மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.9.11

பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

----------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும்  ஃபில்டர் காஃபி

புதுப் பகுதி

வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table



1. பாஸந்தி

பெண்ணை வர்ணிப்பதற்கு - அதுவும் கேட்பவன் அசந்து போகும் அள்விற்கு வர்ணிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனை விட்டால் யார் இருக்கிறார்கள்?

ஒரு அழகான பெண்ணை அவர் இப்படி வர்ணிக்கின்றார்:

"மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே"


அடடா,  மின்னல் பாதி, தென்றல் பாதி (அதாவது இரண்டும் சேர்ந்து) உன்னை ஈன்றதோ (பெற்றதோ)  என்கிறாரே! இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது? அத்தோடு விட்டாரா?

நீ விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி

என்று வேறு அடுக்கிக் கொண்டே போகிறார்

என்னவொரு அசத்தலான கற்பனை!!!!

முழுப்பாடலையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி இரண்டாவது கிண்ணம்



குறும்பு

“என் விழிகளே
விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளில்
வருட நினைக்கும்போது
உன் மேனிவீட்டை
முந்தானைக் கதவால்
மூடிக் கொள்கிறாயே -
தென்றலுக்கு
லஞ்சம் கொடுத்து
அதைத்
திறக்கச் சொல்ல
மாட்டேனா?

- கவிஞர் வாலி
-----------------------------------
அது ஏன்?
மரங்கள்
தமக்குள்
முனகிக் கொண்டன.

    இந்த மனிதர்கள் -
    நம்மைக் கொண்டு
    பல
    சிலுவைகளைச்
    செய்து விடுகிறார்கள்....

    ஆனால்....

    தம்மைக் கொண்டு
    அவர்களால்
    இன்னமும்
    ஓர்
    ஏசுவைத்
    தயாரிக்க
    இயலவில்லையே!
    அது ஏன்?

    - கவிஞர் வாலி
----------------------------------------------------
2. பக்கோடா

குடியரசு தினம்

“ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும்!

பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்.

“யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?”

- கவிஞர் மு.மேத்தா
------------------------------------------------
அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்
அமெரிக்காவோ
எண்ணெய்க்காக
வளைகுடா நாடுகளின்
தலையைத் தடவுகிறது......

- கவிஞர் மு.மேத்தா
---------------------------------------------------
3. ஃபில்டர் காஃபி


   “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா?

   “சொல்லுங்கோ”

   வாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு    பிராமணன்.

   ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.

   சொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது.

   “சுவாமி நான் வரட்டுமா?

   “ரொம்ப சந்தோஷம்” இரண்டு கை அறைந்து கூப்புகிறார் அப்பா.

   “தட்சிணை தரேளா? கார்த்தாலேர்ந்து ஒரே பசி...”

   இடுப்பு பர்ஸை எடுத்துப் பிரித்து பத்து பைசாவைத் தூக்கி, நீட்டின உள்ளங்கைகளில் போடுகிறார்

   “வழியோட போற பிராமணனுக்கு வைத்தியோட சன்மானம் பத்து கட்டி வராகன்”

    எதுவும் சொல்லாது பத்து பைசா கொடுத்திருக்கலாம். பத்து கட்டி வராகன் என்று நீட்டி முழங்கியதுதான் நஞ்சு.

    வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.

   “பதினாறும் பெத்து பெரு வாழ்க்கை வாழணும். நீங்க போறபோது இந்த பத்துபைசா கூடவரும்”

   “எச்சக்கலை படவா, என் வாசலில் நின்னு, நான் போறது பத்தியா பேசறே” தகப்பன் சீறி எழ.....

   “பத்து பைசாவிற்கு இதுதான் பேச முடியும்” நின்று பதில் சொல்லிவிட்டு போகிறது அது.

   “பிராமணனாடா நீ! சவண்டி நாயே..” தெருவை உலுக்கும் என் தகப்பன் குரல். வந்தது காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.நீள நடை. நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.

   “என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா?”

   “போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.

