மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.10.11

“என்றும் பதினாறு வயது” இளைஞன் இயற்றிய பாடல்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“என்றும் பதினாறு வயது” இளைஞன் இயற்றிய பாடல்!

பக்தி மலர்

சென்ற இரண்டு பதிவுகளில் நான் திருக்கடையூர் சென்றதைக் குறிப்பிட்டு இருந்தேன்.'திருக்கடையூர்' என்றுதான் பேருந்துகளிலும், பெயர்ப்  பலகை களிலும் காண்கிறது. அதனால் நானும் அவ்வாறே எழுதிவிட்டேன்.

இலண்டனில் இருந்து வந்த பின்னர் த‌ஞ்சாவூர் பெரியவரைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.முதல் பேச்சிலேயே அது 'திருக்கடையூர்'
இல்லை 'திருக்கடவூர்' என்று திருத்தினார்."கடம்', 'அமிர்தக் குடம்' சுவாமியின் திருநாமமே  அமிர்தகடேஸ்வரர். அதனால் அது திருக்கடவூர்.

கடையூர் என்றால் கடைசி, இறுதியான என்று ஆகிவிடும் அல்லவா?" என்று கேட்டார்.

தஞ்சாவூர் பெரியவருக்குத் தமிழில் முதல் அறிமுகமே அபிராமி அந்தாதிதான். அந்தாதியின் 100 படல்களையும் மனப்பாடமாக இந்த 76  வயதிலும் ஒப்பிக்க‌ அவரால் முடியும். அபிராமி அந்தாதி சொற்பொழிவுகள் நிறைய ஆற்றி யிருக்கிறார்.எனவே அந்த ஊர் பற்றிய எல்லாச் செய்திகளும் அவருக்கு அத்துப்படி.

ஒரு பக்கம் என்னை முதல் பேச்சிலேயே இப்படி குட்டிவிட்டாரே என்று சற்று அயர்வாகத்தான் இருந்தது. ஆனால் அவர் சொலவ‌துதான் சரி  என்றும் தோன்றியது. இருந்தாலும் நான் அறிந்த தமிழ் என்னை மேலும் இந்த‌ப் பெயர் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

திருக்கடவூருக்கு பெரும்பாலும் மணிவிழாக் கண்டவர்களும்,சதாபிஷேகம் ,80 வயது முடிந்தவர்களுமே வருகிறார்கள்.தங்க‌ள் வாழ்வின் கடைசி,  இறுதி நாட்களில் அங்கு வருவதால் அதனை திருக்கடையூர் என்றும் சொல்லத் தகும்தானே?! (சும்மனாச்சுக்கும் ஒரு இதுக்கு இப்படி வம்படி பண்றேன்!)

நகரத்தாருக்குப் பிடித்தமான சிவஸ்தலங்களில் காசி, சிதம்பரம் ஆகியவற்றிற்கு அடுத்தபடி திருக்கடவூர் இருக்கும் என்று தோன்றுகிறது.
ஏனெனில் அன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 8 நகரத்தார் குடும்பங்கள் அங்கு மணிவிழா கொண்டாடுவதை எண்ணிப் பார்த்தேன்.

அங்கே உற்சவ சுவாமியின் பெயர் ஸ்ரீகாலஸ‌ம்ஹார மூர்த்தி. அதாவது கால‌னை, யமனை சம்ஹாரம்,வதம் செய்தவர்.அவர் காலனுக்கும் காலன்.

குழந்தை இல்லாத மிருகண்டு முனிவருக்கு குழந்தை வரத்திற்கு ஒரு 'சாய்ஸ்' கொடுக்கப்பட்டது.

'16 வயதே வாழக் கூடிய ஒரு அறிவாளிப் பிள்ளை வேண்டுமா? அல்லது 100 வயது வாழக் கூடிய அம்மாஞ்சிப் பிள்ளை வேண்டுமா?' முனிவர் 16 வயது வாழக் கூடிய அறிவாளிப் பிள்ளையை தேர்ந்தெடுத்தார். மார்க்கண்டேயர் பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

தன் 16வது பிறந்த நாள் அன்று திருக்கடவூர் இறைவனைப் போய் கட்டிக் கொண்டார். வந்த எமன் சுவாமிக்கும் சேர்த்து பாசக்கயிற்றை  வீசினான். வெடித்துக் கிளம்பிய ஸ‌ம்ஹார மூர்த்தி எமனைக் காலால் உதைத்து தள்ளினார்.

"காலா என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் அட! காலா......" என்பார் பாரதி. பாடினாரே தவிர‌ சீக்கிரமே உடலை விட  வேண்டியதாக ஆகிவிட்டது அவருக்கும். பாரதிக்கு காலனை கண்டிக்கும் தோரணை மார்க்கண்டேயர் கொடுத்தது. ஆம்! "என்னை மதி சூடியல்ல‌வா காப்பாற்றுகிறார்!உன்னால் என்னை  என்ன செய்ய முடியும் எமனே?" என்று பாடினார் மார்க்கண்டேயர்.

சந்திரசேகர அஷ்டகம் (மார்க்கண்டேயர் இயற்றியது)
‍‍‍‍‍‍===============================================
1.ரத்ன ஸானுசராஸன ரஜதாத்ரிஸ்ருங்க நிகேதனம்
  ஸிஞ்ஜினீக்ருத பந்நகேஸ்வர(ம் அ)ச்யுதானன ஸாயகம்
  க்ஷிப்ரதக்த புரத்ரயம் த்ரிதிவாலயரபி வந்திதம்
  சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(ரத்தின மலையை வில்லாக வளைத்தவரும்,வெள்ளிப் பனிமலையில் உறைபவரும், வாசுகி என்ற பாம்பினை நாண் ஆக்கியவரும், மஹா
விஷ்ணுவை அம்பாக்கி முப்புரங்களை அழித்தவரையும், முவ்வுலகமும் வணங்குபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான்
வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

2.பஞ்சபாதப புஷ்பதக்த பதாம்புஜத்வய சோபிதம்
பாலலோசன ஜாதபாவக த‌க்தமன்மத விக்ரஹம்
பஸ்மதிக்த கலேபரம் பவநாசனம் பவமவ்யயம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(ஐந்து கல்பக மரங்களின் நறுமண மிகுந்த மலர்களால் பூசிக்கப்படும் கமல பாதங்களை உடையவரும்,மன்மதனின் உடலை நெற்றிக்கண்ணின்
நெருப்பால் சுட்டெரித்தவரும்,உடல் முழுவதும் சாம்பலைப் பூசியவ‌ரும், வாழ்க்கைத் துன்பங்களை  அழிப்பவரும், அழியாத் தன்மையைக்
கொண்டவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

3.மத்தவாரண முக்யசர்ம க்ருதோத்தரீய மனோஹரம்
பங்கஜாஸன பத்மலோசன பூஜிதாங்க்ரி ஸரோருஹம்
தேவஸிந்து தரங்கசீகர ஸிக்தசுப்ர ஜடாதரம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(மதயானையின் தோலை ஆடையாகப் போர்த்தி மனங்கவரும் தோற்றம் அளிப்பவரும், மாலும் நான்முகனும் பூசிக்கும் தாமரைப் பாதம்
கொண்ட வரும்,புனித கங்கையின் நன்னீர் சொட்டும் சடையுடையவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால்
என்ன செய்ய முடியும் என்னை!?)

