மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.6.12

Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?


Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 6

”வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காது” என்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

”அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
-------------------------------------------------
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும்.

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள்.

பணத்திற்கான இடம் அது (House of finance)
குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது (House of Family)
அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும்

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா?

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம்

பணத்திற்குக் காரகன் குரு
மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்
அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது!

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!
-------------------------------------------------------
ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்


இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக் கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர்.

நிலைமை மாறியதற்கு என்ன காரணம்?

அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக்கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது! தனகாரகன் குருவும் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார்!

ஜாதகர் யார் தெரிகிறதா?
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுடைய ஜாதகம் இது!
--------------------------------------------------------------
வாத்தி(யார்),  ஷாருக்கை எதற்காக முகப்பு படத்தில் போட்டீர்கள்?

ச்ச்சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான்! வாத்தியார் என்பதால் விளையாடக்கூடாதா?
--------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27 comments:

  1. வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து குணாதிசயத்தை எடை போடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது எதற்கு பொருந்துமோ இல்லையோ, ஜாதகத்தை அடித்து துவைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்கு நன்றாக பொருந்தும் என்பது இந்த பதிவைப்பார்த்ததும் பொருந்துகிறது.

    பாப்கார்ன் பதிவு ஒரு விஷயத்தை பத்து வரிகளில் நன்றாக புரிய வைக்கும் வகையில் பாப்புலரான ஸ்டாரின் தெளிவான ஜாதக விளக்கத்துடன் இருந்தது.

    பழைய பாடத்தில் இதை படித்திருக்கிறேன். ஆனால் இதை தனியாக இப்போது படிக்கும்போது மிக மிக தெளிவாக சட்டென்று புரிந்துகொண்டது போன்ற உணர்வு.

    (பழைய பாடங்களை கவனமாக படித்துக்கொண்டிருக்கிறேன் ஐயா)

    சுய ஜாதக அலசலுக்கு மன்னிக்கவும்.

    என்னுடைய ஜாதகத்தை பார்ப்பவர்கள் உனக்கு அப்பாவால் ஒன்றும் பலனில்லை. திருமணமான பிறகு மனைவி மூலமாக மட்டுமே உன் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

    அது எப்படி என்று அப்போது புரியவில்லை. இப்போது வகுப்பறையின் தொடக்க நிலை பாடங்களை படித்தபோது, 2 மற்றும் 7ஆம் இடத்திற்குரிய செவ்வாய் 10ஆம் இடம் கடகத்தில் நீசமாகி இருக்கிறாரே. பிறகு எப்படி இது சாத்தியம் என்று நினைத்தேன்.

    தொடர்ந்து பாடங்களை படித்தபிறகு செவ்வாய் ராசியில் நீசமானாலும் அம்சத்தில் (நவாம்ச லக்னம் மிதுனம்) 9ஆம் இடமான கும்பத்தில் இருப்பதும், அஷ்டக வர்க்கத்தில் 6 பரல்கள் செவ்வாய் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு 43 பரல்கள். லக்னத்தில் 22 பரல்கள், 7ஆம் இடத்தில் 28 பரல்கள் என்ற விவரங்களை படித்த பிறகு மனைவி வந்த பிறகுதான் பொருளாதார முன்னேற்றம் என்று சொன்னதன் காரணம் புரிந்தது.

    ஒருவருக்கு எல்லா பாக்கியமும் கண்டிப்பாக கிடைத்திருக்காது என்ற அடிப்படை விதியை வைத்து பார்க்கும்போது 2ஆம் வீடு விருச்சிகத்தில் சுக்ரன் இருக்கிறது.

    ///////பணத்திற்கான இடம் அது (House of finance)
    குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது (House of Family)
    அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)/////

    சிறு வயதில் எக்குத்தப்பாக அடுத்தவர் மனம் புண்படும் வகையில் எதையாவது பேசி வாங்கிக்கட்டிக்கொள்வது சகஜமாக இருந்தது. ஆனால் கல்லூரிப் படிப்புக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சம் பக்குவம் ஏற்பட்டு முடிந்த வரை வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவதால் முன்பைப் போல் சிக்கல் இல்லை.

    எழுத்தில் திறமை இருக்கிறது. (அதை நான் சரியாக பயன்படுத்துவதில்லை. அது வேறு விஷயம்).
    அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)---இது ஓ.கே.

    எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்றால் அடிவாங்கும் இலாக்கா எது.?

    பணத்திற்கான இடம் அது (House of finance)----இதுதான்.

    இப்போது 1000 ரூபாய் வருவதற்குள் 2000 ஆயிரம் ரூபாய்க்கு செலவு முதல் நாளே வினியோகமாகி முடிந்து விடுகிறது. விளைவு, மற்றவர் 500 ரூபாய் செலவு செய்யும் விஷயத்திற்கு என் பாக்கெட்டில் இருந்து 1000 ரூபாய் கரைந்து விடுகிறது.

    அதற்கு காரணம் என்ன.