   - முன்கதை சுருக்கம் என்னும் தன்னுடைய சுய சரிதை நூலில், ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதில் ஒரு பக்கம். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன். பள்ளி மற்றும் எழுத்துலகில் அவரின் பெயர் ‘பாலகுமாரன்’
-----------------------------------------------------------------------------------------------------
அடுத்து க.க. லெட்சுமி ராயின் படம் (க.க. என்பதற்கு கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
‘மங்காத்தா’ புகழ் லெட்சுமி ராயை நினைத்துக் கொண்டு 
நீங்கள் வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!
நம்புங்கள் எங்கள் காலத்து லெட்சுமி ராய் இவர்தான்
--------------------------------------------------------------------------------------------------
புதிர்

இந்தப் படத்தில் உள்ள பெண்மணி யார்? 
முடிந்தால் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!
க்ளூ வேண்டுமா? நம் வகுப்பறை - ஜப்பான் மைனருக்கு நன்றாகத் தெரிந்தவர். ஆனால் ஜப்பானுக்கு இவர் இதுவரை போனதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தியார்

22.9.2011
-----------------------------
இதோ அந்தப் பாடல்:

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே - அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே - என்
கண்ணே பூவண்ணமே

(சிரிப்பில்)

மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே

நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுகள் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன்.. ஓ..
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்

தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இழையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே

(சிரிப்பில்)
படம் : எங்கிருந்தோ வந்தாள்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

++++++++++++++++++++++++++++++++===

வாழ்க வளமுடன்!

71 comments:

  1. இவர் ..என் வானிலே ..ஒரே வெண்ணிலா ..ஜென்சி ஆண்டனி

    ReplyDelete
  2. உணவு பிரமாதம். பாஸந்தி இரண்டாவது கிண்ணம் இன்னும் அருமை. புதிருக்குதான் எனக்கு விடை தெரியவில்லை. எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்கள். அப்போது தெரிந்துக் கொள்கிறேன்.

    அதிகாலையிலேயே எழுந்து இதைப் பதிவேற்றினீர்களா அல்லது time set செய்து இன்ன நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற auto பதிவா என்பது இன்னொரு புதிர்.

    ReplyDelete
  3. /////Blogger ananth said...
    உணவு பிரமாதம். பாஸந்தி இரண்டாவது கிண்ணம் இன்னும் அருமை. புதிருக்குதான் எனக்கு விடை தெரியவில்லை. எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்கள். அப்போது தெரிந்துக் கொள்கிறேன்.
    அதிகாலையிலேயே எழுந்து இதைப் பதிவேற்றினீர்களா அல்லது time set செய்து இன்ன நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற auto பதிவா என்பது இன்னொரு புதிர்./////

    உங்கள் பின்னூட்டம் உடனே வெளியிடப்பெற்று, அதற்கான பதிலும் உடனே வெளியாகியிருக்கிறது. நேரம் அதிகாலை 4:20 இது ஆட்டோ பதிவா அல்லது மானுவல் பதிவா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ஆனந்த்!

    அந்த பெண்மணி புதிருக்கான விடையை மாணவி தேன்மொழி சரியாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிடவில்லை. இன்னும் யார் யார் கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  4. இட்லி வடை காபி போல
    இந்த புதிய பகுதி... அது சரி..

    சுவீட் காரம் காபி
    சுவைக்கும் நேரம் பெண்பாக்கும்போதே

    வகுப்பில் தந்தால் அதற்கு
    வரும் பொருள் என்ன...?

    சுவைத்தது தமிழாக இருந்தும் ஏனோ
    சுவைக்க வில்லை அய்யருக்கு..

    இனிப்பு சாப்பிட்டு
    இன்றோடு பல வருடங்களாயிற்று

    வெங்காயமிருப்பதால் பக்கோடா
    வெறுப்பாக ஒதுக்கப்பட்டது

    காபி டீ சாப்பிட்டு
    காலங்கள் பல கடந்து விட்டன

    ஆயினும் மாணவர்களுக்காக
    ஆர்வத்தோடு வரும் பதிவுகளுக்கு

    தலை வணங்குகிறோம்
    தமிழ் தரும் கவிஞர் வரிகளிலிருந்து

    கல்யாண சமையல் சாதம்
    காய்கறிகளும் பிரமாதம்

    இந்த கௌரவ பிரசாதம்
    இதுவே எனக்கு போதும்

    ReplyDelete
  5. ////Blogger iyer said...
    இட்லி வடை காபி போல
    இந்த புதிய பகுதி... அது சரி..
    சுவீட் காரம் காபி
    சுவைக்கும் நேரம் பெண்பாக்கும்போதே//////

    அது ஓசியில். ஒரு காலகட்டத்தில் மட்டுமே அது சாத்தியம். காசு கொடுத்துச் சாப்பிட்டால் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் விசுவநாதன்!