4.யக்ஷராஜஸகம் பகாக்ஷஹ‌ரம் புஜங்க விபூஷணம்
சைலராஜஸுதாபரிஷ்க்ருத சாருவாம கலேபரம்
க்ஷ்வேல நீலகலம் பரச்வததாரிணம் ம்ருகதாரிணம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(குபேரனின் நண்பரும், பகன் என்ற அசுரனை அழித்தவரும்,சர்பத்தை ஆபரணமாக அணிந்தவரும்,இமவான் ஆகிய மலை அரசனின் மகளை
இடப் பாகத்தில் கொண்டவரும், கழுத்தில் விஷ நீல நிறம் உடையவரும், மானையும் மழுவையும் தரித்தவ‌ரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா
நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

5.குண்டலீக்ருத குண்டலேஸ்வர குண்டலம் வ்ருஷவாஹனம்
நாரதாதி முனீஸ்வரஸ்துத வைபவம் புவனேஸ்வரம்
அந்தகாந்தக மாஸ்ரிதாமர பாதபம் சமனாந்தகம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(காதில் குண்டலங்களாகப் பாம்புகளை அணிந்தவரும்,நாரதரைப் போன்ற‌ முனிபுங்கவர்களால் வணங்கப்படுபவரும்,அகில பிரபஞ்ச  நாயகரும், அந்தகாசுரன் என்ற அசுரனை அழித்தவரும், காலனை அழித்தவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே!
உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

6.பேஷஜம் பவரோகிணாம் அகிலாபதா மபஹாரிணம்
தக்ஷ யஞவிநாசனம் த்ரிகுணாத்ம‌கம் த்ரிவிலோசனம்
புக்திமுக்தி பலப்ரதம் ஸகலாகஸங்க நிபர்ஹணம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(வாழ்வின் அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவ‌ரும்,எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பவரும், தக்ஷ‌னின் கேடான யக்ஞத்தை
அழித்தவரும், முக்குணங்களும் ஒருசேர உடையவரும், முக்கண்கள் உடையவரும்,புத்தி,பக்தி,முக்தி அளிப்பவரும்,எல்லா பாவங்களையும்
போக்குபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

7.பக்தவத்ஸல மர்சிதம் நிதி மக்ஷயம் ஹரிதம்பரம்
ஸர்வபூதபதிம் பராத்பர மப்ரமேய மனுத்தமம்
ஸோம வாரி நபோ ஸூதாசன ஸோமபானிலகா க்ருதிம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(பக்தர்களுக்குப் பிரியமானவரும்,வற்றாத செல்வம் உடையவரும்,திசைகளை ஆடையாய் அணிந்தவரும்,எல்லா உயிரினங்களின் நாயகரும், அடைய  முடியாத கடவுளையும் தாண்டி இருப்பவரையும், யாருக்கும் விளங்காதவரை யும்,புனிதமானவற்றுக்கெல்லாம்  புனிதமானவரையும்,சந்திரன்,சூரியன்,நீர், பூமி,தீ,காற்று வெளி ஆகியவற்றால் வணங்கப்படுபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான்  வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

8.விஸ்வஸ்ருஷ்டி விதாயினம் புனரேவ பாலன தத்பரம்
ஸம்ஹரந்தபி ப்ரபஞ்ச மசேஷலோக நிவாஸினம்
க்ரிடயந்த மஹர்நிசம் கணநாதயூத ஸமன்விதம்
சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:

(இந்த ப்ரபஞ்சத்தை உருவாக்குபவரும், காப்பவரும் தக்க காலத்தில் அழிப்பவரும்,எல்லா உயிரினங்களிலும் வாழ்பவரும்,எல்லா
உயிர்களோடும் பகலிலும் இரவிலும் ஆடிக் களிப்பவரும் தலைவராக இருந்தும் சமபாவத்துடன் அனைவரிடமும் பழகுபவரும் ஆகிய
மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

இப்பாடலை வாசிப்பதனால் ஏற்படும் பலன் என்ன?

பல ஸ்ருதி!
===================
மிருகண்டு முனிவ‌ரின் குமாரரால் இயற்றப்பட்ட இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால், யமபயம் நீங்கும், ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்,தன  தானிய நிறைவு உண்டாகும், இறுதியில் மதிசூடியார் முக்தியும் அளிப்பார்.

பாடலை இந்த இணைப்பில் கேட்டு மகிழுங்கள் .

வாழ்க வளமுடன்

http://www.youtube.com/watch?v=RTzhYWceIxk

ஆக்கியோன்:
வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)

+++++++++++++++++++++++++++++++++++++++++
நமது வகுப்பறை மாணவர் திருவாளர் விசுவநாதன் அவர்கள் 
அனுப்பிய நவராத்திரி விஷேசப் படம் கீழூ உள்ளது. 
நீங்களும் கண்டு மகிழ் வலை ஏற்றியுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------

============================================================
வாழ்க வளமுடன்!

56 comments:

  1. ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!

    'ஆஸ்ரயே'என்ற சொல் 'சரணடைகின்றேன்' என்றும் பொருள் கொடுக்கும். வணங்குகிறேன் என்பதை 'சரணாகதி செய்கிறேன்' என்றும் வாசித்துக் கொள்ளலாகும்.

    ஐயரின் அம்பிகை படம் அருமை. எனக்கும் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கும் நன்றி.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்

    திருக்கடவூர் என்பது சரிதான். எல்லா துன்பங்களும் அபிராமி அந்தாதி படிப்பதினால் விலகும் என்பதனை நான் அனுபவத்தில் கண்ட உண்மை.. நன்றி அய்யா .

    ReplyDelete
  3. "மந்திரம் வலிமை"
    மகாகவியின் திருவாக்கு.

    நல்ல ரம்யமான குரல்களும் ரமணீயமான இசையில் திவ்யமான பாடல்கள் நிறைந்த பதிவு.
    பாடல்கள் ஏழும், எட்டும் கடுகை துளைத்து கடலை புகுத்தியது!

    அன்பர் விஸ்வநாதன் அவர்கள் அனுப்பி வகுப்பறையில் அலங்காரமாக அனைவரின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ள அன்னை அன்னபூரணியின் படம் அருமை..

    நன்றிகள் வணக்கம்,

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. கே.எம்.ஆரின் பதிவினைக் கண்டேன். திருக்கடவூர் பெயர் குறித்தும் எழுதியிருந்தார். நகரத்தார் அங்கு பெருமளவில் வந்து தங்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய நிகழ்ச்சிகளை செய்து கொள்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். ஆம்! சோழ நாட்டின் தலைநகராகப் பூம்புகார் நகரம் இருந்த காலத்தில்,கடல் வாணிபத்தில் ஈடுபட்டு அங்கு வாழ்ந்த வணிகப் பெருமக்கள், அதன் அருகிலிருந்த திருக்கடவூர் அவர்களுக்குக் குலதெய்வமாக இருந்தது. பின்னர் பூம்புகாரைக் கடல்கொண்ட பிறகு அவர்கள் கடல் வாணிபத்துக்கு ஏற்ற இடம் தேடிச் சென்றபோது பாண்டிய நாட்டில் இப்போதுள்ள செட்டிநாட்டுப் பகுதியை விரும்பி பாண்டிய மன்னனிடம் அவ்விடத்தில் தாங்கள் தங்கிக் கொண்டு தொண்டி துறைமுகத்தைத் தங்கள் வணிகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டினர். பாண்டிய மன்னர் மனமுவந்து அளித்தார். பூம்புகார் எனும் நகரத்திலிருந்து குடிபெயர்ந்தமையின் அவர்கள் "நகரத்தார்" என அழைக்கப்பட்டனர். அவர்கள் பகுதிகளில் பல கோயில்களை அமைத்துக் கொண்டாலும், அவர்களது பூர்வீக குலதெய்வமான அமிர்தகடேஸ்வரரையும், அபிராமி அம்மையையும் மறக்காமல் அங்கு சென்று மேற்படி நிகழ்ச்சிகளைச் செய்து கொள்கிறார்கள். பழமையையும், பண்பாட்டையும் மறக்காமல் கடைப்பிடிப்பவர்கள் நகரத்தார். இந்த செய்தியைச் சொல்லும் வாய்ப்பை வழங்கிய கே.எம்.ஆர்., ஆசிரியர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. எனக்கு தெரியாத ஒரு புதிய தகவலைத் தெரிந்துக் கொண்டேன். முருகருக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறதென்றும் இங்கே திருக்கடவூரில் இருப்பது மூன்றாம் படை வீடு என்றும் படித்தேன். தகவல் உபயம் தினமலர் நாளிதழ். http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=2807

