மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.1.15

Astrology: quiz number.73 பொன்மகள் வந்தாளா? பூமாலை தந்தாளா?

Astrology: quiz number.73  பொன்மகள் வந்தாளா? பூமாலை தந்தாளா?

Quiz No. 73

5.1.2015

புதிர் போட்டி எண்.73 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணியின் 2ம் வீடு மற்றும் 7ம் வீடுகளை அலசி, ஜாதகியின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எழுதுங்கள். வழவழவென்று எழுதாமல் எண்களிட்டு எழுதுங்கள். நான் கேள்விகளையும் எண்களிட்டுத்தான் எழுதுகிறேன். ஜாதகப்படி உள்ள காரணங்களையும் எண்களிட்டே எழுதுங்கள்.  That is points by points.

கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. அவருடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்கும்?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. Date of Birth 14.11.1969

    MARRIEAGE

    1) The 7th house lord Saneeswaran is situated in 3rd place to 7th house get Neesha Bagam by and Parivarthanai with Sevaai who is Uacham. Lagna lord (suriyan) is also get Neesha Bangam by Sukkaran in own house.

    2) Sukkaran is in own house with Guru and Guru see the 7th house.

    3) Thosam by Ragu in 7th house is nullified by Guru Parvai.

    4) The benefic planets sukkran, chandran, guru are not spoiled and thus she got married.

    FAMILY LIFE

    1) The second house lord Budhan is situated in second place to second house and also associated with Lakna lord (Suriyan) (Neesa Bangam) with Guru and Sukkaran (own House).

    2) Though get the direct view of Saneeswaran from 9th House (Neesha Bagam and Parivarthanai with Sevaai who is Uacham), Guru bear this negaiveness of Saneeswaran.

    3) The benefic planets sukkran, chandran, guru, Bhudan are not spoiled and thus her family life is good.

    CONCLUSION

    So as per the above findings She got married during 12.8.95 to 12.8.2002 Sevvai Dasa and her family life is good.

    ReplyDelete
  2. திருமணம் நடக்கவில்லை காரணம் லக்கனத்தில் கேது தன குடும்ப வாக்கு ஸ்தானதில் மாந்தி சுக்கிரன் திசை இளம் வயதில் நடந்தது
    7ஆம் அதிபதி சனி 9ல் நீசம் 2ஆம் அதிபதி புதன் 3ல் லகனதிபதி சூரியன்ச‌ நீசம் அடைந்தார் விரையதிபதி சந்திரன் 5ல் செவ்வாய் வேற சனியின் பார்வையை பெற்றார் சூரியன் வேற சனியின் பார்வையை பெற்றார் சனியும் சூரியன் பார்வையை பெற்றார் உச்சசெவ்வாய் சனியை பார்கிறார் சனியை தவிர எல்லாகிரகமும் ராகு கேது பிடியிலிருக்கிறது

    ReplyDelete
  3. வணக்கம் சார்........
    அம்மனி ஜாதகம்..
    1. 2ல் மாந்தி, 7ல் ராகு
    2. செவ்வாய்+சனி பரிவர்த்தனை
    3.சூரி,புத,சுக்,குரு,செவ்=
    இந்த 5 ஆசாமிகழும் சனியின்
    மப்பான பார்வையில்
    மயங்கிபோனார்கள்!!!
    30 வயதில் செவ்வாய் திசையில்
    திருமணம் நடந்திருக்கும்.......

    ReplyDelete
  4. Dear Guruji,

    1. maanthi in 2nd house bad for family life.
    2. ketu in 1st house and rahu in 7th house bad.
    3. 7th lord is neecham.
    4.guru aspect of 7th lord is relief.
    5. 6th Lord and 9th lord exchange is bad.
    6. yogakarakan mars is exalted but in 6th house.

    Definitely there is marraige in rahu dasa guru sub period. But marriage will not be happy.

