மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.6.12

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி மூன்று!

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரண மடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.

எங்கே பார்க்க முடியும்?

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் (Daily Sheet Calenders) குறிப்பிட்டு இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

45 comments:

  1. நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் ஐயா. பழைய பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்டிருந்ததை கவனித்து முக்கியமாக மரண யோகத்தில், செவ்வாய்க்கிழமையில் அசுப ஓரைகளில் நான் கடனை திருப்பிச்செலுத்திப் பார்த்தேன். அதன் பிறகு அந்தக்கடன்கள் முன்பு இருந்ததை விட வேகமான விகிதத்தில் குறைவதை உணர முடிகிறது.

    பாப்கார்ன் பதிவு சுருங்கச் சொல்லி நிறைவாக விளங்க வைக்கிறது. நுனிப்புல் மேய்பவருக்கு கூட நன்றாக விளங்கும்.

    ReplyDelete
  2. பஞ்சாங்கத்தைக் கொண்டு யோகங்களை அறிந்து செயல்களை செய்வது குறித்து வழிகாட்டியமைக்கு நன்றி ஐயா,வணக்கம்!

    ReplyDelete
  3. பாப்கார்ன் பதிவு அருமை. வேண்டுமென்றே மரணயோகத்தில் செய்த திருமணமொன்று வேகமாக முறிந்ததைக் கண்முன் கண்டிருக்கிறேன்.

    வெளியூர்ப் பயணம் கிளம்ப நேரிடும் போது, வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தில் மரணயோகம் வந்தால், (சில நாட்கள், சித்த, அமிர்த யோகங்களோடு மரணயோகமும் சேர்ந்திருக்குமே அன்று), நல்ல யோகம் இருக்கும் நேரத்தில், பயணத்தின் போது உடன் எடுத்துப் போகும், லக்கேஜ்களில் ஒன்றை, வீட்டு வாசலில் அல்லது பக்கத்து வீட்டில் வைத்து, பின் எடுத்துப் போவார்கள். இன்றைய ஃபாஸ்ட் புட் கலாசார உலகில் இம்மாதிரி மின்னல் வேகப் பதிவு சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி

    ReplyDelete
  5. காலத்திற்கேற்ற பதிவு.எல்லாமே வேகமாக போகும் போது வகுப்பறையின் பாடமும் வேகமாக போகிறது.ராகு காலத்தையும் ஹோரையையும் நான் தேவையான பொழுதில் பயன் படுத்துகிறேன். என் நண்பர் ஒருவர் ராகு காலத்தில் தோலை பேசியைகூட ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவார்.

    ReplyDelete
  6. ////மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.///

    ஆகா.. அப்படியா..
    அ்ப்போ
    மரணயோகத்தில் தான் வங்கியில் இருந்து கடன் வாங்கனும்...

    ReplyDelete
  7. அய்யர் said...
    ////மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.///

    ஆகா.. அப்படியா..
    அ்ப்போ
    மரணயோகத்தில் தான் வங்கியில் இருந்து கடன் வாங்கனும்...

    மரண "யோகத்தில்" கடன் கொடுத்தால் திரும்பவராது?எந்த "யோகத்தில்" கடன் வாங்கினால் திரும்ப கொடுக்க தேவையில்லை.அதையும் சொன்னால் உப"யோகமாக"மாகா இருக்கும்.

    ReplyDelete
  8. இன்றைய பதிவும் நச்சென்று இருந்தது. நன்றி சார்!

    ReplyDelete
  9. மரண "யோகத்தில்" கடன் கொடுத்தால் திரும்பவராது?எந்த "யோகத்தில்" கடன் வாங்கினால் திரும்ப கொடுக்க தேவையில்லை.அதையும் சொன்னால் உப"யோகமாக"மாகா இருக்கும்.//

    அதான் இதுலயே பதில் இருக்கில்ல? மரணயோகத்துல பேங்க் உங்களுக்கு கடன் கொடுத்தா அவங்களுக்கு திரும்ப வராது, அதாவது நீங்க திருப்பி கொடுக்க மாட்டீங்க அல்லது தேவையிருக்காது. (ஒரு முடிவோட நிறைய பேர் சுத்தற மாதிரி தெரியுது, ரிசர்வ் பேங்க்கிற்கு சொல்லி மரணயோகத்துல யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு அறிக்கை எல்லா வங்கிகளுக்கும் அனுப்பச் சொல்லணும்!!!!)

