மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.15

Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.


Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.

உங்களுக்குத் தெரியும். மாடுகளில் பால்கொடுக்கும் பசு மாடு,
உழவிற்குப் பயன் படும் மாடு, வண்டி இழுக்கும் காளை மாடு,
கோயில் காளை என்று வகைப் படுத்தி வைத்திருக்கின்றனர்.
கோயில் மாடு, அதாவது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு சுகஜீவனத்திற்கு உதாரணமாகத் திகழும்.

அதுபோல மாடு (செல்வம்)கள் உள்ள மனிதர்களும் சுகஜீவனமாக
வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே சுகமாக இருக்கலாம்.
மற்றவர்கள் எல்லாம் உழைத்துத்தான் ஜீவனம் செய்ய வேண்டும்!

செல்வம் உள்ளவர்களும், குன்றித் தின்றால் குன்றும் கரையும்
என்று, வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவார்கள். அதில் ஒரு
மனத் திருப்தி இருக்கும். அது ஜாதக அமைப்பு. செல்வமும்
இருக்கும். வேலைக்கும் செல்வார்கள்.

சிலர் செல்வம் இல்லாமலேயே, மற்றவர்களின் உழைப்பில்
சுகமாக இருப்பார்கள். அதுவும் ஜாதக அமைப்புத்தான்!

புதிர் எண் 75 ற்கான விடை

21.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அப்பன் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

சரியான பதில்:

வேலைக்குச் செல்லும் ஜாதகம்!!

ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகர் தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி குரு பகவான்
திரிகோணம் பெற்றிருக்கிறார்.
2. ஒன்பதாம் வீட்டுக்காரர் சூரியனும் உச்சம் பெற்று , அதாவது பாக்கியாதிபதியும் உச்சம் பெற்று லக்கினாதிபதியுடன் கூட்டாக
உள்ளார்.
3. ஜாதகர் ஓரளவிற்கு செல்வம் உள்ள வீட்டில் எல்லா பாக்கியங்
களுடனும் பிறந்தார்.
4. நான்காம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சுக்கிரன் உச்சம் 
பெற்றுள்ளான். அத்துடன் சனீஷ்வரனின் நேரடிப்பார்வையும் 
அந்த வீட்டின் மேல்.இருவரும் சேர்ந்து சுகஜீவனத்தைதைக் கொடுக்கமாட்டார்கள்
5. வியாபாரம் செய்யலாம் என்றால் 12ம் வீட்டுக்காரன் செவ்வாய் லாபஸ்தனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான். 
லாப ஸ்தானம்  கெட்டிருக்கிறது. அத்துடன் அந்த வீட்டுக்காரன் 
சுக்கிரன் அந்த வீட்டிற்கு ஆறில். அவனும் சாதகமாக இல்லை. 
ஆகவே வியாபரம் செய்தால் சிறப்படையக்கூடிய அமைப்பு 
இல்லை.
6. ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டியவர். அதில்தான் அவர் மேன்மையடைய முடியும். 10ல் கர்மகாரகன் சனி. அத்துடன் அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வையும் அந்த வீட்டின் மேல் உள்ளது.
சனி மகா திசையின் துவக்கத்திலேயே அவருக்கு நல்ல வேலை
கிடைத்தது. அதில் சேர்ந்து விட்டார்.அதிலேயே தொடர்ந்து
மேன்மையுடன் இருந்தார்.

இரண்டாம் வீட்டுக்காரன் சனியும், 11ம் வீட்டுக்காரன் சுக்கிரனும்
பரஸ்பர பார்வையில் உள்ளார்கள்.பத்தாம் வீடு பாபகர்த்தாரி
யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.

வியாபாரம் செய்திருந்தால், பெரும் நஷ்டத்தை அடைந்து விட்டு, வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஐந்தாம் வீட்டில்
இருக்கும் குருவும் சூரியனும் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து
கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்
9 பேர்கள் மட்டுமே சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
மற்றும் வாழ்த்துக்கள்!

