மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.11

எப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நால்வரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து, பார்த்து மகிழுங்கள்!
 --------------------------------------------------------------------------------------
1
பாட்டி எழுதிய நாட்குறிப்பு!
Article by KMRK

நாட் குறிப்பு எழுதுவது ஒரு நல்ல பழக்கம். நான் செய்வதில்லை. என்ன காரணம் என்றால் நாம் என்ன ஏதாவது உல‌கம் போற்றும் செயல் புரிந்து புகழ் பெற்றவர்களா?தினமும் 'சாப்பிட்டேன், தூங்கினேன்' என்பதைத்தவிர வேறு என்ன எழுத முடியும் நம்மால் என்ற அல‌ட்சிய மனப்பான்மையே காரணம்.அல்லது சோம்பேறித்தனம்.அல்லது நாம் எழுதுவதை யாராவது படித்துவிட்டால் நம் ரகசியம், பலவீனம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம்.

புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சி நடந்தபோது ஆனந்தரெங்க‌ம் பிள்ளை என்று இருந்தார். அவ‌ர் துவிபாஷி. அதாவது மொழிபெயர்பாளார். இரண்டு மொழி தெரிந்ததால் ஆட்சியாளருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தினமும் நாட்குறிப்பு எழுதி வைத்தார்.அவ‌ர் அரசுக்கு இனக்கமாக இருந்ததால் அன்றைய பாண்டிச்சேரி அரசியல் முழுவதும் அவருடைய நாட்குறிப்பில் காணலாம். பிரான்ஸ் நாட்டு சரித்திரத்திற்கு ஆனந்தரெங்கம் பிள்ளை டயரி முக்கிய சான்றாக ஆகிவிட்டது. அதனால் அதனை அவர்கள் மொழிபெயர்த்து  வைத்துக்கொண்டார்கள். தமிழ் உரைநடைக்கு பிள்ளையின் டயரி ஒரு முன்னோடி.இணையத்தில் கூடக் கிடைக்கும். விருப்பம் இருப்போர் படிக்கலாம்.

சரி.குறைந்த படிப்பும், மொழி ஆற்றலும் இல்லாத ஒரு வீட்டுக் குடித்தனப் பெண்மணி தன் நினைவுகளை எழுதினால் எப்படி இருக்கும்? "இன்று கத்திரிக்காய் எண்ணெய் வதக்கல், வெந்தயக் குழம்பு, சீரக ரசம் சமைத்தேன்" என்றுதானே எழுதுவாள்?

அப்படியில்லாமல் தன் குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரு தன் வரலாறாக ஒரு மூதாட்டி எழுதியுள்ளாள்.அந்த வரலாற்றை அவருடைய 80 வயது மகன் இப்போது எடுத்து வெளியிட்டுள்ளார். 'மின்தமிழ்' என்ற கூகிள் குழுமத்தில் "அம்மாவின் சொற்படி ராஜு" என்று 65 பாகமாக வெளியிட்டுள்ளார்.

மகனின் புனைப்பெயர் இன்ன‌ம்பூரான். இன்னம்பூர் குடந்தைக்கு அருகில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.பெரியவர் இன்னம்பூரான் Additional Comptroller and Auditor General   (CAG)ஆகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். அந்தப் பதவி பற்றி இப்போது இந்தியாவில் உள்ள கிராம மக்கள் கூட அறிவார்கள்.ஸ்பெக்ட்ரம் என்றல் மூளை சி ஏ ஜி யுடன் உடனே முடிச்சுப் போடும்.

அந்தத் தாய் எழுதிய நினைவுக்குறிப்பில் அதி முக்கியமான குறிப்பினை உங்களுக்கு அளிக்கிறேன். அவருடைய இறை நம்பிக்கையால் அவருக்கு மன நிறைவு கிடைத்ததைப் பார்க்கிறோம். நாமும் அப்படிப்பட்ட உறுதியான‌ அசையாத‌ இறை நம்பிக்கையை அடையப் பாட்டியின் சொல்லைத் தட்டாமல் கேட்போம்.

இறுதியில் பாட்டி தன் இரண்டாவது பிள்ளைக்கு 'க்ரிணி' ஆபரேஷன் (kidney operation)பற்றி சொல்கிறார். மூத்த பிள்ளை கிட்னி கொடுத்ததைச் சொல்கிறார். அந்த மூத்த பிள்ளை நமது சி ஏ ஜி இன்ன்பூரார்தான். பெரியவர் இன்னம்பூரார் தற்போது இலண்டனில் இருக்கிறார்.நான் இலண்டனில் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்காமல் வந்துவிட்டோமே என்று மனம் இன்னும் கிடந்து அடித்துக்கொள்கிறது.

Over to Grandma!               
---------------------------------------------------------
*அற்புதம்!அற்புதம்! அற்புதமே!: அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009*

*உ*

*ஸ்ரீ:*

*எல்லாம் அவன் செயல்*

*கதை சுருக்கம்*

*எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா. இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன்' நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு' என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார்.

அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருண பகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான்?. 'எல்லாம் அவன் தான் கொடுக்கி றான்' என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக் கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள்.

அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப் படமாட்டார்.

மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து  வழி படுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள்.

எப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு.

அது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான்.

அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம்  கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.

நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து' நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற் றையும் காப்பாத்துகிறேன்' என்கிற மாதுரி கையைக் காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில்
சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல்பட்டு பலன் இரு(க்)கிறது.

நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன்.யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், 'நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் 'என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும்.

இன்னும் ஒரு அதிசயம் என்னஎன்றால், நான் சனிக்கிழமை தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், , என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கட முடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக் கொள்வேன்.

எனக்குகனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது.

மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்.

ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து  என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம்.

அப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய  மாட்டுப் பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள்.

நானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக
இருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலிக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக்கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். *
---------------------------------------------------------------
ஆக்கம்:
கே. முத்துராம கிருஷ்ணன், லால்குடி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

எந்த இந்தியப் பிரபலத்தின் ஜாதகத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள்?
Article by Themozhi

வகுப்பில் ஒரு பாடத்தின் தலைப்பு "அம்மாடியோவ் எனச் சொல்லவைக்கும் எண் 34290!," அதன் சுட்டி - http://classroom2007.blogspot.com/2008/11/34290.html

இந்தப் பாடத்தில், ஜாதகங்களின்  தொகுப்பாக விளங்கும் (ஜாதகக் களஞ்சியம் என அழைப்பது பொருத்தமாக இருக்குமோ?) ஒரு இணைய தளத்தை ஆசிரியர் அறிமுகப் படுத்தினார். அதன் சுட்டி - http://www.astrotheme.com/  இன்றைய நிலவரப்படி 40,463 ஜாதகங்களின் குறிப்புக்கள் உள்ளன இத்தளத்தில்.

பாடத்தில் அன்றைய "தேதியில் அதிகம் ஹிட் வாங்கிய ஜாதகத்தையும் கொடுத்துள்ளார்கள்" எனக் குறிப்பிட்டு ஒபாமா ஜாதக குறிப்பினையும் அவரது படங்களின் தொகுப்பையும் வழங்கியிருந்தார் ஆசிரியர்.  அன்றுவரை அதிக ஹிட் (அதிக அடி, உதை) வாங்கியது என் ஜாதகமே என்ற என் இறுமாப்பிலும் மண் விழுந்தது.  அத்துடன் அதிகம் தேடப்பட்ட இந்தியரான மகாத்மா காந்தியின் ஜாதகம் என புள்ளி விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.

இன்றைய தேதி நிலவரப்படி இந்த புகழ் தரவரிசை புள்ளிவிபர பட்டியலில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.  ஆனால் வழக்கமான என் மூளையின் தேடல் பகுதி என்னைப் படுத்தி எடுத்து மேலும் தேடு ...மேலும், மேலும் தேடு ...என்று தூபம் போட்டுப்  பாடியது.  எனவே அத்தளத்தின் மற்றுமொரு பக்கத்தில் கொடுத்துள்ள தேடல் படிவத்தில் சுட்டி: http://www.astrotheme.com/celestar/filters.php இதையும், அதையும், இங்கே, அங்கே  கிளிக் செய்து, தேடல் வேட்டையை தொடர்ந்து நான் கண்டு கொண்டது என்ன?

முடிவுகள்:
ஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 12 இந்திய குடிமக்கள் அட்டவணை:1


வழக்கம் போல் நம் தாத்தாவிற்கே முதலிடம், இந்தியாவின் முதல் குடிமகன். உலக அளவில் அதிகம் தேடப்பட்ட ஆண்கள் வரிசையில் 11 ஆம் இடம்,  உலக அளவில் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள வரிசையில் 24 வது இடம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அவருடைய ஜாதகத்தை  தெரிந்து கொள்ள ஆவல். 


ஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 13 உலக பிரபலங்கள் அட்டவணை: 2



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலக அளவிலும், ஆண்கள் வரிசையிலும் முதலிடம், அவர் மனைவி மிட்ஷெல் உலக அளவில் மூன்றாம் இடம், ஆனால் அதிகம் தேடப்பட்ட பெண்மணி இவரே.  இந்த பிரபலங்களில்  இருவரை யார் என எனக்குத் தெரியவில்லை.  ஆனால் வித்தியாசமான ஒருவர் பிறந்து 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஏசு கிறிஸ்துவை இந்த பட்டியலில் நான் எதிர் பார்க்கவில்லை.  அது என்ன baker's dozen போல் 13 என்று ஒரு எண், உனக்கு ராசியான எண்ணா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, அது நம்  ஸ்ரீஷோபனா வுக்காக ...ஸ்பெஷல்.  

இத்துடன் பிரபலங்கள் எந்தத்துறையில் பிரபலம் என்றும் ஒரு வரிசைப்படுதியுள்ளர்கள். இந்த வகைப் படுத்தப்பட்ட துறை வாரியான முடிவுகள் என்னைப் பொறுத்தவரை திருப்திகரமாக இல்லை.  உதாரணத்திற்கு ஒரு அட்டவணை கீழே உள்ளது.  இந்திய திரைப்பட துறையின் முன்னணி பிரபலங்கள் ஐஸ்வர்யா ராயும், ஷாரூக்கும் என இப்படி போகிறது முடிவுகள். அட்டவணை 3

 இத்துடன் மகர லக்கின பிரபலங்கள் யார், யாருக்கு 9 இல் குரு, சிம்ம ராசிக்காரர் யார்  என விதம் விதமாக ஆராயும்  வாய்ப்பும் உள்ளது.
  
இது பொழுதிருப்பவர்களுக்கு அதைப் போக்க வழி சொல்லும் இன்னுமொரு இணையதளம். அவர்கள் பணிக்கு நன்றிகள் பல.
அன்புடன்
தேமொழி
(அம்மணியின் ஊர் தெரியவில்லை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

எப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?
Aricle by Thanusurasikkaaran, Brunei

மரணம்  வேண்டாம் என்று விரும்புபவர்கள் இதைப் படிக்கவும். இதைப் படித்து இதன் பிரகாரம் நடந்து கொண்டால் நிச்சயம் மரணம் நம்மை  அணுகாது 100 சதவிகிதம் சத்தியம்.