    ReplyDelete
  5. ayya,

    1. ivarukku thirumanam aagiyirukkum. (karanam guru paarvai 7 m veettirkku matrum 7 m athipathikku.
    2. Raghu Thisaiyil Thirumanam Aagiyirukkum. Kumba Raghu Nanmaiye seivar. Kooda Kumba Raghuvirkku Guru Paarvai Ulladhu.
    3. Kudumba vaazhkkai santhoshamagave irukkum. Kaaranam 2m athipathy budhan subhargalaana sukkiran matrum guruvudan. Adhu mattumindri 7m athipathy neesabanga rajayogathil matrum subargalaana budhan, sukkiran, guru and lagnathipathy suriyanin parvayil.

    Nandrigal.

    Mu.Prakaash

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

    1.) சிம்ம லக்னம், லக்னாதிபதி சூரியன் நீசம்.

    2.) 7-ம் அதிபதி சனி நீச வக்கிரம்.

    3.) சனி & செவ்வாய் பரிவர்தனை. இதில் செவ்வாய் உச்சம் ; சனி வக்கிரம். செவ்வாய் & சனி பரஸ்பர பார்வை.

    4.) அஷ்டமாதிபதி குரு, 7-ம் இடத்தை 5-ம் பார்வையாகவும், 7-ம் அதி சனியை 7-ம் பார்வையாகவும் பார்கிறார்.

    5.) 2-ம் அதிபதி புதன், அஷ்டமாதிபதி குருவுடன் இணைந்து, நீசம் பெற்ற சூரியனுடன் 1 பாகைக்குள் இணைந்து அஸ்தங்கம் அடைந்துள்ளார்.

    6.) 2-ம் இடத்தில் மாந்தி அமர்வு & 2-ம் வீட்டிற்கு சுபரின் பார்வை இல்லை.

    7.) சிம்ம லக்னத்திற்க்கு, யோககாரகன் செவ்வாய் 6-இல் உச்சம். செவ்வாய் 6-இல் உச்சம் பெற்றதால், 7-ம் இடத்திற்கான பலனை அவரது திசையில் செய்திருக்கமாட்டார்.

    8.) அஷ்ட்டகவர்கத்தில், சனி 1 & சுக்ரன் 3 மதிப்பெண்கள்.

    மேற்கொண்ட காரணத்தினால், ஜாதகிக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

    அஷ்ட்டகவர்கத்தில் 7-ம் வீட்டிற்க்கு 32 பரல்கள் இருப்பதாலும், இப்பொழுது ராகு திசை & களத்திரகாரகன் சுக்ரனின் புக்தி நடைபெறுவதாலும், ஜாதகிக்கு திருமணம் நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. அய்யா,
    வணக்கம்.
    ஜாதகி பிறந்த நாள் : நவம்பர் 14 1969
    நேரம் : 01.05 a.m.(app time)
    சுக்கிரன் ஆட்சி.
    யோகாதிபதி செவ்வாய் உச்சம்.
    சனி ( ஏழாம் அதிபதி ) நீசம்.
    ஏழாம் அதிபதி மீது காரகன் சுக்கிரன் பார்வை.
    குருவின் நேரடி பார்வை. லக்கினாதிபதி சூரியன் பார்வை உள்ளது.
    இரண்டாம் அதிபதி புதன் பார்வையும் உள்ளது.
    கண்டிப்பாக திருமணம் உண்டு.
    27 வயதில் வரும் செவ்வாய் திசையில் திருமணம் நடைபெறும்.
    இரண்டில் மாந்தி உள்ளார்.
    திருமண வாழ்வு நன்றாகவே இருக்கும்.

    yours
    Balamurugan

    ReplyDelete
  8. புதிர் எண் 73க்கான அலசல் :

    சிம்ம லக்னம், தனுசு ராசி ஜாதகி.அவருக்கு

    1. திருமணம் மிகவும் தாமதமாக நடந்திருக்கும்.
    2. 36 வயதிற்கு மேல் ராகு தசை, குரு புத்தியில் திருமணம்.
    3. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை.

