மாணவர் பதிவேடு (Enrolment Register)

3.11.09

Lessons on yoga: Ara Sauri Yoga ஆர செளரி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yoga: Ara Sauri Yoga ஆர செளரி யோகம்!

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------

என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different fortfolios). அவை அத்தனையும் கெடும்.


என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.
ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?
உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

96 comments:

said...

ஸ் ஸ் ஸ் ஸ் வணக்கம்

ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா நல்லா மூச்சு இரைக்குதுடா சாமி...இன்று முதல் மாணவனா வகுப்புக்கு ஓடி வந்ததால் இப்படி ஆகிவிட்டது....

உள்ளேன் ஐயா

said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

பாடம் அருமை,
நன்றிகள் குருவே.

அன்புடன்,
ஆலாசியம் கோ.

said...

பதிவிர்க்கு நன்றி.

இந்த யோகம் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால் மற்றும் பார்வை பெருவதால்?

said...

எனக்கு செவ்வாயும் ராகுவும் ஒன்றாக 5ல் இருக்கிறார்கள். இது அதைவிட கடுமையானது அல்லவா. ராகு செவ்வாயை விழுங்கி விடுவார் என்று முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். என் அனுபவத்தில் செவ்வாயின் காரகத்துவம் கெடத்தான் செய்தது.

said...

உள்ளேன் ஐயா...
சேர்மராஜ்

said...

இது ஒரு சாப யோகம். இந்த சேர்க்கை மற்ற யோகங்களை பலனற்றவை ஆக்கிவிடும். முருகனை வழிபட்டால் துன்பங்கள் விலகிவிடும்.

said...

அய்யா இனிய காலை வணக்கம் ,
இன்றைய (அவ)யோக பாடம் உங்கள் நடையில் அருமை ....எனக்கு வேரு ஒரு சந்தேகம் அய்யா என் லக்னம் தனுசு 7 இல் புதன் ,செவ்வாய் ,சந்திரன் இவர்களில் சந்திரன்,புதன் இருவரும் யுத்த களத்தில் இவர்களில் சந்திரன் 66.42 பாகை,புதன் 65.34 பாகை களில் இருகிரார்கள் இதில் யார் பலன் தருவார் ...இதில் புதன்(ராசி நாதன் ) முக்கியமான 7,10 க்கு அதிபதி இப்போது குரு திசை ,புதன் புக்தி அரம்பம் புதன் நன்மை செய்வாரா?

said...

vaakiyya panchangappadi jathagam kurikka software irunthal solungal aiyya.

said...

பாடம் அருமை..படமும் அருமை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

said...

Ayya
ivanga enakku 9 il irukkanga.

Enakku Makara laknam, enakku iavanga 2 perum nallavanganu kelvi pathen appadi irunthum enakku inda yoga irukka?

said...

அன்புள்ள ஆசானே,
பாடம் அருமை. மொத்ததில் இது யொகம் இல்லை.

said...

I have this "Yogam" on my 10th house. Saturn, Mars,Moon joined together. -)

said...

Dear Sir

11il Lagnadhibhadhi(Sevvai)guru 7il Irundhu 5th parvayaga Lagnadhibadhiyai(sevvai)parkirar and Sani 3rd parvai vilugiradhu.Idhan palan - Sani(9il Sani) dasayil Eppadi Irukkum?



Thank you.

Loving Stduent
Arulkumar Rajaraman

said...

அய்யா,

எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அமைப்பு அதாவது ஆறில் உள்ளது. சற்று விவரமாக...
தனுசு லக்னம் -- வக்கிர குரு லக்னத்தில்.
ஆறில் இந்த அமைப்பு --- சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூவரும்.
பதினொன்றில் --- சந்திரன்.

சனியின் வீடு இரண்டு மற்றும் மூன்று,
இந்த இரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். வீட்டின் பரல் 30,
இருந்தும் இது சந்திரனுக்கு நான்கில் கேந்திரத்தில்.

சனியின் அடுத்த வீடு லக்னத்திற்கு மூன்று அந்த வீடும் சந்திரனிற்கு ஐந்தில் (கேந்திரத்தில்). வீட்டின் பரல் 31 ,மேல் கூறிய இரண்டு வீடும் பாதுகாப்புக்குள்.

அடுத்ததாக செவ்வாய், இது ஜாதகருக்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் வீடு.
ஐந்தாம் வீட்டிற்கு சந்திரனின் ஏழாம் பார்வை (ஆனால் வீட்டின் பரல் 17.) அதுவும் பாதுகாப்புடன் உள்ளது எனக் கொள்வதா? அந்த வீட்டில் சூரியன் உட்சம் பெற்றும் இருக்கிறார்..

பன்னிரெண்டை எப்படிக் கொள்வது? அந்த வீட்டின் பரல் 26 இது லாபஸ்தானத்தின் பரல் (32)விடக் குறைவே இதையும் பாதுகாப்பு எனக் கொள்கிறேன்.

பார்க்கும் முறை சரியா?

(தகவலுக்காக அவர்களின் குழந்தைகள் இருவர் ஆணும் பெண்ணும் ஒன்னொன்று, சென்ற வாரம் அந்த ஆண் குழந்தையை திருப்பதி பெருமாள் சன்னதியில் கொடுத்து பெருமாளிடமே தட்சணை கொடுத்து தத்து எடுத்து வந்துள்ளார்கள். அந்த பையனின் ஜாதகத்தில் ஒன்பதில் கேதும் அதோடு பன்னிரெண்டில் சூரியனும் நீசம் அதாவது அந்தப் பையனின் ஜாதகத்திலும் தத்து போகவேண்டிய அமைப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் ஆகவே இந்த பரிகாரங்கள். மேலும் ஒன்பது கேது மற்றும் மூன்றில் செவ்வாயுடன் ராகுவும்இருப்பதால் காளகஸ்த்தியும் சென்று வழிபாட்டு வந்துள்ளார்கள். செய்துச் சரியா செய்யச் சொன்னது அடியேன் தவறேதும் உள்ளதா?)