    ReplyDelete
  10. பாப்கார்ன் பதிவு அருமை. வேண்டுமென்றே மரணயோகத்தில் செய்த திருமணமொன்று வேகமாக முறிந்ததைக் கண்முன் கண்டிருக்கிறேன்.//

    பார்வதி, இதே மாதிரி ஒரு முற்போக்குவாதி வேண்டுமென்றே அசுப நாள், நேரத்தில் ஒரு படத் தயாரிப்பைத் தொடங்கி அதுவும் ஊற்றிக்கொண்டுவிட்டது.

    ReplyDelete
  11. என் நண்பர் ஒருவர் ராகு காலத்தில் தோலை பேசியைகூட ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவார்.//

    இது ரொம்ப ஓவர்!

    ReplyDelete
  12. திருக்குறள் பதிவு.
    ''தும்மாத்துண்டு என்றாலும் எம்மாம் பெரிய விஷயத்தை குறித்தது'' என்பதாக,
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  13. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  14. // மரணயோகத்துல பேங்க் உங்களுக்கு கடன் கொடுத்தா அவங்களுக்கு திரும்ப வராது, அதாவது நீங்க திருப்பி கொடுக்க மாட்டீங்க அல்லது தேவையிருக்காது. (ஒரு முடிவோட நிறைய பேர் சுத்தற மாதிரி தெரியுது, ரிசர்வ் பேங்க்கிற்கு சொல்லி மரணயோகத்துல யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு அறிக்கை எல்லா வங்கிகளுக்கும் அனுப்பச் சொல்லணும்!!!!)//

    உமாஜி, கவலையே பட வேண்டாம். இப்பொழுதெல்லாம் ஒரு SMS மற்றும் ரிமைண்ட்ர் கொடுத்துவிட்டு கடனை வசூலிக்க ரெக்கவரி ஆட்களை அனுப்பலாம். ரெக்கவரி ஆட்கள் என்றால் யம தூதர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
  15. ரெக்கவரி ஆட்கள் என்றால் யம தூதர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?//

    யமதூதர்களை நேரிலேயே சந்திச்ச அனுபவம் இருக்கு போலிருக்கே??????!!!!!!!

    ReplyDelete
  16. ஐயோ! எனக்கு இல்லை. எங்கள் வாடிக்கையாளர்களை பற்றி சொன்னேன். நீங்கள் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை என்றதும் அந்த சர்குலர் ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
  17. ஸ்ரீகணேஷ், பாவம் உங்க வாடிக்கையாளர்கள், விட்டுடுங்க!!!!

    ReplyDelete
  18. /////Blogger சரண் said...
    நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் ஐயா. பழைய பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்டிருந்ததை கவனித்து முக்கியமாக மரண யோகத்தில், செவ்வாய்க்கிழமையில் அசுப ஓரைகளில் நான் கடனை திருப்பிச்செலுத்திப் பார்த்தேன். அதன் பிறகு அந்தக்கடன்கள் முன்பு இருந்ததை விட வேகமான விகிதத்தில் குறைவதை உணர முடிகிறது.
    பாப்கார்ன் பதிவு சுருங்கச் சொல்லி நிறைவாக விளங்க வைக்கிறது. நுனிப்புல் மேய்பவருக்கு கூட நன்றாக விளங்கும்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    பஞ்சாங்கத்தைக் கொண்டு யோகங்களை அறிந்து செயல்களை செய்வது குறித்து வழிகாட்டியமைக்கு நன்றி ஐயா,வணக்கம்!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Parvathy Ramachandran said...
    பாப்கார்ன் பதிவு அருமை. வேண்டுமென்றே மரணயோகத்தில் செய்த திருமணமொன்று வேகமாக முறிந்ததைக் கண்முன் கண்டிருக்கிறேன்.
    வெளியூர்ப் பயணம் கிளம்ப நேரிடும் போது, வீட்டிலிருந்து புறப்படும் நேரத்தில் மரணயோகம் வந்தால், (சில நாட்கள், சித்த, அமிர்த யோகங்களோடு மரணயோகமும் சேர்ந்திருக்குமே அன்று), நல்ல யோகம் இருக்கும் நேரத்தில், பயணத்தின் போது உடன் எடுத்துப் போகும், லக்கேஜ்களில் ஒன்றை, வீட்டு வாசலில் அல்லது பக்கத்து வீட்டில் வைத்து, பின் எடுத்துப் போவார்கள். இன்றைய ஃபாஸ்ட் புட் கலாசார உலகில் இம்மாதிரி மின்னல் வேகப் பதிவு சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  22. ////Blogger thanusu said...
    காலத்திற்கேற்ற பதிவு.எல்லாமே வேகமாக போகும் போது வகுப்பறையின் பாடமும் வேகமாக போகிறது.ராகு காலத்தையும் ஹோரையையும் நான் தேவையான பொழுதில் பயன் படுத்துகிறேன். என் நண்பர் ஒருவர் ராகு காலத்தில் தோலை பேசியைகூட ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவார்./////

