மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.3.12

Numerology பெயரில் என்ன (டா) இருக்கிறது?

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Numerology பெயரில் என்ன (டா) இருக்கிறது?

எங்கள் பகுதி மக்கள் தீவிர சிவபக்தர்கள். நிறைய சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்தவர்கள். தஞ்சை மாவட்டத்தில் திரு எனும் துவக்க எழுத்துக்களுடன் இருக்கும் 200ற்கும் மேற்பட்ட ஊர்களில் இருக்கும் சிவாலயங்களுக்குப் பலமுறை திருப்பணி செய்தவர்கள். (உதாரணம்: திருவையாறு, திருக்கோலக்கா, திருவாடுதுறை, திருவீழிமிழிலை, திருக்கழிப்பாலை, திருநின்றவூர், திருஇன்னாம்பூர், திருவாரூர், திருக்கரவீரம், திருநெல்வாயில், திருவெண்ணைநல்லூர், திருப்புனந்தாள் etc)

தங்களுடைய ஊர்களிலும் பெரிய சிவாலயங்களைக் கட்டி வழிபட்டு வருபவர்கள். காரைக்குடியைச் சுற்றிலும் மொத்தம் 74 ஊர்கள் உள்ளன. அத்தனை ஊர்களிலும் ஆலயங்கள் உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரையே முதன்மைக் கடவுளாகப் போற்றி வழிபட்டுவருபவர்கள். எதை எழுதினாலும் அல்லது எழுதத் துவங்கினாலும், முதலில் பிள்ளையார் சுழி, சிவமயம், என்று எழுதி விட்டுத்தான் மற்றவற்றைத் துவங்குவார்கள். முடிக்கும்போது, வேணும் அண்ணாமலையார் துணை என்றுதான் கடிதத்தை முடிப்பார்கள்.

என்றென்றும் அன்புடன் என்று முடிக்கும் இக்காலப் பழக்கமெல்லாம், ஆங்கில மோகத்தால் வந்தது.

அதோடு தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது தீவிர பக்தியை உடையவர்கள். தங்கள் குழந்தைகளுக் கெல்லாம் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றையே சூட்டி மகிழ்ந்தவர்கள்.மகிழ்கிறவர்கள்.

கவியரசர் கண்ணதாசனின் இயற்பெயரான முத்தையா என்பதும் முருகனின் பெயர்தான்.

அதனால்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் செட்டிநாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்வார்: "முத்தப்பன் இல்லாத ஊரும் இல்லை, முருகப்பன் இல்லாதவீடும் இல்லை."

முருகப்பன், முத்தப்பன், முத்தையா, பழநியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன், சுவாமிநாதன், வைத்தியநாதன் என்று முருகன் பெயரும், அண்ணாமலை, அருணாச்சலம், கண்ணப்பன், சோமசுந்தரம், மீனாட்சிசுந்தரம் என்று சிவனுடைய நாமங்களாகவே மக்களுடைய பெயர்கள் இருக்கும். அதுபோல பெண்களுடைய பெயர்கள், மீனாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை, தெய்வானை என்று இறைவியரின் பெயராகவே இருக்கும்.

ஊர்களில் உள்ள பொதுக்கோவில்களிலும், பங்காளிகளுக்கென்று உள்ள படைப்பு வீடுகளிலும், ஊரில் உள்ள மக்களின் புள்ளிவிவரங்கள் முழுதாகக் கிடைக்கும். ஊரில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கும். ஒரு குழந்தையின் பெயர் தந்தையின் பெயருடன் இணைத்தே பதிவாகியிருக்கும்.

என்னுடைய இயற்பெயர். சுப்பிரமணியன்.என் தந்தையாரின் பெயர் வீரப்பன். எங்கள் கோவிலில் பதிவாகியுள்ள பெயர். வீரப்பசெட்டி சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன் என்பதையும் சுப்பையா என்று சுருக்கி அழைத்தார்கள் அல்லது வைத்தார்கள். பள்ளியில் பதியும்போது எனக்கு சுப்பையா என்று பதிந்ததால் அப்பெயர் நிலைத்துவிட்டது. வைத்த பெயர் மறைந்து விட்டது. எண் ஜோதிடப்படி சுப்பையா எனும் பெயரைவிடச் சுப்பிரமணியன் எனும் பெயர் நல்ல பெயர். அதைப் பின்னால் சொல்கிறேன்

கடிதம் எழுதும்போது இதைச் சுருக்கி வீர.(சுப்பிரமணியன் alias)சுப்பையா என்று எழுதுவார்கள். எனது தந்தைவழித் தாத்தாவின் பெயர் சுப்பிரமணியன். ஆகவே என் தந்தையாரின் பெயர் சுப்பிரமணியன் செட்டி வீரப்பன். சுருக்கமாக சுப. வீரப்பன்.

இந்த இரட்டை எழுத்து இன்ஷியல் எதற்காக? ஒரு எழுத்துப்போதாதா? அதாவது என் தந்தையாரின் இன்ஷியலை சு. என்று போட்டால் போதாதா? எதற்காக சுப. என்று போட வேண்டும்? என்னுடைய இன்ஷியலை வீ. என்று போட்டால் போதாதா? வீர. என்று எதற்காகப் போடவேண்டும்?

ஒருவீட்டில் (அப்போதெல்லாம் கூட்டுக்குடும்பங்கள். பெரிய பெரிய வீடுகள். ஒரு வீட்டில் ஐந்து முதல் பத்துக் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்த காலம்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுப்பையாக்கள் இருந்தால், எப்படி அடையாளப் படுத்துவது?

1. அருணாசலம் மகன் சுப்பையா
2. அண்ணாமலை மகன் சுப்பையா
3. முருகப்பன் மகன் சுப்பையா
4. பழநியப்பன் மகன் சுப்பையா

என்று நான்கு சுப்பையாக்கள் இருந்தால், அ. சுப்பையா என்று ஒற்றை எழுத்து இன்ஷியல் இருந்தால், குறிப்பிடப்படும் நபர், அருணாசலம் மகன் சுப்பையாவா அல்லது அண்ணாமலை மகன் சுப்பையாவா என்று எப்படித்தெரியும்? ஆகவே இப்படிச் சொல்வார்கள். அரு. சுப்பையா, அண. சுப்பையா, முரு. சுப்பையா, பழ. சுப்பையா, ஆங்கிலத்தில் AR.Subbiah, AN.Subbiah, MR.Subbiah, PL.Subbiah

(வாய்ச் சொல்லாக அழைக்கும்போது இப்படி அழைப்பார்கள். ஆனாரூனா சுப்பையா, மூனாரூனா சுப்பையா, பானாளானா சுப்பையா)

பட்டிமன்றத் தலைவர் கண.சிற்சபேசன் அவர்களின் பெயருக்கு முன்னால் இருக்கும் கண எனும் எழுத்து அவருடைய தந்தையார் கண்ணப்ப செட்டியாரைக் குறிக்கும். மேடைப்பேச்சாளர் பழ. கருப்பையா அவர்களின் பெயருக்கும் முன்னால் இருக்கும் பழ. எனும் எழுத்து அவருடைய தந்தையார் பழநியப்ப செட்டியார் அவர்களைக் குறிக்கும். திரைப்பட இயக்குனர் எஸ்பி. முத்துராமன் அவர்களின் தந்தையாரின் பெயர். சுப்பையா.(இவர் திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர். தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பராக இருந்தவர்). இப்படித் தனித்தன்மையோடு அடையாளப் படுத்துவதற்குத்தான் அந்த இரட்டை எழுத்து இன்ஷியல் முறை.

ப.சிதம்பரம் எனும் பெயரைவைத்து அவருடைய தந்தையார் பெயரை எப்படிச் சுலபமாகச் சொல்ல முடியும்? பரமசிவன் மகனா அல்லது பழநியப்பன் மகனா என்று எப்படித் தெரியும்? அவருடைய தந்தையரின் பெயர் பழநியப்பன். பழ.சிதம்பரம் என்பதுதான் அவருடைய இயற்பெயர். அவர் ப. சிதம்பரம் என்று வைத்துக் கொண்டுள்ளார். பலகாலம் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர் அவர். தற்சமயம் அவர் மாண்புமிகு உள்துறை அமைச்சர். வெறுமனே சிதம்பரம் என்று சொன்னால் போதும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும். ஆகவே அவர் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்!

ஆனால் அவருடைய பெயர் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது.

P C H I D A M B A R A M 8 + 3 +5+1+4+1+4+2+1+2+1+4 = 36 இது மிகவும் நல்ல எண் (பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ஆகவே அவருடைய பெயர் ப. என்னும் ஒற்றை எழுத்து இன்ஷியலிலேயே எண் ஜோதிடப்படி அருமையாக அமைந்துள்ளது)

அழகப்பன் எனும் பெயரை உடையவர்கள், எங்கள் பகுதியில் நிறையப் பேர்கள் உள்ளார்கள். அதுவும் முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்று. முருகு என்றால் அழகு. அழகு என்பது அவன்தான். அழகுக்கு அப்பனும் அவன்தான்.

ஆனால் இந்த அழகப்பனை இன்ஷியலாக்கும்போது, இரட்டை எழுத்தில் அள. என்றுதான் குறிப்பிடுவார்கள். அழ. என்று எழுதமாட்டார்கள். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள். அழ. என்றால் அழுகையைக் குறிக்கும்.

அதனால் அள.

ஆங்கிலத்தில் பிரச்சினையில்லை AL.Chidambaram,. AL.Ramasamy

R, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமசாமி மகன். RM என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் ராமநாதன் மகன். S, என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுந்தரம் மகன், SP என்ற இன்ஷியலுடன் பெயர் வந்தால் சுப்பிரமணியனின் மகன்.

அர்த்தம் ஆனதா மக்களே?
-------------------------------------------------------------------------------
சரி, கதைபோதும். சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

படித்து முடித்தவுடன், தனியார் நிறுவனம் ஒன்றில் சில காலம் வேலை பார்த்தவன், அது பிடிக்காமல், வேலையைவிட்டு விலகித் தனியாகத்
தொழில் செய்யத் துவங்கினேன்.

பண முதலீடு இல்லாத சுய தொழில். முகவர் தொழில். விசிட்டிங் கார்டு, டைரி, பேச்சுத்திறமை, தொலைபேசி இந்நான்கும் இருந்தால் போதும். அதில் மூன்று மட்டுமே இருந்தது. OYT (Own Your Telephone Scheme) யில் தொலைபேசிக்கு பணம் செலுத்திவிட்டு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை அப்போது. தொழில் துவங்கி ஐந்து வருடம் கழித்துதான் இணைப்புக் கிடைத்தது. அது பெரிய கதை. அதைப் பிறகு ஒரு நாள் விவரிக்கிறேன்.

அப்போது எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாகப் பரீட்சயம் இல்லாத நிலைமை. என் ஜாதகப்படி, நான் பண முதலீட்டுடனோ அல்லது கூட்டாகவோ எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. சிம்ம லக்கினம். பத்திற்கு உரிய சுக்கிரன் எட்டில் (உச்சம். ஆனாலும் எட்டாம் வீடு). தொழில்காரகன் சனி 12ல். அவையெல்லாம் தெரியாமல், முருகன் அருளால் நான் சரியாகவே வழி நடத்தப்பெற்றிருக்கிறேன்.

முதலில் இருந்த பெயர் VR.சுப்பையா. அதை நான் இந்தத் தொழில் துவங்கும்போது SP.VR.சுப்பையா என்று மாற்றிக் கொண்டேன். அந்த மாற்றம் நல்ல மாற்றத்தைத் தந்தது. அது சிலகாலம் கழித்துத்தான் எனக்குத் தெரியவும் செய்தது.

எண் ஜோதிடப்படி VR.சுப்பையா விற்கான எண்: 28 அது நல்ல எண் இல்லை.

Number 28 is not a good number. It is a number with full of contradictions. It indicates a person of great promise who is likely to see all taken away from him. It indicates loss through trust in others and the likelihood of having to begin life's road over and over again. It is not a fortunate number.

எண் ஜோதிடப்படி SP.VR.சுப்பையா விற்கான எண்: 39 இது ஓரளவிற்கு நல்ல எண்.

S P V R S U B B ! A H
3 8 6 2 3 6 2 2 1 1 5 = 39

பெயர்களின் கூட்டெழுத்து 11, 12, 13,14, 16,18 20, 22, 25, 26, 28 29, 34,35, 38, 40, 43,44. 47 & 49 என்று வந்தால் நன்மையைத் தராது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

நன்றாக இருந்த நகரத்தின் பெயரை மாற்றிவைத்து, அதன் மகிமையைக் குறைத்த கதை ஒன்று உள்ளது.

அதைப்பற்றிய விவரம் அடுத்த பாடத்தில்! அதைத் தொடர்ந்து பல புதிய செய்திகள்
----------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

120 comments:

  1. எண் கணிதம் ஆரம்பமா, ஐயா? நன்றாக‌ உள்ளது.