    நவாம்சத்தில் மிதுன லக்னம். அதற்கு இரண்டாம் வீடான கடகத்தில் சுக்ரனுடன் ராகு கூட்டணி போட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்குமோ?

    அடுத்த பாடங்களை நன்றாக படிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய பாப்கார்ன் பழைய பாடத்திலும் உள்ளது.
    ஒரு ரெப்ரெஷ் போல இருந்தது படிப்பதற்கு.
    எனக்கும் ராசிப்படி இரண்டில் சனி & சூரியன்.
    6th ஹவுஸ் உச்ச குரு....மறைவிடம்...ஆனால் இரண்டாம் வீட்டை பார்க்கிறார்.
    நவாம்சத்தில் சனி துலாமில் உச்சம் ,,,
    சூரியன் மகரம் வீட்டில்...குரு அதே கடகத்தில் ...
    கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு...
    போக போக புரியும் என்று நினைக்கிறேன்.
    நன்றி பல கோடிகள் அய்யா

    ReplyDelete
  3. அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய பாப்கார்ன் பழைய பாடத்திலும் உள்ளது.
    ஒரு ரெப்ரெஷ் போல இருந்தது படிப்பதற்கு.
    எனக்கும் ராசிப்படி இரண்டில் சனி & சூரியன்.
    6th ஹவுஸ் உச்ச குரு....மறைவிடம்...ஆனால் இரண்டாம் வீட்டை பார்க்கிறார்.
    நவாம்சத்தில் சனி துலாமில் உச்சம் ,,,
    சூரியன் மகரம் வீட்டில்...குரு அதே கடகத்தில் ...
    கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு...
    போக போக புரியும் என்று நினைக்கிறேன்.
    நன்றி பல கோடிகள் அய்யா

    பணிவுடன்
    ரா.சரவணன்

    ReplyDelete
  4. அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்,முதலில் இன்றைய படம் அருமை.மலையே பெருமாளாய்,மெய்சிலிர்த்தது.அடுத்து பாடம் சிம்ளிசூப்பர்.தங்கும் என்றால் தங்கும்,இல்லை என்றால் இல்லை.நன்றிகள்.

    ReplyDelete
  5. இந்த விளையாட்டு
    ரொம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  6. sir, just started studying the lessons. so just a doubt "is rajini have -kala sarpa dosham-?? "

    ReplyDelete
  7. ற்றுமொரு இரண்டில் சனி உள்ளவர் திருபாய் அம்பானி.
    இவர்கள் எல்லாம் என்னைக் குழப்புவதற்கே இருப்பவர்கள்.
    படித்த பொது விதிப்படி அப்படியே இருக்கிறதே ஆச்சரியப் பட விடமாட்டார்கள்.
    (அம்பானிக்கு லக்கினத்தில் சூரிய சந்திரன், பத்தில் குரு, ஆனால் ரஜினி போல இல்லாமல் சுக்கிரனும் புதனும் பன்னிரண்டில் மறைவு, அத்துடன் காலசர்ப்ப தோஷ ஜாதகம் )
    திருமலை படம் ஃபோட்டோஷாப் ஆக இல்லாதிருக்குமானால் வியப்பிற்குரிய ஒன்றுதான். நான் இதுவரை பார்த்ததில்லை.
    பதிவிற்கும் படத்திற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  8. என் மகன் நகுல் ராமிற்கு இரண்டில் சனி.இரண்டாம் அதிபதி குரு ராசி,அம்சம் இரண்டிலும் 9-ல் உச்சம். ராசியில் குருவானவர் சூரியன்,கேதுவுடன் அமர்ந்து இருக்கிறார்.விருச்சிக லக்னம்,விருச்சிக ராசி.இது வரை கையில் கிடைத்த பணத்தை எல்லாம் நல்லா செலவு செய்து கொண்டே இருக்கிறான். இனியாவது கையில் தங்குதா என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  9. Blogger சரண் said...
    சுய ஜாதக அலசலுக்கு மன்னிக்கவும்.
    என்னுடைய ஜாதகத்தை பார்ப்பவர்கள் உனக்கு அப்பாவால் ஒன்றும் பலனில்லை. திருமணமான பிறகு மனைவி மூலமாக மட்டுமே உன் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
    அது எப்படி என்று அப்போது புரியவில்லை. இப்போது வகுப்பறையின் தொடக்க நிலை பாடங்களை படித்தபோது, 2 மற்றும் 7ஆம் இடத்திற்குரிய செவ்வாய் 10ஆம் இடம் கடகத்தில் நீசமாகி இருக்கிறாரே. பிறகு எப்படி இது சாத்தியம் என்று நினைத்தேன்.
    தொடர்ந்து பாடங்களை படித்தபிறகு செவ்வாய் ராசியில் நீசமானாலும் அம்சத்தில் (நவாம்ச லக்னம் மிதுனம்) 9ஆம் இடமான கும்பத்தில் இருப்பதும், அஷ்டக வர்க்கத்தில் 6 பரல்கள் செவ்வாய் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு 43 பரல்கள். லக்னத்தில் 22 பரல்கள், 7ஆம் இடத்தில் 28 பரல்கள் என்ற விவரங்களை படித்த பிறகு மனைவி வந்த பிறகுதான் பொருளாதார முன்னேற்றம் என்று சொன்னதன் காரணம் புரிந்தது.
    ஒருவருக்கு எல்லா பாக்கியமும் கண்டிப்பாக கிடைத்திருக்காது என்ற அடிப்படை விதியை வைத்து பார்க்கும்போது 2ஆம் வீடு விருச்சிகத்தில் சுக்ரன் இருக்கிறது.
    ///////பணத்திற்கான இடம் அது (House of finance)
    குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது (House of Family)
    அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)/////
    சிறு வயதில் எக்குத்தப்பாக அடுத்தவர் மனம் புண்படும் வகையில் எதையாவது பேசி வாங்கிக்கட்டிக்கொள்வது சகஜமாக இருந்தது. ஆனால் கல்லூரிப் படிப்புக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சம் பக்குவம் ஏற்பட்டு முடிந்த வரை வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவதால் முன்பைப் போல் சிக்கல் இல்லை.
    எழுத்தில் திறமை இருக்கிறது. (அதை நான் சரியாக பயன்படுத்துவதில்லை. அது வேறு விஷயம்).
    அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)---இது ஓ.கே.
    எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்றால் அடிவாங்கும் இலாக்கா எது.?
    பணத்திற்கான இடம் அது (House of finance)----இதுதான்.
    இப்போது 1000 ரூபாய் வருவதற்குள் 2000 ஆயிரம் ரூபாய்க்கு செலவு முதல் நாளே வினியோகமாகி முடிந்து விடுகிறது. விளைவு, மற்றவர் 500 ரூபாய் செலவு செய்யும் விஷயத்திற்கு என் பாக்கெட்டில் இருந்து 1000 ரூபாய் கரைந்து விடுகிறது.
    அதற்கு காரணம் என்ன.
    நவாம்சத்தில் மிதுன லக்னம். அதற்கு இரண்டாம் வீடான கடகத்தில் சுக்ரனுடன் ராகு கூட்டணி போட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்குமோ?
    அடுத்த பாடங்களை நன்றாக படிக்கவேண்டும்./////

