மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.11.09

Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்"
- கவியரசர் கண்ணதாசன்

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.

நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.

Navamsa is the one by ninth division of a rasi chart. It is the magnified version of a rasi chart

ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”

அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?

சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.

வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.

ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்) பாடம் எங்கே?”

”அது மின்னஞ்சல் பாடம்”

“ஏன் அது மின்னஞ்சல் பாடம்?”

“அதில் பல வில்லங்கமான தகவல்கள் உள்ளன. அதோடு அது மேல் நிலைப் பாடம். இங்கே எழுதினால், வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே அது மின்னஞ்சல் பாடமாகக் கொடுக்கப்பெற்றுள்ளது.”

“மின்னஞ்சல் பாடம் எப்போது வரும்?”

“மின்னஞ்சல் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவக் கண்மணிகளில், A to P எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு முதலில் (வெள்ளிக் கிழமையன்று) வரும். R to Y எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு அடுத்த நாள் (சனிக்கிழமையன்று) வரும்”

“ஏன் அப்படி?

“ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

178 comments:

  1. Dear Sir

    Good Morning Sir. Indraya poludhu Santhosamagavum Nalla ninaivugaludan - Nalla Seyalkam (Kadamayai) seivom.

    Iam waiting for your Navamsa Lesson.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. உள்ளேன் அய்யா. மின்னஞ்சலுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  3. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning Sir. Indraya poludhu Santhosamagavum Nalla ninaivugaludan - Nalla Seyalkam (Kadamayai) seivom.
    Iam waiting for your Navamsa Lesson.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    அனுப்பிவிட்டேன் ராஜாராமன்!

    ReplyDelete
  4. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    நல்லது ஷியாம். உங்களுக்குப் பாடம் நாளை வரும் (Your name is in the second list)

    ReplyDelete
  5. ////அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா. மின்னஞ்சலுக்காக வெயிட்டிங்.////

    அனுப்பிவிட்டேன் அமர பாரதி!

    ReplyDelete
  6. முதல் பின்னூட்டம் போட காலை 2.45க்கு கூட விழித்துள்ள நண்பர்களின்
    ஆர்வத்தைப் பாரaட்டுகிறேன்.
    திருமணப் பொருத்தம் பார்க்கும்போது 10,ராசி மட்டும் பார்க்காமல்,ந‌வாம்சமும் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.‌

    என் பிளாகில் நடந்த‌ ஒரு விவாத‌ம் கீழே கொடுத்துள்ளேன்:

    "அகம்பிர‌ம்மாஸ்மி said
    Dear Mr.Krishnan sir,
    http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_25.html
    i FOUND his teaching are very good but i found above link contracditor info here he says- Simla Lagna sani is marakathipathi and Guru is yogakaraga but the book i use to read Murudas Jothidar says oppiste which one to follow.

    I wrote several emails to subbiah vathiyar but look he does'nt reply to our emails.

    Tuesday, November 03, 2009
    அகம்பிரம்மாஸ்மி said...
    it would be great if you can write all Yogakara and malefic for all Lagnas

    Tuesday, November 03, 2009
    kmr.krishnan said...
    To AghamBrahmaasmi
    ------------------Do not disturb Vaathiyaar Sriman.Sp.Vr.Subbaiah. He is overworked.His sincerety and indomitable spirit has to be appreciated.His service mindedness and simplicity has to be imbibed by all. His library contains inumerable references.He may be able to prove his point of whatever has been written about Simmh lagna in the thread you have mentioned.I give below the benefics and malefics for all lagnas based on B.V.Raman's work:
    Yogakarka will be only if he happens to be the lord of both kendra and trikona".

    ReplyDelete
  7. "நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த
    இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.சுக்கிரனின் வீட்டில் (ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில்) செவ்வாய் இருந்தால் ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து நல்ல முறையில் அனுபவிப்பவனாக இருப்பான். அங்கே இருக்கும் செவ்வாய் கெட்டிருந்தால், மோசமான ரசனைகளை உடையவானாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் வாழ்க்கையை அனுபவிப்பான்."-- மின்னஞ்சல் பாடம்10ல் வாத்தியார்.
    குரு ம‌க‌ர‌த்தில் ராசி,நவாம்ச‌‌ம் இரண்டிலும் நீசம்.ந‌வாம்சத்தில் ரிஷபச்செவ்வாய் சூரியனோடு 6ல்‍‍ குருபார்வை,சனிபார்வை பெற்று உள்ளார்.ராசியில் செவ்வாய் 12ல் மிதுன‌த்தில் ம‌றைவு.செவ்வாயால் இந்நிலையில் என்ன ப‌ல‌ன்?
    நீச குருவும்,சிம்மச்சனியும் வர்கோத்தமம்.பூசம் என்பதால் வர்கோத்தமம் பெற்ற சனியல் அதிக பாதிப்பு இல்லாமல் இருந்தது.ராசியில் 6,9க்கு உடைய‌
    குரு அம்சத்தில் லக்னாதிபதியாகி வர்கோதமம் பெற்று நீசம் அடைந்தார்.இப்போது குரு என‌க்கு ந‌ல்ல‌வரா? வ‌லிமை உள்ள‌வரா?
    thank you for your email lesson 10.

    ReplyDelete
  8. இன்றைய பாடத்திற்கு,மின் அஞ்சல் படத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ////kmr.krishnan said...
    முதல் பின்னூட்டம் போட காலை 2.45க்கு கூட விழித்துள்ள நண்பர்களின்
    ஆர்வத்தைப் பாரaட்டுகிறேன்./////

    காதைக்கொடுங்கள். ஒரு ரகசியம். அவர்கள் மூவரும் வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்கள்.
    பின்னூட்டம்போடும்போது, அங்கே பகல் நேரம்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////திருமணப் பொருத்தம் பார்க்கும்போது 10,ராசி மட்டும் பார்க்காமல்,ந‌வாம்சமும் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.‌/////

    ஆமாம், அதோடு, செவ்வாய், சனி, ஆகிய இருவருடைய சேட்டைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என் பிளாகில் நடந்த‌ ஒரு விவாத‌ம் கீழே கொடுத்துள்ளேன்:
    "அகம்பிர‌ம்மாஸ்மி said
    Dear Mr.Krishnan sir,
    http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_25.html
    i FOUND his teaching are very good but i found above link contracditor info here he says- Simla Lagna sani is marakathipathi and Guru is yogakaraga but the book i use to read Murudas Jothidar says oppiste which one to follow.///////

    நானே சிம்மலக்கினக்காரன். எனக்குத் தெரியாதா, சிம்ம லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் என்று (Mars is the lord for one kendra -4th and one trikona 9th) ஆகவே நான் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.குறை சொன்னவர்,நான் சொன்ன இடத்தைக் கூறினால், உண்மையை அறிய உதவியாக இருக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// I wrote several emails to subbiah vathiyar but look he does'nt reply to our emails./////

    என்னைப்போல வரும் பின்னூட்டங்களுகும் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாகப் பதில் சொல்பவர்கள் குறைவு. தங்கள் ஜாதகத்துடன் தொடர்பு படுத்தி, அல்லது போதுக் கேள்வியைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் தங்கள் ஜாதக சம்பந்தமாகக் கொக்கிக் கேள்விகள் கேட்பவரின் மின்னஞ்சல்களுக்குப் பதில் சொவதற்கு எனக்கு நேரமில்லை. என் மெயில் பெட்டியில் அந்த வகை மின்னஞ்சல்கள் பல உள்ளன. ஆண்டவனை, எனக்கு மட்டும் நாள் ஒன்றிற்கு 48 மணி நேரம் என்று மாற்றித்தரப் பிரார்த்திக்கின்றேன்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////kmr.krishnan said... To AghamBrahmaasmi
    Do not disturb Vaathiyaar Sriman.Sp.Vr.Subbaiah. He is overworked.His sincerety and indomitable spirit has to be appreciated.His service mindedness and simplicity has to be imbibed by all. His library contains inumerable references.He may be able to prove his point of whatever has been written about Simmh lagna in the thread you have mentioned.I give below the benefics and malefics for all lagnas based on B.V.Raman's work:
    Yogakarka will be only if he happens to be the lord of both kendra and trikona".////

    மற்றபடி அவருக்கு நீங்கள் அளித்த உங்கள் பதிலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////kmr.krishnan said...
    "நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த
    இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.
    சுக்கிரனின் வீட்டில் (ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில்) செவ்வாய் இருந்தால் ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து நல்ல முறையில் அனுபவிப்பவனாக இருப்பான். அங்கே இருக்கும் செவ்வாய் கெட்டிருந்தால், மோசமான ரசனைகளை உடையவானாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் வாழ்க்கையை அனுபவிப்பான்."-- மின்னஞ்சல் பாடம்10ல் வாத்தியார்.
    குரு ம‌க‌ர‌த்தில் ராசி,நவாம்ச‌‌ம் இரண்டிலும் நீசம்.
    ந‌வாம்சத்தில் ரிஷபச்செவ்வாய் சூரியனோடு 6ல்‍‍ குருபார்வை,சனிபார்வை பெற்று உள்ளார்.
    ராசியில் செவ்வாய் 12ல் மிதுன‌த்தில் ம‌றைவு.செவ்வாயால் இந்நிலையில் என்ன ப‌ல‌ன்?
    நீச குருவும்,சிம்மச்சனியும் வர்கோத்தமம்.பூசம் என்பதால் வர்கோத்தமம் பெற்ற சனியல் அதிக பாதிப்பு இல்லாமல் இருந்தது.ராசியில் 6,9க்கு உடைய‌
    குரு அம்சத்தில் லக்னாதிபதியாகி வர்கோதமம் பெற்று நீசம் அடைந்தார்.இப்போது குரு என‌க்கு ந‌ல்ல‌வரா? வ‌லிமை உள்ள‌வரா?///////

    குரு எப்போதும், யாருக்கும் நல்லவர்தான். அவர் கெட்டிருந்தாலும் நன்மைகளையே செய்வார்.
    நீசம் அடைந்ததை, வர்கோத்தம வலிமை சரி செய்திருக்கும். அவர் உங்கள் ஜாதகத்தில் எந்த வீடுகளுக்கு அதிபதியோ, அதைக் குறைவில்லாமல் நிறைவேற்றிக் கொண்டே வந்திருப்பார். என்ன சற்று தாமதமாக செய்திருப்பார் (நீசமானதால்)

    ReplyDelete
  11. /////மதி said...
    இன்றைய பாடத்திற்கு,மின் அஞ்சல் படத்திற்கும் மிக்க நன்றி.////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள்.
    ரகசியத்தை சொல்ல,
    இப்படி ஒரு முறை இருப்பதை
    இப்போது தான் தெரிந்துக் கொண்டேன் அய்யா!
    ஆடியோ இல்லாத வீடியோ முறையில்.
    நன்றிகள் குருவே.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  13. அய்யா,

    ராசி மற்றும் நவன்சத்தில் மேஷ லக்னத்தில் குரு வக்கிரம்.
    1. அவர் பார்வைகள் பலன் தருமா?
    2. வர்கோத்தமம் பெற்றாலும் 2 & 7 has only 20 & 19 பரல்கள்.

    அவர் திருமண வாழ்கை பலன் எப்படி இருக்கும் அய்யா?

    நன்றி
    சரவணா

    ReplyDelete
  14. Dear Sir,

    Thank you

    Chandrasekaran Surya

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள். ரகசியத்தை சொல்ல, இப்படி ஒரு முறை இருப்பதை
    இப்போது தான் தெரிந்துக் கொண்டேன் அய்யா! ஆடியோ இல்லாத வீடியோ முறையில்.
    நன்றிகள் குருவே.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருப்பதன் பெயர்தான் ரகசியம்! இருவருக்குத் தெரிவது எப்படி வேண்டுமென்றாலும் தெரியலாம். மூவருக்குத் தெரிந்தால் அது செய்தியாக மாறிவிடும்!

    ReplyDelete
  16. /////Saravana said...
    அய்யா,
    ராசி மற்றும் நவாம்சத்தில் மேஷ லக்னத்தில் குரு வக்கிரம்.
    1. அவர் பார்வைகள் பலன் தருமா?
    2. வர்கோத்தமம் பெற்றாலும் 2 & 7 has only 20 & 19 பரல்கள்.
    அவர் திருமண வாழ்கை பலன் எப்படி இருக்கும் அய்யா?
    நன்றி
    சரவணா//////

    குரு எப்போதும், யாருக்கும் நல்லவர்தான். அவர் கெட்டிருந்தாலும் நன்மைகளையே செய்வார்.
    நீசம் அடைந்ததை, வர்கோத்தம வலிமை சரி செய்திருக்கும். கவலை எதற்கு? வீடுகளில் பரல்கள் குறைந்தால் என்ன? அதிபதிகள் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள்
    உங்கள் கோட்டா ஒவர். 7ஆம் வீட்டை வைத்துக் கேட்கப்படும் உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கான கோட்டா ஓவர்!

    ReplyDelete
  17. ////Blogger csekar2930 said...
    Dear Sir,
    Thank you
    Chandrasekaran Surya////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  18. மின்னஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி ஐயா.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா

    அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை எழுதியிருப்பதற்கு மனமார்ந்த நன்றி.

    சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

    எப்படி உங்களாள் மட்டும் இப்படி முடியுது??? நன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க. மிகவும் சந்தோஷம்

    ஒரு முந்திரிகொட்டை கேள்வி. அஸ்டவர்கம் & சுயவர்க்கப் பரல்களை நவாம்சத்திற்க்கு எப்படி பயன்படுத்துவது???

    நன்றி...ஐயா...

    ReplyDelete
  20. அன்புள்ள ஆசானே,

    i am so eargerly waiting for this lesson from very long time, i ahve lot of doubts.
    மிக்க நன்றி

    ReplyDelete
  21. /////ananth said...
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி ஐயா.////

    நல்லது. ஆனந்த்! பாடத்தைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!
    எளிமையாக இருந்ததா?