    அமைச்சர் சிதம்பரம் எண் கணிதப்படியே அந்த மாற்றத்தைச்செய்து கொண்டு இருக்கலாம். சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே. ஒருமுறை துரைமுருகன் குமுதம் பேட்டியிலேயே கூறியிருந்தார்:"நான் எப்போதும் கலைஞரின் ஜாதகத்தை என் சட்டைப் பையில் வைத்து இருப்பேன். யார் சோதிடம் தெரியும் என்று சொன்னாலும் அவர் ஜாதகத்தைக் காண்பித்து 'நேரம் எப்படி' என்று கேட்பேன். அவருக்கு நேரம் ஓகே என்றால் எங்களுக்கும் ஓக்கேதானே!"

    பெயர் வைப்பதில் செட்டி நாட்டுப் பழக்க வழக்கம் ஒரு பக்கம், நியூமராலஜி ஒரு பக்கம் என்று அருமையாக உள்ளது அய்யா!நன்றி!

    ReplyDelete
  2. சிவபெருமான் இப்படியெலாம் வர ஆரம்பித்து விட்டாரா? நந்தியெம் பெருமான் கோபித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது?

    டீசல் புகையில் மயக்கம் வராமல் இருக்க வேண்டும். போய் ஆனந்த தாண்டவம் ஆடவேண்டுமே மேடையில்!

    ReplyDelete
  3. It is really fine. I am one of your fan
    continue more about Numerology. Thank a lot.

    ReplyDelete
  4. ////(பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ////////

    //////எண் ஜோதிடப்படி SP.VR.சுப்பையா விற்கான எண்: 39 இது ஓரளவிற்கு நல்ல எண்.////////

    நமக்கு என்று வரும்போது அந்தர் பல்ட்டி அடித்துவிட வேண்டியதுதான்..

    ஏதாவதொன்றை மாற்றி விடுவது நல்லது..

    39 என்பது குருவைக் குறிக்கும் மூணாம் எண்ணின் ஆதிக்கத்திலே வருவதால் சேவை மனப்பான்மை மிகுந்து மத சம்பந்தமான விஷயங்களிலே தீவிர ஆர்வம் உள்ளவராக மாறிவிட வாய்ப்புகள்(இந்த வார்த்தையைப் போட்டாத்தான் ஒரு ஜோசிய விஷயத்தை சொல்றதுக்கு safe)உள்ளது..
    இப்படி ஆவது என்பது சுயநலத்தை இழந்து பொதுநலத்துக்கு என்று அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்டிவிடுவதால் சுகவாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போகும் என்கிற அடிப்படையிலே சரியில்லாத எண் என்று வழங்கப்பட்டது..

    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது என்பதால் மோசம் என்ற வார்த்தைக்கு இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  5. ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?
    இதை ரெண்டு 'க்ளிக்' பண்ணி பெரிசா ஆனந்தத்தைக் கண்டுவிட்டேனே

    ReplyDelete
  6. நியூமராலஜி பதிவு அருமை.

    //சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே. //

    திரு.கே.எம்.ஆர். அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. தமிழகத்தின் பிரபல‌
    'பகுத்தறிவு வாதிகள்' பலரும் தஞ்சைத் தரணியின் புகழ்பெற்ற கோவில்களுக்கு (குறிப்பாகக் கதிராமங்கலம்)அடிக்கடி வருபவர்கள். இது எனக்குத் தெரிந்த மேலிடத்து ஜோசியர் ஒருவர் சொன்னது.

    ReplyDelete
  7. /////kmr.krishnan said...சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே./////
    T .R .baalu -19
    4221136
    K .Thangamuthu -46
    245153146456
    Subramanianswamy -46
    3622141511536141

    இவர்களில் தங்கமுத்து அவர்களைத்தவிர டிஆர்பாலு அவர்களின் பெயரிலே 'a' இரண்டு முறை வருவதைக் கவனிக்க..

    சுப்ரமணிய'ன்' சுவாமி 'n' சேர்ந்ததுகூட சில வருடங்களுக்கு முன்னாலேதான்..

    ரஜினி 'rajni' 21151என்ற பெயரிலே கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாள் டைட்டில் கார்ட் பெயர் போட்ட விஷயமும் இப்படி அரசியல் மோகம்தான்..

    சொந்தமாக இவர்களின் பெயர்களை எழுதி ஆராய்ந்து பார்த்த காரணத்தால் உடனே மனதிலிருந்தே எழுதுகிறேன்..


    கலைஞர்,முரசொலி மாறன், வை.கோ. என்று மூவருக்கும் 37 எண்ணிலே பெயர் அமைந்திருந்தது..

    அரசியல் விஷயத்துக்கெல்லாம் ஆதவன் பெயரிலே இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று இருந்தாலும் தோல்வியெனும் இரவும் இவர்களைச் சூழாமல் இல்லை..

    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'

    என்ற நம்பிக்கை நட்சத்திரமே இவர்கள் அரசியல் வாழ்வின் ஆதாரம்..

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்,
    ந‌ல்ல‌ ப‌திவாக‌ வ‌குப்ப‌றை த‌ன‌து அடுத்த க‌ட்ட‌த்துக்குத் தாவி உள்ள‌து என‌ நினைக்கிறேன்.எல்லாவ‌ற்றிலும் ஒரு கை பார்த்துவிடுவ‌து என‌ ஆர‌ம்பித்துவிட்டீர்க‌ள்.இனி என்ன‌ க‌விய‌ர‌ச‌ர் எழுதிய‌துபோல் "பாதை வ‌குத்த‌பின் ப‌ய‌ந்தென்ன‌லாப‌ம்" என‌ நீங்க‌ளும் அடுத்த‌ பாய்ச்ச‌லுக்குத் தயாராகிவிட்டீர்க‌ள். நாங்க‌ளும் தயாராகிவிட்டோம்,சுயந‌‌‌ல‌மான‌ கேள்விக‌ளுட‌ன்.ஒரு விண்ண‌ப்ப‌ம் புதிய‌வ‌குப்ப‌றை www.classroom2012.inஅணுக‌முடிய‌வில்லை.ப‌திவுசெய்து இருந்தேன்,ப‌திவான‌து உறுதியும் செய்ய‌ப்பட்டிருந்த‌து.ஆனால் அடைத்த‌ க‌த‌வுக‌ள் திற‌க்க‌ ம‌றுக்கிற‌து. நேர‌மிருந்தால் உதவுங்க‌ள்.

    ReplyDelete
  9. அன்புள்ள ஐயா,நியூமராலஜி வகுப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.நன்றாக இருந்த அந்த நகரத்தின் தற்போதைய பெயர் மும்பை தானே!

    ReplyDelete
  10. sir,
    SP என்ற எண்களின் கூட்டுத்தொகை 11...ஆக மொத்தம் 2. இதை சந்திரன் ஆதிக்க எண் என்பர். ஆனால் இது சுக்கிரனின் ஆதிக்க நம்பர். ஆகையால் மறைவிட சுக்கிரனை (8 ம் இடம்) சக்தி ஊட்டியவுடன் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகியது. தங்களின் இனிமையான வார்த்தைகள் உடன் கூடிய செவ்வாய் (VR) வியாபாரத்தை பெருக வைத்தான். பெயர் ஆரம்பம் புதனின் ஆதிக்கத்தில் (SU - 36)..ஆகவே சுக்கிரன், செவ்வாய், புதன் ஆக கடைசியில் முடியும் (AH - 15) சூரியனின் ஆதிக்கத்தில்....ஆக மொத்தம் வெற்றி கனி உங்கள் கைகளில்,,,

    சிதம்பரத்தின் கதையே வேறு...பெயர் ஆரம்பம் சனியின் ஆதிக்கத்தில்... காங்கிரஸ் பின்னர் தனிக்கட்சி என்று இலக்கு இல்லாமல் இழந்தது நிறைய...
    அவர் கேது ஆதிக்கத்தில் வருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும்..அது அவரை பாலிடிக்ஸ் லிருந்து விலக்கி சன்னியாச வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. @kmr krishnan sir,

    have sent test mail to you.

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    தங்களின் பகுதியில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு
    கடைப்பிடிக்கும் வழக்கப்படி சரியான நபரை கண்டு பிடிப்பது
    சுலபமாக இருக்கும். - விளக்கம் அருமையாக உள்ளது.
    நன்றி!!

    ReplyDelete
  13. இன்று நான் இந்த ஜோதிடத்தில் மிகவும் ஆவலாய் இருப்பதற்கு காரணம் இந்த எண் ஜோதிடம் தான் .

    பண்டிட் சேதுராமன் அவர்களின் புத்தகம் தான் முதல் அறிமுகம்.ஒரு ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் ஷாப்பிங்கில் இருக்கும் போது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் இவரின் எண் கணித புத்தகம் வாங்கினேன் .அதன் பின் தான் ஜோதிடத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது.

    நான் பிறந்த தேதி 17 கூட்டு எண் 6 , இதை வைத்துக் கொண்டு சென்னையில் ஒரு எண் ஜோதிட நிபுணரைப் பார்த்தேன் .பெயரையும் ஒரு இனிஷியல் சேர்த்து வைத்து 33 ஆக்கி அனுப்பி வைத்தார். நல்லாத்தான் இருக்கிறது.

    ஆனால் ஒரு டுபாக்கூர் வேலை செய்து விட்டார் . அதனால் தான் பெயர் சொல்ல வில்லை .உமக்கு சனி அதிபதி ஆகவே கரு நீலம் கல் வைத்து மோதிரம் போடு என்றார், சரி என்றேன் "ஆருநூல் நீலம் " என்னிடமே இருக்கு வங்கிக் கொள்ளுங்கள் பணம் இத்தனை ஆயிரங்கள் என்றார் , ஜோதிட ஆர்வத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தலையை ஆட்டி வாங்கிக் கொண்டேன்.ஊர் வந்து எனக்கு பரிச்சயமான நகை கடையில் காட்டி மோதிரம் செய்ய கொடுத்தேன் , அப்போது அவர் தம்பி இது சாதாரண நீலக் கல் வெறும் 80 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார், அத்துடன் மண்டைக்குள் குடைச்சளையும் உண்டாக்கி விட்டார் , அரை குறை நம்பிக்கையில் திருச்சியில் போய் விசாரித்தேன் 100,200,500 என்றார்களே ஒழிய ஒரு ஆயிரத்தையும் தொட வில்லை. இதனால் எந்த கல் வியாபாரத்தையும் நான் நம்புவதில்லை .ஆனால் அந்த ராசியான 6, 5 தேதிகளை அதிகமான பயணங்கள் செய்வதால் அதில் பயன் படுத்துவேன் .

    ReplyDelete
  14. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எண்கணித ஜோதிடத்தில் , அஸ்ட்ரோ நியூமராலஜி
    என்கிற அடிப்படையில் பெயர் வைக்கும்போது,
    பிறவி எண் {பிறந்த தேதி},விதி எண் {பிறந்த தேதியில்
    உள்ள தேதி,மாதம்,வருடத்தின் கூட்டுத்தொகை எண் }
    இந்த இரண்டு எண்ணுக்கும் நடப்பான ஒரு சுப கிரகத்தின் எண்னை
    ஜாதகப்படி தேர்ந்தெடுத்து,{அந்த எண்ணுக்கு உரிய கிரகம் ஜாதகத்தில்
    ஆட்சி,உச்சம்,குரு பார்வை உள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.}
    பெயர் எண்ணாக வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று
    கூறுகிறார்கள்.மேலும் தேர்ந்தெடுக்கும் பெயர் நன்றாக பேறும்,
    புககழும் பெற்று வாழ்ந்தவர்களின் பெயராகவும் இருந்தால்,மிக மிக நல்லதாம்.
    எல்லாம் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதர்க்குத்தான்.
    நன்றி!!

    ReplyDelete
  15. தலைவருக்கு( M.G.R. )9 தான் பெயர் பிரபலம் கொடுத்தது .

    ReplyDelete
  16. minorwall said...ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?


    அவர் பெண் நக்கீரனுக்கு போட்டியாக வைத்துள்ளார்.

    ReplyDelete
  17. ///ஊர்களில் உள்ள பொதுக்கோவில்களிலும், பங்காளிகளுக்கென்று உள்ள படைப்பு வீடுகளிலும், ஊரில் உள்ள மக்களின் புள்ளிவிவரங்கள் முழுதாகக் கிடைக்கும். ஊரில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கும். ஒரு குழந்தையின் பெயர் தந்தையின் பெயருடன் இணைத்தே பதிவாகியிருக்கும்.///

    இது சிறந்த முறை. மக்கள் தொகை கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு பதிவு செய்தல் இவற்றிக்கு முன்னோடி. அரச குடும்பமானால் கல்வெட்டில் இருக்கும். பெரும்பாலும் சாதாரணமான மக்கள் வாழ்க்கையில் இந்த முறையைக் கேள்விப் பட்டதில்லை. மற்ற சமூகத்தினரிடம் இந்த வழக்கு இல்லை என நினைக்கிறேன். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற மூதுரைக்கு ஏற்றவாறு, அதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கோவிலை வாழ்க்கையுடன் நன்றாகவே இணைத்து அவ்வாறு கூறப்பட்டதை சிறப்புடன் செய்லாற்றியுள்ளார்கள்.