அன்புடன்,
ஆலாசியம் கோ.

said...

அய்யா,
எனது முந்தய பின்னூட்டத்தில் ஐந்தில் திரிகோணம் என்பதற்கு கேந்திரம் என்று எழுதிவிட்டேன் திருத்திக் கொள்கிறேன்

நன்றி அய்யா.

said...

நன்றி ஐயா!

said...

Dear sir,
In my horoscope, saturn and mars and sukran all are in 11th place.(in rishaba rashi).
Please send me mail about this subject.

said...

Good Morning.Present sir.

said...

பாடம் அருமை. 3 நாள் நானும் வகுப்பிற்கு வரவில்லை. அவற்றையும் படித்துவிட்டு வருகிறேன்

said...

எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))
வாத்தியார் அய்யாவிற்கு ரொம்ப‌
வருத்தமாம்!..
பாடத்திற்கு நன்றி அய்யா.

said...

உதாரணமாக மீன லக்ன ஜாதகத்துக்கு மகரத்தில்(11) உச்ச செவ்வாய்(4பரல்).கடகத்தில் சனி(1பரல்) இருந்து அவர் சொந்த வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்.ஆனால் இருவரும் 7ம் பார்வையால் பார்த்து கொள்கின்றனர்.
லக்னாதிபதி குரு 9ல் இருந்து லக்னம்,5மிட சனியை பார்க்கிறார்.

அம்சத்தில் சனி மற்றும் செவ்வாய்க்கு மகரம்,கடகத்துடன் சம்பந்தம் இல்லை.

11ம் வீட்டின் காரகத்துவம் பாதிக்கப்படுமா? 5ம் வீட்டின் காரகத்துவம் பாதிக்கப்படுமா? இந்த வீடுகளின் பலம் மற்றும் பலன் அறிய சனி,செவ்வாயின் நக்சத்திர சாரம் கருத்தில் கொள்ளப்படவேண்டுமா?

கொஞ்சம் விளக்கவும்.

said...

ஐயா!!!

பாவத்தின் பாவம் பற்றி ஒவ்வொரு பாவமாக 12 இடுகை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.இங்கு முடியாவிட்டாலும் உங்கள் புத்தகத்தில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி!!!

said...

Dear Sir,

Thanks.I read it.

said...

////Success said...
ஸ் ஸ் ஸ் ஸ் வணக்கம்
ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா நல்லா மூச்சு இரைக்குதுடா சாமி...இன்று முதல் மாணவனா வகுப்புக்கு ஓடி வந்ததால் இப்படி ஆகிவிட்டது....
உள்ளேன் ஐயா////

முதலில் வந்ததற்காக உங்களுக்குத் தனியாக என்ன கிடைக்கப்போகிறது? மெதுவாகவே வாருங்கள்!

said...

/////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
பாடம் அருமை,
நன்றிகள் குருவே.
அன்புடன்,
ஆலாசியம் கோ./////

நன்றி ஆலாசியம்!

said...

/////மதி said...
பதிவிற்கு நன்றி.
இந்த யோகம் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால் மற்றும் பார்வை பெருவதால்?/////

இந்த யோகம் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால் மட்டுமே உண்டாகும்!

said...

/////ananth said...
எனக்கு செவ்வாயும் ராகுவும் ஒன்றாக 5ல் இருக்கிறார்கள். இது அதைவிட கடுமையானது அல்லவா. ராகு செவ்வாயை விழுங்கி விடுவார் என்று முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். என் அனுபவத்தில் செவ்வாயின் காரகத்துவம் கெடத்தான் செய்தது.////

அதெல்லாம் ஒருவரையொருவர் விழுங்க மாட்டார்கள் .நம்மைத்தான் மென்று தின்பார்கள்!

said...

/////tamiltemples said...
உள்ளேன் ஐயா...
சேர்மராஜ்////

நல்லது. வருகைப்பதிவு போட்டாயிற்று!

said...

////krish said...
இது ஒரு சாப யோகம். இந்த சேர்க்கை மற்ற யோகங்களை பலனற்றவை ஆக்கிவிடும். முருகனை வழிபட்டால் துன்பங்கள் விலகிவிடும்./////

ஆமாம். இறைவனிடம் விட்டுவிடுங்கள். நமக்கு என்ன வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் பார்த்துக்கொள்வார்!

said...

/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம் ,
இன்றைய (அவ)யோக பாடம் உங்கள் நடையில் அருமை ....எனக்கு வேறு ஒரு சந்தேகம் அய்யா என் லக்னம் தனுசு 7 இல் புதன் ,செவ்வாய் ,சந்திரன் இவர்களில் சந்திரன்,புதன் இருவரும் யுத்த களத்தில் இவர்களில் சந்திரன் 66.42 பாகை,புதன் 65.34 பாகைகளில் இருகிரார்கள் இதில் யார் பலன் தருவார் ...இதில் புதன்(ராசி நாதன் ) முக்கியமான 7,10 க்கு அதிபதி இப்போது குரு திசை ,புதன் புக்தி அரம்பம் புதன் நன்மை செய்வாரா?/////

கிரகயுத்த பாடத்தை மீண்டும் ஒருதடவை படியுங்கள்!

said...

////govind said...
vaakiyya panchangappadi jathagam kurikka software irunthal solungal aiyya./////

இருக்கும் மென்பொருள்களில் அந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கும். தேடிப்பிடியுங்கள்!

said...