    ReplyDelete
  6. அபிராமி அம்மை என்றதும் இன்னொன்று எனக்கு ஞாபகத்திற்கு வரும். அது அபிராமி அம்மை திருப்பதிகம்.

    கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
    கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
    சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
    தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
    தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
    துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
    அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (1)

    ஒன்றுதான் கொடுத்திருக்கிறேன். மொத்தம் பதினொன்று இருக்கிறது. முதல் பாடலிலேயே வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அடங்கி விடுவது போல் இருக்கிறது. எனக்கு கடைசியாக கேட்ட அபிராமியின் பாதத்தில் அன்பு அது ஒன்றே போதும்.

    ReplyDelete
  7. இன்றைய இதழ் நன்றாக இருந்தது அய்யா...

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!
    'ஆஸ்ரயே'என்ற சொல் 'சரணடைகின்றேன்' என்றும் பொருள் கொடுக்கும். வணங்குகிறேன் என்பதை 'சரணாகதி செய்கிறேன்' என்றும் வாசித்துக் கொள்ளலாகும்.
    ஐயரின் அம்பிகை படம் அருமை. எனக்கும் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கும் நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. //////Blogger sekar said...
    அய்யா வணக்கம்
    திருக்கடவூர் என்பது சரிதான். எல்லா துன்பங்களும் அபிராமி அந்தாதி படிப்பதினால் விலகும் என்பதனை நான் அனுபவத்தில் கண்ட உண்மை.. நன்றி அய்யா //////

    கண்ட உண்மையைச் சொல்வதற்கும் ஒரு மேன்மை வேண்டும். உங்களிடம் அது உள்ளது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////Blogger தமிழ் விரும்பி said...
    "மந்திரம் வலிமை"
    மகாகவியின் திருவாக்கு.
    நல்ல ரம்யமான குரல்களும் ரமணீயமான இசையில் திவ்யமான பாடல்கள் நிறைந்த பதிவு.
    பாடல்கள் ஏழும், எட்டும் கடுகை துளைத்து கடலை புகுத்தியது!
    அன்பர் விஸ்வநாதன் அவர்கள் அனுப்பி வகுப்பறையில் அலங்காரமாக அனைவரின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ள அன்னை அன்னபூரணியின் படம் அருமை..
    நன்றிகள் வணக்கம்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    உங்களின் இரசிப்புத்தன்மைக்குப் பாராட்டுக்கள். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. //////Blogger Thanjavooraan said...
    கே.எம்.ஆரின் பதிவினைக் கண்டேன். திருக்கடவூர் பெயர் குறித்தும் எழுதியிருந்தார். நகரத்தார் அங்கு பெருமளவில் வந்து தங்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய நிகழ்ச்சிகளை செய்து கொள்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். ஆம்! சோழ நாட்டின் தலைநகராகப் பூம்புகார் நகரம் இருந்த காலத்தில்,கடல் வாணிபத்தில் ஈடுபட்டு அங்கு வாழ்ந்த வணிகப் பெருமக்கள், அதன் அருகிலிருந்த திருக்கடவூர் அவர்களுக்குக் குலதெய்வமாக இருந்தது. பின்னர் பூம்புகாரைக் கடல்கொண்ட பிறகு அவர்கள் கடல் வாணிபத்துக்கு ஏற்ற இடம் தேடிச் சென்றபோது பாண்டிய நாட்டில் இப்போதுள்ள செட்டிநாட்டுப் பகுதியை விரும்பி பாண்டிய மன்னனிடம் அவ்விடத்தில் தாங்கள் தங்கிக் கொண்டு தொண்டி துறைமுகத்தைத் தங்கள் வணிகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டினர். பாண்டிய மன்னர் மனமுவந்து அளித்தார். பூம்புகார் எனும் நகரத்திலிருந்து குடிபெயர்ந்தமையின் அவர்கள் "நகரத்தார்" என அழைக்கப்பட்டனர். அவர்கள் பகுதிகளில் பல கோயில்களை அமைத்துக் கொண்டாலும், அவர்களது பூர்வீக குலதெய்வமான அமிர்தகடேஸ்வரரையும், அபிராமி அம்மையையும் மறக்காமல் அங்கு சென்று மேற்படி நிகழ்ச்சிகளைச் செய்து கொள்கிறார்கள். பழமையையும், பண்பாட்டையும் மறக்காமல் கடைப்பிடிப்பவர்கள் நகரத்தார். இந்த செய்தியைச் சொல்லும் வாய்ப்பை வழங்கிய கே.எம்.ஆர்., ஆசிரியர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.//////

    நகரத்தார்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வியப்பாக உள்ளது. நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  12. //////Blogger ananth said...
    எனக்கு தெரியாத ஒரு புதிய தகவலைத் தெரிந்துக் கொண்டேன். முருகருக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறதென்றும் இங்கே திருக்கடவூரில் இருப்பது மூன்றாம் படை வீடு என்றும் படித்தேன். தகவல் உபயம் தினமலர் நாளிதழ். http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=2807//////

    அங்கே குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானுக்கு கள்ள விநாயகர் என்று பெயர். அவருக்காகப் பாடல் ஒன்றும் உண்டு. உண்ணும்போதும், உறங்கும்போதும் என்று துவங்கும். மற்ற வரிகள் நினைவில் இல்லை!

    ReplyDelete
  13. Blogger ananth said...
    அபிராமி அம்மை என்றதும் இன்னொன்று எனக்கு ஞாபகத்திற்கு வரும். அது அபிராமி அம்மை திருப்பதிகம்.
    கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
    கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
    சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
    தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
    தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
    துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
    அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (1)
    ஒன்றுதான் கொடுத்திருக்கிறேன். மொத்தம் பதினொன்று இருக்கிறது. முதல் பாடலிலேயே வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அடங்கி விடுவது போல் இருக்கிறது. எனக்கு கடைசியாக கேட்ட அபிராமியின் பாதத்தில் அன்பு அது ஒன்றே போதும்.////////

    ஆமாம் ஆனந்த்! நானும் அடிக்கடி கேட்கும் பாடல். ஒரே பாடலில் மனிதத் தேவைகள அனைத்தையும் உள்ளடக்கிவிட்ட மேன்மையை என்ன சொல்வது? அம்பாளின் அருள் அவருக்குப் பரிபூரணமாகக் கிடைத்ததே அதற்குக் காரணம்!

