மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.10

ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.14
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.43
பெயர்: மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29

என் கேள்விகள்:

கேள்வி 1. ஒரே அமைப்பு நல்ல யோகமாகவும் அதே நேரத்தில் அவயோகமாகவும் அமைந்தால் என்ன பலன்? உதாரணமாக, 9 -ஆம் 
அதிபதி சனியும் 10 -ஆம் அதிபதி குருவும் சேர்ந்து 4 -ஆம் வீட்டில் 
இருப்பது  தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் சனியும் குருவும் சேர்ந்து 
4 -ஆம் வீட்டில் இருப்பது குரு சண்டாள யோகம்.

என்ன குழப்புகிறீர்கள்? குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்றாக இருப்பதல்லவா குரு சண்டாள யோகம்!

இருவரும் ஒன்று சேரும்போது, ராகுவின் தன்மைகளும் குருவின் தன்மைகளும் ஒன்றாகக் கலந்துவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஒன்றாக Blend ஆகிவிடும். ப்ளெண்டிங் (கலக்கல்) என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரக்கடிப்பவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். மாற்றி அடிக்க மாட்டார்கள்

அதைப்பற்றிக் கவியரசர் கண்ணதாசன் கூட ஒரு பாடல் எழுதிவைத்துள்ளார். அன்னைத் தமிழுக்கு அவப்பெயர்  வரக்கூடாது என்று, அந்த மாகவிஞன் அதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துள்ளார்

பாடலைப் பாருங்கள்:

Whisky with water
Brandy with soda
Rum with cola
Gin with lemon
Men with women

குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும்  நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு  எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர்  என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.

கேள்வி 2 . அனைவருக்கும் 337 பரல்கள் தான். அப்ப ஒரு தோஷம் இருந்தால் கண்டிப்பாக ஒரு யோகமோ  அல்லது ஒரு யோகம் இருந்தால் கண்டிப்பாக ஒரு தோஷமோ இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாமா?

அப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்
இரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள
வேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்
நன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்

கேள்வி 3 . ஒரே கிரகத்தின் புத்தி வெவ்வேறு தசையில் வெவ்வேறு பலன்களைத் தருமா? உதாரணமாக, சூரியதசை ராகு புத்தி, செவ்வாய்
தசை ராகு புத்தி.

நல்ல கேள்வி!

இரண்டிலுமே தீய பலன்கள்தான். ஆனால் வெவ்வேறாக இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால், சூரிய தசை  ராகு புத்தியில் 2 விக்கெட்டுக்கள் விழுந்தால், செவ்வாய் தசை ராகு புத்தியில் வேறு இரண்டு விக்கெட்டுக்கள் விழுகும்.

உங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.

இரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப்  போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்
சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever

1. சூரிய தசை ராகு புத்திக்கான பாடல்:

    “ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி
       ஆகாத மாதம் பத்து நாள் மூவெட்டாகும்
    போமென்ற அதன் பலனைப் புகழக்கேளு
       பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
    நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
       நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
    தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்
       தகமை இல்லாத நாளென்று தணித்து நில்லே!”

2. செவ்வாய் தசை ராகு புத்திக்கான பாடல்:

    ”பகையான சேய் திசை ராகுபுத்தி
       பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று
    துகையில்லாத நாளதுவும் பதினெட்டாகும்
       துன்பங்கள் சுரதோஷம் வாத பீடை
    வகையில்லா சத்துருவும் அக்கினியுண்டாம்
       வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
    நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
       நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே!”

கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்?

Money on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ்,  கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு,  அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல  பலனைத்தரும்.

ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.44
B.N.Sivakumar
சிவகுமார்

Dear Sir,
“ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும்.”

The above said thing which I got from your blog. Please clear my my doubt in my horoscope lagna: simmam Rasi: katagam star: poosam 3rd patham 7th lord sani associated with sun, mercury and moon in the 12place, Ragu in 2nd and Kethu in 8th, guru, sukran and chevvai in 10th. please clear me will my marriage will face trouble according to ur blog note. my dob is 17-07-1977, time: 9.30 am place of birth Kallakuruchi.
Thanks & Regards
B.N.Sivakumar

தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்

1.பையனின் தோற்றம்,
2.வயது (32 தாண்டிய பையன் என்றால் ஜூட் விட்டு விடுவார்கள்)
3.படிப்பு, (இன்றைய மார்கெட் நிலவரம். பொறியாளர் மாப்பிள்ளை)
4.வேலை செய்யும் இடம், (Multinational Companyயில் வேலை)
5.வாங்கும் ஊதியம், (மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையக்கூடாது)
6.அவனுடைய ஜாதகம் (சுத்த ஜாதகமாக இருப்பது நல்லது)
7.பெற்றவர்களின் நிலைமை (உடன் இருக்கிறார்களா? தள்ளி இருக்கிறார்களா?)
8. குடும்ப நிலைமை (கல்யாணமாகாத நாத்தினார்கள் இருக்கிறார்களா?)
9. செல்வ நிலைமை. (குடும்பத்தினருக்கு, வண்டி, வாகனம் சொந்த வீடு நிலம் நீச்சு இருக்கிறதா? அல்லது அன்றாடம் காய்ச்சிகளா? மாப்பிள்ளையின் வருமானத்தில்  குடும்பம் நடத்துபவர்களா?)

அதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன? நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு  தொங்குவது ஏன்?  மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.

சரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய  நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.

அத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:

பிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)
அடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)
அதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்

ஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.

இப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள்

அவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன்  ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.

நீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம்  செய்துகொள்ளூங்கள்.

பழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.

சொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்

திருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.45
சம்பத்குமார்
கோயம்புத்தூர்
   
Dear sir
Its common questions for tamil people. When sri lankan tamil people get TAMIL ELLEM Based on his astro.I am waiting for your valuable feedback  
Your student

அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத்  தமிழர்களுக்குத்
தனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில்  அனைத்துத் தமிழர்களுக்கும்
ஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.

கிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.46
M.பாரதிதாசன்.
   
அய்யா, இத்துடன் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளேன்.
நிலையான வேலை இல்லை, என்னுடைய  வேலையை பற்றி
தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாம் அச்திபதி புதன் வக்ரம்,
அதனால் நிலையான வேலை அமையாது என்று கூறுகிறார்கள்
தயவு செய்து விளக்கம் தரவும்.

நான் ஏற்கனவே இந்த விபரம் பற்றி தங்களிடம் கேட்டு இருக்கிறேன்,
தாங்கள், தங்கள் வேலை பளு காரணமாக, ஒரு இரண்டு மாதம் காத்து இருக்குமாறு கூறினீர்கள். அதனால்தான் தற்போது மறுபடியும்
அனுப்பி உள்ளேன்.
தயவு செய்து விளக்கம் தரவும். ப்ளீஸ்....

“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள்  வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத  வேலையாக இருக்கலாம்.

அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்?

கொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை  செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்
கிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே தெய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன  ஆகும்?

முதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்!

நிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு  பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா? அப்படியிருந்தால் போரடிக்காதா? 
அதில் த்ரில்  இருக்குமா?

உதாரணத்திற்கு உங்களுக்கு இரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Guard வேலை முதல் பத்துவருடம் Goods Trainல் வேலை. அடுத்த பத்துவருடம் Passenger Trainல் வேலை. அடுத்த  8ஆண்டுகள் Express Trainல் வேலை அடுத்த 8ஆண்டுகள் Sperfast Trainல் வேலை. 24 வயதில் சேருகிறீர்கள். 36 ஆண்டுகள் சர்வீஸ். 60 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளூங்கள். அது   நிரந்தமான வேலைதான். சுவாரசியமான வேலையா?

வேலையில் இரண்டுவிதம் இருக்கிறது. creative work. Non creative work

எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், சிற்பிகள், ஓவியர்கள்,  போன்றவர்கள் எல்லாம் க்ரியேடிவ் சைடில் வருவார்கள் (ஆக்கமான வேலைகள்)

பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சாலைகளில் மெஷின் இயக்கிகள், லோட் மேன்கள், வயல்களில், பொதுப்பணித்துரைகளில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் Non creative work என்ற கணக்கில் வருவார்கள்.

உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, ஆக்கமான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். பின்னாளில்  பணத்துடன் பிரபலமும் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் ஜாதகத்திற்கு வருவோம். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து  இரண்டில் உள்ளார். தொழில்காரகன் சனி உச்சமாகி பதினொன்றில் உள்ளார். ஆகவே உங்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தற்சமயம் அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. பின்னிப் பெடல் எடுத்துவிட்டீர்கள் அய்யா! மீண்டும் மீண்டும் படித்தேன்.