////வேலன். said...
பாடம் அருமை..படமும் அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

நன்றி வேலன்!

said...

///Saravanan said...
Ayya
ivanga enakku 9 il irukkanga.
Enakku Makara laknam, enakku iavanga 2 perum nallavanganu kelvi pathen appadi irunthum enakku inda yoga irukka?////

உங்களுக்கு எல்லோருமே நல்லவர்கள்தான். பெயர் ராசி அப்படி!
உங்களுக்கு சனி லக்கினாதிபதி ஆகவே அதிகம் பாதிப்பு இருக்காது. அத்துடன் செவ்வாய் 4 & 11ற்கு உரியவர். அவராலும் பெரிய பாதிப்பு இருக்காது!

said...

////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே,
பாடம் அருமை. மொத்ததில் இது யோகம் இல்லை./////

நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் யோகம் இல்லை என்று சொல்ல முடியுமா? இது அவயோகக் கணக்கில் வரும்!

said...

/////அட்சயா said...
I have this "Yogam" on my 10th house. Saturn, Mars,Moon joined together. -)////

தகவலுக்கு நன்றி நண்பரே!

said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
11il Lagnadhibhadhi(Sevvai)guru 7il Irundhu 5th parvayaga Lagnadhibadhiyai(sevvai)parkirar and Sani 3rd parvai vilugiradhu.Idhan palan - Sani(9il Sani) dasayil Eppadi Irukkum?
Thank you.
Loving Stduent
Arulkumar Rajaraman////

நீங்கள் மேஷ லக்கினம். மேஷ லக்கினத்திற்கு சனி 10 & 11ஆம் ஆதிபதி. அவருடைய சுயவர்க்கப்பரல் 5ம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால் சனி தசை நன்றாக இருக்கும்!

said...

/////Alasiam G said...
அய்யா,
எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அமைப்பு அதாவது ஆறில் உள்ளது. சற்று விவரமாக...
தனுசு லக்னம் -- வக்கிர குரு லக்னத்தில்.
ஆறில் இந்த அமைப்பு --- சனி,செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூவரும்.
பதினொன்றில் --- சந்திரன்.
சனியின் வீடு இரண்டு மற்றும் மூன்று,
இந்த இரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். வீட்டின் பரல் 30,
இருந்தும் இது சந்திரனுக்கு நான்கில் கேந்திரத்தில்.
சனியின் அடுத்த வீடு லக்னத்திற்கு மூன்று அந்த வீடும் சந்திரனிற்கு ஐந்தில் (கேந்திரத்தில்). வீட்டின் பரல் 31 ,மேல் கூறிய இரண்டு வீடும் பாதுகாப்புக்குள்.
அடுத்ததாக செவ்வாய், இது ஜாதகருக்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் வீடு.
ஐந்தாம் வீட்டிற்கு சந்திரனின் ஏழாம் பார்வை (ஆனால் வீட்டின் பரல் 17.) அதுவும் பாதுகாப்புடன் உள்ளது எனக் கொள்வதா? அந்த வீட்டில் சூரியன் உட்சம் பெற்றும் இருக்கிறார்..
பன்னிரெண்டை எப்படிக் கொள்வது? அந்த வீட்டின் பரல் 26 இது லாபஸ்தானத்தின் பரல் (32)விடக் குறைவே இதையும் பாதுகாப்பு எனக் கொள்கிறேன்.
பார்க்கும் முறை சரியா?
(தகவலுக்காக அவர்களின் குழந்தைகள் இருவர் ஆணும் பெண்ணும் ஒன்னொன்று, சென்ற வாரம் அந்த ஆண் குழந்தையை திருப்பதி பெருமாள் சன்னதியில் கொடுத்து பெருமாளிடமே தட்சணை கொடுத்து தத்து எடுத்து வந்துள்ளார்கள். அந்த பையனின் ஜாதகத்தில் ஒன்பதில் கேதும் அதோடு பன்னிரெண்டில் சூரியனும் நீசம் அதாவது அந்தப் பையனின் ஜாதகத்திலும் தத்து போகவேண்டிய அமைப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் ஆகவே இந்த பரிகாரங்கள். மேலும் ஒன்பது கேது மற்றும் மூன்றில் செவ்வாயுடன் ராகுவும்இருப்பதால் காளகஸ்த்தியும் சென்று வழிபாட்டு வந்துள்ளார்கள். செய்துச் சரியா செய்யச் சொன்னது அடியேன் தவறேதும் உள்ளதா?)
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

எப்படிப் பொறுமையாக இவ்வளவு விஷயங்களையும் தட்டச்சு செய்தீர்கள்? தற்சமயம் எனக்கு நேரமில்லை அலசல் என்ற தலைப்பில் பாடம் நடத்தவுள்ளேன். அப்போது இதையெல்லாம் வைத்துக்கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்!

said...

////DHANA said...
நன்றி ஐயா!////

நல்லது நண்பரே!

said...

////jee said...
Dear sir,
In my horoscope, saturn and mars and sukran all are in 11th place.(in rishaba rashi).
Please send me mail about this subject./////

முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள். படித்தீர்களா?

said...

////இராதா கிருஷ்ணன் said...
Good Morning.Present sir.////

வருகைப்பதிவு போட்டாயிற்று!

said...

////RVC said...
பாடம் அருமை. 3 நாள் நானும் வகுப்பிற்கு வரவில்லை. அவற்றையும் படித்துவிட்டு வருகிறேன்/////

நல்லது. அப்படியே செய்யுங்கள்!

said...