    பெயர் வைக்கும் கலாச்சார வழக்கை விவரித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  18. நன்றி ஐயா, ஆனால் எனக்குப் பாடம் பொதுவாகத்தான் புரிந்தது. இந்த எண்களை ஒவ்வொரு எழுத்துக்கும் எப்படி கொடுத்தீர்கள் என்பது புரியவில்லை. 1=A, 2=B என்று ஆரம்பித்து செய்து பார்த்தேன். ஆனால் உங்கள் பெயரில் H=5 என்று இருக்கவும் குழம்பி விட்டேன். அடுத்த பாடத்தில் விளக்குவீர்களா?

    என் கணிதம் என்றும் எனக்குப் பிடிப்பதில்லை. ஆண்களுக்குச் சரி பிரச்சனை இல்லை. பெண்களுக்குத் திருமணம் ஆனவுடன் உடனே முதலெழுத்தை மாற்றி மீண்டும் எண் கணிதம் பலன் பார்க்க வேண்டுமா? இதனால் அவர்கள் தலைஎழுத்து மாறிவிட்டது என்று அர்த்தமா? பிறந்தவுடன் வைத்த பெயருக்கு மட்டும் பலன் பார்த்தால் போதாதா?

    ReplyDelete
  19. ///டுபாக்கூர் வேலை செய்து விட்டார்///

    சாதாரண நீலக் கல் என்பது நிபுணருக்கே(?) தெரியமா என்னமோ :)). அவரை யாராவது ஏமாற்றி இருக்கலாம் அல்லவா?
    I am just giving him the benefit of the doubt. இவ்வாறு நினைத்து நானாக இருந்தால் அந்த ஜோதிட நிபுணரை உடனே தொடர்பு கொண்டு அவரை கவனமாக இருக்க சொல்வதன் மூலம் நான் ஏமாற்றப் பட்டேன் என்பதையும் உணர்தியிருப்பேன்.

    ReplyDelete
  20. ஆகா... நியூமராலஜிக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கா? முடியல

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  21. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சீட்டு ஒதுக்குவது கூட இந்த எண் கணிதம் பார்த்து தான் . ஒரு ஜோதிட இதழில் (தேர்தலுக்கு முன் ) காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பற்றி ஜோதிடரிடம் கருத்து கேட்டார்கள் . அதற்கு அந்த ஜோதிடர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் 63 , 6 சுக்கிரனின் எண். 3 குருவின் எண் இப்படி அசுர குருவும் தேவ குருவும் ஒன்றிணைத்து இருக்கிறார்கள் இது நல்ல விளைவை தரமாட்டார்கள் என்றார் . அவர் சொன்னது போலவே சட்டமன்ற தேர்தல் முடிவில் காங்கிரஸ் தர்ம அடி வாங்கியது ! .

    மிக அருமையான பாடத்தை ஆரம்பித்து உள்ளீர்கள் .. அடுத்த பதிவிற்கு ஆர்வமாக இருக்கிறேன் ...


    அய்யா , ஒரு ஜாதகத்தில் குரு- சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அல்லது ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் அமைப்பில் இருந்தாலோ நல்லதா? கெட்டதா? இதன் பொது பலன் என்ன ?

    ReplyDelete
  22. /////Blogger Ananthamurugan said...
    good lesson ..........////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////Blogger kmr.krishnan said...
    எண் கணிதம் ஆரம்பமா, ஐயா? நன்றாக‌ உள்ளது.
    அமைச்சர் சிதம்பரம் எண் கணிதப்படியே அந்த மாற்றத்தைச்செய்து கொண்டு இருக்கலாம். சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே. ஒருமுறை துரைமுருகன் குமுதம் பேட்டியிலேயே கூறியிருந்தார்:"நான் எப்போதும் கலைஞரின் ஜாதகத்தை என் சட்டைப் பையில் வைத்து இருப்பேன். யார் சோதிடம் தெரியும் என்று சொன்னாலும் அவர் ஜாதகத்தைக் காண்பித்து 'நேரம் எப்படி' என்று கேட்பேன். அவருக்கு நேரம் ஓகே என்றால் எங்களுக்கும் ஓக்கேதானே!"
    பெயர் வைப்பதில் செட்டி நாட்டுப் பழக்க வழக்கம் ஒரு பக்கம், நியூமராலஜி ஒரு பக்கம் என்று அருமையாக உள்ளது அய்யா!நன்றி!////

    ஒரு மாறுதலுக்காகத்தான் இதைக் கையில் எடுத்தேன்!

    ReplyDelete
  24. /////Blogger kmr.krishnan said...
    சிவபெருமான் இப்படியெலாம் வர ஆரம்பித்து விட்டாரா? நந்தியெம் பெருமான் கோபித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது?
    டீசல் புகையில் மயக்கம் வராமல் இருக்க வேண்டும். போய் ஆனந்த தாண்டவம் ஆடவேண்டுமே மேடையில்!////

    அதெல்லாம் போட்டு விடுவார். திரும்பும்போது கையில் கவர் கொடுத்து அனுப்புவார்கள். அதை நினைத்தால் ஆட்டம் தன்னால் வரும்!

    ReplyDelete
  25. ////Blogger krishnan51972 said...
    It is really fine. I am one of your fan
    continue more about Numerology. Thank a lot.////

    ஒரு மாற்றத்திற்காகத்தான் அதைக் கையில் எடுத்தேன்!

    ReplyDelete
  26. ///Blogger minorwall said...
    ////(பி.எல். என்று வைத்திருந்தால் 39 வரும். அது மோசமான எண். ////////
    //////எண் ஜோதிடப்படி SP.VR.சுப்பையா விற்கான எண்: 39 இது ஓரளவிற்கு நல்ல எண்.////////
    நமக்கு என்று வரும்போது அந்தர் பல்ட்டி அடித்துவிட வேண்டியதுதான்..
    ஏதாவதொன்றை மாற்றி விடுவது நல்லது..////

    எத்ற்கு மாற்ற் வேண்டும்?
    39 is neither a fortunate number or unfortunate number! வெற்றி தோல்விகளைச் சமமாக பாவிக்கும் எனக்கு அது ஓக்கே ஆனது. ப்.சி போன்ற அரசியல்வாதிகளுக்கு அது சரிவராது. அதானால் அவருக்குச் சொல்லும்போது அதை மோசம் என்றேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    39 என்பது குருவைக் குறிக்கும் மூணாம் எண்ணின் ஆதிக்கத்திலே வருவதால் சேவை மனப்பான்மை மிகுந்து மத சம்பந்தமான விஷயங்களிலே தீவிர ஆர்வம் உள்ளவராக மாறிவிட வாய்ப்புகள்(இந்த வார்த்தையைப் போட்டாத்தான் ஒரு ஜோசிய விஷயத்தை சொல்றதுக்கு safe)உள்ளது..
    இப்படி ஆவது என்பது சுயநலத்தை இழந்து பொதுநலத்துக்கு என்று அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்டிவிடுவதால் சுகவாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போகும் என்கிற அடிப்படையிலே சரியில்லாத எண் என்று வழங்கப்பட்டது..
    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது என்பதால் மோசம் என்ற வார்த்தைக்கு இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்../////

    எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள். அந்த உரிமை உண்டு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  27. ////Blogger minorwall said...
    ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?
    இதை ரெண்டு 'க்ளிக்' பண்ணி பெரிசா ஆனந்தத்தைக் கண்டுவிட்டேனே////

    புகைப்படம் கேட்டால் தரமாட்டாரா என்ன?

    ReplyDelete
  28. ////Blogger Parvathy Ramachandran said...
    நியூமராலஜி பதிவு அருமை.
    //சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே. //
    திரு.கே.எம்.ஆர். அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. தமிழகத்தின் பிரபல‌
    'பகுத்தறிவு வாதிகள்' பலரும் தஞ்சைத் தரணியின் புகழ்பெற்ற கோவில்களுக்கு (குறிப்பாகக் கதிராமங்கலம்)அடிக்கடி வருபவர்கள். இது எனக்குத் தெரிந்த மேலிடத்து ஜோசியர் ஒருவர் சொன்னது.////

    உண்மைதான். அரசியல் & சினிமாக்காரர்கள் இதில் அதீத நம்பிக்கை உடையவர்கள்!

    ReplyDelete
  29. ///Blogger minorwall said...
    /////kmr.krishnan said...சாதாரணமாக அரசியல் வாதிகள் ஜாதகம், நியூமராலஜி, கைரேகை,
    அனைத்திலும் நம்பிக்கை உடையவர்களே./////
    T .R .baalu -19
    4221136
    K .Thangamuthu -46
    245153146456
    Subramanianswamy -46
    3622141511536141
    இவர்களில் தங்கமுத்து அவர்களைத்தவிர டிஆர்பாலு அவர்களின் பெயரிலே 'a' இரண்டு முறை வருவதைக் கவனிக்க..
    சுப்ரமணிய'ன்' சுவாமி 'n' சேர்ந்ததுகூட சில வருடங்களுக்கு முன்னாலேதான்..
    ரஜினி 'rajni' 21151என்ற பெயரிலே கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாள் டைட்டில் கார்ட் பெயர் போட்ட விஷயமும் இப்படி அரசியல் மோகம்தான்..
    சொந்தமாக இவர்களின் பெயர்களை எழுதி ஆராய்ந்து பார்த்த காரணத்தால் உடனே மனதிலிருந்தே எழுதுகிறேன்..
    கலைஞர்,முரசொலி மாறன், வை.கோ. என்று மூவருக்கும் 37 எண்ணிலே பெயர் அமைந்திருந்தது..
    அரசியல் விஷயத்துக்கெல்லாம் ஆதவன் பெயரிலே இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று இருந்தாலும் தோல்வியெனும் இரவும் இவர்களைச் சூழாமல் இல்லை..
    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'
    என்ற நம்பிக்கை நட்சத்திரமே இவர்கள் அரசியல் வாழ்வின் ஆதாரம்..////

    தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////Blogger Rajaram said...
    ஐயா வணக்கம்,
    ந‌ல்ல‌ ப‌திவாக‌ வ‌குப்ப‌றை த‌ன‌து அடுத்த க‌ட்ட‌த்துக்குத் தாவி உள்ள‌து என‌ நினைக்கிறேன்.எல்லாவ‌ற்றிலும் ஒரு கை பார்த்துவிடுவ‌து என‌ ஆர‌ம்பித்துவிட்டீர்க‌ள்.இனி என்ன‌ க‌விய‌ர‌ச‌ர் எழுதிய‌துபோல் "பாதை வ‌குத்த‌பின் ப‌ய‌ந்தென்ன‌லாப‌ம்" என‌ நீங்க‌ளும் அடுத்த‌ பாய்ச்ச‌லுக்குத் தயாராகிவிட்டீர்க‌ள். நாங்க‌ளும் தயாராகிவிட்டோம்,சுயந‌‌‌ல‌மான‌ கேள்விக‌ளுட‌ன்.ஒரு விண்ண‌ப்ப‌ம் புதிய‌வ‌குப்ப‌றை www.classroom2012.inஅணுக‌முடிய‌வில்லை.ப‌திவுசெய்து இருந்தேன்,ப‌திவான‌து உறுதியும் செய்ய‌ப்பட்டிருந்த‌து.ஆனால் அடைத்த‌ க‌த‌வுக‌ள் திற‌க்க‌ ம‌றுக்கிற‌து. நேர‌மிருந்தால் உதவுங்க‌ள்./////

    இந்த விஷயத்தை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். தளத்தில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

    ReplyDelete
  31. ////Blogger sadan raj said...
    அன்புள்ள ஐயா,நியூமராலஜி வகுப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.நன்றாக இருந்த அந்த நகரத்தின் தற்போதைய பெயர் மும்பை தானே!////

    ஆமாம்! பழைய பெயர் பம்பாய்!

    ReplyDelete
  32. ////Blogger sriganeshh said...
    sir,
    SP என்ற எண்களின் கூட்டுத்தொகை 11...ஆக மொத்தம் 2. இதை சந்திரன் ஆதிக்க எண் என்பர். ஆனால் இது சுக்கிரனின் ஆதிக்க நம்பர். ஆகையால் மறைவிட சுக்கிரனை (8 ம் இடம்) சக்தி ஊட்டியவுடன் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகியது. தங்களின் இனிமையான வார்த்தைகள் உடன் கூடிய செவ்வாய் (VR) வியாபாரத்தை பெருக வைத்தான். பெயர் ஆரம்பம் புதனின் ஆதிக்கத்தில் (SU - 36)..ஆகவே சுக்கிரன், செவ்வாய், புதன் ஆக கடைசியில் முடியும் (AH - 15) சூரியனின் ஆதிக்கத்தில்....ஆக மொத்தம் வெற்றி கனி உங்கள் கைகளில்,,,
    சிதம்பரத்தின் கதையே வேறு...பெயர் ஆரம்பம் சனியின் ஆதிக்கத்தில்... காங்கிரஸ் பின்னர் தனிக்கட்சி என்று இலக்கு இல்லாமல் இழந்தது நிறைய...
    அவர் கேது ஆதிக்கத்தில் வருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும்..அது அவரை பாலிடிக்ஸ் லிருந்து விலக்கி சன்னியாச வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லும் என்று நினைக்கிறேன்./////

    AHற்கு வேறு ஒரு கதை உள்ளது. அது அடுத்தடுத்த பதிவு ஒன்றில் வரும்!