8 ஆம் இடம், 8 அதிபதி, சனிஸ்வரன் ஆகிய அனைத்தையும் ஓரம் கட்டிவிடுவதோடு , ஜோதிடம், ஜாதகம் அனைத்தையும் ‘வேஸ்ட்’ என்று
சொல்ல வைத்து விடும்.

எந்த உயிர் தான் மரணத்தை விரும்புகிறது. நவீன மருத்துவத்தின் காரணமாக மனிதனின் சராசரி ஆயுள் நீடித்து கொண்டு இருக்கிறது.  இருந்தும் இன்னும் வாழ்நாள் மீது ஆசைப் படும் மனிதன், அதனை மேலும் நீடிக்க , யோகா, உடற் பயிற்சி ,லேகியம், உணவு கட்டுப்பாடு  என்று என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறான். அதன் மூலம் சிறிதளவு பயனும் அடைந்து கொண்டும் இருக்கிறான்.ஆனால் முழுப் பயனும் கிடைத்ததா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முழுப் பயனும் கிடைக்க மேலே படியுங்கள்.

ஒரு மாபெரும் ஆத்மா சொன்னதைச் சொல்கிறேன்.

எகிப்து பிரமீடுகளின் மலை அடிவாரத்தில் தோன்றிய மகா முனிவர் அவர். முக்காலமும் அறிந்தவர். எது சொன்னாலும் பலிக்கும்.மக்கள்  அவரிடம் வந்து தங்களின் வேதனைகளையும், சோதனைகளையும் சொல்லி நிம்மதி கேட்பார்கள். ஒவ்வொருவருக்கும் பரிகாரம் சொல்லி  அனுப்புவார். நன்மைகள் பயக்கும், நல்லதே நடக்கும். இப்படி நடக்க நடக்க மக்களின் சிறு சிறு சங்கடங்களும் நீங்கி நிமதியாக இருந்தனர்.

ஆசை யாரை விட்டது?

பெற்றெடுத்த தாய் மரணம், வளர்த்து விட்ட  தந்தை மரணம் , தான் பெற்ற பிள்ளை மரணம் என்று நடக்கையில்.மரணத்தை நிறுத்த முடியாதா?
இதற்கு ஒரு வழி கிடையாதா? நம்மை நிம்மதியாக வாழவைக்கும் முனிவரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்து ஊர் மக்கள் ஒன்று கூடி
முனிவர் இடம்  சென்றனர்.

ஊரார் ஒன்று கூடி வருவதை பார்த்த முனிவர், என்ன  விசயம் எல்லோரும் ஒன்று கூடி வருகிறார்களே என்று இருப்பிடம் விட்டு  வெளியில்  வந்தார். வாட்டமான முகங்களை பார்த்தார். எல்லோருக்கும் ஒரேவிதமான கஷ்டம் இதனை நாம் கண்டிப்பாக போக்க வேண்டும் என்று  முடிவெடுத்தார்.

மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, “அய்யா நீங்கள் எங்களுக்கு கடவுளுக்கும் மேலானவர். எங்களின் வேதனைகளைப் போக்கி சொர்க்கத்தில் இருப்பது போல் வாழவைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் ஒரு குறை இருக்கிறது அதனையும் நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்”
என்றார்கள்.

“சரி, சொல்லுங்கள்” என்றார் முனிவர்.

ஒருவரை ஒருவர் பார்த்து தயங்கித் தயங்கி நின்றனர். ம்.... சொல்லுங்கள் - என்றார் மீண்டும். அது வந்து என்று இழுத்தனர் - மஹா முனிவர் அல்லவா நோக்கத்தையும் கேள்வியையும் அனுமானித்து விட்டார். அதனை அவர்கள் வாயாலேயே வரவழைக்க வேண்டும் என்று நினைத்தார்.

ம்.... சொலுங்கள் இல்லை என்றால் நான் உள்ளே போகிறேன் .என்றார்.

மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்கள். “அய்யா...எங்கள் யாருக்கும் மரணம் வேண்டாம், மரணத்தின் பிரிவு மகா வேதனையாக இருக்கிறது,அந்த
வேதனையும் கஷ்டத்தையும் எங்கள் குடும்பத்தாருக்கும் தர நாங்கள் விரும்பவில்லை ,எங்களின் நல் வாழ்வுக்கு வழி சொன்ன நீங்கள் இதற்கும்
ஒரு வழி சொல்லுங்கள்" என்றனர்  .

லேசாக புன்சிரிப்பு சிரித்தார் முனிவர். "அதாவது மரணம் உங்களில் யாருக்கும் வேண்டாம். அதுதானே?

“ஆமாம், ஆமாம்” என்று ஒருமித்த குரலில் ஊர்மக்கள் சொன்னார்கள். மீண்டும் லேசாக சிரித்தார் முனிவர். "வரும் பௌர்ணமி இரவு வாருங்கள் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

பௌர்ணமி தினம்!

அக்கம் பக்கத்துக்கு  ஊர் எல்லைகளைக் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினார்கள். மரணத்தின் மீது பயம் இல்லாதவர்  யார்? சாகாமல் இருக்க வழி தெரிய போகிறது, இனி இந்த பூமி நமக்கே சொந்தம், என பலவிதமான எண்ணங்கள் பலரின் மனதில் ஓடத்  தொடங்கியது. புது பிரபஞ்சத்தை பார்க்க போகிற ஆவலில் குவிய தொடங்கினர். மாலை முடிந்து இரவு தொடங்கியது முழு நிலவும்  முழுவதுமாக வெளியில் வந்தது .மக்களிடம் ஆரவாரம் தொடங்கியது முனிவர் எப்போது நம் முன் வருவார் என்று எதிர்பார்த்தனர் .ஒரு  வழியாக முனிவர் இருப்பிடம் விட்டு வெளியில் வந்தார். மக்கள் ஆரவாரம் அதிகமானது. எங்கும் ஆர்பரிப்பு குரலோடு மக்கள் சந்தோசமாக  காணப்பட்டனர். முனிவர் அந்த சந்தோசத்தை ரசித்தார். அவர் ரசிக்க ரசிக்க இன்னும் ஆரவாரம் விண்ணை தொட்டது. முனிவர் இரு
கைகளையும் உயர்த்தி அமைதி அமைதி என சைகை காட்டினார்.ஆரவாரம் மெல்ல அடங்கியது .மெதுவாக பேச தொடங்கினார்:

"மஹா ஜனங்களே...." என்றார். மக்கள் அமைதியாயினர்.

"உங்கள் ஆசையை பூர்த்தி செய்யவே நான் வந்துள்ளேன்" என்று சுருக்கமாக பேசினார். "மரணத்தை வெல்ல ஒரு வழி சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள்" என்றார்.ஆர்பிரித்த கூட்டத்திடம் அமைதி. மீண்டும் பேச துவங்கினார் "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டும்  என்றால்".... கூட்டத்தின் சப்தநாடியும் அடங்கியது. ஒவ்வொருவரும் தங்களின் காதுகளை கூர்மையாக்கினர்.ஒருவர் விடும் மூச்சு காற்று  அடுத்தவர்க்கு கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.

முனிவர் தொடர்ந்தார் , "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டு மென்றால் யாரும் பிறக்காமல் இருங்கள்" என்று கூறி முடித்தார்.

நீதி ; ஜனனம் இருந்தால் மரணம் நிச்சயம்

   “சாகாமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்க வேண்டும்” என்ற பாரசிகப் பழமொழியை வைத்து எழுதப்பெற்ற ஆக்கம்.
ஆக்கியோன்: தனூர் ராசிக்காரன், Brunei
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

கீழ் உள்ள 6 நகை(ச்சுவை)களையும் அனுப்பியவர்: S.சபரிநாராயணன். சென்னை
1
The only man in this world, who likes a women fully- covered is...
a Life insurance agent.
Think Good!
----------------------
2
Always Remember There’s A ‘HELL’ In Every H E L L 0 … Be Careful.
There’s A ‘GOOD’ In Every G O O D B Y E … Be Grateful.
--------------------------
3.
A young and foolish pilot wanted to sound cool and show who was boss on the aviation frequencies. So, this was his first time approaching a field during the nighttime. Instead of making any official requests to the tower, he said: "Guess who?"

The controller switched the field lights off and replied: "Guess where!"
-------------------------------
4
*Best excuse by a female employee* !

This incident, is supposed to have happened in real life.

My friend, who is a the head of Human Resources at a very large bank, says that the best excuse for absenteeism, that he had ever received in his career of almost 22 years, was from a female Indian employee, at their bank's head quarters at Mumbai, India, in July, 2010. He says when the lady, was questioned on why she remained absent the previous day, she simply replied .......

*" But sir, I had no option. My husband was on casual leave yesterday and was at home. By mistake he took pills from the wrong bottle in our medicine cabinet and ended up consuming an over-dose of Viagra ! Now how could I have left him, all alone at home, with the house-maid ? "*
------------------------------------
5
We indians work on the
"Principle of rockets''
It doesn't mean we aim for the sky,
It means that, we don't start working unless our tail is on fire.
---------------------------------
6
Wife to drunk husband: From now on, if your lips touch liquor, you will never touch mine. What are you thinking?

Husband: Deciding, 18 year old scotch or 36 year old lips
+++++++++++++++++++++++++++++++++++++++++
5
காணோளி..?
இருக்கிறது!
இந்தவாரக் காணொளியை அனுப்பியவர் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி. பார்த்து மகிழுங்கள்
 



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தங்கள் நேரத்தைச் செலவழித்து ஆக்கங்களை எழுதியவர்களை ஊக்குவிப்பது நல்லது. அது அவர்களுக்கு ‘டானிக்’ உங்கள் விமர்சனத்தைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்
வாத்தியார்

 +++++++++++++++++++++++++++++++++++++++++======

வாழ்க வளமுடன்!

69 comments:

  1. தேமொழியும்,ப்ருனை அரசரும், சபரியும் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் தங்கள் திறமைகளை இத்தனை நாட்களும்?

    வகுப்பறைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது போல உள்ளது.

    தேமொழி சொந்த ஆக்கங்களை எழுத‌ வேண்டும் அவருக்கு நல்ல மொழியாற்றல் உள்ளது.இந்த ஆக்கத்தில் கொடுத்துள்ள தகவல்களும் நன்றாக உள்ளன.

    'பிறவாமை வேண்டும் பிறந்தால் உன்னை மறவாமல் இருக்க வேண்டும்'

    ப்ருனை அரசரும் வெளுத்துக்கட்டுகிறார்.

    எல்லா ஜோக்குகளும்ம் அருமை என்றாலும் 'லீவு லெட்டெர்' முந்துகிறது, சபரி.

    என் ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றி!

    ReplyDelete
  2. "கையிலே வாங்கினேன் பையிலே போடலே..
    காசு போன இடம் தெரியலே.."
    பாடலைப் பாடியவர் யாரென்று தெரியவில்லை..கடைசியில் முகம் காண்பிக்கும் ஆளாகத்தான் இருப்பாரென்று நினைக்கிறேன்..
    நல்ல பாடல்..சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பது எப்போதுமே இருந்துகொண்டே இருப்பதுவும் இங்கே எல்லோரும் கூடி ஜோதிடம் பற்றியெல்லாம் ஆராய்ந்தறிய ஆசை எழக்காரணங்களில் ஒன்று...