////Blogger thirunarayanan said...
எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))
வாத்தியார் அய்யாவிற்கு ரொம்ப‌
வருத்தமாம்!..
பாடத்திற்கு நன்றி அய்யா.////

சரி ’சந்தோஷத்துடன்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

said...

Blogger Arul said...
உதாரணமாக மீன லக்ன ஜாதகத்துக்கு மகரத்தில்(11) உச்ச செவ்வாய்(4பரல்).கடகத்தில் சனி(1பரல்) இருந்து அவர் சொந்த வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்.ஆனால் இருவரும் 7ம் பார்வையால் பார்த்து கொள்கின்றனர்.//////

பார்வைக்கு இந்த யோகம் கிடையாது! சேர்க்கைக்கு மட்டுமே!
--------------------------------------------
லக்னாதிபதி குரு 9ல் இருந்து லக்னம்,5மிட சனியை பார்க்கிறார்.
அம்சத்தில் சனி மற்றும் செவ்வாய்க்கு மகரம்,கடகத்துடன் சம்பந்தம் இல்லை.
11ம் வீட்டின் காரகத்துவம் பாதிக்கப்படுமா? 5ம் வீட்டின் காரகத்துவம் பாதிக்கப்படுமா? இந்த வீடுகளின் பலம் மற்றும் பலன் அறிய சனி,செவ்வாயின் நக்சத்திர சாரம் கருத்தில் கொள்ளப்படவேண்டுமா?
கொஞ்சம் விளக்கவும்.////

இதற்கு விளக்கம் பின்னால் அலசல் பற்றிய பாடம் நடத்த உள்ளேன். அப்போது கேளுங்கள்!
ஒவ்வொருவரும் பதிவிற்கு சம்பந்தம் இல்லமல் தங்களுடைய ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். அனைவருக்கும், அனைவரும் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், அடுத்தடுத்து பாடம் நடத்த முடியாது. முதலில் பாடங்கள். பிறகு மற்றவை!

said...

////Blogger Arul said...
ஐயா!!!
பாவத்தின் பாவம் பற்றி ஒவ்வொரு பாவமாக 12 இடுகை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.இங்கு முடியாவிட்டாலும் உங்கள் புத்தகத்தில் எதிர்பார்க்கிறேன்.
நன்றி!!!////

முன்பு எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் தேடிப் படியுங்கள். புத்தகத்திலும் வரும்!

said...

////Blogger KUMARAN said...
Dear Sir,
Thanks.I read it.////

நன்றி குமரன்!

said...

அய்யா மன்னிக்க வேண்டுகிறேன் ,,,

என்னுடைய பிறந்த நேரதிற்க்கு நேற்றைய தினம் www.planetary position .com தளத்தில் பார்த்தேன் ...களத்திர ,தொழில் அதிபதி மற்றும் ராசி நாதன் புதன் மற்றும் சந்திரன் இருவரும் 1 பாகை குறைவாக இருந்த உடன் mood out ஆகி விட்டேன் அதனுடய விளைவு சந்திரன் க்கு கிரக யுத்த விதி கிடையாது என்பதை மரந்து விட்டேன் இபோது பலன் பிடி பட்டு விட்டது ..உடன் சந்திர மங்கள யோகம் இருபத்தும் இபோது தான் கவனித்தேன் .....
நன்றி நன்றி நன்றி.....வணக்கம்

said...

ஐயா ,
என்னுடையது மகர லக்னம் , ஐய்ந்தாம் வீட்டில் சனியும் செவ்வாயும் சுக்கிரன் வுடன் சேர்த்து இருக்கிறார்கள் .ஐய்ந்தாம் வீட்டின் பரல்கள் 24 . சனியின் பரல்கள் 2, செவ்வாயின் பரல்கள் 4, சுக்ரனின் பரல்கள் 4. ஐய்ந்தாம் வீடு சுக்ரனின் சொந்த வீடு.

ஐய்ந்தாம் வீடு கேந்திரம் ஆனதனால் இந்த கூட்டணி நல்லது செய்யும் என நம்பியிருந்தேன் .மேலும் ஐய்ந்தாம் வீட்டில் கிரஹ யுத்தம் வேறு.

ஈஸ்வரா நீ தான் என்னை காபாற்ற வேண்டும்.

அன்புடன்
பிரேமானந்தன்

said...

goodmorning sir,

Present sir!

Today arasauri yoga read. Yesterday I have lost my job. so i am also in the forest without eye what a coincident!

Can u tell me what shall i do next please?
My lagna Dhanus. In lagna Guru and Saturn
vakram. Third house Ketu, fifth house mars. 7th Venus and Sun, 8th house mercury, 9th house ragu, 10th house moon(uttram)

Gurumaga dasi Ragu puthi running from30.2.2008 to27.07.2010.

Can u please guide me!

Regards
Sankar
Karur

said...

அய்யா,

நானும் படித்து இருக்கிறேன். செவ்வாய் , சனி சேர்கை எப்பொழுதும் உதவாது என்று.

மேலும் ஒரு சந்தேகம், நம் பாடத்தில் படித்தேன் ஏழுக்கு உரியவன் ஏழில் குடிஇருக்க கூடாது என்று, அப்படிஎன்றால் மேஷ லக்னத்திற்கு சுக்க்ரன் துலாமில் இருக்க கூடாது அல்லவா. ஆட்சி பெற்றாலும் ? பொதுவாக இந்த அமைப்பு என்ன தோசத்தை குறிக்கும்?

நன்றியுடன்
சரவணா

said...

இந்த சேர்க்கை மகரத்தில் ஏற்பட்டால் இதன் பாதிப்பு சற்று குறையும் என்று நினைக்கிறேன்.

said...