    ReplyDelete
  33. /////Blogger sriganeshh said...
    @kmr krishnan sir,
    have sent test mail to you.////

    இந்நேரம் பதில் வந்திருக்குமே சுவாமி!

    ReplyDelete
  34. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    தங்களின் பகுதியில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு
    கடைப்பிடிக்கும் வழக்கப்படி சரியான நபரை கண்டு பிடிப்பது
    சுலபமாக இருக்கும். - விளக்கம் அருமையாக உள்ளது.
    நன்றி!!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  35. ////Blogger thanusu said...
    இன்று நான் இந்த ஜோதிடத்தில் மிகவும் ஆவலாய் இருப்பதற்கு காரணம் இந்த எண் ஜோதிடம் தான் .
    பண்டிட் சேதுராமன் அவர்களின் புத்தகம் தான் முதல் அறிமுகம்.ஒரு ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் ஷாப்பிங்கில் இருக்கும் போது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் இவரின் எண் கணித புத்தகம் வாங்கினேன் .அதன் பின் தான் ஜோதிடத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது.
    நான் பிறந்த தேதி 17 கூட்டு எண் 6 , இதை வைத்துக் கொண்டு சென்னையில் ஒரு எண் ஜோதிட நிபுணரைப் பார்த்தேன் .பெயரையும் ஒரு இனிஷியல் சேர்த்து வைத்து 33 ஆக்கி அனுப்பி வைத்தார். நல்லாத்தான் இருக்கிறது.
    ஆனால் ஒரு டுபாக்கூர் வேலை செய்து விட்டார் . அதனால் தான் பெயர் சொல்ல வில்லை .உமக்கு சனி அதிபதி ஆகவே கரு நீலம் கல் வைத்து மோதிரம் போடு என்றார், சரி என்றேன் "ஆருநூல் நீலம் " என்னிடமே இருக்கு வங்கிக் கொள்ளுங்கள் பணம் இத்தனை ஆயிரங்கள் என்றார் , ஜோதிட ஆர்வத்தில் பணத்தை பற்றி கவலை படாமல் தலையை ஆட்டி வாங்கிக் கொண்டேன்.ஊர் வந்து எனக்கு பரிச்சயமான நகை கடையில் காட்டி மோதிரம் செய்ய கொடுத்தேன் , அப்போது அவர் தம்பி இது சாதாரண நீலக் கல் வெறும் 80 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார், அத்துடன் மண்டைக்குள் குடைச்சளையும் உண்டாக்கி விட்டார் , அரை குறை நம்பிக்கையில் திருச்சியில் போய் விசாரித்தேன் 100,200,500 என்றார்களே ஒழிய ஒரு ஆயிரத்தையும் தொட வில்லை. இதனால் எந்த கல் வியாபாரத்தையும் நான் நம்புவதில்லை .ஆனால் அந்த ராசியான 6, 5 தேதிகளை அதிகமான பயணங்கள் செய்வதால் அதில் பயன் படுத்துவேன் .//////

    உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  36. தேமொழி said...சாதாரண நீலக் கல் என்பது நிபுணருக்கே(?) தெரியமா என்னமோ :)). அவரை யாராவது ஏமாற்றி இருக்கலாம் அல்லவா?
    I am just giving him the benefit of the doubt. இவ்வாறு நினைத்து நானாக இருந்தால் அந்த ஜோதிட நிபுணரை உடனே தொடர்பு கொண்டு அவரை கவனமாக இருக்க சொல்வதன் மூலம் நான் ஏமாற்றப் பட்டேன் என்பதையும் உணர்தியிருப்பேன்.

    ஏமாற்றப் பட்டது சென்னையில், ஆனால் அதை ஊர்சிதம் செய்ய இந்தப் பக்கம் பாண்டிச்சேரி அந்தப் பக்கம் திருச்சி வரை சென்றேன் . ஊர்ஜிதம் ஆனவுடன் முதல் போன் நிபுனருக்குதான் ,அவர் இறுதி நவரை ஒரிஜினல் என்றே வாதம் செய்கிறார் .நான் கொஞ்சம் டென்ஷன் பார்டி. நேரில் போய் ஏடா கூடமாகிவிட போகிறது அதுவும் வெளிஊர் , போய் தொலைகிறது விடுங்கள் என்றார் வீட்டில்.

    இல்லை என்றால் அவரிடமே என் மனைவிக்கும் என் தம்பிக்கும் மோதிரம் வாங்கி இருப்பேன்.

    ReplyDelete
  37. sir , i registered sucessfully in classroom 2012. but i cant enter ...

    ReplyDelete
  38. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எண்கணித ஜோதிடத்தில் , அஸ்ட்ரோ நியூமராலஜி
    என்கிற அடிப்படையில் பெயர் வைக்கும்போது,
    பிறவி எண் {பிறந்த தேதி},விதி எண் {பிறந்த தேதியில்
    உள்ள தேதி,மாதம்,வருடத்தின் கூட்டுத்தொகை எண் }
    இந்த இரண்டு எண்ணுக்கும் நடப்பான ஒரு சுப கிரகத்தின் எண்னை
    ஜாதகப்படி தேர்ந்தெடுத்து,{அந்த எண்ணுக்கு உரிய கிரகம் ஜாதகத்தில்
    ஆட்சி,உச்சம்,குரு பார்வை உள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.}
    பெயர் எண்ணாக வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று
    கூறுகிறார்கள்.மேலும் தேர்ந்தெடுக்கும் பெயர் நன்றாக பேரும்,
    புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் பெயராகவும் இருந்தால்,மிக மிக நல்லதாம்.
    எல்லாம் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதர்க்குத்தான்.
    நன்றி!!////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  39. ////Blogger thanusu said...
    தலைவருக்கு(M.G.R.) 9 தான் பெயர் பிரபலம் கொடுத்தது ////

    நல்லது. தகவ்லுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. /////Blogger thanusu said...////
    minorwall said...ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?
    அவர் பெண் நக்கீரனுக்கு போட்டியாக வைத்துள்ளார்.////

    அம்மையாரின் சொல்வீச்சிற்குப் போட்டியாக என்ன செய்வதாம்?

    ReplyDelete
  41. ////Blogger தேமொழி said...
    ///ஊர்களில் உள்ள பொதுக்கோவில்களிலும், பங்காளிகளுக்கென்று உள்ள படைப்பு வீடுகளிலும், ஊரில் உள்ள மக்களின் புள்ளிவிவரங்கள் முழுதாகக் கிடைக்கும். ஊரில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கும். ஒரு குழந்தையின் பெயர் தந்தையின் பெயருடன் இணைத்தே பதிவாகியிருக்கும்.///
    இது சிறந்த முறை. மக்கள் தொகை கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு பதிவு செய்தல் இவற்றிக்கு முன்னோடி. அரச குடும்பமானால் கல்வெட்டில் இருக்கும். பெரும்பாலும் சாதாரணமான மக்கள் வாழ்க்கையில் இந்த முறையைக் கேள்விப் பட்டதில்லை. மற்ற சமூகத்தினரிடம் இந்த வழக்கு இல்லை என நினைக்கிறேன். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற மூதுரைக்கு ஏற்றவாறு, அதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கோவிலை வாழ்க்கையுடன் நன்றாகவே இணைத்து அவ்வாறு கூறப்பட்டதை சிறப்புடன் செய்லாற்றியுள்ளார்கள்.
    பெயர் வைக்கும் கலாச்சார வழக்கை விவரித்ததற்கு நன்றி.////

    அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் அதை விவரித்தேன் சகோதரி!

    ReplyDelete
  42. ///Blogger தேமொழி said...
    நன்றி ஐயா, ஆனால் எனக்குப் பாடம் பொதுவாகத்தான் புரிந்தது. இந்த எண்களை ஒவ்வொரு எழுத்துக்கும் எப்படி கொடுத்தீர்கள் என்பது புரியவில்லை. 1=A, 2=B என்று ஆரம்பித்து செய்து பார்த்தேன். ஆனால் உங்கள் பெயரில் H=5 என்று இருக்கவும் குழம்பி விட்டேன். அடுத்த பாடத்தில் விளக்குவீர்களா?
    என் கணிதம் என்றும் எனக்குப் பிடிப்பதில்லை. ஆண்களுக்குச் சரி பிரச்சனை இல்லை. பெண்களுக்குத் திருமணம் ஆனவுடன் உடனே முதலெழுத்தை மாற்றி மீண்டும் எண் கணிதம் பலன் பார்க்க வேண்டுமா? இதனால் அவர்கள் தலைஎழுத்து மாறிவிட்டது என்று அர்த்தமா? பிறந்தவுடன் வைத்த பெயருக்கு மட்டும் பலன் பார்த்தால் போதாதா?/////

    இப்போது பல பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே பாஸ்போர்ட் எடுத்துவிடுவதால், திருமணத்திற்குப் பிறகு நீங்கள் குறிப்பிடும் மாற்றம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை!

    ReplyDelete
  43. ////Blogger தேமொழி said...
    ///டுபாக்கூர் வேலை செய்து விட்டார்///
    சாதாரண நீலக் கல் என்பது நிபுணருக்கே(?) தெரியமா என்னமோ :)). அவரை யாராவது ஏமாற்றி இருக்கலாம் அல்லவா?
    I am just giving him the benefit of the doubt. இவ்வாறு நினைத்து நானாக இருந்தால் அந்த ஜோதிட நிபுணரை உடனே தொடர்பு கொண்டு அவரை கவனமாக இருக்க சொல்வதன் மூலம் நான் ஏமாற்றப் பட்டேன் என்பதையும் உணர்தியிருப்பேன்.////

    கரெக்ட்! அவரும் அதைச் செய்திருக்கலாம்!

    ReplyDelete
  44. ////Blogger கவிதை காதலன் said...
    ஆகா... நியூமராலஜிக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கா? முடியல
    நட்புடன்
    கவிதை காதலன்////

    முடியலையா? முடியாதுதான்! கவிதையும், காதலும் இருக்கும்போது மற்றதெல்லாம் எதற்கு?

    ReplyDelete
  45. ////Blogger naren said...
    அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சீட்டு ஒதுக்குவது கூட இந்த எண் கணிதம் பார்த்து தான் . ஒரு ஜோதிட இதழில் (தேர்தலுக்கு முன் ) காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பற்றி ஜோதிடரிடம் கருத்து கேட்டார்கள் . அதற்கு அந்த ஜோதிடர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் 63 , 6 சுக்கிரனின் எண். 3 குருவின் எண் இப்படி அசுர குருவும் தேவ குருவும் ஒன்றிணைத்து இருக்கிறார்கள் இது நல்ல விளைவை தரமாட்டார்கள் என்றார் . அவர் சொன்னது போலவே சட்டமன்ற தேர்தல் முடிவில் காங்கிரஸ் தர்ம அடி வாங்கியது ! .
    மிக அருமையான பாடத்தை ஆரம்பித்து உள்ளீர்கள் .. அடுத்த பதிவிற்கு ஆர்வமாக இருக்கிறேன் ...
    அய்யா , ஒரு ஜாதகத்தில் குரு- சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அல்லது ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் அமைப்பில் இருந்தாலோ நல்லதா? கெட்டதா? இதன் பொது பலன் என்ன ?////

    பார்த்துக்கொண்டால் பொதுமா? குறிப்பிட்ட ஜாதகத்தில் அவர்களுடைய ஆதிபத்யம் எல்லாம் முக்கியமில்லையா? உதிரியான கிரக நிலைகளைச் சொல்லி பலனைக் கேட்காதீர்கள்!

    ReplyDelete
  46. ஆகா...
    இப்பத் தான்
    எங்க groundக்கு வந்திருக்கீங்க..

    வரட்டும் கூடவே நம்ம கலை வருதான்னு பார்ப்போம்..
    இல்லே..
    ஒரு "கை" பார்ப்போம்...

    ReplyDelete
  47. numeralogy மட்டும் வைச்சு பார்க்கறது வேறே.. அத்துடன்
    namelogy and phrenologyயையும் சேர்த்துக்கிட்டு சொன்னாத்தான் பலன் சரியா இருக்கும்..

    ReplyDelete
  48. யாரிடமிருந்து எல்லாம் சொத்து வாங்கக்கூடாது என்ற பட்டியலில் முக்கியமாக சேர்க்க வேண்டியது, ஒன்றுக்கு மேல் குடும்பம், (சட்டபூர்வமோ, சட்ட விரோதமோ) வைத்துள்ள நபரிடம் வாங்கக்கூடாது.

    சுய சம்பாத்தியம் இல்லாமல், பூர்வீக சொத்தை விற்பவ‌னிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  49. Is Numerology followed in our olden days? Somewhere I heard it is very recent theory now-a-days. Anyways Im intrested to follow your lessons sir. Sorry for not typing in tamil.

