மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.8.13

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

 

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

கவிநயம்

வியாபாரத்திற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது.வாழ்க்கைக்கு,
அதாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஐந்தொகை உண்டு.

ஒருவர் தான் பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று 30 ஆண்டுகள் பாடுபட்டு உழைத்துப் பணத்தைச் சேர்த்தார். தன்னுடைய 65ஆவது
வயதில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். என்ன மிஞ்சியது? அதாவது ஐந்தொகை என்ன?

அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு மிஞ்சியது. அதாவது தனது மனைவி மக்களுக்கு நன்றாகச் செலவழித்து, அவர்கள் விரும்பியபடி செலவழித்தது
போக மிஞ்சியது ஒரு வீடு மட்டும்தான். இந்திய மண்ணில் சேமிப்பாக போட்டு வைத்த பணத்தில் அடையாறில் 4 வீட்டு மனையில் வாங்கிய வீடு
ஒன்றும் மிஞ்சியது. மொத்தம் இரண்டு வீடுகள் மட்டுமே!

ஆனால் அதற்காக இந்திய மண்ணை விட்டுச் சென்றதால் இழந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், உறவுகள் என்று பல விஷயங்களை அவர்
இழந்துள்ளார். அந்த இழப்புக்களுக்கு மிஞ்சிய இரண்டு வீடுகளும் ஈடாகாது. அதுதான் அவருடைய அவலமான ஐந்தொகை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு கால கட்டத்தில் ஐந்தொகை ஒன்றைப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான்
தான் கற்றதும், பெற்றதும், அடைந்ததும், இழந்ததும் தெரியவரும்.

கவியரசர் கண்ணதாசன் இந்த ஐந்தொகையைப் பற்றித் தன்னுடைய கவிதை ஒன்றில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்

வாசித்துப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!
ஐந்தொகை

நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
    நிழலையான் காண வில்லை;
    நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
    நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
    கருத்திலே கண்ட தில்லை;
    கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
    தந்தமலை யரசி தாயே!

         -கவியரர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

10 comments:

  1. கைகால் விழுந்துபோய்க் கண் பஞ்சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
    சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;

    சக்தி மிக்க வரிகள்.....!

    ReplyDelete
  2. மும்பை ஸ்ரீ கனேஷ் அவர்களை
    முதலில் நினைவூட்டியது ஐந்தொகை

    நீண்ட நாட்களாக வகுப்பில் இல்லை எனினும்
    நினைவில் இருக்கும் ஆடிட்டர் அவர்

    கணக்கு பார்க்கும் உத்தியை
    கச்சிதமாய் சொன்னது சரி...

    தெரிந்து என்ன செய்ய என
    புரிந்தவர்கள் யோசிக்கின்றனர்

    சாப்பிட்ட 2 தோசைக்கு சந்தோஷபடனும்
    சாப்பிடாத பல அயிட்டத்தை எண்ணி வருந்தலாமா


    ReplyDelete
  3. உண்மைதான் வாத்தியார் ஐயா. நகர வாழ்க்கை போலத்தான் அமெரிக்க வாழ்க்கையும். உள்ளே சென்றால் சென்றதுதான். வெளியே வருவது மிகவும் சிரமம். இந்திய நகர வாழ்க்கையை விட அமெரிக்க வாழ்க்கை பல வசதிகளை கொண்டது என்றாலும் நமது சொந்தங்களை விட்டு விலகி வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஒரு காலத்தில் சொந்தங்களிலிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்று கருதிய காலம் உண்டு. ஆனால் சொந்தங்களின் அருமை இப்போதுதான் தெரிகிறது. ஒரு சமயத்தில் நாம் திரும்பி இந்தியா வர விரும்பினாலும் குழந்தைகள் வர விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து இந்தியா திரும்பியவர்கள் எல்லாம் தத்தம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் காலத்திற்கு முன் சென்றவர்களே. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து ஓரளவு விவரம் தெரிந்து விட்டால் நம்மை அவர்கள் திரும்பி இந்தியா வர அனுமதிப்பதில்லை. அவர்கள் பார்வையில் அதுவும் சரிதான். காத்து கொண்டிருக்கிறேன், என் பிள்ளைக்கு 25 வயது ஆகும் வரை. அதன் பின்னர் தமிழ் நாட்டில் அதுவும் தென் பகுதியில் ஒரு சிறிய நகரம் அல்லது கிராமத்தில் தான் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதி:-) எல்லாம் இறைவன் செயல்.

