மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.5.13

Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?



Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?
 
Popcorn Post No.45


முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா?

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

  1. கரைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பின் கிரகனிலைப்படி எப்படியும் காசு கரைந்தேயாகும் என்று உறுதியாக சொன்ன விதமும் மனதில் படிந்து கொண்டது .தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  2. எனக்கு 12ல் எந்த கிரகமும் இல்லை என்று மகிழ்ச்சியடையவும் முடியாது. 12ல் இருக்கும் கிரகம் செய்ய வேண்டியதை 12ம் அதிபதியும் அவருடன் சேர்ந்த கிரகமும் செய்வார்களே. No way to escape.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    மிகவும் அருமையான பாடம்...
    அனுபவ உண்மை...

    ReplyDelete
  4. காலை வணக்கம் எத்தனை விதமான கரைப்பு

    8 வதாக உங்கள் வகுப்றை எங்கள் மனம் கரைந்து போவது

    பொட்டலம் நன்றாக இருந்தது அய்யா !

    ReplyDelete
  5. கறை பற்றி நினைப்பவருக்கும்
    கரை என்றதும் நிழலாடுவது நதிக்கரையே

    "வைகை கரை காற்றே நில்லு" என
    வலம் வந்த பாடல் நினைவே

    கரைப்பது எதற்காக என
    கரைந்தால் சுகம் தானே வரும் தானே

    சுவையை வழக்கம் போல்
    சுவைபட கரைத்துவிட்டீர் பார்கார்னிலும்

    ReplyDelete
  6. Good Morning Sir.

    For Dhanur and Muthuna Lagna 5th lord and 12th lord are same. You have already mentioned that they will do both duty. Is there any way we can find out which karahathuvam will dominate? Or both will be equal?

    Dallas Kannan

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்,

    12 வீட்டில் 4 கிரகம் இருந்தால், 4 கிரக மகா திசையிலும் பணம் கரையுமா ?

    ReplyDelete
  8. காலை வணக்கம் அய்யா ,
    12 ம் வீட்டை பற்றிய அருமையான பதிவிற்கு நன்றிகள் பல பல.

    "அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்."

    லக்ன அதிபதியும்( கும்பம் )12 ம் அதிபதியும் (மகரம் )ஒருவராக இருந்து , சனி திசை ஆரம்பித்திருக்கும் சமயம் என்றால் , சனி புக்தியில் பிற்பகுதி திசையில் மட்டும் மேற்கூறி படி
    இருக்குமா அல்லது சனி திசை 18 வருடத்தில் பிற்பகுதி 9 வருடத்தில் இருக்குமா ?

    12ம் வீட்டை( சனியின் சுய பரல் 2) 7 ம் அதிபதியாகிய சூரியன் (சுயபரல்கள் ஏழு )6 ம் வீட்டிலிருந்து ,7ம் பார்வையாக பார்கிறது. இதனால் நன்மை உண்டாகுமா?

    லக்ன அதிபதி தனது உச்ச வீட்டில்( 9ம் இடம் ) 2 பர‌ல்கள் மட்டுமே கொண்டுள்ளது.
    சனி அம்சத்தில் சொந்த வீட்டிலும் (கும்பம் ), ராசியில் உச்ச வீட்டிலும் இருந்தாலும்
    பரல்களுக்குத்தான் வலிமை அதிகமா?

    தயை கூர்ந்து என் கேள்விக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. ஐய்யா!வனக்கங்கள்.
    ”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பது முதுமொழி.அதிலும் 12ம் வீட்டில் நின்ற கிரகம் மட்டும் கரைக்குமா அல்லது 12ம் வீட்டு அதிபதியின் தசாவிலும் கரையுமா?
    ஒரு சுபகிரகம் அதுவும் தனகாரகனான குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தானா? உ-ம் கும்ப லக்னத்திற்கு 2/11ம் வீட்டதிபதியான குரு 12ம் வீடான மகரத்தில் அமர்ந்தால்?
    நன்றியுடன்
    -Peeyes

    ReplyDelete
  10. Dear Sir,

    பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

    Good.

    ReplyDelete
  11. நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி.

    ReplyDelete
  12. //////Blogger Ambal adiyal said...
    கரைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பின் கிரகனிலைப்படி எப்படியும் காசு கரைந்தேயாகும் என்று உறுதியாக சொன்ன விதமும் மனதில் படிந்து கொண்டது .தொடர வாழ்த்துக்கள் ஐயா//// .

    மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  13. /////Blogger Ak Ananth said...
    எனக்கு 12ல் எந்த கிரகமும் இல்லை என்று மகிழ்ச்சியடையவும் முடியாது. 12ல் இருக்கும் கிரகம் செய்ய வேண்டியதை 12ம் அதிபதியும் அவருடன் சேர்ந்த கிரகமும் செய்வார்களே. No way to escape.////

    ஆமாம். அதுதான் இன்னும் கஷ்டம்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  14. ////Blogger Prasanna Venkatesh said...
    வணக்கம் ஐயா,
    மிகவும் அருமையான பாடம்...
    அனுபவ உண்மை.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் எத்தனை விதமான கரைப்பு
    8 வதாக உங்கள் வகுப்பறை எங்கள் மனம் கரைந்து போவது
    பொட்டலம் நன்றாக இருந்தது அய்யா !////

    கரையும் மனம் மகிழ்ச்சியைக் கொடுக்குமே ராஜா! அதை எப்படி 12ல் சேர்ப்பது?