இரண்டு அன்பர்கள் கிணற்றைத் தாண்டி கைப்பிடி சுவர் வரை
வந்து விட்டார்கள். ஆனால் தாண்டி வெளியே வரவில்லை.
அவர்கள் இருவருடைய பதில்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger selvaspk said...
This is above average Jadagam. Born with silver spoon. He dont need to study, but he will as Budhan, Sukran on 4th in good shape.
1. Ucha Bagyathipathi veetil lagnathipathi, Sukran and Budhan Ucham. 
2. 8'm athipathi 6'il (V.RajaYoam)
3. Tholil, kalvi - Sani 10'il__ Velai undu
4. Punyathipathiy, 12'm athipathi 11'il irunthu 5'i paarkiraar.
1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
- Irunthu irukalaam, but he didnt
2. சுயதொழில் செய்யலாமா
- Vidyatharan, Tholil karahan and Sani seeing each other with Ucha Sukran - he should be employed in Media field,he is singer or cine artist.
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
- He make money out of his entertaining talent, yes he is selling his stuff.
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?
- He will be outstanding on whatever he takes.
Tuesday, January 20, 2015 6:56:00 AM/////
---------------------------------------------
2
/////Blogger Chandrasekharan said...
மதிபிற்குரிய ஐயா வணக்கம்,
1.) 7-ம் அதிபதி புதன் நீசபங்கம் & சனி பார்வை. அதனால் வியபாரம் இல்லை.
2.) 6-ல் உச்சம்பெற்ற சந்திரன்,
6-ம் அதிபதி சுக்ரன் உச்சம், 12-ம் அதிபதி செவ்வாய் பார்வை 6-ம் இடம் அதனால் வேலைக்கு செல்வதுதான் சிறப்பானது.
3.) மருத்துவ துறையில் ஒரு உயர்ந்த பணியை செய்திருப்பார்.
நன்றி.
Tuesday, January 20, 2015 9:46:00 AM/////
------------------------------------------
3
/////Blogger trmprakaash@gmail.com said...
Ayya,
1. Ivar Sugajeevanamaaga veetileya irukka mudiyadhu. Kaaranam 2m adhipathy sani vakram matrum vakram petra saniyin paarvai 
subagrahangalaana budhan matrum sukkiran mel. Matrum 4m veedu Paapakarthari yogathil. 4m veettil 4-m veettirkku paadhagaathibathiyaana 
budhan matrum 4-rkku 8m adhibadhiyaana sukkiran ucham. 
2. Ivar suyathozhil matrum vyabaaram seyya iyalaadhu. Kaaranam 10il vakram petra sani. Vyabarakaaragaraana budhan 10rkku 7il neesabangam 
adaindhirundhaalum 6m adhibadhiyudan koottu. Iruvarum paapakarthari yogathil.
3. Idhu velaikku sellum jaadhagam. Matravarin keezh panipuriyum amaippu. Ivar Teacher-aaga irundhirukka vaaippu irukkiradhu. Kaarnam vakku 
sthaanam balamaaga ulladhu. Vaaku Staanathibathi Budhan Neesabangathil. Papakarthaari yogathil irundhaalum 2-irkku 3-il vetri sthaanathil. 
Thanks.
Mu.Prakaash
Tuesday, January 20, 2015 10:41:00 AM////
--------------------------------------------------
4