    ReplyDelete
  3. நம்ம ஸ்டாடிஸ்டிகள் அனலிஸ்ட் இந்த வாரம் அலசி கொடுத்திருக்கும் விஷயங்களும் விதமும் வழக்கம் போலே அருமை..

    பொதுவாகவே புள்ளிவிவரம் அதிகமாக நீண்டால் எனக்கென்னவோ போரடிக்கும்..ஏதோ அலுவல் ரீதியிலான விஷயங்களைப்

    படிப்பது போன்றதொரு உணர்வு ஏற்பட்டுவிடும்..எனக்கு ஆர்வமான விஷயங்கள் பற்றி மட்டுமே புள்ளிவிவரங்களைப் படிப்பது எனக்குப் பிடிக்கும்..இந்த ரேட்டிங் வகையறாக்களில் இதுவரை துளியும் கவனம் செலுத்தியது இல்லை..334 தான் காரணம்..இந்த அலசல் அளவு நீண்டுவிடாமல் கச்சிதமாக இருந்ததால் முழுவதும் படித்தேன்..

    செம்மொழிக்காரர் தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு இலாக்காவையும் திறத்துடன், தரத்துடன் அவரே கூடுதல் பொறுப்பாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறாரென்று தெரிகிறது..வாழ்த்துக்கள்..

    ///////(அம்மணியின் ஊர் தெரியவில்லை.)////////

    மேலே சொன்ன இதே காரணத்தை வைத்தும் மேலும் இவர் இதுவரை தொகுத்துப் பதிவிட்டிருக்கும் விஷயங்களைக் கொண்டும் பார்த்தால்

    இவர் இருக்கும் நாட்டு longitude lattitude 38º 00' N and 97º 00' W என்று கணிக்கிறேன்..

    மேலும் துல்லியமாக பார்க்கும்போது 40º 00' N and 74º 00' W என்று தெரியவருகிறது..

    அவரே வெளிப்படுத்திக் கொள்ளவிரும்பாத போது நமக்கெதுக்கு சார் இந்த ஆராய்ச்சியெல்லாம்?

    'எங்கிருந்தாலும் மாமாவுடன் வாழ்க' ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்போம்..

    ReplyDelete
  4. 'வகுப்பறை விக்கிப்பீடியா' KMRK அவர்கள் அவர்களின் 'பாட்டி சொல்லைத் தட்டாதே' அருமை..

    /////////நாட் குறிப்பு எழுதுவது ஒரு நல்ல பழக்கம். நான் செய்வதில்லை. என்ன காரணம் என்றால் நாம் என்ன ஏதாவது உல‌கம் போற்றும் செயல் புரிந்து புகழ் பெற்றவர்களா?தினமும் 'சாப்பிட்டேன், தூங்கினேன்' என்பதைத்தவிர வேறு என்ன எழுத முடியும் நம்மால் என்ற அல‌ட்சிய மனப்பான்மையே காரணம்.அல்லது சோம்பேறித்தனம்.அல்லது நாம் எழுதுவதை யாராவது படித்துவிட்டால் நம் ரகசியம், பலவீனம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம்.///////

    "

    இது என்னோட கமென்ட்..

    ReplyDelete
  5. //////////அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.

    நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து' நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற் றையும் காப்பாத்துகிறேன்' என்கிற மாதுரி கையைக் காண்பிப்பார். ////////////

    இது என் வூட்டுக்காரம்மாவின் கமென்ட்..ஏழுமலையான் இப்புடி வந்து போறது..அடிக்கடி நடக்குறதுதான்..

    கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால் வானுயர அளவுக்கு அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய உருவமாக பெருமாள் காட்சிதந்தார் என்று சொன்னாள்..

    ReplyDelete
  6. //////////பௌர்ணமி தினம்!

    அக்கம் பக்கத்துக்கு ஊர் எல்லைகளைக் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினார்கள். மரணத்தின் மீது பயம் இல்லாதவர் யார்? சாகாமல் இருக்க வழி தெரிய போகிறது, இனி இந்த பூமி நமக்கே சொந்தம், என பலவிதமான எண்ணங்கள் பலரின் மனதில் ஓடத் தொடங்கியது. புது பிரபஞ்சத்தை பார்க்க போகிற ஆவலில் குவிய தொடங்கினர். மாலை முடிந்து இரவு தொடங்கியது முழு நிலவும் முழுவதுமாக வெளியில் வந்தது .மக்களிடம் ஆரவாரம் தொடங்கியது முனிவர் எப்போது நம் முன் வருவார் என்று எதிர்பார்த்தனர் .ஒரு வழியாக முனிவர் இருப்பிடம் விட்டு வெளியில் வந்தார். மக்கள் ஆரவாரம் அதிகமானது. எங்கும் ஆர்பரிப்பு குரலோடு மக்கள் சந்தோசமாக காணப்பட்டனர். முனிவர் அந்த சந்தோசத்தை ரசித்தார். அவர் ரசிக்க ரசிக்க இன்னும் ஆரவாரம் விண்ணை தொட்டது. முனிவர் இரு
    கைகளையும் உயர்த்தி அமைதி அமைதி என சைகை காட்டினார்.ஆரவாரம் மெல்ல அடங்கியது .மெதுவாக பேச தொடங்கினார்:

    "மஹா ஜனங்களே...." என்றார். மக்கள் அமைதியாயினர்.//////////


    இந்த இடத்திலே அவர் எல்லோரோயும் கூட்டி சஸ்பென்சாக சொல்லப்போகும் விஷயத்தைப் பற்றிய ஆர்வத்தை மனக்கண்முன் கொண்டுவர அவர் எழுத்தில் மேற்கொண்ட சிரத்தை தெளிவாகத் தெரிகிறது..வெற்றியும் பெற்றிருக்கிறது..

    'நாயகன்' படத்து கடைசிகட்ட கோர்ட் சீன் ஞாபகத்துக்கு வருகிறது..

    ReplyDelete
  7. //"கையிலே வாங்கினேன் பையிலே போடலே..
    காசு போன இடம் தெரியலே.."//

    பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்த‌ரம்(?).பாடியவர் திருச்சி லோகனாதன். படம்? அதான் எனக்குத் தெரியலயே மைனர்வாள்!

    உங்களைக் கையைப் பிடித்து இழுத்து ஒரு பதிவு அனுப்பி இருந்தேன். பாட்டி முந்திவிட்டார்கள்.அடுத்த வாரம் பார்ப்போம்.

    ReplyDelete
  8. comenting on article of sabari...

    third and foruth seduces the curiosity of 'Guess what happened?'

    fifth one is a perfect sync.

    while the last one leads to crux..
    have no balancing..
    between 18 and 36?
    how to decide?

    ReplyDelete
  9. ///minorwall said...
    நம்ம ஸ்டாடிஸ்டிகள் அனலிஸ்ட் இந்த வாரம் அலசி கொடுத்திருக்கும் விஷயங்களும் விதமும் வழக்கம் போலே அருமை.///

    என்னடா இது கொடுமை. 'சேடிஸ்டு'ன்னு எதையோ ஆரம்பிக்கிறாரே மைனர்.
    போனவாரம் ஓய்ந்து போனதை ஆரம்பிக்கிறாரோ என்று கவலையாகிவிட்டது.

    அப்புறம் தான் அது statistical analyst என்று நம்ம தேமொழி என்கிற செம்மொழிக்காரருக்குப் பட்டப்பெயர் என்று என் மர மண்டைக்குப் புரிந்தது. பிடிக்காத 'ஸ்டேடிஸ்டிக்ஸை' பிடிச்ச மாதிரி கொடுத்ததற்காக தேமொழிக்குப் பட்டம் கொடுத்து வாழ்த்தியுள்ள‌ மைனருக்கு ஜே!

    ReplyDelete
  10. //இவர் இருக்கும் நாட்டு longitude lattitude 38º 00' N and 97º 00' W என்று கணிக்கிறேன்..

    மேலும் துல்லியமாக பார்க்கும்போது 40º 00' N and 74º 00' W என்று தெரியவருகிறது..//

    போச்சுடா! 'ஸ்டேடிஸ்டிக்ஸ்' பிடிக்காத ஆசாமியைப் பார்த்தீர்களா!எவ்வளவு துல்லியமான புள்ளிவிவரம் கொடுக்கிறார்!

    ஸ்டேடிஸ்டிக்ஸில் மிகவும் செள‌கரியம் என்னவென்றால் யாரும் அதை கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய தகவல்களில் ஸ்டேடிக்ஸ்முதல் இடத்தில் உள்ளது.

    ReplyDelete
  11. /'எங்கிருந்தாலும் மாமாவுடன் வாழ்க' ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்போம்..//

    நல்ல முன் ஆலோசனை உள்ளவர் மைனர் என்பதற்கு இந்த கமெண்ட் நல்ல உதாரணம்.'மாமாவுடன்' என்று சேர்த்ததால் சூழல் காப்பாற்றப்பட்டது.
    'மாமாவுடன்'என்ற சொல் இல்லைன்னா பாட்டு அனர்த்தமாக ஆகியிருக்கும்.
    வெரி குட் மைனர்!எங்கேயும் போக வேண்டாம். வகுப்பறையிலேயே இருபோம்.

    ReplyDelete
  12. ///'வகுப்பறை விக்கிப்பீடியா' KMRK அவர்கள் அவர்களின் 'பாட்டி சொல்லைத் தட்டாதே' அருமை..///

    மைனர்வாள்!இன்னிக்கு என்ன பட்டமளிப்பு விழாவா?

    வகுப்பறையின் 'விக்கல்'என்று முதலில் படித்துவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு 'விக்கி'பீடி'யா' பட்டம் என்று.

    தமிழில் பீடித்தல் என்றால் பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள்.
    நோய் பீடிக்கும்.வறுமை பீடிக்கும்.பேய் பீடிக்கும். அந்த மாதுரி(பாட்டி ஸ்டைலில் மாதிரியை சொல்லியுள்ளேன்)நான் வகுப்பறையைப் பீடித்துள்ளேனா?அதனால் தான் பீடியாவா?

    இன்னொரு'பீடி' எல்லோருக்கும் தெரியும். சொக்கலால் ராம் சேட்ட்டா என்று பாமர‌னும் கேட்பான்.சிறியவயதில் 'குப் குப்' என்று புகைவிடும் நண்பர்களைப் பார்த்து அல்ப ஆசைப்பட்டதுண்டு.பழக்கப்படுத்திக் கொள்ளாமல் அம்மாவின் முகம் நினைவில் வந்து காப்பாற்றியது.

    ReplyDelete
  13. /// "

    இது என்னோட கமென்ட்..///

    'அபொச்டஃபி' மட்டும்தான் கமெண்டா? அப்படின்னா? வழிமொழிகிறேன் என்று பொருளா?அல்லது நோ கமெண்ட்ஸ் ஆ?

