மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.9.15

Quiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்


Quiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்

தீயை யார் வைத்தது? காலதேவன்தான்!

Quiz 96 விடை
--------------------------------------------------
நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்திற்கான விடை! உங்கள் கணிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமான ஜாதகம்தான் நேற்றுக் கொடுத்திருந்த ஜாதகம்!
-----------------------------------------------------------------------------------
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன்
 துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச்
செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது.
மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய
சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார்.
உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால்
குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?
----------------------------------------------------
முன்பு கேலக்ஸி வகுப்பில் நடத்திய பாடத்தை அப்படியே கேள்வியாக்கிக் கொடுத்திருந்தேன். சங்கரன்கோவில் கணபதியார் அதை நினைவில் வைத்திருந்து தன்னுடைய பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். அவருடைய நினைவாற்றலுக்கு நன்றி

/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    இந்த ஜாதகம் 23.08.2011.ல் கால சர்ப்ப யோகம் பற்றிய பாடத்திற்காக உதாரண ஜாதகமாக் கொடுக்க பட்டது..
    விலோமா யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் **அவ யோகம் **
    கேது கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் உள்ளடங்கி...!!!.
    திருமணமாகி கணவர் இறந்து போனார் .ஜாதகி சமூக சேவையில் நாட்கடதினார்.
    Friday, September 25, 2015 6:41:00 PM//////

கேது கொடிபிடிக்கும் காலசர்ப்ப தோஷத்திற்கு இந்த ஜாதகம் ஒரு நல்ல உதாரணமாகும். அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் என்றுதான் பதிவில் ஏற்றினேன்