    ReplyDelete
  22. ///////Success said...
    வணக்கம் ஐயா
    அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை எழுதியிருப்பதற்கு மனமார்ந்த நன்றி.
    சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.
    எப்படி உங்களாள் மட்டும் இப்படி முடியுது??? நன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க. மிகவும் சந்தோஷம்//////

    உண்மையைத்தான் எழுதியிருக்கிறேன் ஸ்வாமி! உங்கள் வயதிற்கு நானும் இறங்கி எழுதுவதால், அப்படி எழுத வருகிறது என்று நினைக்கிறேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////ஒரு முந்திரிகொட்டை கேள்வி. அஸ்டவர்கம் & சுயவர்க்கப் பரல்களை நவாம்சத்திற்க்கு எப்படி பயன்படுத்துவது???//////

    நவாம்சத்திற்கு அஷ்டவர்க்கம் கிடையாது! அதனால்தான் பலர் ராசியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பார்கள்!

    ReplyDelete
  23. ////சிங்கைசூரி said...
    அன்புள்ள ஆசானே,
    i am so eargerly waiting for this lesson from very long time, i ahve lot of doubts.
    மிக்க நன்றி////

    உங்கள் பெயர் எஸ்’ஸில் துவங்குவதால், நாளை வரும்!

    ReplyDelete
  24. அய்யா இனிய காலை வணக்கம் ...
    நான் வகுப்பறை வந்து விட்டேன் மின்அஞ்சல் பாடத்திற்க்கு நன்றிகள்
    வணக்கம்

    ReplyDelete
  25. அய்யா, பாடம் மிகவும் அருமை. எனக்கு ராசியில் 10 ஆம் வீட்டில்(தனுசு) இருக்கும் குரு நவாம்சத்தில் லக்னத்தில்(கடகம்) உச்சம் பெற்றிருக்கிறார். தாங்கள் கூறியுள்ளபடி பணம் சேர்ந்து கொண்டேயிருக்குமா?

    ReplyDelete
  26. அய்யா ...
    சற்று முன் நவாம்ச பாடம் படித்தேன் பாடம் அருமை ..
    எனக்கு அம்ச லக்னம் துலாம் லக்னதிபதி சுக்ரன் லக்னதில் ,7 அதிபதி செவ்வாய் 4 இல் உச்சம் ,சுக்கரன் 7 ம் இடத்தை பார்கிரார் குரு பகவான் 5 இல் ஒரஅளவு சுமாரான அமைபுள்ள திருமண வாழ்க்கை அமயுமா?
    என்ன தான் பலன் தெரிந்தாலும் அய்யா ஒரு வார்த்தை சொன்னால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி ....

    நன்றி
    வணக்கம்

    ReplyDelete
  27. சிரம் தாழ்ந்த நன்றி ஐயா ,
    நவாம்சம் பற்றிய கட்டுரை வந்து சேர்ந்தது புத்தியனா ராசி சக்கரம் சித்தியான நவாம்ச சக்கரம் இன்னும் படித்து அறிந்து கொள்கிறேன் அதிக வேலை பளு காரணமாகா வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை மன்னிக்கவும்
    முருகன் பி எஸ் ஏன் எல்

    ReplyDelete
  28. நவாம்சா பாடம் கிடைத்தது. நன்றி. மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்.
    நவாம்சா பற்றிய எனது சந்தேகங்களுக்கு விடைகிடைத்தது. நவாம்சத்தில் 7ம் இடத்தை மனைவி அல்லது கணவன் லக்கனம் என்று எடுத்து கொண்டு பலன் கூறும் முறை உள்ளது. ஜெகன்நாத் ஹொராவில் நவாம்சாவிற்கு அஷ்டவர்க்கம் பார்க்கலாம். Basics-Bottom righthand corner-D 1 Natal Chart-Right click on D1 Natal Chart-Show AV of this Divisional Chart-change it to D 9. நீங்கள் கூறிய படி பரல்களின் எண்ணிக்கைப்படி பலன் அறியலாம்.

    ReplyDelete
  29. Present Sir,

    Navamsa lesson I got it sir...thanks sir...

    Oru serious kallantha chinna question sir?

    In my rasi chart 9th house has ketu, athuvum (ucham)...(27 parals in 9th place).in..my experience it is not that good especially to have ketu in 9th house- bhyaga stahanam-avar bhagyam tharuvara?:(
    Mars the dispositor of 9th house is in 12th house in rasi chart..

    In navamsa...ketu is in cancer (my fifth house according to lagna chart) aanal moon is ucham....I am very short tempered sometimes....enaku payama iruku becoz enaku romba mukyamana veedukal poi ketu is sitting...I hate ketu...ithuku enna palan?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  30. அய்யா,
    பாடம் அருமை.
    சந்தேகம் இல்லை என்றால் ஒன்று நன்குப் புரிந்து இருக்கவேண்டும்,
    இல்லை எதுவுமே புரியாமல் இருக்கவேண்டும்.

    இப்போது எனது சந்தேகம்.
    ராசியில் ஒன்று முதல் பன்னிரண்டு வீடுகள் உண்டு.
    நவாம்சத்திலும் அப்படியே அனைவரும் அறிந்ததே!

    இந்த இரண்டையும் (வீடுகளையும்) ஒன்றுகொன்றுத் தொடர்பு படுத்தலாமா?
    எப்படிப் படுத்துவது?
    ராசியில் ஏழாம் வீடு நவாம்சத்தில் பத்தாம் வீடாக இருந்தால் எப்படிக் கொள்வது.

    உம் - ராசியில் ஏழாம் வீட்டுக்கு அதிபதி பன்னிரெண்டில் மறைந்து விட்டார்.
    ஆனால், நவாம்சத்தில் லக்னத்தில் உட்சம் பெற்று இருக்கிறார் இதை சிறப்பாக இருப்பதாக கொள்கிறேன்.

    நவாம்சத்தில் உள்ள ஏழாம் வீட்டையும் பார்ப்பதால், அது, குருவினது (அங்கு இருப்பவர் சுக்கிரன் உட்சம் பெற்று) வீடு குருவும் வர்கோத்தமம் ஆகி நவாம்சத்தில் இரண்டாம் வீட்டில் (ராசியில் பதினொன்றாம் வீடு) உள்ளார்.

    எந்த ஏழாம் வீட்டை ஜாதகரின் ஏழாம் வீடாக கொள்வது?
    ராசிக் கட்டத்தின் ஏழாம் வீட்டை ஏழாம் வீடாகக் கொண்டு அதன் அதிபதியின் சுய ரூபத்தையும் அந்த வீட்டில் அமர்ந்த கிரகத்தின் சுய ரூபத்தையும் நவாம்சத்தில் கண்டுக் கொள்ளவேண்டும் என்றே புரிந்து கொண்டுள்ளேன்.

    விளக்கம் அறியத் தருவீரா குருவே.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  31. பாடம் நன்று அய்யா. நிறைய உபயோகமான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். பொறுமையாக படித்து மனதில் பதியவைத்துகொள்ளவேண்டும். நன்றி.

    ReplyDelete
  32. dear sir,
    good morning. jagannath hora vil vaakiya panchangappadi jathagam yelutha mudiyuma? mudiyum yendral thayavu seithu yeppadi yendu kooravum.

    ReplyDelete
  33. Good Morning Namaskaram Mr.Sp.Vr.Subbaiah Avarkal
    I use to read Jothida Article from PAARPPU blog from Mr.Krishnan,
    http://parppu.blogspot.com/2009/11/astrology-q-nov09-1.html
    Who is doing a wonderful service to people like you.
    he introduce me to this place classroom2007.

    After spending few days reading through your classroom2007,Like everyone has expereinced boundless joy satisfaction reading your articles, what a fantabulous and magnaopus effort to get this place running.

    I wrote such comment to Mr. Krishnan Sir, for a reason i could'nt get a reply.

    After completely reading most of your articles and works here with such wonderful lessons,efforts pumpled into this place,i completely agree with Mr.Krishnan, Overloaded and managing such mammothian task,Great Job sir.

    Please do not mistake me,There is No greviances.

    I thank Mr.Krishnan to make my post here and introducing me to this wonderful classroom and also hats for Krishnan for his fabulous service with PAARPPU http://parppu.blogspot.com/2009/11/astrology-q-nov09-1.html
    Provinding his Jothida Predictions and other knowledge articles. Thanks to all these wonderful supporting this blog and get going with full spirts.

    ReplyDelete
  34. தேவையான இடத்தில் சரியான‌
    உதாரணங்களை பாடங்களோடு
    இணைத்து விளக்குவதில்
    உங்களுக்கு நிகர் நீங்களே.
    பாடத்திற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  35. நவாம்சத்தைப் பற்றிய பாடம் மிகவும் எளிமையாகத்தான் இருந்தது. முதல் தடவையாக படிக்கும் போதே அனைத்தும் விளங்கியது.

    நிற்க, Jagannatha Hora Program ஆசிரியர் PVR நரசிம்மராவ் அவர்கள் மற்ற அம்சங்களுக்கும் அஷ்டவர்கம் பார்க்கலாம் என்றுதான் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் கூறும் காரணம் பண்டைய ஜோதிட நூல்களில் அஷ்டவர்கத்தை ராசி சக்கரத்திற்கு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை என்பதுதான். அந்த programல் எந்த வர்கத்திற்கு அஷ்டவர்கம் பார்க்க வேண்டுமோ அதைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். எப்படி பலன் காண்பது என்று சொல்ல ஆரம்பித்தால் தனி பதிவே போட வேண்டியது வரும்.

    ReplyDelete
  36. மேலே உள்ளது என் கருத்தை வெளியிடுவதற்காக மட்டும் சொன்னது. யாரையும் குறை சொல்வதற்காக அல்ல.

    ReplyDelete
  37. ananth said...

    நவாம்சத்தைப் பற்றிய பாடம் மிகவும் எளிமையாகத்தான் இருந்தது. முதல் தடவையாக படிக்கும் போதே அனைத்தும் விளங்கியது.

    நிற்க, Jagannatha Hora Program ஆசிரியர் PVR நரசிம்மராவ் அவர்கள் மற்ற அம்சங்களுக்கும் அஷ்டவர்கம் பார்க்கலாம் என்றுதான் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் கூறும் காரணம் பண்டைய ஜோதிட நூல்களில் அஷ்டவர்கத்தை ராசி சக்கரத்திற்கு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை என்பதுதான். அந்த programல் எந்த வர்கத்திற்கு அஷ்டவர்கம் பார்க்க வேண்டுமோ அதைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். எப்படி பலன் காண்பது என்று சொல்ல ஆரம்பித்தால் தனி பதிவே போட வேண்டியது வரும்.


    ஆனந்த் அண்ணா தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  38. thank you very much for your email lession.

    ReplyDelete
  39. Good morning and present sir,

    Waiting for mail lesson

    Regards
    Sankar
    Karur

    ReplyDelete
  40. காலை வணக்கம் ஐய....

    மின்அஞ்சல் பாடத்திற்கு waiting ஐயா...

    பாடத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  41. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ...
    நான் வகுப்பறை வந்து விட்டேன் மின்அஞ்சல் பாடத்திற்கு நன்றிகள்
    வணக்கம்////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  42. /////Lakshmanan said...
    அய்யா, பாடம் மிகவும் அருமை. எனக்கு ராசியில் 10 ஆம் வீட்டில்(தனுசு) இருக்கும் குரு நவாம்சத்தில் லக்னத்தில்(கடகம்) உச்சம் பெற்றிருக்கிறார். தாங்கள் கூறியுள்ளபடி பணம் சேர்ந்து கொண்டேயிருக்குமா?//////

    அதிகமாகப் பணம் சேர்ந்தால் கூடவே பிரச்சினைகளும் வரும், பரவாயில்லையா?
    ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அடிக்கடி சொல்வார். Earn money, spend the money, save the money, donate the money, circulate the money, but do not accumulate the money. If you accumulate the money, you will become ugly!!!!!!!

    ReplyDelete
  43. ////astroadhi said...
    அய்யா ...
    சற்று முன் நவாம்ச பாடம் படித்தேன் பாடம் அருமை ..
    எனக்கு அம்ச லக்னம் துலாம் லக்னதிபதி சுக்ரன் லக்னதில் ,7 அதிபதி செவ்வாய் 4 இல் உச்சம் ,சுக்கரன் 7 ம் இடத்தை பார்கிரார் குரு பகவான் 5 இல் ஒரஅளவு சுமாரான அமைபுள்ள திருமண வாழ்க்கை அமயுமா?
    என்ன தான் பலன் தெரிந்தாலும் அய்யா ஒரு வார்த்தை சொன்னால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி ....
    நன்றி
    வணக்கம்/////

    ஜாதகத்தையே பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல பெண்ணாகப் பாருங்கள். பிடிக்கிற பெண்ணை மணந்து கொள்ளுங்கள். ஜாதகம் பார்ப்பதால் வருகிற தேவதையை அல்லது பிசாசைத் தவிர்க்கவா முடியும்? எல்லாம் விடிப்படிதான் நடக்கும். ஆகவே இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் கை கொடுப்பார். கலக்கலாக ஒரு பெண் மனைவியாக வந்து சேருவாள். டின்னருக்குக் கூப்பிடுங்கள் நானும் வருகிறேன்!