    இன்னிக்கு என்ன எல்லாம் ஒரே புதிரா இருக்கு மைனர்வாள்?

    ReplyDelete
  14. என்னுடைய ஆக்கத்தை வெளியிட்ட ஆசானுக்நன்றி. KMR சாரின் பின்னுடதிற்கும் நன்றி.

    டைரி எழுதும் பழக்கம். பின் நாளின் ஆட்டோகிராப்.

    இந்த பழக்கம் சிலருக்கு சில நன்மைகளையும் செய்யும்.எனக்கு செய்தது.பள்ளியில் படிக்கும்போது தொடங்கிய இந்த பழக்கம் brunei யில் வேலை கிடைத்து வரும் வரையில் எழுதி கொண்டுஇருந்தேன்.வீட்டில் கல்யாண பேச்சு தொடங்கியது. அந்த பெண், இந்த பெண், உறவுக்கார பெண், வேலையில் இருக்கும் பெண், பணக்காரவீட்டு பெண், என்று ,வாரம் ஒரு பெண் என்று, என் சம்மதம் கேட்டார்கள். நான் வேண்டாம்,வேண்டாம் என்று மறுத்து கொண்டே வந்தேன்.ஒரு வருடம் ஓடி விட்டது. பெண் பார்த்து கொண்டே இருந்தார்கள் . நான் என் நிலைமையில் மாறவில்லை . தூரத்து உறவினர் ஒருவரின் விலாசதிர்காக எதேச்சையாக என் தங்கை என் அலமாரியில் தேட அங்கு இருந்த ஒரு பழைய டைரி எடுத்து புரட்டி இருக்கிறாள்.அது என்னுடைய டைரி. அதில் என்னுடைய காதல் சமாச்சாரங்கள் இருந்தது. மீண்டும் அவள் மீதி இருந்த டைரிகளையும் நோண்டி இருக்கிறாள்.என் முழு காதல் சமாச்சாரங்களையும் தெரிந்து கொண்டாள்.பிறகு வீட்டில் சொல்லி, வீட்டில் பெற்றோர் அந்த பெண்ணை போய் பார்த்து பெண் கேட்டு. எனக்கு முடித்து வைத்தார்கள்.

    ஆக என் அளவில் டைரி எழுதும் பழகத்திற்கு ஒரு ஜே. ஆனால் இப்போது எழுதுவது இல்லை.

    தேமொழியின் உழைப்பு பாராட்டபடவேண்டிய ஒன்று .good collection . சபரிகும் பாராட்டு.

    ReplyDelete
  15. இன்றைய பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிரிப்புரையாற்றிய முனைவர் KMRK அவர்கள் விழாவை மைனருக்குப் பாராட்டுவிழாவாக்க முயற்சித்ததைக் கைவிடக்கோரி ஒரு தீர்மானத்தை முன்மொழிகிறோம்..

    "பாக்கெட்டிலும் பெட்டிக்கடை அக்கௌன்ட்டிலும்கூட
    இருப்பு காலியாகும்போது
    மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் ஃபாவரைட் வகையறாவைக்கூட
    புகைத்து அனுபவித்த சமயங்களும் வாழ்வில் உண்டு என்று கூறி அமைதி கொள்கிறோம்.."

    ஆகா..ரெண்டு வரியிலே ட்ரை பண்ணினேன்..
    வரிக்கணக்குகூடகூடிப்போச்சே..

    நமக்கு வந்தது(கவிதை???) இவ்வ்ளோதான்..

    ReplyDelete
  16. வருகை பதிவுகளுடன் சில.,,

    அடுத்தவர் பார்த்து விடாதபடி டயரி எழுத நினைப்பவர் e டயரி எழுதலாம் இலவச தவவிறக்கம் குறிப்பிட்ட வார்த்தை கொண்டு தேடல் என பல வசதிகள் எல்லாம் இலவசமாகவே..

    www.splinterware.com/products/idailydiary.htm

    ReplyDelete
  17. ////////kmr.krishnan said...
    /// "

    இது என்னோட கமென்ட்..///

    'அபொச்டஃபி' மட்டும்தான் கமெண்டா? அப்படின்னா? வழிமொழிகிறேன் என்று பொருளா?அல்லது நோ கமெண்ட்ஸ் ஆ?//////

    வழிமொழிகிறேன் என்ற அர்த்தத்தில் 'டிட்டோ' வை எண்ணி ட்ரை பண்ணினேன்..
    தப்பில்லையே.?
    டிட்டோ வுக்கும் அபோஸ்டபிக்கும் எந்தக் குறியீட்டை டைப் பண்றதுன்னு இப்போ கொஞ்சம் குட்டையைக் குழப்பிவிட்டீர்கள் KMRK ..

    யாமறிந்த மொழிகளிலே
    ஜாப்பனீஸ் மொழியின் ஆதிக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
    ஆங்கிலம் இனி மெல்லச் சாகும் என்ற நிலை எனக்குத் தோன்றுகிறது..

    அதிலேயும் தமிழில் ஆங்கிலம் மூலம் டைப் பண்ணிப்பண்ணி பழகி சாதாரண வார்த்தைக்கெல்லாம் கூட கரெக்ட் ஸ்பெல்லிங் ப்ரோப்ளம் ரொம்ப டெவெலோப் ஆகுது..பத்தாததுக்கு நான் use பண்ணுவது ஜாப்பனீஸ் operating system - keyboard லேப்டாப்..
    தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்..

    ReplyDelete
  18. பாரசீக பழமொழிக்கு முன்னால்
    பாரதத்து பெரியவர் சொன்ன முதுமொழி


    பிறவாமல் இருக்க
    பெரியயோரி ஆலோசனை செவி மடுக்க

    கந்த புராண பாடலில் அருணகிரியார்

    முடியாப் பிறவிக் கடலில் புகார்
    முழுதும் கெடுக்கும்

    அடியாற் படியில் விதனப் படார்
    வெற்றி வேல் பெருமாள்

    அடியார்க்கு நல்ல பெருமாள்
    அவுணர் குலம் அடங்கப்

    பொடியாக்கிய "பெருமாள்
    திருநாமம்" புகல்பவரே

    வள்ளுவர்

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை
    மற்றது வேண்டாமை வேண்ட வரும்


    காரைக்கால் அம்மையார்

    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க என்றார்.

    பின் ஊட்ட நீளம் கருதி
    பட்டியலை நிறுத்திக் கொள்கிறோம்..


    இன்னமும் இன்னமும்
    இந்த பாரதத்தில் உள்ளது

    எடுத்துச் சொன்ன விதத்திற்கு பாராட்டு
    எதையுமே அவர்கள் சொன்னால் தான்

    நமக்கு சிறப்பு என்பதால்
    நாமும் அப்படியே எடுத்துக் கொள்வோம்

    ReplyDelete
  19. அடுத்தவாரம் ஸ்பெசியலில்

    'KMRK கையைப் புடிச்சு இழுத்த கதை' வெளியாகும் என்று நினைக்கிறேன்..

    யாரின் கை என்பதை சஸ்பென்சாக வைத்திருந்தால்
    படிப்போரின்??? ஆர்வம்???
    கூடும் என்றும் நினைக்கிறேன்..

    பத்திரிகை தர்மம் என்பது இதுதானே?

    பி.கு.

    இன்று பாட்டியின் டைரியை வெளியிட்டதுபோல பின்னிணைப்பாக 'தனுசுக்காரரின் டைரி' என்று அடுத்தவாரம் ஸ்பெசியலில்
    KMRK வெளியிடுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகன்..

    ReplyDelete
  20. யார் எதைப் பார்க்கிறார்கள் என்று
    பார்ப்பதையே பட்டியலிட்டால்

    நம் தோழியாரும் அதில் இருப்பரோ..
    நல்ல அலசல் எப்பவும் ஜாதகத்தை பற்றி

    இன்று

    அலசப்பட்ட ஜாதகத்தை பற்றி..
    அதுவும் நல்லாத் தான் இருக்கு..

    எங்க காலத்துல 100 நாள் ஓடுற படம்னு
    எம்ஜிஆர் படத்துக்கு விசில்அடிக்றாப்பல

    பங்களிப்புக்கு நன்றி
    பகிர்ந்தளித்தமைக்கு வாழ்த்துக்கள்

    தொடருங்கள்... சிகரம்
    தொடடுமளவில் தான்

    ReplyDelete
  21. படித்து மகிழ்ந்த சபரியாரின் நகைச்சுவை
    பாசந்தி பக்கோடாவை நினைவூட்டியது

    மொழி மாற்றம் தந்திருந்தால்
    மெத்தவே சிறக்கும்..

    இந்த கலவையும் ருசிக்குது
    நந்தவனத்தையே கலக்குது

    வாழ்த்துக்களும்
    வணக்கங்களும்...

    ReplyDelete
  22. Hello frinds, (this is a pure hellow with no intention of hell,,,, hahaha"

    Thank you all for your post , this includes minor's feedback, "

    //"we indians work on the principle of rocket"// - unfortunately this is the fact rather than a joke.

    Ramadu.

    ReplyDelete
  23. "கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசு போன இடம் தெரியலே" படம் ஜெமினியின் இரும்புத்திரை. பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. பாட்டுக்கு வாயசைத்து நடிப்பவர் கே.ஏ.தங்கவேலு.

    ReplyDelete
  24. காண் ஒளி/ஒலி நல்ல
    கருத்தை சொல்லுது..

    பட்டியலிலே, forex, commodity மற்றும்
    பங்கு சந்தையை பத்தி வரலையே..

    அது சரி இது அந்தக் காலத்து பாட்டு
    அதுல எப்படி இது..

    நல்லாத்தேன் இருக்கு..பலருக்கும் இது
    நிசமாத்தேன் இருக்குங்கறேன்...

    வாழ்த்துக்கள் என்றுமே
    வழக்கம் போல மாசில்லா அன்புடனே

    ReplyDelete
  25. //என் முழு காதல் சமாச்சாரங்களையும் தெரிந்து கொண்டாள்.பிறகு வீட்டில் சொல்லி, வீட்டில் பெற்றோர் அந்த பெண்ணை போய் பார்த்து பெண் கேட்டு. எனக்கு முடித்து வைத்தார்கள்.

    ஆக என் அளவில் டைரி எழுதும் பழகத்திற்கு ஒரு ஜே.//

    தனுசு அவர்களே! டயரி எப்படியோ வெளியாகிவிட்டது. எல்லோரும் படிக்கும் படி கொடுத்துவிட்டால் சுவையாக இருக்கும் போல இருக்கிறதே!

    'டாவடிப்பது எப்படி என்றோ', 'காதலியிடம் வழிவது எப்படி என்றோ
    தலைப்புக்கொடுத்து புத்தகமாகக் கூடப் போடலாம். யோசியுங்கள்.

