மாணவர் பதிவேடு (Enrolment Register)

4.11.09

Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் தெரியாது என்று சொல்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகி, கீழே சுட்டியில் (URL Link) கொடுத்துள்ள மேட்டரைப்
படித்துவிட்டு, மறுபடியும் பதிவிற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சுட்டி:-

அடடா, அருமை சார், எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதுவரை நீங்கள் எழுதியதில் எந்த யோகமும் இல்லை. இதுவாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று ஆர்வமுடன் சொல்பவர்களுக்கு இந்த யோகத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அத்ந்த நிபந்தனை ஒத்துவந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

முதலில் நீங்கள் ஸ்திர ராசிக்காரரா (Fixed signs)என்று சொல்லுங்கள்

“சார், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்துவிடுங்கள். ஸ்திர ராசி எதெது என்பதைப் படித்தேன். மறந்து விட்டது. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சொல்லும் மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs)
1. ரிஷபம் (Taurus),
2. சிம்மம் (Leo),
3. விருச்சிகம் (Scorpio)
4. கும்பம் (Aquarius)

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்!

”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?”

பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள்.

உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome)
2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான்.
3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?)
4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், என்ன சஸ்பென்சை இழுத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் எழுதுவது கதையல்ல - ஜோதிடக் கட்டுரை, அதை நினைவில் வையுங்கள்”

சரி, உங்கள் ஆர்வம் புரிகிறது. இதோ அந்த யோகத்திற்கான அமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்
2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும்.
3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும்
4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க

வேண்டும்

அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்:
லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்

A planetary combination formed by Ascendant placed in a fixed sign,
Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and
the lords of 2nd and 10th houses in mutual exchange.

This yoga is powerful in making the individual extremely beautiful,
loved by pretty women, owner of vast wealth and villas.
He attains a very high social status.
-----------------------------------------------------------
சார், படத்திற்கு என்ன விளக்கம்?
தேவேந்திரன் ஐராவதம் எனும் வெள்ளை நிறமுடைய யானையை வைத்திருந்தானாம். அதை நினைவு படுத்த இந்தப் படம். இப்போது வெள்ளை யானை கிடைக்காது. ஆகவே இந்த் யோகம் உள்ளவர்கள். வெள்ளை
நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மெர்சிடஸ் பென்ஸ் அல்லது பென்ட்லி கார்களை வைத்துக் கொள்ளலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறைக் கண்மணிகள் யாருக்காவது இந்த அமைப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் நேரில் வந்து பார்க்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------


வாழ்க வளமுடன்!

106 comments:

said...

மிக்க நன்றி

said...

ஏகப்பட்ட நிபந்தனைகள்.கண்டிப்பா
இப்படிப்பட்ட யோகம் நம் மாணவக்கண்மணிகளுக்கு
இருக்க சான்ஸே இல்லை.
யாருக்காவது இருக்கானு பார்ப்போம்.
பாடத்திற்கு நன்றி அய்யா.

said...

i like today's lesson.its really interesting!

said...

அய்யா வணக்கம்,
ஆகா! அருமை,
அய்யா அருமையான
இந்த யோகம் எமக்கு இல்லை.
இருப்பவரைப் பற்றி அறிய நானும்
தங்களைப் போல் ஆர்வமாய் உள்ளேன்.
நன்றிகள் குருவே,
அன்புடன்,
ஆலாசியம் கோ.

said...

'ஸ்த்திர ராசி' ஒகே, மற்றது எதுவுமே சரியா வரல...

said...

அய்யா ஞாபகம் வந்து விட்டது,
திருவாரூர் கதிரேசன் செட்டியார் மகன்
சிவநேசனுக்கு இருக்கிறது இந்த அமைப்பு.
நன்றி,
ஆலாசியம் கோ.

said...

அய்யா இனிய காலை வணக்கம்,
நமக்கு பாடம் ஆரம்பிகும் போதே இந்த யோகம் இல்லை தெரிஞ்சு போச்சு......அதுக்கு அப்புறம் விதிகளை படித்து தெரிந்து கொண்டேன்..பாடம் வழக்கம் போல் அருமை ,,,,,,,,,,
நன்றி
நன்றி
நன்றி வணக்கம்

said...
This post has been removed by the author.
said...

Better luck next time. இதை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அல்லது இருக்கும் யோகமே போதும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

Jyotisharnava Navanitam என்னும் ஜோதிட நூலில் மதன கோபால யோகம் என்று ஒன்று குறிப்பிட பட்டிருக்கிறது. யோகம் என்றால் இதுவல்லவா யோகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சிலருக்கு சிவா சிவா என்று காதைப் பொத்திக் கொள்ள தோன்றலாம்.

said...

வணக்கம் ஐயா. பாடம் மிக அருமை & தெளிவு.

இந்த யோகம் மிக அரிதாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய குடும்பத்தில் யாருக்கும் இது இல்லை.

நன்றி.

said...

ananth said...

Better luck next time. இதை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அல்லது இருக்கும் யோகமே என்று நினைத்துக் கொள்கிறேன்.

Jyotisharnava Navanitam என்னும் ஜோதிட நூலில் மதன கோபால யோகம் என்று ஒன்று குறிப்பிட பட்டிருக்கிறது. யோகம் என்றால் இதுவல்லவா யோகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சிலருக்கு சிவா சிவா என்று காதைப் பொத்திக் கொள்ள தோன்றலாம்.

ஒ சீனியர் (ஆனந்த்) அண்ணா உங்களுக்கு அந்த யோகம் இருக்கா ?அந்த அமைப சொல்லுங்க சீனியர் ?

said...

வணக்கம்..

ஐயா...என்ன சொல்ல.?? தேவேந்திர யோகம்...தேவேந்திர யோகம்...

said...

காலை வணக்கம் ஐயா....இந்த யோகமும் எனக்கு இல்லை. வேற எதாவது இருக்கானு பாப்போம்...

said...

பாடம் அருமை ஆசானே.

said...

Present Sir

said...

உங்கள் ஜோதிட ஞானம் வியக்க வைக்கிறது. பொழுதுபோக்காக ஜோதிடம் கற்கும் என் போன்றவர்களுக்கு ஈடுபாடு எவ்வளவு வேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் விளக்கும் முறை அருமை.

said...

நல்ல யோகம்தான் அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறந்தால் பார்ப்போம். இது எல்லாம் வேண்டாம் சார். உழைத்துச் சாப்பிட்டு நிம்மதியா தூங்குவேம். அடுத்த யோகமாவது நமக்கு இருக்கா பார்ப்போம். நன்றி சார். உங்களின் இந்த சேவைக்கு.

said...

//ஒ சீனியர் (ஆனந்த்) அண்ணா உங்களுக்கு அந்த யோகம் இருக்கா ?அந்த அமைப சொல்லுங்க சீனியர் ?//

Madana Gopala Yoga
The lords of the Lagna and the 7th house should exchange places and one of them is conjunct Venus

or

Venus is in deep exaltation in the 7th house and aspecting or aspected by the 7th house lord
(Jyotisharnava Navanitam 2/200).

The person will have intimate relation with a number of individuals of the opposite sex (the classical text speaks of women in the case of man).

எனக்கு இந்த யோகம் இருக்கு ஆனால் இல்லை. இன்று வரை ஏக பத்தினியுடந்தான் இருக்கிறேன். நாளை நடப்பது நாராயணன் செயல்.

said...

Ayya morning
Paadam Arumai, But enakku than inda yoga illai.

Thanks
Saravanan

said...

