மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.8.10

மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணன் சீதாராமன். 29
கத்தார்
வயது 32

கேள்வி:
ஐயா வணக்கம்,
நாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  உள்ள தமிழ் மன்றத்தில் கேட்டது ஐயா. முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர் உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர்  வருவார். அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும்  அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும்  இந்து மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா?

வாத்தியாரின் பதில்

மதத்தைப் பற்றி இப்போது எழுதினால் பலருக்கும் மதம் பிடித்துவிடும். அதைப் பிறகு பார்ப்போம். இந்தியா உலகையே ஆளப்போவது என்னவோ உண்மை!
அதை இன்று சொன்னால், மக்கள் நம்ப மாட்டார்கள்.

மக்களுக்கெல்லாம் இரண்டு கவலைகள்தான்:

வயதானவர்களுக்கு (50 வயதிற்கு மேல் - 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு): விலைவாசி உயர்வு. சொன்னது கேட்காத மனைவி, மற்றும் பிள்ளைகளை வழிக்குக்கொண்டு வருவது.

இளசுகளுக்கு: (18 -25 வயதுக்காரர்கள்) பல்சர் மோட்டார் சைக்கிள், பஃபிற்கு அழைத்துச் செல்ல வயசிலும் தோற்றத்திலும் தமன்னாவை ஒத்த தோழி! அதாவது அது போன்ற தோழி

நடுத்தர வயதுக்காரர்களுக்கு (26 வயதிற்கு மேல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு):: இப்போது இருக்கும் வேலையை உதறிவிட்டு, அதிக சம்பளம் வரும் வேலைக்குத் தாவிச் செல்வது. 2,000 சதுர அடியில் சொந்த வீடு வாங்குவது. வாங்கியிருந்தால் மேலும் ஒரு வீடு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாங்குவது.

எழுபது வயதிற்கு மேற்பட்ட பெரிசுகளுக்கு: காலையில் மலச் சிக்கல். இரவில் மனச் சிக்கல் (மருந்து உண்டா?  (நஹீ ஹை!)

நாஸ்ட்ரடாமஸ் நிறைய நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் என்று எழுதிவைத்துள்ளார். இந்தியாவின் விரிவடையப்போகும் எல்லைகள் பற்றியும், பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீர் பிரச்சினை பற்றியும் நிறைய எழுதியுள்ளார். அவை பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேப்பர் க்ளிப்பிங்குகள் என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அதை எல்லாம் பதிவில் கொடுத்துப் புயலைக் கிளப்ப விருப்பமில்லை. நேரம் வரும்பொது அவற்றைத் தருகிறேன்.

நீங்கள் கேட்டதால் மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் இன்று பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள்
இது 24 ஆண்டுகளுக்கு முன்னால் Probe India என்னும் மாத இதழில் வந்த கட்டுரை ஒன்றின் பகுதியாகும்

படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், படங்கள் பெரிதாகத் தெரியும்.
-----------------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

மூன்று வருடங்களுக்கு முன்பு ESPஐ பற்றி எழுதிய பதிவுகள்
1
http://classroom2007.blogspot.com/2007/03/esp-9.html
2
http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_08.html

மூன்று வருடங்களுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸைப் பற்றி எழுதிய பதிவுகள்
3
http://classroom2007.blogspot.com/2007/03/11.html
4
http://classroom2007.blogspot.com/2007/03/12.html
5
http://classroom2007.blogspot.com/2007/03/13.html



படித்துப்பாருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.30
கணபதி நடராஜா.
   
///////அன்புடன் வணக்கம்
தங்களின் வகுப்பறையில் வெளியில் நின்று படிப்பவன்.//////

(யாரப்பா அங்கே? நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு  வந்து உட்காரவை)

சுமார் 15  வருடங்களுக்கு முன்பு நெல்லை வந்த எனது குருதேவரிடம் ஒரு இலங்கை அடியார் ஞான உபதேசம் பற்றி சாங்கோபாங்கமாக சொல்லி அருள வேண்டும் என்று கேட்டார் .. அழைத்து வந்தவர் மதுரை அன்பர்!!! குருதேவர் (காசி வாசி ஆடூர் ஸ்ரீ வைத்தியநாத சிவாசாரியார் ) சற்று சிந்தித்து விட்டு... தனிமையில்....ஞானம் எவ்வாறானது என்பது பற்றி விளக்கி கூறினார்கள் .. என்ன கூறினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது .!!!( குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள ரகசியம் )அடியாரும் கண்ணீர் ததும்ப கேட்டிருந்து மதுரை திரும்பினார் .சின்னாட்கள் கழித்து குருதேவர் மீண்டும் நெல்லை வந்தபோது அந்த இலங்கை அன்பரை பற்றி கேட்டார்கள் .. அடியார் மதுரையில் ஒரு வாரத்திலே  காலமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் .குருதேவர் கூறிய வார்த்தை!!!! “அந்த ஜீவன் முக்தியடைய உபதேசம் செய் என்று எனக்கு இறைவன் அருள் பாலிதிருக்கிறார்!!!” என்ன இறைவனின் திரு விளையாடல்.!!!!!!!!!!!!.

