மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.6.18

கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?


கடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை?

"தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை" 
             
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை.
 பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.

ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.

''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.  அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.

சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.

ஆண்டுகள் ஓடின!

ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!
''எனக்கு ஆசையே இல்லை.  பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல்.

சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார்.
''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்!

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.

''எனக்கு ஆசையே இல்லை...''- வழக்கம்போல் கேட்டது குரல்!

''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி.

''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.

ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.

கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்... நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.

இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''

''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''

''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.

அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார்.

உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது.

''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார்.

''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க.   கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.

இந்த கதை நமக்கும் பொருந்தலாம்!!!!

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே!
    தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்
    வியப்புக் கதைகளை வேடிக்கையாய்ச் சொல்வார்கள்! படித்திருக்கிறேன்,டிவியிலும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!அவைகள் அமர கதைகள்! ஒவ்வொன்றிலும் நீதி இருக்கும்.
    அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற
    வேண்டிய கருத்துடன் கூடியவையாக
    இருக்கும்! இன்றையப் பதிவில் வந்துள்ள கதையும் பெரும்பான்மையான மனிதர்களின்
    விந்தையான மனநிலையை விளாசி
    இருக்கிறார்! மிகவும் சுவாரசியமான
    கதை, வாத்தியாரையா!

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    நகைச்சுவை உடன் கூடிய கருத்து மிக அருமை
    நன்றி

    கண்ணன்

    ReplyDelete
  3. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்
    வியப்புக் கதைகளை வேடிக்கையாய்ச் சொல்வார்கள்! படித்திருக்கிறேன்,டிவியிலும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!அவைகள் அமர கதைகள்! ஒவ்வொன்றிலும் நீதி இருக்கும். அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கருத்துடன் கூடியவையாக
    இருக்கும்! இன்றையப் பதிவில் வந்துள்ள கதையும் பெரும்பான்மையான மனிதர்களின் விந்தையான மனநிலையை விளாசி
    இருக்கிறார்! மிகவும் சுவாரசியமான கதை, வாத்தியாரையா!

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  5. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    நகைச்சுவை உடன் கூடிய கருத்து மிக அருமை
    நன்றி
    கண்ணன்////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger kiran said...
    Thank you for sharing such useful and informative article. keep sharing/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Excellent/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com