    ReplyDelete
  44. /////murugan said...
    சிரம் தாழ்ந்த நன்றி ஐயா ,
    நவாம்சம் பற்றிய கட்டுரை வந்து சேர்ந்தது புத்தியனா ராசி சக்கரம் சித்தியான நவாம்ச சக்கரம் இன்னும் படித்து அறிந்து கொள்கிறேன் அதிக வேலை பளு காரணமாகா வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை மன்னிக்கவும்
    முருகன் பி எஸ் ஏன் எல்///

    வேலைப்பளுவில் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடாதீர்கள்.நான் வகுப்பறையைச் சொல்கிறேன்:-))))

    ReplyDelete
  45. krish said...
    நவாம்சா பாடம் கிடைத்தது. நன்றி. மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்.
    நவாம்சா பற்றிய எனது சந்தேகங்களுக்கு விடைகிடைத்தது. நவாம்சத்தில் 7ம் இடத்தை மனைவி அல்லது கணவன் லக்கனம் என்று எடுத்து கொண்டு பலன் கூறும் முறை உள்ளது. ஜெகன்நாத் ஹொராவில் நவாம்சாவிற்கு அஷ்டவர்க்கம் பார்க்கலாம். Basics-Bottom righthand corner-D 1 Natal Chart-Right click on D1 Natal Chart-Show AV of this Divisional Chart-change it to D 9. நீங்கள் கூறிய படி பரல்களின் எண்ணிக்கைப்படி பலன் அறியலாம்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  46. ///Thanuja said...
    Present Sir,
    Navamsa lesson I got it sir...thanks sir...
    Oru serious kallantha chinna question sir?
    In my rasi chart 9th house has ketu, athuvum (ucham)...(27 parals in 9th place).in..my experience it is not that good especially to have ketu in 9th house- bhyaga stahanam-avar bhagyam tharuvara?:(
    Mars the dispositor of 9th house is in 12th house in rasi chart..
    In navamsa...ketu is in cancer (my fifth house according to lagna chart) aanal moon is ucham....I am very short tempered sometimes....enaku payama iruku becoz enaku romba mukyamana veedukal poi ketu is sitting...I hate ketu...ithuku enna palan?
    Thanks
    Thanuja/////

    எதற்கு பயம்? உச்சமான கேது அதிக உபத்திரவம் செய்ய மாட்டார். அவர் செவ்வாயைப்போல பலன்களைத் தருவார். அதோடு தான் அமர்ந்திருக்கும் இடத்திற்கான பலன்களையும் அவர் பெற்றுத்தருவார்! குருவோ அல்லது கேதுவோ யாராக இருந்தால் என்ன? அனைவருக்கும் உள்ள மதிப்பு எண்ணிக்கை 337. அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

    ReplyDelete
  47. ////Alasiam G said...
    அய்யா,
    பாடம் அருமை.
    சந்தேகம் இல்லை என்றால் ஒன்று நன்குப் புரிந்து இருக்கவேண்டும்,
    இல்லை எதுவுமே புரியாமல் இருக்கவேண்டும்.
    இப்போது எனது சந்தேகம்.
    ராசியில் ஒன்று முதல் பன்னிரண்டு வீடுகள் உண்டு.
    நவாம்சத்திலும் அப்படியே அனைவரும் அறிந்ததே!
    இந்த இரண்டையும் (வீடுகளையும்) ஒன்றுகொன்றுத் தொடர்பு படுத்தலாமா?//////

    எதற்கு வேண்டாத வேலை? இலையில் கையை வைத்தோமா சாப்பிட்டோமா என்று இல்லாமல் ஒவ்வொரு பருக்கையாக எண்ணிச் சாப்பிடட்டுமா என்று கேட்டால் என்ன சொல்வது?

    ReplyDelete
  48. ////chaks said...
    பாடம் நன்று அய்யா. நிறைய உபயோகமான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். பொறுமையாக படித்து மனதில் பதியவைத்துகொள்ளவேண்டும். நன்றி.////

    ஆகா, அப்படியே செய்யுங்கள். நம் இருவருக்கும் நல்லது!

    ReplyDelete
  49. ////govind said...
    dear sir,
    good morning. jagannath hora vil vaakiya panchangappadi jathagam yelutha mudiyuma? mudiyum yendral thayavu seithu yeppadi yendu kooravum./////

    ஜகன்னாத ஹோரா மென்பொருளை நான் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் அதை ஒருமுறை நோண்டிப்பார்த்து உங்களுக்குப் பதில் சொல்கிறேன். இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  50. /////அகம்பிரம்மாஸ்மி said...
    Good Morning Namaskaram Mr.Sp.Vr.Subbaiah Avarkal
    I use to read Jothida Article from PAARPPU blog from Mr.Krishnan,
    http://parppu.blogspot.com/2009/11/astrology-q-nov09-1.html
    Who is doing a wonderful service to people like you.
    he introduce me to this place classroom2007.
    After spending few days reading through your classroom2007,Like everyone has expereinced boundless joy satisfaction reading your articles, what a fantabulous and magnaopus effort to get this place running.
    I wrote such comment to Mr. Krishnan Sir, for a reason i could'nt get a reply.
    After completely reading most of your articles and works here with such wonderful lessons,efforts pumpled into this place,i completely agree with Mr.Krishnan, Overloaded and managing such mammothian task,Great Job sir.
    Please do not mistake me,There is No greviances.
    I thank Mr.Krishnan to make my post here and introducing me to this wonderful classroom and also hats for Krishnan for his fabulous service with PAARPPU http://parppu.blogspot.com/2009/11/astrology-q-nov09-1.html
    Provinding his Jothida Predictions and other knowledge articles. Thanks to all these wonderful supporting this blog and get going with full spirts./////

    நீங்கள் எனக்கு எழுதிய முதல் மின்னஞ்சலில் வகுப்பறையை நீங்கள் முதன் முதலில் பார்த்த தேதியைக் குறிப்பிடுள்ளீர்கள். அது 27.10.2009, அதற்குப் பிறகு திரு கிருஷ்ணன் அவர்களின் பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்ட தேதி 3.11.2009. இடைப்பட்ட அந்த 7 நாட்களில் நீங்கள் எனக்கு எழுதி, பதில் வரவில்லை என்று சொல்லும் மின்னஞ்சலை, நீங்கள் எனக்கு மீண்டும் ஒருமுறை அனுப்பி வையுங்கள். அதை நான் பார்க்க விரும்புகிறேன் (Please resend that mail to me)

    ReplyDelete
  51. ////thirunarayanan said...
    தேவையான இடத்தில் சரியான‌
    உதாரணங்களை பாடங்களோடு
    இணைத்து விளக்குவதில்
    உங்களுக்கு நிகர் நீங்களே.
    பாடத்திற்கு நன்றி அய்யா.////

    எல்லாம் உங்களைப் போன்ற அன்பர்களுக்காகத்தான்!

    ReplyDelete
  52. ////ananth said...
    நவாம்சத்தைப் பற்றிய பாடம் மிகவும் எளிமையாகத்தான் இருந்தது. முதல் தடவையாக படிக்கும் போதே அனைத்தும் விளங்கியது.
    நிற்க, Jagannatha Hora Program ஆசிரியர் PVR நரசிம்மராவ் அவர்கள் மற்ற அம்சங்களுக்கும் அஷ்டவர்கம் பார்க்கலாம் என்றுதான் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் கூறும் காரணம் பண்டைய ஜோதிட நூல்களில் அஷ்டவர்கத்தை ராசி சக்கரத்திற்கு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லப் படவில்லை என்பதுதான். அந்த programல் எந்த வர்கத்திற்கு அஷ்டவர்கம் பார்க்க வேண்டுமோ அதைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். எப்படி பலன் காண்பது என்று சொல்ல ஆரம்பித்தால் தனி பதிவே போட வேண்டியது வரும்.//////

    இரண்டு இடங்களுக்கும் அஷ்டகவர்க்கம் பார்த்தால் அஜீரணக் கோளாறுதான் ஏற்படும். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. விருப்பம் உள்ளவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  53. i got the mail lesson. thank you for your reply.

    ReplyDelete
  54. ////Blogger jee said...
    thank you very much for your email lession.///

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  55. ////Blogger jadam said...
    Good morning and present sir,
    Waiting for mail lesson
    Regards
    Sankar
    Karur/////

    நாளை காலைவரை பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  56. Blogger Kumares said...
    காலை வணக்கம் ஐய....
    மின்அஞ்சல் பாடத்திற்கு waiting ஐயா...
    பாடத்திற்கு நன்றி ஐயா...////

    நாளை காலைவரை பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  57. ஐயா,
    இடைப் பலகாரம்! பதிவில்
    மாரக இஸ்தானம் பற்றி குறிப்பிடிருந்தீர்கள்...

    2 & 7 ம் இட அதிபதிகள் மாறாக இஸ்தான அதிபதிகள் என்று...

    அதன் படி மகர லக்னத்திற்கு சனியும் சந்திரனும் அந்த அதிபதிகள் ஆகின்றனர்...

    but மகர லக்னத்திற்கு Killer என்று செவ்வாயை போட்டிருந்தீர்களே அது ஏன்..சற்று விளக்க முடியுமா?

    ReplyDelete
  58. திரு. கோவிந்துவிற்கு,
    ஜெகந்நாத்ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் இருப்பதாக தெரியவில்லை.தமிழ் சாப்ட்வேரில் உள்ளது. வகுப்பறை மெலே உள்ள சுட்டியை பார்க்கவும்.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. ஐயா
    மகர, கும்ப லக்கின காரர்களுக்கு சனிஸ்வரன் பெரிதும் கெடுதல் செய்யா மாட்டார் என்பது பொது விதி என்கிறார்கள் ....

    அதுபோல நட்ச்சத்திரதிபதிகளாக(சதயம்-ராகு) வருகிற கிரகங்களும் கெடுதல் செய்யாமல் விடுவார்களா...

    ReplyDelete
  61. ஐயா!
    மின் அஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி.

    ஐயா
    நவாம்சத்தில்

    மகர லக்னத்தில்
    சனி(ஆட்சி)

    மீனத்தில் சந்திரன்

    மேஷத்தில் சூரியன்(உச்சம்)
    மற்றும் புதன்

    ரிஷபத்தில் சுக்கிரன்(ஆட்சி)
    மற்றும் ராகு(உச்சம்)

    கடகத்தில் குரு(உச்சம்)

    சிம்ஹத்தில் செவ்வாய்

    விருசகத்தில் கேது(உச்சம்)

    ஐய்யா நாவம்சத்தில் இத்தினை கிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவது
    நன்மை பயக்குமா அல்லது
    தீமை பயக்குமா

    ReplyDelete
  62. ஐயா!
    மின் அஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி.

    ஐயா
    நவாம்சத்தில்

    மகர லக்னத்தில்
    சனி(ஆட்சி)

    மீனத்தில் சந்திரன்

    மேஷத்தில் சூரியன்(உச்சம்)
    மற்றும் புதன்

    ரிஷபத்தில் சுக்கிரன்(ஆட்சி)
    மற்றும் ராகு(உச்சம்)

    கடகத்தில் குரு(உச்சம்)

    சிம்ஹத்தில் செவ்வாய்

    விருசகத்தில் கேது(உச்சம்)

    ஐய்யா நாவம்சத்தில் இத்தினை கிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவது
    நன்மை பயக்குமா அல்லது
    தீமை பயக்குமா

    ReplyDelete
  63. Yellarukkum Vanakkam
    Vathiyar Avargale,
    Neengal Anuppum Email Paadathai petravargal yen matravargalukku anuppa koodadhu. Satru Yellorukkum SOllungalen
    Please, those whoever have received the Lessons through e-mail, please send it to others
    my Email-ID - dineshmadhavan13@gmail.com

    ReplyDelete
  64. Jagannatha Horaவில் preferences → Related to calculation → Ayanamsa click செய்தால் எந்த முறையில் ஜாதகம் வேண்டுமோ அதன் படி கணித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  65. ஐயா
    அழகன் ராகுவில் ஆசை வைத்தேன் பகுதியில்

    மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால்
    மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம்
    ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்! என்று குறிப்பிடிருந்தீர்கள்

    அவை ராகுவிற்கு பகை நீச்ச வீடுகள் என்பதாலா? அப்படியாயின் சிம்மம் மற்றும் கும்பமும் உகந்த லக்கினங்களா ?

    ReplyDelete
  66. அய்யா நான் மேல் நிலை பாடங்களை படித்தேன் மிக அருமை எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி எங்களுக்கு தாங்கள் அளிக்கும் தகவல் களுக்கு நன்றி . , அய்யா ராசி சகரத்தில் எனக்கு இருந்த குறை பாடுகள் எல்லாம் நவாம்சத்தில் விலகி விட்டது . எனக்கு ஒரு புது நம்பிக்கையே வந்து விட்டது . நன்றி . தங்கள பணி மேலும் சிறக்க அடுத்தவர்களும் பயன் பெற வேண்டும் என்ற இந்த எண்ணமுள்ள மனதை எத்துனை பிறவிகள் நீங்கள் எடுத்தாலும் ஆண்டவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் நன்றி .

    ReplyDelete
  67. பாடம் அருமையோ அருமை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டால் முழுதும் தேன்தான், மருந்தே தெரிவதில்லை :)

    ReplyDelete
  68. அன்புமிகு ஆசிரியரே!
    தொட்டனைத் தூறும் மணற்கேணியை போல்,
    நவம்சப் பாடங்களை, தாங்கள் கூரியதுபோலும்,
    மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்கப் தெளிவாகிறது.
    பொதுப் பலன்கள் பிரிவில் கூறியவைகள் நவாம்சத்தில் மறைவுஸ்தானத்தில் இருந்தால் எப்படிக் கொள்வது?
    சுக்கிரனுடன் ராகு சேர்ந்திருந்தால் கலப்பு மணம் செய்யலாம், இது பெண்ணாக இருந்தாலும் அதே பலன்தானே?
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  69. வணக்கம் ஐயா. பாடம் கிடைத்தது. சிறப்பான விளக்கம் கொடுத்து இருந்தீர்கள். சில சந்தேகங்கள்.

    பாடத்தில் சொன்னபடி "ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் மிகவும் முக்கியமானது. அதன் அதிபதிதான் ஜாதகனுக்கு அதிகமான நன்மைகளைச் செய்யக்கூடியவர்".

    1. இந்த ஒன்பதாம் இடம் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருந்து count பண்ணி அதை நவாம்சத்தில் பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சச் சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருந்து எண்ணி பார்க்க வேண்டுமா? உதாரணத்திற்கு, ராசியில் கடக லக்னம், 9-ம் இடம் மீனம், எனவே நவாம்சத்தில் மீனத்தில் பலன் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சத்தில் கன்னி லக்னம் 9-ம் வீடு ரிஷபம்.. எனவே ரிஷப வீடு அதிபதி மற்றும் அதில் உள்ள கிரகங்களின் பலன்களை பார்க்க வேண்டுமா?

    2. ஏன் நவம்சம் மட்டும் பார்க்க வேண்டும்? தசாம்சம் அல்லது அதற்கும் மேலே ஏன் பார்க்க கூடாது? அது இன்னும் magnified version அல்லவா? இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்குமே.

    இந்த கேள்விகள் என்னுடைய சந்தேகத்தை போக்கவே. நன்றி ஐயா.

    ReplyDelete
  70. அய்யா,
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது, மிக்க நன்றி.
    நவாம்சம் பற்றி எனக்கு இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது, எனக்கு நவாம்சத்தில் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை அடைந்து உள்ளனர்.