    ReplyDelete
  26. ///////
    iyer said... அது சரி இது அந்தக் காலத்து பாட்டு
    அதுல எப்படி இது..///////

    ரொம்ப சிம்பிள்..slideshow ..
    BGM லே எந்த சாங் வேணும்னாலும் போட்டுக்கலாம்..
    நமக்கு வேண்டிய ஸ்நாப்ஸ் கல்லேக்ஷன்
    timeline என்ன லெங்க்த் ன்னு பார்த்துட்டு ஸ்லைட்ஷோ DVD ட்ரை பண்ண வேண்டியதுதான்..
    நான் எனக்குப் பிடிச்ச நல்ல பாடல்களை BGM மாப் போட்டு இப்படி செலேக்டெட் ஸ்நாப்ஸ் போஸ் கல்லேக்ஷன்லே ஸ்லைட்ஷோ நிறைய பண்ணியிருக்கேன்..
    இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹாபி..
    NCH editor, wavepad editor என்று சாங் எடிட்டிங் பண்ணவும் ஸ்லைட்ஷோ க்குன்னே பல ப்ரீ சொஃப்ட்வேர் இருக்குறதாலே
    ரொம்ப ஈசி..

    ட்ரை பண்ணிப்பாருங்க..
    இண்டரெஸ்டிங்..

    ReplyDelete
  27. ////kmr.krishnan said...
    பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்த‌ரம்(?).பாடியவர் திருச்சி லோகனாதன். படம்? அதான் எனக்குத் தெரியலயே மைனர்வாள்!
    /////

    /////Thanjavooraan said...
    "கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசு போன இடம் தெரியலே" படம் ஜெமினியின் இரும்புத்திரை. பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. பாட்டுக்கு வாயசைத்து நடிப்பவர் கே.ஏ.தங்கவேலு.

    /////

    அதிகத் தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
  28. //கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால் வானுயர அளவுக்கு அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய உருவமாக பெருமாள் காட்சிதந்தார் என்று சொன்னாள்..//

    மைனர்வாள்!உண்மையாகவே இது பெரிய விஷயந்தான்.கனவிலாவது வருகிறாரே. அந்த அளவு நினவில் அவரை நினைத்தாலே கனவில் காட்சி கிடைக்கும்.விஸ்வரூபக் காட்சியா?ஆச்சரியம்தான்!

    சந்து முனையில் கொடுவாள் மீசையோடு எப்போதும் நிற்கும் கந்து வட்டிக்காரர்,
    திஹார் ஜெயிலில் இருக்கும் தமிழகப் பிரபலங்கள், சோகமாக இருக்கும் வடிவேலு இதுபோலதான் எனக்குக் கனவு வருகிறது.இல்லாவிட்டால் தஞ்சாவூர் பெரியவர் வந்து 'என்னாடா எழுதரே' என்று சத்தம் போடுவது போலக் காட்சி வரும். மைனர் வருவாரா என்று பார்த்தால் வருவதே இல்லை.ஒரு நாள் கணினி முன்னால் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வாத்தியார் கனவில் வந்தார்.

    ReplyDelete
  29. ///ரொம்ப சிம்பிள்..slideshow ..
    BGM லே எந்த சாங் வேணும்னாலும் போட்டுக்கலாம்..
    நமக்கு வேண்டிய ஸ்நாப்ஸ் கல்லேக்ஷன்
    timeline என்ன லெங்க்த் ன்னு பார்த்துட்டு ஸ்லைட்ஷோ DVD ட்ரை பண்ண வேண்டியதுதான்..///

    அய்யர் சொல்லவந்தது அதையல்ல..
    அந்த பாட்டுல இப்படி

    எதிர்பார்க்கும் share commodity, forex market
    எல்லாம் எப்படி ,,? என்பதை தான்

    அய்யரை நீங்களுமா
    அப்படி பார்க்கின்றீர்கள்...

    ReplyDelete
  30. ////RAMADU Family said...
    Hello frinds, (this is a pure hellow with no intention of hell,,,, hahaha"///////



    வரிகளை வாசித்தோம்..ரசித்தோம்..

    வாழ்த்துகிறோம்.அமைதிகொள்கிறோம்..

    (ஆஹா.ரெண்டு வரி பிரச்சினை..இது என்னவோ தொத்துவியாதி போல ஆயிடுச்சே?

    வளவளன்னு நிறையா சலிக்காம கமென்ட் அடிக்குற எனக்கே இப்புடி ஒரு பாதிப்பா?

    பாசுபதாஸ்த்திரத்தை அய்யர் எடுத்து வுட்டுருக்காரே?அந்த பாதிப்பா இருக்குமோ?

    KMRK சார்..நம்மகிட்டே பிரம்மாஸ்திரம் ஏதும் ஸ்டாக் இருக்கா?)

    ReplyDelete
  31. ///இந்த இடத்திலே அவர் எல்லோரோயும் கூட்டி சஸ்பென்சாக சொல்லப்போகும் விஷயத்தைப் பற்றிய ஆர்வத்தை மனக்கண்முன் கொண்டுவர//

    இந்த மாதிரி எதிபாராத வகையில் சஸ்பென்ஸ் உடைவது காற்று பிடுங்க‌ப்பட்ட
    சைக்கிள் டியூப் போல இருக்கும்.

    ஒரு ஆஜானு பாஹுவான மல்யுத்த வீரன் முஷ்டியைத் தட்டிக் கொண்டு நிற்கிறான். எதிராளி இன்று தூள்தூளாகப் போகிறான் என்று எதிர் பார்ப்பு.அப்போது தன் உருவத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் பெண் குரலில்," டேய் வாடா பார்க்கலாம்"என்கிறான். மொத்தக் கூட்டமும் 'கொல்'லென்று சிரித்துவிட்டு விலகுகிறது.

    'எல்லோருக்கும் பசியாது இருக்கும் கலையைச் சொல்லித் தருகிறேன்' என்று ஒரு சாமியார் சொன்னார்.அவரிடம் கூட்டம் அலை மோதிய‌து.பாடம் துவங்கு முன் 'என் முன் பசிக்கு இட்டிலி வடை எடுத்து வாருங்கள்' என்றாராம்.

    'எனக்கு மட்டும் சோறு போடவில்லை என்றால் அடுத்த வீட்டில் செய்தது போலச் செய்துவிடுவேன்' என்றான் பிச்சைக்கார்ரன்.பயந்து கொண்டு சோறு போட்டுவிட்டு 'அவர்கள் வீட்டில் என்ன செய்தாய்' என்று கேட்டார்கள்.'சோறு இல்லை போ, என்றார்கள் போய் விட்டேன்' என்றானாம்.

    எங்கள் அலுவலகத்தில் உண்மையில் நடந்தது.ஒரு யூனியன் தலைவர் தினமும் 4 பேருடன் அலுவலக நேரத்தில் டீக் கடைக்குச் சென்று விட்டு
    நீண்ட நேரம் கழித்துத் திரும்புவார். சில நாட்கள் பொறுத்த அதிகாரி, ஒரு நாள் அவ்வாறு போகக்கூடாது என்றார்.யூனியன் தலைவர் உறக்க,சண்டையிடும் தொனியில் சொன்னார்."போக வேண்டாம் என்றால் போகவில்லை." ஆனால் அவர் சொன்ன தொனி 'அப்படித்தான் போவோம் நீ யார் கேட்பதற்கு' என்பது போல் ஒலித்தது.தலைவர் எவ்வளவு ஆவேசமாகப்பேசினார் பார்த்தாயா என்று அவர் சொல்லியதைக் கவனிக்காத சக ஊழியர்கள் வியந்து பாராட்டினர். நான் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  32. ///ஆகா..ரெண்டு வரியிலே ட்ரை பண்ணினேன்..
    வரிக்கணக்குகூடகூடிப்போச்சே..

    நமக்கு வந்தது(கவிதை???) இவ்வ்ளோதான்..///

    வந்த வரைக்குமே நல்லா இருக்கு. நெட்டில் புதுக்கவிதை,ஹைக்கூ என்று அலப்பரை பண்ணரவங்களுடையதை விடத் தேவலாம்.

    ReplyDelete
  33. //டிட்டோ வுக்கும் அபோஸ்டபிக்கும் எந்தக் குறியீட்டை டைப் பண்றதுன்னு இப்போ கொஞ்சம் குட்டையைக் குழப்பிவிட்டீர்கள் KMRK .. //

    நீங்கள் தட்டச்சியது டிட்டோதான். நான் தான் சரியா கவனிக்கவில்லை.

    ஆமா, இந்தக் குட்டை சமாச்சாரம்தான் உதைக்குது, நான் குழப்பித்தான் குட்டை கலங்குதோ?

    'நான் கல‌க்கிலியே' என்றால் "நீ கலக்காட்டா என்ன? உங்க அப்பா கலக்கியிருப்பாரு' என்றாராம்

    ReplyDelete
  34. ///இன்று பாட்டியின் டைரியை வெளியிட்டதுபோல பின்னிணைப்பாக 'தனுசுக்காரரின் டைரி' என்று அடுத்தவாரம் ஸ்பெசியலில்
    KMRK வெளியிடுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகன்..///

    தனுசுக்காரருக்கு புக் போட டயரியும் கேட்டு, அட்வான்ஸ் தொகையும் அனுப்பியாச்சுல்ல.

    ReplyDelete
  35. பாராட்டுக்கு நன்றி மைனர் சார்.

    kmr சார், திருமணம் முடிந்ததும் மனைவி வாங்கிய முதல் உறுதி மொழி, டைரி எழுதுவதை விடவேண்டும் என்பது தான், காரனதிற்கு அவர் சொன்ன பதில், நீங்க எல்லாத்தையும் டைரியில் எழுதி விடுவிங்க அப்புறம் அது எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

    16 வருட ஒயின்
    36 வருட குயின்
    46 வருட நமக்கு மெயின்- சபரி சொல்லவருவது இதைத்தானே 6 ஜோக்கில். .

    ReplyDelete
  36. வணக்கம் அய்யா,
    முத்துராம கிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை.நான் உங்களால் தான் தமிழில் எழுது ஆரம்பித்துள்ளேன்.அய்யா,எங்கள் வீட்டில் உள்ள கணினியில் உள்ள "ஓ.ஸ்" தமிழ் மொழியினை எழுத முடியாது.அதனால் நான் அமரும் 2 மனி நேரத்தில் ஆன்லைன் எடிட்டரில் கொஞ்சம் எழுதுகின்றேன்.
    அண்டம் உருவானதையும்,நம் வாழ்வில் ஏற்படும் இன்ப,துன்பங்களுக்கான காரண நியதியை ஏற்படுத்தியத்திற்க்கான அவசியத்தை "சிவபுராண"த்தில் படித்ததை மீண்டும் "பாட்டிம்மா" நினைவுப்படுத்தினார்.மாணவர்கள் நாங்களும் டில்லிக்கு இராஜாவோ,இராணியோ ஆனாலும் "பாட்டி சொல்லை தட்டவே மாட்டோம்"
    எனக்காக மைக்கேல் ஜாக்சனின் "ஸ்டாட்ஸை"யும்(மன்னிக்கவும் தமிழில்
    எனக்கு சரியாக தெரியவில்லை)சேர்த்து வெளியிட்ட சக வகுப்பறை தோழி தேமொழிக்கு என் நன்றி.ஒரு தோழியாக தான் இதை கேட்கின்றேன்.உங்கள் முழுப்பெயரே "தேமொழி"யா அல்லது "தேன்மொழி"யா?. உங்கள் ஊர் பெயரை ஏன் வெளியிடவில்லை?.தவறாக நினைக்க வேண்டாம்,நான் எதையும் என் மனதில் தோன்றுவதை கேட்டு விடுவேன்.உங்களின் ஆக்கம் மூலம் அந்த இணையத்தை பார்த்தேன்.அங்கே நான் எனக்கு பிடித்த மற்ற பிரபலங்களின் கிடைக்காத பிறந்த தேதி குறிப்புகளை குறித்து கொண்டேன்.நல்ல தகவலுக்கு நன்றி.
    அதைப் போன்று
    Thanusurasikkaaரன், எழுதிய முனிவர் கதையும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  37. ///////kmr.krishnan said...
    //கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால் வானுயர அளவுக்கு அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய உருவமாக பெருமாள் காட்சிதந்தார் என்று சொன்னாள்..//

    மைனர்வாள்!உண்மையாகவே இது பெரிய விஷயந்தான்.கனவிலாவது வருகிறாரே. அந்த அளவு நினவில் அவரை நினைத்தாலே கனவில் காட்சி கிடைக்கும்.விஸ்வரூபக் காட்சியா?ஆச்சரியம்தான்!