    என்னிடம் வரும் இளைஞர்கள் பலரும் வேலையில் இருந்து கொண்டு இந்த வேலை பிடிக்கவில்லை; எப்போது மாறட்டும் என்றே கேட்கிறார்கள்.23 வயதில் வேலை போரடித்தால் நாம் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  2. /////kmr.krishnan said...
    பின்னிப் பெடல் எடுத்துவிட்டீர்கள் அய்யா! மீண்டும் மீண்டும் படித்தேன்.
    என்னிடம் வரும் இளைஞர்கள் பலரும் வேலையில் இருந்து கொண்டு இந்த வேலை பிடிக்கவில்லை; எப்போது மாறட்டும் என்றே கேட்கிறார்கள்.23 வயதில் வேலை போரடித்தால் நாம் என்ன செய்ய முடியும்? //////

    எனக்கு வரும் மின்னஞ்சல்களில் பல, தங்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை இல்லை என்று வருத்தப்பட்டுக் கொள்வதாகவும், தங்களுக்கு எப்போது ஒரு நிரந்தர வேலை கிடைக்கும் என்று ஆதங்கத்துடன் கேட்பதாகவும் இருக்கும். அதனால்தான் சற்று விவரமாக எழுதினேன். இதைப் படிக்கும் அனைவரும், எழுதியதை உணர்ந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியாருக்கு,

    உங்கள் பதில்கள் நன்றாகவே அமைகின்றன.உயர்திரு கே எம் ஆர். கிருஷ்ணன் சொன்னது போல் பின்னியெடுத்துச் சுவையைக் கொடுக்கின்றீர்கள்.இதனால் பதில்களின் தரம் உயர்வடைகின்றன.

    தொடரட்டும் உங்கள் பணி. அதனைத் தொடரும் எங்கள் பயணம்.

    ReplyDelete
  4. ஐயா,
    இன்றைய பதில்கள் அருமை அதற்கு நன்றி மற்றும் நீங்கள் அளிக்க போகும் பதிலுக்கு மற்றும் ஒரு நன்றி.
    இன்று இரண்டு சந்தேகங்கள்.
    1. 337 பற்றி - இன்பத்தில் சிறந்த இன்பம் சிற்றின்பம் மற்றும் பேரின்பம். ஒருவனுக்கு இவ்விரண்டும் மறுக்கப்படும் பொழுது 337-ல் என்ன பயன்? இவை இரண்டிற்கும் ஈடாக எது கிடைக்கும்?

    2. புத்தி பற்றியது - "இரண்டிலுமே தீய பலன்கள்தான்." என்று தாங்கள் கூறி உள்ளீர்கள். ஆனால் பலன்கள் தனிப்பட்டவரின் கோள் அமைப்பை பொறுத்து மாறுபடாதா? தங்கள் கருத்து?

    கேள்வியில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  5. ஆசானே வணக்கம்.

    ஒரு தமிழ் புலவர் ( பூங்குன்றனார் என்று நினைக்கின்றேன்) கூறியதாக பள்ளிக்கூட நாட்களில் பாடத்தில் படித்த ஞாபகம் ஐயா

    ஆடுமேயப்பவனும் அரசால்வவனும் அவன் அவன் செய்த கரும பலனை அனுபவிக்க பிறந்துள்ளான்.

    இதில் உயர்ந்த ( வேலை ) வன் தான் என்ன! அல்லது தாழ்ந்த
    ( வேலை ) வன் தான் என்ன ?

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்...

    அருமயான மற்றும் விரிவான விளக்கங்கள் அய்யா...குரு சண்டாள யோகம் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் ....என் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு பகவான் 4 இல் மீனத்தில் ராகு உடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து 17 வருடம் 9 மாதம் ராகு திசை முடிந்து விட்டது .....அந்த ராகு திசை முழுவதும் மிக யோகம் ஆக இருந்தது குரு திசை சுய புக்தி ,சனி புக்தி முடிந்து புதன் புக்தியும் பாதி கடந்து விட்டது ராகு திசை இல் இருந்தது போன்ற மகிழ்சியான நாட்கள் இல்லை .....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  7. ////krishnar said...
    வணக்கம் வாத்தியாருக்கு,
    உங்கள் பதில்கள் நன்றாகவே அமைகின்றன.உயர்திரு கே எம் ஆர். கிருஷ்ணன் சொன்னது போல் பின்னியெடுத்துச் சுவையைக் கொடுக்கின்றீர்கள்.இதனால் பதில்களின் தரம் உயர்வடைகின்றன.
    தொடரட்டும் உங்கள் பணி. அதனைத் தொடரும் எங்கள் பயணம்.///////

    உத்தரவு கிருஷ்ணரே!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ////R.Puratchimani said...
    ஐயா,
    இன்றைய பதில்கள் அருமை அதற்கு நன்றி மற்றும் நீங்கள் அளிக்க போகும் பதிலுக்கு மற்றும் ஒரு நன்றி.
    இன்று இரண்டு சந்தேகங்கள்.
    1. 337 பற்றி - இன்பத்தில் சிறந்த இன்பம் சிற்றின்பம் மற்றும் பேரின்பம். ஒருவனுக்கு இவ்விரண்டும் மறுக்கப்படும் பொழுது 337-ல் என்ன பயன்? இவை இரண்டிற்கும் ஈடாக எது கிடைக்கும்?//////

    இரண்டும் எப்படி புரட்சி ஒன்றாகும்? இரண்டும் ஒரு சேர மறுக்கப்படும் வாய்ப்பே இல்லை. சிற்றின்பத்தில் உழல்பவனுக்குப் பேரின்பம் கிடைக்காது. பேரின்பத்தை நாடுபவன் சிற்றின்பத்தை நினைக்கவே மாட்டான்.