    //////வகுப்பில் தந்தால் அதற்கு
    வரும் பொருள் என்ன...?//////

    இதற்கெல்லாம் பொருள் கேட்டுக்கொண்டிருந்தால், பதிவு எழுதுவதை நிறுத்திவிட வேண்டியதுதான்! பொருள் தேடாதீர்கள். கொடுத்திருக்கும் செய்திகளில் உள்ள சுவையைத் தேடுங்கள். ஆலோசனை வேண்டும் என்றால், மலேசிய வேந்தர் ஆன்ந்த் அவர்களிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள் விசுவநாதன்!

    ///////காபி டீ சாப்பிட்டு
    காலங்கள் பல கடந்து விட்டன/////

    ஐயோ, பாவம்! வேறென்னத்தைச் சொல்வது?

    ReplyDelete
  6. ////நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.

    “என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா?”

    “போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.////

    இதயம் லேசாகுகிறது...
    விழியோரம் நீரோடுகிறது...

    சிறுகதை உலகின் சிற்பி...
    உணர்வுகளை மேல்லியதிலும்
    மெல்லியதாக உரசி உருகச் செய்யும்
    மயிலிறகு போன்ற வரிகளை...
    பாலகுமாரனால் தான் இவ்வளவு
    அழகாகச் சொல்ல முடியும்.

    மின்னலாய் கொடியாய்
    பார்த்த உடன் இதயத்தில் பளீச்சென்று இறங்கும்
    இவள் தென்றாலாய் அந்த இதயத்தையும்
    வருடுகிறாள் போலும்..
    அதானல் தான் இவ்விரு தன்மையும்
    கொண்ட இவள் தமது இதய வானிலே
    முளைத்த விடிவெள்ளி...
    இதுவரை உணர்திடாத புது விவரங்களைச்
    சொல்லித் தரும் பள்ளி...

    ம்ம்ம்.. என்னத்தச் சொல்லி.....
    லீலைகளின் மன்னன் அந்தக் கண்ணன்
    அவனின் தாசனல்லவா!

    தென்றலுக்கே லஞ்சம் தந்தாவது
    திறக்கச் சொல்லமாட்டேனா!...
    காதல் வரிகளிலும் சமூகச் சாடல்...

    காலகாலமாக மரக்கட்டைகளை கொண்டு
    சிலுவை செய்யும் மானிடன்!
    மகோன்னதமான அந்த
    தேவ தூதனைப் போன்ற
    நல மக்களையும் பெறுவதில்லையே
    என்ற ஆதங்கம்....
    கவிஞர் வாலி... சமூக தடைகளை
    பெயர்த்தெடுக்கு உளி...

    பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டில்
    இருந்து வருபவனுக்கு கிடைத்த
    தீபாவளிப் பலகாரம் போன்றுள்ளது
    இன்றைய பதிவு...

    (படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்
    சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)
    அருமை நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  7. ஐயா! பாலகுமாரன் அவர்களின் அந்த சுய சரிதையின் நான்கு வரிகளில் எத்தனை விவரம்.. அதனால் தான் மீண்டும் பின்னூட்டம்...

    //// “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா?
    “சொல்லுங்கோ”
    வாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.
    ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.
    சொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது////

    கதையும், கதையில் வருபவர்கள் உண்மையானத் தன்மையும்... அதனால் அவர்கள் பெரும் பெருமையும், அவர்கள் உணர்சிகளுக்கு அடிமையாகி சற்று தடம் பிரளும் பொது அவர்கள் அடையும் சிறுமையும்... இருந்தும் எது தர்மம்... எதை சொல்ல செய்ய வேண்டும் என்ற நேர்மையும்... பாலகுமாரரின் அத்வைதக் கொள்கைப் பிடிப்பை அழகுறக் காட்டுகிறது....

    இங்கே பாருங்கள்... கனகதாரா தோத்திரம் சொல்லும் பெரியவர்... சூழ்நிலையால் உணர்ச்சி பிரளயத்தில் அகப்படும் போது... அப்படி மாறக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் பாருங்கள்...

    ///வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.////

    திடீரென்று அஃறிணையில் விளிக்கிறார் பாருங்கள்... ஒரு நான்கு வரிகளில் எத்தனை தத்துவம்....
    சிறந்த எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை... இந்தப் புத்தகத்தை நான் தேடித் படிக்கணும்..
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  8. அருமையான பதிவு ஐயா! கண்ணதாசன் ஒரு கவிதை ஊற்று. அருந்த அருந்த சுவை கூடும் தேனினும் இனிய பாடல்கள். வாலி, வேண்டாம் நான் ஏதாவது சொல்லி பிறர் மனம் வேதனைப் பட விரும்பவில்லை. வயதுக்கேற்ற எண்ணம் செயல்கள் வேண்டும். மூன்றாவது அமிழ்தம். பாலகுமாரன், போகிற போக்கில் அடிமனதின் ஆழப் பதிவுகளை மிக எளிதாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட ஓவியர். அவரது இட்லி வடை தயிர்சாதம் உண்ண உண்ண திகட்டாத விருந்து. மொத்தத்தில் மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சார் புதிருக்கு விடை...
    பாடகி "ஜென்சி"
    சரிதானே!
    ரொம்ப லேட்டுல!!!..

