ஏப்ரல் 1926 ஆம் தேதி புதன் கிழமை காலை 2.40:00 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாகாராணிக்கு மகர லக்கினம். யோகக்காரர்கள் : புதன், சுக்கிரன். மகர லக்கினம் (32 பரல்) லக்கினாதிபதி சனி 11ம் வீட்டில்.
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புகள் :
1. இவர் புதன் மகா தசையில் பிறந்தார். பாக்கியஸ்தான 9ம் வீட்டு அதிபதி புதன். புதன் நீசம் அடைந்தாலும், நீச பங்கம் ஆகிறது . 9ம் வீடு தந்தைக்கான வீடு. அப்பொழுது அவருடைய தந்தை இங்கிலாந்தில் ராஜாவாக இருந்தார். பிறக்கும் பொழுதே ராஜ வீட்டு கன்னுகுட்டி .
2. லக்கினாதிபதி சனி (5 பரல்) 11ம் வீட்டில்.- 39 பரல்கள். குவிந்து கிடக்கும் செல்வங்கள் ராணியாக இருப்பதற்கு.
3. லக்கினத்தில் செவ்வாய் (5 பரல்) உச்சம் - அரசாளும் திறமை . இந்த உலகில் பல நாடுகளுக்கு ராணியாக இருந்தார். லக்கினம் (32 பரல்) லக்கினம் பலமாக உள்ளது . (In 2012 Queen Elizabeth II celebrated her Diamond Jubilee, having spent 60 years on the throne. This makes The Queen the second longest reigning British monarch, after her great-great-grandmother, Queen Victoria)
4. 2ம் வீட்டில் சுக்கிரன் (5 பரல்) இருந்தால் சுகமாக வாழ்பவர்கள் . அவர் 10ம் வீட்டிற்கும் அதிபதி. தங்கம், வைரம், வைடூரியம் , ரத்தினங்கள் போன்ற செல்வங்கள் குவிந்தன. விட்டு வைக்காமல் இந்தியாவிலிருந்து கோகினூர் வைரத்தையும் எடுத்து சென்றனர் . 2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதிகமான உறவுகள் இருக்கும்.
5. சூரியன் உச்சம். ராஜ கிரகம் உச்சமாக இருப்பதால் இவருடைய புகழ் உலகு எங்கிலும் பரவிகிடைக்கிறது.
6. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 7ம் வீட்டில் இருப்பதால் அழகு மிகுந்த மகாராணி என்று எல்லோராலும் பாராட்டுபெற்றவர்.
7. புதன் மாக தசை அடுத்து, கேது தசையில் இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் பாதுகாக்கப்பட்டார்.அப்பொழுது இவருக்கு இளம் வயது. 12ம் வீட்டில் கேது இருப்பதால் மறைந்து வாழும் நிலைமை. பிறகு வெளி நாடுகளுக்கும் சென்றார் இந்த கேது தசையில்.
8. அதற்கு அடுத்த 20 வருட சுக்கிரதசையில் லண்டனில் ராணியாக பதவி ஏற்றார். 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் , சூரியனின் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது இருப்பதாலும் இது அமைந்தது.
C. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது.
7ம் வீட்டு அதிபதி சந்திரன்(3 பரல்) 7ம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால், சந்திரன் பலவீனமாக உள்ளார்.
செவ்வாயின் 7ம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது இருப்பதாலும், நவாம்சத்தில் வக்கிரமான சனி கடக ராசியில் இருப்பதாலும், சுக்கிரனும், சந்திரனும் அஷ்டமம், சஷ்டமம் (8/6) நிலைமை இருப்பதாலும், 7ம் வீடு தோஷம் உள்ளது.
லக்கினத்தில் உள்ள குரு (7 பரல்) உச்சமான செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் நீச பங்கம் ஆகிறது.
குரு வின் 7ம் பார்வை 7ம் வீட்டில் உள்ள சந்திரனின் மீது பார்ப்பதால் தோஷம் செல்லுபடியாகவில்லை.
நவம்பர் மாதம் 20ம் தேதி 1947ல் சுக்கிர தசை சுக்கிர புக்தியில் இவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்பொழுது இவருக்கு வயது 21.
லக்கினத்திலிருந்து 5ம் வீடு ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 2ல். குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருப்பதால், சுக்கிரன் இவருக்கு நான்கு குழந்தைகளை கொடுத்தார்