    /////// 2. புத்தி பற்றியது - "இரண்டிலுமே தீய பலன்கள்தான்." என்று தாங்கள் கூறி உள்ளீர்கள். ஆனால் பலன்கள் தனிப்பட்டவரின் கோள் அமைப்பை பொறுத்து மாறுபடாதா? தங்கள் கருத்து?
    கேள்வியில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி///////

    மாறுபடும். பத்தாவது மாடியில் இருந்து விழுவதற்குப் பதிலாக இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தால்
    எப்படி வித்தியாசப் படுமோ - அப்படி வித்தியாசங்கள் இருக்கும்

    ReplyDelete
  10. /////kannan said... ஆசானே வணக்கம்.
    ஒரு தமிழ் புலவர் ( பூங்குன்றனார் என்று நினைக்கின்றேன்) கூறியதாக பள்ளிக்கூட நாட்களில் பாடத்தில் படித்த ஞாபகம் ஐயா
    ஆடுமேயப்பவனும் அரசாள்பவனும் அவன் அவன் செய்த கரும பலனை அனுபவிக்க பிறந்துள்ளான்.
    இதில் உயர்ந்த ( வேலை ) வன் தான் என்ன! அல்லது தாழ்ந்த ( வேலை ) வன் தான் என்ன?///////

    கேள்வி அதுவல்ல. நிரந்தமான அல்லது நிரந்தரமில்லாத என்பதுதான் கேள்வி நண்பரே!

    ReplyDelete
  11. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்...
    அருமையான மற்றும் விரிவான விளக்கங்கள் அய்யா...குரு சண்டாள யோகம் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் ....என் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு பகவான் 4 இல் மீனத்தில் ராகு உடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து 17 வருடம் 9 மாதம் ராகு திசை முடிந்து விட்டது .....அந்த ராகு திசை முழுவதும் மிக யோகம் ஆக இருந்தது குரு திசை சுய புக்தி ,சனி புக்தி முடிந்து புதன் புக்தியும் பாதி கடந்து விட்டது ராகு திசையில் இருந்தது போன்ற மகிழ்சியான நாட்கள் இல்லை .....
    நன்றி வணக்கம் ///////

    வியாழனன்று தட்சிணாமூர்த்தியை பிரார்த்தனை செய்யுங்கள். மகிழ்ச்சி உண்டாகும்!

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்,
    அம்மன் காசு என்றாலும்
    அரசாங்கத்தில் இருந்து வாங்க வேண்டும்....
    இது பழைய கதை..... இன்றும் இதைப் பாடுபவர்கள்
    பழைமை வாதிகள்..........
    நிறைய சம்பாதிக்க வேண்டுபவன்.... (லாபாதிபதி நன்றாக இருந்து)
    தனியார் துறையில், திறமை இருந்தால் சீக்கிரம் முன்னேறலாம்.
    (தேர் இஸ் நோ - கோட்டா சிஸ்டம்)
    இல்லை! கையும் வாயும் அழுக்காக இருந்து, அரசாங்கத்தில் தெரிந்தவர் இருந்தால் அதைவிட வேகமாக முன்னேறலாம். அப்படி இல்லாதவர்கள் அரசாங்கத்தில் சேர்ந்து விட்டு படும்பாட்டை நான் நேரில் பார்த்திருக்கிறேன்......
    இன்னும் சிலரோ பெட்டி கொடுத்து வாங்கியதை, சம்பாதிக்கும் வரைக்கும் செய்வோம் என்று தொடர்ந்தால், அதுவும் பிறகு பழகிய பிசாசாய் பிடித்துக் கொள்ளும்......
    *******"ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்."
    தாங்கள் கூறியது தான் முக்காலும் உண்மை....
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பதில்கள் மற்றும் பலன்கள் சிறப்பாக மனதில் பதியும்படியாக விவரமாக தெரிவித்துள்ளீர்கள்.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-31

