மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.6.18

முக்காலமும் அறியும் ஆற்றல் வேண்டுமா? இதைப் படியுங்கள்!


முக்காலமும் அறியும் ஆற்றல் வேண்டுமா? இதைப் படியுங்கள்!

*பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படி கிடைத்தது....?*

*முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன்  செல்லவில்லை ?*

பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை
தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து  தின்று விடும்படியும் , அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல்
கிடைக்கும் என்று சொல்லி  விட்டு உயிர் துறக்கிறார்....

பாண்டவர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண  பரமாத்மா வருகிறார்....

விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்....

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது  பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம்  என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்....

மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலு விட்டுச் செல்கிறார்கள்...

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும்
உடைத்து  தின்றுவிடுகிறான்...

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது....

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே  போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்....

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்..

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது..அதுமற்றவர்கள்  கண்களுக்கு தெரியவில்லை..

சகாதேவனுக்கு மட்டும் தெரிகிறது....

கிருஷ்ணரும் மிக  களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்...

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா . எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள்...அவர்கள் களைப்பாவது  நியாயம்...உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய் என்று கேட்கிறான்...

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது....

சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்....

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்...இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்....

தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சத்தியமும் வாங்கிக்  கொள்கிறார்.

சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்....

ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை
மட்டும் சொல்கிறான்...

மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார். அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல்  பங்கேற்கிறார்....

சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன்  ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே
விடை....

பாரதத்தில் கண்ணன் மாயாவி என்பதில்  எள்ளளவும் சந்தேகமில்லை.
--------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


7 comments:

  1. வணக்கம் குருவே!
    மஹாபாரதக் கதைகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், சுவையும் கொண்டவை!கிருஷ்ணாவதாரம் முழுவதும் அவரின் லீலைகள் சிறப்பாகவே
    சொல்லப் பட்டுள்ளன! இதே சஹாதேவன் மூலமாக, பீஷ்மர் பிதாமகர் இறக்கும் தறுவாயில் கூறிய "விஷ்ணு சஹஸ்ரநாமத்தை"
    உலகிற்குத் தெரிய வைக்கிறார் என்கின்ற கதையும் உண்டு!
    இன்றைய பதிவு சிறப்பான ஒன்று!
    அது சரி ஐயா, எதற்கு பாகுபலி ஃபோட்டோவை தலைப்பில் இணைத்துள்ளீர்கள்!?

    ReplyDelete
  2. Good morning sir new information in bagavat gita thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Very good Sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மஹாபாரதக் கதைகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், சுவையும் கொண்டவை!கிருஷ்ணாவதாரம் முழுவதும் அவரின் லீலைகள் சிறப்பாகவே சொல்லப் பட்டுள்ளன! இதே சஹாதேவன் மூலமாக, பீஷ்மர் பிதாமகர் இறக்கும் தறுவாயில் கூறிய "விஷ்ணு சஹஸ்ரநாமத்தை"உலகிற்குத் தெரிய வைக்கிறார் என்கின்ற கதையும் உண்டு!///

    நன்றி கூகிளில் தேடும்போது, சகாதேவன் என்ற பெயரில் அது கிடைத்தது. இப்போதுதான் உற்றுக் கவனித்தேன். நீங்கள் சொல்வது சரி. அதை நீக்கிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் ஐயா,
      தங்களின் உடனடி நடவடிக்கை ககு என் உளம் நிறைந்த
      நன்றி!

      Delete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir new information in bagavat gita thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com