    காரணங்கள் :

    1. லக்னத்தில் கேது.லக்னாதிபதி சூரியன் 3ல் நீசம்.கஷ்ட ஜாதகம்.
    2. இரண்டில் மாந்தி.குடும்ப ஸ்தானாதிபதி புதன் மூன்றில் அஸ்தங்கம். இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    3. களத்திராதிபதி சனி 9ல் நீசம்.
    4. யோகாதிபதி செவ்வாய் ஆறில் மறைவு. செவ்வாயும், சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர்.
    5. களத்திர காரகன் சுக்கிரன் தன் சொந்த வீடான துலாமில் கிரக யுத்தத்திலுள்ளார்.
    6. களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளார். ஏழாமிடத்திற்கும் அதன் அதிபதி நீச சனிக்கும் சுபகிரகமான குருவின் பார்வை இருக்கிறது. இது ஒன்றே திருமணம் தடைப்படாமல் (Delayed but not denied) நடை பெறுவதிற்கு காரணம்.
    7.ஜாதகிக்கு திருமண வயதில் வந்த யோகாதிபதி செவ்வாயின் தசை சனியுடன் ஏற்பட்ட பரிவர்த்தனை காரணமாக உதவவில்லை.
    8.அதற்கு பிறகு வந்த ராகு தசை, குரு புத்தியில் 36 வயதிற்கு மேல் திருமணம் நடைபெற்றிருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. வாத்தியாரின் வழக்கமான "தனித் தன்மை" அலசலுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    1. களத்திர ஸ்தான அதிபதி சனி நீச்சம் பெற்றாலும், நீச பங்க ராஜயோகம் பெற்று பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து, சிம்ம லக்னத்துக்கு யோகாதிபதியும் பாகய ஸ்தான அதிபதியுமான உச்சம் பற்ற செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று, பரஸ்பர பார்வையிலும் இருக்கிறார். களத்திர காரகன் சுக்கிரனின் பார்வையும், 5க்கும் 8க்கும் அதிபதியான குருவின் பார்வையும் அவருக்குகிடைப்பதால் ஜாதகிக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்.

    2. ஆனால் களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பது திருமணத்தை தாமதப் படுத்தும். எனவே அவருடைய 33 வது வயதில்தான திருமணம் ஆகி இருக்கும்.

    3. ஆனால் லக்னாதிபதி நீச்சம் பெற்று, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்ந்து, சனியின் பார்வையில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. குடும்ப ஸ்தானத்தில் மாந்தியும் இருக்கிறது.

    ReplyDelete
  10. Ayya,

    1. Marriage would have happened, but it was late marriage.
    2. The marriage would have happened in Rahu Desa(almost age of 31).The Reason of getting marriage is Guru is aspecting 7th house. Normally Rahu acts like Chevvai. Chevvai is in Uccham in this horoscopr. The reason for getting late marriage is Shani(7th house owner) is neecham.
    3. Family life is average life only. Eventhough second house owner(bhudhan) sitting in 2nd house from his house, but Mandhi is sitting in 2nd house.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  11. அய்யா வணக்கம்.
    புதிர் எண் 73.
    1) திருமணம் நடந்திருக்கும் ஆனால் மிகவும் தாமதமாக.
    லக்கினாதிபதி சூரியன் 3ல் மறைவு.நீச்சம் ஆனாலும் ஆட்சி நாதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம் உண்டு.
    லக்கினத்தில் கேது 7ல் ராகு.ஆயினும் 7மிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் தாமத திருமணம்.
    2).35 வயதில் ராகு தசா குரு புத்தியில் நடந்திருக்கும்.
    3).குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது.
    இரண்டாமிடம் பாப கர்த்தாரி யோகத்தில்,தவிர இரண்டில் மாந்தி வாழ்வை பாழாக்கிவிடும். இரண்டாம் ஆதி 3ல் மறைந்து சூரியனின் சேர்க்கையால் அஸ்தங்கமடைந்து விட்டது.12மிடத்திற்கும்,லக்கினத்துக்கும் உச்சமடைந்த செவ்வாயின் பார்வை. (சுக,பாக்கியாதிபதி) ஆயினும் அவரே பாதகாதிபதியும் ஆகிறார்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 72.
    1.ஜாதகி சிம்ம லக்னம் .லக்னத்தில் கேது .
    2. ...7ம் வீட்டில் ராஹு
    3.7 ம் வீட்டதிபதி சனி 9ல் நீசம்
    4..2ல் மாந்தி
    5.குரு 5ம் பார்வையாக 7ம் வீட்டை பார்த்தாலும் உடன் சூரியன் .சுக்கிரன் புதன் இருந்தாலும்... நீசம் பெற்ற சனி பார்வையால் களஷ்திரகாரகன் சுக்கிரன் வலு அடிபட்டு விட்டது.
    6..சிம்ம லக்னத்திற்கு யோககாரகன் 4&9ம் வீட்டுகாரான் செவ்வாய் அவன் 6ல் [ஒரு வழியில் செவ்வாய் ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு கொடுக்க கூடியவன் ]