    ReplyDelete
  14. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அம்மன் காசு என்றாலும் அரசாங்கத்தில் இருந்து வாங்க வேண்டும்....
    இது பழைய கதை..... இன்றும் இதைப் பாடுபவர்கள் பழைமை வாதிகள்..........
    நிறைய சம்பாதிக்க வேண்டுபவன்.... (லாபாதிபதி நன்றாக இருந்து)
    தனியார் துறையில், திறமை இருந்தால் சீக்கிரம் முன்னேறலாம்.
    (தேர் இஸ் நோ - கோட்டா சிஸ்டம்)
    இல்லை! கையும் வாயும் அழுக்காக இருந்து, அரசாங்கத்தில் தெரிந்தவர் இருந்தால் அதைவிட வேகமாக முன்னேறலாம். அப்படி இல்லாதவர்கள் அரசாங்கத்தில் சேர்ந்து விட்டு படும்பாட்டை நான் நேரில் பார்த்திருக்கிறேன்......
    இன்னும் சிலரோ பெட்டி கொடுத்து வாங்கியதை, சம்பாதிக்கும் வரைக்கும் செய்வோம் என்று தொடர்ந்தால், அதுவும் பிறகு பழகிய பிசாசாய் பிடித்துக் கொள்ளும்......
    *******"ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்."
    தாங்கள் கூறியது தான் முக்காலும் உண்மை....
    நன்றிகள் ஐயா!////

    உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பதில்கள் மற்றும் பலன்கள் சிறப்பாக மனதில் பதியும்படியாக விவரமாக தெரிவித்துள்ளீர்கள்.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  16. Dear Sir

    Good Morning.

    Kelviyum Porumayana Badhilum thangalin Gyanathai Kattukiradhu..


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்


    பின்னூட்டம் இட்டு வெகு நாட்களாகிவிட்டது. இன்றைய கேள்வி பதில் பகுதியில் "கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்? " என்ற கேள்விக்கு "ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும். " என்று பதில் அளித்திருக்கிறீர்கள். என் ஜாதகத்தில் கன்னி லக்னம். நான்கில் குரு, சனி (ஐந்தாம் அதிபதி) சந்திரன் (பதினொன்றாம் அதிபதி) ஆகிய மூவரின் கூட்டணி உள்ளது. இதுவரை ஷேர் மார்கெட் என்ற ஒன்றை நினைத்தது கூட இல்லை. இந்த அமைப்பு எனக்கு வேலை செய்யவில்லையா ?

    நன்றி. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  18. இன்றைய கேள்வி‍ பதில் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  19. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning.
    Kelviyum Porumayana Badhilum thangalin Gyanathai Kattukiradhu..
    Thank you
    Loving Student

    Arulkumar Rajaraman/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  20. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    பின்னூட்டம் இட்டு வெகு நாட்களாகிவிட்டது. இன்றைய கேள்வி பதில் பகுதியில் "கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்? " என்ற கேள்விக்கு "ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும். " என்று பதில் அளித்திருக்கிறீர்கள். என் ஜாதகத்தில் கன்னி லக்னம். நான்கில் குரு, சனி (ஐந்தாம் அதிபதி) சந்திரன் (பதினொன்றாம் அதிபதி) ஆகிய மூவரின் கூட்டணி உள்ளது. இதுவரை ஷேர் மார்கெட் என்ற ஒன்றை நினைத்தது கூட இல்லை. இந்த அமைப்பு எனக்கு வேலை செய்யவில்லையா ?
    நன்றி. வாழ்க வளமுடன்/////

    பானை செய்கிறவனுக்குப் பத்து நாள் வேலை. அதை உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும். அதுபோல பலனைத் தருவதற்கு சில அமைப்புக்கள் வேண்டும். பலனைக் கெடுப்பதற்கு ஒரு கிரகம் போதும். உங்கள் ஜாதகத்தைப் பார்த்தால்தான் காரணம் தெரியும் நண்பரே!

    ReplyDelete
  21. /////Uma said...
    இன்றைய கேள்வி‍ பதில் நன்றாக இருந்தது.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. வணக்கம் சார்,
    குரு ராகுவின் நன்மை/தீமைகளை நன்கு விளக்கியிருந்திர்கள் மேலும் வேலை பிடிக்கவில்லை வேற வேலை எப்போ கிடைக்கும் எனபதற்கு நீங்க ரொம்ப நல்லா பதில் கொடுத்தீர்கள் இன்றைய பாடம் ரொம்ப நன்றாகயிருந்தது. ரொம்ப நன்றி சார். நடக்கும் திசை புத்தி நன்றாக் இல்லை
    என்றால் ஒன்றும் செய்ய முடியாது நிங்கள் சொல்வது சரிதான்
    சுந்தரி

