மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.6.12

Astrology தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 24

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திநான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.96
அருள் முருகன்

Sir
I humbly request you to clarify my doubts.

1) Generally speaking suyabukthi will not do good to a person. The same would be the
case with Guru dasa Guru bukthi. In such a case how long will Guru dasa Sani bukti take in its 2 1/2 periodto provide relief to a person if generally speaking the person had suffered a lot in Rahu dasa ?

குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ராகு தசையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்காக அடுத்துவரும் தசா புத்திகள் தங்கள் விதிகளை மீறி செயல் படாது!

2) Generally speaking if a persons maternal uncle (mothers brother) plays an important role
in a persons upbringing(right from childhood days of the kid), will it be possible to find it
from the kids horoscope ?

தாய்வழி உறவுகளைப் பற்றியும், அவர்களுடன் உள்ள சுமூக உறவுகளைப் பற்றியும் 4ஆம் வீட்டை வைத்து ஒரளவிற்குத் தெரியும். தாய் மாமா, பாசமலர் சிவாஜி போல இருப்பாரா? கை வீசம்மா கை வீசு, என்று கையைப் பிடித்துக் கொண்டு பாடுவாரா என்பதெல்லாம் ஜாதகத்தில் தெரியாது!

3) If in a females horoscope 7 planets in drekkanam divisional chart occupy the same
raasi as they are seen in raasi chart, dharmakarmathipathi yoga found in 3'rd house, 10'th house getting 39 points in ashtavarga, 11'th house - 41 points, does that indicate the females brother will be a VIP in the society ?

என்ன சுவாமி குழப்புகிறீரே? திரேக்கணத்தை பற்றிய கேள்வியில் எதற்கு தர்மகர்மாதிபதி யோகத்தையும், 10 & 11 ஆம் வீட்டுப் பரல்களையும் கொண்டு வந்து கொக்கி போட்டு மாட்டுகிறீர்கள்? Drekkana is used to study the prospects of siblings. உடன் பிறப்புக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
VIP in the societyயாக இருப்பார்களா என்பதெல்லாம் (எனக்குத்) தெரியாது
------------------------------------------
email.No.97
P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

Dear Sir,
I have few more doubts.

1. Mandhi – you have mentioned that it will affect one aspect (out of multiple functions of
the house) of the house where it is sitting. Will this affect permanently? In one horoscope,
it is sitting in second house, Cancer, and affected the jathakan in his speech ie. he was
"Thikku Vai" in his child hood. Now he has over come that to grow up in career, though
this affects him very rarely and sometimes only. Does that mean Manthi will not affect
him further, or it will continue to affect in other areas like "Vakku" or "Speech" or other
functions of second house.

நீங்களே, அரிதாக, சிலசமயங்களில் மட்டுமே அந்தக்குறை உள்ளது என்று
எழுதியுள்ளீர்கள். இறைவழிபாடு செய்யச் சொல்லுங்கள். முற்றிலும் நீங்கிவிடும்!

2. If good planet becomes ucham, it means it has more power to do good.
In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

தீயகிரகம் என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். சனி தீயகிரகம்தான். அதே நேரத்தில் அவன் ஆயுள்காரகன், கரம் காரகன் (authority for profession) உச்சம் பெற்ற சனி, ஜாதகனுக்கு (மற்ற அம்சங்களையும் வைத்து) நீண்ட ஆயுளையும், தொழிலில்/வேலையில் மேன்மையையும் தருவார்

3.Similarly if negative planet has more parals, does it mean it will affect the jathagan or it
will benefit the jathagan. Should the negative planets get lower suya parals to do less
harm to the jathagan.

எதிர்மறையான கிரகம் என்பது, 6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளைக் குறிக்கும். அந்த வீட்டு அதிபதிகளுக்கு சுயவர்க்கப்பரல்கள் அதிகம் இருந்தால், அவர்கள் ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யாவிட்டாலும் கஷ்டங்களிலிலும், துன்பங்களிலும், தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்கள்

4.How to see the houses and planets in Navamsa Chart. Is it to be done from the position
of lagna in navamsa, which is different from lagna in main chart or the lagna position in
the main chart to be applied to the same house in navamsa.