    ReplyDelete
  71. ////Kumares said...
    ஐயா,
    இடைப் பலகாரம்! பதிவில்
    மாரக இஸ்தானம் பற்றி குறிப்பிடிருந்தீர்கள்...
    2 & 7 ம் இட அதிபதிகள் மாறாக இஸ்தான அதிபதிகள் என்று...
    அதன் படி மகர லக்னத்திற்கு சனியும் சந்திரனும் அந்த அதிபதிகள் ஆகின்றனர்...
    but மகர லக்னத்திற்கு Killer என்று செவ்வாயை போட்டிருந்தீர்களே அது ஏன்..சற்று விளக்க முடியுமா?/////

    கல்கத்தாவில் அடிவாங்கி விட்டு, சென்னைக்கு வந்து அழுவதில் பயனில்லை! வழக்கு பதிவு செய்தாலும் கல்கத்தா போலீஸில்தான் பதிவு செய்ய வேண்டும். சென்னை போலீஸ் அனுமதிக்காது. அதுபோல நீங்கள் படிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களுக்கு, அந்த பதிவில் உள்ள பின்னூட்டப் பெட்டியிலேயே கேள்விகளைப் போடுங்கள். எங்கே போட்டாலும் ப்ளாக்கர் எனக்கு அனுப்பிவிடும். நானும் உங்களுக்குப் பதில் தருவேன். அர்த்தம் ஆகிறதா நண்பரே?

    தினமும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா? இல்லையா? அல்லது பதிவுகளைப் படிப்பதும், கேள்விகள் கேட்பதும் மட்டும்தான் தற்சமயம் உங்கள் வேலையா?:-))))

    ReplyDelete
  72. /////krish said...
    திரு. கோவிந்துவிற்கு,
    ஜெகந்நாத்ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் இருப்பதாக தெரியவில்லை.தமிழ் சாப்ட்வேரில் உள்ளது. வகுப்பறை மெலே உள்ள சுட்டியை பார்க்கவும்./////


    நமது நண்பர் ஆனந்த் அவர்கள் அதற்கு உரிய வழியைச் சொல்லியிருக்கிறார். அது அடுத்து உள்ளது. படித்துப் பாருங்கள். அவருக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்
    Jagannatha Horaவில் preferences → Related to calculation → Ayanamsa click செய்தால் எந்த முறையில் ஜாதகம் வேண்டுமோ அதன் படி கணித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  73. /////Kumares said...
    ஐயா
    மகர, கும்ப லக்கின காரர்களுக்கு சனிஸ்வரன் பெரிதும் கெடுதல் செய்யா மாட்டார் என்பது பொது விதி என்கிறார்கள் ....
    அதுபோல நட்ச்சத்திரதிபதிகளாக(சதயம்-ராகு) வருகிற கிரகங்களும் கெடுதல் செய்யாமல் விடுவார்களா...////

    2.கல்கத்தாவில் அடிவாங்கி விட்டு, சென்னைக்கு வந்து அழுவதில் பயனில்லை!வழக்கு பதிவு செய்தாலும் கல்கத்தா போலீஸில்தான் பதிவு செய்ய வேண்டும். சென்னை போலீஸ் அனுமதிக்காது. அதுபோல நீங்கள் படிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களுக்கு, அந்த பதிவில் உள்ள பின்னூட்டப் பெட்டியிலேயே கேள்விகளைப் போடுங்கள். எங்கே போட்டாலும் ப்ளாக்கர் எனக்கு அனுப்பிவிடும். நானும் உங்களுக்குப் பதில் தருவேன். அர்த்தம் ஆகிறதா நண்பரே?

    தினமும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா? இல்லையா? அல்லது பதிவுகளைப் படிப்பதும், கேள்விகள் கேட்பதும் மட்டும்தான் தற்சமயம் உங்கள் வேலையா?:-))))

    ReplyDelete
  74. //////DHANA said...
    ஐயா!
    மின் அஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி. ஐயா நவாம்சத்தில் மகர லக்னத்தில் சனி(ஆட்சி)
    மீனத்தில் சந்திரன் மேஷத்தில் சூரியன்(உச்சம்) மற்றும் புதன் ரிஷபத்தில் சுக்கிரன்(ஆட்சி)
    மற்றும் ராகு(உச்சம்) கடகத்தில் குரு(உச்சம்) சிம்ஹத்தில் செவ்வாய் விருசகத்தில் கேது(உச்சம்)
    ஐய்யா நாவம்சத்தில் இத்தினை கிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெறுவது
    நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா//////

    ஐயா இத்தனை கோடி பணம் என் கையில் இருகிறது.தினமும் சாப்பாடு கிடைக்குமா? கிடைக்காதா? தங்க ஒரு இடம் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்று கேட்பதைப் போல உள்ளது.

    ஆட்சி, உச்சத்தில் இருக்கும் கிரகங்கள் என்ன செய்யும் என்பது பழைய பாடங்களில் விலாவரியாக உள்ளது அதை எல்லாம் முதலில் படியுங்கள். இரண்டாம் வாய்ப்பாடு தெரியாமல் பொறியியல் வகுப்பில் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  75. ////sundinesh1 said...
    Yellarukkum Vanakkam
    Vathiyar Avargale,
    Neengal Anuppum Email Paadathai petravargal yen matravargalukku anuppa koodadhu. Satru Yellorukkum SOllungalen
    Please, those whoever have received the Lessons through e-mail, please send it to others
    my Email-ID - dineshmadhavan13@gmail.com/////

    ஏன் மற்றவர்களிடமிருந்து வாங்கிப் படிக்க ஆசைப் படுகிறீர்கள். நீங்களும் வகுப்பறையில் சேர்ந்து கொள்ளுங்கள். ஒரு செலவும் இல்லையே. அதுவும் இலவசம்தானே?

    அந்தப் பாடங்களை இங்கே ஏன் நடத்தக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதற்கு முன் உள்ள பின்னூட்டத்திற்கான எனது பதிலைப் படியுங்கள். அதுவும் இதற்கு முன்னே உள்ளது.

    ReplyDelete
  76. /////ananth said...
    Jagannatha Horaவில் preferences → Related to calculation → Ayanamsa click செய்தால் எந்த முறையில் ஜாதகம் வேண்டுமோ அதன் படி கணித்துக் கொள்ளலாம்.////

    நன்றி ஆனந்த்! இது பலருக்கும் பயன்படும்!

    ReplyDelete
  77. ////Kumares said...
    ஐயா
    அழகன் ராகுவில் ஆசை வைத்தேன் பகுதியில்
    மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால்
    மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம்
    ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்! என்று குறிப்பிடிருந்தீர்கள்
    அவை ராகுவிற்கு பகை நீச்ச வீடுகள் என்பதாலா? அப்படியாயின் சிம்மம் மற்றும் கும்பமும் உகந்த லக்கினங்களா ?/////

    3: கல்கத்தாவில் அடிவாங்கி விட்டு, சென்னைக்கு வந்து அழுவதில் பயனில்லை!வழக்கு பதிவு செய்தாலும் கல்கத்தா போலீஸில்தான் பதிவு செய்ய வேண்டும். சென்னை போலீஸ் அனுமதிக்காது. அதுபோல நீங்கள் படிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களுக்கு, அந்த பதிவில் உள்ள பின்னூட்டப் பெட்டியிலேயே கேள்விகளைப் போடுங்கள். எங்கே போட்டாலும் ப்ளாக்கர் எனக்கு அனுப்பிவிடும். நானும் உங்களுக்குப் பதில் தருவேன். அர்த்தம் ஆகிறதா நண்பரே?

    தினமும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா? இல்லையா? அல்லது பதிவுகளைப் படிப்பதும், கேள்விகள் கேட்பதும் மட்டும்தான் தற்சமயம் உங்கள் வேலையா?:-))))

    ReplyDelete
  78. /////prabakar.l.n said...
    அய்யா நான் மேல் நிலை பாடங்களை படித்தேன் மிக அருமை எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி எங்களுக்கு தாங்கள் அளிக்கும் தகவல் களுக்கு நன்றி . , அய்யா ராசி சகரத்தில் எனக்கு இருந்த குறை பாடுகள் எல்லாம் நவாம்சத்தில் விலகி விட்டது . எனக்கு ஒரு புது நம்பிக்கையே வந்து விட்டது . நன்றி . தங்கள பணி மேலும் சிறக்க அடுத்தவர்களும் பயன் பெற வேண்டும் என்ற இந்த எண்ணமுள்ள மனதை எத்துனை பிறவிகள் நீங்கள் எடுத்தாலும் ஆண்டவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் நன்றி./////

    இந்த ஒரு பிறவி போதும் சாமி! நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு!

    ReplyDelete
  79. /////RVC said...
    பாடம் அருமையோ அருமை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டால் முழுதும் தேன்தான், மருந்தே தெரிவதில்லை :)/////

    தேன் அதிகமாக உள்ளதா? கொஞ்சம் குறைத்து விடவா?:-)))))

    ReplyDelete
  80. /////Alasiam G said...
    அன்புமிகு ஆசிரியரே!
    தொட்டனைத் தூறும் மணற்கேணியை போல்,
    நவம்சப் பாடங்களை, தாங்கள் கூரியதுபோலும்,
    மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்கப் தெளிவாகிறது.
    பொதுப் பலன்கள் பிரிவில் கூறியவைகள் நவாம்சத்தில் மறைவுஸ்தானத்தில் இருந்தால் எப்படிக் கொள்வது?
    சுக்கிரனுடன் ராகு சேர்ந்திருந்தால் கலப்பு மணம் செய்யலாம், இது பெண்ணாக இருந்தாலும் அதே பலன்தானே?
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    ஆமாம்! ஆமாம்!

    ReplyDelete
  81. //////Scorpion King said...
    வணக்கம் ஐயா. பாடம் கிடைத்தது. சிறப்பான விளக்கம் கொடுத்து இருந்தீர்கள். சில சந்தேகங்கள்.
    பாடத்தில் சொன்னபடி "ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் மிகவும் முக்கியமானது. அதன் அதிபதிதான் ஜாதகனுக்கு அதிகமான நன்மைகளைச் செய்யக்கூடியவர்".
    1. இந்த ஒன்பதாம் இடம் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருந்து count பண்ணி அதை நவாம்சத்தில் பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சச் சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருந்து எண்ணி பார்க்க வேண்டுமா? உதாரணத்திற்கு, ராசியில் கடக லக்னம், 9-ம் இடம் மீனம், எனவே நவாம்சத்தில் மீனத்தில் பலன் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டுமா அல்லது நவாம்சத்தில் கன்னி லக்னம் 9-ம் வீடு ரிஷபம்.. எனவே ரிஷப வீடு அதிபதி மற்றும் அதில் உள்ள கிரகங்களின் பலன்களை பார்க்க வேண்டுமா?/////

    பாடத்தை மீண்டும் மீண்டும் ஆறு மூறை படியுங்கள். தெளிவு வரும்! பாடத்தை மிகவும் எளிமையான நடையில் எழுதியுள்ளேன். மற்றவர்களுக்குப் புரியும்போது, உங்களுக்கு ஏன் பிடிபடவில்லை?

    ReplyDelete
  82. குருவே,
    வேதாளத்தின் வணக்கங்கள் .....
    மேலே உள்ள இடுகைகளில்....(கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே.. )
    "சனி செவ்வாய் சேர்ந்து 12இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று உண்மையா?"

    " அவ யோகமும் இல்லையா ??"
    [குறிப்பு :- சிம்ம ராசி(மகம் 1) துலாலக்னம் லக்னத்தில் குரு , கன்னியில்(௨௯ பரல்கள் ) சனி , செவ்வாய் சேர்கை (சனி 3 பரல் செவ்வாய் 4 பரல் )....]
    என் ஜதகதி பார்த்து ஒருவர் நீ மனைவியை இழப்பை என்று கூறினர் ????? அதான் ...
    நன்றி....( வாதியருக்கு நேரம் இல்லாமல் போகலாம் ..மூத்த மாணவர்கள் உதவலாம்? நன்றி ...)

    ReplyDelete
  83. குருவே,
    வேதாளத்தின் வணக்கங்கள் .....
    நீண்ட நாளாக இந்த படத்திற்குதான் காத்துகிடந்தேன் .....
    நன்றாக படிக்கபோகிறேன்.... நன்றி.....
    (இத பாடத்தில் வேதாளம் உங்கள் கழுத்தை பிடித்துக்கொண்டு தொங்கும் என்றே எண்ணுகிறேன் .... )

    ReplyDelete
  84. ஐயா வணக்கம்

    மேல் நிலை பாடம் மின்னஞ்சலில் வந்தது. நன்றி

    எனக்கு நான் பிறந்த தேதியை சரியாக குறிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டு. ஏனென்றால் என் ஜாதகத்தை பார்ப்பவர் அனைவரும் நீ ரொம்ப யோகக்காரன் என்று
    சொல்வார்கள். அப்படி இல்லையே என்று வருத்தம் உண்டு.

    ஒரே வாக்கியத்தில் என் ஜாதகம் சரியானது என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கு சூரியன் நவாம்சத்தில் மேஷத்தில் (உச்சம்) மேலும் ராசியில் லக்கினத்தில் சூரியன். 26 வயதில் தலை வழுக்கை. சும்மா இல்லை வழு வழு வழுக்கை. so
    now i don't have any doubts on my horoscope.

    சோகத்திலும் ஒரு பெரிய சந்தோசம், 28 வயதில் கல்யாணம். என் மனைவி என்னை விருப்பத்துடன் ஏற்றுகொண்டது.. எனக்கு இன்று வரை என் தலை வழுக்கை என்பது தெரியவே இல்லை. யாரும் குறையாக சொன்னதும் இல்லை

    இன்றைய பாடம் மிக அருமை

    மீண்டும் நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  85. உள்ளேன் ஐயா.

    நீங்கள் ஏன் இன்னும் ஒரு google account open செய்து, Address book-ஐ copy செய்து, மீதமுல்ல address-களுக்கு அதே நாளே அனுப்பலாமே....

    ReplyDelete
  86. Dear sir,
    how to get this email lessons about navamsa in my mail. Please convey it.

    ReplyDelete
  87. மின்னஞ்சல் பாடமே வருக. . .
    காத்திருக்கிறேன் . . .

    கொஞ்ச நாளா ஊருல இல்லை . . .
    அதான் சொல்லாம லீவு போட்டுட்டேன் . .

    இப்பவும் வெளியூர் தான் . .
    ஆனாலும் இப்போ லேப்டாப் வழியா . .

    எங்கிருந்தாலும்
    எங்க வாத்தியாரை மறக்க முடியுமா..

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. vedhalam said...
    குருவே,
    வேதாளத்தின் வணக்கங்கள் .....
    மேலே உள்ள இடுகைகளில்....(கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே.. )
    "சனி செவ்வாய் சேர்ந்து 12இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று உண்மையா?"

