மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.6.12

Devotional முன்வினை எப்போது தீரும்?


முன்வினை எப்போது தீரும்?

பக்திப்பாடல்

பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
படம்: மகாநதி (1994)
இசை: இளையராஜா
பாடலாக்கம்: கவிஞர் வாலி
பாடியவர்கள்:  ஷோபனா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

பாடல் வரிகள்:

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

(ஸ்ரீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளூமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
----------------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded the video clipping!




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

27 comments:

  1. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலி மிகவும் பெருமையுடன் தன் ஊர்ப்பெருமை பேசுகிறார்.
    அமைதியான முறையில் அழகாக உச்சரித்துப் பாடும் பாடுவோர் குரல்களின் இனிமையும் அருமை
    காவிரி, ஸ்ரீரங்கம், கடவுள்களின் பெருமை எனப் புகழும் பாடலின் வரிகளின் எளிமையும் அருமை.
    இவற்றை வெளிக்கொணரும் வண்ணம் இசையமைத்த இளையராவின் திறமையும் அருமை.
    அருமையான பாடல்களில் ஒன்றை பதிவேற்றிய வாத்தியாரின் ரசனையும் அருமை. நன்றி.

    ReplyDelete
  2. இவ் உலகம் என்பது ஒரு பரிட்சை ஹால் மாதிரி !
    மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
    தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.

    தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
    புதிய உடலோடு வருகிறார்கள்.

    பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.

    நல்வினை
    தீவினை

    பயன்படுத்தும் வினையை பொருத்து,
    மீண்டும் மீண்டும் திரும்ப அனுப்பபடுகிறார்கள்,
    புதிய உடலோடு,

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  3. அரங்கன் உறையும் மங்களபுரி அதுவே
    ஆழ்வார்கள் யாவரும் கூடிய அழகாபுரி
    திருப்பாணாழ்வாரை தொழில் ஏற்றியே
    அரங்கனிடம் அழைத்துவர அர்ச்சகருக்கு
    அரங்கனே அன்பான கட்டளையிட்ட
    சமதர்ம சர்வேசன் இருந்தருளும்
    சான்றோர் பணியும் உன்னதபுரி

    இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய அந்த ஸ்ரீரங்க நாதனின் புகழையும் அவன் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலத்தையும் அழகாக கவிஞர் புனைந்ததோடு அல்லாமல் மிகவும் ரம்மியமான இசையை இசை ஞானி அவர்கள் தந்தும் தெய்வீக தேன்சொட்டும் குரலில் பாடியும் இருக்கிறார்கள்.
    ஷோபனாவின் குரலில் அரங்கனின் கருணை பொங்குகிறது எனலாம்.. அற்புதம்.. அருமை.

    மிகவும் அருமையான தெய்வீகப் பாடலை பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்.

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்.

    ReplyDelete
  6. மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
    தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.

    தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
    புதிய உடலோடு வருகிறார்கள்.

    மிகச் சரியே..


    ///பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.///

    3 பேனாக்கள் என்பது அவை

    பிராரப்தம்
    சஞ்சிதம்
    ஆகாமியம்

    எமது கருத்தினை
    திருத்துங்கள் தவறு இருப்பின்

    ReplyDelete
  7. தேவர்கள் இழந்த செல்வங்களையும் அமுதத்தையும் பெறும் பொருட்டு, பாற்கடலைக் கடைய, அவர்களுக்கு உதவுவதற்காக, பரந்தாமன், கூர்மாவதாரம் எடுத்த கூர்ம ஜெயந்தி நன்னாளான இன்று, ஸ்ரீ ரங்கநாதரின் புகழ் பாடும் அழகான பாடல் ஒன்றைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ ரங்கநாதரின் படம் அருமை. மனதை வருடும் மிக இனிமையான பாடல்.
    நல்லதொரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. அழகான பாடல் . பதிவுக்கு நன்றி .

    ReplyDelete
  9. 11 ஜூன் 2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தேன்.நாங்கள் சென்ற சமயமே ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதி மகாசன்னிதானம் அவர்களும் தரிசனத்திற்கு வந்தார்கள்.பள்ளி கொண்டவனின்(பள்ளி என்றால் படிக்கும் இடம் என்றும் பொருள்தானே!)சன்னிதியில் மகாசன்னிதானம்,குருவின் தரிசனமும் பெற்றது
    இறையருள்தானே.

    மஹாநதி ஷோபனா ஒரே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் என்றும் மறக்க முடியாதவராகிவிட்டார். பின்னர் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் நல்ல‌ கர்நாடக சங்கீத வித்வாம்சினி ஆகிவிட்டார்.