மின்னஞ்சல் கேள்வி எண்.71 தேதி 25.1.2010க்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

5.In many manual horoscopes, I find the main chart would be correct, but navamsa would
be wrong. Sometimes I could not arrive at the manually developed Navamsa chart even
using a good software. Same is the case with the remaining portion of Dasa period at
birth. That could not be arrived to match with the manual workings. This indicates the
chart requires BTR. In some cases I tried with both Lahiri and Raman Ayanamsa. As you
have been familiar with manually constructing horoscope and you know people who do it,
can you please tell me why this happens and what could be the reason for them not
matching with computerised horoscope. What are the possible mistakes, those
astrologers would have committed.
Is there any tool for BTR or short cuts to rectify the same.
I look forward to your response at the earliest.

நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும். ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்
----------------------------------------
email.No.98
திரு அரசு

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.

லேட் அட்மிஷனாக வகுப்பில் சேர்ந்த எனக்கு தாங்கள் அனுப்பிய பழைய பாடங்களின் தொகுப்பினை படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட இரண்டு ஐயங்களை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

1 . அஷ்டவர்க்கம் மற்றும் சுயவர்கப் பரல்களைக் கணக்கிடும் வழிமுறை என்ன என்பதை உதாரண ஜாதகத்துடன் சற்று விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.ஜாதகம் கணிக்கும் மென்பொருள் மூலம் பரல்கள் கணக்கிடப்பட்டு விட்டாலும் அதன் வழிமுறை குறித்து தெரிந்து கொள்ளவே இதனைக் கோருகிறேன்.

வழிமுறைகள்தானே? அது பெரிய பாடம். நீங்கள் கேட்டதற்காக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்கள் ஆர்வம் வாழ்க! நாளும் வளர்க!

2. பரிவர்த்தனை தொடர்பாக ஒரு ஐயம்: சில ஜாதகங்களில் மூன்று கிரகங்கள் கூட்டாக பரிவர்த்தனை ஆகி இருப்பதை கண்டிருக்கிறேன் , உதாரணமாக ஐந்துக்குரிய கிரகம் எழில், எழுக்குரிய கிரகம் ஒன்பதில் ஒன்பதுக்குரிய கிரகம் ஐந்திலும் பரிவர்த்தனை ஆகி இருப்பின் இதையும் யோகதுக்குரிய பரிவர்த்தனை ஆக கொள்ளலாமா? இதற்கான பழங்கள் எப்படி இருக்கும் அய்யா?
வணக்கத்துடன், அரசு.

அது முக்கோணப்பரிவர்த்தனை என்று பெயர்.பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அந்த 3 கிரகங்களுமே நன்மைகளைச் செய்வார்கள்
-----------------------------------
email.No.99
பழனிசெந்தில்

அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
குழ‌ந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தை ஜாதகம் மூலம் பலன் அல்லது பாதிப்பு அடைவார்களா? நன்றி.
செந்தில்.மதுரை.

உங்கள் கேள்வி சரியில்லை. பேருந்தில் பயணிக்கிறவன், அது எந்த ஊர் செல்லும் பேருந்து என்று பார்த்து ஏறமாட்டானா? பார்க்காமல் ஏறினால் என்ன ஆகும்? தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்? அதுவும் பஸ் புறப்பட்டு, 10 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு கேட்டால், நடத்துனரிடம் டோஸ் வாங்கிக் கொண்டு பஸ்சைவிட்டு இறங்க நேரிடும். அதுபோலத்தான் இதுவும். தத்து எடுக்கிறவன், தத்து எடுக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலிக்காமல் தத்து எடுப்பானா?
பார்க்காமல் எடுத்தால், வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.100
லக்ஷ்மணன், சென்னை

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதி மிக்க உபயோகமாகஇருக்கிறது
அதிலும் தாங்கள் பதிலுக்கு அசத்தலாக தலைப்பு கொடுப்பது, அது என்ன என்று ஆவலாக முதலில் படிக்க தோன்றும் அளவுக்கு உள்ளது. படங்களை வேறு போட்டு அசத்துவது இன்னும் தூக்கலாக இருக்கிறது ( எங்கே இருந்து சாமி படங்களை சேகரிக்கிறீர்கள்)

கூகுள் ஆண்டவர் சந்நிதியில் இல்லாத படமா? அங்கே இருந்துதான் எடுக்கிறேன் சார்!