    ”சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற பாடலைத் தெரியுமா?
    பாடங்களைப் படிப்பது மற்றுமின்றி மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஏற்றி வைத்தால்தான் (மக்கப் செய்தால்தான்) ஒரு தெளிவு பிறக்கும்

    ReplyDelete
  10. /////Blogger saravanan said...
    அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
    இன்றைய பாப்கார்ன் பழைய பாடத்திலும் உள்ளது.
    ஒரு ரெப்ரெஷ் போல இருந்தது படிப்பதற்கு.
    எனக்கும் ராசிப்படி இரண்டில் சனி & சூரியன்.
    6th ஹவுஸ் உச்ச குரு....மறைவிடம்...ஆனால் இரண்டாம் வீட்டை பார்க்கிறார்.
    நவாம்சத்தில் சனி துலாமில் உச்சம் ,,,
    சூரியன் மகரம் வீட்டில்...குரு அதே கடகத்தில் ...
    கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு...
    போக போக புரியும் என்று நினைக்கிறேன்.
    நன்றி பல கோடிகள் அய்யா
    பணிவுடன்
    ரா.சரவணன்/////

    ஆமாம், படிக்கப் படிக்கத்தான் தெளிவாகும்!

    ReplyDelete
  11. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்,முதலில் இன்றைய படம் அருமை.மலையே பெருமாளாய்,மெய்சிலிர்த்தது.அடுத்து பாடம் சிம்ளிசூப்பர்.தங்கும் என்றால் தங்கும்,இல்லை என்றால் இல்லை.நன்றிகள்.////

    வரும் என்றால் வரும்
    வராது என்றால் வராது!

    ReplyDelete
  13. ////Blogger அய்யர் said...
    இந்த விளையாட்டு
    ரொம்ப பிடிச்சிருக்கு...//////

    இதுவரை தெரியாமல் போய்விட்டதே!

    ReplyDelete
  14. Blogger nsrajesh said...
    sir, just started studying the lessons. so just a doubt "is rajini have -kala sarpa dosham-?? "//////

    ஆமாம், அது சந்தேகமில்லாமல் காலசர்ப்ப தோஷம் Cum யோக ஜாதகம்!

