மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.12.15

தியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்!

தியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்!

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம்
இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர்முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச்
சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர
அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை
வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.

கதை முடிந்தது.

ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ
வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

  1. vanakkam sir.super vilakkam.mahaangal always MAHAANGAL.andal rajasekaran

    ReplyDelete
  2. அருமை... பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!!!

    அப்பறம், அந்த பாப்கார்ன் பொட்டலம் தருவீர்கள்தானே!!!


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா
    உன்மைதான் ஐயா. நானும் இதை உனர்ந்தவன் தான்

    ReplyDelete
  4. /////Blogger lrk said...
    Ayya vanakkam
    Arumai ayya .
    Kannan/////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    very nice////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. Blogger Unknown said...
    vanakkam sir.super vilakkam.mahaangal always MAHAANGAL.andal rajasekaran/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமை... பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!!!
    அப்பறம், அந்த பாப்கார்ன் பொட்டலம் தருவீர்கள்தானே!!!
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.//////

    தந்தால் போயிற்று. சற்று பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  8. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    உன்மைதான் ஐயா. நானும் இதை உணர்ந்தவன் தான்/////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  9. குரு வந்தனம்.
    மிகவும் சுவையான பக்திப் பகிர்வு.
    வாத்தியாரின் தேர்வு என்றுமே முதல்நிலை தான்.

    ReplyDelete
  10. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    இன்றைக்கு லேட் அட்டெண்டன்ஸ்!
    ரமணமகரிஷி அவர்களைப் பற்றிய புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  11. Vanakkam ayya migavum arumaiyana Vazhikattuthal vazhga nalamudan

    ReplyDelete
  12. ////Blogger Shankar Ravi said...
    I need email lessons./////

    மின்னஞ்சல் பாடங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவில் சேர்த்துவிட்டேன். மொத்தம் உள்ள 900 பாடங்களில் அவைகளும் அடக்கம்!

    ReplyDelete
  13. ////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    மிகவும் சுவையான பக்திப் பகிர்வு.
    வாத்தியாரின் தேர்வு என்றுமே முதல்நிலை தான்.////

    நான் எளிமையான ஆசாமி. என்னை அதிகமாக புகழ்கிறீர்கள். இருந்தாலும் உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    இன்றைக்கு லேட் அட்டெண்டன்ஸ்!
    ரமணமகரிஷி அவர்களைப் பற்றிய புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  15. ////Blogger seenivasan said...
    good story
    thanks//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya migavum arumaiyana Vazhikattuthal vazhga nalamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. அய்யா வணக்கம், அருமையான அமிர்தம் பற்றி சொன்னீர், நன்றி.அன்புடன் சா. குமணன்

    ReplyDelete
  18. ////Blogger Kumanan Samidurai said...
    அய்யா வணக்கம், அருமையான அமிர்தம் பற்றி சொன்னீர், நன்றி.அன்புடன் சா. குமணன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குமணன்!

    ReplyDelete
  19. மிகவும் அருமை.
    நடைமுறைப்படுத்த மிகவும் பாடுபட வேண்டும்.
    கடினமான தத்துவத்தை சுலபமான முறையில் சொல்லகூடிய திறமை மகரிஷிகளுக்கு இறைவன் கொடுத்த வரம்.
    தாமதமாக கருத்து தெரிவித்ததற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com