சரி கேள்வி??? :- இது போன்ற ஞான உபதேசம் ஒருவருக்கு எந்த மாதிரியான கிரக அமைப்பு இருந்தால் கிடைக்கும் ?எந்த திசை.? எந்த புக்தியல் அருள் கிடைக்கும்? சாதரணாமாக பெரும்பாலானவர்களுக்கு சமய தீட்சை, விஷேட தீட்சை , சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) (இங்குதான் இல்லறத்தானுக்கு ஞான உபதேசம்) உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!..
தயவு செய்து விளக்கலாமா??. நன்றி ..///////

இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!.. என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தயவு செய்து விளக்கலாமா??” என்று என்னைக் கேட்கிறீர்களே? என்ன நியாயம்? உங்களுக்குத் தெரிந்ததை நான் எப்படி விளக்க முடியும்?  இதற்கு நீங்கள் என்னை இரண்டு அடி அடித்திருக்கலாம்:-)))))

லட்சத்தில் ஒருவர் நீங்கள் சொல்லும் ஞான உபதேசம் கேட்கும்
மன நிலைக்கு வரலாம். கேது தசையில் அவ்வாறான நிலைமை
ஏற்பட வாய்ப்பு உண்டு. இல்வாழ்க்கை போதும் என்கின்ற மன
நிலைமை வேண்டும். எட்டாம்  வீட்டிலும், பன்னிரெண்டாம்
வீட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட தீயசக்தி இருக்கும் ஜாதகனுக்கு
அந்த  மனநிலைமை உண்டாகலாம். 

எங்கள் பகுதியில், குன்றக்குடிக்கு அருகில் பாதரக்குடி என்னும் ஊரில் குரு ஒருவர் இருக்கிறார். விருப்பம் உள்ளவர்கள், அவரிடம் சென்று உபதேசம் கேட்டுக் கொள்வார்கள். உபதேசம் கேட்ட பிறகு, அதைக் கடைப் பிடிக்க வேண்டும்.

பொகிற வழிக்குப் புண்ணியம் என்று பலர் உபதேசம் கேட்டுக் கொள்வார்கள்.

தினமும் காலையிலும் மாலையிலும் குளித்து, உடலைச் சுத்தம் செய்து கொண்டு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தை 108 முறைகள் கவனத்தோடு இரண்டு வேளையும் உச்சரிக்க வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை. நேரமும் இல்லை! அத்துடன் போகிற வழிக்கு பழநிஅப்பன் துணைக்கு வருவான் என்னும் அசாத்திய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே அதைக் கேட்டுக் கொள்ளவும் இல்லை!

இது மட்டுமே - அதாவது இந்த அளவு மட்டுமே என்னுடைய உபதேச அறிவு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) எல்லாம் என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட மேட்டர்கள். அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

புலவுசாதம், புளியோதரை, அப்பளம், தயிர்சாதம், ஊறுகாய், தமன்னா,
“அடடா மழைடா அடைமழைடா பாடல்,” வலைப் பதிவு, சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், ஜோதிடம், பின்னூட்டம் என்று இப்போது உள்ள வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால், நீங்கள் சொல்லும் உலகத்தை எட்டிப் பார்க்கலாம். அதற்குப் பழநிஅப்பன் அனுமதி கொடுக்க வேண்டும். கொடுத்தால் பார்க்கிறேன். தெரிந்தால் பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு நோ சான்ஸ். மன்னிக்கவும் நண்பரே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.31
M.நித்தியானந்தம். 
கரையாம்பாளையம்
பல்லடம்
வயது 49
   
குருவுக்கு வணக்கம்

1. ராசிக்கட்டத்தில் பனிரெண்டாம் வீடு ரிஷபம் அம்சத்தில் ரிஷபத்தில் சந்திரனும் ராகுவும் நீசபங்கம் இந்த அமைப்பு சந்திரனுக்குவலிமையைத் தருமா?அல்லது ராகுவுக்கா? மேலும் அந்த இடம் விரையஸ்தானமாக இருப்பதால் விரையத்தை அதிகப்படுத்துமா ? அல்லது வேறு பலன்களா?

வரதட்சனை யாருக்குக் கிடைக்கும்? மாப்பிள்ளைக்கா அல்லது
மாப்பிள்ளைத் தோழனுக்கா?
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத்
தோழனுக்கா?
வலிமை யாருக்குக் கிடைக்கும் ரிஷபத்தில் உச்சம் பெற்ற சந்திரனுக்கா அல்லது சந்திரனின் தோழனாக - நீச பங்கத்திற்குக் காரணமான ராகுவிற்கா? ராகு அங்கே நீசம்தான். விரைய ஸ்தானம் என்பதால் வரதட்சனை வராமல் போகாது.மாலை கிடைக்காமல் போகாது. யோகத்தின் பலன் கிடைக்கும். குறைவாகக் கிடைக்கும். (எவ்வளவு குறையும் என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்காதீர்கள்)

2. அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவை எந்தெந்த நட்சத்திரங்கள்? என்ன காரணம்?

மதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.

அதைப்போல அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டதை, நீங்கள் கேட்ட இடத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வதுதான் நல்லது.
அது பற்றி எனக்கு தெரியாது. நான் கேள்விப்படவில்லை!
=====================================================
மின்னஞ்சல் எண். 32
S.R Iyer
முழுப்பெயர்: சிவராமச்சந்திர ஐயர்
மும்பை
வயது 60
   
ANBULLA AYYAH,
JOTHIDATHIL 36 KARAGATWAM PATTRI EZHUTHI IRUKKIREERKAL.  AVAI ENNA ENPATHU KURITTHU VIVARAMAI KURIPPIDUNGAL.
Nanri
Ramachandran

முன்பே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நீங்கள் பழைய பாடங்களை வரிசையாகப் படித்திருந்தால் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். இப்போது அதைத தேடி எடுப்பது சற்றுச் சிரமம். ஆகவே உங்களுக்காக அதை மீண்டும் கொடுத்துள்ளேன்: கீழே உள்ளது.