    ReplyDelete
  50. /////Blogger naren said...
    sir , i registered sucessfully in classroom 2012. but i cant enter .../////

    Before registration, take permission from Vaaththiyar" என்ற வாசகம் தலைப்பில் உள்ளதே, அதை நீங்கள் பார்க்கவில்லையா?

    ReplyDelete
  51. ////Blogger அய்யர் said...
    ஆகா...
    இப்பத் தான்
    எங்க groundக்கு வந்திருக்கீங்க..
    வரட்டும் கூடவே நம்ம கலை வருதான்னு பார்ப்போம்..
    இல்லே..
    ஒரு "கை" பார்ப்போம்.../////

    கொஞ்சம் கவனமாக எழுத வேண்டும் போலிருக்கிறதே! பழநிஅப்பன் பார்த்த்துக்கொள்வான். நான் வழக்கம்போலவே எழுதுகிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  52. ////Blogger அய்யர் said...
    numerology மட்டும் வைச்சு பார்க்கறது வேறே.. அத்துடன்
    namelogy and phrenologyயையும் சேர்த்துக்கிட்டு சொன்னாத்தான் பலன் சரியா இருக்கும்../////

    எல்லாம் சேர்ந்து அவியலாக வரும்.. பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  53. ////Blogger kmr.krishnan said...
    யாரிடமிருந்து எல்லாம் சொத்து வாங்கக்கூடாது என்ற பட்டியலில் முக்கியமாக சேர்க்க வேண்டியது, ஒன்றுக்கு மேல் குடும்பம், (சட்டபூர்வமோ, சட்ட விரோதமோ) வைத்துள்ள நபரிடம் வாங்கக்கூடாது.
    சுய சம்பாத்தியம் இல்லாமல், பூர்வீக சொத்தை விற்பவ‌னிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்./////

    நீங்கள் சொன்னால் சரிதான். இதில் முதல் விதியில், சொத்தை வாங்கும்போது இரு குடும்பத்துப் பிள்ளைகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டிய சிக்கல்கள் இருக்கும்!

    ReplyDelete
  54. ////Blogger Kalai said...
    Is Numerology followed in our olden days? Somewhere I heard it is very recent theory now-a-days. Anyways Im intrested to follow your lessons sir. Sorry for not typing in tamil./////

    மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் பிரபலமாகியது. Ceiro தான் அதற்கு authority!

    ReplyDelete
  55. வாங்கினால் என்ன ஆகும் .....
    வங்கிக் கணக்கு வற்றி இருக்கும்

    கல்யாணம் செய்துப்பார்
    வீட்டை கட்டிப்பார்
    வில்லங்கத்தை வாங்கிப்பார்
    வழக்கு மன்றம் அழைக்கும்பார் .

    சுருக்கமாய் சொன்னால்
    சேர்த்து வைத்து வாங்கியது
    செல்லாக் காசாவதை
    செரிக்க முடியாமல் பார்த்துக் கொண்டு இருப்போம் .

    ReplyDelete
  56. ஜொதிட கடலெ! ஜொதிடத்தின் நல்ல பலனை பெறுவதர்கு என் ஜொதிடத்தையும், கற்கலையும், பெயர் எழுதும் முறையையும் பயன் படுத்துகிறொம். இதில் என் ஜொதிடத்தை எடுத்து இருபது மிகவும் சந்தொஷம் அளிகிறது. நன்றி ஜொதிட கடலெ.

    ReplyDelete
  57. SP.VR. SUBBAIYA said...
    ////Blogger அய்யர் said...
    numerology மட்டும் வைச்சு பார்க்கறது வேறே.. அத்துடன்
    namelogy and phrenologyயையும் சேர்த்துக்கிட்டு சொன்னாத்தான் பலன் சரியா இருக்கும்../////

    எல்லாம் சேர்ந்து அவியலாக வரும்.. பொறுத்திருந்து பாருங்கள்!

    அய்யரின் மொழியில் அவியலுக்கு இதான் அர்த்தமா?!!

    ReplyDelete
  58. அடேய், சொன்னா கேளுடா!

    உண்மை!!உண்மை!!உண்மை!! நான் அனுபவத்தில் கண்டு உணர்ந்தது.உணர்த்து கண்டது.

    ReplyDelete
  59. minorwall,thanusu said... ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?
    இதை ரெண்டு 'க்ளிக்' பண்ணி பெரிசா ஆனந்தத்தைக் கண்டுவிட்டேனே

    Minor,thanusu அவர்களே,பெரிதாக்கிவிட்டேன்.பயபடாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  60. தேமொழி said...
    ///டுபாக்கூர் வேலை செய்து விட்டார்///
    சாதாரண நீலக் கல் என்பது நிபுணருக்கே(?) தெரியமா என்னமோ :)). அவரை யாராவது ஏமாற்றி இருக்கலாம் அல்லவா?
    I am just giving him the benefit of the doubt. இவ்வாறு நினைத்து நானாக இருந்தால் அந்த ஜோதிட நிபுணரை உடனே தொடர்பு கொண்டு அவரை கவனமாக இருக்க சொல்வதன் மூலம் நான் ஏமாற்றப் பட்டேன் என்பதையும் உணர்தியிருப்பேன்.////

    கரெக்ட்! அவரும் அதைச் செய்திருக்கலாம்!

    அவருக்கும் சொன்னேன் சொன்னதை நேற்றே இரண்டாம் பின்னூட்டமாகவும் அனுப்பி இருந்தேன் .

    கடலூர், பாண்டி,திருச்சி ஆகிய இடங்களை விசாரித்தும் சாதாரணக் கல் என்றே சொன்னார்கள் .

    ஆனால் அவர் மட்டும் அதனை ஒத்துக் கொள்ளவில்லை ஒரிஜினல் என்றே சொன்னார்.

    ReplyDelete
  61. thanusu said...
    அவர் பெண் நக்கீரனுக்கு போட்டியாக வைத்துள்ளார்.////

    நான் என்றும் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை.நான்,நான்தான்,உமா,உமாதான்.

    ReplyDelete
  62. /// thanusu said...
    வாங்கினால் என்ன ஆகும் .....
    வங்கிக் கணக்கு வற்றி இருக்கும்
    கல்யாணம் செய்துப்பார்
    வீட்டை கட்டிப்பார்
    வில்லங்கத்தை வாங்கிப்பார்
    வழக்கு மன்றம் அழைக்கும்பார் .
    சுருக்கமாய் சொன்னால்
    சேர்த்து வைத்து வாங்கியது
    செல்லாக் காசாவதை
    செரிக்க முடியாமல் பார்த்துக் கொண்டு இருப்போம் .//////

    அதை அனைவரும் உணர்ந்து கொண்டால் சரிதான்!

    ReplyDelete
  63. /// seethalrajan said...
    ஜோதிடக் கடலே! ஜோதிடத்தின் நல்ல பலனை பெறுவதரற்கு என் ஜோதிடத்தையும், கற்களையும், பெயர் எழுதும் முறையையும் பயன் படுத்துகிறொம். இதில் என் ஜொதிடத்தை எடுத்து இருபது மிகவும் சந்தொஷம் அளிகிறது. நன்றி ////

    கடலும் இல்லை குட்டையும் இல்லை! எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். தட்டச்சு செய்தவுடன் ஒருமுறை படித்துப் பார்த்துப் பிழை திருத்தங்களைச் செய்த பிறகு, உங்கள் பின்னூட்டத்தை பதிவிற்கு அனுப்புங்கள்!

    ReplyDelete
  64. //// Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    ////Blogger அய்யர் said...
    numerology மட்டும் வைச்சு பார்க்கறது வேறே.. அத்துடன்
    namelogy and phrenologyயையும் சேர்த்துக்கிட்டு சொன்னாத்தான் பலன் சரியா இருக்கும்../////
    எல்லாம் சேர்ந்து அவியலாக வரும்.. பொறுத்திருந்து பாருங்கள்!
    அய்யரின் மொழியில் அவியலுக்கு இதான் அர்த்தமா?!!/////

    அதை அவர் சொன்னால் அல்லவா தெரியும்!

    ReplyDelete
  65. //// Ananthamurugan said...
    அடேய், சொன்னா கேளுடா!
    உண்மை!!உண்மை!!உண்மை!! நான் அனுபவத்தில் கண்டு உணர்ந்தது.உணர்த்து கண்டது./////

    எப்போது கண்டு உணர்ந்தீர்கள்?

    ReplyDelete
  66. //// Ananthamurugan said...
    minorwall,thanusu said... ஆனந்தமுருகன் அவர்களே,
    இன்னும் கொஞ்சம் சின்னதா போட்டோ இல்லையா உங்களிடம்?
    இதை ரெண்டு 'க்ளிக்' பண்ணி பெரிசா ஆனந்தத்தைக் கண்டுவிட்டேனே
    Minor,thanusu அவர்களே,பெரிதாக்கிவிட்டேன்.பயபடாமல் இருந்தால் சரி!//////

    படம் நன்றாக உள்ளது. திரைப்படங்களில் முயற்சி செய்திருக்கலாமே!

    ReplyDelete
  67. //// thanusu said...
    தேமொழி said...
    ///டுபாக்கூர் வேலை செய்து விட்டார்///
    சாதாரண நீலக் கல் என்பது நிபுணருக்கே(?) தெரியமா என்னமோ :)). அவரை யாராவது ஏமாற்றி இருக்கலாம் அல்லவா?
    I am just giving him the benefit of the doubt. இவ்வாறு நினைத்து நானாக இருந்தால் அந்த ஜோதிட நிபுணரை உடனே தொடர்பு கொண்டு அவரை கவனமாக இருக்க சொல்வதன் மூலம் நான் ஏமாற்றப் பட்டேன் என்பதையும் உணர்தியிருப்பேன்.////
    கரெக்ட்! அவரும் அதைச் செய்திருக்கலாம்!
    அவருக்கும் சொன்னேன் சொன்னதை நேற்றே இரண்டாம் பின்னூட்டமாகவும் அனுப்பி இருந்தேன் .
    கடலூர், பாண்டி,திருச்சி ஆகிய இடங்களை விசாரித்தும் சாதாரணக் கல் என்றே சொன்னார்கள் .
    ஆனால் அவர் மட்டும் அதனை ஒத்துக் கொள்ளவில்லை ஒரிஜினல் என்றே சொன்னார்.////

    ஏமாற்றியதை எந்த மனிதனும் ஒப்புக்கொள்ள மாட்டான்!

    ReplyDelete
  68. ///// Ananthamurugan said...
    thanusu said...
    அவர் பெண் நக்கீரனுக்கு போட்டியாக வைத்துள்ளார்.////
    நான் என்றும் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை.நான்,நான்தான்,உமா,உமாதான்./////

    ந்ல்லது. அதையே கடைப்பிடியுங்கள்!

    ReplyDelete
  69. ///SP.VR. SUBBAIYA said...
    அம்மையாரின் சொல்வீச்சிற்குப் போட்டியாக என்ன செய்வதாம்? ///

    தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......
    தமிழ் விரும்பி ஆலாசியம் said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!
    sriganeshh said... my dear didi...as i am one of your fan.
    R.Srishobana said... வெள்ளை கொடி காட்டிவிட்டேன்
    Parvathy Ramachandran said... மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Ananthamurugan said... உமா,உமாதான்.

    minorwall said...
    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'

    ReplyDelete
  70. SP.VR. SUBBAIYA said...
    எப்போது கண்டு உணர்ந்தீர்கள்?

    2003 ம் வருடம் நான் வாங்கிய மனை,அருகிலுள்ள கோயிலின் பராமரிப்புக்கு இதில்,விளைந்து வரும் விவசாயத்தின் ஒரு பகுதியை use பண்ணிகொள்ளவேண்டியது.என உயில் எழுதப்பட்டு இருந்தது.மனை வாங்கும் முன்பே நானும்,எனது நண்பர்களும் அதை பார்த்து,பிரபல வக்கீலிடம் legal openion வாங்கி வங்கி கடன்பெற்று வீடு கட்டிமுடித்தோம்.மொத்த செலவு சில லட்சங்கள்,இன்றைய மதிப்பு 35 லட்சத்திருக்கு மேல்.மதிப்பு சேர்த்துள்ளது.இழப்புகள் பல.(அதையே பொருளாக கொள்க).இழப்புகளை நான் பட்டியலிட்டு இது போன்ற சூழ்நிலையில் இடம் வாங்கியவர்களின் மனதை பயமுறுத்த விரும்பவில்லை.ஆனால்,நான் நினைத்தது உண்டு.எனக்கு போதாத காலமோ?என்று,இல்லை என்று பின்னாளில் தெரித்து கொண்டேன்.

    ReplyDelete
  71. SP.VR. SUBBAIYA said...
    //படம் நன்றாக உள்ளது. திரைப்படங்களில் முயற்சி செய்திருக்கலாமே!//

    தங்களின் மேலான நகைசுவைக்கு நன்றி அய்யா!!!