    7..ஆகவே இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகியே இருக்காது .....

    ReplyDelete
  13. எனக்கு ஜாதகம் எல்லாம் தெரியாது... நானும் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா...

    ReplyDelete
  14. வணக்கம் குரு,

    ஜாதகிக்கு காலதாமதமாக அவருடைய 33வது வயதில் அதாவது ராகு திசை குரு புக்தி கோட்சார குரு ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரித்த நேரத்தில் நடந்திருக்கும். திருமணமாகுமென கூற ஒரே ஒரு காரணம் என்னவெனில் அது குரு பகவானின் பார்வை ஜனன லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் 7மிட அதிபதிக்கும் மற்றும் சந்திரா லக்னத்திற்கு 7மிடதிர்க்கும் கிடைத்திருக்கிறது.

    தாமத திருமணத்திற்கு காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 7க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 6 மற்றும் 7குடைய சனி, 4 மற்றும் 9குடைய செவ்வாய் இடம் மற்றும் பார்வை பரிவர்த்தனையில் உள்ளார்கள். இதனால் இருவறுடைய பாவங்களும் கெட்டுவிட்டன. அத்துடன் 7இல் ராகு அமர்ந்துள்ளார். குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார்.

    குடும்ப வாழ்க்கை சுகப்படாது. அதற்க்கான காரணங்கள்.
    ஜனன லக்னத்திற்கும், சந்திரா லக்னத்திற்கும் 2க்குடையவர்கள் பலவீனம் அடைந்துள்ளார்கள். ஜனன லக்னத்திற்கு 2இல் மாந்தி மற்றும் 2மிடம் பாப கர்தாரி யோகத்தில்.
    குடும்பாதிபதி புதன் அஸ்தமனம் அடைந்துள்ளார் கூடவே சனி பகவானின் பார்வையுலும் உள்ளார். அயன சயன போக ஸ்தானாதிபதி சந்திரன் அந்த வீடிற்கு 6இல், சந்தோசத்தை குறிக்ககூடிய 5மிடம் விரையதிபதி அமர்வாள் கெட்டுவிட்டது. சுகாதிபதியும், பாக்கியாதிபதியும், யோகா காரனுமாகிய செவ்வாய் பாதிப்படைந்துள்ளார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  15. 1) ஜாதகிக்கு திருமணம் ஆகவில்லை.
    2) இனிமேல் திருமணமாகவும் வாய்ப்பில்லை.
    காரணம் ராகு, கேது லக்கினத்திலும் 7ம் இடத்திலும் இருந்து திருமணத் தடையை உருவாக்கினார்கள். 7ம் அதிபதி சனி 9ல் நீசம். 2ல் மாந்தி குடும்ப வாழ்க்கைக்குக் கேடு. 2ம் அதிபதி புதன் 3ல் மறைவு. களத்திரக்காரகன் ஆட்சியானாலும் 3ல் மறைவு. இவர்களுடன் மேலும் 2 கிரகங்கள் இருப்பது கிரக யுத்தம் ஏற்பட்டு மேலும் கெடுதல் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  16. குரு திருவடி சரணம்..

    அம்மணியின் ஜாதகத்தில்.