    ReplyDelete
  4. Respected Sir
    Itis totaly correct that nothing compensates the happiness to be with your family atleast when there is a funtion... I missed my own brother's wedding and so many cusin's weddings and other fuctions... but some time we can not come home even if we want... My astrologer told that I have a matru Shapam and cannot live in my own country even if I want to...hope there is a parikaram at least in my old age....

    ReplyDelete
  5. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    கைகால் விழுந்துபோய்க் கண் பஞ்சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
    சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    சக்தி மிக்க வரிகள்.....!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    மும்பை ஸ்ரீ கனேஷ் அவர்களை
    முதலில் நினைவூட்டியது ஐந்தொகை
    நீண்ட நாட்களாக வகுப்பில் இல்லை எனினும்
    நினைவில் இருக்கும் ஆடிட்டர் அவர்
    கணக்கு பார்க்கும் உத்தியை
    கச்சிதமாய் சொன்னது சரி...
    தெரிந்து என்ன செய்ய என
    புரிந்தவர்கள் யோசிக்கின்றனர்
    சாப்பிட்ட 2 தோசைக்கு சந்தோஷப்படனும்
    சாப்பிடாத பல அயிட்டத்தை எண்ணி வருந்தலாமா////

    ஆனால் பாழாய்ப்போன மனம் கேட்க மறுக்கிறதே! மனதைக் கட்டிப்போட ஏதாவது வேப்பிலை மந்திரம் உள்ளதா?

    ReplyDelete
  7. ////Blogger Ashok said...
    Simply Superb!////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  8. /////Blogger thozhar pandian said...
    உண்மைதான் வாத்தியார் ஐயா. நகர வாழ்க்கை போலத்தான் அமெரிக்க வாழ்க்கையும். உள்ளே சென்றால் சென்றதுதான். வெளியே வருவது மிகவும் சிரமம். இந்திய நகர வாழ்க்கையை விட அமெரிக்க வாழ்க்கை பல வசதிகளை கொண்டது என்றாலும் நமது சொந்தங்களை விட்டு விலகி வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஒரு காலத்தில் சொந்தங்களிலிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்று கருதிய காலம் உண்டு. ஆனால் சொந்தங்களின் அருமை இப்போதுதான் தெரிகிறது. ஒரு சமயத்தில் நாம் திரும்பி இந்தியா வர விரும்பினாலும் குழந்தைகள் வர விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து இந்தியா திரும்பியவர்கள் எல்லாம் தத்தம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் காலத்திற்கு முன் சென்றவர்களே. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து ஓரளவு விவரம் தெரிந்து விட்டால் நம்மை அவர்கள் திரும்பி இந்தியா வர அனுமதிப்பதில்லை. அவர்கள் பார்வையில் அதுவும் சரிதான். காத்து கொண்டிருக்கிறேன், என் பிள்ளைக்கு 25 வயது ஆகும் வரை. அதன் பின்னர் தமிழ் நாட்டில் அதுவும் தென் பகுதியில் ஒரு சிறிய நகரம் அல்லது கிராமத்தில் தான் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதி:-) எல்லாம் இறைவன் செயல்.////

    தினமும் ஒரு பத்து நிமிடம் எல்லாம் வல்லவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்!
    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!

    ReplyDelete
  9. ////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Itis totaly correct that nothing compensates the happiness to be with your family atleast when there is a funtion... I missed my own brother's wedding and so many cusin's weddings and other fuctions... but some time we can not come home even if we want... My astrologer told that I have a matru Shapam and cannot live in my own country even if I want to...hope there is a parikaram at least in my old age..../////

    நிச்சயம் அது நிறைவேறும். நம்பிக்கையோடு இருங்கள் கண்ணன்!
    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com