    சந்து முனையில் கொடுவாள் மீசையோடு எப்போதும் நிற்கும் கந்து வட்டிக்காரர்,
    திஹார் ஜெயிலில் இருக்கும் தமிழகப் பிரபலங்கள், சோகமாக இருக்கும் வடிவேலு இதுபோலதான் எனக்குக் கனவு வருகிறது.இல்லாவிட்டால் தஞ்சாவூர் பெரியவர் வந்து 'என்னாடா எழுதரே' என்று சத்தம் போடுவது போலக் காட்சி வரும். மைனர் வருவாரா என்று பார்த்தால் வருவதே இல்லை.ஒரு நாள் கணினி முன்னால் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வாத்தியார் கனவில் வந்தார்.//////

    உண்மைதான்..சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..
    உலகளந்த பெருமாள் என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டது நினைவில் வந்து உடனே கூகிளில் தேடி எடுத்து அவளுக்கு சொன்னேன்..அடுத்தமுறை இந்தியா சென்றபோது செல்ல இயலவில்லை..இப்படி முதன்முதலில் பெருமாள் நாமம் மட்டுமே பெரிய அளவில் தன் கனவில் வந்து பயந்து விட்டதாகக் கூறினாள்..அப்போது சென்னையில் இருந்ததால் ஒருமுறை திருப்பதி சென்று வந்தோம்..
    உண்மைதான்..சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..வந்து என்ன செய்ய?செய்ய வேண்டிய பக்தையின் வேண்டுதலை, கனவுகளை, நியாயமான ஆசைகளை சோதிக்காமல் நிறைவேற்றித்தருவது
    தன் கடமை என்று நினைக்காத தெய்வங்கள் கனவில் வந்தால் என்ன? வராமல் போனால்தான் என்ன?
    என்பதுதான் என் கேள்வி..

    ReplyDelete
  38. ///////சந்து முனையில் கொடுவாள் மீசையோடு எப்போதும் நிற்கும் கந்து வட்டிக்காரர்,
    திஹார் ஜெயிலில் இருக்கும் தமிழகப் பிரபலங்கள், சோகமாக இருக்கும் வடிவேலு இதுபோலதான் எனக்குக் கனவு வருகிறது.இல்லாவிட்டால் தஞ்சாவூர் பெரியவர் வந்து 'என்னாடா எழுதரே' என்று சத்தம் போடுவது போலக் காட்சி வரும். மைனர் வருவாரா என்று பார்த்தால் வருவதே இல்லை.ஒரு நாள் கணினி முன்னால் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வாத்தியார் கனவில் வந்தார்.
    ////////////

    சந்து முனையில் கொடுவாள் மீசையோடு எப்போதும் நிற்கும் கந்து வட்டிக்காரர்,
    திஹார் ஜெயிலில் இருக்கும் தமிழகப் பிரபலங்கள், சோகமாக இருக்கும் வடிவேலு -
    சந்து முனையில் கொடுவாள் மீசையோடு எப்போதும் நிற்கும் கந்து வட்டிக்காரர்,
    திஹார் ஜெயிலில் இருக்கும் தமிழகப் பிரபலங்கள், சோகமாக இருக்கும் வடிவேலு - இவர்கள் வரக் காரணம் உங்களோடு கொடுக்கல் வாங்கலில் உள்ளவர்கள்..தஞ்சைப் பெரியவர் தம்பிக்கோட்டை அரிவாள் விஷயமும் கூட அப்படித்தான்..
    எனக்குத் தோன்றுவது மைனர் வராமல் இருப்பதே நல்லது..

    ReplyDelete
  39. ///// kmr.krishnan said... வந்த வரைக்குமே நல்லா இருக்கு.
    நெட்டில் புதுக்கவிதை,ஹைக்கூ என்று அலப்பரை பண்ணரவங்களுடையதை விடத் தேவலாம்./////////

    ///// kmr.krishnan said... வந்த வரைக்குமே நல்லா இருக்கு.
    நெட்டில் புதுக்கவிதை,ஹைக்கூ என்று அலப்பரை பண்ணரவங்களுடையதை விடத் தேவலாம்./////////

    (fun face of minor) உங்களுக்கு ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா கொஞ்சம் தீவிரமா ஆயிருக்குன்னு நினைக்குறேன்..
    கொஞ்சம் ஓவர் டோஸ் மேடிகாஷன் வுட் பி தி பெட்டெர் ச்சாய்ஸ்..ஐ தின்க்..
    (I take it as a compliment ..serious face of minor)

    ReplyDelete
  40. ////thanusu said...
    16 வருட ஒயின்
    36 வருட குயின்
    46 வருட நமக்கு மெயின்- //////

    ///// kmr.krishnan said...
    நெட்டில் புதுக்கவிதை,ஹைக்கூ என்று அலப்பரை பண்ணரவங்களுடையதை விடத் தேவலாம்./////////

    இதே கமெண்ட்டை ரிபீட் வுட்டுக்குறேன்..

    ReplyDelete
  41. /// kmr.krishnan said...
    //டிட்டோ வுக்கும் அபோஸ்டபிக்கும் எந்தக் குறியீட்டை டைப் பண்றதுன்னு இப்போ கொஞ்சம் குட்டையைக் குழப்பிவிட்டீர்கள் KMRK .. //

    நீங்கள் தட்டச்சியது டிட்டோதான். நான் தான் சரியா கவனிக்கவில்லை.

    ஆமா, இந்தக் குட்டை சமாச்சாரம்தான் உதைக்குது, நான் குழப்பித்தான் குட்டை கலங்குதோ?

    'நான் கல‌க்கிலியே' என்றால் "நீ கலக்காட்டா என்ன? உங்க அப்பா கலக்கியிருப்பாரு' என்றாராம்////

    உண்மையிலேயே கலக்குறீங்க..ஃபுல் ஃபார்ம்லே இருக்கீங்க..

    ReplyDelete
  42. ///இந்த இடத்திலே அவர் எல்லோரோயும் கூட்டி சஸ்பென்சாக சொல்லப்போகும் விஷயத்தைப் பற்றிய ஆர்வத்தை மனக்கண்முன் கொண்டுவர//

    இந்த மாதிரி எதிபாராத வகையில் சஸ்பென்ஸ் உடைவது காற்று பிடுங்க‌ப்பட்ட
    சைக்கிள் டியூப் போல இருக்கும்.

    ஒரு ஆஜானு பாஹுவான மல்யுத்த வீரன் முஷ்டியைத் தட்டிக் கொண்டு நிற்கிறான். எதிராளி இன்று தூள்தூளாகப் போகிறான் என்று எதிர் பார்ப்பு.அப்போது தன் உருவத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் பெண் குரலில்," டேய் வாடா பார்க்கலாம்"என்கிறான். மொத்தக் கூட்டமும் 'கொல்'லென்று சிரித்துவிட்டு விலகுகிறது.

    'எல்லோருக்கும் பசியாது இருக்கும் கலையைச் சொல்லித் தருகிறேன்' என்று ஒரு சாமியார் சொன்னார்.அவரிடம் கூட்டம் அலை மோதிய‌து.பாடம் துவங்கு முன் 'என் முன் பசிக்கு இட்டிலி வடை எடுத்து வாருங்கள்' என்றாராம்.

    'எனக்கு மட்டும் சோறு போடவில்லை என்றால் அடுத்த வீட்டில் செய்தது போலச் செய்துவிடுவேன்' என்றான் பிச்சைக்கார்ரன்.பயந்து கொண்டு சோறு போட்டுவிட்டு 'அவர்கள் வீட்டில் என்ன செய்தாய்' என்று கேட்டார்கள்.'சோறு இல்லை போ, என்றார்கள் போய் விட்டேன்' என்றானாம்.

    எங்கள் அலுவலகத்தில் உண்மையில் நடந்தது.ஒரு யூனியன் தலைவர் தினமும் 4 பேருடன் அலுவலக நேரத்தில் டீக் கடைக்குச் சென்று விட்டு
    நீண்ட நேரம் கழித்துத் திரும்புவார். சில நாட்கள் பொறுத்த அதிகாரி, ஒரு நாள் அவ்வாறு போகக்கூடாது என்றார்.யூனியன் தலைவர் உறக்க,சண்டையிடும் தொனியில் சொன்னார்."போக வேண்டாம் என்றால் போகவில்லை." ஆனால் அவர் சொன்ன தொனி 'அப்படித்தான் போவோம் நீ யார் கேட்பதற்கு' என்பது போல் ஒலித்தது.தலைவர் எவ்வளவு ஆவேசமாகப்பேசினார் பார்த்தாயா என்று அவர் சொல்லியதைக் கவனிக்காத சக ஊழியர்கள் வியந்து பாராட்டினர். நான் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.//////


    இந்த ரீதியிலான கதைகள் கடைசியில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தைத் தருவதால் தவிர்ப்பதே நல்லது..


    உங்கள் ஆக்கங்கள் லிஸ்டிலே ஒன்றை இப்புடி கமேன்ட்டிலே லூஸ் பண்ணிட்டீங்களே சார்..

    ஆமா..எங்க நம்ம உமாஜி, தமிழ்விரும்பி ரெண்டு போரையும் காணோம்..

    தீபாவளிக்கு ஊருக்குப் போனவுங்க அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களா?