    ReplyDelete
  14. /////Blogger Nila said...
    இன்றைய இதழ் நன்றாக இருந்தது அய்யா...////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. மிக அருமையான பக்தி மலர் பதிவு நவராத்திரி நாட்களில் வகுப்பறை முழுவதும் பக்திமணம் கமழ்கிறது,

    சந்திரசேகர அஷ்டகம் தமிழாக்கதுடன் மெய்சிலிர்க்கின்றது.

    நன்றி!நன்றி!நன்றி!

    முருகராஜன்.

    ReplyDelete
  16. வணக்கம் kmr.krishnan

    சந்திரசேகர அஷ்டகம் அருமை

    ReplyDelete
  17. ஐயா, இந்த சந்திரசேகர அஷ்டகம் பதிவின் மூலம்
    "பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
    லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
    அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
    மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே."
    என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது.
    பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  18. அருமையான ஆக்க்ம்

    மனசு சந்தோஷமாக இருக்கு!

    திரு. கே.முத்துரமகிருஷ்ணன் அவர்களை வணங்குகிறேன்

    நன்றி!

    Sundar.K

    ReplyDelete
  19. ஆசிரியரின் இன்றைய பதிவு மிகவும் அருமை.எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றினால் எல்லாத்துன்பங்களையும் அந்த ஆடல்வல்லான் தாங்கிக் கொள்வான் அல்லது தாங்கும் மனவலிமையையும் தருவான்.தாங்களுக்கும் அந்த இறைவன் என்றும் மார்க்கண்டேயனாக இருக்க வரம் அருளட்டும்.தாங்கள் செய்யும் அரும்பணி தொடர அருள்புரியட்டும்.

    ReplyDelete
  20. சோதிட வகுப்பறை என்பதால் இந்தப்பதிவு சார்ந்த ஒரு முக்கியமான சோதிடவிஷயத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..
    நட்சத்திரப் பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முக்கியமாகப் பார்க்கிறார்கள்..
    இது பொருந்தாவிடில் மணமகன் ஆயுள் இழப்பு என்கிற ரீதியில் பெரும் மனச்சங்கடம் என்பதால் ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் யாருமே இதைத் தவிர்ப்பார்கள்..திருக்கடவூர்தான் இதற்கு பரிகாரஸ்தலம் ..இந்த வகையிலே எனக்கு இப்படி ஒரு அபாயம் இருப்பதாக சொல்லி அதனடிப்படையில் குடும்பத்தினருடன் ஒருதரம் அமிர்தகடேஸ்வரரைத் தரிசித்தோம்..எல்லோருக்குமில்லாத வகையிலே சில ஸ்பெஷல் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு கடைசியில் KMRK அவர்கள் சொல்லியிருக்கும் காலனை காலால் சிவனார் மிதிக்கும் சிலையின் பாகம் பாதிப்புக்குள்ளான ஜாதகருக்கு தரிசனமாகக் காண்பிக்கப்பட்டு மூடப்பட்டதாக நினைவு..சற்று கலங்கலான நினைவு..

    ReplyDelete
  21. வணக்கம் அய்யா,
    இன்று வகுப்பறையில் தெய்வீக மணம் கமழ தேன் சொட்ட இனிய சந்திரசேகர அஷ்டகம் பாடலை படித்தேன்...மேலும் நான் மிகவும் வணங்கும் சிவபெருமானை போற்றும் பாடலையும், படங்களையும் வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள்...மேலும் தொடர்ந்து சில ஆன்மிக கருத்துக்களையும்,வழிபாட்டு முறைகளையும் கூறினால், என் போன்றவர்கள் அறிந்து பயனடைவர்.

    ReplyDelete
  22. ////Blogger RMURUGARAJAN said...
    மிக அருமையான பக்தி மலர் பதிவு நவராத்திரி நாட்களில் வகுப்பறை முழுவதும் பக்திமணம் கமழ்கிறது,
    சந்திரசேகர அஷ்டகம் தமிழாக்கதுடன் மெய்சிலிர்க்கின்றது.
    நன்றி!நன்றி!நன்றி!
    முருகராஜன்.////

    நல்லது. நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  23. /////Blogger RAMADU Family said...
    வணக்கம் kmr.krishnan
    சந்திரசேகர அஷ்டகம் அருமை/////

    நல்லது. நன்றி ராமுடு சார்!

    ReplyDelete
  24. /////Blogger தேமொழி said...
    ஐயா, இந்த சந்திரசேகர அஷ்டகம் பதிவின் மூலம்
    "பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்,
    பிறந்துவிட்டாலிறவாதிருக்க மருந்துண்டு காணிது
    வெப்படியோ அறமார் புகழ்த்தில்லை
    யம்பலவாண ரடிக்கமல மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே."
    என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது.
    பதிவிற்கு நன்றி/////

    பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுகை, மோனை எல்லாம் தட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் இலக்கண சுத்தமாக இருக்கும் சகோதரி!

    ReplyDelete
  25. ///////Blogger Uma said...
    நல்ல பதிவு!/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. //////Blogger sundarkmy said...
    அருமையான ஆக்கம்
    மனசு சந்தோஷமாக இருக்கு!
    திரு. கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களை வணங்குகிறேன்
    நன்றி!
    Sundar.K/////

    உங்கள் வணக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். நன்றி!

    ReplyDelete
  27. /////Blogger Rajaram said...
    ஆசிரியரின் இன்றைய பதிவு மிகவும் அருமை.எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றினால் எல்லாத்துன்பங்களையும் அந்த ஆடல்வல்லான் தாங்கிக் கொள்வான் அல்லது தாங்கும் மனவலிமையையும் தருவான்.தாங்களுக்கும் அந்த இறைவன் என்றும் மார்க்கண்டேயனாக இருக்க வரம் அருளட்டும்.தாங்கள் செய்யும் அரும்பணி தொடர அருள்புரியட்டும்.//////

    நல்லது. நண்பரே. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  28. //////Blogger minorwall said...
    சோதிட வகுப்பறை என்பதால் இந்தப்பதிவு சார்ந்த ஒரு முக்கியமான சோதிடவிஷயத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..
    நட்சத்திரப் பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முக்கியமாகப் பார்க்கிறார்கள்..
    இது பொருந்தாவிடில் மணமகன் ஆயுள் இழப்பு என்கிற ரீதியில் பெரும் மனச்சங்கடம் என்பதால் ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் யாருமே இதைத் தவிர்ப்பார்கள்..திருக்கடவூர்தான் இதற்கு பரிகாரஸ்தலம் ..இந்த வகையிலே எனக்கு இப்படி ஒரு அபாயம் இருப்பதாக சொல்லி அதனடிப்படையில் குடும்பத்தினருடன் ஒருதரம் அமிர்தகடேஸ்வரரைத் தரிசித்தோம்..எல்லோருக்குமில்லாத வகையிலே சில ஸ்பெஷல் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டு கடைசியில் KMRK அவர்கள் சொல்லியிருக்கும் காலனை காலால் சிவனார் மிதிக்கும் சிலையின் பாகம் பாதிப்புக்குள்ளான ஜாதகருக்கு தரிசனமாகக் காண்பிக்கப்பட்டு மூடப்பட்டதாக நினைவு..சற்று கலங்கலான நினைவு..//////

    தகவல் பகிர்விற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  29. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    இன்று வகுப்பறையில் தெய்வீக மணம் கமழ தேன் சொட்ட இனிய சந்திரசேகர அஷ்டகம் பாடலை படித்தேன்...மேலும் நான் மிகவும் வணங்கும் சிவபெருமானை போற்றும் பாடலையும், படங்களையும் வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள்...மேலும் தொடர்ந்து சில ஆன்மிக கருத்துக்களையும்,வழிபாட்டு முறைகளையும் கூறினால், என் போன்றவர்கள் அறிந்து பயனடைவர்.//////

    ஆகா, செய்துவிடுகிறோம் சகோதரி! உங்கள் விருப்பம் நிறைவேறும்!