    ReplyDelete
  10. கவிதைகள் அனைத்துமே அருமை. பாலகுமாரனனின் எழுத்தும்தான்.

    நான் கண்டுபிடித்துவிட்டேன், அந்த பெண்மணி பாடகி ஜென்சிதானே?

    ReplyDelete
  11. (படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின் சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)//

    ஹையோ ஹையோ

    ReplyDelete
  12. வாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.

    பாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.


    அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?


    ஹீத்ரூ விமான நிலையத்திற்குப் போகக் கிளம்பிக்கொண்டே இருக்கிறேன்

    ReplyDelete
  13. தேமொழி, செளம்யா, தில்லி உமா, கோவிந்த், ஆலாசியம் ஆகியோர் அந்தப் பெண்மணி யாரென்று கண்டுபிடித்து, சரியான விடையைச் சொல்லிவிட்டார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். அவர்களின் பின்னூட்டங்கள் பிறகு வெளியிடப்பெறும். மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  14. ///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?///

    இதெப்படி இருக்கு!!

    ஆங்க்ஹாங்.. ஆங்க்ஹாக்...
    இப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...

    எப்படியோ கடைசியில கண்டுபிடுச்சுட்டோம்ல....

    ReplyDelete
  15. Blogger nellai ram said...
    mrs.variamuthu!?/////

    இல்லை ராசா; தவறு!

    ReplyDelete
  16. Blogger தமிழ் விரும்பி said...
    ////நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.
    “என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா?”
    “போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.////
    இதயம் லேசாகுகிறது...
    விழியோரம் நீரோடுகிறது...
    சிறுகதை உலகின் சிற்பி...
    உணர்வுகளை மேல்லியதிலும்
    மெல்லியதாக உரசி உருகச் செய்யும்
    மயிலிறகு போன்ற வரிகளை...
    பாலகுமாரனால் தான் இவ்வளவு
    அழகாகச் சொல்ல முடியும்.//////

    ஒரு பக்கத்திற்கே இவ்வளவு மயங்குகிறீர்களே? முழுப் புத்தகத்தையும் படித்துப்பாருங்கள். நிச்சயம் பல இடங்களில் தடாலாகிவிடுவீர்கள் ஆலாசியம்!

    /////// பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டில்
    இருந்து வருபவனுக்கு கிடைத்த
    தீபாவளிப் பலகாரம் போன்றுள்ளது
    இன்றைய பதிவு...///////

    அளவிலா? அல்லது சுவையிலா?


    ///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்
    சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)
    அருமை நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    அடடா, தெரியாவிட்டால் சும்மா இருந்திருக்கலாமே சுவாமி! தில்லி அம்மையார் சும்மா இருக்க மாட்டாரே! என்ன வாரு வாரப்போகிறாரோ?