    ReplyDelete
  15. Blogger தேமொழி said...
    மற்றுமொரு இரண்டில் சனி உள்ளவர் திருபாய் அம்பானி.
    இவர்கள் எல்லாம் என்னைக் குழப்புவதற்கே இருப்பவர்கள்.
    படித்த பொது விதிப்படி அப்படியே இருக்கிறதே ஆச்சரியப் பட விடமாட்டார்கள்.
    (அம்பானிக்கு லக்கினத்தில் சூரிய சந்திரன், பத்தில் குரு, ஆனால் ரஜினி போல இல்லாமல் சுக்கிரனும் புதனும் பன்னிரண்டில் மறைவு, அத்துடன் காலசர்ப்ப தோஷ ஜாதகம் )
    திருமலை படம் ஃபோட்டோஷாப் ஆக இல்லாதிருக்குமானால் வியப்பிற்குரிய ஒன்றுதான். நான் இதுவரை பார்த்ததில்லை.
    பதிவிற்கும் படத்திற்கும் நன்றி ஐயா./////

    காலசர்ப்ப தோஷ ஜாதகர்களுக்கு, அத்தோஷம் முடிந்து யோகமாக மாறும் போது, விதி எங்கேயோ கொண்டு போய் எற்றிவைத்துவிடும். ஏற்றிவிடும் உயரத்தின் அளவு அவர்கள் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் மேன்மையைப் பொறுத்து மாறும்!

    ReplyDelete
  16. /////Blogger arul said...
    nice lesson/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger அமுதா கிருஷ்ணா said...
    என் மகன் நகுல் ராமிற்கு இரண்டில் சனி.இரண்டாம் அதிபதி குரு ராசி,அம்சம் இரண்டிலும் 9-ல் உச்சம். ராசியில் குருவானவர் சூரியன்,கேதுவுடன் அமர்ந்து இருக்கிறார்.விருச்சிக லக்னம்,விருச்சிக ராசி.இது வரை கையில் கிடைத்த பணத்தை எல்லாம் நல்லா செலவு செய்து கொண்டே இருக்கிறான். இனியாவது கையில் தங்குதா என்று பார்க்கலாம்.//////

    சுபகிரகங்களின் தசா புத்திகளில் மாற்றங்கள் ஏற்படும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா!

    இங்கு ஒன்றை கூறிக்கொள்ள விருப்புகின்றேன் ஐயா!

    ஐயா! தங்களிடம் ஒன்றை கூறியுள்ளேன் முன்னாடி ஐயா!

    அதற்கும் பொன்னை போன்ற மனதை உடைய தாங்களும் எல்லா
    ஏற்பாடுகளும் அழைப்பிதழும் வந்த உடன் அழைப்பிதழை ஸ்கேன் செய்து அனுப்புங்கள் நாம் நமது வகுப்பறையில் ஏற்றலாம் என்றும் கூறி இருந்திர்கள் ஐயா!

    அடியவனும் எம்முடைய திருப்பதிக்கு அழைத்து செல்லும் குருநாதரிடம் தற்சமயம் தான் பேசி விட்டு இந்த மென் பொருள் கடிதத்தை அனுப்புகின்றேன் ஐயா!

    மூன்று ஆயிரத்திற்கு மேல் உள்ள தங்களின் வகுப்பறையில் ஐந்தோ அல்லது பத்தோ சாமிகள் இருந்தால் இந்த வருடம் சமாளித்து விடலாம். ஆனால், அளவிற்கு அதிகமாக வந்தால் என்ன செய்வது என்று குரு நாதர் மிகவும் சிந்திக்கின்றார் ஐயா!

    " தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாகி விட கூடாது ",

    என்பது குரு நாதரின் விருப்பம் ஐயா!

    ஆதலால் இந்த வருடம் தாங்கள்
    (என்னை)வாருங்கள் ஒரு சாமிக்கு அனைத்து விதமான பொருட்கள் வாங்க தலைக்கு ரூபாய் 400 மேலும் வசதி வாய்ப்பு உள்ள நபர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நன்கொடையாக
    ( கைகாரியம் பணமாக, அல்லது பொருளாக ) கொடுத்தால் அதனை அடியார்களாக வருபவருக்கு

    " ஏழு மலையானின் கருனைப்படி ", எல்லா வசதியும்

    (சாப்பாடு,குடிநீர்,முதல் அனைத்து விதமான வசதிகளும்)செய்து
    கொடுப்போம் அவர்களுக்கு எல்லாம் வல்லஏழு மலையானின்
    அருள் கிட்டும் என்று கூறினார்.

    2007 or 2008 பாத யாத்திரையாக சென்றது அதன் பின்னர் எத்தனையோ முறை முயற்சி செய்தும் கடந்த நான்கு வருடமாக செல்ல முடியவில்லை என்பதனை விட

    " பெருமாள் ",

    அழைக்கவில்லை என்பததுதான் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன் ஐயா!.இந்த வருடம் அடியவனால் முடிந்த அளவிற்கு ரூபாய் 5,001.௦௦ கொடுத்து உள்ளேன் ஐயா.

    இந்த பணத்தை மற்றும் விபரத்தை இங்கு கூற காரணம் உண்டு . 2007 நடப்பு ஆண்டில் அடியவன் திருவனந்தபுரம் விமான தளத்தில் ஒரு ஐந்து வருடம் பனி செய்தேன்.

    (அதாவது நான் வேலை பார்த்த நிருபனத்தின் வாடிக்கையாளர் திருவனந்தபுரம் விமானதளம் ஆகும்) ஐயா!