    ReplyDelete
  30. மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.அப்படியே வந்தாலும் தஞ்சைப்பெரியவரிடம் நான் வாங்கிய குட்டைப் பற்றி ஏதாவது சொல்வார் என்றே எண்ணியிருந்தேன்.

    அவர் என்னடாவென்றால் திருக்கடவூர் பற்றி ஆத்மார்த்தமான செய்தியைச் சொல்லி 'டச்சிங்' பண்ணிட்டார்.

    'திருக்கடவூர் சென்று வந்தது முதலே என்னவோ ஒரு மாதிரி இருக்கேளே! ஒரே சிவப் பித்தா இருக்கே!' என்று மாமி வேறே கேள்வி மேலே கேள்வி.

    ReplyDelete
  31. உங்களுடைய இன்றைய பதிவை கே.எம்.ஆர். எழுதினாலும் எழுதினார், திருக்கடவூரின் சிறப்புகள் எல்லாம் வெளிவந்துவிட்டன. அவற்றில் ஜப்பான் மைனரின் எழுத்துக்குச் சில மேலதிகச் செய்திகளைச் சொல்ல விழைகிறேன். இவ்வூரில் இறைவன் 'அமிர்தகடேஸ்வரர்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாற்கடலில் அமிழ்தம் கிடைக்குமுன்பு ஆலகால விஷம் கிடைக்க அதை சிவபெருமான் வாங்கி உண்ண, அம்மை அவர் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்காமல் தடுத்ததால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றதாக புராணம். அடுத்து மார்க்கண்டனுக்கு 14 வயது என்ற காரணத்தால் காலன் அவன் உயிரைப் பறிக்க வந்த போது அவன் சிவன் கால்களைக் கட்டிக்கொள்ள, அவர் எமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். இந்தக் காரணம் கொண்டு அவருக்கு இங்கு 'காலசம்ஹாரமூர்த்தி' என்று பெயர். இந்த காலசம்ஹாரமூர்த்தியின் விக்ரகம் ஜப்பான் மைனர் சொன்னது போல சந்நிதியின் இடப்புறம் ஒரு தனியிடத்தில் மூடியே வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான சந்தர்ப்பங்களில், முக்கிய நபர்களுக்கு அந்த விக்கிரகத்தின் அடிபாகத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் பித்தளை மூடியை விலக்கி சிவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் காலனைக் காட்டி தரிசிக்கச் செய்வார்கள். அந்த தரிசனம் தான் மைனர் அவர்கள் செய்திருக்கிறார்கள். வந்த வினை தீரும், இறைவன் அருளும் கிட்டும். இந்த தரிசனத்தின் பலன்கள் இவை என்று சொல்கிறார்கள். கார்த்திகை சோமவாரம் இவ்வாலயத்தில் 1008 சங்கு அபிஷேகம் உண்டு. என் மிகச் சிறிய வயதில் 5க்குள் பலமுறை அபிஷேகத்துக்கு மண்டபத்திலிருந்து சங்கை எடுத்துச் சென்று அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கிறேன்.வாழ்க!

    ReplyDelete
  32. ////kmr.krishnan said...
    மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.//////

    எதற்கும் குதர்க்கம் பண்ணும் ஆசாமியல்ல நான் என்று புரிந்துகொண்டதற்கு நன்றி..
    KMRK அவர்களே..

    பெரும்பாலும் இப்படி(பொருத்தம்) தப்பி வந்தவர்களுக்குத்தான் அந்த ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும்..எல்லோருக்கும் கிடைக்காது..
    அவசியமும் இல்லை..அப்படியோர் அனுபவம் இருந்தது என்பதால் பகிர்ந்துகொண்டேன்..

    ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..
    எது எப்படியோ, நாம் நம்புகிறோமோ இல்லையோ குடும்பம் என்று வந்துவிட்டால் உட்காரச் சொல்கிற இடத்தில் உட்கார்ந்து
    குடும்பத்தாரின்
    நம்பிக்கைக்காகவாவது
    அவர்களின் மனக்கலவரத்தை
    இந்(து)த வழிதான் போக்குமென்றால் அதற்காக விட்டுக்கொடுத்துப் போகும் பழக்கமுடையவன் நான்..இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் இருந்தால் தாங்கள் தெரிவிக்கலாம்..

    ReplyDelete
  33. இந்தப் பதிவிற்கு...சிவஞான சித்தியாரின்
    இந்தப் பாடலை நினைவு கூர்கிறோம்..

    "சித்தாந்தத்தே சிவன் தன்
    திருக்கடைக் கண் சேர்த்த்திச்

    செனனம் ஒன்றிலே சீவன் முத்தர் ஆக வைத்து ஆண்டு மலம் கழுவி

    ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும் பிறப்பை அறுத்து

    முத்தாந்தப் பாதமலர்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம்

    மூர்க்கர் ஆகிப் பித்தாந்தப் பெரும் பிதற்றுப் பிதற்றிப்

    பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவார் இது என்ன பிராந்தி..!!"
    (விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்)

    வகுப்பிற்கு வரும் அறிஞர் தம் வாக்கு
    வாசித்துப் பாருங்களேன்..


    "மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும்" – ஷேக்ஸ்பியர்

    ReplyDelete
  34. ///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///

    நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம்.

    எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.

    ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது.
    பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை.

    ReplyDelete
  35. வகுப்பில் அரங்கேற்றப்பட்டதங்கத்தை
    வகை படுத்திய அந்த படம்

    அஞ்சலில் வந்தது..அய்யருக்கு..
    அந்த பிரபல நகை கடையிலிருந்து..

    அரங்கேற்றம் செய்தமைக்கும்
    அது பற்றி கருத்து சொன்னமைக்கும்

    அய்யர் தருகிறார் வாழ்த்துக்களும்
    அன்பான வணக்கங்களும்..

    ReplyDelete
  36. சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்... அது தான் உண்மை ஒருவேளை அதை மற்றவர்களும் செய்து பார்க்கலாம். சரி விசயத்திற்கு வருகிறேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன் வருடம் இருக்கும்.. தஞ்சை சீமையில் அமைந்த கோவில்களுக்கான சுற்றுலா சென்று வந்தோம் (இப்போதுள்ள பூம்புகாரும் சேர்த்தே).

    அந்த சமயத்தில் திருகடவூரும் சென்றோம் மற்றக் கோவில்கள் எனது நினைவில் சரியாக இல்லை. திருக்கடவூர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.. கோவில் பிரகாரம் மழையின் காரணமாக பாசிபடிந்த சுவர் கரும் பச்சை நிறத்தில் காய்ந்து இருந்தது... அப்போது நான் அந்தக் கோவிலை வலம் வரும் போது சுவற்றில் சிலர் சிறு குச்சிகளை வைத்து சுவர் பாழாகாத வண்ணம் தங்களது பெயர்களையோ அல்லது விருப்பப் பட்டவர் பெயர்களையோ எழுதி இருப்பதைப் பார்த்தேன்.