ஐயா வணக்கம்

ஆர சௌரி யோகம் பற்றிய பாடம் நன்றாக இருந்தது. முன்பு ஒரு பாடத்தில் சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்தால் அதீத கோபமும் மூர்க்கதனமும் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். பார்வைக்கே அப்படி என்றால் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் ???

எனக்கு 4 இல சனி, 10 இல செவ்வாய் - அதீத கோபம், மூர்க்கத்தனம் இரண்டும் உள்ளது. காரணம் தெரிந்த பின் கோபத்திற்கு காரணம் கிரகங்கள் தான் மனிதர்கள் இல்லை என்று இப்போது கோப படுவதில்லை. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் அளவிற்கு கோபம் குறைந்துள்ளது.

கோபம் குறைந்ததால் நன்மை விளைந்ததால் சரி

நன்றி

வாழ்த்துக்கள்

said...

It is good lesson.

The ava yoga is not for me.

But if it is there also i will not worry.

Because i know the magic Number : 337 (All are same)

said...
This post has been removed by the author.
said...

///astroadhi said...
அய்யா மன்னிக்க வேண்டுகிறேன் ,,,
என்னுடைய பிறந்த நேரதிற்க்கு நேற்றைய தினம் www.planetary position .com தளத்தில் பார்த்தேன் ...களத்திர ,தொழில் அதிபதி மற்றும் ராசி நாதன் புதன் மற்றும் சந்திரன் இருவரும் 1 பாகை குறைவாக இருந்த உடன் mood out ஆகி விட்டேன் அதனுடய விளைவு சந்திரன் க்கு கிரக யுத்த விதி கிடையாது என்பதை மரந்து விட்டேன் இபோது பலன் பிடி பட்டு விட்டது ..உடன் சந்திர மங்கள யோகம் இருபத்தும் இபோது தான் கவனித்தேன் .... நன்றி நன்றி நன்றி.....வணக்கம்/////

நல்லது! பகிர்விற்கு நன்றி!

said...

///Prem said...
ஐயா ,
என்னுடையது மகர லக்னம் , ஐய்ந்தாம் வீட்டில் சனியும் செவ்வாயும் சுக்கிரன் வுடன் சேர்த்து இருக்கிறார்கள் .ஐய்ந்தாம் வீட்டின் பரல்கள் 24 . சனியின் பரல்கள் 2, செவ்வாயின் பரல்கள் 4, சுக்ரனின் பரல்கள் 4. ஐய்ந்தாம் வீடு சுக்ரனின் சொந்த வீடு.
ஐய்ந்தாம் வீடு கேந்திரம் ஆனதனால் இந்த கூட்டணி நல்லது செய்யும் என நம்பியிருந்தேன் .மேலும் ஐய்ந்தாம் வீட்டில் கிரஹ யுத்தம் வேறு.
ஈஸ்வரா நீ தான் என்னை காபாற்ற வேண்டும்.
அன்புடன்
பிரேமானந்தன்////

காப்பாற்றுவார். அத்தனை பேருக்கும் மொத்த மதிப்பெண் 337 தான்! அதை மறந்துவிடாதீர்கள்!

said...

/////jadam said...
goodmorning sir,
Present sir!
Today arasauri yoga read. Yesterday I have lost my job. so i am also in the forest without eye what a coincident!
Can u tell me what shall i do next please?
My lagna Dhanus. In lagna Guru and Saturn
vakram. Third house Ketu, fifth house mars. 7th Venus and Sun, 8th house mercury, 9th house ragu, 10th house moon(uttram)
Gurumaga dasi Ragu puthi running from30.2.2008 to27.07.2010.
Can u please guide me!
Regards
Sankar
Karur////

ஏழரைச் சனி அப்படித்தான் இருக்கும். லக்கினத்தில் குரு இருக்கிறார் அல்லவா - கை கொடுப்பார். மனதைத்தளரவிடாமல் அடுத்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். கிடைக்கும்!

said...

////Saravana said...
அய்யா,
நானும் படித்து இருக்கிறேன். செவ்வாய் , சனி சேர்கை எப்பொழுதும் உதவாது என்று.
மேலும் ஒரு சந்தேகம், நம் பாடத்தில் படித்தேன் ஏழுக்கு உரியவன் ஏழில் குடிஇருக்க கூடாது என்று, அப்படிஎன்றால் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாமில் இருக்க கூடாது அல்லவா. ஆட்சி பெற்றாலும் ? பொதுவாக இந்த அமைப்பு என்ன தோசத்தை குறிக்கும்?
நன்றியுடன்
சரவணா////

சீக்கிரம் ஒரு பெண்ணைப் பார்த்து மணந்து கொள்ளுங்கள். எல்லா தோஷமும் காணாமல் போய்விடும்!
பிறகு இந்த 7ஆம் வீட்டை நீங்களும் மறந்துவிடலாம். நானும் மறந்துவிடலாம்!:-)))

said...

/////ananth said...
இந்த சேர்க்கை மகரத்தில் ஏற்பட்டால் இதன் பாதிப்பு சற்று குறையும் என்று நினைக்கிறேன்.////

ஆமாம். மகரம் சனியின் சொந்த வீடு!

said...

///T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஆர சௌரி யோகம் பற்றிய பாடம் நன்றாக இருந்தது. முன்பு ஒரு பாடத்தில் சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்தால் அதீத கோபமும் மூர்க்கதனமும் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். பார்வைக்கே அப்படி என்றால் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் ???
எனக்கு 4 இல சனி, 10 இல செவ்வாய் - அதீத கோபம், மூர்க்கத்தனம் இரண்டும் உள்ளது. காரணம் தெரிந்த பின் கோபத்திற்கு காரணம் கிரகங்கள் தான் மனிதர்கள் இல்லை என்று இப்போது கோப படுவதில்லை. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் அளவிற்கு கோபம் குறைந்துள்ளது.
கோபம் குறைந்ததால் நன்மை விளைந்ததால் சரி
நன்றி
வாழ்த்துக்கள்////

அதையே கடைப் பிடியுங்கள். எல்லாம் சரியாகி விடும்!

said...