போட்டியில் மொத்தம் 30 பேர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். கலந்து கொண்டவர்களில் 19 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன்
அவர்கள் எழுதிய பதில்கள் கீழே உள்ளன. அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
------------------------------
----------------------------------
1
/////OpenID guest2015 said...
    Native has kalasarpa dosha/yoga. ketu in 7th is not auspicious sign. lagna lord association with rahu, saturn in 5th house, venus in 6th house sun and ketu in 7th house , 2 nd and 5th lord debilitation will complicate married life. However jupiter aspecting 7th and 9th house.
    she might have got married but due to strong malefic influences it might not have lasted for long.
    thanks
    sree
    Friday, September 25, 2015 4:34:00 AM/////
-------------------------------
2
/////Blogger selvaspk said...
    Married, not lead regular married life. Should have gone spiritual world or secluded.
    1. 7 th house receiving - Guru, lord of second, Sun yoga karaka and kendrathipathi along with 4th house lord and lagnathipathi make marriage happen.
    2. Raghu kethu-kala sarpa dosam- kethu leading and joined with Sun denotes spiritual preaching as her
    3. Mars conjucted his enemy Raghu but rule and ucha makes extremely good combination for native and getting direct aspct of Royals, Sun (natural malefic though yoga karaka) makes this person more strong personality with highest knowledge.
    4. kethu on 7th with Saturn aspect(from a good house), with neecha guru (5th aspect) and keen intelligency of kethu with Sun makes me think, marriage life not on normal terms and may not had childrens but might did extremely did well on spiritual side. Guru may kept the marriage life, but either her husband left her or taken through spiritual path.
    Friday, September 25, 2015 4:56:00 AM Delete//////
-------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    வணக்கம் வாத்தியாரே!
    Quiz 96க்கான பதில்.
    ஜாதகி பிறந்த நேரம் : 02 Jun 1937 19:00 மணி
    அமைதியற்ற திருமண வாழ்வு அமைந்தது. குழந்தை இல்லை.
    விருச்சிக லக்கினம், கும்ப ராசி. தீவிர காலசர்ப்ப தோஷ ஜாதகம். லக்கினதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே வக்கிரம் மேலும் ராகுவுடன் கூட்டு.
ஜாதகியின் வாழ்க்கை முன்னேற்றத்தை முடக்கி விட்டார்கள். ஏழில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து கெட்டு விட்டார். அதன் மீது 5ல் இருக்கும்
சனியின் 3ம் பார்வை. ஏழாம் இடத்திற்கு வக்கிர குரு பார்வை உள்ளதால் அதீத தாமததிற்க்கு பின் திருமணம்.
அப்படி ஒரு திருமணம் நடக்காமலே இருக்கலாம்(ஒன்றும் பிரயோஜனம் இல்லை).
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.
    Friday, September 25, 2015 10:08:00 AM/////
------------------------------------
4
/////Blogger amuthavel murugesan said...
    Answer to Quiz.95
    திருமண வாழ்வு பிறிவில் முடித்து இருக்கும்(விவாகரது அல்லது கணவன் இழப்பு)
    1. 7 ல் இருக்கும் கேது
    2. குரு நீச்சம்
    3. 7ஆம் அதிபதி ஆகிய சுக்கிரன் ஏழுற்கு 12ல்.
    4. குழந்தை இருப்பதற்கு வாய்ப்பும் கடுமை.
    5. 5 ஆம் இடத்திற்கு 24 பரல். 5 ஆம் இடத்து அதிபதி இருக்கும் இடத்திற்கு 2 பரல். 5 ஆம் இடத்து அதிபதி நீச்சம்.
    இப்படிக்கு,
    மு.சாந்தி
    Friday, September 25, 2015 10:52:00 AM/////
-----------------------------------
5
/////Blogger sundar said...
    lagna-7th place(raghu-kethu),7th lord is in 6th house with 8th lord and morever sani and sevvai 
aspecting 7th place where sevvai also 6th lord.these are not good for prosperous marrige life.
so marraige may not happen or if its happpen she should be widow
    Friday, September 25, 2015 11:31:00 AM//////
---------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