    1.சனி நீசம்,செவ்வாய் உச்சம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் மேலும் குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் விழுவதாலும்..
    2.அம்மணியின் 26வது வயதில் அங்காரக திசை அங்காரக புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றிருக்கும்
    3.2-இல் மாந்தி இருப்பதால்
    குடும்ப ஸ்தானத்தில் நின்ற மாந்தி குடும்பத்தின் ஒற்றுமையையும் , நிம்மதியையும் பெரிதும் பாதிக்கும். அவச் சொல் பெற நேரிடும்,வாக்கு சுத்தம் இருக்காது . தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும். குடும்ப சந்தோஷம் , பூரன செல்வம் ஆகியவை மிக மிக குறைவாக இருக்கும் . சிலருக்கு கண்பார்வைக் குறையும் , மாரகத்துக்கு ஒப்பான கண்டங்களை அடிக்கடி எதிர் கொள்ளவும் நேரிடும். கல்வி தடைபடும். பெரும் பாக்கியங்களை அடைய முடியாது.

    ReplyDelete
  17. ஜாதகி பிறந்த நாள் 14 நவம்பர் 1969; நேரம் 1 மணி 5 நிமிடம் இரவு; இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    1. ஜாதகிக்கு திருமணம் ஆயிற்று.7ம் இடத்திற்கு குருபார்வை. 7ம் அதிபதி சனிக்கு, குரு,சுக்கிரன், புதன், மற்றும் லக்னாதிபதியான சூரியனின் பார்வை.
    7ம் அதிபதி சனி நீசம் அடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதனும் பாக்யாதிபதியும் யோககாரகனுமான செவ்வாய் உச்சம் அடைந்து 9ம் இடத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.7ம் அதிபதியும் அவரது பார்வையில் உள்ளார்.எனவே திருமணம் நடந்தது.

    2.2000 ஆவது ஆண்டு 32 வயதில் திருமணம் நடந்தது.செவ்வாய் தசா புத புக்தி அல்லது செவ்வாய் தசா சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

    3.திருமண வாழ்க்கை சுகமில்லை.இரண்டாம் இடத்தில் மாந்தி,மாங்கல்யஸ்தானத்தை ராகுவும் சனியும் சூழ்ந்தது,இரணடாம் அதிபதி புதன் அஸ்தங்கதம் ஆனது ஆகியவை குடும்ப வாழ்வைகுலைத்துவிட்டது.
    கணவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிரமத்தில் இருப்பார்.பூராடம் என்பதாலும் மாங்கல்ய ஸ்தான்ம் பாபகர்தாரியில் இருப்பதாலும் கணவரின் ஆயுளைப் பற்றி என்ன சொல்வது?

    ReplyDelete
  18. Dear Sir,

    Vanakkam,

    Ans: 1 This female native has the marriage yoga, she is married .

    Ans : 2. As she Has marriage yoga , she might have married before the age of 25, probability for marriage was more during Chandra Maha dasa between ( 17 to 25) especially before 21 years. she is born during Sukra Maha dasa. She belongs to Pooradam star.

    Ans: 3 She had no martial bliss, means her family life is not good . She might have got divorced or separated from her first husband and her second marriage too will not have succeeded. She is born to live a lonely life.

    Explanations and reasons:

    The Rahu in 7th house is good for marriage, provided Venus and the Moon are well-situated in the horoscope. It is also very powerful in regard to partnerships and contracts, which it helps to make successful.Here venus is well placed in own house and moon is seen in 5th house too .So she might be married . More over 7th house is receiving aspect of Guru, which is 5th aspect , so she might have married with the blessings of Poorvapunayadhi pathi guru at the same time the marriage should not have lost long, as he is seen placed with neecha Surya her lagna lord in the 3 rd house.

    3rd house is house of courage which is strong , This shows , she will take action very swiftly , whatever comes to her mind,hasty decisions are possible. 5th house moon denotes she is a a romantic person who gives selfless love but it often realizes that love should be mutual then the war starts . Seeing 4 planets placement in a house we can think of Tapasvi yoga, but there is no such possibility because the lagna lord himself is neecha and shani too is present in 9th house in neecha postilion and mars is aspecting Saturn too. Satrun is aspecting kalathrakaraka sukra , second lord budha, and 5th as well as 8th lord guru. kethu in lagan and neecha surya denotes she has no happy martial life. kethu is always karaka for detachment , liberation , and kethu in first house will make the native egoist and cant make her love any body due to the past birth bad karma.Nodes denotes our past birth karma, which we must keep in mind. Rahu in 7th house promotes marriage at the same time kethu in lagna will break it for sure.