    ReplyDelete
  17. Blogger தமிழ் விரும்பி said...
    ஐயா! பாலகுமாரன் அவர்களின் அந்த சுய சரிதையின் நான்கு வரிகளில் எத்தனை விவரம்.. அதனால் தான் மீண்டும் பின்னூட்டம்...
    //// “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா?
    “சொல்லுங்கோ”
    வாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.
    ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.
    சொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது////
    கதையும், கதையில் வருபவர்கள் உண்மையானத் தன்மையும்... அதனால் அவர்கள் பெரும் பெருமையும், அவர்கள் உணர்சிகளுக்கு அடிமையாகி சற்று தடம் பிரளும் பொது அவர்கள் அடையும் சிறுமையும்... இருந்தும் எது தர்மம்... எதை சொல்ல செய்ய வேண்டும் என்ற நேர்மையும்... பாலகுமாரரின் அத்வைதக் கொள்கைப் பிடிப்பை அழகுறக் காட்டுகிறது....
    இங்கே பாருங்கள்... கனகதாரா தோத்திரம் சொல்லும் பெரியவர்... சூழ்நிலையால் உணர்ச்சி பிரளயத்தில் அகப்படும் போது... அப்படி மாறக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் பாருங்கள்...
    ///வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.////
    திடீரென்று அஃறிணையில் விளிக்கிறார் பாருங்கள்... ஒரு நான்கு வரிகளில் எத்தனை தத்துவம்....
    சிறந்த எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை... இந்தப் புத்தகத்தை நான் தேடித் படிக்கணும்..
    நன்றிகள் ஐயா!///////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  18. /////Blogger Thanjavooraan said...
    அருமையான பதிவு ஐயா! கண்ணதாசன் ஒரு கவிதை ஊற்று. அருந்த அருந்த சுவை கூடும் தேனினும் இனிய பாடல்கள். வாலி, வேண்டாம் நான் ஏதாவது சொல்லி பிறர் மனம் வேதனைப் பட விரும்பவில்லை. வயதுக்கேற்ற எண்ணம் செயல்கள் வேண்டும். மூன்றாவது அமிழ்தம். பாலகுமாரன், போகிற போக்கில் அடிமனதின் ஆழப் பதிவுகளை மிக எளிதாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட ஓவியர். அவரது இட்லி வடை தயிர்சாதம் உண்ண உண்ண திகட்டாத விருந்து. மொத்தத்தில் மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கோபாலன் சார்! பலகாரத்திற்காக செலவிட்டது மொத்தமும் உங்களின் பின்னூட்டம் மூலம் கிடைத்துவிட்டது!

    ReplyDelete
  19. /////Blogger Uma said...
    (படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின் சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)//
    ஹையோ ஹையோ//////

    நினைத்தேன். வந்தீர் சகோதரி!
    சொன்னேன். சொன்னதைச் செய்தீர் சகோதரி

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.
    பாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.
    அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?///////

    தில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது!

    ///////ஹீத்ரூ விமான நிலையத்திற்குப் போகக் கிளம்பிக்கொண்டே இருக்கிறேன்//////

    ப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்!:-)))

    ReplyDelete
  21. அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?//

    அட ராமா!

    ReplyDelete
  22. இதெப்படி இருக்கு!! ஆங்க்ஹாங்.. ஆங்க்ஹாக்...
    இப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...//

    பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்?

    ReplyDelete
  23. நினைத்தேன். வந்தீர் சகோதரி! சொன்னேன். சொன்னதைச் செய்தீர் சகோதரி//

    ஹா ஹா

    ReplyDelete
  24. ////ப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்!:-)))////
    அச்சச்சோ... இப்பவாது!.....
    இப்படி கவுந்திரக் கூடாதுண்ணே... கவுக்காம கவுத்துப் புட்டீங்களே சார்...
    ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  25. ///Blogger Uma said...
    அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?//
    அட ராமா!////

    இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா!”

    ReplyDelete
  26. ///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?//

    அட ராமா!/////

    ஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..

    ReplyDelete
  27. ///பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்?///
    பிறகு நீங்க மட்டுமா.. நானும் உண்மைத் தமிழன்ல..

    ReplyDelete
  28. இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா!”//

    நல்ல டைமிங் சார் உங்களுக்கு!

    ReplyDelete
  29. பாடகர் ஜென்சியையும் அவரது பாடல்களையும் மறக்க முடியுமா?

    ReplyDelete
  30. ஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//

    ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது. (ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்?)

    ReplyDelete
  31. ////Blogger Uma said...
    இதெப்படி இருக்கு!! ஆங்க்ஹாங்.. ஆங்க்ஹாக்...
    இப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...//
    பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்?///////

    அதானே! இதுக்கென்றே காத்துக் கிடப்பார்கள் போலிருக்கிறது!:-)))

    ReplyDelete
  32. ////Blogger தமிழ் விரும்பி said...
    ////ப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்!:-)))////
    அச்சச்சோ... இப்பவாது!.....
    இப்படி கவுந்திரக் கூடாதுண்ணே... கவுக்காம கவுத்துப் புட்டீங்களே சார்...
    ஹி..ஹி..ஹி...//////

    இலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே! வாங்கி வைத்துக்கொள்வதில் என்ன தவறு சுவாமி?

    ReplyDelete
  33. ///////Blogger தமிழ் விரும்பி said...
    ///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?//
    அட ராமா!/////
    ஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//////

    எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்? இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி காலத்திற்கு வாருங்கள் சுவாமி! லேட்டஸ்ட் டிரெண்ட் தெரியுமா? சென்னையில் இருக்கும், இளமையான அம்மணிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  34. ////Blogger தமிழ் விரும்பி said...
    ///பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்?///
    பிறகு நீங்க மட்டுமா.. நானும் உண்மைத் தமிழன்ல../////

    ஒட்டு மொத்தமாக தமிழ் சமூகத்தையே கவிழ்த்துவிட்டீர்களே சுவாமி!