என்னுடைய கேள்வி.
1. Md என்பது மாந்தியா Gl என்பது மாந்தியா ?
தாங்கள் ஒரு பாடத்தில் Md தான் மாந்தி என்று ஜகன்நாத் ஹோரா படம் போட்டு இப்படி சொன்னீர்கள்.
" உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be amentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இன்னொரு இடத்தில் Gl தான் மாந்தி என்று குறிப்பிட்டீர்கள்
/ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி// என்றுஅதற்க்கு ஒரு வாசகர் எழுதிய பதில்:
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன். = என்பதாகும்.
ஆக இதில் எது மாந்தி?

”சிங்காரிதான் காவேரி
காவேரிதான் சிங்காரி” என்று புரட்சித் தலைவர் படத்தில் ஒரு பாடல் வரும்.
அதைப்போல மாந்திதான் குளிகன்; குளிகன்தான் மாந்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். ஜகந்நாத ஹோரையில் இரண்டும் வெவ்வேறு என்பார்கள். அவர்களுடைய மென்பொருளை
உபயோகிப்பவர்கள் "Md" என்று போட்டிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிகனைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுங்கள். குழப்பம் இருக்காது!

2. ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு: என்று சொல்லியது பற்றிய கேள்வி.

1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
என்னுடைய ஜாதக த்தில் முப்பது பரல்கள் மேல் இருந்தால் சரி என்றால் ஒன்றில் கூட சரியாக வரவில்லையே. இந்த செட் கணக்குப்படி முப்பது பரல்கள் எல்லாவற்றிலும் வரவில்லை . சரி இரண்டு இடங்களில் இருந்தால் போதும் என்றால் மேற் கூறிய இரண்டு

வகைக்கு ஒத்து வருகிறது.
1 – 5 - 9 இல் முறையே 31 – 25 – 25 பரல்கள்
2 – 6 – 10 இல் முறையே 31 - 24 – 34 பரல்கள்
3 – 7 – 11 இல் முறையே 34 – 19 – 33 பரல்கள்
4 – 8 – 12 இல் முறையே 34 – 26 – 26 பரல்கள்
1 – 2 – 3 – 4 – 10 – 11 இடங்கள் மட்டுமே 30 பரல்களுக்கு மேல் இருக்கிறது. இது எந்த வகை ஜாதகம் எப்படி பார்ப்பது என்று தயவு செய்து சொல்லி புரிய வைக்கவும்.
இப்படிக்கு
லக்ஷ்மணன் /////

அந்த நான்கு வகைகளிலும் வராத கலவையான ஜாதகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 4 வகைகளுக்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி பதில் பகுதியில் இதுவரை 100 மின்னஞ்சல்களுக்குப் பதில் அளித்துள்ளேன்.
=========================================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!




22 comments:

  1. REF: email.No.99
    ஐயா, தத்தெடுக்கும் கேள்விக்கு பதில் எழுதும்பொழுது நீங்கள் கண்ணதாசன் போன்று, ஆயர்குல கண்ணன் போன்று தத்து எடுக்கப்பட்டவர்களை மட்டும் கருத்தில்/கணக்கில் கொண்டதாகத் தெரிகிறது.

    பிறந்த உடனேயே அரசுத் தொட்டில்களில் அனாதைக் குழந்தைகளாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தைகள், மோசஸ் போல, கர்ணன் போல, தளபதி சூர்யா போல ஆற்றில் மிதந்து வந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பின் மூலத்தை ஆராயாமல் பெரிய மனதுடன் அவர்களைத் எடுத்து வளர்ப்பவர்களும் இருக்கிறார்களே.

    கோவிலில் நட்சத்திரம் தெரியாது என்று சொல்பவர்களுக்கு சிவனின் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுபோல பிறப்பில் அன்பையே பார்த்திராத குழந்தைகளை கடவுளின் குழந்தைகளாக கணக்கில் கொள்ளலாமா?
    அல்லது அவர்களை கண்டெடுத்த நேரத்தைக் கணக்கில் கொண்டு, ஆளும் கிரகங்களின் உதவியுடன் கணிக்கப்படும் "பிரசன்ன ஜோதிடத்தை" உபயோகிக்கலாமா?