    ReplyDelete
  16. ////Blogger வேப்பிலை said...
    கறை பற்றி நினைப்பவருக்கும்
    கரை என்றதும் நிழலாடுவது நதிக்கரையே
    "வைகை கரை காற்றே நில்லு" என
    வலம் வந்த பாடல் நினைவே
    கரைப்பது எதற்காக என
    கரைந்தால் சுகம் தானே வரும் தானே
    சுவையை வழக்கம் போல்
    சுவைபட கரைத்துவிட்டீர் பார்கார்னிலும்/////

    நல்லது. சுவையாக இருந்தால் சரிதான்! எழுதிய எனக்கும் அதில் ஒரு திருப்தி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  17. ////Blogger Kannan said...
    Good Morning Sir.
    For Dhanur and Muthuna Lagna 5th lord and 12th lord are same. You have already mentioned that they will do both duty. Is there any way we can find out which karahathuvam will dominate? Or both will be equal?
    Dallas Kannan/////

    சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு உரிய காரகர்கள், பார்வையில் வைத்திருக்கும் கிரகங்கள், (அந்த வீடுகளுக்கு) பாபகர்த்தாரி யோகம் போன்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் வித்தியாசமாக இருக்கும். There is no fixed rule

    ReplyDelete
  18. ////Blogger சர்மா said...
    வணக்கம்////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சர்மாஜி!

    ReplyDelete
  19. ////Blogger eswari sekar said...
    vanakam sir../////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ///Blogger arumuga nainar said...
    ஐயா வணக்கம்,
    12 வீட்டில் 4 கிரகம் இருந்தால், 4 கிரக மகா திசையிலும் பணம் கரையுமா ?/////

    அது கிரக யுத்தக் கணக்கில் வருமே சுவாமி! அங்கே யார் வெற்றிக்கொடியுடன் இருக்கிறாரோ அவரிடம் (அவருடைய மகா திசையில்) மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  21. ////Blogger arul said...
    good post/////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  22. /////Blogger rajanblogs said...
    காலை வணக்கம் அய்யா ,
    12 ம் வீட்டை பற்றிய அருமையான பதிவிற்கு நன்றிகள் பல பல.
    "அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்."
    லக்ன அதிபதியும்( கும்பம் )12 ம் அதிபதியும் (மகரம் )ஒருவராக இருந்து , சனி திசை ஆரம்பித்திருக்கும் சமயம் என்றால் , சனி புக்தியில் பிற்பகுதி திசையில் மட்டும் மேற்கூறி படி இருக்குமா அல்லது சனி திசை 18 வருடத்தில் பிற்பகுதி 9 வருடத்தில் இருக்குமா?
    12ம் வீட்டை( சனியின் சுய பரல் 2) 7 ம் அதிபதியாகிய சூரியன் (சுயபரல்கள் ஏழு )6 ம் வீட்டிலிருந்து ,7ம் பார்வையாக பார்கிறது. இதனால் நன்மை உண்டாகுமா?
    லக்ன அதிபதி தனது உச்ச வீட்டில்( 9ம் இடம் ) 2 பர‌ல்கள் மட்டுமே கொண்டுள்ளது.
    சனி அம்சத்தில் சொந்த வீட்டிலும் (கும்பம் ), ராசியில் உச்ச வீட்டிலும் இருந்தாலும்
    பரல்களுக்குத்தான் வலிமை அதிகமா?
    தயை கூர்ந்து என் கேள்விக்கு மன்னிக்கவும்./////

    சொந்த ஜாதகத்தை வைத்துக் கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் சோப்புப் போட்டு அலசாமல் பதில் சொல்வது தவறாகிவிடும்!

    ReplyDelete
  23. /////Blogger GOWDA PONNUSAMY said...
    ஐய்யா!வணக்கங்கள்.
    ”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பது முதுமொழி.அதிலும் 12ம் வீட்டில் நின்ற கிரகம் மட்டும் கரைக்குமா அல்லது 12ம் வீட்டு அதிபதியின் தசாவிலும் கரையுமா?
    ஒரு சுபகிரகம் அதுவும் தனகாரகனான குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தானா? உ-ம் கும்ப லக்னத்திற்கு 2/11ம் வீட்டதிபதியான குரு 12ம் வீடான மகரத்தில் அமர்ந்தால்?
    நன்றியுடன்
    -Peeyes/////

    குடியிருப்பவரைப் பத்தித்தான் பேச்சு. வீட்டுக்காரரை ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?

    ReplyDelete
  24. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!
    Good./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  25. /////Blogger Ananthamurugan said...
    நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி./////

    எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  26. காகம் கரைவதும் போன்று, மனம் கரைவது பற்றி கூறினேன் -
    மன்னிக்கவும் நானும் 12ல் சேர்க்கவீில்லை

    ReplyDelete

  27. 12ம் வீட்டில் மறைவான எட்டாம் அதிபர் புதன் 1//12 குரிய சனி பகவான் எட்டாம் வீட்டில் மறைவு மற்றும் பரிவர்த்தனையில் இருநதாலும் புதன்மகாதசையில் படத்துவாரா ?

    ReplyDelete
  28. குடியிருப்பவரைப் பத்தித்தான் பேச்சு. வீட்டுக்காரரை ஏன் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?
    IF that is the case, It does not happen during the 12 lord Dasa? Only the dasa of the planet stay there?

    நல்லவேளை எனது வயித்தில் "புளியை கரைக்கபார்தீர்களே?".நமக்கு 12 ஆம் கிரகத்தின் தசா முடிந்தது.நன்றி./////

    எனக்கும் மகிழ்ச்சிதான்!
    It can happen during the planet's Budhi of other dasas, right?

    ReplyDelete
  29. ayya enakku 12 house il 30 paral ullathu...so virayam epdi irukkum sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com