    " அவ யோகமும் இல்லையா ??"
    [குறிப்பு :- சிம்ம ராசி(மகம் 1) துலாலக்னம் லக்னத்தில் குரு , கன்னியில்(௨௯ பரல்கள் ) சனி , செவ்வாய் சேர்கை (சனி 3 பரல் செவ்வாய் 4 பரல் )....]
    என் ஜதகதி பார்த்து ஒருவர் நீ மனைவியை இழப்பை என்று கூறினர் ????? அதான் ...
    நன்றி....( வாதியருக்கு நேரம் இல்லாமல் போகலாம் ..மூத்த மாணவர்கள் உதவலாம்? நன்றி ...)


    நண்பரே வேதாளம் எனக்கும் தங்களை போன்றே துலாம் லக்னம் குரு லக்னத்தில் பண்ணிறேண்டம் இடமான கண்ணியில் செவ்வாய் சனி சேர்க்கை பட் நவாம்சத்தில் செவ்வாய் ஏழாம் இடத்தில சோ அதோட பவர் கொஞ்சம் குறைந்து விடுகிறது . நவம்சத்தை பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறன் நவம்சதிலையும் செவ்வாய் சரி இல்லையென்றால் நமது குரு விடையளிப்பார்

    ReplyDelete
  90. ஐயா வணக்கம்,
    தாங்கள் சொன்ன இந்த பொன்மொழி என்க்கு ரொம்ப பிடித்திருக்கிறது///
    (அதிகமாகப் பணம் சேர்ந்தால் கூடவே பிரச்சினைகளும் வரும், பரவாயில்லையா?
    ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அடிக்கடி சொல்வார். Earn money, spend the money, save the money, donate the money, circulate the money, but do not accumulate the money. If you accumulate the money, you will become ugly!!!!!!!///)
    உஙகள் மூளையிலும் மனதிலும் ரொம்ப பொன்மொழிகள் இருக்கிறது
    என்க்கு சொல்லுங்கள் எல்லாத்தையும்.
    ஐயா எனக்கு மின்னஞ்சல் பாடம் நவாம்சபாடம் வ்ந்தது. நல்லா புரிந்தது. ரொம்ப நன்றி சார்.
    உஙகள் மாணவி
    சுந்தரி.

    ReplyDelete
  91. vedhalam said...
    குருவே,
    வேதாளத்தின் வணக்கங்கள் .....
    மேலே உள்ள இடுகைகளில்....(கேள்வி ஆர செளரி யோகம் பற்றியதே.. )
    "சனி செவ்வாய் சேர்ந்து 12இல் மறைந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று உண்மையா?"
    " அவ யோகமும் இல்லையா ??"
    [குறிப்பு :- சிம்ம ராசி(மகம் 1) துலாலக்னம் லக்னத்தில் குரு , கன்னியில்(௨௯ பரல்கள் ) சனி , செவ்வாய் சேர்கை (சனி 3 பரல் செவ்வாய் 4 பரல் )....]
    என் ஜதகதி பார்த்து ஒருவர் நீ மனைவியை இழப்பை என்று கூறினர் ????? அதான் ...
    நன்றி....( வாதியருக்கு நேரம் இல்லாமல் போகலாம் ..மூத்த மாணவர்கள் உதவலாம்? நன்றி ...)/////

    நீங்கள் படிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களுக்கு, அந்த பதிவில் உள்ள பின்னூட்டப் பெட்டியிலேயே கேள்விகளைப் போடுங்கள். எங்கே போட்டாலும் ப்ளாக்கர் எனக்கு அனுப்பிவிடும். நானும் உங்களுக்குப் பதில் தருவேன். புரிகிறதா நண்பரே?

    ReplyDelete
  92. //////vedhalam said...
    குருவே,
    வேதாளத்தின் வணக்கங்கள் .....
    நீண்ட நாளாக இந்த படத்திற்குதான் காத்துகிடந்தேன் .....
    நன்றாக படிக்கபோகிறேன்.... நன்றி.....
    (இத பாடத்தில் வேதாளம் உங்கள் கழுத்தை பிடித்துக்கொண்டு தொங்கும் என்றே எண்ணுகிறேன் .... )/////

    தொங்குவதற்கு என் கழுத்து ஏற்ற இடமல்ல! நல்ல முருங்கை மரமாகப் பாருங்கள்!

    ReplyDelete
  93. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    மேல் நிலை பாடம் மின்னஞ்சலில் வந்தது. நன்றி
    எனக்கு நான் பிறந்த தேதியை சரியாக குறிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டு. ஏனென்றால் என் ஜாதகத்தை பார்ப்பவர் அனைவரும் நீ ரொம்ப யோகக்காரன் என்று
    சொல்வார்கள். அப்படி இல்லையே என்று வருத்தம் உண்டு.
    ஒரே வாக்கியத்தில் என் ஜாதகம் சரியானது என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.
    எனக்கு சூரியன் நவாம்சத்தில் மேஷத்தில் (உச்சம்) மேலும் ராசியில் லக்கினத்தில் சூரியன். 26 வயதில் தலை வழுக்கை. சும்மா இல்லை வழு வழு வழுக்கை. so
    now i don't have any doubts on my horoscope.
    சோகத்திலும் ஒரு பெரிய சந்தோசம், 28 வயதில் கல்யாணம். என் மனைவி என்னை விருப்பத்துடன் ஏற்றுகொண்டது.. எனக்கு இன்று வரை என் தலை வழுக்கை என்பது தெரியவே இல்லை. யாரும் குறையாக சொன்னதும் இல்லை
    இன்றைய பாடம் மிக அருமை
    மீண்டும் நன்றி
    வாழ்த்துக்கள்/////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  94. /////JS said...
    உள்ளேன் ஐயா.
    நீங்கள் ஏன் இன்னும் ஒரு google account open செய்து, Address book-ஐ copy செய்து, மீதமுல்ல address-களுக்கு அதே நாளே அனுப்பலாமே....//////

    எனக்கு ஐந்து ஜிமெயில் ஐ.டிகள் உள்ளன! மேலும் ஒரு ஜிமெயில் ஐ.டியா? உதை விழுகும்:-))))
    அதோடு சில செயல்பாட்டுப் பிரச்சினைகள் உள்ளன!

    ReplyDelete
  95. ///////atoztamilnadu said...
    Dear sir,
    how to get this email lessons about navamsa in my mail. Please convey it./////

    பதிவின் முகப்பில் உள்ள Followers List ல் sign in செய்து உங்கள் பெயரை உள்ளிடுங்கள். அதற்குப் பிறகு
    உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரியப் படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  96. /////Ram said...
    presents sir/////

    வருகைப்பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  97. /////iyer said...
    மின்னஞ்சல் பாடமே வருக. . .
    காத்திருக்கிறேன் . . .
    கொஞ்ச நாளா ஊருல இல்லை . . .
    அதான் சொல்லாம லீவு போட்டுட்டேன் . .
    இப்பவும் வெளியூர் தான் . .
    ஆனாலும் இப்போ லேப்டாப் வழியா . .
    எங்கிருந்தாலும்
    எங்க வாத்தியாரை மறக்க முடியுமா../////

    ஜோதிடம் ஊறுகாய்! நீங்கள் Main Dish களில் கவனம் செலுத்துங்கள்!

    ReplyDelete
  98. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    தாங்கள் சொன்ன இந்த பொன்மொழி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது///
    (அதிகமாகப் பணம் சேர்ந்தால் கூடவே பிரச்சினைகளும் வரும், பரவாயில்லையா?
    ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அடிக்கடி சொல்வார். Earn money, spend the money, save the money, donate the money, circulate the money, but do not accumulate the money. If you accumulate the money, you will become ugly!!!!!!!///)
    உஙகள் மூளையிலும் மனதிலும் ரொம்ப பொன்மொழிகள் இருக்கிறது
    எனக்கு சொல்லுங்கள் எல்லாத்தையும்.
    ஐயா எனக்கு மின்னஞ்சல் பாடம் நவாம்சபாடம் வ்ந்தது. நல்லா புரிந்தது. ரொம்ப நன்றி சார்.
    உஙகள் மாணவி
    சுந்தரி.//////

    தேவைப்படும்போது நினவிற்கு வருபவற்றைப் பதிவில் எழுதி வருகிறேன். எழுதுவதை நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி!

    ReplyDelete
  99. Dear sir,
    my email id is starsun10@gmail.com.
    i will expect the lessons to this mail.

    Thank you

    ReplyDelete
  100. ////atoztamilnadu said...
    Dear sir,
    my email id is starsun10@gmail.com.
    i will expect the lessons to this mail.
    Thank you/////

    உங்கள் மெயில் ஐ.டி யில் ஏதோ தவறு இருக்கிறது. ஜி மெயில் சர்வர் உங்கள் ஐ.டி யை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உங்கள் ஐ.டி யில் இருந்து எனது ஐ.டிக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்!

    ReplyDelete
  101. "தினமும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா? இல்லையா? அல்லது பதிவுகளைப் படிப்பதும், கேள்விகள் கேட்பதும் மட்டும்தான் தற்சமயம் உங்கள் வேலையா?:-))))"

    படித்து சிரித்து விட்டேன் .......
    மின் அஞ்சல் பாடங்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  102. வணக்கம் ஐயா. இன்று கஞ்சனூர் சென்று இருந்தேன். 8ல் சுக்கிரன் இருப்பதால் சுக்கிர ப்ரீதி செய்து கொள்ளலாம் என்று.(தனுசு லக்னம், கடக ராசி. 8ல் சந்திரன், ராகு மற்றும் சுக்கிரன்) மிகவும் அருமையான தரிசனம். ஐயாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிரசாதம் இணையம் மூலமாகவே தருகிறேன்...

    email பாடங்களை ஆவலோடு எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  103. i really thank kris and ananth, but i changed all the ayanamsa given in the both software (jaganatha hora and tamil softwae),still i didnt get the jathagam in vaakiya panchangam format

    ReplyDelete
  104. ayya ,
    I got the mail lesson..Enum padikavillai padithavudan kelvikal ketkeren ayya
    Thanks
    Karthi.

    ReplyDelete
  105. Iyya Navamsa paadam nandraga irunthathu, enakku Purivatharkku neengal sonnapadi niraya murai padikkiren. Nandri.
    Indraikku vandha comments paarthu “Vathiyaarukku Padam eluthuvathai vida comments kku pathil eluthuvathu periya paramaga irukkum endu purigirathu”, ithai anaithu students m purindhukondu anavasiyamana kelvigal kekkamal irukka vendum endru vendugiren. Nandri iyya. Sakthi Ganesh.

    ReplyDelete
  106. இப்பதான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு 2 வீக்ஸ் லீவ் அய்யா...

    அதுதான் தீவிரமா ஜோதிடம் படிச்சிட்டு இருக்கேன்... :-)))

    ReplyDelete
  107. Thanks to vaathiyaar for the email lessons on navaamsa.As usual, Easy to learn.

    Lord of 11 is for profit for Any laknam right.But for some laknam, the same lord can be unlucky as per Astro formula.This is why astrology is so difficult to understand may be :)

    Can any one point the link (from vaathiyar posting ) to understand the nature and effect of Gragha Vakiram.

    ReplyDelete
  108. Dear Vathiyar,

    I have read the following lines in your posting.


    “ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”

    http://groups.google.com

    Please create a group for all the 1000+ of your followers like me and you can send the mail in one shot.

    If you sent individual mails then the google will limit by 500 mails.

    Tomorrow your reader base will increase to more than 10 lak after few years and you can not send the mails one by one. So please create a group where you can send the mail in one shot.

    Please let me know if you need any help in this regard.

    Please feel free to contact and my mobile no is +91-9686416416

    Thanks and warm regards,
    Ramalingam.

    ReplyDelete
  109. /////Priya said...
    "தினமும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே? வேலைக்குப் போகிறீர்களா? இல்லையா? அல்லது பதிவுகளைப் படிப்பதும், கேள்விகள் கேட்பதும் மட்டும்தான் தற்சமயம் உங்கள் வேலையா?:-))))"
    படித்து சிரித்து விட்டேன் .......
    மின் அஞ்சல் பாடங்களுக்கு நன்றி ஐயா/////

    நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது அது! சம்பந்தப்பட்டவரும் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது நல்லது!

    ReplyDelete
  110. ///tamiltemples said...
    வணக்கம் ஐயா. இன்று கஞ்சனூர் சென்று இருந்தேன். 8ல் சுக்கிரன் இருப்பதால் சுக்கிர ப்ரீதி செய்து கொள்ளலாம் என்று.(தனுசு லக்னம், கடக ராசி. 8ல் சந்திரன், ராகு மற்றும் சுக்கிரன்) மிகவும் அருமையான தரிசனம். ஐயாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிரசாதம் இணையம் மூலமாகவே தருகிறேன்...///////

    வெறும் விபூதியை மட்டும் அனுப்பியிருக்கிறீர்களே? லட்டு இல்லையா?

    ReplyDelete
  111. ////govind said...
    i really thank kris and ananth, but i changed all the ayanamsa given in the both software (jaganatha hora and tamil softwae),still i didnt get the jathagam in vaakiya panchangam format/////

    சற்றுப் பொறுங்கள். அவர்களே வந்து, நீங்கள் என்ன செய்யலாம் என்று சொல்வார்கள்!

    ReplyDelete
  112. /////Karthi said...
    ayya ,
    I got the mail lesson..Enum padikavillai padithavudan kelvikal ketkeren ayya
    Thanks
    Karthi.////

    அடுத்த பாடம் வருவதற்குள் இதைப் படித்து விடுங்கள்!

    ReplyDelete
  113. /////Sakthi Ganesh said...
    Iyya Navamsa paadam nandraga irunthathu, enakku Purivatharkku neengal sonnapadi niraya murai padikkiren. Nandri.
    Indraikku vandha comments paarthu “Vathiyaarukku Padam eluthuvathai vida comments kku pathil eluthuvathu periya paramaga irukkum endu purigirathu”, ithai anaithu students m purindhukondu anavasiyamana kelvigal kekkamal irukka vendum endru vendugiren. Nandri iyya. Sakthi Ganesh.////

    உங்களுக்குத் தெரிகிறது. மற்றவர்களுக்கும் தெரிந்தால் நல்லது! நன்றி சக்தி கணேஷ்!