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 23.8.2010 திங்களன்று. இடையில் ஞாயிறன்று வழக்கம்போல வாரமலர் உண்டு. வாரமலரை அலங்கரிக்கப்போவது யார்?
அது சஸ்பென்ஸ்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

45 comments:

  1. கேது தசையில்,நானும் என் மனைவியும் கோவில் கோவிலாகவும், திருவண்ணாமலையில் விசிறி சாமியாரிடமும், ரமண ஆஸ்ரமத்திலும், மற்ற பல யோகிகளையும் சித்தர்களையும் தேடித்தேடி அலைந்தோம்.இருவருக்கும் 2 மாத இடைவெளியில் சம‌ தசாபுக்தி.சுக்ரதசா வந்தவுடன் இந்த ஞானத்தேடல்
    இருவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டது.


    இந்தியா உலகிற்கு அளிக்க இருக்கும் நன்மைகளைப் பற்றி பாரதியார் மூன்றுமுறை அறுதியிட்டுக் கூறுகிறார்:
    ..."ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்!
    ஆம்,ஆம்!இந்தியா உலகிற்கு அளிக்கும்!
    ஆம் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்!...."

    "சோதிடம் தனை இகழ்" என்ற மஹாகவி, எதிர்கால இந்தியாவைப் பற்றி
    ஆரூடம் போலக் கூறியுள்ளார். அய்யாவும் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது.அந்த இந்தியாவை நான் பார்ப்பேனோ?மார‌க தசை நடக்கிறதே!

    ReplyDelete
  2. உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
    அவர்களை திண்டாடவிட்டது யாரு பாரு?
    கொண்டு வந்து போட்டவர்கள் நாலுபேரு- அதுவும்
    உன்னை உண்டாக்கியவர்கள் செய்த புண்ணியம்தானு கூறு
    கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
    கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?- வேறுயாரு
    நீ கட்டிவைச்ச பாவ மூட்டைகள் அல்லாமல் வேறு?

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி!?//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  4. //////kmr.krishnan said...
    கேது தசையில்,நானும் என் மனைவியும் கோவில் கோவிலாகவும், திருவண்ணாமலையில் விசிறி சாமியாரிடமும், ரமண ஆஸ்ரமத்திலும், மற்ற பல யோகிகளையும் சித்தர்களையும் தேடித்தேடி அலைந்தோம்.இருவருக்கும் 2 மாத இடைவெளியில் சம‌ தசாபுக்தி.சுக்ரதசா வந்தவுடன் இந்த ஞானத்தேடல்
    இருவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டது.
    இந்தியா உலகிற்கு அளிக்க இருக்கும் நன்மைகளைப் பற்றி பாரதியார் மூன்றுமுறை அறுதியிட்டுக் கூறுகிறார்:
    ..."ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்!
    ஆம்,ஆம்!இந்தியா உலகிற்கு அளிக்கும்!
    ஆம் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்!...."
    "சோதிடம் தனை இகழ்" என்ற மஹாகவி, எதிர்கால இந்தியாவைப் பற்றி
    ஆரூடம் போலக் கூறியுள்ளார். அய்யாவும் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது.அந்த இந்தியாவை நான் பார்ப்பேனோ?மார‌க தசை நடக்கிறதே!///////

    மார‌க தசை நடந்தால் என்ன? பிரகதீஸ்வரனைத் தினமும் (மனதிலாவது) பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆயுளை அவன் நீட்டிப்பான். இந்தியா சூப்பர் பவராவதைக் கண்ணால் பார்த்துவிட்டே செல்லுங்கள்!
    செல்லலாம்! (இது எனக்கு)!;-)))))))

    ReplyDelete
  5. //////Alasiam G said...
    உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
    அவர்களை திண்டாடவிட்டது யாரு பாரு?
    கொண்டு வந்து போட்டவர்கள் நாலுபேரு- அதுவும்
    உன்னை உண்டாக்கியவர்கள் செய்த புண்ணியம்தானு கூறு
    கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
    கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?- வேறுயாரு
    நீ கட்டிவைச்ச பாவ மூட்டைகள் அல்லாமல் வேறு?
    நன்றிகள் குருவே!////////

    “வீடுவரை உறவு
    வீதிவரை மனைவி
    கடுவரை பிள்ளை
    கடைசிவரை கணக்கு!”

    பாவ புண்ணியக் கணக்கு!:-)))))