    நல்ல பாடல், நல்ல இசைகூட்டல், நல்ல தமிழ். பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஒரு உயிர் இவ் உலகத்தில் பிறந்து,நன்மை தீமைகளை,
    அனுப்பவிப்பதற்கு,
    அவ் உயிர் அதன் முற்பிறவிகளில்,செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும்.
    ஒவ்வொரு உயிரும் தன் இலக்கை அடையும் வரை,
    பல லட்சக்கணக்கான பிறவிகளை,கடக்க வேண்டியது இருக்கிறது.
    அப்படி பல பிறவிகள் எடுத்து,இனியும் பல பிறவிகள்,
    எடுக்க போகிறவர்கள் தான் நாம் அனைவரும்.

    இந்த அனைத்து பிறவிகளுக்கும் ஆரம்பம்,
    நம்முடைய முதல் பிறவியாகும்.
    ஒவ்வொரு உயிரும் தன்னிலை உணர்ந்து
    முன்னேற வேண்டும் என்பதற்க்காக தான்,
    இறைவன் முதல் பிறவியை தருகிறான்.
    கர்மாக்கள் அற்ற உயிர் தன்னுடைய,முதல்
    பிறவியை தொடங்குகிறது.
    உடல் அனுபவங்களால் ஏற்ப்படுகிற குண பேதங்களால்,

    நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
    நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
    அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
    பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  12. ///Bhogar said...
    நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
    நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
    அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
    பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்...////


    தங்களின் விளக்கத்திற்கு நன்றிகள் தோழரே..
    அந்த பேனாவில் ஊற்றப்படும் மை தான் இந்த பிராரப்தம் சஞ்சிதம் ஆகாமியம் என்பன என கொள்கிறோம்..
    நன்றி

    ReplyDelete
  13. Good song How i have missed out ? may be most of time I am away from TN.

    Thanks for the lovely song
    G.seenivasan
    Bharuch
    Gujarat

    ReplyDelete
  14. நல்ல பாடல். ஆனால் பாடலில் முதலில் வரும் வரிகள் மட்டுமே ஷோபனா பாடியது. அதன்பின் உமா ரமணன் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. /////Blogger தேமொழி said...
    ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலி மிகவும் பெருமையுடன் தன் ஊர்ப்பெருமை பேசுகிறார்.
    அமைதியான முறையில் அழகாக உச்சரித்துப் பாடும் பாடுவோர் குரல்களின் இனிமையும் அருமை
    காவிரி, ஸ்ரீரங்கம், கடவுள்களின் பெருமை எனப் புகழும் பாடலின் வரிகளின் எளிமையும் அருமை.
    இவற்றை வெளிக்கொணரும் வண்ணம் இசையமைத்த இளையராவின் திறமையும் அருமை.
    அருமையான பாடல்களில் ஒன்றை பதிவேற்றிய வாத்தியாரின் ரசனையும் அருமை. நன்றி./////

    ஊர்ப்பெருமை பேசுபவரை நக்கலடித்துப் பின்னூட்டம் இட்டதும் அருமை:-)))

    ReplyDelete
  16. /////Blogger Bhogar said...
    இவ் உலகம் என்பது ஒரு பரிட்சை ஹால் மாதிரி !
    மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
    தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.
    தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
    புதிய உடலோடு வருகிறார்கள்.
    பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.
    நல்வினை
    தீவினை
    பயன்படுத்தும் வினையை பொருத்து,
    மீண்டும் மீண்டும் திரும்ப அனுப்பபடுகிறார்கள், புதிய உடலோடு,
    ஓம் சரவணபவ நம/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger ஜி ஆலாசியம் said...
    அரங்கன் உறையும் மங்களபுரி அதுவே
    ஆழ்வார்கள் யாவரும் கூடிய அழகாபுரி
    திருப்பாணாழ்வாரை தொழில் ஏற்றியே
    அரங்கனிடம் அழைத்துவர அர்ச்சகருக்கு
    அரங்கனே அன்பான கட்டளையிட்ட
    சமதர்ம சர்வேசன் இருந்தருளும்
    சான்றோர் பணியும் உன்னதபுரி
    இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய அந்த ஸ்ரீரங்க நாதனின் புகழையும் அவன் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலத்தையும் அழகாக கவிஞர் புனைந்ததோடு அல்லாமல் மிகவும் ரம்மியமான இசையை இசை ஞானி அவர்கள் தந்தும் தெய்வீக தேன்சொட்டும் குரலில் பாடியும் இருக்கிறார்கள்.
    ஷோபனாவின் குரலில் அரங்கனின் கருணை பொங்குகிறது எனலாம்.. அற்புதம்.. அருமை.
    மிகவும் அருமையான தெய்வீகப் பாடலை பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான வணக்கமும், நன்றியும்./////