    ReplyDelete
  43. சாதாரணமாக வாத்தியார் ஐயா அவர்கள் என் ஆக்கங்களில் மாற்றம் செய்வது இல்லை. சில சமயங்களில் செய்து இருக்கிறார். பல சமயங்களில் தட்டச்சுப் பிழையுடனேயே ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

    இன்றைய‌ பாட்டியின் நாட்குறிப்பு ஆக்கத்தில் என்னுடைய அறிமுக எழுத்தில் நான் ஆனந்தரெங்க‌ம் பிள்ளை பற்றி எழுதும் போது "அவர் அரசாங்கத்திற்கு அணுக்க‌மாக இருந்ததால் என்று தட்டச்சு செய்து அனுப்பியிருந்தேன்.ஐயா அதனை 'இனக்கமாக' என்று மாற்றியுள்ளார்கள். (இணக்கம் என்ற சொல். caps on பண்ணாமல் தட்டச்சு செய்ததால் இனக்கம் ஆகிவிட்டது)

    அணுகுதல், அண்மை, என்ற சொற்களை ம‌னதில் கொண்டு அணுக்கமாக என்று எழுதினேன். அரசாங்க‌த்திற்கு நெருங்கி அல்லது நெருக்கமாக என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நான் அணுக்கமாக என்று எழுதியதால்
    அது படிப்பவர்களுக்கு விள்ங்குமோ, விளங்காதோ என்று நினைத்து ஐயா இணக்கமாக என்று மாற்றி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன்.அத‌னால் ஒன்றும் தவறில்லை.இது ஒரு எடிடரின் உரிமை. அதனை எழுதுபவன் அங்கீகரிக்க வேண்டும். நானும் ஐயா மாற்றியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

    'இணக்கம்' என்ற சொல் பிள்ளை அவர்களை வெளிநாட்டவரின் அதிகாரத்தையும் ஆட்சியையும் வரவேற்றவர் போலவும், அவர்களுடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்தவரைப் போலவும் பொருள் படுத்துகிறது.உண்மையில் பிள்ளை அவர்கள் தன் அரசுக் கடமையை செவ்வனே ,மன சாட்சிக்குக் குந்தகம் இல்லாமல்,ஆற்றினாலும், வெளி நாட்டவனின் பழக்க வழக்கம், பண்பாடு ஆகியவை பற்றித் தன் டயரியில் விமர்சித்துத்தான் இருக்கிறார்.

    எனவே அவ‌ர் அவர்களை நெருங்கி இருந்தார்;அதாவது அணுக்கமாக இருந்தார்.
    இணக்கமாக இருக்கவில்லை என்று தோன்றுகிறது.

    என்னமோ,தோன்றியது. எழுதிவிட்டேன்.தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
    எதையும் மனதிற்குள் வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லாததால் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன்.தவறாக இருப்பின் மன்னிப்பீர்களாக.

    ReplyDelete
  44. /////////iyer said...
    ///ரொம்ப சிம்பிள்..slideshow ..
    BGM லே எந்த சாங் வேணும்னாலும் போட்டுக்கலாம்..
    நமக்கு வேண்டிய ஸ்நாப்ஸ் கல்லேக்ஷன்
    timeline என்ன லெங்க்த் ன்னு பார்த்துட்டு ஸ்லைட்ஷோ DVD ட்ரை பண்ண வேண்டியதுதான்..///

    அய்யர் சொல்லவந்தது அதையல்ல..
    அந்த பாட்டுல இப்படி

    எதிர்பார்க்கும் share commodity, forex market
    எல்லாம் எப்படி ,,? என்பதை தான்

    அய்யரை நீங்களுமா
    அப்படி பார்க்கின்றீர்கள்...////

    வழக்கம் போலே..புரிதல்தான் பிரச்சினை..

    ப்ளீஸ் லீவ் இட்..வழக்கம் போலே..

    ReplyDelete
  45. //உண்மைதான்..சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..
    உலகளந்த பெருமாள் என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டது நினைவில் வந்து உடனே கூகிளில் தேடி எடுத்து அவளுக்கு சொன்னேன்..அடுத்தமுறை இந்தியா சென்றபோது செல்ல //

    தென்ஆற்காடு மாவட்டம் திருக்கோயிலூரில் உலகளந்தப் பெருமாள் கோவில் உள்ளது. முதல் மூன்று ஆழ்வார்களுடன் குறுகலான இடத்தில் நெருக்கப் பரமன் வந்த ஊரும் இதுதானோ? பாட்டி அதைத்தான் மூன்று ஆழ்வார்களுக்குக் காட்சி கொடுத்தான் என்கிறார்.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. //ஆமா..எங்க நம்ம உமாஜி, தமிழ்விரும்பி ரெண்டு போரையும் காணோம்..

    தீபாவளிக்கு ஊருக்குப் போனவுங்க அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களா?//

    அதானே! இவ்வளவு நடக்குது. கம்முன்னு கிடக்காங்களே.

    இன்னொரு விஷயமும் கொஞ்சம் உதைக்குது.கப்பல் தலைவராக நியமமிக்கப்பட்டவர்,தஞ்சாவூர் பெரியவர், த‌ன் இருப்பை மட்டும் காண்பித்துவிட்டு பொருள் பொதிந்த மெள‌னம் சாதிக்கிறாரே, அது ஏனோ?

    ReplyDelete
  48. //R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    முத்துராம கிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை.நான் உங்களால் தான் தமிழில் எழுது ஆரம்பித்துள்ளேன்.//

    என்னைச்சொல்கிறீர்களா வாத்தியார் ஐயாவையா?
    எனக்கும் வாத்தியார் ஐயாதான் ஊக்கம் அளித்து எழுத வைத்தார்.
    சாதாரணமாக எழுத வருபவர்கள் மற்ற‌வருடைய ஆக்கங்களைப் படித்து 'அட !நாம் கூட இதுபோல எழுதலாம் போல இருக்கே என்று எண்ணித்தான் துவங்குவார்கள்.

    எனக்கு வாத்தியாரின் செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள்தான் வழிகாட்டியது

    உங்கள் பாட்டுக்கு நன்றி ஸ்ரீஷோபனா அவர்களே!

    ReplyDelete
  49. ////kmr.krishnan said...
    அணுகுதல், அண்மை, என்ற சொற்களை ம‌னதில் கொண்டு அணுக்கமாக என்று எழுதினேன். அரசாங்க‌த்திற்கு நெருங்கி அல்லது நெருக்கமாக என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நான் அணுக்கமாக என்று எழுதியதால்
    அது படிப்பவர்களுக்கு விள்ங்குமோ, விளங்காதோ என்று நினைத்து ஐயா இணக்கமாக என்று மாற்றி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன்.அத‌னால் ஒன்றும் தவறில்லை.இது ஒரு எடிடரின் உரிமை. அதனை எழுதுபவன் அங்கீகரிக்க வேண்டும். நானும் ஐயா மாற்றியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.///////

    எடிட்டருக்கும் எழுத்தருக்கும் உண்டான உறவு என்பது இப்படித்தான் இருக்கும்..இடித்துரைத்தல் என்பது சில சமயங்களில் அவசியம்தான்..முகம் வீங்காமல் லாவகமாக விலகி இடிப்பைச் சந்திப்பதும் அவசியம்தான்..

    ஆல் இன் தி கேம்..

    கல்லூரியில் என் முதல் ஆக்கம் ஒன்றை எழுதினேன்..எடிட்டோரியல் போர்டு நெருங்கிய நண்பர்கள் கொண்ட குழு..அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே எழுதினேன்..எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..

    பிரசுரிக்குமுன் எங்கள் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த ஒரு அஸ்ஸோசியாட் லெக்சரேர்(அவர்தான் சீப் எடிட்டர்) ஒருவரால் கதையிலே சில இடங்கள் திருத்தப்படும் என்று எதிர்பார்த்து என்னிடம் சொல்லி அந்த இடங்களைத் திருத்தும்படிக் கேட்டார்கள்..அந்த அஸ்ஸோசியாட் லெக்சரேருக்கும் எனக்கும் சுத்தமாக ஒத்து வராது..எனவே இதைச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்..அப்படித் திருத்தித்தான் வெளியிட வேண்டுமென்றால் என் ஆக்கத்தைப் பிரசுரிக்கவேண்டாம் என்று என்று சொல்லி மறுத்துவிட்டேன்..

    அப்படியே மாற்றமின்றி வெளியிட்டார்கள்..

    அவரிடம் எடிட்டிங் கிளியரன்ஸ் பெற்ற பிறகு அந்த ஆக்கத்தை பிரஸ்ஸிலே கடைசியாகச் சேர்த்ததாக அப்புறமா ரொம்ப நாள் கழித்து என்னிடம் சொன்னார்கள்..

    JARMAN என்று பெயரிடப்பட்ட ஆறுபேர் கொண்ட அந்த நண்பர்கள் குழுவை நினைவு கூர்கிறேன்..

    ReplyDelete
  50. //உங்களுக்கு ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா கொஞ்சம் தீவிரமா ஆயிருக்குன்னு நினைக்குறேன்..
    கொஞ்சம் ஓவர் டோஸ் மேடிகாஷன் வுட் பி தி பெட்டெர் ச்சாய்ஸ்..ஐ தின்க்..//

    என்ன அது காஃபி டிகாஷன் மாதுரி?(பாட்டி ஸ்டைலில் மாதிரி. எப்படி வடிவேலு ஸ்டைலில் எப்படி என்பது எப்பூடி ஆனதோ அதுபோல மாதிரி, மாதுரி ஆகிவிட்டது)

    'May be caution would be the better
    choice!' Is it so?

    Okay agreed.

    ReplyDelete
  51. இன்றைய தினமலர் செய்திப்படி' ட்வீட்டெர், ஃபேஸ்புக் போன்றவற்றில் உறுப்பினரா?' என்ற நிறுவனங்களின் கேள்விக்கு 'ஆம்' என்று பதில் கொடுப்பவருடைய விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்குப் போகின்றனவாம்.

    அலுவலக நேரத்தில் சமூகக் குழுமங்களுக்காக அதிக நேரம் செலவழித்து, நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கும் வண்ணம் பல ஊழியர்களும் நடந்து கொண்டதால் மேற்கத்திய நாடுகளை மையமாகக்கொண்ட நிறுவனக்கள்
    இந்தக் கட்டுப்பாடைக் கொண் டுவந்துள்ளனராம்.எனவே வெளிநாட்டு வேலை என்ற கனவோடு உள்ளவர்கள் தங்கள் சமூக வலைத் தொடர்புகளை அறுத்துக்கொள்வது நல்லது. எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  52. //சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..வந்து என்ன செய்ய?செய்ய வேண்டிய பக்தையின் வேண்டுதலை, கனவுகளை, நியாயமான ஆசைகளை சோதிக்காமல் நிறைவேற்றித்தருவதுதன் கடமை என்று நினைக்காத தெய்வங்கள் கனவில் வந்தால் என்ன? வராமல் போனால்தான் என்ன?
    என்பதுதான் என் கேள்வி..//

    ஏன் இந்த வாட்டம்? நியாயமான ஆசைகளைச் சொல்லுங்கள். பாலாஜியிடம் நான் மனுப்போட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  53. //எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..//

    மைனர்வாள். கதைக்கான‌ மேட்டரு சூப்பரா இருக்கே.மீண்டும் ஒருக்கா அதையே எழுதுங்க. அல்லது கைவசம் இருந்தா மீள் பதிவு போடுங்க.

    ReplyDelete
  54. /////////////kmr.krishnan said...


    ஏன் இந்த வாட்டம்? நியாயமான ஆசைகளைச் சொல்லுங்கள். பாலாஜியிடம் நான் மனுப்போட்டுப் பார்க்கிறேன்.//////////


    already came to ur knowledge for consulting an year before by that fisrt party..