    ReplyDelete
  6. அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, கத்தார் கண்ணன் சீத்தாராமன் மனிதனின் வயதுக்குத் தக்கபடி அவர்களுடைய கவலைகள் ஆதங்கங்கள் பற்றி மிக அருமையாகக் குறிப்பிட்டுவிட்டு 70ஐக் கடந்த 'பெரிசுகளின்' பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை என்பது போல குறிப்பிட்டிருந்தார். மிகவும் சரி. அது பெரும்பாலான, ஏன்? ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தக்கூடியதே. ஆனால் என்னைப் போன்ற சிலர் (என் வயது 74) வயதைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. எனது 40 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். என் கவலை முழுவதும் என் உடல்நலம் பற்றியது அல்ல.(பைபாஸ் சர்ஜரி நடந்தும்கூட); குடும்பம் பற்றியும் இல்லை. என் மனைவி இல்லை, மக்கள் அவரவர்கள் வேலை நிமித்தம் வெளியிடங்களில் உள்ளார்கள். என் குடும்பம் நான் இணைந்துள்ள 'பாரதி இயக்கம்' மட்டுமே. இளைஞர்களின் எதிர்காலம் இப்போதைய அரசியல், சமூக நிலைமைகள் காரணமாக இருண்டு விடக்கூடாதே என்ற கவலை எனக்குண்டு. எங்கள் இயக்கம் மூலம் இளைஞர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். என் குடும்பம் பெரிசு. அதனால் என் வயசும் சிறிசு. மனத்தில்தான் முதுமை, அது சிலருக்கு வருவதில்லை. அருமையான பதிவினைத் தந்த கத்தார் கண்ணனுக்கு நன்றி. அதனை வெளியிட்ட ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  7. //////Blogger Thanjavooraan said...
    அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, கத்தார் கண்ணன் சீத்தாராமன் மனிதனின் வயதுக்குத் தக்கபடி அவர்களுடைய கவலைகள் ஆதங்கங்கள் பற்றி மிக அருமையாகக் குறிப்பிட்டுவிட்டு 70ஐக் கடந்த 'பெரிசுகளின்' பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை என்பது போல குறிப்பிட்டிருந்தார். மிகவும் சரி. அது பெரும்பாலான, ஏன்? ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தக்கூடியதே. ஆனால் என்னைப் போன்ற சிலர் (என் வயது 74) வயதைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. எனது 40 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். என் கவலை முழுவதும் என் உடல்நலம் பற்றியது அல்ல.(பைபாஸ் சர்ஜரி நடந்தும்கூட); குடும்பம் பற்றியும் இல்லை. என் மனைவி இல்லை, மக்கள் அவரவர்கள் வேலை நிமித்தம் வெளியிடங்களில் உள்ளார்கள். என் குடும்பம் நான் இணைந்துள்ள 'பாரதி இயக்கம்' மட்டுமே. இளைஞர்களின் எதிர்காலம் இப்போதைய அரசியல், சமூக நிலைமைகள் காரணமாக இருண்டு விடக்கூடாதே என்ற கவலை எனக்குண்டு. எங்கள் இயக்கம் மூலம் இளைஞர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். என் குடும்பம் பெரிசு. அதனால் என் வயசும் சிறிசு. மனத்தில்தான் முதுமை, அது சிலருக்கு வருவதில்லை. அருமையான பதிவினைத் தந்த கத்தார் கண்ணனுக்கு நன்றி. அதனை வெளியிட்ட ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றி.//////

    வயதுக்குத்தக்கபடி உள்ள பிரச்சினைகளை குறிப்பிட்டு அடியவன்தான் எழுதினேன்.
    உங்களுக்கு மனதில் எந்தப் பிரச்சினைகளும் இல்லாதது குறித்து மிக்க மகிழ்ச்சி. அது இறையருள்!
    இன்றுபோல் என்றும் வாழ்க! நன்றி!

    ReplyDelete
  8. அய்யா,

    தினமும் நமது நாட்டில் அரசியல் வாதிகள் செய்யும் அக்கிரமங்களை பார்க்கும் போது நமது நாடு சூப்பர் பவர் ஆக வருமா என்று சந்தேகம் வருவதை தடுக்க முடிய வில்லை. அதையும் மீறி நமது நாடு முன்னேறும் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.

    அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  9. Dear Sir

    Good Morning.

    kelviyum badhilum arumai sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  10. [[[மதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.]]]

    இந்த வாத்தியாரிடம் எனக்குப் பிடித்ததே இது மாதிரியான எளிமையான விளக்கங்களால் புரிய வைப்பதுதான்..!

    நன்றி வாத்தியாரே..!

    ReplyDelete
  11. /////venkatesan.P said..
    அய்யா,
    தினமும் நமது நாட்டில் அரசியல் வாதிகள் செய்யும் அக்கிரமங்களை பார்க்கும் போது நமது நாடு சூப்பர் பவர் ஆக வருமா என்று சந்தேகம் வருவதை தடுக்க முடிய வில்லை. அதையும் மீறி நமது நாடு முன்னேறும் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.
    அன்புடன்
    வெங்கடேசன்////

    நம்பிக்கையோடு இருங்கள்.
    காலம் ஒருநாள் மாறும்.
    காட்சிகள் அனைத்தும் அரங்கேறும்!

    ReplyDelete
  12. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning.
    kelviyum badhilum arumai sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  13. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[மதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.]]]
    இந்த வாத்தியாரிடம் எனக்குப் பிடித்ததே இது மாதிரியான எளிமையான விளக்கங்களால் புரிய வைப்பதுதான்..!
    நன்றி வாத்தியாரே..!/////

    எல்லாம் உங்களுக்காகத்தான் உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  14. உணவுப்பொருள்களின் விலையேற்றம் சமூக எழுச்சியை ஏற்படுத்தும். 80 சதவிகித செல்வம் 20 சதவிகித மக்களிடம் இருக்கும் போது பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளில் புரட்சி ஏற்பட்டது. உணவு பற்றாக்குறை தான் அடிப்படை காரணம்.அப்போது ஏற்படும் அரசியல் சூழ்நிலை நாட்டின் வளர்ச்சியை சீர் குலைக்கும். சரியான தலைமையில்லாமல் நம் நாடு முன்னேறும் என்பது வெறும் கனவு தான்.

    ReplyDelete
  15. வாத்தியார் ஐயா வணக்கம்

    இல்லறத்தில் உள்ளவர்கள்
    சரிரத்தால் பிரம்மசாரியத்தை கடைபிடிப்பவர்கள்
    கல்யாணத்திற்கு முன்னர் மனதை நல்ல முறையில் வைத்து கொண்டு

    (நற்காரியங்கள் செய்து கொண்டு, நம்மலுடைய இந்த பிறப்பில் நம்மளால் இயன்ற வரை முன்னுக்கு வர எல்லா வழிகளிளையும் போராடியும் எல்லாவற்றிக்கு மேலாக
    தெய்வ சிந்தனையுடன் இருக்கும் நபர்கள் )
    கல்யாணம் செய்தால் தனக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகள் ஆக பிறக்கும் என்று பிறர் சொல்ல கேள்வி பட்டது உண்டு இது நடைமுறை உண்மையா ?