    அந்த சமயம் உடனே எனக்கும் ஒரு ஆவல் உடனே எனக்கு விருப்பமான எனது தூரத்து உறவு முறைப் பெண்ணின் பெயரை (என் பெயரோடு என்று தான் நினைக்கிறேன்) எழுதினேன். அந்த நிகழ்வு என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது. அதன் பின்பு ஏழுவருடம் சென்று தான் எனக்கு திருமணம் நடை பெற்றது. இருந்தும் அந்த அபிராமியைப் பற்றிய பேச்சு வந்தாலோ, திருக்கடவூர் பற்றிப் பேசினாலோ அந்த விஷயத்தை நான் ஏன் மனைவியிடமும், இன்றும் குழந்தைகளிடமோ சொல்லாமல் இருப்பதில்லை.

    காரணம் அந்தப் பெண்ணே எனது மனைவியாக வந்தப் பிறகு தயக்கம் ஏன்?..........
    என்ன? நகைக்கும் படியாக இருக்கிறதா? அது தான் உண்மை. ஏதோ அப்படி ஒரு சிந்தனை வந்தது.. செய்தேன். உண்மையில் இன்றுவரை அது எனக்கு பெரிய தெய்வ அருளாகவேத் தோன்றுகிறது.

    அதிலும் பெரியவர் திரு.வெ.கோ. ஐயா அவர்கள் சொன்னவுடன் இப்போது நானும் அறிகிறேன் அங்கே இருக்கும் ஈசனின் பெயர் தான் எனக்கும் வைத்து இருக்கிறார்கள். (ஹாலாஸ்யம் = ஆலால சுந்தரம் = ஆலாஸ்ய சுந்தரம்).

    காதலர்கள் (நாங்கள் காதலர்களாக அதற்கு முன்னும் பின்னும் நிச்சயிக்கும் வரை இருந்ததில்லை)அது ஒரு தலையாக இருந்தாலும் முயற்சிக்கலாம் அபிராமி அருள் புரிவாள்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  37. ///பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுகை, மோனை எல்லாம் தட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் இலக்கண சுத்தமாக இருக்கும் சகோதரி!///
    ஐயா,
    இந்த தளத்தில் --- http://www.shaivam.org/tamil/sta_pattinattar_u.htm
    16 வது செய்யுளாக இருப்பது அது.
    "பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
    லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
    அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
    மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16"

    ReplyDelete
  38. அன்புள்ள ஆசிரியருக்கு,

    சந்திரசேகராஷ்டகம் மிக அருமை. சிவபெருமானை போற்றிக் கொண்டே இருக்கலாம். அதிலும் வடக்கில் சிவ வழிபாடு பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திங்கட்கிழமை அன்று காலை ஒரு வரிசையே நின்றிருக்கும். தாமிர சொம்பில் நீர், மலர் மாலைகள், மஞ்சள் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நிற்பார்கள். தன் கைப்பட "ஓம் நமசிவாய" என்று சொல்லிக் கொண்டு, சிவபெருமானின் தலைமேல் மெதுவாக நீரை ஊற்றும் அழகே அழகே. சிவராத்திரி அன்று கவர்மெண்ட் லீவு இங்கு தான் காண்கிறேன். அன்று சிவனை காண குறைந்தது 3 (அ) 4 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும். மற்றபடி சிராவண் மாசத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளும் உபவாசம் செய்கிறார்கள்....தமிழ் நாட்டில் கூட இத்தனை தீவிரமான பக்தியை காணவில்லை.
    ஒருவேளை செல்வசெழிப்பிற்கு இந்த தீவிரமான சிவபக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    சந்திரசேகராஷ்டகத்தை போலவே மற்றுமொரு சிறப்பான ஸ்தோத்ரம் மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். நீலகண்டம் நீலகண்டம் என்று முடியும் என்று ஞாபகம். சிறு வயதில் படித்தது. மிருத்யுஞ்சய அஷ்டோத்ரமும் மிகவும் சக்தி வாய்ந்தது. முடிந்தால் இவ்விரண்டையும் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  39. ///sriganeshh said...
    மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம்..//
    இதுவும் ஆயுள் பிரச்சினை சார்ந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

    ReplyDelete
  40. ////////தமிழ் விரும்பி said...
    சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்...///////

    தமிழ்விரும்பி சித்தர் பித்துப் பிடித்து அலைந்த கதை படித்தோம்..
    கடைசியில் சத்சித் ஆனந்தம்
    பெற்றது சிறப்பு..

    காரியசித்தி செய்ததால் சித்தரென்றேன்..

    சொக்கத்தங்கம் என மறுக்காமல் சொல்லலாம் அவரைக் கைபிடித்திருப்பவரை..

    வாழ்க..வளமுடன்..

    ReplyDelete
  41. kmr.krishnan said...
    ///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///

    நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம்.

    எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.

    ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது.
    பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை./////

    சிரசுரஜ்ஜு(கணவருக்கு ஆயுள்கண்டம்) மிருகசீரிஷம்,சித்திரை,அவிட்டம் இந்த நட்ஷத்திரங்களுக்குள் தம்பதியினர் வந்தால் மட்டுமே..

    இதுவே சிவியர் பிரச்சினைக்குள்ளாகும் அமைப்பு..சோதிடரீதியாக சிவியாரிடி ரேட்டிங்கிலே முதலிடம்..

    KMRK சொல்லியிருக்கும் அனுஷம், பூசம் combo (ஊருரஜ்ஜு)
    சிவியாரிடி ரேட்டிங்கிலே நான்காமிடம்..
    பணநஷ்டம் என்று சொல்லப்படுகிறது..

    தசா சந்தி, எகனத்ஷத்திராதிபதி, சிரசுரஜ்ஜு(கணவருக்கு ஆயுள்கண்டம்) என்று அடுக்கி சொல்லப்பட்ட தம்பதியர் பொருத்தம் சார்ந்த பிரச்சினைகளில் நடந்துவிட்ட நிகழ்வுகளை மறந்து KMRK சொல்லியிருக்கும்

    நடக்கப்போகும் நல்ல விஷயங்களை எண்ணி இந்த வகை ஜாதக அமைப்பில் சிக்கியுள்ளோர் மேல்வாழ்வைத் தொடர்வது உசிதம்..

    அந்த வகையில் KMRK க்கு நன்றி..

    ReplyDelete
  42. //////Blogger kmr.krishnan said...
    மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.அப்படியே வந்தாலும் தஞ்சைப்பெரியவரிடம் நான் வாங்கிய குட்டைப் பற்றி ஏதாவது சொல்வார் என்றே எண்ணியிருந்தேன்.
    அவர் என்னடாவென்றால் திருக்கடவூர் பற்றி ஆத்மார்த்தமான செய்தியைச் சொல்லி 'டச்சிங்' பண்ணிட்டார்.
    'திருக்கடவூர் சென்று வந்தது முதலே என்னவோ ஒரு மாதிரி இருக்கேளே! ஒரே சிவப் பித்தா இருக்கே!' என்று மாமி வேறே கேள்வி மேலே கேள்வி.///////

    மைனர் டச்சிங்’கான மனிதர்தான். சிலசமயம் அதை வெளிப்படுத்தமாட்டார்!