உள்ளேன் ஐயா!

said...

ananth said...


Madana Gopala Yoga
The lords of the Lagna and the 7th house should exchange places and one of them is conjunct Venus

or

Venus is in deep exaltation in the 7th house and aspecting or aspected by the 7th house lord
(Jyotisharnava Navanitam 2/200).

The person will have intimate relation with a number of individuals of the opposite sex (the classical text speaks of women in the case of man).

எனக்கு இந்த யோகம் இருக்கு ஆனால் இல்லை. இன்று வரை ஏக பத்தினியுடந்தான் இருக்கிறேன். நாளை நடப்பது நாராயணன் செயல்.




நன்றி ஆனந்த் அண்ணா .....

said...

in this yoga

said...

////Shyam Prasad said...
மிக்க நன்றி////

நல்லது. நன்றி நண்பரே!

said...

////thirunarayanan said...
ஏகப்பட்ட நிபந்தனைகள்.கண்டிப்பா
இப்படிப்பட்ட யோகம் நம் மாணவக்கண்மணிகளுக்கு
இருக்க சான்ஸே இல்லை.
யாருக்காவது இருக்கான்னு பார்ப்போம்.
பாடத்திற்கு நன்றி அய்யா.////

உங்கள் அனுமானத்திற்குப் பாராட்டுக்கள் திருநாராயணன்!

said...

/////govind said...
i like today's lesson.its really interesting!/////

சுவையாக இல்லாததை நான் எழுத மாட்டேன்! நன்றி!

said...

/////Alasiam G said...
அய்யா வணக்கம்,
ஆகா! அருமை,
அய்யா அருமையான
இந்த யோகம் எமக்கு இல்லை.
இருப்பவரைப் பற்றி அறிய நானும்
தங்களைப் போல் ஆர்வமாய் உள்ளேன்.
நன்றிகள் குருவே,
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

உங்கள் ஆர்வம் வாழ்க! வளர்க!

said...

/////மதி said...
'ஸ்த்திர ராசி' ஒகே, மற்றது எதுவுமே சரியா வரல...////

ராசியாவது ஸ்திரமாக இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்!

said...

////Alasiam G said...
அய்யா ஞாபகம் வந்து விட்டது,
திருவாரூர் கதிரேசன் செட்டியார் மகன்
சிவநேசனுக்கு இருக்கிறது இந்த அமைப்பு.
நன்றி,
ஆலாசியம் கோ./////

ஆமாம், அவருக்கு இருக்கலாம்!

said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
நமக்கு பாடம் ஆரம்பிகும் போதே இந்த யோகம் இல்லை தெரிஞ்சு போச்சு......அதுக்கு அப்புறம் விதிகளை படித்து தெரிந்து கொண்டேன்..பாடம் வழக்கம் போல் அருமை ,,,,,,,,,,
நன்றி
நன்றி
நன்றி வணக்கம்////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

said...

////ananth said...
Better luck next time. இதை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அல்லது இருக்கும் யோகமே போதும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
Jyotisharnava Navanitam என்னும் ஜோதிட நூலில் மதன கோபால யோகம் என்று ஒன்று குறிப்பிட பட்டிருக்கிறது. யோகம் என்றால் இதுவல்லவா யோகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சிலருக்கு சிவா சிவா என்று காதைப் பொத்திக் கொள்ள தோன்றலாம்./////

காதைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு என்று நீங்கள் டிஸ்கி போட்டதால் மக்கள் ஆர்வமாகிவிவார்கள்!!
அது என்னவென்று சொல்லிவிடுங்கள்!

said...

////Scorpion King said...
வணக்கம் ஐயா. பாடம் மிக அருமை & தெளிவு.
இந்த யோகம் மிக அரிதாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய குடும்பத்தில் யாருக்கும் இது இல்லை.
நன்றி.////

இருக்காது என்பது எனக்கும் தெரியும். அப்படி இருப்பவர்களுக்கு (வலையில்) நெட்டில் திரிய நேரம் ஏது?

said...

/////astroadhi said...
ananth said...
Better luck next time. இதை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அல்லது இருக்கும் யோகமே என்று நினைத்துக் கொள்கிறேன்.
Jyotisharnava Navanitam என்னும் ஜோதிட நூலில் மதன கோபால யோகம் என்று ஒன்று குறிப்பிட பட்டிருக்கிறது. யோகம் என்றால் இதுவல்லவா யோகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சிலருக்கு சிவா சிவா என்று காதைப் பொத்திக் கொள்ள தோன்றலாம்.
ஒ சீனியர் (ஆனந்த்) அண்ணா உங்களுக்கு அந்த யோகம் இருக்கா ?அந்த அமைப்பைச் சொல்லுங்க சீனியர் ?/////

ஆமாம் ஆனந்த் ! சொல்லுங்கள். காதைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு என்று நீங்கள் டிஸ்கி போட்டதால் மக்கள் ஆர்வமாகிவிட்டார்கள்!

said...

/////Success said...
வணக்கம்..
ஐயா...என்ன சொல்ல.?? தேவேந்திர யோகம்...தேவேந்திர யோகம்...////

337 ராசியான எண். அத்தனை தடவை சொல்லுங்கள். அடுத்த பிறவியில் இந்த யோகம் உங்களுக்குக் கிடைக்கட்டும்!

said...

/////tamiltemples said...
காலை வணக்கம் ஐயா....இந்த யோகமும் எனக்கு இல்லை. வேற எதாவது இருக்கானு பாப்போம்.../////

தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். சில யோகங்களாவது இல்லாத ஜாதகமே இல்லை!

said...

/////சிங்கைசூரி said...
பாடம் அருமை ஆசானே./////

நன்றி சிங்கைக்காரரே!

said...

/////Subbramaniabalaji said...
Present Sir/////

நல்லது. வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

said...

/////krish said...
உங்கள் ஜோதிட ஞானம் வியக்க வைக்கிறது. பொழுதுபோக்காக ஜோதிடம் கற்கும் என் போன்றவர்களுக்கு ஈடுபாடு எவ்வளவு வேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் விளக்கும் முறை அருமை./////

ஞானம் என்பது பெரிய வார்த்தை. கற்றது கை மண் அளவு! வெறும் மருந்து கசக்கும். அதனால் தேனில் (எளிமையான எழுத்து நடையில்) குழைத்துத் தருகிறேன். இல்லையென்றால் வகுப்பறைக்கு இத்தனை பேர்கள் எப்படி வருவார்கள்?

said...

/////பித்தனின் வாக்கு said...
நல்ல யோகம்தான் அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறந்தால் பார்ப்போம். இது எல்லாம் வேண்டாம் சார். உழைத்துச் சாப்பிட்டு நிம்மதியா தூங்குவேம். அடுத்த யோகமாவது நமக்கு இருக்கா பார்ப்போம். நன்றி சார். உங்களின் இந்த சேவைக்கு.//////

நிம்மதிக்குத்தான் 337 சூத்திரம் இருக்கிறதே!

said...

/////ananth said...
//ஒ சீனியர் (ஆனந்த்) அண்ணா உங்களுக்கு அந்த யோகம் இருக்கா ?அந்த அமைப சொல்லுங்க சீனியர் ?// Madana Gopala Yoga
The lords of the Lagna and the 7th house should exchange places and one of them is conjunct Venus
or
Venus is in deep exaltation in the 7th house and aspecting or aspected by the 7th house lord
(Jyotisharnava Navanitam 2/200).
The person will have intimate relation with a number of individuals of the opposite sex (the classical text speaks of women in the case of man).
எனக்கு இந்த யோகம் இருக்கு ஆனால் இல்லை. இன்று வரை ஏக பத்தினியுடந்தான் இருக்கிறேன். நாளை நடப்பது நாராயணன் செயல்.///////

அதை மன உறுதியுடன் சொல்லாமே நீங்கள்? நாராயணன் மேல் ஏன் பாரத்தைப் போடுகிறீர்கள்?

said...