    த‌சா இருப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சரியான நட்சத்திரம், தசா காலங்களைக் கணிக்க முடியவில்லை.
    ஏழாம் இடம் கேது சூரியனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;ராகு, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டூள்ளது.ஏழாம் இடத்துக்காரனான சுக்கிரன் ஆறாம்
இட‌த்திலும், எட்டாம் இடத்துக்காரனான புதனும் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.ஏழாம் இடத்துக்கரனையும் எட்டாமிடத்தூக்காரனையும்
சனி கேது சூரியன் சூழ்ந்துள்ளனர்.கால சர்ப தோஷத்தில் அனைத்து கிரகங்களும்.
    குருபார்வை ஏழாம் இட‌த்திற்கு என்பதால் மிகத்தாமதத் திருமணமாகி கைம்பெண் ஆகியிருப்பார் அல்லது விவாக ரத்து ஆகியிருக்கும்
.குரு பார்வையால்,திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்று சொல்ல முடியவில்லை.
    தங்கள் பழைய பாணிப் புதிருக்கு மீண்டும் திரும்பிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.எனவே இம் முறை பதில் அளிப்போர் எண்ணிக்கை குறையும்.
    Friday, September 25, 2015 12:54:00 PM/////
-------------------------------------------
7  
/////Blogger katu raj said...
    1) 7,12ம்(களத்திர,சயன-போகம்) வீட்டதிபதி 6ல் மறைவு அது அந்த வீட்டிற்கு 12ல்
    2) களத்திர அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கரன் 8ம் அதிபதியுடன் கூட்டு
    3) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் அவனே ஆறாம் அதிதிபதியாகி, ராகுவுடன் சேர்க்கை பெற்று 7ம் வீட்டை பார்க்கிரான், 7ல் கேது
    4) 7ம் வீட்டிலும் 2ம் வீட்டிலும் சனியின் பார்வை.மணவாழ்க்கை சுகப்படாது
    5) காலசர்ப தோஷம் முடிந்தாலும் கேது கொடிபிடிக்கும் ஜாதகம்!!!.
    6) 2ம் வீட்டதிபதி குரு 7ம் வீட்டை பார்க்கும் அமைப்பால் திருமணம் நடந்தாலும் மற்ற அமைப்பால் பிரிவில் முடிந்திருக்கும்
    Friday, September 25, 2015 1:45:00 PM////////
----------------------------------
8
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    புதிருக்கான விளக்கம்.
    “செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?” - வாடிப்போயிருக்கும்.
    இது ஒரு துரதிருஷ்டமான ஜாதகியாயிருந்திருப்பார்.
    கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகம்.
    விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும், உச்சம் பெற்ற ராகுவுடன் இணைவு.லக்கினாதிபதி செவ்வாயே 6க்கும்
அதிபதியாகி லக்கினத்தை கெடுத்ததுடன், 7ம் இடத்தையும் நேர்ப் பார்வையால் பார்த்துகெடுத்துவிட்டார். 7ம் வீட்டில் அமர்ந்த கர்மாதிபதி சூரியனோ
கேதுவால் பாதிக்கப் பட்டு 7ம் பாவத்தை சிதைத்துவிட்டார்.    7ம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல், 6மிடத்தில் அமர்ந்து 8ம் அதிபதி புதனுடன்
கூட்டு. களத்திர காரகன் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தில். குடும்பாதி குரு மறைவிடமான 3ல் அமர்ந்து நீச்சம் பெற்று, ஜாதகியை சந்தோஷமில்லாத
ஒரு வாழ்க்கையில் தள்ளி விட்டார்.
    கேது கொடி பிடித்தால் என்ன ஆகும் என்பதை குரு (வாத்தியார் அவர்கள்) விளக்கமாக சொல்லியுள்ளார்.
    குரு கெட்டா என்னவாகும்? வாழ்வு பாழாகும்.
    7ம் பதி ஆறில் 8ம் பதியுடன் - வாழ்க்கைத் துணையை இழந்திருப்பார். நோய் பாதிப்பால்.
    குரு சனி பரிவர்த்தனை.சனியின் கொடூர பார்வை 7ம் வீட்டின் மீது.
    ஒட்டு மொத்த தோஷ ஜாதகம்.
    ஆனாலும் சனி தசா முடிவில் 32 வயதில் திருமணம் நடந்து புதன் தசை ஆரம்பித்திலேயே கணவரை இழந்திருப்பார்.
    8,12 அதிபதிகள் புதன் சுக்கிரன் 6ல் இணைந்ததால் விபரீத ராஜயோகம் ஏற்ப்பட்டு பின்னர் கெடுத்திருக்கும்.
    சுக்கிரன் புதன் இணைவு 6ல் இருப்பதால், ஜாதகியே நோய்வாய்ப் பட்டிருப்பார்.
    எதுக்குமே குருவின் அருள் வேண்டுமே!!!!!!!.
    அன்புடன்,
    - பொன்னுசாமி.
    Friday, September 25, 2015 4:11:00 PM//////
----------------------------------
9
////Blogger Gouthaman R said...
    ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதி குறைவு. காரணம், 2 ம் வீட்டு அதிபதி குரு நீச்சமாகி உள்ளார், மேலும்,
7ம் வீடதிபதி 7ம் வீட்டுக்கு 12ல் மறைவு. ரிஷபத்தில் உள்ள கேது அவ்வப்போது நன்மை செய்திருப்பார், இருப்பினும் மன நிறைவு & நிம்மதி குறைவே.
    -ரா. கௌதமன்.