    2nd house Mandhi will break the marriage. it wont allow native to live happily , even second marriage too cant be successful, she has partial Mangal dosh though it is getting nullified. 2nd house is highly corrupted because of mandhi there. 7th lord shani is also neecha in 9th house. so her bhagya is corrupted. 2nd lord and 11 th lord budh is co joined with all other planets and got com busted ,
    and for 2nd house is for marriage sustenance , placement of mandhi there will break it .
    6th house Mars makes her too brave and victory over enemies and Saturn
    in 9th house will make her to marry outside the religion or caste.

    Thanks and regards,
    Prasanna.

    http://devarshivedicastrology.freeforums.org/index.php

    ReplyDelete
  19. 1. லக்கினத்தில் கேதும் லக்கினாதிபதி சூரியன் 3ல் நீசமாயும் இருப்பதால் ஜாதகி உடல் உபாதையால் அகப்பட்டு நோயுடனே வாழ்க்கையைக் கழிப்பாராதலால் திருமணத் தடைக்கு இதுவும் ஒரு காரணம்.
    2. 7ல் ராகு, மற்றும் 7க்கு உரிய சனி 9ல் செவ்வாயின் வீட்டில். திருமணத் தடையைக் காட்டுகிறது.
    3. களத்திரகாரகன் குரு 3ல் சூரியனுடன். திருமணத்திற்கு வாய்ப்பில்லை.

    4.ஒருவேளை திருமணம் நடந்தால் ராகு திசை புதன் புத்தியில் நடக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் திருமண வாழ்வு குழப்பத்தில் முடியும் - 2ல் மாந்தி இருப்பதால்

    ReplyDelete
  20. வணக்கம் வாத்தியார் ஐயா!

    ReplyDelete
  21. 1) இலக்கினாதிபதி சூரியன் நீசம், ஆனால் உடன் அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் மற்றும் வியாழன்.
    2) 7ம் அதிபதி சனியும் நீசம். ஆனால் குரு மற்றும் சுக்கிரனின் பார்வையுடன்.
    3) 2ம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 2ல். ஆனால் 2ம் வீட்டில் மாந்தி. குடும்பத்திற்கு அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல.
    4) 7ம் வீட்டில் இராகு. ஆனால் குருவின் பார்வை உள்ளது.
    5) 9ம் வீட்டில் உள்ள சனி 6ம் வீட்டில் உள்ள செவ்வாயையை பார்க்கிறார். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர். அவர் உச்சம் பெற்று 7ம் வீட்டுக்காரர் சனியை பார்க்கிறார்.
    6) ஜாதகிக்கு திருமணம் உண்டு. ஆனால் பல எதிர்ப்புகளுக்கு பிறகு 28-30 வயதில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.
    7) குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.

    ஒரு சந்தேகம். 4 நவம்பர் 1970 பிறந்த தினமாக கொண்டால், செவ்வாயின் இடம் தவிர ஜாதகம் சரியாக பொருந்துகிறது. செவ்வாய் 6ம் வீட்டிற்கு பதிலாக 2ம் வீட்டில் இருப்பதாக வருகிறது.

    ReplyDelete
  22. Respected Sir,

    My answer for our Quiz No.73:

    1. She has married.

    2. Married at her age of 29 to 32.

    3. Married life are not happy.

    Reasons:

    1. Kala sarpa dosha horoscope. But Rahu leading. Hence she has not married upto 27.

    2. She married after 27 of her age due to kala sarpa dhosa left.

    3. Though seventh lord and lagna lord are debilitated, they are in seventh position. Mutual aspect along with Venus and Jupiter.