/////Saravanan said...
Ayya morning
Paadam Arumai, But enakku than inda yoga illai.
Thanks
Saravanan////

நன்றி முருகா!

said...

/////DHANA said...
உள்ளேன் ஐயா!/////

நல்லது. வருகைப் பதிவிற்கு நன்றி தனா!

said...

நடிகை Aiswaraya raiக்கு இருக்குமோ?

said...

/////Alasiam G said...
அய்யா,
எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அமைப்பு அதாவது ஆறில் உள்ளது. சற்று விவரமாக...
தனுசு லக்னம் -- வக்கிர குரு லக்னத்தில்.
ஆறில் இந்த அமைப்பு --- சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூவரும்.
பதினொன்றில் --- சந்திரன்.
சனியின் வீடு இரண்டு மற்றும் மூன்று,
இந்த இரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். வீட்டின் பரல் 30,
இருந்தும் இது சந்திரனுக்கு நான்கில் கேந்திரத்தில்.
சனியின் அடுத்த வீடு லக்னத்திற்கு மூன்று அந்த வீடும் சந்திரனிற்கு ஐந்தில் (கேந்திரத்தில்). வீட்டின் பரல் 31 ,மேல் கூறிய இரண்டு வீடும் பாதுகாப்புக்குள்.
அடுத்ததாக செவ்வாய், இது ஜாதகருக்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் வீடு.
ஐந்தாம் வீட்டிற்கு சந்திரனின் ஏழாம் பார்வை (ஆனால் வீட்டின் பரல் 17.) அதுவும் பாதுகாப்புடன் உள்ளது எனக் கொள்வதா? அந்த வீட்டில் சூரியன் உட்சம் பெற்றும் இருக்கிறார்..
பன்னிரெண்டை எப்படிக் கொள்வது? அந்த வீட்டின் பரல் 26 இது லாபஸ்தானத்தின் பரல் (32)விடக் குறைவே இதையும் பாதுகாப்பு எனக் கொள்கிறேன்.
பார்க்கும் முறை சரியா?
(தகவலுக்காக அவர்களின் குழந்தைகள் இருவர் ஆணும் பெண்ணும் ஒன்னொன்று, சென்ற வாரம் அந்த ஆண் குழந்தையை திருப்பதி பெருமாள் சன்னதியில் கொடுத்து பெருமாளிடமே தட்சணை கொடுத்து தத்து எடுத்து வந்துள்ளார்கள். அந்த பையனின் ஜாதகத்தில் ஒன்பதில் கேதும் அதோடு பன்னிரெண்டில் சூரியனும் நீசம் அதாவது அந்தப் பையனின் ஜாதகத்திலும் தத்து போகவேண்டிய அமைப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் ஆகவே இந்த பரிகாரங்கள். மேலும் ஒன்பது கேது மற்றும் மூன்றில் செவ்வாயுடன் ராகுவும்இருப்பதால் காளகஸ்த்தியும் சென்று வழிபாட்டு வந்துள்ளார்கள். செய்துச் சரியா செய்யச் சொன்னது அடியேன் தவறேதும் உள்ளதா?)
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

எப்படிப் பொறுமையாக இவ்வளவு விஷயங்களையும் தட்டச்சு செய்தீர்கள்? தற்சமயம் எனக்கு நேரமில்லை அலசல் என்ற தலைப்பில் பாடம் நடத்தவுள்ளேன். அப்போது இதையெல்லாம் வைத்துக்கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்!

Tuesday, November 03, 2009 11:12:00 AM

//Alasiam G செய்வது தர்மமா? சந்தேகமாக உள்ள போது ஏன் தத்து போன்ற பரிகாரங்களை கூறுதல் வேண்டும். இவர்கள் போன்றவர்களால் தான் ஜோதிடத்திற்கு இழுக்கு...

said...

எனக்கு இந்த யோகம் இல்லை (அத அதத்தான் நானும் படிக்க ஆரம்பிக்கும்போதே எதிர்பார்த்தேன்)

said...

குரு வணக்கம்,


ஆர செளரி யோகம் மற்றும் தேவேந்திர யோகம் பாடங்கள்

வழக்கம் போல் தங்களின் நடையில் அசத்தல்...


என்றும் அன்புடன்
சிறுதுளி

said...

இதத்தான் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள், இல்லேன்னா இவ்வளவு தில்லா, யாருக்கு இந்த யோகம் இருக்கோ, வந்து நேரில் பார்க்கிறேன்னு சொல்வீர்களா?

said...
This post has been removed by the author.
said...

உள்ளேன் ஐயா...
சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி ஐயா
கவலையாக இருக்கிறது.... :=)

said...

அன்புள்ள நண்பர் சிலோன் ஸ்டார் அவர்களே,

மன்னிக்கணும், அவசரப்பட வேண்டம்.
பாதிக்கப்பட்ட ஜாதகர் எனது நெருங்கிய நண்பர் மேலும்
இதுபோன்ற அமைப்பு என் மனைவிக்கும் இருந்து எனது குழந்தையை
பெருமாள் சந்நிதியில் வாங்கினோம்.

தெய்வத்தை வணங்குவது என்பது சுவாசிப்பது போல் இருக்கவேண்டும் என நினைப்பவன் நான். பணம் வாங்கிக்கொண்டு ஜோதிடம் பார்ப்பவர்களை விட நான் கூறுவதில் உண்மை இருக்கும் என என் நண்பர் நம்பினார். அதோடு ஜோதிடம் நன்கு அறிந்த வேறு நல்ல ஜோதிடரை நாங்கள் இருக்கும் நாட்டில் தேடுவது கடினம். சரி நம் ஆசிரியர் போன்றவர்களையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

நான் செய்யச் சொன்னவைகள் தவறனவையகவே இருந்தாலும், தெய்வத்தை வணங்குவது ஒருபோதும் தவறாகாது என்பதே எனது எண்ண ஓட்டமாக இருந்தது.
அதோடு இது ஒரு மனச் சாந்தியைக் கொடுக்கும். எனது நண்பருக்கு ராகு திசையில் சந்திரப்புத்தி, அவரின் மனைவிக்கு சனி திசையில் சனி புத்தி. அவர் தற்ப்போது கடந்த ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார். மேலும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவர் ஊட்டியில் படிக்கும் தனது மகனின் மாற்றுச் சான்றிதழை வாங்க சென்னை செல்ல வேண்டிய அவசியமும் இருந்தது.

நான் இந்த ஜாதகத்தை பாட சம்பந்தம் இருந்ததாலும், இது ஒருவேளை மற்ற நம் சக நண்பர்களுக்கும் (ஆசிரயர் விளக்கியிருந்தால்) உபயோகப்படும் என்ற ஆர்வத்திலும் கேட்க தோன்றியதின் விளைவே. மேலும் ஆசிரியர் அறிவிலும், வயதிலும் பெரியவர். மேலும் ஜோதிட வல்லுனரும் கூட அப்படி இருக்க நான் செய்தது சரியாய் என்று கேட்ப்பதே முறை எனத் தோன்றியது. அறிதியிட்டு கூற மனம் வரவில்லை.