    மேனேசர் முதல் ( ஏலேக்ட்ரோநிக்ஸ் சம்பந்தம் ஆன வேலை ) அனைத்தும் நானே ஆகும் அங்கு.

    அப்பொழுது எம்பெருமாள் ஏழு குண்டலவாலன்! வெங்கட்டு ரமணன் ! கோவிந்தா! கோவிந்தாவின் இறை அருளின் அருளால் திரு அனந்த பத்மசுவாமியின் பாதம் உள்ளதற்கு கிழக்கு புரமாகதான் கண்ணனின் பாதம் உள்ள இடைத்தை தாண்டிதான் அடியவன் தங்கி இருந்த இடம் இருந்தது.

    ReplyDelete
  19. good evening sir,
    present sir,
    Thanks for ur lesson si.

    ReplyDelete
  20. நித்தமும் அதிகாலை

    " பிதாமகர் பீஷ்மர் ",
    அருளிய

    " விஷ்ணு சஹஸ்ரநாம
    ஸ்தோத்திரதத்தை யும்,

    " ஸ்ரீ சுத்தம்",

    " விஷ்ணு சுத்ததை", யும்

    " சாஸ்திரிகள் "

    உடன் இருந்து திரு அனந்த பத்மநாபனின் அருகில் உள்ள மற்றொரு கண்ணனின் சுவாமி முன்னர் இருந்து பாராயணம் செய்வது அல்லது கூறுவது உண்டு ஐயா!

    அப்பொழுது சிறிது மாதங்கள் போகிய பின்னர் கேரளாவில் ( சேர நாட்டில் ) கோவிலுக்கு உள்ளே செல்லுவது என்றால் ஆண்கள் மேல் உடுப்பை
    ( சட்டையை, பனியனை) கழற்றி வைத்து விட்டுதான் செல்ல வேண்டும் ஆதலால் இடுப்புக்கு கிழே ஒரு வேஷ்டி , இடுப்பிற்கு மேலே மிகவும் பெரிய துண்டை உடுத்தி கொண்டு செல்லுவதுதான் என்னுடைய வழக்கமாக இருந்தது.

    அதிகாலை வேலை முடிந்த பின்னர் 09:00 AM க்கு ஏர்போர்ட் க்கு செல்லுவது வழக்கம்.

    ஏர்போர்ட்டில் எலக்ட்ரோனிக்ஸ் டிபார்ட்மென்ட் உள்ள சுவாமியின் போட்டோ, பயர் கண்ட்ரோல் ரூமில் உள்ள சுவாமியின் போட்டோ மற்றும் ஏலேக்ட்ரோநிக்க்ஸ் லேப் உள்ள இடத்தில உள்ள போட்டோ எல்லாவற்றிற்கும் சென்பருத்தி பூவை பறித்துக்கொண்டு போகி போட்டோவை சுத்தம் செய்து பத்தி கொளுத்தி பூ வைத்த விளக்கு ஏற்றி பிராத்தினை செய்வத பின்னர் தான் மற்ற வேலைகள் எல்லாமும் ஆகும் ஐயா. .

    என்னுடைய இந்த நடவடிக்கையை பார்த்த ஒரு மலையாளி சார்!
    ( DGM Civil தற்பொழுது சென்னை ஏர்போர்ட்டில் உள்ளார்கள்) அவர்கள் என்னிடம் எதோ ஒரு தற்செயலாக திருப்பதிக்கு நாங்கள் போகின்றோம் என்றார். அப்பொழுது சார் நானும் வரட்டுமா என்று தான் கேட்டேன் . சார் கூறினார் விரதம் 41 நாங்களுக்கு இருக்கணுமே கண்ணா என்றார்கள் .

    நான் கூறினேன் சார் 1997 may or june முதல் இன்று அல்ல இந்த நொடி வரைக்கும் காப்பி , மற்றும் டி , முட்டை என எதுவும் சாப்பிட்டது கிடையாது சார் அணு அளவிற்கு கூட சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது என்றேன் இன்னமும் மனதில் உள்ளதது மேற்கண்டு கூறியதது ஆகும் .

    மேலும் நான் மகாராஷ்ட்ராவில் உள்ள பொழுது

    "ஏழு ஏழு தலை முறைக்கு சத்திரியர்களை வதம் செய்வேன்",

    என்று கூறி வதம் செய்த

    " பகவான் பரசுராமர் : அக்னி பகவானை வேண்டி காலை மற்றும் மாலை வேலையில் பூஜை புனக்காரம் எல்லாம் பரசுராமர் செய்தது போல செய்ததை கூறினேன் .

    ( மகாபாரதத்தில் " கர்ணனுக்கு பத்மாச்ரம் ",

    சொல்லி கொடுத்த பின்னர் கர்ணனின் வினை பயனாக பயன் இல்லாமல் போகட்டும் என்று சாபம் இட்ட அதே இடத்தில் பரசுராமர் செய்த பூஜை ஆகும் .