------------------------------------------------------------------------------------
கெட்டகாலம்:
1992ல் ராகு தசையில் இவருடைய மகன்கள் பிரிந்து விட்டனர். மகளுக்கு திருமண விவாக ரத்து எற்பட்டது.அவர் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி (Buckingham Palace) தீ பிடித்து கரையானது. 6ம் வீட்டில் ராகு இருப்பதே காரணம். ராகுவின் 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதால் விரயங்கள் கொடுக்கும் வீடாகும்.
Sunday, October 25, 2015 2:00:00 AM ///////
-----------------------------------------
14
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Thanks for giving more time for us to answer.
Answer:
Queen Elizabeth II.
So many Yogams. Not sure I can write them all.
Guru manga, Neecha Panga, Gaga kesari, chandra mangala are some.
Panapoo thosam as in Navamsa: sani is in moon's place and moon is in sani's place. With so many yogams, and Guru's parvai and good placement of Sukra she overcome the Kalathira Dosa. still married and have 4 sons/daughters.
Sunday, October 25, 2015 5:01:00 AM /////
--------------------------------------------
15
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
1)இது உலகப் புகழ் பெற்ற எலிஸபெத் மஹாராணியாரின் ஜாதகம்.21 ஏப்ரல் 1926 காலை 3 மணிக்கு லண்டன் மாநகரில் பிறந்தவர்.
2) ஜாதகத்தில் உள்ள பல சிறப்புக்களை என்னவென்று சொல்வது?
மகர லக்கினம், லக்கினாதிபதியும், 2ம் பதியுமான சனி பகவான் 11ல்.சிறப்பான அம்சம்.
3) லக்கினத்தில் 11ம் பதி செவ்வாய் உச்சமாக அமர்ந்து,லக்கினத்தில் அமர்ந்த நீச்ச குருவை நீச்ச பங்க ராஜயோகமடைய செய்துள்ளார்.
லக்கினத்திலேயே குருமங்கள யோகம்.அரச கிரகங்களான சூரியன் உச்சம், 7ம் பதி சந்திரன் ஆட்சி பெற்று லக்கினத்தை தன் நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.சந்திர மங்கள யோகம்.
லக்கினத்திற்கு லக்கினாதிபதி சனியின் பார்வை.இப்போதைக்கு இது போதும்.
4) களத்திர தோஷம் செல்லுபடியாகாது.
ஏழாம் பதியின் நேரடி பார்வை, குருபகவானின் சேர்க்கை, சனி, சுக்கிரன் பரிவர்த்தனையோடு, சுக்கிர பகவான் 2ல் அமர்ந்து ஆசிர்வதித்துக் கொண்டுள்ளார்.
வாத்தியாரின் ஆணித்தரமான போதனை லக்கினத்தில் குரு பகவான் அமர்வு, ஆசிர்வதிக்கப் பட்ட ஜாதகம்.
5) 6ல் அமர்ந்த ராகு ராஜ யோகத்தை கொடுத்துள்ளது.
அவசர பதில், மன்னிக்கவும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Sunday, October 25, 2015 8:21:00 AM //////
--------------------------------------
16
//////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
கீழுள்ள வாசகங்களை படியுங்கள் தங்களுடையது தான். அதுவே எனது விருப்பமும் ஆகும்.
Blogger Subbiah Veerappan said...
புதிருக்கான சரியான விடை:
இசையரசி, பாரதரத்னா, திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் ஜாதகம். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 8:40 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.
சரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் ொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
இந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்!
அன்புடன்
வாத்தியார்
Tuesday, October 01, 2013 6:27:00 AM
எம்.திருமால்
பவளத்தானூர்
Sunday, October 25, 2015 9:17:00 AM //////