////Blogger Rama said...
It is good lesson.
The ava yoga is not for me.
But if it is there also i will not worry.
Because i know the magic Number : 337 (All are same)////

நன்றி ராமா! ராமா! ராமா! 337 தடவை சொல்லிக் கொள்ளுங்கள்!

said...

ஐயா
எனக்கு மகர லக்னம் . 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்) . சனி லக்னாதிபதி ஆனால் நீசம்.
இதனால் கெடுதலா ?

said...

aryboy.
vanakkam saar,
aara soury yoka sollum pothe payamaaka ullathu.payamum,koopamum ore edaththil seervathaal entha vipariitha palanaa?.thayavu seythu vilakkunkal saar.nantry.
valakavalamudan.
ARYBOY.

said...

ஐயா வணக்கம்,
என்னுடைய மதிய வந்தனத்தை ஏற்று கொள்ளுங்கள்.
மாணவி,
சுந்தரி.

said...

present Sir

said...

இந்த யோகம் விருச்சிக, மகர ராசி,லக்னகாரர்களுக்கு கெடுதல் செய்யாது என்றும் ஒரு தகவல் உண்டு.செவ்வாயை சனி பார்த்தாலே பெண் ஜாதகத்திர்க்கு திருமணத் தடை என்பார்கள்.ஒரு சாரார் சனியுடன் செவ்வாய் சேர்ந்தால் இருவரும் 2,4,7,8,12ல் இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது என்பார்கள். எல்லாம் 337ல் அடங்கிவிடும்

said...

ayya enakku thulam laknam 12 il saniyum sevvayum,
aanal sevvai kanni sevvai kanniyil sevvai kadum pakai

kettavan kettitil kittitum raaja yogam nu padichiruken,.
athai vaithuthan konjam manathai thetri kolvathu naan

said...

////உங்கள் மாணவி said...
ஐயா
எனக்கு மகர லக்னம் . 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்) . சனி லக்னாதிபதி ஆனால் நீசம்.
இதனால் கெடுதலா ?////

கடகத்தில் செவ்வாய் அல்லவா நீசம்? நீசமாகிவிட்டதால் கெடுதல் இருக்காது! கவலை வேண்டாம்!Lagnathipathi in 7th place aspecting the lagna will give you standing power!

said...

////உங்கள் மாணவி said...
ஐயா
எனக்கு மகர லக்னம் . 7-ல் செவ்வாயும் சனியும் (கடகத்தில்) . சனி லக்னாதிபதி ஆனால் நீசம்.
இதனால் கெடுதலா ?////

கடகத்தில் செவ்வாய் அல்லவா நீசம்? நீசமாகிவிட்டதால் கெடுதல் இருக்காது! கவலை வேண்டாம்!Lagnathipathi in 7th place aspecting the lagna will give you standing power!

said...

////aryboy said...
aryboy.
vanakkam saar,
aara soury yoka sollum pothe payamaaka ullathu.payamum,koopamum ore edaththil seervathaal entha vipariitha palanaa?.thayavu seythu vilakkunkal saar.nantry.
valakavalamudan.
ARYBOY.////

பயம் எதற்கு? பயப்படுவதென்றால் ஜோதிடமும், மருத்துவமும் படிக்கக்கூடாது!

said...

////sundari said...
ஐயா வணக்கம்,
என்னுடைய மதிய வந்தனத்தை ஏற்று கொள்ளுங்கள்.
மாணவி,
சுந்தரி.////

ஒரு நாளைக்கு ஒருமுறை சொல்லுங்கள் போதும்! எதற்கு வீண் சிரமம்?

said...

///Ram said...
present Sir////

நல்லது. நன்றி!

said...

////kmr.krishnan said...
இந்த யோகம் விருச்சிக, மகர ராசி,லக்னகாரர்களுக்கு கெடுதல் செய்யாது என்றும் ஒரு தகவல் உண்டு.செவ்வாயை சனி பார்த்தாலே பெண் ஜாதகத்திர்க்கு திருமணத் தடை என்பார்கள்.ஒரு சாரார் சனியுடன் செவ்வாய் சேர்ந்தால் இருவரும் 2,4,7,8,12ல் இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது என்பார்கள். எல்லாம் 337ல் அடங்கிவிடும்/////

ஆமாம். நன்றி கிருஷ்ணன் சார்!

said...

/////prabakar.l.n said...
ayya enakku thulam laknam 12 il saniyum sevvayum,
aanal sevvai kanni sevvai kanniyil sevvai kadum pakai
kettavan kettitil kittitum raaja yogam nu padichiruken,.
athai vaithuthan konjam manathai thetri kolvathu naan//////

உங்களைப்போல எல்லோரும் தேற்றிக் கொண்டால் பிரச்சினையே இருக்காது. நன்றி நண்பரே!

said...
This post has been removed by the author.
said...
This post has been removed by the author.
said...

உள்ளேன் ஐயா...
University இல Semester exam என்பதால் கடந்த ஒரு வாரமாக வகுப்பிற்கு சமுகம் அளிக்க முடியவில்லை ஐயா.. மன்னிக்கவும்

said...