நான் தவறு செய்ய நேர்ந்திருக்கலாம் ஆனால் அதில் ஜோதிட சாஸ்த்திரத்தை களங்கம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கம் இல்லை. ஜோதிடம் என்பது தெய்வ அனுக்கிரகமும், அனுபவமும், மனோதத்துவமும் மற்றும் உணமையோடு கூடிய ஒழுக்கத்தோடும் விளங்குபவர்களுக்கே விளங்கும் என்பதே எனது ஆழ்ந்த நம்பிக்கை.

தங்களின் ஜோதிட பற்றுக்கு எனது அன்புகலந்த வணக்கங்கள்.
அன்பு நண்பர்,
ஆலாசியம் கோ.

ஆசிரியர் மன்னிக்கணும், மேற்கூறிய விசயங்களில் தங்களின் அபிப்ராயத்தையும் பெற விரும்புகிறேன். நன்றிகள் குருவே.

said...

////ceylonstar said...
நடிகை Aiswaraya raiக்கு இருக்குமோ?//////

பலன்கள் எல்லாம் பொருந்தி வருகிறது. ஆகவே இருக்கலாம்! சரியாகத் தெரியவில்லை!

said...

////ceylonstar said...
/////Alasiam G said...
அய்யா,
எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அமைப்பு அதாவது ஆறில் உள்ளது. சற்று விவரமாக...
தனுசு லக்னம் -- வக்கிர குரு லக்னத்தில்.
ஆறில் இந்த அமைப்பு --- சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூவரும்.
பதினொன்றில் --- சந்திரன்.
சனியின் வீடு இரண்டு மற்றும் மூன்று,
இந்த இரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். வீட்டின் பரல் 30,
இருந்தும் இது சந்திரனுக்கு நான்கில் கேந்திரத்தில்.
சனியின் அடுத்த வீடு லக்னத்திற்கு மூன்று அந்த வீடும் சந்திரனிற்கு ஐந்தில் (கேந்திரத்தில்). வீட்டின் பரல் 31 ,மேல் கூறிய இரண்டு வீடும் பாதுகாப்புக்குள்.
அடுத்ததாக செவ்வாய், இது ஜாதகருக்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் வீடு.
ஐந்தாம் வீட்டிற்கு சந்திரனின் ஏழாம் பார்வை (ஆனால் வீட்டின் பரல் 17.) அதுவும் பாதுகாப்புடன் உள்ளது எனக் கொள்வதா? அந்த வீட்டில் சூரியன் உட்சம் பெற்றும் இருக்கிறார்..
பன்னிரெண்டை எப்படிக் கொள்வது? அந்த வீட்டின் பரல் 26 இது லாபஸ்தானத்தின் பரல் (32)விடக் குறைவே இதையும் பாதுகாப்பு எனக் கொள்கிறேன்.
பார்க்கும் முறை சரியா?
(தகவலுக்காக அவர்களின் குழந்தைகள் இருவர் ஆணும் பெண்ணும் ஒன்னொன்று, சென்ற வாரம் அந்த ஆண் குழந்தையை திருப்பதி பெருமாள் சன்னதியில் கொடுத்து பெருமாளிடமே தட்சணை கொடுத்து தத்து எடுத்து வந்துள்ளார்கள். அந்த பையனின் ஜாதகத்தில் ஒன்பதில் கேதும் அதோடு பன்னிரெண்டில் சூரியனும் நீசம் அதாவது அந்தப் பையனின் ஜாதகத்திலும் தத்து போகவேண்டிய அமைப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் ஆகவே இந்த பரிகாரங்கள். மேலும் ஒன்பது கேது மற்றும் மூன்றில் செவ்வாயுடன் ராகுவும்இருப்பதால் காளகஸ்த்தியும் சென்று வழிபாட்டு வந்துள்ளார்கள். செய்துச் சரியா செய்யச் சொன்னது அடியேன் தவறேதும் உள்ளதா?)
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
எப்படிப் பொறுமையாக இவ்வளவு விஷயங்களையும் தட்டச்சு செய்தீர்கள்? தற்சமயம் எனக்கு நேரமில்லை அலசல் என்ற தலைப்பில் பாடம் நடத்தவுள்ளேன். அப்போது இதையெல்லாம் வைத்துக்கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்!/////
Alasiam G செய்வது தர்மமா? சந்தேகமாக உள்ள போது ஏன் தத்து போன்ற பரிகாரங்களை கூறுதல் வேண்டும். இவர்கள் போன்றவர்களால் தான் ஜோதிடத்திற்கு இழுக்கு...//////

அமைதி.அமைதி அமைதி!
இது வகுப்பறை! மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். சண்டை, சச்சரவுகள் எதற்கு?
ஆலாசியம் சொன்னதால், அதன்படி நடந்து விடுமா என்ன?
சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கிறதோ அதன்படிதான் நடக்கும்
ஆலாசியம் சொன்னதற்காக அது நடந்துவிடாது
அதேபோல் அவர் சொல்லாமல் விட்டாலும் நடக்கவிருப்பது நடக்காமல் இருக்காது!

said...

////Uma said...
எனக்கு இந்த யோகம் இல்லை (அத அதத்தான் நானும் படிக்க ஆரம்பிக்கும்போதே எதிர்பார்த்தேன்)////

உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாமல் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!:-)))

said...

//Chiruthuli said...
குரு வணக்கம்,
ஆர செளரி யோகம் மற்றும் தேவேந்திர யோகம் பாடங்கள்
வழக்கம் போல் தங்களின் நடையில் அசத்தல்...
என்றும் அன்புடன்
சிறுதுளி////

நன்றி சிறுதுளியாரே!

said...

////Uma said...
இதத்தான் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள், இல்லேன்னா இவ்வளவு தில்லா, யாருக்கு இந்த யோகம் இருக்கோ, வந்து நேரில் பார்க்கிறேன்னு சொல்வீர்களா?/////

நான் தில்லான ஆசாமிதான். இல்லையென்றால் சுமார் 1,000 மாணவர்களை வைத்துப் பாடம் நடத்த முடியுமா? கொஞ்சம் பயந்தால் டின்’ கட்டி விடமாட்டீர்களா என்ன?

said...

////Kumares said...
உள்ளேன் ஐயா...
சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி ஐயா
கவலையாக இருக்கிறது.... :=)/////

எதற்குக் கவலை. சர்வ நிவாரணி டானிக் நம்பர் 337லில் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பாருங்கள்!

said...