    "கர்ண வள்ளலுக்கே கிட்டாத ஒரு மாபெரும் பாக்கியம்", அடியவனுக்கு கிடைத்ததை நினைத்தால் இன்றும் மனதிற்கு மிகவும் சந்தோசம் , மிகவும் கௌரமாக இருக்கும். )


    அவ்வளவி தான் பாத யாத்திரைக்கு தகுதி ஆனேன்,அதாவது என்னை கூப்பிட்ட சார் மற்றும் fire ஸ்டேஷன் நில் வேலை பார்த்த சார்! மற்று ஒரு சார் கல்கத்தா ஏற்போர்டில் ஒரு சார் வந்தார்கள்.

    இதனில் முக்கால் வாசி நாய்டு சமுகத்தை சார்ந்த நபர்கள் ஆகும். இதனை எல்லாம் ஏன் கூறுகின்றேன் என்றால் இதனை பார்த்து உண்மையிலே பக்தி உள்ளவருக்கு

    ( இறைவன் எங்கு இருந்தாலும் அருள் புரிவான் என்பது சத்தியம் ஆகும்)

    varanum என்றால் . வரும் ஜூலை மாதம் 21 ம் தேதி காலையில் பாத யாத்திரை சென்னை நங்கநல்லூரில்
    (meenampaakkam உள்ள ஒரு மடத்த்தில் இருந்து தொடக்கம் ஆகும்.

    ReplyDelete
  21. iyaa!

    வகுப்பில் மிகவும் குறிப்பிட்டு கூற காரணம் வகுப்பறைக்கு வரும் நபர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இல்லை.

    உலகம் முழுவது உள்ளார்கள், என்னை போல செல்லுவதற்கு மனம் இருந்து எப்படி செல்லுவது என்பது தெரியாமல் இருக்க கூடும்.


    எனக்கு

    " கோவிந்தன் "
    ஒரு மலையாளி

    " ஸ்ரீ குமார் ஐயா ",

    மூலம் வழி காட்டியது போல மற்றவருக்கு இந்த தகவல் சரியாக பயன் ஆக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

    எவருக்கும் வர விருப்பம் இருப்பின் வரும் ஜூலை 21 க்குள் தங்களுடைய விருப்பத்தை ஐயாவின் e-mail id அனுப்புங்கள்.

    ஐயா என்னுடைய e-mail id யை தருவார்கள் . இங்கு என்னுடைய e-mail id தராததிற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்பது என்னுடைய எண்ணம் ஆகும்.

    வாத்தியார் ஐயா அனுமதி பெறாமல் வாத்தியாரின் e-mail id கூற காரணம் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைக்கும் மனிதர் இல்லை என்பது என்னுடைய எண்ணம் ஆகும் . ஐயா உடைய e-mail id வகுப்பறைக்கு வரும் அனைவருக்கும் தெரியும் . ஐயா எப்படி தான் எல்லாவற்றையும் சமாளிக்கின்ராரோ அவருக்கு தான் அதனுடைய கஷ்டபாடு தெரியும்.

    உடல், மனது , தான் சுகமாக வாழ வேண்ட்டும் என்பதற்காக வாழும் பெரும் கூட்டம் உள்ள உலகில் வேறு ஒரு வாக்கில் கூறுவது என்றால் " நோகாமல் நொங்கு தின்னும் கூட்டம் ", உள்ள உலகில் தனது e-mail id தந்து விட்டு தேவை இல்லாத மெயில் லை நிக்குவது என்பது மிகப்பெரிய சாதனை தான் இல்லையா ஐயா ?

    மிகவும் முக்கியமான பதில் வாத்தியார் ஐயாவிற்கு.

    நேற்றைய பதிலில் கூறி உள்ளீர்கள் .


    ஐயா !
    எனக்கு நல்ல நேரம் வரும்போது - உங்களுக்கெல்லாம் ஜோதிடப் பாடத்தில் ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, நேரத்தை வீணடிக்கும், எழுத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு, வகுப்பறையைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை உங்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருவர் அல்லது மூவரிடம் (கூட்டு நிர்வாகம்) கொடுத்துவிட்டு விடைபெறலாம் என்றுள்ளேன்.

    ஐயா இந்த விளையாட்டுக்கு எல்லாம் நான் வரவில்லை ஐயா ! வர வில்லை ! நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதிற்காக இறைவனை வேண்டுவதற்கு டீன் ஏஜ் - க்கு முன்னர் மற்றும் பின்னர் உள்ள எல்லா நண்பர்களும் ஏன் பெரிய பெரிய அதிகாரிகள் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் எமக்கு வைத்து உள்ள பெயர் ஸ்வாமிசி ஆகும் . இதனில் இது வேறையா ? ராமருக்கு அணில் உதவியதை போல உங்களுக்கு உதவகூட இல்லை அதற்காக இவ்வளவி பெரிய தண்டனையா ஐயா தண்டனையா?

    என்றும் தங்களின் மாணவனாகவே இருக்க வேண்டுகின்றேன் எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு நன்றி ஐயா நன்றி!.