    Friday, September 25, 2015 5:49:00 PM ///////
----------------------------------
10
/////Blogger Goutham Mylsamy said...
    Native marriage life is a troubled one
    1,seventh lord in 6th house & sun,ketu in 7th house - very bad placement in horoscope this 
combination leads to divorce or
    2, 2nd and 5th lord guru also debliated,leads to disturbed family life
    Friday, September 25, 2015 5:58:00 PM /////
----------------------------------
11
/////Blogger saravanan said...
    கேது கொடி பிடித்து முன் செல்லும் கால சர்ப தோஷ ஜாதகம்...7 ம் வீட்டு அதிபன் அந்த
    வீட்டுக்கு 12ல்....மேலும் 7ம் வீட்டை மூன்றாம் பார்வையாக சனி....2ம் வீட்டுக்காரன்
    நீசமாக 3 ம் வீட்டில்... மற்றும் சனியின் 9 ம் பார்வை லக்னத்தின் மேல்...
    திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்...அப்படியே திருமணம் நடந்தாலும் விவாக ரத்தாகி இருக்கும்...சூரியனுடன் இணைந்த கேது தடையை உண்டாக்குவான்,,
    7 ம் வீடுக்குரியவன் 8 ம் அதிபதியோடு இணைந்த மோசமான நிலை...என்ன சொல்ல...!!!
    வாத்தியார் பாணியில் சொன்னால் எல்லாம் வாங்கி வந்த வரம்..
    அன்புடன்
    R.Saravanan
    Friday, September 25, 2015 6:08:00 PM//////
-----------------------------------------------
12
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்
    01/06/1937 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை மாலை 6.43.03 மணிக்கு சதய நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில் ஜாதகி பிறந்தார்.
(இடம் - சென்னை).யோககார்கள் : குரு , சந்திரன் யோகமில்லாதவர்கள் : புதன் , சுக்கிரன்
    திருமணவாழ்வு சில காலம் மட்டுமே . திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார்.
    1. கால சர்ப்ப தோஷம் - கேது கொடிபிடித்துக் கொண்டு , மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன.
    2. 7ம் வீட்டிற்கு உரிய சுக்கிரன் (4 பரல்) 6ம் வீட்டில். 7ம் வீட்டிற்க்கு பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். (7ம் வீடு - 21 பரல்),
சனியின் 3ம் பார்வை 7ம் வீட்டின் மீது. ஜாதகியின் 30 வயதில் சனி தசை ஆரம்பம்.
    3. 8ம் வீட்டு அதிபதி புதன் 6ம் வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்த புதன் கணவர் இல்லாமல் செய்து விட்டார்.
    4. 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்க வில்லை. 14 வயது முதல் 30 வயது வரை குரு தசை.
நவாம்சத்தில் குரு உச்சம். ராசியில் குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் சூரிய புக்தியில் திருமணம் நடைபெற்றது.
    5. 9ம் வீடு பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தார்.
    6. 4ம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனின் 7ம் பார்வை 10ம் வீட்டில் உள்ளதால் ஜாதகி சமூக சேவை செய்தார்.
    Friday, September 25, 2015 7:48:00 PM /////
-------------------------------------
13
/////Blogger Siva Radjane said...
    ஜாதகி ஒரு விதவை... இரண்டாம் திருமணம் புரிந்தவர்.
    1.லக்கினத்திற்கு 7 ல் நீச கேது உடன் சூரியன் மற்றும் ராகு ,செவ்வாய் சனி பார்வை.
    2.குடும்பஸ்தானதிபதி குரு’ நீசம்.7,11 ல் நீச பார்வை.
    3.7 ம் அதிபனும் களத்திரகாரகனுமான சுக்கிரன் மற்றும்8 ம் அதிபதி புதன் 6 ல் மறைவு.
    பொதுவாக பெண்களீன் ஜாதகத்தில் செவ்வாய்,சூரியன் ,கேது சம்பந்தம் ஏற்படுவது விதவை,மற்றும் பிரிவைக்குறீக்கும். இந்த ஜாதகிக்கு 7 ல் இம்
மூன்று கிரகங்களும் இணைந்து சனியின் பார்வையும் உள்ளதால் இந்த ஜாதகி விதவை இருந்திருப்பார்.
    மேலும் 7ம் அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 11 ம் அதிபதியான புதனுடன் இணைவு, 11 ம் இடத்திற்கு சனி’யின் பார்வை மற்றும்
நீச குருவின் பார்வை உள்ளதால் ஜாதகிக்கு இரண்டாம் திருமணம் நடந்திருக்கும்.
    G.SivaRajan, Pondicherry
    Saturday, September 26, 2015 3:30:00 AM/////
---------------------------------------------
14
/////Blogger jayakumar M said...
    அய்யா,
    கேது கொடி படித்து செல்லும் காலசர்ப தோசம் உள்ள ஜாதகம். பழைய பாடம்..... சோகமான திருமண வாழ்க்கைக்கு இந்த தோசம் மட்டுமே
காரணமாக இருக்க முடியுமா....