    ஆனால் பரந்த மனதுடன் தத்தெடுக்க நினைப்பவர்கள் இதையெல்லாம் பார்க்க தேவையா? என்றும் தோன்றுகிறது. நமக்கு பிறந்த குழந்தை ஜாதகம் சரியில்லாவிட்டால் நம் குழந்தையை தூக்கியா எறிந்துவிடுகிறோம்?
    பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. /////Blogger தேமொழி said...
    REF: email.No.99
    ஐயா, தத்தெடுக்கும் கேள்விக்கு பதில் எழுதும்பொழுது நீங்கள் கண்ணதாசன் போன்று, ஆயர்குல கண்ணன் போன்று தத்து எடுக்கப்பட்டவர்களை மட்டும் கருத்தில்/கணக்கில் கொண்டதாகத் தெரிகிறது.
    பிறந்த உடனேயே அரசுத் தொட்டில்களில் அனாதைக் குழந்தைகளாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தைகள், மோசஸ் போல, கர்ணன் போல, தளபதி சூர்யா போல ஆற்றில் மிதந்து வந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பின் மூலத்தை ஆராயாமல் பெரிய மனதுடன் அவர்களைத் எடுத்து வளர்ப்பவர்களும் இருக்கிறார்களே.
    கோவிலில் நட்சத்திரம் தெரியாது என்று சொல்பவர்களுக்கு சிவனின் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுபோல பிறப்பில் அன்பையே பார்த்திராத குழந்தைகளை கடவுளின் குழந்தைகளாக கணக்கில் கொள்ளலாமா?/////

    கடவுளின் குழந்தைகள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். நல்லது கெட்டதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிட வேண்டியதுதான்! வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ///குழந்தையின் ஜாதகத்தை பரிசிலிக்காமல் தத்தெடுப்பானா////

    குழந்தையின் மீது ஆசை பட்டவர்கள் தான் தத்தெடுக்க முடிவு செய்கிறார்கள். தத்தெடுக்க முடிவு செய்துவிட்டால் தத்தெடுத்திட வேண்டியதுதான். ஜாதகத்தை பரிசிலித்து எடுப்பவர், ஆசையில் எடுக்கவில்லை. குழந்தயை வைத்து குபேரனாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு ஆதாயத்துக்காகவோ எடுப்பவர் ஆகிறார்.ஆனால் அய்யா சொல்ல வருவது இந்த பரிசீலனை இல்லை என நினைக்கிறேன்.

    பல ஆண்டுகளுக்கு முன் நம்மூரில் கூட ஒரு துண்டு தான் மீண்டும் அரசியலில் தலை தூக்க இருபது வயதுக்கும் கீழே உள்ள, கணவனுக்கு அரசியல் பலம் அமைய பெற்ற
    கட்டங்களை கொண்ட ஏழைப் பெண்ணை கல்யானம் செய்துக்கொண்டார். என்று ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது.அவர் நினைத்து போல் எதுவும் நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.

    ReplyDelete
  5. நிகழ்வின் தொர்ச்சியில்..
    நிஜங்களை அறிய இன்றைய

    வருகை பதிவு..

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்.

    பதிவு அருமை. மீள் பதிவாக இருப்பதால் சற்று ஆர்வம் குறைவாக உள்ளது. புதிய பதிவுகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறேன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்!

    email.No.97
    P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

    2. If good planet becomes ucham, it means it has more power to do good.
    In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

    ஆமாம் ஐயா ! தங்களின் பதில் மிகவும் அருமையாக உள்ளது . மற்ற பதில்கள் சரி இல்லை என்பது என்னுடைய எண்ணம் இல்லை ஆனால் இன்று கூறியவற்றில் எமக்கு மிகவும் பிடித்தமானது இந்த கேள்விற்கு பதில் கூறியது ஐயா.

    நாம் உணவில் பாகற்காயை ஏன் எல்லோரும் ஏற்றுகொல்கின்றோம். இருக்கும் காய் கறிகைகளில் மிகவும் அற்ப்புதமான முதல் இடம் கொடுக்கவேண்டியது பாகைகாய் தான் என்பது எத்தனை பெயருக்கு தெரியும் என்பது எமக்கு தெரியாது ஐயா.