    ReplyDelete
  23. ////sundari said...
    வணக்கம் சார்,
    குரு ராகுவின் நன்மை/தீமைகளை நன்கு விளக்கியிருந்திர்கள் மேலும் வேலை பிடிக்கவில்லை வேற வேலை எப்போ கிடைக்கும் எனபதற்கு நீங்க ரொம்ப நல்லா பதில் கொடுத்தீர்கள் இன்றைய பாடம் ரொம்ப நன்றாகயிருந்தது. ரொம்ப நன்றி சார். நடக்கும் திசை புத்தி நன்றாக இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது நிங்கள் சொல்வது சரிதான்
    சுந்தரி ////

    உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. nammudaiya vagupparai paadamgal padikkumbothellaam manathirkku oru thelivum santhosamum kidaikkirathu !
    mikka nandri guruve!

    ReplyDelete
  25. //தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்//

    //வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
    நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்//

    இந்த இரண்டு கிரக திசையிலும் ராகு தன் புத்தியில் கணவன் மனைவி உறவுக்கு கெடுதல் செய்வார். இந்த ஒரு ஒற்றுமை தெரிகிறது. அதற்கு அடுத்த வரி 'நகையுடனே பூஷணங்கள்' என்ற காரணம் நல்ல highlight. நகை வாங்கிக் கொடுக்காததால் சண்டை என்கிறரோ.

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா,

    சந்திரன் 2லிலும், குரு 7லிலும் இருந்தால் சட்டாட்ட தோஷம் என கூற கேட்டேன். அதை சிறிது விளக்கினால் நல்லது.

    ReplyDelete
  27. /////perumal sundaram said...
    nammudaiya vagupparai paadamgal padikkumbothellaam manathirkku oru thelivum santhosamum kidaikkirathu!
    mikka nandri guruve!//////

    அதுதான் வேண்டும் சாமி! எழுதும் நோக்கமும் அதுதான்!

    ReplyDelete
  28. /////ananth said...
    //தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்//
    //வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
    நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்//
    இந்த இரண்டு கிரக திசையிலும் ராகு தன் புத்தியில் கணவன் மனைவி உறவுக்கு கெடுதல் செய்வார். இந்த ஒரு ஒற்றுமை தெரிகிறது. அதற்கு அடுத்த வரி 'நகையுடனே பூஷணங்கள்' என்ற காரணம் நல்ல highlight. நகை வாங்கிக் கொடுக்காததால் சண்டை என்கிறரோ./////

    “நகையுடனே பூஷணங்கள் நலமில்லா சிலவாம்
    நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே!”

    நலமில்லா விஷயம் என்கிறார்: வாங்கிக்கொடுத்தாலும் சண்டைவரும்:-)))))

    ReplyDelete
  29. /////Ram said...
    வணக்கம் ஐயா,
    சந்திரன் 2லிலும், குரு 7லிலும் இருந்தால் சட்டாட்ட தோஷம் என கூற கேட்டேன். அதை சிறிது விளக்கினால் நல்லது.//////

    நீங்கள் குறிப்பிடும் ”சட்டாட்ட” என்னும் வார்த்தையில் ஏதோ தவறு உள்ளது. சரியான பதத்தைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  30. //"பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
    நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
    நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
    தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்"//

    எனக்கு தற்போது சூரிய தசா ராகு புக்தி 23 12 2010 வரை!

    சூரியன் என்பதால் மூட்டு எலும்பு வலியை பல மாதங்கள் கொடுத்தார். பயிற்சி,வேகந‌‌டை,ம‌சாஜ் மூல‌ம் ஓர‌ள‌வு நிவார‌ண‌ம் பெற்றேன்.
    பின்னால் வ‌ந்த‌ ஒரு விட‌லைப் பைய‌னால் மோத‌ப்ப‌ட்டு வ‌ண்டியில் இருந்து
    கீழே விழுந்து பின் முதுகுவ‌லி இன்ற‌ள‌வும் அதிக‌ நேர‌ம் அம‌ர்ந்தால் உள்ள‌து.


    என்துணைவியாருக்கும் த‌ற்போது சூரிய த‌‌சா சனிபுக்தி. சூரிய தசா ராகு புக்தியை ஒன்ற‌ரை ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே க‌டந்துவிட்டார்க‌ள்.அப்போது மன,உட‌ல் நோய் தொந்திர‌‌வு இருந்த‌து.குரு புக்தி வ‌ந்த‌வுட‌ன் ஈஷா யோக‌ ஈடுபாடு வந்த‌து.ச‌னி புக்தி 10 08 2010 அன்று ஆர‌ம்பித்து உள்ள‌து. என்ன செய்யும் என்று பார்ப்போம்.