    அவருக்கு என்ன அனுபவமோ! அவர் செய்வது அவரைப் பொறுத்தவரை சரிதான்!

    ReplyDelete
  23. ////Blogger அய்யர் said...
    ////மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.///
    ஆகா.. அப்படியா..
    அ்ப்போ
    மரணயோகத்தில் தான் வங்கியில் இருந்து கடன் வாங்கணும்.../////

    கடன் வாங்காத நிலை வேண்டும். அதை நமக்கு பழநியப்பன் அருள்வானாக!

    ReplyDelete
  24. ////Blogger Ananthamurugan said...
    அய்யர் said...
    ////மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.///
    ஆகா.. அப்படியா..
    அ்ப்போ
    மரணயோகத்தில் தான் வங்கியில் இருந்து கடன் வாங்கனும்...
    மரண "யோகத்தில்" கடன் கொடுத்தால் திரும்பவராது?எந்த "யோகத்தில்" கடன் வாங்கினால் திரும்ப கொடுக்க தேவையில்லை.அதையும் சொன்னால் உப"யோகமாக"மாகா இருக்கும்./////

    கடன் வாங்காத நிலை வேண்டும். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில், தர்மம் செய்யக்கூடிய நிலையில் நமக்கு பணவரவு இருக்க வேண்டும். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் ஆனந்தமுருகன்!

    ReplyDelete
  25. ////Blogger Uma said...
    இன்றைய பதிவும் நச்சென்று இருந்தது. நன்றி சார்!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. //////Blogger Uma said...
    மரண "யோகத்தில்" கடன் கொடுத்தால் திரும்பவராது?எந்த "யோகத்தில்" கடன் வாங்கினால் திரும்ப கொடுக்க தேவையில்லை.அதையும் சொன்னால் உப"யோகமாக"மாகா இருக்கும்.//
    அதான் இதுலயே பதில் இருக்கில்ல? மரணயோகத்துல பேங்க் உங்களுக்கு கடன் கொடுத்தா அவங்களுக்கு திரும்ப வராது, அதாவது நீங்க திருப்பி கொடுக்க மாட்டீங்க அல்லது தேவையிருக்காது. (ஒரு முடிவோட நிறைய பேர் சுத்தற மாதிரி தெரியுது, ரிசர்வ் பேங்க்கிற்கு சொல்லி மரணயோகத்துல யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு அறிக்கை எல்லா வங்கிகளுக்கும் அனுப்பச் சொல்லணும்!!!!)/////

    சில வங்கி அதிகாரிகளுக்கு அது தெரியும். அவர்கள் பணி செய்யும் கிளைகளில் அதைக் கடை பிடிக்கின்றார்கள்!

    ReplyDelete
  27. /////Blogger Uma said...
    பாப்கார்ன் பதிவு அருமை. வேண்டுமென்றே மரணயோகத்தில் செய்த திருமணமொன்று வேகமாக முறிந்ததைக் கண்முன் கண்டிருக்கிறேன்.//
    பார்வதி, இதே மாதிரி ஒரு முற்போக்குவாதி வேண்டுமென்றே அசுப நாள், நேரத்தில் ஒரு படத் தயாரிப்பைத் தொடங்கி அதுவும் ஊற்றிக்கொண்டுவிட்டது./////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி! பல தயாரிப்பாளர்கள் அதை எல்லாம் பார்த்துத்தான் - நல்ல நேரங்களில்தான் தங்கள் படத்திற்குப் பூஜை போடுவார்கள்!