    ReplyDelete
  35. ///Blogger Uma said...
    இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா!”//
    நல்ல டைமிங் சார் உங்களுக்கு!////

    அது இல்லை என்றால் 2633 என்ற எண்ணிக்கையை எப்படி சமாளிப்பதாம்?

    ReplyDelete
  36. ////Blogger Uma said...
    ஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//
    ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது. (ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்?////

    அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் தேவைப்படும்போது, பயன் படாது அல்லது நினைவிற்கு வராது. அப்படியொரு ஜாதகம்!

    ReplyDelete
  37. ///ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது.////

    ஓ.... சீதா! (இது எங்காத்துக்காரி பேரு)
    ஹி..ஹி.. பேரு மறந்துருசுன்னு மெதுவா சொல்லுங்கோ அத்தின்பேர் காதில விழுந்திரப் போறது...

    ///(ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்?)///
    அத ஏன்? கேட்கிறீங்க! உண்மையில தெரியாது தான் ... பிறகு தான் ஸ்டார்ட்டர் கிளிக்கு கிளிக்குன்னு அடிச்சது... டியூப் பிடிச்சுகிச்சு..

    இதிலே ரொம்ப சூப்பர் டயமிங்... எனக்கு தான்.. போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா.. நான் தான் விக்கட் கீப்பரா நிக்கிறேனே! அப்படியே அழகா, லெக் சயிடுல இறங்கின பந்து மட்டையில பட்டு சின்ன கேப்பில என் கையில மாட்டுச்சு...

    சரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்நீராதீங்க... மறந்திட்டீங்கல்ல!.. ஹி...ஹி..ஹி..

    ReplyDelete
  38. இலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே!//

    சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஆளும் எல்லா கட்சிகளுமே இலவசத்தை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் தன்மானத்திற்கே வேட்டு (ஆப்பு) வைத்துவிட்டார்கள்.

    ReplyDelete
  39. போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா//

    ஹா ஹா நானே ஒரு நிமிஷம் படிச்சதும் திகைத்துவிட்டேன். (என்ன கொடும சார் இது!)

    சரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்நீராதீங்க... மறந்திட்டீங்கல்ல!.. ஹி...ஹி..ஹி..//

    மறக்கறதா? நானா? ஹா ஹாஆ

    ReplyDelete
  40. Ayya,

    Arumayana Kavithigal....

    Sincere Student,
    Trichy Ravi

    ReplyDelete
  41. Vanakkam,

    All the 3 - (Not the food items) are my all time favourites. Thanks for bringing this to us.

    RAMADU.

    ReplyDelete
  42. ஜென்சி.

    மைனருக்குப் பிடித்த குரலின் சொந்தக்காரர்..

    ReplyDelete
  43. பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா

    ReplyDelete
  44. பதிவு அருமை . புதிர் விடை பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா

    ReplyDelete
  45. ///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்
    சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)
    அருமை நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    அம்மா முகச்சாயல் தெரியுது..அக்காவாக்கும்..அப்பிடி..இப்பிடி..ன்னு செம பில்ட்-அப் கொடுக்குறாரே நம்ம ஆலாசியம்..

    எனக்கு ஒரே ஒரு சிஸ்டர்தான்..உடன்பிறந்தது..மற்றபடி அதிகபட்சம் அம்மா வழியில் சகோதரி முறையில் 4 பேர், அப்பா வழியில் 2 பேர்.

    மற்றபடி வகுப்பறை சுந்தரி சகோதரி மட்டும்தான்..தவிர வேற யாருமே சிஸ்டர் கிடையாது..

    மத்தவுங்க எல்லாருமே முறைப்பொண்ணுங்க முறைதான்னு வெச்சுக்குங்களேன்..ஹி..ஹி..

    ReplyDelete
  46. தாங்கள் உண்மையிலேயே அதிகாலையில் எழுந்து பதிவிடுகிறீர்களா என்பது பல நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. அதனால் கேட்டு விட்டேன். தங்களை எந்த விதத்திலும் சிறுமைப் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. தாங்களும் அப்படி எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் என் கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ சிரமத்திற்கிடையில் தாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு பதிவிடுகிறீர்கள். அது திருட்டு போனால் நீங்கள் என்று இல்லை உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நான் பதிவிடுவதற்கு அவ்வளவு பிரயத்தனப்படுவதில்லை. அதனால் திருடு போனால் போகிறது என்ற மனநிலைதான் இருக்கிறது. எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலை மாறி ஏதொ ஓரளவேனும் எழுதுகிறேன். புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது.