இரண்டு ஆண்டுகளாக நட்த்தியும் 100 பேர்கள் தேறவில்லை எனும் போது வருத்தமாகத்தான் உள்ளது. பாடம் தொடரும் வேறு விதத்தில்!
-----------------------------------------------
17
/////Blogger Thirumal Muthusamy said...
sir,
quiz no:100
Horoscope is for Elizabeth Alexandra Mary; born 21 April 1926
M.thirumal
pavalathanur
Sunday, October 25, 2015 10:21:00 AM //////

பாதிக்கிணறுதானே தாண்டியுள்ளீர்கள்? ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்
-------------------------------------------------
18
//////Blogger Arumugavel said...
1. யாருடைய ஜாதகம் இது?
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926)
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன?
சுகஸ்தானாதிபதி மற்றும் லாபஸ்தானதிபதி செவ்வாய் லக்னத்தில் உச்சம். சூரியன் மற்றும் சனி உச்சம். லாபஸ்தானத்தில் சனி . சந்திரன் ஆட்சி. செவ்வாய் சனி பரிவர்த்தனை.குரு நீசபங்க ராஜ யோகம்.ராகு 6ஆம் இடத்தில் இருப்பது நன்று.
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?
களத்திர தோஷம்:
செவ்வாய் பார்வை களத்திரஸ்தானத்தில். உச்ச சனியின்(வக்கிர) 3ஆம் பார்வை லக்னத்தில் செவ்வாயின் மேல்.
சுக்கிரன் இரெண்டாம் வீட்டில் இருக்கிறார் . குருவின் பார்வையும் 7 ஆம் வீட்டின் மேல் உள்ளதால் திருமணத்தடை நீங்கியது .
இது புதிய மாணவனது முதல் புதிர் விடை. ஜாதகரை கண்டுபிடித்ததால் பதிலளிக்க முடிந்தது. தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்
அன்புடன்,
செ . ஆறுமுகவேல்
Sunday, October 25, 2015 1:22:00 PM
Blogger Arumugavel said...
எனது பதிலில் ஒரு திருத்தம். சனி உச்சம் இல்லை . மேலும் குரு நீச பங்க ராஜ யோகத்தில் இல்லை.
அன்புடன்,
செ . ஆறுமுகவேல்
Sunday, October 25, 2015 1:32:00 PM//////
---------------------------------------------
19
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.100:
1. This Native of the horoscope is Queen Elizabeth II
Born on 21.04.1926 at 2:40 am in London.
2. i) There are lot of Yogas. We know all obiviously that Cancer zodiac native are blessed to involve in politics. like wise, In her horoscope, Mars and Jupiter co-joined,Mars is exalted.
ii) Kaja kesari Yoga in good place as well as Sasi maggala yoga too.
iii) Sun is exalted in 4th place.
iv) Moon is in own house.
v) Lagna lord in 11th place as well as mutual exchange with 11th lord.
These all gave her to become a queen of many countries for long and long time as well as long life.
3. There is no kalathra dhosa. Everthing eradicated by blessed planets.
Great horoscope.
Have a great day.
With kind regards,
Ravichandran M.
Monday, October 26, 2015 12:42:00 AM//////
--------------------------------------------
20
//////Blogger Venkat Lakshmi said...
உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்.புதிருக்கான எனது பதில்,
1.மேதகு இங்கிலாந்து மகாராணி எலிசபத் அவர்கள் ஜாதகம்.
பிறந்த தேதி:21-04-1926
பிறந்த நேரம்: 2.40 am
2.லக்கனாதிபதி 11ல், லக்கனத்தில் 4க்கும் 11க்கு உடைய செவ்வாய் உச்சம்,உடன் நீசமான குரு நீசபங்க ராஜயோகம் 7ம் வீட்டு அதிபதி 7ல் ஆட்சி, 8ம் வீட்டு அதிபதி உச்சம்,அதனால் ஆயுள் தீர்க்கம்.
Monday, October 26, 2015 12:56:00 AM /////
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. // கேதுதசாவில் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் பாதுக்காகப்பட்டார்//

    என்ன சரித்திரமே தலைகீழாக மாறுகிறது?

    ஹிட்லர்இங்கிலாந்து,அமெரிக்கா,ருஷ்யா ஆகியவற்றுக்கு எதிரணியல்லாவா?அப்படியிருக்கும் போது எப்படி இங்கிலாந்து அரசியைப் பாதுகாத்தார்?எனக்குத் தெரியாத செய்தியாக இருக்கிறதே.ஹிட்லரால் அல்ல. சர்ச்சிலால் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    உண்மையாகவே திரு. சந்திரசேகரன் சூர்ய நாராயணனின் அலசல் விரிவாகவும்
    எளிமையாகப் புரியும் படி உள்ளது.அவர் அறிவாளிமட்டுமல்ல. நல்ல அற உணர்வும் கொண்டவர்.அவருக்கு வாக்பலிதம் நிச்சயம் அன்னை சரஸ்வதிதேவி அருளுவார்.அவருக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. 100 புதிர்களில் அடியேன் கலந்து கொண்டது 86 புதிர்கள். 2013,2014 ஆகிய இரண்டு வருடங்களும் என் அன்பு மனைவியாருக்கு உடல் நலம் பாதித்து அவருடன் இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் அடியேனும் வாசம். அப்போது வெளியான புதிர்களில் கலந்து கொள்ள முடியவில்லை.