Blogger Alasiam G said...
அன்புள்ள நண்பர் சிலோன் ஸ்டார் அவர்களே,
மன்னிக்கணும், அவசரப்பட வேண்டம்.
பாதிக்கப்பட்ட ஜாதகர் எனது நெருங்கிய நண்பர் மேலும்
இதுபோன்ற அமைப்பு என் மனைவிக்கும் இருந்து எனது குழந்தையை
பெருமாள் சந்நிதியில் வாங்கினோம்.
தெய்வத்தை வணங்குவது என்பது சுவாசிப்பது போல் இருக்கவேண்டும் என நினைப்பவன் நான். பணம் வாங்கிக்கொண்டு ஜோதிடம் பார்ப்பவர்களை விட நான் கூறுவதில் உண்மை இருக்கும் என என் நண்பர் நம்பினார். அதோடு ஜோதிடம் நன்கு அறிந்த வேறு நல்ல ஜோதிடரை நாங்கள் இருக்கும் நாட்டில் தேடுவது கடினம். சரி நம் ஆசிரியர் போன்றவர்களையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
நான் செய்யச் சொன்னவைகள் தவறனவையகவே இருந்தாலும், தெய்வத்தை வணங்குவது ஒருபோதும் தவறாகாது என்பதே எனது எண்ண ஓட்டமாக இருந்தது.
அதோடு இது ஒரு மனச் சாந்தியைக் கொடுக்கும். எனது நண்பருக்கு ராகு திசையில் சந்திரப்புத்தி, அவரின் மனைவிக்கு சனி திசையில் சனி புத்தி. அவர் தற்ப்போது கடந்த ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார். மேலும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவர் ஊட்டியில் படிக்கும் தனது மகனின் மாற்றுச் சான்றிதழை வாங்க சென்னை செல்ல வேண்டிய அவசியமும் இருந்தது.
நான் இந்த ஜாதகத்தை பாட சம்பந்தம் இருந்ததாலும், இது ஒருவேளை மற்ற நம் சக நண்பர்களுக்கும் (ஆசிரயர் விளக்கியிருந்தால்) உபயோகப்படும் என்ற ஆர்வத்திலும் கேட்க தோன்றியதின் விளைவே. மேலும் ஆசிரியர் அறிவிலும், வயதிலும் பெரியவர். மேலும் ஜோதிட வல்லுனரும் கூட அப்படி இருக்க நான் செய்தது சரியாய் என்று கேட்ப்பதே முறை எனத் தோன்றியது. அறிதியிட்டு கூற மனம் வரவில்லை.
நான் தவறு செய்ய நேர்ந்திருக்கலாம் ஆனால் அதில் ஜோதிட சாஸ்த்திரத்தை களங்கம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கம் இல்லை. ஜோதிடம் என்பது தெய்வ அனுக்கிரகமும், அனுபவமும், மனோதத்துவமும் மற்றும் உணமையோடு கூடிய ஒழுக்கத்தோடும் விளங்குபவர்களுக்கே விளங்கும் என்பதே எனது ஆழ்ந்த நம்பிக்கை.
தங்களின் ஜோதிட பற்றுக்கு எனது அன்புகலந்த வணக்கங்கள்.
அன்பு நண்பர்,
ஆலாசியம் கோ.
ஆசிரியர் மன்னிக்கணும், மேற்கூறிய விசயங்களில் தங்களின் அபிப்ராயத்தையும் பெற விரும்புகிறேன். நன்றிகள் குருவே.//////

நீங்கள் சொன்னதால், அதன்படி நடந்து விடுமா என்ன? சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கிறதோ அதன்படிதான் நடக்கும். நீங்கள் சொன்னதற்காக அது நடந்துவிடாது. அதேபோல் நீங்கள் சொல்லாமல் விட்டாலும் நடக்கவிருப்பது நடக்காமல் இருக்காது! இப்போதைக்கு இது போதும். இத்தோடு சர்ச்சைகளை விடுங்கள்.

ஜோதிடத்தில் யாரும் வல்லுனர்கள் அல்ல! An astrologer only can indicate what is going to take place. He can not certainly say what is going to happen.It is in the hands of GOD

said...

சரி, நன்றிகள் குருவே.

said...

ஐய நடிகர் கமல் காசனுக்கு இந்த கேமதுருமா யோகம் உள்ளது... சரியா எனது கணிப்பு?

பழைய பதிவுகளுக்கான கமெண்ட் ஐ பழைய பதிவில் அடித்தால் நீங்கள் வாசிக்க மாட்டீர்களோ என்ற சந்தேகத்தில் புதிய பதிவுகளில் அடிக்கிறேன்...இப்படி ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை விடுவத்ர்த்கு மன்னிக்கவும் ஐயா...

said...

Dear Sir

Lagnam Viruchigam - Lagnadhibadhi 11il - 11ikkuriyavan 10il.

Mercedes Benz - vanguvane endru theriavillai. Anal Toyota Camry or Toyota Corolla vanguvadhu Uruthi sir..(only 2month)

Thank you

Loving Stduent
Arulkumar Rajaraman

said...

Present sir,

We have to search such a person "Devendra yoga"

sankar
karur

said...

337 ...337...337...

said...

aryboy.
vanakkam saar,
entraiya vellai yaanai pathivu patriya vilakkame sollum vithame thani rasanaithaan.thaankal kuuriyathu pool namakku antha yookam erunthal pathivupakkam thalai kaadda mudiyathu ,unmaithaan. nantry.
valkavalamudan.
aryboy.

said...

ஐஸ்வரியாவிற்கு இந்த யோகம் இல்லை. அவரது பிறந்த நாள் 1.11.1973 நேரம் 4.07 காலை. 78E51 12N54. விசேஷ ஜாதகம்.

said...

"......இந்திரலோகமாளும் அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே......"

said...
This post has been removed by the author.
said...
This post has been removed by the author.
said...

////Kumares said...
ஐய நடிகர் கமல் காசனுக்கு இந்த கேமதுருமா யோகம் உள்ளது... சரியா எனது கணிப்பு?
பழைய பதிவுகளுக்கான கமெண்ட் ஐ பழைய பதிவில் அடித்தால் நீங்கள் வாசிக்க மாட்டீர்களோ என்ற சந்தேகத்தில் புதிய பதிவுகளில் அடிக்கிறேன்...இப்படி ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை விடுவதற்கு மன்னிக்கவும் ஐயா.../////

அந்தந்த பதிவுகளுக்கு உரிய கேள்விகளை நீங்கள் அந்தப் பதிவிற்கு உரிய பின்னூட்டப் பெட்டியிலேயே கேட்பதுதான் நல்லது!

said...

Arulkumar Rajaraman said...
Dear Sir
Lagnam Viruchigam - Lagnadhibadhi 11il - 11ikkuriyavan 10il.
Mercedes Benz - vanguvane endru theriavillai. Anal Toyota Camry or Toyota Corolla vanguvadhu Uruthi sir..(only 2month)
Thank you
Loving Stduent
Arulkumar Rajaraman////

11ஆம் வீட்டிற்கு உரியவன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைந்து விட்டானே சாமி!
லக்கினாதிபதி 11ல் இருப்பதால் அவன் கொடுக்கும் பலன்களை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ளுங்கள்.

said...

////jadam said...
Present sir,
We have to search such a person "Devendra yoga"
sankar
karur////

பத்திரிக்கைக்காரர்களுக்கு அது சாத்தியம். நமக்கு அது சாத்தியப்படாது ராசா!

said...

///மிஸ்டர் அரட்டை said...
337 ...337...337...////

நல்லது. என்றும் அதை நினைவில் வையுங்கள்!

said...

///aryboy said...
aryboy.
vanakkam saar,
entraiya vellai yaanai pathivu patriya vilakkame sollum vithame thani rasanaithaan.thaankal kuuriyathu pool namakku antha yookam erunthal pathivupakkam thalai kaadda mudiyathu ,unmaithaan. nantry.
valkavalamudan.
aryboy.////

வளர்க நலமுடன்!

said...

////krish said...
ஐஸ்வரியாவிற்கு இந்த யோகம் இல்லை. அவரது பிறந்த நாள் 1.11.1973 நேரம் 4.07 காலை. 78E51 12N54. விசேஷ ஜாதகம்..////

தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

said...

///kmr.krishnan said...
"......இந்திரலோகமாளும் அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே......"//////

பச்சைமா மலைபோல் மேனியையும், பவளவாயையும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? நியாயமா?

said...