    சுகர், ஹை பிரஷர் என எத்தனையோ புதிய புதிய நோய்களுக்கு எல்லாம் சிறந்த மருந்து என்ன வென்று கேட்டால். அது பாகற்காயை தான் மருத்துவர்கள் கூறுகின்றனர் ஐயா.

    ஆனால் எமக்கு இந்த பாகற்காயை உண்ணும் அதிகாரம் இல்லை ஐயா. ஏனெனில் காசிக்கு போனால் தமக்கு பிடித்த ஒன்றை யாவது விடவேண்டும் என்பதனை கேட்டது உண்டு . எமக்கு உயிர், உடல், கல்வி, புத்தி என எல்லாம் தந்த தகப்பனாருக்கு வேண்டி என்னிடம் இருந்த இந்த சாப்பாட்டு வகைகளை மிகவும் எளிதில் அடையாளம் காண்பதற்கு வேண்டி ஆத்தார்தமாக விட்டது ஆகும்.

    http://www.youtube.com/watch?v=Uh3980VY49Y&feature=colike.

    ReplyDelete
  8. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி

    ReplyDelete
  9. ///குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ///

    இள வயது ராகு தசை பள்ளி, கல்லூரி வாழ்க்கை பருவத்தை முற்றிலும் சிதைத்து விட்டது. குரு தசை சனி புக்தியும் ஏமாற்றத்தையே அளித்தது. . Career Coma stage'ல். இன்னும் 5 நாட்களில் புதன் புக்தி ஆரம்பிக்கிறது. விரக்தியே மிஞ்சுகிறது. However, உங்கள் ' Advanced lessons' விற்பனைக்கு வரும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. எங்கள் உறவினர் பெண் தத்துக் குழந்தைகள் அளிக்கும் தொண்டு நிறுவனத்தில் முறையாகப் பதிவு செய்து இர‌ண்டு பெண் குழந்தைகளைப் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே எடுத்து வளர்க்கின்றாள். அந்தக் குழந்தைகளுக்குப் பிறந்த நேரம், ஊர் எதுவும் தெரியாததால் சரியான ஜாதகம் இல்லை.எனவே இப்படியும் தத்து எடுக்கப்படுகிறது என்பதற்காகச் சொன்னேன்.

    நகரத்தார் தத்து எடுக்கும் முறையே வேறு.

    கேள்வி பதில் பகுதி மீள் பதிவினை மீண்டும் படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி.

    ReplyDelete
  11. /////Blogger thanusu said...
    ///குழந்தையின் ஜாதகத்தை பரிசிலிக்காமல் தத்தெடுப்பானா////
    குழந்தையின் மீது ஆசை பட்டவர்கள் தான் தத்தெடுக்க முடிவு செய்கிறார்கள். தத்தெடுக்க முடிவு செய்துவிட்டால் தத்தெடுத்திட வேண்டியதுதான். ஜாதகத்தை பரிசிலித்து எடுப்பவர், ஆசையில் எடுக்கவில்லை. குழந்தையை வைத்து குபேரனாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு ஆதாயத்துக்காகவோ எடுப்பவர் ஆகிறார்.ஆனால் அய்யா சொல்ல வருவது இந்த பரிசீலனை இல்லை என நினைக்கிறேன்.
    பல ஆண்டுகளுக்கு முன் நம்மூரில் கூட ஒரு துண்டு தான் மீண்டும் அரசியலில் தலை தூக்க இருபது வயதுக்கும் கீழே உள்ள, கணவனுக்கு அரசியல் பலம் அமைய பெற்ற
    கட்டங்களை கொண்ட ஏழைப் பெண்ணை கல்யானம் செய்துக்கொண்டார். என்று ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது.அவர் நினைத்து போல் எதுவும் நடக்கவில்லை என்பது வேறு விஷயம்./////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  12. ////Blogger அய்யர் said...
    நிகழ்வின் தொடர்ச்சியில்..
    நிஜங்களை அறிய இன்றைய வருகை பதிவு..////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. ///Blogger பூர்ணா said...
    ஐயா வணக்கம்.
    பதிவு அருமை. மீள் பதிவாக இருப்பதால் சற்று ஆர்வம் குறைவாக உள்ளது. புதிய பதிவுகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறேன்.
    நன்றி /////

    புதிதாக வந்துள்ள பலர் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளட்டும் என்றுதான் இந்த மீள் பதிவுகள்! தேடிப்பிடித்துப் படிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மீண்டும் பதிவிடப்பெறுகிறது!