    ReplyDelete
  47. /////// SP.VR. SUBBAIYA said...


    /////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.
    பாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.
    அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?///////

    தில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது!///////


    அதானே..நானும் இதுநாள் வரைக்கும் KMRK தஞ்சாவூர் காரர்ன்னு சொல்லிக்கொண்டிருந்ததால்
    நேரில் பார்த்துப் பழக்கமிருக்கும்ன்னு நினைச்சிருந்தேன்..
    இப்போதான் 'தெரிந்தது..தெரியாதது' அனைத்தும்..அறிந்தோம்..

    ReplyDelete
  48. ////Blogger மாணவி தேமொழி said...
    இவர் ..என் வானிலே ..ஒரே வெண்ணிலா ..ஜென்சி ஆண்டனி//////

    கரெக்ட். பாராட்டுக்கள் சகோதரி! மற்றவர்களுக்கும் வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பதற்காக உங்களின் பின்னூட்டம் தாமதமாக வெளியிடப்பெற்றது!

    ReplyDelete
  49. //////Blogger Sowmya said...
    Sir,
    Shes singer Jency/////

    சரியான விடை.பாராட்டுக்கள் சகோதரி

    ReplyDelete
  50. /////Blogger govind said...
    Sir
    she is singer Jency, i think!/////

    சரியான விடை.பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  51. ////Blogger Uma said...
    கவிதைகள் அனைத்துமே அருமை. பாலகுமாரனனின் எழுத்தும்தான்.
    நான் கண்டுபிடித்துவிட்டேன், அந்த பெண்மணி பாடகி ஜென்சிதானே?/////

    சரியான விடை.பாராட்டுக்கள் சகோதரி

    ReplyDelete
  52. ////Blogger Srimatam-Sishyas said...
    பாடகர் ஜென்சியையும் அவரது பாடல்களையும் மறக்க முடியுமா?//////

    அதெப்படி முடியும்? அதனால்தான் உடனே கண்டுபிடித்துச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  53. ///Blogger தமிழ் விரும்பி said...
    ///ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது.////
    ஓ.... சீதா! (இது எங்காத்துக்காரி பேரு)
    ஹி..ஹி.. பேரு மறந்துருசுன்னு மெதுவா சொல்லுங்கோ அத்தின்பேர் காதில விழுந்திரப் போறது...
    ///(ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்?)///
    அத ஏன்? கேட்கிறீங்க! உண்மையில தெரியாது தான் ... பிறகு தான் ஸ்டார்ட்டர் கிளிக்கு கிளிக்குன்னு அடிச்சது... டியூப் பிடிச்சுகிச்சு..
    இதிலே ரொம்ப சூப்பர் டயமிங்... எனக்கு தான்.. போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா.. நான் தான் விக்கட் கீப்பரா நிக்கிறேனே! அப்படியே அழகா, லெக் சயிடுல இறங்கின பந்து மட்டையில பட்டு சின்ன கேப்பில என் கையில மாட்டுச்சு...
    சரி ஞாபகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்ணீறாதீங்க... மறந்திட்டீங்கல்ல!.. ஹி...ஹி..ஹி../////

    எதற்கு இதெல்லாம்? அடுத்த இன்னிங்ஸ்ஸில், அவர் பந்து வீசும்போது. சிக்சராக அடித்துவிடுங்கள். எல்லா பந்துகளையுமே பவுண்டரி லைனுக்கு அனுப்பிவிடுங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  54. ////Blogger Uma said...
    இலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே!//////
    சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஆளும் எல்லா கட்சிகளுமே இலவசத்தை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் தன்மானத்திற்கே வேட்டு (ஆப்பு) வைத்துவிட்டார்கள்./////

    ஆமாம். அதில் எனக்கும் வருத்தம்தான்!

    ReplyDelete
  55. /////Blogger Uma said...
    போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா//
    ஹா ஹா நானே ஒரு நிமிஷம் படிச்சதும் திகைத்துவிட்டேன். (என்ன கொடும சார் இது!)
    சரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்ணீறாதீங்க... மறந்திட்டீங்கல்ல!.. ஹி...ஹி..ஹி..//
    மறக்கறதா? நானா? ஹா ஹா...////

    மறுபடியும் ஒரு ரன் அவுட்டா? பாவம் விட்டுவிடுங்கள்!