////Blogger Govindasamy said...
10க்கு உரிய புதன் 4ல் கேந்திரத்தில் 11ம் அதிபதி சுக்கிரனுடன்.
2க்கு உரிய சனி 10ம் இடத்தில்.
சூரியன் உச்சம்.
இவருக்கு அரசு உத்தியோகம் நிச்சயம். மிகவும் அதிகாரத்தில் இருப்பார் என்பது உறுதி.
குரு திசையில் சனி புத்தியில் அல்லது புதன் புத்தியில் வேலை நிச்சயம்.
கும்ப ராகு. ராகு திசை நடக்கும் போதே செல்வம் குவிய ஆரம்பித்துவிடும். மிகப் பெரிய செல்வச் செழிப்புடன் இருப்பார்.
Tuesday, January 20, 2015 10:58:00 AM////
-----------------------------------------
5
////Blogger bg said...
Dear Sir,
4 th house 
Neechapanga Yogam
Happy comfortable life – 
Suga Jeevanam.
10 th house
Thozhil Karagan Saturn is in Papakarthari yoga and also 10 th house in Papakarthari yoga ( surrounded by MA & KE on either side) 
In 11 th house, owner of 12 th house Mars is sitting which is not advisible to do any business. Profit from the business is difficult.
SUN – exaltation 5 th house
MOON – exaltation 6 th house
VENUS – exaltation 4 th hose
Rajayoga formed in the 5 th house.
Better suggestion to go for any job ( less risky business)
Best Reg
Balamurugan
Tuesday, January 20, 2015 12:43:00 PM////
-------------------------------------------
6
/////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா இனிய வணக்கம் .
புதிர் போட்டி எண் : 75 க்கான பதில் .
1 . லக்னாதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உச்ச பலம் பெற்று இருக்கிறார் . இது தன ஜாதக அமைப்பு.
2. லக்னத்தில் மாந்தி . பிடிவாத குணம் கொண்டவர்
3.தனாதிபதி / சகாய ஸ்தானதிபதி சனி லக்னத்திற்கு வலுத்த கேந்திரத்தில்( 10 ) இருந்து புதன் & சுக்கிரன் சமசப்தம பார்வை பெறுகிறார்.
4. கல்விகாரகன் புதன் நீச பங்க ராஜ யோகம் . 7/10 ம் அதிபதியான புதன் லக்னத்திற்கு 4இல் இருப்பது கேந்திராதித்ய தோஷம் .
5. 6/11ம் அதிபதி சுக்கிரன் உச்சம் . மனோகாரகன் சந்திரன் உச்சம்.
6 . 8ம் அதிபதி சந்திரன் 6இல் விபரீத ராஜ யோகம் பெறுகிறார் .
7. தைரிய & கீர்த்தி ஸ்தானத்தில் ராகு . 3/9 இல் ராகு/கேது இருப்பது பித்ருதோஷம்.
8. சூரியன் & குரு, செவ்வாய் சம சப்தம பார்வை பலம். பரஸ்பர நட்பு கிரக பார்வை. வேலைக்கு செல்வது உசிதமானது
லக்னாதிபதி குரு +சூரியன் பலம் பெற்று மேஷ செவ்வாய் வீட்டில் இருப்பதாலும் , ஜீவனகாரகன் சனி, நட்பு வீடான புதன் வீட்டில் இருப்பதாலும்,
தொழில் ஸ்தான அதிபதி புதன் கேந்திரத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று உச்ச சுக்கிரனுடன் கேந்திரத்தில் 4 இல் இருப்பதாலும் சுக்கிரன்
,சூரியன், குருவின் சுப பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதிப்பார் 
.( சுக்கிரன் ஜலராசியில் இருப்பதால் வெளிநாட்டு வாசம் உண்டு ) சுக்கிரன் - செவ்வாய் 8/6 அமைப்பில் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருந்து
வேலை செய்யும் அமைப்பு.