    ReplyDelete
  28. ////Blogger Uma said...
    என் நண்பர் ஒருவர் ராகு காலத்தில் தோலை பேசியைகூட ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவார்.//
    இது ரொம்ப ஓவர்!/////

    அது ஓவர் இல்லை. அவருக்கு என்ன கஷ்டமோ! அவருடைய கதையைக் கேட்டால்தான் உண்மை தெரியும்!

    ReplyDelete
  29. ////Blogger ஜி ஆலாசியம் said...
    திருக்குறள் பதிவு.
    ''தும்மாத்துண்டு என்றாலும் எம்மாம் பெரிய விஷயத்தை குறித்தது'' என்பதாக,
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  30. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !/////

    உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. //////Blogger sriganeshh said...
    // மரணயோகத்துல பேங்க் உங்களுக்கு கடன் கொடுத்தா அவங்களுக்கு திரும்ப வராது, அதாவது நீங்க திருப்பி கொடுக்க மாட்டீங்க அல்லது தேவையிருக்காது. (ஒரு முடிவோட நிறைய பேர் சுத்தற மாதிரி தெரியுது, ரிசர்வ் பேங்க்கிற்கு சொல்லி மரணயோகத்துல யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு அறிக்கை எல்லா வங்கிகளுக்கும் அனுப்பச் சொல்லணும்!!!!)//
    உமாஜி, கவலையே பட வேண்டாம். இப்பொழுதெல்லாம் ஒரு SMS மற்றும் ரிமைண்ட்ர் கொடுத்துவிட்டு கடனை வசூலிக்க ரெக்கவரி ஆட்களை அனுப்பலாம். ரெக்கவரி ஆட்கள் என்றால் யம தூதர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?//////

    கடன் வாங்கியவர், காவல் துறையின் உதவியை நாடினால் சிக்கலாகிவிடும்!

    ReplyDelete
  32. ////Blogger Uma said...
    ரெக்கவரி ஆட்கள் என்றால் யம தூதர்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?//
    யமதூதர்களை நேரிலேயே சந்திச்ச அனுபவம் இருக்கு போலிருக்கே??????!!!!!!!/////

    40 வயதைத் தாண்டினால் எல்லாத் தூதர்களையும் சந்தித்த அனுபவம் ஏற்பட்டுவிடும்!

    ReplyDelete
  33. ////Blogger sriganeshh said...
    ஐயோ! எனக்கு இல்லை. எங்கள் வாடிக்கையாளர்களை பற்றி சொன்னேன். நீங்கள் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை என்றதும் அந்த சர்குலர் ஞாபகத்திற்கு வந்தது./////

    யாரைப் பற்றிச் சொன்னால் என்ன? அவர்களும் மனிதர்கள்தானே! அதுவும் கடன்பட்டவர் என்றால் பாவப்பட்ட ஜென்மம்!

    ReplyDelete
  34. /////Blogger Uma said...
    ஸ்ரீகணேஷ், பாவம் உங்க வாடிக்கையாளர்கள், விட்டுடுங்க!!!!/////

    அவர் பெயரில் கணபதி இருப்பதால் விட்டு விடுவார். கவலையை விடுங்கள் உமாஜி!

    ReplyDelete
  35. இதுவரை பஞ்சாங்கத்தைப் பார்த்து எதுவும் செய்ததில்லை.
    தேடிக் கொடுத்த மாப்பிள்ளையை சொல்லிய நேரத்தில் திருமணம் செய்து கொண்டதால் ஒரு ஆர்வத்துடன் பஞ்சாங்கத்தை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.
    http://www.panchangam.com/
    திருமண நாளன்று ...
    Saptami h.14-48
    Chitra Nakshatra h.35-21
    Dhriti Yoga h.42-09
    Bava Karana h.14-48
    என்று இருந்தது. "திருடி யோகம்" என்றால் என்ன என்று தெரியவில்லை ஐயா.
    இது சித்த, அமிர்த, மரண யோகங்களில் அடங்கவில்லையே
    பதிவுக்கு நன்றி. ஜோதிடத் துணுக்குகள் போல இருக்கிறது.

    ReplyDelete
  36. எந்த கிழமையில் எந்த நட்சத்திரம் வந்தால் என்ன யோகம் என்று தெரிந்துக் கொள்ள அட்டவணை இருக்கிறது. பல சமயங்களில் அது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

    தேமொழி தாங்கள் குறிப்பிட்ட யோகம் வேறு. வாத்தியார் சொல்வது வேறு. (தங்கள் சொல்வது பஞ்ச அங்கத்தில் (பஞ்சாங்கத்தில்) ஒன்று. வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம்). இந்த யோகம் வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவை குறிப்பதாகும்.