    ReplyDelete
  43. ////Blogger Thanjavooraan said...
    உங்களுடைய இன்றைய பதிவை கே.எம்.ஆர். எழுதினாலும் எழுதினார், திருக்கடவூரின் சிறப்புகள் எல்லாம் வெளிவந்துவிட்டன. அவற்றில் ஜப்பான் மைனரின் எழுத்துக்குச் சில மேலதிகச் செய்திகளைச் சொல்ல விழைகிறேன். இவ்வூரில் இறைவன் 'அமிர்தகடேஸ்வரர்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாற்கடலில் அமிழ்தம் கிடைக்குமுன்பு ஆலகால விஷம் கிடைக்க அதை சிவபெருமான் வாங்கி உண்ண, அம்மை அவர் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்காமல் தடுத்ததால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றதாக புராணம். அடுத்து மார்க்கண்டனுக்கு 14 வயது என்ற காரணத்தால் காலன் அவன் உயிரைப் பறிக்க வந்த போது அவன் சிவன் கால்களைக் கட்டிக்கொள்ள, அவர் எமனை சம்ஹாரம் செய்து விடுகிறார். இந்தக் காரணம் கொண்டு அவருக்கு இங்கு 'காலசம்ஹாரமூர்த்தி' என்று பெயர். இந்த காலசம்ஹாரமூர்த்தியின் விக்ரகம் ஜப்பான் மைனர் சொன்னது போல சந்நிதியின் இடப்புறம் ஒரு தனியிடத்தில் மூடியே வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான சந்தர்ப்பங்களில், முக்கிய நபர்களுக்கு அந்த விக்கிரகத்தின் அடிபாகத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் பித்தளை மூடியை விலக்கி சிவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் காலனைக் காட்டி தரிசிக்கச் செய்வார்கள். அந்த தரிசனம் தான் மைனர் அவர்கள் செய்திருக்கிறார்கள். வந்த வினை தீரும், இறைவன் அருளும் கிட்டும். இந்த தரிசனத்தின் பலன்கள் இவை என்று சொல்கிறார்கள். கார்த்திகை சோமவாரம் இவ்வாலயத்தில் 1008 சங்கு அபிஷேகம் உண்டு. என் மிகச் சிறிய வயதில் 5க்குள் பலமுறை அபிஷேகத்துக்கு மண்டபத்திலிருந்து சங்கை எடுத்துச் சென்று அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கிறேன்.வாழ்க!//////

    உங்களுடைய இரண்டாவது பின்னூட்டத்திற்கும், தகவல்களுக்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  44. /////;Blogger minorwall said...
    ////kmr.krishnan said...
    மைனர் வாள் இந்தப்பதிவை கண்டு கொள்ள மாட்டார் என்றே நினைத்து இருந்தேன்.//////
    எதற்கும் குதர்க்கம் பண்ணும் ஆசாமியல்ல நான் என்று புரிந்துகொண்டதற்கு நன்றி..
    KMRK அவர்களே..
    பெரும்பாலும் இப்படி(பொருத்தம்) தப்பி வந்தவர்களுக்குத்தான் அந்த ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும்..எல்லோருக்கும் கிடைக்காது..
    அவசியமும் இல்லை..அப்படியோர் அனுபவம் இருந்தது என்பதால் பகிர்ந்துகொண்டேன்..
    ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..
    எது எப்படியோ, நாம் நம்புகிறோமோ இல்லையோ குடும்பம் என்று வந்துவிட்டால் உட்காரச் சொல்கிற இடத்தில் உட்கார்ந்து
    குடும்பத்தாரின்
    நம்பிக்கைக்காகவாவது
    அவர்களின் மனக்கலவரத்தை
    இந்(து)த வழிதான் போக்குமென்றால் அதற்காக விட்டுக்கொடுத்துப் போகும் பழக்கமுடையவன் நான்..இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் இருந்தால் தாங்கள் தெரிவிக்கலாம்..//////

    தம்பதியர்க்கு ஏக (ஒரே) நட்சத்திரம் என்றால், ஏழரைச் சனி, அஷ்டமச்சனி எல்லாம் ஒன்றாக வந்து இருவரையும் ஒரே நேரத்தில் அடித்துத் துவைக்கும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்பார்கள்

    ReplyDelete
  45. /////Blogger iyer said...
    இந்தப் பதிவிற்கு...சிவஞான சித்தியாரின்
    இந்தப் பாடலை நினைவு கூர்கிறோம்..
    "சித்தாந்தத்தே சிவன் தன்
    திருக்கடைக் கண் சேர்த்த்திச்
    செனனம் ஒன்றிலே சீவன் முத்தர் ஆக வைத்து ஆண்டு மலம் கழுவி
    ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும் பிறப்பை அறுத்து
    முத்தாந்தப் பாதமலர்கீழ் வைப்பன் என்று மொழிந்திடவும் உலகர் எல்லாம்
    மூர்க்கர் ஆகிப் பித்தாந்தப் பெரும் பிதற்றுப் பிதற்றிப்
    பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவார் இது என்ன பிராந்தி..!!"
    (விளக்கம் தேவையில்லாத எளிமையான பாடல்)
    வகுப்பிற்கு வரும் அறிஞர் தம் வாக்கு
    வாசித்துப் பாருங்களேன்..
    "மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும்" - ஷேக்ஸ்பியர்////

    நினைவுகூர்ந்து நல்ல பாடல் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  46. /////Blogger kmr.krishnan said...
    ///ஒரே நட்சத்திராதிபதி தம்பதியர் இருவருக்கும் வந்தாலும் பொருந்தாது என்றும் சொல்லப்பட்டது..///
    நான் பூசம்; என் மனவியார் அனுஷம். இருவருக்கும் நடசத்திர அதிபன் சனீச்சரந்தான்.ஏக தசா ஏக புக்தி. இருவரும் கடக லக்னம்.
    எப்படியோ 36 வருட திருமண வாழ்க்கை ஓடிவிட்டது.
    ஆண் மகவு இல்லாததற்கு ஒரே நட்சத்திர அதிபன் காரணம் என்று கூறப்பட்டது.
    பெரிய அளவில் பரிஹாரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை.//////

    தகவல் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  47. ///Blogger iyer said...
    வகுப்பில் அரங்கேற்றப்பட்டதங்கத்தை
    வகை படுத்திய அந்த படம்
    அஞ்சலில் வந்தது..அய்யருக்கு..
    அந்த பிரபல நகை கடையிலிருந்து..
    அரங்கேற்றம் செய்தமைக்கும்
    அது பற்றி கருத்து சொன்னமைக்கும்
    அய்யர் தருகிறார் வாழ்த்துக்களும்
    அன்பான வணக்கங்களும்..////

    படத்தை மட்டும் அனுப்பியுள்ளீர்கள். மற்ற காம்ப்ளிமெண்ட்டுகள் எங்கே சுவாமி?