வியாபாரம் செய்ய ஏதுவான அமைப்பு குறைவு .
தனஸ்தான அதிபதியான சனி கேது செவ்வாய்க்கு மத்தியில் அமைந்து பாவகர்தாரி யோகம் பெறுவதாலும் விரயாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வித்தை காரகன் கேந்திராதித்ய தோஷம். லக்னத்தில் மாந்தி. பிடிவாதம், ஆணவம் , அகங்காரம் கொண்டவர் ஆதலால் வியாபார செய்ய அனுகூலமான அமைப்பு இல்லை .
என்றும் அன்புடன்
சோம பழனியப்பன்
மஸ்கட் ( காரைக்குடி- இந்தியா )
Tuesday, January 20, 2015 6:12:00 PM//////
--------------------------------------------
7
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
தனுசு லக்ன ஜாதகர். லக்னாதிபதி குரு, 4ம் வீட்டுக்கும் அதிபதியாகி,
5ம் இடத்தில் உச்சம் பெற்ற பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியனுடன்
சேர்ந்து அமர்ந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவர்.
சந்திரன் 6ல் உச்சமாகி, 6ம் அதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அவருடன் பத்தாம் வீட்டு அதிபதியான நீச்ச
பங்கம் பெற்ற புதன் சேர்ந்து இருப்பதாலும் அவர்கள் இருவரையும் 2ம் அதிபதி சனி 10ல் அமர்ந்து தன் பார்வையில் வைத்திருபதாலும், ஜாதகர்
ஜீவனத்திற்காக கண்டிப்பாக வேலைக்கு போவார். அதனால் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Tuesday, January 20, 2015 6:34:00 PM/////
----------------------------------------------
8
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 75ற்கான பதில்
1. சுக ஜீவனம் உண்டு.
2. சுய தொழில் இல்லை.
3. வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலைக்கே செல்லலாம்.
1. 7ம் அதிபதி புதன் 4ல் நீச பங்கம், அத்துடன் சுக்கிரன் 4ல் உச்சம், சுக ஜீவனம் உண்டு.
2. 10ம் இடத்தில் சனி, மேலும் 10ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில், சுய தொழில் இல்லை.
3. வியாபாரம் செய்ய புதன் பலம் பெற வேண்டும். 7ம் இடத்தையும், 7க்கு அதிபதி புதனையும் சனி பார்கிறார். வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலையை குறிக்கும் 9ற்கு அதிபதி சூரியன் 5ல் உச்சம், மேலும் 9ம் இடத்தை குரு பார்க்கிறார். 5ம் இடம் சுப கர்தாரி யோகத்தில். 8ற்கு
உடைய சந்திரன் இங்கே வளர்பிறை சுபராக 6ல் மறைந்ததால் வேலை செய்யும் இடத்தில போட்டி பொறாமைகள் இருந்தாலும், அதை முறியடிக்கும்
வல்லமை அப்பனுக்கு உண்டு.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி
Tuesday, January 20, 2015 7:07:00 PM//////
--------------------------------------------
இடைச் சேர்க்கை (விடுபட்டது) இதைச் சுட்டிக்காட்டிய நமது வகுப்பறை மூத்த மாணவர் கே.எம்.ஆர்.கே அவர்களுக்கு நன்றி!
9.
Blogger Prasanna said...
Namasthey sir,
Answer for the quiz number 75.
1. He can’t be a sukha Jeevi , means he can’t remain idle at home .
2. No Independent business or self-employment is possible.
3. He can’t be a Business man.
4. He must be an employee to earn his livelihood. 