வாத்தியார் அவர்களுக்கு, நான் சில காலமாக உங்களின் பாடங்களை பின் தொடர்ந்து வருகின்றேன். சோதிடத்தில் தெரியாத பல விசயங்களை உங்கள் பாடத்தின் மூலமாக கற்றுக்கொண்டேன். இன்றைய பாடத்தில் தேவேந்திர யோகத்திற்கான அமைப்பில் ஸ்திர லக்னத்திற்கு மட்டும் பொருந்தும் என்று கூறி ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவைகளை குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், சிம்மம் மற்றும் கும்பத்திற்கு இந்த அமைப்பு ஒத்து வராது என்று கருதுகிறேன். உதாரணமாக, கும்ப லக்னத்தின் 1ம் மற்றும் 11ம் வீட்டின் அதிபதிகள் சனியும், குருவும் ஆவர். இவர்கள் இருவரும் பரிவர்த்தனையானால், 2ம் மற்றும் 10ம் வீட்டின் அதிபதிகள் குருவும், செவ்வாயும் எவ்வாறு பரிவர்த்தனையாவார்கள்?
இதே முறைதான் சிம்மத்திற்கும் பொருந்துகிறது. விளக்கம் தேவை. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்.............

said...

////atoztamilnadu said...
வாத்தியார் அவர்களுக்கு, நான் சில காலமாக உங்களின் பாடங்களை பின் தொடர்ந்து வருகின்றேன். சோதிடத்தில் தெரியாத பல விசயங்களை உங்கள் பாடத்தின் மூலமாக கற்றுக்கொண்டேன். இன்றைய பாடத்தில் தேவேந்திர யோகத்திற்கான அமைப்பில் ஸ்திர லக்னத்திற்கு மட்டும் பொருந்தும் என்று கூறி ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவைகளை குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், சிம்மம் மற்றும் கும்பத்திற்கு இந்த அமைப்பு ஒத்து வராது என்று கருதுகிறேன். உதாரணமாக, கும்ப லக்னத்தின் 1ம் மற்றும் 11ம் வீட்டின் அதிபதிகள் சனியும், குருவும் ஆவர். இவர்கள் இருவரும் பரிவர்த்தனையானால், 2ம் மற்றும் 10ம் வீட்டின் அதிபதிகள் குருவும், செவ்வாயும் எவ்வாறு பரிவர்த்தனையாவார்கள்?
இதே முறைதான் சிம்மத்திற்கும் பொருந்துகிறது. விளக்கம் தேவை. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்.............////

ஒரு இடத்தின் அதிபதி பரிவர்த்தனையாகி இருக்கும் இடத்தில், வேறு ஒரு வீட்டிற்கு உரிய
கிரகம் பரிவர்த்தனையில் முதல் இரண்டு பரிவர்த்தனைக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் அது முக்கோணப் பரிவர்த்தனை எனும் கணக்கில் வரும்

A = B
B = C
Therefore C = A எனும் கணக்கில் வரும்!

அதாவது உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?

said...

////atoztamilnadu said...
வாத்தியார் அவர்களுக்கு, நான் சில காலமாக உங்களின் பாடங்களை பின் தொடர்ந்து வருகின்றேன். சோதிடத்தில் தெரியாத பல விசயங்களை உங்கள் பாடத்தின் மூலமாக கற்றுக்கொண்டேன். இன்றைய பாடத்தில் தேவேந்திர யோகத்திற்கான அமைப்பில் ஸ்திர லக்னத்திற்கு மட்டும் பொருந்தும் என்று கூறி ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவைகளை குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், சிம்மம் மற்றும் கும்பத்திற்கு இந்த அமைப்பு ஒத்து வராது என்று கருதுகிறேன். உதாரணமாக, கும்ப லக்னத்தின் 1ம் மற்றும் 11ம் வீட்டின் அதிபதிகள் சனியும், குருவும் ஆவர். இவர்கள் இருவரும் பரிவர்த்தனையானால், 2ம் மற்றும் 10ம் வீட்டின் அதிபதிகள் குருவும், செவ்வாயும் எவ்வாறு பரிவர்த்தனையாவார்கள்?
இதே முறைதான் சிம்மத்திற்கும் பொருந்துகிறது. விளக்கம் தேவை. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்.............////

ஒரு இடத்தின் அதிபதி பரிவர்த்தனையாகி இருக்கும் இடத்தில், வேறு ஒரு வீட்டிற்கு உரிய
கிரகம் பரிவர்த்தனையில் முதல் இரண்டு பரிவர்த்தனைக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் அது முக்கோணப் பரிவர்த்தனை எனும் கணக்கில் வரும்

A = B
B = C
Therefore C = A எனும் கணக்கில் வரும்!

அதாவது உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?

vaathiyaar vaathiyaar than seedan seedan than any how nandri sir ;.
ungaludaiya paadankal miga elimaiyaga irunthathu ,. palaya eetil irunthu pala noolasiriyarkal munivarkalum rishikalum munne kooriyathai apatiye copy adithirupathaal nan avatrai padikka migavum sirama patten.\

but ungaludaiaya villakam miga thelivu miga arumai , thankaludaiya puthakathai miga viraivil ethir paakiren jodhidathil innum niraya katru kolla vendum endra aarvam ungaludaiya ovvaru pathivaium padikum poluthu thoondukirathu umathu ezhuthu pani idaividaamal sevvane nadakka ellam valla sundara mahalingathai nan vanakukiren . sivaaya namaga

said...

prabakar.l.n said...
////atoztamilnadu said...
வாத்தியார் அவர்களுக்கு, நான் சில காலமாக உங்களின் பாடங்களை பின் தொடர்ந்து வருகின்றேன். சோதிடத்தில் தெரியாத பல விசயங்களை உங்கள் பாடத்தின் மூலமாக கற்றுக்கொண்டேன். இன்றைய பாடத்தில் தேவேந்திர யோகத்திற்கான அமைப்பில் ஸ்திர லக்னத்திற்கு மட்டும் பொருந்தும் என்று கூறி ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவைகளை குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், சிம்மம் மற்றும் கும்பத்திற்கு இந்த அமைப்பு ஒத்து வராது என்று கருதுகிறேன். உதாரணமாக, கும்ப லக்னத்தின் 1ம் மற்றும் 11ம் வீட்டின் அதிபதிகள் சனியும், குருவும் ஆவர். இவர்கள் இருவரும் பரிவர்த்தனையானால், 2ம் மற்றும் 10ம் வீட்டின் அதிபதிகள் குருவும், செவ்வாயும் எவ்வாறு பரிவர்த்தனையாவார்கள்?
இதே முறைதான் சிம்மத்திற்கும் பொருந்துகிறது. விளக்கம் தேவை. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்.............////
ஒரு இடத்தின் அதிபதி பரிவர்த்தனையாகி இருக்கும் இடத்தில், வேறு ஒரு வீட்டிற்கு உரிய
கிரகம் பரிவர்த்தனையில் முதல் இரண்டு பரிவர்த்தனைக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் அது முக்கோணப் பரிவர்த்தனை எனும் கணக்கில் வரும்
A = B
B = C
Therefore C = A எனும் கணக்கில் வரும்!
அதாவது உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.
இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?
vaathiyaar vaathiyaar than seedan seedan than any how nandri sir ;.
ungaludaiya paadankal miga elimaiyaga irunthathu ,. palaya eetil irunthu pala noolasiriyarkal munivarkalum rishikalum munne kooriyathai apatiye copy adithirupathaal nan avatrai padikka migavum sirama patten.\
but ungaludaiaya villakam miga thelivu miga arumai , thankaludaiya puthakathai miga viraivil ethir paakiren jodhidathil innum niraya katru kolla vendum endra aarvam ungaludaiya ovvaru pathivaium padikum poluthu thoondukirathu umathu ezhuthu pani idaividaamal sevvane nadakka ellam valla sundara mahalingathai nan vanakukiren . sivaaya namaga/////

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!
சுந்தர மகாலிங்க சுவாமி என்று நீங்கள் சொல்லும் இறைவடிவான சிவனார்- திருவிடைமருதூரில் உறைபவரா? அதைச் சொல்லுங்கள்.

said...