    ReplyDelete
  72. minorwall said...
    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது என்பதால் மோசம் என்ற வார்த்தைக்கு இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்..
    sriganeshh said...
    sir,
    SP என்ற எண்களின் கூட்டுத்தொகை 11...ஆக மொத்தம் 2. இதை சந்திரன் ஆதிக்க எண் என்பர். ஆனால் இது சுக்கிரனின் ஆதிக்க நம்பர். ஆகையால் மறைவிட சுக்கிரனை (8 ம் இடம்) சக்தி ஊட்டியவுடன் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகியது

    thanusu said...
    பண்டிட் சேதுராமன் அவர்களின் புத்தகம் தான் முதல் அறிமுகம்.ஒரு ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் ஷாப்பிங்கில் இருக்கும் போது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் இவரின் எண் கணித புத்தகம் வாங்கினேன் .அதன் பின் தான் ஜோதிடத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது

    அய்யர் said...
    வரட்டும் கூடவே நம்ம கலை வருதான்னு பார்ப்போம்..
    இல்லே..
    ஒரு "கை" பார்ப்போம்...

    உஷாரயையா உஷாரு!!"கரணம் தப்பினால் மரணம்"அப்பிடின்னு நினைத்துதான் இதை எழுத வேண்டும்.திரு.அய்யர்,நேரடி களத்தில் "பிரம்மாஸ்ஸ்திரம்"உடன் உள்ளார்.மேலும் பலரும்.என்னிடமும் எண்கணித புத்தகங்கள் உண்டு.ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவனை(சுப்பையா அய்யாவை)மறைக்க முடியுமா?! (சொல்ல வந்ததை சொல்லியாச்சு கடைசியா) சும்மா தமாசு!!!

    ReplyDelete
  73. ////Blogger தேமொழி said...
    ///SP.VR. SUBBAIYA said...
    அம்மையாரின் சொல்வீச்சிற்குப் போட்டியாக என்ன செய்வதாம்? ///
    தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......
    தமிழ் விரும்பி ஆலாசியம் said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!
    sriganeshh said... my dear didi...as i am one of your fan.
    R.Srishobana said... வெள்ளை கொடி காட்டிவிட்டேன்
    Parvathy Ramachandran said... மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Ananthamurugan said... உமா,உமாதான்.
    minorwall said...
    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'//////

    அதானே, சூரியன் உதிக்காமலா போய்விடுவான்?
    சூரியன் உதித்தாலும் பின்னூட்டம் போடுகிறீர்கள். சந்திர உதயத்திற்கும் பின்னூட்டம் போடுகின்றீர்கள். அதுதான் உங்களின் ஸ்பெஷாலிட்டி!

    ReplyDelete
  74. ////Blogger Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    எப்போது கண்டு உணர்ந்தீர்கள்?
    2003 ம் வருடம் நான் வாங்கிய மனை,அருகிலுள்ள கோயிலின் பராமரிப்புக்கு இதில்,விளைந்து வரும் விவசாயத்தின் ஒரு பகுதியை use பண்ணிகொள்ளவேண்டியது.என உயில் எழுதப்பட்டு இருந்தது.மனை வாங்கும் முன்பே நானும்,எனது நண்பர்களும் அதை பார்த்து,பிரபல வக்கீலிடம் legal openion வாங்கி வங்கி கடன்பெற்று வீடு கட்டிமுடித்தோம்.மொத்த செலவு சில லட்சங்கள்,இன்றைய மதிப்பு 35 லட்சத்திருக்கு மேல்.மதிப்பு சேர்த்துள்ளது.இழப்புகள் பல.(அதையே பொருளாக கொள்க).இழப்புகளை நான் பட்டியலிட்டு இது போன்ற சூழ்நிலையில் இடம் வாங்கியவர்களின் மனதை பயமுறுத்த விரும்பவில்லை.ஆனால்,நான் நினைத்தது உண்டு.எனக்கு போதாத காலமோ? என்று,இல்லை என்று பின்னாளில் தெரித்து கொண்டேன்./////

    சரி, விடுங்கள். அனுபவம்தான் சிறந்த் ஆசான்!

    ReplyDelete
  75. ////Blogger Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    //படம் நன்றாக உள்ளது. திரைப்படங்களில் முயற்சி செய்திருக்கலாமே!//
    தங்களின் மேலான நகைசுவைக்கு நன்றி அய்யா!!!////

    சேரன், விஷால் போன்றவர்களை எல்லாம் ஒப்புக்கொண்ட மக்கள் உங்களை ஒப்புக்கொள்ள மாடடார்களா என்ன?

    ReplyDelete
  76. Blogger Ananthamurugan said...
    minorwall said...
    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது என்பதால் மோசம் என்ற வார்த்தைக்கு இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்..
    sriganeshh said...
    sir,
    SP என்ற எண்களின் கூட்டுத்தொகை 11...ஆக மொத்தம் 2. இதை சந்திரன் ஆதிக்க எண் என்பர். ஆனால் இது சுக்கிரனின் ஆதிக்க நம்பர். ஆகையால் மறைவிட சுக்கிரனை (8 ம் இடம்) சக்தி ஊட்டியவுடன் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகியது
    thanusu said...
    பண்டிட் சேதுராமன் அவர்களின் புத்தகம் தான் முதல் அறிமுகம்.ஒரு ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் ஷாப்பிங்கில் இருக்கும் போது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் இவரின் எண் கணித புத்தகம் வாங்கினேன் .அதன் பின் தான் ஜோதிடத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது
    அய்யர் said...
    வரட்டும் கூடவே நம்ம கலை வருதான்னு பார்ப்போம்..
    இல்லே..
    ஒரு "கை" பார்ப்போம்...
    உஷாரயையா உஷாரு!!"கரணம் தப்பினால் மரணம்"அப்பிடின்னு நினைத்துதான் இதை எழுத வேண்டும்.திரு.அய்யர்,நேரடி களத்தில் "பிரம்மாஸ்ஸ்திரம்"உடன் உள்ளார்.மேலும் பலரும்.என்னிடமும் எண்கணித புத்தகங்கள் உண்டு.ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவனை(சுப்பையா அய்யாவை)மறைக்க முடியுமா?! (சொல்ல வந்ததை சொல்லியாச்சு கடைசியா) சும்மா தமாசு!!!/////

    அதானே! கடைசி வார்த்தைக்காக விட்டுவிட்டேன்!

    ReplyDelete
  77. தேமொழி said...
    // 1=A, 2=B என்று ஆரம்பித்து செய்து பார்த்தேன். ஆனால் உங்கள் பெயரில் H=5 என்று இருக்கவும் குழம்பி விட்டேன். அடுத்த பாடத்தில் விளக்குவீர்களா?//

    முதன் முதலில் சகோதரிக்கு சந்தேகம்?!என்ன ஆச்சரியம்!?நீங்கள் வழக்கமாக தேடும் "விக்கி விசாலாட்சி,கூகுள் காமாட்சி,யாஹூ மீனாட்சி,பிங்(bing) பெரியநாயகி,பிரதர்சாப்ட்(brother soft) பிச்சுமணி,ஆஸ்க் (ask) ஆதிலட்சுமி.
    யாரும் கை கொடுக்கவில்லையா??!! "தனி ஒரு மனிதனுக்கு சந்தேகம் தீரவில்லைஎனில்,இணையத்தை அளிப்போம்"அப்பிடீன்னு நான் சொல்லுறேன்.

    ReplyDelete
  78. எண் கணித ஜோதிடத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  79. மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது //

    என்னாது? குரு கரகம் ஆடினாரா? அது எப்போ? காணொளி இருந்தால் அனுப்பி வையுங்கள்!!!!!!!!!!!

    ReplyDelete
  80. அவர் கேது ஆதிக்கத்தில் வருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும்..அது அவரை பாலிடிக்ஸ் லிருந்து விலக்கி சன்னியாச வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லும் என்று நினைக்கிறேன்.//

    இது புரியவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  81. தேமொழி said...

    தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......
    தமிழ் விரும்பி ஆலாசியம் said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!
    sriganeshh said... my dear didi...as i am one of your fan.
    R.Srishobana said... வெள்ளை கொடி காட்டிவிட்டேன்
    Parvathy Ramachandran said... மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Ananthamurugan said... உமா,உமாதான்.

    அன்பார்ந்த ஒட்டுள்ளவர்களே!! எங்களது MDMK (மைனர்ரோட dmk ) சார்பில் ஓட்டளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்."ஈட்டி எட்டிய மட்டும் பாயும்,பணம் பாதளம் மட்டும் பாய்ந்து விட்டதை" இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் மைனரின் சார்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்.யாருக்குமே ஓட்டு போடாத தேமொழியை வன்மையாக கண்டிக்கிறோம்.வெற்றி,தோல்வியெல்லாம் அரசியலில் சாதரணமப்பா?!!........பிரிவோம்!!........சிந்திப்போம்?!............சந்திப்போம்!!!

    ReplyDelete
  82. அவர் பெண் நக்கீரனுக்கு போட்டியாக வைத்துள்ளார்.//

    அதான் மாத்திட்டாரே!!! அவருக்குப் போட்டியாக நான் இன்னமும் மாற்றவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்.

    ReplyDelete
  83. இதனால் அவர்கள் தலைஎழுத்து மாறிவிட்டது என்று அர்த்தமா//

    அப்போ அப்படியில்லையா? பெண்கள் திருமணமானவுடன் வேறு குடும்ப சூழல், பொறுப்புகள், புதிய மனிதர்கள் என எல்லாமே மாறத்தானே செய்கிறது?

    ReplyDelete
  84. தட்டச்சு பிழை மன்னிகவும் ஐயா. எண் கணிதம்.

    ReplyDelete
  85. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சீட்டு ஒதுக்குவது கூட//

    அதுமட்டுமா? பதவியேற்பு, அரசாணைகளில் கையெழுத்து போடுவது, இடைத்தேர்தலுக்கு அனுப்பும் அமைச்சர்களின் கூட்டுத்தொகை என இப்போது இருக்கும் முதல்வர் எல்லாவற்றையுமே எண் கணித ஜோதிடப்படிதான் செய்கிறார்.

    ReplyDelete
  86. இப்போது பல பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே பாஸ்போர்ட் எடுத்துவிடுவதால், திருமணத்திற்குப் பிறகு நீங்கள் குறிப்பிடும் மாற்றம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை!//

    வட இந்தியாவில் பெண்கள் அனைவரும் திருமணத்திற்குப் பின் தங்கள் surname ஐ பாஸ்போர்ட்டில் மாற்றவே செய்கிறார்கள்.

    ReplyDelete
  87. தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......//

    ம்ம் உங்களுக்கு ஒரு பார்ட்டி நிச்சயம்.

    ReplyDelete
  88. //////// SP.VR. SUBBAIYA said...
    Blogger Ananthamurugan said... உஷாரயையா உஷாரு!!"கரணம் தப்பினால் மரணம்"அப்பிடின்னு நினைத்துதான் இதை எழுத வேண்டும்.திரு.அய்யர்,நேரடி களத்தில் "பிரம்மாஸ்ஸ்திரம்"உடன் உள்ளார்.மேலும் பலரும்.என்னிடமும் எண்கணித புத்தகங்கள் உண்டு.ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவனை(சுப்பையா அய்யாவை)மறைக்க முடியுமா?! (சொல்ல வந்ததை சொல்லியாச்சு கடைசியா) சும்மா தமாசு!!!/////

    அதானே! கடைசி வார்த்தைக்காக விட்டுவிட்டேன்!///////

    ஏன் சார் இப்புடி?கைவசம் வேற எழுத ஸ்டாக் ஒண்ணும் இல்லியா?ஏற்கனவே நீங்க போட்ட பதிவையே காப்பி பேஸ்ட் பண்ணிட்டு தலைப்புலே 'என்னடா) என்று 'டா' மட்டும் போட்டு சத்தம் போடாம மேட்டரை முடிச்சுட்டீங்களே,,

    http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post.html
    லின்க்கை க்ளிக்கி பார்த்தா தெரியுது..
    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்ததுனாலே ஞாபகத்துலே இருக்காதுன்னு நினைச்சுட்டீங்களா?

    //// தேமொழி said...
    நன்றி ஐயா, ஆனால் எனக்குப் பாடம் பொதுவாகத்தான் புரிந்தது. இந்த எண்களை ஒவ்வொரு எழுத்துக்கும் எப்படி கொடுத்தீர்கள் என்பது புரியவில்லை. 1=A, 2=B என்று ஆரம்பித்து செய்து பார்த்தேன். ஆனால் உங்கள் பெயரில் H=5 என்று இருக்கவும் குழம்பி விட்டேன். அடுத்த பாடத்தில் விளக்குவீர்களா?//////

    மேலே சொன்ன லின்க்கிலே எற்கனவே டீடெயிலா பாடம் நடத்தியிருக்கேன்..படிச்சுப் பாருங்க..

    ReplyDelete
  89. ஏமாற்றியதை எந்த மனிதனும் ஒப்புக்கொள்ள மாட்டான்!