    ReplyDelete
  22. வகுப்பில் மிகவும் குறிப்பிட்டு கூற காரணம் வகுப்பறைக்கு வரும் நபர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இல்லை , உலகம் முழுவது உள்ளார்கள்,முன்னர் என்னை போல செல்லுவதற்கு மனம் இருந்து எப்படி செல்லுவது என்பது தெரியாமல் இருக்க கூடும்.


    எனக்கு " கோவிந்தன் " ஒரு மலையாளி " ஸ்ரீ குமார் ஐயா ", மூலம் வழி காட்டியது போல மற்றவருக்கு இந்த தகவல் சரியாக பயன் ஆக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.. எவருக்கும் வர விருப்பம் இருப்பின் வரும் ஜூலை 11 க்குள் தங்களுடைய விருப்பத்தை ஐயாவின் e-mail id அனுப்புங்கள் ஐயா என்னுடைய e-mail id யை தருவார்கள் . இங்கு என்னுடைய e-mail id தராததிற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்பது என்னுடைய எண்ணம் ஆகும். 21 தேதி அதிகாலையில் பயணம் .

    வாத்தியார் ஐயா அனுமதி பெறாமல் வாத்தியாரின் e-mail id கூற காரணம் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைக்கும் மனிதர் இல்லை என்பது என்னுடைய எண்ணம் ஆகும் . ஐயா உடைய e-mail id வகுப்பறைக்கு வரும் அனைவருக்கும் தெரியும் . ஐயா எப்படி தான் எல்லாவற்றையும் சமாளிக்கின்ராரோ அவருக்கு தான் அதனுடைய கஷ்டபாடு தெரியும்.

    உடல், மனது , தான் சுகமாக வாழ வேண்ட்டும் என்பதற்காக வாழும் பெரும் கூட்டம் உள்ள உலகில் வேறு ஒரு வாக்கில் கூறுவது என்றால் " நோகாமல் நொங்கு தின்னும் கூட்டம் ", உள்ள உலகில் தனது e-mail id தந்து விட்டு தேவை இல்லாத மெயில் லை நீக்குவது என்பது மிகப்பெரிய சாதனை தான் இல்லையா ஐயா ?

    மிகவும் முக்கியமான பதில் வாத்தியார் ஐயாவிற்கு.

    நேற்றைய பதிலில் கூறி உள்ளீர்கள் .
    ஐயா !
    எனக்கு நல்ல நேரம் வரும்போது - உங்களுக்கெல்லாம் ஜோதிடப் பாடத்தில் ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, நேரத்தை வீணடிக்கும், எழுத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு, வகுப்பறையைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை உங்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருவர் அல்லது மூவரிடம் (கூட்டு நிர்வாகம்) கொடுத்துவிட்டு விடைபெறலாம் என்றுள்ளேன்.

    ஐயா இந்த விளையாட்டுக்கு எல்லாம் நான் வரவில்லை ஐயா ! வர வில்லை ! நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதிற்காக இறைவனை வேண்டுவதற்கு டீன் ஏஜ் - க்கு முன்னர் மற்றும் பின்னர் உள்ள எல்லா நண்பர்களும் ஏன் பெரிய பெரிய அதிகாரிகள் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் எமக்கு வைத்து உள்ள பெயர் ஸ்வாமிசி ஆகும் . இதனில் இது வேறையா ? ராமருக்கு அணில் உதவியதை போல உங்களுக்கு உதவகூட இல்லை அதற்காக இவ்வளவி பெரிய தண்டனையா ஐயா தண்டனையா?

    என்றும் தங்களின் மாணவனாகவே இருக்க வேண்டுகின்றேன் எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு நன்றி ஐயா நன்றி!.
    --

    ஒன்றை மட்டும் மிகவும் அனைவரும் புரியும் அல்லது தெளிவி படும் வகையில் கூறுகின்றேன் . இந்த வகுப்பிற்கு வரும் நபர்கள் எல்லாம் ஒரு அளவிற்கு வசதி படைத்தவர்கள் தான் இருக்கும் இருக்க வேண்டும் , இன்னும் சொல்ல போனால் வாழ்கையில் மிகவும் அடி பட்டவர்கள் ஆகத்தான் இருக்கும் .

    ReplyDelete
  23. திருமலா திருப்பதி செல்ல கடை பிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் கிழே கொடுக்கப்பட்டு இருக்கு.

    1) இறைவனை மனதார உருகி ஆனந்த கண்ணிர் வரும் அளவிற்கு வேண்டிகிட்டு துளசி மாலை அல்லது தங்கத்தில் இறைவன் உள்ள டாலரை அணிந்து கொள்ளுங்கள் மனதார.

    2) மொத்தம் 170 KM க்கு மேல் வரும் நாம் செல்லும் தூரம் .

    3) ஐந்து ( 5) பகல், 4 ராத்திரி 5 வது ராத்திரி திரு மலையை அடைந்து விடுவோம்,

    4) ஒரு நாளைக்கு சுமார் 40 to 45 km வரும் .