    ReplyDelete
  114. ////Kumares said...
    இப்பதான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு 2 வீக்ஸ் லீவ் அய்யா...
    அதுதான் தீவிரமா ஜோதிடம் படிச்சிட்டு இருக்கேன்... :-)))//////

    ஓ மாணவரா நீங்கள்? மாணவப் பருவத்தில் ஜோதிடம் எதற்கு? அஷ்டமி அல்லது நவமி அன்று தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆகவே உங்களுக்கு இப்போது ஜோதிடம் வேண்டாம். படித்து முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

    ReplyDelete
  115. ////Rajan said...
    Thanks to vaathiyaar for the email lessons on navaamsa.As usual, Easy to learn.
    Lord of 11 is for profit for Any laknam right.But for some laknam, the same lord can be unlucky as per Astro formula.This is why astrology is so difficult to understand may be :)/////

    எந்த லக்கினம்? அதைச் சொல்லுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Can any one point the link (from vaathiyar posting ) to understand the nature and effect of Gragha Vakiram.////

    மின்னஞ்சல் பாடம் எண் 9ல் அது உள்ளதே நண்பரே?

    ReplyDelete
  116. /////Ram said...
    Dear Vathiyar,
    I have read the following lines in your posting.
    “ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”
    http://groups.google.com
    Please create a group for all the 1000+ of your followers like me and you can send the mail in one shot.
    If you sent individual mails then the google will limit by 500 mails.
    Tomorrow your reader base will increase to more than 10 lak after few years and you can not send the mails one by one. So please create a group where you can send the mail in one shot.
    Please let me know if you need any help in this regard.
    Please feel free to contact and my mobile no is +91-9686416416
    Thanks and warm regards,
    Ramalingam./////

    உங்கள் யோசனைக்கு நன்றி. க்ரூப் மெயிலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன!
    எழுதுவதற்கு வலைப் பூ தான் வசதியானது! மின்னஞ்சல் வகுப்பின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்த உள்ளேன். தற்போது உள்ள பிரச்சினை அப்போது இருக்காது

    ReplyDelete
  117. குருவுக்கு பணிவான நமஸ்காரம்,

    தங்கள் ஈமெயில் செய்த Mail Lesson No.10 (நவாம்சம்) கிடைத்துவிட்டது.

    நன்றி குருவே.

    ReplyDelete
  118. ////Kumares said...
    இப்பதான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு 2 வீக்ஸ் லீவ் அய்யா...
    அதுதான் தீவிரமா ஜோதிடம் படிச்சிட்டு இருக்கேன்... :-)))//////

    ஓ மாணவரா நீங்கள்? மாணவப் பருவத்தில் ஜோதிடம் எதற்கு? அஷ்டமி அல்லது நவமி அன்று தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆகவே உங்களுக்கு இப்போது ஜோதிடம் வேண்டாம். படித்து முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்!



    ayya unmayin ethartham purinthu engal veetil enathu thaayar ulpada anaivarum vilunthu vilunthu sirithoom

    ReplyDelete
  119. ஐயா எங்கட coments ஐயும் பதிலையும் பார்த்து 2, 3 பேர் சிரித்ததா சொல்லி இருக்ககாங்க, சந்தோசம்...
    இப்படியாவது மற்றவங்களை சிரிக்க வைக்க சான்ஸ் கிடச்சதை நினைத்து சந்தோசப்படுவோம்...

    ஐயா நீங்க சொன்னது போல நான் ஜோதிடத்தை சாப்பாடாக எடுத்துக்கலை...தொட்டுக்கிற உறுகாயாய் தான் எடுத்துக்கிறன்...
    ஆகவே பிரச்சனை இல்லை தானே ஐயா...

    அஷ்டமி அல்லது நவமி அன்று தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்?

    ஐ டோன்ட் கேர்...

    ஆண்டவன் தடுக்கிறதை எவனாலயும் கொடுக்கவும் ஏலாது..
    ஆண்டவன் கொடுக்கிறதை எவனாலயும் தடுக்கவும் ஏலாது....
    :-))

    ReplyDelete
  120. This comment has been removed by the author.

    ReplyDelete
  121. This comment has been removed by the author.

    ReplyDelete
  122. ஐயா தாங்கள் கண்டிப்பு இன்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியார் என்பதால்தான் பயப்படாமல் கேள்வியும் கேட்கிறன் பதிலும் சொல்கிறேன்...தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டம் ஐயா...

    பல்கலைகழகத்தில் இப்படி பேராசிரியர்களோடு கதைத்தால் நமக்கு அநேகம் அட்டமச்சனிதான்.:-))

    உங்கள் மினஞ்சல் பாடம் கிடைத்தது...
    நன்றி ஐயா...

    ReplyDelete
  123. திரு. கோவிந்த்,
    திருகணித ( Drig Ganitha)பஞ்சாங்கம் தான் நடைமுறைக்கு எற்றது என்று வாராகமிகிரர்,காளிதாசர் போன்றவர்களால் ஏற்று கொள்ளபட்டது. வாக்கிய பஞ்சாங்கம் கோவில்களில் கோச்சார பூஜை செய்ய மட்டும் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எதற்காக கேட்கிறீர்கள் என்று கூறுங்கள். சாப்ட்வேர்களில் திருகணிதம்தான் உபயோகிப்பார்கள். பல வித அயனாம்சங்கள் உள்ளன. அதில் லகரி அ சித்ரபக்‌ஷ அயனாம்சா அரசாங்கத்தாலும் ஜோதிடர்களாலும் அங்கிகரிக்கபட்டது. மற்றவை ஆராச்சிக்காக பயன் படுத்தபடுகின்றன.நான் PVRக்கு மெயில் அனுப்பி உள்ளேன். பதில் வந்த உடன் எழுதுகிறேன்.

    ReplyDelete
  124. ஐயா
    இந்த கேள்வி கொஞ்சம் அர்த்தமில்லாதாதுதான்...
    இருந்தாலும் என் மனத்தெளிவிற்காக கேட்கிறேன்...(inteligence - ஹவுஸ் கொஞ்சம் வீக் நமக்கு)

    "(ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அந்தக் கிரகம் வலிமையை இழந்து விடும். அது செல்லாத காசாகிவிடும். அதனால் ஜாதகனுக்கு எந்தப் பலனையும் தர இயலாது. அதே இடத்தில் நீசபங்கம் பெற்றிருந்தால், மேட்டர் தலை கீழாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்"

    இங்கு நீசபங்கம் என்பது ராசியில் கிரக அமைப்பை வைத்து பார்ப்பதுபோல, அம்சத்திற்கு அம்சத்தில் அதன் கிரக அமைப்பை வைத்து தானே முடிவெடுக்கப்படும்...

    உதாரணத்திற்கு ராசியில் சனி உச்சம்
    but அம்சத்தில் நீச்சம்(மேசத்தில்).
    மேசராசியில் உச்சம் பெறக்கூடிய சூரியன் அம்சத்தில் லக்கினத்தில்(கடகம்)இருக்கிறார். ஆகவே சூரியன் கேந்திரத்தில் உள்ளதால் நீச்சபங்கம்...சரியா ஐயா?

    ReplyDelete
  125. Ayya paadam Super,

    Ana enakuthan kannai kattithusu.

    Thanks
    Saravanan

    ReplyDelete
  126. ////Rajan said...
    Thanks to vaathiyaar for the email lessons on navaamsa.As usual, Easy to learn.

    Lord of 11 is for profit for Any laknam right.But for some laknam, the same lord can be unlucky as per Astro formula.This is why astrology is so difficult to understand may be :)/////

    எந்த லக்கினம்? அதைச் சொல்லுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    For Miduna Laknam, 7th lord is Guru.So, apart from the 2nd Lord ( Moon ), 7th Lord also should be Maaraghathipathi right?

    But you have mentioned as Mooon and Sani ? Is it supposed to be Moon and Guru ?

    Can any one point the link (from vaathiyar posting ) to understand the nature and effect of Gragha Vakiram.////

    மின்னஞ்சல் பாடம் எண் 9ல் அது உள்ளதே நண்பரே?

    Sorry I could rememeber now.I was expecting something detailed example like this Navamsa one for vakiram also. In lession 9, anyway One para was there about Grahga vakiram.Now I am clear about the same.

    Thanks
    Rajan

    ReplyDelete
  127. ஐயா வணக்கம்,
    நவாம்சத்தில் லக்கனத்திற்கு நான்கில்(கடகத்தில்)உச்சம் பெற்ற குருவுடன் வர்கோத்தமம் பெற்ற‌ மாந்தி கூட்டு சேர்ந்து விட்டது அப்பொழுது கூட வ்யதாக ஆக பணம் சேர்ந்து கொண்டேயிருக்கும்மா? தயவு செய்து பதில் சொல்லுங்காள்
    ஐயா. தொந்தருவுக்கு மன்னிக்கவும்.
    உஙகள் மாணவி,
    சுந்தரி.

    ReplyDelete
  128. Vaathiyariya,

    One more doubt

    If Lord of Lakinam in Rasi-Chart and Lord of Lakniam in Navamsa-Chart exchanges their houses, is it considered to be good sign.

    Ex: Guru in Midunam in Rasi-Chart, Budhan in Meenam in Navamsam-Chart

    Or the mutual exchange has to be considered only with in either Rasi or with in Navamsam.

    ReplyDelete
  129. Iyya in my rasi Lagnam is mesham (Guru in 2nd place) but in my Navamsam Guru in 4th place (makaram) it is neesam there is no neesa bangam, then in my rasi Sani is in 10th place (own house Makaram) but in my Navamsam Sani is in 12 th place i.e. Kanni (Neesam) along with Chevvai.[but Guru 9th parvai sanikkum sevvaikkum irukku]. Worried aga ullathu – Vathiyarin unmayana comment venum. As per your words Neesa Graham in Navamsa is worse. As per point no 8. Raasiyl 10th house owner (Sani- in makaram) is in Buthan’s house (kanni – neesam along with sevvai) in Navamsa. That’s why I feel I am in book trade and as sevvai is also along with it I could not shine well in this trade,is this correct, please give your opinion sir. Nandri. Sakthi ganesh.

    ReplyDelete
  130. ////Sreenivasan said...
    குருவுக்கு பணிவான நமஸ்காரம்,
    தங்கள் ஈமெயில் செய்த Mail Lesson No.10 (நவாம்சம்) கிடைத்துவிட்டது.
    நன்றி குருவே.////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  131. /////prabakar.l.n said...
    ////Kumares said...
    இப்பதான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு 2 வீக்ஸ் லீவ் அய்யா...
    அதுதான் தீவிரமா ஜோதிடம் படிச்சிட்டு இருக்கேன்... :-)))//////
    ஓ மாணவரா நீங்கள்? மாணவப் பருவத்தில் ஜோதிடம் எதற்கு? அஷ்டமி அல்லது நவமி அன்று தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆகவே உங்களுக்கு இப்போது ஜோதிடம் வேண்டாம். படித்து முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
    ayya unmayin ethartham purinthu engal veetil enathu thaayar ulpada anaivarum vilunthu vilunthu sirithoom///////

    அவருக்கு மட்டுமல்ல, இன்னும் சிலருக்கும் அது பொருந்தும். எடுத்ததெற்கெல்லாம் ஜோதிடம் பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  132. //////Kumares said...
    ஐயா எங்கட coments ஐயும் பதிலையும் பார்த்து 2, 3 பேர் சிரித்ததா சொல்லி இருக்ககாங்க, சந்தோசம்...
    இப்படியாவது மற்றவங்களை சிரிக்க வைக்க சான்ஸ் கிடச்சதை நினைத்து சந்தோசப்படுவோம்...
    ஐயா நீங்க சொன்னது போல நான் ஜோதிடத்தை சாப்பாடாக எடுத்துக்கலை...தொட்டுக்கிற உறுகாயாய் தான் எடுத்துக்கிறன்...
    ஆகவே பிரச்சனை இல்லை தானே ஐயா...
    அஷ்டமி அல்லது நவமி அன்று தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் தேர்வு வந்தால் என்ன செய்வீர்கள்?
    ஐ டோன்ட் கேர்..
    ஆண்டவன் தடுக்கிறதை எவனாலயும் கொடுக்கவும் ஏலாது..
    ஆண்டவன் கொடுக்கிறதை எவனாலயும் தடுக்கவும் ஏலாது....
    :-))/////

    இந்த மனப்பான்மை இருந்தால் ஜோதிடமே தேவைப்படாது குமரேஸ்! இறைவன் நம்முடன் இருக்கிறான் என்று தெனாவெட்டாக இருக்கலாம். காதைக் கொண்டு வாருங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். நானும் உங்களைப் போலதான் எதையும் எதிர்கொள்வேன். பழநி அப்பன் பார்த்துக்கொள்வான் எனும் தெம்பு!

    ReplyDelete
  133. ////Kumares said...
    ஐயா தாங்கள் கண்டிப்பு இன்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியார் என்பதால்தான் பயப்படாமல் கேள்வியும் கேட்கிறன் பதிலும் சொல்கிறேன்...தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டம் ஐயா...
    பல்கலைகழகத்தில் இப்படி பேராசிரியர்களோடு கதைத்தால் நமக்கு அநேகம் அட்டமச்சனிதான்.:-))
    உங்கள் மினஞ்சல் பாடம் கிடைத்தது...
    நன்றி ஐயா.../////

    நான் அதற்காகத்தான் அங்கே எல்லாம் வாத்தியார் வேலைக்கு முயற்சி செய்யவில்லை!:-)))))

    ReplyDelete
  134. ////krish said...
    திரு. கோவிந்த்,
    திருகணித ( Drig Ganitha)பஞ்சாங்கம் தான் நடைமுறைக்கு எற்றது என்று வாராகமிகிரர்,காளிதாசர் போன்றவர்களால் ஏற்று கொள்ளபட்டது. வாக்கிய பஞ்சாங்கம் கோவில்களில் கோச்சார பூஜை செய்ய மட்டும் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எதற்காக கேட்கிறீர்கள் என்று கூறுங்கள். சாப்ட்வேர்களில் திருகணிதம்தான் உபயோகிப்பார்கள். பல வித அயனாம்சங்கள் உள்ளன. அதில் லகரி அ சித்ரபக்‌ஷ அயனாம்சா அரசாங்கத்தாலும் ஜோதிடர்களாலும் அங்கிகரிக்கபட்டது. மற்றவை ஆராச்சிக்காக பயன் படுத்தபடுகின்றன.நான் PVRக்கு மெயில் அனுப்பி உள்ளேன். பதில் வந்த உடன் எழுதுகிறேன்./////

    பிர்ச்சினை என்னவென்றால், பத்து வருடங்களுக்கு முன்பு கணினிமூலம் ஜாதகத்தைப் பிரதி எடுக்க முடியாத நிலை இருந்தது. அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஜாதகம் பெரும்பாலும் பெற்றோர்கள், தங்களுக்குத் தெரிந்த ஜோதிடரிடம் எழுதி வாங்கி வைத்ததாக இருக்கும். அவர்களில் 90% வாக்கியப்படிதான் எழுதிக் கொடுத்திருப்பார்கள். இப்போது, அதை திருக்கணிதத்திற்கு மாற்றினால் தசா புத்திகள் எல்லாம் வித்தியாசப்படும். ஜாதகன் குழம்பிப் போவான்!