    நல்லது. உங்களின் நெகிழ்ச்சியான மற்றும் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    வருகை பதிவு/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. /////Blogger அய்யர் said...
    மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
    தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.
    தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
    புதிய உடலோடு வருகிறார்கள்.
    மிகச் சரியே..
    ///பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.///
    3 பேனாக்கள் என்பது அவை
    பிராரப்தம்
    சஞ்சிதம்
    ஆகாமியம்
    எமது கருத்தினை
    திருத்துங்கள் தவறு இருப்பின்/////

    எங்களிடம் அத்தனை பேனாக்கள் இருப்பதாகத் தெரியவில்லை!

    ReplyDelete
  21. ////Blogger Parvathy Ramachandran said...
    தேவர்கள் இழந்த செல்வங்களையும் அமுதத்தையும் பெறும் பொருட்டு, பாற்கடலைக் கடைய, அவர்களுக்கு உதவுவதற்காக, பரந்தாமன், கூர்மாவதாரம் எடுத்த கூர்ம ஜெயந்தி நன்னாளான இன்று, ஸ்ரீ ரங்கநாதரின் புகழ் பாடும் அழகான பாடல் ஒன்றைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
    ஸ்ரீ ரங்கநாதரின் படம் அருமை. மனதை வருடும் மிக இனிமையான பாடல்.
    நல்லதொரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா.////

    உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger ThirumalaiBaabu said...
    அழகான பாடல் . பதிவுக்கு நன்றி .////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////Blogger kmr.krishnan said...
    11 ஜூன் 2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தேன்.நாங்கள் சென்ற சமயமே ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதி மகாசன்னிதானம் அவர்களும் தரிசனத்திற்கு வந்தார்கள்.பள்ளி கொண்டவனின்(பள்ளி என்றால் படிக்கும் இடம் என்றும் பொருள்தானே!)சன்னிதியில் மகாசன்னிதானம்,குருவின் தரிசனமும் பெற்றது
    இறையருள்தானே.
    மஹாநதி ஷோபனா ஒரே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் என்றும் மறக்க முடியாதவராகிவிட்டார். பின்னர் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் நல்ல‌ கர்நாடக சங்கீத வித்வாம்சினி ஆகிவிட்டார்.
    நல்ல பாடல், நல்ல இசைகூட்டல், நல்ல தமிழ். பதிவுக்கு நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  24. /////Blogger Bhogar said...
    ஒரு உயிர் இவ் உலகத்தில் பிறந்து,நன்மை தீமைகளை,
    அனுப்பவிப்பதற்கு,
    அவ் உயிர் அதன் முற்பிறவிகளில்,செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும்.
    ஒவ்வொரு உயிரும் தன் இலக்கை அடையும் வரை,
    பல லட்சக்கணக்கான பிறவிகளை,கடக்க வேண்டியது இருக்கிறது.
    அப்படி பல பிறவிகள் எடுத்து,இனியும் பல பிறவிகள்,
    எடுக்க போகிறவர்கள் தான் நாம் அனைவரும்.
    இந்த அனைத்து பிறவிகளுக்கும் ஆரம்பம்,
    நம்முடைய முதல் பிறவியாகும்.
    ஒவ்வொரு உயிரும் தன்னிலை உணர்ந்து
    முன்னேற வேண்டும் என்பதற்க்காக தான்,
    இறைவன் முதல் பிறவியை தருகிறான்.
    கர்மாக்கள் அற்ற உயிர் தன்னுடைய,முதல்
    பிறவியை தொடங்குகிறது.
    உடல் அனுபவங்களால் ஏற்ப்படுகிற குண பேதங்களால்,
    நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
    நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
    அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
    பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்.
    ஓம் சரவணபவ நம/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  25. /////Blogger seenivasan said...
    Good song How i have missed out ? may be most of time I am away from TN.
    Thanks for the lovely song
    G.seenivasan
    Bharuch
    Gujarat////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ////Blogger Uma said...
    நல்ல பாடல். ஆனால் பாடலில் முதலில் வரும் வரிகள் மட்டுமே ஷோபனா பாடியது. அதன்பின் உமா ரமணன் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன்./////

    இல்லை பாடியவர்களின் பெயரில் நீங்கள் குறிப்பிடும் உமா ரமணின் பெயர் இல்லையே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com