    ReplyDelete
  14. /////Blogger arul said...
    pathivugal arumai/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்!
    email.No.97
    P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.
    2. If good planet becomes ucham, it means it has more power to do good.
    In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?
    ஆமாம் ஐயா ! தங்களின் பதில் மிகவும் அருமையாக உள்ளது . மற்ற பதில்கள் சரி இல்லை என்பது என்னுடைய எண்ணம் இல்லை ஆனால் இன்று கூறியவற்றில் எமக்கு மிகவும் பிடித்தமானது இந்த கேள்விற்கு பதில் கூறியது ஐயா.
    நாம் உணவில் பாகற்காயை ஏன் எல்லோரும் ஏற்றுகொல்கின்றோம். இருக்கும் காய் கறிகைகளில் மிகவும் அற்ப்புதமான முதல் இடம் கொடுக்கவேண்டியது பாகைகாய் தான் என்பது எத்தனை பெயருக்கு தெரியும் என்பது எமக்கு தெரியாது ஐயா.
    சுகர், ஹை பிரஷர் என எத்தனையோ புதிய புதிய நோய்களுக்கு எல்லாம் சிறந்த மருந்து என்ன வென்று கேட்டால். அது பாகற்காயை தான் மருத்துவர்கள் கூறுகின்றனர் ஐயா.
    ஆனால் எமக்கு இந்த பாகற்காயை உண்ணும் அதிகாரம் இல்லை ஐயா. ஏனெனில் காசிக்கு போனால் தமக்கு பிடித்த ஒன்றை யாவது விடவேண்டும் என்பதனை கேட்டது உண்டு . எமக்கு உயிர், உடல், கல்வி, புத்தி என எல்லாம் தந்த தகப்பனாருக்கு வேண்டி என்னிடம் இருந்த இந்த சாப்பாட்டு வகைகளை மிகவும் எளிதில் அடையாளம் காண்பதற்கு வேண்டி ஆத்தார்தமாக விட்டது ஆகும்.
    http://www.youtube.com/watch?v=Uh3980VY49Y&feature=colike./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், அனுபவப் பகிர்விற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  16. /////Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Arul Murugan. S said...
    ///குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ///
    இள வயது ராகு தசை பள்ளி, கல்லூரி வாழ்க்கை பருவத்தை முற்றிலும் சிதைத்து விட்டது. குரு தசை சனி புக்தியும் ஏமாற்றத்தையே அளித்தது. . Career Coma stage'ல். இன்னும் 5 நாட்களில் புதன் புக்தி ஆரம்பிக்கிறது. விரக்தியே மிஞ்சுகிறது. However, உங்கள் ' Advanced lessons' விற்பனைக்கு வரும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்./////

    ஒரு மகா திசை ஏமாற்றத்தை அளித்தால், அடுத்துவரும் மகாதிசை எதிர்பார்ப்பை அளிக்கும். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  18. /////kmr.krishnan said...
    எங்கள் உறவினர் பெண் தத்துக் குழந்தைகள் அளிக்கும் தொண்டு நிறுவனத்தில் முறையாகப் பதிவு செய்து இர‌ண்டு பெண் குழந்தைகளைப் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே எடுத்து வளர்க்கின்றாள். அந்தக் குழந்தைகளுக்குப் பிறந்த நேரம், ஊர் எதுவும் தெரியாததால் சரியான ஜாதகம் இல்லை.எனவே இப்படியும் தத்து எடுக்கப்படுகிறது என்பதற்காகச் சொன்னேன்.
    நகரத்தார் தத்து எடுக்கும் முறையே வேறு.
    கேள்வி பதில் பகுதி மீள் பதிவினை மீண்டும் படித்துப் பயன் அடைந்தேன்.நன்றி./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. /////Blogger sundari said...
    Vanakkam sir,
    Present sir./////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  20. sir whether third house is thursthana or not? whether vibaritha rajayogam works with it?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com