    4. Jupiter aspecting 7th house as well as 7th house lord and co joined with kalathra karaga (Venus).

    5. Yoga karaga Mars and Seventh lord Saturn having mutual exchange as well as mutual aspects. Thainya exchange also.

    6. Kalathra karaga is in own house.

    7. In second house, Mandhi is there. Saturn and Mars are won't give happy life.

    8. Lagna lord is debilitated.

    Hence, Her married life was not happy.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  23. ஐயா வணக்கம் .
    புதிர் 73 க்கு விடை

    1) ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆகாது .
    காரணம்
    அ) 7 ஆம் வீட்டு அதிபதி நீசம் .
    ஆ) செவ்வாய் 7 ஆம் அதிபதியை யும் லக்கினத்தையும் பார்வையில் வைத்து இருக்கிறார் .
    இ) 7ஆம். வீட்டில் ராகு அமர்ந்து இருக்கிறார் .


    2 ) ஜாதகிக்கு தன் 34 வயது க்கு மேல் திருமணம் நடக்கும் .
    காரணம் ,
    அ) 7 ஆம் வீட்டுக்கு குரு பார்வை இருக்கிறது.
    ஆ) களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி.


    3) குடும்ப வாழ்க்கை அமையாது.
    காரணம்
    அ) 2 ஆம் வீட்டில் மாந்தி
    ஆ) லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் நீசமாகி உள்ளதால் குடும்ப வாழ்க்கை சிறக்காது
    இ) சந்திர ராசிக்கு 2 ல் ராகு உள்ளார்
    ஈ) 2 க்கு அதிபதி புதன் 3 ல் உள்ளார்.

    நன்றி ஐயா
    கண்ணன் .

    ReplyDelete
  24. Quiz no. 73
    வணக்கம்.
    13.11.1969ல் 1.26:10 காலையில் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.

    1. ஜாதிகிக்கு திருமணம் ஆகவிட்டது தாமதமாக.

    7ம் வீடு, 7ம் வீட்டு அதிபதி, லக்கினாதிப‌தி சூரியன் ஆகிய மூவரும் கெட்டிருப்பதால் திருமணம் ஆவது கடினம். ஆனால், திருமணம் தாமதமானது.
    7ம் வீட்டில் ராகு, 7ம் வீட்டு அதிபதி சனி மேஷத்தில் 9ம் வீட்டில் நீசம். பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், மேலும் சனியின் 7ம் பார்வை லக்கினாதிப‌தி சூரியன் மீது இருப்பதாலும் திருமணம் ஆவது கடினம்.

    2. திருமணம் 38 வயதில் ராகு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற்றது.

    குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும், குரு, சுக்கிரனின் 7ம் பார்வை 7ம் வீட்டு அதிபதி சனியின் மீது இருப்பாதாலும், ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது.

    3. ஜாதகியின் குடும்ப வாழ்க்கை பிரிவில் முடிந்தது.

    2ம் வீடு பலவீனமாக‌ உள்ளது. 2ம் வீட்டில் மாந்தி, 2ம் வீடு பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது, மறு பக்கம் சூரியன்),2ம் வீட்டு அதிபதி புதன் 3ம் வீட்டில் சூரியனுடன் அஸ்தமனம், கிரக யுத்ததில், 9ம் வீடு பாக்கியஸ்தானம் பலவீனமாக‌ உள்ளது. பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் 4ம் பார்வை 9ம் வீடு பாக்கியஸ்தானத்தின் மீது இருப்பதாலும், குடும்பஸ்தானம் பாதிக்க பட்டுள்ளது. திருமணம் பிரிவில் முடிந்தது.

    பெண் நட்சத்திரம் பூராடம் நூலாடும் என்று கூறுவார்கள்.

    அதிகபடியான தகவல்: 7ம் வீட்டில் 32 பரல்கள், லக்கினத்தில் 42 பரல்கள்.திருமணம் நிச்சயம் நடைபெறும்.
    2ம் வீட்டில் 22 பரல்கள், பாக்கியஸ்தனத்தில் 21 பரல்கள் இருப்பதாலும், சுக்கிரனின் சுய‌ பரல்கள் 3 இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை குறுகிய காலத்தில் பிரிவில் முடிந்தது.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com