    சரிதான்!கோடி ரூபாய் பரிசு என தொ(ல்)லைகாட்சிகளில் நடக்கும் show களில்,மூலம் எத்தனை கோடிகள்!!!!!!!சம்பாதித்து விட்டனர்.செலக்ட் ஆவதற்கு தினமும் இரண்டு sms அனுப்பவேண்டும்.ஒரு sms க்கு ஆறு அல்லது ஒன்பது ரூபாய் வசூல் செய்கின்றன மொபைல் நிறுவனங்கள்.சராசரி லட்சகணக்கான sms வாரத்துக்கு குறைந்தது 20 கோடி ரூபாய்கள் மேலும்,விளம்பரங்கள்,இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் நேரம் எப்பொழுது.....இது நேற்றைய கேள்வி....உட்காரும்போது,ஓடும்போது,குதிக்கும்போது,உறங்கும்போது.........என்னடா!எவ்வளவு ஈஸியாக இருக்கிறதே என்று sms போட்டால் நம்மை முட்டாளாக்கும் லிஸ்டில் நாமே போய் சேர்ந்து கொள்வது போலாகும்.எலிப்பொறியில் வைக்கப்படும் வடை போல.................சிந்திக்கவேண்டும்.(எப்பொழுதும் ஜோக் அடிக்கிறான் என்ற நினைப்பில் இதையும் ஜோக் ஆக்க வேண்டாம்)

    ReplyDelete
  90. தெலுங்கு சகோதர சகோதரிகளுக்கு தெலுங்கு வருட பிறப்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  91. அய்யா வணக்கம்,
    படிக்கதவறிய அரிய கருத்துக்கலை வகுப்பரையில் பதிவு செய்து, எங்கலுக்கு படிக்க நல்ல வாய்ப்பு அளித்த தங்கலுக்கு நன்றி.
    உமையல் பதிப்பகத்துக்கு மெயில் அனுப்பியிருந்தேன்.இன்னும் புத்தகம்(செட்டினாட்டு மண்வாசனை கதைகல்) வரவில்லை.தயவு செய்து அனுப்பிவைக்கவும். வாழ்க வளமுடன். நன்றியுடன் அரிபாய்.

    ReplyDelete
  92. //////Blogger Uma said...
    எண் கணித ஜோதிடத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.////

    தலைவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய பின்னூட்டத்தைப் பாருங்கள். எதிர்க்கட்சித்தலைவியாவது ஆர்வத்துடன் இருக்கிறீர்களே! அதற்கு நன்றி

    ReplyDelete
  93. /////Blogger Uma said...
    இதனால் அவர்கள் தலைஎழுத்து மாறிவிட்டது என்று அர்த்தமா//
    அப்போ அப்படியில்லையா? பெண்கள் திருமணமானவுடன் வேறு குடும்ப சூழல், பொறுப்புகள், புதிய மனிதர்கள் என எல்லாமே மாறத்தானே செய்கிறது?////

    ஜாதகம்தான் பிரதானம். எண் கணிதம் சைடு டிஷ் மட்டுமே! சில சமயம் சைடு டிஷ் கைகொடுக்கும்!

    ReplyDelete
  94. /////Blogger Uma said...
    அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சீட்டு ஒதுக்குவது கூட//
    அதுமட்டுமா? பதவியேற்பு, அரசாணைகளில் கையெழுத்து போடுவது, இடைத்தேர்தலுக்கு அனுப்பும் அமைச்சர்களின் கூட்டுத்தொகை என இப்போது இருக்கும் முதல்வர் எல்லாவற்றையுமே எண் கணித ஜோதிடப்படிதான் செய்கிறார்./////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  95. /////Blogger Uma said...
    இப்போது பல பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே பாஸ்போர்ட் எடுத்துவிடுவதால், திருமணத்திற்குப் பிறகு நீங்கள் குறிப்பிடும் மாற்றம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை!//
    வட இந்தியாவில் பெண்கள் அனைவரும் திருமணத்திற்குப் பின் தங்கள் surname ஐ பாஸ்போர்ட்டில் மாற்றவே செய்கிறார்கள்./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  96. ///////Blogger minorwall said...
    //////// SP.VR. SUBBAIYA said...
    Blogger Ananthamurugan said... உஷாரயையா உஷாரு!!"கரணம் தப்பினால் மரணம்"அப்பிடின்னு நினைத்துதான் இதை எழுத வேண்டும்.திரு.அய்யர்,நேரடி களத்தில் "பிரம்மாஸ்ஸ்திரம்"உடன் உள்ளார்.மேலும் பலரும்.என்னிடமும் எண்கணித புத்தகங்கள் உண்டு.ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவனை(சுப்பையா அய்யாவை)மறைக்க முடியுமா?! (சொல்ல வந்ததை சொல்லியாச்சு கடைசியா) சும்மா தமாசு!!!/////
    அதானே! கடைசி வார்த்தைக்காக விட்டுவிட்டேன்!///////
    ஏன் சார் இப்புடி?கைவசம் வேற எழுத ஸ்டாக் ஒண்ணும் இல்லியா?ஏற்கனவே நீங்க போட்ட பதிவையே காப்பி பேஸ்ட் பண்ணிட்டு தலைப்புலே 'என்னடா) என்று 'டா' மட்டும் போட்டு சத்தம் போடாம மேட்டரை முடிச்சுட்டீங்களே,,
    http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post.html லின்க்கை க்ளிக்கி பார்த்தா தெரியுது..
    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்ததுனாலே ஞாபகத்துலே இருக்காதுன்னு நினைச்சுட்டீங்களா?//////

    உங்களைப்போல நினைவாற்றல் சிகாமணிகள் இருப்பீர்கள் என்று தெரியாதா? எத்தனை பேர்கள். அதை நினைவுகூறுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக விட்டுவைத்தேன். உங்களைத் தவிர வேறு யாருக்கு நினைவு வந்தது சொல்லுங்கள்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  97. /////Blogger aryboy said...
    அய்யா வணக்கம்,
    படிக்கதவறிய அரிய கருத்துக்கலை வகுப்பரையில் பதிவு செய்து, எங்கலுக்கு படிக்க நல்ல வாய்ப்பு அளித்த தங்கலுக்கு நன்றி.
    உமையல் பதிப்பகத்துக்கு மெயில் அனுப்பியிருந்தேன்.இன்னும் புத்தகம்(செட்டினாட்டு மண்வாசனை கதைகல்) வரவில்லை.தயவு செய்து அனுப்பிவைக்கவும். வாழ்க வளமுடன். நன்றியுடன் அரிபாய்.//////

    பொறுத்திருங்கள். அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்!

    ReplyDelete
  98. ///Blogger தேமொழி said...
    ///SP.VR. SUBBAIYA said...
    அம்மையாரின் சொல்வீச்சிற்குப் போட்டியாக என்ன செய்வதாம்? ///
    தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......
    தமிழ் விரும்பி ஆலாசியம் said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!
    sriganeshh said... my dear didi...as i am one of your fan.
    R.Srishobana said... வெள்ளை கொடி காட்டிவிட்டேன்
    Parvathy Ramachandran said... மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Ananthamurugan said... உமா,உமாதான்.
    minorwall said...
    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'//////

    'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தர்மம் மறுபடியும் வெல்லும்'

    என்று எதிர்காலத்தின் குறியீட்டை உணர்ந்து எடுத்து விளக்கியதற்கு நன்றி தேமொழி அவர்களே..

    ReplyDelete
  99. SP.VR. SUBBAIYA said...
    //////Blogger Uma said...
    எண் கணித ஜோதிடத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.////

    தலைவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய பின்னூட்டத்தைப் பாருங்கள். எதிர்க்கட்சித்தலைவியாவது ஆர்வத்துடன் இருக்கிறீர்களே! அதற்கு நன்றி

    தலைவிக்கு என்னிக்கு எது ஞாபகத்துலே இருந்துச்சு..?
    'நேத்திய பேச்சு விடிஞ்சா போச்சு' ங்குறதுதான் அவுங்க பாலிசி..
    அவுகளைப் போயி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் ஞாபகத்துலே வெச்சுக்கச் சொன்னா எப்பூடி?

    ReplyDelete
  100. ////////Ananthamurugan said...
    தேமொழி said...

    தேர்தல் முடிவுகள் அறிவிப்பு:
    எதிர் கட்சித் தலைவி வெற்றி வாகை சூடுகிறார்.......
    தமிழ் விரும்பி ஆலாசியம் said... எங்கள் ஓட்டு உமாவிற்கே!
    sriganeshh said... my dear didi...as i am one of your fan.
    R.Srishobana said... வெள்ளை கொடி காட்டிவிட்டேன்
    Parvathy Ramachandran said... மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Ananthamurugan said... உமா,உமாதான்.

    அன்பார்ந்த ஒட்டுள்ளவர்களே!! எங்களது MDMK (மைனர்ரோட dmk ) சார்பில் ஓட்டளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்."ஈட்டி எட்டிய மட்டும் பாயும்,பணம் பாதளம் மட்டும் பாய்ந்து விட்டதை" இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் மைனரின் சார்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்.யாருக்குமே ஓட்டு போடாத தேமொழியை வன்மையாக கண்டிக்கிறோம்.வெற்றி,தோல்வியெல்லாம் அரசியலில் சாதரணமப்பா?!!........பிரிவோம்!!........சிந்திப்போம்?!............சந்திப்போம்!!////////

    'வாழ்க்கைப் பாதையின் தேர்தல் படிக்கட்டுகளில் சேர்ந்து பயணிக்கும் பயணிகளின் தடாலடி வேலைகளில் சோர்வுறாது உற்சாகத்துடன் அடுத்த படிக்கட்டு நோக்கி நம் இயக்கத்தின் நகர்வை முன்னெடுத்துச் செல்வதுதான் நமக்கு உண்மையில் ஆனந்தம்..' என்று ஆனந்தத்தைப் போதிப்பதற்காகவே புது அவதாரமாக இன்று விஸ்வரூபம் (photo) கொண்ட இயக்க முன்னோடி ஆனந்தமுருகன் அவர்களை வாழ்த்தி வாக்களித்த அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகளைத் உரித்தாக்கிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  101. ////SP.VR. SUBBAIYA said...
    உங்களைப்போல நினைவாற்றல் சிகாமணிகள் இருப்பீர்கள் என்று தெரியாதா? எத்தனை பேர்கள். அதை நினைவுகூறுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக விட்டுவைத்தேன். உங்களைத் தவிர வேறு யாருக்கு நினைவு வந்தது சொல்லுங்கள்?//////

    வாத்தியார் அய்யா அவர்கள் தங்களின் சொந்தப் பதிவை காப்பி பேஸ்ட் பண்ணி மீள் பதிவிட யாரையும் கேட்கவேண்டியதில்லை..

    என்ற போதிலும் என் பின்னூட்டத்தை வெளியிட்டு அதற்கு நான் என்ன யோசித்து வைத்திருந்தேனோ அதே சரியான பதிலையும் வெளியிட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கழக முன்னோடி
    என்று தங்களின் சீரிய பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்..

    கணக்குக் கேட்டால் கட்டம் கட்டப்படும் இந்தக் காலத்திலே
    உள்கட்சி ஜனநாயகம் என்ற உண்மையை இங்கே உலகுக்கு உணர்த்த வந்த திருவிளையாடலே இது..நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  102. //////தேமொழி said...
    minorwall said...
    'ஆனாலும் மறுபொழுது புலரும்..
    சூரியன் மீண்டும் உதிப்பான்..'////

    //////Ananthamurugan said...யாருக்குமே ஓட்டு போடாத தேமொழியை வன்மையாக கண்டிக்கிறோம்./////

    தேமொழி அவர்கள் நேரடியாக பூத்துக்கு வராததால் இப்படி ஒரு தகவல் பரவிவிட்டது..

    அவர்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திலே இருந்த காரணத்தால் வாக்கை தபால் மூலம் சேர்த்து ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றிவிட்டார்கள்(தமிழ்விரும்பி எக்ஸ்க்யூஸ்)

    நமது பதில் அறிக்கையை அனைத்து எதிர்கட்சிக்கார்களுக்கும் செய்தியாகத் தொகுத்து அளித்தும் இருக்கிறார்.

    அந்த ஜான்சி ராணியை, ஜானகிதேவியை, நெருப்பாற்றிலே நீந்தச் சொல்லி வேதனைச்சோதனை செய்யவேண்டாம் ஆனந்த முருகன் அவர்களே..

    ReplyDelete
  103. Ananthamurugan said...எலிப்பொறியில் வைக்கப்படும் வடை போல.................சிந்திக்கவேண்டும்.

    வடை விடையே பெறாது போலிருக்கே

    ReplyDelete
  104. ///minorwall said... ///
    மேலே சொன்ன லின்க்கிலே எற்கனவே டீடெயிலா பாடம் நடத்தியிருக்கேன்..படிச்சுப் பாருங்க..

    நன்றி மைனர், அத்துடன் எழுத்துக்களின் ஒலி அலைவரிசை பற்றி ஆராயும் உங்கள் ஆராய்ச்சியின் ஆர்வமும் எண்ணத்தைக் கவர்ந்தது, மேலும் சிந்திக்கவும் வைத்தது. நான் கொஞ்சம் இசையின் அடிப்படையில் சிந்தித்தேன். வாத்தியார் சொல்வது போல் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி. இந்தப் பாடத்திற்கு கருத்து எழுதிய பலரும் அன்றும் எழுதியுள்ளார்கள், ஆனால் நீங்கள் மட்டும்தான் நினைவு வைத்துள்ளீர்கள். ஜப்பானிய உணவு செய்யும் மகிமையோ?