////prabakar.l.n said...
Thankaludaiya puthakathai miga viraivil ethir paakiren jodhidathil innum niraya katru kolla vendum endra aarvam ungaludaiya ovvaru pathivaium padikum poluthu thoondukirathu ////

புத்தக வேலை நடந்து கொண்டிருக்கிறது. முன்பு அறிவித்தபடி, முதல் 2 தொகுதிகள் (First 2 volumes) டிஸம்பர் மாதம் மூன்றாவது அல்லது நாலாவது வாரத்தில் வெளிவரும். பதிவு செய்துள்ளவர்காளுக்கு மட்டுமே பிரதிகள் கிடைக்கும். நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா?

பதிவு செய்வதற்கான முகவரி: spvrsubbiah@gmail.com
Please reserve your copy by giving your full postal address!

said...

அய்யா நான் படித்த நூல்களில் ஆதி(முதல்) சித்தர் சிவன் என்று குறிபிடுகிறார்கள் , அவர் ஆதி சித்தன் என்று சொல்லும் பொழுது , அவர் கைலாயத்தை சொந்தமாக கொண்டவர் , அப்டிதான் நூல்களும் குறிப்பிடுகின்றன , இவர் திரு விடை மருதூரில் உறைபவர் அல்ல அய்யா , இங்கு ச்யம்புவாக காட்சி அளிக்கிறார் , 45 டிகிரி அளவில் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கும் சுயம்பு லிங்கம். அம்மலையில் உள்ள பல சித்தர்கள் மட்டும் பல்வேறு இடங்களில் ஜீவா சமாதி கொண்டார் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன , கோரகரின் மலைவாகடம் என்ற நூல் இதற்கு சாட்சி

said...

எனக்கு இந்த யோகம் இல்லை, இருந்திருந்தால் கார் ஓட்ட தெரியாமல் கார் வச்சு என்ன செய்வது ?

said...

தங்கள் விளக்கத்தின் மூலம் பரிவர்த்தனை யோகத்தின் மற்றொரு தன்மையை கற்று கொண்டேன். நன்றி ஐயா
பணிவான வணக்கங்களுடன்...........

said...

present Sir

said...

Ayya ennaku entha yogam illai....

said...

Sir,my brother has bhaskara yoga
lagna-midhuna,rahu in it
moon-2nd
sun-3rd
budha-4th
guru-5th
mars-6th
ketu-7th
he has kalasarpa dosha.so how it works?

said...

Today only i have seen ur blog.Its simple&super

said...

ஐயா, நான் புதிய மாணவன், உங்கள் பழய பாடங்களை அடிபடை பாடம் முதல்(from 1st lesson )படித்து வருகிரென், ஒரு சந்தெகம், நவாம்சதில் கூட பார்வை எடுத்து கொள்ளலாமா( குரு 1,5,9) அது பொல செவ்வாய், ரகு,கும் பார்வை எடுதுகொள்ள்லாமா? அல்லது ராசியில் மட்டும் பார்வை கணக்கில் வருமா?சந்தெகம் வகுப்பில் கேகலாமா
அல்லது உங்கள் இமெயில் அணுப்பி கேக்கனுமா,
நன்றி ஐயா,

said...

////prabakar.l.n said...
அய்யா நான் படித்த நூல்களில் ஆதி(முதல்) சித்தர் சிவன் என்று குறிபிடுகிறார்கள் , அவர் ஆதி சித்தன் என்று சொல்லும் பொழுது , அவர் கைலாயத்தை சொந்தமாக கொண்டவர் , அப்டிதான் நூல்களும் குறிப்பிடுகின்றன , இவர் திரு விடை மருதூரில் உறைபவர் அல்ல அய்யா , இங்கு சுயம்புவாக காட்சி அளிக்கிறார் , 45 டிகிரி அளவில் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கும் சுயம்பு லிங்கம். அம்மலையில் உள்ள பல சித்தர்கள் மட்டும் பல்வேறு இடங்களில் ஜீவா சமாதி கொண்டார் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன , கோரகரின் மலைவாகடம் என்ற நூல் இதற்கு சாட்சி/////

தகவலுக்கு நன்றி நண்பரே!

said...

/////Priya said...
எனக்கு இந்த யோகம் இல்லை, இருந்திருந்தால் கார் ஓட்ட தெரியாமல் கார் வச்சு என்ன செய்வது ?/////

நீங்கள் சொல்வது உங்களைப் பொறுத்தவரை சரிதான்! ஆனால் யதார்த்தம் என்னவென்றால் கார் ஓட்டத்தெரியாத பலர் கார் வைத்திருக்கிறார்கள். உடன் ஓட்டுனரையும் வைத்திருக்கிறார்கள்!

said...

////atoztamilnadu said...
தங்கள் விளக்கத்தின் மூலம் பரிவர்த்தனை யோகத்தின் மற்றொரு தன்மையை கற்று கொண்டேன். நன்றி ஐயா
பணிவான வணக்கங்களுடன்...........///

உங்கள் கேள்வி நல்ல கேள்வி. நீங்கள் கேள்வி கேட்டிருக்காவிட்டால், யோகத்தின் இன்னொரு பரிமாணத்தை நானும் எழுதியிருக்க மாட்டேன் (மறதிதான்). நன்றி!

said...

/////Ram said...
present Sir////

நல்லது. வருகைப் பதிவிற்கு நன்றி !

said...

/////Karthi said...
Ayya ennaku entha yogam illai..../////

சரி அடுத்த குலுக்கலிலாவது ஏதாவது லாட்டரி அடிக்குமா என்று பார்ப்போம் கார்த்தி!

said...

/////P.R. said...
Sir,my brother has bhaskara yoga
lagna-midhuna,rahu in it
moon-2nd
sun-3rd
budha-4th
guru-5th
mars-6th
ketu-7th
he has kalasarpa dosha.so how it works?///////

பாஸ்கரா யோகத்திற்கான விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். எது விடுபட்டுள்ளது என்று தெரியும்!

said...

////P.R. said...
Today only i have seen ur blog.Its simple&super/////

நன்றி!

said...

///saravana said...
ஐயா, நான் புதிய மாணவன், உங்கள் பழையய பாடங்களை அடிப்படை பாடம் முதல்(from 1st lesson )படித்து வருகிரென், ஒரு சந்தேகம், நவாம்சதில் கூட பார்வை எடுத்து கொள்ளலாமா( குரு 1,5,9) அது பொல செவ்வாய், ரகு,கும் பார்வை எடுதுகொள்ள்லாமா? அல்லது ராசியில் மட்டும் பார்வை கணக்கில் வருமா?சந்தெகம் வகுப்பில் கேகலாமா
அல்லது உங்கள் இமெயில் அணுப்பி கேக்கனுமா,
நன்றி ஐயா,/////

முதலில் 200 பாடங்களை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். பாடங்களோடு கீழே உள்ள பின்னூட்டங்களையும் படியுங்கள். சந்தேகம் எதுவும் வராது. தெளிவு வரும். அடுததடுத்த பாடங்களில் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்கும்!

said...