    இருவ‌ரும் ஓய்வு பெற்றுவிட்ட‌தால் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌ அதிக‌ நேர‌ம் கிடைக்கிற‌து. ஒருவ‌ர் குறையை ஒருவ‌ர் காண‌ நேர‌ம் இல்லாம‌ல் ப‌ணிச்சுமை முன்னர் இருந்த‌து.3 குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு,திருமணம் என்று கவனம் திரும்பியிருந்தது.இப்போது த‌னிமையில் சேர்ந்து க‌ழிக்கும் போது சிறு குறைக‌ளும் பெரிதாக‌த் தெரிகின்ற‌ன‌.வாக்குவாத‌ம்
    கொஞச‌‌ம் ப‌ல‌மாக‌வே உள்ள‌து.இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் "நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்"அதுவும் ம‌னைவியுட‌ன் வீண் வாக்குவாத‌ம்.என் முட்டாள் த‌ன‌த்தால் பொருள் இழ‌ப்பு. அத‌னாலும் ம‌ன‌ விரிச‌ல். சொந்த‌க் க‌தை எத‌ற்காக‌? பாட்டு ச‌ரிதான் என்பதைச் சொல்ல‌த்தான்.

    இருவ‌ரும் க‌ட‌க‌ ல‌க்ன‌க்கார‌ர்க‌ள். சூரிய‌ன் 2 க்கு உடைய‌வ‌ர் என‌வே மார‌க‌ன். இருவ‌ருக்கும் ச‌னி 7க்கு உடைய‌வ‌ர். அவ‌ரும் மார‌க‌ர். ராகு ச‌னியைப் போன்ற‌‌வ‌ர்தான்.என‌வே இந்தக் கால‌க‌ட்ட‌ம் இருவ‌ருக்கும் மிக‌வும் மோச‌மான‌து என்று தெரிகிற‌து.ஜாக்கிர‌‌தையாக‌க் க‌ட‌க்க‌ வேண்டும்.இதை அறிந்துக்கொள்ள‌த்தான் சோதிட அறிவு உத‌வும்.
    கொஞச‌ம் நீட்டிவிட்டேன்.வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கே உரிய‌ புல‌ம்ப‌ல் என்று புற‌ம் த‌ள்ளி விட்டு மேலே செல்லுங்க‌ள்.
    வேண்டும் என்றே க‌டைசி பின்னூட்ட‌மாக‌ இடுகிறேன்.இந்தப் புலம்பலை ப‌டிப்ப‌வ‌ர் எண்ணிக்கை குறைய‌ட்டும் என்ப‌தே கார‌ண‌ம். உங்க‌ள் பொறுமைக்கு
    ந‌ன்றி!.