    கலந்து கொண்ட 86 புதிர்களில் மூன்றில் மட்டுமே முற்றிலும் த‌வறான பதில் அளித்தேன். 7 புதிர்களில் முக்கால் கிணறு, அரைக்கிணறு தாண்டியிருந்தேன்.
    76 புதிர்களில் முற்றிலும் சரியான பதிலகளை அளித்து வெற்றி பெற்றேன்.
    88.5% சரியான விடை அளித்து உள்ளேன் என்று நினைக்கிறேன். எல்லாம் அந்த பழனி ஆண்டவனின் அருளும், ஐயாவின் சீரிய வழிகாட்டுதலும்தான் காரணம். ஐயாவுக்கு இந்த நல்ல சமயத்தில் என் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

    100 வது புதிர் .சிறப்பு பதிவு ..என்று நம்மை அடிமைபடுத்தியவர்களை போட்டு விட்டீர்களே.??
    இருக்கட்டும் .
    பங்கு பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் ...முழு புதிராக இருப்பதால்தான்
    இடை பட்ட காலத்தில் பாதி புதிர் என ..!!பதிலை சொல்லி ஏன் என்று கேள்வி?? சற்று சுலபமாக இருந்தது
    பங்கு பெற்றால் தோல்வி கிடையாது என்ற உற்சாகம் ..
    ஆனால் இந்த மாதிரி முழு புதிர் ..அதிலும் யார் என்ற கேள்வி ...என்னிடம் ஜெகன்நாத் .ஹோரா .மென் பொருள் இல்லை ..கண்டு பிடிக்க கணக்கு போட வேண்டும் ...பங்கு பெற்றால் சரிவர பதில் இல்லை என்றால் [வாத்தியார் அடிப்பார் ]
    வாத்தியார் ,,சக மாணவர்கள் ,,வருகை தரும் நண்பர்கள் அனைவரும் பார்பார்களே என்ற தாழ்வு மனப்பாங்கு..!!
    [எனக்கு அப்படி இல்லை .யாரும் எண்ணமும் சொல்லுங்க..I don't care.. !!!]
    ஆகவே வாத்தியார் அய்யா புதிர் போட்டி ...பரிசீலனை செய்தல் வேண்டும் ..சக மாணவர்களின் கருத்து என்ன ??
    ஆனால் அய்யா கண்டிப்பாக புதிர் போட்டி வேண்டும். !!!

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நல்ல விரிவாகவும், தெளிவாகவும் வாத்தியாரின் பாணியிலேயே அலசலை தந்துள்ள நண்பர் திரு.சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களுக்கு பாராட்டுக்கள்.எனது வகுப்பறை அனுபவத்தில் திரு. சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் தெளிவாகவும்,திட்டவட்டமாகவும் இருந்துள்ளது.
    வகுப்பறை புதிர் பகுதியை 100க்கும் மேற்ப்பட்டவர்கள் படித்திருப்பார்கள்.எனினும் காலமும், பண்டிகைகளும், திருமண விசேட நிகழ்வுகள் இன்னும் பிற காரணங்களால் பலர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டிருக்கலாம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    // கேதுதசாவில் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் பாதுக்காகப்பட்டார்//
    என்ன சரித்திரமே தலைகீழாக மாறுகிறது?
    ஹிட்லர்இங்கிலாந்து,அமெரிக்கா,ருஷ்யா ஆகியவற்றுக்கு எதிரணியல்லாவா?அப்படியிருக்கும் போது எப்படி இங்கிலாந்து அரசியைப் பாதுகாத்தார்?எனக்குத் தெரியாத செய்தியாக இருக்கிறதே.ஹிட்லரால் அல்ல. சர்ச்சிலால் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
    உண்மையாகவே திரு. சந்திரசேகரன் சூர்ய நாராயணனின் அலசல் விரிவாகவும்
    எளிமையாகப் புரியும் படி உள்ளது.அவர் அறிவாளிமட்டுமல்ல. நல்ல அற உணர்வும் கொண்டவர்.அவருக்கு வாக்பலிதம் நிச்சயம் அன்னை சரஸ்வதிதேவி அருளுவார்.அவருக்கு என் பாராட்டுக்கள்./////