/*உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/

தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .

ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .

மிக்க நன்றி .

said...

உள்ளேன் அய்யா. ஹ்ம். யோகங்கள் பற்றிய பாடம் முடிந்தவுடன் வகுப்புக்கு வரலாம் என்ற எண்ணம் வருகிறது. ஒரு யோகமும் இல்லேன்னா என்ன செய்யறது?

said...

ஐயா
சந்திரன் சுய சாரத்தில் உள்ளார்....
சந்திரன் அங்காரக சாரத்தில் உள்ளார் என்று எல்லாம் கதைக்கிறார்களே...
அப்படி என்றால் என்ன...

இது பற்றி ஏற்கனவே பாடம் நடத்தி விட்டீர்களா ஐயா...???

said...

Dear Sir

Thirukanidha panchagapadi 11il Lagnadhibadhi & 11ikkuriyavan (Bhudan-Uccham) Irupadhaga kondal eppadi iyya?

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

said...

Shyam Prasad said...
/*உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.
இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/
தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .
ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .
மிக்க நன்றி .////

சிலவற்றை எழுதும்போது நினைவிற்கு வருபவற்றைத் தவறாமல் சேர்த்துவிடுவேன். நன்றி

said...

////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா. ஹ்ம். யோகங்கள் பற்றிய பாடம் முடிந்தவுடன் வகுப்புக்கு வரலாம் என்ற எண்ணம் வருகிறது. ஒரு யோகமும் இல்லேன்னா என்ன செய்யறது?/////

வகுப்பறைக்குப் பாடம் படிக்க வரவில்லையா நீங்கள்? உங்கள் ஜாதகப் பலன் மட்டும் தெரிந்தால் போதுமா நண்பரே!

said...

////Kumares said...
ஐயா
சந்திரன் சுய சாரத்தில் உள்ளார்....
சந்திரன் அங்காரக சாரத்தில் உள்ளார் என்று எல்லாம் கதைக்கிறார்களே...
அப்படி என்றால் என்ன...
இது பற்றி ஏற்கனவே பாடம் நடத்தி விட்டீர்களா ஐயா...???////

சுயசாரம் என்பது ஒரு கிரகம் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருப்பது.
உதாரணத்திற்கு, அஸ்விணி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரமும் கேதுவின் நட்சத்திரம். ஜாதகத்தில் கேது அந்த நட்சத்திரங்கள் ஒன்றில் இருந்தால், அது தன்னுடைய சுயசாரத்தில் இருப்பதாகப் பொருள். கோச்சாரக் கிரகங்களுக்கும் அதே நிலைப்பாடு உண்டு!

said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Thirukanidha panchagapadi 11il Lagnadhibadhi & 11ikkuriyavan (Bhudan-Uccham) Irupadhaga kondal eppadi iyya?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

லக்கினாதிபதியும், லாபாதியும் ஒன்று சேர்ந்திருப்பது நல்லதுதான்!

said...

I have doubt here in this DEVENDRA YOGAM ,

My lagna is kumbam and 2and 11th lord is Jubitor and 10 lord is Mars
and 1st lord is saturn,

in 11th place mars and Saturn are there and 3rd place jub is there.

According to this yoga, 2 and 10 lords has to change their place, it is there jub and mars are changed..
but 11 and 1st also has to change their place but it is not there in my case because Jub comes as a both 2 and 11 , how it will change the position with 10 as well as 1st lord...

this is same prob for Simmha lagna also with the lord mercury as 2nd and 11th.

Please make me aware.

said...

/////karthikeyan.p said...
I have doubt here in this DEVENDRA YOGAM ,
My lagna is kumbam and 2and 11th lord is Jubitor and 10 lord is Mars
and 1st lord is saturn,
in 11th place mars and Saturn are there and 3rd place jub is there.
According to this yoga, 2 and 10 lords has to change their place, it is there jub and mars are changed..
but 11 and 1st also has to change their place but it is not there in my case because Jub comes as a both 2 and 11 , how it will change the position with 10 as well as 1st lord...
this is same prob for Simmha lagna also with the lord mercury as 2nd and 11th.
Please make me aware./////

இதை இதே பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் அளித்திருக்கிறேன். அதே பதில்தான் உங்களுக்கும். அது உங்கள் வசதிக்காக மீண்டும் ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒரு இடத்தின் அதிபதி பரிவர்த்தனையாகி இருக்கும் இடத்தில், வேறு ஒரு வீட்டிற்கு உரிய
கிரகம் பரிவர்த்தனையில் முதல் இரண்டு பரிவர்த்தனைக் கிரகங்களுடன் சம்பந்தப்பட்டால் அது முக்கோணப் பரிவர்த்தனை எனும் கணக்கில் வரும்

A = B
B = C
Therefore C = A எனும் கணக்கில் வரும்!

அதாவது உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.

இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?

said...

//வகுப்பறைக்குப் பாடம் படிக்க வரவில்லையா நீங்கள்? உங்கள் ஜாதகப் பலன் மட்டும் தெரிந்தால் போதுமா நண்பரே!// தப்புத்தான் வாத்யாரையா. இனி ஒழுங்கா படிக்கிறேன்.

said...

/* உங்கள் கூற்றுப்படியே, கும்ப லக்கின அதிபதி சனி = குரு வீட்டில், குரு = சனி வீட்டில், செவ்வாய் = குரு வீட்டில், குரு செவ்வாய் வீட்டில் இருக்க வேண்டும் = அதற்குப் பதிலாக பரிவர்த்தனையாக அமர்ந்திருக்கும் சனி அதை நிறைவு செய்வார்.
இதே கணக்குத்தான் சிம்மத்திற்கும்! விளக்கம் போதுமா?*/
தாங்கள் கூறிய படி போட்டு பார்த்தால் , மூன்று கிரகங்களான செவ்வாய் , சனி மற்றும் குரு ஆகியவைகளுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளதால் , npr combinationil, குழப்பமாக தான் உள்ளது .
ஆதலால் தாங்கள் உதாரணத்தை கிரகங்களின் வீடு என்று கூறாமல் , இந்த கிரகமாவது இந்த ராசிகள் (கும்பம் மற்றும் மகரம்) இருந்தால், தேவேந்திர யோகம் எவ்வாறு அமையும் (முக்கோணப் பரிவர்த்தனை இருக்கும் போது ) என்று விளக்கம் .
மிக்க நன்றி .

சிலவற்றை எழுதும்போது நினைவிற்கு வருபவற்றைத் தவறாமல் சேர்த்துவிடுவேன். நன்றி */

விளக்கம் தேவை. தாங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது இந்த முக்கோணப் பரிவர்த்தனை (ராசியின் பெயரை வைத்துக் கொண்டு உதாரணத்தை விளக்கவும்) எவ்வாறு தேவேந்திர யோகமாக அமைகிறது என்று சொல்லவும் .

மிக்க நன்றி

உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன............?

Those who have enrolled their name using the above option, please inform your mail Id to my mail address: classroom2007@gmail.com Then only you will get the mail lessons! Please co-operate with me!




வாத்தியாரின் பல்சுவை பதிவில் இன்று

ஏன் பெண் உறங்கவில்லை! கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
மேலும் படிக்க.......
...... இங்கே கிளிக்’குங்கள்!

அடிப்படைப் பாடங்கள் இங்கே:.Click here !

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com


அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!