    ReplyDelete
  31. //////kmr.krishnan said...
    //"பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
    நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
    நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
    தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்"//
    எனக்கு தற்போது சூரிய தசா ராகு புக்தி 23 12 2010 வரை!
    சூரியன் என்பதால் மூட்டு எலும்பு வலியை பல மாதங்கள் கொடுத்தார். பயிற்சி,வேகந‌‌டை,ம‌சாஜ் மூல‌ம் ஓர‌ள‌வு நிவார‌ண‌ம் பெற்றேன்.
    பின்னால் வ‌ந்த‌ ஒரு விட‌லைப் பைய‌னால் மோத‌ப்ப‌ட்டு வ‌ண்டியில் இருந்து
    கீழே விழுந்து பின் முதுகுவ‌லி இன்ற‌ள‌வும் அதிக‌ நேர‌ம் அம‌ர்ந்தால் உள்ள‌து.
    என்துணைவியாருக்கும் த‌ற்போது சூரிய த‌‌சா சனிபுக்தி. சூரிய தசா ராகு புக்தியை ஒன்ற‌ரை ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே க‌டந்துவிட்டார்க‌ள்.அப்போது மன,உட‌ல் நோய் தொந்திர‌‌வு இருந்த‌து.குரு புக்தி வ‌ந்த‌வுட‌ன் ஈஷா யோக‌ ஈடுபாடு வந்த‌து.ச‌னி புக்தி 10 08 2010 அன்று ஆர‌ம்பித்து உள்ள‌து. என்ன செய்யும் என்று பார்ப்போம்.
    இருவ‌ரும் ஓய்வு பெற்றுவிட்ட‌தால் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌ அதிக‌ நேர‌ம் கிடைக்கிற‌து. ஒருவ‌ர் குறையை ஒருவ‌ர் காண‌ நேர‌ம் இல்லாம‌ல் ப‌ணிச்சுமை முன்னர் இருந்த‌து.3 குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு,திருமணம் என்று கவனம் திரும்பியிருந்தது.இப்போது த‌னிமையில் சேர்ந்து க‌ழிக்கும் போது சிறு குறைக‌ளும் பெரிதாக‌த் தெரிகின்ற‌ன‌.வாக்குவாத‌ம்
    கொஞச‌‌ம் ப‌ல‌மாக‌வே உள்ள‌து.இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் "நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்"அதுவும் ம‌னைவியுட‌ன் வீண் வாக்குவாத‌ம்.என் முட்டாள் த‌ன‌த்தால் பொருள் இழ‌ப்பு. அத‌னாலும் ம‌ன‌ விரிச‌ல். சொந்த‌க் க‌தை எத‌ற்காக‌? பாட்டு ச‌ரிதான் என்பதைச் சொல்ல‌த்தான்.
    இருவ‌ரும் க‌ட‌க‌ ல‌க்ன‌க்கார‌ர்க‌ள். சூரிய‌ன் 2 க்கு உடைய‌வ‌ர் என‌வே மார‌க‌ன். இருவ‌ருக்கும் ச‌னி 7க்கு உடைய‌வ‌ர். அவ‌ரும் மார‌க‌ர். ராகு ச‌னியைப் போன்ற‌‌வ‌ர்தான்.என‌வே இந்தக் கால‌க‌ட்ட‌ம் இருவ‌ருக்கும் மிக‌வும் மோச‌மான‌து என்று தெரிகிற‌து.ஜாக்கிர‌‌தையாக‌க் க‌ட‌க்க‌ வேண்டும்.இதை அறிந்துக்கொள்ள‌த்தான் சோதிட அறிவு உத‌வும். கொஞச‌ம் நீட்டிவிட்டேன்.வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கே உரிய‌ புல‌ம்ப‌ல் என்று புற‌ம் த‌ள்ளி விட்டு மேலே செல்லுங்க‌ள்.
    வேண்டும் என்றே க‌டைசி பின்னூட்ட‌மாக‌ இடுகிறேன்.இந்தப் புலம்பலை ப‌டிப்ப‌வ‌ர் எண்ணிக்கை குறைய‌ட்டும் என்ப‌தே கார‌ண‌ம். உங்க‌ள் பொறுமைக்கு
    ந‌ன்றி!.////

    மனதிற்கு ஏது சார் வயது? மனதால் நீங்கள் என்றும் இளைஞர்தான்! அதை நினைவில் வையுங்கள்
    வயதானவர்கள் சொல்வது வழிகாட்டுதல். புலம்பல் அல்ல!

    ReplyDelete
  32. blending பற்றியது :
    whisky with ice cubes என்பது என்னுடைய favourite ..
    அதுதான் அந்த brand whisky யின் natural taste அறிய சுவைக்க வசதியாய் இருக்கும்..
    சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இந்த blendingகை ஜப்பானீஸ் 'ரோக்கு' என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை அறிந்தேன்...
    என்ன காரணம் என்று தெரியவில்லை..

    இந்தப்பாட blending பற்றியது :

    எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
    http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_05.html
    கேதுவை (குரு-சுபகிரகம் ) பார்க்கிறார் என்றாலே குரு கூடவே ராகுவும்தானே இருக்கார் என்றுதானே அர்த்தம்..
    குரு சண்டாள யோகம் ஆகிடுமே.. எப்படியும் இந்த நல்ல பலன்களை கொடுக்குமா?
    ஞான காரகனைக் குரு பார்க்கிறார் என்பது குரு சண்டாள அவயோகத்திற்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடா?

    ReplyDelete
  33. /////minorwall said...
    blending பற்றியது :
    whisky with ice cubes என்பது என்னுடைய favourite ..
    அதுதான் அந்த brand whisky யின் natural taste அறிய சுவைக்க வசதியாய் இருக்கும்..
    சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இந்த blendingகை ஜப்பானீஸ் 'ரோக்கு' என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை அறிந்தேன்... என்ன காரணம் என்று தெரியவில்லை..
    இந்தப்பாட blending பற்றியது :
    எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
    http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_05.html
    கேதுவை (குரு-சுபகிரகம் ) பார்க்கிறார் என்றாலே குரு கூடவே ராகுவும்தானே இருக்கார் என்றுதானே அர்த்தம்..
    குரு சண்டாள யோகம் ஆகிடுமே.. எப்படியும் இந்த நல்ல பலன்களை கொடுக்குமா?
    ஞான காரகனைக் குரு பார்க்கிறார் என்பது குரு சண்டாள அவயோகத்திற்கு வழங்கப்பட்ட நஷ்டஈடா?/////

    Yes Minor. Otherwise how the magic figure 337 will come to the horoscope?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com