    ஐயாக்களுடைய கருக்கதை அறிய மாணவன்

    ( மகாபாரதத்தில் அபிமன்யு தனது தாயின் வயிற்றில் உள்ளபொழுது வில் வித்தையை படித்தார் அல்லவா அதனை போல்)

    ReplyDelete
  16. ஐயா!
    தாங்கள் இங்கு எழுத்தின் மூலம்
    கொடுத்தது அனைத்தும் அப்படியே
    நடைபெற
    {தமிழ் மனம் இல்லாத ஊரில்
    (ரத்னகிரி மாவட்டம், சிப்லூன் )
    பாலசுப்ரமணியனின் நாமத்துடன் வந்து

    "அக்னிஹோத்ர பூஜை" யின் மகிமையை சொல்லி எம்மையும்
    பூஜைக்கு அழைத்து சென்று பூஜையும் செய்ய வைத்து முடிந்த
    வரை நல்வழி படித்தியது போல }

    நல்ல உள்ளங்களின் நல்ல எண்ணம்கள் இனிதே நடக்க
    எம் மூல குருநாதர் " பாலதண்டாயுதபானி தெய்வத்தை"! வேண்டுகின்றேன் ஐயா


    >>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<

    இந்தியா! உலகையே ஆளப்போவது என்னவோ உண்மை!

    நாஸ்ட்ரடாமஸ் நிறைய நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
    மூன்று கடல் சூழ்ந்த நாட்டில்,(இந்தியா) தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் என்று எழுதிவைத்துள்ளார்.

    ReplyDelete
  17. வகுப்புக்கு வெளியே நின்று படிக்கும் தோழர்.கணபதி நடராஜ் சொன்ன தீட்சை விவரங்கள் இந்து மத சைவ சமயத்தினருக்கு . .

    அது போல
    வைனவர்களுக்கு . .
    சங்கம் சக்ரம் பதித்துக் கொள்வது முதல் வைகுண்ட ப்ராப்தி வரையில் . .

    கிருத்துவர்களுக்கு . .
    ஞான ஸ்னானம் முதல் நன் வரையில்

    என அவரவர்கள் மார்க்கத்தில் வைத்திருக்கிறார்கள் . .

    உன்மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற ராமன் அப்துல்லா திரைப்பாடலினை வைத்து சிந்தித்தால் சித்தாந்த நெறி சொல்லும்

    சரியை கிரியை யோகம் மற்றும் ஞானம் என்ற வழியில்
    எடுத்த இந்த பிறவியிலேயே முத்தி கிட்டும் என்பதனை விளக்கி வரும் சிவஞான சித்தியாரின் ஆசிரியர் அருள்நந்தி சிவம் வடித்த பாடலினை வாத்தியாரின் வகுப்பறையில் இங்கு பதிவு செய்கிறேன்..

    சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்திச்

    "செனனம் ஒன்றிலே சீவன் முத்தாராக வைத்து"

    ஆண்டு மலம் கழுவி ஞானவாரி மடுத்து
    ஆனந்தம் பொழிந்து
    "வரும் பிறப்பை அறுத்து.." முந்தாந்தப் பாதமலர்க்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம் மூர்க்கர் ஆகி பித்தாந்தாத பெரும் பிதற்ற பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி . .-அருள்நந்தி சிவம் (சிவஞானசித்தியார்)

    நாம் முயற்சி எடுத்து . .
    ஞானம் பெறுவது . .

    பக்குவம் வரும் போது . .
    திருவருளே நம்மை தேடிவந்து..
    நல்ல குருவை காட்டிக் கொடுத்து . .
    ஞானவடிவினனாய் (மணிவாசக பெருந்தகை போல)செய்வது என
    இருவேறு நிலை உண்டு . .

    எல்லாம் திருவருள் . .

    "சிவாயநம என சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.." ஔவையார் (மூதுரை)

    "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" -திருநாவுக்கரசர் (தேவாரம்)

    "சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட அத்ன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே"-மாணிக்கவாசகர் (திருவாசகம்)

    திலகதி தாயார் தன் சகோதரர் திருநாவுக்கரசர் சமன் சமயத்திலிருந்து சைவம் சேரும் வரை பல ஆண்டுகள் பிரார்த்ணையுடன் காத்திருந்து போல்

    அந்த பழினியப்பன் வாத்தியாரை இந்தப்பக்கம் திரும்ப வைக்கும் வரை வேண்டுதலுடன் காத்திருக்கிறோம். .

    ReplyDelete
  18. Arbia also Peninsula, Koria also Penninsula, Itally also pennin sula,

    With the present generation of ugly politians from President to the Vattam and Circles in local level its hard to belive India to become a world super power. even we are ready to accept the Alternative corrupted politian instead of fighting against the corruption.

    ReplyDelete
  19. அன்புடன் வணக்கம் உங்களின் பொன்னான நேரத்தை ஒதிக்கி எனது கேள்விக்கு பதில தந்தமைக்கு மிக மிக நன்றி!! உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு என்பது !!உபதேச தீட்சை நயன தீட்ச ஷ்பரிஷ தீட்ச... மானச தீட்சை!!!!! இன்னும் கூட உதாரணங்களுடன் விளகலாம்!!! """ தயவு செய்து விளக்கலாமா""" என்று கேட்டது கிரக நிலைகளை""!!! எனக்கு புரிஉம்படி விளக்கி உள்ளீர்கள் நன்றி!!அது போக நான் மிகவும் கடையானவன்!!என்னிடம் மன்னிப்பு என்று கேட்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிகிறது !!!! மீண்டும் நன்றி கூறிகொள்கிறேன்.. ஏதேனும் அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு இருந்தால் நீங்கள் தயவு கூர்ந்து மன்னித்து கொள்க !!