I have a Query :

Not related to this yoga since it is not there in my horo 

Regarding Parivarthanai Yoga :

Guru in laknam ( midunam), Moon in 7 ( Dhanusu )
• 3rd lord = Suriyan
• 8th and 9th lord = Sani
Now, 3rd lord ( Suriyan ) is in 8th house ( Sani house )
Lord of 8th or 9th which is Sani in 3rd House ( Suriyan’s ).
Since Sani is the lord for 8th and 9th house, what should be considered now for sani for 8th or 9th lord house?

If Sani is considered as lord of 8th house, then this yoga doesnt give good results..

If sani can be considered for lord of 9th house then results may be good ?.

I hope vathiyar can clarify with right explanation.

Thanks

said...

வணக்கம் ஐயா.

என் மனைவிக்கு இந்த (அவ) யோகம் உள்ளது. சிம்ம லக்னம், லக்னத்தில் குரு, 2 இல் சனி மற்றும் செவ்வாய். ஆனால் மகர ராசி. இந்த (அவ)யோகம் நிவர்த்தி ஆகி விடுமா? உங்கள் கருத்து.

நன்றி.

said...

மிக்க நன்றி

said...

////Kumares said...
உள்ளேன் ஐயா...
University இல Semester exam என்பதால் கடந்த ஒரு வாரமாக வகுப்பிற்கு சமுகம் அளிக்க முடியவில்லை ஐயா.. மன்னிக்கவும்/////

அது முக்கியம். முடிந்த பிறகு இங்கே நீங்கள் வாருங்கள். இதை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் படிக்கலாம்.

said...

ayya ,paadam miga arumai.... enaku entha yogam ellai!!!

said...

////Rajan said...
I have a Query :
Not related to this yoga since it is not there in my horo 
Regarding Parivarthanai Yoga :
Guru in laknam ( midunam), Moon in 7 ( Dhanusu )
• 3rd lord = Suriyan
• 8th and 9th lord = Sani
Now, 3rd lord ( Suriyan ) is in 8th house ( Sani house )
Lord of 8th or 9th which is Sani in 3rd House ( Suriyan’s ).
Since Sani is the lord for 8th and 9th house, what should be considered now for sani for 8th or 9th lord house?
If Sani is considered as lord of 8th house, then this yoga doesnt give good results..
If sani can be considered for lord of 9th house then results may be good ?.
I hope vathiyar can clarify with right explanation.
Thanks////

Saturn is not only 8th lord.He is also the lord for the house of gains, 9th house. Parivarththana yoga will have mutual benefits of planets involved. The results will be naturally good during their majar dasa and sub periods!

said...

////Scorpion King said...
வணக்கம் ஐயா.
என் மனைவிக்கு இந்த (அவ) யோகம் உள்ளது. சிம்ம லக்னம், லக்னத்தில் குரு, 2 இல் சனி மற்றும் செவ்வாய். ஆனால் மகர ராசி. இந்த (அவ)யோகம் நிவர்த்தி ஆகி விடுமா? உங்கள் கருத்து.
நன்றி.////

லக்கினத்தில் குரு உள்ளதால், குறைகளை அவர் பார்த்துக்கொள்வார்! கவலை எதற்கு?
ராசி நாதன் சனியும், சிம்ம லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாயும் ஒன்று சேர்ந்திருப்பதால், அதிகமான பாதிப்பு இருக்காது!

said...

/////Blogger Shyam Prasad said...
மிக்க நன்றி////

நல்லது பிரசாத்!

said...

////Blogger Karthi said...
ayya ,paadam miga arumai.... enaku entha yogam ellai!!!///

நல்லது. நன்றி கார்த்தி!

said...

Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்! சம்பந்தமாக ஒரு சந்தேகம் ஐயா...
நான் வகுப்பிற்கு late என்பதால் தனிப்பட்ட முறையில் கேட்கிறேன் ஐயா கோவிக்க வேண்டாம்...
என் ஜாதகத்தின் படி

லக்கினம் மகரம்

ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருக்கிறார் (11 ம் இடம்-விருச்சிகம்) ஆனால் செவ்வாயுடன் சேர்ந்து கேதுவும் உள்ளார்

பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் கேந்திர வீடுகளில் இருக்கிறார் ( 4 ம் இடம்-மேடம் ). ஆனால் புதனுடன் சூரியன் சேர்ந்து உள்ளார். (அஸ்தங்கம்- திருகணித பஞ்சாங்கம் ). சில சோதிட நூல்கள் புதனுக்கும் சூரியனுக்கும் இடையில் அஸ்தங்கம் கருத்தில் எடுக்க தேவை இல்லை. அவை இரண்டு சேர்ந்து இருந்தால் கிரக யுத்தம் இல்லை என்று கூறுகின்றன.

ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருக்கிறார் (12 ம் இடம்- தனுசு)

மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருக்கிறார். (3 ம் இடம் -மீன ராசி)ஆனால் சுக்கிரனுடன் மாந்தி சேர்ந்து உள்ளது.

சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் ஜாதகத்தில் உச்சம் பெற்று துலாவிலும், கேந்திர வீடுகளில் இருக்கிறார். (10 ம் இடம்- துலா ராசி)

எனக்கு மாமனித யோகம் உள்ளதா ஐயா? தயவு செய்து கூறவும் ஐயா....

said...

Thanks to Vathiyaar for giving the hope.

I didnot see much results with this yoga on Surya Desa may be due to Suryan's Paral is only 2 in Ashtakavarga where as Sani got 3.
I need to see on Sani desa.

Also with the Jagannatha Horo, this yoga was not mentioned(when suriyan in 8th house, sani in 3rd house - Mutual exchange).Others such as Keja-Kesari, Vajra etc was mentioned.

Thanks

said...

present sir!!!!!

said...