    ReplyDelete
  37. இது வேறா? நன்றி ஆனந்த்.
    எத்தனை எத்தனை யோகங்கள்.
    இப்பொழுதுதான் சித்த, அமிர்த, மரண யோகங்கள் குருசந்திர, தர்மகர்நாதிபதி, ராஜ, விபரீத ராஜயோகளில் இருந்து வேறு பட்டது என்று ஒருவாறு புரிந்து கொண்டேன்.
    இப்பொழுதுதான் இன்னமும் வேறு பிரிவுகள் இருப்பது தெரிகிறது.

    ReplyDelete
  38. Dear Ananth.
    Please can you share the attavanai for all of us here.

    This increased my curiosity about the Panchangam.


    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  39. ஆனந்த்,
    ஸ்ரீரங்கத்தின் வாக்கியப் பஞ்சாங்கம் இணையத்தில் இருக்கிறது, சுட்டி கீழே
    http://srirangaminfo.com/vakya-panchangam-srirangam.php
    ஒவ்வொரு பக்கங்களிலும் பல குறிப்புகள் உள்ளது.
    28 ஆம் பக்கத்தில் இருக்கும் "அம்ருதாதி யோகங்கள்" என்பதுதான் நீங்கள் குறிப்பிடும் அட்டவணையா?
    http://srirangaminfo.com/vakya-panchangam-srirangam.php?year=2012&page=28
    மேலும்,
    35 ஆம் பக்கத்திலும் 27 யோகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது.

    ReplyDelete
  40. SP.VR. SUBBAIYA said...
    ////Blogger Uma said...
    என் நண்பர் ஒருவர் ராகு காலத்தில்
    தோலை பேசியைகூட ஸ்விட்ச் ஆப்
    செய்துவிடுவார்.//
    இது ரொம்ப ஓவர்!/////
    அது ஓவர் இல்லை. அவருக்கு என்ன
    கஷ்டமோ! அவருடைய கதையைக்
    கேட்டால்தான் உண்மை தெரியும்!

    மிகவும் அருமையான பதில்.
    பிறர் நிலையில் தன்னிலையை பொருத்தி பார்ப்பதற்கு,
    சிறு வயதில் இருந்தே வாழ்வில் பலதரப்பட்ட,
    தளங்களில் இருந்து வலுவான, நிதர்சனமான அனுபவங்களை
    பெற்று இருக்க வேண்டும்.
    அப்படிபட்ட அனுபவங்களை முருகபெருமான்,
    தாங்களுக்கு நிறைய தந்துள்ளார்.
    நன்றி......,

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  41. தேமொழி:

    அது திருடி யோகம் இல்லை.

    த்ருதி யோகம்.

    வடமொழியில் த்ருதி என்றால் திடம், உறுதி என்று பொருள்.

    ReplyDelete
  42. யோகத்தை பார்ப்பது போல சூன்ய
    நாட்கள், சூன்ய திதி, சூன்ய ராசி,
    கூடா நாட்கள், தலை இல்லா
    நக்ஷத்திரம், வால் இல்லா நக்ஷத்திரம்,
    விபத் நக்ஷத்திரம், பஞ்சகம், தாரா
    பலம் , சந்திராஷ்டமம், கரி நாள்,
    சூலம்,அசுப ஹோரை மற்றும் இதர
    பிற பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட
    குறிப்புகளை கண்டு கொண்டு
    அதற்கேற்ப செய்யும் காரியங்கள்
    யாவும் கண்டிப்பாக நன்மையாக
    முடியும்.

    மேலும் இவ்விஷயங்களை பற்றி
    படிப்பதும் , தெரிந்து கொள்வதும் கால
    தேவதைகள், கால பைரவர் மற்றும்
    நவகோள்களுடைய ஆசியினை
    கண்டிப்பாக பெற்று தரும்.

    ReplyDelete
  43. vakupparaikku vanakkam,
    vathiyarin pathivukal arumai

    ReplyDelete
  44. Like Yoga, can you pl tell us about Karanam. I enjoy reading your articles.

    ReplyDelete
  45. Like Yoga, can you pl tell us about Karanam. I enjoy reading your articles.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com