    ReplyDelete
  56. /////Blogger Ravichandran said...
    Ayya,
    Arumayana Kavithigal....
    Sincere Student,
    Trichy Ravi/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. ////Blogger RAMADU Family said...
    Vanakkam,
    All the 3 - (Not the food items) are my all time favourites. Thanks for bringing this to us.
    RAMADU./////

    நல்லது. நன்றி ராமுடுகாரு!!

    ReplyDelete
  58. //////Blogger minorwall said...
    ஜென்சி.
    மைனருக்குப் பிடித்த குரலின் சொந்தக்காரர்../////

    மைனருக்கு மட்டுமல்ல, மேஜர்களுக்கும் பிடித்த பாடகி அவர்!

    ReplyDelete
  59. ////Blogger Maya said...
    that lady is jensi./////

    கரெக்ட். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  60. ////Blogger sevisubash said...
    பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா/////

    சரியான விடை. பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  61. //////Blogger sevisubash said...
    பதிவு அருமை . புதிர் விடை பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  62. //////Blogger minorwall said...
    ///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்
    சகோதிரியாக இருக்குமோ? எனத் தோன்றுகிறது.
    அவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)
    அருமை நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////
    அம்மா முகச்சாயல் தெரியுது..அக்காவாக்கும்..அப்பிடி..இப்பிடி..ன்னு செம பில்ட்-அப் கொடுக்குறாரே நம்ம ஆலாசியம்..
    எனக்கு ஒரே ஒரு சிஸ்டர்தான்..உடன்பிறந்தது..மற்றபடி அதிகபட்சம் அம்மா வழியில் சகோதரி முறையில் 4 பேர், அப்பா வழியில் 2 பேர்.
    மற்றபடி வகுப்பறை சுந்தரி சகோதரி மட்டும்தான்..தவிர வேற யாருமே சிஸ்டர் கிடையாது..
    மத்தவுங்க எல்லாருமே முறைப்பொண்ணுங்க முறைதான்னு வெச்சுக்குங்களேன்..ஹி..ஹி../////

    அப்படிப் பார்த்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற 26 மாநிலங்களில் உள்ள அத்தனை இளம் பெண்களுமே உங்களுக்கு முறைப் பெண்கள்தான். கொடுத்துவைத்தவர் சுவாமி!

    ReplyDelete
  63. /////Blogger ananth said...
    தாங்கள் உண்மையிலேயே அதிகாலையில் எழுந்து பதிவிடுகிறீர்களா என்பது பல நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. அதனால் கேட்டு விட்டேன். தங்களை எந்த விதத்திலும் சிறுமைப் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. தாங்களும் அப்படி எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் என் கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ சிரமத்திற்கிடையில் தாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு பதிவிடுகிறீர்கள். அது திருட்டு போனால் நீங்கள் என்று இல்லை உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நான் பதிவிடுவதற்கு அவ்வளவு பிரயத்தனப்படுவதில்லை. அதனால் திருடு போனால் போகிறது என்ற மனநிலைதான் இருக்கிறது. எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலை மாறி ஏதொ ஓரளவேனும் எழுதுகிறேன். புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது./////

    டேக் இட் ஈஸி டைப் நான். எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னைத் தினந்தோறும் அதிகாலையில் எழவைப்பவனும் பழநி அப்பன்தான். எழுதவைப்பதும் பழநி அப்பன்தான்!

    ReplyDelete
  64. /////Blogger minorwall said...
    /////// SP.VR. SUBBAIYA said...
    /////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.
    பாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.
    அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ?///////
    தில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது!///////
    அதானே..நானும் இதுநாள் வரைக்கும் KMRK தஞ்சாவூர் காரர்ன்னு சொல்லிக்கொண்டிருந்ததால்
    நேரில் பார்த்துப் பழக்கமிருக்கும்ன்னு நினைச்சிருந்தேன்..
    இப்போதான் 'தெரிந்தது..தெரியாதது' அனைத்தும்..அறிந்தோம்..//////

    பாட்டும் நானே, பாவமும் நானே’ என்று பாடி முடித்துவிடாதீர்கள். விமானத்தை விட்டு இறங்கி வந்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் மைனர்!

    ReplyDelete
  65. ///////SP.VR. SUBBAIYA said...

    அப்படிப் பார்த்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற 26 மாநிலங்களில் உள்ள அத்தனை இளம் பெண்களுமே உங்களுக்கு முறைப் பெண்கள்தான். கொடுத்துவைத்தவர் சுவாமி!///////

    இப்புடி தமிழகத்தைத் தனிநாடாக்கி என்னைத் தவிக்கவுட்டுடீங்களே சார்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com