    ஆமாம். அவரைப் பாராட்டுவதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    100 புதிர்களில் அடியேன் கலந்து கொண்டது 86 புதிர்கள். 2013,2014 ஆகிய இரண்டு வருடங்களும் என் அன்பு மனைவியாருக்கு உடல் நலம் பாதித்து அவருடன் இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் அடியேனும் வாசம். அப்போது வெளியான புதிர்களில் கலந்து கொள்ள முடியவில்லை.
    கலந்து கொண்ட 86 புதிர்களில் மூன்றில் மட்டுமே முற்றிலும் த‌வறான பதில் அளித்தேன். 7 புதிர்களில் முக்கால் கிணறு, அரைக்கிணறு தாண்டியிருந்தேன்.
    76 புதிர்களில் முற்றிலும் சரியான பதிலகளை அளித்து வெற்றி பெற்றேன்.
    88.5% சரியான விடை அளித்து உள்ளேன் என்று நினைக்கிறேன். எல்லாம் அந்த பழனி ஆண்டவனின் அருளும், ஐயாவின் சீரிய வழிகாட்டுதலும்தான் காரணம். ஐயாவுக்கு இந்த நல்ல சமயத்தில் என் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//////

    உங்களின் மனம் உவந்த அனுபவங்களைக் கூறிய மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    100 வது புதிர் .சிறப்பு பதிவு ..என்று நம்மை அடிமைபடுத்தியவர்களை போட்டு விட்டீர்களே.?? இருக்கட்டும் .
    பங்கு பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் ...முழு புதிராக இருப்பதால்தான்
    இடை பட்ட காலத்தில் பாதி புதிர் என ..!!பதிலை சொல்லி ஏன் என்று கேள்வி?? சற்று சுலபமாக இருந்தது
    பங்கு பெற்றால் தோல்வி கிடையாது என்ற உற்சாகம் ..
    ஆனால் இந்த மாதிரி முழு புதிர் ..அதிலும் யார் என்ற கேள்வி ...என்னிடம் ஜெகன்நாத் .ஹோரா .மென் பொருள் இல்லை ..கண்டு பிடிக்க கணக்கு போட வேண்டும் ...பங்கு பெற்றால் சரிவர பதில் இல்லை என்றால் [வாத்தியார் அடிப்பார் ]
    வாத்தியார் ,,சக மாணவர்கள் ,,வருகை தரும் நண்பர்கள் அனைவரும் பார்பார்களே என்ற தாழ்வு மனப்பாங்கு..!!
    [எனக்கு அப்படி இல்லை .யாரும் எண்ணமும் சொல்லுங்க..I don't care.. !!!]
    ஆகவே வாத்தியார் அய்யா புதிர் போட்டி ...பரிசீலனை செய்தல் வேண்டும் ..சக மாணவர்களின் கருத்து என்ன ??
    ஆனால் அய்யா கண்டிப்பாக புதிர் போட்டி வேண்டும். !!!/////

    புதிய வகுப்பில் (closed classroom) புதிர்கள் வெளிவரும். வேறு வடிவில் வெளிவரும். பொறுத்திருங்கள் கணபதியாரே!

    ReplyDelete
  8. /////Blogger Raj Naga said...
    vanakkam aiya valarka thangal pani/////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நல்ல விரிவாகவும், தெளிவாகவும் வாத்தியாரின் பாணியிலேயே அலசலை தந்துள்ள நண்பர் திரு.சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களுக்கு பாராட்டுக்கள்.எனது வகுப்பறை அனுபவத்தில் திரு. சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் தெளிவாகவும்,திட்டவட்டமாகவும் இருந்துள்ளது. வகுப்பறை புதிர் பகுதியை 100க்கும் மேற்ப்பட்டவர்கள் படித்திருப்பார்கள்.எனினும் காலமும், பண்டிகைகளும், திருமண விசேட நிகழ்வுகள் இன்னும் பிற காரணங்களால் பலர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டிருக்கலாம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    உங்களின் விளக்கத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  10. Vanakkam Ayya,

    Please share திரு.சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களின் Email ID ...

    Thanks.

    Regards,
    S.Kumanan

    ReplyDelete
  11. /////Blogger Kumanan Samidurai said...
    Vanakkam Ayya,
    Please share திரு.சந்திரசேகர் சூரியநாராயணா அவர்களின் Email ID ...
    Thanks.
    Regards,
    S.Kumanan/////

    நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் (Email ID) கொடுங்கள். அதைப் பார்த்துவிட்டு, விருப்பப்பட்டால் அவரே உங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வார்!

    ReplyDelete
  12. புதிய வகுப்பறையில் அடியேனையும் இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com