    5) தற்பொழுது எல்லோருடைய பாதங்களும் சிறு குழந்தைகளுக்கு உள்ளது போல irukkum.
    கணினி உலகம் . ஆதலால் செருப்பு போட்டு கொண்டு வாருங்கள்.
    ( நன்கு செருப்பை போட்டு பழகிய மிகவும் எடை குறைந்த செருப்பாக இருந்தால் மிகவும் சிறப்பு தங்களுக்கு .)

    6) தரிசன டிக்கெட் கீல் திருபதியில் அதிகாலை 05 ;00 AM கிடைக்கும் என்று கூறினார்கள் RS = 50 ஆகும்

    7) திருப்பதி கால் சென்டரில் கேட்ட பொழுது மேல் திருபதியில் RS 300:00 கிடைக்கும் என்றார்கள்,

    8) மேலும் அங்க பிரசனம் செய்தால் அதிகாலை 01:00 AM குளத்தில் குளித்து விட்டு தனி வரிசையில் நிற்க வேண்டும் அப்படி செய்தால் அதிகாலை 04:00 ஆண்டவனின் தரிசனம் கிடைக்கும்

    9) 2007 to 2008 என்று நினைக்கின்றேன் சரியாக ஞாபகம் இல்லை மன்னிக்கவும். அபொழுது 85 வயதை தாண்டிய முதியவர் எங்கள் கூடவே வந்தார் என்றால் அவருடைய பக்தியின் ஆழத்தை பாருங்கள்.

    10 ) கை குழந்தைகள், குமரிகள், பெரிய பெண்கள், மேலும் கணவன் மனைவியாக என நிறைய நபர்கள் வருவார்ர்கள்,

    11 ) முழுக்க முழுக்க பாதுகாப்பு உள்ள நபர்கள் .

    12 ) பெரிய பெரிய செல்வந்தர் வீட்டு ஆள்கள், ஹை லெவலில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்க இடம் கொடுக்கும் நபர்கள் எல்லாம் பெரும் பெரும் செல்வந்தர்கள் . முழுக்க முழுக்க மனிதாபிவம்மான புனித புண்ணிய யாத்திரை.

    13) ஒரு வேலை சாப்பாட்டு பிரச்சினை வந்தால் 5 நாட்களுக்கு 500: 00 அல்லது 1000: தான் செலவாகும் .

    14) வெங்கடாசலபதியின் அருள் இல்லை எனில் எல்வலவிர்க்குதான் முயற்சி செய்தாலும் பேரு ஆனந்த தரிசனம் கிடைக்காது.

    15) யார் யாரெல்லாம் வரணும் யார் யார் எல்லாம் வரகூடாது என்பதற்கு தலையில் எழுதுகின்றவன் " மாயக்கண்ணன் "!ஆட்சே
    16 ) கர்மதிர்க்காக ஊரு பலியை தானே சுமந்து மற்றவரை காப்பாற்றுகின்ற ஒரே ஒரு தெய்வம் என்றால் அது " மாய கண்ணனே!

    மாணிக்க வாசகர் திருவாசகத்தில் கூறி உள்ளது போல புல்லாகி , பூடும் ஆகி, புழுவாகி, பல் மிருகம் ஆகி, பறவையாக ஆகி, பாம்பும் ஆகி, கல்லாகி, மனிதராகி , பேயாகி, கணங்களாகி, வால் அசுரர் ஆகி, முனிவராய் ஆகி , தேவராய் எல்லா பிறப்பும் பிரிந்து எலைத்தேன் எம்பெருமானே !

    நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் ,
    அன்பே மஞ்சன நீர் பூஜை கொள்ள வாராய் பராபரமே
    அன்பர் பனி செய்ய என்னை ஆளாக்கி விட்டால்
    இன்ப நிலை தானே வந்து விடும் பராபரமே.!

    நன்றி ஐயா!.



    Life is beautiful !!!

    ¨`•.•´¨) Always
    `•.¸(¨`•.•´¨) Keep
    (¨`•.•´¨)¸.•´ Smiling!
    `•.¸.•

    Thanks & Reg
    Kannan Seetharaman
    Qatar + 974 66762664

    ReplyDelete
  24. கண்ணன்...
    தொகையை யாருக்கு எப்படி அனுப்ப வேண்டும் என சொன்னால் உரியவருக்கு உரிய தொகை சென்று சேரும் அல்லவா..?

    அதனை குறித்து
    அன்புடன் எழுதுவீர்களா..

    இந்தியா உங்களை
    அன்புடன் வரவேற்கிறது..

    வழக்கம் போல்
    வற்றாத அன்புடன்..

    ReplyDelete
  25. எனக்கு 2ல் சனிதான். கூடவே சூரியன் ஆட்சியில் ப்ஹுடனும் இரண்டில். ஒகோ என்று பணம் வரவில்லை என்றாலும், கையில் தங்குவதும் இல்லை.செலவு வந்தால் கூடவே வரவும் வந்து 'பாலன்ஸ்' ஆகிவிடுகிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com