    ReplyDelete
  135. /////Kumares said...
    ஐயா
    இந்த கேள்வி கொஞ்சம் அர்த்தமில்லாதாதுதான்...
    இருந்தாலும் என் மனத்தெளிவிற்காக கேட்கிறேன்...(inteligence - ஹவுஸ் கொஞ்சம் வீக் நமக்கு)
    "(ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அந்தக் கிரகம் வலிமையை இழந்து விடும். அது செல்லாத காசாகிவிடும். அதனால் ஜாதகனுக்கு எந்தப் பலனையும் தர இயலாது. அதே இடத்தில் நீசபங்கம் பெற்றிருந்தால், மேட்டர் தலை கீழாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்"
    இங்கு நீசபங்கம் என்பது ராசியில் கிரக அமைப்பை வைத்து பார்ப்பதுபோல, அம்சத்திற்கு அம்சத்தில் அதன் கிரக அமைப்பை வைத்து தானே முடிவெடுக்கப்படும்...//////

    ஸ்டாப்! ஸ்டாப்! இதோடு நிறுத்திக்கொள்ளூங்கள். இதுவரை நீங்கள் சொல்வது சரி! இதற்குப் பிறகு உள்ளது வேண்டாம்!
    ----------------------------------------------------
    /////உதாரணத்திற்கு ராசியில் சனி உச்சம்
    but அம்சத்தில் நீச்சம்(மேசத்தில்).
    மேசராசியில் உச்சம் பெறக்கூடிய சூரியன் அம்சத்தில் லக்கினத்தில்(கடகம்)இருக்கிறார். ஆகவே சூரியன் கேந்திரத்தில் உள்ளதால் நீச்சபங்கம்...சரியா ஐயா?/////

    மொட்டைத்தலைக்கும் முழங் காலிற்கும் முடிச்சுப் போடக்கூடாது. ராசிக்கு உரிய நீச பங்கத்தை ராசியிலேயே பார்க்க வேண்டும். அம்சத்திற்குரிய நீசபங்கத்தை அம்சத்திலேயே பார்க்கவேண்டும்
    ______________________________________________
    கேந்திரச் சூரியனால் நீச பங்க நிவர்த்தி உண்டாகும் என்று யார் சொன்னது?

    ReplyDelete
  136. /////Saravanan said...
    Ayya paadam Super,
    Ana enakuthan kannai kattithusu.
    Thanks
    Saravanan/////

    கண் கட்டாமல் இருக்க வைத்தியம் இருக்கிறது. படித்ததையே திரும்பத் திரும்ப பத்து முறைகள் படித்தால் கண்கட்டு ரிலீஸாகிவிடும்!

    ReplyDelete
  137. Rajan said...
    ////Rajan said...
    Thanks to vaathiyaar for the email lessons on navaamsa.As usual, Easy to learn.
    Lord of 11 is for profit for Any laknam right.But for some laknam, the same lord can be unlucky as per Astro formula.This is why astrology is so difficult to understand may be :)/////
    எந்த லக்கினம்? அதைச் சொல்லுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    For Miduna Laknam, 7th lord is Guru.So, apart from the 2nd Lord ( Moon ), 7th Lord also should be Maaraghathipathi right?
    But you have mentioned as Mooon and Sani ? Is it supposed to be Moon and Guru ?/////

    எங்கே சொல்லியிருக்கிறேன். பதிவின் லிங்கைக் கொடுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Can any one point the link (from vaathiyar posting ) to understand the nature and effect of Gragha Vakiram.////
    மின்னஞ்சல் பாடம் எண் 9ல் அது உள்ளதே நண்பரே?
    Sorry I could rememeber now.I was expecting something detailed example like this Navamsa one for vakiram also. In lession 9, anyway One para was there about Grahga vakiram.Now I am clear about the same.///

    நல்லது!

    ReplyDelete
  138. /////sundari said...
    ஐயா வணக்கம்,
    நவாம்சத்தில் லக்கனத்திற்கு நான்கில்(கடகத்தில்)உச்சம் பெற்ற குருவுடன் வர்கோத்தமம் பெற்ற‌ மாந்தி கூட்டு சேர்ந்து விட்டது அப்பொழுது கூட வ்யதாக ஆக பணம் சேர்ந்து கொண்டேயிருக்கும்மா? தயவு செய்து பதில் சொல்லுங்காள்
    ஐயா. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
    உஙகள் மாணவி,
    சுந்தரி./////

    மாந்தி இருந்தால் கூட இருக்கும் கிரகம் ரன் அவுட்! பெவிலியனுக்குத் திரும்பிவிடும்!

    ReplyDelete
  139. /////Rajan said...
    Vaathiyariya,
    One more doubt
    If Lord of Lakinam in Rasi-Chart and Lord of Lakniam in Navamsa-Chart exchanges their houses, is it considered to be good sign.
    Ex: Guru in Midunam in Rasi-Chart, Budhan in Meenam in Navamsam-Chart
    Or the mutual exchange has to be considered only with in either Rasi or with in Navamsam./////

    The mutual exchange has to be considered only either in the Rasi or in the Navamsam.
    ராசிக்கு உரிய பரிவர்த்தனையை ராசியிலேயே பார்க்கவேண்டும் அம்சத்திற்குரியதை அம்சத்திலேயே பார்க்கவேண்டும்

    ReplyDelete
  140. ////Sakthi Ganesh said...
    Iyya in my rasi Lagnam is mesham (Guru in 2nd place) but in my Navamsam Guru in 4th place (makaram) it is neesam there is no neesa bangam, then in my rasi Sani is in 10th place (own house Makaram) but in my Navamsam Sani is in 12 th place i.e. Kanni (Neesam) along with Chevvai.[but Guru 9th parvai sanikkum sevvaikkum irukku]. Worried aga ullathu – Vathiyarin unmayana comment venum. As per your words Neesa Graham in Navamsa is worse. As per point no 8. Raasiyl 10th house owner (Sani- in makaram) is in Buthan’s house (kanni – neesam along with sevvai) in Navamsa. That’s why I feel I am in book trade and as sevvai is also along with it I could not shine well in this trade,is this correct, please give your opinion sir. Nandri. Sakthi ganesh./////

    குழம்பிப் போயிருக்கிறீர்கள். தொழிலுக்கும், வருமானத்திற்கும் ஜாதகத்தில் இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. அவைகள் என்னென்ன என்பதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். பொறுமையாக இருங்கள்

    ReplyDelete
  141. நன்றி ஐயா...

    ஒரு கிரகம் நீச்சம் பெற்றிருக்கும் இராசி ஆனது இன்னொரு கிரகம் உச்சம் பெறக்கூடிய இடமாக இருப்பின் அப்படி உச்சம் பெறக்கூடிய கிரகமனது இலக்கினம் அல்லது ராசிக்கு கேந்திரங்களில் இருப்பின் நீச்சபங்கம் ஆகும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் ஐயா....

    (ஜோதிட சூட்சுமங்கள்- By ஜாதகப் பிரம்மா R சந்திரசேகர் M.A;D.A -page no 26.)

    ReplyDelete
  142. ////Kumares said...
    நன்றி ஐயா...
    ஒரு கிரகம் நீச்சம் பெற்றிருக்கும் இராசி ஆனது இன்னொரு கிரகம் உச்சம் பெறக்கூடிய இடமாக இருப்பின் அப்படி உச்சம் பெறக்கூடிய கிரகமனது இலக்கினம் அல்லது ராசிக்கு கேந்திரங்களில் இருப்பின் நீச்சபங்கம் ஆகும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் ஐயா....
    (ஜோதிட சூட்சுமங்கள்- By ஜாதகப் பிரம்மா R சந்திரசேகர் M.A;D.A -page no 26.)////

    உங்கள் பின்னூட்டக் கேள்வியை கீழே கொடுத்துள்ளேன். மீண்டும் ஒருமுறை படியுங்கள்:

    ///உதாரணத்திற்கு ராசியில் சனி உச்சம்
    but அம்சத்தில் நீச்சம்(மேசத்தில்).
    மேசராசியில் உச்சம் பெறக்கூடிய சூரியன் அம்சத்தில் லக்கினத்தில்(கடகம்)இருக்கிறார். ஆகவே சூரியன் கேந்திரத்தில் உள்ளதால் நீச்சபங்கம்...சரியா ஐயா?/////

    Debilitation will be cancelled due to the following rule:
    When the dispositor is in a quadrant ( 1,4,7 & 10 houses ) either from the Ascendant or the Lunar Ascendant

    இதன்படி அம்சத்தில் சனி நீசமாகி அமர்ந்திருக்கும் மேஷ வீட்டுக்காரர் செவ்வாய் (depositor) அம்சத்தில் அம்ச லக்கினம் அல்லது அம்ச ராசிக்குக் கேந்திரத்தில் இருந்தால் மட்டுமே நீசம் தள்ளுபடியாகும். புரிகிறதா?

    உங்கள் ஜாதகப் பிரம்மா எதை ஆதாரமாக வைத்துக் கும்மி அடித்திருக்கிறார் என்று தெரியவில்லை!:-((((((

    ReplyDelete
  143. Here is the link vaathiyariya..

    https://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=2735525522516437346&pli=1

    Thanks
    Rajan

    ReplyDelete
  144. ஐயா இந்த கேள்வி உங்களை சினம் ஊட்டலாம் . but இது உண்மையில்லேயே ஒரு ஜாதகத்தில் உள்ள அமைப்பு . நான் குறிப்பிட்ட அதே ஜாதகத்தில் அம்சத்தில் செவ்வாய் கடத்தில் (அதுதான் லக்கினம்) நீச்சம் அடைந்துள்ளர்...

    "இதன்படி அம்சத்தில் சனி நீசமாகி அமர்ந்திருக்கும் மேஷ வீட்டுக்காரர் செவ்வாய் (depositor) அம்சத்தில் அம்ச லக்கினம் அல்லது அம்ச ராசிக்குக் கேந்திரத்தில் இருந்தால் மட்டுமே நீசம் தள்ளுபடியாகும். புரிகிறதா?"

    ஐயா இப்போதும் தாங்கள் குறிப்பிட்ட மாதிரி சனி நீச்ச பங்கம் அடைவாரா...(செவ்வாய் நீச்சம் அடைந்துள்ள போது)

    ஐயா உங்கள் நேரத்தை நான் வீணடிக்கிறேன் என்பது புரிகிறது...மன்னிக்கவும்...

    ReplyDelete
  145. ///Rajan said...
    Here is the link vaathiyariya..
    https://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=2735525522516437346&pli=1
    Thanks
    Rajan/////

    நான் முன்பு படித்த குறிப்பேட்டிலிருந்து அதை கொடுத்துள்ளேன். அதாவது அந்தப் பதிவில் கொடுத்துள்ளேன். அதை அப்படியே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்!

    ReplyDelete
  146. ////Kumares said...
    ஐயா இந்த கேள்வி உங்களை சினம் ஊட்டலாம் . but இது உண்மையில்லேயே ஒரு ஜாதகத்தில் உள்ள அமைப்பு . நான் குறிப்பிட்ட அதே ஜாதகத்தில் அம்சத்தில் செவ்வாய் கடகத்தில் (அதுதான் லக்கினம்) நீச்சம் அடைந்துள்ளர்...
    "இதன்படி அம்சத்தில் சனி நீசமாகி அமர்ந்திருக்கும் மேஷ வீட்டுக்காரர் செவ்வாய் (depositor) அம்சத்தில் அம்ச லக்கினம் அல்லது அம்ச ராசிக்குக் கேந்திரத்தில் இருந்தால் மட்டுமே நீசம் தள்ளுபடியாகும். புரிகிறதா?"
    ஐயா இப்போதும் தாங்கள் குறிப்பிட்ட மாதிரி சனி நீச்ச பங்கம் அடைவாரா...(செவ்வாய் நீச்சம் அடைந்துள்ள போது)
    ஐயா உங்கள் நேரத்தை நான் வீணடிக்கிறேன் என்பது புரிகிறது...மன்னிக்கவும்.../////

    நீசம் தள்ளுபடியாகாது. அதாவது அடைய மாட்டார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    உங்கள் கோட்டா ஓவர்.

    அதாவது உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மற்றும் உறவினர்களுடைய ஜாதகங்களை வைத்து நீங்கள் கேட்கும் எண்ணற்ற கேள்விகளுக்கான கோட்டா ஓவர்.

    நம் வகுப்பறையில் 1,000 பேர்கள் இருக்கிறார்கள், இதுபோல அனைவரும் கேட்க ஆரம்பித்தால் நான் எப்படிப் பதில் சொல்வது? பாடத்தைத் தொடர்ந்து நடத்த எப்படி நேரம் கிடைக்கும்?

    முதலில் பாடங்களைப் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும். உங்கள் கொக்கிக் கேள்விகள் இப்பொது வேண்டாம்!

    ReplyDelete
  147. இனிய காலை வணக்கம்!
    நன்றி ஐயா..
    மன்னிக்கவும்!

    ReplyDelete
  148. SP.VR. SUBBIAH said...