    ReplyDelete
  20. //////krish said...
    உணவுப்பொருள்களின் விலையேற்றம் சமூக எழுச்சியை ஏற்படுத்தும். 80 சதவிகித செல்வம் 20 சதவிகித மக்களிடம் இருக்கும் போது பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளில் புரட்சி ஏற்பட்டது. உணவு பற்றாக்குறை தான் அடிப்படை காரணம்.அப்போது ஏற்படும் அரசியல் சூழ்நிலை நாட்டின் வளர்ச்சியை சீர் குலைக்கும். சரியான தலைமையில்லாமல் நம் நாடு முன்னேறும் என்பது வெறும் கனவு தான்./////

    சரியான தலைமை வந்து அனைத்தையும் சரி செய்யப்போகிறது சாமி. நம்பிக்கையோடு காத்திருங்கள்

    ReplyDelete
  21. //////kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்
    இல்லறத்தில் உள்ளவர்கள்
    சரிரத்தால் பிரம்மசாரியத்தை கடைபிடிப்பவர்கள்
    கல்யாணத்திற்கு முன்னர் மனதை நல்ல முறையில் வைத்து கொண்டு
    (நற்காரியங்கள் செய்து கொண்டு, நம்மலுடைய இந்த பிறப்பில் நம்மளால் இயன்ற வரை முன்னுக்கு வர எல்லா வழிகளிளையும் போராடியும் எல்லாவற்றிக்கு மேலாக தெய்வ சிந்தனையுடன் இருக்கும் நபர்கள் )
    கல்யாணம் செய்தால் தனக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகள் ஆக பிறக்கும் என்று பிறர் சொல்ல கேள்வி பட்டது உண்டு இது நடைமுறை உண்மையா?
    ஐயாக்களுடைய கருக்கதை அறிய மாணவன்
    ( மகாபாரதத்தில் அபிமன்யு தனது தாயின் வயிற்றில் உள்ளபொழுது வில் வித்தையை படித்தார் அல்லவா அதனை போல்)/////

    முதல் மூன்று யுகத்தில் நடந்திருக்கலாம். கலியுகத்தில் நீங்கள் நினைப்பதெல்லாம் அல்லது சொல்வதெல்லாம் சாத்தியப்படாது!

    ReplyDelete
  22. //////kannan said...
    ஐயா!
    தாங்கள் இங்கு எழுத்தின் மூலம் கொடுத்தது அனைத்தும் அப்படியே நடைபெற {தமிழ் மனம் இல்லாத ஊரில்
    (ரத்னகிரி மாவட்டம், சிப்லூன் ) பாலசுப்ரமணியனின் நாமத்துடன் வந்து "அக்னிஹோத்ர பூஜை" யின் மகிமையை சொல்லி எம்மையும் பூஜைக்கு அழைத்து சென்று பூஜையும் செய்ய வைத்து முடிந்த
    வரை நல்வழி படித்தியது போல }
    நல்ல உள்ளங்களின் நல்ல எண்ணம்கள் இனிதே நடக்க எம் மூல குருநாதர் " பாலதண்டாயுதபானி தெய்வத்தை"! வேண்டுகின்றேன் ஐயா/////

    ஆகா, வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும்!

    ReplyDelete
  23. /////iyer said...
    வகுப்புக்கு வெளியே நின்று படிக்கும் தோழர்.கணபதி நடராஜ் சொன்ன தீட்சை விவரங்கள் இந்து மத சைவ சமயத்தினருக்கு .
    அது போல வைனவர்களுக்கு . .சங்கம் சக்ரம் பதித்துக் கொள்வது முதல் வைகுண்ட ப்ராப்தி வரையில் . .
    கிருத்துவர்களுக்கு . .
    ஞான ஸ்னானம் முதல் நன் வரையில் என அவரவர்கள் மார்க்கத்தில் வைத்திருக்கிறார்கள் . .
    உன்மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற ராமன் அப்துல்லா திரைப்பாடலினை வைத்து சிந்தித்தால் சித்தாந்த நெறி சொல்லும்
    சரியை கிரியை யோகம் மற்றும் ஞானம் என்ற வழியில் எடுத்த இந்த பிறவியிலேயே முத்தி கிட்டும் என்பதனை விளக்கி வரும் சிவஞான சித்தியாரின் ஆசிரியர் அருள்நந்தி சிவம் வடித்த பாடலினை வாத்தியாரின் வகுப்பறையில் இங்கு பதிவு செய்கிறேன்.. சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
    "செனனம் ஒன்றிலே சீவன் முத்தாராக வைத்து"
    ஆண்டு மலம் கழுவி ஞானவாரி மடுத்து
    ஆனந்தம் பொழிந்து "வரும் பிறப்பை அறுத்து.." முந்தாந்தப் பாதமலர்க்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம் மூர்க்கர் ஆகி பித்தாந்தாத பெரும் பிதற்ற பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி . .-அருள்நந்தி சிவம் (சிவஞானசித்தியார்)
    நாம் முயற்சி எடுத்து . . ஞானம் பெறுவது . . பக்குவம் வரும் போது . .
    திருவருளே நம்மை தேடிவந்து.. நல்ல குருவை காட்டிக் கொடுத்து . .
    ஞானவடிவினனாய் (மணிவாசக பெருந்தகை போல)செய்வது என
    இருவேறு நிலை உண்டு . . எல்லாம் திருவருள் . .
    "சிவாயநம என சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.." ஔவையார் (மூதுரை)
    "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" -திருநாவுக்கரசர் (தேவாரம்)
    "சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட அத்ன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே"-மாணிக்கவாசகர் (திருவாசகம்)
    திலகவதி தாயார் தன் சகோதரர் திருநாவுக்கரசர் சமன் சமயத்திலிருந்து சைவம் சேரும் வரை பல ஆண்டுகள் பிரார்த்ணையுடன் காத்திருந்து போல்
    அந்த பழனியப்பன் வாத்தியாரை இந்தப்பக்கம் திரும்பவைக்கும் வரை வேண்டுதலுடன் காத்திருக்கிறோம். .//////