    ///வாக்கை தபால் மூலம் சேர்த்து ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றிவிட்டார்கள்///

    ஹ.ஹ.ஹா... என்னைப் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கு உங்களுக்கு. வீட்டிலயே மச மசன்னு உட்கார்ந்துகிட்டு வாக்கை தபாலில் அனுப்புவதுதான் வழக்கம், ஆனாலும் ஜனநாயகக் கடமை தவறுவதில்லைத்தான்.

    ///அந்த ஜான்சி ராணியை, ஜானகிதேவியை, நெருப்பாற்றிலே நீந்தச் சொல்லி வேதனைச்சோதனை செய்யவேண்டாம் ஆனந்த முருகன் அவர்களே.. ///

    மீண்டும் நன்றி மைனர், நெருப்பாற்றிலே நீந்தரதாவது? சாதா ஆற்றிலயே நீந்தினது கிடையாது. கடப்பாரை நீச்சல் மட்டுமே தெரியும்.
    ஜானகிதேவி ...இந்தப் பெயர் பிடிச்சிருக்கு, எங்கம்மா பெயர் ஜானகி என்பதால். ஜானகியின் மகள் ஜானகிதேவி... தசரதராமன் அப்படின்னு வழக்கமா சொல்ற மாதிரி இருக்கு.
    கமலின் பெரும்பாலான நகைச் சுவை படங்களின் கதாநாயகியின் பெயர் ஜானகிதான், அதற்கு காரணம் கமலஹாசனா, க்ரேஸி மோகனா எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  105. எந்த விஷயத்தில் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கிறதோ அந்த விஷயம் மனதைவிட்டு அகலுவதில்லை..

    மனதிலே இடம்பிடித்தவை மூளையின் மெமரியைவிட்டும் அகலுவதில்லை..

    உணவுப் பழக்கங்கள் இன்னமும் அதிகபட்சமாக தமிழக வகைகளே. நன்றி ஜானகி..

    ReplyDelete
  106. தலைவிக்கு என்னிக்கு எது ஞாபகத்துலே இருந்துச்சு..?
    'நேத்திய பேச்சு விடிஞ்சா போச்சு' ங்குறதுதான் அவுங்க பாலிசி..//

    பதிவைப் படித்ததுமே மீள்பதிவு என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை நான் எப்போதும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை, ஏனெனில் தேவையான இடங்களில் எப்போதுமே வாத்தியார் பழைய பதிவுகளில் எழுதியதை உயயோகப்படுத்திக்கொள்வார். மேலும் முன்னர் பாதியில் இதை விட்டுவிட்டதால் இப்போது தொடரப்போகிறார் என்பதும் புரிந்தது. மற்றபடி நான் படித்த / பார்த்த / கேட்ட விஷயங்கள் எப்போதுமே நினைவில் இருக்கும். அதுவும் வாத்தியாரின் ஜோதிடப்பாடங்களை ஒரு முறைக்கு மூன்று முறை படித்திருக்கிறேன். இன்னொரு ரவுண்டும் படிக்க ஆரம்பிக்கப்போகிறேன். அவர் வண்டி வாங்கியபோது கூட்டு எண் எட்டு என வரும்படி வாங்கியதை எழுதியது கூட இன்னும் நினைவில் இருக்கிறது. புதன் ஆறில் இருந்தாலும் ஆட்சியில், நவாம்சத்தில் இரண்டில் ராகுவுடன். புரிஞ்சுதா???

    ReplyDelete
  107. உள்கட்சி ஜனநாயகம் என்ற உண்மையை இங்கே உலகுக்கு உணர்த்த வந்த திருவிளையாடலே இது..நன்றி..வணக்கம்..//

    ம்க்கும்!

    ReplyDelete
  108. /////Uma said...//தலைவிக்கு என்னிக்கு எது ஞாபகத்துலே இருந்துச்சு..?

    'நேத்திய பேச்சு விடிஞ்சா போச்சு' ங்குறதுதான் அவுங்க பாலிசி..//

    மற்றபடி நான் படித்த / பார்த்த / கேட்ட விஷயங்கள் எப்போதுமே நினைவில் இருக்கும்/////

    தலைவி..ரொம்ப சூடா இருக்கீங்க போலே..சொன்னது ஒரிஜினல் தலைவியைப் பத்தி.. கூல்...

    ReplyDelete
  109. ///Uma said...
    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது //

    என்னாது? குரு கரகம் ஆடினாரா? அது எப்போ? காணொளி இருந்தால் அனுப்பி வையுங்கள்!!!!!!!!!!!////

    ///Uma said...
    மற்றபடி குரு கரகம் மேன்மைக்குரியது //

    என்னாது? குரு கரகம் ஆடினாரா? அது எப்போ? காணொளி இருந்தால் அனுப்பி வையுங்கள்!!!!!!!!!!!////

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..

    வெற்றி மமதையில் தமிழர் கலையாம் கரகத்தைக் கண்டு எள்ளி நகையாடுகிறீரோ?

    உங்களை ஈர்த்த சல்சா,பாலே என்று அந்நிய நடனங்கள் அளவுக்கு சொந்த மண்ணின் கலை ஈர்க்கவில்லையோ?

    ReplyDelete
  110. தேர்தல் ரிசல்ட் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது..

    பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிப் பொதுமக்களை எரிப்பது என்று கலவரத்தில் ஈடுபடுவது மாபெரும் தவறு..
    யார்யார் எதிரிகள் என்று அடையாளம் கண்டு அவர்களைத் தனியாக பஸ்ஸைவிட்டு இறக்கிவிட்டு
    பெட்ரோலோ,டீசலோ, மண்ணெண்ணையோ ஊத்திக் கொளுத்திவிடுதலே முறையாகும்..
    இதிலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் இயக்கத்தோழர்கள் அமைதியாக உணர்வுகளைப் புரிந்துகொண்டு
    விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று செயலாற்றும்படி வேண்டிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  111. ///minorwall said...
    தேர்தல் ரிசல்ட் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது..
    பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிப் பொதுமக்களை எரிப்பது என்று கலவரத்தில் ஈடுபடுவது மாபெரும் தவறு..
    யார்யார் எதிரிகள் என்று அடையாளம் கண்டு அவர்களைத் தனியாக பஸ்ஸைவிட்டு இறக்கிவிட்டு
    பெட்ரோலோ,டீசலோ, மண்ணெண்ணையோ ஊத்திக் கொளுத்திவிடுதலே முறையாகும்..
    இதிலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் இயக்கத்தோழர்கள் அமைதியாக உணர்வுகளைப் புரிந்துகொண்டு
    விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று செயலாற்றும்படி வேண்டிக்கொள்கிறேன்///

    இந்த சம்பவம் தான் எனக்கு 'போலி' தலைவியின் மீது இன்றும் வரை வெறுப்பு தோன்ற காரணம்...அக்கட்சிக்கு நான் என் முதல் ஓட்டுரிமையை பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு எதிராக வாக்களித்ததும் அதனால் தான்...
    அதற்காக தன் சொந்தங்களுக்காக மட்டுமே அதிகம் உழைக்கும் 'தலைவரின்' எண்ணத்தையும் மறக்க முடியுமா?...அதனால் தான் அடுத்த முறை 49 - O க்கு "ஓட்டு" போட எண்ணியுள்ளேன்...

    ReplyDelete
  112. ///minorwall said...
    தேர்தல் ரிசல்ட் காரணமாக ஆங்காங்கே சிறுசிறு வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது..
    பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிப் பொதுமக்களை எரிப்பது என்று கலவரத்தில் ஈடுபடுவது மாபெரும் தவறு..
    யார்யார் எதிரிகள் என்று அடையாளம் கண்டு அவர்களைத் தனியாக பஸ்ஸைவிட்டு இறக்கிவிட்டு
    பெட்ரோலோ,டீசலோ, மண்ணெண்ணையோ ஊத்திக் கொளுத்திவிடுதலே முறையாகும்..
    இதிலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் இயக்கத்தோழர்கள் அமைதியாக உணர்வுகளைப் புரிந்துகொண்டு
    விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று செயலாற்றும்படி வேண்டிக்கொள்கிறேன்///

    இந்த சம்பவம் தான் எனக்கு 'போலி' தலைவியின் மீது இன்றும் வரை வெறுப்பு தோன்ற காரணம்...அக்கட்சிக்கு நான் என் முதல் ஓட்டுரிமையை பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு எதிராக வாக்களித்ததும் அதனால் தான்...
    அதற்காக தன் சொந்தங்களுக்காக மட்டுமே அதிகம் உழைக்கும் 'தலைவரின்' எண்ணத்தையும் மறக்க முடியுமா?...அதனால் தான் அடுத்த முறை 49 - O க்கு "ஓட்டு" போட எண்ணியுள்ளேன்...

    ReplyDelete
  113. நான் எண் கணிதத்தில் சிறிது ஆர்வம் கொண்டிருந்த போது எனது உறவினர் எனக்கு பண்டிட் சேதுராமன் எழுதிய பொத்தகத்தை பரிசாக தந்தார். நானும் சென்னை சென்றால் அவரை பார்த்து சிறந்த முறையில் என் பெயரை வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருந்தேன். அவர் மந்தைவெளி\மைலாப்பூர் பக்கம் தான் குடியிருந்தார். அவரின் போதாத காலம் எல்லாருக்கும் பெயர் மாற்றி வளமோட வாழ வழி செய்தவர் (அவர் பொத்தகத்துல விளக்கம் கொடுத்திருப்பார்) 56 வயதிலேயே இறந்துவிட்டார்.

    ReplyDelete
  114. ஒன்று என்று வரும் எண்ணில் பிறந்தவர்களுக்கு பெயரின் கூட்டுத்தொகை 10, 19, 28, 37, 46, 55, 64, .. போன்ற எண்களில் வந்தால் நல்ல எண்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 28ந் தேதி பிறந்தவர்களுக்குமா 28 நல்ல எண் அல்ல என்கிறீர்கள்.

    ReplyDelete
  115. This comment has been removed by the author.

    ReplyDelete
  116. ///குறும்பன் said...
    ஒன்று என்று வரும் எண்ணில் பிறந்தவர்களுக்கு பெயரின் கூட்டுத்தொகை 10, 19, 28, 37, 46, 55, 64, .. போன்ற எண்களில் வந்தால் நல்ல எண்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 28ந் தேதி பிறந்தவர்களுக்குமா 28 நல்ல எண் அல்ல என்கிறீர்கள்.////

    பண்டிட் சேதுராமன் அவர்களின் புஸ்தகத்தைப் படித்தேன் என்று சொல்லியிருக்கிறபடியால் 28எண் குறித்து அதிலே தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்ததே..
    அவ்வளவு நல்ல பலன் இல்லை என்று..

    வாழ்க்கை ஆரம்பித்த இடத்துக்கே திரும்பவும் சுழன்று பலன் இல்லாத நிலையில் இருக்கும் என்றும் ஒரு நபர் வேலைக்கு சேரும் நாள் 28 ஆக இருந்தால் அந்த வேலையை விட்டு வேறு வேலையைத் திரும்பத் தேடும் படி பூஜ்யத்தில் இருந்து துவங்கும்படியான அமைப்பிலே கொண்டு விடும் என்றெல்லாம் படித்த ஞாபகம்..

    பத்து வருடங்களுக்கு முன் படித்தது..இப்போது கைவசம்
    அந்தப்புத்தகம் இல்லை..

    சரியில்லாத2 ,8 என்று இரண்டு எண்களுமே சேர்ந்து 28உருஆகியிருப்பதால் அது நல்ல பலன் தருவதில்லை என்று கணிக்கிறேன்..

    ReplyDelete
  117. minorwall said...
    ////////R.Srishobana said...

    இந்த சம்பவம் தான் எனக்கு 'போலி' தலைவியின் மீது இன்றும் வரை வெறுப்பு தோன்ற காரணம்...அக்கட்சிக்கு நான் என் முதல் ஓட்டுரிமையை பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு எதிராக வாக்களித்ததும் அதனால் தான்...
    அதற்காக தன் சொந்தங்களுக்காக மட்டுமே அதிகம் உழைக்கும் 'தலைவரின்' எண்ணத்தையும் மறக்க முடியுமா?...அதனால் தான் அடுத்த முறை 49 - O க்கு "ஓட்டு" போட எண்ணியுள்ளேன்...////////

    ரொம்ப வசதியாப் போச்சு..எதிர்கட்சி ஆளுங்க எல்லாருமே இப்புடியே பண்ணியாச்சுன்னா நாங்க ஜெயிக்குறதுக்கு ரொம்ப வசதியாப் போயிடும்..

    ReplyDelete
  118. தலைவி..ரொம்ப சூடா இருக்கீங்க போலே..சொன்னது ஒரிஜினல் தலைவியைப் பத்தி.. கூல்...//

    கூலாகத்தான் எழுதியிருந்தேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com