    /////sundari said...
    ஐயா வணக்கம்,
    நவாம்சத்தில் லக்கனத்திற்கு நான்கில்(கடகத்தில்)உச்சம் பெற்ற குருவுடன் வர்கோத்தமம் பெற்ற‌ மாந்தி கூட்டு சேர்ந்து விட்டது அப்பொழுது கூட வ்யதாக ஆக பணம் சேர்ந்து கொண்டேயிருக்கும்மா? தயவு செய்து பதில் சொல்லுங்காள்
    ஐயா. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
    உஙகள் மாணவி,
    சுந்தரி./////

    மாந்தி இருந்தால் கூட இருக்கும் கிரகம் ரன் அவுட்! பெவிலியனுக்குத் திரும்பிவிடும்!///
    ஐயா வணக்கம்.
    குரு அவுட்டாகி பெவிலியனுக்குத்திரும்பிட்டால் கூட வர்கோத்தம மாந்தி அண்ணல் என்க்கு நல்லதை செய்வார். ல்க்கனத்தில் ராகு வர்கோத்தமமாகியிருக்கிறார் மேஷ ராகு அவர் திசையில் பொன்னும் பொருளும் அளித்து மங்கள வாத்திய கோஷ்ம் உண்டாக்குவார் என்று திரு கிருஷ்ண சாரியார் கூறியுள்ளார் ஐயா.மெலும் குரு அம்சத்தில் பரிவர்த்தனைய்டைந்து விட்டார்(சந்திரன்வீட்டில் குரு,குரு வீட்டில் சந்திரன்)
    மேலும் சனி வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் சனி உச்சமடைந்து வர்கோத்தம கேதுவுடன் சேர்ந்துவிட்டார் ரிஷபத்தில் செவ்வாய் தாங்கள் சொல்வதைப்போல நான் வாழ்க்கையை ராசிபபேன் அது கூட சந்நியாசி வாழ்க்கையை நான் தாங்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை சகோதரர்/வாத்தியார் என்ற் முறையில் கூறுகிறேன். காந்திஜி சொன்னார் எல்லாரும் சிரிக்கும் பொழுதுதான் சிரிப்பங்க கூட் சேர்ந்து அழும் பொழுது அழ மாட்டார்கள் கூட சேர்ந்து ஆனால் நீங்க எல்லாருடைய துன்பத்தை கேட்டுகொள்கிறிர்கள்.
    ந்ன்றி ஐயா,
    சுந்தரி.

    ReplyDelete
  149. ////Kumares said...
    இனிய காலை வணக்கம்!
    நன்றி ஐயா..
    மன்னிக்கவும்!////

    மன்னிப்பெல்லாம் எதற்கு It is all right Kumases!

    ReplyDelete
  150. /////sundari said...
    SP.VR. SUBBIAH said...
    /////sundari said...
    ஐயா வணக்கம்,
    நவாம்சத்தில் லக்கனத்திற்கு நான்கில்(கடகத்தில்)உச்சம் பெற்ற குருவுடன் வர்கோத்தமம் பெற்ற‌ மாந்தி கூட்டு சேர்ந்து விட்டது அப்பொழுது கூட வ்யதாக ஆக பணம் சேர்ந்து கொண்டேயிருக்கும்மா? தயவு செய்து பதில் சொல்லுங்காள்
    ஐயா. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
    உஙகள் மாணவி,
    சுந்தரி./////
    மாந்தி இருந்தால் கூட இருக்கும் கிரகம் ரன் அவுட்! பெவிலியனுக்குத் திரும்பிவிடும்!///
    ஐயா வணக்கம்.
    குரு அவுட்டாகி பெவிலியனுக்குத்திரும்பிட்டால் கூட வர்கோத்தம மாந்தி அண்ணல் என்க்கு நல்லதை செய்வார். ல்க்கனத்தில் ராகு வர்கோத்தமமாகியிருக்கிறார் மேஷ ராகு அவர் திசையில் பொன்னும் பொருளும் அளித்து மங்கள வாத்திய கோஷ்ம் உண்டாக்குவார் என்று திரு கிருஷ்ண சாரியார் கூறியுள்ளார் ஐயா.மெலும் குரு அம்சத்தில் பரிவர்த்தனைய்டைந்து விட்டார்(சந்திரன்வீட்டில் குரு,குரு வீட்டில் சந்திரன்)
    மேலும் சனி வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் சனி உச்சமடைந்து வர்கோத்தம கேதுவுடன் சேர்ந்துவிட்டார் ரிஷபத்தில் செவ்வாய் தாங்கள் சொல்வதைப்போல நான் வாழ்க்கையை ராசிபபேன் அது கூட சந்நியாசி வாழ்க்கையை நான் தாங்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை சகோதரர்/வாத்தியார் என்ற் முறையில் கூறுகிறேன். காந்திஜி சொன்னார் எல்லாரும் சிரிக்கும் பொழுதுதான் சிரிப்பங்க கூட சேர்ந்து அழும் பொழுது அழ மாட்டார்கள் கூட சேர்ந்து ஆனால் நீங்க எல்லாருடைய துன்பத்தை கேட்டுகொள்கிறிர்கள்.
    நன்றி ஐயா,
    சுந்தரி./////

    இந்தப் பக்குவம் இருந்தால் போதும். கவலைகள் உங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காது!

    ReplyDelete
  151. vanakkam ayya nan ungal puthiya manavan..ennai yetru kolvirkala?

    ReplyDelete
  152. ///rajesh said...
    vanakkam ayya nan ungal puthiya manavan..ennai yetru kolvirkala?////

    இது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத இணைய வகுப்பு! யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். பதிவின் முகப்பில் (மேலே) உள்ள வருகைப் பதிவேட்டில் உங்கள் பெயரைச் சேருங்கள். பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் பாடங்களும் உங்களுக்கு வரும். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  153. Dear sir,
    I did not get a copy of the lesson on Navamsa. Kindly send me a copy.

    Thanks and regards,

    Janakiraman

    ReplyDelete
  154. ஐயா,
    முன்பே நான் classroom2007@gmail.com முகவரிக்கு விவரங்களை எழுதியுள்ளேன். பாடங்கள் மின் அஞ்சலில் வரவில்லை, காத்து இருந்தேன். புதிய/பழைய பாடங்களை தயவு செய்து அனுப்பி தர முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  155. ஐயா,
    முன்பே நான் classroom2007@gmail.com முகவரிக்கு விவரங்களை எழுதியுள்ளேன். பாடங்கள் மின் அஞ்சலில் வரவில்லை, காத்து இருந்தேன். புதிய/பழைய பாடங்களை தயவு செய்து அனுப்பி தர முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  156. ஐயா..
    நவாம்சத்திற்கும் அஸ்டவர்க்கம் பார்க்கலாமா?
    நடை முறையில் பலன் சொல்லும் போது அப்படி செய்வார்களா?

    ReplyDelete
  157. SWESARA said...
    ஐயா,
    முன்பே நான் classroom2007@gmail.com முகவரிக்கு விவரங்களை எழுதியுள்ளேன். பாடங்கள் மின் அஞ்சலில் வரவில்லை, காத்து இருந்தேன். புதிய/பழைய பாடங்களை தயவு செய்து அனுப்பி தர முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும்.////

    உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவியுங்கள். சரி பார்க்கிறேன்!

    ReplyDelete
  158. //
    நீங்கள் படிக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களுக்கு, அந்த பதிவில் உள்ள பின்னூட்டப் பெட்டியிலேயே கேள்விகளைப் போடுங்கள். எங்கே போட்டாலும் ப்ளாக்கர் எனக்கு அனுப்பிவிடும். நானும் உங்களுக்குப் பதில் தருவேன். புரிகிறதா நண்பரே?//

    மன்னிக்கவும்.. அந்த பாடத்திலும் இதே சந்தேகம் கேட்டுஇருகிறேன்( மறுபடியும் விரிவாக இப்போதும் ) .... தயவு செய்து பதில் அளிக்கவும்..

    ReplyDelete
  159. saravenan@gmail.com

    பாடங்கள் மின் அஞ்சலில் வரவில்லை,..... தயவு செய்து அனுப்பி தர முடியுமா? .....////

    ///உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவியுங்கள். சரி பார்க்கிறேன்!///

    saravenan@gmail.com (not SARAVaNAN a is replaced by 'e' after 'v')

    ReplyDelete
  160. குருவே ,

    இந்த முறை கேள்விகள் அதிகம் ...
    1.வர்கோத்தமம் பெற்ற கிரகம் வலிமையானது என்பது ஒகே ... தீய பலன்களை ( தீய கிரகமோ அல்லது தீய இடத்தில இருக்கும் கிரகமோ ) தருமா இல்லை எப்போதும் நல்ல பலன்களா?
    2. //
    நவாம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் (ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில்) செவ்வாய் இருந்தால் ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து நல்ல முறையில் அனுபவிப்பவனாக இருப்பான். அங்கே இருக்கும் செவ்வாய் கெட்டிருந்தால், மோசமான ரசனைகளை உடையவானாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் வாழ்க்கையை அனுபவிப்பான்.//

    ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில் செவ்வாய் சமம் ... பிறகு எப்படி கெட்டு இருப்பார் ???( தீய கிரக பார்வை மற்றும் மறைவிடத்தில் இருப்பதை சொல்க்ரிர்களா ? )

    3.ராசியில் இருபதை போல நவம்சதிலும் கிரக யுத்தம் ?? அஸ்தமனம் ? உண்டா???

    4௪. ராசியில் ---- அம்சத்தில் ---- Result
    நட்பு ----- பகை -----???
    நட்பு ----- சமம்-----???
    பகை ----- நட்பு -----???
    பகை ----- சமம் -----???
    சமம் ----- பகை-----???
    சமம் ----- நட்பு -----???
    இவைகளை எப்படி எடுத்துகொள்வது நவாம்சத்தில் உள்ளதையா ? ராசியில் உள்ளதையா ? இல்லை mixed result ta??

    5. தவறாக என்ன வேண்டாம் நவ அம்ச பாடம் போதவில்லை என்னக்கு [ நிறைய விசயங்களை கற்கவேண்டும் உங்கள் புத்தகத்தில் பெரிய விளக்கத்தை எதிர் பார்கலாமா?? (நான் பதிவு செய்துவிட்டேன் )]

    இவ்வளவு கேள்விகளை கேட்டதற்கு சிரமத்திற்கு மன்னிக்கவும் ( இதை தான் வேதாளம் உங்கள்(விகரமாதித்தன்) கழுத்தை பிடித்துக்கொண்டு தொங்கபோகிறது என்றேன்)
    நன்றி குருவே ....

    ReplyDelete
  161. though i was reading your materials for the fast 5 to 6 months i did not have the time to become a member thank u sir for your different approach in teacing the lessons as the subjects are easily enters into minds capyivation
    i would like to have the lesson about navamsa can you do methe favour sir
    mohank

    ReplyDelete
  162. /////mohan said...
    though i was reading your materials for the fast 5 to 6 months i did not have the time to become a member thank u sir for your different approach in teacing the lessons as the subjects are easily enters into minds capyivation
    i would like to have the lesson about navamsa can you do methe favour sir
    mohank////

    Inform your email ID! classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  163. Sir
    yet to receive my email lessons. i am eagerly waiting for your valuable lessons

    ReplyDelete
  164. Hello sir,
    I got all ur consolidated mail lessons.All are simple to follow.In the lessons of navamsha alone i have one doubt sir..
    it may be a silly question but still i request u to clarify sir..
    SHOULD WE CONSIDER 7TH LORD'S POSITION FROM NAVAMSHA LAGNA OR THE PLACEMENT OF 7TH LORD FROM RASI LAGNA OF RASHI CHART IN NAVAMSHA CHART FOR MARRIAGE PREDICTIONS???WHICH SEVENTH HOUSE OR LORD SHOULD BE CONSIDERED?I WOULD LIKE TO KNOW THE USAGE OF NAVAMSHA LAGNA..sir.

    Thanking you,
    Nithya

    ReplyDelete
  165. Respected Sir,

    I did not get the Nava amsa LESSON so for

    Kindly dend me Please

    I expext u r mail

    Regards
    Jay

    ReplyDelete
  166. ////vijay said...
    Sir
    yet to receive my email lessons. i am eagerly waiting for your valuable lessons////

    Inform your email ID!
    classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  167. ////Nithya said...
    Hello sir,
    I got all ur consolidated mail lessons.All are simple to follow.In the lessons of navamsha alone i

    have one doubt sir..
    it may be a silly question but still i request u to clarify sir..
    SHOULD WE CONSIDER 7TH LORD'S POSITION FROM NAVAMSHA LAGNA OR THE

    PLACEMENT OF 7TH LORD FROM RASI LAGNA OF RASHI CHART IN NAVAMSHA CHART FOR

    MARRIAGE PREDICTIONS???WHICH SEVENTH HOUSE OR LORD SHOULD BE CONSIDERED?I

    WOULD LIKE TO KNOW THE USAGE OF NAVAMSHA LAGNA..sir.///
    Thanking you,
    Nithya////

    For rasi chart, consider the planetary position as per the rasi chart and for navamsa, consider the planets as per navamsa position. Do not mix them!

    The usage of navamsa is in the mail lesson regarding navamsa. If you have not received it, please inform your mail ID. classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  168. ////Jai said...
    Respected Sir,
    I did not get the Nava amsa LESSON so for
    Kindly dend me Please
    I expext u r mail
    Regards
    Jay///

    Inform your email ID!
    classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  169. I am waiting for your Navamsa Lesson

    And also along with send me how Planets 27 avasthas can be calculated?

    ReplyDelete
  170. ////Searchengines said...
    I am waiting for your Navamsa Lesson
    And also along with send me how Planets 27 avasthas can be calculated?///

    Inform your email ID!
    classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  171. ராசியின் பத்தாம் வீட்டு அதிபதி சனி நவாம்சத்தில் தனது சொந்த வீட்டில் ராகுடன் இருந்தால், என்ன தொழில் அமையும்?

    ReplyDelete
  172. ////Sas said...
    ராசியின் பத்தாம் வீட்டு அதிபதி சனி நவாம்சத்தில் தனது சொந்த வீட்டில் ராகுடன் இருந்தால், என்ன தொழில் அமையும்?////

    அடுத்த மின்னஞ்சல் பாடம் அதுதான். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  173. Sir, Please send Navamsam email lesson to me.

    ReplyDelete
  174. ///Anbu said...
    Sir, Please send Navamsam email lesson to me.////

    Inform your email ID! classroom mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  175. Dear sir
    How to read minnanjal paadangal (yogas and navamsam) i could not read many lessons.
    The lessons say

    This yoga lesson is shifted to yoga class or minanjal paadangal

    can they still be sent to mail id
    sriram.1114@gmail.com. please help me reading them sir.

    ReplyDelete
  176. piease send me navamsa lesson to me my mail id maibei2009@gmail.com

    ReplyDelete
  177. Please send me navamsa lesson to my mail id udhayatrust2016@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com