Kumares said...
Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்! சம்பந்தமாக ஒரு சந்தேகம் ஐயா...
நான் வகுப்பிற்கு late என்பதால் தனிப்பட்ட முறையில் கேட்கிறேன் ஐயா கோவிக்க வேண்டாம்... என் ஜாதகத்தின் படி
லக்கினம் மகரம்
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருக்கிறார் (11 ம் இடம்-விருச்சிகம்) ஆனால் செவ்வாயுடன் சேர்ந்து கேதுவும் உள்ளார்
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் கேந்திர வீடுகளில் இருக்கிறார் ( 4 ம் இடம்-மேடம் ). ஆனால் புதனுடன் சூரியன் சேர்ந்து உள்ளார். (அஸ்தங்கம்- திருகணித பஞ்சாங்கம் ). சில சோதிட நூல்கள் புதனுக்கும் சூரியனுக்கும் இடையில் அஸ்தங்கம் கருத்தில் எடுக்க தேவை இல்லை. அவை இரண்டு சேர்ந்து இருந்தால் கிரக யுத்தம் இல்லை என்று கூறுகின்றன.
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருக்கிறார் (12 ம் இடம்- தனுசு)
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருக்கிறார். (3 ம் இடம் -மீன ராசி)ஆனால் சுக்கிரனுடன் மாந்தி சேர்ந்து உள்ளது.
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் ஜாதகத்தில் உச்சம் பெற்று துலாவிலும், கேந்திர வீடுகளில் இருக்கிறார். (10 ம் இடம்- துலா ராசி)
எனக்கு மாமனித யோகம் உள்ளதா ஐயா? தயவு செய்து கூறவும் ஐயா....//////

இந்த யோகம் உங்களுக்கு இல்லை குமரேசன். சர்ப் எக்செல் போட்டுத் துவைத்தாலும் போகாத கரைகள் உள்ளன. நீங்களே ஆனால் போட்டு எழுதியிருக்கிறீர்கள். ஆகவே இல்லை.
இல்லை என்பதால் வருத்தப் படாதீர்கள். இருந்திருந்தால் வலைப் பதிவுகளைப் படிக்க உங்களுக்கு நேரம் எங்கே இருந்திருக்கும்?

said...

////Rajan said...
Thanks to Vathiyaar for giving the hope.
I didnot see much results with this yoga on Surya Desa may be due to Suryan's Paral is only 2 in Ashtakavarga where as Sani got 3.
I need to see on Sani desa.
Also with the Jagannatha Horo, this yoga was not mentioned(when suriyan in 8th house, sani in 3rd house - Mutual exchange).Others such as Keja-Kesari, Vajra etc was mentioned.
Thanks/////

நல்லது நண்பரே!

said...

////Priya said...
present sir!!!!!///

நன்றி சகோதரி!

said...

i have this yoham
4-ல் சனி மற்றும் செவ்வாய்
kanneye - il
??????

said...

குருவே,
வேதாளத்தின் வணக்கங்கள் .....
மேலே உள்ள இடுகைகளில்....(கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே.. )
"சனி செவ்வாய் சேர்ந்து 12இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று உண்மையா?"

" அவ யோகமும் இல்லையா ??"
[குறிப்பு :- சிம்ம ராசி(மகம் 1) துலாலக்னம் லக்னத்தில் குரு , கன்னியில்(௨௯ பரல்கள் ) சனி , செவ்வாய் சேர்கை (சனி 3 பரல் செவ்வாய் 4 பரல் )....]
என் ஜதகதி பார்த்து ஒருவர் நீ மனைவியை இழப்பை என்று கூறினர் ????? அதான் ...
நன்றி....( வாதியருக்கு நேரம் இல்லாமல் போகலாம் ..மூத்த மாணவர்கள் உதவலாம்? நன்றி ...)

said...

Dear Sir,

please clarify my doubt.. in my horoscope the conjunction of mars and saturn is in thulam lagna...what will be its effet

said...

குருவே,
வேதாளத்தின் வணக்கங்கள் .....
கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே..
1."சனி செவ்வாய் சேர்ந்து 12இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்பது உண்மையா?"

2." அவ யோகமும் இல்லையா ??"
[குறிப்பு :- சிம்ம ராசி(மகம் 1) துலாலக்னம் லக்னத்தில்(36 பரல்கள்) குரு , 12 இல் [ கன்னியில் 29 பரல்கள்] சனி(3 பரல்) , செவ்வாய்(4 பரல்)சேர்கை ....]

அம்சசதில் : மகர லக்னம் லக்னத்தில் கேது, மாந்தி ... 2 இல் செவ்வாய் , 9 இல் சனி (வர்கோத்தமம்)]

D.O.B : 16-12-1981
time : 3:00am
Place of birth: Kanchipuram.

என் ஜாதகத்தை பார்த்து ஒருவர் நீ மனைவியை இழப்பாய் என்று கூறினர் ????? அதான் ...
நன்றி....( வாதியருக்கு நேரம் இல்லாமல் போகலாம் ..மூத்த மாணவர்கள் உதவலாம்? நன்றி ...)

said...

.(கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே.. )
"சனி செவ்வாய் சேர்ந்து 4இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று உண்மையா?"

lakknam kadakam.
pls help all...

உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன............?

Those who have enrolled their name using the above option, please inform your mail Id to my mail address: classroom2007@gmail.com Then only you will get the mail lessons! Please co-operate with me!




வாத்தியாரின் பல்சுவை பதிவில் இன்று

ஏன் பெண் உறங்கவில்லை! கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
மேலும் படிக்க.......
...... இங்கே கிளிக்’குங்கள்!

அடிப்படைப் பாடங்கள் இங்கே:.Click here !

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com


அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!