    எல்லாம் திருவருள் என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள். பழநிஅப்பன் உத்தரவும் அப்படியே திருவருள்தான்!

    ReplyDelete
  24. //////Ram said...
    Arbia also Peninsula, Koria also Penninsula, Itally also pennin sula,
    With the present generation of ugly politians from President to the Vattam and Circles in local level its hard to belive India to become a world super power. even we are ready to accept the Alternative corrupted politian instead of fighting against the corruption.///////

    நீங்கள் வருத்தமுடன் சொல்லுகின்ற இந்த ஊழல்கள் எல்லாம் இந்தியா சூப்பர் பவராகும் போது ஒழிக்கப்பட்டுவிடும்! அதற்குரிய தலைலவன் வந்து சேர்வான். எங்கே வானத்தில் இருந்தா? இல்லை நம் இந்திய மண்ணில் இருந்துதான்!

    ReplyDelete
  25. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம் உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனது கேள்விக்கு பதில தந்தமைக்கு மிக மிக நன்றி!! உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு என்பது !!உபதேச தீட்சை நயன தீட்ச ஷ்பரிஷ தீட்ச... மானச தீட்சை!!!!! இன்னும் கூட உதாரணங்களுடன் விளகலாம்!!! """ தயவு செய்து விளக்கலாமா""" என்று கேட்டது கிரக நிலைகளை""!!! எனக்கு புரியும்படி விளக்கி உள்ளீர்கள் நன்றி!!அது போக நான் மிகவும் கடையானவன்!!என்னிடம் மன்னிப்பு என்று கேட்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிகிறது !!!! மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.. ஏதேனும் அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு இருந்தால் நீங்கள் தயவு கூர்ந்து மன்னித்து கொள்க !!//////

    அதெல்லாம் பரவாயில்லை. கடையானவன் மேலானவன் என்று யாரும் கிடையாது. அனைவரும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337. புரியும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  26. அன்பின் வாத்தியாரே...

    வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

    வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

    நன்றி.

    நட்புடன்,
    சே.குமார்.

    http://vayalaan.blogspot.com

    ReplyDelete
  27. அன்புடன் திரு ஐயர் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய கேள்வி எந்த மாதிரி கிரகஅமைப்பு
    அமைப்பு இருந்தால் முக்தி ஞானம கிடைக்கும் என்பதே !! ஆசிரியர் அவர்களும் எட்டாம் வீடு...12... வீடு தீய கிரகங்கள் இருந்தால் கிடைக்கும் என்பது அதுவும் லச்சதில் ஒருவருக்குதான் அது போல் அமையும் என்பது .!!. தாங்கள் எடுத்து கூறிய !விளக்கங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  28. அந்த காலத்தில் சப்த ரிஷிகள், பிரம்ம ரிஷிகள் என்று இருந்தவர்கள் கூட இல்லறத்தில் நல்லறம் கண்டு குழந்தைகள் தங்கள் வம்சத்தை விருத்தி செய்திருக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால் துறவறம், சந்நியாசம், முற்றும் துறப்பது என்று ஏதேதோ சொல்கிறீகள். அப்படி இருந்தால் பிரம்ம ரிஷிகளை விட மேலான நிலையை அடைந்து விட முடியுமா. உருப்படியாக வேறு வேலை இருந்தால் பாருங்கள். கடவுள் அவதாரங்கள் கூட இல்லறத்தைதான் கடை பிடித்து வந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  29. வ்ழக்கம் போல் உங்கள் பாணியில்
    நச்சுனு பதில்கள்

    ReplyDelete
  30. ////hamaragana said...
    அன்புடன் திரு ஐயர் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய கேள்வி எந்த மாதிரி கிரகஅமைப்பு
    அமைப்பு இருந்தால் முக்தி ஞானம கிடைக்கும் என்பதே !! ஆசிரியர் அவர்களும் எட்டாம் வீடு...12... வீடு தீய கிரகங்கள் இருந்தால் கிடைக்கும் என்பது அதுவும் லச்சதில் ஒருவருக்குதான் அது போல் அமையும் என்பது .!!. தாங்கள் எடுத்து கூறிய !விளக்கங்களுக்கும் நன்றி/////

    உங்களின் ஆர்வத்திற்கும் தேடலுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  31. ///ananth said...
    அந்த காலத்தில் சப்த ரிஷிகள், பிரம்ம ரிஷிகள் என்று இருந்தவர்கள் கூட இல்லறத்தில் நல்லறம் கண்டு குழந்தைகள் தங்கள் வம்சத்தை விருத்தி செய்திருக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால் துறவறம், சந்நியாசம், முற்றும் துறப்பது என்று ஏதேதோ சொல்கிறீகள். அப்படி இருந்தால் பிரம்ம ரிஷிகளை விட மேலான நிலையை அடைந்து விட முடியுமா. உருப்படியாக வேறு வேலை இருந்தால் பாருங்கள். கடவுள் அவதாரங்கள் கூட இல்லறத்தைதான் கடை பிடித்து வந்திருக்கிறார்கள்.//////

    “நீங்கள் குறிப்பிட்டுள்ள சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) எல்லாம் என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட மேட்டர்கள். அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என்று பதிவில் எழுதியிருக்கிறேன் சாமி!
    எனக்கு அதிலெல்லாம் ஈடுபாடு இல்லை. பதிவில் அதைப்பற்றிக் கேள்வி கேட்டுவரும் அன்பர்கள் இதை உணரவேண்டும்!