    ReplyDelete
  55. ///////kmr.krishnan said...
    //எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..//

    மைனர்வாள். கதைக்கான‌ மேட்டரு சூப்பரா இருக்கே.மீண்டும் ஒருக்கா அதையே எழுதுங்க. அல்லது கைவசம் இருந்தா மீள் பதிவு போடுங்க.////////

    அந்த இதழ் பிரதி என்னிடம் இல்லை..கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்...

    அப்போ எழுதிய மூட் இப்போ develop ஆகி same content கிடைக்குமா என்றும் தெரியவில்லை..

    எனினும் இதுகுறித்த உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  56. 1.'பாட்டியின் நாட்குறிப்பு' அருமை.

    2. பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானே, ஒரே கஷ்டம் - ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் தெரிவதில்லை. இரண்டுக்கும் நடுவில் என்ன இருக்கிறது என்றும் தெரியாது.
    3. 'we don't start until there is a fire in our tail' நம் மனப்போக்கினை பிரதிபலிக்கும் நல்ல கருத்து.

    ReplyDelete
  57. லால்குடியாரின் பெயர்ப்பு ஆக்கம்.... நன்று உண்மையிலே அந்தப் பாட்டியின் அருகிலே இருந்துக் கேட்டதாகவே உணர்கிறேன்... பாட்டியும் பகவான் கிருஷ்ணனின் மோனத்திலே இருந்து பேறு அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்...

    தேமொழி அவர்களின் ஆராய்ச்சிப் பதிவும் நன்றே! தேடித் தந்தமைக்கு நன்றிகள் சகோதிரி...

    தனுசுக்காரன்.....

    ////முனிவர் தொடர்ந்தார் , "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டு மென்றால் யாரும் பிறக்காமல் இருங்கள்" என்று கூறி முடித்தார்.

    நீதி ; ஜனனம் இருந்தால் மரணம் நிச்சயம்

    “சாகாமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்க வேண்டும்” என்ற பாரசிகப் பழமொழியை வைத்து எழுதப்பெற்ற ஆக்கம்./////

    தங்களின் ஆக்கம் நன்று... பாரசீகப் பழமொழியும்.... நமது வேதாந்தக் கருத்தை சொல்வதால்... காலத்தில் முந்திய வேதாந்தத்தில் இருந்தே பாரசீகத்திற்கும் சென்றிருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்...

    நல்ல ஆக்கம், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

    நண்பர் சபரி நாராயணன் அவர்களின் சிரிப்பூட்டும் ஆக்கம் நன்று என்னை கவர்ந்தது "எங்கே என்று யூகி என்றே விளக்கனைத்தது" எனலாம் தங்களின் பதிவிற்கும் நன்றிகள்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  58. நண்பர் மைனரின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்தால்.... அச்சோ! உங்களோட தளத் தீபாவளியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியல! மத்தாப்பெல்லாம் கொளுத்தி புத்தாடை உடுத்தி... சும்மா... சூப்பரா! ஜமாலிங்க...... தீபாவளி வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்து லட்டு ஜிலேப்பி மாதிரி கொஞ்ச நாள் ஆனாலும் சுவையாக இருக்கும். ஹி..ஹி.. ஹீ..

    ReplyDelete
  59. என் பதிவை இந்த வார மாணவர் மலருக்கு தேர்ந்தெடுத்ததிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  60. எனது ஆக்கத்தை படித்து ரசித்தவர்களுக்கும், கருத்து கூறியவர்களுக்கும் என்நன்றிகள்.
    kmr.krishnan said...
    ///தேமொழி சொந்த ஆக்கங்களை எழுத‌ வேண்டும் அவருக்கு நல்ல மொழியாற்றல் உள்ளது.இந்த ஆக்கத்தில் கொடுத்துள்ள தகவல்களும் நன்றாக உள்ளன.///

    ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்.
    -------------------
    minorwall said...
    ///செம்மொழிக்காரர் தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு இலாக்காவையும் திறத்துடன், தரத்துடன் அவரே கூடுதல் பொறுப்பாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறாரென்று தெரிகிறது..வாழ்த்துக்கள்..///

    வாழ்த்துக்களுக்கு நன்றி மைனர்வாள். அப்படியே என் ஊர், Latitude:N 38° 53' Longitude:W 77° 2' (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை) என்று குறிப்பிட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே.
    -------------------
    thanusu said...
    ///தேமொழியின் உழைப்பு பாராட்டபடவேண்டிய ஒன்று ///

    நன்றி தனுசு, எனக்கு உங்கள் கதை மிகவும் பிடித்தது, அம்புலிமாமா கதை படிப்பது போல் இருந்தது.
    -------------------
    iyer said...
    ///பங்களிப்புக்கு நன்றி
    பகிர்ந்தளித்தமைக்கு வாழ்த்துக்கள்

    தொடருங்கள்... சிகரம்
    தொடடுமளவில் தான் ///

    நன்றி அய்யர் ஐயா, என் பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    -------------------
    R.Srishobana said...
    ///எனக்காக மைக்கேல் ஜாக்சனின் "ஸ்டாட்ஸை"யும்(மன்னிக்கவும் தமிழில் எனக்கு சரியாக தெரியவில்லை)சேர்த்து வெளியிட்ட சக வகுப்பறை தோழி தேமொழிக்கு என் நன்றி.ஒரு தோழியாக தான் இதை கேட்கின்றேன்.உங்கள் முழுப்பெயரே "தேமொழி"யா அல்லது "தேன்மொழி"யா?..////

    என் அப்பா எனக்கு இட்ட பெயர் 'தேமொழி'தான் தோழி.
    -------------------

    ReplyDelete
  61. minorwall said...
    ////நான் எனக்குப் பிடிச்ச நல்ல பாடல்களை BGM மாப் போட்டு இப்படி செலேக்டெட் ஸ்நாப்ஸ் போஸ் கல்லேக்ஷன்லே ஸ்லைட்ஷோ நிறைய பண்ணியிருக்கேன்..
    இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹாபி.////

    மைனர்வாள், உங்கள் காணொளி படைப்புகளைக் காண ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  62. RAMADU Family said...
    Hello frinds, (this is a pure hellow with no intention of hell,,,, hahaha"

    இது மிகவும் சிரிப்பை வர வழைத்தது, நன்றி ராமாடு சார்

    ReplyDelete
  63. ////////தமிழ் விரும்பி said...


    நண்பர் மைனரின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்தால்.... அச்சோ! உங்களோட தளத் தீபாவளியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியல! மத்தாப்பெல்லாம் கொளுத்தி புத்தாடை உடுத்தி... சும்மா... சூப்பரா! ஜமாலிங்க...... தீபாவளி வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்து லட்டு ஜிலேப்பி மாதிரி கொஞ்ச நாள் ஆனாலும் சுவையாக இருக்கும். ஹி..ஹி.. ஹீ..////////


    லெட்ட வந்தாலும் லேடஸ்ட் லட்டு ஜிலேபி கொடுத்துருக்கீங்க..அதுனாலே இன்னும் ஒருவாரம் வெச்சு சாப்பிடலாம்..நன்றி..

    ReplyDelete
  64. /////தேமொழி said...
    வாழ்த்துக்களுக்கு நன்றி மைனர்வாள். அப்படியே என் ஊர், Latitude:N 38° 53' Longitude:W 77° 2' (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை) என்று குறிப்பிட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே./////

    ஒபாமாவுக்கு நேரம் சரியில்லையா?மாமாவை எப்படியாச்சும் ப்ரெசிடென்ட் ஆக்கிடனும்ன்னு கனவு காணுராப்போலே தெரியுதே..

    FBI ஹிட் லிஸ்டிலே உங்க ஜாதகம் வராம பாத்து ட்ரை பண்ணுங்க..

    ReplyDelete
  65. //////தேமொழி said...
    minorwall said...
    ////நான் எனக்குப் பிடிச்ச நல்ல பாடல்களை BGM மாப் போட்டு இப்படி செலேக்டெட் ஸ்நாப்ஸ் போஸ் கல்லேக்ஷன்லே ஸ்லைட்ஷோ நிறைய பண்ணியிருக்கேன்..
    இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹாபி.////

    மைனர்வாள், உங்கள் காணொளி படைப்புகளைக் காண ஆவலாக உள்ளேன்.////
    மெதுவா பாக்கலாம்..ஆர்வத்தை வெளியிட்டதற்கு நன்றி..

    ReplyDelete
  66. //பாட்டியும் பகவான் கிருஷ்ணனின் மோனத்திலே இருந்து பேறு அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்...//

    இதை வெளியிட்டுள்ள சி ஏ ஜி (ஓய்வு) இன்னம்பூராருக்கே 80 வயதுக்கு மேல் ஆயிற்று.எனவே நீங்கள் சொல்லியபடியும் இருக்கலாம் 'அத நா கேக்கலியே'
    தாமதமாக வந்தாலும் வந்துவிட்டீர்கள் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது ஹாலாஸ்யம் ஜி!

    ReplyDelete
  67. //ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்//

    நல்லவேளை 'ஊக்கமூட்டும்' என்று சொன்னீர்கள். 'ஊக்குவிக்கும்' என்று சொல்லியிருந்தால், "ஓ! ஊக்கு கூட கே எம் ஆர் விக்கராரோ" என்று ஒரு பின்னூட்டம் போட மைனர் தயாராகி இருப்பார்.
    பின்னூட்டத்திற்கு நன்றி தேமொழி.

    ReplyDelete
  68. ///////kmr.krishnan said...
    //ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்//

    நல்லவேளை 'ஊக்கமூட்டும்' என்று சொன்னீர்கள். 'ஊக்குவிக்கும்' என்று சொல்லியிருந்தால், "ஓ! ஊக்கு கூட கே எம் ஆர் விக்கராரோ" என்று ஒரு பின்னூட்டம் போட மைனர் தயாராகி இருப்பார்.
    பின்னூட்டத்திற்கு நன்றி தேமொழி.///

    எப்படியோ இந்த 'மாதுரி' நீங்கள் 'ஊக்கு'வித்தால் சரிதான்..

    ச்சே..பாட்டியின் தாக்கம்...

    KMRK சாருக்குத்தான் பாட்டியின் தாக்கம்..எனக்கு பாட்டியின் டைரியின் தாக்கம்தான்..

    ஏற்கனவே முதியோர் இல்லத்து பாட்டியைப் பற்றி விலாவாரியாக வர்ணித்து எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டீர்..

    இப்போ இன்னம்பூர் பாட்டி..இன்னமோ போங்க..

    ReplyDelete
  69. //ஏற்கனவே முதியோர் இல்லத்து பாட்டியைப் பற்றி விலாவாரியாக வர்ணித்து எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டீர்..//

    ஹா ஹா ஹாஆஆஆ

    இன்னும் நினைவுல இருக்காங்களா முதியோர் இல்லப் பாட்டி?
    பரவயில்லை என்னுடைய ஆக்கங்கள் சிலதாவது நினைவில் இருக்கும் ஒருவராவது இருக்கிறீரே!

    நன்றி மைனர்!/

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com