    குரு, சனி பரிவர்த்தனை, சுக், புதன் விபரீத ராஜ யோகம்...
    DOB: 01.06.1937
    பரல்கலும் நன்றாக உள்ளது.
    செவ்வாய் ஆட்சி பெற்று 7ஆம் வீட்டை பார்க்கிறது. செவ்+சூரி( 1&10)
    Saturday, September 26, 2015 5:19:00 AM /////
---------------------------------------------
15
/////Blogger sriram1114 said...
    காலஸர்பதோஷம் உள்ளது, ஏழில் கேது,சூரியனை லக்னத்திருந்து ராகு பார்வை, சனி ஏழாம் வீட்டை 3ஆம் பார்வை,
களத்ரஸ்தானாதிபதி & களத்ரகாரகன் 6ல் 8ஆம் வீட்டு புதனுடன் 7ற்கு 12ஆம் வீட்டில் மறைவு ,குரு மற்றும் லக்னாதிபதி பார்வையால்
திருமணம் நடந்தது ஆனால் குடும்ப வாழ்கை மகிழ்ச்சிகரமாய் இல்லை
    Saturday, September 26, 2015 5:22:00 AM/////
----------------------------------------------
16
////Blogger Ramesh said...
    தாமத திருமணம் ..திருமணத்தில் நிம்மதியின்மை ...மொத்தத்தில் திருமணத்தால் சுகமில்லை...
    Saturday, September 26, 2015 8:15:00 AM/////
------------------------------------------------
17
/////Blogger bala said...
    Vanakkam Iyya,
    Viruchiga lagna jathagi. Pirantha neram 2 - 6 -1937 5.30 PM chennai endru veithu konden.
    Thirumana vazhkai + kudumba vazhkai : 2am idam paarka padavendum + 7aam idamum paarka pada vendum.
    Intha jathagathil - 2aam+5aam athipathi guru neecham adainthu ullar + sanium guruvum parivarthani 
pertrullanar. thangaladhu paadathil "parivarthanai perum grahangal valimai perum" endru koori ullirgal. 
melum guruvum saniyum intha jathagathirku theeya idangaluku (6/8/12) idangaluku athipathigal kidayathu.
Athanal guru neecham petrum, parivarthanai valimayodu ullar. Melum avarin 5aam paarvai 7aam idathiruku irukirathu.
    7aam idathirku athipathi sukran(+ kalathira kaaragaanum kooda) avan laganthirku 6il(+8aam athipathi 
serkaiyum kooda), 7aam veetiruku 12il.
    Jaathagiku kaala sarba dhosam petra jaathagam athanal kaalaam kadantha thirumanam thaan.
    30 vayathiruku mel thirumanam nadaipetru irukum aanaal athu nilaithu illamal vivagarathuku aagirukum 
(7aam idathu athipathi lagnathiruku 6il amarnthathal). Thirumana vazhai vivagarathu aagi, migavum sogama irukum.
    Sendra vaaram veliyur sendrathal puthir potiyil pangu pera vilai.
    nandri,
    Bala
    Saturday, September 26, 2015 8:39:00 AM////////
----------------------------------------------
18
//////Blogger venkatesh r said...
    குடும்ப ஸ்தானாதிபதி குரு 3ல் நீசமடைந்து வக்கிர கதியிலுள்ளார். களத்திர பாவமான 7ல் சூரியன்+ கேது(21 பரல்).
களத்திராதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 6ல் மறைந்துவிட்டார். லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே இருந்தாலும்.
ராகுவுடன் சேர்ந்து வலுவிழந்து வக்கிரகதியிலுள்ளார். களத்திர பாவத்திற்கு குருவின் பார்வையுள்ளது.மேற்கண்ட காரணங்களால்
ஜாதகி திருமணமாகி சில மாதங்களில் கணவனை இழந்த கைம்பெண்ணாகியிருப்பார்.
    Saturday, September 26, 2015 10:18:00 AM//////
--------------------------------------
19  
//////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த ஜாதகி கணவனை இழந்தோ அல்லது பிரிந்தோ வாழும் நிலை அல்லது திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும் அல்லது கணவன்
நோயாளிய இருப்பார். காரணங்கள்,    காலத்திற ஸ்தானாதிபதி சுக்கிரனும், மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனும் களத்திர ஸ்தானத்திற்கு 12லும்,
லக்னத்திற்கு 6லும், அவருக்களுக்கு இரு புறமும் பாவ கிரகங்கள் சூழ்ந்தும் மறைந்துள்ளர்கள். களத்திர ஸ்தானத்தை சனி, ராகு பார்க்கிறார்கள்
மற்றும் களத்திர ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் அமர்ந்துள்ளார்கள். ஆனால் குருவும் 7மிடத்தை பார்கிறார். அதனால்தான் திருமணம் நடந்திருக்கும்
என எடுத்துக்கொண்டேன்.
    நன்றி
    செல்வம்
    Saturday, September 26, 2015 3:16:00 PM/////
===========================================================
தலைப்புப் பாடலின் முழு வரிகள்:

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)
படம்: மறக்க முடியுமா?
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. I have a question.

    Even when Kethu leading, is the house it leads always end in misery?

    Doesn't it need to be analyzed more on the placement of nakshatra, house of chart, aspect and strength of house where Kethu is placed? And combine the strength of other yogas on the chart?

    Example-As if there a gaja kesari yoga formed will it suppress the effect of Kethu leading? Or even if the lagnathipathi or placements of other planets?

    I am not referring to the quiz chart, but my questions are in general. I just wanted to seem to think any generalization may persuade general people believe to think misery when they see the Kethu leading charts.

    Just a thought.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    தங்களின் பாராட்டுக்கு நன்றி .
    சில ஜாதகங்களை தனியாக நோட்டில் குறித்து வைத்திருந்தேன் . அதில் இதுவும் ஒன்று .
    இது போன்ற ஒரு ஜாதகம் எனது பார்வைக்கு சில நாட்களுக்கு முன் வந்தது அதனாலே ஞாபகம் ..

    உச்சம் பெற்ற சனியுடன் சந்திரன் கூடாணி எனக்கு ஞாபக சக்தி அப்டி அப்டிதான் .. எதோ ..தெரியாதனமாக ஞாபகம் வந்து விட்டது..
    ஆனாலும் வாத்தியார் அய்யா பாராட்டு மகிழ்ச்சி .!!!!

    ReplyDelete
  3. ////Blogger selvaspk said...
    I have a question.
    Even when Kethu leading, is the house it leads always end in misery?
    Doesn't it need to be analyzed more on the placement of nakshatra, house of chart, aspect and strength of house where Kethu is placed? And combine the strength of other yogas on the chart?
    Example-As if there a gaja kesari yoga formed will it suppress the effect of Kethu leading? Or even if the lagnathipathi or placements of other planets?
    I am not referring to the quiz chart, but my questions are in general. I just wanted to seem to think any generalization may persuade general people believe to think misery when they see the Kethu leading charts.
    Just a thought./////

    நீங்கள் கேட்பது சரிதான். கேது கொடி பிடித்தால், கவலைப் படாமல் ஜாதகத்தின் எல்லா அம்சங்களையும் அலச வேண்டியதுதான். நன்றி!

    ReplyDelete
  4. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    தங்களின் பாராட்டுக்கு நன்றி .
    சில ஜாதகங்களை தனியாக நோட்டில் குறித்து வைத்திருந்தேன் . அதில் இதுவும் ஒன்று .
    இது போன்ற ஒரு ஜாதகம் எனது பார்வைக்கு சில நாட்களுக்கு முன் வந்தது அதனாலே ஞாபகம் ..
    உச்சம் பெற்ற சனியுடன் சந்திரன் கூடாணி எனக்கு ஞாபக சக்தி அப்டி அப்டிதான் .. எதோ ..தெரியாதனமாக ஞாபகம் வந்து விட்டது..
    ஆனாலும் வாத்தியார் அய்யா பாராட்டு மகிழ்ச்சி .!!!!////

    உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com