Reasons and explanations :
FEW THINGS TO DECIDE WHETHER INDEPENDENT BUSINESS OR JOB:
• Planets from the seventh to twelfth houses support the tenth house in the birth-chart. Similarly, planets in the tenth to the third house make the Ascendant strong. The opportunities for a free business may be high when the ascendant or the tenth house is strong. To start a career as a business man, one should have a strong determination, far-thinking and intelligence of a businessman and the capability to take risks. If there are five or more than five planets in these houses, it can increase the potentials of independent business.
In this given chart 7th and 10th lord mercury is in Neecha position in Meenam. Mars being the 12th lord is placed in 11th house in vakra state. 9th house, Bhagya sthanam is corrupted due to the presence of kethu there. 10th house is occupied by Shani the 2nd & 3rd lord and is receiving the ASPECT OF EXALTED 6TH LORD SUKRA and the NEECHA BUDHA. So his 10th house is not that strong to promote individual business. If we see planets from 10th to 3rd, we are seeing 3rd lord Shani placed in10th and 12th lord Mars is placed in 11th house and aspecting the 2nd house, the house of income and 3rd house is occupied by Rahu .So the above mentioned conditions do not suit well with this native's chart to be a business man.
Reasons for being an employee:
If Saturn becomes strong in the birth-chart and effects the Sun, Moon and the 10th house then the native may choose independent business as a career. However, if Saturn is weak and effected by Sun, Moon, 10th house or its lord, then the native may choose job as his occupation. Saturn is considered a kaarak of job. Here Saturn occupied 10th house so he is fit to be a person to do a job. Exalted Surya in 5th house in Bharani star denotes he can be well placed with a Govt Job. Mars being the 5th lord, i.e. the Jeevana sthanadhipathi is placed in the 11th house and is aspected by Guru, i.e.the 4th lord as well as lagna lord and receiving the aspect of 9th lord Surya that too in exaltation which denotes he must be an employee only.
Saturn in the 10th house makes its native hard working. With this the native may achieve success in tourism, iron, wooden furniture, cement and chemical industry.
The 2nd house of horoscope gives an idea about the financial position and the success of an individual. Profit from corporation business, trading are also calculated from this house. Here 2nd house is receiving the aspect of 12th lord Mars so the native can’t enjoy more wealth. He will suffer loses .So he can’t own any business in his name at all.
• The 4th house of the horoscope determines paternal wealth. The 5th house gives quick wealth to its native. The native may get money from lottery as this house usually has dignified planet. Position of partnership in business and wealth from marital relationship that can be determined from the 7th house. Here 7th & 10th lord mercury is neecham so he can’t get money through business or through his spouse after marriage and so can’t lead a life of a sukha Jeevi( enjoying the wealth of in- laws). Moreover the 12th lord is sitting in the 11th house which hints this facts .
4th house has both Neecha panga Raja yog and Ucha bhanga Neecha yogam. Hence he can’t live as Suka Jeevi.He has to work hard for his livelihood.
Conclusion:
if there is any weak planet in the 2nd, 5th, 9th,10th or 11th house of a horoscope, then the native should resort to employment only. However business may be a good choice for a native if the above mentioned houses have strong planets.
Thanks and regards,
Prasanna.
Dubai.
http://devarshivedicastrology.freeforums.org.
Tuesday, January 20, 2015 11:36:00 PM
-==========================================
1
//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .75
1.தனுசு லக்னம் ..லக்னாதிபதி திரிகோணத்தில் 5ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் ..9ம் வீட்டுக்காரன் .பேஷ்..!! பேஷ்..!!
2..4ல் சுக்கிரன் உச்சம் உடன் 10ம் வீட்டுக்காரன் புதன் இருவரின் பார்வை 10ம் வீட்டை .அருமை ..!!
3..ரிஷபத்தில் சந்திர மூலதிரிகோணம் .சபாஷ் ..!!! 6ம் வீட்டில் இருந்து 12ம் வீட்டை பார்ப்பது ஒரு வகையில் பணம் விரையம் ஆவது தடுக்க படும். .
4..10ல் மகாராஜன் சனி .....இரண்டு பக்கமும் வில்லன்களான கேது செவ்வாய் .ஐயோ ..அய்ய...ய்... யோ ..!!
5..சுய தொழில் செய்வதற்கு வாய்ப்பில்லை ...
6..உச்சம் பெற்ற சுக்கிரனும் புதனும் சேர்ந்து 10 மிடத்தை பார்ப்பதால் கலை துறை சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புக்கள் அரசியலில் இருந்து
சாதிக்கலாம் .!!!...
7.லக்னத்தில் மாந்தி இருப்பதால் பிடிவாத குணம் எதையும் சாதிக்க வேண்டும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற குணம் .
8..2ம் வீட்டுக்காரன் சனி 10ல் அமர்ந்து சுபர் பார்வை .நல்ல மனைவி .குடும்பம் அமையும் .குழைந்தைகள் உண்டு .செல்வங்களும் சேரும் ...
Tuesday, January 20, 2015 4:40:00 PM////