    ReplyDelete
  32. ////INDIA 2121 said...
    வ்ழக்கம் போல் உங்கள் பாணியில்
    நச்சுனு பதில்கள்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. /////சே.குமார் said...
    அன்பின் வாத்தியாரே...
    வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.
    வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/
    நன்றி.
    நட்புடன்,
    சே.குமார்.
    http://vayalaan.blogspot.com///////

    பார்த்து அதில் பின்னூட்டமும் போட்டுவிட்டேன் நண்பரே! நன்றி

    ReplyDelete
  34. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10
    பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன.

    ///"மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் "////
    மகிழ்ச்சியான செய்தி.
    நன்றி

    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-19

    ReplyDelete
  35. அய்யா,உங்கள் கருத்து வேண்டி என் வலைப் பதிவு 'வரமும் சாபமும்'
    நன்றி
    வேதாந்தி

    ReplyDelete
  36. //(யாரப்பா அங்கே? நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு வந்து உட்காரவை)//

    நாங்க அடிக்கடி (கூகுள் ரீடர்)ஜன்னல் வழியா பாக்கரவங்களாச்சே:))

    ReplyDelete
  37. வணக்கம் ஐயா.
    நீண்ட நாட்களுக்கு பிறகு சேர்மராஜ்.
    நலம்; நலமறிய ஆவல்.
    நாஸ்ட்ரடாமஸ் பற்றிய மேலும் சில தகவல்கள். இதோ சுட்டி

    ReplyDelete
  38. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10
    பதில்கள் நன்றாகவும், சிறப்பாகவும் உள்ளன.
    ///"மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் "//// மகிழ்ச்சியான செய்தி.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. //////வெட்டிப்பேச்சு said...
    அய்யா,உங்கள் கருத்து வேண்டி என் வலைப் பதிவு 'வரமும் சாபமும்'
    நன்றி
    வேதாந்தி/////

    சுட்டி எங்கே? where is the link URL?

    ReplyDelete
  41. /////ரசிகன் said...
    //(யாரப்பா அங்கே? நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு வந்து உட்காரவை)//
    நாங்க அடிக்கடி (கூகுள் ரீடர்)ஜன்னல் வழியா பாக்கரவங்களாச்சே:))

    வகுப்பறையில் குளிர் சாதனங்கள் பொருத்தி, ஜன்னல்களை எல்லாம் மூடுவதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன்:-))))

    ReplyDelete
  42. ////tamiltemples said...
    வணக்கம் ஐயா.
    நீண்ட நாட்களுக்கு பிறகு சேர்மராஜ்.
    நலம்; நலமறிய ஆவல்.
    நாஸ்ட்ரடாமஸ் பற்றிய மேலும் சில தகவல்கள். இதோ சுட்டி////////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  43. வகுப்பறையில் குளிர் சாதனங்கள் பொருத்தி, ஜன்னல்களை எல்லாம் மூடுவதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன்-///அன்புடன் வணக்கம்
    """கண்டிபின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை"" என்றுதானே நாங்கள் வெளியில் நின்று பாடம் கேட்கிரோம் .இப்பிடி தீடிரென்று வகுப்பறை க்கு கண்ணாடி ஜன்னல் போட்டு குளிர் சாதனம் செய்து விட்டால் எங்களால் ஏகலைவன் போன்று படிக்கச் முடியுமா ? ((ஆசரியர் உடனே தட்சிணை கேட்டு விடக்கூடாது))) ஆசரியர் கொஞ்சம் கருணை காட்டுங்கள் நாங்கள் வெளிய்ல் நின்று படித்து விட்டு போகிறூமே!!! :

    ReplyDelete
  44. /////hamaragana said...
    வகுப்பறையில் குளிர் சாதனங்கள் பொருத்தி, ஜன்னல்களை எல்லாம் மூடுவதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன்-///அன்புடன் வணக்கம்
    """கண்டிபின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை"" என்றுதானே நாங்கள் வெளியில் நின்று பாடம் கேட்கிரோம் .இப்பிடி தீடிரென்று வகுப்பறை க்கு கண்ணாடி ஜன்னல் போட்டு குளிர் சாதனம் செய்து விட்டால் எங்களால் ஏகலைவன் போன்று படிக்கச் முடியுமா ? ((ஆசரியர் உடனே தட்சிணை கேட்டு விடக்கூடாது))) ஆசரியர் கொஞ்சம் கருணை காட்டுங்கள் நாங்கள் வெளிய்ல் நின்று படித்து விட்டு போகிறூமே!!! /////

    இணையவகுப்பில் ஏது வெளியிடம் அல்லது உள்ளிடம்? மாற்றாந்தாய் மகன் மனப்பான்மையுடன் ஏன் அப்படி கதவிற்கு வெளியே அல்லது ஜன்னலுக்கு வெளியே என்று எழுதுகிறீர்கள்? அது தவறில்லையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com