    ReplyDelete
  48. Blogger தமிழ் விரும்பி said...
    சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்... அது தான் உண்மை ஒருவேளை அதை மற்றவர்களும் செய்து பார்க்கலாம். சரி விசயத்திற்கு வருகிறேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன் வருடம் இருக்கும்.. தஞ்சை சீமையில் அமைந்த கோவில்களுக்கான சுற்றுலா சென்று வந்தோம் (இப்போதுள்ள பூம்புகாரும் சேர்த்தே).
    அந்த சமயத்தில் திருகடவூரும் சென்றோம் மற்றக் கோவில்கள் எனது நினைவில் சரியாக இல்லை. திருக்கடவூர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.. கோவில் பிரகாரம் மழையின் காரணமாக பாசிபடிந்த சுவர் கரும் பச்சை நிறத்தில் காய்ந்து இருந்தது... அப்போது நான் அந்தக் கோவிலை வலம் வரும் போது சுவற்றில் சிலர் சிறு குச்சிகளை வைத்து சுவர் பாழாகாத வண்ணம் தங்களது பெயர்களையோ அல்லது விருப்பப் பட்டவர் பெயர்களையோ எழுதி இருப்பதைப் பார்த்தேன்.
    அந்த சமயம் உடனே எனக்கும் ஒரு ஆவல் உடனே எனக்கு விருப்பமான எனது தூரத்து உறவு முறைப் பெண்ணின் பெயரை (என் பெயரோடு என்று தான் நினைக்கிறேன்) எழுதினேன். அந்த நிகழ்வு என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது. அதன் பின்பு ஏழுவருடம் சென்று தான் எனக்கு திருமணம் நடை பெற்றது. இருந்தும் அந்த அபிராமியைப் பற்றிய பேச்சு வந்தாலோ, திருக்கடவூர் பற்றிப் பேசினாலோ அந்த விஷயத்தை நான் ஏன் மனைவியிடமும், இன்றும் குழந்தைகளிடமோ சொல்லாமல் இருப்பதில்லை.
    காரணம் அந்தப் பெண்ணே எனது மனைவியாக வந்தப் பிறகு தயக்கம் ஏன்?..........
    என்ன? நகைக்கும் படியாக இருக்கிறதா? அது தான் உண்மை. ஏதோ அப்படி ஒரு சிந்தனை வந்தது.. செய்தேன். உண்மையில் இன்றுவரை அது எனக்கு பெரிய தெய்வ அருளாகவேத் தோன்றுகிறது.
    அதிலும் பெரியவர் திரு.வெ.கோ. ஐயா அவர்கள் சொன்னவுடன் இப்போது நானும் அறிகிறேன் அங்கே இருக்கும் ஈசனின் பெயர் தான் எனக்கும் வைத்து இருக்கிறார்கள். (ஹாலாஸ்யம் = ஆலால சுந்தரம் = ஆலாஸ்ய சுந்தரம்).
    காதலர்கள் (நாங்கள் காதலர்களாக அதற்கு முன்னும் பின்னும் நிச்சயிக்கும் வரை இருந்ததில்லை)அது ஒரு தலையாக இருந்தாலும் முயற்சிக்கலாம் அபிராமி அருள் புரிவாள்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///////

    நல்லது. தகவல் பறிமாற்றத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  49. Blogger தேமொழி said...
    ///பாடலை மீண்டும் சரிபாருங்கள். பாடலில் சீர், எதுகை, மோனை எல்லாம் தட்டுகிறது. பட்டினத்தார் பாடல்கள் இலக்கண சுத்தமாக இருக்கும் சகோதரி!///
    ஐயா,
    இந்த தளத்தில் --- http://www.shaivam.org/tamil/sta_pattinattar_u.htm
    16 வது செய்யுளாக இருப்பது அது.
    "பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
    லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
    அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
    மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே.//////

    இப்போது எதுகை சரியாக உள்ளது
    பிறவா
    லிறவா
    அறமார்
    மறவா
    முன்பு சொற்கள் விலகியிருந்ததால் பிழைபோலத் தோற்றம் அளித்தது. நன்றி சகோதரி

    ReplyDelete
  50. /////Blogger sriganeshh
    அன்புள்ள ஆசிரியருக்கு,
    சந்திரசேகராஷ்டகம் மிக அருமை. சிவபெருமானை போற்றிக் கொண்டே இருக்கலாம். அதிலும் வடக்கில் சிவ வழிபாடு பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திங்கட்கிழமை அன்று காலை ஒரு வரிசையே நின்றிருக்கும். தாமிர சொம்பில் நீர், மலர் மாலைகள், மஞ்சள் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நிற்பார்கள். தன் கைப்பட "ஓம் நமசிவாய" என்று சொல்லிக் கொண்டு, சிவபெருமானின் தலைமேல் மெதுவாக நீரை ஊற்றும் அழகே அழகே. சிவராத்திரி அன்று கவர்மெண்ட் லீவு இங்கு தான் காண்கிறேன். அன்று சிவனை காண குறைந்தது 3 (அ) 4 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும். மற்றபடி சிராவண் மாசத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளும் உபவாசம் செய்கிறார்கள்....தமிழ் நாட்டில் கூட இத்தனை தீவிரமான பக்தியை காணவில்லை.
    ஒருவேளை செல்வசெழிப்பிற்கு இந்த தீவிரமான சிவபக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    சந்திரசேகராஷ்டகத்தை போலவே மற்றுமொரு சிறப்பான ஸ்தோத்ரம் மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். நீலகண்டம் நீலகண்டம் என்று முடியும் என்று ஞாபகம். சிறு வயதில் படித்தது. மிருத்யுஞ்சய அஷ்டோத்ரமும் மிகவும் சக்தி வாய்ந்தது. முடிந்தால் இவ்விரண்டையும் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி.//////

    உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறோம். பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  51. தஞ்சாவூரார் வெ.கோபாலன் அய்யாவின் விளக்கத்துக்கு நன்றி..

    தாங்கள் சோதிடத்தில் ஆர்வமில்லாதவராக இருந்தபோதிலும்

    இறைவழிபாட்டில், பாரதி இலக்கியத்தில்

    அதுபற்றிய விவரங்களைத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான்..நன்றி..

    ReplyDelete
  52. ////SP.VR. SUBBAIYA said...
    மைனர் டச்சிங்’கான மனிதர்தான். சிலசமயம் அதை வெளிப்படுத்தமாட்டார்!///

    ஐ டேக் இட்
    அஸ் எ காம்ப்ளிமென்ட்..

    ReplyDelete
  53. //// minorwall said...
    ////////தமிழ் விரும்பி said...
    சரி அனைவரும், ஏன்? எனது நண்பர் மைனர்வாளே கூறிய பிறகு நானும் இன்றுக் காலையிலே சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். நான் கூறுவது சற்று நகைப்புக் கூறியதாக இருக்கலாம்...///////

    தமிழ்விரும்பி சித்தர் பித்துப் பிடித்து அலைந்த கதை படித்தோம்..
    கடைசியில் சத்சித் ஆனந்தம்
    பெற்றது சிறப்பு..

    காரியசித்தி செய்ததால் சித்தரென்றேன்..

    சொக்கத்தங்கம் என மறுக்காமல் சொல்லலாம் அவரைக் கைபிடித்திருப்பவரை..

    வாழ்க..வளமுடன்..///

    அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும்
    நன்றி, நன்றி நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. அனுஷம், பூசம் combo (ஊருரஜ்ஜு)//

    ஆயில்யம், கேட்டை எந்த வகை ரஜ்ஜு?

    ReplyDelete
  55. ///க்ஷ்வேல///

    இதை எவ்வாறு உச்சரிப்பது ? Is it 'Ikshvela' ? 'க்ஷ்' என்ற வடமொழி எழுத்து ஒரு சொல்லின் இடையில் வந்தால், for example, 'லக்ஷ்மி' - Lakshmi என உச்சரிப்போம். இதை குறிப்பிட்டு கேட்பதற்கு காரணம், மந்திரம் or ஸ்லோகங்களை தவறாக உச்சரித்தால் பொருள் மாறி விபரீதமாக பலன் உண்டாகலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com