கலைத் துறை என்றால், அதில் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
-------------------------------------
2
//////Blogger Kirupanandan A said...
இந்த ஜாதகத்தில் 3 கிரகங்கள் உச்சம். 10ல் கர்மகாரகன் சனி இருக்கிறார். அவரை 10ம் அதிபதி புதன் உச்ச சுக்கிரனுடன் பார்வையிடுகிறார்.
லக்கினாதிபதி குரு உச்ச சூரியனுடன் 5ல் இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக ஜீவனமாக வீட்டில்
இருக்க முடியாது. இந்த கிரக நிலைகள் இருக்க விடாது. செய்யும் தொழிலில் மேன் மேலும் முன்னேறக்கூடிய அமைப்பு. தனக்குக் கீழ் பலர் வேலை
செய்யக்கூடிய சுய தொழில் அமைப்பு காணப்படுகிறது
Tuesday, January 20, 2015 9:15:00 PM//////

செய்யும் தொழில் என்றால் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. //செய்யும் தொழில் என்றால் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?//

    எனது பதிலில் இறுதியில் சுய தொழில் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. வியாபாரம் செய்திருந்தால் நஷ்டத்தை சந்தித்திருப்பார் என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.ஜாதகர் வசதியான குடும்பம் என்பதையும் கூறியுள்ளேன். சனி தசா 1992ல் 40 வயதுக்குப் பின்னர் வருகிற்து.அந்த வயதிற்குப்பின்னர் வசதியுள்ள குடும்பதைச் சார்ந்தவர் உழவு மாடு போல வேலை செய்வாரா என்பதைக் கருதித்தான் 40 வயதிற்குப் பின்னர்
    சுக ஜீவனம் என்றேன்.

    என் முடிவு சரியாக வரவில்லை. எனினும் நான் ஜாதகத்தை அணுகிய முறை சரியாக உள்ளது என்ற மனத் திருப்தி இருக்கிறது.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  3. பிரசன்னா, துபாய் மிகச் சரியாக கூறியுள்ளார். அவரை பாஸ் பட்டியலில் சேர்க்கவில்லையே!

    ReplyDelete
  4. /////Blogger Kirupanandan A said...
    //செய்யும் தொழில் என்றால் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?//
    எனது பதிலில் இறுதியில் சுய தொழில் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.////

    நல்லது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  5. ////Blogger sundari said...
    good morning sir,////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    வியாபாரம் செய்திருந்தால் நஷ்டத்தை சந்தித்திருப்பார் என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.ஜாதகர் வசதியான குடும்பம் என்பதையும் கூறியுள்ளேன். சனி தசா 1992ல் 40 வயதுக்குப் பின்னர் வருகிற்து.அந்த வயதிற்குப்பின்னர் வசதியுள்ள குடும்பதைச் சார்ந்தவர் உழவு மாடு போல வேலை செய்வாரா என்பதைக் கருதித்தான் 40 வயதிற்குப் பின்னர் சுக ஜீவனம் என்றேன்.
    என் முடிவு சரியாக வரவில்லை. எனினும் நான் ஜாதகத்தை அணுகிய முறை சரியாக உள்ளது என்ற மனத் திருப்தி இருக்கிறது.
    நன்றி ஐயா!//////

    எந்தச் செயலிலும் மனத்திருப்திதான் முக்கியம். நன்றி!

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    பிரசன்னா, துபாய் மிகச் சரியாக கூறியுள்ளார். அவரை பாஸ் பட்டியலில் சேர்க்கவில்லையே!////

    உண்மைதான். கவனப்பிசகு. அவரை இடைச்சேர்க்கையாக பட்டியலில் சேர்த்துவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  8. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    ..சுய தொழில் வாய்ப்பில்லை..என்று மட்டும்.கூறி உள்ளேன் ...தாங்கள் கூறியது போல் இன்னும் கொஞ்சம் தெளிவாக அடிமை .வேலைதான்
    என்று கூறவில்லை ...தவிர ..எழுத எண்ணியவன் மறந்து விட்டேன்..??
    ]காரணம் .!!!!அடியேனுக்கு உச்சம் பெற்ற சனியுடன் சந்திரன் கும்மி அடிக்கிறான்....!!!! .நினைப்பேன் ...மறந்து விடும்..என்ன செய்வது காலம் பொழுதும் ஓடுகிறது..]
    பாஸ் போட்டதற்கு நன்றி அய்யா.!!!

    ReplyDelete
  9. அடுத்து ஒரு சுக ஜீவனத்திற்கான ஜாதகத்தை கொடுங்கள். அலசுகிறோம்.

    //வியாபாரம் செய்யலாம் என்றால் 12ம் வீட்டுக்காரன் செவ்வாய் லாபஸ்தனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான்.
    லாப ஸ்தானம் கெட்டிருக்கிறது.//

    உங்களுடைய இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. செவ்வாய் 5ம் வீட்டிற்கும் அதிபதி. லக்கினாதிபதி குரு, இன்னொரு கோணமான 9ம் வீட்டிற்கு அதிபதி சூரினுடன் பார்வையில் இருக்கிறார். வேறு எந்த துர்ஸ்தானாதிபதி பார்வையோ சேர்க்கையோ கிடையாது. 12ம் இடத்தின் பலனை மட்டும் பிரதானமாகக் கொடுப்பார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

    ReplyDelete
  10. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    ..சுய தொழில் வாய்ப்பில்லை..என்று மட்டும்.கூறி உள்ளேன் ...தாங்கள் கூறியது போல் இன்னும் கொஞ்சம் தெளிவாக அடிமை .வேலைதான்
    என்று கூறவில்லை ...தவிர ..எழுத எண்ணியவன் மறந்து விட்டேன்..??
    ]காரணம் .!!!!அடியேனுக்கு உச்சம் பெற்ற சனியுடன் சந்திரன் கும்மி அடிக்கிறான்....!!!! .நினைப்பேன் ...மறந்து விடும்..என்ன செய்வது காலம் பொழுதும் ஓடுகிறது..]
    பாஸ் போட்டதற்கு நன்றி அய்யா.!!!/////

    நல்லது. அடுத்தமுறை கவனமாக இருங்கள். நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger Kirupanandan A said...
    அடுத்து ஒரு சுக ஜீவனத்திற்கான ஜாதகத்தை கொடுங்கள். அலசுகிறோம்.
    //வியாபாரம் செய்யலாம் என்றால் 12ம் வீட்டுக்காரன் செவ்வாய் லாபஸ்தனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான்.
    லாப ஸ்தானம் கெட்டிருக்கிறது.//
    உங்களுடைய இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. செவ்வாய் 5ம் வீட்டிற்கும் அதிபதி. லக்கினாதிபதி குரு, இன்னொரு கோணமான 9ம் வீட்டிற்கு அதிபதி சூரினுடன் பார்வையில் இருக்கிறார். வேறு எந்த துர்ஸ்தானாதிபதி பார்வையோ சேர்க்கையோ கிடையாது. 12ம் இடத்தின் பலனை மட்டும் பிரதானமாகக் கொடுப்பார் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.//////

    10ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருக்கிறது. 12ம் வீட்டிற்கு அதிபதி தன்னுடைய வேலையைச் செய்ய மாட்டார் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அதைச் சொல்லுங்கள் நண்பரே! ஒரு கிரகம் இரண்டு வீடுகளுக்கு அதிபதி என்னும்போது, அந்த வீட்டிற்கு உரிய பலனையும் தரமாட்டாரா என்ன? அத்துடன் அந்த வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் அந்த வீட்டிற்கு 6ல் அமர்ந்துள்ளதை ஏன் நீங்கள் கவனிக்க வில்லை?

    ReplyDelete
  12. வீண் விவாதம் செய்வதாக நினைக்க வேண்டாம். நான் கேட்பது 10ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கிறதா என்பதைப் பற்றியல்ல. செவ்வாய் 12ம் இட பலன்களை மட்டும் தருவார் என்னும் பொருளில் சொல்லியிருக்கிறீர்கள். அவர் தனது 5ம் இட ஆதிபத்தியத்திற்குரிய நல்ல பலன்களைச் செய்ய மாட்டாரா? நன்மையும் தீமையுமற்ற நடு நிலை பலன்களைச் செய்வார் அல்லது கலவையான பலன்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். லக்கினாதியும் முழு சுபருமான குரு பார்வையும், 9ம் அதிபதி உச்ச சூரியனின் பார்வையும் இருக்கும் போது 11ம் கெட்டு விட்டது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இல்லாவிட்டால் இவர்கள் பார்வைக்கான பலன்தான் என்ன?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com